செவ்வாய், 29 மே, 2012

மனிதன் யார் ?


மனிதன் யார் ?

சென்னையில் வள்ளலார் வாழ்ந்து வந்த வீடு ஏழுகிணறு வீராசாமி வீதி 38, ஆம் வீடாகும் அங்கு இருந்து திருவொற்றியூர் கோவிலுக்கு நேரடியாகத் தேரடித் தெரு வழியாக செல்வது வழக்கம்.ஒருநாள் அவ்வழி செல்லாது தெற்கு புறம் உள்ள மாடவீதியில் உள்ள நெல்லிக்காய் பண்டாரச் சாலை வழியாக தரிசனம் செய்யச் சென்றார் .அவ்வீதியில் நெடுநாட்களாய் ஒரு திண்ணை மீது ஒரு நிர்வாண சந்நியாசி இருந்தார் .அவர் போகிறவர்களையும் வருகிறவர்களையும் ,நாய் போகிறது ,நரி போகிறது,மாடு போகிறது,பாம்பு போகிறது ,தேள் போகிறது ,பன்றி போகிறது,யானை போகிறது,சிங்கம் போகிறது ,கழுதை போகிறது, என்று ஒவ்வொரு மனித உருவங்களைப் பார்த்தும், மிருகங்களாக பாவித்து தூற்றிக் கொண்டே இருப்பார் .

மனிதர்கள் மனித குணம் இல்லாமல் மிருக குணம் படைத்து இருப்பதால் .மிருகங்கள் முன்னாள் ஆடை அணிய விருப்பம் இல்லாமல் இருந்தார்.ஒருநாள் அந்த வழியாக வள்ளலார் வந்தார் .வெகுதொலைவில் வள்ளலார் வருவதைப் பார்த்து ,அதோ ! ஒரு உத்தம மனிதர் வருகிறார் என்று கூறிவிட்டு உடனே தன் கைகளால் தன்னுடைய அவையங்களை மறைத்து நடுங்கிக் கொண்டு பதைப்பதைத்து கூணி,குறுகி ,ஒளிந்து கொண்டு மறைவாக நின்றார் . அங்கு உள்ள மக்கள் அந்த காட்சியை ஆச்சர்யமாகவும் ,அதிசியமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .

அந்த நிர்வாண சன்னியாசியை கவனித்த வள்ளலார், அவர் அருகில் சென்று , தன்மேல் போற்றி இருந்த அவருடைய ஆடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொல்லி .நீங்கள் இங்கு இருக்க வேண்டாம், ஊரை விட்டு வெளியே சென்று தனிமையில் இருங்கள். இடைவிடாது இறைவனை நினைந்து வழிபடுங்கள், உங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார் .வள்ளலார் சொல்லியபடியே அவர் அங்கிருந்து சென்று விட்டார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

மனிதனாக பிறந்தவர்களுக்கு அச்சம் ,நாணம், மடம், பயிர்ப்பு .போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும் மனித .ஒழுக்கம்,இருக்க வேண்டும் எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு,தயவு,கருணை,இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அவை மனித குணமாகும் .மனித குணம் இல்லாத மனிதர்களைப் பார்த்து மனித உருவில் உள்ள மிருகங்களாக நிர்வாண சந்நியாசி பார்த்தார் ,மிருகங்கள் முன் ஆடை அணிய தேவை இல்லை என்பதை உணர்ந்த அவர் ஆடை இல்லாமல் இருந்தார் என்பது விளங்குகிறது .

இவ்வுலகில் உயர்ந்த அறிவு உடைய தேகம் மனித தேகம் .உயர்ந்த அறிவுள்ள தேகம் கொடுத்த அருட்பெரும் ஜோதி ஆண்டவருக்கு என்ன கைம்மாறு செய்துள்ளோம் என்பதை ....நினைந்து நினைந்து..உணர்ந்து உணர்ந்து ,...நெகிழ்ந்து நெகிழ்ந்து...அன்பே... நிறைந்து நிறைந்து,..ஊற்று எழும் கண்ணீர்  அதனால் .அழுது ...உடம்பு முழுதும்..நனைந்து போற்ற வேண்டும் .

உயர்ந்த பிறப்பாகிய மனித தேகப் பிறப்பு எடுத்துக் கொண்ட நாம்,உயர்ந்த பதவியைப் பெற்றுக் கொள்ள தகுதிப் படைத்தவர்கள் .அந்த உயர்ந்த பதவி என்னவென்றால்... ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்'' அதாவது மரணத்தை வென்று கடவுள் இருக்கும் இடம் செல்வது .(அருட்பெருவெளி )அதற்குப் பெயர்தான் ..மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும் .

முதலில் மனிதன் ...மனிதனாக வாழ்வோம் எல்லா உயிர்களையும் நேசிப்போம். வள்ளலார் காட்டிய பாதை.. மனிதன் மனிதனாக வாழும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய'' பாதையாகும். உண்மை ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம்,போன்ற நான்கு வகை ஒழுக்கங்களை கடை பிடித்து, சத்தியம், நேர்மை ,வாய்மை,தூய்மை சமரசம், உயிர் இரக்கம்,அகிம்சை,கொல்லாமை,புலால் உண்ணாமை, ''கடவுள் ஒருவரே'' .......''அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ''....என்று அறிகின்ற உண்மை அறிவு,....சாதி,சமயம் ,மதம்,இனம்,நாடு,மொழி ,எனற எந்த வேறுபாடும் இல்லாத ஒருமைப்பாடு ....எதிலும் பொது நோக்கம்,....எல்லா உயிர்களும் கடவுளின் ஏகதேசங்கள் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாடு, இதுவே மனிதன் மனிதனாக வாழும் வாழ்க்கையாகும் .

இதற்கு மேல் மரணத்தை வெல்லும் வாழ்க்கை மிகவும் உயர்ந்தது கடினமானது,ஆன்மாவை கடவுள்,ஆன்ம பரிசோதனை செய்து மேல்நிலைக்கு கொண்டு செல்வதாகும் ,நாம் அனைவரும் முதலில் மனிதனாக வாழ பழகிக் கொள்ள வேண்டும் ,வள்ளலாரைப் போல் முதலில் மனிதனாக வாழ்வோம் .பின் மரணத்தை வெல்லும் வழியை ஆண்டவர் காட்டிக் கொடுப்பார் . இதை கடை பிடிப்பவர்களே மனிதர்களாகும் .

மனிதனாக வாழும் சன்மார்க்க சட்டதிட்டங்கள் !

1) கடவுள் ஒருவரே !அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

2,) சிறு தெய்வ வழிபாடு செய்யக் கூடாது !

3,) தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது !

4,) புலால் (மாமிசம் ) உண்ணக் கூடாது !

5,) சாதி,சமயம்,மதம்,இனம்,நாடு,மொழி,முதலிய வேறுபாடுகள் கூடாது !

6,) எவ்வுயிரையும் தம் உயிர் போல் என்னும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு
உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !

7,) ஏழைகளின் பசியை தவிர்க்க வேண்டும் !

8,) ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் !

9,) புராணங்களும் ,இதிகாசங்களும், சாத்திரங்களும் ,வேதங்களும் ,கற்பனைக் கதைகள் ,அதில் முழுமையான உண்மை இல்லை என்பதை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.!

10,) ஜீவ காருண்யமான உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

11,) இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் அதனால் புதைக்க வேண்டும் ,
எரிக்க கூடாது,எரித்தால் அதுவும் கொலையாகும் !

12,) கருமாதி ,திதி ,முதலிய கடங்குகள் வேண்டாம் !

13,) எதிலும் பொது நோக்கம் வேண்டும்.!

14,) மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசை போன்ற ஆசைகளில் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் .!

15,) கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது ! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது !

 மேலே கண்ட கொள்கைகளை முழுமையாக கடைபிடிக் கின்றவர்கள்,மனித பிறப்புக்கு தகுதி உடையவர்கலாகும் .அவர்களே மனிதர்கள் ! அவர்களே சுத்த சன்மார்க்கிகள் !.அவர்களே வள்ளலார் வழியைப் பின் பற்றுபவர்கள்!.அவர்களே மரணத்தை வெல்லும் வழியைக் கண்டவர்கலாகும்.    

உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு..கைபேசி ;--9865939896,....

மேலும் பூக்கும் .........

கடவுள் எங்கு உள்ளார் ? அவர் யார் ?


                                                            அருட்பெருஞ்சோதி

கடவுள் எங்கு உள்ளார் ?அவர் யார் ?

கடவுள் எங்கு உள்ளார் என்பதை இன்று வரைக்கும் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை ......{வள்ளலாரைத்தவிர }

உலகம் தோன்றியது எதற்க்காக என்றால் ? ..உயிர்கள் வாழ்வதற்காக உலகம்
படைக்கப்பட்டது .!..உயிர்கள் ஏன் வாழ வேண்டும் ?....உயிர்கள் எங்கு இருந்து வந்தது ?...அந்த உயிர்கள் எதற்க்காக இங்கு வந்து ஏன் வாழ வேண்டும் ?
....உயிர்களை உண்டாக்கியது யார் ? உலகத்தை உண்டாக்கியது யார் ? இவ்வளவு,செயல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் யார் காரணம் ? இவ்வளவு செயல்களை எல்லாம், செயல்படுத்துவது யார் ? ..மனிதனா ?...கடவுளா ?ஆன்மாவா ?....இல்லைப் பேரொளியா ? ....அணுவா ? ....அல்லது மாயையா ? மேலும் பஞ்ச பூதங்களா? .....கண்களுக்குத் தெரியாத, எதோ ஒரு சக்தியா ?

,வேதம் ..ஆகமம்,...புராணம்,...இதிகாசம்,...சாத்திரங்கள் சொல்லும் கடவுளா ?   சமயம் ,..மதங்களை கற்பித்த மதவாதிகள் சொல்லும் ,..பிரம்மா ,விஷ்ணு,...சங்கரன்,...மயேச்சுவரன்,....சதாசிவன் ,...போன்ற தத்துவ தெய்வங்களா ?....இராமயணம் சொல்லும் இராமனா ?....மகாபாரதம் சொல்லும் கிருஷ்ணனா? ....

இல்லை முகம்மதியர் {நபிகள் நாயகம் }சொல்லும்அல்லாவா?......கிருத்துவம் சொல்லும் {ஏசு }ஜீசஸ், என்னும் கடவுளா ?... ஜைன மதம் சொல்லும் கடவுளா ? ..... சீக்கிய மதம் சொல்லும் கடவுளா ?   புத்தர் {புத்தமதம் }சொல்லும்
கடவுளா ? ....திருவள்ளுவர் சொல்லும் கடவுளா? ....சன்மார்க்கம் சொல்லும் கடவுளா ?....சுத்த சன்மார்க்கம் சொல்லும் கடவுளா ? ....மற்றும் ..சித்தர்கள் ,...முத்தர்கள் ,...யோகிகள், ...ஞானிகளா ? ....என்ற சந்தேகம் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஏற்படுவது நியாயமானதே !..பகுத்தறிவு படைத்தவர்களுக்கும் ,கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கும் இதே சந்தேகம் எழுந்து உள்ளது.

இத்தனைக் கடவுள்களையும், மனிதர்கள் ஏன் படைத்துள்ளார்கள் ! மனிதர்கள் கடவுளைப் படைக்க முடியுமா ? அப்படியானால், இதில் எந்தக் கடவுள் உண்மையானக் கடவுள்?

எவர் சொல்லுவதை நம்புவது ! எவர் சொல்லுவதை விட்டு விடுவது !இத்தனைக் கடவுள்களும் உள்ளார்களா ? ...மாண்டு{இறந்து }போய் விட்டார்களா ?..என்பது ஒன்றும் தெரியாத, புரியாத புதிராகவே உள்ளன் !

விஞ்ஞானிகளும்,...வேதியல் வல்லுனர்களும் ...அறிவியல் ஆராய்ச்சியாளர்களும்,....அணு ஆராய்ச்சியாளர்களும்,....ஆன்மீக சிந்தனையாளர்களும்,...முற்றும் துறந்த முனிவர்களும்,....முற்றும் படித்த மேதாவிகளும், ....பொது சிந்தனை உள்ள புரவலர்களும் ...ஆன்மீகத்தை தோற்றுவித்த அருளாளர்களும் ....தேடிக்கொண்டு இருப்பது.. கடவுள் எங்கு உள்ளார்?...அவர் எப்படி உள்ளார் ?...எந்த உருவத்தில் உள்ளார் ?....என்பதைத்தான்.தேடிக் கொண்டு உள்ளார்கள்...இவ்வளவு ..மாபெரும்,..விபரிக்க முடியாத... ,விளங்க முடியாத,....அறிந்து கொள்ள முடியாத ...''சக்தி ''{ஆற்றல் }எங்கு இருந்து செயல் பட்டுக் கொண்டுள்ளன !... இவற்றை இயக்குவது யார் ? ...அக்கினியா?......சூரியனா ,?...சந்திரனா,?...நட்சத்திரங்களா ?...பஞ்ச பூதங்களா ? பிரக்கிருதி அணுக்களா ?.....மாயையா ? ..ஏதோ ஒரு பேரணுவா?  எனற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே உள்ளன .

