திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சீவ காருண்யத்தின் வல்லபம் !

சீவகாருண்யத்தின் வல்லபம் !

ஒவ்வொருவரும் பொருமையாக கண்டிப்பாக படிக்க வேண்டும்..

நீங்கள் வணங்கும் வழிபடும் தெய்வங்கள் யாவையும்.அனைத்தும். எக்காலத்திலும் எந்த நேரத்திலும் உங்களைக் காப்பாற்றாது..
காப்பாற்றவும் முடியாது..அவைகள் எல்லாம் ஜடப்பொருள்.மனிதர்களால் படைக்கப் பட்ட கற்பனைக் கடவுள்கள்.எனவே அவைகளினால் எந்த பயனும் இல்லை...

இப்போது கர்நாடகத்திலும்.கேரளாவிலும்.மற்ற இடங்களிலும் பலத்த மழையினால் பல உயிர்கள் அழிந்து விட்டன.அழிந்து கொண்டும் உள்ளன. விட்டன

எந்த கடவுளாவது காப்பாற்றியதா ? சிந்திக்க வேண்டும் !

உங்களை நீங்கள் தான் காபாபாற்றிக் கொள்ள வேண்டும்.அதற்குண்டான சக்தி ஆற்றல் செய்கை எல்லாம் நம்மிடமே உள்ளது..கடவுள் நம்மிடமே கொடுத்துள்ளார்.

கீழே உள்ள.. வள்ளலார் வழங்கிய ஜீவகாருண்யத்தின் வல்லபத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....

உண்மை வழி !

சீவகாருணிய மில்லாது செய்யப்படுகிற செய்கைக ளெல்லாம் பிரயோஜன மில்லாத மாயாசாலச் செய்கைகளே யாகுமென்று அறியவேண்டும்.!

எல்லாச் சீவர்களும் கடவுள் இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும் அவரவர் இடங்களிற் கடவுள் அருள்விளக்கம் விளங்குதலாலும், சமுசாரிகளுள் தமது தாய் தந்தை புணர்ந்தோர் மக்கள் துணைவர் முதலிய குடும்ப மட்டில் பசியாற்றிக் கொள்ளத் தக்க அற்பசக்தியுள்ள சமுசாரிகள் தாய் பிதா மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு அயலார்க்குப் பசியாற்றத் தொடங்குதலும், தம்மிடத்துப் பசித்து வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியை யாற்றத் தொடங்குதலும், கடவுளருளுக்குச் சம்மதமல்ல.

ஆதலால், தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும்; அற்பசத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்பம் மட்டிலும் பசியாற்றுவிப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துக் கொண்டு, தம்மிடத்துப் பசித்துவந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சி யெடுத்துக் கொள்ளவேண்டு மென்றும்;

இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்கவரையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர், அதிதிகள், பெரியர், அடிமைகள், அயலார், பகைவர் முதலியவர்களுக்கும், தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை, ஆடு, குதிரை, தாவர முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும்;

விவாகம் புத்திரப்பேறு தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறு சடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கைகளிலும் பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை யுண்டுபண்ணுகின்ற சிறப்பினையே செய்யவேண்டுமென்றும், அப்படிச் செய்யில் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறியவேண்டும்.

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும், ஆடல் பாடல் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களையும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளையும் நடத்தியும், எக்களிப்பில் அழுந்தியிருக்குந் தருணத்தில் பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும் தமது மக்கள் துணைவர் முதலியோர்க்காயினும் ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது.

அப்போது அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகிறார்கள். இப்படித் துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும் ஆடல் பாடல் வாத்தியம் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளும் அந்த ஆபத்தைத் தடைசெய்யக் கண்டதில்லை.

அந்தச் சுபகாரியத்தில் உள்ளபடியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின்பத்தையும் வெளிப்படச் செய்திருந்தார்களானால், அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டுபண்ணுமல்லவா?

ஆகலில் விவாக முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும்.

துன்பம் நீங்கும் வழி !

