புதன், 29 ஜூலை, 2020

ஆரிய எதிர்ப்பு திருக்குறள் !

ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்
     

ஆசியவியல் நிறுவனம்

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

இலிவர்பூல், இங்கிலாந்து

ஆனி 13-15, 2049 சூன் 27 – 29, 2018

ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே!

கட்டுரையாளர்களே!

பேராயர் எசுரா சற்குணம், அமுதன் அடிகள், இலிவர்பூல் தமிழன்பர்கள், இலண்டன் தமிழன்பர்கள் முதலான அவையோரே! அனைவருக்கும் வணக்கம்.

    வாழ்வியல் அறநூலாகிய திருக்குறள் அனைவருக்கும் பொதுவான உலக நூலாகத் திகழ்கிறது. எனவே, உலக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிரான அறஉணர்வையும் விதைக்கிறது.

    “திருவள்ளுவர் உலகின் முதல் புரட்சியாளர்” எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுகிறார். அவரே, தமிழ்நாட்டில் ஆரியத்தை எதிர்த்த முதல் புரட்சியாளர் திருவள்ளுவர் என்கிறார். சாதிப் பாகுபாட்டை வலியுறுத்தும் ஆரியத்திற்கு எதிராகத் திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள் 972) என முழங்கி உலக உயிரினங்கள் பிறப்பால் இணையே என்றார்.

  ஆரிய வேள்விக்கு எதிராக,

     அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

     உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

என்கிறார் திருவள்ளுவர்.

   இவ்வாறு. பெண்களைப் பழிக்கும் ஆரியத்திற்கு எதிராகவும் உழைப்பாளிகளை இழித்துச் சொல்லும் ஆரியத்திற்கு எதிராகவும் மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஆரியத்திற்கு எதிராகவும் எனப் பல இடங்களில் ஆரியத்தைத் திருவள்ளுவர் எதிர்க்கிறார். எனினும் திருவள்ளுவர் தம் நூலின் தொடக்கத்திலேயே ஆரிய எதிர்ப்பை உணர்த்தியுள்ளார் என்பதை உலகம் உணரவில்லை. திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்திலேயே, திருவள்ளுவர் ஆரிய நச்சுக் கருத்தை எதிர்க்கிறார்.

  திருக்குறள் முழுவதும் விரவிக்கிடக்கும் ஆரிய எதிர்ப்புக் கருத்துகளை அறிஞர்கள் பலரும் தத்தம் நூல்களிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை நாம் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் இவற்றிற்கெல்லாம் அடிப்படையான சாதிக்கோட்பாட்டை – வருணாசிரமத்தை எதிர்க்கும் வகையில் திருவள்ளுவர் திருக்குறளைத் தொடங்கியுள்ளார் என்பதையே இங்கே நாம் காணப் போகின்றோம். இக்கருத்து யாவராலும் விளக்கப்படாததால் இங்கே வலியுறுத்துகிறோம்.

    ஆரியத்தின் ஆணிவேர் கருத்து சாதிவாழ்க்கை ஆகும். ஆரிய வேதம், மனு, கீதை, பாகவதம் முதலான ஆரிய நூல்கள் சாதிவாழ்க்கையை வலியுறுத்துகின்றன. வேதங்களில் சொல்லப்பட்ட உண்மைகளே மனுவில் சொல்லப்பட்டுள்ளன என மனு( 2: 7, 8) தெரிவிக்கிறது.

  யசூர் வேதம், புருசசூக்தம், 11, 12, 13 முதலிய  சுலோகங்களில், பிரமனின் முகத்திலிருந்து பிராமணர்களும்,  தோள்களிலிருந்து சத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து. சூத்திரர்களும் பிறந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (இ)ரிக்குவேதத்திலும் இது கூறப்பட்டுள்ளது.

    “பிரம்மா ஆனவர் உலக விருத்தியின் பொருட்டுத் தன்னுடைய முகம், தோள், தொடை, கால் இவற்றில் இருந்து பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களை வரிசையாக உண்டு பண்ணினான்”. (மனு அத்தியாயம் 1 / 31 ) என்று மனுநூலும் கூறுகிறது.

    மனுநூல் திருக்குறளுக்கு பிற்பட்டதுதான் எனினும் திருக்குறளுக்கு முந்தைய ஆரிய நூல்களும் பிற்பட்ட ஆரிய நூல்களும் இச்சாதி முறையைத்தான் வலியுறுத்துகின்றன.

    இதன் மூலம் கடவுளின் தலையில் (முகத்தில்) பிறந்த பிராமணன் உயர்ந்தவன் ஆவான். அதற்குக் கீழே உள்ள தோளில் இருந்து பிறந்த சத்திரியர்கள் அவர்களுக்குக் கீழானவர்கள். தலை, தோள், இரண்டிற்கும் கீழே உள்ள தொடையில் இருந்து பிறந்த வைசியர்கள் முதல் இரு வருணத்தார்களுக்கும் கீழ் ஆனவர்கள்.

     எல்லா உறுப்புகளுக்கும் கீழே உள்ள காலில் இருந்து பிறந்த சூத்திரர்கள் அனைவரிலும் கீழ் ஆனவர்கள்.

    இதுவே ஆரிய வருணாசிரமம். மனித உடலில் உயரத்தில் உள்ள தலையை உயர்வாகவும் கீழே உள்ள காலைக் கீழாகவும் ஆரியம் கற்பிக்கிறது. நமக்கு எல்லா உறுப்புகளும் சமம். அதுமட்டுமல்ல! உறுப்பில் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர் (குறள் 667).

   இறைவனின் உறுப்புகளிலிருந்து மனித இனம் பிறந்ததாகவே எடுத்துக்கொள்வோம். அப்படி ஆனால் காலில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்பது தவறு. காலைத் தாழ்வாகக் கருதுவதினாலே காலில் இருந்து பிறந்தவன் தாழ்ந்தவன் என்கிறது ஆரியம். எனவே ஆரியத்திற்கு எதிராகக் காலை உயர்வாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.

  “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” என்கிறது  மனு (அத்.1.சு100).

    திருவள்ளுவர் , “தலையே ! நீ உயரத்தில் இருந்தாலும் கீழே உள்ள காலை வணங்கித்தான் ஆக வேண்டும்” என்கிறார். எனவே தலையில் பிறந்ததாகக் கற்பித்துக்கொண்டு உயர்வானவர்களாகக் கற்பிதம் செய்வோருக்குக் ‘கடவுள் வாழ்த்து’  அதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர் வலிமையான அடி கொடுக்கிறார்.

      திருக்குறள் நூலின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் 2,3,4,7,8,9,10 ஆகிய 7 குறட்பாக்கள் மூலம் காலை – தாளை – அடியை வணக்கத்திற்குரியதாகத் திருவள்ளுவர் கூ றுகிறார்.

    “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

    நற்றாள் தொழாஅ ரெனின்” (குறள் 2)

என்பது இரண்டாவது திருக்குறள். தூய அறிவுடைய ஆசிரியரின் தாளை – வணங்காவிட்டால் கற்றதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார். வாலறிவன் என்பது இறைவனைக் குறிப்பதாகக் கொண்டாலும் இறைவனின் தலையில் பிறந்திருந்தாலும் காலை வணங்க வேண்டும் என்கிறார். “நீ பிறந்ததாகக் கூறிக்கொள்ளும் இடம் உயரத்தில் இருந்தாலும் உயர்வானதல்ல; கால்தான் உயர்ந்தது. எனவே காலில் பிறந்தவனே உயர்ந்தவன்” என்கிறார் திருவள்ளுவர்.

  ஆகப் பிரமாணர் தம்மை உயர்வாகக் கருதாமல் காலில் பிறந்ததாகக் கூறப்படும் சூத்திரரை வணங்க வேண்டும் என்பதே வள்ளுவர் நெறி. எனவே, திருவள்ளுவர் காலை வணங்கத்தக்கதாக உயர்த்திக் கூறுகிறார்.

“இடைக்கு மேல் உடல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது” என மனு(1.92) கூறுகிறது. “மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றி யமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் பிராமணன் சிறந்து விளங்குகின்றான்” என்றும்  ஆரியத்தைச் சொல்கிறது மனு(1.93).

 இதன் மூலம் ஆரியம், பிராமணரைத் தூய முகத்தில் இருந்து பிறந்ததாகக் கூறிச் சிறந்தவராகக் கூறுகிறது.

  ஆனால், இதற்கு மாறாக, உலகில் நெடுங்காலம் வாழக் கூடிய சிறந்தவர்களாக, யாரைத் திருவள்ளுவர் கூறுகிறார் ?

    மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்

    நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3 )

என்கிறார் திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்.

    திருவள்ளுவர், துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை வணங்க வேண்டும் என்கிறார்

      வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கு

      யாண்டு மிடும்பை மில. என்பதே அக் குறள் (4)

 மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர் திருவடிகளைப்பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்,

    தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    மனக்கவலை மாற்ற லரிது. (குறள் 7)

என்ற குறள் மூலம் உணர்த்துகிறார்

  பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் பணிதல் வேண்டும் என்கிறார்.

    அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்

    பிறவாழி நீந்த லரிது என்னும் குறளில் (8) இதனை வலியுறுத்துகிறார்.

   தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?

    எண்ணிப் போற்றும் குணம் உடையவனின் தாளை வணங்காத தலை பயன்அற்றது என்கிறார். தலையே தாளை வணங்க வேண்டும் என்று சொல்லுவதன் மூலம் தலையில் பிறந்ததாக கூறிக் கொள்வோருக்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.

     கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்

     தாளை வணங்காத் தலை. (குறள் 9)

என்னும் திருக்குறள் உணர்த்துவது இது தான்.

  பிறவியில் ஏற்படும் துன்பக் கடலை யாரால் நீந்திக் கடக்க முடியும்?

     பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்

     இறைவ னடிசேரா தார். (குறள் 10)

என்பதன் மூலம் நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அவர் நெஞ்சம் அல்லது வேறு உறுப்பைக் கூறாமல், காலடியைக் கூறுவதன் நோக்கமே கால்களின் உயர்வைக் கூறத்தான் எனப் புரிந்து கொள்ளலாம்.

    நற்றாள் (நல்ல கால்), மாணடி (மாண்புக்குரிய கால்) என்று காலை உயர்த்திக் கூறுவதன் மூலம் மனித உறுப்புகளில் கீழே உள்ள உறுப்பான காலில் பிறந்தவர்களே உயர்வானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். அடிசேர்தல், தாள் பணிதல் முதலானவை வெறும் வணக்கத்தை மட்டும் குறிக்கவில்லை. அவர்கள் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதுதான் முதன்மைக் கருத்து. அஃதாவது தலையில் பிறந்தவர்கள் காலில் பிறந்தவர்களைப் பின்பற்றிச் செல்லவேண்டும்.

   திருவள்ளுவருக்குச் சாதிபாகுபாட்டை உண்டாக்கும் வருணாசிரமக் கொள்கையில் உடன்பாடு இல்லை. சாதியே இல்லாத காலத்தில் சாதிப் பாகுபாடு எப்படி வரும்? அனைவரையும் ஒருவருக்கொருவர் இணையாகக் கருதும் தமிழ் நெறியைத்தானே திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். இருப்பினும் ஆரியக் கருத்து செல்வாக்கு பெற்று, தலை தோள், தொடை, காலில் மனிதர்கள் பிறந்ததாக எண்ணி அதற்கேற்ப உயர்வு தாழ்வு கற்பிக்கும் போக்கு வேர் ஊன்றுமோ என்ற அச்சம் வந்து விட்டதால் தொலை நோக்குடன் சிந்தித்துள்ளார் எந்தக் காலை ஆரியர் இழிவாகக் கூறுகிறார்களோ அதை உயர்வாகக் காட்ட விரும்பி உள்ளார் அதற்கு என்ன வழி?  இழிவாக கூறப்படும் கால்களை வணங்கச்செய்வதுதான்? திருவடிகளை வணங்கச் செய்வதுதான்! கால் வணக்கத்திற்கு உரியது என்றால் அதில் பிறந்தவர்களும் வணக்கத்திற்கு உரியவர்கள்தானே! அப்படியானால் காலில் பிறந்தவர்கள் – சூத்திரர்கள்  எனச் சொல்லப்படுபவர்களை இழிவாகக் கூறாமல் காலில் பிறந்தவர்கள் என உயர்வாகத்தானே கருதிப் போற்ற வேண்டும்?  அவ்வாறே அவர்களை உயர்வாகத்தானே மதிக்க வேண்டும்.

  உலக அறவாணர் திருவள்ளுவர் மேற்போக்காக கல்வியிலும் பண்பிலும் உயர்ந்தோரை அல்லது படைத்தவரை வாழ்த்துவது போல் குறட்பாக்களை அமைத்துள்ளார். ஆனால் நுண்மையாகத் தான் வலியுத்த விரும்பும் உட்பொருளை அவற்றுள் பொதிந்து வைத்துள்ளார் முள்ளை முள்ளால் எடுத்துள்ளார். வருணாசிரமக் கருத்தை எதிர்ப்பதற்கு அதன் அடிப்படையையே கருவியாகக் கொண்டுள்ளார் வருணாசிரமத்தின் அடிப்படையிலான பிறப்பு முறையையே தகர்க்க விரும்பியுள்ளார். எனவேதான் ஆரியர்களால் இழிவாகக் கூறப்பட்ட  கால்களை உயர்த்திக்கூறியுள்ளார். கால்களை உயர்வாகக் கூறுவதன் மூலம் உயர்வான காலில் இருந்து பிறந்தவர்களும் உயர்வானவர்களே! வணங்கத்தக்கவர்களே என்கிறார்.

கடவுள் வாழ்த்து மூலம் ஆரியத்தின் பிறப்பு அடிப்படையிலான சாதிக் கோட்பாட்டை  எதிர்த்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், பின்னரும் அதை வலியுறுத்துகிறார். “சூத்திரன் சுவர்க்கத்திற்காவது சீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது பிராமணனையே தொழ வேண்டும்”  என்கிறது மனு(அத் 10. சு.122). ஆனால் யாவரும்  தொழ வேண்டியவர்கள் உழைப்பவர்களே என்கிறார் திருவள்ளுவர்.

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்  (குறள் 617)

இதற்கு விளக்கம் அல்லது உரை அளித்தவர்களில் பெரும்பாலோர் தாள் என்றால் முயற்சி என்று பொருள் தந்து விளக்கி உள்ளனர்.

  மடியுளாள் என்னும் திருவள்ளுவர் தாளுளாள் என்று மட்டும் சொல்லியிருந்தால் அவ்வாறு கருதலாம். ஆனால் அவர் மடியிலான் என்று சொன்ன பின்னர் மீண்டும் முயற்சி – தாள் குறித்துச் சொல்லத் தேவையில்லை. உண்மையில் திருவள்ளுவர் தாள் என்றால் காலடி – பாதம் – என்னும் பொருளைத்தான் குறிப்பிடுகிறார்.

எனவே இங்கே அவர் மடியில்லாதவனின் – சோம்பலில்லாது உழைப்பவனின் தாளில் திருமகள் உள்ளதாகக் கூறுகிறார் என்பதுதான் உண்மை. ஆனால்,  தெய்வப்புலவர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்திலேயே மறைமுகமாக உட்பொருள் தொனிக்கத் தெரிவித்ததுபோல் இங்கேயும் அவ்வாறு கூறியுள்ளார். ஆகவே செல்வக்கடவுள் தங்கியுள்ள இடம் உழைப்பவனின் பாதம் என்பதால் திருமகளை வணங்க விரும்புபவர்கள் உழைப்பவரின் காலை வணங்க வேண்டும்.

  “உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்” என ஆரியம் உழைப்பவர்களை இழிவுபடுத்துகிறது. எனவே, ஓயாமல் உழைப்பவரின், தளராமல் பாடுபடுவரின், அயராது பணியாற்றுபவரின் காலில்தான் திருமகள் உறைகிறாள் என்கிறார்.  செல்வத்தின் கடவுளான திருமகள் அல்லது இலக்குமி திருமாலின் மார்பில் தங்கியிருப்பதாகக் கூறுவது ஆரியப்புராணம். அதை மறுத்து உழைப்பவரின் காலில் இருப்பதாகக் கூறுகிறார். இங்கும் உழைப்பவரின் நெஞ்சில்  அல்லது தலையில் இருப்பதாகக் கூறாமல் காலில் இருப்பதாகக் கூறிக் காலை உயர்த்துகிறார். எனவே, கடவுள் வாழ்த்து மூலம் திருவள்ளுவர் கால்களை உயர்வாகச் சொல்வதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார்.