இதே போன்ற கலக்கமும்,..மயக்க்கமும், .தயக்கமும் ..சந்தேகங்களும், அனைவருக்கும் இருந்தது போல், எனக்கும் பல ஆண்டுகளாக இருந்தன ! அவற்றை அறிந்து கொள்வதற்காக, நானும் பல நூல்களையும்,படித்து ஆராய்ந்துப் பார்த்தேன் ,சமயம் ,..மதம்,..மற்றும்,புராணங்களில் ,... சாத்திரங்களில் சொல்லிய பல வழிபாட்டு பக்தி முறைகளையும் செய்து பார்த்தேன்.தவம்,....தியானம்,..யோகம், ...பக்தி,...வழிபாடு போன்ற எல்லாக் கலைகளையும் செய்து பார்த்தேன் .கடவுள் எங்கு உள்ளார் என்பது என்னுடைய அறிவுக்கு புலப்படவில்லை ,தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருந்தேன். எதுவும் தெரிந்த பாடில்லை, தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.

உலகில் தோன்றிய அருளாளர்கள் என்னும், மாகாபாரதம் எழுதிய வேத வியாசர்,ராமாயணம் எழுதிய வால்மீகி,மற்றும் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த நபிகள் அவர்கள்,கிருத்துவ மதத்தை தோற்றுவித்த ஏசுபிரான். மற்றும் பல  ஞானிகள் ,..சித்தர்கள்,...யோகிகள்,...தவசிகள் ...இறை தூதர்கள் என்று பலராலும் போற்றப்படும்,பாராட்டப்படும் அருளாளர்கள் ,வாழ்ந்து வந்த இடங்களுக்கும் சென்று பார்த்தேன் ,அவர்கள் எழுதிய அருள் நூல்களை எல்லாம் படித்துப் பார்த்தேன்...அவர்கள் எழுத்துகளையும்,...சொற்களையும் வாக்கியங்களையும்,...சந்தேங்களையும் அழகாக கோர்த்து,..இலக்கணம்,..இலக்கியம் மாறாமல் ,பாமாலைகளாக  தொடுத்து,''ஏட்டளவில்'' எழுதி வைத்துள்ளார்கள். எதிலும் ''கடவுளைப் பற்றிய உண்மை இல்லை'',

உலகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு உள்ளது என்கின்றனர். இந்த உலக இயக்கம் எங்கிருந்து யாரால் இயக்கப் படுகிறது ?, எப்படி,இயக்கப்படுகின்றது ? எப்படி  செயல்படுகிறது ? என்ற உண்மை இதுவரையில் யாரும் சரியாக தெரிந்து கொள்ளவில்லை.அவர்கள் சொல்லும் விளக்கம் ,அவர்கள் கண்டுபிடிப்பு எல்லாம் உண்மைக்கு புறம்பானது என்பதை அறிந்து கொண்டேன்.

அவரவர் அறிவுக்கு தெரிந்த உண்மைகளை,..அனுபவங்களை ...எழுதி வைத்துள்ளார்கள்,அவ்வளவுதான், வேறு ஒன்றும் பெரிய உண்மை இருந்ததாக தெரியவில்லை ---இருந்தாலும் என்னுடைய தேடுதல் நின்றபாடில்லை !

இந்த உலகில் உள்ள உயிர்களின் நன்மைக்காக,மனித குல மக்கள் வாழ்க்கைக்காக ,...மக்கள் நலனுக்காக ,...மக்கள் மகிழ்ச்சிக்காக, ...மக்கள் பேரின்பம் ...அடைய வேண்டும் எனற நோக்கத்தோடு எழுதிய நூல்கள்,...இவ்வுலகில் அளவில் அடங்காது குவிந்து கிடக்கிறது ,இன்னும் நிறைய நபர்கள், சொல்லிக் கொண்டும்,எழுதிக் கொண்டும் உள்ளார்கள் .--மேலும் மக்கள் நல் வாழ்க்கைக்காக ,..மக்கள் நலனுக்ககாக...மக்களின் மகிழ்ச்சிக்காக, நூல்கள் எழுதிக் கொண்டே உள்ளார்கள் .

இவ்வளவு நூல்கள் எழுதியும் ,அவைகளைப் படித்தும்,அதன்படி வாழ்ந்தும்  மக்கள் இன்னும் திருந்த வில்லை,மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவில்லை, என்று அறிவியல் வல்லுனர்களும் ,...ஆராய்ச்சி யாளர்களும்,...படித்த மேதைகளும், ...அரசியல் ஆட்சியாளர்களும், ...பொது நல சிந்தனையாளர்களும் ,...சட்ட நிபுணர்களும் பொது மக்களும் ,..மேலும்,...ஆன்மீக சிந்தனை யாளர்களும்,மற்றும் அனைத்தும் படித்துள்ள அறிவு ஜீவிகளும்,-- சொல்லிக் கொண்டும் ..தேடிக் கொண்டுமே உள்ளார்கள்.ஏன் ?ஏன் ?

இவ்வளவு அறிவு நூல்கள் இருந்தும்,மக்கள் ஏன் திருந்தவில்லை ?எழுதியவர்கள் குற்றமா ? படித்தவர்கள் குற்றமா ? என்பது ஒன்றும் புரியவில்லை ! மக்களுக்கு புரியாத அளவிற்கு ...எழுதி வைத்து விட்டார்களா ? உண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய்யையே உண்மை என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்களா ?...உண்மையாக இருந்து இருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள் ...உண்மை இல்லாததால் மக்களின் ஆன்மாவில் அறிவில் பதியவில்லை என நான் நினைக்கிறேன். அப்படித்தான் அறிவுள்ள சிந்தனை யாளர்களும்,நினைப்பார்கள் என நான் கருதுகிறேன் .

ஆன்மீக சிந்தனையாளர்கள் உடம்பைப் பற்றி, ..ஓர் ....அளவிற்கு தெரிந்து வைத்துள்ளார்கள் .அதுவும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. உடம்பைப் பற்றி அறிந்து கொண்ட அளவிற்கு ,ஆன்மாவைப் பற்றியும் ,உயிரைப் பற்றியும் அறிந்து கொள்ளவில்லை ,ஆன்மாவைப் பற்றியும் ...உயிரைப் பற்றியும் உண்மையைத் தெரிந்து கொண்டு இருந்தால் ,அனைத்து உண்மைகளும் தெரிந்திருக்கும்,

ஆன்மா அழியாதது,உடம்பும் உயிரும் அழிந்துவிடும் என்பதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்...பிறந்தவர் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும்...இவை ''இயற்கையின் நியதி'' என்று பொய்யான கற்பனைக்  கதைகளைக் கட்டிவிட்டுச்சென்று விட்டார்கள் .

வள்ளலார் சொல்லும் பாடலைப் பார்ப்போம் !

உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்று அறியீர்
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

மேலே கண்ட பாடலில் எளிய தமிழில் விளக்கமாக விளக்கியுள்ளார் .உலகில் உள்ளவர்கள் அனைவருமே ஏழைகள்தான் ...உண்மையை அறிந்தவன் எவனோ அவனே அருளைப் பெரும் பணக்காரன் ,அவனே மரணத்தை வெல்லும் சக்தி படைத்தவன் ,அவனே பேரின்பத்தை அடைந்தவன் ,அவனே கடவுள் நிலை அறிந்தவன் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .மற்றவர்கள் அனைவரும் மாயையில் சிக்குண்டவர்கள் என்கிறார் .

மாயையில் சிக்குண்டவர்கள் !

மாயையில் சிக்குண்டவர்கள் எழுதிய அனைத்து நூல்களும்,''சாத்தானின் வேதங்களாகும்''மாயையில் சிக்குண்டு எழுதிய அறிவு நூல்கள் அனைத்தும் பொய்யானதே !

மாயை என்பது என்ன ?

நாம் வாழும் உலகம் ஒரு அண்டம் என்பதாகும் .இவைப் போல் பலகோடி அண்டங்கள் இயங்கிக் கொண்டு உள்ளன .ஒரு அண்டத்தில் ,,நிலம்,..நீர் ...அக்கினி...காற்று ...ஆகாயம் ..என ஐந்து அணு பூதங்கள் என்னும் பொருட்கள் உள்ளன...அந்த ஐந்து பூதங்களிலும் ,..ஐந்து பூதங்கள் கலவையாக உள்ளன.அவற்றிக்கு துணையாக ...ஞாயிறு ..திங்கள் ...செவ்வாய் ...புதன்...வியாழன...வெள்ளி ...சனி ....ராகு.....கேது ...என ஒன்பது கிரகங்கள் உள்ளன ...முக்கிய அணுக்களான.. வாலணு....திரவவணு....குருஅணு...லகுஅணு....அணு ...பரமாணு ....விபுஅணு ....என ஏழு விதமான அணுக் கூட்டங்கள் உள்ளன .மேலும் பலகோடி விதமான ..சாதாரண ..அசாதாரண .சிற்று அணுக்கள் உலகம் முழுவதும் நிறைந்து இருக்கின்றன .

இவ்வளவு அணுக்கள் நிறைந்து இருந்தும் ஒன்றோடு ஒன்று ''மோதிக் கொள்வதும் இல்லை,அழித்துக் கொள்வதும் இல்லை ''என்பது மிகப்பெரிய அதிசமாகும் ....அதே நேரத்தில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ,அதன் அதன் தேவைக்கு ''பகிர்ந்து'' கொள்ளும் .இவை அனைத்தும் ஐந்து பூதங்களுக்கும் ...ஒன்பது கிரகங்களுக்கும் தொடர்பு உடைய செயல்களாகும் . .

மேலே கண்ட ..ஐந்து பூதங்களையும்...ஏழுவிதமான அணுக்களையும் ,.மற்றும் உள்ள துணை அணுக் கூட்டங்களையும் ...ஒன்பது கிரகங்களையும் ...''ஆட்சி செய்யும் அதிகாரம்,செயல்படுத்தும் அதிகாரம் ''மாயை ...மாமாயை ....
பெருமாயை ...என்னும் மூன்று அதிகாரத் தலைவர்களிடம் கொடுக்கப் பட்டுள்ளது ...மூன்று பேர் என்பதால் மனிதர்கள் என்று நினைத்து விடாதீர்கள் ...புற கண்களுக்குத் தெரியாமல்,... செயல் பட்டுக் கொண்டு இருக்கும் ,''சக்தி வாய்ந்த ஆற்றல் மிகுந்த செயல்படும் அணு ஒளிகளாகும் ''

இந்த மாயைகளுக்கு என்ன வேலை என்றால் !

இந்த உலகத்திற்கு ''ஆன்மா என்னும் ஒளிக் கூட்டங்கள் '' வந்தால்தான் வேலை ,....இல்லை யென்றால் வேலை கிடையாது .....இந்த உலகம் என்னும் அண்டத்தை படைத்தது,'''ஆன்மாக்கள் இங்கு வந்து உயிர்ப்பெற்று வாழ்வதற் காகத்தான் '' ...என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .ஆன்மாக்கள் வந்தால் அவைகளுக்கு, உயிர் கொடுப்பது !..உடம்பைக் கொடுப்பது!,..அதனதன் விருப்பம் போல் வாழ வைப்பது !...குற்றம் செய்தால் தண்டிக்கப் படுவது !...தண்டிப்பது என்றால் மரணம் அடைய செய்விப்பது,! குற்றத்திற்கு தகுந்த மறுபிறப்பு கொடுப்பது,!...தவறு செய்யாத ஆன்மாக்களை பாது காப்பது! ....தண்டிக்காமல் பாது காப்பது !...அவர்களுக்கு வேண்டிய,தகுதிக்குத் தகுந்த உயர் பிறப்பை கொடுப்பது! அதற்கு வேண்டிய நன்மைகளை செய்தல் !.போன்ற அனைத்து வேலைகளையும் ..பாராபட்சம் இல்லாமல் ,முறையாக... சரியாக ஒழுங்கு தவறாமல், முறைப்படி,''இயற்கை சட்டத்தின் படி'' ,செயல் புரிந்து கொண்டு இருப்பவைகள் தான் '''மாயைகளின் வேலைகளாகும்.

மாயையின் ஆட்சியில் ,...ஆன்மாக்களுக்கு ....தாவரம் முதல் மனிதர்கள் வரை உயிரும் உடம்பும் கொடுத்து வாழ வைப்பது,''மாயை '' என்பதை அறிந்தோம் .

