புதன், 28 மே, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை !

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை

வள்ளல் பெருமான் இறைவனால் வருவிக்க உற்றவர் ,ஏன் ? இறைவனால் வருவிக்க உற்றவர் என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகின்றார் .

அகத்தே கருத்துப்  புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும் அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.

என்று ஆறாம் திருமுறை அருட்பாவில்,வேண்டுகோள் பதிகத்தில் ஒன்பாதாவது பாடலில் பதிவு செய்து உள்ளார் .

இந்த உலத்தில் உள்ள மக்கள் அனைவரும்,கடவுள் யார் என்று தெரியாமலும,உயர்ந்த அறிவு படைத்த மனித வாழ்க்கையில்,மனிதன் என்பவன்  எப்படி வாழ வேண்டும் என்பது தெரியாமலும்  உண்மையை அறியாமலும்  அகம் கருத்தும் புறம் வெளுத்தும் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

மனிதர்களின் அறிவுக்கும் கருத்துக்கும், கண்களுக்கும்,அறிவியலுக்கும்,புலப்படாமல், தெரியாமல்,இருக்கும்   சொர்க்கம் ,நரகம்,வைகுண்டம்,கைலாயம்,போன்ற கற்பனைக் கதைகளை கற்பித்து மனிதர்களை நம்ப வைத்து மனிதர்களை அழித்து கொண்டு இருப்பதே ,அகம் கருத்து ,புறம் வெளுத்து இருபதாகும்.

மனித குலத்தை திருத்தவும்,மனிதன் மனிதனாக வாழ்ந்து,இந்த இகம் என்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டே,பரத்தில் உள்ள இறைவனின் அருளைப் பெற்று மரணத்தை வென்று,பேரின்ப வாழ்வு வாழ்ந்து ,மற்றம் உள்ள மனிதர்களும்  மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்பற்காகவே என்னை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதை,வள்ளல் பெருமான்  மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்.

மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டுமானால் அதற்கு உண்மையான மார்க்கம் (வழி ) வேண்டும் என்பதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' எனற ஒரு தனி அமைப்பை  தோற்று விக்கின்றார் ...அதாவது எதையும் சாராத புதிய தனி மார்க்கத்தை 18--7--1872,ஆம் ஆண்டு வடலூரில் தொடங்கி வைக்கின்றார் .

மேலும் இறைவனால் வருவிக்க உற்றேன் என்பதை ஆறாம் திருமுறை அருட்பாவில் ''நடராஜபதி மாலை ''என்ற தலைப்பில் 27,வது பாடலில் வள்ளல் பெருமான் பதிவு செய்துள்ளார் .

பேருற்ற உலகில் உற சமயமத நெறி எலாம்
பேய்ப் பிடிப்பு உற்ற பிச்சுப
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் முற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனித முறும் சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏறுற்ற சுகநிலை அடைந்திடப் புரித நீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில்
வேறு எண்ணற்க வென்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிக்குணாந்த பர நாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே ,

என்னும் பாடல் வாயிலாக தான் என்ன ? என்ன ? பணிகளை செய்ய வேண்டும் என்பதை இறைவன் சொல்லி ,அந்த செயல்களை எல்லாம் செம்மையாக செயல்படுத்த இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டவர் தான் வள்ளல்பெருமான் ஆவார்கள் .

இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் உண்மை அறியாது ,அளவில் அடங்காத சமய மத நெறிகள் சொல்லிய பொய்யான நெறிகளை கடைபிடித்து ,உண்மையான கடவுள் யார் ? என்பது தெரியாமல் பேய் பிடித்த குரங்குகள் போலும் .குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் போல் கடவுளை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டு உள்ளார்கள்.