  சிலர் மக்களை ஏமாற்றுவதற்காகச், “சாதி அமைப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் கூறப்படவில்லை. பிராமண தருமத்தைப் பின்பற்றும் யாவரும் பிராமணன்தான்” எனத் தவறாகத் திரித்துக் கூறுகின்றனர். ஆனால், மனு “பிராமணன் தொழிலைச் சூத்திரன் செய்தாலும் சூத்திரன் பிராமணச் சாதியாகமாட்டான். ஏனென்றால், அவனுக்குப் பிராமணச் சாதித் தொழிலில் அதிகாரம் இல்லை” என்கிறது. அது மட்டுமல்ல! “சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் (மனு. அத் 9. சு.96)” என்று கூறும் பொழுது எங்ஙனம் தன் தொழில் முறையால் ஒருவன் பிராமணன் ஆக முடியும்? “சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திரச் சாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழில் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா?”  என்கிறது மனு. எனவே வாழும் முறையிலோ வளர்ப்பு முறையிலோ அல்லாமல் பிறப்பு முறையில் சாதியைக் கற்பிப்பதுதான் ஆரியம்.

  எனவே, திருவள்ளுவர் வருணாசிரமத்திற்கு உடன்பட்டதாகக் கூறுவதாகக் கருதாமல் அதனை அடியோடு ஒழிக்க விரும்பியுள்ளார் எனப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதலின் திருவள்ளுவரின் திருக்குறள் ஆரிய எதிர்ப்பை மையமாகக் கொண்டது. முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து அதிகாரம்  மூலமே திருவள்ளுவர் ஆரிய எதிர்ப்பைத்  தொடங்கியுள்ளார் என்பது  தெளிவாகிறது.

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி

          மனோன்மணியம் சுந்தரனார்
    மறைக ஆரிய நெறி ! பரவுக தமிழ் நெறி! 

– இலக்குவனார் திருவள்ளுவன்

  ஆசிரியர், அகர முதல – பன்னாட்டு மின்னிதழ்

எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து !....திருஅருட்பா.

  www.akaramuthala.in

  thiru2050@gmail.com

   + 91 – 9884481652

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஞான மூலிகை !

*ஞான மூலிகை* !

மனிதன் உடம்பை பாதுகாக்கவும் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும்.ஜீவ சக்தியைப் பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகளும்.இயற்கை மூலிகைகளும் சித்த மருத்துவம் மற்றும் யோமியோபதி.யுனானி.அலோபதி போன்ற மருத்துவ உலகம் பலவகையான மருத்துவ முறைகளை சொல்லியும் மருந்துகள் கொடுத்தும் வருகிறார்கள்.

*வள்ளலார் சொல்லும் இரண்டு  மூலிகைகள் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமானது என்று ஆணித்தரமாக சொல்லி உள்ளார்*.

மேலும் வள்ளலார் சொல்லுவதை  கவனிக்கவும்.

வள்ளலார் சொல்லுகின்றார். *மகான்களிடத்தில் அனந்தகாலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் உண்மையும்.பிரயோஜனத்தையும்.அனுபவத்தையும் வெளியிடமாட்டார்கள் என்பதை சொல்லி உள்ளார்*.

வள்ளலார் சொல்லி யுள்ளதை கீழே படித்து பார்க்கவும்.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்.

கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும்.

மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், *தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும்*.

*முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள்*

 பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. *அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும்*. மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - *பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும்*.

நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம்.

அது போலவே, *அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை*.

அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். *கரிசாலை தூதுவளை உலகிலே சிறந்த ஞான மூலிகைகளாகும். தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும் உண்மை*.

*கரிசலாங்கண்ணியும்* *தூதுவளையும்*
 *பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும்*. தேகம் திடமுள்ளதாகி நெடு நாளைக்கிருக்கும். தூதுளையையும்் அப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், கபத்தை நீக்கும் .சுரத்தை தடுக்கும் புத்தியை விசாலப்படுத்தும்.

இப்போது உலகம் முழுவதும் பரவிவரும் *கொரோனோ வைரஸ் தொற்றுக்கு மிகவும் முக்கியமான மூலிகை கரிசலாங்கண்ணியும் தூதுவளையும்* மிகவும் முக்கியமானது. அத்தியாவசியமானது என்பதை அறிந்து பயன் படுத்தினால் மனித உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியும் பிராண சக்தியும் அதிகம் கூடும். அதிகம் கொடுக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் தேவை இல்லை.

*கொரோனோ வைரஸ் தொற்று மனித உடம்பில் நுழைந்து.உயிரையும் உடம்பையும் தாக்காமல்.காப்பாற்றிக் கொள்ளவும் ஆபத்து இல்லாமல் பாதுகாக்கவும்.பயம் இல்லாமல் வாழவும். *பணம் அதிகம் செலவு இல்லாமல்* பாதுகாத்துக் கொள்ளவும் மேலே கண்ட மூலிகைகளை பயன் படுத்திக் கொள்ளவும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சுத்த சன்மார்க்கத்தின் அடையாளங்கள் !

சுத்த சன்மார்க்கத்தின் அடையாளங்கள்!

இவ்வுலகில் வாழும் உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்கள் .
நல்லவர்களா? கெட்டவர்களா ? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது.

மேலும் இறைவனிடம் தொடர்பு உள்ளவர்கள் என்பதை  அறிந்து கொள்வதற்கு உண்டான அடையாளங்கள் என்ன ?

வள்ளலார் சொல்லிய வண்ணம் இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து அருளைப் பெரும் தகுதி உடையவர்களின்  அடையாளங்களைத் தெரிந்து கொள்வது எங்கனம்.

மேலும் வள்ளலார் சொல்லிய வண்ணம் இடைவிடாது உண்மை இரக்கத்துடன் ஜீவகாருண்யம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறும் தகுதி உடையவர்களின் அடையாளங்களை அறிந்து கொள்வது எங்கனம்.

மனிதர்கள் மனிதர்களை பாராட்டுவதும் போற்றுவதும்.தூற்றுவதும் குறைசொல்வதும் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

இவர்களில் உயர்ந்தவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய தகுதிப்பெற்றவர்கள் யார் ?  என்பதை தெரிந்து கொள்ள.உடம்பின் மாற்றங்களைப்பற்றி பல பாடல்களிலும் உரைநடைப்பகுதியிலும் விளக்கம் தந்துள்ளார்.

வள்ளலார் பாடல் !


மேலே கண்ட பாடலில்.வள்ளலார் கொள்கையான  சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றுபவர்கள் தங்கள் உடம்பின் அடையாளங்கள்.இவ்வாறு தான்  இருக்க வேண்டும் என்று தெரியப்படுத்துகின்றார்.

 வயது முதிர்ச்சி தெரியக்கூடாது..அவர்களுக்கு தலை முடி நரைக்க கூடாது. எந்தவிதமான (பிணி)நோய்களும் தொற்றக்கூடாது.பயம் இருக்ககூடாது.மரணம் வரக்கூடாது .அவர்களே நல்ல உடம்பினர் என அடையாளத்தை தெரிவிக்கின்றார்.

ஆன்மீகத்தில் உள்ளவர்கள் புற வேடத்தால் புற செய்கையால் நல்லவர்கள் போல் காட்சி தருகிறார்கள்.அவர்கள் உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.அவர்களை நல்லவர்கள் என்று அடையாளம் காட்டுவதுதான் அவர்களின் உடம்பின் நிலைப்பாடாகும்.

மேலும் இவ்வுலகில் சாதி.சமயம்.மதங்களில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என பிரித்து வைத்துள்ளார்கள்.எல்லா சாதி சமய மத்த்தை சார்ந்தவர்களுக்கும் மரணம் வந்து மடிந்து போகிறார்கள்.

அவர்களை மண்ணில் போட்டு புதைத்து விடுகிறார்கள்.சுமார் ஒரு ஆறுமாதம் கழித்து புதைத்தவர்களை தோண்டிப் பார்த்தால் அனைவருடைய உடல்களும் புழுக்களாக உள்ளன.இதில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்பவர்களின் இரு குலமும் புழுக்குலமாகத்தான் காட்சி அளிக்கிறது என்கிறார் வள்ளலார்.

ஒவ்வொரு மனிதனும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கு புனிதகுலம் பெறவேண்டி வள்ளலார் அழைக்கின்றார்.

அதற்குண்டான தகுதியை உடம்பு.உயிர்.ஆன்மா பெறவேண்டும்.அதற்குண்டான அடையாள மாற்றங்களை மனித உடம்பு பெற வேண்டும்.அதுவே உயர்ந்த நிலையான புனித தோற்றமாகும்.

மேலும் வள்ளலார் உரைநடைப்புகுதியில் தெளிவாக சொல்லி உள்ளார் !

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், 
காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். 
மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். 
அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். 
அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.
எனவே தான் சாகாதவனே சன்மார்க்கம் என்று அழுத்தமான உண்மையை வெளிப்படுத்துகிறார்.
வள்ளலார் கொள்கையில் யாரும் தங்களை  ஏமாற்றிக்கொள்ள  வாய்ப்பே இல்லை 
உலகவாதனையை தவிர்க்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாது.அருளைப் பெற முடியாது.மரணத்தை வெல்ல முடியாது.
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றுபவர்களுக்கு அஜாக்கிரதையால் அறியாமையால் மரணம் வந்தால் மீண்டும் மனிதப் பிறப்பு உண்டு.
நாம் அதிக அன்பு வைத்துள்ளவர்களுக்கு மரணம் வந்தால் அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார்கள் என்பது தவறான கருத்து தவறான சிந்தனையாகும்.
வள்ளலார் பாடல் !


எனவே மரணத்தை வெல்லுவது ஒன்றே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மை வழியாகும். மரணத்தை வென்றால் மட்டுமே முத்தேக சித்திப்பெற்று 

நாம் நல்லவரா கெட்டவரா என்பதை பிறர் சொல்லியோ பிறர் பாராட்டியோ நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.நம் உடம்பே நமக்கு நல்லவரா கெட்டவரா என்ற விடை தந்துவிடும்.

எனவே மிகவும் ஜாக்கிரதையாக எச்சரிக்கை யாக சுத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்கங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு எதிர்பு சக்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும். கொரோனோ வைரஸ் போன்ற தொற்று மனித உடம்பை தொடர்பு கொள்ளாது.தாக்காது. 

வள்ளலர் பாடல் !


இந்த பூமியில் வாழ்ந்தாலும் .வானத்தில் வாழ்ந்தாலும்.சொர்க்கம்.வைகுண்டம்.கைலாயம்.பரலோகம்  போன்ற எந்த வாழ்க்கையாக இருந்தாலும்.நரை திரை.பிணி.மூப்பு.பயம்.மரணம் வராமல் வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். என்பதை தெளிவாக சொல்லி விட்டார் வள்ளலார்.

வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்கம் ஒன்றே உயிர் காக்கும் அருள் மருந்தாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

சனி, 25 ஜூலை, 2020

நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை !

*நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை* !

இந்த உலக சிறைச்சாலையில் இருந்து எப்போது விடுதலைப் பெறுவது ?
எப்படி விடுதலை அடைவது ?

நாம் வாழும் இந்த உலகில் ஐந்து சிறைச்சாலைகள் உள்ளன !
நிலம்,நீர்,அக்கினி,
காற்று ,ஆகாயம்,என்னும் ஐந்து சிறைச்சாலை களிலும் உயிர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளன. என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

நிலத்திலும் நீரிலும் தான் உயிர்கள் உள்ளன என்று நினைத்துக் கொண்டு உள்ளோம்.ஐந்து பூதங்களிலும் உயிர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளன.என்பதை, வள்ளலார் தன் அருள் அனுபவத்தால் நேரில் கண்டு அறிந்து அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்துள்ளார் .

*அகவல் வரிகள்* !

மண் கரு உயிர்த் தொகை வகை விரி பலவா
அண் கொள அமைத்த அருட்பெருஞ்சோதி !

நீரிடை உயிர்பல நிகழுறு பொருள் பல
ஆருற அமைத்த அருட்பெருஞ்சோதி !

தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்சோதி !

காற்றிடை உயிர் பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்சோதி !

வெளியிடை உயிர் இயல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ்சோதி !

என்று திருஅருட்பாவில் {அருட்பெருஞ்சோதி அகவல் }என்னும் தலைப்பில் ஐம்பூத இயல் வகையில் தெரியப் படுத்தி உள்ளார்; வள்ளலார் 

இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் தண்டனை தேகங்களாகும்.ஒவ்வொரு உயிர்களுக்கும் அதன் அதன் குற்றங்களுக்கு தகுந்தாற் போல்,தண்டனைத் தேகம் என்னும்  உடம்பு வெவ்வேறு விதமாகப் கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்காக உடம்பு கொடுக்கப்பட்டுள்ளன. எனவே உயிர்களின் சிறைச்சாலை என்பதாகும் !,{அதாவது தண்டனை தேகங்களாகும். }சிறைச்சாலையில் கொடுக்கும் வேலையை இயற்கைச் சட்டத்தை மீறாமல் செய்து கொண்டு இருக்கவேண்டும்.

உயிர்கள் குற்றம்,குறைகள் இல்லாமல்,முறை தவறாமல் தனக்கு இட்ட கட்டளைப்படி தன் பணியை செய்து கொண்டு இருக்க வேண்டும்.

*அதற்காக வழங்கப்படும் குடிக்கூலி
உணவாகும்*

தண்டனைக்கு தகுந்த *நியதி* ஆகாரம் என்னும் உணவு வழங்கப்படுகிறது .
உயிர்களுக்கு,கொடுக்கும் *நியதி* உணவை விடுத்து வேறு எந்த ஆகாரத்தையும் உண்ணக்கூடாது தண்டனைக்கு தகுந்த உணவை விட்டு, வேறு எந்த உணவை உண்டாலும் . அதற்கு தகுந்த பிறப்பு இறப்பு,என்பதை இயற்கையின் சட்டத்தின் வாயிலாக இந்த உலகில் வாழும் உயிர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும்,

*தவறு செய்யும் ஆன்மாக்களுக்கு மன்னிப்பு நோக்குடன் ஒரு உயிர் உடம்பு கொடுக்கப்படுகிறது*.

இதேபோல் ஒவ்வொரு  ஆன்மாவிற்கும் ஏழு தடவை  உடம்பு மாற்றி மாற்றிக் கொடுக்கப் படுகிறது,

இவ்வுலகில் வாழும் உயிருக்கும் உடம்பிற்கும் உணவு யாரால் கொடுக்கப்படுகிறது என்றால் மாயை என்னும் அதிகாரியால் பஞ்ச பூதங்களின் உதவியால் பஞ்சபூத உணவு கொடுக்கப் படுகிறது .

*உயிர்களுக்கு எழு பிறப்புகள் உண்டு* !

ஏழு பிறப்புகளிலும்,மாயை கொடுத்த நியதி ஆகாரத்தை மாற்றம் இல்லாமல் புசிக்கும் போது,குறிப்பிட்ட காலத்தில்,தண்டனையில் இருந்து விடுதலைப் பெற்று,இவ்வுலகில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நியதி ஆகாரத்தை நிறுத்தி சிறையை விட்டு வெளியே செல்லுவதற்கு அருள் உணவு கொடுக்கப் படுகிறது.அடுத்து மேல் பிறவி கிடைக்கின்றது, இப்படி ஏழு வகையான பிறவித் தோற்றங்கள் ஏழு,ஏழு பிறப்புகளாக வெவ்வேறு உடம்பு கொடுக்கப்படுகிறது. இதுபோல் பலகோடி பிறப்புக்கள் எடுத்து இறுதியில் இந்த மனித தேகம் கிடைத்து உள்ளது.

இதில் ஏதாவது இயற்கை சட்டத்திற்கு மாறாக செயல் பட்டால் மறுபடியும் கீழ் பிறப்புக்கு தள்ளப் படுகிறது.இவை தாவரங்கள் முதல் மனித தேகம் வரை ஒரே சட்டமாகும். அதற்கு உண்டான தேகம் {உடம்பு } என்னும் தண்டனை தேகம் கொடுத்துக் கொண்டே இருக்கும் .அதே சமயத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி இன்றி எந்த ஜீவன்களும் வெளியே செல்ல முடியாது .

எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்லவும் முடியாது.
உடம்போடும் வெளியே போக முடியாது.

*ஏழு வகைப் பிறவி ! வள்ளலார் சொல்லும் உண்மை* !

இந்தத் தேகத்திற்கு பிறப்பு ஏழு உண்டு ,அதுபோல் எழுவகைப் பிறப்பிலும் ,
ஒவ்வொரு பிறப்புக்கும் எவ் வேழு பிறப்பு உண்டு ,அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி, மேலேறி மறு பிறப்பு உண்டாம்.

ஒவ்வொரு பிறவியும் எந்தக் கல்பத்தில் நஷ்டம் அடைகின்றதோ அந்தக் கல்பகாலம் வரையில் தோற்றம் இல்லாமல் மண்ணில் மறைந்து இருந்து ,மறு கல்பத்தில் தோன்றி,இவ்விதமாகவே மற்ற யோனிகள் இடத்திலும் பிறந்து முடிவில் இந்த மனித தேகம் கிடைத்து உள்ளது என்கிறார்.