சூலை குன்மம் குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு
பண்ணுமென்பது உண்மை.

 பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்துகொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை.

கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

இதுதான் ரொம்ப முக்கியமானது !

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது,

மண்ணும் சூடு செய்யாது -

பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா -

விடூசிகை* விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா -

அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் - அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் -

சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் -

வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் -

சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் -

சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத்தக்க தென்பது கடவுளாணை யென்றறிய வேண்டும்.

மேலே கண்ட ஜீவகாருண்யத்தின் வல்லபம்  பற்றி. வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்...

படித்து தெரிந்து பயன் பெருங்கள்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 18 ஆகஸ்ட், 2018

மனிதன் மாற வேண்டும் !

மனிதன் மாற வேண்டும் !

பொய்யான சாதி சமய மதங்களில் இருந்து மனிதன் மாற வேண்டும்.
மாறாதவரை
கடவுள் உண்மை தெரியாது.

வள்ளலார் பாடல் !

சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்

ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்

நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ

ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.!

என்னும் பாடல் வரிகளில் எளிய தமிழில் பதிவு செய்கிறார்

மேலும் சாதி சமய மத்த்தை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார்.

சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி - அக்கச்சிசோதியைக் கண்டேன டி.!

உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய
நாம் சாதி சமய மதக் குப்பையிலே உருண்டு கிடக்கிறோம்..வெளியே வரமுடியாத அளவிற்கு...நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது..

அதைத்தான் அறியாமை என்னும் மாயா திரைகள் என்கிறார்....

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் நீங்க வேண்டுமானால்.சாதி சமய மதங்களில் இருந்து விலகி பொது நோக்கம் வரவைத்துக் கொள்ள வேண்டும்...

இவைதான் வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கையாகும்...

வள்ளலார் வழியைப் பின் பற்றுவோம்.வளமோடு வாழ்வோம் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஆண்டவரின் முதல் பிள்ளை !

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥
தனிப்பெருங்கருணை 🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥

💥அருட்பெருஞ்ஜோதி பதியை அடைந்த இப்பிரபஞ்சத்தின் முதல் பிள்ளை 💥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
 ஆன்ம நேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏

      இப்பிரபஞ்சத்தை
தோற்றுவித்த இறைவன் ,
இப்பிரபஞ்சத்தில் வாழக்கூடிய உயிர்களையும் ,
அந்த உயிர்கள் வாழ்வதற்கு தேவையான வாழ்வியலுக்கு உற்ற பொருள்களையும் அவைகளுக்கு அண்மையிலேயே தோற்றுவித்து அவற்றை அவர்கள் அறிந்து பெற்றுக் கொள்வதற்குரிய அறிவு சுதந்திரத்தையும் வழங்கியே பெருங்கருணையுடன் சிருட்டித்து அருளினார்கள்🏵

     ஆன்மாக்களுக்கு தேகம் கொடுத்து பிறப்பித்ததன் காரணம் ,
கடவுள் விளக்கத்தைப் பெற்று
தனது "சச்சிதானந்த" உண்மையை  அவைகளுக்கு உணர்த்தி,
" மெய் அறிவு ஆனந்த "
அனுபவத்தைப் பெற்று
பக்குவத்தில் அவைகளை
" சச்சிதானந்த மயமாகவே "மாற்றி தன்னிலையில் பொருத்தி ,
தன்மயமாக்கிக்கொள்வதற்கு என்றே இறைவன் அறிவு சிறிதும் விளக்கமில்லாமல் இருக்கும் சிற்றணுப் பசுவாகிய ஆன்மாக்களுக்கு ஓரறிவு தாவரப் பிறவி தொடங்கி ஆறறிவு மானுடப்பிறவி
வரையும் கொடுத்து ,
இந்த மானுடப்பிறவியின் மூலம்தான் இறைவனை முழுவதுமாக உணர்ந்து அனுபவித்து அடைந்திடும்படி அருள்நியதி வழங்கப்பட்டுள்ளது🌺

