புதன், 29 செப்டம்பர், 2010

வருவிக்க உற்ற வள்ளலார் !

      சுபானு வருடம் ,புரட்டாசி மாதம் 21 ,ஆம் தேதி [5---10 ---1823 ,]
ஞாயிற்றுக் கிழமை அன்று உலகம் உய்ய உதித்தது ,ஒரு  ஞான
பேரொளியாகும்.

உலகம் தழைக்க வந்துதித்த உருவே வருக ஓதாதே
உற்ற கலைகள் அனைத்தினையும் உணர்ந்தோய் வருக
ஒன்று இரண்டு அற்று இலங்கும் பாரமானந்த சுக இயல்பே வருக
யிம்பர்தமை இறவாக்கதியில் ஏற்றுகின்ற இறையே  வருக
என்போல்வார் கலக்கம் தவிர்த்துக் கதியளிக்கும் கண்ணே வருக
கண்ணிறைந்த களிப்பே களிப்பில் ஊறுகின்ற கனிவே வருக
கலைமதிதோய் வலகஞ் செறிந்த வடற்பதியின் வாழ்வே வருக
இராமலிங்க வள்ளல் எனுமோர் மாணிக்க மணியே வருக!
         
    உலகம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்துக்
மக்களை அடிமைகளாக்கி ஆண்டு கொண்டு இருந்த காலம்.
சாதி, சமயம்,மதம் போன்ற கற்பனை கதைகளை,உருவாக்கி 
மனிதர்களை பிரித்து வைத்து விட்டார்கள் நமது முண்ணோர்கள். 
உலகமே சிதறுண்டு சின்னாபின்னமாகி அழிந்து கொண்டு 
இருந்தகாலம் .


     மனிதனை மனிதன் ,அடித்து ,உதைத்து ,கொன்று,அழிந்து 
அவதிப்படும் நிலைமையை உருவாக்கி விட்டார்கள் .
பெரியவர்கள் வகுத்து தந்த வழிமுறைகளை உண்மை என்று 
நம்பி அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வாழ்ந்துக் 
கொண்டு வருகிறார்களே !என்பதை உணர்ந்த அருட்பெரும்ஜோதி 
ஆண்டவர் வேதனைப்படுகிறார் .


      உலகக் கொடுமைகளை கண்ணுற்ற அருட்பெரும்ஜோதி 
ஆண்டவர், அக்கொடுமைகளை அகற்றி புனிதமுறு 
சுத்தசன்மார்க்கத்தை உருவாக்க வேண்டுமென்றுக்கருதி 
மாபெரும் சக்தி வாய்ந்த ஒரு உயிரை [ஆன்மாவை ] இந்த 
உலகத்திற்கு அனுப்பிவைக்கிறார் .அவர்தான் இராமலிங்கம் 
என்னும் வள்ளலார் என்பவராகும் .


      வருகைப்பாடல் திருஅருட்பா;--


பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம் 
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல 
பேதமுற்று அங்கும் இங்கும் 
போறுற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாதே படிவிரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப் 
பொருளினை உணர்த்தி யெல்லாம் 
ஏருற்ற சுகநிலை யடைந்திடப் புரிதி  நீ
என்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக வென்று இட்டனன் மனத்தில்
வேறு எண்ணற்க வென்ற குருவே 
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருளகற்றும் ஒளியே 
நிற்க் குணானந்த பரநாதாந்த வரை யோங்கும் 
நீதி நடராஜ பதியே .


என்ற பாடலின் வாயிலாக வள்ளலார் அவர்கள், தான் 
இந்த உலகத்திற்கு வருவிக்க உற்ற காரணக் காரியத்தைப்  
பற்றி தெரியப் படுத்துகிறார் .அடுத்தபாடலில் ;--


அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்க்கு என்றே எனையிந்த 
யுகத்தே இறைவன் வருவிக்க யுற்றேன் அருளைப் பெற்றேனே !


என்பதை தான் இவ்வுலகத்திற்கு வருவிக்கப் பட்டத்தின் 
நோக்கத்தைப் பற்றி தெளிவுபடுத்துகிறார் .


     கடலூர் மாவட்டம் ,சிதம்பர வட்டம் வடலுரில் இருந்து 
சுமார் 10 ,கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருதூர் என்னும் 
கிராமத்தில் ,கிராமக் கணக்குப் பிள்ளையாக பணியாற்றிவந்த, 
பக்தியில் சிறந்த பற்றுடைய,இராமய்யா மனைவி 
சின்னம்மையாருக்கும் ஐந்தாவது குழந்தையாகபிறந்தவர்தான் 
இராமலிங்கம் என்னும் வள்ளலாராகும் .


     19  ,ஆம் நுற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியது 
அந்த பகுத்தறிவு சூரியன், வள்ளலார் அவதரித்த தினத்தை 
உலக ஒருமைப்பாடு உரிமை தினமாகக் கொண்டாடப்பட்டு 
வருகிறது. 


      இராமைய்யா அவர்கள் குடும்பத்துடன் தில்லை நடராசர் 
சன்னதிக்கு ,ஐந்து மாதக் குழந்தையான இராமலிங்கரை 
அழைத்துக் கொண்டு நடராஜர் பெருமானை தரிசனம் செய்ய 
சென்று இருந்தார் .சன்னதியில் சிதம்பர ரகசியம் என்ற திரை 
விளக்கி காட்டப்பட்டது, -காட்டப்பட்டதும் ஐந்து மாதக் குழ்ந்தை 
யான இராமலிங்கம் ,கல கல வென சிரித்தது .கடவுள் ஒளியாக 
உள்ளார் என்பதை அப்பொழுதே அக்குழந்தை பார்த்து புரிந்து 
கொண்டது.ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது கண்ட 
காட்சியை ஐம்பதாவது வயதில் பாடுகிறார் வள்ளலார் .


தாய் முதலோரோடு சிறு பருவத்திற் தில்லைத் 
தலத்திடையே திரை தூக்கித் தரிசித்த போது 
மேல்வகை மேற் காட்டாதே என்தனக்கே யெல்லாம் 
வெளியாகக் காட்டிய என் மெய்யுருவாம் பொருளே 
காய்வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே 
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே 
தூய்வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் 
ஜோதி நடத்தரசே என் சொல்லும் மணிந்தருளே !


    தில்லை கோவில் தீட்சிதர் அப்பய்யர் என்பவர் 
குழ்ந்தை சிரித்ததை கண்ணுற்று அதிசயித்து போயினர் .
இக்குழந்தை இறைவன் உங்களுக்கு அளித்த ஞானச   
செல்வமாகும் என்று வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார் .


    சிறிது மாதம் கழித்து திடுமென்று தந்தை இராமய்யா 
காலமானார் .தாய் சின்னம்மை தன் குழந்தைகளுடன்
சென்னையிலுள்ள பொன்னேரிக்கு சென்றார் அங்கிருந்து 
வடசென்னையிலுள்ள ஏழு கிணறுப் பகுதியிலுள்ள ஒரு 
வீட்டில் குடியேறினார்கள் ,


     இராமலிங்கருடைய அண்ணார் சபாபதி புராணச 
சொற்பபொழிவுகள் செய்து பொருள் ஈட்டி குடும்பம் நடந்து 
கொண்டுவந்தது.தம்பி இராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது 
கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள் ,பள்ளிக்கு செல்ல 
விருப்பமில்லாமல்,கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு 
சென்று பக்தி பாடல்கள் பாடுவதில் ஆர்வம் கொண்டார் .


      இறையருளால் இயற்கையாகவே அறிவுத் திறனும் 
அருள் திறனும் வாய்க்கப் பெற்று இருந்த இராமலிங்கருக்கு 
உலக ஏட்டுப் படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை .தம்பியின் 
செய்கை பிடிக்காமல் கோபம் கொண்ட அண்ணன் சபாபதி,
பின் நாளில் இராமலிங்கரின் செய்கையும் ,புலமையும் கண்டு 
ஆச்சரியமும் ஆனந்தமும் பெருமையும் கொண்டார் .பள்ளிக்கு 
செல்லாமல் அருள் பாடல்கள் பாடும் திறமையைக் கண்டு 
சென்னை நகரமே அதிசயித்தது 


    ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற 
    உத்தமர் தம் உறவு வேண்டும் 
    உள்ளொன்று வைத்துப்  புறம் மொன்று பேசுவோர் 
    உறவு கலவாமை வேண்டும் .


என்ற பாடல்கள் இன்னும் மக்கள் மத்தியில் நீங்காத 
இடம் பெற்றுக்கொண்டு இருக்கிறது.
அடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் 
சென்று அனைத்து கடவுள்கள் மீதும் அளவுகடந்த பாடல்கள் 
பாடி அருளினார் இராமலிங்கர் என்னும் வள்ளலார் .


     பல்லாயிரம் பக்திப்  பாடல்கள் பாடியவர் ,உலக உயிர்கள் 
படும் துன்பத்தைக் கண்டு கொதித்து மனம் நொந்து வேதனைப் 
பட்டார் கொந்தளித்தார் என்பது அவர்பாடிய பாடல்கள் மூலம் 
தெரிகின்றன. 


      ஆங்கிலேயர் ஆட்சிமுறைகளும் ,அடக்குமுறைகளும் ,
கொடுமைகளும் ,அவைகளால் உயிர்கள் படும் துன்பங்களையும் 
கண்டு மனம் தாளாமல் எதிர்ப்பு தெரிவித்து .பல பாடல்கள் 
எழுதி பாடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .ஆங்கிலேயர்களை 
எதிர்த்து முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் 
வள்ளலார் என்பது இன்றுவரை நிறையப் பேருக்கு தெரியாமல் 
இருப்பது வேதனைக்குறியதாகும்.


    கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக 
    அருள் நயந்த நன்மார்க்கர் ராள்க----தெருனயந்த
     நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத் 
     தெல்லோரும் வாழ்க விசைந்து .


    அச்சம் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற 
    விச்சை அரசே விளங்கிடுக ---நச்சரவ 
    மாதிக் கொடிய உயிர் அத்தனையும் போய ஒழிக 
   நீதிக் கொடிவிளங்க நீண்டு .


   நடுநிலை இல்லா கூட்டத்தைக் கருணை 
  நண்ணிடார் தமையரை நாளுங் 
  கெடு நிலை நினைக்கும் சிற்றதிகாரக்
  கேடரைப் பொய்யலார் கிளைத்தாய்
  படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம் 
  பயந்தனன் சுத்த சன்மார்க்கம் 
  விடு நிலை யுலக நடை எலாம் கண்டே 
  வெருவினேன் வெருவினேன் எந்தாய் .


என்று பலபாடல்கள் பாடி அனனிய ஆட்சியைப் பற்றி 
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அனனிய ஆட்சியின் கொடுமைகளால் 
மக்கள் படும் துன்பம் துயரங்களை கண்ட வள்ளலார் 
வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் 
பசியினால் இளைத்தே வீடு தோறும இரந்தும் பசியறாது 
அயர்ந்தே வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் .நீட்டிப் 
பிணியால் வருந்து கின்றோர் நேருறக் கண்டுளம் 
துடித்தேன் .ஈடின் மானிகளாய் ஏழை களாய் நெஞ்சு இளைத்தவர் 
தமைக் கண்டே இளைத்தேன் .


    என்று உயிர்கள் படும் துன்பத்தையும் ,பசியினால் 
மக்கள் படும் துயரங்களையும் கண்ணுற்ற வள்ளலார் 
பசிக்கொடுமையை போக்க,பசி என்னும் அரக்கனை 
விரட்ட, வடலூர் பெருவெளியில் 23 --5 --1867 ,ஆம்ஆண்டு 
சத்தியச தருமச சாலையை தோற்றுவிக்கிறார் வள்ளலார் .


     சாதி,சமயம் ,மதம் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,ஏழை ,
பணக்காரர் என்ற பேதமில்லாமல் ,சமரச உணவு வழங்க
ஏற்பாடு செய்துள்ளார் .அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்றுவரை 
அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது .அனைத்து 
மக்களின் பசியைப் போக்கிக் கொண்டு இருக்கிறது .


    ஆன்மீக வழியில் நாட்டம் கொண்ட வள்ளலார் ஆலய 
வழிப்பாட்டு முறைகளை எதிர்க்கிறார் .சாதி,சமய ,மதங்களின் 
கொள்கைகளை எதிர்க்கிறார் .கலை உரைத்த கற்பனையை 
நிலை எனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம்
மண் மூடிப் போகவேண்டும் என்கிறார் .


     கடவுள் பெயரால் உயிர்களை கொலை செய்யக் கூடாது 
என்கிறார்,வேதங்களும் ,புராணங்களும் ,இதிகாசங்களும் ,
ஆகமங்களும், சாத்திரங்களும் உண்மைகளை சொல்ல 
தவறிவிட்டது என்கிறார் .உண்மைகளை உலக மக்களுக்கு 
சொல்ல வேண்டுமென்று உறுதி கொள்கிறார் .
  
    ஜீவ காருண்யமே இறை வழிபாடு ,கடவுள் ஒருவரே 
அவர் அருட்பெருஞ் ஜோதியாகஉள்ளார்,உலக மக்கள் 
அனைவருக்கும் ஒரே கடவுள் தான் என்பதை தெளிவுப் 
படுத்துகிறார் .


     அவர் எழுதிய நூல்கள்;--


ஜீவகாருண்ய ஒழுக்கம் !
தொண்ட மண்டல சதகம் !
சின்மய தீபிகை !
மனுமுறை கண்ட வாசகம் !
திரு அருட்பா ஐந்து திருமுறை !
திரு அருட்பா ஆறாம் திருமுறை !


போன்ற அருள் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் .
பக்தியை விளக்கும் ஐந்து திருமுறைகளும் ,பகுத்தறிவை
விளக்கும் ஆறாவது திருமுறைகளும் அவர் இவ்வுலகத்திற்கு 
கொடுத்துள்ள அருட்க் கொடையாகும் .உண்மையை 
உணர்த்தும் உன்னதமான நூல் ஆறாம் திருமுறையாகும் .


    ஒவ்வொரு உயிர்களும் பிறப்பு ,இறப்பு என்பது இயற்க்கை 
விதித்த விதி என்பது உலக வழக்கமாகும்.


     மனிதனாக பிறந்தவர்கள் இறப்பு இல்லாமல் வாழமுடியும்
என்ற அறிய மாற்றத்தை கண்டுபிடித்து வாழ்ந்து காட்டியவர் 
வள்ளலார்.தன் உடம்பை மண்ணுக்கோ ,நெருப்புக்கோ 
இரையாக்காமல்,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றியவர் 
வள்ளலார்,


      ஒளிதேகம் பெற்றால்தான் இறைவனை அடையமுடியும் 
என்ற உண்மையை உலகுக்கு உணரவைத்தவர் வள்ளலார் .
அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் ஒளி தேகம் பெரும் 
வழி முறைகளை ,அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ளும்
வகையில் எழுதிவைத்துள்ளார்.எழுதி வைத்ததோடு நில்லாமல் 
தானும் ஒளிதேகம் பெற்று இறைவனோடு இணைந்து 
செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் .அதற்க்கு மரணம் 
இல்லாப் பெருவாழ்வு என்று பெயர்வைக்கிறார் .


    கடவுள் ஒளியாகத்தான் இருக்கிறார் என்பதை 
விளக்குவதற்கு வடலூரில் ,எண் கோண வடிவமாக 
''சத்திய ஞான சபையை ''தோற்றுவித்து ஒளி வழிபாட்டு 
முறையை அமைத்துள்ளார் .


    கோவில் ,ஆலயம் ,சர்ச்சு ,மசூதி ,பிரமிடு போன்ற 
பிரிவினை இல்லாமல்,உலகிலுள்ள அனைத்து மக்களும் 
ஏற்றுக்கொள்ளும் வகையில் ,சமரச வழிபாட்டு முறையை 
அமைத்துள்ளார் ,


உலகமக்களுக்கு அவர் அமைத்துள்ள நிறுவனங்கள் ,;--
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சித்திவளாகம் !


.வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் ;--
1 ,கடவுள் ஒருவரே !
2 ,அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் !
3 ,சிறு தெய்வ வழிபாடு கூ டாது !
4 ,தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது !
5 ,புலால் உண்ணக் கூடாது !
6 ,சாதி ,சமய ,மத முதலிய வேறுபாடுகள் கூடாது !
7 ,எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் !
8 ,ஆன்ம நேய ஒருமைப் பாட்டுஉரிமையைக் 
    கடைபிடிக்க வேண்டும்.!
9 ,ஏழைகளின் பசியை தவிர்த்தல் வேண்டும் !
10 ,ஜீவகாருண்யமே மொட்சவீட்டின் திறவு கோல்!
11,  ஜீவகாருண்யமே இறை வழிபாடு !
12 ,புராணங்களும் வேதங்களும் ,ஆகமங்களும் ,
     சாத்திரங்களும் ,உண்மையை தெரிவிக்கமாட்டாது !
13 ,இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !
14 ,கருமாதி ,திதி முதலிய சடங்குகள் வேண்டாம் !
15 ,எதிலும் பொது நோக்கம் வேண்டும் !


போன்ற கொள்கைகள் இன்று உலகம் முழுவதும் 
ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது .அவரெழுதிய திருஅருட்பா 
இன்று உலக அறிவியல்  ஆராய்ச்சிகளுக்கு எடுத்துக் 
கொள்ளப்பட்டுள்ளது ,மனிதன் மனிதனாக வாழ்வதற்கு 
வழி வகுத்து தந்துள்ளது ..வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை 
படித்தால் ,படித்தபடி வாழ்ந்தால் உலகமுழுவதும் அமைதி 
நிலவும் ,ஆன்மநேயம் வளரும் உலக ஒற்றுமை ஓங்கும் .


   வள்ளலார் அவர்கள் சாதி ,சமய ,மத பேதமற்ற ஆன்ம 
நேய ஒருமைப் பாட்டுடன் வாழ்ந்ததால் இறைவன் 
அவருக்கு அழியாப் புகழையும் ,மரணமில்லாப் பெரு
வாழ்வையும் தந்து ஒளி உடம்பாக மாற்றி தன்னுடன் 
இணைத்துக் கொண்டார் .


     வடலூறுக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில்
உள்ள சித்திவளாகத் திரு மாளிகையில், ஸ்ரீமுக வருடம்
தைமாதம் 19  ,ஆம் நாள் [30 --1 --1874 ,] வெள்ளிக் கிழமை
அன்று திருக்காப்பிட்டுக் கொண்ட தருணம் வெளியிட்டவை ;--


    ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ;--நாம் உள்ளே 
பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .
பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ,ஒருகால் 
பார்க்க நேர்ந்து பார்த்தால்,யாருக்கும் தோன்றாது 
வெருவீடாகத்தான் இருக்கும்படி செய்விப்பார் .இறைவன் 
என்னைக் காட்டிகொடார் .சுத்த பிரணவ ஞானத் தேகத்துடன் 
வெளிப்படுவோம்.நாம் திருக்கதவை மூடிஇருக்குங்கால் 
அதிகாரிகள் திறக்கும்படிஆணையிட்டால் ஆண்டவர் 
அருள் செய்வார் .என்று திருஅருட்பாவில் தெளிவாக 
எழுதி வைத்துள்ளார் .