அதே போல் இத்தேகத்திற்கும் ஏழு பிறவிகள் உண்டு !

யாதெனில் ;--கற்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாய் இருப்பது

1,--அவயாதி உற்பத்தி காலம் ஒன்று ! 2,--பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று ! 3,----குழந்தைப் பருவம் ஒன்று ! 4,--பாலப் பருவம் ஒன்று ! 5,-----குமாரைப் பருவம் ஒன்று ! 6,---விருத்தப் பருவம் ஒன்று ! 7,---ஆகப் பிறவி ஏழு !7----இவ்வாறே தாவரம் முதல் அனைத்து உயி்ர்களுக்கும் உண்டு ,

மேலும் இதில் ஸ்தூலப்பிறப்பு-7சூட்சுமப் பிறப்பு,7 காரணப் பிறப்பு ,7

ஆதலால் ,மேற் குறித்த ஸ்தூலப் பிறப்பு ,சூட்சுமப் பிறப்பு யாது எனில் ?

ஜாக்கிரம்,,1-சொப்பனம்,2, சுழுத்தி ,3,--ஜாக்கிரத்தில் சொப்பனம்,4,ஜாக்கிரத்தில் சுழுத்தி ,5 சொப்பனத்தில் சொப்பனம்,6, சொப்பனத்தில் சுழுத்தி ,7,ஆகப் பிறவி ஏழு 7,

காரணப் பிறப்பு என்பது ;--மனோ சங்கல்பங்கள் எல்லாம் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும் .

ஆதலால் பிறவிக்குக் காரணம் நினைப்பு,மறைப்பு,அது அற்றால் பிறவி இல்லை,!நினைப்பு மறைப்பு எப்போது நீங்கும் என்றால்? பொருள் உணவு உட்கொள்ளாமல் அருள் உணவு உட்கொண்டால் நினைப்பு மறைப்பு நீங்கும்.

அந்த தகுதியைப் பெற்ற ஆன்மாக்களுக்கு,
நினைப்பு மறைப்பு அற்று உண்மை அருள் அனுபவம் எல்லாம் வெளிப்படையாகத் தெரியும்.

*மனிதப் பிறப்பு என்பது ஆறாவது பிறப்பு என்பது அறியாமையாகும்*

மனிதப் பிறப்பு என்பது ஏழாவது பிறப்பாகும் ,

பிறப்பின் தோற்றம் எப்படி எனில் ?

1,--புல் ,புண்டு,மரம்,-செடி.கல்,மண்,
போன்ற பிறப்புகள் ,

2,--எறும்பு,செல்,புழு,--பாம்பு,உடும்பு,பல்லி,--தவளை,சிறுமீன் ,
முதலை,சுறா. திமிங்கலம்,போன்ற பிறப்புகள்

3,ஈ ,வண்டு,தும்பி,குருவி,காக்கை,பருந்து,கழுகு,போன்ற பிறப்புகளும்,

4,அணில்,குரங்கு,நாய்,பன்றி,பூனை,ஆடு,மாடு,யானை,குதிரை,புலி,கரடி,சிங்கம்-போன்ற பிறப்புகளும்,

5,பசாசர்,பூதர்,இராக்கதர்,அசுரர்,சுரர்-போன்ற பிறப்புகளும்,

6,காட்டகத்தார்,கரவு செய்வார்,கொலை செய்வார்,.போன்ற பிறப்புகளும்,

7.அழியாப் பெருவாழ்வைப் பெறுவதற்குறிய உயர்ந்த அறிவு உடைய *மனித தேகம்* ஏழாவது பிறப்பாகக் கொடுக்கப்பட்டு உள்ளது.

இப்படி ஏழு பிறப்பு,தோற்றங்களிலும். ஏழு பிறப்பிலும் மனித பிறப்பு உயர்ந்தது, இந்த பிறப்பு கொடுத்ததின் நோக்கம்,தன் ஏழாம் அறிவைக் கொண்டு உண்மையை அறிந்து ,இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து,வெளியே செல்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

*இதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிறார்*.

இந்த சிறையில் இருந்து எப்படி வெளியேறுவது ?இந்த பிறப்பு.இறப்பை  எப்படி தவிர்ப்பது நிறுத்துவது ? என்றால் ?

பரோபகாரம் ,சத் விசாரம் என்னும் இவ்விரண்டாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்ரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று,
மேற் குறித்த குற்றம் நீங்கி கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் நிலை பெற வேண்டும்.

இந்த உண்மை தெரியாமல்.
உயிர்கள்,மற்றும் மனிதர்கள் யான்,எனது என்னும் தேக சுதந்தரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் ,என்னும் சுதந்தரத்தை வைத்துக் கொண்டு,தனக்கே எல்லாம்  சொந்தம் என்று எண்ணி அனுபவித்து அவதிக்கு உள்ளாகி மாண்டு போகிறார்கள்.

இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியேற வேண்டுமானால் உலகத்தில் உள்ள  அழிவுள்ள எந்த பொருளையும் அனுபவிக்காமல்.
அழியாப் பொருளானஅருளை மட்டுமே அனுபவிக்க வேண்டும்.

*ஏன் மனித தேகத்திற்கு மட்டும் உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டது  என்பதை சிந்திக்க வேண்டும்*.

*கடவுளின் தகுதிகள் யாவும் மனிதனுக்கு உண்டு*

மனிதனுக்கு மட்டும் எதையும் அறியும் அறிவும் ,சிந்திக்கும் திறனும் ,பேசும் திறனும்,எது நல்லது,? எது கெட்டது ? என்பதை அறிந்து தெரிந்து கொள்ளும் அறிவுத் திறனும்.செயல்படுத்தும் திறனும் இயற்கையினால் மனிதனுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது.அதனால் தான் மனிதப் பிறவி உயர்ந்த பிறவி,உயர்ந்த அறிவு உள்ள பிறவி என்பதாகும்.

இதை உணர்ந்து முதலில் மனிதன் மனிதனாக,வாழவேண்டும்.மனித வாழ்க்கை வாழ வேண்டும்.

மனிதன் ஆசை,காமம்,வெகுளி,மயக்கம்,சுய நலம்,பேராசை போன்ற ஆசைகளும்.மற்றும் மண்ணாசை,பெண்ணாசை,
பொன்னாசைகளை கனவில் கூட பற்று வைத்து வாழக்கூடாது

மனிதனின் அறியாமை செயல்கள்.

எதைப் பற்றியும் கவலைப் படாமல்,மனிதனை மனிதன் ஏமாற்றிக் கொள்ளை அடிப்பதும்,
கொலைகள் செய்வதும்,
வாயில்லாத ஜீவன்களை,குழந்தை போல் வளர்த்து பணத்திற்காக விற்பதும். அந்த உயிர்களைக் கொன்று கொலை செய்து ,அதன் புண் புலாலை{இறைச்சியை } உணவாக உண்டு பசியை போக்கிக் கொள்ளும் மனிதர்களை என்ன வென்று சொல்வது ? அறியாமை என்று சொல்வதா ? கொலைக்கார்ர்கள் என்று சொல்வதா ?

இவைப் போன்ற கொடூரமான கொலைக் குற்றம் செய்பவர்களை மனிதன் என்று எப்படி சொல்ல முடியும்?.

*இதற்காகவா மனிதன் என்ற உயர்ந்த பிறப்பு கொடுக்கப் பட்டது.*?

*சிறையிலே வாழ்ந்து கொண்டு சிறையிலே உள்ள உயிர்களை கொல்லுபவனுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது ? அறிவு படைத்த மனிதர்கள் சிந்திக்க வேண்டும்*.

குற்றம் செய்பவர்களை கண்டு பிடித்து ,குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கும் சட்டம், மனிதர்களாலே உருவாக்கப் பட்டு உள்ளது.அதற்கு காவல்துறை என்றும். நீதி மன்றம் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.அங்கும் மனிதர்கள் தான் நீதிமான்கள். அந்த நீதிமான்களும் குற்றவாளி களாகவே இருக்கிறார்கள்.
அவர்களும் மண்ணாசை.பெண்ணாசை.பொன்னாசை. பேராசை,பெருமோகம், மற்றும் சுயநலம் உள்ளவர்களே என்பது அனைவருக்கும் தெரியும்.

குற்றம் செய்பவர்களை சட்டத்தின் வாயிலாக  குற்றம் உறுதிப் படுத்தப் பட்டு ,தண்டனைக் கொடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும், இடம் தான் சிறைச்சாலை.

இவை மனிதர்களால் உருவாக்கப் பட்ட சிறைச்சாலை யாகும். *குற்றவாளிகளை தனிமைப் படுத்தும் இடம்தான் சிறைச்சாலை என்பதாகும்*.

உலகமே ஒரு சிறைச்சாலை,!அதனுள் மனிதனுக்கு மனிதன் தண்டனைக் கொடுத்து,தனிமைப் படுத்துவதும் தனி ஒரு சிறைச்சாலை.

இந்த உலகத்தில் குற்றவாளிகளுக்கு குற்றவாளிகளே தண்டனைக் கொடுக்கும் நிலை
உருவாகி யுள்ளது,இதை மூடத்தனம் என்பதா ?முட்டாள் தனம் என்பதா ?அறியாமை என்பதா? சுயநலம் என்பதா?நியாயம் என்பதா ?அநியாயம் என்பதா ? என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

*வாய் பேசாத உயிர் இனங்கள்*

நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை என்பதை உணராத அறிவு படைத்த மனிதர்கள்.
தண்டனை தேகங்களான,வாய் பேசாத, எதிர்த்து வாதம் செய்ய முடியாத ஆடு.மாடு்கோழி.பன்றி மீன். போன்ற அப்பாவியான உயிர்களைக் கொன்று உணவாக உண்பது எவ்வளவு பெரிய குற்றமாகும்.

*இறைவன் இந்த உலகத்தையும் உயிர் இனங்களையும்.
படைத்து,அவைகள் அனைத்திற்கும் தேவையான பல வகையான தாவர உணவுகளையும் படைத்து உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பு எடுத்தவர்கள்,இயற்கையையும்,மற்ற ஜீவராசிகளையும்,பாது காத்து வாழ வைப்பதற்காக படைக்கப் பட்டது தான்,உயர்ந்த அறிவுப பெற்ற மனிதப் பிறப்பாகும்

*தாவரங்களும் உயிர்கள்தான்* !

தாவரங்களும் உயிர்கள்தானே அதைப் புசிப்பதும் {உண்பதும் }குற்றம் இல்லையா ? கொலை இல்லையா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து கொண்டு உள்ளது. கேள்வி நியாயம் தான்.அதற்கு

 *வள்ளலார் சொல்லும் பதில்* .

மரம் ,புல்,நெல்,முதலான தாவரங்களும் உயிர்கள் தான்.அவைகளை இம்சை செய்து ஆகாரம் கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரம்தான்;அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்த கரண சந்தோஷம்தான். ஆனாலும் அப்படி அல்ல.

மரம்,புல்,நெல் முதலான ஜீவர்கள் பரிசம் என்கிற ஓரறிவு உடைய ஜீவர்கள ஆனதாலும் ,
அவ்வுடம்பில் ஜீவ விளக்கம் *ஒரு சார்* விளங்குவதாலும் ,
அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சடமாதலாலும்,அவ் வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக் கூடுமாதலாலும்,

அவ்வுயிர்களை வேறு செய்யாமல்.-அவ்வுயிர்கள் இடத்து உயிர் இல்லாமல் ,உயிர் தோன்றுவதற்கு இடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் ,
காய்கனிகளையும், பூக்களையும்,பழங்களையும், தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வது தவறு இல்லை என்கிறார் .இன்னும் விரிக்கில் பெருகும்.

மேலும் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.தாவரங்களில் இரத்தம் என்னும் ஐந்து  பூத, கலவை இல்லை .நீர் மட்டும்தான் உள்ளது.இதன் விபரம் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன் .

அதையும் உயிருடன் பிடுங்கி எடுத்து உணவாக உட்கொள்ளக் கூடாது.பூ,காய்,கனி,-இலைகள்,கிழங்கு வகைப் போன்ற வற்றை உணவாக உட்கொள்ளலாம்,

நம் உடம்பில் தோன்றும்,சுக்கிலம்,நகம்,ரோமம்,முதலியவைகளை நீக்கும் போது ,இம்சை உண்டாகாதது போல்; இம்சை உண்டாகாத படியாலும்,தாவரங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணங்கள் விருத்தி இல்லாத படியாலும்,அது உயிர்க் கொலையும் அல்ல ,துன்பம் உண்டு பண்ணுவதும் அல்ல , அதனால் அது ஜீவ காருண்ய விரோதமாகாது. என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார்.

அறிவுத் தெளிவைக் கொண்டு அறிந்து ,தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் விபரம் {ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் பகுதியில் உள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் .}   

*வாய் இல்லாத ஜீவன்கள்* !

மனிதன் மற்றவர்களிடம் இருந்து ,எவ்வித தந்திரம் செய்தாவது பொருளை சம்பாதிக்கிறான்.அதை வைத்து ஆனந்தமாக வாழ்வதற்கு விரும்புகிறான்.
ஆனால் வாயில்லாத ஜீவ ராசிகள் நம்மிடம் இருந்து எதையாவது,விரும்புகிறதா ?

அவைகள் நம்மை என்ன கேட்கிறது ? வசிக்க வீடு,இருக்க இடம்,உடுக்க உடை,அணிய ஆபரணங்கள்,
செலவு செய்ய பணம் ,பொழுது போக்க,சுற்றுலா செல்ல மேலும் ஆடம்பரமான வாழ்க்கை என்று எதையாவது கேட்கிறதா ?

நாங்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வண்டி, வாகனம்,,ஏதாவது கேட்கிறதா? எதுவும் கிடைக்கவில்லை என்று , நம்மை தொந்தரவு செய்கிறதா ?

நாம் உண்ணும உணவைப் பிடுங்கி உண்ணுகிறதா ?நமக்குத் தெரியாமல் நம்மை ஏமாற்றி எடுத்துக் கொண்டு செல்கிறதா ?கொலை,களவு செய்கிறதா? நம்மைப் போல் பொய் பேசுகிறதா ? இல்லவே இல்லையே !,எதையும் நம்மிடம் இருந்து எதிர்ப பார்க்காமல்.
இறைவன் கொடுத்த, *நியதி* ஆகார* உணவை உண்டு கொண்டு வாழும் வாயில்லாத ஜீவன்களை !
துன்பப் படுத்துவது எந்த வகையில் நியாயம் ?

எங்கெங்கோ அலைந்து திரிந்து ,தானே தேடிய உணவை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. அவைகளை இரக்கம் இல்லாமல் கொன்று தின்பது மனித செயலா? மனிதாபமான இரக்க குணமா ? இவை எவ்வளவு பாபச்செயல் என்பதை அறிவு உள்ள மனிதன் அறிந்து கொள்ள வேண்டாமா ? இவை எவ்வளவு பெரிய  குற்றமாகும். இந்த குற்றங்களை எந்த சட்டத்தில் பதிவு செய்வது ? இந்த குற்றங்களை பதிவு செய்ய எந்த காவல் நிலையம் செல்வது ? விசாரிக்க எந்த நீதி மன்றம் செல்வது ? இந்த குற்றங்களை விசாரிக்கும் நீதிமான்கள் யார்?

*இந்த குற்றங்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது?,இந்த கொலைக் குற்றவாளிகளை எந்த சிறையில் அடைப்பது.?*

*இதற்கு எல்லாம் யார்க் காரணம்*

பல்லாயிரம் ஆண்டுகளாக, சாதி,சமயம், மதம்,இனம்,நாடு.மொழி போன்ற,அமைப்புகளை உருவாக்கிய
ஆன்மீகவாதிகளும் அவர்கள் செய்த சூழ்ச்சிகளும்,
அவர்கள் படைத்த கடவுள்களும்,
கடவுளால் உண்டாக்கப்பட்ட வழிப் பாட்டு முறைகளும்,

அவர்களால் உருவாக்கப் பட்ட, சாதி.சமய,மதச் சடங்குகளும், சாத்திரங்களும்,
கோத்திரங்களும்,
பரிகாரங்களும், அவற்றிற்கு காரணமான வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்களும் அவைளின் மூலமாக படைக்கப்பட்ட கற்பனைக் கதைகளும்.கற்பனைக் கடவுள்களுமேயாகும்.

அந்தக் கடவுள்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கும் கொடுமையான பழக்க வழக்கங்களையும் உருவாக்கி உள்ளார்கள்.

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்*.!

*நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புத்தி நொந்து உளம் நடுக்குற்றேன்

கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் !

மேலும்.

துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போது எல்லாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போது எல்லாம்

எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திரு உளம் அறியும்!

