சனி, 29 அக்டோபர், 2016

மதங்கள் சமயங்கள் !

மதங்கள்  சமயங்கள்  !

மதங்கள்  சமயங்கள  மீது பற்று  உள்ளவர்கள்  இந்த  உலக  மக்களின்   உணர்ச்சி  களோடு  விளையாடிக்  கொண்டு   இருக்கின்றார்கள்  .

உண்மையில்  அவர்கள்   ஏதும்  அறியாத   ஏழைகள்.  பல   காலமாக   நாங்கள்  கூறுவதுதான்   நியாயமானது  என்று  உளரிக்கொண்டு   உள்ளார்கள்   .மக்களின் அறிவை  வளர  விடாமல் தடுத்து   விட்டார்கள்   .மக்கள் இருளில்  மயங்கி  அறிவை இழந்து   உள்ளார்கள

 அவர்களை  இருளில்  இருந்து   வெளிச்சத்திற்கு   கொண்டு  வருவதற்கு   வள்ளலார்   படாத  பாடுபட்டுள்ளார்   .

உண்மையான   சுத்த சன்மார்க்கத்தை   கடைபிடிப்பவர்கள்   உண்மையை  எடுத்து   மக்களுக்கு சொல்ல  தயக்கம்   இருக்க  கூடாது   .

வள்ளலார்   சொன்ன   உண்மை   ஒளிக்   கதிர்கள்   நாட்டில்  பரவிப்   விட்டால்   பொய்யான  சமயங்கள்  மதங்கள்   இருக்கும்  இடம்  தெரியாமல்   மறைந்து  விடும்   .

அதனால்   நமக்கு  உயிருக்கு  ஆபத்து   கூட   வரலாம்  .அப்படியே   வந்தாலும்  அதுவே   மக்களை  மாற்றம் செய்யும் ஒரு    கருவியாக  நிகழ்ச்சியாக   அமைந்து  விடும் .

 மக்கள்  . . கடவுளோடு   இணைந்து   பேரின்ப   வாழ்க்கை  வாழ்வதற்கு   நாம்  ஒரு   அசைக்க   முடியாத   சுத்த  சன்மார்க்கியாய்   செயல்  பட வேண்டும்

கடவுளோடு நாம் உயிர் ஒட்டம் உள்ள ஒரு உறவை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் .அவற்றை மக்களுக்கு போதிக்க வேண்டும்.

சமயங்கள்   மதங்களின்  இருளில்   சிக்கித்  தவிக்கும் மக்களை  வெளிச்சத்திற்கு   கொண்டு   வருவதே  வள்ளலார்   சொல்லி   உள்ள  சுத்த   சன்மார்க்கம் .

மரணத்தை   வெல்லும்   வழியைப்  பிறகு  பார்ப்போம்   .
 .
இந்த மனிதப் பிறப்பில்   என்னுடைய   விருப்பம்   இதுவாகவே இருக்கின்றது .

அன்புடன்  
ஆன்மநேயன்  
ஈரோடு கதிர்வேல் ்
9865939896   .

புதன், 26 அக்டோபர், 2016

ஞான சபையும் ! சுற்றி உள்ள சங்கிலியும் !

ஞான சபையும் ! சுற்றி உள்ள சங்கிலியும் !

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் ! என்ற உண்மையை உலகிற்கு தெரியப் படுத்துவதற்கு  வடலூர் பெருவெளியில் ''சத்திய ஞான சபையை''  வள்ளல்பெருமான் தோற்றுவித்து உள்ளார் ..

சத்திய ஞான சபையின் தோற்றம் !

சத்திய ஞான சபையின் தோற்றம் எட்டு கோண வடிவம் உள்ளது ..எட்டு பாகமாக பிரித்து வடிவம் அமைத்து உள்ளார் .ஒவ்வொரு பக்கத்திலும்,ஒரு  பெரிய கதவு இரண்டு ஜன்னல்கள் வைத்து கட்டப்பட்டு உள்ளது .

 ஆக மொத்தம்  எட்டுக் கதவுகள் பதினாறு ஜன்னல்கள் உள்ளன. ஏன் எட்டு கதவுகள் வைத்து வள்ளல்பெருமான் அமைத்து  உள்ளார் என்பதை சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு கதவுக்கும் ஒவ்வொரு அம்பலம் என்று பெயர் .அதனால் வடலூர் ஞான சபையில் எட்டு அம்பலம் ,அதாவது எட்டுக் கதவுகளும் திறந்தே வைத்து இருக்க வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் விருப்பம் கட்டளையுமாகும்...

உடம்பு என்பது சபையாகவும் ,அதன்  உள்ளே இருக்கும் தீப  ஒளியே அறிவாகிய ஆன்ம பிரகாசமாகிய அருட்பெருஞ்ஜோதியாகவும் ,அந்த உள்  ஒளியை சுற்றி உள்ள கண்ணாடியே மனமாகவும்,அதற்கு வெளியே கண்ணாடியை மறைத்துக் கொண்டு உள்ள, மன மாயை என்னும் அறியாமையாகிய மாயை,  மாமாயை,பெரு மாயை என்னும் ஏழு திரைகளாகவும்  .அமைத்து உள்ளார்கள்.

ஞான சிங்காதன மேடை ;--

சபையின் மத்தியில் நான்கு தூண்கள் எழுப்பி அதன்மேல் மேடை அமைத்து உள்ளார் .அந்த மேடையின் பெயர் ''ஞான சிங்காதன மேடை'' என்று பெயராகும்..நான்கு தூண்கள் என்பது கழுத்து பாகம் ..உடம்பிற்கும் .தலைக்கும் இணைப்பு பாகம்தான் கழுத்துப் பாகமாகும்...

அந்த மேடையின் அனுபவ நிலைகள் ;--

1,படிக மேடை
2,ஆயிரத்து எட்டு கமல இதழ்
3,ஓங்கார பீடம்
4,குண்டலி வட்டம்
5,ஜோதிஸ் தம்பம்
6,சுத்த நடனம் ..

இந்த ஆறு ஸ்தானங்களும் அனுபவத்தால் தான் அறிய முடியும்,இஃது நிராதார லஷ்ணம் என்று வள்ளலார் சொல்லுகின்றார்.இவற்றை அறிய வேண்டுமானால் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து தயவே வடிவாக நின்றோமானால் ,அனுபவத்தில் அறியலாம். இந்த அனுபவ ஸ்தானங்கள் கனடத்திற்கு மேலே உள்ளது .அவற்றை அறிந்துதான் ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார் ..

வள்ளலார் சொல்லுவது ;--

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !.....என்றும்

சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே !......என்றும்.

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறை அமுதம் உண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் ,,,

என்றும் ..

ஆணிப் போன்னம்பலக் காட்சி ! என்னும் தலைப்பில் எழுதிய பாடல்களில் அனுபவக் காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகின்றார்,..

வடலூர் ஞான சபையில் காட்டும் ஜோதி தரிசனம் !

வள்ளலார் சொல்லிய வண்ணம் ஞான சபையில்,இப்போது ஜோதி தரிசனம் காட்டவில்லை ..என்பதை சுத்த சன்மார்க்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் எதற்க்காக எண்கோண வடிவமாக ஞான சபையைத் தோற்றுவித்து,எட்டுக் கதவுகளை வைத்து உள்ளார்,என்பதை சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வருவார் அழைத்து வாடி !

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம் நல்ல வரமே .

திருவார் பொன்னம்பலத்தே செழிக்கும் குஞ்சித பாதர்
சிவ சிதம் பரபோதர் தெய்வச் சபா நாதர் .............வருவார்

சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மது உண்டு
தெளிந்தோர் எல்லோரும் தொண்டு செய்யப் பவுரி கொண்டு
இந்த வெளியில் நடம் இடத் துணிந்தீரே அங்கே
இதை விடப் பெருவெளி இருக்கு தென்றால் இங்கே ......வருவார்

இடுக்கு இல்லாமல் இருக்க இடம் உண்டு நடஞ் செய்ய
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டைய
ஒதுக்கில் இருப்பது என்ன உளவு கண்டு கொள்வீர் என்னால்
உண்மை இது வஞ்சம் அல்ல உம்மேல் ஆணை என்று சொன்னால் ....வருவார்

மெல்லியல் சிவகாமி வல்லி உடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம் தான் இது
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் எனற போது

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

என்ற பாடலின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் ..

தொடரும் ;-----




திங்கள், 24 அக்டோபர், 2016

29-10-2016,ஆம் நாள் தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள் !

29-10-2016,ஆம் நாள் தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள் !
ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமை உடைய அனைவருக்கும் தீப ஒளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள் .தீபாவளி எதற்க்காக வருகிறது என்பதை விளக்க வேண்டுமானால் கதைகளும் கற்பனைகளும் நிறைந்து உள்ளது,அவற்றிற்கு நாம் போக வேண்டாம் .நமக்கு மகிழ்ச்சித் தரும் திரு விழாவாக தீபாவளி கொண்டாடுகிறோம்.

