வியாழன், 31 ஆகஸ்ட், 2017

குழைந்தை உண்டாகும் விதம் !

குழைந்தை உண்டாகும் விதம் !

இன்று உலகத்தில் குழந்தை பேறு இல்லாமல் நிறையபேர் சிரம்ப்படுகிறார்கள்.துன்ப்ப்படுகிறார்கள்.அதிலும் குறிப்பாக பெண்களை குறை சொல்லி தூற்றுகிறார்கள்.அதனால் சில பெணகள் ஆண்கள் மனம் உடைந்து பொய்யான மந்திரவாதிகள்.ஜோதிடர்கள் .மருத்தவர்களிடம் சிக்கி கற்பையும் இழக்கிறார்கள்.பணத்தையும் இழக்கிறார்கள்.

குழைந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வள்ளலார் தெளிவான விளக்கம் தந்து உள்ளார்.

பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

மேலும் ஆண் பெண் உடல் உறவு  கொள்வது எப்படி  என்பதையும் விளக்கி உள்ளார்.

கரு உற்பத்தி

கருத்தோன்றும் சுக்கில நியாயம் யாதெனில்:- சுக்கிலம் இரண்டரை வராகனெடை யளவா யிருக்கும். அதில் விஷபாகமாகிய சத்தி 1; சாதாரண மென்னும் பூதமாகிய அறிவு 1; அசாதாரண அமுத மாகிய விந்து அரை - ஆக - இரண்டரை. இதுபோல் பெண்பாலிடத்தும் சுரோணிதமுளது. மேற்கண்ட சுக்கில சுரோணித மிரண்டினும் கடவுள் ஆவியுள்ளது.

கடவுள் ஆவி என்பது ஆன்மா

விந்து என்னும் சுக்கிலம் கோசத்தின் முன் விஷம், அதை அடுத்து பூதம், அதற்கு மேல் அமுதம் உண்டு. இவ்வாறு பெண்பாலிடத்து முண்டு. முன்னுள்ள விஷபாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம்; பூதம் வெளிப்பட்டால் வியாதி; அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி. கடவுளருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார். இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை.

மேலும், விந்து வளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் - இவற்றாலுங் கர்ப்ப மில்லை.

சுக்கிலம் உண்டாவதற்குக் காரணம்: தினம் ஆகாரங்கொண்டால் அவ்வாகாரம் மார்பிடத்தில் ஓர் தட்டில் தங்கும். அந்தத் தட்டின் மேல் கடவுள் கடவுளி என்றிரண்டாகி யிருக்கிறது. உண்ட அன்னத்தை இரண்டரை நாழிகையில் - அந்த அன்னத்திலுள்ள அமுதைப் பிரித்து, ஊட்டவேண்டிய தத்துவத்திற்கு ஊட்டுகின்றது. மறுபடியும் ஐந்து நாழிகைக்குள் மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி, இரண்டரை வராகனெடையில் கோசநுனியில் ஒன்றும் நாபியில் ஒன்றும் பிரமரந்திரத்தில்அரையுஞ் சேர்த்து, மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை யுண்டு பண்ணி ஈளை குரும்பை நகத்தூசு தொப்புளழுக்கு கண்பீளை முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது. மேற்படி அன்னத்தை ஏழரை நாழிகைக்குள் - அதிலுள்ள திரவாம்சத்தைப் பிரித்து, உதிரமாக்கி யூட்டுகின்றது. ஏழரைக்குமேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது. இதுபோல் எந்த வஸ்துக்களையும் பிரிக்கின்றது.

 ஆதலால், ஆகாரங்கொண்ட ஏழரை நாழிகைக்கு மேல் ஆகாரங் கொள்ளவேண்டும்.

சுக்கில வகை

சுக்கிலம் 3 வகை. அது 2 1/2 வராகனெடை யிருக்கும். விஷம் 1, சாதாரண பாகம் 1, அமுதபாகம் 1/2, ஆக பாகம் 2 1/2. இதுபோலவே ஸ்திரீகளுக்குச் சுரோணித மிருக்கும். சுக்கில சுரோணிதத்தின் மேல் கடவுள் ஆவியுருவா யிருப்பர். தேகசம்பந்த காலத்தில் விஷபாகம் வெளிப்பட்டால் தேக நஷ்டம், சாதாரண பாகம் வெளிப்பட்டால் வியாதி. அமுதபாகம் வெளிப்பட்டால் சந்தான விருத்தி. இந்த நியாயத்தால் சதா தேகசம்பந்தம் செய்தாலும், சந்தான விருத்தி ஏகதேசம்.

சுக்கில சுரோணிதம்

சுரோணிதப் பையிடத்தில் மூன்று மணி சேர்ந்த கொத்து 1 வலது புறத்திலும், நான்கு மணி சேர்ந்த கொத்து 1 இடது புறத்திலும் இருக்கின்றன. சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பந் தரிக்கிற காலத்தில் மூன்று சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் ஆண் குழந்தையும் நான்கு சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும். புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாகப் புணர்ந்தால் ஆணும், இடதுபுறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

15. சப்த தாதுக்கள்

ஆணில் 3, பெண்ணில் 4. ஆணில் மூன்றாவன:- ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி - இவைகள் ஒருமித்துச் சுக்கிலமாகத் தடித்துக் கோசத்தடியில் செம்பரத்தம் பூவிதழ் மூன்று மொன்றாயடுக்கியது போலிருக்கும். பெண்ணிடத்தில் நான்காவன:- பிருதிவி, அப்பு, தேயு, இயமானன் என்னும் வாயு - ஆக நான்கும் ஒருமித்துப் பல்லிமுட்டைபோல் 4 பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் யோனிக்குள் இருக்கும். ஆக 7-ம் கூடி ஒருமித்துச் சுக்கில சுரோணித சம்பந்தப்பட்டுப் பிண்டமாம். இது சப்த தாது. மேற்படி தாதுக்களின் பெயர் தோல், அஸ்தி, திசை, மூளை, சுக்கிலம், இரத்தம், இரசம் - ஆக ஏழு. மேற்படி சத்துக்கள் ஆணிடத்துள்ள இடங்கள் மூளை, தொப்புள், லிங்கத்தடி; பெண்ணுக்குள்ள இடங்கள் மூளை, தொப்புள், உபஸ்தத்தடி, ஸ்தனத்தின் கீழ். புணர்ச்சிக் காலத்தில் இந்தச் சத்துச் சேர்ந்து வெளிப்பட்டால் கர்ப்பமுண்டாம்.

