புதன், 26 பிப்ரவரி, 2020

உண்மை உரைக்கின்றேன் !

உண்மை உரைக்கின்றேன் !

உண்மை உரைத்தாலும் இவ்வுலகத்தார் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்கிறார் வள்ளலார்.

ஏன் என்றால் ? புணைந்து உரைத்த பொய்யான கற்பனைக் கதைகளின் மூடநம்பிக்கைகள் அவர்களின் ஆன்மாவில் நிறைந்து அழுத்தமாக பதிவாகி உள்ளன.

*வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கினால் சில உண்மைகள் தெரியவரும்*.

வள்ளலார் சிறு குழந்தைப் பருவத்தில் தாய் தந்தையோரோடு சிதம்பர தரிசனத்திற்கு சென்ற போது .சிதம்பர ரகசியத்தை வெட்ட வெளியாக இறைவன் காட்டியுள்ளார்.

அடுத்து அப்பா இறந்துபோன பிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு  தாய் சின்னம்மை அவர்கள். தன்பிறந்த ஊரான சின்னகாவணம் சென்றார்.

அங்கு குடும்பம் நடத்த போதிய வருமானம் போதவில்லை என்று குடும்பத்தோடு சென்னைக்கு வந்து விடுகிறார்கள்.

வள்ளலாரின் சிறுவயது ஆறுவயது முதல் பண்ணிரண்டு வயதிற்கு மேல் சமய தெய்வங்களைப் பற்றி பாடியும் எழுதியும் வருகின்றார். 35 வயது வரை பல பக்தி சார்ந்த .சமயம் சார்ந்த .மதம் சார்ந்த தெய்வங்களையும் பாடி பக்தியின் உச்சிக்கு சென்றுவிடுகின்றார்.

வள்ளலார் பாடிய பக்தி பாடல்கள் மற்றும்.சமய தெய்வங்களான எல்லா தெய்வங்களையும்  எவருமே பாட முடியாத அளவிற்கு ஆழ்ந்த கருத்தாழமுள்ள சமய மதக் கருத்துக்களை வெளியிடுகிறார்.போற்றி புகழ்கின்றார்.

*சமய மதங்கள் யாவும் பொய்*!

அடுத்து சமய மத வழிப்பாடுகள் கடவுள்கள் எல்லாமே பொய் என்று வெளிப்படையாக போட்டு உடைக்கின்றார். ஆனாலும் உண்மையான கடவுள் யார் என்பதைச் சொல்லவில்லை. எதன் மூலம் போட்டு உடைக்கின்றார் என்றால் ?

*ஜீவகாருண்யம்*

ஏழைகளின் பசியை போக்குவதே ஜீவகாருண்யம்  என்றும்.ஏழைகளின் பசிக்கொடுமைப் பற்றியும்.பசிப்பிணியைப்பற்றியும். அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து .இதுவரையில் எவரும் சொல்லாத வண்ணம் சொல்கிறார்.

ஜீவ காருண்யமே ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்றும் .அருள் பெறுவதற்கு ஜீவகாருண்யத்தை விட்டால் வேறு வழியே கிடையாது என்றும்.ஜீவகாருண்யமே ஞான வழி என்றும் அருள் பெறும் வழி என்றும். அழுத்தமாக சொல்லுகின்றார்.

ஆன்மா!

ஆன்மாவைப் பற்றியும் .ஆன்ம லாபத்தைப் பற்றியும்.. இயற்கை உண்மை வடிவனரான இறைவன் என்றும்  . இயற்கை விளக்கம் செய்விக்கின்ற அருளைப் பற்றியும். கடவுளின் பூரண  இயற்கை இன்பத்தைப்பற்றியும் மிக மிகவும் அழுத்தமாகவும் சொல்லி வருகின்றார்

*ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் உண்மைக் கடவுள் என்னும் உண்மையை எங்கும் சொல்லவில்லை*

*இயற்கை உண்மைக் கடவுள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் வெளிப்படுத்தாது ஏன்.? என்ற கேள்வி எழுவது நியாயம். தானே*.

ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலை மூன்று பிரிவுகளை எழுதியுள்ளார்.

அதிலே இறுதியாக  இதன் தொடர்ச்சி கூடிய விரைவில் வெளிப்படுமாறு இறைவன் திருவருள் புரிவாராக என்று முடிக்கிறார்.

சமய மதங்களைப்பற்றியும் சமயக் கடவுள்களைப்பற்றியும். போற்றியும்.பெருமைப்பட  பாடியும் வணங்கியும்.பின்பு சமய மதங்கள் எல்லாம் பொய் என்றும்.எல்லாம் தத்துவங்கள் என்றும்.சமய.மதக் கடவுள்கள் யாவும் பொய் என்றும்.அவற்றை நம்ப வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு *அங்கும் உண்மைக்கடவுள் யார் என்பதைச் சொல்லவில்லை*..

1865 இல் சமரச வேத சங்கம் என்றும் ஆரம்பித்து அடுத்து ஷடாந்த சமரச சன்மார்க்கம் என்று ஆரம்பித்து.1872 ஆம் ஆண்டு நிரந்தரமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் மாற்றம் செய்கிறார்.

1867 ஆண்டு தருமச்சாலை தொடங்குகிறார் அன்று ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பெயரில்.நான்கு ஒழுக்கங்களை வெளியிடுகின்றார்.

அதிலே இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்.என்ற நான்கு ஒழுக்கங்களை ப்பற்றியும் வெளியிடுகிறார்.

ஜீவகாருண்யமே உலகில் சிறந்தது என்று சொல்லிவிட்டு.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று சொல்லிவிட்டு. தனிமனித ஒழுக்கத்தைப்பற்றி சொல்லுகின்றார்.  *அந்த நூலிலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப்பற்றி எந்த இடத்திலும் சுட்டிக் காட்டவில்லை*..

இந்த செய்திகள் எல்லாம் 1870 ஆண்டுவரை வள்ளலார் வாழ்க்கையில் நடந்து வருகின்றது.

*அதற்கு மேல் தன்னுடைய நிலைகளை முழுவதுமாக மாற்றிக் கொள்கிறார்*.

முதல் ஜந்து முறைகளில் சொல்லியதை முழுவதுமாக மாற்றிக் ஆறாம் திருமுறைகளில் புதிய கொள்கைகளையும்.புதிய கருத்துக்களையும்.புதிய பரிமாற்றங்களையும். புதிய உண்மைக் கடவுள் யார் என்பதையும் வெளிப்படுத்தி முழுவதுமாக மாற்றிக் கொள்கிறார்.

ஆறாம் திருமுறையின் பாடல்கள் .விண்ணப்பங்கள். மெய்மொழி விளக்கம்.பேருபதேசம் போன்ற உபதேசங்கள்.போன்ற அனைத்தும். கண்களை விழித்து  நோக்கும் அளவிற்கு முக்கியமானது.கற்பனைகள் அற்ற முற்போக்கு அறிவியல் சார்ந்த சிந்தனைகள் கொண்டவைகளாகும்.

ஆறாம் திருமுறையில் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற வார்த்தைகளை தேடிபிடிக்க வேண்டி உள்ளது.பரோபகாரம் சத்விசாரம் என்ற கொள்கைகளை மட்டுமே வலியுறுத்துகின்றார்.அதற்கு மேல் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கிறார்.

பேருபதேசத்தில் மிகத் தெளிவான வார்த்தைகளை கையாளுகின்றார்.

இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: 

அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அழுத்தமாக சொல்லிய வள்ளலார்.ஜீவகாருண்யத்தால் மட்டுமே அருளைப் பெறமுடியும். என்றவர் கடவுள் வழிப்பாட்டிற்காக சத்திய ஞானசபையை தோற்று வித்ததின் மூலம் பழைய கொள்கைகள் யாவையும் அடியோடு மாற்றம் செய்கின்றார்.

மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்கிறார்.

எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தணையே ஏத்து ...என்கிறார்.

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விரைவில்...என்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை உள்ளவர் எனவே எங்க கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி என்கிறார்.

மேலும் அருளைப்பெறும் வழிகளை புதிய கோணத்தில் பேருபதேசத்தில்  விளக்கம் தருகின்றார்.

ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. 

அந்த விசாரத்தைவிட *ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும்* அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.

 இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், *தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும்* - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

என்கிறார்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டும். பக்தியால் பெற முடியாததை.ஜீவகாருண்யத்தால் பெற முடியாததை எல்லாம்.உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதாலும்.நினைக்கின்றதிலும் கோடி கோடி பங்கு அதிக உஷ்ணம் உண்டு பண்ணி அருளைப் பெறலாம் என்கிறார்.

மேலும் மனதில் இக் விசாரம் இன்றிப் பரவிசாரணையுடன் ஆன்ம நெகிழ்ச்சி யோடு தெய்வத்தை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்.

இறுதியாக ஞானசரியை 28 பாடல்களைச் சுட்டிக்காட்டி. அதில் சொல்லிய வண்ணம் வாழ்க்கை அமைத்துக் கொண்டால் மரணத்தை வென்று விடலாம் என்கிறார்.

ஞானசரியை முதல் பாடலே அருளைப்பெற  அச்சாணி போன்ற பாடலாகும்.

பாடல் ! 