எப்படி இருப்பினும் நாம் தீபாவளியைக் கொண்டாடுவது ''தீபத்தை'' முன் வைத்துக் கொண்டாடுகிறோம்.அந்த தீப ஒளியே உலகத்தின் முழு முதற்கடவுள் ஆகும்.அந்த ஒளிக்கு வள்ளலார் ''அருட்பெருஞ்ஜோதி '' என்று பெயர் வைத்து உள்ளார் .. அதன் அடையாளமாகத்தான் .வள்ளலார் அவர்கள்  ஞான சபையைத் தோற்றுவித்து.1872,ஆண்டு .தீப ஒளி வழிப்பாட்டை உலகிற்கு அறிமுகப் படுத்தினார் .   
அதன் அடையாளமாக நினைந்து கொண்டு தீப ஒளி அன்று நாம் அனைவரும் புத்தாடை உடுத்தி ,பட்டாசுகள் வெடித்து ,பலகாரங்கள் செய்து .உற்றார் உறவினர் ,நண்பர்கள் ,அனைவரும்  கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் உங்கள் உள்ளங்களில் நானும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகிறேன் .
ஒரு முக்கியமான வேண்டுகோள் !
அந்த தீப ஒளி அன்று ஒரு சில குடும்பங்களில்,ஏதும் அறியாத வாயில்லாத,பல அப்பாவி  உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உணவாக சுவைத்து உண்கிறோம்,அவைகள் என்ன பாவம் செய்தது !.இறைவன் படைப்பில் அதுவும் ஒரு உயிர் அல்லவா?! நாம் மகிழ்ச்சி அடைவதற்காக அதன் உயிர்களை கொள்வது கடவுள் சம்மதம் ஆகுமா ? என்பதை சிந்திக்க வேண்டும் யாரோ அறியாமல் காட்டிய வழி முறைகளை நாம் பின் பற்றி செய்து வருகிறோம் அறிவுள்ள மனிதர்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் .
இந்த தீப ஒளித்  திருநாளில் இருந்து உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருப்பதாக் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எல்லா உயிர்களும் உங்களை கடவுளாக நினைந்து கை கூப்பி வணங்கும் இதுவே நீங்கள் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும் .
உங்கள் அனைவரையும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழி காட்டுவார்
அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அமபலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் .
பொருட் சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர்  நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிய வாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற சபையில் விளங்கு கின்ற தெய்வம் அதே தெய்வம் !
சிற்சபை என்பது கடவுள் உயிர் ஒளியாக எல்லா உயிர்களிலும் இருக்கும் இடமாகும் அதலால் உயிர்களை கொல்வது இறைவனைக் கொள்வதாகும் .என் உயிரினும் மேலான ஆன்ம நேய அன்புடைய அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தீபாவளியை உயிர்க் கொலை செய்யாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் .உங்கள் அனைவருக்கும் தீப ஒளி நல வாழ்த்துக்கள் .
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
அன்புடன் ஆனமநேயன் --கதிர்வேலு
9865939896.

சனி, 22 அக்டோபர், 2016

சன்மார்க்க பிரார்த்தனை !

சன்மார்க்க பிரார்த்தனை !

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள், உடல்நிலைக் குறைவால் பாதிக்கப் பட்டு சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு,சிறப்பு மருத்துவர்களின் பெரு முயற்ச்சியில்  மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது.

அவர்களின் உடல்நிலை முழு குணம் அடைய வேண்டும் என்று ,நாளை காலை ஐந்து மணிக்கு ,சன்மார்க்க அன்பர்களின் கூட்டுப் பிரார்த்தனை நடை பெற உள்ளது .எனவே சன்மார்க்க அன்பர்கள் ,சன்மார்க்க சாதுக்கள் ,அனைவரும் பிராத்தனையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம் ..

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே !

மரணப் பெரும் பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே !

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

என்ற வள்ளல்பெருமான் வாக்கின் படி ,முதல்வரின் உடற்பிணியும் உயிர்ப் பிணியும் போக்கும்படி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அனைவரையும் அன்புடன் அழைக்கும் சன்மார்க்க அன்பர்கள் ..
சென்னை அப்போலோ மருத்துவமனை
சென்னை .....

அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ,,9865939896 .
அன்புடன் பொறுப்பாளர் ISO அண்ணாதுரை .9790787838....
மற்றும் சன்மார்க்க அன்பர்கள் ..
23-10-2016,,,காலை 5-00 மணி .....

செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஜீவ காருண்யத்தின் முடிவு !

ஜீவ காருண்யத்தின் முடிவு !

ஒரு நாள் ஜீவ காருண்யம் என்றால் மக்கள் இடத்தும்.. ,மாக்கள் இடத்தும் கருணைக் காட்டுவது என்ற அளவில் சில அன்பர்கள் ,பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்டு வள்ளலார் சொன்ன விளக்கம் .

அந்த அன்பர்களை அருகாமையில் அழைத்து அவர்களை நோக்கி ''நீங்கள் பேசிக் கொள்கிற ஜீவ காருண்யம் முடிவு பெற்று விடாது.அது இன்னும் பறந்து செல்வது ; என்று உதாரணமாக ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் ''என்று சொல்லத் தொடங்கினார் .''அன்பர்களே ! இரு முதியவர்கள் ஒரு வீதி வழியே சென்று கொண்டு இருந்தனர் .அப்போது அவருள் ஒருவரின் கால்பட்டு வீதியில் கிடந்த ஒரு மண் கட்டி உடைந்து போனது .

அதைக் கண்ட மற்றொருவர் உடனே மூர்ச்சை யானார் .மூர்ச்சை அடைந்த அவருக்கு உபசாரங்கள் செய்து முர்ச்சையைத் தெளிவித்த முன்னையவர் ,தாங்கள் மூர்ச்சை உற்றத்திற்குக் காரணம் என்ன ? என வினவ ,அதற்கு அம் முதியவர் ''உம்முடைய காலினால் அவ் அழகிய மண் கட்டி உடைந்து உருக்குலைந்து போனதே காரணம் ''எனக் கூறினார் ''என்று கதையைச் சுருக்கமாக முடித்து ,அவர்களுக்கு ஜீவ காருண்யத்தின் முடிவினை உணர்த்தி அருளினார் .வள்ளலார் ....

யோகத்தினும் சிறந்தது தோத்திரமே !

ஒருநாள் வள்ளலாரை அன்பர்கள் ''யோகம் முதலியன செய்ய எங்களால் இயலாதன வாக இருக்கின்றன ...ஆதலால் நாங்கள் ஈடேறுதற்குரிய ஒரு இலகுவான மார்க்கத்தைத் தேவரீர் திருவாய் மலர்ந்து அருளல் வேண்டும் ''என்று கேட்க வள்ளலாரும் ,'' இக் கடையுகமாகிய கலியுகத்தில் உங்களால் யோகம் முதலிய சாதனங்களை இயற்ற முடியாது .ஆதலால் நீங்கள் தோத்திரத்தையே  ஈடேறும் மார்க்கம் எனக் கொள்ளுங்கள் ''என்று இசைத்தனர் ....

இறைவனை தோத்திரம் செய்யுமாறு சொல்லிய பாடல்;--

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழுங் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே ! நன்னிதியே ! ஞான
நடத்தரசே ! என்னுரிமை நாயகனே ! என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர் !
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !

என்று தோத்திரம் செய்யச் சொல்லி உள்ளார்....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896...   

உடம்பு, உயிர், ஆன்மா !

உடம்பு, உயிர், ஆன்மா !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

என்  உயிரும் என் உடலும் என் பொருளும் யானே
இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதின் பின் மகிழ்ந்தே
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே
தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெருஞ் சுடரே
மண் உயிருக்கு உயிராகி இன்பமு மே நிறைந்தே
மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மன்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்தரசே
மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே !

என்னும் பாடலில் ஒரு பெரிய உண்மையை வள்ளலார் தெரியப் படுத்தி தெளிவு படுத்தி உள்ளார் .

உடம்பு ,உயிர் .பொருள் அனைத்தையும்  இறைவனிடம் ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் ...என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் ''சாகாக் கல்வி'' என்ன என்பதையும் மரணம் இல்லாமல் வாழும் வழியையும் தெரிந்து   விளங்கிக் கொள்ளலாம்.

ஆன்மா வாழ்வதற்கு என்ன தேவை ?

ஆன்மா இந்த உலகத்திற்கு வந்து  வாழ்வதற்கு ,உயிர் என்னும் ஜீவன் தேவைப் படுகின்றது உயர்  இயங்குவதறகு ,உடம்பு தேவைப் படுகின்றது உடம்பு இயங்குவதற்கு கருவிகள் என்னும் கண்,மூக்கு,காது ,வாய்,உடல் உறுப்புக்கள் என்னும்  பொருள்கள்  தேவைப்படுகின்றது ! அந்த  ஆன்மா உயிர்,உடம்பு  மூன்றும் இந்த உலகில் வாழ்வதற்கும் ,எவையும் தடையின்றி பெறுவதற்கும், ,அனுபவிப்பதற்கும்  சுதந்திரம் என்னும் முழு உரிமை வழங்கப் படுகின்றது.அதற்கு ஜீவ சுதந்திரம்,தேக சுதந்திரம்,போக சுதந்திரம் என்பதாகும் .

 இந்த உரிமையைக் கொடுப்பதுதான் இந்த பஞ்ச பூத அணுக்கள் .இந்த அணுக்களை இயக்குவதுதான் மாயை ,மாமாயை,பெருமையை என்னும் அதிகாரத்தில் உள்ள நிர்வாகிகளாகும்,அதாவது அதிகாரத் தலைவர்களாகும்  ....இந்த மாயைகள் தான் உடம்பையும் .அவற்றை இயக்கும்  இயங்கும் பொருள்களான கண்,காது,மூக்கு,வாய் உடம்பு என்னும், கருவிகள் அனைத்தையும் பூத அணுக்களைக் கொண்டு பொருத்திக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டு உள்ளவை களாகும் ..அதனால் தான் இந்த உலகம் மாயை உலகம் என்பதாகும்.

ஆன்மா இந்த மாயை உலகிற்கு வந்ததும் ஆன்மாவில் இருந்து உயிர் தோன்றும்,ஆன்மாவும் உயிரும் சேர்ந்து  வாழ்வதற்கு பஞ்ச பூத அணுக்களைக் கொண்டு பின்னப்பட்ட பூத பிரக்கிருதி அணுக்களால் தான் அதாவது அணுக் கருவிகளைக் கொண்டு மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட அழகான வீடு என்பது தான் உடம்பு என்பதாகும்....அதற்கு ஜீவ தேகம் என்று பெயராகும்.

வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் பதிவு செய்துள்ளது ;--

ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூத காரிய தேகங்களே உரிமையாகி இருக்கின்றன என்றும்,அந்தத் தேகங்களில் ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம்,மறைபடும்,அது மறையில் அருள் விளக்கம் வெளிப்படாது என்றும்,வெளிப்படாத போது மூடம் உண்டாகும் என்றும்,அதுவே ஆன்மாக்களுக்குப் பந்தமாகும் என்றும்,அது பற்றி அவசியம் பூத காரிய தேகம் வேண்டும் என்றும்,

பூத காரிய தேகங்களுக்கு மாயை முதற் காரணம் ஆதலால் அந்த மாயையின் விகற்ப ஜாலங்களே பசி,கொலை,தாகம்,பிணி,ஆபத்து,பயம்,இன்மை,இச்சை என்பவைகளால் அந்த தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடும் என்றும்,தெளிவாக வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .

மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட  வீட்டில் வாழ்வது தான் உயிர் ,ஆன்மா என்பதாகும்...இவை இரண்டும் கணவன் மனைவி போன்றது .கணவன் மனைவி என்ற இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் பிரச்சனை இல்லை .இங்குதான் பிரச்சனை  ஆர்மபமாகின்றது .உயிர் என்னும் ஜீவன் சொல்கின்றது ..இந்த தேகம் எனக்காகவே கட்டிக் கொடுக்கப் பட்டு உள்ளது அதனால்  என்னுடைய விருப்பத்தின் படிதான்  செயல்படவேண்டும்,நான் விரும்பியதை தான் செய்வேன்,அதற்கு நீ துணையாக இருக்க வேண்டும்  என்கின்றது,

அதற்கு  ஆன்மா சொல்லுகின்றது;-- .நான் தான் இறைவன் அனுப்பிய ஆன்மா ,நான் வாழ்வதற்குத் தான் உயிர் உடம்பு கொடுக்கப்பட்டு உள்ளது .எனவே நான் சொல்லியபடிதான் நீ கேட்க வேண்டும் என்று சொல்லுகின்றது .

( இதைத்தான் சமயங்கள் மதங்கள் சிவன் இல்லையேல் சத்தி இல்லை .சத்தி இல்லையேல் சிவன் இல்லை என்பார்கள்.) (ஆன்மா சாட்சியாக உள்ளது என்பார்கள்)...(இதைத்தான் வள்ளுவர் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,  அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்கின்றார் )...(ஜீவன் என்னும் உயிர் பொருளை விரும்பும் .ஆன்மா அருளை விரும்பும்.....)

ஆன்மா சொல்லுகின்றது;--- சரி உன்னுடைய விருப்பம் போல் செய்து கொள் என்று ஆன்மா விட்டுக் கொடுத்து விடுகின்றது..அதனால் உயிர் தன்னுடைய விருப்பம் போல் வாழ்ந்து ,பிறந்து பிறந்து இறந்து இறந்து ,தேகம் எடுத்துக் கொண்டே இருக்கின்றது ..ஆன்மா சாட்சியாக பார்த்துக் கொண்டே உள்ளது .இறுதியாக உயிர் என்னும் ஜீவன் இவ்வுலகில் வாழ்வதற்கு சலிப்பு உண்டாகி வருத்தம் அடைந்து தான் செய்த தவற்றை உணர்ந்து  ஆன்மாவிடம் சரண் அடைகின்றது ..சரண் அடைந்து விட்டபடியால் உயிரைக் காப்பாற்ற வேண்டும்,உயிரைத் தன் வசமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருணைக் கொண்டு  ''ஆன்மா'' சில கட்டளைகளை உயிருக்கு சொல்லிக் கொடுக்கின்றது .

அந்த கட்டளை எதுவென்றால்;--  ஜீவ காருண்யம் ..சத் விசாரம் என்னும் இரண்டு கட்டளைகளாகும்.....ஏன் ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் ? ஏன் சத்விசாரம் செய்ய வேண்டும்.

ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் ?

ஜீவன் என்னும் உயிரானது தன்னுடைய அறியாமையாலும், அஜாக்கரதையாலும் மற்ற ஜீவன் களுக்கு துன்பம் கொடுத்து இன்பம் அனுபவித்து உள்ளது, அவற்றை நிவர்த்தி செய்து ஈடு கட்ட வேண்டும் .என்பதற்காகவே ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் ..

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் ;---

காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டுக்
கரும்பை விட்டுக் கடுகு விரைத்தக் களிக்கின்ற உலகீர்
கூடு விட்டுப் போயின பின் எது புரிவீர் எங்கே
குடி இருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே
பாடு பட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்
பட்டது எலாம் போதும் இது பரமர் வருதருணம்
ஈடு கட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்
எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை உரைத்தனனே !

அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழும் வாழ்க்கை பெறுவதற்காகவே இந்த மனித தேகம் கொடுக்கப் பட்டு உள்ளது ...எதைப்போல என்றால் ,கற்கள்,காடு ,மேடு ,பள்ளம்,நிறைந்த இடம். புன்செய் பயிர் வைக்க கூட தகுதி இல்லாத  இடத்தை  திருத்தி சமப்படுத்தி ,அங்கே தண்ணீர் உண்டாக்கி நன்செய் பயிர் விளைவிக்கும் அழகான நன்செய் பயிர் செய்யும் நிலமாக மாற்றி ,நெல் ,கரும்பு,வாழை,போன்ற பயன் தரும் பயிர்களை வைக்காமல்,கடுகு போன்ற விஷப் பயிரை வைத்துள்ளீர்களே இது என்ன நியாயம்,,அறிவு இருந்தும் அறிவு இல்லாமல் செய்யும் செய்கைபோல் உள்ளது உங்கள் அறிவு என்கின்றார் வள்ளலார் /..

அதேபோல் ஜீவன் என்னும் ஜீவ அறிவானத்து  ,ஆன்ம அறிவைத்  தொடர்பு கொள்ளாமல்,ஜட அறிவான  கரண அறிவையும்,இந்திரிய அறிவையும்,தொடர்பு கொண்டு கருணை இல்லாமல்,உலக உயிர்களுக்கும் தன்னுடைய உயிருக்கும்  தீங்கு செய்து அபாயங்களை உண்டாக்கிக் கொண்டு உள்ளது ..அதனால் அந்த அபாயங்களை நீக்கிக் கொள்ளவும்,அதில் இருந்து விடுபடவும்,அவற்றை ஈடு கட்டவும் தான் ஜீவ காருண்யம் செய்ய வேண்டி  உள்ளது.அதாவது .வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்பதே ஜீவ காருண்யம் ,அதுவே உயிர் இரக்கம் என்பதாகும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் பதிவு செய்து உள்ளது ;--

பசி,கொலை,தாகம்,பிணி,,பயம்,இச்சை,எளிமை,என்பவைகளால் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடுகின்றது .அந்த அபாயங்கள் நேரிடாமல் கரணம் இந்திரிய சகாயங்களைப் பெற்று  தம்முடைய அறிவைக் கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு முயற்சி செய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க சுதந்திரம் சீவர்களுக்கு அருளால் கொடுக்கப் பட்டது என்றும்,

அந்த சுதந்தரத்தைக் கொண்டு சீவர்கள் எல்லாம் தேகங்களில் இருந்து அபாயங்களை நீக்கி ஆன்ம லாபத்தைப் பெறுவதற்கு  முயற்சி செய்யக் கடவார்கள் என்றும் வள்ளலார் ஜீவ காருண்யத்தின் வல்லபத்தை ,அதன் விளக்கத்தைத் தெரிவித்து உள்ளார் .எந்த சுதந்தரத்தால் தவறு செய்தீர்களோ அந்த சுதந்தரத்தாலே நிவர்த்தி செய்ய வேண்டும் அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும்.எனவே  இடைவிடாது ஜீவ காருண்யமே  விரதமாக கொண்டு உயிர்களுக்கு உபகாரம் செய்து வந்தால் உண்மையான ஆன்ம அறிவு விளக்கம் தோன்றும்...

திறவு கோல் !

ஆன்ம அறிவு விளக்கம் மறைந்து உள்ளது,அந்த.மறைப்பை நீக்கும், திறக்கும் திறவு கோல் தான்  ஜீவ காருண்யம் என்னும் சாவி என்பதாகும்.இதுவே மரணத்தை வெல்ல முடியுமா என்றால் முடியாது...கதவைத் திறக்க மட்டுமே முடியும்.உள்ளே செல்வதற்கு முடியாது..ஜீவ காருண்யத்தால் ஜீவன் என்னும் உயிரை உலக வாழ்க்கையில் இருந்து விடுவித்து .. ஆன்மா பக்கம் செல்ல வைக்கும் செயலாகும்...உயிர் ஆன்மாவை நோக்கி சென்றால் கரணங்களும்,இந்திரியங்களும்,தானே ஆன்மாவை நோக்கி சென்று விடும்...

அதற்கு மேல்தான் சத் விசாரம் என்பதாகும்...சத் விசாரத்தினால்தான் அருளைப் பெற முடியும்.

சத் விசாரம் என்றால் என்ன ?

தொடரும் ;-- 

திங்கள், 17 அக்டோபர், 2016

இறைவன் வந்தார் !


இறைவன் வந்தார் !