     அதே போல் அதிகாரிகள் வந்து திறந்து பார்க்கிறார்கள் ,
வெறும் வீடாகத்தான் இருந்தது ,இவை உண்மை 
செய்திகளாகும்.


     ஒவ்வொரு வருடமும் வடலூர் தைப் பூசம் திருவிழா 
முடிந்ததும் இரண்டாம் நாளில் ,திருவறை தரிசனம் 
என்ற முறையில் ,சித்திவளாகத் திருமாளிகையில் 
ஜன்னல் வழியாக திருவறை தரிசனம் காட்டப்படும் .
லட்சக்கணக்கான மக்கள் பார்த்து அருளைப் பெற்று 
ஆனந்தம் அடைந்து செல்கிறார்கள் .


    வள்ளலார் வருவிக்க உற்ற நாளில் நாம் அனைவரும் 
அன்னதானம் செய்து அருட்பெரும்ஜோதி ஆண்டவர் 
அருளைப் பெறுவோமாக.!வள்ளலார் காட்டிய தெய்வம் ,

    அருட்பெருஞ் ஜோதி 
    அருட்பெருஞ் ஜோதி
    தனிப் பெருங்கருணை 
   அருட்பெருஞ் ஜோதி!
என்னும் மந்திரத்தை தினமும் ஓதி அருட்பெரும்ஜோதி 
ஆண்டவர் அருளைப் பெறுவோம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக! 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
           அருட்பெரும்ஜோதி 


ஆன்மநேய அன்பன் 
செ ,கதிர்வேலு 
பொதுச செயலாளர் ,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ,
ஈரோடு .
              






           


  






      .  


௦ 




  

வியாழன், 23 செப்டம்பர், 2010

வடலூரில் அருள் ஒளி தெரிகிறது !

         வடலூர் !
   வடலூர் என்று வாய் திறக்குமுன்னே வள்ளலார் வந்து
முன் நிற்பார் ,நாவு பேச தொடங்கு முன்னே ''ஞான சபை ''
அறிவில் ஒளி வீசும் ,மனம் என்னும் முன்னே'' தருமச்சாலை ''
மணக்கண்ணில் காட்சி தரும்.

      வையகத்தில் வேறெங்கும் காணாதது வடலூர் என்பதாகும்.
உலகில் உள்ளோர் வடலுரை பார்வதிபுரம் என்றும் ,அருளியலார்
உத்தரஞான சிதம்பரம் என்றும் ,உத்தரஞான சித்திபுரம் என்றும்
பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பது ,வள்ளல் பெருமானின்
ஆணையாகும் .

      வடலூர் ,வீதியிலே அருட்பெருஞ்ஜோதி விளையாடி அருள்
ஓங்குவதாகும்,வருபவர்களுக்கு மருளைத் தவிர்த்து ,நல்ல
வரமளிப்பதாகும் .!கலக்கமில்லாத்து ,அனைவருக்கும் திலகம்
என விளங்குவது ,சமரச சுத்த சன்மார்க்கம் கலந்தது.
உலகம் எல்லாம் தொழக் கூடியது,பாவம் தவிர்த்துச சாகாவரம்
அளிப்பது.

      ஏழை ,பணக்காரர் ,உடையார் ,வறியார்,ஆண்டான் ,அடிமை ,
முதலாளி தொழிலாளி ,உயர்ந்தோர் தாழ்ந்தோர் ,என்ற நிலையை
மாற்றி,ஒத்தார் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாவரும் ஒருமித்து ,
வாழச செய்வது !ஏகாந்தமாகி எங்கும் வெளியாய் இருப்பது .

      உலகில் எங்கும் இல்லாத வகையில் ,தருமச்சாலை ,
ஞானசபை ,இருப்பது .பசித்தவர்களுக்கு உணவளிப்பது ,
அருள் இல்லாதவர்களுக்கு அருளை அள்ளித் தருவது .
இறந்தாரை எழுப்பித் தருவது,மூபபினரைஇளமையாக்குவது ,
போன்ற அருள் நிறைந்த இடமாகும் வடலூர் .காணாத
காட்சிகளைக் காட்டக் கூடியது,ஈடு  இணையில்லாதது,
தான் தனக்கே ஏற்றது என வடலூரின் சிறப்பை விளக்குகிறார்
வள்ளலார் அவர்கள் .

          வள்ளல் வருகை !

    வள்ளலார் என்னும் அருலாளர்!வெப்பம் தவிர்க்கும்
கற்பக விருடஷம்,மருதூரில் தோன்றி ,சென்னையில்
கிளைத்து , ஒற்றியிலும் தில்லையிலும் பூத்து ,வடலூரில்
காய்த்து, சித்திவளாகத்தில் கனிந்து ,அருள் என்னும் அமுதம்
சரந்து  தானும் அருந்தி ,எல்லா உயிர்களுக்கும் அமுதம்
கொடுத்து ,மணம் பரப்பிக் கொண்டு இருப்பவராகும்
எல்லா உலகிற்கும் இனிமையான செய்தியை, தந்து கொண்டு
இருப்பவராகும் வள்ளலார் அவர்கள் .

      சாதி ,மதம் ,சமயம் .

    பெரிய உலகின் கண் நிலவும் ;--சிவம் ,பாசுபதம் ,கனாமுகம்,
வாமம்,வயிரவம் ,மீமாம்மிசை,பவுத்தம்,சமணம் ,
பாஞ்சராத்ரம்,ஏகான்ம வாதம் ,உலகாயதம் ,கிருத்துவம் ,
மகமதியம் ,ஆக பதினான்கு சமயங்களும் !

     இதனுள் பாஷாண்டம்,விரோசனம் ,சாருவாகம் ,உபாசகம் ,
ஷ்ணிகம் ,அந்தாரளம், ஆகமம் ,நிகம்பரம் ,பிரமகரம் ,
தார்க்கீகம்,பாட்டம் ,சாங்கியம் ,யோகம் ,பதஞ்சசலியம்,
விஷ்வ ரூபம் ,பிரஜாபத்தியம்,காணாபத்தியம் ,கெளமாரம்,
பெள்ராணியம்,கன்மம் ,கத்தோலிகம், பிராட்டஷ்ட்டென்ட் ,
பெந்த கோஷ்தே,லப்பை ,ராவுத்தர் ,பட்டாணி. ,இன்னும்
அநேகவிதமான உட்பிரிவுகள் கொண்ட மதங்களும் ,
சமயங்களும் ,மனிதனுக்கு அபயமளித்து ஒற்றுமையை
வளர்த்து, உன்னத நிலையில் வைக்க வந்த சமயக்
கூட்டங்களாகும்,

     இந்த கூட்டங்கள் உயர்வு தாழ்வு கோரி ,என்மார்க்கம்
பெரியது ,உன்மார்க்கம் பெரியது என்று போரிட்டு அழிந்து
வீணாக மாண்டு போனார்கள் .ஆதலால் உண்மை யான
மார்க்கம் எது என்று தெரியாமல், அவதிப்பட்டு கொண்டு
இருக்கிறார்கள் .

     மக்களின் அறியாமையால் நிகழுகின்ற ,வெவ்வினைக்
காடுகளை வேரோடு அகற்றவும் ,கொத்தித்த உலக ஆச்சாரக்
கொதிப்பெல்லாம் அடக்கவும் ,சாதி ,சமயச சழக்குகளைப்
போக்கவும் அவனிக்கு அருளார்களை ,அனுப்பிக் கொண்டு
இருப்பவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும் .

     சித்தர்கள் ;---

பற்று அற்ற நிலையில் சித்தர்கள் வந்தார்கள் ,மக்களுக்கு
எவ்வளவோ எடுத்து உரைத்தும் ,திட்டியும் ,எழுத்து மூலமாக
எழுதியும் வைத்தார்கள் ,சாதிக்கு, சமயத்துக்கு,மதத்துக்கு தீ
இட்டு கொளுத்துவோம் ,அழிப்போம் என்று பலவழிகளிலும்
போராடினார்கள் , மக்கள் திருந்துவதாக இல்லை ,
என்பதை அறிந்த சித்தர்கள் ,காடுகளிலும் ,மலைகளிலும் ,
குகைகளிலும் பொந்துகளிலும் ,தனக்குதானே தவம் ,யோகம் ,
தியானம் செய்து ,சமாதியானார்கள் ,அவ்ரகளாலும் பயன்
ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்த ஆண்டவர் மனம்
உடைந்து, சலிப்புற்று முடிவாக ஒருவரை அனுப்பிவைக்கிறார் .

வள்ளலார் ;---

         காடுவெட்டி நிலம் திருத்தி கஷ்டப்பட்டு காட்டெருவும்
போட்டு ,நன்செய் பயிரான கரும்பு ,நெல, வாழை போன்ற
பயிர்களை வைக்காமல் ,விஷமான கடுகு விதைத்து களிப்பது
போன்று ,பல பிறவிகளுக்கு பின் தவப்பயனால் ,வந்த இந்த
அறிய மனிதப்பிரவியாகும்,என்பதை அறியாமல் அழிவதை
கண்ணுற்ற பெருங்கருணைப் பெருமான் அருட்பெரும்ஜோதி
ஜோதி ஆண்டவர் !இந்த உலகத்திற்கு ஒரு உயர்ந்த பக்குமுள்ள
ஆன்மாவை உயிர் ஒளியை அனுப்பிவைக்கிறார் .