புனைந்து உரைக்கவில்லை.பொய் புகலவில்லை.சத்தியம் சொல்கிறேன். உண்மை உரைக்கின்றேன் என்று ஆறாம் திருமுறை அருட்பா வை நிறைவு செய்கின்றார்.

நாம் எதைத் தேடிச் செல்கிறோமோ அவை கண்டிப்பாக கிடைக்கும்.நாம் அடைய வேண்டியது மரணம் இல்லாப் பெருவாழ்வு.

வெற்றி பெறுபவர்களே பாக்கியவான்கள் ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

பஞ்ச பூத தேகம் ஒளி தேகம் மாற்றம் !

*ஒளி தேகம் மாற்றம்* !

பஞ்ச பூத தேகம்!  ஒளி தேகம் மாற்றம் !

நம்மை இயக்கும் ஆன்மாவைப் பார்த்தால் ஒழிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பார்க்க முடியாது. ஆன்மாவை புற ஊனக் கண்களால் பார்க்க முடியாது.அருள் கண்களால் மட்டுமே பார்க்க முடியும்.தொடர்பு கொள்ள முடியும்.

எல்லா உயிர்களையும் ஆன்ம ஒளியாக இருந்து இயக்குபவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

எனவே தான் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்று வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.
மனித தேகம் எடுத்த நாம்.
இந்த அசுத்த பூத காரிய தேகம் எவ்வாறு பின்னப்பட்டது. எதனால் பின்னப்பட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்

இந்த தேகத்தை இயக்க உயிர். மற்றும் உள் ஒளி எப்படி வந்தது என்ற உண்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே உடம்பையும் உயிரையும் உள் ஒளி என்னும் ஆன்மாவையும் பாதுகாக்கும் வழியை தெரிந்துகொள்ளலாம்.

உள்ளொளி என்னும் ஆன்மாவானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டது  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடமானது  அருட்பெரு வெளி என்பதாகும். அதற்கு பர வெளி என்றும் அருட்பெரு வெளி என்றும் பெயர்.

அப் பரவெளியில் அருள்சக்தி நிறைந்து இருக்கின்றன. அதற்கு கடவுள் சமூகம் என்று பெயர் அந்த  சமூகத்தில் ஆன்ம ஆகாசம் என்ற ஒரு தனி இடம் உண்டு அங்கு ஆன்மாக்கள் நிறைந்து இருக்கின்றன அதற்கு ஆன்ம அணுக்கள் என்று பெயர். ஆன்ம அணுக்கள் வெளியே செல்ல செல்ல குறையாமல் நிறைந்து கொண்டே இருக்கும்.

*அந்த ஆன்மாக்களுக்கு வள்ளலார் சொல்லும் விளக்கத்தை பார்ப்போம்*!

இயற்கை உண்மை நிறைவாகி உள்ள  சுத்த சிவாஅனுபவ வெளியில் இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ் ஜோதி சொரூப ராய் இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பம் அடைதற் பொருட்டு திருஉளக் கருணையால் செய்து அருள்கின்ற சர்வ வல்லவர் ஆகிய தனித்தன்மை கடவுளே!

அறிவு என்பது ஓர் சிறிதும் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்த காரத்தில் நெடுங்காலம் சிற்றணுப் பசுவாகி அருகிக்கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி இருந்து .அப்பாசாந்தகாரத்தினின்றும் எடுத்து.எல்லா பிறப்பு உடம்புகளிலும் உயர்வு உடைத்தாகிய அறிவுள்ள இம்மனிதப் பிறப்பு உடம்பில் என்னைவிடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனும் அறிவேன்! எவ்வாறு கருதுவேன் ! என்னென்று சொல்வேன்.என்று போற்றி போற்றி புகழ்வேன்  என்கிறார் வள்ளலார் சொல்லுகின்றார்.

ஆன்மாவானது இவ்வுலகில் வாழவேண்டுமானால் அதற்கு வேண்டிய சுதந்திரம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப்பட்டு உள்ளது.

சுதந்திரம் கொடுக்கப் பெற்றதால் ஆனமாவிற்கு உயிர்.உடம்பு. கொடுக்கப்பட்டது. பஞ்சபூத உலகில் போகப்பொருட்கள் எடுக்க அனுபவிக்க தடை இல்லாமல் வழங்கப்படுகின்றது.

*ஆன்மாவானாது 84 லட்சம் யோனி பேதங்களிலும் உள்ள ஜீவன்களிடத்தும் சென்று இறுதியாக மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது. *ஆன்மா அத்தனை பிறப்புகளும் எடுத்ததால் தான்.எல்லா ஆன்மாக்களிடத்தும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கிறார் வள்ளலார்*

ஆன்மாவானது  தேக சுதந்தரம் .போக சுதந்திரம்.ஜீவசுதந்திரம் அனுபவிக்கின்றவரை அருள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.

அருள் பெறுவதற்கு எல்லாம் வல்ல *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் சுதந்தரம்  பெறவேண்டும்.என்பதை வள்ளலார் முடிந்த முடிவாக *சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில்*  தான் பெற்ற அருள் அனுபவத்தை தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.

உயர்ந்த அறிவு பெற்ற மனிதப்பிறப்பு எடுத்த நாம் *அறம்.பொருள்.இன்பத்தை குறுகிய காலத்தில் அனுபவித்து அனைத்தையும் பற்று அற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் சுதந்தரத்தைப் பெற வேண்டும்*.

திருவருள் சுதந்தரம் பெறுவதற்கு கருணை நன் முயற்சி வேண்டும் என்கிறார்.

*கருணை நன் முயற்சி எவ்வாறு பெற முடியும்* ?

ஜீவ தேகம் எடுத்துள்ள ஆன்மா எல்லா உயிர்கள் மேலும் அன்பு தயவு கொள்ள வேண்டும். *அன்பும் தயவு மட்டுமே கருணைக்கு வழிகாட்டும்* .ஆன்மாவில் கருணை நிறைந்து பொங்கி வழிய வேண்டும்.ஆன்மா மகிழ்ச்சி. நெகிழ்ச்சி.உருக்கம் அடைய வேண்டும்.

அவ்வாறு ஆன்மா அடைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணையை நாட வேண்டும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை உள்ளவர்.ஆதலால் *ஆன்மாக்களுக்கு கருணையுடன் அருள் பெறும் சுதந்தரம் வழங்குவார்*.

தேக சுதந்தரம். போக சுதந்தரம்.ஜீவ சுதந்தரத்தை நீக்கி அருள் சுதந்தரம் வழங்கும் போது பூரண அருள் பெறும். அருள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வள்ளலார் மிகத் தெளிவாகச் சொல்லுகின்றார்.!

எனது விருப்ப முயற்சி இங்கனமாக .அவத்தைகள் எல்லாவற்றையும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடுமென்று அரியத் தொடங்கிய தருணத்து.

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது. *எல்லாம் உடைய கடவுளரது திருவருள் சுதந்தரம் ஒன்றாலே பெறுதல் கூடும்* என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் என்கிறார்.

மேலும் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து. *எனது யான் என்னும் தேகசுதந்தரம்.போகசுதந்தரம்.ஜீவ சுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும். என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் என்கிறார்*.

வள்ளலார் விரும்பிய வண்ணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருள் சுதந்தரம் அளித்துள்ளார்.

வள்ளலார் பாடல்.!

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
தூயநல் உடம்பினில் புகுந்தேம்

இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்

பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
பரிசுபெற் றிடுகபொற் சபையும்

சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்கநின் சீரே.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
மனித தேகத்திற்கு தொடர்ந்து கிடைக்கின்ற நேருகின்ற *மரணம்.பிணி.மூப்பு.பயம்.துன்பம்* முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு .எக்காலத்தும்.எவ்விடத்தும்.எவ்வித்த்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ வேண்டும் என்பதே மனிதப் பிறப்பின் சத்திய அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நாம் காலத்தை வீண் விரையம் செய்யாமல்
  வள்ளலார் சொல்லிய வண்ணம் அருள் பெறுவதற்கு முயற்சியும் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

*நாம் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்*.

ஆன்மா இவ்வுலகில் வரும் போது ஏதும் அறியாத சிற்றணு பசுவாகும்.ஆன்மா உயிர் உடம்பு பெற்று சிற்றின்பத்தை அனுபவித்து வாழ்ந்து முற்றுப்பெற்று.பின்பு உண்மைத் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. *அருள் ஒளியான ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டு வாழ்வதே பேரின்ப வாழ்க்கையாகும்*.

*இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட ஆன்ம அறிவுள்ள மனிதர்களே அருளைப் பெறும் தகுதி உடையவர்கள்*.

இந்த உண்மை அறியாமல் இவ்வுலகில்  எவ்வளவு பெரிய உயர்ந்த பதவி வகித்து.உலகை ஆண்டு பேர் புகழுடன் வாழ்ந்தாலும் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் வாழ்க்கை அற்ப வாழ்க்கையாகும் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கம் தருகிறார்.

*வள்ளலார் பாடல்* ! 

கரணம்மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்

மரணபயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே

திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்
சித்திபுரம் எனஓங்கும் உத்திர சிற் சபையில்

சரணம் எனக்களித்து எனையும் தானாக்க எனது
தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே!.

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் தருகின்றார்.