உலகை படைத்த இறைவன் உயிர்களைப் படைத்த இறைவன் அண்டங்களைப் படைத்த இறைவன் வடலூர் வந்தார்  !
இந்த உலகத்தில் உண்மையான இறைவனை வரவைத்தவர் வள்ளல்பெருமான்
அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .
அவர்தான் எல்லா உலகங்களையும் .எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள்களையும் படைத்தவர்.அவரே உண்மையான தெய்வமாகும்.
அவர்தான் தாயாகவும் தந்தையாகவும் தாங்கிக் கொண்டும் காப்பாற்றிக் கொண்டும் உள்ள தெய்வம்
அவர்தான் அருள் ஒளியாக இருக்கின்றார்.
நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே தெய்வம் அருட்பெருஞ் ஜோதி தெய்வம்,அந்த உண்மையான இறைவனை வணங்க வேண்டும் வழிபாடு செய்யவேண்டும்.
நம்முடைய சிர நடுவில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.
நாம் ஒவ்வொருவரும் வீட்டில் ''ஒளி என்ற தீபத்தை'' ஏற்றி வைத்து வணங்க வேண்டும் . இறைவன் உங்கள் வீட்டிற்கு பாது காப்பாக இருந்து காப்பாற்றுவார்.உங்கள் வீட்டின் இருள் அகன்று அருள் பிரகாசம் தோன்றும்.
உங்களின் துன்பங்கள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்துவிடும்.
உங்கள் துன்பம் தொலைந்து இன்பம் பெருகும் .இருள் விலகி, ஒளி வீசும்.எல்லா நன்மையையும் தேடிவரும்.
சமய மத தெய்வங்கள் !
நீங்கள் இது வரையில் வணங்கி வழிபாடு செய்து கொண்டு இருக்கும் சமய மத தெய்வங்கள்  யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனைத் தேடி அலைந்து கொண்டு உள்ளன.
உலக உயிர்கள் நன்மை அடையும் பொருட்டு வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிமுகப் படுத்தி உள்ளார் .அவர் எங்கு உள்ளார் என்பதை வள்ளலார் தெளிவாக எளிய முறையில் விளக்கி ய்ள்ளார் .
தெளிவான் பாடல் ;---
அருட் ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் 
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் 
பொருள் சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம் 
போதாந்தத்  தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் 
இருட் பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் 
எண்ணிய நான் எண்ணிய வாறு எனக்கு அருளும் தெய்வம் 
தெருட்பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம் 
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !
எனவே ஒளியை வழிபாடு செய்யுங்கள், ஒளியைத் தொடர்பு கொள்ளுங்கள் .அந்த ஒளி இருக்கும் இடம் தான் நம்முடைய ஆன்மா என்னும் உள் ஒளியாகும்.,நம்முள்,நம்முடைய சிர நடுவில் நம்மை இயக்கிக் கொண்டு  இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொள்வது நமக்கு என்ன சிரமம்...சிரமம் இல்லாத வழியைக் காட்டி உள்ளார் ..
நம்முடைய பூதக்  கண்களுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டு இயக்கிக் கொண்டு உள்ளது ..அவற்றை இடைவிடாது தொடர்பு கொண்டால் ,நமக்குத் தெரிவிக்க வேண்டியதை அறிவின் வழியாக தெரியப் படுத்தும் .அறிவைக் கொண்டு எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம் .உங்கள் அறிவு உங்களிடமே உள்ளது .உங்களுக்கு நீங்களே எஜமான் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து கொள்ள நீங்கள் யாரையும் தேட வேண்டிய அவசியம்  இல்லை. உங்களுக்கு நீங்களே குருவாகும் .
தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் .தலைவனை அறிந்தால் கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.
வள்ளலார் தன்னை அறிந்ததால் அருட்பெருஞ் ஜோதிஆண்டவர் வள்ளலாரைத் தேடி வந்தார் .வந்ததும் மட்டும் அல்ல ! வள்ளலாரை ஆட்கொண்டு அவர் உடம்பிலே கலந்துகொண்டார் .அதேபோல் நம்மையும் ஆட்கொள்வார் நம்முடனும் கலந்து கொள்வார் ...
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் 
மா தவம் பன்னாள் புரிந்து மணிமாட நடுவே 
தேன் இருக்கும் மலர் அணைமேல் பளிங்கு கரையின் ஊடே 
திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும் 
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே 
நல்ல திரு அருள் அமுதம் நல்கியதும் அன்றி என் 
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன் 
உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந் தனையே ! 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 
எங்கே தேடி வந்தார் ..வள்ளலார் இருக்கும் இடமான வடலூருக்கு  அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் சித்தி வளாகத்திற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்  வந்தார் ,அங்கு வந்து என்ன செய்தார் என்பதை தெளிவாக விளக்கும் பாடல் ;--

என்சாமி எனதுதுரை என்உயிர் நாயகமே 
இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் 
பின் சாரும் இரண்டரை நாழிகைக் குள்ளே எனது 
பேர் உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் 
தன் சாதி உடையப் பெரிய தவத்தாலே நான்தான் 
சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே 
மின் சாரும் இடைமடவாய் என் மொழி நிந்தனக்கே 
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

என்னும் பாடல் வாயிலாக,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்த அனுபவத்தையும் அவரைக் கலந்து கொண்ட உண்மையையும் தெளிவாக தெரியப் படுத்தி  வள்ளலார் மக்களுக்கு இந்த உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அருட்பெருஞ் ஆண்டவரை.ஒருமணி நேரம் காக்க வைத்து , கால அவகாசம் கொடுத்து தெரிவிக்கின்றார் . 
நமக்கு ஏன் இன்னும் சந்தேகம்.வள்ளலார் வாழ்ந்து காட்டி உள்ளார் .வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் நம்மை ஆட்கொள்ள வருவார் ..இதுதான் உண்மை ...
நாம் சுத்த சன்மார்க்கத்தில் உள்ள சாகாக் கல்வியைப் பற்றி  பேசப் பழகி உள்ளோம் வாழப் பழக வில்லை ..பேச்சைக் குறைத்து வாழ்ந்து காட்டுவோம்...வள்ளலார் அகவலில் இறுதியாக சொல்லுவார் ..

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறு எல்லாம் 
விளக நீ அடைந்து விளக்குக மகிழ்க !
என்பார் வள்ளல்பெருமான்.நாம் அடைந்தால்தான் மற்றவர்களுக்கு போதிக்க முடியும்..முயற்சி செய்வோம் முடியாதது ஒன்றும் இல்லை ...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 13 அக்டோபர், 2016

சாகாக் கல்வி ஒரு சிறு விளக்கம் !

சாகாக் கல்வி ஒரு சிறு விளக்கம் !

சாகாக் கல்வி என்பது;--- மரணம் அடையாமல் வாழும் வாழ்க்கைப் பற்றி கற்றுக் கொள்ளும் கல்விக்கு சாகாக் கல்வி என்று பெயர் .

உலகில் உள்ள  அனைத்தையும் அறிந்து கொள்ள ஆரம்பக் கல்வி முதல் ,பல்கலைக் கழகம் வரை, கல்வி சாலைகள் உள்ளன ,ஆனால் உடம்பையும் உயிரையும் அழிக்காமல் பாது காக்கும் கல்வி சாலைகள் இல்லை..உலகில் உள்ள கல்விகள் அனைத்தும் பணம் ( பொருள் ) சம்பாதிக்கும் கல்வியாகவே உள்ளது ..அருள் சம்பாதிக்கும் கல்வி எங்குமே இல்லை என்பதே அனைவருக்கும் தெரியும்.

சாகாக் கல்வி ;--

நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கும் ''திரு அருட்பிரகாச வள்ளலார் ''அவர்கள் சாகாக் கல்வியை உலகிற்கு அறிமுகப் படுத்தி உள்ளார்.அவர்களால் சொல்லப்படும் சாகாக் கல்வியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

சாகாத கல்வித் தரமறிதல் வேண்டும் என்றும்
வேகாத கால் உணர்தல் வேண்டும்,உடன் -சாகாத்
தலை அறிதல் வேண்டும் தனி அருளாம் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து !.....அடுத்து

சாகாத தலை அறியேன் வேகாத காலின்
தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும்
அறியேன் மெய்ந் நெறிதனை ஓர் அணு அளவும் அறியேன்
மாகாதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும்
மணி மன்றம் தனை அடையும் வழியும் அறிவோனோ
ஏகாய உலகினிடை எங்கனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே !......அடுத்து

சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்
சன்மார்க்க சபையில் எனைத் தனிக்க வைத்த தெய்வம்
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம்
மாதவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலை அதன்மேல் எனை ஏற்றும் தெய்வம்
எண்ணு தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகம் எலாம் செய்ப் பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !  அடுத்து

சாகா அருள் அமுதம் யான் அருந்தி நான் களிக்க
நாகாதி அதிபர் சூழ் நடராஜா --ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற !...அடுத்து

கண்டேன் களித்தேன் கருணைத் திரு அமுதம்
உண்டேன் உயர் நிலைமேல் ஓங்கு கின்றேன் கொண்டேன்
அழியாத் திரு உருவம் அச்சோ எஞ்ஞான்றும்
அழியாச் சிற்றம்பலத்தே யான் !

என்று பல ஆயிரம் பாடல்களில் சாகாக் கல்வியைப் பற்றி வள்ளலார் தெரிவித்து உள்ளார் .

முதலில் சாகாக் கல்வியின் தரம் அறியேன் என்கின்றார் ..அடுத்து சாகாக் கல்வியின் தரம் அறிதல் வேண்டும் என்கின்றார் ..அடுத்து சாகாக் கல்வியை எனக்கே கற்றுத் தந்தாய் என்கின்றார் .அடுத்து சாகாமல் இருக்கும் அருள் அமுதம் உண்டேன் என்கின்றார் ...அடுத்து அழியாமல் வாழும் அருளைப் பெற்று எஞ்ஞான்றும் அழியாமல் வாழும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு உள்ளேன் என்கின்றார் ...அடுத்து .திரு சிற்றம்பலத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நிலைப் பெற்றேன் என்கின்றார் ...