என்று தன் உள்ளக் குமறலை வெளிப்படுத்தி உள்ளார் ! ஆன்மீக சிந்தனை உள்ள எந்த அருளாளர்களாவது இப்படி சிந்தித்து உள்ளார்களா ? இந்த ஆன்மநேயம் யாருக்காவது இருந்தது உண்டா ? தோன்றியது உண்டா ?

 இப்படிப்பட்ட சமய,மதவாதிகளை,
அருளாளர்கள் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? கருணை இல்லாதவர்களை எப்படி அருளாளர்கள் என்று சொல்ல முடியும் ? சிந்திக்க வேண்டும் அன்பர்களே !

அறிந்து செய்த குற்றங்கள் !அறியாமல் செய்த குற்றங்கள் !
 
மேலே கண்ட கொலைக் குற்றங்களை அறிந்து செய்வதால்,அறியாமல் செய்வதால் கிடைக்கும் இயற்கை கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா ?

 அறியாத செய்த குற்றங்களினால்

நிலத்திலும்,நீரிலும்,நெருப்பிலும் ,காற்றிலும், வெளியிலும்,உயிர்கள்,துன்பம் துயரம்,அச்சம்,பயம்,மரணம்,போன்ற தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் !,

தண்டனை பெற்ற உயிர்களை தண்டனைப் பெற்ற உயிர்களே !--கொன்று உணவாக உட் கொள்வது எவ்வளவு பெரிய குற்றமாகும்.இதற்கு இயற்கை என்னும் இறைவன் கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா?மரணம் தான் பெரிய தண்டனை யாகும் .பாவத்தின் சம்பளம் மரணம்.

தெரிந்து செய்த குற்றங்கள்,தெரியாத செய்த குற்றங்கள் என இரண்டு பிரிவுகள்,உள்ளன அவை மனதால்,வாக்கால்,-தேகத்தால் பதிவாகின்றன.

தெரியாமல் செய்த குற்றங்களுக்கு தண்டனைக் குறைவு ,குற்றங்கள் செய்த பிறகு குற்றம் என்று தெரிந்த பிறகும்,இனிமேலும்,குற்றம் செய்ய மாட்டேன் என்று உறுதிக் கொண்டு ,இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அந்த மன்னிப்பு என்ன வென்றால்.
இறைவனை நினைந்து,உணர்ந்து,உண்மை ஒழுக்கமுடன்,ஒரே நினைவில் நின்று உண்மையான திருஅருட்பாடல்களை பாராயணம் செய்தலும்,தோத்திரம் செய்தலும்,ஜீவர்களுக்கு உண்டாகும்,பசி,பிணி,கொலை-பயம்,இச்சை,எளிமை,போன்ற துன்பங்கள் வரும்போது, நம்மால் முடிந்த வரை,அந்த துன்பத்தை போக்க வேண்டும்,இவையே மனித செயல்களாகும்.

தெரிந்து செய்த குற்றங்களுக்கு அதிக தண்டனை கொடுக்கப்படுகிறது,அவை என்ன
தெரியுமா ?

மனதால் செய்யும் குற்றங்களுக்கு சண்டாள தேகம் என்னும்,கரடி,புலி,-சிங்கம்,போன்ற மிருக தேகம் கொடுக்கப் படும்.வாக்கால் செய்யும் குற்றங்களுக்கு ஆடு,மாடு,பன்றி,குதிரை,நாய்,
போன்ற மிருக தேகங்கள் கொடுக்கப் படும்.

தேகத்தால் செய்யும் குற்றங்களுக்கு மரம், செடி, கொடி போன்ற தேகம் கொடுக்கப்படும்.
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு மீண்டும் குற்றம் செய்யாமல் இருக்க இடைவிடாது, இறைவனை நினைந்து,நினைந்து,உணர்ந்து,உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பு நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால் அழுது மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதுவும் போக, ஆதரவு அற்ற ஏழைகள் இருக்கும் இடம் தேடி அவர்களது பசியைப் போக்க வேண்டும்.அங்கப் பழுது உள்ளவர்களுக்கு தொண்டு செய்யவேண்டும் .

மீண்டும் உயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டி.உயிர்க் கொலை செய்ய கொண்டு போகும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.மேலும் உயிர்களின் மேல் நாம் காட்டும்,இரக்கம், அன்பு,தயவு,கருணை,
இவைகளால்.குற்றத்திற்கு உண்டான தண்டனைக் குறைக்கப் படும்.

 இதைச் செய்யத் தவறினால் இதற்கு உண்டான தண்டனை அகால சோகமான மரணம் தான்.

அடுத்து சண்டாள தேகங்களை இயற்கை, கொடுத்துக் கொண்டே இருக்கும்.எப்போதும் பிறந்து பிறந்து,இறந்து இறந்து,தேகத்தை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

*உலகை ஆளும் குற்றவாளிகள்* !

இந்த உலகை ஆட்சி செய்வதற்கு என்று சில பல குற்றவாளிகள்,உள்ளார்கள்.குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தேர்ந்து எடுத்து ,உலகை ஆண்டு கொண்டு உள்ளார்கள்.
அவர்கள் செய்யும் குற்றங்கள் அளவிட முடியாதவை.குருடனும் குருடனும் குருட்டு ஆட்டம் ஆடி குழியில் விழுந்தார்கள் என்பது போல் உள்ளது,

இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட, காலம் வந்து கொண்டிருக்கிறது பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை. அளவில் அடங்காதவையாக இருக்கும் .

*அணு ஆராய்ச்சி* !

இந்த உலகத்தில் உள்ள அணுக்கள் என்னும் பொருட்களை வைத்துக் கொண்டு ,அறிவியல் ,விஞ்ஞானம் ,வேதியல் ,போன்ற ஆராய்ச்சிகள் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டிருக்கிறது .அவர்களால் கண்டு பிடிக்கும் அணுக்கருவிகள்.அக் கருவிகளின் செயல்பாடுகளை அதிசயம் என்றும், புதிய கண்டு பிடிப்புகள்  என்றும், பறை சாற்று கிறார்கள், இங்கு உள்ளதைக் கொண்டு எதையும் சாதித்து விடமுடியாது, இறைவனால் படைத்த இந்த உலகத்தில் உள்ள  சிறிய கருவிகளை  வைத்துக் கொண்டு , எதையும் முழுமையாக கண்டு பிடிக்கவும் முடியாது.

உண்மையைக் கண்டுபிடிக்கும் கருவிகளும் எவரிடமும் இல்லை .சாதாரண மனித அறிவைக் கொண்டும் ,படிப்பு அறிவைக் கொண்டும் உண்மையை அறிந்து கொள்ள இயலாது.

மேலும் ஆராய்ச்சி எனற பெயரில் ,மக்கள் பணத்தை வீண் விரையம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
செவ்வாய் கிரகதிற்கும் ,சந்திர மண்டலத்திற்கும்,
ராக்கெட்,விண்கலம் போன்ற  அணு இயந்திரக் கருவிகளைக் கொண்டு,ஆராய்ச்சி செய்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு வருகிறார்கள் .செவ்வாய் கிரகத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்தோம் என்றும் ,அங்கும் மக்கள் சென்று வாழலாம் என்றும் ,பொய்யான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .
ஒரு சில உலக நாடுகள்,விஞ்ஞானம்,அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் போட்டிப் போட்டுக் கொண்டு மக்களின் பணத்தை விரையம் செய்து கொண்டு வருகிறார்கள.

இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு , ஒரு கூட்டம்,ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறது .

உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஆஹா ,,ஓகோ என்று போற்றுகிறோம் .நம் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து அனுபவித்து, உலக உண்மை அதிசயங்களை ஒன்று விடாமல் கண்டு பிடித்து உலக மக்களுக்கு தெரிவித்த , அருள் ஞான வள்ளலாரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது ,

நம் தமிழ் நாட்டில் படித்தவர்கள் இல்லையா ?அறிவாளிகள் இல்லையா ?அறிஞர்கள் இல்லையா ?அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள் இல்லையா ? வள்ளலார் எழுதி வைத்துள்ள அருட்பாவை யாரும் படிக்க
வில்லையா ?படிக்கும் தகுதி எவருக்கும் இல்லையா ?

இனிமேலாவது படித்து அறிந்து தெரிந்து கொள்வார்களா ? என்பது தெரியவில்லை,

அழிந்து போகிறவர்கள் ( மரணம் வருபவர்கள் ) கண்டு பிடித்தது எல்லாம் பொய்யானதுதான் ,அழியாத தேகம் ( மரணத்தை வென்றவர்கள் ) படைத்தவர்கள் கண்டு பிடித்தது எல்லாம் உண்மையாகும் ,

அருள் தேகத்தை பெற்று கண்டு பிடித்தது என்றும் அழியாத உண்மையாகும்.
அதுவே உண்மையான கண்டு பிடிப்பாகும் .

*அருள் அறிவு*

அருள் அறிவைக் கொண்டு தான் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும் ! .அதை மற்றவர்களுக்கும் சொல்லலாம்! ஆனால் காட்ட முடியாது.
அவரவர்களே அருள் அனுபவித்தால்தான் அறிந்து கொள்ள முடியும்,உணரமுடியும்.இதுவே உலக ரகசியமாகும்.

இதை வள்ளலார் அனுபவத்தால் அறிக என்கிறார்.அனுபவத்தால் அறிந்தால் விளங்கும் என்கிறார் !

கண்டு பிடித்தவனும் சாகிறான் ,கண்டு பிடிக்காதவனும் சாகிறான் ,கண்டு பிடித்தவன் அடைந்த லாபம் என்ன ?கண்டு பிடிக்காதவன் அடைந்த லாபம் என்ன ?அனைவருக்கும் மரணம் தான் இறுதி முடிவாக இருக்கிறது.

 மறுபடியும் பிறப்பு,மறுபடியும் இறப்பு ,என்னும் தொடர்கதை நீண்டு கொண்டே இருக்கிறது .இவற்றால்  மனிதர்கள் அறிந்த உண்மைதான் என்ன ?

பொய்யைக் கொண்டு பொய்யை கண்டு பிடிக்கிறார்கள்.
யாவும் பொய்யே ! இவர்களின்  அணு ஆயுதக் கண்டுபிடிப்புகள் யாவும் உயிர்களை அழிக்கத்தான் கண்டு பிடித்து உள்ளார்களே தவிர, உயிர்களைக் காப்பாற்ற எதையும் கண்டு பிடிக்கவில்லை ,

இவர்கள் *அறிவியல் ஆராச்சியால், ஒரு உயிரை உண்டாக்க முடியுமா?* இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்ல இதுவரைக்கும் யாராவது,
எதையாவது கண்டு பிடித்து இருக்கிறார்களா ?யாரும், எதையும் கண்டு பிடிக்க வில்லை .{வள்ளலாரைத் தவிர }

இன்றைய விஞ்ஞானிகள் மட்டும் அல்ல !அன்றைய அருளாளர்களும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் வள்ளலார் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளந்திடும் மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை

விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே

அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திடக் கண்டாரேல்
அன்றி ஒரு வறேனும் அளவு கண்டார் இலையே

துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன்
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்கப் படுமோ !

என்கிறார் வள்ளலார் .இவர்கள் எல்லோரும் இந்த உலகத்தையும்.உலகத்தில் உள்ள  பொருள்களையும் வைத்து .உலகத்தை இயக்கும் ஆற்றல்களையும் {சத்தி }தேடித்தேடி அலைந்து அலைந்து ,அளந்து அளந்து ,அளக்க முடியாமல்,அவர்கள் அளக்கும் கருவிகள் தேய்ந்ததே ஒழிய அளவு காண முடியவில்லை மேலும் வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் போன்ற சிறிய தேக கரணங்களைக் கொண்டு,சிறிய அருளைப் பெற்று,அந்த சிறிய அருள்  என்னும் கருவிகளைக் கொண்டு அளந்தார்கள் .அருள் என்னும் கருவிகள் தான் தேய்ந்ததே ஒழிய உண்மையான அளவு காண முடியவில்லை.

அவர்களுக்கு சொல்கிறேன், எனக்கு தெரிந்த உண்மையில் ஒரு சிறிய அளவு சொல்கிறேன் அதையாவது வைத்துக் கொண்டு இவர்களால் துணிந்து அளக்க முடியுமா ? என்று சவால் விடுவது போல் சொல்லுகிறார் வள்ளலார்.
இவர்களால் ஒரு சிறிய துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாது என்கிறார் .

அவர்களாலே முடியவில்லை என்றால் இந்த அறிவியல் விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களால் எந்த உண்மையைக் கண்டு பிடிக்க முடியும் .இவர்களே தண்டிக்கப்பட்ட சிறைச்சாலையில் உள்ளவர்கள் இவர்களுக்கு அருள் என்னும் உண்மையை எப்படிக் கண்டு பிடிக்க முடியும்.   

இந்த உலகத்தில் ஒரு உயிரை அறிவியல் மூலமாக,விஞ்ஞான மூலமாக,வேதியல் மூலமாக,அணு ஆராய்ச்சி மூலமாக 
 உருவாக்க முடியுமா ? என்றால் முடியாது !

இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து, ஆன்மாவை உயிர்களை உண்மையான வீட்டிற்கு,அதாவது உண்மையான விலாசத்திற்கு, செல்லும் வழியைக் கண்டுப் பிடிப்பதே உண்மையான கண்டு பிடிப்பாகும் !. {இங்கு உள்ள ஆன்மாக்கள் எல்லாம் விலாசம் தெரியாத ஆன்மாக்கள்}உண்மையான விலாசத்தைக் -- கண்டுப் பிடித்து சென்றவர் வள்ளலார் ஒருவர்தான் .அவர் கண்டுபிடித்த,உண்மையான விலாசத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளார் ,

அந்த விலாசத்தை வைத்துக் கொண்டு தேடினால் கிடைக்காது.அவர்போல் வாழ்ந்தால் தான் கிடைக்கும்,வேறு எந்த வழியாலும் கிடைக்காது ,--இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படும்! .எங்கு இருந்து வந்தோமோ அங்கு செலவதுதான் உண்மையான கண்டு பிடிப்பாகும்.

இந்த சிறைசாலையில் இருந்து வெளியேற வேண்டுமானால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,என்ன வென்றால் எல்லா ஆன்மாக்களிலும் அமுதம் என்னும், *அரும் பெரும் பொருள்* இறைவனால் ஆன்மா என்னும் உள் ஒளியில வைக்கப்பட்டு உள்ளது ,அவற்றை அறிந்து,தெரிந்து,
நினைந்து நினைந்து,உணர்ந்து உணர்ந்து ,அந்த *அருள் அமுதை* எடுத்து உண்ணும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் .அந்த *அருள் அமுதம்* கிடைத்தால் நமக்கு பொருள் உணவு தேவைப்படாது.!அருள் அமுதை உட்கொண்டவர்கள் ,இந்த சிறைச்சாலை என்னும் உலகை விட்டு வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும் ,

அருள் அமுதைப் பெறும் வழியை அறிந்து கொள்வதுதான் *அருள் அறிவு* என்பதாகும்.அதுவே சாகாக்கலை,என்னும் சாகாக்கல்வி யாகும்.

அந்த அருள் அறிவைப் பெரும் வழிதான் என்ன வென்றால் ?

 இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு ஒழுக்கங்களையும் மனிதன் கடைப்பிடித்து ,முழுமைப் பெற்று பரிபூரணம் அடைந்து ஆன்மாவில் நிறைந்து,பின் எல்லா உயிர்களையும் தம் உயிர்ப்போல் என்னும், ஆன்மநேய ஒருமைப் பாடு என்னும், *ஒருமையில்* உயிர் இரக்கம் என்னும் .அன்பு.
தயவு,கருணை போன்ற செயல்களில், தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ,
அருள் அறிவு புலப்படும் அந்த அறிவைக் கொண்டு அருள் என்னும் அமுதம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும்.அறிந்து கொண்டாலும் அவ்வளவு எளிதில் அந்தக்கதவு  திறக்கப்பட மாட்டாது.ஆன்ம
பரிசோதனை செய்து ,அதிலும் வெற்றிப் பெற்றால்தான் அந்த அருள் வைத்திருக்கும் பெட்டித் திறக்கப்படும்.

அப்படி அறிந்து கொண்டவர் வள்ளலார் ! ,தெரிந்து கொண்ட பிறகும் பெட்டியைத் திறக்க முடியவில்லை அந்தப் பெட்டி உள்ள இடம் நம்முடைய சிறநடுவில் உள்ள சிற்சபை என்னும் {ஆன்மா }இடமாகும்.அங்கு வைக்கப்பட்ட பெட்டியை *அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் கருணையால் மட்டும்தான் திறக்கப் படும் என்பதை உணர்கிறார் ! அவர் ஆண்டவரை எப்படி அழைக்கிறார் என்பதை பின் வரும் பாடலில் பாருங்கள் .