இந்திரியம்.கரணம் மகிழ்ச்சி அடைவது உலகியல் பொருள் வாழ்க்கையாகும்..ஜீவன் ஆன்மா மகிழ்ச்சி அடைவது அருள் வாழ்க்கையாகும்.

மரணம் பயம் தவிர்க்காத வாழ்வதில் எந்த பயனும் இல்லை.மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு உண்டு. *எந்த பிறப்பு என்பதே தெரியாதது கொடுமையிலும் கொடுமையாகும்*. எனவேதான் இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி கொள்ளுங்கள் என்கிறார்.

நாம் இனியும் வீண்காலம் கழிக்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்வதே சிறந்த பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும். எனவேதான் *சாகாதவனே சன்மார்க்கி* என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுகின்றார்.

நாம் தயவு உடைய சன்மார்க்கம் சார்ந்தவர்களாக இருக்கிறோமேத் தவிர.அருள் உடைய சன்மார்க்கம் அடைந்தவர்களாக இல்லை. முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.முயற்சி வெற்றிபெற பல சாதி.சமய.மதக் கொள்கைகள் தடையாக இருக்கின்றது.

சாதி சமய மத சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ..

எங்குலம் என்குலம் என்பது தொண்ணூற்று ஆறு அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி.

சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

என்று ஆயிரக்கணக்கான பாடல்களிலே தெரியப்படுத்துகின்றார்.
நாம் அருளைப் பெறுவதற்கு முக்கிய தடைகளே சாதி.சமய மதங்களின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் அவற்றின் கொள்கைகளும் அதன் வழிகாட்டுதலுமேயாகும்..
சுத்த சன்மார்க்கத்திற்கு சாதனம் !

சாதனம் என்னவென்றால் ..
*எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் அன்பும்* முக்கிய சாதனமாகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது. *கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக*.

மற்று எல்லாம் மருள் நெறி எனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்று இருக்கின்றேன் என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

பழைய வாழ்கை வரலாறுகளையும் ஆன்மீக சித்தாந்தங்களையும் படித்து தெரிந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.இதுவரையில் உண்மையை தெரிந்து கொள்ளாமல் கண்டதை எல்லாம் படித்து தெரிந்து கொண்டீர்கள்.அதுவே ஆன்மாவை தெரிய வொட்டாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளாக மறைத்து கொண்டுள்ளது.

அந்த திரைகளை நீக்கி ஆனமாவைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறும் வாழ்க்கையை தெரிந்து கொள்ளவே வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வுலகிற்கு வருவிக்க வந்துள்ளார்.

இனி சுத்த சன்மார்க்க காலம் !

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும்.

*பலவகைப்பட்ட சமய பேதங்களும்*, *சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய்* சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்.

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற *பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல*.

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.!

பஞ்ச பூத அசுத்த ஆணுக்களால் பின்னப்பட்ட உடம்பை .சுத்த பிரணவ ஞான தேக அருள் ஒளி அணுக்களாக மாற்றுவதே மரணத்தைj வெல்லும் வழியாகும்.

மேலே கண்ட உண்மையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் சொல்லப்பட்டது.

படித்து தெரிந்து அறிந்து உணர்ந்து  கொண்டு உண்மையான சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

சிவராத்திரி என்றால் என்ன ?


சிவராத்திரி என்றால் வருடத்தில் ஒருநாள் தூங்காமல் கண்விழித்து சிவன் என்னும் இறைவனை நினைந்து வழிபாடு செய்வது.நம்குறைகளை துன்பங்களை நீக்க்வேண்டும் என பிரார்த்தனை செய்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகமாக உள்ளன.

மனிதர்கள் சிந்திக்க வேண்டும் !  ஒருநாள் வேண்டுதலுக்கே சிவன் துன்பத்தை போக்குகிறார் என்றால் தினமும் சிவனைத் தொடர்பு கொண்டு வழிபட்டால் துன்பமே வராமல் பாதுகாப்பார் அல்லவா ! 

வள்ளலார் ! 

இதைத்தான் வள்ளலார் இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்.இடைவிடாமல் தொடர்பு கொள்பவர்களுக்கு  தூக்கம்.துயரம் அச்சம் பயம்.துக்கம்.பசி.பிணி.மரணம் எப்போதும் வரவே வராது என்கிறார்.

இறைவனைத் தொடர்பு கொள்வது என்றால் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேரியாய் இருப்பது அல்ல.*ஒவ்வொருவரும் தனக்காகவும் பிறருக்காகவும் நியாயமான முறையில் உழைக்க வேண்டும்*.

நம்முடைய சிந்தனையை.உள்ளத்தை மனத்தை *சிற்சபையின் கண்*  இடைவிடாது செலுத்தி தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.

சிற்சபை என்பதுதான் நம் உடம்பில் ஆன்மா என்னும் உள்ஒளி இருக்கும் இடமாகும். அதிலே இறைவன் ஒளிவடிவமாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை வள்ளலார் அறிந்து தொடர்பு கொண்டு.அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளார்.

தூக்கம்! 

தூக்கம் தான் மனிதர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த வள்ளலார். தூங்காமல் இருக்கும் வழியைக் கண்டு பிடித்தார். உணவு அதிகமாக உண்பதாலும்.அதிக உடல் உழைப்பாலும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும்.என்பதை உணர்ந்த வள்ளலார் என்ன செய்தார்? 

*தூக்கமே  அதிக துன்பத்திற்கு காரணம்*.! 
*தூக்கமே  மரணத்திற்கு காரணம்* !

உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலரே ! என்கிறார்.

நம்மை படைத்தை இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டால் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ  ! என்கிறார். *இறைவனை உண்மை அன்பால் நேசிக்கின்ற தருணம் தூக்கமே  வராது*

நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாதொடர்பு கொள்ளும் போது அருள் என்பது ஆன்மாவின் வழியாக சுரந்து உடல் முழுவதும் நிறைந்து பஞ்ச பூத அணுக்களை வேதியல் முறைப்படி ஒளி அணுக்களாக மாற்றுவதே *சுத்த பிரணவ ஞான தேகம்*  என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

இறைவனை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை வள்ளலார் சொல்லுகின்றார்.



என உண்மை உணர்வை சத்தியம் வைத்த

மேலும் வள்ளலார் பாடல் ! 

என்னும் பாடலிலே தூங்காமல் இருக்கிறேன் நான். ஏன் என்றால் ? என் இறைவன் எனை வந்து இணைந்து கொள்ள வருகின்றார் .எனவே தூக்கமே  எனை அணுகாது செல் என விரட்டுகிறார்.

எனவே நாம் நாம் தினமும் சிவம் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தூங்காமல் தொடர்பு கொள்வதே சிவராத்திரியாகும்.

எல்லா இரவும் பகலும் உயிர்கள் வாழ்வதற்காக இறைவன் படைத்ததே என்பதை அறிந்து .உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
அதுவே சிறந்த சிவராத்திரி யாகும்.

விரிக்கில் பெருகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

திருக்கதவு திறப்பது எங்கனம் ?

*திருக்கதவு திறப்பது எங்கனம்*.?

நாம் வாழும் பஞ்சபூத உலகம் உருண்டை வடிவம் ஆனது. உருண்டையான உலகத்தை விட்டு வெளியே செல்ல எதற்கும் எவருக்கும் அனுமதி கிடையாது.

*அருள் பெறல் வேண்டும் அருள் பெறாமல் எதுவும் நடைபெறாது*

அருள் பெற்ற சன்மார்க்கிகள் உலகில் ஒருவரும் இல்லை. திருவருட்பா படிக்கிறார்கள் பாடுகிறார்கள் மேடையில் பேசுகிறார்கள் விழாக்கள் எடுக்கிறார்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.

*சாகாக்கலையும் சாகாக்கல்வியும் எவரும் கற்று மரணத்தை வெல்ல முடியவில்லை*. அதற்குண்டான பயிற்சி முயற்சியை பின்பற்ற வில்லை.

ஜீவகாருண்யம் என்ற பெயரில் அவர்களால் முடிந்த அன்னதானம் செய்கிறார்கள் அதுவும் மற்றவர்களிடம் வசூல் செய்து செய்கிறார்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்த பொருள்களைக் கொண்டு செய்வதில்லை இப்படி  செய்வதால் இறைவன் தொடர்பு கிடைக்குமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

தன்னை அறியாமல் செய்கின்ற செயல்கள் எதுவும் கைக்கூடாது.தன்னை அறிந்து இன்பம் உறும் தந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளை தொடர்பு கொள்ள கருணை மிகவும் அவசியமானது எனவேதான் வள்ளலார் *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும்ஜோதி* என்று தெளிவாக சொல்லியுள்ளார் கருணை என்பது அன்பு தயவு  என்பதின் வடிவமே கருணை என்பதாகும்.