சாகாக் கல்வி கற்க முக்கியமான மூன்று வழிகளை சொல்லுகின்றார் ..;---

''சாகாத் தலை ...வேகாக் கால் ...போகப் புனல் ''....என்பவை சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள் என்கின்றார் ..இவை மூன்றும் கண்டத்திற்கு மேல் உள்ளது .அதாவது மனிதனின்  தலைப் பாகத்தில் உள்ளது அதை தெரிந்து கொள்வதுதான் சாகாக் கல்வி என்பதாகும்...இவை மூன்றும் ஞான யோகம்  என்னும் பதினைந்தாவது அனுபவ காட்சியில் ,அனுபவ நிலைகளை அறிந்து கொள்ளும் போது வெட்ட வெளிச்சமாகத் தெரியும்

சாகாக் கல்வி கற்க;-- சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் சொல்லி உள்ள  ''ஞான சரியை தான் '' முதற் படியாகும்.அடுத்து உள்ள ஞான கிரியை ,ஞான யோகம் என்னும்  மூன்றாம் படிதான் ஞான யோகம் என்பதாகும்.அந்த ஞான யோக அனுபவ  நிலையில் உள்ளவர்களுக்குத் தான் எல்லா உண்மைகளும் தெரியும்..அடுத்து ஞானத்தில் ஞானம் என்பது முழுமையான படியாகும்  ( பூரணம் ) அடைவதாகும் அதாவது...கடவுளை அறியும் நிலையாகும்.....இந்த நிலையை அறிந்தவர் அடைந்தவர் உலகில் ஒரே ஒருவர்  அவர்தான் ''திரு அருட்பிரகாச  வள்ளலார்'' என்பவராகும்.

சாகாத்தலை ..வேகாக் கால் ...போகப் புனல் ..என்ன ? என்பதைப் பார்ப்போம்...

சாகாத்தலை என்பது;--- ஜீவன் என்னும் உயிராகும் ..அதற்கு காரண அக்கினி என்று பெயர் ...ஆகாசம் என்றும் பெயர் ..
வேகாக் கால் என்பது ;-- வேகாத காற்று என்பதாகும் ....அதற்கு ஆன்மா என்றும் பெயர் ..காரண வாயு என்றும் பெயர் ....வாயு என்றும் பெயர் ...
போகப் புனல் என்பது ;---போகாத அருள் என்னும் திரவம் என்பதாகும்  .; பூரண அருள் என்பதாகும் ..அதற்கு காரணோ அகம் என்றும் பெயர்  ....அக்கினி என்றும் பெயர் ..போகாத தண்ணீர் என்றும் பெயர்

சாகாத்தலை என்பது ;--சாகும் உயிரைக் சாகாமல் காப்பாற்றுவதே சாகாத்தலை என்பதாகும்.அதாவது உடம்பை விட்டு உயிர் பிரியாமல் பாது காக்க வேண்டும்  ,உயிரை ஒன்றும் இல்லாமல் ஆகாசம் போல் மாற்ற வேண்டும்,உயிர் மீண்டும்  பிறப்பு எடுக்காமல் ஒளியாக மாற்ற வேண்டும். .அதற்கு சாகாத்தலை என்று பெயர் ..

வேகாக் கால் என்பது ;--மேலேக் கண்ட உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் வேகாத காற்றை சுவாசிக்க வேண்டும்.அதுவே வேகாத கால் என்பதாகும்.

 உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் நாம் சுவாசிக்கும் காற்று  சூடு படாமல் இருக்க வேண்டும் .நாம்  சுவாசிக்கும் காற்று ஒவ்வொரு முறையும் .கத்தரிக்கோல் போன்று விரிந்து ,தலையின் மத்தியில் உள்ள ஆன்மாவைச் சிற்றிக் கொண்டு உள்ளே செல்கின்றது ..அதற்கு பிராண வாயு என்று பெயர் ..ஆன்மாவை சுற்று கின்றபோது காற்று சூடாகித் தான் அசுத்தங்களை வெளியே தள்ளிவிட்டு சுத்தமானக் காற்றை உடம்பு முழுவதும் அனுப்புகின்றது .,உள்ளே செல்வது ''கரிமலவாய்வு'' என்னும் பிராண வாய்வு  என்பதாகும்...வெளியே வருவது அசுத்தக் காற்று என்னும் ''கார்பன் டை ஆக்சைடு'' என்பதாகும்....

காற்று இந்த உலகில் நான்கு வகையாக கலந்து உள்ளது .அவை  அசுத்தக் காற்று,.. விஷக் காற்று..,பூதக் காற்று,..அமுதக் காற்று என்பனவாகும்.நாம் சுவாசிக்கும் காற்றை மாற்ற  வேண்டும் ...அமுதக் காற்றை மட்டும்  சுவாசிக்கும் பழக்கத்திற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..''அமுதக் காற்று உள்ளே செல்லும் போது ஆன்மாவில் சென்று  சூடு ஆகாமல் நேரடியாக உள்ளே செல்லும் .அதுவே வேகாக் கால் என்பதாகும்''..நாம் தினமும் தனித்து இருந்து காலையில் 4-30-மணிக்கு பூமியை நோக்கி வரும் அமுதக் காற்றை மட்டும் சுவாசிக்கும் பழக்கத்திற்கு வருவதாலும் இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொள்வதாலும்,அமுதக் காற்றை சுவாசிக்கும் பழக்கம் வந்துவிடும் .

சூடு ஆகாத அமுதக் காற்றை சுவாசிப்பதே  ''வேகாக் கால்'' என்பதாகும்.அதாவது ஆன்மாவில் உள்ள சுத்த உஷ்ணம் விரையம் ஆகாமல் இருக்க வேண்டும்..வேகாத விரயம் ஆகாத ஆன்மாவாக இருக்க வேண்டும் ,வேகாத கற்றாக இருக்க வேண்டும்.அதுவே வேகாக்கால் என்பதாகும். விரிக்கில் பெருகும்.

போகப் புனல் என்பது ;-- மேலே சொன்ன அமுதக் காற்றால் சுத்த உஷ்ணம் வெளியே  விரையம் ஆகாமல் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகி   அருள் என்னும் திரவ அமுதம் சுரக்கும்..அந்த அருள் என்னும் அமுதம்  உடம்பை விட்டு  வெளியே போகாத (தண்ணீர்) அதாவது போகப் புனலாக மாற்ற வேண்டும்...

நாம் உண்ணும் உணவு இரத்தமாக ,விந்துவாகி விரையம் ஆகிக் கொண்டே உள்ளது. அது தான் போகும் புனல் என்பதாகும் ....உணவு உண்ணாமல்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து  அருளைப் பெற வேண்டும்..அருள் உடம்பை விட்டு வெளியேப் போகாது.அதுதான் போகப் புனல் என்பதாகும். அருளைப் பெற வேண்டுமானால் உலகில் உள்ள உயிர்கள் மேல்  .உண்மை இரக்கம்.உண்மை தயவு, உண்மை கருணை,  உண்மை அன்பு வேண்டும்...இவையாவும் உண்மையாக இருந்தால் ''சாகாக் கல்வி''என்பதை
சீக்கிரம் கற்றுக் கொள்ளலாம் .

வள்ளலார் அகவலில் பதிவு செய்து உள்ளது ;--

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருள் அமுதம் எனக்கே அளித்து அருள் நெறி வாய்த்
தெருள் உற வளர்க்கும் சிவமே சிவமே !

உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை
அலகில் பேர்  அருளால் அறிவது விளக்கிச்
சிறு நெறி செல்லாத் திறன் அளித்து அழியா
துது நெறி உணர்ச்சி தந்து ஒளி உறப் புரிந்து
சாகாக் கல்வியின் தரம் எலாம் உணர்த்திப்
சாகா வரத்தையும் தந்து மேன் மேலும்
அன்பையும் விளைவித்து அருட் பேர் ஒளியால்
இன்பையும் நிறைவித்து  என்னையும் நின்னையும்
ஓர் உரு ஆக்கி யான் உன்னிய படி எலாம்
சீர் உறச் செய்து உயிர் திறம் பெற அழியா
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெரும்ஜோதி
வெல்க நின் பேரருள் வெல்க நின் பெருஞ் சீர்
அல்கல் இன்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்னும் விளக்கத்தால் தெளிவுப் படுத்தி உள்ளார் ...

சாகாத்தலைப் பெறுவதற்கு.... பசித்து இருக்க வேண்டும்,
வேகாக் கால் ,பெறுவதற்கு..... தனித்து இருக்க வேண்டும்
போகப் புனல் பெறுவதற்கு...... விழித்து இருக்க வேண்டும்.

தொடரும் ;--

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.




புதன், 12 அக்டோபர், 2016

மரணம் இல்லாப் பெருவாழ்வு ஒரு சிறு விளக்கம் !

மரணம் இல்லாப் பெருவாழ்வு ஒரு சிறு விளக்கம் !

மனிதனின் உடம்பில் பக்குவம் உள்ள ஆன்மா குடி இருக்கின்றது.அதனால் உயர்ந்த அறிவுள்ளவன் மனிதன் என்று சொல்லப் படுகின்றது ..அது ஐந்து மலங்களால் ஆனது.,அந்த உடம்பில் ஆன்மா ,உயிர், கரணங்கள்,இந்திரியங்கள் சேர்ந்த ஒரு கலவையாகும். அதற்கு  ஊன உடம்பு
( பஞ்ச பூத உடம்பு ) என்று பெயராகும்.

அந்த மலங்களால் ஆன கலவைகள் இயங்குவதற்கு ,பொருள் உணவு வேண்டும்.பொருள் உணவு என்பது பஞ்சபூதங்களால் கிடைக்கும்  உணவு முறைகள் ஆகும் .அந்த உணவை  உண்ணுகின்ற வரையில் மரணம் வந்து கொண்டே இருக்கும்..இன்பம் துன்பம் வந்து கொண்டே இருக்கும்.

ஆன்மா !

ஆன்மா என்னும் உள் ஒளியானது.உலக பற்று என்னும் சிறிய அற்ப ஆசைகளான மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை என்னும்  இன்பங்களினால் அதாவது  பாசங்களில் சிக்கி உள்ளதால் ஆன்மாவை ஏழு விதமான மாயா திரைகள் மறைத்துக்  கொண்டு உள்ளது.ஆதலால் ஆன்மா தன்னை அறிந்து கொள்ளாமல்,பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,இந்த உலகிலே வாழ்ந்து கொண்டு உள்ளது .

எனவே ஆன்மா தன்னுடைய உண்மையான தந்தை யார் ? என்பது தெரியாமல் தன்னுடைய உண்மையான சொரூபம்  என்னவென்று தெரியாமல்,தான் எங்கு இருந்து வந்தோம் என்று தெரியாமல்,ஐந்து மல இருள் சூழ்ந்து தன்னை அறியாமல்   வாழ்ந்து கொண்டு உள்ளது .