இந்த உலகத்தை படைத்து,,,மேலே உள்ள அனைத்தையும் படைத்து ,ஆன்மாவை அனுப்பி....அவைகளுக்கு உயிர்களைக் கொடுத்து ,அவைகளின் விருப்படி வாழவைத்துக் கொண்டு இருக்கும் ''மாயை '' என்னும் சக்தியானது , ஆன்மாக்களை இந்த உலகத்தை விட்டு வெளியே அனுப்பும் அதிகாரம் அவைகளுக்கு கிடையாது..

ஆன்மாக்களை இந்த உலகத்திற்கு அனுப்பியது யார் ? என்ற உண்மை  ஆன்மாவிற்குத் தெரியாது ஆணவம் என்னும் அஞ்ஞானம் மறைத்துக் கொண்டு உள்ளது ..ஆன்மாவிற்கு,உண்மைத் தெரியாத வரையில் இந்த உலகத்தை விட்டு வெளியேற முடியாது ....மனித தேகம் என்னும் உயர்ந்த அறிவுடைய தேகம் கிடைத்து ,ஆன்ம அறிவை அறிந்து ..ஆன்மாவில் உள்ள அருள் அமுதத்தை உண்டு {புசித்து )ஊன உடம்பை ஒளி உடன்பாக மாற்றினால்தான் ..இந்த உலகத்தை விட்டு வெளியே செல்ல முடியும் .

இந்த உலகத்தை விட்டு வெளியற முடியாத மனிதர்கள் {ஆன்மாக்கள}''உண்மையைக் கண்டு பிடிக்கும் அறிவு விளக்கம் இல்லாமல் ...மாயை என்னும் உலக போகத்திலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களாகும் ''.அதனால் அவர்களை மாயையில் சிக்குண்டவர்கள் என்று,சொல்லப் படுகிறார்கள் .  

மாயையில் வசப்பட்டவர்களால் ''உண்மையை அறியமுடியாது ''உண்மையை
உணரமுடியாது,...உண்மை ஒழுக்க நெறியோடு வாழமுடியாது, ...உண்மையை உண்மையாக,...மக்களுக்கு போதிக்க முடியாது,...உண்மை இறை நிலையைப் பற்றி எழுத முடியாது ...மரணத்தை வெல்ல முடியாது ...என்பதை வள்ளலார் எழுதிய ''திருஅருட்பா'' அன்னும் அருள் நூலின் வாயிலாக அறிந்து கொண்டேன்.மாயையின் சம்பந்தம் உடையவர்கள்,இந்த உலகத்தில் உள்ளவைகளை மட்டுமே அறியமுடியும்.உலகத்தின் வெளியே என்ன நடந்து கொண்டுள்ளன என்பதை அறியமுடியாது,...உலகில் உள்ள அற்ப சித்திக்  கலைகள் என்னும் , ''தத்துவங்களை'' மட்டுமே அறிய முடியும் ,

தத்துவம் என்பது என்ன ?

தத்துவம் என்பது மனித உடம்பில் உள்ள முக்கிய கருவிகளாகும் .அகத்தில் உள்ள ''ஆறு ஆதாரங்களாகும் '',அவை மூலாதாரம் ...சுவாதிஷ்டானம் ...மணிபூரகம்...அநாதகம் ....விசுத்தம் ...ஆக்ஞேயம்...என்பதாகும் இவைகள் ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ஆறு ஆறு தத்துவங்கள் என முப்பத்தாறு தத்துவங்களாக கண்டார்கள்....புறத்தே ''அறுபது'' தத்துவங்கள் உள்ளன ஆக மொத்தம் ''தொண்ணுற்று ஆறு ''தத்துவங்களாகும்.இந்த உறுப்புகள் உடம்பை இயக்கும் முக்கிய கருவிகளாகும் .

உடம்பில் உள்ள ஆறு அந்தங்களை (ஆதாரங்கள் ) கண்டவர்கள் ஆறு அந்தங்களின் முடிவுகளை மக்களுக்கு போதித்து உள்ளார்கள் .

ஒவ்வொரு அந்தங்களும் ஒவ்வொரு தத்துவ சித்தி கலைகளின்  உண்மைகளை விளக்கும்.அவைகள் சித்தாந்தம் ,வேதாந்தம்,கலாந்தம் ,யோகாந்தம்,போதாந்தம்,நாதாந்தம் என்பவையாகும் .அதற்கு மேல் உள்ள உண்மை நிலையை அவர்களால் காணமுடியாமல் அத்துடன் நின்று விட்டார்கள் ,அதற்கு மேல் கடவுள் நிலை எங்கு உள்ளது என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
நண்ணுறு கலாந்த முடனே
நவில்கின்ற சித்தாந்த மென்னும் ஆறு அந்தத்தின்
ஞான மெய்க் கொடி நாட்டியே
மூதாண்ட கோடி களோடுஞ் சராசரம் எலாம்
முன்னிப் படைத்தன் முதலாம்
முத்தொழிலும் இரு தொழிலும் முன்னின்று இயற்றி
ஐம் மூர்த்திகளும் ஏவல் கேட்ப
வாதாந்த முற்ற பல சத்திகளோடுஞ் சத்தர்
வாய்ந்து பணி செய்ய இன்ப
மாராச்சி யத்திலே திருஅருட் செங்கோல்
வளத்தொடு செலுத்தும் அரசே
சூதாண்ட நெஞ்சினிற் தோயாத நேயமே
துரிய நடுநின்ற சிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
ஜோதி நடராஜ பதியே

என்கிறார் வள்ளலார் .

மேலும் தத்துவங்களை கடந்த நிலையில் இறைநிலை எப்படி உள்ளது என்பதை வள்ளலார் விளக்கம் அளிக்கிறார் .

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீத மேனிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்திடச் சென்றோம்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தவந் நிலைக்கண் யாமும் எம்முணர்வும்
ஒருங்குறக் கரைந்து போயினம் என்று
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்றோங்கும்
அருட்பெருஞ் ஜோதி என் அரசே !

தத்துவங்களை கடந்த நிலையில் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கும் கடவுளைக் கண்டவர்கள் யாரும் இல்லை ...வள்ளல் பெருமானைத்தவிர !

எல்லா அண்டங்களையும் ...எல்லா உலகங்களையும் ..எல்லா உயிர்களையும் ....எல்லா கலைகளையும் ,.....அனைத்து அண்ட, சராசரங்களையும் படைத்து ஐந்தொழிலும் செய்து கொண்டு ,..''ஞான மெய்க் கொடிநாட்டி ,திருவருள் செங்கோல் செலுத்தும் கடவுள்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்'' என்பவராகும் .அவை தத்துவங்களை கடந்ததாகும் .தத்துவங்களைக் கடந்த உண்மை நிலையாகும் .அதுவே அருட்பெருஞ் ஜோதியாகும்.அதுவே பலகோடி அண்டங்களை இயக்கம் ஆற்றல் பெற்ற அருள் ஜோதியாகும்.அதுவே ஈடு இணையற்ற கருணை மிக்க அருட்க் கடலாகும்.

ஐம் மூர்த்திகள் என்று சொல்லப்படும்;--- ...பிரமன்,...விஷ்ணு,....சங்கரன்,...மகேஸ்வரன்,...சதாசிவம் ...என்பவர்கள் {நிலம்,..நீர்,...அக்கினி,...காற்று ,...ஆகாயம்,}..என்னும் இயக்கத்திற்கு வைத்த பெயர்களாகும் .இவை சிறிய ஆட்சி யாளர்களாகும்.இவர்கள் போன்ற,சிறிய ஆட்சியாளர்களுக்கே உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல்,---தங்களுக்கு கொடுத்த வேலைகளை ...ஒய்வு இல்லாமல்,...காலம் நேரம் கருதாமல் ...இடைவிடாது, செய்து கொண்டு உள்ளார்கள் என்றால் ! மதத் தலைவர் களுக்கும்,...சமயத் தலைவர் களுக்கும் எப்படி உண்மைத்  தெரியவரும்.? உண்மையானக் கடவுளைத் தெரிந்து கொள்ளாமல் ...கண்ட கண்ட தத்துவங்களை கடவுளாக படைத்து விட்டார்கள் .அவைகள் யாவும் தத்துவ சித்திக் கற்பனைக் கடவுள் களாகும் .அதையும் உண்மை என்று நம்பி மக்கள் அழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .
 
உடம்பை விட்டு ''ஆன்மா'' வெளியே சென்றால் இறைவனோடு கலந்துவிடும் என்றும் , சொர்க்கம்,..நரகம் ....கைலாயம்,...வைகுண்டம் போன்ற இடங்களுக்கு சென்று விடும் என்றும், பொய்யான கற்பனைகளை மக்கள் மத்தியில்,...விஷத்தை விதைத்து விட்டார்கள்.அதனால் மக்கள் உண்மை தெரியாமல்,அலைந்து கொண்டு உள்ளார்கள். ...வள்ளலார் சொல்லுவது-- மரணம் அடைந்தால் ஆன்மா ''வேறு உடம்பு'' ...இதே உலகத்தில் எடுத்துக் கொள்ளுமே தவிர ஆன்மா இறைவனிடம் செல்லாது ...என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். மனிதன் மரணம் இல்லாமல் வாழ்ந்து ''ஒளிதேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே,இறைவனிடம் செல்ல முடியுமேத் தவிர,..வேறு எந்த வழியாலும் செல்ல முடியாது, அதற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர் வைத்து உள்ளார்.

சமய மத வாதிகளின் தன்மை எப்படிப்பட்டது என்பதை பின் வரும் பாடலில் பதிவு செய்து உள்ளார் .

அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங்கு அவர்பால்
இறங்குதலில் என் பேசுதலால் என்பயனோ நடஞ் செய்
இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

இவ்வுலகில் உள்ள அருளாளர்கள் என்று போற்றப் படுபவர்கள் ,உண்மையான அறிவை அறியாதவர்கள் என்றும் ,அவர்கள் உண்ணுவதும் உறங்குவதும் பின் மரணம் அடைவதும்,பின்பு பிறப்பு எடுப்பதுமாக உள்ளவர்கள் ,அவர்கள் எதோ ஒரு சிறிய முயற்ச்சி என்னும், பக்தி, தவம், விரதம் போன்ற செய்கைகளை செய்து மனதை அடக்கி,மனோலயம் அடைந்து, தத்துவகங்களை கண்டு பிடித்து உள்ளார்கள் ,அப்படி சிறிய முயற்ச்சி செய்ததால் , மதத் தலைமையும்,பதத் தலைமையும் ,பெற்றுக் கொண்டாகள் ,அவர்களைப் பின் பற்றுவதால் எந்த பயனும் இல்லை ,---நான் உண்மையான இறைவனுடைய புகழைப் பேசிக் கொண்டு உள்ளேன் என்கிறார் வள்ளலார்.

அந்த உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

அறிவு வந்த காலம் முதல் ,அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,---அடைந்து அறியாத அற்புதக் குணங்களையும்,---கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,---செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,--கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும் ,

இது தருணம் தொடங்கி கிடைக்கப் பெறுகின்றேன் என்று உணருகின்ற ''ஓர் சத்திய உணர்ச்சியால்,பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்,

நீவிர்களும் அவ்வாறுப் பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று,நிறைந்து, எழுந்து வெளிப்பட்ட எனது ''சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.''!

கடவுள் உள்ள இடம் !

இயற்கை உண்மை !...இயற்கைவிளக்கம் ! ..இயற்கை இன்பமும் ! மாக எங்கும் பூரணமாக இயக்கி இயங்கிக் கொண்டு உள்ளவர,''ஒருவரே''  என்பதை வள்ளலார் எப்படி விளக்கம் அளிக்கிறார் என்பதைப் பார்ப்போம் .

இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவர் என்றும்,--இயற்கையில் தானே உள்ளவராய் விளங்கு கின்றவர என்றும்,--இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,---எல்லா அண்டங் களையும் ,எல்லா உலகங்களையும்,--எல்லாப் பதங்களையும்,--எல்லாச் சத்திகளையும்,--எல்லாச் சத்த்ர்களையும்,---எல்லாக் கலைகளையும்,---எல்லாப் பொருள்களையும்,---எல்லாத் தத்துவங்களையும்,--எல்லாத் தத்துவிகளையும்,

எல்லா உயிர்களையும்,--எல்லாச் செயல்களையும்,--எல்லா இச்சைகளையும்,--எல்லா ஞானங்களையும்,--எல்லாப் பயன்களையும்,--எல்லா அனுபவங்களையும்,--மற்றும் எல்லாவற்றையும் ,--தமது திருவருள் சத்தியால் --

தோற்றுவித்தல்,...வாழ்வித்தல்,...குற்றம் நீக்குவித்தல்,...பக்குவம் வருவித்தல்,...விளக்கஞ் செய்வித்தல்,...முதலிய பெருங் கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,---எல்லாம் ஆனவர் என்றும் ---,ஒன்றும் அல்லாதவர் என்றும்,---சர்வ காருண்யர் என்றும்,---சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராயத் தமக்கு ---

ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத் தனித்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர்''என்றும்,...சத்திய அறிவால் அறியப் படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம் புறம் முதலிய எவ்விடத்தும்,நீக்கம் இன்றி நிறைந்த ''சுத்த மெய் அறிவு என்னும் ''பூரணப் பொதுவெளியில்'' அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

அவரை அறியும் வழி !