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை
 அடைவது என்பது ,
அருள் அனுபவ பக்குவ ஆன்மாக்கள்
தாங்கள் கண்டு அனுபவித்த  அருளொளி அனுபவத்தைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் முத்தி மோட்சம் வீடுபேறு
 என்ற பெயர்களில் தனது பிறவி வேரை அறுத்துக்கொண்டு இறைவனது திருவடியைச் சென்று அடைந்து
விடுகின்றார்கள் 🌷

அருட்பெருவெளியில்
அருட்திருநடம்புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய ,
பூரணமான அருளை ,
அதாவது ஆண்டவரது பூரண அருள்சக்தியை குறைவின்றி பெற்றுக்கொண்ட ஒருவரால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மைச் சொரூபத்தை முழுமையாக நேருறக் கண்டிடவும்,
களித்திடவும்,
அவரை உற்றுக் கலந்திடவும் ,
அவரது முழு அருள்வல்லபத்துடன் திகழந்திடவும் முடியும் என்பது அருள் நியதியாகும் 🌸

அவர்களால் மட்டுமே முத்தியைப்
பெற்றுக் கொள்வது மட்டுமல்ல ,
அதற்கும் மேலான எல்லாமும்  செய்ய ஞானசித்தியைம் பெற்றுக்கொள்ளவும் இயலும்,
அவர்களே செத்தாரை எழுப்பும் வல்லபம் பெற்றவர்கள் ,
அவர்களே அழியா அருட்ஜோதி வடிவம் பெற்றவர்கள்,
அவர்களே சுத்த பிரணவ ஞானம் என்னும் முத்தேக சித்தி அனுபவம் பெற்றவர்கள்,
அவர்களே தேகாதி உலகம் முழுவதும் செய்யும் வல்லமை உடையவர்கள்,
அவர்களே எப்பொருளும் விளைய விளைவிக்கும் சித்திப் பெற்றவர்கள்,
அவர்களே அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருட்தேகத்துடன் மரணமிலாப் பெருவாழ்வில் இவ்வுலகில் அருளொளித் தேகத்துடன் உலாவும் அருள்வாழ்வுப் பெற்றவர்கள் ஆகும்🌻

இதுவரை இவ்வுலகில் வள்ளல் பெருமானிற்கு முன்பு வந்த அருளாளர்கள் ஒவ்வொருவரும் அவரவரவர்கள் பெற்ற அருள் அனுபவத்திற்கும் பெற்ற அருள் ஞானத்திற்கும் தக்கவாறு
சித்தி முத்திகளைப் பெற்று அருட்பெருஞ்ஜோதியில் கலந்து பிறவிப் பேற்றை அடைந்தார்கள்.
அந்த வழியில் சமய மத மார்க்கங்களின் அதீததத்தால் பெற்ற
அருள் அனுபவத்தின் வாயிலாக முத்திப்பெற்றவர்கள்
அப்பர் சம்பந்தர் சுந்தரர் மற்றும்பல நாயன்மார்களும் ஆழ்வார்களும் இருக்கின்றார்கள் இவற்றில் ,
மாணிக்கவாசகர் திருமூலர் போன்றோர்கள் சன்மார்க்க வழியில் முத்திப்பெற்றவர்களாக இருக்கின்றார்கள் .
அவர்களும் இவ்வுலக வாழ்வையும் ,தனது உடம்பையும் வெறுத்து இறைவனது திருவடியில் தஞ்சம் புகுந்தார்கள்🌺

ஆனால் ஒரு ஆன்மாவிற்கு தேகம் கொடுத்து இவ்வுலகிற்கு வருவிக்கவுற்றதன் நோக்கம் வெறும் முக்திநிலை பெறுவதற்கு மட்டுமே அல்ல ,