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!*

பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு
இது நீ
பெருக என அது திறக்கும் பெருந் திறவுக் கோலும்

எட்டும் இரண்டும் தெரியாதே என்கையிலே கொடுத்தீர்
இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்

அட்டிசெய நினையாதீர் அரைக் கணமும் தரியேன்
அரைக் கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக

வட்டியிட்டு உம்மிடத்தே வாங்குவன் உம் ஆணை
மணிமன்றில் நடம் புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே !

 அருட்பேருஞ்ஜோதி ஆண்டவர் விரைந்து வந்து பெட்டியைத் திறக்க வேண்டும் .காலதாமதம் செய்தால் ,
ஒவ்வொரு வினாடிக்கும் உம்மிடம் வட்டி போட்டு வாங்குவேன் என்பதை இறைவனுக்கே சவால் விடுகிறார். சத்தியம் வைத்து விரைந்து வரவேண்டும் என்று.
இறைவனுக்கே ஆணையிடுகிறார்.--அந்த அளவிற்கு ஆன்ம பரிசோதனையில் வெற்றிப் பெறுகிறார் .

இறைவன் வள்ளலார் கட்டளையை ஏற்று உடனே வந்து *அருள் அமுதம்* வைத்துள்ள பெட்டியைத் திறந்து விடுகிறார் . இதேபோல் மனிதனாக பிறந்த அனைவருக்கும் கிடைக்கும் என்கிறார் வள்ளலார் .

அருள் அமுதம் உள்ள பெட்டி {ஆன்மா }திறந்த பிறகு,அதில் உள்ள அமுதம் உடம்பு முழுவதும் சென்று ,அருள் உடம்பாக மாற்றம் அடையும், பின்பு மாயையால் கட்டிக் கொடுக்கப் பட்ட,ஊன் உடம்பை அழிக்காமல். சிந்தாமல்,சிதறாமல்,பின்னப்படாமல், தனித்தனியாக பிரித்து--{பஞ்ச பூத அணு உடம்பை }மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்,பின் பஞ்ச பூத அணுக்கள் எப்படி சேர்ந்ததோ !அப்படியே பிரித்து எடுக்கப்படும்.பின்பு அருளின் கருணையால்,ஊன உடம்பு, ஒளி உடம்பாக மாற்றம் செய்து கொடுக்கப்படும் .
ஒளி உடம்பைப்  பெற்றுக் கொண்டவர்களை, இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியே மரியாதையுடன், *மாயையால்* அனுப்பி வைக்கப்படும் .

ஆன்மா உடம்பு இல்லாமல் வாழ முடியாது !,உடம்பு இல்லாமல் இருக்க முடியாது ! உடம்பை அழிக்கக் கூடாது.உடம்பை அழியாத,பொன்னு உடம்பாக மாற்ற வேண்டும்.-அதுவே ஆன்மதேகம் அடுத்து சுத்த தேகம்.அடுத்து  பிரணவதேகம்.அடுத்து ஞானதேகம். அந்த பொன்னுடம்பை,ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.ஒளி உடம்பாக மாறும்போதுதான்,
சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ,அழிவற்ற தேகம் கிடைக்கும்.அந்த ஒளி உடம்பு கிடைத்த பின்புதான் ,--இந்த சிறைச்சாலை என்னும் உலகை விட்டு வெளியேற முடியும்.அதன் பின் அந்த ஒளி உடம்பு எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த உலகத்தில் உள்ள பொய்யான ,சாதி,மதம்,சமயம் போன்ற எந்த செயல்களிலும் பற்று வைக்காமல் .நம்மை அனுப்பிய இறைவனையே நினைந்து உணர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும் .அப்படி இருந்தால் .இறைவனின் அன்பும் கருணையும் நமக்கு கிடைக்கும் -மறைந்து கிடக்கும் அருள் அமுதம் உள்ள பெட்டியைத் , திறக்க ,இறைவன் வழிக் காட்டுவார் .திறந்து அதில் இருந்து சுரக்கும் அருள் அமுதை உண்டு, ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு .இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியேற முடியும் .

 அமுதத்தால் உடம்பு எப்படி மாற்றம் அடைகிறது என்பதை வள்ளலார் *அருட்பெருஞ்ஜோதி அகவலில்* பதிவு செய்து உள்ளதைப்  பாருங்கள் !

தோல் எலாங் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட

என்பு எலாம் நெக்கு நெக்கு இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும் உள்இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித்து ஒரு திரளாயிட

மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம் ஊற்று எடுத்து ஒடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட

மெய் எலாம் குளிர்ந்திட மென்மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறியுறு ஆன்மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட

உலகெலாம் விடயம் உள வெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட

என்னுளத்து எழுந்து உயிர் எலாம் மலர்ந்திட
என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே !

பொன்னடி கண்டு அருள் புத்தமுது உணவே
என்னுளத்து எழுந்த என்னுடைய அன்பே!

தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு தரம் எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்து எனதுருவை
இன்புருவாக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளம் கலந்த என்தனி அன்பே

தன் வசமாகித் ததும்பி மேற் பொங்கி
என் வசம் அடைந்த என்னுடை அன்பே

தன்னுளே பொங்கிய தண் அமுத உணவே
என்னுளே பொங்கிய என் தனி அன்பே !

என்று வள்ளலார் தான் அனுபவித்த அருள் அனுபவத்தையும் அருள் அனுபவத்தால் தன்னுடைய உடம்பு எப்படி மாற்றம் அடைந்தது என்ற உண்மைகளையும், மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளார் .

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து வள்ளலாரைத் தவிர ,இந்த உலகம் என்னும், சிறைச்சாலையை விட்டு யாரும் வெளியே செல்லவில்லை .

மனிதனாகப் பிறப்பு எடுத்த அனைவரும் வள்ளலாரைப் போல் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்ல முடியும் என்பதை வாழ்ந்து வழிக் காட்டி உள்ளார் நமது அருட் தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.           

இவற்றை எல்லாம் செய்யும் ஆற்றல் யாரிடம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

இந்த சிறைச்சாலையை நிர்வாகம் செய்யும் ஆற்றல் *மாயை*,* *மாமாயை* *பெரு மாயை* என்னும் ஆற்றல் மிகுந்த அணுக்களுக்கு அருட்பெரும்ஜோதி !ஆண்டவரால்  முழு உரிமை வழங்கப் பட்டு உள்ளது என்பதை அறிவுள்ள மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

இந்த சிறைச்சாலையைப் போல் பலகோடி,ஆண்டங்களில்,பலகோடிச் சிறைச்சாலைகளை உண்டாக்கி இயக்கிக் கொண்டு இருப்பவர் தான் அருட்பெருஞ்ஜோதி-அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி ! என்னும், *பேரருள்* அருட்பெருஞ்சோதி* அணுவாகும்.அவைதான் தனிப்பெருங் கருணையாகும் .

அந்த அருட்பெரும்ஜோதி என்னும்  அருள் அணுவைத் தொடர்பு கொண்டால் மாயை என்னும் அணு வழிக் காட்டும், மாயையின் காவலில் அதாவது நிர்வாகத்தில் உள்ள சிறைச்சாலையில்  இருந்து வெளியே செல்ல வேண்டுமானால்,---ஆண்டவரால் கொடுத்த அருள் அமுதம் என்னும் உணவை உண்டு,ஊன உடம்பை, ஒளி உடம்பாக மாற்றிய ஆன்மாவிற்கு. ஆன்மதேகம் கொடுத்து தனித்து இருக்கும் போது இந்த சிறைச்சாலையில் இருந்து,அளவில்லா மதிப்பு மரியாதையுடன், பாராட்டு பெற்று வெளியே அனுப்பி
வைக்கப்படும் ,

அருள் என்னும் அமுதத்தை கண்டு பிடித்து.அதை யார் புசிக்கிரார்களோ அவர்களை மட்டும் தான் மாயை என்னும் அணு சிறையில் இருந்து வெளியேற்றும்.
மாயைக்கு இவ்வளவு அதிகாரம் உண்டா ? என்று நீங்கள் நினைக்கலாம் ,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் !அனுப்பிய ஆன்மாக்களுக்கு, உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொடுப்பதே,மாயைதான் ,அதனால்தான் உடம்பு என்னும் வீட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முடியாது .உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் வெளியே செல்ல முடியாது !மறுபடியும் வேறு ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்படும், இவை இயற்கையின் கட்டளையாகும்! சட்டமாகும்.

பெரு மாயைதான். உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொடுத்தது என்பதை ,வள்ளலார் சொல்வதைப் பாருங்கள்.!

*வள்ளலார் பாடல்* !

பெரு மாயை என்னும் ஒரு பெண் பிள்ளை நீ தான்
பெற்ற உடம்பு இது சாகாச் சுத்த உடம்பாக்கி

ஒரு ஞானத் திருஅமுதம் உண்டே ஓங்குகின்றேன் இனி நின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்

அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ
அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க

தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ
சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே !

என்னும் அருட்பா வாயிலாக உண்மையைப் போட்டு உடைக்கிறார்.இந்த உளவை இதுவரையில் எந்த அருளாளர்களும் கண்டுப்பிடிக்க முடிய வில்லை !,வள்ளலார் கண்டு பிடித்து உலக மக்களுக்கு வெளிப்படையாக காட்டி உள்ளார்கள் ! 

உடம்பை அழிக்காமல் ,
உடம்பின் அணுக்களை,சிந்தாமல்,சிதறாமல்,பின்னப் படுத்தாமல்  பிரித்து மாயை இடம் ஒப்படைக்க வேண்டும். --அனைத்தும் ஒப்படைத்த பின்தான் மாயை வெளியே அனுப்பும் ,இதைத்தான் வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றார்..பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றார். நித்திய பெருவாழ்வு என்றார் சுத்த பிரணவ ஞான தேகம் என்கிறார். கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிறார் .

இந்த உண்மையான ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் சமய ,மத வாதிகள்,ஒன்று கிடக்க ஒன்றை உளறிக் கொண்டு இருக்கிறார்கள் .
ஆன்மா அழியாது ,உடம்பு அழிந்துவிடும் ,
ஆன்மா பரலோகம்,
சொர்க்கம் ,வைகுண்டம் ,கைலாயம் போன்ற இடங்களில் போய் பிறப்பு இல்லாமல் வாழும் என்று பொய்யானக் கற்பனைக் கதைகளை கற்பனைகளாக கட்டி விட்டார்கள்.
ஆதலால் தான் சமய,மதங்களை நம்ப வேண்டாம் என்றார் வள்ளலார் .

சமய,மத வாதிகள் கண்டவர் விண்டதில்லை.விண்டவர் கண்டதில்லை ! என்ற பொய்யான கருத்தை மக்கள் மத்தியில் விதைத்து விட்டார்கள்.
வள்ளலார் நான் கண்டு கொண்டேன்,களித்தேன்,
களிக்கின்றேன் என்கிறார் .அவர் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி யெலாம் கண்டேன்

அடர் கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்

உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்

இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருட் செயலே !

நான் காணாதது ஒன்றும் இல்லை அனைத்தும் அறிந்து தெளிந்து கொண்டேன் ,அனைத்து இடர்களையும் தவிர்த்து ,அருள் ஒளியால் அழியாமல் இருக்கும்,அறிவு உருவமாக அடைந்தேன் .உடல் உயிர் உள்ளம் எலாம் தழைத்தேன் என்றும், உள்ளது உள்ளபடி யாவும் அறிந்து கொண்டேன் .என்றும் ,இத்தனையும் இறைவனுடைய அருட்செயலே காரண காரியமாகும் என்றும் திறம்பட திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறார் வள்ளலார் .   

இந்த உலகத்தில் வாழ்வது சிற்றின்பம் என்பதாகும் !,வெளியே சென்று,அருள் வெளியில் வாழ்வது பேரின்பமாகும் ! .பிறப்பு எடுத்து வாழ்வது சிற்றின்பம் !பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வது பேரின்பம் !

இந்த எளிய வழியைத் தெரிந்து கொள்ளாமல் பல பொய்யான கற்பனைக் கதைகளும் ,பொய்யான கற்பனை தெய்வங்களும்,--பொய்யான ஆன்மீக பெரியோர்களின் செய்திகளும்,,பொய்யான அருளாளர்களால்,பொய்யை  உலகில் விதைக்கப் பட்டு விட்டது .மனித உயிர்களை குழப்பி விட்டார்கள் .மனித உயிர்களும் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி ஏமாந்து பிறந்து,பிறந்து,இறந்து,இறந்து துன்பத்தில் சிக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .

உண்மையான வழி தெரியாமல் அலைந்து,திரிந்து கொண்டு இருந்த மனித உயிர்களுக்கு உண்மையான வழியைக் காட்ட வந்தவர்தான் நமது --திருஅருட் பிரகாச வள்ளலார் என்பவராகும் அவர் காட்டிய பாதை நேர் பாதையாகும் !தூய்மையான பாதையும் !உண்மையான பாதையுமாகும் !  இந்த சிறைச்சாலையை விட்டு வெளியேற வேண்டுமானால் வள்ளலார் காட்டிய பாதை மட்டும்தான் உண்மையான {வழி } பாதையாகும்,

உண்மை உரைக்கின்றேன் தெரிந்து கொள்ளுங்கள்,
என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள்.!

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்

எண்மையினான் என நினையீர் எல்லாம் செய்ய வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்கக்

கண்மை தரும் மொரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

என்று கூறி, நம்மை எல்லாம் அழைக்கின்றார் வள்ளலார் ! இவை கதைகளோ ,கற்பனைகளோ.பொழுது போக்கோ கிடையாது ,மனிதன் மனிதனாக வாழ்ந்து ,இறை நிலையை அடையும் உண்மை மார்க்கமாகும்,அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும்.

வேறு எந்த குறுக்கு வழியிலும் வெளியேற முடியாது !--இந்த உண்மையான வழியைக் கண்டுப்  பிடித்துக் காட்டியவர்தான் --திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் .அவர் சென்ற நேர் பாதையை ,நமக்குக் காட்டி உள்ளார்கள் .நாமும் அந்த நேர் வழியைப் பின்பற்றி .இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து வெளியேறுவோம் .
என்றும் பேரின்ப வாழவு பெற்று பெருமகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வோம் !.

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்
9865939896

வியாழன், 23 ஜூலை, 2020

சிந்திப்போம் செயல்படுவோம் !

*சிந்திப்போம் செயல்படுவோம்* !

இன்று உலகம் முழுவதும் மாபெரும் சக்திவாய்ந்த. மனிதனால் பெயர் வைக்கப்பட்ட *கொரோனோ கிருமி* என்னும் தொற்று மக்களை அளவில் அடங்காத துன்பங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.

சுமார் ஐந்து மாதங்களாக மக்களுக்கு வேலைஇல்லை.வருமானம் இல்லை.உணவுக்கு வழியில்லை.
மக்களின் துயரங்களையும் துன்பங்களையும்.போக்க வழியில்லை.அரசாங்கம் கொடுக்கும் உதவிகளும்.
தொண்டு நிறுவனங்களும் செய்யும்உதவிகளும் மக்களுக்கு போதியதாக இல்லை.

நூற்றுக்கு எண்பது சதவீதமக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் வள்ளலார் கொள்கையைப் பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் அவரவர்களால் முடிந்த ஜீவகாருண்யப் பணியை.பொது நலத்தோடு இடைவிடாது தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

வள்ளலார் சொல்லியவண்ணம் இந்த ஜீவகாருண்ய பணி எல்லா காலக்கட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்துவது தான் ஏழை எளியவர்களுக்கு செய்யும் உயிர் இரக்க பணியாகும்.

வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்*.

*உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்*.

*ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்* என்றும் மக்களுக்கு தெளிவாக விளக்கி உள்ளார்.

மக்களுக்கு .பசி.
பிணி.தாகம்.இச்சை.எளிமை.
பயம் கொலை போன்ற  துன்பம் வரும்போது தம்மை சார்ந்தவர்களின் உதவியை நாடுகிறோம்.
அவர்களிடம் உதவி கிடைக்காவிட்டால் இறுதியாக கடவுளிடம் சென்று முறையிடுகிறோம்.

அதற்காக நம் உடம்பையும் உயிரையும் வருத்தி பலவகையான விரதங்கள் தவங்கள்.
யோகங்கள்.மற்றும் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்து வேண்டிக்கொள்கிறோம்.

*இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது* *!

உலகில் உள்ள சாதி சமய.மதங்களின் பெயரால்  நிறைய கடவுள்களை படைத்துள்ளார்கள்.

*இங்கே கடவுள் உண்டு என்பது உண்மை*.

அதில் *உண்மையான கடவுள் யார் ?* என்பதுதான் கேள்வி.