     நீ விரைந்து சென்று உலகில் உள்ளவர்களுக்கு ,புதிய
மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ,
தோற்றுவித்து ,உண்மையை உணர்த்தி ,மெய்ப்பொருளை
அறிவித்து ,அருள் நிலையை காட்டி ,அனைவரும் அருளை
அடையும்படி செய் ,நீ எனது பிள்ளை என்பதாலே உனக்கு
இந்த வேலையை கொடுக்கிறேன் !வேறொன்றும் எண்ணாதே !
விரைந்து செல் என்று ஆணை இட்டாராம் .

     அந்த ஆணையை சிரமேற் தாங்கி அவனிக்கு வருகை தந்தவர்
தான் வள்ளல் பெருமான் ஆவார் !

     உள்ளொன்று வைத்து புறம்ஒன்று பேசி ,அகம் கருத்துப்
புறம் வெளுத்து இருக்கும் உலகத்தைத் திருத்தி -சன்மார்க்கச
சங்கத்தில் சேர்த்து அனைவரையும் புனிதர்களாக்க வேண்டும்
என்ற ஆணையை ஏற்று வருவிக்க உற்றேன், வந்தேன் ,
என்பதை முதலில் ,தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்
வள்ளலார் அவர்கள் .

    எந்நாட்டிலும் மேம்பட்டு விளங்கும் தென்னாட்டிலே
ஆகாயத்தலம் என்று பல வகைகளிலும் சிறப்புற்று விளங்கும்
தில்லைச சிதம்பரத்தின் வட மேற்கு எல்லையில் உள்ள
மருதூரில்,அவல் வயிற்றை வளர்ப்பதற்கு,அல்லும் பகலும்
தொல்லைப் பட்டாலும் ,இறைவன் பாதத்தை எண்ணுதலே
தொழிலாக உடைய ,இராமையாவிற்கும் ,பிள்ளைக்
கலிதீர்த்து,உள்ளக் கவலை யொழிக்க வந்த ,உத்தமியாம்
சின்னம்மைக்கும் ஐந்தாவது குழந்தையாக அவதரித்தார்
வள்ளலார் அவர்கள் .

     வள்ளலார் தனது தாய் ,தந்தை ,தமையன் ,தமைக்கை ,
இவர்களுடைய பெயர் இன்னது என எந்த இடத்திலும்
அறிவிக்கவில்லை .'' தாய முதலாரோடு தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது ''என்றும்
'பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேருணவு
உண்டனன் சில நாள்''என்றும் ''தாயாராதியர் சலிப்புறுகிற்பர்
தமரும் எந்தனைத் தழுவதல் ஒழிவர் ''என்றும் ''என்னைப்
பெற்றவர் ,நேயர் ,உற்றவர் பிரிவை உற்றிடும் தோறும
உள்ளம் உடைந்தேன் ''என்றும் பெயர் குறிப்பிடாமலே
கூறியுள்ளார்.

      நமது தாய் தந்தையர்கள் ,உபகாரக் கருவிகள் என்கிறார் .
அதாவது குயவன் மண்பாண்டம் செய்ய நிழல் உதவுவது
போன்று ,நாம் தோன்றுவதற்கு உதவியாக உள்ளவர்கள் ,
என்றும் உபசாரத்தால் பெற்ற தாய் தந்தையர்கள் ஆவார்கள்
என்பதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளார் .உண்மையான
உடம்பை கொடுத்த தாய் ''பெருமாயை''என்னும் பெண்ணாகும் .
உண்மையான ''தந்தை'' உயிரை கொடுத்த ''அருட்பெருஞ்சோதி''
என்னும் தந்தையாகும்

     தாயும் தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் தலைவர் ,
என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.நமது தாய் ,தந்தையர் நம்மை
காப்பதில் சலிப்பும் ,வெறுப்பும் கொள்ளுவார்கள் ,அருட்பெரும்ஜோதி
இறைவன் ,நம்மைக் காத்தலில் கண நேரம் கூட,வெறுப்போ ,
சலிப்போ கொள்ள மாட்டார் . மேலும் தாய் தந்தையர் நாம் பிறந்த
பின்னர் பால் உணவு கொடுத்து காப்பாற்றுவார்கள்.இறைவன்
நம்மை உருவாக்கியதோடு கருவறையிலே நாம் பசித்த போது ,
பூத காரிய அமுதத்தை ஊட்டுவித்துப் பசியை தவிர்த்தவர் என்பதை
விளக்குவார் .பெற்றவர் சஞ்சனன் என்றும் ,தாய் வினைச்சி என்றும்
தந்தை ஆசை என்றும் பொதுவாக குறிப்பிட்டு உள்ளார் .

       கல்வி ;--

     வள்ளலார் அவர்கள் இலக்கணங்களிலே உள்ள பிழைகளை
எடுத்துக் காட்டுவதால் ,அவர் ஓரளவேனும் ஆசிரியர் இடத்தில்
பயின்று இருக்க வேண்டும் என்று பலர் கூறுவார்கள் .
திரு அருட்பாவை ஊன்றிப் பார்த்தால் படித்தால் ,அவர் ஆசிரியர்
இடத்தில் பயிலவில்லை என்பது தெளிவாகும் உறுதிபடுத்தும் .
ஒருவன் பல பிறவிகளில் படிக்க முடியாத நூல்களை ''அருள் ''
முன்னிடமாக நோக்கினால் கண நேரத்தில் படித்து விடலாம்
என்பது வள்ளலார் கண்ட முடிவாகும் .

     கற்றே யறியாக் கடை நாயேன் எனவும் ,கற்ற நற்றவர்க்கே
அருள் வீரேல் கடையனேன் எந்தக் கடைத்தலை செல்கேன்,
என்று தன்னைத் தாழ்த்திக் கூறும் வள்ளலார் ,
இறைவா !நினது அருளாலே'' கற்றதும் நின்னிடத்தே ,கேட்டதும்
நின்னிடத்தே''எனவும் .''ஓதும் மறை முதற்கலைகள் எல்லாம்
ஓதாமல் உணர உணர்விலிருந்து அருள் உண்மை நிலை காட்டி ''
எனவும் , ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்ப எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வால் உறவுறச செய்த உணர்வு எனவும் ,
குமாரப் பருவத்தில் என்னைக் கல்வி பயிற்றும்ஆசிரியர் இன்றியே
என் தரத்திற்குரிய அருமையான கல்வியை என் உள்ளகத்தே
இருந்து பயிற்று வித்து அறிளினீர்!என்றும் தெளிவு படுத்துவதால்
வள்ளலார் ஆசிரியர் இடத்தில் கல்வி பயிலவில்லை என்பது
நன்கு உணர்த்தப் பட்டு உள்ளது .வள்ளலாருக்கு குரு
அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தானே தவிர வேறு யாரும்
குருவல்ல என்பது தெளிவாகும் ,

      உணவு ;---    
             
    வள்ளலார் இளமையில் பள்ளியில் கல்வி பயிலாமையால்
அண்ணன் உணவும் உடையும் கொடுக்க மறுத்து விட்டார் ,
வள்ளலார் அண்ணனுக்குத் தெரியாமல் வீட்டின் பின்புறமாக
வந்து உணவு உண்பார் என்பது வரலாறு தரும் செய்தியாகும் .
வள்ளலார் அப்படி உணவு உண்பதாக அருட்பாவில் தெரியப்
படுத்தவில்லை .அவர்கூறுவது,நான் இரண்டு பொழுது
உண்டதெல்லாம் இனிய உணவாயிற்று !என்பதால் வள்ளலார்
இளமையில் ஒரு நாளைக்கு இருவேளை உண்டார் என்பதும் ,
அறிவில்லாத சிருபருவத்திம் அருந்தலில் எனக்குள் இருந்த
வெறுப்பை பிரிவிலாது என்னுட் கலந்த நீயறிவாய் என்று
கூறுவதால்,தான் இளமையிலே வெறுப்போடு உண்பதாக
தெரிவித்துள்ளார் .

      உப்பிடாத கூழிடினும் உவந்து உண்பேன் என்று கூறுவதால்
கிடைத்ததை இறைவன் கொடுத்தாகக் கருதி உண்பார் என்பதும் ,
''இன்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் இச்சுகத்தால்
இனியாது துன்புறுங் கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறு
வயிற்றோடு இருந்தேன் ,என்பதால் வள்ளலார் அறுசுவையில்
விருப்பம் கொள்ளவில்லை என்பதும் ,தெற்றியிலே நான் பசித்து
படுத்த இளைத்த தருணம் திருவமுதோர் திருக்கரத்தே திகழ்
வள்ளத்தெடுத்தே ஒற்றியிற் போய் பசித்தனையோ என்று எழுப்பி
உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கினிதான் தாயே ''
என்பதால் ,வள்ளலார் ஆங்காங்கு பசியுடன் இருப்பதை அறிந்து
இறைவன் உணவு கொண்டு வந்து ஊட்டினான் என்பது வள்ளலார்
எழுதிய திருஅருட்பா தரும் செய்திகளாகும் .

     அருள் உணவு ;--  உணவு இரண்டு வகைப்படும் ஒன்று
அருள் உணவு .மற்றொன்று பொருள் உணவு ,வள்ளலார்
பொருள் உணவு விரும்பவில்லை .அருள் உணவு தான்
விரும்புவார்கள் ,பொருள் உணவு உண்டால் மரணம்
வந்து விடும்.அருள் உணவு உண்டால் மரணம் வராது
என்பது வள்ளலாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .

     ஆதலால் அருள் உணவிலே நாட்டம் கொண்டார் .அருள்
உணவு தவிர வேறு எந்த உணவும் உண்ணமாட்டேன் என்பதில்
அழுத்தமாகவும் ,அசைக்க முடியாத நம்பிக்கை யுடனும்
வைராக்கியத்துடனும் இருந்தார் .அதை அறிந்த அருட்பேரொளி
என்னும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் .அருள் உணவு கொடுக்க
தானே வந்து கொடுத்ததாக வள்ளலார் பல பாடல்களில்
தெரியப்படுத்தி உள்ளார் !

     பாடல் ;---
நான் பசித்த போதெல்லாம் தான் பசித்த் தாகி
நல்லுணவு கொடுத்து என்னைச செல்வமுற வளர்த்தே
ஊன்பசித்த விளைப்பொன்றும் தோற்றாத வகையே
ஒள்ளிய தெள்ளமுது எனக்கு இங்கு உவந்தளித்த வொளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் மரிதாம்
வாழ வெனக்கே யாகியுற வரமளித்த பதியே
தேன் பசித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ் செய் யரசே என் சிறு மொழி யேற்று அருளே !

என்று தெளிவு படுத்தியுள்ளார் ;--அடுத்து

நான் பசித்த போதெல்லாம் தான் பசித்தராகி
நல்ல திரு அமுதளித்தே யல்லல் பசி தவிர்த்தே
ஊன்பதித்த வென்னுடய வுளத்தேகம் முடைய
உபயபதம் பதிததருளி யபய மெனக் களிததார்
வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
மணவாளர் எனைப் புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
நான் பதித்த பொன்வடிவம் தனை யடைந்து களித்தேன்
சாற்றும் அகப் புணர்ச்சியினால் ஏற்றம் உரைப்பதுவே !

என்று வள்ளலார் பல பாடல்களில் தெரியப்படுத்தியுள்ளார்
ஊன உடம்பு ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுதம்
நல்கிய நாயகனே, என்றும் ஊன  உடம்பு ஒளி உடம்பாக
மாறியதையும் .தன் உடம்பு ஒளியாக மாறியதையும்.
ஒளி உடம்பு கிடைத்தால்தான்  மரணம் வராது என்பதையும்
தெள்ளத் தெளிவாகத்  தான் அனுபவித்து தெரிவித்துள்ளார்

உலகில் தோன்றிய யாவருக்கும் கிடைக்காத அருள் தேகம்
தனக்கு கிடைத்ததாக அறிவிக்கறார் ! .
எல்லார்க்கும் கடையாகி இருந்தஎனக்கு அருள் புரிந்தாய் !
என்னைவிட பெரியவர்கள் நிறைய பேர் இருந்துள்ளார்கள்
அவர்களுக்கு செய்யாமை யாது என்று. அருட்பெரும்ஜோதி
ஆண்டவரை கேட்கிறார் வள்ளலார் ,உன்னை கேட்பதற்கு
யாரும் இல்லை என்றா ?இப்படி செய்தீர் என வினவுகிறார் .

பாடல் ;---
எல்லார்க்குங் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் யெம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்றாய் யிவவண்ணம்
எல்லார்க்குஞ் செய்யாமை யாது குறித்து இசை யெனக்கே

நாட்பாரில் அன்பரெலாம் நல்குக வென் றேத்தி நிற்ப
ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் மில்லேற்கே
நீட்பா அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை யிங்கே
கேட்பாரில்லை என்று கீழ் மேல் தாக்கினையே .!

என்பதை பல பாடல்களில் ஆண்டவரிடத்தில் கேள்வி
கேட்கிறார் வள்ளலார். .அதற்க்கு அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் பதில் சொல்லுவதாக வரும் செய்திகள் .

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பல ஆன்மாக்களை
அனுப்பினேன் .அதில் பக்குவமுள்ள ஆன்மாக்கள் பல
அனுப்பினேன் .அவைகளுக்கு அருள் கொடுத்து அனுப்பி
வைத்தேன்.அவைகளும் பூலோகத்திற்கு வந்து ,வந்த
நோக்கம் என்ன என்று தெரியாமல் மற்ற ஆன்மாக்கள்
போலவே உலகப் பொய்யான வாழ்க்கையிலே ,வாழ்வதற்கு
ஆசைப்பட்டு அழிந்துவிட்டார்கள் .

மறுபடியும் தேவ தூதர்களை அனுப்பினேன் ,அவர்களும்
மாயையில் சிக்குண்டு ,பொய்யான கதைகளும் ,பொய்யான
கற்பனைகளும் சொல்லி மக்களை ஏமாற்றி விட்டார்கள் .
மக்களும் அதையே உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டும்
 அழிந்து கொண்டும்  இருந்தார்கள்,அதன்பிறகு உன்னை அனுப்பி
வைத்தேன் நீ ஒருவர்தான் உலகத்தின் உண்மைகளையும் ,
உயிர்களின் உண்மைகளையும் ,ஆண்டவர் யார் என்ற
உண்மையையும் ,தெளிவாக உலக உயிர்களுக்கு [ஆன்மாக்களுக்கு ]
தெரியப்படுத்தி உள்ளீர் .பொருள் உணவு உண்ணாமல் ,அருள்
உணவு உண்டு அழியாப் பெருவாழ்வு வாழ்ந்துள்ளீர் ,ஆதலால்
நீ ஒருவன் தான் என பிள்ளையாக தேர்வு பெற்று உள்ளீர்
அதனால் உனக்குமட்டும் அனைத்து ஆற்றல் களையும்
கொடுத்துள்ளேன் ,நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல்
உலகத்தில் ஆடி பாடி விளையாடி மகிழ்க என்றார் அருட்
பெரும்ஜோதி ஆண்டவர்

ஆண்டவர் அருளைப் பெற்ற வள்ளலார் ,உலக மக்களுக்கு
அனைத்து உண்மைகளையும் திரு அருட்பா நூலின் வாயிலாக
எழுதி வைத்துள்ளார் .

பாடல்;--- 

அகத்தே கருத்துப் புறத்து வெளுததிருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத் தடை வித்திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனையிந்த
யுகத்தே யிறைவன் வருவிக்க வுற்றேன் அருளைப் பெற்றேனே.

இறைவன் அனுப்பிய நோக்கம் என்னவோ !அனைத்தும் முறை
தவறாமல் செயல்பட்டதால், இறைவன்! அவருடையப்
பொறுப்புகள் அனைத்தும் வள்ளலாரிடம் ஒப்படைத்து
விடுகிறார் .

ஆதலால் அருட்பெரும்ஜோதியின் அனுமதியோடு
தன்னுடைய மார்க்கத்திற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''
என்று பெயர் சூட்டுகிறார் .இந்த மார்க்கம் மற்ற மார்க்கங்கள்
போல் அல்லாமல், உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான
மார்க்கமாகும் என்று தெளிவுப் படுத்துகிறார் வள்ளலார் .

பாடல்கள்;----

துன் மார்க்கமெல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்கச சங்கம் தலைப் பட்டேன் ----என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வானாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து .

பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே ---சொன்மார்க்கத்
எல்லா வுலகமும் இசைந்தனவே யெம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு.

சாதிகுல மென்றும் சமயமத மென்றும் முப
நீதியிலா ஆச்சிரம நீட்டென்றும்---ஓதுகின்ற
பெயாட்டமேல்லாம் பிதிர்ந்து ஒழிந்த்துவே பிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று !

உலகிலுள்ள பொய்யான மார்க்கங்கள் அத்தனையும்
ஒழித்து புதியதோர் சன்மார்க்கத்தை வடலூரில் 1873 ,ஆம்
ஆண்டு [ஆங்கிரசவருடம் ]ஆடி மாதம் 5 ,ஆம் தேதி ,
தொடங்கி வைக்கிறார் வள்ளலார் .

தொடங்கி வைத்த பிறகு அருட்பெரும்ஜோதி ஆண்டவர்! ,
உலக அரசாட்சியை வள்ளலாரிடம் ஒப்படைக்கிறார் .
சன்மார்க்க சங்கத்தை நீயே தலைமை  யேற்று நடத்த வேண்டும்
என்று ஆணையிடுகிறார் .ஆணையிட்டதுமட்டும் அல்லாமல்
என்னோடு கலந்து விடவேண்டும் .இனிமேல் நீ வேறு, நான் வேறு
என்பது இல்லை, இருவரும் ஒரேஉருவமாக அனைவருக்கும்
காட்சி கொடுப்போம் .இதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை
தெரிவிக்கிறார்

அருட்பெரும்ஜோதிக்கு இருந்த துன்பமெல்லாம் வள்ளலார்
மூலமாக போயிற்று என்பதை பின்வரும் பாடல் மூலமாக
தெரிவிக்கிறார் !

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச
சூழ்ந்து அருளொளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை யனுபவம் நினைக்கே
சுதந்தரமானது உலகில்
வன்பெலாம் நீக்கி நல வழி யெலாமாக்கிமெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை யுன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெறுக வுலவாது நீடூழி விளை
யாடுக அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை யென்றே
இன்புறத் திரு வாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நட ராஜ் பதியே .!

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலாரிடம் உலக
ஆட்சியை ஒப்படைத்து வள்ளலாரின் உடம்பை ஒளி
உடம்பாக மாற்றி,தானும் வள்ளலார் உடம்பில் கலந்து
இரு அருள் ஒளியும், ஒரே அருள் ஒளியாகமாற்றி விட்டார் !