என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார்.பொருமையாகப் படித்து தெரிந்து உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடித்து பயன் அடையுங்கள்.

ஜீவ காருண்ய சிந்தனையும்.அருட்பெரும்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொட்பு கொண்டு வழிபடவும் இருந்தால்.நிச்சயம் வேண்டிய குழைந்தை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே குழைந்தை பாக்கியம் வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள்.வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்தால் சிரம்ம் இல்லாமல் குழைந்தை பாக்கியம் உண்டாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

கருணை இருந்தால் கதவு திறக்கும் !

கருணை இருந்தால் கதவு திறக்கும் !

நம் ஆன்மாவில் அருளை வைத்து  திரைகள் என்னும் கதவுகளால் அடைத்து பூட்டு போடப்பட்டு உள்ளது

அந்த கதவுகளின் பூட்டைத் திறக்க சரியை.கிரியை.யோகம்.ஞானம் என்னும் பல வழிகளைப் பின்பற்றி   வாழ்ந்தும் வாழ்ந்து கொண்டும் வருகிறார்கள்

எந்த வழிகளிலும் பூட்டைத் திறக்கும் திறவு கோல் என்னும் சாவி கிடைக்கவில்லை.கிடைக்காது.

வள்ளலார் வந்துதான் திரைகளை நீக்கும் அதாவது பூட்டை திறக்கும் திறவுகோல் பெறும் வழியைக் கண்டுபிடித்தார்.அதற்குண்டான உளவை தெரிந்து கொண்டார்.

வள்ளலார் பாடல்;--

உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காணஉளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்தழுவானை யான்புரிந்த தவறு நோக்கிஎள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்டஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!...என்றும்

திரு அகவலில்...

உளவினி லறிந்தா லொழிய
மற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி !

அந்த உளவு தான் "" கருணை"" என்பதாகும்.

 உயிர்கள் இடத்தில் இருந்து அன்பும் தயவும் இணைந்த கருணையை  பெற வேண்டும்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தனிப்பெரும் கருணை உடையவர். கருணை இருந்தால் தான் கருணைக் காட்டுவார் ஆண்டவர். கருணை முழுமைப் பெற்றால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவுகோல் கிடைக்கும்.

அதற்குத்தான் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார்.

*ஜீவ காருண்யம் என்றால் சாப்பாடு கொடுப்பதும் மட்டுமே அல்ல*

எல்லா உயிர்களும் நம்மை நேசிக்கும் உளவைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுதான் ஜீவ காருண்யம் என்னும் ஜீவ ஒழுக்கம்..ஆன்ம நேயம் என்னும் ஆன்ம ஒழுக்கம் என்பதாகும். இந்த இரண்டு ஒழுக்கம் முற்றுபெற இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

இந்திரிய கரணங்களால்  உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும்.அந்த உபகார சக்தியால் அன்பு.தயவு.அறிவு.கருணை.அருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.அது பூரணம் பெறும் போது மறக்கருணை. அறக்கருணையாக  மாற்றம் ஆகும்  அருள் என்னும் சாவியை அப்போதுதான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வழங்குவார்.

கருணை என்பது செயற்கை இல்லாமல் இயற்கையாகவே வரவேண்டும்.அதைத்தான் வள்ளலார்.

எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !
என்கிறார்

கருணை வேறு சிவம் வேறு அல்ல.

கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலேமருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.

கருணையே வடிவமாக நான் மாற வேண்டும்.

 கருணை இல்லாமல் உயிர்கள் கொலை படுவதும் அதன் புலாலை உண்டும் அறிவு மழுங்கி அழிந்து கொண்டு உள்ளார்கள்.
அவற்றை எல்லாம் நீக்கவும். அருட்பெரும்ஜோதி ஆண்டவரே உன் புகழை  உலக மக்களுக்கு சொல்லி வாழ்த்தவும் எனக்கு இச்சையாக அதாவது பேராசையாக உள்ளது என்கிறார்.

கருணை எப்படிவரும் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கனும்.எல்லா உயிர்களுக்குள்ளும் கடவுள் திரு நடனம் புரிகின்றார் என்ற உண்மை விளங்கினால் மட்டுமே கருணைத் தானே வரும்.

வள்ளலார் பாடல்:--

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்துமலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்

பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்ற பொது உரிமை வர வேண்டும் .

மேலும் கருணை எப்படி வரும்....

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளேஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான் சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ.! என்கிறார்

எல்லா உயிரையும் தம்உயிர்போல் பாவிக்கன்ற உத்தமர் எவரோ அவர் உள்ளத்தில் கருணைக் கடவுள் கருணை என்னும் அருள் சாவியைக் கொடுத்து திரைகளை நீக்கி கருணையோடு அருளை வாரி வழங்குவார்

நாமும் கருணையோடு வாழ்ந்து அருள் கோட்டையின் சாவியைப் பெற்று கதவைத் திறந்து அருளில் மூழ்கி மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

கருணை இருந்தால் மட்டுமே கதவு திறக்கும்.
கதவு திறந்தால் மட்டுமே அருள் கிடைக்கும்.

கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்றகண்ணுடையோய் சிதையா ஞானப்பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்றமலர்வாயோய் பொய்ய னேன்றன்மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்கசிந்துருக்கும் வடிவத் தோயே.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
🙏🙏🙏🙏🙏

புதன், 23 ஆகஸ்ட், 2017

அருள் அமுத கதவு திறந்த்து !

அருள் அமுத கதவு திறந்த்து !

வள்ளலார் அருள் அமுதம் பருக அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் கதவைத் திறக்கச் சொல்கின்றார்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

பஞ்ச அமுத ஸ்தானங்கள்

சுத்த அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போலிருக்கும்.

2-வது அமுதம் உள் நாக்குக்குமேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்.

3-வது மூக்கு முனையில் காய்ச்சின சர்ப்பரைப் பாகு போலிருக்கும்.

4-வது நெற்றி நடுவில் முதிர்ந்த மணிக் கட்டியாகவிருக்கும்.

5-வது மகா இனிப்புள்ள மணிக் கட்டியாகவிருக்கும்; அதிக குளிர்ச்சியாகவுமிருக்கும்.

இந்த 5-வது அமுதத்தையுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்.

பஞ்ச அமுத ஸ்தானங்கள்

யோகானுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கு நுனியில். பக்குவஞானத்தால். சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால்.

2-வது புவனாமுதம் - நாக்குமத்தியில், பக்குவ கிரியையால், ஸ்திதி பிரஞ்ஞை யுணர்ச்சியால்.

3-வது மண்டலாமிருதம் - நாக்கினடியில், பக்குவஇச்சை, சம்சார உணர்ச்சியால்.

4-வது ரகசியாமிருதம் - உள் நாக்கடியில், பக்குவதிரோபவம்.

5-வது மௌனாமிருதம் - உண்ணாக்கு மேல், பக்குவ அனுக்கிரகம். அனுக்கிரகம், சுபாவத்தினது அனுபவம், துரியநிலை.

மேலே கண்ட சுத்த  அமுதங்களில் நான்கு வகையான அமுதவகைகளை ஞான யோகத்தால் நிறைய ஞானிகள் பெற்று சுவைத்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

ஐந்தாவது அமுதமான  சுத்த மெளனா அமுதம் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் விரும்பினால் மட்டுமே  கொடுக்க முடியும்.

அதற்கு மதிமண்டலத்து அமுதம் என்று பெயர்.

அந்த அமுத்த்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் கேட்டுப் பெருகிறார் வள்ளலார்.

அந்த அமுத்தை உண்டவர்கள் கடவுள் நிலை அறிந்து அம்மயமாவார்கள்..அவர்களுக்கு மரணம் என்பது எக்காலத்திலும் கிடையாது.பேரின்ப லாபத்தை அடைந்தவர்கள்  பெற்றவர்கள் அவர்களே என்பதாகும்

அவர்கள் தான் ஐந்தொழில் வல்லபம் பெற்று ஆட்சி செய்யும் தகுதி உடையவர்கள்.

அந்த அமுதம் வேண்டி ஆண்டவர் இடம் கேட்கும் பாடல் தான் கீழே உள்ள ஞானத்தில் ஞானம் பெரும் பாடலாகும்.

திருச்சிற்றம்பலம்

1. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
சிவனே கதவைத் திற.

2. இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
கோவே எனது குருவே எனையாண்ட
தேவே கதவைத் திற.

3. சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற.

4. அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவைத் திற.

5. வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
சிறப்பா கதவைத் திற.

6. எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
செல்வா கதவைத் திற.

7. ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
தேவா கதவைத் திற.

8. ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
ஞான அமுதமது நானருந்த - ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவைத் திற.

9. திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
தேனே கதவைத் திற.

10. சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
தேகா கதவைத் திற.

ஞான தேகமாக உள்ளவர் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.ஞானத்தில் ஞானம் பெற ஞான தேகத்தை பெற்றவர் மட்டுமே  கதவைத் திறக்க முடியும்.

அதனால் தான் ஞான தேகா கதவைத்திற என்று வள்ளலார் கேட்கின்றார். கதவும் திறக்கப் பட்டது .மதிமண்டல அமுத்த்தை வாயார உண்டே .ஊன உடம்பை ஒளிதேகம் என்னும் அருள் தேகம் பெற்று மரணத்தை வென்றவர்தான் வள்ளலார்.

அவர்போல் பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றை பற்றினால் அருள் பெற்று என்றும் இறவாமல்.பிறவாமல்  நாமும்  பெறலாம்.

வள்ளலார் பாடல்.!

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த யதிருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவேஇத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!

என்னும் பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

நாம் என்ன என்ன அறிந்து கொள்ள வேண்டும் !

நாம் என்ன என்ன அறிந்து கொள்ள வேண்டும் !

முறையீடு என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்கள்..

எளிய நடையில் தமிழில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எழுதி வைத்துள்ளார்.

கீழே உள்ள பாடல்களில் உள்ளபடி படித்து தெரிந்து கொண்டு அதன்படி வாழ்ந்தால் நாம் பெற வேண்டியதை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

இதைவிட சிறந்த வழிகள் வரிகள் உலகில் எங்கும் இல்லை என்றே சொல்லலாம்....படித்து பயன் பெறுவோம்.

பாடல்கள் !

இறைவன் இடம் முறையிட வேண்டும் ....

1. மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

3. கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

4. தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

5. வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

6. கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

7. சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

8. சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் தபுகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

9. தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

10. வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

மேலே கண்ட பாடல்களில் உள்ளபடி நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களையும். தீய குணங்களையும் விட்டு விட்டாலே போதும்.கிடைக்க வேண்டியது தானே கிடைத்து விடும்

இதுவரையில் விடாமல் இருந்தவர்கள் எந்த லாபத்தையும் பெற முடியாமல் மாண்டு போய் விட்டார்கள்.