அருட்பெருஞ்ஜோதி என்னும்  கடவுள் தனிப்பெரும் கருணை உள்ளவர் அவரை தொடர்பு கொண்டால் மட்டுமே ஆன்மாவை (உள்ஒளியை) மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகள் விளக்கப்படும். திரைகள் விலகுவதற்கு நாம் செய்யும் முயற்சிகள் வழிகள் ஒழுக்கங்கள் சரியானதாக உள்ளதா என்பதை சிந்தித்து உணர்ந்து செயல்பட வேண்டும். உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதற்கு இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கம் நிறைந்த தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பஞ்சபூத உலகத்தை படைத்த இறைவனை தொடர்பு கொண்டால் மட்டுமே திரைகள் விலகி அருள் பெறும்வாய்ப்பு கிட்டும்.திருக் கதவுகள் திறக்கப்படும். அருள் என்னும் திரவம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையினால் ஆன்மாவின் உள் ஒளியிலிருந்து சுரக்கும். அந்த அருள் உடல் முழுவதும் நிறைந்து வழிந்து. பூரணமாகி பஞ்சபூத உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வல்லமை உடையதாகும்.

பஞ்சபூத உடம்பை  ஒளி உடம்பாக  மாற்றுவதே  மரணம் இல்லா பெரு வாழ்வு என்பதாகும். அதாவது அசுத்த  பூத அணுக்களை சுத்த பூத அணுக்களாக மாற்றுவதாகும். இதைத்தான் ஊனுடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுதம் நல்கிய நாயகனே என்கின்றார் வள்ளலார் ஒளி உடம்பு பெற்றால் மட்டுமே உலகத்தை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுவதற்கு இறைவனால் அனுமதி வழங்கப்படும்..

*உலகத்தை படைத்த இறைவன் யார் என்பதை முதலில்  நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.

நாம் வாழும் இந்த உலகம் போல் பல கோடி அண்டங்கள்.உலகங்கள் தன்னைத் தானே இயங்கி கொண்டிருக்கின்றன நாம் வாழும் உலகம் எண்ணிலடங்கா விரிவு உடையதாகும் சுருங்கி விரியும் தன்மை உடையது.

அதேபோல் நம் உடம்பு சுருங்கவும் விரியவும்.ஒன்றும் இல்லாமல் செய்வதுமான தன்மை உடையதாகும்.

எண்ணிலடங்கா உலகங்களை படைத்தவர் யார் என்பதை கண்டு பிடித்தவர் திரு அருட்பிரகாச வள்ளலார்
என்பதை  நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
 வள்ளலார் கண்டுபிடித்த இயற்கை உண்மை கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.

ஜாதி சமயம் மதம் போன்ற கொள்கைகளையும் அவைகளில் சொல்லப்பட்ட கடவுள்களையும். பின்பற்றினால் எக்காலத்திலும் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகாது. திரைகள் விலகி அருளை பெறுவதற்கு ஒரே வழி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் பெற முடியும் என்பதை உண்மையாக சத்தியமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் உள்ளவர்கள் இந்த பிறப்பினால் அடையக்கூடிய லாபம் ஆன்ம லாபமே! அந்த ஆன்ம லாபத்தை காலம் உள்ளபோதே பெற்றுக் கொள்வதே இறைவன் கட்டளையாகும். இதுவரை இந்த உண்மை மனிதகுலத்திற்கு தெரியாமல் இருந்தது இதுசமயம் வள்ளளர் தெளிவாக தெரிவித்து உள்ளார்.

மனித குலத்திற்காக புதுமையான பொதுமையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சாலை சபை என்ற 3 மூன்று வழிகளை மனிதகுலத்திற்கு காட்டியுள்ளார் அவற்றில் சொல்லப்பட்ட வழிமுறைகளை தெளிவாக அறிந்து புரிந்து தெரிந்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே பெற வேண்டியதை பெற்றுக்கொள்ள முடியும்.

சமய மத வாதிகள் போல் சன்மார்க்கம் சார்ந்தவர்களும் ஒன்று கிடக்க ஒன்றை உளறிக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் மக்கள் குழம்பிக் கொண்டும்  புலம்பிக் கொண்டும் உள்ளார்கள்.

வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை சபை வள்ளலார் சொல்லியவண்ணம் நடைபெறவில்லை அவற்றை செயல்படுத்த தகுதியானவர்கள் எவரும் இல்லை இதுவே இன்றைய நிலையாக உள்ளன. கூடிய விரைவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திரு அருளால் வள்ளலார் எண்ணத்தின் படி கொள்கையின்படி சிறப்பாக நடைபெறும் காலம் விரைவாக வந்து கொண்டிருக்கிறது.

நாம் செய்ய வேண்டியது உண்மை ஒழுக்க நெறியான சுத்த சன்மார்க்க கொள்கைகளை திசை மாறாமல்.நேர் வழியில் சென்று.வள்ளலார் சொல்லிய ஒழுக்கத்தை பூரணமாக கடைபிடித்து. ஆன்மாவை மறைத்து கொண்டு இருக்கும் மாயா திரைகளை விளக்கி நீக்கி திருக்கதவை திறக்கவேண்டும்.

 வள்ளலார் திருக் கதவை திறப்பதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் வேண்டுதல் எவ்வண்ணம் செய்கிறார் என்பதை கீழ்வரும் பாடல்களில் தெளிவாக  தெரிவிக்கின்றார்

வள்ளலார் பாடல் !

  • 1. திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
    திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
    உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
    ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
    கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
    கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
    செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 2. மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
    மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
    கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
    கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
    தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
    தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
    திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 3. உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
    உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
    இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
    என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
    கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
    கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
    திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 4. உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
    உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
    அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
    அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
    என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
    என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
    தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 5. இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
    இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
    புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
    பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
    பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
    பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
    திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 6. பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
    பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
    மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
    விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
    பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
    பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
    செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 7. கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
    கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
    நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
    நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
    ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
    இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
    தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 8. வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
    விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
    ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
    ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
    தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 9. கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
    கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
    மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
    வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
    உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
    உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
    சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 10. திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
    திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
    கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
    கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
    உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
    தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
    திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

மேலே கண்ட பாடல்களில் எளிய தமிழில் தெளிவாக அனைவரும் புரியும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.

ஆன்மாவை மறைத்துக் மறைத்து கொண்டு உள்ள திரைகளை நீக்கும் வழிமுறைகளை மிகத்தெளிவாக தெரிவித்து உள்ளார் மேலே கண்ட பாடல்களில் உள்ளபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்புகொண்டு வேண்டினால் பெற வேண்டியதை நிச்சயம் பெற்றுக்கொள்ளலாம்.

வள்ளலார் காட்டிய நேர்வழியில் சென்றால் மட்டுமே திருக்கதவு  திறந்து அருள் பெறும் வாய்ப்பு உள்ளன.

இன்று உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் பேசப்படுகிறது.அந்த வேலையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே செய்து கொண்டுள்ளார்.

*சுத்த சன்மார்க்க தார்க்கு  சாகாக்கலை.சாகாக்கல்வியின் தரமான அதி தீவிர முயற்சியும் பயிற்சியும் அவசியம் தேவை.அதற்காக பெரு முயற்சி எடுத்து வருகிறேன் அதற்கான நல்வழியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அமைத்துக் கொடுப்பார்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

தச வாயுக்கள் !

#நமது பிண்டத்தில் தச வாயுக்கள் ஒன்றினைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. அவை தொடர்பாக சித்தர்கள் சொன்ன ரகசியங்களை நாம் தற்போது நேரடியாக கற்பிக்கும் திருமந்திர whatsaap வகுப்பில் பகிர்ந்த சில விடயங்களை  இன்று நம் சித்தர்களின் குரலில் பார்ப்போம்.....

1. உயிர் காற்று (பிராணன்) - மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.

2. மலக் காற்று  (அபானன்) - கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.

3. தொழிற் காற்று (வியானன்) - நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை                                      கொண்டுசெல்லும்

4. ஒலிக் காற்று (உதானன்) - இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை                                     வெளிப்படுத்தும்

5. நிரவுக் காற்று (சமானன்) - சத்துக்களை உடல்முழுதும் சமஅளவில்                                                கொண்டுச்சேர்ப்பது.

6. விழிக் காற்று (நாகன்) - பார்வைத்திறன் அளிப்பது, உணர்ச்சிகளை                                         தூண்டக்கூடியது

7. இமைக் காற்று (கூர்மன்) - கண்ணீரை வரவழைத்த்ல், சிரித்தல் போன்றவைகளுக்கு                           காரணமாக உள்ளது.

8. தும்மல் காற்று (கிருகன்) - நாவில் சுரப்பையும், பசி, தும்மலுக்கு காரணம்

9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) - கொட்டாவி விடுதல், விக்கலுக்குக் காரணம்

10.வீங்கக் காற்று (தனஞ்செயன்) - கோமா (நினைவற்றநிலை), உடலை                                          வீங்கச்செய்தல் போன்றவைகளுக்குக் காரணம்

#இந்த பத்து வாயுக்கள் (தச வாயுக்கள்) தவிர வேறு சில வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவற்றுள் முக்கியமாவை என கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.

●  முக்கியன் - உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.

●  வைரவன் - கபத்தை உருவாக்கும்.

●  அந்திரியாமி - பிராணனை உருவாக்குதல்.

●  பிரவஞ்சனை - பிராணவாயுவின் நண்பன், இக்காற்றின் துணையுடன்தான் சுவாசம்                   நடக்கிறது.