எந்த கடவுள் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக தொடர்பு கொண்டு தீர்த்து வைக்கிறவர் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

கடவுள் மனித உருவம் தாங்கியவரா ?  என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

நம்பிக்கையின் அடிப்படையில்.
அவரவர்கள் பின்பற்றும் சமயம் சார்ந்த.மதம் சார்ந்த கடவுள்களை வணங்கி வழிபாடு செய்து.  பிரச்சனைகளை பதிய வைத்து. தீர்க்க வேண்டி வேண்டுகிறோம்.

ஒருசில நேரங்களில் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன. நாம் நினைப்போம் நாம் வழிபடும் கடவுள் தான் நம் பிரச்சனைகளை தீர்த்து வைத்துவிட்டார் என்று நினைப்பது இயல்பு.

இப்படி பல கடவுள்களின் பெயரிலும் நம்பிக்கை வைத்து் கொண்டு இருப்பது மக்களின் மனநிலையாகும்.

அந்த அளவிற்கு நம்பிக்கையை நம்பும்படி சமயங்கள் மதங்கள் வைத்து விட்டார்கள்.

இங்கே வள்ளலார் மக்களுக்குத் தெளிவுப் படுத்துகின்றார்.

நீங்கள் கடவுளை வேண்டுவதும் வழிபடுவதும் உண்மை.உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் உண்மை..

ஆனாலும் நீங்கள் வழிபடும் சமய மதக்கடவுள்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவில்லை.

*உண்மையான கடவுள் ஒருவர் உண்டு* *அவர் ஒளியாக உள்ளார்*.
அவருக்குப் பெயர்தான் *அருட்பெருஞ்ஜோதி* ஆண்டவர் என்றும் மக்களுக்கு புரியவைக்கிறார்.

நீங்கள் எங்கு எங்கு இருந்து எதை எதை நினைத்து.துன்பம் நிறைவேற வேண்டும் என்று உண்மை உருக்கத்துடன் எந்தக் கடவுளை வேண்டினாலும் அங்கங்கு இருந்து அருள் பாலித்து நிறைவேற்றும்  கடவுள் ஒருவரே !

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக சொல்லுகின்றார்.

*எங்கெங் கிருந்து உயிர் ஏது ஏது* *வேண்டினும்*
*அங்கங் கிருந்து அருள் அருட்பெருஞ் ஜோதி* !

என்று  வெளிப்படையாக விளக்கி உள்ளார் !

மேலும்

1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்

நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்

கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்

செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

மேலே கண்ட பாடல்கள் உண்மையை எடுத்து இயம்புகின்றன்
.
அந்த உண்மையான தெய்வம் எங்கு இருந்து இயங்கிக் கொண்டு உள்ளது என்பதையும் எவ்வண்ணமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக விளக்கி உள்ளார்.மேலே கண்ட பாடலை பலமுறை படித்து உணரவேண்டும்.

கடவுள் நேரிடையாக வந்து உதவி செய்யமாட்டார்.
மனித உருவில் வந்துதான் உதவி செய்வார்.

எனவேதான் *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்*

ஏன் என்றால் ? ஒவ்வொரு ஆன்மாவிலும் உள் ஒளியாக இருந்து செயல்பட்டுக்கொண்டுள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.

எனவேதான் கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் என்பதாகும்.

*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* !

*ஜீவநேயம்.மனித நேயத்தைவிட உயர்ந்த்து ஆன்மநேயம் என்பதை உலகிற்கு பறைசாற்றியவர் வள்ளலார்*.

என்பார் வள்ளலார்.

சாதி சமய மதம்.இனம்.மொழி. நாடு போன்ற வேற்றுமை இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து தொண்டு செய்வதே கடவுள் வழிபாடாகும்.

வள்ளலார் பாடல் !

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்த தாலோ.!

என்னும் பாடலின் மூலம் தெரியப்படுத்துகின்றார்.

இந்த கொரோனோ தொற்றில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற. தனிமனித ஒழுக்கத்தைக் கடைபிடித்து .
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஒன்றுபட்டு வேண்டுவோம் நிச்சியம் வெற்றிகிடைக்கும்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கல்பட்டு ஐயா ! வடலூர் !

கல்பட்டு ஐயா
----------------------------

வள்ளற்பெருமானாரின் முதன்மை தொண்டர் மற்றும் அணுக்கத் தொண்டர் கல்பட்டு ஐயா.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆன்ம நேய அன்புடையீர், வணக்கம்.

எப்படி 'அருட்பெருஞ்ஜோதி' இறைவன், நமது அருள்குருவான வள்ளலார் இருக்கும் குடிசைக்கே வந்து அவரை அடிமை கொண்டாரோ அதுபோல வள்ளலார், 'கல்பட்டு ஐயா' இருக்கும் இடத்திற்கே சென்று அவரை அடிமை கொண்டார் என்பதுதான் வேறுயெந்த சீடர்களுக்கும் கிடைக்காத சிறப்பை அவர் பெற காரணமாக உள்ளது.

மேலும் வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் வள்ளலார் திருவறையினுள் சென்றவுடன் அந்த அறை திருக்கதவுகளை வெளியிலிருந்து தாளிட்டவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. எனவே இவரை வள்ளலாரின் 'முதன்மை சீடர்' என்பர்.

பெருமானாரே தேடிச்சென்று ஆட்கொள்ளும் தகுதிபெற்ற
புண்ணிய உத்தமர்தான் " கல்பட்டு இராமலிங்கம்" என்னும் கல்பட்டு ஐயா.

உடல், பொருள், ஆவி மூன்றையும் பெருமானார்க்குத்
தத்தம்செய்து வாழ்ந்து கட்டியவர்.

சன்மார்க்க சங்க சாதுக்களுள் முதலானவர் , வள்ளல் பெருமானால் ஆட்கொள்ள பட்டவர், பெருமானால் ராமலிங்க மூர்த்திகள் என்றும் அழைக்கப்பட்டவர்,வள்ளல் பெருமானின் திருக்கரத்தால் உணவு உண்ணும் பெரும்பேறு பெற்றவர் கல்பட்டு அய்யா.

மேட்டுக் குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 30-01-1874 ஆம் ஆண்டு நள்ளிரவு மணி 12--க்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன்  திருவருட்பிரகாச வள்ளலார் இரண்டறக் கலக்கும் முன் திருக்காப்பிட்டுக் கொள்ளும்பொழுது  கல்பட்டு ஐயாவும், தொழுவூர் வேலாயுத முதலியார் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

கல்பட்டு ஐயா
---------------------------
விழுப்புரத்துக்கு அருகில் கல்பட்டு என்ற அழகிய சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் பிறந்தவர் கல்பட்டு ஐயா என்ற ஞானி. அவரது இயற்பெயர் ராமலிங்கம். சின்னஞ்சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி தமிழகமெங்கும் சுற்றித் திரிந்தார். வழிகாட்டும் குரு எவரும் இவருக்கு வாய்க்கவில்லை.

அப்புறம்தான், குருவைத் தேடி வேறெங்கும் செல்லவேண்டாம் என்ற ஞானம் அவருக்கு வந்தது. விருத்தாசலம் அருகே திருநறுங் குன்றத்தில் இருந்த குன்றுகளில் ஒன்றில் குடிசை போட்டுக்கொண்டு நிட்டையில் அமர்ந்தார்.

தன்னை நாடிவரும் அன்பர்களிடம் தனது ஞானாசிரியன் இன்ன மாதத்தில், இன்ன கிழமையில், இன்ன நாழிகையில் வருவார் என்று சொல்லிவிட்டு காத்திருக்கிறார். பலரும் கூடி நிற்கின்றனர்.

எங்கெங்கு இருந்து ஏதேது வேண்டினும் அங்கங்கு அருளும் அருட்பெருஞ்ஜோதி - என்று பாடிய வள்ளல் பெருமான் தமது சீடரைத் தேடிப் புறப்பட்டார். மாட்டுவண்டி செல்கிறது. வண்டியைத் திருக்கோவிலூருக்கு அனுப்பிவிட்டு தாம் மட்டும் நறுங்குன்றத்திற்கு நடந்தே செல்கிறார் வள்ளல் பெருமான். குன்றின் மீதேறிச் செல்கிறார். அங்கிருந்த குடிசையின் உள்ளே குனிந்து நுழைகிறார்.

கல்பட்டு ஐயா கண்விழித்தபோது வள்ளல் பெருமானின் அழகிய திருவடிகள் கண்ணில் படுகின்றன. நெடுஞ்சாண் கிடையாகக் காலில் வீழ்ந்த கல்பட்டு ஐயாவை கைதொட்டுத் தூக்கினார் வள்ளலார். ‘ஆட்கொள்ள வேண்டும் ஐயனே’ என்று அரற்றினார் கல்பட்டு ஐயா. ‘உத்தரவு வரும் காத்திரு’ என்று கூறி கல்பட்டு ஐயாவை வாரி அணைத்துக்கொண்டார் வள்ளலார்.

பிறகு, 'சிதம்பரத்தில் சில நாள் இருந்துவிட்டு, தன்னை வந்து பார்க்குமாறு அவரிடம் சொல்லிவிட்டுச் சென்றாராம் வள்ளலார்.

கருங்குழி வந்தது
----------------------------------
வடலூரில் சத்திய தருமச் சாலை தொடங்கப்படாத காலம். ஆனாலும் தம்மைத் தேடி வள்ளலார் வந்து சென்ற சிறிது காலத்துக்கெல்லாம் புறப்பட்டுவிட்டார் கல்பட்டு ஐயா. ஆம், இராமலிங்கத்தைத் தேடி இராமலிங்கம் புறப்பட்டுவிட்டது. கோடைக் காற்றிலே தாடி பறக்க, கண்கள் அடிவானத்திற்கு அப்பால் லயிக்க, கையிலே கம்புடன் சுடுமணலில் கால் கொப்பளிக்க வேகமாக விரைகிறது; வாட்ட சாட்டமான அந்தச் சிவந்த உருவம்.

இடையில் ஒரு சிற்றாடை, தோளிலே துண்டு, கையிலே கம்பு. கல்பட்டு ஐயாவை வரைந்துகாட்ட ஒரு வரி போதும். பசியோ வாட்டுகிறது. தாகம் நாவைச் சுருட்டுகிறது. ‘போ, தேடிச்செல்’ - உந்தித் தள்ளுகிறது மனம். தேடலில் தெளிந்தது திசை. கருங்குழி வந்தாயிற்று.

அதற்கு முன்னரே வள்ளல் பெருமான் தமது தொண்டர்களைக் கூழ் கரைத்து வைக்குமாறு கூறியிருந்தார். தொண்டர்களுக்குப் புரியவில்லை. யாருக்காக? கேள்வி எல்லோர் மனத்தையும் குடைகிறது.

நேராக உள்ளே நுழைந்த அந்த உருவம் கருணை வள்ளலின் காலடியில் வீழ்ந்தது. அழுதது, சிரித்தது. இருகரம் நீட்டி வள்ளல் வார்த்த கூழினை வாங்கிப் பருகியது. பருகிக் கொண்டே இருந்தது. வயிறு நிறைந்தும் நிறுத்தவில்லை. ஊற்ற, ஊற்ற இன்னும் இன்னும் என்று வாங்கி குடித்துக் கொண்டே இருந்தார் கல்பட்டு ஐயா. ‘போதாதாங்காணும்?’ என்று கேட்டு கூழ் வார்ப்பதை நிறுத்தினார் பெருமான்.

போதும் என்று சொல்ல மனம் வரவில்லை. கண்ணீர் வழியத் தலையாட்டுகிறார் கல்பட்டு ஐயா. முடிந்தது பயணம்தான், தேடல் அல்ல. சத்திய தருமச்சாலை பக்கத்தில் ஒரு குடிசையில் தவமிருக்கலானார் கல்பட்டு ஐயா. அக்காலத்தே வெப்பமிகுதியால் அவருக்கு உடம்பெல்லாம் சிரங்கு கண்டது. ஆனால், சாலை அன்பர்கள் அவருக்கு உணவு தரவும் மறந்தனர்.

வெளியூர் சென்றிருந்த வள்ளலார் திரும்பியதும் ‘கல்பட்டுக்கு உணவு போயிற்றா?’ என்று கேட்டார். எல்லோரும் கல்லாய்ச் சமைந்தனர். உண்மை புலப்பட்டது. தாமே உணவுக் கிண்ணத்துடன் கல்பட்டு ஐயாவிடம் சென்று கல்பட்டு ஐயாவின் கையில் தாமரை இலைவைத்து தமது கையால் உருட்டி சோற்றுக் கவளங்களை வைத்தார். வாங்கி வாங்கித் தின்றார் கல்பட்டு ஐயா.

‘வள்ளல் பெருமானுக்குத் தொல்லை தந்துவிட்டேனே’ என்ற ஆற்றாமையிலும் துடித்தார் கல்பட்டு ஐயா. ‘அடியாருக்கு சிவஞானிகள் தொண்டு செய்வது உண்டுங்காணும்’ என்று வள்ளலார் சிரித்தபடிக் கூறினார்கள்.

ஒரு நாள் மாட்டுவண்டி ஒன்றில் வள்ளலாரும் கல்பட்டு ஐயாவும் பயணம் செய்துகொண்டிருந்தனர். சற்று தூரம் சென்றதும் வள்ளலார் கல்பட்டு ஐயாவை நோக்கி ‘கிடக்க விரும்புதுங்காணும்’ என்று சொன்னார்கள். உடனே எம்பெருமான் தலையை தன் மடியில் தாங்கி தூங்க உதவிசெய்தார். பெருமானும் தூங்கலானார். வண்டி போய்க்கொண்டிருந்தது.

அச்சமயம் வள்ளல் பெருமானின் திருமுகத்தைக் குனிந்து பார்த்த கல்பட்டு ஐயா திடுக்கிட்டுப்போனார். பெருமானாரின் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் பெருக் கெடுத்து வழிந்துகொண்டிருந்தது. பெருகி வந்த கண்ணீர் தொடையை நனைத்து பின்னும் வழிந்து வண்டிப் பலகையை நனைத்தது.

கல்பட்டு ஐயாவின் மனம் பதைபதைத்தது. உடலில் நோவு ஏதும் கண்டதோ என்று எண்ணி கலங்கினார். எழுப்பவும் துணிவு வரவில்லை. அடுத்த ஊர் வந்தது. பெருமான் கண் விழித்து எழுந்தார். என்ன குறை என்று சொல்ல வேண்டும் என்று கல்பட்டு ஐயா விநயமுடன் வேண்டிக்கொண்டார்.‘ப்ச்...அதற்கில்லைங்காணும் இந்த உலகமெல்லாம் இப்படி இருக்கிறதே என்கிறதுக்குத்தாங்காணும்!’ என்றார் பெருமான்.

வள்ளல் பெருமானுக்கு தொழுதூர் வேலாயுதம், கருங்குழி புருடோத்தமன், காரணப்பட்டு கந்தசாமி என்று எத்தனையோ அணுக்கத் தொண்டர்கள் இருந்தாலும்

உலகுக்காக அவர் வடித்த ஏக்கக் கண்ணீரை ஏந்தும் பாக்கியம் கல்பட்டு ஐயாவுக்கு மட்டுமே கிடைத்தது.

யாருக்கும் கிடைக்காத பெரும் பேராக நித்திய தேகம் அடைய தற்போத சுதந்திரத்தை ஆண்டவருக்கு எழுதிக் கொடுக்கும் அடிமை சாசனத்தை
 கல்பட்டு அய்யாவுக்காக நமது பெருமானே திருக்கைச் சார்த்தி அடிமைச்சாசனம் வரைந்தருளினார்கள். இந்நிகழ்ச்சி வள்ளல் மேட்டுக்குப்பத்தில் விளங்கிய போது 12-05-1872 ல் நடந்தது.

அவ்விண்ணப்பம் பின்வருமாறு அமைந்துள்ளது.

""போதநாச வந்தனம் செய்த விண்ணப்பம்""

(விண்ணப்பத்தின் முழுத் தொகுப்பும் அடுத்த குறிப்பில் வெளியிடப்படும்)

சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்டதும் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளும் தொழுதூர் வேலாயுத முதலியார் அவர்களும் வெளியில் பூட்டிட்டு சீல் வைத்தார்கள்.

என்று இதுபற்றிச் சத்திய ஞானசபை வழிபாட்டு விதிகளைக் குறித்து 23-02-1928 ல் வாக்குமூல அறிவிப்பு கொடுத்திட்ட திருப்பாதிரிப்புலியூர் இரத்தினம் என்பவர் குறிப்பிடுகின்றார்.

(மூன்று நாள் கழித்து அன்று இருந்த ஆங்கில அரசால் இந்த சீலை உடைத்து திருக்கதவை திறந்துபார்த்த போது அங்கு நம்பெருமான்.........நமது ஊணகண்களுக்கு காட்சியாகமலிருந்தார்........என்றும் எங்கும் இருக்கின்றார்........நமது ஊணக்கண்களுக்கு பழையபடி காட்சி கொடுக்கும் காலமும் மிக அருகில் கனிந்து வருகிறது.....)