அருள் !

இந்த மனித தேகத்தில் இருந்து  விடுபட வேண்டுமானால் ''அருள்'' என்னும் திரவம் வேண்டும்...அந்த அருள் என்னும் திரவம் முழுமையாக அதாவது பூரணமாக கிடைக்க வேண்டும்.அந்த அருள்  ஆற்றலால் உடம்பையும் உயிரையும்,கரைத்து பிரிக்க வேண்டும்..உடம்பும் உயிரும் கரைந்து பிரிந்தால் ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பு வெளிப்படும்.ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

உடம்பையும் ,உய்ரையும்  அழிக்கக் கூடாது அதாவது மரணம் வரக்கூடாது .மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு உண்டு.

ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் மீண்டும் பிறப்பு என்பது கிடைக்காது, ஆன்மா மீண்டும் பிறப்பு  எடுக்காது...அந்த ஆன்மாவில் இருந்து மீண்டும்  உயிரும் உடம்பும் தோன்றாது..

அருட்பெருஞ்ஜோதி தெய்வம் !

அருளைக் கொடுக்கும் ஒரே தெய்வம்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பேர் ஒளியாகும்..அந்த தெய்வம் தான் நமது தாயாக, தந்தையுமாய் தாங்கி நிற்கும் தெய்வம் ..

சாதி, சமய,மதங்களில் சொல்லும் தெய்வங்கள் அனைத்தும் ''கலையுரைத்த கற்பனை தெய்வங்களாகும்''...அத் தெய்வங்களைப்  பின் பற்றாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே,பின்பற்றித் தொடர்பு கொள்ள வேண்டும்.

உடம்பையும் உயிரையும் ஐந்து மலங்களையும்..... ,,தவம்,யோகம்,தியானம்,போன்ற உபாய வகையாலோ ,மற்றும் காய கற்பத்தாலோ ,மருந்தாலோ,மன உணர்வாலோ ,மற்ற புறச்செயல்களாலோ,நீக்கப் பட முடியாது ...

திருவளின் சேர்க்கையால் தான் உடம்பிலும் உயிரிலும் கலந்து நிறைந்து ,கரைந்து பிரிக்க முடியும்...ஆகவே அந்த அருள்தான் எல்லாவற்றுக்கும் மேலான ''அருள் ஞான'' மருந்தாகும்.....அந்த அருள் ஞான மருந்தை முழுமையாக அனுபவிப்பவர் எவரோ ? அவரே மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழ முடியும்......

வள்ளலார் ஞான சரியை என்னும் தலைப்பில் பதிவு செய்து உள்ள பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !

என்று தெளிவாக விளக்கி பதிவு செய்து உள்ளார்...

மரணத்தை வெல்வதற்கும்,அருளைப் பெறுவதற்கும் ஒரே கருவி ''கருணைதான்'' என்று வள்ளலார் சொல்லி உள்ளார்,கருணையினால் அருள் சுரக்கும்....எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே என்று அகவலில் தெரிவித்து உள்ளார் .

பேருபதேசம் ;---

வள்ளலார் இறுதியாக பேருபதேசம் என்ற பகுதியில் தெளிவாக விளக்கி உள்ளார் ,...இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலை மேல் ஏற்றி இருக்கின்றார்...எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது ,,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் ஆனால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் .இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்று ஒரு கேளிவியைக் கேட்கின்றார் ,,

எவரும் பெற்றுக் கொள்ளவில்லை .நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த ;லட்சயமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ...அந்த லட்சியம் என்னை தூக்கி விடவில்லை,என்னை இந்த இடத்திற்குத் தூக்கி விட்டது யாதெனில் ...;--

எனக்கு அக்காலத்திலே தெரிவிக்க வேண்டியதை தெரிவித்தார் ..அந்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்  ''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றதுதான் என்னை ஏறா நிலை மிசை ஏற்றி விட்டது ,,அவைதான் தயவு ,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என்று மிகத் தெளிவாக பதிவு செய்து உள்ளார் .

அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் ,அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும் என்கின்றார் ,தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம் ...ஒருமை என்பதுதான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.

ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்றால் என்ன ?

எத்துணையும் பேதம் உறாது எவ் உயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்  அவர் உளம் தான் சுத்த
சித்து உருவாய் எம் பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ !

எல்லா உயிர்களும் தம் உயிர்போல் நினைக்கின்றது தான் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்பதாகும்  ,,,அந்த உரிமையைத் தெரிந்து கொண்டு வாழ்பவர்களுக்கு மட்டுமே கருணை என்னும் தயவு உண்டாகும் .அந்த கருணை உள்ளவர்களுக்கு ..அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெரும் கருணை என்னும் அருள் கிடைக்கும்...அந்த அருள் பூரணமாக கிடைக்கும் போது தான் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும் ,

ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் மட்டுமே,  மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்....அதற்குப் பெயர்தான் பேரின்ப பெருவாழ்வு என்பதாகும்,,,சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் என்பதாகும்...

தொடரும் ;--

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896 ...


தமிழக முதல்வர் !

தமிழக முதல்வர் !
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ,உடல் நிலைக் குறைவால் அப்போலோ மருத்துவ மணையில் அனுமதிக்கப் பட்டு பல நாட்கள் ஆகிறது
அவர்களின் உடல் நிலைக் குறித்து மக்களுக்கு சரியான உண்மை தெரியவில்லை என்பது மக்களின் கேள்விகள் என்பது அனைவரும் அறிந்ததே .
இந்தக் கேள்வி நியாயமான கேள்வியாகும் .முதல்வர் தனிப்பட்ட மனிதர் அல்ல . . மக்களால் தேர்ந்தெடுத்தவர் ,மக்கள் சட்டத்தை கேட்டு ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்க வில்லை .தமிழ் நாட்டை ஆளும் தகுதி உடையவர் எவரோ அவரை பெரும்பான்மையான ஓட்டு போட்டு தேர்வு செய்பவர்கள் மக்கள் .மக்களுக்கு உள்ள அதிகாரம் சட்டத்திற்கு இல்லை .
மக்களுக்காக சட்டமா ? சட்டத்திற்காக மக்களா ? என்றால் மக்களின் நல்வாழ்விற்குத்தான் சட்டம் .
எனவே தமிழக முதல்வரின் உடல் நிலைக் குறித்து உண்மை நிலவறம் தெரந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளார்கள் .அவற்றை நிறைவேற்றுவது ஆட்சித் துறையின் கடமையாகும் .
நல்ல செய்தியை ஆவலுடன் எதிர் பார்க்கும் மக்களில் நானும் ஒருவன் . . . .
kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

பொய்யை நம்பி காத்து கிடக்க வேண்டாம் !

பொய்யை நம்பி காத்து கிடக்க வேண்டாம் !

வள்ளல்பெருமான் காட்டிய, சொல்லிய ''ஒரே கடவுள்'' அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் '' என்ற கொள்கையைப் பின் பற்றாதவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கைக்கு நேர் விரோதமாணவர்கள்.என்பதை தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் .

சன்மார்க்க கொள்கையில் உள்ளவர்கள் இன்னும் சாதி ,சமய ,மதக் கொள்கையை பின்பற்றி கொண்டு உள்ளார்கள் .அப்படி உள்ளவர்கள் சுத்த சன்மார்க்கக் கொள்கைக்கு அருகதை அற்றவர்கள் .

வள்ளலார் பதிவு செய்து உள்ளது !

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள் ஆகிய சாதி,சமயம்,மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அற கை விட்டவர்களும் ,காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை, புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.

அவர்களே மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம்,இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் .அதாவது ;-- செயற்கை ஆகிய குணங்களை நன் முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலமான அதிகார மரணம் நீங்கும்.

அப்படி இல்லாது இவ்விடம் காத்து இருப்பவர்கள்.மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும் ..பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள்.என்பதை தெளிவாக வள்ளலார் விளக்கி சொல்லி எழுதி வைத்து உள்ளார்...

வள்ளலார் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழுத்துக் கொண்டு இல்லாமல் வள்ளலார் சொல்லி உள்ள  உண்மை ஒழுக்கங்களைக் கடைபிடித்து  சுத்த சன்மார்க்கி களாய் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள் .

கண்டதை எல்லாம பின்பற்றிக் கொண்டு சன்மார்க்கத்தையும் பின்பற்றிக் கொண்டு வாழ்வதால் எந்த பயனும் கிடைக்காது...எக்காலத்திலும் மரணத்தை வெல்லவே முடியாது....இது சத்தியம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சாதி சமயம் மதம் !

சாதி சமயம் மதத்தை பின் பற்றுபவர்களுக்கு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்காது . . . வள்ளலார் சொல்லுவார்   சாதி சமய சழக்கை விட்டேன் அருட்பெருஞ்ஜோதி கண்டேன் என்பார் . . .

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

செவ்வாய், 11 அக்டோபர், 2016

உண்மையான கடவுளைக் காட்டியவர் !

உண்மையான கடவுளைக் காட்டியவர் !     ' . .  
உலகில் உள்ள அருளாளர்கள் அனைவரும் தத்துவங்களைக் கடவுளாக அறிமுகப் படுத்தி உள்ளார்கள் ......

வள்ளலார் மட்டுமே உண்மையானக் கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் ...அறிமுகப்படுத்தியது மற்றும் அல்லாமல் ...அக்கடவுளை வழிபடுவதற்கு ,சாதி,சமயம்,மதம் ,இனம் ,நாடு என்ற வேறுபாடு இல்லாமல் ,அனைத்துத்தர மக்களுக்கும் பொதுவான "" சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வடலூரில் தோற்றுவித்துள்ளார் ""  

அது கோவில் அல்ல ,ஆலயம் அல்ல ,சர்ச் அல்ல ,மசூதி அல்ல .மிரமிடு அல்ல .     அங்கு சமய மதங்கள் போன்ற வழிபாட்டு முறைகள் இல்லை ,....அங்கு ஜோதிதான் வழிபடும் கடவுள் ....உண்மைக் கடவுளின் விளக்கமாக  அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை ஜோதியாக புறத்தில்  வைத்து உள்ளார் . . .