#மேற்கண்ட முக்கியமான் பத்து காற்றுகளும், ஒரு மனிதன் இறக்கும்போது என்ன செய்துக்கொண்டிருக்கும்?

#முதலில் இவ்வுடலைவிட்டு பிரிவது உயிர்காற்றும், நிரவுக்காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்துவிட்டதாக, பிணமாகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. கவனிக்கவும் மற்ற காற்றுகள் அந்த பிணமான உடலில் இருந்துக்கொண்டிருக்கும். ஒருவர் இறந்துவிட்டால் உயிர்சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்துவிடுவதில்லை. #இறந்த உடலில் 11 நாட்களிலிருந்து 40 நாட்கள் வரை உடலைவிட்டுச் சென்றுவிட்ட அந்த இரண்டு வாயுக்களைத் தவிர மற்றவை அதன் அதன் வேலைகளை நமது பிண உடலில் செய்து விட்டு நிம்மதியாக தங்கள் வீட்டைவிட்டு செல்கின்றன.

#அதுவரை நமது பிண உடலில் முடியும், நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல்பட்டிருக்கின்றதை உணரலாம். உடலை விட்டு உயிர் பிரிவது மெதுவாகவே நடைபெறுகிறது. எப்படி இவ்வுடல் உருவாக பத்து மாதத்திற்கு நமக்கு கருப்பை தேவைப்பட்டதோ அதுபோல இவ்வுடல் அழிய மண்குழியில் பல வருடங்கள் இருக்க வேண்டியதுதான் இயற்கை.

#இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும். இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும்,நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல்  இதன் வேலைகளாகும். எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும். பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.

#இதற்காகத்தான் நமது பிணங்களை கண்டிப்பாக 'சாகாஅருளர் வள்ளலார்' அவர்கள் புதைக்க சொல்கிறார். மாறாக புதைக்காமல் எரித்துவிட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்யவிடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலும் ஒரு மனிதக் கொலைக்குச் சமமே. மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக்கூடிய தனஞ்செயன் வாயு, இடுக்காட்டில் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் 'டப்' என்று சப்தத்துடன் வெடித்து (துன்பத்துடன், அப்பிணத்திற்கே சாபமிட்டு) வெளியேறும்.

#இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.

#சில யோகிகள் / கடின சித்தர்கள் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் தாம் இறக்கும்போது எடுத்துக்கொண்டு முழுமையாக உடலைவிட்டு விலகுவார்கள். தாம் இறந்தப் பிறகு தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இவ்வித சமாதியும் தவறான செயல்களாகும்.

#ஆனால், ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித

வாயுக்களுமே வெளிவருவது இல்லை, எனவே இவர்கள் விரும்பும்போதோ அல்லது இறைவன் விரும்பும் போதோ இவர்களால் மீண்டும் இவ்வுலகில் உலா வரயியலும். இவர்களுக்கும் மரணிப்பதற்கு கால நிர்ணயம் உண்டு. எனவே இவ்வகையான ஜீவசமாதி பழக்கத்தை 'சாகாஅருளர் வள்ளலார்' கைவிடச் சொல்கிறார்.

#இதில் என்ன வேடிக்கை என்றால், நம்மால் கடின சித்தர்கள் யார்? ஜீவ சமாதி அடைந்தவர்கள் யார்? என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது அனுபவம் அவர்களுக்குத்தான் தெரியும். பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறியும்!

புதன், 12 பிப்ரவரி, 2020

அருட்பெருஞ்ஜோதி தரிசனம்!

🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

        *🌻உத்தர ஞான சித்தபுரமும் ஊனுடம்பை ஒளி உடம்பாக்கிய சித்திவளாகமும்🌻*
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
       
        ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏
 
    " *சொல் இன்றிப் பொருள் விளங்காது"*
     " *பொருள் இன்றி சொல் தோன்றாது "*

ஆம்,
ஒரு சொல் இல்லாமல் எந்தப் பொருளும் விளங்காது .
அதேபோன்று ஒரு பொருளைக்கொண்ட
தான் அதற்கு ஒரு சொல்லே தோன்றும் "

அதே போன்று ,
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரால் சூட்டப்பெற்ற, சொல்லப்பெற்ற, அருளப்பெற்ற, சொற்களும் வார்த்தைகளும் பெயர்களும் ஆகிய எல்லாம் திருவருளால் சொல்லப்பட்ட காரிய காரண சித்தியை அளிக்கக்கூடிய  மந்திரச் சொற்களும் வார்த்தைகளும் பெயர்களுமேயாகும் 🌻

அந்த வகையில் ,
ஆன்மத் திருக்கோயிலாக,
பூரண இயற்கை உண்மைக் கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்,

பூரண இயற்கை விளக்கத்துடன்,
பூரண இயற்கை இன்பத்தை எல்லாஉயிர்களுக்கும் அருள்பாலிக்கும் வண்ணம் அருட்பெருஞ்ஜோதி சொரூபத்தில் வீற்றிருக்கும் சத்தியஞானசபை தெய்வப்பதியை  ,

வடலூர் என்றும் பார்வதிபுரம் என்றும் இவ்வுலகவர்களால் பெயரிட்டு அழைக்கப்பட்ட
போதிலும் ,

அதற்கு *திருவருளால் ஆக்கப்பெற்ற காரிய காரண சித்திப் பெயர் உத்தரஞான சித்திப்புரம் என்பதும், உத்தரஞான சிதம்பரம் என்பதுமாகும்* 🌻

உத்தரம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கக்கூடியது என்பது பொருள் ,
அப்படி *எல்லாவற்றையும் செய்யவல்ல சர்வசித்தி வல்லபமாம் "ஞானசித்தியை"* அளிக்கக்கூடிய *சித்திப்புரம்* என்றும் *ஞான சிதம்பரம்* என்றும் வடலூருக்கு திருவருளால் பெயரிடப்பட்டது . 🌻🔥🙏

அதே போன்று,
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருள் காரண காரிய நிமித்தமாக, தருமச்சாலையில் அன்பர்களின் வருகை அதிகமாகவே,
அமைதி வேண்டி வடலூரிலிருந்து தென்மேற்கு திசையில் 5 கிலோமீட்டரில் உள்ள மேட்டுக்குப்பம் என்ற கிராமத்திற்கு 1870 ஆம் ஆண்டு சென்று தங்கி வாழ்ந்து வந்தார்கள்.

அங்கு  தான் அடைந்த அற்புத சித்திகளை எல்லாம் பெருமான் யாருக்கும் வெளிக்காட்டாத வண்ணம் அமைதியாக உரைந்தார்கள்(தங்கினார்கள்).

 *அப்படி பெருமான் தான் தங்கியிருந்த கட்டிடமாகிய திருமாளிகைக்கு சித்திவளாகம் என்று பெருமானே பெயரிட்டார்கள் .*

 *சித்திவளாகம் என்றால் வீடுபேறாகிய மோட்சத்தை அளிக்கக்கூடிய இடம் என்று பொருள்* 🌺🔥

அந்த சித்திவளாகத் திருமாளிகையில் நமது திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் மரணமிலாப் பெருவாழ்வைத் தரும் தனது மார்க்கமாகிய சுத்தசன்மார்க்கத்திற்கு என்று ஓர் கொடியைக் கட்டி அத்திருமாளிகையிலேயே நீண்ட நெடிய பேருரையாற்றினார்கள் .
அந்தப் பேருரைக்கு சுத்தசன்மார்க்க சங்கத்தார்கள் *பேருபதேசம்* என்று பெயரிட்டார்கள் 🌺

அந்த புண்ணியத் தலத்தில்தான் நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான்1870 முதல் அருட்பெருஞ்ஜோதியாய் கலந்து நிறைந்த 1874 நான்காம் ஆண்டுவரை தங்கி வாழ்ந்தார்கள்.

அதற்கு முன்பு ,
1873 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் திருமாளிகையின் உள்ளிருந்த விளக்கை திருமாளிகையின் புறத்தில் எடுத்து வைத்து,

அங்கிருந்த சுத்தசன்மார்க்க சங்கத்து அடியார்களுக்கும் கிராமத்து வாசிகளுக்கும் ,
 *ஆண்டவர் தற்போது தீபமுன்னிலையில் விளங்குவதால் , உங்களுடைய காலங்களை இதுவரை வீணிற் கழித்ததுபோல் இனியும் கழித்திடாமல் இத்தீபத்தைக் கண்டு வழிபட்டு வாருங்கள்* .

நான் தற்போது சிலதினங்கள் *இவ்வறைக்குள் சென்று கதவை சாத்திடப்  போகின்றேன்,   யாரும் கதவை திறந்திட வேண்டாம் .*

 *அவ்வாறு யாரேனும் அவநம்பிக்கைக்கொண்டு திறக்க நேரிட்டால் நமது ஆண்டவர் என்னை உங்கள் யாருக்கும் தோன்றும்படி காட்டிக்கொடார்* .