இவ்வாறு நம்பெருமான் ஆணையிடும் இன்றியமையாக் கடமைகளைக் கல்பட்டு ஐயா நிறைவேற்றும் பொறுப்பினைப் பெற்று விளங்கினார்.

இப்படி வள்ளலாருடன் நெருக்கமாக இருந்தவர் கல்பட்டு ஐயா தான் ஏற்படுத்திய சத்திய தரும
சாலையை கல்பட்டு ஐயாவிடம் ஒப்படைத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன் இரண்டறக் கலந்தார். வள்ளலார் அவரின் கட்டளைப்படி, தரும சாலையின்
நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 28 வருடங்கள் சத்திய தருமச்சாலையிலே தங்கியிருந்து நிர்வகித்து வந்தார் கல்பட்டு ஐயா.

கல்பட்டு ஐயா சமாதி அடைதல்
-------------------------------------------------------
வள்ளல் வழியில் மாறாத அன்புகொண்டு பணிசெய்தும், பரஞ்சுடர் கண்டுநிற்கும் யோகம் செய்தும் ஏறக்குறைய 35 ஆண்டுகள் வடலூர் பெருவெளியில் வாழ்ந்த கல்பட்டு ஐயா,

சுபகிருதுஸ்ரீ, சித்திரைமீ, 14ஆம் நாள் (26-04-1902) சனிக்கிழமை, கேட்டை விண்மீன் சதுர்த்தசி கூடிய நாளில் சமாதி கொண்டிட்டார். அன்பர்கள் அவரைச் சாலையின் கீழ்புறத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கோவிலும் எடுத்துள்ளனர். நினைவு ஆலயமாக இன்று அனைவர்க்கும் அது வழிகாட்டி நிற்கிறது.
இப்போதும்  அவருடை சந்நிதியில்
அணையா தீபம் அருள் ஒளி வீசிக்கொண்டு
இருக்கிறது.

நன்றி.

தயவுத்திரு.
ந. குருமூர்த்தி அய்யா அவர்கள்.

சனி, 18 ஜூலை, 2020

கற்றது எல்லாம் பொய்யே !

*கற்றது எல்லாம் பொய்யே* !

வள்ளல்பெருமான் அவர்கள் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளவதற்கும் ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும் .
சரியை.கிரியை .யோகம். ஞானம் என்னும்  4×4 படிகளில்  ஞானத்தில் ஞானம் என்னும் 16 ஆவது படியைக் கடந்து
.உண்மையான இறைவன் யார் ? என்பதை அறிந்து அருள் பூரணம் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு உள்ளார்..

*வள்ளலார் பாடல்* !

சரியைநிலை நான்கும் ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனி கண் டறிந்தேன்

உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன் *மேல் உண்மைநிலை பெற்றேன்*

அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்

பெரிய சிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன் இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! ...என்கிறார்

மேலே கண்ட பாடலில் தெளிவாக தெளிவுபடுத்துகிறார்.
 சமய மதங்கள் சொல்லியுள்ள சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் 16 படிகளையும் தனித்தனியே கண்டு அறிந்தேன். அவர்கள் சொல்லாத்து சொல்ல முடியாத்து.செல்லாத்து செல்ல  முடியாதது. மேலும் தெரிந்து கொள்ள முடியாத மேல்நிலை தன்னில்  உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து.அதனுடன்  தொடர்புகொண்டு அருள் ஒளியால் உண்மை நிலைப் பெற்றேன் என்கிறார்.

*அதனால்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்கிறார்*.

*மூவரும் தேவரும் முத்தருஞ் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை* !

என்று துனிச்சலுடன் வெளிப்படையாக சொல்லி பதிவு செய்கிறார்.

மேலும் ஆறு அந்தங்களைப்பற்றி சமயங்களும் மதங்களும் உயர்வாக பேசுகின்றன.

வள்ளலார் சொல்லுகின்றார் .

சித்தாந்தம்.
வேதாந்தம்.
கலாந்தாம்.
யோகாந்தம்.
போதாந்தம்.
நாதாந்தம்

போன்ற ஆறு அந்தங்களின் நிலை அறிந்தேன்.அதற்கு அப்பால் நின்று ஓங்கும் பெரிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன்.இங்கு இறவாமை உற்றேன் என்கிறார்.

எனவேதான் பெரியன் அருட்பெருஞ்ஜோதி பெருங்கருணைப் பெருமான் பெரும் புகழைப் பேசுதலே பெரும் பேர் என்று அறிந்தேன் என்கிறார்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை மனிதகுலம்  மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக அவரவர்களின் அறிவுசார்ந்த  அனுபவம் சார்ந்த . ஆன்மீக வாதிகளால். ஆன்மீக அருள் ஆராய்ச்சி யாளர்களால். விஞ்ஞானிகளால்.
கர்மசித்தர்.
யோகசித்தர்.
ஞானசித்தர் போன்ற சித்தர்களாலும் எண்ணில் அடங்காத அருள்நூல்களும்.
மற்றைய உலகியல் நூல்களும் எழுதிவைத்துள்ளார்கள்.இன்னும் எழுதிக் கொண்டே உள்ளார்கள்.

வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறையில் ஞானசரியை என்னும் தலைப்பில் ஒரு பாடல் பதிவு செய்கிறார்.

*வள்ளலார் பாடல் !*
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலே கண்ட பாடலை பலமுறை தொடர்ந்து படிக்க வேண்டும்.

இதுவரையில் உலகியலில் புறக் கண்களால் காணுகின்ற அனைத்தும் நித்தியமானது அல்ல அநித்தியமானது என்றும்..இதுவரை நாம் காதுகளால் கேட்டது எல்லாம் பழுதானது என்றும்.

இன்றுவரை நாம் கற்ற நூல்கள் (படித்த நூல்கள் ) அனைத்தும் பொய்யானது என்றும். உடம்பால் உள்ளத்தால்  களித்தது எல்லாமே வீணானது என்றும்.

இதுவரை நாம் உண்ட உணவுகள் அனைத்தும்  மலமாகத்தான் போகின்றது என்றும்.உட்கொண்டது அனைத்தும் குறைபாடுடையது என்றும்.

 இதுவரையில் உலகில் உள்ளோர் அனைவரும்  உண்மை அறிந்து கொள்ளாமல் வீணாக வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளோம் என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றார்.

*அதனால் என்ன பரவாயில்லை விடுங்கள்*.இனிமேலாவது முயற்சி செய்யுங்கள் என்கிறார்.

இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள்.

இனிமேலாவது  சமரச சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து.மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து.எல்லோருக்கும் பொதுவாக விளங்கிக் கொண்டு இருக்கும் தனித்தலைமை பெரும்பதியாகிய நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று இறவாத வரம்பெற்று இன்பம் அடையலாம் வாருங்கள் வாருங்கள்  என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் .
உண்மை அன்புடன் அழைக்கிறார்.

பலகோடி பிறவிகளில் உயர்ந்த அறிவு பெற்றது மானிடப் பிறவியாகும். உயர்ந்த அறிவு பெற்ற மனிதன் தாழ்ந்த நிலைக்கு செல்லுவது அழகாகுமா ?

*உயர்ந்த அறிவு கொடுத்ததின் நோக்கம்*

*தன்னை அறிந்து இன்பம் உறவேண்டும்*.

 உபகாரத்தால் பெற்ற தாய் தந்தையை விட  உண்மைத் தாய் தந்தையான தலைவனை தொடர்புகொண்டு அருளைப்பெற்று. துன்பம் தொலைத்து இன்பமுடன் மகிழ்ச்சியுடன். ஆனந்தமுடன் வாழவேண்டும் என்பதே மனிதப்பிறவியின் அடிப்படை நோக்கமாகும்..

*அதுவே கடவுள் நிலை அறிந்து அதன்மயமாக தன்னை மாற்றிக் கொள்வதாகும்*.

உலகில் உள்ள காகும் கல்வியை கற்காமல்.
சாகாக்கல்வியை கற்றுக் கொடுப்பதுவே.
வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

மனிதனின் முடிந்த முடிவான வாழ்க்கையானது உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று சாகாவரம் பெற்று வாழ்வதாகும்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளன !

அண்டங்களில் உள்ளது யாவும் பிண்டங்களில் உள்ளன என்கிறார் வள்ளலார்.நாம் வெளியில் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை  தேவையும் இல்லை.எல்லாம் நம் உடம்பிலே நிரம்பி உள்ளன உள்ளன.

நம் உடம்பும் உயிரும் வந்த வழியைத் தெரிந்துகொண்டால் மட்டுமே .உடம்பையும் உயிரையும் அழிக்காமல் ஒளிதேகமாக  மாற்றும் வழியைத் தெரிந்து கொள்ளலாம்.

*அருள் நம் ஆன்ம சிற்சபையில் நிறைந்து உள்ளன*.

அவற்றை மாயா திரைகளால் மறைக்கப் பட்டுள்ளன

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்* !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

மேலே கண்ட பாடல் நம் ஆன்ம  அறிவை பயன்படுத்தி அருள் பெருவதற்கு வழியைக் காட்டுகிறது.

நம் மனமானது உலகியல் வாழ்க்கையில் இழுக்கும் புறக்கருவியாகும் .

மனத்தை வசப்படுத்தும் வழிதுறை தெரியாமல்.மனம்போனபடி பக்தி.தவம் .தியானம். யோகம் போன்ற பொய்யான பழக்க வழங்கங்களில் ஈடுபட்டு இன்பமும் துன்பமும் அடுத்து எண்ணி எண்ணி இளைத்து உயிரையும் உடம்பையும் காப்பாற்ற முடியாமல் இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

*மரணம் வரும் எந்த கொள்கையும் உண்மை அல்ல*.

உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலரே என்கிறார்.

மரணம் அடைகின்றவர்கள் அனைவரும் ஏழைகளே என்கிறார் வள்ளலார்.

அருளைப்பெற்று மரணத்தை வென்றவர்களே பணக்கார்ர்களாகும்.

சன்மார்க்கம் சார்ந்த அன்பர்கள் உண்மை அறிந்து. அதன் உளவை அறிந்து அருள்பெறவேண்டும்

அவரவர்கள் செயல்பாட்டில்.அவரவர்கள் உடம்பை உயிரை தற்சோதனை செய்து கொள்ள வேண்டும்.

சந்தை படிப்பை கற்காமல்  நம் சொந்தப்படிப்பை கற்கவேண்டும்.

*சொந்தப்படிப்பு என்பது சிற்றம்பலக் கல்வியாகும்*.

*வள்ளலார் பாடல்* !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன் எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

மேலே கண்ட பாடலில் வள்ளலார் சாகாக்கல்வியை எங்கு எவ்வாறு கற்றேன் என்பதையும் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றதையும் வெளிப்படையாக சொல்லுகின்றார்.

பெற்றேன் உயர்நிலை பெற்றேன.
உலகில் உள்ளவர்களின் பிறர் நிலையை எப்போதும் நான் பற்றேன பற்றியதும் இல்லை என்கிறார்.

பற்றிய பற்று அனைத்தினையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்பதை மிகவும்  அழுத்தமாக சொல்கிறார்.

மேலும் வள்ளலார் பாடல் !

சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!

மேலே கண்ட பாடலில சொல்லியவாறு அது இது என்று அலையாமல்.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி யை மட்டுமே கருணை உள்ளத்தோடு தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

சுத்த சன்மார்க்கம் என்பது இயற்கையான கருணை நெறியாகும்.

*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 17 ஜூலை, 2020

அருட்பெருஞ்ஜோதி அகவல் !







*வள்ளல் பெருமானாரின்  உள்ளார்ந்த ஆன்மிக அனுபவத்தின் நிறைவான நிலையில் இயற்றப்பட்ட நெடும்பாடல் அருட்பெருஞ்ஜோதி அகவலாகும்...*

*மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் தங்கியிருந்த  காலக்கட்டத்தில்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலைப் பெருமானார் எழுதினார்கள்.*

  வள்ளல் பெருமானார் 1865- இல் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றிவைத்ததற்குப் பின் ;

   1867-இல் அணையா அடுப்போடு அன்னமிடும் சத்திய தர்மச்சாலையைத் தோற்றிவைத்தற்குப் பின் ;

  1870-இல் சத்திய ஞான சபையைத் தோற்றிவைத்து ஜோதி தரிசனத்தை நிகழ்த்தியதற்குப் பின்தான் ... ;

அருட்பெருஞ்ஜோதி அகவலை வள்ளல் பெருமானார் இயற்றினார்கள் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

சுவாமி சரவணாந்தா எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க நூலின் அணிந்துரையில் -  சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின்  தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கள்  கூறும் கருத்து இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

" *வள்ளல் பெருமானால் அருளப்பெற்ற திருவருட்பாவின் மணிமுடியாக விளங்குவது அருட்பெருஞ்ஜோதி அகவல். இதற்கு அவரே தலைப்பிட்டுள்ளார். 1872-ஆம் ஆண்டு சித்திரை எட்டாம் நாள் இதனை அருளியுள்ளார்.*

ஆம்... அகவல் எழுதப்பட்ட நாள் சித்திரை எட்டாகும்....

வள்ளல் பெருமானார் இறைவனோடு இரண்டற கலப்பதற்குச் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்....

ஆதலால்... அகவலானது... பெருமானாரின் அருட்பேராற்றலின் தகவலை எல்லாம் ஒருங்கே தரும் ஞானக் களஞ்சியமாக விளங்குகின்றது...!

*அகவல் தரும் தகவல்கள் :*
------------------------------

வள்ளல் பெருமானார் ஒன்பது வயதளவிலிருந்து அருட்பாக்களை எழுதத்தொடங்கினார்கள். பன்னிரண்டு வயதளவிலிருந்து ஞான வாழ்வைத் தொடங்கினார்கள். இடைவிடாத ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார்கள்...

வள்ளல் பெருமானாரின் மெய்ஞ்ஞானத் தேடலின் முயற்சியால் *பெருமானாரின் 49-ஆம் வயதில் மலர்ந்ததுதான் அருட்பெருஞ்ஜோதி அகவல்*
 
ஆதலால் ; அகவல் சன்மார்க்க - மெய்ஞ்ஞானத்தின் உச்சமாக விளங்குகின்றது .

இவ் அகவல் அமிழ்தில்...  ஒருசில துளிகளைச் சுவைத்துப் பார்ப்போமே..!

" *என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து*
*என்னுள்ளே விரிந்த என்னுடை அன்பே*

*என்னுள்ளே விளங்கி என்னுள்ளே பழுத்து*
*என்னுள்ளே கனிந்த என்னுடை அன்பே"*

என்று வள்ளல்பெருமனார் அகவலின் 1480-ஆம் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வரிகளின் மூலம் ....

வள்ளல் பெருமானாரின்  அக அனுபவமே... இறையாற்றலே... அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்..

அகவலில் 1555-ஆம் வரியில்..

" *சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து*
*எனக்கே அபயம் அளித்தோர் அருட்பெருஞ்ஜோதி"*

என்று வள்ளல் பெருமனார் பாடியுள்ளார்கள்.

இதன்மூலம் ,' தன்னுள் விளங்கிய இறை அனுபவத்தையே , வடலூரில் சத்திய ஞான சபையாக அமைத்துக் காட்சிபடுத்தினார்கள் ' என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

" *சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்*
*சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்* *கொண்டனன்*
*நித்திய ஞான நிறை அமுது உண்டனன்.."*

என்ற திருஅருட்பா ஆறாம்  திருமுறையின் பாடல் (2173) இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

" *பிண்டமும் அதிலுறு பிண்டமும் , அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே ! "*

எனும் அகவலின் (1294 ) வரிகள்...

 நம்... மனித உடலுள் ... இறைப்பண்டம் பொதிந்துள்ளது என்பதை அழகாக விளக்குகின்றது.

" *உள்ளகத்து அமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே..!"*

எனும் அகவலின் (1020) வரிகள் ..

பெருமாரின் உள் அகத்துள் இறையாற்றலானது.. கலந்து ... அருள் செய்தமையை விளக்குகின்றது.

" *இயற்கை உண்மையதாய் , இயற்கை இன்பமுமாம் அயர்ப்பிலாச்  சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ... "*

எனும் அகவலின் (70) வரிகள் ...

ஒவ்வொரு மனித தேகத்தினுள்ளும் இயற்கையாகவே அருட்பெருஞ்ஜோதியானது அமைந்துள்ளது என்பதையும் ;  அவ் இயற்கை உண்மையைப் புரிந்துகொண்டு... அப்பேரொளியைக் தன்னுள் காண்பதே இயற்கையான பேரின்பம் என்பதையும்  விளக்குகின்றது.