அவ்வாறு விளங்குகின்ற ''ஒருவரே'' யாகிய கடவுளை,இவ்வுலகின் இடத்தே ,ஜீவர்கள் அறிந்து ...அன்புசெய்து,..''அருளை அடைந்து,'' அழிவில்லாத சத்திய சுகப் பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் ,பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும் ,பல்வேறு மார்க்கங்களிலும் ,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து ,..அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து ,...பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி ...இறந்து இறந்து வீண் போது போகின்றார்கள் .

இனி இச் சீவர்கள் ...விரைந்து விரைந்து ,...இறந்து இறந்து,...வீண் போகாமல் ,உண்மை அறிவு,...உண்மை அன்பு, ...உண்மை இரக்கம்,..முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய்,எல்லா சமயங்களுக்கும் ,---எல்லா மதங்களுக்கும்,---எல்லா மார்க்கங்களுக்கும் ,--உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்'' பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும்,--பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் --தாமே திருவுள்ளங் கொண்டு --

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ...உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் சத்திய ஞான சபையை'' ....இங்கே {வடலூரில் }தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,'''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க, யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் ''என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,--

''அருட்பெருஞ்ஜோதியிராய்''...வீற்று இருக்கின்றார் ,ஆகலின் அறிவித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெருவீர்களாகில் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவது மன்றி, இறந்தவர் உயிர் பெற்று எழுதல் ,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்,முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள்.

என்று 1874,..ஆம் ஆண்டு ஸ்ரீ முக வருடம் ,தைமாதம் 19,ஆம் நாள் --வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு அடையும் நாளில் --திருக்காப்பு இட்டுக் கொண்ட தினம் வெளியிடப்பட்ட ''அற்புதப் பத்திரிகை ''என்னும் தலைப்பில் உலக மக்களுக்காக பதிவு செய்துள்ளார்.

வடலூரில் உள்ள... ''சத்திய ஞானசபையில் ''...உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்த இடமாகும்.எதற்க்காக அங்கு வந்து அமர்ந்தார் ?..திருஅருட் பிரகாச வள்ளலாரை, அழைத்து செல்வதற்காக வந்தார் .அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' ...அவர் ...வந்து அமர்ந்த இடம் என்பதால் வடலூர் ''சத்திய ஞானசபை' பெருமையும்,புகழும் ,ஆற்றலும் ,அருள்சக்தியும் வாய்ந்த இடமாகும்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து ஆண்டவர் ,----அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் -- ''அருள் உருவம் ''.... என்னும் ,...''அருட்பேரொளி ''என்னும் ஒளி உடம்பு என்னும், ஒளி உருவத்தோடு வந்த, ....''ஒரே இடம்தான் வடலூர் சத்திய ஞான சபையாகும்'' ,...இறைவன் வந்து அமர்ந்த ...''பொது இடமாகும்''.அதனால்தான் அந்த இடத்திற்கு..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை "....என்று பெயர வைத்தார் வள்ளலார் .உலக மக்கள் அனைவரும் வந்து வழிபடும் பொதுவான ''சத்திய ஞான சபையாகும் '' அங்கே கடவுள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் ..

மேலும் அந்த உண்மைக் கடவுள் எங்கு இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை... ''திருஅருட்பா'' ...பாடல் வாயிலாக பதிவு செய்துள்ளார் .

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி மாலண்டம் அரன் அண்டம்
உற்ற கோடாகோடியே
திருகலறு பலகோடி யீசன் அண்டம்
சதாசிவ அண்டம் மெண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ்
சீரண்டம் என் புகலுவேன்
உருவுறு இவ்வண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த் தந்தையே
மணிமன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜ பதியே !

பலகோடி பெயர் கொண்ட,..பல கோடி அண்டங்களையும் தன் சுதந்திரத்தால் இயக்கிக் கொண்டும்,...இயங்கிக் கொண்டும் ...இருக்கும் இடம்.. ''அருள் பெருவெளி ''...என்கிறார் அதன் நடுவில்...நடு நின்று, ...அசைந்து (நடனம் ) செயலாற்றிக் கொண்டு இருக்கும் இடம் ''அருள் பெரு வெளியாகும்....அதற்கு இயற்கை உண்மை என்று பெயர் வைத்துள்ளார்.... அங்கிருந்து அண்டங்களை எல்லாம் ''அருள் என்னும் கருவியைக் கொண்டு '' ...இயக்கும் ''பெருங் கருணை பேரொளிதான்''..இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்துள்ளார் ....எல்லா அண்டங்களையும் ..அண்டங்களில் உள்ள எல்லா உயிர்களையும் இன்பம் அடையச் செய்வித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டு வாழ வைப்பதே,  ''இயற்கை இன்பம்'' என்று பெயர் வைத்துள்ளார் .

இயற்கை உண்மை ...இயற்கை விளக்கம் ...இயற்கை இன்பம் ..என்ற இயக்கத்தை ..இயற்கையாக இயக்கிக் கொண்டு இருப்பவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி ...தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ''என்னும் உண்மைக் கடவுளாகும் ..அவற்றைக் கண்டு அறிந்தவர், ''வள்ளலார் ஒருவர்தான்'' .--அந்த உண்மைக் கடவுள் வள்ளலாரை  தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டு ''அழியாப் பெருவாழ்வு'' என்னும்...''மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப பெருவாழ்வு  வாழும் வரம் தந்து,'' அவரது மணிமன்றில்,''ஆண்டவர் இருக்கும் சிம்மாதனத்தில்,'' தன்னையும் அமர வைத்த ஒரே ஒரு தெய்வமே,! உண்மையான மெய்த் தந்தையே ! என்று போற்றி புகழ்கின்றார் வள்ளலார் ! அதனால் தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்கிறார் .

கடவுள் எங்கு உள்ளார் என்ற உண்மையைத் தெளிவு படுத்தியும்,தெரியப்படுத்தியும்,நாம் உண்மைக் கடவுளைப் பற்றி,...அறிந்து ,...புரிந்து, ...தெரிந்து கொள்ளாமல் ,இன்னும் கண்மூடித் தனமாக செயல் பட்டுக் கொண்டு உள்ளோம்.

உண்மைக் கடவுள் !

வள்ளல் பெருமான் காட்டிய கடவுள் ! ..சமய மதவாதிகள் காட்டிய கடவுள்களில் ஒருவர் அல்லர் ! சமய மதவாதிகள் சொல்லும் ஒளிக் கடவுளும்  அல்ல ! அவர்கள் கண்ட ஒளி வேறு ! வள்ளல்பெருமான் கண்ட ''உண்மையான ஒளிக் கடவுள்'' வேறு ! என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அருட்பெருஞ்சோதி என்னும் உண்மைக் கடவுள் , கருணை நிறைந்த,அருள் ஒளியாகும் ! .அக்கடவுள் எல்லா அண்டங்களுக்கும் அருள் ஒளி வழங்கும் கடவுளாகும் ! .அளவுகடந்த பிரகாசம் உள்ளது ! ,சுடும் தன்மை இல்லாதது ! என்றும் நிலைப் பெற்றது ! எதற்கும் ஒப்பிட முடியாதது !,.. எதற்கும் ஈடு இணை இல்லாத ''தனிப்பெரும்கருணை'' என்னும் தகுதி வாய்ந்தது ! நினைப்பு ,மறைப்பு அற்றது ! அவை அகமாக இருந்து,அனகமாக விரிந்து கொண்டே இருக்கும் ! எங்கும் பூரணமாக விளங்க விளக்கிக் கொண்டுள்ளது ! அந்த மாபெரும் கருணைக் கடவுளிடம் இருந்து ,அருளைப் பெற்றால்தான் மரணத்தை வெல்ல முடியும்.! .அவற்றின் அருளைப் பெற்றவர்களால் தான் ''மெய்ப் பொருள்'' என்னும் இயற்கை உண்மைக் கடவுளைக் காணமுடியும் !  

வள்ளல் பெருமான் காட்டிய கடவுள் ..சமயமத வாதிகள் காட்டிய கற்பனைக் கடவுள்கள் அல்ல ! கணவன் மனைவி ..குடும்பம் குழைந்தைகள் பெற்று ...இன்பம் ..துன்பம் அடையும்.... குடும்பம் நடத்தும் கடவுள் அல்ல! என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்களை பார்ப்போம் .

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் ..குணங்கள்
ஏதும் இலார் ..தத்துவங்கள் ஏதும் இலார்... மற்றோர்
செயற்கை இல்லார்.. பிறப்பு இல்லார் ...இறப்பு இல்லார்..யாதும்
திரிபு இல்லார் ...களங்கம் இல்லார் ...தீமை ஒன்றும் இல்லார்
வியப்புற வேண்டுதல் இல்லார் ...வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி..எங்கும் விளங்கி இன்பமயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

என்றும் ..மேலும்

ஒன்றும் அலார் ..இரண்டுமலார்..ஒன்றும் இரண்டுமானார்
உருவமலார் அருவுமலார் உருஅருவும் மானார்
அன்றும் உளார் ..இன்றும் முளார்..என்றும் உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் ''அருட்பெருஞ்ஜோதியினார்''
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார்
யாவும் மிலார் ..யாவும் உளார்..யாவுமலார் யாவும்
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

கடவுள் உண்டு என்பதையும், அவர் எப்படி உள்ளார் என்பதையும், ,மிகவும் எளிய தமிழில்,அழுத்தமாக உறுதிப் படுத்தி உள்ளார்      

கடவுள் இல்லை என்பது ஒரு கூட்டம்,அவர்களுக்கு வள்ளலார் சொல்லும் பதில் வருமாறு ;--.

அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம்
அன்போடு துதித்த வருக் கானது சொல்லாட்டம்
வம்பு சொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம்
வந்த தலை யாட்டமின்றி வந்தது பல்லாட்டம்

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு
சீர்த்தி பெரும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு !

உண்மையை அறிந்து கொள்ளாத,இயலாத அறிவை,  பகுத்தறிவு என்கிறார்கள். ,அவர்களுடைய நாக்கு முடை நாக்கு என்கிறார் ,நாக்கு இல்லாத ஊமையர்கள் என்கிறார் .அவர்கள் உண்ணுவது நாறிய பிண்ணாக்கு என்கிறார் .நாறிய பிண்ணாக்கு என்றால் ''மலம்'' என்பதாகும். அவர்கள் நாற்றம் அடித்த மலம் உண்பவருக்கு சமமாகும் என்கிறார் .இதை நான் சொல்லவில்லை அம்பலவர் என்னும் ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்னும் ஆண்டவர் சொன்ன வாக்கு என்கிறார் .அவை செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு என்கிறார் .

கடவுள் பல உண்டு என்பதோ பைத்திய காரத்தனம்!
கடவுள் இல்லை என்பதோ ஏமாற்று வேலை !
கடவுள் ஒருவர் என்பதே உண்மை அறிவு !

இனிமேலும்..பொய்யான கற்பனைக் கதைகள், எதையும் நம்ப வேண்டாம் ,படிக்க வேண்டாம், நேரத்தையும் காலத்தையும்,வீணாக்க வேண்டாம்  என்பதை கண்டிப்புடன் பதிவு செய்துள்ள பாடல் ;--

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட்கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்ந் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !

என்பதை நம் அறிவில் பதியும்படி தெரியப் படுத்தி உள்ளார் .நாம் கண்டது,..கேட்டது,...கற்றது ,...களித்தது ...உண்டது ....உட்கொண்டது எல்லாமே பொய்யே என்கிறார் .நாம் உண்டது மலம் என்கிறார் ,உலகில் உள்ள பொருள்கள் யாவும் மலத்திற்கு சமமானது என்கிறார்.ஆதலால் உண்மை அறிந்து கொள்ள முடியவில்லை,...இருந்தாலும் பரவாயில்லை-- இனி மேலாவது சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மைப் பொது நெறியைக் கடைபிடித்து உண்மையை அறிந்து,மெய்ப் பொருளான உண்மைக் கடவுளை அறிந்து அன்பு செய்து ''அருள் என்னும் அமுதத்தை ''அருந்தி
{உட் கொண்டு }என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழுங்கள் என்கிறார் வள்ளலார்.

''திருஅருட்பா'' என்னும் அருள்நூல் எனக்கு நல்வழி காட்டியது ! அறிவுக் கண்ணைத் திறந்தது !