 *வெறும் வீடாகத்தான் இருக்கும்படி செய்வீப்பார்கள்* என்று கூறிய  நமது பெருமான்,

 *திருவருட்பா ஆறாம் திருமுறை தலைப்பு 56 இறை இன்பக் குழைவு  (அமையங்கூறல் )*

அமையங்கூறல் என்றால் தமக்கு வாய்த்த சமயம் ,தருணம் இதுதான் என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானின் திருவுளத்தில் தாமே வந்தமர்ந்தருளி, சித்திகள் எல்லாவற்றையும் வழங்கி சாகா வரம்கொடுத்து  இரண்டறக் கலந்து நிறைந்த தருணத்தில் தாம் அடைந்த பேரின்பத்தை (இறை இன்பத்தை) பத்துபாடல்களின் வாயிலாக பெருமான் தெரிவிக்கின்றார்கள் 🌻🙏

அதில் முதல் பாடலாகிய கருவில் கலந்த துணையே என்று ஆரம்பிக்கும் பாடலின் இறுதிவரிக்கும் முதல்வரியில் ,

 *தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே,*

" *உலகத் திரளெல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே;*

என்று ,
அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவரே ,
வீதீயில் விளையாடித் திரியும் சிறியவனாகிய எனக்கு " *மெய்யஞ்ஞான சித்தியாகிய" எல்லாம் செய்யவல்ல சர்வசித்தியை எனக்கு அளித்தருளிய பெருங்கருணையுடைய ஆண்டவரே !*

இவ்வுலகில் தேகாதி உலகமெல்லாம் செய்ய வல்ல மெய்ஞ்ஞான சர்வசித்தியை எனக்கு கொடுத்தருளினீர்கள் ,

 *இத்தருணம்தான் இவ்வுலக உயிர்களின் அகம்புகுந்து அவர்களது உயிரைத் தழுவி வாழ்வதற்கு எனக்கு வாய்த்த தருணம் ,  என்று எனது வாயே பறையாகக்கொண்டு (முரசாகக்கொண்டு) அறைகின்றேன் (சொல்லுகிகின்றேன்) எனது தந்தை என்மீதுகொண்ட மேலான கருணை வலத்தினாலே*  என்று ,

இந்தப் பாடலில் ,
நமது பெருமான் ,
தனக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,
மலநிவர்த்தி செய்து,
இதுவரை தடையாக இருந்த மற்றத் தடைகளையெல்லாம் நீக்கியளித்து மெய்ஞானசித்தி வல்லபத்தை தந்தருளி, பெருமானாரது உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்தருளிய பேரின்பத்தை இறை இன்பக்குழைவாக பெருமான் கூறும் இப்பாடல்களின் வாயிலாக ,

 *தான் பின்னாளில் அருட்பெருஞ்ஜோதி பேரொளியில் கலந்து இவ்வுலக உயிர்கள்  அனைத்திலும் புகுந்துகொள்ள இருப்பதை வாயை பறையாகக் கொண்டு அறைந்தார்கள்* 🔥🌺

அவ்வாறு கூறிய வண்ணமே அதற்குரிய தருணம் வந்தவுடன் இவ்வுலகவர்களின் ஊனக்கண்களுக்குத் தெரியாவண்ணம்   *1874 தை மாதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் அருட்பேரொளியில் இரண்டறக் கலந்து நமது ஊனக்கண்ணிற்கு தோன்றாவண்ணம் மறைந்தார்கள்.*
அந்நாள் வரையில் நமது பெருமான் சித்திவளாகத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள் 🌻

உலக அறிவிப்புப் பத்திரிக்கை என்று, 8:9:1873 அன்று சித்திவளாக விளம்பரம் என்ற தலைப்புடைய திருமுகத்தில்கூட ,

ஞானசித்திபுரம் என்றும், உத்தரஞானசிதம்பரம் என்றும் பிரமாணிக்கப்படுகின்ற வடலூர் சத்திய ஞானசபைக்கு முக்கிய சம்பந்த முடையதாகி அடுத்த கருங்குழி எல்லை மேட்டுக்குப்பத்தில் வழிபடப்படுகின்ற சித்திவளாகத்தில் என்று குறிப்பிட்டுள்ளார்கள் 🌻

ஆகலில் ,
 *வடலூர் சத்தியஞானசபைக்கும்,மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கும் உள்ள தொடர்பு என்பது,*

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் , அற்புத சித்திகளை வழங்கும் அருட்பெருஞ்ஜோதியின் அருட்சக்திக்கும் உள்ள தொடர்பேயாகும்* என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது அவசியமாகும்🌻🔥🙏

ஆகலில் ,
08: 02:2020 அன்று வடலூர் தைப்பூசத்திற்கு வருகின்ற அன்பர்கள் அனைவரும் 10 :2:2020 அன்று மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு சென்று ,அன்றைய தினம் பெருமான் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்த திருவறையை அன்பர்கள் அனைவரும் தரிசிக்கும் வண்ணம் அறை ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து தரிசிக்க செய்வார்கள் 🌻🌺🔥

அதன்பொருட்டு நாமும் அங்கு சென்று *வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதியாய் இயற்கையில் கலந்து நம் அணைவரின் உளத்திலும் வந்தமர்ந்த இத்திருத்தலத்தில்* நாமும் அமைதியாய் அமர்ந்து ,
நமது சிறுமைகளை எல்லாம் திருவருள் சன்னிதானத்தில் உன்னி நின்று ,
வினையைப் போக்க துணையைநாடி அருட்பெருஞ்ஜோதியின் அருளை நாடுவொம் !அமைதியான வாழ்வைப் பெறுவோம் !
....நன்றி 🔥🙏
...வள்ளல் மலரடிப் போற்றி! போற்றி!🔥🙏
...பெருமான் துணையில் 🔥🙏
...தயவுடன் வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ் ;

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மறைந்து போன செய்தி !

*மறைந்து போன செய்தி* !

வடலூரில் வள்ளலார் ஞானசபை தோற்றுவித்தது 1872 ஆம் ஆண்டாகும்

*ஏழு திரை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காட்டியது எந்த ஆண்டு என்று தெரியவில்லை*.

*வள்ளலார் ஏழு திரையை தொங்கவிட்டு.அவற்றை நீக்கி  ஜோதி தரிசனம் காட்டியதாக அருட்பாவில் ஆதாரம் இல்லை*.

ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் ஏழு என்பதும் அதன் வண்ணங்களும்.அருட்பெருஞ்ஜோதி அகவலிலும்.
உரைநடைப்பகுதியிலும் தெரியப்படுத்தி உள்ளார் வள்ளலார்.

வள்ளலார் சித்தி பெற்ற பிறகே *ஆடூர் சபாபதி* குருக்களால் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

*சிதம்பர ரகசியம்* !

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் காட்டும் நாளில்.சிதம்பரத்தில் உள்ள *நடராஜபதிக்கும் சிதம்பர ரகசியத்திற்கும்* வழிபாடு செய்வதில்லை என்பது அக்காலகட்டத்தில் நடந்ததாக செய்தி தெரியவருகிறது.

ஏன் என்றால் ? தைப்பூச ஜோதி தரிசனத்தன்று சிதம்பர நடராஜர் வடலூர் சத்திய ஞானசபைக்கு சென்று விடுவாராம் ஆதலால் வழிபாடு அங்கு நடை பெறுவதில்லையாம்.

சிதம்பரத்தில் உள்ள பெருமாள் சாமிக்கு மட்டும் வழிபாடு நடைபெறுமாம்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜபதியைத் தான் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று வள்ளலார் சொல்லி அழைத்தாக சிதம்பரத்தில் உள்ள தீட்சதர்கள் நினைந்து அக்காலத்தில் சிதம்பர வழிபாட்டை நிறுத்தி உள்ளதற்கான செய்தி செவிவழிச் செய்தியாகும்.

தைப்பூச ஜோதிதரிசனம் முடிந்த மறுநாள் தொடங்கி எப்போதும் போல் சிதம்பர வழிபாடு நடக்குமாம்.

இது உண்மையா.?
 பொய்யா? நடந்ததா? நடக்கவில்லையா ?  என்பது ஆதாரப்பூர்வமாக  தெரியவில்லை.

எது எப்படியோ நமக்கு அவற்றைப்பற்றி தேவை இல்லை.கவலை இல்லை.

வள்ளலார் திருஅருட்பாவில் சொல்லிய வண்ணம் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள்.
சாதி.சமய.மதச் சடங்குகள் இல்லாமல்   நடைப்பெற்றால் அதுவே போதுமானதாகும். அதுவே சுத்த சன்மார்க்க அன்பர்களின் வேண்டுகோளாகும்.

இந்து சமய அறநிலையத்துறையானது. அறிவு சார்ந்த சுத்த சன்மார்க்க அனுபவம் பெற்ற பெரியவர்களைக் கொண்டு *திருஅருட்பாவில் உள்ள ஆதாரத்தைக் கொண்டு* .வழிபாடு விஷயத்தில் மிகவும் கவனமாக செயல் பட்டால் சமுதாயத்திற்கு செய்யும் புண்ணியமாகும்.

*சமய மதவாதிகளால் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களுக்கு மறைமுக ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது*.

எது நடந்தாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளலாரும் பார்த்துக் கொள்வார்கள்.

வள்ளலார் பாடல் !

சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொள அருள்

சத்திவிழா நீடித்து தழைத்தோங்க -

எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உறுக

மதத்
துள்ளல் ஒழிக தொலைந்து!

என்றும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

கடவுள் நிலை என்ன ?ஜீவர்கள் நிலை என்ன ?