அதுமட்டும் அல்ல உங்கள் கடவுள் பெரியது ! எங்கள் கடவுள் பெரியது !
என்று போட்டிப் போட்டுக் கொண்டு அதனால் சண்டையிட்டுக் கொண்டு நாட்டுக்கு நாடு போர் புரிந்து மனித சமுதாயம் அழிந்து கொண்டு உள்ளது .இப்படியே விட்டுவிட்டால் உலகம் ரத்த களமாக மாறிவிடும் .உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் அறிவு தெளிவு இல்லாமல் அழிந்தி விடுவார்கள்.

ஆகவே அவர்களை காப்பாற்ற வேண்டும் ,சாதி சமயம் மதம் போன்ற மூட கொள்கைகை பிடித்துக் கொண்டு ,அவர்கள் வீணாக அழிந்து விடுவார்கள் விரைந்து வேகமாக சென்று நீ அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் ..என்பிள்ளை யாகிய உன்னை இந்த வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்கின்றேன்.என்பதை ...உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி இறைவன் வள்ளல் பெருமானை அனுப்பி வைத்ததாக சொல்லுகின்றார் .

இறைவன் ஆணையை சிரமேற்க் கொண்டு வள்ளல்பெருமான் அவர்கள் மக்களைத் திருத்த புனிதமான சுத்த சன்மார்க்க நெறியைத் தோற்றுவித்து ,அதன் வாயிலாக மெய்ப் பொருளான உண்மைக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி  என்னும் உண்மைக் கடவுளாகும். அந்த உண்மைக் கடவுளை  மக்கள் அறிந்து தெரிந்து அருளைப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ வைக்க வேண்டும்.  சுகமான சுகநிலையை அடைய வேண்டும்.

இதுவே என்னுடைய ஆணையாகும் வேறு எதைப் பற்றியும் கவலைப் படாதே உனக்கு வேண்டிய எல்லா சக்திகளையும் உன்னுள் இருந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன் .எப்படி எனில் நீருற்ற நெருப்பின் உள்ளே நிறைந்து இருக்கும் ஒளியைப் போல் உன்னுள் இருந்து ஒளிர்ந்து இருளை அகற்றிக் கொண்டே இருப்பேன் என்பதை தெளிவாக மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார் நமது வள்ளல்பெருமான் .    

வள்ளலார் எழுதிய ஆறு திருமுறைகளின் தொகுப்பை சுருக்கி அதற்கும் மேல் சொல்ல வேண்டிய உலக படைப்புக்களையும்.பஞ்ச பூத இயக்கங்களையும்.உயிர்களின் தோற்றம் மாற்றம்.அணுக்களின் படைப்பு தன்மை சேர்க்கை.உயர்ந்த அறிவுள்ள மனிதன் மரணத்தை வெல்லும் ரகசியங்களையும்.மனித வாழ்க்கையின் முக்கியவத்தையும் .மேலும் மனிதன் தெரிந்து கொண்ட தெரிந்த கொள்ளாத .இன்றுவரை எவரும் அறியாத அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும்.

அருட்பெருஞ்ஜோதி அகவலில்  1596 வரிகளில் வெளிப்படுத்தி உள்ளார்.

திருஅகவலைப் படித்து உணர்ந்தாலே போதுமானதாகும்.     

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.   

திங்கள், 12 மே, 2014

சுத்த சன்மார்க்க கொள்கை !

சுத்த சன்மார்க்க கொள்கை !

சரவ சித்தி உடைய தனித்தலைமைப் பதியாகிய அருட்பெருஞ் ஜோதியை வேண்டி தபசு செய்து சிருட்டிக்குஞ் சித்தி என்னும் படைக்கும் தொழிலை பெற்றுக் கொண்டவன் பிரமம் என்னும் தத்துவமாகும்.அதற்கு பிரமன் என்னும் பெயர் வைத்துள்ளார்கள்.இந்த தத்துவம் தலை பாகத்தில் உள்ளது .