இறைவனது முழு ஆற்றலையும் பெற்றுக்கொண்டு இவ்வுலகிலேயே என்றும் இளமையுடன் நரை திரை மூப்பற்று சுத்த ஒளியுடம்புடன் வாழக்கூடிய வாழ்வு பெற்று மரணத்தை தவிர்த்து வாழ்தல் வேண்டும் என்பதேயாகும் ,
அதுவே ஒவ்வொரு ஆன்மாவின் லட்சியமாகும் என்று பெருமான் கூறுகின்றார்கள் .
அப்படிப்பட்டபெருவாழ்வை தரக்கூடியது சமய மத சன்மார்க்கத்தினால்  கூடாது என்றும் ,
சமய மதம் கடந்த சமரச சுத்தசன்மார்க்கப் பெருநிலைக்கு சென்று அந்த நிலையில் ,
பூரணமான அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு ,
அதன்மூலம் கிடைக்கப் பெறுகின்ற பெருவாழ்வே சுத்தசன்மார்க்கப் பெருவாழ்வாகும் என்று பெருமான் கூறுகின்றார்கள்🌸

அதுபோன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது பூரணமான அருளைப் பெற்றுக்கொண்டதனால்தான், இப்பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்து தனது பூரணஅருளை எஞ்சலின்றி பெற்றுக்கொண்ட முதல் ஆன்மா நீ என்பதால் நீயே எனது குலத்தின் முதல் மகன் என்று ,
"பிள்ளைப் பட்டத்தை "
ஆண்டவரால் சூட்டப்பெற்றார்கள் நமதுப் பெருமான்🌻

அப்படி பிள்ளைப் பட்டம் சூட்டப்பட்ட பெருமான்,
தான் ஆண்டவருக்கு எப்படிப்பட்ட பிள்ளை என்று அவர்களே கூறுகின்றார்கள் பாருங்கள்🌷🙏🔥

மனம் முதலாகிய தத்துவங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்திய பெருமான்,
இதுவரை என்னை அலைக்கழித்ததுபோல் இனிமேலும் என்னை அலைக்கழிக்க நினையாதீர் நான் யார்என்று தெரியாதோ உங்களுக்கு என்று பெருமான் கூறமுற்படுகின்றார்கள்

1: ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே 🌻
2:சிற்சபையில் நடிக்கும் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே 🌻
3:சிற்சபைவாழ் பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே 🌻
4:எல்லாம் பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே 🌻
5:எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே 🌻
6:சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை நானே 🌻
7:நான்தான் ஆண்டவன்தன் தாண்டவம் கண்டமர்ந்தப் பிள்ளை நானே 🌻
8:எல்லாம் செய்வல்லார் அருளமுதம் உண்டு பூரண அருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே🌻
9:ஞானசபைத் தலைவன் தருதலைத் தனிப்பிள்ளை நானே 🌻
10:சிற்சபை என் அப்பனுக்கு சிறந்தபிள்ளை நானே 🌻
11:எல்லாம் வல்ல சித்தருக்கே நல்லபிள்ளை நானே 🌻
12:அம்பலத்து என்அப்பன் நம்புபிள்ளை நானே 🌻
13:சிற்சபையில் கடவுள் மகிழ்ந்தளித்த தனிக் கதிர்பிள்ளை நானே 🌻
14:நான்தான் அருட்பெருஞ்ஜோதியை அடைந்த முதல்பிள்ளை காணே 🌻
என்று கூறுவது மட்டும் அல்லாமல்,

🌺நான் ஒருவன் தானே அவன்பிள்ளை🌺
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
"திருவளர் பேர் அருளுடையான் சிற்சபையான் எல்லாம் ,
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன் எல்லாம் உடையான்,

உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்தான்

பெருமையினால் என்னையீன்றான்
"நான் ஒருவன் தானே பிள்ளை அவன் பிள்ளை எனப் பெரியர் எலாம் அறிவார்"
என்று,
தான் ஒருவர் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி பதியை அடைந்த "முதல்பிள்ளை" என்பதையும் பெருமான் இதன்மூலம் பதிவு செய்கின்றார்கள் 🌻
ஆகலில் அருள் அனுபவத்தின் வாயிலாக அடைகின்ற பக்குவங்களும் பதங்களும் நிலைகளும் மாறுபடுகின்றன என்றும்,
பூரணமான அருளைப் பெற்றுக்கொள்வதே ஆன்மாக்களின் முடிபான  முடிபு என்றும் அறிவோம் !
உணர்வோம் !
அடைய முயல்வோம் !
.....நன்றி🙏🌻
...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🙏
....பெருமான் துணையில் 🙏
....வள்ளல் அடிமை 🙏
...வடலூர் இரமேஷ் ;

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ஆசைப்பட வேண்டும் என்கிறார் வள்ளலார் !