வடலூர் சத்திய  ஞான சபையின் தொடக்க விழா பத்திரிக்கையில்...
*"இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய  ஞான சபைக்கண்ணே , இயற்கை உண்மை என்கின்ற சத்திய திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்திய திரு நடம் செய்தருள்கின்ற ....."*

என்று பெருமானார் குறிப்பிட்டுயிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

இயற்கை உண்மையான;  இயற்கை இன்பமான அருட்பேரொளியானது நம் உடம்பில் சிற்சபையில் - புருவமத்தியில் விளங்குகின்றது என்ற மெய்ம்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

*சிற்சபை எங்குள்ளது...?*
~~~~~~~~~~~~~~~~

    " சிற்சபை " என்பதற்கும் ; அருட்பெருஞ்ஜோதி என்பதற்கும் வள்ளல் பெருமானார் கூறும் கருத்தை .... பெருமானாரின் வார்த்தைகளை அடிப்படையாகக்கொண்டு சற்று சிந்திப்போமே....!

   " *இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில் : நான் ஆன்மா  , சிற்றணு வடிவனன். மேற்படி அணு கோடிசூரியப் பிரகாசமுடையது. லலாட ஸ்தானம் இருப்பிடம் . கால் பங்கு பொன்மை , முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."*

என்று உபதேசப் பகுதியில் (பக்கம்: 435) வள்ளல் பெருமானார் குறிப்பிட்டுள்ளார்கள்.

 இக் குறிப்புகளிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன... ?

★இறை ஆற்றலானது மனிதத் தேகத்தில் விளங்குகின்றது.

★அது கோடி சூரியப் பிரகாசத்துடன் பெரிய ஜோதியாக விளங்குகின்றது.

★லலாட ஸ்தானம் எனப்படும் புருவ மத்தியில் இப் பெருஞ்ஜோதி  விளங்குகின்றது.

★அது பொன்மையும் வெண்மையும் கலந்த  பேரொளியாத் திகழ்கின்றது.

★அவ் இறையொளியை ஏழு திரைகள் மறைத்துள்ளன.

ஆம்...

இவ் அருட்பேரொளி இறைக் கொள்கையின் உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொள்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையைப் பெருமானார் அமைத்தார்கள் ; தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்தார்கள்.

அப்பேரொளியை... அவ் அருட்பெருஞ்ஜோதி பற்றிய மெய்ம்மைகளைத்தான் அகவலில் எழுதிவைத்தார்கள்.

*பெருமானார் பெற்ற பெரும் பேறு..:*
~~~~~~~~~~~~~~~
 
             கோடி சூரியப் பிரகாச , அருட்பெருஞ்ஜோதியைத் தன்னுள் கண்ட பெருமானார் பெற்ற பெரும் பேற்றைப் பற்றி ... பெருமானார் கூறும்  வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிந்திப்போமே..!

*"மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்*

*யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை"*

என்று வள்ளல் பெருமனார் அகவலில் (1582) குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் ,  இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் யாரும் பெறாத மாபெரும் இறையாற்றலைப் பெருமனார்  பெற்றிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.

*"...அருட் பேரொளியால் இன்பையும் நிறைவித்து*

*என்னையும் நி(உ)ன்னையும் ஓர் உரு(வம்)ஆக்கியான்"*

எனும் அகவல் (1572) வரியாலும் ;

" *தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே...! "*

எனும் அகவல் (1146) வரிகளால் வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒரே  உருவமாகியதை புரிந்துகொள்ளமுடிகின்றது.

" *உலகு உயிர்த் திரள் எல்லாம் , ஒளிநெறி பெற்றிட இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை..! போற்றி நின் பேரருள்...! "*

எனும் அகவல் (1578) வரியால் ;

    படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் ... எனும் ஐந்தொழில் செய்யும் பேராற்றலை வள்ளல் பெருமானார்  பெற்றமையை அறியமுடிகின்றது .

அதுமட்டுமின்றி  அனைவரும் மெய்ஞ்ஞான ஒளிநெறியைக் கடைபிடித்துப் பேரின்ப பெருவாழ்வு வாழ ... வழிகாட்டும் ஞானகுருவாகவும் பெருமானார் விளங்கும் தன்மையை உணர முடிகின்றது.

*ஒளிநெறிக்கா(ண)ன வழிமுறை... :*
-------------------------------

   நம்முள் - அக அனுபவமாக விளங்கும் - ஆன்ம பேரொளியைத் தரிசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்.. ?

வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு... சற்றே சிந்திப்போமே...!

 மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளியில் ... முதன்முதலாகச் சன்மார்க்கக் கொடியை ஏற்றிவைத்து நிகழ்த்திய பேருபதேசத்தின் தொடக்கப் பகுதியை நோக்குவது சிறப்பாக அமையும் .

       *"....யோகிகள் வனம் , மலை , முழை முதலியவற்றிற்குப் போய் நூறு - ஆயிரம் முதலிய வருட காலம் தவஞ் செய்து  சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்*

   *இப்படி தவம் செய்து உஷ்ணத்தைஉண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும்*

*தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் , இதை விடக் கோடிப் பங்கு , பத்துக் கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.*

*எவ்வாறெனில் ; ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால் , நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்... ......"*

என்று வள்ளல் பெருமனார் பேருபதேசத்தில் (பக்கம் 464) கூறியுள்ளார்கள்.

இக் குறிப்பினால் நாம் புரிந்துகொள்வது என்ன...?

★நாம் தினசரி ஒரு ஜாம நேரம் (சுமார் இரண்டரை மணி நேரம்)  இறை சிந்தனையுடன்  இருக்க வேண்டும்.

★இறை சிந்தனையுடன்  கவனமாக இருந்தால் அல்லது  அருட்பாக்களை பாராயணம் செய்து கொண்டிருந்தால் ; சுத்த உஷ்ணத்தை நம்முள்  நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். ... எனும் ஆன்மிக உண்மையை நாம் புரிந்துகொள்ளலாம்.

     இறை அனுபவத்தின் உச்சத்தில் இவ் அகவல் எழுதப்பட்டதால் ; இவ் அகவலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையதாக சன்மார்க்க அன்பர்கள் நம்புகின்றனர்.

    ஆதலால், இவ் அகவலைத் தினசரி வாசித்தால் ; காடு- மலைகளுக்குச் சென்று தவமிருந்து சித்தர்கள் பெற்ற பெரும் தவப் பேற்றை - சுத்த ஞான உஷ்ணத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம் என்று சன்மார்க்கிகள் நம்புகின்றனர்.

    இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலை கூட்டுப் பாராயணமாகச் செய்த பின்பே ; எந்தவொரு சன்மார்க்க விழாவையும் தொடங்குவது சன்மார்க்கர்களின் வழக்கமாக உள்ளது.

     வள்ளல்பெருமனார் காட்டிய சன்மார்க்க வழியில் நடக்கும் பல அன்பர்கள் தினசரி காலை நேரத்தில் இவ் அகவலைப் பாராயணம் செய்து வருகின்றனர்.

" *தோத்திரம் புகல்தல்"* சன்மார்க்கத்தின் ஞான வழிமுறையாகக் கருதப்படுகின்றது.

   *"..... ஞானம் தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்*

*சிற்குண வரைமிசை உதயம் செய்தது மாசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த*

*நற்குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம் பண்ணி நிற்கின்றார்...."*

என்று திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பெருமானார் பாடியுள்ளமை ; இவ்விடத்தில் நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்... நம்முள்...  மாயைத் தொலைந்து , பொன்னொளி   தோன்றி , சித்திகள் எல்லாம் கைக்கூட வேண்டுமானால் தோத்திரம் பாடுதல் வேண்டும் என்ற பெருமாரின் கருத்தை மேற்கண்ட அருட்பா வரிகளால் புரிந்துகொள்ளலாம்.

*மாயத் திரைகள் அகல.... வழி...:*
------------------------------

       "  *கோடி சூரியப் பிரகாசமுடைய.. ... ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."* என்று பெருமானார் கூறியுள்ள கருத்துத் தொடர்பாக.... பெருமான் வார்த்தைகளின் அடிப்படையில் சிந்திப்போமே....!

" *தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின் ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி...!*

எனும் அகவல் (834) வரிகளின் மூலம்...

உலகமெலாம் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணைகொண்டே , அவரின் அருளாலே நம்முள் மறைத்திருக்கும் மாயைத் திரைகளை நீக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

 " *எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருட்பெருஞ்ஜோதி...! "*

எனும் அகவல் (838) வரிகளின் மூலம் ,

சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆணவம் , கன்மம் , மாயை , பொறாமை , காமம் , மாச்சரியம் , உலகச்சாரம் முதலிய தடைகளைக் கடந்தால் ; நம்முள் பேரொளியைத் தரிசிக்க முடியும் என்பதை அறிய முடிகின்றது.

வடலூர் சத்திய ஞான சபையின் தைப்பூசச் ஜோதி தரிசனத்தின் பொழுது ஏழு திரைகளை நீக்கியப் பின் பேரொளி தரிசனம் காண்பிப்பதை இங்கு நினைவுகொள்ளத்தக்கது

 " *பவக் கடல் கடந்து நான் பார்த்த போது அருகே உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே...!"*

எனும் அகவல் (1392) வரிகளின் மூலம் ,

காமம் , களவு , கொலை முதலிய பாவச் செயல்கள் செய்வதைத் தவிர்த்தால் (பாவம் எனும் பெருங் கடலைக் கடந்தால் )  அருளெனும் கரையைக் கண்டு மகிழலாம் என்பதை அறிய முடிகின்றது.

மேலும் ...

" *சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும் ,*

*காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும் ,*

*கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*

*மரணம் , பிணி , மூப்பு , பயம் , துன்பம்.... இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.*

*அதாவது செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவ லாதிகார மரணம் நீங்கும்..."*

எனும் வள்ளல் பெருமனாரின் உபதேசக் குறிப்பும் (பக்கம் : 411 - 412) இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மேற்கண்ட பெருமானாரின் உபதேசக் குறிப்பினால்...

... உயிருள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைக் காண தடைகளாக இருப்பனவற்றை பற்றி புரிந்துகொள்ளலாம்.

*உயிர் ஒளியைக் காண தகுதி :*
------------------------------

  " *உயிருள் யாம் ; எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே...! "*

எனும் அகவல் (974) வரிகளால்...

 இறையாற்றலானது  நம் உயிருள் பொதிந்துள்ளது என்பதை அறியலாம்.

  " *உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுக! எனச் செப்பிய சிவமே...! "*

எனும் அகவல் (970 ) வரிகளின் மூலம்...

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும்  வேறுபாடு இன்றி பொதுவாக நோக்கவேண்டும் என்பதை அறியலாம்..

 " *எத்துனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உவக்கின்றார் யாவர் அவர் உளம் தாம் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் எனத் தெளிந்தேன்..  "*

எனும் அருட்பா வரிகளும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்...

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எவ்வித வேறுபாடும் பார்க்காது... அவற்றைத்  தம் உயிரைப் போல் எண்ணி மகிழ்கின்றார்களோ.... அவர்களின் உள்ளமே இறைவன் தங்கியிருக்கும் இடமாகும்..

 " *எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே.. ! "*

எனும் அகவல் (962 )வரிகளால்..

இரக்க குணம் , கருணை உள்ளம் இயற்கையாகவே உள்ளவர்களிடத்தே இறையாற்றல் நிரம்பியுள்ளது என்பதை அறியலாம்.

" *உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக ... நீ அடைந்து விலக்குக மகிழ்க...! "*

எனும் அகவல் (1590 ) வரிகளால்....

உலகில் வாழும் உயிரினங்கள் அடையும் துன்பத்தை  நீக்குபவர்களே பேரின்ப பெருவாழ்வில் வாழ முடியும் என்பதை அறியலாம்.

" *நமக்கு முன் சாதனம் கருணை...."* என்று பெருமானார் பேருபதேசத்தில் குறிப்பிட்டுயிருப்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

வள்ளல் பெருமானார் வடலூர் பெருவெளியில் சத்திய ஞான சபையை அமைப்பதற்குச் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பசித்துயர் துயர் நீக்கும்  அணையா அடுப்போடு விளங்கும் சத்திய தர்மச்சாலையை அமைத்தமையை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்...

நம்முள் விளங்கும் சத்திய ஞான சபையைக் காண முதல் தகுதி... உலக உயிரினத்தின் துன்பத்தை நீக்கும் கருணை உள்ளமே ஆகும்....

*உள்ளொளியைக் கண்டால்....:*
------------------------------

 சிற்சபை நடுவே திருநடம் புரிகின்ற , உள்ளொளி அற்புதத்தை நாம் கண்டுவிட்டால் என்ன... என்ன நிகழும்... வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளின் அடிப்படையிலே சற்றுச் சிந்திப்போமே...!

 " *உடல் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி  அனைத்தையும் அடர்ப்பு அறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே...! "*

எனும் அகவல் (1322) வரிகளால் ..

நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்... நம் உடலைப் பற்றியிருக்கும் அனைத்து உடல் நோய்களும் , உயிர்ப்பிணிகளும் நீங்கிவிடும் என்பதை அறியமுடிகின்றது.

 " *என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து , உளம் நன்றுற விளங்கிய நந்தனக் காவே...! "*

எனும் அகவல் வரிகளால்...

நம்முள் அருள்பேரொளியைக் கண்டுவிட்டால் , அனைத்து துயரங்களும் சோகங்களும் நீங்கி , மனமானது நிம்மதியாய் நல்ல நிலையில் நிலைத்திருக்கும் என்பதை அறியமுடிகின்றது.

 *"தாழ்வெல்லாம் தவிர்த்துச் சகமிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த  வளரொளி மணியே...!"*

எனும் அகவல் (1308) வரிகளால்...

உள்ளொளியை நாம் கண்டுவிட்டால் அனைத்து இழிவுகளும் நீங்கி , மரணமிலா பெருவாழ்வில் வாழலாம் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

 " *அண்ட கோடிகள் எல்லாம் அரைக் கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே...! "*

எனும் அகவல் (1302) வரிகளால் ...

 சித்திக்கு மூலமாக விளங்கும் அருள்பேரொளியை நம்முள் கண்டுவிட்டால்... இவ் அண்ட உண்மைகளை எல்லாம் அரை நொடியில் அறிந்துகொள்ளலாம்... என்பதை அறிந்துகொள்ளமுடிகின்றது.

 " *இரு நிதி  எழு நிதி  இயல் நவ நிதி முதல்  திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே...! "*

எனும் அகவல் (1374 ) வரிகளால் ...

நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்.. இப் பிறவியின் மண்ணுலக வாழ்விற்கான நிதியையும் , மறுபிறப்பிற்கான நிதியையும் , விண்ணுலக வாழ்விற்கான நிதியையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியமுடிகின்றது.

ஆம்...

 ★ சமரச சத்தியச் சபையில் நடம் புரிகின்ற ,  சமரச சத்தியச் தற்சுயம் சுடரை .... நம்முள் காண்போம்...!

 ★ வேதமும் ஆகம விரிவும் பரம்பரநாதமும்  கடந்த  ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!

 ★ உள்ளொளி ஓங்கிட...  உயிரொளி விளங்கிட... வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலை நம்முள் காண்போம்...!

 ★ எண்ணிய எண்ணிய எல்லாம் தருகின்ற , நண்ணிய புண்ணிய  ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!

★சித்திகள் அனைத்தையும் தெளிவாகப் பெற்று , சத்திய நிலைதனைப் பெறுவோம்.  ...!

★எங்குமாய் விளங்கும் அருள்பேரொளியை... உள்ளங்கை நெல்லிக்கனி போன்று ... நம் அக அனுபவத்தால் கண்டு  தரிசிப்போம்....!

*நிறைவுரை :*
--------------------
வடலூர் சத்திய தர்மச்சாலையின் மைய மண்டபத்தில் , வள்ளல் பெருமானார் கைப்பட எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் நோட்டுப் புத்தகம் கண்ணாடிப் பேழையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

அவ் அகவல் நோட்டுப் புத்தகத்தைப் பலரும் பயபக்தியுடன் கைக் கூப்பி வழிபட்டு வருகின்றனர்..

அகவலை வழிபடுபடுவதோடு விட்டுவிடாமல் , அகவல்  காட்டும் ஞான வழியில் வாழ முயற்சிப்பதே வள்ளப்பெருமானார்க்கு காட்டும் உண்மையான மரியாதை ஆகும்

"வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ,

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் ,

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே!"

என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப தினசரி நாமும் அகவலை  வாசிப்போம்.

அருள் அகவலை வாசிக்க வாசிக்க.... அதனுள் அமைந்த  மந்திர ஆற்றலானது நம்மை வசீகரித்து உயர்த்துவதை அனுபவத்தில் உணர்வோம்...!

தினசரி அகவலை வாசிப்போம்...!
ஞானத் தகவலைப் பெறுவோம்..!

(கருத்துப் பதிவு : அருள்பாவலர் சக்திவேல்.வே)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளல் மலரடி வாழி...! வாழி...!