சமர.சுத்த சன்மார்க்க சத்திய  சங்கத்தை சார்ந்த அன்பர்கள் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கம் தந்து ,மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் ,.......அன்புடன்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

திங்கள், 10 அக்டோபர், 2016

இயற்கை உண்மை ! இயற்கை விளக்கம் !இயற்கை இன்பம் !

இயற்கை உண்மை !,இயற்கை விளக்கம் ! ,இயற்கை இன்பம் !

என்பது இரண்டு பக்கமும் உள்ளது, .அருட்பெரும்ஜோதியிடமும் உள்ளது .மனித தேகத்திலும் உள்ளது .

மனித தேகத்தில் :--

இயற்கை உண்மை என்பது ஆன்மா . . . இயற்கை விளக்கம் என்பது அருள் !
இயற்கை இன்பம் எனபது என்றும் அழியாத ஒளி தேகம் பெற்றுக் கொள்வது  !

மேலே கண்ட உண்மையை அறிந்து, மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையைப் போதிப்பதுதான், வள்ளலார் சொல்லிய  சாகாக் கல்வி என்பதாகும் .

உயர்ந்த அறிவு உள்ள மனித தேகம் எடுத்து உள்ளவர்கள்,இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம் ,இயற்கை இன்பம் என்ன என்று,தெரிந்து கொண்டு வாழ வேண்டிய முக்கியமான உண்மை யாகும் .

இவற்றை அறிந்து வாழ்பவர்களே  உண்மை தெரிந்த அறிவு உள்ள மனிதர்கள்,

கடவுள் இடத்தில் உள்ளது :--

இயற்கை உண்மை என்பது கடவுள அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் !

இயற்கை விளக்கம் என்பது  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேர் அறிவு !

 இயற்கை இன்பம் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் !

மேலே கண்ட இரு உண்மைகளையும் அறிந்து வாழும் வாழ்க்கையே மரணத்தை வெல்லும் வாழ்க்கை யாகும்
தொடரும் :--

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 .





மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வது எப்படி ?

மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வது எப்படி ? . . .

ஒரு சிறு விளக்கம்  . . .

நாம் வாழும் இவ்வுலகம்  பஞ்ச பூதங்களால் இயங்கிக் கொண்டு உள்ளது . நம்முடைய உடம்பும் பஞ்ச பூதங்களால் சேர்ந்து பின்னப்பட்டது

.உடம்பை இயக்குவது உயிர் . . உயிரை இயக்குவது உள் ஒளி என்னும் ஆன்மா ...பஞ்ச பூதங்களான உடம்பு . பஞ்ச பூதங்களை அனுபவித்துக் கொண்டு உள்ளது .   இவைதான் உடம்பை விட்டு உயிர் பிரிவதற்கு காரண காரியமாக உள்ளது ...மரணம் வருவதற்கு காரணமாக உள்ளது .......,பஞ்ச பூதங்களான மண்..நீர் . . அக்கினி . . காற்று . . . அகாயம் போன்றவைகளை அனுபவிக்காமல் அருளை மட்டுமே அனுபவிக்க வேண்டும் .....

அருளைப் பெற உள் ஒளியாகிய ஆன்மாவை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் ....அப்படி தொடர்பு கொண்டால் மட்டுமே ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும் ..அருள்  சுரந்தால் பசி என்னும் வேதனை நின்று விடும் .பசி நின்று விட்டாலே பஞ்ச பூத உணவு அவசியமில்லை .

பஞ்ச பூத இயக்கம் நின்று, அருள் இயக்கம் ஆரம்பித்து விடும் . அருள் இயக்கம் உடம்பு முழுவதும்  இயங்க இயங்க ,  பஞ்ச பூத உடம்பு மாற்று குறையாத  பொன் உடம்பாக மாறிவிடும் .
பூரண அருள் பெறுகின்ற போது பிடிபடாத ஆகாயம் போல் விளங்குகின்ற, சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் , கண்களுக்குத்  தெரியாத  ஒளி தேகமாக மாறி விடும் . . ஜீவ தேகம் என்பது மறைந்து ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகம்  கிடைத்து விடும் .

அதன்பின் கடவுளின் நிலை அறிந்து அம்மயமாக மாறி விடும் ... ஆதலால் தான் வள்ளலார் . . மனதை இடைவிடாது சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் . . .

நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் . .

வழியும் காட்டி வாழந்தும் காட்டி உள்ளார் நமது அருட் தந்தை வள்ளலார் . . .

ஞான சரியை 28, பாடல்களில் மரணத்தை வெல்லும் வழியைத் தெளிவாக சொல்லி உள்ளார் .படித்து அதில் உள்ளபடி வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வெல்லாம் . . . . .

 அன்புடன்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் !

மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் ; . . . . . 

முதலில் ஜீவகாருண்யம் செய்து ஜீவர்களில் இருந்து விலகி மனிதனாக மனித நேயத்தோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் 

அதன் பின் ஆன்ம நேயம் என்ன என்பதை தெரிந்து ,எல்லா ஆன்மாக்களும் ஒரே தன்மை உடையது என்பதை அருள் அறிவால் அறிந்து ,அருட்பெரும் ஜோதி தான் எல்லாவற்றிற்கும் காரண காரியமாக இயங்கிக் கொண்டு உள்ளது என்பதை உண்மை அறிவால் அறிந்தவன் எவனோ அவனே மனித குணம் உள்ளவன் . . .

 எனவே முதலில் மனிதனாக வாழ்வோம் .பின்பு மரணத்தை வெல்லும் வழி தானே கிடைக்கும்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சனி, 8 அக்டோபர், 2016

சாகாக் கல்வி என்றால் என்ன ?

சாகாக் கல்வி என்றால் என்ன ?

சாகாக் கல்வி எனக்குப் பயிற்றித் தந்த ஜோதியே
தன்னேர் முடி ஒன்று எனது முடியிற் தரித்த ஜோதியே
ஏகாக் கரப் பொற் பீடத்து என்னைஏற்று ஜோதியே
எல்லாம் வல்ல சித்தி ஆட்சி யீந்த ஜோதியே !

சாதல் பிறத்தல் என்னும் அவத்தை தவிர்த்துக் காலையே
தனித்து உன்அருளின் அமுதம் புகட்டிக்கொடுத்தாய் மேலையே
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொற்பாதமே
உலக விடயக் காட்டில் செல்லாது எனது போதமே !

சாகாக் கல்வி என்பது;-- ,

இறப்பது,பிறப்பது ,என்னும் அவத்தைகளில் இருந்து தவிர்த்து விலகி வாழ்வதாகும்.

அதாவது ,ஆன்மா,உயிர்,உடம்பு,உறுப்புக்களை தனித்தனியே விலகாமல்,ஆன்மாவின் தன்மைக்குத் தகுந்தவாறு மாற்றம் செய்வதாகும்.

ஜீவ தேகத்தை,ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டு வாழ்வதாகும்.அதற்கு ஆன்ம இன்ப வாழ்வு என்பதாகும்.
அதில் மூன்று பிரிவான வாழ்க்கை உள்ளது,...இம்மை இன்ப வாழ்வு...மறுமை இன்ப வாழ்வு,,,,பேரின்ப வாழ்வு.என்பனவாகும்....

இம்மை இன்ப வாழ்வு என்பது ,;-- உயிர் இருக்கும் உடம்பு சீக்கிரம் அழியாது நீண்ட காலம் வாழ்வது,உடம்பு வெளி உலகத்திற்குத் தெரியும்..அதற்கு சுத்த தேகம் என்று பெயர் அவர்களுக்கு.மீண்டும் பிறப்பு இறப்பு உண்டு ..அவர்கள் கர்ம சித்திப் பெற்றவர்கள் என்று சொல்லப்படும்.

மறுமை இன்ப வாழ்வு என்பது;-- உயிர் இயக்கம் இருக்கும் ,உடம்பு கண்களுக்குத் தெரியாது, அவர்கள் வேண்டுமானால் உடம்பைக் காட்டலாம் ,காட்டாமலும் இருக்கலாம் ..அளவு கடந்த காலம் வாழலாம்,அதற்கு சுத்த பிரணவ தேகம் என்று பெயராகும்,அவர்களுக்கும் மீண்டும் பிறப்பு உண்டு .அவர்களுக்கு யோக சித்திப் பெற்றவர்கள் என்று பெயராகும்..

உயிரைக் கொண்டு வாழ்வது ஊன தேகம் என்பதாகும்.அதாவது ஜீவ தேகம் என்பதாகும்.உயிர் அடங்கி விட்டால் உடம்பு செயல் இழந்து விடும்.

தொடரும் ;---

வெள்ளி, 7 அக்டோபர், 2016

உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம் !

உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம் !

உலகில் உயிரைக் காப்பாற்றும் உண்மையான ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி தெய்வம் .

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்து கின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னி மிசை வைத்தபெரும்தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதிக் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் தெய்வம்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என்தந்தை நினது அருட் புகழை இயம்பி இடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்து ஒங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செய்யுனும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்
சன்மார்க்க சபையில் எனைத் தணிக்க வைத்த தெய்வம்
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம்
மாதவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலை அதன்மேல் எனை ஏற்றும் தெய்வம்
எண்ணு தோறும் என்உளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகம் எல்லாம் செய்யப் பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

உயிரைக் காப்பாற்ற வேண்டுமா ? அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை விட்டால் வேறு தெய்வங்களால் எதுவும் நடவாது ..

ஏன் என்றால் உயிரைக் கொடுத்தவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..உயிரைக் கொடுத்தவரால் தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளுங்கள். உயிர் காப்பாற்றப் படும்...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 ,,,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எதையும் செய்ய முடியும் !