படைக்கும் தொழிலையும் ,காக்கும் தொழிலையும் செய்யும் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் விஷ்ணு என்னும் தத்துவமாகும்.அதற்கு விஷ்ணு என்னும் பெயர் வைத்துள்ளார்கள் .இவை தொப்புள் பாகத்தில் உள்ளது.

படைத்தல் ,காத்தல், சங்காரம் என்னும் அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் பெற்றுக் கொண்டவன் ருத்திரன் என்னும் சிவ தத்துவமாகும். இது அக்கினி என்பதாகும்.இது மூலாதாரத்தில் உள்ளது .

இந்த தத்துவங்களை கடவுள்களாக படைத்து உள்ளார்கள்
இவைகள் யாவும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.சமய மதங்களில் சொல்லியதை அந்த அந்த மதத்தை சமயத்தை பின் பற்றுபவர்கள் தெய்வங்களாக வணங்கி வழிபட்டுக் கொண்டு வருகிறார்கள்

இந்த மும் மூர்த்திகளுடைய தத்துவ சித்திகள் சர்வ சித்தி உடைய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் ,சித்திகளின் லேசங்கள்....அதில் ஏக தேசம்கூட அல்ல என்பதை வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்துகின்றார்.

இவர்கள் அந்தச் சர்வ சித்தியுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள்.ஆகையால் சமய ,மத தெய்வங்களை வழிபாடு செய்து,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் கொண்ட அவர்கள்,  அற்ப சித்திகளில் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து ,மேலே ஏற வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு,அந்தரத்தில் இருக்கின்றார்கள் அவர்கள் போல் நில்லாமல்,

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் ,அவர் ஒளியாக உள்ளார் என்றும், அவர் எல்லா உயிர்களையும் இயக்கும் மாபெரும் சக்தி படைத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் பேர் ஒளியாகும்.இதை மனித தேகம் படைத்த அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .

அவரை உண்மை அன்பால்,உண்மை தயவால் .உண்மை கருணையால் உண்மையான உயிர் இரக்கத்தால்,உயிர்களுக்கு உபகாரம் செய்து அருளைப் பெறவேண்டும் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு,உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு, என்பதை அறிந்து,உண்மை அன்போடு உயிர்களுக்கு கருணை புரிந்து, இறைவனிடம் பூரண அருள் சித்தியைப் பெற வேண்டும் என்றும்,அதுவே மரணத்தை வெல்லும் வழி என்றும் அறிந்து கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்க சங்கத்தவர் களுடைய கொள்கையாகும் இதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வள்ளல்பெருமான் வாயிலாக உலக மக்களுக்கு தெரிவித்து உள்ளார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேலு

வள்ளலார் அழைக்கிறார் !

அருட்பெருஞ்ஜோதி                                       அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங் கருணை                                   அருட்பெருஞ்சோதி  
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே 
எல்லாம் வல்லான் தனையே ஏத்து. 
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம் 
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார் 
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து .
வள்ளலார் அழைக்கின்றார் .7,ஆம் ஆண்டு உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநாடு ! மலேசியா !அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும்-- திருஅருட்பிரகாச வள்ளலாரும் !  

அகம் கருத்து புறம் வெளுத்து இருக்கின்ற உலக மாந்தர்கள் அனைவரையும் திருத்துவதற்க்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைத்தவர்தான்  வள்ளல்பெருமான் என்னும் அருளாளர் ஆவார் .அவர் வந்த நோக்கத்தைப் பற்றி அவர் திருகரத்தால் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்பதை திருஅருட்பாவின் வாயிலாக மெய்ப்பிக்கப் படுகிறது.

இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.அந்த சங்கத்தை வள்ளலார் தலைமை தாங்கி நடத்திக் கொண்டு வருகிறார் .