பாடல்கள்;----

சத்தியவான் வார்த்தையிது தானுரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் தினங்களெல்லாம் இன்பமுறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலாவுலகும்
தூய்மையுறும் நீயுரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லுகின்றதாமே !

என்சாமி எனது துரை என்னுயிர் நாயகமே
இன்று வந்து நானிருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி யுடையப் பெரிய தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்ததிது சத்தியஞ் சத்தியமே
மின்சாரும் இடைமடவாய் என் மொழி நின்தனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

வ்டலூறுக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில்உள்ள
சித்தி வளாக திரு மாளிகையில் அருட்பெரும்ஜோதியும்
வள்ளலாரும்,[ 30 -- 1 --1874 ,ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19 ,ஆம்
நாள் வெள்ளிகிழமை அன்று ] அருள் ஒளியாக ஒன்றுடன்
ஒன்றாக இணைந்து விட்டார்கள் .அன்று முதல் இன்று வரை
வடலூரில் இருந்து அருள்ஒளி  தெரிந்து கொண்டு இருக்கிறது

வருவார் அழைத்து வாரீர் வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெரும்ஜோதி
அணையா தீபம் அனைவரையும் அழைக்கிறது .

என்ற வாசகம் உலகம் முழுவதும் பரவி உள்ளது ,
வடலூரில் அருள் நிறைந்து இருக்கிறது .உலகத்தில் உள்ள
அனைவரும் வந்து  அருளைப் பெற்று ஆனந்த வாழ்வு
வாழ்வோம் .

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளை பெற்று
மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெறு வாழ்வு
வாழ்வோம் .அனைவரும் வாரீர் அருளைப் பெறுவீர் !

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை வாங்கிப் படித்து
உண்மையை உணர்ந்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து
அருளைப் பெற்று ஆனந்தம் அடைவோம் .

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !
ஜீவ காருண்யமே இறை வழிபாடு !
கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதியர் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !

அன்புடன் ;--கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் ..
      
     .    

      



















































































































































































































































































































































































          

  
  
i  

திங்கள், 13 செப்டம்பர், 2010

மாயை - ஒரு ஆன்மிக உரையாடல்



வள்ளலார் அருள் மொழிந்த மாயையைப் பற்றிய எனது உரையாடலைக் கேட்டுவிட்டு தங்களின் கருத்துக்களை இவ்வலைப்பூவில் பதிவுசெய்யக் கேட்டுக்கொள்கிறேன். மேலே உள்ள ஒலிபெருக்கி படத்தைச் சொடுக்கி என் உரையாடலைக் கேட்கவும்! நன்றி!

லேபிள்கள்:

சனி, 4 செப்டம்பர், 2010

குழ்ந்தை சிரித்தது !

      ஐந்து மாத குழந்தை சிதம்பரம் நடராஜர் சன்னதியில்
      சிரித்த அதிசயம் .

      பிறந்த ஐந்தே திங்களான குழந்தை ,தந்தை அருகிலிருக்க
தாய் அருகிலிருக்க ,உலகம் ஓசைபட ,ஆண்டவன் ஆனந்தத்
தாண்டவமாட ,திருத்தில்லையிலே ,நடராசர் சன்னதியிலே ,
திரைவிலக்க ,அப்பைய்யர் தீட்சர் ஆராதனை செய்கையில்
நடராசர் சன்னதியை நோக்கிக் கல கலவெனப் புன்னகை
பூரிக்க அப் பச்சிளங்குழந்தை சிரித்தது .கண்டோர் எல்லாரும்
வியந்தனர் ,கொண்டோர் குதூகலித்தனர் ,ஆராதித்தோர்
அதிசயித்தனர் .

      பசி எடுத்தால் அழும் ,பார்த்தமுகமானால் சிரிக்கும் ,
வேறுமுகமானால் வீரிட்டு அழும் ,தில்லைக்கு முன்பின்
செல்லாத குழந்தை ,திரு உருவைக் காணாத குழ்ந்தை ,
கண்டோர் வியக்க சிரிக்க காரணம் என்ன ?

    உலக வரலாற்றிலே கடவுளுக்கு உருவம் இல்லாது
இருக்கும் இடம் சிதம்பரம் தில்லை நடராசர் சன்னதியாகும் .
அங்கே உருவமுள்ள பல பொம்மைகளை வைத்து வழிபாடு
செய்கிறார்களே எனறு நினைத்து சிரித்தது .

    கடவுளுக்கு உருவமில்லை என்பதை நம் முண்ணோர்கள்
அறிந்து ,சிதம்பர ரகசியம் என்பதை திரைபோட்டு மறைத்து
வைத்துள்ளார்களே என்பதை பார்த்து சிரித்தது .

    உருவமற்ற ஒளியான உண்மைக் கடவுளை எனக்கு
காட்டிவிட்டாயே என்பதை எண்ணி சிரித்தது,எல்லா
உலகத்திற்கும் இந்த உண்மையை பறைசாற்றுவேன்
என்பதை நினைத்து சிரித்தது .

    உண்மை ஒளியான அருட்பெருஞ்ஜோதியை உலகம்
முழுவதும் காணவைப்பேன் என்பதை சிரிப்பின் மூலம்
தெரியப்படுத்தி சிரித்தது.

    அந்த அருட் குழந்தைதான்;---------- திரு அருட்பிரகாச
வள்ளலாராக,அருட்பெருஞ்ஜோதியாக  இன்று உலகத்தை
ஆட்சி செய்து கொண்டு  இருப்பவராகும்.

  வள்ளலார் தாய் தந்தையர் உடன் தில்லையில்
ஐந்து மாத சிறுகுழந்தையாக தரிசனம் செய்தபோது
அருட்பெரும்ஜோதி தனக்கு தெரிவித்ததை ,அருட்பா
பாடலில் தெரியப்படுத்துகிறார் ,

     பாடல் ;--

தாய் முதலோ ரோடு சிறு பருவத்தில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
மேய்வகை மேற் காட்டாதே என்தனக்கே யெல்லாம்
வெளியாகக் காட்டிய வென் மெய்யுருவாம் பொருளே
காய்வகையில்லா துளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் மெனைப் பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்ற மணிமன்றில் நடம்புரியும்
ஜோதி நடத்தரசே என சொல்லும் மணிந்தருளே.

   என்னும் பாடலில் சிறுகுழ்ந்த்தையாக இருக்கும் போதே
திரைகள் எல்லாம் நீக்கி உண்மை நிலையை உணர
உணர்த்திவிட்டாய் .ஜோதி நடத்தரசே! இனி எனக்கு
எந்த மறைப்பும் இல்லாமல் ,இந்த உலகத்திற்கு
சொல்லுவேன். என் சொல்லை அனைத்து உலகமும்
ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்க்கு நீங்கள் அருள்புரிய
வேண்டும்.துணையிருக்க வேண்டும் என வேண்டுகோள்
விடுகிறார் குழந்தையான திரு அருட்பிரகாச வள்ளலார்
அவர்கள்.

    உலகநிலை;--

    சாதி ,சமயம் ,மதம் என்ற பிரிவினையால் வீதியில்
நடமாட முடியாதவர்களின் உள்ள வேதனைகள்
உலகமெங்கும் எதிரொலித்தது .சாதி மத சமயபினக்குகளால்
சண்டையிட்டு மண்டை உடைந்தவர்களின் எண்ணச
சிதறல்கள் விண்ணுலகை வியக்கவைத்தது .உழைக்காமல்
தழைக்க எண்ணியவைகளின் சுரண்டல்கள் ,ஏழைகளைக்
கண்கலங்க வைத்தது .உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் என்னும்
பிரிவினை தலைவிரித்து ஆடியது .

      கடவுள் கொள்கைகளில் ;--

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச சமயா தியை மெச்சு  கின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல்விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித்து அவருக்கு அறிவு அருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே .

என்னும் பாடலில் தெயவங்கள் பலபல எனறு
வழிபடுபவர்களுக்கு ,வணங்குபவர்களுக்கு சுத்தமாக
அறிவே இல்லை என்கிறார் வள்ளலார் .
அவர்களுக்குஅறிவை புகுத்தி உண்மையை
எடுத்துரைக்க எனக்குஆற்றலை கொடுக்க வேண்டும்
எனறு விண்ணப்பம்செய்கிறார் வள்ளலார் அவர்கள் .
.எனக்கு தெளிவித்ததைப்போல் அனைவருக்கும்
தெளிவிக்க வேண்டும் என்கிறார்.

     இந்த செயல்களை எல்லாம் முடிவுக்குக் கொண்டுவர
எண்ணி ,அருட் செங்கோல் இயற்றும் அருட்பெரும்ஜோதி
இறைவனின் திருச்சபையைக் கூட்டுகிறார் இறைவன் .
அத்திருசபையின் அனுமதியின் நீதிப்படி ,சட்டப்படி
ஓர் பக்குவமுள்ள அணுவை அழைத்து .பஞ்ச பூத
உலகத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது .அந்த அணுதான்
வள்ளலார் என்னும் பெயருடைய உயிரொளி அணுவாகும் .

   பாடல் ஒன்று ;--

அகத்தே கருத்துப் புறத்து வெளுத் திருந்த
உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்
அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு
என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்
அருளைப் பெற்றேனே .

என்பதை தெளிவுபடுத்துகிறார் வள்ளலார் அவர்கள் .