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எதையும் செய்ய  முடியும் !

மருத்துவர் கை விட்டாலும் ஆண்டவர் கை விடமாட்டார் !

இங்கே  நான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் .

மருத்துவரால் காப்பாற்ற முடியாததை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் காப்பாற்ற முடியும்...

நமது தமிழக முதல்வர் உடல் நலம் சரியில்லாமல் அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் .பலபேர் பலவிதமாக பேசிக் கொண்டு உள்ளார்கள் ..அவர்  பூரண குணமடைய எல்லாம் வல்ல ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்''  அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன் ...

வள்ளலார் எழுதி உள்ள  ''திருஅருட்பாவில்''  ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற
(  தலைப்பில்) பகுதியில்  மிகவும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ..அவற்றைப் படித்து அதன் படி பின்பற்றினால் நமது முதல்வர் பூரண குணம் அடைந்து விடுவார் என்ற அவாவில் இதை பதிவு செய்கிறேன் ...

வள்ளலார் பதிவு செய்துள்ள ஒரு பகுதியை இங்கு பதிவு செய்கிறேன் !

தீராத நோய் தீர்க்கும் அருள் அமுதம்.!

சூலை,குன்மம்,குஷ்டம்,முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் ,தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார் களானால், அந்த ஜீவ காருண்ய அனுசரிப்பே ''நல்ல மருந்தாக ''அந்த வியாதியை நிவர்த்தி செய்து விஷேச சவுக்கியத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை ...என்று தெளிவாக விளக்கி உள்ளார் ..

முதல்வருக்கு நெருக்கமாக உள்ளவர்கள் செய்ய வேண்டியது ;--..வடலூரில் வள்ளலார் தோற்றுவித்து உள்ள ''சத்திய ஞான சபையில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ,உள்ளம் உருகி ''திரு அருட்பா''பாடல்களைப் பாராயணம் செய்து  வழிபாடு செய்து '' பின் '' நமது முதல்வர் குணம் அடையும் வரை ,,,வடலூரில் வள்ளலார் தோற்றுவித்து உள்ள ''சத்திய  தருமச்சாலையில் '' இடைவிடாது அன்னதானம் செய்து வரவேண்டும்...அப்படி நம்பி செய்து வந்தால் நிச்சயம் முதல்வர் குணம் அடைவார் ...இது சத்தியம்.....இது வள்ளலார் வாக்கு ..

மேலும் வள்ளலார் சொல்லியது .;--பசித்தவர்களுக்குப் பசி ஆற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற ''ஜீவ காருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது'' ,தேவர்கள்,மனிதர்கள்,பிரம்மசாரிகள் ,சமுசாரிகள்,தபசிகள்,சந்நியாசிகள்,ஆண் சாதியர்,பெண் சாதியர்,வார்த்திபர்,வாலிபர்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத் தக்கது என்பது ''கடவுள் ஆணை ''என்று அறிய வேண்டும்.

ஜீவ காருண்யம் உள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும்,அஜாக்கிரதையாலும்,ஊழ் வகையாலும் சத்தியமாக வராது ..என்று சத்தியம் வைத்து வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .

மேலே கண்டபடி நம்பிக்கையுடன் முதல்வர் உடன் தொடர்பு உள்ளவர்கள்., செயல்பட்டால் நிச்சயம் நமது முதல்வர் பூரண குணம் அடைவார்கள்...இது  சத்தியம்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..
9865939896.


செவ்வாய், 4 அக்டோபர், 2016

சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு வேண்டுகோள் !

சுத்த சன்மார்க்க அன்பரகளுக்கு வேண்டுகோள் !

5-10-2016. ஆம் நாள் வள்ளலார் வருவிக்க உற்ற நாள் .

நாளை சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியது .:-- நாளை காலை அமுதக்காற்று பூமியை நோக்கி வருவதால்  4-30 மணிக்கு எழுந்து விடவேண்டும் ,

சன்மார்க்க சங்கங்களில் ,வீடுகளில் அருட்பெருஞ்ஜோதி விளக்கு ஏற்றி வைத்து ,வேண்டுதல் ,விண்ணப்பம் .முறையீடு .அகவல் பாராயணம் போன்ற தோத்திரம் உள்ளம் உறுக பாடல்  செய்ய வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் .

ஏழை எளிய மக்களுக்கு அவரவர் களால் முடிந்த ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் .சன்மார்க்க கொள்கைகளை மக்களுக்கு போதிக்க வேண்டும் .

உயிர் கொலை செய்வதும் ,புலால் உண்பதும் பெரிய குற்றம் என்பதை போதிக்க வேண்டும் .

நாளை முழுவதும் அருட்பெருஞ்ஜோதி நினைவாகவே மனதை சிற்சபை கண் செலுத்திக் கொண்டே  இருக்க வேண்டும் .

மேலே கண்டபடி கடைபிடித்தால் ,துன்பம் ,துயரம் .அச்சம் .பயம் போன்ற துன்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவரவர்கள் பக்குவத்திற்கு தகுந்தாற்போல் அருளை வாரி வழங்குவார் .   இது சத்தியம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

 ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்் வருகை !



அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை !

5-10-1823 ஆம் ஆண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்தார் .


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 51, ஆண்டுகள்  இந்திய திரு நாட்டின் ,தமிழ் மாநிலத்தில் ,நாம் பார்க்கும் வண்ணம் மனித உருவில் ,மனித வடிவில்  வாழந்து  உள்ளார் .

அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்

 உண்மையானக்  கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,வள்ளலார் உருவம் தாங்கி ,எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவு இன்றி உலக மக்களுக்கு தெரிவித்து விட்டார் .

இறைவன் மொழியாகிய தமிழ் மொழியில் " திரு அருட்பா " என்னும் தலைப்பில் .சுமார் ஆறு ஆயிரம் பாடல்கள் வாயிலாகவும் .உரை நடைப் பகுதிகளாவும் .எழுதி வைத்து உள்ளார் .

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் எடுத்தவர்கள் ,இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வழி இது . முறை இது . துறை இது . . என்ற உண்மையான வாழ்க்கை முறைகளை தெரிவித்து விட்டார் .

இனிமேல் வாழ்வது நம்முடைய விருப்பம் .

 இனி உருவம் தேவை இல்லை என்பதால் ,30-1-1874. ஆம் நாள் ஊன உடம்பை  ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்த நாளான .5-10-2016 ஆம் நாளைை ""உலக ஒருமைப்பாட்டு தினமாக .ஆன்ம நேய ஒருமைப்பாட்டு தினமாக ""சன்மார்க்க சங்கங்களில் ,சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் .

 உலகில் உள்ள  எல்லா சன்மார்க்க  சங்கங்களிலும் அன்னதானமும் சொற்பொழிவும் நடைபெற்று வருகின்றன .

அனைத்து சன்மார்க்க சங்கத்தின் அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களையும் வந்தனத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்் வருகை !



அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை !

5-10-1823 ஆம் ஆண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்தார் .


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 51, ஆண்டுகள்  இந்திய திரு நாட்டின் ,தமிழ் மாநிலத்தில் ,நாம் பார்க்கும் வண்ணம் மனித உருவில் ,மனித வடிவில்  வாழந்து  உள்ளார் .

அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்

 உண்மையானக்  கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,வள்ளலார் உருவம் தாங்கி ,எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவு இன்றி உலக மக்களுக்கு தெரிவித்து விட்டார் .

இறைவன் மொழியாகிய தமிழ் மொழியில் " திரு அருட்பா " என்னும் தலைப்பில் .சுமார் ஆறு ஆயிரம் பாடல்கள் வாயிலாகவும் .உரை நடைப் பகுதிகளாவும் .எழுதி வைத்து உள்ளார் .

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் எடுத்தவர்கள் ,இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வழி இது . முறை இது . துறை இது . . என்ற உண்மையான வாழ்க்கை முறைகளை தெரிவித்து விட்டார் .

இனிமேல் வாழ்வது நம்முடைய விருப்பம் .

 இனி உருவம் தேவை இல்லை என்பதால் ,30-1-1874. ஆம் நாள் ஊன உடம்பை  ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்த நாளான .5-10-2016 ஆம் நாளைை ""உலக ஒருமைப்பாட்டு தினமாக .ஆன்ம நேய ஒருமைப்பாட்டு தினமாக ""சன்மார்க்க சங்கங்களில் ,சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் .

 உலகில் உள்ள  எல்லா சன்மார்க்க  சங்கங்களிலும் அன்னதானமும் சொற்பொழிவும் நடைபெற்று வருகின்றன .

அனைத்து சன்மார்க்க சங்கத்தின் அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களையும் வந்தனத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,



ஞாயிறு, 2 அக்டோபர், 2016

பிரார்த்தனை செய்வோம் !

பிரார்த்தனை செய்வோம் !

  நம்முடைய தமிழக முதல்வர ஜெயலலிதா ் அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் .அவர்கள்  பூரண குணம் அடைய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்வோம் .

சாதி சமயம் மதம் அரசியல் சார்பு இல்லாமல் ,சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பாக ,நம்முடைய தமிழ் நாட்டின் முதல்வர் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் ,பிரார்த்தனை செய்வோம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழக . . . .
ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சனி, 1 அக்டோபர், 2016

வள்ளலார் பாடல் !

வள்ளலார் பாடல் !

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு ,
கீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு ! . .

.  கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக வாதிகளின் நாக்கு முடை நாக்கு .முடை நாக்கு என்பது , ஊமையன் என்று பொருள் . . .

அவன் உணபது நாற்றம் உள்ள மலம் உணபதற்கு சமம் என்கிறார் வள்ளலார் .  
அருளை வழங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் புகழைப் பேசும் வாக்கு .அருளைப் பெரும் வழியைக் காட்டும் ,நல் வாக்கு அதாவது தேவர்களின் வாக்கு போன்றது என்கிறார் .

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்