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரியவர் முலமாக --,வள்ளலார் எழுதிய ,---எழுதியது போல் வாழ்ந்து காட்டிய ''திருஅருட்பா ''என்னும் அருள் நூல் கிடைத்தது.அந்த நூல்தான் என்னுடைய அறிவுக் கண்ணை திறந்தது ! இன்று வரைக்கும் யாரும் சொல்லாத,..காணாத,...எழுதாத மாபெரும், உலக உண்மைகளையும்,   அவற்றை இயக்கம் கடவுள் உண்மைகளையும் ஆன்மாக்களின் உண்மைகளையும் ..உயிர்களின் உண்மைகளையும் இயற்கையின் இரகசியங்களையும் ,பல கோடி அண்டங்களையும்,--- ,படைத்து,...காத்து, ...இயக்கிக் கொண்டு இருக்கும் ,அந்த மாபெரும் உண்மைக் கடவுளை ,இந்த உலக மக்களுக்கு ஒளிவு மறைவு இன்றி வெளிப் படுத்திக் காட்டி உள்ளார் ! என்பதை அறிந்தேன் .

உலகில் உள்ள செய்திகள் அனைத்தும் ''திருஅருட்பாவில்'' உள்ளதைக் கண்டு உணர்ந்தேன்,திரு அருட்பாவில் உள்ளது... வேறு எதிலும் [எந்த நூலிலும்} இல்லை என்பதை அறிந்தேன் ,மற்ற, அனைத்து நூல்களிலும் உள்ளது திருஅருட்பாவில் உள்ளன என்பதையும் அறிந்தேன். திரு அருட்பா என்னும் அருள் நூல் இறைவனால் படைக்கப் பட்டது... என்பதை அறிவு தெளிவு பட அறிந்து கொண்டேன் ,'''இறைவனே'''-- வள்ளலார் உருவம் தாங்கி,இந்த உலகிற்கு வந்து உண்மைகளை போதித்து உள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன் .

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல், ....என்னுடைய அறிவை மேலும் பல மடங்கு மேல் நிலைக்கு கொண்டு சென்றது .அந்தப் பாடலைப் பாருங்கள் .

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான் உரைத்த மணிமன்றில் நடம் புரியும் எம்பெருமான்
வரவெதிர்க் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேனுரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர்
யான் அடையும் சுகத்தனை நீர்தான் அடைதல் குறித்தே !

உலகில் உள்ள எல்லா உயிர்களும் ,அறிவு படைத்த எல்லா மனித ஜீவர்களும் உண்மையை அறிந்து கொண்டு மேல் நிலைக்கு வரவேண்டும் என்பதால் ,--அனைத்து ஆன்மாக்களையும், உயிர்களையும் படைத்த, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து சொல்லியதை ,தெளிவுபட அறிந்து கொண்டேன்.    

மனிதன் மனிதனாக வாழ்ந்து ,இறைவனுடைய அருளைப் பெற்று பேரின்ப பெருவாழ்வில் எப்படி வாழலாம் என்பதை ''திருஅருட்பா ''வாயிலாக அறிந்து கொண்டேன்.அவர் காட்டிய உண்மையான பாதையில் வாழ்ந்து கொண்டு வருகிறேன்.நான் மட்டும் அல்ல! என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வள்ளலார் காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ....தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை நல் வழிக்கு கொண்டு வந்தால்தான், மற்றவர்களை நல்வழிக்கு கொண்டு வரமுடியும் என்பதை உணர்ந்தேன் ....என்னுடைய எண்ணங்களை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் பூர்த்தி செய்து வைத்துள்ளார் என்பதை ,நினைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகிறேன்.

எனக்குத் தெரிந்த உண்மைகளை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்ற பேராசைப் பற்றியே இதை எழுதுகிறேன் .நான் எழுதுவது எல்லாம் என்னுடைய சொந்த கருத்து எதுவும் இல்லை.இச்சிறியவனுக்கு எதுவும் தெரியாது .--அதிகம் படித்தவன் அல்ல ! எனக்கு தெரிந்து உள்ளவைகள் அனைத்தும் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் உள்ளது தான், என்னுடைய அறிவுக்குத் தெரிந்ததை,...உணர்ந்ததை..அறிந்ததை ..மகிழ்ந்ததை உங்கள் முன் வைக்கிறேன்.

உண்மைக் கடவுளைஅறிந்து கொள்வது எப்படி ?

நாம் உண்மைக் கடவுளை தெரிந்து கொளவதற்கு,முக்கிய தடையாக இருப்பவை,எவை என்றால்? --நாம் இதுவரை பற்று வைத்துக் கொண்டு இருந்த சமயங்கள்,...மதங்கள்,...மார்க்கங்கள்,...சாத்திரங்கள்,...சாதிப் பற்றுதல்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,..மற்றும் வருணம் ஆசிரம் முதலிய உலக ஆசாரப் பற்றுதல்களும், மொழி,..இனம்...நாடு...போன்ற  பற்றுதல்களும் ...நம்முடைய ஆன்மாவில் பதிவாகி உள்ளது ,அதைத்தான் வள்ளலார் மாயா திரைகள் என்கிறார்... அந்த திரைகளை நீக்கினால் தான் உண்மையான..''பெய்ப்பொருளை ''...அறியமுடியும் ' --நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் ,--நம்முடைய இந்திரியங்கள்,...கரணங்கள்,...ஜீவன் வழியாக சென்று ''ஆன்மாவில்'' பதிவாகிக் கொண்டே இருக்கும்.அன்மாவில் உள்ள பதிவுகளை அகற்றினால் தான்,முழுமையான உண்மை அறிவு விளங்கும் ,

எல்லா பற்றுதல் களையும்,ஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,உண்மையைத் தேடினால் உண்மை கிடைக்காது ..தெரியாது,---விளங்காது . ஒன்றை விட்டால் தான் ஒன்றை பிடிக்க முடியும். ,உலக பற்று உள்ள இடத்தில் உண்மை விளங்காது ...பார்க்க முடியாது,..அறிந்து கொள்ள முடியாது ...ஆன்ம அறிவால் அறிய முடியாது. பற்றிய பற்று அனைத்தும் ,பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்கிறார் .--எதையும் விடாமல் பற்று வைத்து இருந்தவர்கள் என்ன லாபத்தை அடைந்து உள்ளார்கள் .--இறுதியில் மரணம் வருகின்ற போது,அனைத்தையும் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.என்பதை, ஒவ்வொரு ஜீவர்களும் அறிந்து கொண்டுதான் உள்ளார்கள்.---

இருந்தாலும் அவர்களால் எதையும் விட முடிவதில்லை.ஏன்?அதுதான் ஆன்மாவில் பற்றியுள்ள பற்றுகள்.ஒரு வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றினால்தான் அந்த வீடு சுத்தமாக இருக்கும். அதைப் போல் தான் நம்முடைய ஆன்மாவில் பதிவாகி இருக்கும் அசுத்த மாயா குப்பைகளை அகற்ற வேண்டும்.

அதற்கு வள்ளலார் சொல்லும் பதில் !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேல் ஏற்றி இருக்கின்றார் ,இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் தான் இவை !,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர் களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.--இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது பெரிய லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக் கொள்ள வில்லை ,

நான்அப்படி அந்த சமய, மதங்களில் வைத்திருந்த லஷியம் என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டது என்றாலோ ,--அந்த லஷியம் என்னை தூக்கி விடவில்லை,என்னை இந்த இடத்திற்கு தூக்கி விட்டது யாதெனில்,--அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதை தெரிவித்தார் என்பதை பல பாடல்களில் தெரியப்படுத்தி உள்ளேன்,மேலும் அந்த உண்மைக்கடவுள் ,தெரிவித்தது,என்னவென்றால் ,''உண்மைப் பெருநெறி ஒழுக்கம்''யாதெனில்,

''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக ''...என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் தயவு,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என்கிறார்.அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்,..தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கிறது.அது அந்த ஒருமையினால் தான் வந்தது,நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் உங்களுக்கும்,எனக்கு கிடைத்தது போல் அனைத்து நன்மைகளும்  கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.

ஒருமை என்பது என்ன ?

கடவுள் எல்லா ஜீவன்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிவதே ஒருமை என்பதாகும்.அதற்குப் பெயர் ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதாகும்.

கடவுள் எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக உள்ளார் ,அவரைக் காண்பது எப்படி ? மனிதர்களாக பிறந்தவர்கள் மட்டும் தான் கடவுளைக் காண முடியும்.!என்பது இயற்கையின் நியதி (சட்டம் )..அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் ?.மனிதர்களால் உருவாக்கிய தத்துவங்கள் என்னும் ஜடமான  உருவங்களை வழிபாடு செயவதாலோ ! ,அவைகளுக்கு அபிஷேகம் ,ஆராதனை செய்து வழிபடுவதாலோ ! கடவுள் பெயரால் வாயில்லாத உயிர்களை பலியிடுவதாலோ, உயிர்பலிக் கொடுத்து புலால் உண்பதாலோ ,கடவுளை நினைத்து ,..தவம் ...தியானம்,..யோகம ,செய்வதாலோ !காடு ,,மலை ..குகைகளில் சென்று தவம் செய்வதாலோ ! இறைவனைக் கண்டு கொள்ள முடியாது ! மேலும் பொருள்களைக் கொடுத்து கடவுளை வசப்படுத்தவோ முடியாது.

கடவுளைப் பற்றிப் போதிக்கும் அருளாலர்களை வணங்க்குவதாலோ!,...பொம்மைக் கடவுள்களை வணங்கு வதாலோ !பொய்யான ஞானிகளை வணங்க்குவதாலோ !..மற்றும் புற ஆசார சங்கற்ப விகற்ப செய்கைகளாலோ! ...மனிதர்களிடம் மனிதர் குரு உபதேசம் பெறுவதாலோ !கடவுளைக் காணமுடியாது.!-- கடவுளைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதாலோ கடவுளைக் காண முடியாது !

நாம் பல கோடி பிறவிகள் எடுத்து,பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் ...இந்த உயர்ந்த பிறவியான மனித பிறப்பு கிடைத்துள்ளது...இந்த உலகத்தில் பல பல பிறவிகள் எடுத்து, உருவம் தாங்கி வந்ததில் இருந்து,... பல,பல உயிர்களின் உதவியால் ...துணையால்,..அன்பால் ..தயவால் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை,..நாம் ஒவ்வொருவரும், உணர்ந்து கொள்ள வேண்டும் .ஐந்து பூதங்களின் சேர்க்கையால் பல உடம்பு எடுத்து, பிறந்து பிறந்து,...இறந்து இறந்து ,...இறுதியாக இந்த மனிதப் பிறவிக் கிடைத்து உள்ளது , அப்படி கிடைத்த வந்த இந்த மனிதப் பிறவியை அப்படியே, கடவுள் ஏற்றுக் கொள்வாரா ?என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

நாம் பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து வந்த போது,..பல உயிர்களின் உதவியால்,...செயல்களால, இந்த மனித தேகம் கிடைத்து உள்ளது .அந்த உதவி செய்த உயிர் வர்ககங்களுக்கு, கைம்மாறு என்ன செய்தோம் .என்றால் எதுவும் செய்யவில்லை .நாம் தந்தை தாய் வழியாக வந்துள்ளோம் .அவர்கள் நம்மை பாலூட்டி,தாலாட்டி,உணவு கொடுத்து ,உடை கொடுத்து ,கல்வி கொடுத்து ,வேலை கொடுத்து ,திருமணம் செய்து வைத்து நம்மை உயர்ந்தோனாக்கி,வாழ வழி வகுத்து தந்துள்ளார்கள்.அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்தோம்.

மேலும் பல உயிர்களின் உதவியால் தொடர்பால் செயலால்...உணவு ...உடை...வண்டி ..வாகனம்...பணம் ..பெண் ...வேலை.. வீடு...போன்ற பல பேருடைய உதவியால் வாழ்ந்து கொண்டு வந்து இருக்கிறோம் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்து இருக்கிறோம்.இதனுடைய கணக்கு வழக்குகள் நமக்குத் தெரியுமா ?என்றால் தெரியாது ! இவை எல்லாம் நாம் மற்ற உயிர்களிடம் வாங்கிய கடனாகும் .இதை எல்லாம் நாம் திருப்புத் தர வேண்டாமா ?கடன் இல்லாமல் வாழ்ந்தால் தானே ! மகிழ்ச்சியான வாழ்க்கை ! கடன் இல்லாமல் வாழ்வதற்கும்,...வாங்கிய கடனை திருப்பி செலுத்து வதற்கும் ...வைத்த பெயர்தான் ''ஜீவ காருண்யம் ''என்பதாகும்.

ஜீவ காருண்யம் என்பது !வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாகும்.இதைத்தான் வள்ளலார் ''ஜீவ காருண்யமே மோட்ஷ வீட்டின் திறவு கோல் ''என்றார் ....ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்! .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் !...இதுவே கடவுளை காணும் துவாரம் என்றார் !வேறு எந்த வழியாலும் கடவுளைக் காண இயலாது என்றார் !
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல !

மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை யொரு சிறிதெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறு எனக்கே நின்னருள் வலத்தால்
இசைத்த போது இசைத்த போதெல்லாம்
நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல்
வரந்தான் நல்குதல் எனக்கு இச்சைஎந்தாய் !

உலகத்தில் உள்ள உயிர்கள் வருத்தமுடன் வாழுகின்றதைப் பார்த்து ,நாம் மட்டும் மகிழ்ச்சியுடன் வாழ்வது நியாயமா ? அவைகளும் நம்முடைய சகோதர உரிமை உடைய ஜீவ தேகமாயிற்றே! எவரும் உபகாரம் செய்யாத தால் தானே அந்த உயிர்கள் துன்பப்டுகிறது ,...இதை நான் கண்களினால் பார்த்தும் ,பிறர் சொல்லிக் காதுகளில் கேட்டும் ....ஒருகணமும் என்னால் சகிக்க முடியாது ,சகிக்க மாட்டேன் ....ஆதலால் இத்துன்பத்தைப் போக்க, எனக்கு அருளும்,பொருளும் அனுமதியும் வழங்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார் .

என்னுடைய ஆன்மநேய சகோதர உடன் பிறப்புகளின் துன்பத்தைப் போக்குவது தவிர ,..வேறு எதிலும் எனக்கு இச்சை{ஆசை } இல்லை .அதற்குண்டான --,அந்த துன்பத்தைப் போக்குவதற்கு உண்டான,---தவிர்க்கப் படுவதற்குண்டான--- நல்ல வரம் எனக்கு தந்து அருள வேண்டும் .--இதுவே எனது இச்சையாகும் {ஆசையாகும் }என்கிறார் நமது வள்ளல் பெருமானார்.... .என்னே ! அவருடைய பெருங்கருணை !...இந்த உலகத்தில் தோன்றிய எந்த ஒரு ஆன்மீக அருளார்களுக்கும்,இவ்வளவு கருணை உள்ளம் இருந்தது உண்டா ? ...என்பதை சிந்தித்து ...உணர்ந்து பார்க்க வேண்டும்.என்பதை பணிவோடு பதிவு செய்கிறேன்.

வள்ளல் பெருமான் அவர்கள் .எவரிடத்திலும் எந்த உதவியும் பெற்றுக் கொண்டதில்லை .. எந்த உதவியையும் நாடியதில்லை ....இருந்தாலும் அவர்கள்,உலகில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற கருணை உள்ளம் கொண்டவர் ....எவரிடமும் உதவி பெறாதவர், மற்ற உயிர்களுக்கு உதவி செய்யும் போது ...அனைவருடைய உதவியும் பெற்று வாழ்ந்து கொண்டு உள்ள நாம் ..நம்முடைய சகோதர உயிர்கள் துன்பப் படும் போது, உபகாரம் செய்வது நம்முடைய கடமையாக ..உரிமையாக ..உயிர் இரக்கம் கொண்டு செயல்பட வேண்டும் இல்லையா ?....அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும்...அதுவே கடவுள் வழிபாடாகும் .  

உயிர் இரக்கம் !

நாம் என்ன செய்ய வேண்டும் உலகில் உள்ள உயிர்களுக்கு உயிர் இரக்கம் என்னும் உபகாரம் செய்ய வேண்டும் ,அன்பு,தயவு,கருணை என்னும் செயல்வடிவில் ---- உயிர்களுக்கு வரும் இடையூறுகளை தவிர்க்க வேண்டும் ,அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும் .ஜீவ காருண்யம் என்றால் என்ன ?அனைவருக்கும் பொதுவாக உண்டாகுகின்ற ,பசி ,பிணி,தாகம் .இச்சை எளிமை,பயம் ,கொலை ,துன்பம் போன்ற துயரங்களை,உண்மை உணர்வோடு, உணர்ந்து,... போக்கு கின்றவர்கள் கடவுளைக் காண முடியும் ,அவர்களை கடவுள் அன்புடன் ஆசீர்வாதம் செய்து ஏற்றுக் கொள்வார்,

ஜீவகாருண்யம் விளங்கும் போது ;அறிவும் அன்பும் உடனாக விளங்கும் ;அதனால் உபகார சக்தி விளங்கும் ; அந்த உபகார சக்தியால் ,எல்லா நன்மைகளும் தோன்றும்,

ஜீவகாருண்யம் மறையும் போது ;--அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்;அதனால்,உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்,

ஆகலின் புண்ணியம் என்பது ஜீவகாருண்யம் ஒன்றே என்றும் ,பாவம் என்பது  ஜீவகாருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.

ஆதலால் ஜீவகாருண்ய ஒழுக்கமே ''சன்மார்க்கம்'' என்பதை அறிய வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்.அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும்;--இவ்விளக்கத்தையும்--இன்பத்தையும் பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே ! மேற் குறித்த பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும்,!;அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் ! சத்தியமாக அறிய வேண்டும்.

கடவுள் எங்கு உள்ளார் ?அவர் யார் ?என்பதை அறிந்து கொள்ள, இதுவே உண்மையான சிறந்த வழியாகும் .

சன்மார்க்க அன்பர்கள் பசியைப் போக்கும் பணிகளை மட்டும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ,அதனால் மட்டும் கடவுளைக் காணமுடியாது .அது ஆரம்ப நிலையாகும் , உலகில் உள்ள வாயில்லாத உயிர்கள், கொலை செய்வதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் ...,புலால் உண்பவர்களுக்கு,உண்மையை எடுத்துச் சொல்லி...அவர்களை சன்மார்க்க சங்கத்தில் சேர்க்க வேண்டும் ., அதற்கு மேல் நம்முடைய உடம்பையும் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.அதற்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானதாகும் .இந்திரிய ஒழுக்கம்,...கரண ஒழுக்கம்,...ஜீவ ஒழுக்கம்.... ஆன்ம ஒழுக்கம் ....என்னும் நான்கு ஒழுக்கங்களையும் வள்ளலார் சொன்னபடி கடைபிடிக்க வேண்டும் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

எத்துணையும் பேதம் முறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி யுள்ளே
ஒத்து உரிமை யுடைவராய் யுவக்கின்றார்
யாவர் அவர் உளம்தான் சுத்த
சித்துருவாய் யெம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்த தாலோ !

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி ஒருமையுடன் வாழ்கின்றவர் எவரோ ! அவரிடத்தில் கடவுள் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை தெரிந்தேன் அவர்களிடம் சென்று அவர் இட்ட பணிகளை செய்திட என்னுடைய சிந்தை மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார் .-சாதி,..சமயம் ..மதம் ..இனம் ...மொழி ...நாடு ..என்ற எந்த விதமான பேதமும் இல்லாமல் உயிர்களுக்கு உபகாரம் செய்பவர் எவரோ !அவரே ! இறைவனை தன வசமாக வரவழைக்கும் ''வித்தகர்'' என்பாதால் .அவரை நான் பணிகின்றேன் என்கிறார்.வள்ளலார்.

அவர் யார்? அவர்தான் ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' என்பவராகும்.! கடவுள் அவருடைய உடம்பில்,உயிரில்,ஆன்மாவில்,அருள் ஒளியாக பதிவாகி,நீங்காது நிலைப் பெற்று வாழ்ந்து கொண்டு உள்ளார் !அவர் காட்டிய கொள்கைகளை ,அவர் வாழ்ந்த வாழ்க்கையை,... பின் பற்றி வாழ்ந்தால் கடவுளைக் கட்டாயம் காணலாம்.கடவுளின் தயவு என்னும் கருணையாலே,...பூரண அருளைப் பெற்று வாழ்ந்து மரணத்தை வெல்லலாம்,பேரின்ப பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறலாம் ,கடவுள் நிலை அறிந்து அம்மய மாகலாம் .என்பது உண்மை !

உண்மைக் கடவுள் பிரகாசம் ,அண்டத்திலும் ,பிண்டத்திலும் காரிய ,காரணமாக எப்படி ?விளங்குகிறது என்பதை பார்ப்போம் .

அகம் ,அகப்புறம் ,புறம் ,புறப்புறம் என்கின்ற நான்கு இடத்திலும் ,கடவுள் பிரகாசம் உள்ளது .அதனில் காரியத்தால் உள்ள விபரம் .;---

பிண்டத்தில் (உடம்பில் )அகம் என்பது ஆன்மா ! ஒரு பொருளினது உண்மையை அறிதல் .அதற்கு ஆன்ம அறிவு என்பதாகும் .

பிண்டத்தில் அகப்புறம் என்பது ஜீவன் ! (உயிர் )ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை அறிதல்,அதற்கு ஜீவ அறிவு என்பதாகும் .

பிண்டத்தில் புறம் என்பது கரணம் என்பது மனம் (கரணங்களில் முதன்மையானது )ஒரு வஸ்துவின் நாம ரூபத்தையும்,... குண குற்றங்களையும் ,விசாரித்து அறிதல் ,இதற்கு காரணமாகிய மன அறிவு என்பதாகும் .

பிண்டத்தில் புறப்புறம் என்பது கண் முதலிய இந்திரியங்களாகும் .இதற்கு இந்திரிய அறிவு என்பதாகும் .ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் ,அந்தப் பொருளைக் கண்கள் மூலமாக காணுதல் .இதற்கு இந்திரிய காட்சி ,..இந்திரிய அறிவு என்பதாகும் .

அதேபோல் ஆன்மக்காட்சி,...ஜீவக்காட்சி,...கரணக்காட்சி ,..இந்திரிய காட்சி என்பதாகும் .

அண்டத்தில் உள்ளது !

அண்டத்தில் அகம் என்பது ,அக்கினி ,...அகப்புறம் என்பது சூரியன் ....புறம் என்பது சந்திரன ,....புறப்புறம் என்பது நட்சத்திரங்கள் .

ஆகவே அண்டத்தில் நான்கு இடத்திலும் ,..பிண்டத்தில் நான்கு இடத்திலும் ஆக எட்டு இடத்திலும் ...''கடவுள் பிரகாசம் ''...காரியத்தால் உள்ளது.

காரணத்தால் உள்ள இடம் ;--பிண்டத்தில் புருவமத்தி என்னும் இடத்தில் உள்ளது ...அண்டத்தில் பரமாகாயம் என்னும் இடத்தில் உள்ளது .

காரிய காரணமாக உள்ள இடம் நான்கு ;---பிண்டத்தில் ..விந்து ,..நாதம் மாக செயல்படுகிறது .....அண்டத்தில் ;---மின்னல் ,..இடி ...சர்வ யோனியிடத்தும்,செயல்படுகிறது .

விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும் ,நாத விளக்கமாகிய இடியிடத்தும் ;--இதல்லாது '''பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி''' என்றும்..''ஜோதியுள் ஜோதி யாயும் '' கடவுளின் உண்மை வெளிப் படுத்திக் கொண்டு உள்ளது .    

 ''கடவுள் ஒருவரே'' என்ற உண்மையும் ,கடவுள் ஒளியாக உள்ளார் என்ற உண்மையும்,அவருடைய குழந்தைகள் தான் நாம் என்பதையும் , மற்றும்  அனைத்து ஜீவன்களும்,இறைவனுடைய குழைந்தைகள் தான், என்ற உண்மை உணர்வும் ,அறிவும் விளங்க வேண்டும் ...அறிவு விளக்கத்தால் தான்.... ...ஒவ்வொரு உடம்பிலும் உயிரிலும் ''உள் ஒளியாக'' இருப்பதுவே !-- அதாவது {ஆன்மா }ஒளியாக இருப்பதுவே கடவுளாகும் .அதற்கு பெயர் ஜீவ ஆன்மாவாகும் ,

ஜீவனில் உள்ள ''உள் ஒளியைப் பார்த்தால்'' கடவுளின் ''பரமானமா'' என்னும்,அருள் ஒளி ..தானேத் தெரியும் .அப்போது இரண்டாக இருந்த ஒளி ஒன்றாகத் தெரியும் அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மய மாதல் என்பதாகும்.இதுவே கடவுளைக் காணும் எளிய வழியாகும் .ஆன்ம ஒழுக்கமும், ஜீவ காருண்யமும்,பர உபகாரமும் ,சத் விசாரமும் இருந்தால் கடவுளைக் காண முடியும் .இதுவே உண்மை,உண்மை,உண்மை,... சத்தியம்,சத்தியம்,சத்தியம்,

முயற்சி செய்தால் ''சுத்த சன்மார்க்கம் '' என்னும் ''அருள் ஞான,ஆன்மீக வழி'' கிடைக்கும் அருள் சுரக்கும் அதன் வழியாக ஆனந்தம் பெருகும். ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்ற மடையும் .இதுவே வள்ளலார் காட்டிய,சுத்த சன்மார்க்கம் என்னும் ஞான மார்க்கமாகும் --திருநெறி ஒன்றே சுத்த சன்மார்க்கப் பொது நெறியாகும்.