தலைமகனே நீ தரணிக்குச சென்று உலகத்தை
மாற்றவேண்டும் எனறு ஆணை இடுகிறார்
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

    மனிதன் சாகப்பிறந்தவன் அல்ல, என்றும் நிலைத்து
வாழ்ப் பிறந்தவன் ,வாழும் வகை தெரியாது சென்று
மடிகிறான் .வழிக்கு துணைவருவான் போல வந்து
நடுவழியில் பயம்காட்டிப்  பணம் பறிக்கும் பாதகரை,
நன்னெறியில் செலுத்த வேண்டும் .

  பட்டினி கிடப்பாரை பார்த்தும் பாராது ,பழங்கஞ்சி
யாயினும் வழங்க நினையாது ,வட்டிமேல் வட்டியிட்டு
வாங்கிப் பெட்டியை நிரப்பி வைத்தாளும் பேயரைத்
தூயராக்க வேண்டும் .ஆபத்தில் உபகாரம் செய்வதுபோல்
சிறு பொருளைக் கொடுத்து ,அத்தனையும் அபகரிக்கும்
மோசம் செய்யும் நாசக்க காரர்களை திருத்தி நேசமுண்டாக்கு .

    மதியை கெடுத்து மரணமெனும் வழக்கைப் பெருக்கி
இடர்படும் ஓர் விதியைக் குறித்த சமய நெறியில்
விரைந்தோடும் ,மாந்தரை ,இறவா,பிறவா நிலையருளும்
சுத்த சன்மார்க்கத்திற்குத் திசை திருப்பு .கொள்ளைவினை
கூட்டுறவால் கூடிய கூட்டத்தையும்.அக் கூட்டத்திலிருந்து
வரும்படி மக்களைக் கூவி அழைத்து , கள்ளத் தனமுடைய
பல கலைகளை சொல்லி ,அக்கலைகள் காட்டும் பொய்யான
கடவுள்கள் ,அக் கடவுள்கள் காட்டும் பொய்யான காட்சிகள்
அக் காட்சிகளால் ஏற்படுகின்ற கதிகள் ,இவைகள் எல்லாம் ,
உண்மை அல்ல, பொயஎன்பதை உணர்த்தவேண்டும். .

     இவையாவும் தெருவதிலே சிறுகால் வீசி விளையாடுகின்ற
சிறு பிள்ளை வளையாட்டு கூட்டம் என அறிவித்து ,
மனிதர்களைப் புனிதர்களாக்கும் ,சுத்த சன்மார்க்கப்
பாதையில் நடைபோடச செய்யவேண்டும் .தொல்லைக்
குடும்பத் துயரதனில் காலத்தை வீணாகத் தொலைத்து
அல்லல் பட்டு சிக்கி தவிக்கும் மக்களை,அதனிலிருந்து
நீக்கி அல்லல் அறுத்து ,ஆனந்தமாக்கவேண்டும் .

    கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர்!
என்பதை உலகமக்கள் அனைவரும் ,உணரும்படி
உணர்த்தவேண்டும்.என்பது ,அருட்பெருஞ் ஜோதியின்
கட்டளையாகும் ,அதை சிரமேற்க் கொண்டு செயல்
பட்டுக்கொண்டு இருக்கிறார் வள்ளலார் அவர்கள் .

    இம்மாபெரும் பணியை செய்ய நம்மால் முடியுமா
என மயங்குகிறது அச்சிருவயது குழ்ந்தை .

    குழந்தாய் ,இதுவரையிலும் இது போன்ற பணிபுரிய
நிறைய தூதுவர்களை அனுப்பினோம் ,அவர்களில்
ஒருவர் கூட கொடுத்த பணிகளை முழுமையாக
செய்யவில்லை ,செய்யத்தவறி விட்டார்கள் .அவர்கள்
அனைவரும் உண்மையை சொல்லாமல் ,பொய்யே
சொல்லிவிட்டார்கள் ,ஆதலால் உலக உயிர்கள் அதிக
துன்பத்திற்கு தள்ளப் பட்டுவிட்டன .

    நீ எனது தலைப் பிள்ளை யானதினாலே இப்பணிக்கு
தகுதிஎனப் பணித்தேன் ,கலங்காதே ,மயங்காதே மனதில்
வேறொன்றும் எண்ணித் தயங்காதே ,துவளும் போது
தோள்கொடுப்போம் ,மயங்கும்போது உடன் இருந்து
மயக்கம் போக்குவோம் ,சென்றுவா ! உலகில்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிலை நாட்டி
வென்றுவா !என ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறார்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பெரோளியாகும் .

      தலைவனின் தலைமகன்தான் தரணியில் உள்ள
இராமையா ,சின்னமைக்கு ஐந்தாவது குழந்தையாகப்
பிறந்து ஐந்து திங்களிலே நன்றி கூற தில்லை நடராசர்
சன்னதிக்கு மலர் மாலையுடன் சென்றபோது ,
திரை விளக்கி அப்பயையர் ஆராதனை செய்தபோது
கடவுள் காட்சிக் கொடுத்துள்ளார் .அக்கடவுள் உருவம்
அற்றவர் ,ஒளியாக உள்ளார் என்பதை உணர்ந்து
கொள்கிறது அக் குழ்ந்தை .

      பூவுலகத்திற்கு பொதுப்பணி புரியவும், பொய்யுலகில்
மெய்ப்பணிப் புறியவும்,பொய்யும் மெய்யும் நிறைந்த
உடலில் புகுந்து இருக்கிறேன் ,பக்கத்துணையாய் இருந்து
பார்த்துக் கொள்கிறேன் ,பயம் இல்லாமல் பணிபுரியவும்
உற்ற துணையாய் இருந்து உதவிபுரிகிறேன் .உச்சி மீது
வானிடிந்து விழுவதாக இருந்தாலும் ,உள்ளம் கலங்காது
உண்மையை பேசு, .உண்மையை நிலைநாட்டு .ஒளியும்
வெளியுமாக இருந்து ,உபதேசித்ததைக் கண்டுதான்.
தில்லையிலே அக்குழ்ந்தை கலகல வென்று சிரிப்பொலி
எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது .

    அந்த சின்னக் குழ்ந்தையின் சிரிப்பு வெற்றுச சிரிப்பு அல்ல
வீதியில் நடவாதே எனற சாதிக்கொடுமையை ஓட்ட
வந்த சிரிப்பு ,வெற்றிச சிரிப்பு .

      தோன்றுவதும், பிரிவதும்,மாய்வதும் ,சூழ்ச்சியில்
பட்டு உழல்வதும்,தொல்லுலகில் பிறப்பு ,இறப்பு என்ற
ஏட்டைக் கிழித்து இறவா ,பிறவா நிலையில் ஏற்றுவிக்கப்
போவதை அறிவிக்கும் சிரிப்பாகும் .

     பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் பல சமயங்கள்
மதங்கள் என்ற பவ நெறி பரவியது .அதனால் மக்கள்
உண்மை நெறி அறியாது பெரிய இருள் அடைந்தனர் .ஆதலின்
இனிமேல் அப்புன்நெறி தவிர்த்து பொது  நெறி யெனும்
சுத்த சன்மார்க்கத் தன்னெறி செலுத்தப் போவதாக
அறிவிக்கும் சாந்தமுள்ள சிரிப்பாகும் .

     உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது ,
எவ்வுயிரும் தன்னுயிர் என எண்ணாது ,கொலையும் ,
புலையும் ,குடியும் பெரிதெனக் கொள்வது ,போன்ற
அகம் கருத்துப் புறம் வெளுத்து இருப்பவரைத் திருத்தி
அவர்களைச சன்மார்க்க சங்கத்தில் அடைவித்து ,
நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டுவதை
அறிவிகக் போவதை அறிவிக்கும் அற்புத சிரிப்பாகும் .

அன்புடன் ;--கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் .                

.                    
            



            

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அருட்பெருஞ்ஜோதியும் ! மாயையும் !

   .நாம் வாழும் இவவுலகம் பஞ்ச பூதங்களான செயற்கை
         உலகமாகும் .இவைகளைப் படைத்தவர்
                 அருட்பெருஞ்ஜோதியராகும்.


   இந்த பஞ்ச பூத உலகை இயக்கும் அதிகாரத்தை
மாயை என்னும் ஒளியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
மாயைக்கு கட்டுப்பட்டது ,நிலம், நீர்,அக்கினி[நெருப்பு ]
காற்று,ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களாகும். இந்த 
பஞ்ச பூத உலகத்தில் ஆன்மா என்கிற உயிர்களை, 
அதாவது அருட்பெருஞ்ஜோதியின் குழந்தைகளை
அனுப்பிவைக்கபடுகிறது .மாயைக்கும் அருட்பெருஞ்ஜோதிக்கும்,
உடன்படிக்கை ஒப்பந்தம், சட்ட திட்டங்கள் தயாரிக்கப் படுகிறது .      


       சட்டதிட்டங்கள் ஒப்பந்தம் எவை ?


     சட்டம் ;--1 ,
      அருட்பெருஞ்சோதிக்கும் ,மாயைக்கும் ஒரு
உடன்படிக்கை ஒப்பந்தம் பதிவு செய்யப்படுகிறது .
அவையென்னவென்றால் ,என்னுடைய குழந்தைகளான
ஆன்மாக்களை அதாவது உயிர்களை,காப்பாற்றுவது ,
பாதுகாப்பது,அதற்க்கு வேண்டிய வீடு கட்டிக்கொடுப்பது ,
உணவு வழங்குவது,அதன் விருப்பத்திற்கு தகுந்த
அனைத்தும் செய்து கொடுக்கவேண்டியது ,மாயையினுடைய
கடமையாகும்.அதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது.