நாம் பெற வேண்டிய காலம் இதுவே  அதனால் தான் இந்த காலத்திற்கு சுத்த சன்மார்க்க காலம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

எதையும் பிடிக்க வேண்டியது இல்லை.விட்டு விட்டால் போதும் நான்கு ஒழுக்கங்களும்  தன்னைத்தானே செயல்பட ஆரம்பித்துவிடும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

🌹🌹வாழ்க்கை வாழ்வதற்கே !🌹🌹🌹

🌹🌹🌹வாழ்க்கை வாழ்வதற்கே !🌹🌹🌹

நாம் இந்த உலகத்தில் உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பு பெற்றுள்ளோம் .

இந்த பிறப்பு எளிதில் கிடைத்தது அல்ல. பல்லாயிரம் யோனி பேதங்கள் சென்று இறுதியாக கிடைத்தப் பிறப்பு இந்த மனித பிறப்பு ...

நாம் இதுவரையில் பிறந்து பிறந்து.இறந்து இறந்து  மறுபிறப்பு எடுத்து எடுத்து வாழ்ந்து வந்தோம்.இப்போது கிடைத்துள்ள இந்த மனித பிறப்பு இறப்பதற்கும் பிறப்பதற்கும் அல்ல.

சொர்க்கம்.வைகுண்டம் கைலாயம்.எமலோகம்.பரலோகம் செல்வதற்கும் அல்ல.

நமக்கு கிடைத்துள்ள இந்த ஜீவ தேகத்தை .ஆன்ம தேகமாக மாற்ற வேண்டும்.ஆன்ம தேகமாக மாற்றக் கூடிய திறமை அறிவு .ஆற்றல் .அருள் அனைத்தும் அறியாமை.அஞ்ஞானம் என்னும் திரைகளால் மறைக்கப்பட்டு உள்ளது.திரைகளை நீக்கினால் மட்டுமே ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.

மனித தேகத்தில் உள்ள ஆன்மாவைக் கண்டு. அதனுடன் இடைவிடாது தொடர்பு கொண்டு.நன் நிதியாகிய அருளைப் பெற்று( எடுத்து) பயன் படுத்த தெரியாமல் மரணம் அடைந்து கொண்டே உள்ளோம்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல.நாம் வாழும் தவறான வாழ்க்கையினால் செயற்கையாக மரணம் வருகின்றது....

நமக்கு மரணத்தை வெல்லும் வழியையும் .ஆன்ம தேகம் பெரும் வழியையும்.முன்னாடி வாழ்ந்த அருளாளர்கள் .பெரியோர்கள் முறையாக.சரியாக உண்மையாக யாரும் காட்டவில்லை.சொல்லவில்லை. அவர்களும் தெரிந்து கொள்ளவில்லை.நாமும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் இல்லை.

ஆன்ம தேகம் பெற்று .பின் சுத்ததேகம்.பிரணவதேகம். ஞான தேகம் பெற்று மரணத்தை வென்று.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி. என்றும் அழியாமல் வாழும் பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் நமது அருள் தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார்.

மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்வதற்கு .""சாகாக்கல்வி"" என்று பெயர் வைத்துள்ளார்.அந்த  சாகாக்கல்வி கற்பதற்கு  ஒழுக்கம் மிகவும் அவசியமாகிறது.

இதுவரையில் நாம் கடைபிடித்து வந்த  உலகியல் புற ஒழுக்கம்.ஒழுக்கம் அல்ல.அக ஒழுக்கம் அவசியம் என்கிறார் .

அதிலே  இந்திரிய ஒழுக்கம் .கரண ஒழுக்கம் புற ஒழுக்கமாகும்.அதுதான் அடிப்படையாகும்.இதைத்தான் அனைவரும் முடிந்த அளவு கடைபிடித்து செய்து வருகிறார்கள்.

அதற்கும் மேலே அக ஒழுக்கமான .ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் மிகவும் அவசியமாகும்.

ஜீவகாருண்யத்தால் மட்டுமே .ஜீவன் என்னும் உயிரைக் காப்பாற்ற முடியும்.

ஜீவ காருண்ய ஒழுக்கம் நிறைவு பெற்றால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.உயிரையும் உடம்பையும் காப்பாற்றினால் தான் ஆன்ம ஒழுக்கம் கை கூடும்.ஆன்ம ஒழுக்கம் நிறைவு பெற்றால்தான் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அருள் பெற்றால் மட்டுமே ஊன உடம்பு ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

இவை தெரியாமல் மற்றவர்கள் ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் ஏதோ ஒரு சிறு ஒளி அதாவது அற்ப சித்தி  கிடைப்பது போல் தோன்றும்.அதுவே உண்மை என்று நம்பி பல் இளித்து இறுமாந்து கெட்டுப் போய் அழிந்து விடுவீர்கள்.இறுதியில் எல்லோருக்கும் வரும் மரணம் நமக்கும் வந்து விடும்.

வள்ளார் பாடல் !

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்

மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே

மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே

செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.!

மேலும் ஒரு பாடல் !

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கேஉறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்

கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ

சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமதுதன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்

இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!

என்று தெளிவாக சொல்லி உலகில் உள்ள அனைவரையும் ஆன்ம நேயத்துடன் அழைக்கின்றார்..

நாம் என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கை வாழ்வதற்கே மனித தேகம் கொடுக்கப்பட்டு உள்ளது.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை பின்பற்றி மரணத்தை வென்று என்றும் பேரின்ப பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896..🌹🌹🌹

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

ஒன்றே கடவுள் !

ஒன்றே கடவுள் !