ஆசைப்பட வேண்டும் என்கிறார் வள்ளலார் !

உலகில் உள்ள எல்லாம் ஞானிகளும் ஆசையை அழிக்க வேண்டும்.ஆசையைத் துறக்க வேண்டும் என்றார்கள்..

அறுமின் அறுமின் ஆசையை அறவே அறவே அறுமின்

ஈசனோடுயானும் ஆசையை அறவே அறுமின் என்றார்கள்...

ஆசை இல்லாதவன் மனிதன் அல்ல.ஆசை உள்ளவனே மனிதன்.ஆசை கண்டிப்பாக இருக்கனும்.வேண்டும் என்கிறார்  வள்ளலார்.

பற்றை ஒழிக்கலாம் ஆசையை ஒழிக்கக் கூடாது.ஒழிக்கவும் முடியாது...ஆசை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.

ஆனால் அந்த ஆசையை மடை மாற்றம் செய்ய வேண்டும். இறைவனிடம் செலுத்த வேண்டும்.ஆசை இருந்ததால் தான் இறைவனைக் காதலிக்க முடியும். அருளைப் பெற முடியும்.
மரணத்தை வெல்ல முடியும்.

ஆசைப்படுங்கள் இறைவன் மேல் ஆசைப்படுங்கள் எல்லா நலமும்.எல்லா வல்லபமும் கிடைக்கும் என்றும்.

நம்மை ஆனமநேய உரிமையுடன் அழைக்கின்றார் வள்ளலார்...

வள்ளலார் பாடல் !

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்அம்மையு
மாய் அப்பனுமாய் அருளும்அருளாளன்

ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

மோசஉரை
எனநினைத்து மயங்காதீர் உலகீர்முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படியுங்கள்.

ஆசை இருந்தால் மட்டுமே இங்கு வாருங்கள் என அழைக்கின்றார்.

இது மோசமான உரை என நினைத்து மயங்க வேண்டாம் என்கிறார்.

ஆசை உள்ளவர்களுக்கு மட்டுமே இறைவன் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அருளை வாரி வழங்கும் வள்ளலாக இறைவன் இருக்கின்றான்.
அருளும் அருளாளனாக இருக்கின்றார்.

யார் ? அந்த அருளாளன்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரால் மட்டுமே அருளை வாரி வழங்க முடியும்...

நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் ஆசை கொண்டு அன்பு செலுத்த வேண்டும்...அதுதான் காதலாகி கசிந்து உருகும் அருளாகும்.அருளைப்பெற்றவரே மரணத்தை வெல்ல முடியும்..பேரின்ப லாபத்தை அடைய முடியும்.

வள்ளலார் பாடல் !

அன்புடை யவரேஎல் லாம்உடை யவரேஅருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவரே

என்வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனதுவசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே

இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே

என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனைஎண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.!

மேலே கண்ட பாடலை பொருள் உணர்ந்து பொருமையாக படிக்கவும்.

என் அளவுகடந்த அன்பை ஏற்று அருளை வழங்கி. எனைத்தூக்கி எட்டாத உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என் ஆசை நிறைவு பெற்றது என்கின்றார் வள்ளலார்...

எனவே மண்ணாசை.
பெண்ணாசை.பொன்னாசைக் கொள்ளாமல்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது அவசியம் ஆசை கொள்ள வேண்டும் அந்த ஆசை தான் உண்மையான ஆசை.நிலையான ஆசை.நிரந்தரமான ஆசையாகும்.அருளைப் பெறும் ஆசையாகும்.

ஆசையை இடம் மாற்றி ஆசைப்படுங்கள்...

வள்ளலார் பாடல்!