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
சித்தி எல்லாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே!

மேலே கண்ட பாடலில் உள்ளபடி ;--பொய்யான சமயம் ,மதம்,ஒன்றையும் பற்று வைக்காமல் ,நம்முடைய உடம்பில் இறைவன் இருக்கும் இடமான தலைப் பாகத்தில் (ஆன்மா இயங்கும் இடம் ) அதாவது புருவ மத்தியில் ,சிற்சபை நடத்தைத் தெரிந்து இடைவிடாது மனதை அங்கு பதிய வைத்து ....துதித்துக் கொண்டு இருங்கள்---,உங்களுக்கு எல்லாச் சித்திகளும், இத்தினமே சத்தியம் கிடைக்கும் என்கிறார்....இதைவிட தெளிவாக வேறு எப்படி சொல்ல முடியும் ,என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

கடவுள் உள்ள இடம்; சிற்சபை என்னும் பீடத்தில் ,உள் ஒளியாக உள்ளார் என்பதை விளக்க .அதன் விளக்கமாக காட்டப் பட்டு உள்ளதுதான்,... வடலூரில் உள்ள ''சத்திய ஞான'' சபையாகும் .அங்கே ''கடவுள் ஒளியாக உள்ளார்''என்பதைக் குறிக்கும் வகையில், ..திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது .''சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்,சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்''.என்பார் ''சிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனது ஆச்சு ..தேவர்களும் மூவர்களும் பேசுவது எனது பேச்சு '' என்றும் .'''அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு'' என்று ஆனந்த களிப்பு கொண்டு நம்மை எல்லாம் அழைக்கின்றார் வள்ளல் பெருமான அவர்கள் ..

வடலுருக்கு வாருங்கள் !ஜோதியின் சுடரைப் பாருங்கள் ! அருளைப் பெறுங்கள் !ஆனந்தமாக வாழுங்கள் .

அன்புடன் -ஆன்மநேயன்.கதிர்வேலு.

மேலும் பூக்கும்;---

வெள்ளி, 11 மே, 2012

கருணைக் காட்டும் கடவுள் !

கருணைக் காட்டும் கடவுள் !


நாம் பலதரப்பட்ட துன்பம் ,துயரம் அச்சம், பிணி,பயம், போன்ற துயரங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .உடல் ரீதியான துன்பம் ஒருபக்கம்,பொருள் ரீதியான துன்பம் மறு பக்கம், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ,என்ற அச்சத்தால் வரும் பிரச்சனை ஒருப்பக்கம் ,குடும்ப பிரச்சனைகள் ஒருபக்கம் ,வெறு பல பிரச்சனைகள் மறுபக்கம் ,என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருக்கப் படும் போது,என்னவாகுமோ என்ற பயத்தால், என்ன செய்வது என்று தெரியாமால் துடிதுடித்துப் போகிறோம்.

நாம் படும் துன்பங்களையும்,துயரங்களையும்,அச்சத்தையும் ,பயத்தையும்  கவலைகளையும் யார் இடத்தில் பகிர்ந்து கொள்ளலாம்!,யார் இடத்தில் முறையிடலாம்?, என்று மனிதனாக பிறந்த அனைவரும் தேடுகிறோம்,அலைகிறோம்,.யாரும் நமக்கு உதவி செய்வதாக தெரிய வில்லை,-- என்று தெரிந்தவுடன் ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் செய்கிறோம் ,ஆனால் எந்தக் கடவுள் நமக்கு உதவி செய்வார் என்பது நமக்குத் தெரியாமல்,அலையும் போது,--ஒவ்வொருவரும் ஒரு கடவுளைச் சொல்லி நம்மை திசை திருப்புவார்கள்,பிறகு நாம், எதோ ஒரு கடவுளைத் தேடி,அபிஷேகம் ,ஆராதனை,பொங்கள்,படையல்,பிரார்த்தனை,வழிபாடு போன்றவற்றை செய்து-- நமது குறைகளைச்ச் சொல்லி புலம்புகிறோம் .அந்த புலம்பல் எங்கே செல்கிறது என்பது நமக்குத் தெரியாது,

கண்களுக்கு தெரிந்த,உருவம் உள்ள பொம்மைக் கடவுள்களை ,பழக்கத்தின் காரணமாக, வணங்கி வழிபடுகிறோம்,எதோ ஒரு வகையில் நம்முடைய துன்பம் துயரம் அச்சம் பயம் போன்ற கவலைகள் நம்மை விட்டு விலகி விட்டதாக கருதுகிறோம்.

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் பின்னாடி கட்டாயம் ஒரு பின்னணி இருக்கும். காரணம் இல்லாமல் எந்த காரியமும்  நடைபெறாது,துன்பங்களும் ,பிரச்சனைகளும் வரும்போது ,--பொதுவாக அப்பாவால் வந்தது,அம்மாவால் வந்தது,கணவனால் வந்தது ,மனைவியால் வந்தது,குழைந்தைகளால் வந்தது என்று பிறரைக் குற்றம் சாட்டி, சொல்வது இயல்பான வாடிக்கையாகி விட்டது.

ஆனால் எல்லா மனிதர்களும் பிறக்கும் போது நல்லவர்களே !அவர்கள் வளர்ந்து வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நல்வினை ,தீவினை என்னும் இரு வினைகளாக நம்முடைய ஆன்மாவில் பதிவாகி விடுகிறது ,இதைத்தான் ,கிரியை என்பார்கள் .மாயை என்பார்கள் ,சாத்தான் என்பார்கள் சைத்தான் என்பார்கள்,பிசாசு என்பார்கள்.தலைவிதி என்பார்கள்.வினை என்பார்கள்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் ,தீயது செய்தால் தீயது நடக்கும் என்பது பொது முறையாகும் .{நன்றும் தீதும் பிறர் தர வாரா !}நன்மையையும் தீமையும் பிறர தர வாராது என்பது நாம் உணர வேண்டும் ,ஆனால் நமக்கு நல்லது எது?தீயது எது ?என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்,

நல்வினை ,தீவினை எப்படி பதிவாகிறது !

பிற உயிர்களின் உழைப்பால் உணர்வால் கண்ணீரால் எது வரினும் --அதை நாம் தெரிந்தோ !தெரியாமலோ !அதை அனுபவிப்பது -அனைத்தும்  தீமைகளையே தரும்,-- அதுவே தீவினையாகும் ,

பிற உயிர்களின் அன்பால் தயவால் கருணையால் மகிழ்ச்சியால் எது வரினும்,அதை தேவைக்கு மேல் பெற்றுக் கொள்ளாமல் வேண்டாம் என்று சொல்லுவதே, நன்மையைத் தரும்,அதுவே நல்வினையாகும்,இதை புரிந்து கொண்டு  வாழ்ந்தால் நமக்கு எக்காலத்திலும் துன்பம் துயரம அச்சம் பயம் போன்ற கவலைகள் வாராது,

கடவுளின் கருணை !

நாம் துன்பங்களை போக்க எதோ ஒரு கடவுளை வணங்குகிறோம்,துன்பங்கள் போய் விடுகிறது என்பதை மேலே சொன்னோம் .அதன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் .

நாம் வணங்கும் கடவுள் அத்தனையும் தத்துவங்களே ஒழிய, உண்மைக்  கடவுள்கள் அல்ல !நாம் வணங்கும் கடவுள் அனைத்தும் மாயையின் வடிவங்களே யாகும் .நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் குற்றங்களை அந்த தத்துவங்களின் உருவங்களின் முன் விண்ணப்பம் செய்து வழிபடுகிறோம்.அதை அந்த உருவங்கள் கவனிப்பதும் இல்ல-- ஏற்றுக் கொள்வதும் இல்லை,ஏன் என்றால் அவை அனைத்தும் உயிர் இல்லாத ஜடங்களே --.நீங்கள் செய்வது எதுவும் அவைகளுக்குத் தெரியாது,அவைகளை உணராது ! அவைகளை கேட்காது ! அவைகளைப் பார்க்காது!அவைகளை ஏற்காது ! அவைகளுக்கு எதுவும் பேசவராது !அசையாத,உயிர் இல்லாத , உருவங்கள் இடத்தில் விண்ணப்பம் செய்தாலும்,வேண்டுதல் செய்தாலும்.வழிபாடு செய்தாலும் ,அவை அனைத்தும் மக்களின் அறியாமையாகும் .இதை நாம் அறிவு கொண்டு உணர்தல் வேண்டும் .

நாம் வேண்டும் வேண்டுதல் எங்கு செல்கின்றன !

ஒரு குழந்தை அழுதால் --பசிக்காகத்தான் குழந்தை அழுகிறது என்று உணர்ந்து ,அழுகுரல் கேட்ட உடனே --குழந்தையைப் பெற்றத் தாய் ஓடோடி வந்து,இருகரம் கொண்டு  தூக்கி அனைத்து ,அக்குழந்தையின் பசியைப் போக்குகிறாள் .அதேபோல் நாம் உண்மையாக வேண்டும் வேண்டுதல்கள்,அனைத்தும் ,உண்மைக்  கடவுளிடம் போய் சேருகின்றன.

 நாம் என்னும்  எண்ணங்களும், செயல்களும்,நம்பிக்கைகளும், நம்மைப் படைத்த மெய்ப் பொருளான அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்னும் . உண்மைக்  கடவுளுக்குப் போய் சேருகின்றன .அதை வள்ளலார் எப்படி பதிவு செய்துள்ளார் பாருங்கள்.

எங்கு எங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும் ஜோதி !

எப்படி எண்ணிய என் கருத்து இங்கு எனக்கு 
அப்படி அருளிய அருட்பெரும் ஜோதி !

எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு 
அத்தகை அருளிய அருட்பெரும்ஜோதி !

யாரே என்னினும் இரங்கு கின்றாற்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !

எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

என்பார் வள்ளலார் அவர்கள் .

அந்த அருட்பெரும்ஜோதியின் கருணையால் அருளால் நம்முடைய துன்பங்கள் யாவும் தீர்த்து வைக்கப் படுகின்றன ,ஏன் என்றால் .அவர்தான் உண்மையானக்  கடவுள் ! அவருடைய குழந்தைகள் தான், நாம் அனைவரும் என்பதை அறிவுக் கண் கொண்டு அறிதல் வேண்டும்.

பல கோடி அண்டங்களை படைத்தவர் அவர்தான்.நாம் வாழும் அண்டமான,இந்த இவ்வுலகமும்  அவர் படைத்ததுதான்.--இவ்வளவு பெரிய உலகத்தை உண்டாக்கிய சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுள் ஒருவர் தான்,அருட்பெருஞ்சோதி ஆண்டவராகும்.-அவர்தான்  ,தாவரம் முதல் மனிதர்கள் வரை, எல்லா  உயிர்களையும்,உடம்புகளையும்  படைத்தவராகும் -அதனால் உயிர்களுக்கு வரும் இடையூறுகள் எல்லாம் விளக்கக் கூடிய ,அன்பு,தயவு,கருணை யாவும் அருட்பெரும்ஜோதிக் கடவுளையே சார்ந்ததாகும் .நாம் அனைவரும் அவருடைய குழைந்தைகள் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் அவருக்குத் தெரியும் .

அவர் எப்படி உள்ளார் !

தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்--
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத்  தெய்வம்
வாயார வாழ்த்து கின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்,
மலரடி என் சென்னி மிசை வைத்த பெருந் தெய்வம்.
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டு விக்குந் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்!.

என்றும்  .

எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் ,
என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்
நல்லார்க்கும் நல்ல தெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜ தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்
காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகள் எல்லாம் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .

என்று வள்ளலார் நமக்கு உண்மைக் கடவுளான ''அருட்பெரும்ஜோதி'' கடவுளை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .அந்த கடவுள் நம் சிரநடுவில் உள்ள சிற்சபை என்னும் இடத்தில் --உள் ஒளியாக ,உயிர் ஒளியாக விளங்கிக் கொண்டு உள்ளார் என்பதை அறிய வேண்டும்.

நாம் இறைவனிடம் வேண்டும் போது,

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் 
ஆருயிர்கட் எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் 
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் 
தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் 
பகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்.

அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் 
அச்சம் எல்லாம் துன்பம் எல்லாம் மறுத்து விரைந்து வந்தே 
இப்பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி 
எண்ணம எல்லாம் முடித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

மேலே கண்டபடி உண்மையான அன்பினால் இறைவனை நினைத்து--நினைந்து நினைந்து,உணர்ந்து உணர்ந்து ,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து,ஊற்று எழும் கண்ணீரால், வேண்டவேண்டும் வழிபட வேண்டும்.அப்போதுதான் இறைவன் கருணைக் காட்டுவார்

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனுடைய குழைந்தை களாகும் அதனால் உலகில் உள்ள எந்த உயிர்களுக்கும் துன்பம் செய்யாமல் அன்பு செலுத்த வேண்டும் .அதனால் தான் உயிர்க் கொலை செய்ய வேண்டாம் புலால் உண்ண வேண்டாம் என்று மிகவும் வலியுறுத்தி சொல்லி உள்ளார் வள்ளலார் .