கடவுள் நிலை என்ன ? ஜீவர்கள் நிலை என்ன ?

கடவுளைத் தொடர்பு கொள்வது மனிதர்களின் முக்கிய பங்காகும் அவசியமாகும்.

எந்தக் கடவுளைத் தொடர்பு கொள்வது எனபதே மிக மிக முக்கியமானதாகும்.அவசியம் தெரிந்து கொள்வதே மனித அறிவை சார்ந்ததாகும் .

நமது முன்னோர்கள் பக்தி.தவம்.யோகம் போன்றவற்றை பின் பற்றினால் இறைவன் தொடர்பு கிடைக்கும்.அருள் பெற்று முக்தி அடையலாம் என்று சொல்லி வைத்து. அவர்களும் கடைபிடித்து முக்தி அடைந்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அனைத்து அருளாளர்கள் ஞானிகள் என்று போற்றப்படுபவர்களும் ஒரே கடவுளைப்பற்றி சொல்லவில்லை.

பலப்பல தத்துவக் கடவுள்களை அவரவர்கள் சார்ந்துள்ள சமயத்தின் பெயரால்.மதத்தின் பெயரால் அமைப்பின் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட கடவுள்களை நம்பிக்கையின் பெயரால் தொடர்பு கொண்டு முக்தி பெற்றுவிட்டதாக சொல்லுகின்றார்கள்.மனிதகுலம் நம்பிக்கையோடு பின்பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.இதுதான் தொன்று தொட்டு வாழ்கின்ற ஆன்மீக சிந்தனையாளர்களின் நிலைப்பாடாக இருந்து கொண்டு வருகின்றது.

இந்த மூடநம்பிக்கையை கலை உரைத்த கற்பனைக் கதைகளை பின்பற்றி வாழ்கின்ற மனித சமுதாயத்தை தட்டி எழுப்பி விழிப்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே இயற்கை உண்மையின் நோக்கமாகும்.

*இயற்கை உண்மை என்றால் என்ன ? அதுதான் கடவுள்* ! இயற்கை உண்மைதான் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் என்ற பெயர் கொண்ட ஆன்மாவை.உயிர்கொடுத்து உடம்பு கொடுத்து   இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது..

திருக்குறள் !

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட(1705) ஒரே எழுத்து – னி.
திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
“எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

“ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
திருக்குறள் உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் வகிக்கிறது.

திருக்குறள் மெய்மொழி..பொய்யாமொழி.
உலகமொழி .உருவ வழிபாட்டை வலியுறுத்தாமல் சாதி.சமய.மதம் அற்ற ஆதிபகவனே முழுமுதற் கடவுள்.அவரே உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் என்பதை தெளிவு படுத்தும் திருக்குறள் மொழியாகும்

*மெய்மொழி என்பதால் முதன் முதலில் வடலூரில் திருக்குறள் வகுப்பு வைத்து நடத்தியவர் திருஅருட்பிரகாச வள்ளலார்.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இப்படி பல பரிணாமங்களை கொண்ட ஒரே குறள் திருக்குறள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

வள்ளலார் கொள்கைகள் !

*வள்ளலாரின் கொள்கைகள்!*

கீழே கண்ட கொள்கைகள் முழுவதையும் கடைபிடிப்பவர்களே மரணத்தை வெல்ல முடியும்.

1.கடவுள் ஒருவரே !

2. அவரே அருட்பெருஞ்ஜோதி வடிவானவர் ! அவரை உண்மை அன்பால் வழிபட வேண்டும்.

3.சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது.

4. தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது.

5. கொலை செய்யக்கூடாது. புலால் உண்ணக் கூடாது.

6.சாதி.சமயம்.மதம் போன்ற வேறுபாடுகள் கூடாது.

7.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.

8.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப
 வீட்டின் திறவு கோலாகும்.

9.புராணங்களும்.
சாத்திரங்களும்.
முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை.
எனவே அவற்றை பின்பற்ற வேண்டாம்.

10.மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.

11.காது குத்தல்.மூக்கு குத்தல் வேண்டாம்.

12.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

13.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

14.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது.

15.கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.

16.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

17.உண்மை ஒழுக்க நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறியை* மட்டுமே பின்பற்ற வேண்டும்.கடைபிடிக்க வேண்டும்.

18.உலகம் முழுவதும் தருமச்சாலை தோற்றுவித்து சங்கம் அமைக்க வேண்டும்.

19.ஒரே கடவுள் என்ற உண்மையை உலக மக்களுக்கு எடுத்துரைத்து போதிக்க வேண்டும்.

20.அன்பு தயவு கருணையுடன் வாழ வேண்டும்.

உலகில் கண்டது.கேட்டது.கற்றது.கழித்தது.உண்டது எல்லாம் அநித்தியமானது. எதிலும் உண்மையான அருள் பெறும் வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்து நித்தியமானதை தொடர்பு கொள்ள வேண்டும்.

நித்தியமானது அருட்பெருஞ்ஜோதி கடவுள் ஒன்றே என்பதை ஆன்மாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என் இனி நீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்னும் உண்மையை வெளிச்சம் போட்டு சொல்கின்றார்..நான் சொல்வது எல்லாம் உண்மை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
என்போல் நீங்களும் இன்பம் அடைதல் வேண்டும் என்பதே என் விருப்பமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பமுமாகும்.

ஏன் என்றால் ? நான் சொல்லவில்லை. ஆண்டவர் சொல்லச் சொல்லியதைத்தான் நான் சொல்லுகின்றேன் என்கிறார் வள்ளலார் .

வள்ளலார் பாடல் !

நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்
வரவெதிர்கொண்டு அவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்து அடைந்து என் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினை நீர் தான்அடைதல் குறித்தே.!

என்னும் அருள் உண்மைக்  குறிப்பை வெளிப் படுத்துகின்றார்.

வள்ளலார் சொல்லிய மேலே கண்ட ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

கடைபிடித்தால் மட்டுமே வள்ளலார் பெற்ற பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் மரணத்தை வெல்ல முடியும்.

முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கடவுளை வழிபடுவது ஏன் ?

*கடவுளை வழிபடுவது ஏன்* ?

உலகம் முழுவதும் பல கடவுள்கள் உள்ளார்கள்.

உயிர்களையும் மனித குலத்தையும்  காப்பாற்றவே கடவுள்கள் தோன்றியுள்ளார்கள்.
அவதாரம் செய்துள்ளார்கள்.என்று வேதங்கள்.ஆகமங்கள். புராணங்கள் இதிகாசங்கள் சொல்லுகின்றன்.

கடவுள் வாழும் இடமாகவும் அருள் வழங்கும் இடமாகவும்.ஆலயங்கள்.கோயில்கள்.
தேவாலயங்கள்.மசூதிகள்.புத்த கயா போன்ற இடங்களில் பல கடவுள்கள் அருள் பாலிப்பதாக ஆன்மீக வரலாறுகள் சொல்லுகின்றன.

தினமும் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும்.சினிமாக்களில்.
சீரியல்களிலும் வெளிப்படுத்துகிறார்கள்.விளம்பரப் படுத்துகிறார்கள்.

மக்களும் தங்கள் குறைகள் நீங்க வியாதிகள் நீங்க.பிரச்சினைகள் நீங்க ஆன்மீக ஆலயங்கள் விதித்த விதிகளின்படி.
அன்றாடம் கூட்டம் கூட்டமாக சென்று வழிப்பட்டு பிரார்த்தனைகள் செய்து.வழிப்பட்டு வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.

பிரச்சனைகள் தீர்ந்த்தா? நோய்கள் தீர்ந்த்தா ? வலிகள் குறைந்த்தா ? வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகியதா ?
என்றால் இல்லை என்ற பதில் தான் எல்லோர் உள்ளத்தில் இருந்தும் வருகின்றது.

*கடவுள் உண்மையில் அருள் பாலிப்பதாக இருந்தால் மருத்துவ ஆராய்ச்சிகள்.மருத்துவமனைகள் தோண்றியது ஏன்* ?

ஆன்மீக ஆலயங்களை விட மருத்துவ மனைகளிலும்.
மருந்துக் ககடைகளிலும் கூட்டம் அதிகமாக சென்று கொண்டு உள்ளார்கள்.

தீக்கமுடியாத வியாதிகள் புதிய புதியதாக வந்து கொண்டே உள்ளன. புதிய வியாதிகள் மக்களை உடனே கொன்று விடுகிறது.

*மக்கள் உடம்பை பாதுகாக்க உணவை விட மருந்துகள் தான் அதிகம் உட்கொள்கிறார்கள்*.
*இதுதான் இன்றைய நிலை*.

*நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

என்பதை மக்கள் மறந்து விட்டார்கள்.

*இன்று கொரோனோ வைரஸ் என்ற நோய் வந்து மக்களைத் தாக்க்கி உடனே மாண்டு போகிறார்கள்*.

*மக்கள் குறை தீர்க்கும் ஆலயங்களுக்குச் செல்லாமல் மருத்துவ மனைக்கு செல்வது ஏன்* ?

*குறை தீர்க்கும் கடவுள்கள் எங்கே*?

மக்கள் வணங்கும் வழிபடும் கடவுள்கள் எங்கே போய் விட்டார்கள்.சிந்திக்க வேண்டும்.