அருட்பெருஞ்ஜோதி;
       "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
ஆன்மநேய உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;
              இந்த உலகைப் படைத்து இவ்வுலகத்தில் வாழ்வதற்காக அறிவற்றுக்கிடந்த நமக்கு ஓரறிவு முதல் ஆறறிவு வரை தேகம் கொடுத்து புல்,பூண்டு ,செடிகொடி,மரம்,சிப்பி,நத்தை, எறும்பு,வண்டு,ஈ,பறவை,விலங்கு,மனிதர் என பல்வேறு தேகம் கொடுத்து ,
          நாம் வாழ்வதற்கு தேவையான வாழ்வியலுக்குற்ற பொருட்களையும் படைத்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் நமது "ஒரே கடவுளை"
 
          நாம் செய்த தொழில், சார்ந்திருந்த இனம்,பேசியமொழி,வாழந்த தேசம் என்ற வேற்றுமையால் நமக்கென்று பலசாதிகள்,மதங்கள்,சமயங்கள் பல்வேறு மார்க்கங்களை ஏற்படுத்தி ,
அம்மார்க்கத்திற்கு என்று பல நெறிமுறைகளை வகுத்து ,துதித்து , வணங்கி, வழிபட்டு நாம் அனைவரும்"உயிர்க்குலம்" என்ற ஒற்றுமை உணர்வை மறந்து நம்மைப் "படைத்த ஒரே கடவுளை" கூறுபோட்டுக்கொண்டு,
               
                உருவமற்று அருட்பெருஞ்ஜோதி வடிவாகி பாரொடுவிண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் நீக்கமற கலந்து நிறைந்து விளங்கும் கடவுளை  நமது கருத்து வேற்றுமைக்கு தக்கவாறு,
       
          அக்கடவுளுக்கு மனிதர்களைப் போன்றே கை கால்கள் அமைத்து பலவடிவத்தையும், வண்ணத்தையும் கொடுத்து , அவர்கள் கையில் பல கூறிய ஆயுதங்களையும்  கொடுத்து, அவர்களுக்கென்று வாகனமாக புலி,சிங்கம்,யானை,காளை,மயில்,எலி என்று ஒவ்வொரு வாகனத்தையும் காட்டி
   நமது அறியாமையால் இதுநாள் வரை நமது முன்னோர்கள் காட்டிய நெறிமுறையிலே கடவுளை தனித்தனியாக பித்துவைத்து நாமும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்துகிடந்து  உண்மைவிளங்காது
  பயனற்று வழிபட்டுவந்தோம்;

      தற்போது அதற்கு விடியல் உதயமாகிவிட்டது ஆம்,
    நமது கருணைவடிவாம் அருட்பிரகாச வள்ளல் பெருமான் இவ்வுலக உயிர்களின்மீது கொண்டஉயிர் இரக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் "பரிபூரண அருளையும் ,
    அழியா நித்திய தேகத்தையும் பெற்றுக்கொண்டு,
  இவ்வுலகிலேயே நம்முடனும் நமது அகத்திலும் கலந்து நிறைந்து இவ்வுலகையும் இவ்வுலக சரஅசர பொருட்களையும் ஐந்து தொழிலால் அருளாள் ஆளுகின்ற வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு இன்று இவ்வுலகை அருளாட்சி செய்துவருகின்றார்கள்;

      இனி ஆன்ம உறவுடன் ஒன்றுபட்டு ஒருமையுடன் வாழவேண்டியநாம் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்த அவலநிலையில் இருந்து மாறி ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து வாழும் காலம் உதயமாகிவிட்டது ,

      அவற்றை வள்ளல் பெருமானே அருட்பாவில் தெளிவுபடுத்துகின்றார்கள் அவற்றைப் பார்ப்போம்;

          ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பேரொளி வடிவாய் என்உள்ளகத்தில் பொதுவில் கலந்து நிறைந்துவிட்டார்கள்;
      இதனால் நான் அழியா நித்திய தேகத்தைப் பெற்றுக்கொண்டு ,
 சுத்த,பிரணவ,ஞான தேகமாகிய முத்தேக சித்தியையும், எல்லாம் செய்ய வல்ல அருட்பெருஞ்சித்தியையும்,
பெற்றுக்கொண்டேன் உலகவரே ;
     
        ஆகலில் இனி நீர் கவலைக்கொள்ளவேண்டாம்,
  உங்கள் அனைவரையும் ஒன்று சேரவிடாமல் பிரித்துவைத்து , கடவுள் உண்மையை அறியவிடாமலும் ,
    பிறப்பு இறப்பு என்னும் பவக்கடலை கடப்பதற்குரிய வழியைக்காட்டாமலும் மூழ்கடித்த அந்த இரக்கமற்ற கொடியசாதி,சமய,மதத்தை எல்லாம் நீக்கி , கொலை புலை தவிர்த்த குருநெறியாம் சுத்தசன்மார்க்க புணித நெறியிலே உங்கள் அனைவரையும் புகுத்துவித்து,
"சுத்தசன்மார்க்கம்" என்னும் ஒரேநெறியிலே இவ்வுலகவலகவர் அனைவரையும் நிறுத்தி ,
   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கி துதித்து வழிபட்டிடவும்,
விரைந்து அவர்கள் வினைகளை நீக்கிக்கொண்டு பக்குவத்திலே அழியக்கூடிய இத்தேகத்தை அழியா நித்தியதேகமாக்கிக்கொண்டு வாழ்வை நிலைபெறச்செய்து இவ்வுலகிலேயே மரணத்தை தவிர்த்துக்கொண்டு "அனக" அருள்வாழ்க்கையில் வாழவைப்பேன் இது உண்மை ,
       ஆகலில் நீங்கள் அனைவரும் இனியும் காலம் தாழ்த்தாது விரைந்து வாருங்கள் சன்மார்க்கத்திற்கு என்று வள்ளல் பெருமான் உலகவரை அழைக்கின்றார்கள்;
     