கடவுளை எப்படி காண்பது ?

நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம், கடவுள் தண்டனை கொடுப்பார் என்பது எல்லாம் பொய்யான செய்திகளாகும்.கடவுள் கருணை உள்ளவர் ,அதுவும் தனிப்பெரும் கருணை உள்ளவர் ,அவர் எப்படி தண்டனைக் கொடுப்பார் சிந்திக்க வேண்டும்.

நாம் அறிந்தோ அறியாமலோ தவறு செய்கிறோம்,அதனால் மற்றவர்கள் மூலமாக நமக்கு துன்பம் வருகிறது.--துன்பம் கொடுப்பவரைப் பார்த்து உங்களுக்கு கண்டிப்பாய் கடவுள் தண்டனைக் கொடுப்பார் என்று சாபம் விடுகிறோம் .இல்லையேல் அவரைத் தூற்றுகிறோம்.இதற்கு கடவுள்தான் காரணம் என்று கடவுள் மீது பாரத்தை வைக்கிறோம் .இவை எல்லாம் அறியாமையாகும் ,

நமக்கு பல வழிகளில் துன்பம் துயரம்,அச்சம் பயம் ,போன்ற கவலைகள் வந்து கொண்டே இருக்கிறது !இதற்கு காரணம் என்ன ? அளவுக்கு மீறிய ஆசைகள்!.அளவுக்கு மீறிய பற்றுதல்கள்!.அளவுக்கு மீறிய மோகங்கள்.!இவைகளால் துன்பம் வருகிறது .

உதாரணத்திற்கு ;--நாம் சேர்த்து வைத்து இருந்த பொருள்கள் ,மற்றவர்களால் கொள்ளை போகும் போதும் ,நமக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் மீதும் ,நாம் பற்றும் பாசமும் வைத்து இருந்த நம் மனைவி -வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்தது தெரிந்த போதும் ,நமக்கு அளவு கடந்த கோபமும் ,வேகமும்,உணர்ச்சியும்,அதிகம் ஆகும் போது ,அதற்கு யார் உடந்தை யானவர்களோ!அவர்களை கொலை செய்து விடுகிறோம்,

கொலை செய்துவிட்ட பிறகு ,எதற்காக கொலை செய்தார் என்பது  தெரிந்தாலும் உலகியல் சட்டம் {மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டம் }கொலை செய்த குற்றத்திற்காக --அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப் படுகிறது.--இதற்கு கடவுள்தான் காரணமா ?என்றால் இல்லை .

நாம் எவ்வளவுதான் தவறுகள் செய்து இருந்தாலும் ,செய்த தவறுகளை உணர்ந்து .மீண்டும் தவறுகள் செய்யாமல் இருக்க ,செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் ,கடவுள் நமக்கு கருணைக் காட்டுவார் ,ஏன் என்றால் குற்றங்களை குணமாகக் கொள்ளுவது கடவுளின் இயற்கை குணம் ,அதே போல் குற்றங்கள் செய்யாது இருப்பது ,மனிதனின் ஆன்ம குணம் ,--கடவுளும் கருணை உள்ளவர்,கடவுளின் குழந்தை யாகிய ஆன்மாவும் கருணை உள்ளதாக இருக்க வேண்டும் ,இவை  மாறுபடுகின்ற போது துன்பம் நம்மை வந்து சூழ்ந்து கொள்கிறது.

வள்ளலார் சொல்லும் பாடலைப் பாருங்கள்.

குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமாகக்  கொள்ளல் உனக்கு இயல்பே
சிற்றம் பலவா இனிச் சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
தெற்ரென் றடியேன் சிந்தை தனைத் தெளிவித்து அச்சம் துயர் தீர்த்து
இற்றைப் பொழுதே அருட்ஜோதி ஈக தருணம் இதுவாமே !

குற்றங்கள் நாம் செய்து இருந்தாலும் ,குணமாகக் கொண்டு அருள் புரிவது இறைவனாகிய உனக்கு இயல்பானதுதானே !நாங்கள்  சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்வது ஒன்றும் இல்லை ,ஆதலால் எங்களுடைய டபொய்யான குணத்தை --சிந்தையை தெளிவித்து,அச்சம் துயரம் தீர்த்து இப்பொழுதே அருட்ஜோதி என்னும் உண்மையை உணர்த்தி ,உன்னுடைய பேர் அருளை  வழங்கி எங்களை  வாழ்வித்திடல் வேண்டும் என்கிறார் .--இவை வள்ளலாருக்கு அல்ல !நமக்காக நாம் அருட்பெருஞ்ஜோதியை எப்படி வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என்பதை விளக்குகிறார் .

கடவுள் எங்கு உள்ளார் ?

எவ்வுயிரும் பொது எனக் கண்டு இறங்கி
உப கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர் தம் செயல் அனைத்தும் திருஅருளின்
செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை இலாத் திருநெறி அத்திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்விய தென் கருத்து அவர் சீர் ஓதிட என்
வாய் மிகவும் ஊர்வதாலோ !

எத்துணையும் பேதம் முறாது எவ்வுயிரையும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ !

மேலே காணும் பாடலில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?இறைவனால் படைக்கப் பட்ட அனைத்து உயிர்கள் மேலும் அணுத் துகள் அளவும் பேதப் பாடாது ,தன்னுடைய உயிர்போல் எண்ணி ,எந்த உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல்.ஆன்ம நேய ஒருமைப் பாட்டுடன் யார் வாழ்கிறார்களோ!அவர்களை நான் வணங்குகிறேன் ,

ஏன் என்றால் அவர்கள் உள்ளத்தில் தான் {ஆன்மாவில் } கடவுள் நடம் புரிந்து கொண்டு உள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன் ,ஆதலால் அவர்கள் இட்ட பணியை செய்ய ,புரிந்திட என்னுடைய சிந்தை மிகவும் ஆவலாக உள்ளன.என்பதை வள்ளலார் பறை சாற்றுகிறார் .

அப்படி வாழ்ந்த அருளாளர்கள் யார் ? எனக்குத் தெரிந்தவரை இந்த உலகத்தில்  திரு அருட்பிரகாச வள்ளலாரைத் தவிர,வேறு  யாரும் இல்லை , ஏன் என்றால் அவர் ஒருவர்தான் ;--

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்
பசியினால் இளைத்தே
வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பயந்தேன்
நீடிய பிணியால் வருந்து கின்றோர் என்
நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.

இந்த மாதிரி ஒரு அருள் ஞானியை பார்த்தது  உண்டா ? கேட்டது உண்டா?அறிந்தது உண்டா ?மனிதர்கள் வாடுவதை பார்த்து இருந்தவர்கள் இருக்கிறார்கள்,அவர்களுக்காக பல போதனைகள் சொல்லி இருக்கிறார்கள்.அதனால் மக்கள் அடைந்த பயன் ஒன்றும் இல்லை >

எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார் என்பதை உணர்ந்தவர் ,அறிந்தவர் ,வாழ்ந்தவர் --அதனால் தான் பயிர் வாடுவதைப் பார்த்த போதெல்லாம் வாடினேன் என்றார்!  --அதனால்தான் உயிர்க் கொலை செய்வதை வேண்டாம் என்றார் வள்ளலார் .,அதை விடக் கொடுமையானது ,கடவுள் பெயரைச் சொல்லி கடவுளுக்காக --வாயில்லாத ஆடு,மாடு,கோழி,பன்றி போன்ற உயிர்களை துடிக்க துடிக்க வெட்டி பலிக் கொடுத்து ,உண்ணுகிறார்களே .இதை எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்ளுமா ?அப்படி ஏற்றுக் கொண்டால் அவை கடவுள்களா? வேதனையாக இருக்கிறது .சிந்திக்க வேண்டும் ,உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள்  செய்யும் செயலா இது ?

அந்த தெய்வங்களைப் பார்த்து வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்!  

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு,பன்றி ,குக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன்.!

துண்னெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திரு உளம் அறியும் !

மேலே கண்ட பாடலைப் பார்த்தால் நம் நெஞ்சம் உருகாதா ?நாம் உயிர் வாழ்வதற்கு மற்ற உயிர்களை கொன்று உண்ணலாமா ?இந்த தெய்வம் எல்லாம் கருணை உள்ள தெய்வமா ?கருணைக் காட்டும் தெய்வங்களா !இந்த தெய்வங்கள் அருளை வழங்கும் தெய்வங்களா ?இந்த தெய்வங்களை படைத்தவன் யார்?அவன் மனிதனா ? கொலைகாரப் பாவிகள் அல்லவா ?இந்த தெய்வங்களைப் பார்த்து வள்ளலார் எப்படி பயந்துள்ளார் .நொந்து உள்ளார் !நடுக்கம் உற்று உள்ளார் !இதற்க்காக எப்படி வாடி உள்ளார் !நல்லோர் மனதை நடுங்கச் செய்யலாமா?

இந்த தெய்வங்களைப் படைத்தவர்களுக்கு அறிவு இல்லை !அவர்களுக்கு அறிவைக் கொடுங்கள் என்று உண்மையான இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார் .அந்தப் பாடலைப் பாருங்கள்.

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி இன்பம் தந்தீரே !

இந்த மாதிரியான பொய்யானக் கற்பனைக் கடவுள்கள் --சமய ,மத வாதிகளால் படைக்கப் பட்டவைகளாகும்.இவற்றை உண்மை என்று நம்பி,-- பாவம் மக்கள் --பாவத்தை சம்பாதித்துக் கொண்டு உள்ளார்கள் .--மக்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார் ,எல்லா மக்களுக்கும் உண்மையை அறிந்து கொள்ள அறிவைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.

வடலூரில் உண்மை தெய்வம் !

இயற்கை உண்மையர் என்றும் --இயற்கை விளக்க மானவர் என்றும் ---இயற்கை இன்ப மானவர் என்றும் --தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங் கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லவர் என்றும் ,

எல்லாம் உடையவராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெருந்தலைமை ''அருட்பெருஞ்சோதியர்''என்றும் ,சத்திய அறிவால் அறியப் படுகின்ற உண்மைக கடவுள் ஒருவரே !அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்க மின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை ,இவ்வுலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து,அருளை அடைந்து,அழிவில்லாத சத்திய சுகப் பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பலவேறு, சமயங்களிலும் ,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லட்சயங்களைக் கொண்டு நெடுங்காலமும் ,பிறந்து பிறந்து அவத்தை வசத்தர் களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்து களினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றார்கள்.

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் ,முதலிய சுப குணங்களைப் பெற்று,நற்செய்கை உடையராய் ,எல்லா சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங் களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் --சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்,பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும்,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற் குறித்த உண்மைக கடவுள்!தாமே திருவுளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சயமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற --

ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,
''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப் படாத நெடுங்காலம் ,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடு கின்றோம்,''என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி .''
அருட்பெருஞ் ஜோதியராய்''வீற்று இருக்கின்றார் .---ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து,தரிசிக்கப் பெறுவீர் களாயிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவது மன்றி ,இறந்தவர்கள் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள்.

என்னும் செய்தியை 1874,ஆம் ஆண்டு ஸ்ரீ முக வருடம், தை மாதம் 19,ஆம் தேதி புனர்பூசத் தினத்தன்று வெளியிட்டுள்ளார் வள்ளலார் .

எல்லா உயிர்களுக்கும் கருணைக் காட்டும் கடவுள்தான் ;--

அருட்பெருஞ்ஜோதி--அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை -அருட்பெருஞ்சோதி !

என்னும் கடவுளாகும் ..          

ஆன்மநேய அன்பர்களே !மாயையால் உருவாக்கிய பொய்யான தத்துவ உருவங்களை,வணங்காமல், வழிபடாமல் உண்மையான கடவுளாகிய உருவம் அற்ற அருள் ஒளியாக உள்ள அருட்பெரும் ஜோதிக் கடவுளை வழிபடுவோம் .அவர் ஒருத்தர் மட்டும் தான் தனிப்பெரும் கருணை உடையவர் ,அவரால் மட்டுமே உயிர்கள் மேல் அன்பு, தயவு,கருணைக் காட்ட முடியும் .இதுவே சத்தியமான உண்மையாகும் --புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் நீவீர் எல்லாம் புனிதம் உரும் பொருட்டே !என்பது வள்ளலார் வாக்காகும் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ! 

நன்மை செய்வோம் நலம் பெறுவோம் 
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

ஆன்மநேயன் ;--கதிர்வேலு,

மீண்டும் பூக்கும் ;--