     அடுத்து உயிர்கள் வாழ்வதற்கு ஒரு அறிவுள்ள
தாவரங்கள்முதல்  ,ஊர்வன,பறப்பன ,நடப்பன ,
தேவர்கள்,மனிதர்கள் மதலிய ஆறுவித மான
பிறப்புகள் தரவேண்டும்.ஒவ்வொரு பிறப்புக்கும்
ஏழு முறை பிறப்பு தரவேண்டும் .அதற்குமேல்
உயிர்கள் அதே பிறப்பில் இருக்க விரும்பினாலும்
தரக்கூடாது .பிறப்பை மாற்றி கொடுத்துக் கொண்டே
இருக்க வேண்டும் .        


              சட்டம் ;--2 ,


      அடுத்து ஆறாவது பிறப்பாகிய மனித பிறப்பு
கொடுக்கும் போது அதற்க்கு சில உரிமைகள்
கொடுக்க வேண்டும் .என்ன வென்றால் உயிர்கள்
பல பிறவிகள் எடுத்து சலிப்படைந்து ,உயிர்கள்
எங்கிருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டும் எனறு
விரும்பினால் அதற்க்கு மாயையாகிய நீங்கள்
தடையாக இருக்கக் கூடாது           


சட்டம்;-- 3 ,


அடுத்து ஆன்மாவாகிய உயிரானது அருட்பெரும்ஜோதியாகிய 
என்னைதொடர்பு கொண்டால் அதற்கு தடையாக இருக்க்கூடாது.
பஞ்ச பூதங்கள் உடம்போடு என்னைத்  தொடர்பு கொள்ளக்கூடாது. 
அப்படி தொடர்பு கொண்டால் அதற்கு வேண்டிய உதவிகளை 
செய்து செய்து தரவேண்டும் .உதவி என்ன வென்றால்உயிர்கள்  பஞ்ச பூத
உணவுகளை விரும்பவில்லை என்றால்,  கொடுக்ககூடாது,அவைகள் அமுதம் என்ற 
உணவை கண்டுபிடித்து அதைபுசிக்க துணை புரியவேண்டும் .அந்த வேலையில் உயிர்கள் 
பூத உணவுகளை விரும்பினாலும்  தரக்கூடாது,


           சட்டம்;-- 4 ,      


அடுத்து ;--இவ்வுலகிலுள்ள எந்த பொருளையும் தனக்கு சொந்தம் 
எனறு உயிர்கள் நினைக்க கூடாது .நினைத்தால் விட்டுவிடவேண்டும்.
உலகிலுள்ள பொய்யான தெய்வங்களை வழிபட்டால் தடுக்க கூடாது.
உண்மையான என்னை தொடர்பு கொண்டால் தடை செய்யாமல் அதன் போக்கிற்கு விட்டுவிட வேண்டும் அந்த நேரத்தில் அதற்க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் .எந்த தீமைகளும் அவற்றை நெருங்க க்கூடாது.ஆன்மாக்களான உயிர்களை அதன் அதன் 
விருப்பத்திற்கு தகுந்தாற்ப்போல் வாழ்வதற்கு 
விட்டுவிட வேண்டும் .ஆனால் அதன் செயல்களுக்கு தகுந்தாற்ப்போல்,உடம்பை 
மாற்றி ,மாற்றிக்கொடுக்கவேண்டும் .
எதனால்உடம்பு மாற்றப்படுகிறது என்பதுஉயிர்களுக்கு உம்மால் தெரியக்கூடாது. 


    சட்டம் ;---5 ,


  இந்தபஞ்சபூதங்களின் செயல்முறைகளை, 
உயிர்களுக்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக் 
கொள்ளும் உரிமை அதிகாரம்  உமக்கு 
சட்டப்படி வழங்கப்படுகிறது.
     இந்தஉலகத்திலுள்ள பொருகள் யாவும் 
உலக எல்லையை விட்டு வெளியேறக்கூடாது .
உயிர்களும் எந்தபொருளையும்,எடுத்து செல்ல 
அனுமதிக்ககூடாது. 
    உயிர்கள் உலகைவிட்டு வெளியேற 
விரும்பினால்,மனித தேகத்திற்கு மட்டும் 
அனுமதி வழங்க வேண்டும் ,மனிததேகம் 
கிடைத்த உயிர்கள் ,எங்கிருந்து வந்ததோ 
அங்கு செல்ல வேண்டுமானால் ,அதனுடைய 
முயற்ச்சியால்தான் செல்லவேண்டும் .
      அப்படிசெல்ல விரும்பினால்,பூலோகத்தில்
எந்த பாக்கியும்[கடன் ]இருக்கக் கூடாது.
இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் ,உயிர்கள் 
என்ன என்ன விரும்பி அனுபவித்ததோ,
அவைகளை எல்லாம் திரும்ப தந்துவிட்டுத்தான் 
வெளியேறவேண்டும் .அதுவரையில் அவைகள் 
வெளியேற அனுமதிவழங்கக் கூடாது.
   உயிர்கள் உழைக்காமல் திரும்ப 
விரும்பினால் அவைகள் அனுபவித்த சுக போகங்களை திரும்பித்  தராமல் போவதற்கு அனுமதிக்க கூடாது. 


  உயிர்கள் பாக்கியை [கடனை ] 
தராமல் ,உண்ணாமல்,உறங்காமல்,
தனித்து  யோகம் ,தியானம் ,தவம் முதலான காரியங்களில் 
செய்ய துணிந்தால் அவைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் . 
கொடுத்தாலும்,வெளியேறக் கூடாது .
அவைகள் எவ்வளவு காலம் இருந்து 
முக்தி பெற்றாலும்,அவைகளின்காலம் 
முடிந்து, மறுபடியும் மனிதபிறப்பு கொடுக்கவேண்டும் . 


      மறுபடியும் மனித பிறப்பு எடுத்து 
உண்மையை உணர்ந்து அருட்பெரும்ஜோதிதான்உண்மைக் 
கடவுள் என்பதை உணரும்போது ,
அவைகளுக்கு,எல்லா உதவிகளையும் 
செய்துதரவேண்டும் ,அவைகள் ஊன 
உடம்பை ஒளி உடம்பாக மாற்றி
இரவாநிலைப் பெற்ற பிறகுதான் 
அருட்பெருஞ்ஜோதியிடத்திற்கு,
அனுப்பவேண்டும். 


      மேலே கண்ட சட்டப்படி மாயைக்கும் அருட்பெரும்ஜோதிக்கும் 
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ,அந்த 
ஒப்பந்தப்படி இந்த உலகம் செயல்ப் 
பட்டுக்கொண்டு இருக்கிறது .இந்த 
ஒப்பந்தம் தெரியாமல் ,மனித உயிர்கள் 
மாயையின் கட்டுபாட்டில் வாழ்ந்து 
கொண்டு இருகின்றன.


    இந்த ஒப்பந்தத்தை கண்டு பிடித்தவர் 
வள்ளலார் .அந்த ஒப்பந்தத்தை மீறாமல்.மாயையின் பிடியில் இருந்து 
மாயையின் உதவியுடன்,அருட்பெருஞ்ஜோதியுடன் 
தொடர்பு தொடர்புகொண்டு,அருளைப் 
பெற்று தன்உடம்பை ஒளி உடம்பாக 
மாற்றிக் கொண்டு,தான் பெற்றதைப் 
போல் எல்லாஉயிர்களும்பெறவேணும்
எனறு ,அருட்பெருஞ்ஜோதியிடம்,
அனுமதிப்பெருகிறார் வள்ளலார் அனுமதிபெற்ற 
பின்தான் திருஅருட்பா ஆறாம் திருமுறையை எழுதுகிறார், 


    ஆறாம் திருமுறையில் அனைத்து 
உண்மைகளும் தெளிவாக எழுதி 
வைத்துள்ளார் வள்ளலார் .


    இதற்குமேல் படித்து தெரிந்து 
கொள்வது அவரவர் அறிவை 
சார்ந்ததாகும்,


    ஆணவம் என்பதுஅருட்பெருஞ்ஜோதியால்
ஆன்மாவில் பதிவு செய்து அனுப்பி 
வைத்ததாகும் .

  கன்மம் என்பது ,உயிர்கள் செய்யும் 
செயல்களால் ஆன்மாவில் 
பதிவதாகும் .


  மாயைஎன்பது ;-உயிர்களுக்கு 
அதன்விருபத்திற்கு தகுந்தாற்ப்போல் 
உடம்பு என்னும் வீடு கட்டிக் கொடுப்பதாகும்.


   கன்மம் என்னும் செயல்களும் .
மாயையால் கட்டிக் கொடுக்கப் 
பட்ட வீடு என்னும் உடம்பையும் 
எப்படி மாற்ற வேண்டும் என்பதை 
தெரிந்து கொள்வதுதான் வள்ளலார் 
காட்டிய சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்க கொள்கைகளாகும் .


    உலகம் தோன்றிய காலத்திலிருந்து 
வள்ளலார் காலம் வரை, உண்மைகளை யாரும் கூறவில்லை

    வள்ளலார் உலக உண்மைகளை 
தெளிவாக தெரியப் படுத்தியுள்ளார் .
அனைவரும் தெரிந்து,அறிந்து 
அருட்பெரும்ஜோதியின் அருளைப் 
பெற்று மரணமில்லா பெருவாழ்வு 
வாழ்வோம் .


அன்புடன் ;--கதிர்வேலு ,


    மீண்டும் பூக்கும் ;-