       இது சாதாரண மனிதரின் அழைப்பு கிடையாது ;
      இவ்வுலகையே அருளாள் ஆண்டுவரும் அருளாளரின் அழைப்பு ,
   அவர்கள் நம்அனைவரையும் சன்மார்க்கத்தில் புகுத்துவிப்பது சத்தியமே என்பதை உணர்ந்து,

       நாமும் இதுநாள் வரையில் தனித்தனியாக பிரிந்துகிடந்தது போதும்
   நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழக்கூடிய புணித சுத்தசன்மார்க்க காலம் உதயமாகிவிட்டது ,
      நாம் நமது கருத்து வேற்றுமையை தூக்கி எறிந்துவிட்டு ஆன்மநேய சகோதரத்தன்மையுடன் ஒன்றுபடுவோம் !
  அழியா வாழ்வு பெறுவோம் !
    அனைவரும் வாரீர் சுத்தசன்மார்க்கத்திற்கே !
..........நன்றி;
வள்ளல் மலரடிப் போற்றி போற்றி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்🌼🌸🌺

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா...

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா....

இந்தப் பூவுலகில் நாம் படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு வகையில் நாமே காரணம். முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் பலன்களை இந்த பிறவியில் அனுபவிக்கிறோம். அப்படி என்றால் "நாம் செய்த பாவங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்றால்... "உண்டு!!".

செய்த தவறுகளுக்கு கண்ணீர் மல்க இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இனி பாவமென்ற ஒன்றை செய்யமாட்டேன் என்று அவனிடம் உறுதியளித்தால் அவரவர் செய்த பாபங்களின் தன்மைக்கேற்ப அவர்களது கர்மாவின் கடுமை குறைக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒரு பெரிய மரத்தை கட்டி இழுத்துச் செல்வது தான் உங்களுக்கு தண்டனை என்று வைத்துக்கொள்வோம்....  நீங்கள் அதை அனுபவித்தே தீரவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், அந்த தண்டனையின் கடுமை சற்று குறைக்கப்படுகிறது. எப்படி? அதே மரத்தை தண்ணீரில் இழுத்து செல்லவேண்டும் என்று தண்டனை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது அது சுலபமல்லவா? மரத்தை தண்ணீரில் இழுத்துச் செல்வதற்கும் தரையில் இழுத்துச் செல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

பாபம் செய்ததால் தான் நாம் இந்த மானிடப் பிறவி எடுத்திருக்கிறோம். சென்ற ஜன்மத்திலோ ஏன் இந்த ஜென்மத்திலோ கீழ்கண்ட பாவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ தெரிந்து தெரியாமலோ செய்திருப்போம்.

முதலில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்....

எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேன்?
என் இறைவா!

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்கு கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லி குடும்பம் கலைத்தேனோ?
நம்பியோரை நட்டாற்றில் நழுவ விட்டேனோ?
கலங்கி ஒளிந்தோரை காட்டி கொடுத்தேனோ?
கற்பிழந்தவளை கலந்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியரை அழித்தேனோ?
கணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ?
கருப்பம் அழித்து களித்திருந்தேனோ?
குருவை வணங்க கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ?
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?
பட்சியை கூண்டில் பதைக்க அடித்தேனோ?

கன்றுக்கு பாலூட்டாது காட்டி வைத்தேனோ?
ஊண் சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?
கல்லும், நெல்லும் கலந்து விற்றேனோ?
அன்புடையோர்க்கு துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?
வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்ததேனோ?
பகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ?
பொது மண்டபத்தை போய் இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?
சிவனடியாரை சீற வைத்தேனோ?
தவம் செய்தோரை தாழ்வு சொன்னேனோ?
சுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ?
தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ? இன்னது என்று அறியேன்.
என் இறைவா...
உய்யும் வழியும் உண்டோ - உணர்த்திடுவாய்
உலகெலாம் காத்திடும் உமையொரு பாகா!
தாயும், தந்தையும் நீ ஆவாய்
தனயன் என்னை மன்னித்தருள் செய்வாய்...

"ஆம்" என்று உங்கள் உள் மனம் கூறினால், இனியாவது அவற்றை தவிர்த்திடலாமே! எஞ்சிய நாட்களில் உத்தமனாக வாழ்ந்து, கருணைக்கடலாம் இறைவனின் மன்னிப்பை பெற்று நல் வாழ்வை அடைந்திடலாம்.

நீ

புதன், 9 ஆகஸ்ட், 2017

உணவு தான் மரணத்திற்கு காரணம்!


உணவு தான் மரணத்திற்கு காரணம்!

நாம் பிறந்த நாள் தொடங்கி திரவ உணவு முதல் திட உணவு வரை.தினமும் ஏதோ ஒருவகை உணவை உட் கொள்கிறோம். மரணம் அடையும் வரை உணவை உட் கொண்டே வருகிறோம்

இதில் சாத்வீக உணவு.தாமஸ உணவு என்று இரண்டு வகையான உணவு உட் கொண்டு வருகிறோம்

தாவர உணவு வகைகள் ஒன்று.புலால் என்னும் மாமிச உணவு ஒரு வகை.இந்த இரண்டில் உடல் நலத்திற்கு சிறந்த்து தாவர உணவு வகைகள்.

உடல் நலத்திற்கு கெடுதல் செய்வதும்.அறிவு வளர்ச்சி குறைவதற்கும் காரண காரியமாக இருப்பது மாமிச உணவாகும்.

ஆனாலும் எந்த உணவு உட்கொண்டாலும் மரணம் என்பது நிச்சயம்.

உணவு உட் கொள்ளுகின்ற வரை இறைவன் அருளைப் பெற முடியாது.மரணத்தை வெல்லவும் முடியாது.

உணவு கொண்டால் விந்து என்னும் சுக்கிலம் உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும்.சுக்கிலம் என்னும் பூதவிந்து உற்பத்தியானால் எக்காலத்திலும் மரணத்தை வெல்லவே முடியாது.