*வள்ளலார் சொல்லும் கடவுள்* !

ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்றார் .

*உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார்*.

*இறைவனால் படைக்கப்பட்ட உயிரிகளின்.அஜாக்கிரதையால் உண்டாகும் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை.போன்ற துன்பங்களை போக்குவதால் மட்டுமே தங்களின் துன்பங்களை போக்கிக் கொள்ள முடியும்*.

என்ற உண்மையை மக்களுக்கு புதிய வழிபாட்டு முறையைக் காட்டியவர் வள்ளலார்.

தீராத வியாதிகளும்.தீராத பிரச்சனைகளும். ஜீவகாருண்ய வல்லபத்தால் நீங்கிவிடும் என்கிறார்.

ஜீவகாருண்யம் என்பது தன் உழைப்பால் சம்பாதித்தத பொருளைக் கொண்டு உண்மை அன்போடு துன்பப்படும் ஜீவர்களுக்கு உதவ வேண்டும்.

மேலும் தனிமனித ஒழுக்கம் இல்லாமல் நன்மை பயக்க இயலாது என்பதை ஆணித்தரமாக பதிவு செய்து உள்ளார்.

மனிதன்
இந்திரிய ஒழுக்கம்.

கரண ஒழுக்கம் .

ஜீவ ஒழுக்கம்.

ஆன்ம ஒழுக்கம்.

என்ற நான்கு வகையான ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களுக்கு எந்த துன்பம்.துயரம்.அச்சம்.
பயம் இல்லாமல் எப்போதும் வாழமுடியும் என்கிறார் வள்ளலார்.

கடவுள் வழிபாடு என்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமே என்பதை மனிதகுலம் அறிந்து.புரிந்து.
தெரிந்து கொள்ள வேண்டும்.

பல கடவுள்கள் என்பது மக்களின் மூடநம்பிக்கை.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

என்பதை அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொண்டு.ஜீவர்களுக்கு நன்மை செய்வதே கடவுள் வழிபாடு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடல் !

மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோது இசைத்த போ தெல்லாம்

நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!

மேலே கண்ட பாடல் ஊன்றி படிக்கவும்.

மேலும் வள்ளலார் பாடல் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி நம் பொது வேண்டுதலாக இருக்க வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை!

*ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை* !

1854 ஆம் ஆண்டு மனுமுறை கண்ட வாசகம் என்ற வரலாற்றை. மனுநீதிச்சோழன் கதையை வைத்து வள்ளலார் உரைநடையாக எழுதி வெளியிட்ட நூலாகும்.

*ஒவ்வொருவரும் பல முறை படிக்க வேண்டிய நூலாகும்*.

வள்ளலார் அந்த வரலாற்றை ஏன் எழுதி வெளியிட்டார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனுநீதிச் சோழன் அரண்மனையில் நீதி கேட்டு வருபவர்களுக்காக ஆராய்ச்சி மணி ஒன்று தொங்க விடப்பட்டு இருக்கும். அந்த ஆராய்ச்சி மணி அடித்த வரலாறு இல்லை.

ஆலய வழிப்பாட்டிற்காக. மனுநீதிச்சோழன் மகன் வீதிவிடங்கன் தேர் ஓட்டிச்செல்கிறான்.
தேரின் பின் சக்கரத்தில் ஒரு பசுங்கன்று அடிப்பட்டு இறந்து விடுகின்றது.தாய்ப்பசுவானது நீதி கேட்டு அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியை தன் கொம்புகளால் அடித்து நீதி கேட்கிறது.

நீதி கேட்டு வந்த பசுவிற்காக நீதி தவறாமல்.தன் புதல்வனை தேர்காலில் படுக்க வைத்து  அக்கன்று இறந்தது போல் மகனை படுக்க வைத்து கொல்ல ஆணைபிறப்பிக்கிறார்.,

*அதற்கு வேதம் ஆகமம் புராணங்களில் சொல்லியவாறு பரிகாரங்கள் செய்து*. *பிரயாய்சித்தம் செய்தால் போதும் என்றும்*. *வேதங்களில் சொல்லி உள்ளது* என்றும். *அதனால் மகனைக் கொல்ல வேண்டாம் என்றும் மந்திரிகள் சொல்கிறார்கள்*.

மனித உயிர் உயர்ந்தது என்றும்.மற்ற உயிர்கள் தாழ்ந்தது என்றும்.அது *விதிவசத்தால் வந்து மாண்டு விட்டது* என்றும் ஏதோதோ வேதங்களில் உள்ளதை எடுத்து காட்டிச் சொல்லி மன்னனின் மனநிலையை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

மனுநீதிச்சோழன் அவர்கள் பேச்சை கேட்காமல் .இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் சமம் ஒன்றே.அதில் பேதம் கிடையாது என்கிறார்.

மந்திரிகள் சொல்வதை எவற்றையும் கேட்காமல்.ஏற்றுக் கொள்ளாமல் தானே தேரை ஓட்டிச்சென்று மகனை தேர்காலில் படுக்கவைத்து கொன்று விடுகிறார்.

பின்பு  இறைவன் அருளால் மனுசோழன் மகன் வீதிவிடங்கன்.மற்றும் பசுவின் கன்று. .மந்திரி சகலகலாவல்லபன் அனைவரையும் எழுப்பி விடுவதாக வரலாற்று கதையில் கூறும் அறிவுரையாகும்.

வள்ளலார் எழுதிய  அக்கதை முழுவதையும் படித்தால் அதில் உள்ள *ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை அறிந்து கொள்ள முடியும்*.அதில் உள்ள வசனங்கள் வார்த்தைகள் பொருள்கள் வாக்கியங்கள் படிப்போரை மெய் சிலிர்க்க வைக்கும்.

*வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள்.இதிகாசங்கள் சாத்திரங்கள் அனைத்தும் பொய்யானது*.உயிர்களுக்கு விரோதமானது என்று மனுமுறை வாசகத்தில் தெளிவுப் படுத்தி உள்ளலார் வள்ளலார்.

அரச குமாரானக இருந்தாலும்.சாதாரண உயிர்களாக இருந்தாலும்.. மிருகமான பசுவின் கன்றுக்குட்டியாக இருந்தாலும்.எல்லா உயிர்களையும் இயக்குவது. இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மா ஒன்றுதான்.

அந்த ஆன்மா ஒரேத் தன்மை உடையதுதான் என்பதை வலியுறுத்தும் வகையில் *இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம்*. உள்ளது என்பதை உணர்ந்து அறிந்து.மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவாவில் அக்கறையில் மக்கள் வேண்டுதலை ஏற்று வள்ளலார் எழுதி வெளியிடுகிறார்.

வள்ளலார் எழுதிய மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும்.

அதிலே மனுநீதிச்சோழன் நான் என்ன தவறு செய்தேன். எனக்கு தெரிந்து எந்த தவறும் நான் செய்யவில்லையே என்றும். தனக்க நேர்ந்த செய்யக்கூடாத தவறுகளை மக்களுக்காக  சுட்டிக் காட்டுகின்றார்.

அவைதான் வள்ளலார் எழுதிய கீழே உள்ள மனுமுறை கண்ட வாசகங்கள் !

வள்ளலார் பதிவு செய்துள்ள செய்யக் கூடாத செயல்கள் பின் வருமாறு !

நல்லோர் மனதை நடுங்க செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேணோ!

கலந்த சினேகரை கலகஞ் செய்தேனோ!

மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வு அழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ !

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ !

ஆசைகாட்டி மோசம் செய்தேனோ!

வரவுப் போக்கு ஒழிய வழி அடைத்தேனோ !

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ !

பசித்தோர் முகத்தைப் பாராது இருந்தேனோ !

இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ !

கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ !

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !

கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ !

கற்பழிந் தவரைக் கலந்து இருந்தேனோ !
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ !

கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ !

கருப்பம் அழித்துக் களித்து இருந்தேனோ !

குருவை வணங்கக் கூசி நின்றேனோ !

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ !

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ !

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ !

பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !

கன்றுக்குப் பால் ஊட்டாது கட்டி வைத்தேனோ !

ஊன் சுவை உண்டு உயிர் வளர்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !

அன்பு உடையவர்க்குத் துன்பம் செய்தேனோ !

குடிக்கின்ற நீர் உள்ள குளத்தை தூர்த்தேனோ !

வெய்யிலுக்கு ஒதுங்கும் விருஷம் அழித்தேனோ!

பகை கொண்டு அயலோர்  பயிர் அழித்தேனோ !

பொது மண்டபத்தைப் போய் இடித்தேனோ !

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !
சிவன் அடியாரைச் சீறி வைதேனோ !

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ !

சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்தேனோ !

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ !

தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ !

என்ன பாவம் செய்தேனோ !

இன்னதென்று அறிவேனே என்று செய்யக் கூடாத செயல்கள் எவை எவை என்று பட்டியல் இட்டு வள்ளலார் பதிவு செய்கிறார்.

எனவே *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை* என்பது வள்ளலார் வகுத்து தந்த முக்கியமான சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

இவற்றை அறிந்து தெரிந்து புரிந்து வாழ்வதே மனித வாழ்க்கை யாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.