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.!

அன்பு அன்பு அன்பு இறைவன் மேல் இடைவிடாத அன்பிற்கு பெயர்தான் ஆசை என்பதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

புதன், 1 ஆகஸ்ட், 2018

வள்ளலாருக்கு பொருத்தமானவர் யார் ?

வள்ளலாருக்கு பொருத்தமானவர் யார் ?..

வள்ளலாருக்கு  பொருத்தம் உடையவர்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே !

வள்ளலாரே சொல்லுகின்றார்.!

எனக்கும் உனக்கும் இசைந்த  பொருத்தம் என்ன பொருத்தமோ ..

இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ !

என்னும் பாடல் வாயிலாக உலக ஞானிகளுக்கும்.
மக்களுக்கும்.
வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்.

எனவே வள்ளலாருக்கு பொருத்தமானவர் சம்மானவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே.என்பதை ஆன்மீகச் சான்றோர்களும்.
சன்மார்க்கிகளும்.உலகமனித குலமும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்..

எனவேதான் உலகியல் ஆன்மீகம் அனைத்தும் பொய்யானது என்று துணிந்து கூறுகின்றார்..

ஈரோடு கதிர்வேல் சொல்லவில்லை..
வள்ளலாரே சொல்லுகின்றார்...

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலே கண்ட பாடலில் மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்.

இதுவரையில் கண்டது.கேட்டது.கற்றது.களித்தது.உண்டது.உட் கொண்டது எல்லாமே பொய் என்கிறார்.

பொய்யானக் கற்பனைக் கதைகளை கேட்டும்.பொய்யான தெய்வங்களை வணங்கியும்.
வழிப்பட்டு கொண்டும் மக்கள் வீணாக அலைந்து கொண்டும் அதனால் அழிந்து கொண்டும் உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்...

எனவே இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட.
மெய்நெறியான சுத்த சன்மார்க்க அருள் நெறியை கடைபிடித்து. மெய்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழுங்கள் என்று ஆனமநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்...

நாம் தான் உண்மை உணர்ந்து..வள்ளலார் சொல்லிய வண்ணம்.ஒழுக்கத்தைப் பின்பற்றி நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்..

ஏன. என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் வள்ளலாருக்கும் மட்டுமே தொடர்பு உண்டு .அதனால் தான்

*எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ ! என்று வள்ளலார் அழுத்தமாக சொல்லுகின்றார்...*

மேலும் வள்ளலார் பாடல் !

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் -

தேவாநின்பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்யார்உளர்நீ சற்றே அறை.!

என்னும் பாடலில்

என் போல் நோவாது நோன்பு நோற்றவரும்.சாகாவரம் பெற்றவரும்.இறைவன் பூரண அருளைப் பெற்றவரும்.எந்த உலகிலும் யாரும்  இல்லை என்கிறார்...

இதைவிட உண்மை வேறு வேண்டாமே...

வள்ளலரை விட பெரிய ஞானியும் இல்லை..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு கடவுளும் இல்லை என்பதை இந்த உலகம் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அறிந்து கொள்ளும் காலம் கனிந்து வருகின்றது.எல்லாம். நல்லதே நடக்கும்..இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்..

மேலும் வள்ளலார் பாடல் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன்

சுத்தசிவசன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் -

என்மார்க்கம்நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!
.
மேலும்....

பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே

சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே -

சொன்மார்க்கத்தெல்லா உலகும் இசைந்தனவே

எம்பெருமான்கொல்லா நெறிஅருளைக் கொண்டு.!

உலகில் உள்ள பொய்யான மார்க்கங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து மறைந்து போய் விடும்..

இனி உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் மட்டுமே தழைக்கும்...

இதுதான் இறைவன் கட்டளை.இறைவன் ஆணை..

இதுதான் இறைவனுக்கும் வள்ளலாருக்கும்
கிடைத்த சரியான இணைந்த பொருத்தமாகும்..

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே..
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

என்னும் பாடல் வாயிலாக அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஒங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர் வேல்.