விந்துவை அடக்கினாலும் தவத்தால்.தியானத்தால்.யோகத்தால்.குண்டலினி சக்தியை மேலே ஏற்றினாலும் எந்த பயனும் கிடைக்காது.

வள்ளலார் சொல்லுவார் ....

சோற்றாசை யோடு காம சேற்றாசைப் படுவோரை துணிந்து கொள்ள கூற்று ஆசைப்படும் என்கிறார்.எமன் என்னும் கூற்றுவன் ஆசையோடு அழைத்து செல்வானாம்...அதாவது மரணம் தானேவந்து விடும்.

சுத்த சன்மார்க்கிகள் உணவை மாற்ற வேண்டும்!

நாம் உண்ணும் உணவு புழுக்கின்ற உணவு என்று பெயர். துற் நாற்றம் உள்ள மலம் வரும் உணவு.அதை நிறுத்தி புழுக்காத. உணவை உட் கொள்ளப் பழகிக்கொள்ள  வேண்டும் .

அதாவது.சர்க்கரை.கற்கண்டு.தேன்.அயன்நெந்தூரம்.தாமரை பஸ்பம்.போன்ற பொருள்களை உட் கொண்டு உடம்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.

அப்படி உணவை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும். அதன் பிறகு ஆன்மா.ஜீவன் உடம்பு புழுக்கின்ற உணவை விரும்பாது. சுத்த உடம்பாக மாறும்.உண்மை அறிவு.உண்மை இரக்கம்.உண்மை அன்பு.தானாகவே உண்டாகும்.

மண்ணாசை.பெண்ணாசை.பொன்ஆசைகள் தானே நின்று விடும்.பூத புழுக்கின்ற உணவினால்  தான் எல்லா ஆசைகளும்.துன்பங்களும் துயரங்களும் அச்சமும்.பயமும்.இறுதியில் மரணமும் வந்து விடுகின்றது.

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற் தவம் எல்லாம்சுருங்கி ஆற்றிலே கரைத்த புளி எனப் போகும் என்கின்றார் வள்ளலார்.

மேலும் அகவலில்

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே !

எதை உட் கொள்ள வேண்டுமோ அதை உட் கொள்ள வைத்து என்னை நல்ல பண்போடு வளர்த்து  நல்ல உண்மையான வழிகாட்டி உயர்ந்த இடத்தில் வைத்துள்ள ஒப்பற்ற பரம சற்குருவே என்கிறார் வள்ளலார்.

வள்ளலாருக்கு உயர்ந்த குருவாக இருந்து வழி காட்டியவர்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும்.

நாமும் உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே உண்மை ரகசியங்கள் யாவும் விளங்கிக் கொண்டே இருக்கும்.

ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளவும்.அருளைப் பெறவும் தடையாக இருப்பது புழுக்கின்ற பூத உணவு பழக்கமாகும்.அவற்றை மாற்றி புழுக்காத உணவை உட் கொண்டு.சுத்த தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்.

எனவே உணவே மரணத்திற்கு காரண காரியமாக இருக்கிறது என்பதை அறிந்து தெரிந்து புரிந்து  வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

  • ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
  • என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
  • காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
  • கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
  • ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
  • ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
  • ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
  • அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பந்து !

  • மேலும் விரிக்கில் பெருகும்.....

  • அன்புடன். ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
  • 9865939896.....







  • தொடரும்




    ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

    அன்பு எங்கே உள்ளது ?

    அன்பு எங்கே உள்ளது ?

    நாம் அன்பிற்காக தினமும் ஏங்கிக் கொண்டு உள்ளோம்.

    உண்மையான அன்பை பெற முடியாமல் தவிக்கிறோம்.

    அப்படியே அன்பு கிடைத்தாலும் அவை நிலைப்பதில்லை.

    நிரந்தரமான அன்பு.உண்மையான அனபு எங்கு தேடினாலும் கிடைப்பதில்லை.

    நம்முடைய தாய் தந்தையின் காம இச்சையினால் சுய உணர்ச்சியினால் சுய நல இன்பத்தினால் தோன்றிய அன்பினால் உடல் உறவு கொண்டு.ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

    அந்த இன்பத்தின் காம ஊற்றால் உண்டாகும் விந்து சக்தியால்  இரண்டு பேருடைய விந்து சக்தியும்  ஒன்று சேர்ந்து. உயிரும் உடம்பும்  பெற்று  இந்த உலகில் பிறந்து வாழ்கிறோம்.

    பெற்று எடுத்த கடமைக்காக்  தாய் தந்தையர்கள்  வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து பணத்திற்காக வேலை வாங்கிக் கொடுத்து.வயது வந்த உடனே அவர்களுக்கு துணை வேண்டும் என்பதற்காகவும் காமத்தை தீர்த்துக் கொள்வதற்கும். பெண்ணுக்கு ஆணும்..ஆணுக்கு பெண்ணும் பார்த்து   திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.அத்துடன் அவரகளின் அன்பும் கடமையும் தீர்ந்து விடுகின்றது.

    இது தொடர் கதையாக ஆணும் பெண்ணும் செய்து கொண்டே வருகிறார்கள்.

    எனவே தாய் தந்தையர்கள் அன்பும் நிலை இல்லாமல் போய்விடுகின்றது.

    அதே போல் தான் உலகில் உள்ள உற்றவர்கள்.பெற்றவர்கள். நண்பர்கள்.உறவினர்கள் .மற்றவர்கள்.கல்வி போதிக்கும் குருமார்கள்.ஆன்மீக வழிகாட்டும் குருமார்கள் மற்றும் உலகில் உள்ள எல்லோருக்குமே உண்மையான நிரந்தரமான அன்பை  செலுத்தவோ.காட்டவோ முடியாது.இதுதான் உண்மை.