சங்கத்தின் வாயிலாக தனிமனித ஒழுக்கங்களான ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும்,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்பவைகளாகும்..இவை மரணத்தை வெல்லும் ஒழுக்கங்களாகும்.,அன்பு,தயவு,கருணை உயிர் இரக்கம்,ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் ஒருமையை கடைபிடித்தால்,இறைவனிடம் அருளைப் பெற்று ..மனித குலம் மரணத்தை வெல்ல முடியும் என்று பறை சாற்றி உள்ளார் .அதன்படி வாழ்ந்தும் வழிகாட்டி வாழ்ந்து கொண்டே உள்ளார் 

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செய்யும் ஐந்தொழில் வல்லபத்தையும் வள்ளல்பெருமானிடம் ஒப்படைத்து உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.உலக உயிர்த் திரள் எல்லாம் ஒளிநெறி பெற்றிட ..உயர்ந்த அருள் நெறியை பின்பற்றிட .மலேசியாவில் நடைபெறும் 7-ஏழாவது சுத்த சன்மார்க்க மாநாட்டில்--சன்மார்க்க அன்பர்களும் மற்றும் உள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ளவர்களும் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

சன்மார்க்கத்தில் தோய்ந்த அருள் அனுபவம் பெற்ற சன்மார்க்க சான்றோர்கள் ,தமிழ் நாட்டில் இருந்தும் மலேசிய நாட்டில் இருந்தும் வந்து அருள் உரை நிகழ்த்த உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சுத்த சன்மார்க்க சுகநிலை பெருக .உத்தமன் ஆகுக ஓங்குக ! என்று மாநாட்டுக் குழுவினர் அனைவரையும் மனதார உளமார வாழ்த்தி பாராட்டுகின்றேன்.அனைவரும் வருக ! அருள் நெறி பெருக !  

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக ! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை உலகம் எல்லாம் ஓங்குக ! வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க !

நிகழ்ச்சிகள் ;--
இடம் ;--கலா மண்டபம் ,பிரிக்பீல்ட்ஸ் / Kala Mandapam,Brickfields 
தேதி ;---4---10---2014,( சனிக்கிழமை ) காலை மணி 7-00,முதல் இரவு 10-00 மணி வரை .
 5---10---2014,( ஞாயிற்றுக்கிழமை) காலை 6-00. மணிமுதல் இரவு 7-00 மணி  வரை 
              
சனிக்கிழமை அன்று இரவு 7-00 மணி முதல் 10-00,மணி வரை திருவருட்பா இசை நிகழ்ச்சி நடைபெறும் தமிழ்நாடு,திருஅருட்பா இசைமணி திருக்கோவிலூர் ஜீவா சீனிவாசன் அவர்கள் குழுவினர் மிக சிறப்பான முறையில் மக்களை மகிழ்விக்க உள்ளார்கள்.நமது மலேசியத் திருநாட்டு அறிஞர்களும்,தமிழ்நாடு,இலங்கை,சிங்கப்பூர் ,மியன்மார் ,பிரான்ஸ் ,நாட்டு சான்றோர்களும் அளிக்கும் கேள்வி,பதில் விருந்தை சுவைத்து அனுபவிக்க அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.    
சுத்த சன்மார்க்கம் மேலேறும் வீதி,.. சுற்றம் நண்பர்கள் அனைவரும் வாரீர்,வாரீர் வாரீர் !
அன்பெனும் பிடியுள் 
Pusat Jagaan Vallalar
No,14,Lengkok Cumarasami 
4th mile,Jalan Ipoh,51200 Kuala Lumpur.
Contact;--Dr,Lalita Veeriah;--0060123160470.
Dr,Dinakaren;---012-639 1511. 
மகத்தான அரிய வாய்ப்பு ! திரளாக வாருங்கள் ! குறைந்த கட்டணம் ரி.ம,100.00. இருக்கைகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்.! நன்றி.வருங்காலம் பொற்காலம்,அது சன்மார்க்கிகள் கையில் உள்ளது .சிந்திப்பீர்.. செயல்படுவீர் . வந்தனம் .
அருட்பெருஞ்ஜோதி .தனிப்பெருங்கருணை !