    உண்மையான அன்பைக் காட்டும் ஒரே ஒருவர்..ஆன்மாவின் உண்மைத் தந்தை யாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரே !

    அவர் ஒருவர் மட்டுமே அனத்து ஆன்மாக்கள் இடத்தும் உயிர்கள் இடத்தும் உண்மையான .நிரந்தரமான அன்பைக் காட்டுபவர்.செலுத்துபவராகும்.

    அதனால் தான் தனிப் பெரும் தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவரே என்றும்

    தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்றும்.வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் என்று வள்ளலார் போற்றி புகழ்கின்றார்.வாழ்த்துகின்றார்.மற்றவர்களும் அறிந்து.தெரிந்து கொள்வதறகு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்  சொல்லுகின்றார்.

    அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் மட்டுமே நாம் தொடர்பு கொள்ள வேண்டும்.

    நமக்கு உண்மையான அன்பை செலுத்தும் கடவுளைப்பற்றி பதிவு செய்துள்ள பாடல் .....


    புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
    புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
    உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
    உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
    மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
    மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
    தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
    சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. !

    மேலே கண்ட பாடல் வள்ளலார் சித்தி பெருவதற்கு முன் மக்களுக்குத் தெளிவாக தெரியப் படுத்துகின்றார்.

    எனவே உண்மையான அன்பை பெருவதற்கும்.அருளைப் பெருவதற்கும் .மரணத்தை வெல்லுவதற்கும் ஒரே கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்..

    வேறு எந்த தெய்வங்கள் இடத்தும் தொடர்பு கொள்ள வேண்டாம்.அவர்களுக்கு உண்மையான அன்பும் அறிவும் அருளும் வழங்கும் தகுதி கிடையாது...

    மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்...

    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசேஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதேஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவேஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.!

    என்ற பாடல் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார். எல்லா அணுக்களிலும் நீக்கமற நிறைந்து இயங்கிக் கொண்டு உள்ள அருட்பெரும்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அழிவில்லாத நிரந்தரமான அன்பையும் அறிவையும் அருளையும் பெற்று

    பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்து மரணத்தை வென்று மகிழ்ச்சியுன் வாழ்வாங்கு வாழ்வோம்....

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

    கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

    அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
    9865939896..../

    புதன், 2 ஆகஸ்ட், 2017

    சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது !

    சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது !

    அன்புள்ள ஆன்ம நேய உடன் பிறப்புக்களுக்கு வந்தனம்

    நாம் எவ்வளவு தான்  ஜீவகாருண்யம் செய்தாலும்.தியானம்.தவம்.யோகம். குண்டலினிபயிற்ச்சி.மூச்சு பயிற்சி. வழிபாடு போன்ற எந்த பயிற்சி செய்தாலும்  காண முடியாது.அருளைப் பெற முடியாது.

    நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான முதல் திரை ...சமய மதங்களால் கொண்டு வந்த சாதி என்னும் திரைகள்தான்..அது நீங்கினால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கி விடும் என்கிறார் வள்ளலார்.

    சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்சாத்திரக் குப்பையும் தணந்தேன்நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்நித்திய வாழ்க்கையும் சுகமும்ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாஅருட்பெருஞ் சோதிஎன்
     அனைத்தும் நீஅறிந் ததுநான்உரைப்பதென் அடிக்கடி உனக்கே.!

    சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளேஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியேஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவேசோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.!

    சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்விடுவித்தென் தன்னை ஞானநீதியிலே சுத்தசிவ சன்மார்க்கநிலைதனிலே நிறுத்தி னானைப்பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்பராபரனைப் பதிஅ னாதிஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோதியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.!

    சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!

    சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்!

    சாதி சமயச் சழக்கெலாம் அற்றதுசன்மார்க்க ஞான சபைநிலை பெற்றதுமேதியிற் சாகாத வித்தையைக் கற்றதுமெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் !


    சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி - அக்கச்சிசோதியைக் கண்டேன டி.!

    சாதிசம யங்களிலே வீதிபல வகுத்தசாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவேஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியேஅன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!

    சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி !

    சாதியு மதமுஞ் சமயமுங் காணாஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!

    இப்படி பல ஆயிரம் பாடல்களை பதிவு செய்து வள்ளலார்....

    நாம் எவ்வளவு தான் சுத்த சன்மார்க்கம் பேசினாலும் சமய மதங்களால் விதிக்கப்பட்ட சாதி என்னும் கொடிய நோய் நம்மை விட்டு அகலவில்லை.அந்த கொடுமையான நோயை அகற்றினால் தான் நாம் உண்மையான அருட்பெரும்ஜோதியை காண முடியும்...

    ஆன்மாவைக் கண்களால் கண்டால் தான் இறைவன் அருளைப் பெற முடியும். அருளைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்...மரணத்தை வென்றால் தான் பேரின்ப லாபத்தைப் பெறமுடியும்.

    எனவே முதல் திரையாகிய கருமையில் பச்சைவண்ணமாகிய திரைதான் சாதி என்னும் அழுத்தமான திரையாகும் .அதை முதலில் நீக்கி விட்டால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கிவிடும்.

    அருள் வேண்டுமானால் சாதி என்னும் பற்றை முதலில் பற்று அற விட வேண்டும்...

    விட்டு பாருங்கள் அதன் லாபத்தை உண்மையாக காண்பீர்கள்..

    எனக்கு நாற்பது ஆண்டுகளாக சாதி.சமயம்.மதம் என்ற பற்று அறவே கிடையாது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

    நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போன்ற பெரிய லாபத்தை பெறுவீர்கள்.பெற்றுக் கொள்வீர்கள்..இது சத்தியம்...

    அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
    9865939896....