செவ்வாய், 30 ஜூன், 2020

பசுவதை செய்வது தவறு !

****  சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது  .*****

முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள்…

பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை:
மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (கட்டணம் 22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (கட்டணம் 35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர். ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக்கேட்க அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே, இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது.
பசு மாமிச வியாபாரிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருவன:

1. பசுவை பாதுகாப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலுவடையும்.

2. பசுக்களுக்கு போதுமான வைக்கோல் மற்றும் புற்கள் போன்றவை போதாமல் அவை பசியில் இறப்பதை விட அவற்றை கொல்வதே நல்லது.
3. நமது நாட்டில் மனிதர்களுக்கே இடமில்லை, இதில் என்ன வசதி செய்து தர முடியும்.

4. நமது நாட்டிற்கு வெகுவான அயல் நாட்டு வருமானமானது பசு மாமிச ஏற்றுமதியிலேயே கிடைக்கும்.

5. மாமிசம் சாப்பிடுவது மதரீதியான உரிமை ஆகும்.

இவ்வாறாக பசு மாமிச வியாபாரிகளின் வாதம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டது.

ராஜு பாயின் பதில் வாதம்:-

நல்ல ஆரோக்கியதுடன் இருக்கும் பசுவானது சுமார் 3 முதல் 3.5 குவிண்டால் எடை இருக்கும். அதை கொன்றால் சுமார் 70 கிலோ எடை மாமிசம் கிடைக்கும்.  இதை கிலோ ரூ.50 என ஏற்றுமதி செய்வதால் கிடைக்கக்கூடிய தொகை ரூ.3500/-. பசுவின் இரத்தத்திற்கு கிடைக்கக்கூடிய தொகைரூ. 1500/- முதல் 2000/-. மேலும் 30 முதல் 35 கிலோ அதன் எலும்புகளுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.1000/- முதல் 1200/- ஆக மொத்தத்தில் ஒரு பசுவை வதம் செய்வதனால் ஒரு நாட்டிற்கு அல்லது வியாபாரிக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.7000/-.

ஒரு ஆரோக்கியமான பசுவானது ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம், 3 கிலோ கோமியம் தரக்கூடியதாகும். 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரிக்கலாம். இதனை நாம் இயற்கை (சேந்திரியா) உரம் என்போம். ஸ்ரீ ராஜூ பாய் அவர்கள் இவ்வாறு வாதிட்டு கொண்டிருக்கும் போது நீதிபதிகள் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அவர் இதை நான் நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதால் நீதிமன்றம் அனுமதி அளித்ததின்பேரில் திரு.ராஜூ பாய் அவர்கள் 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரித்து நீதிமன்றத்திற்கு அளித்தார். இதனை IRC  விஞ்ஞானிகள் பரிசீலித்து மிக உயர்ரக உரமாக அறிவித்தனர். இந்த உரமானது பூமிக்கு தேவைப்படுகின்ற மிகவும் சூச்சமமான 18 நன்மைகளை தரக்கூடியது என்றும் தெரிவித்தனர். இந்த நன்மைகளானவை பயிர் வளர்ப்புக்கு தேவையான மாங்கனீஸ், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், அயர்ன், சல்பேட், சிலிகான் போன்றவை உள்ளதாகவும் தெரிவித்தனர். சாதாரண ரசாயன உரங்களில் சுமார் 3 ரசாயனங்கள் இருக்கும் என்றும் இதனால் சாணம் மூலம் தயாராகும் இயற்கை உரத்தில் சாதாரண ரசாயன உரத்தை விட 10 மடங்கு வலிமையுள்ள மதிப்புக்குரியதாகும் என்று திரு. ராஜூ பாய் நிரூபித்து வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

திரு. ராஜூ பாய் அவர்கள் நீதிமன்றத்திற்கு ஆட்ச்சேயபனை இல்லையெனில் தங்கள் ஊருக்கு வந்து தானும் தன் குடும்பத்தாரும் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு எவ்வாறு உயர்ந்த ரக உரத்தை தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம் என்றும் அழைத்தார். மேலும் அவருடைய இந்த வாதத்தில் இந்த உரத்தில் 1 கிலோ உரமானது உலக சந்தையில் குறைந்தது ரூ.6/-என்றும் நினைத்தால் ஒரு பசுவானது ஒரு நாளைக்கு ரூ.1800/-லிருந்து ரூ.2000/-வரை வருமானத்தை ஈட்டி தருமென்றும் (33 கிலோ சாணத்திலிருந்து 330 கிலோ உரம் தயாரித்து அதை ரூ.6/-க்கு மதிப்பிட்டால் (330 x 6) மேலும் மேற்படி பசுக்களுக்கு ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை போன்றவை இல்லை என்பதால் வருடத்திற்க்கு அதாவது 365 நாட்களுமே இதனால் கிடைக்கக்கூடிய வருமானமானது 1800 X 365 = ரூ. 6,57,000/. இந்த வருமானங்கள் அனைத்தும் மாட்டு சாணத்தால் கிடைக்கக்கூடியவை.

திரு. ராஜூ பாய் அவர்கள் அளித்த இந்த கணக்கின் படி சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் மாட்டு தொழுவத்தில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறினார்கள் என்று சொன்னால் மேற்படி ஆதாயத்தை வைத்து தான்.  ஆனால் இதனை தொடர்ந்து கேலி செய்பவர்கள் பெரிய படிப்புகளை படித்தவர்களும், பல ஆண்டுகளாக பசு தொழுவத்தில் லக்ஷ்மி வசிப்பதாக கூறுவதை முட்டாள் தனம் என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் கூறி கொண்டு இருந்தவர்களும் இதை கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

பசு கோமியத்தின் மீது திரு. ராஜூ பாய் செய்த வாதம்:-

ஒரு பசுவானது ஒரு நாளைக்கு 2 முதல் 2.25 லிட்டர் கோமியம் வழங்கும் என்றும் இவை பலவிதமான நோய்களான வாதம், மதுமோகம், மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் என சுமார் 48 நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என உறுதியாகி இதன் மூலம் பல ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யபடுகிறது.

ஒரு லிட்டர் பசு கோமியமானது இந்திய சந்தையில் ரூ.500/-ஆகும். உலக சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகமாகும். இது அமெரிக்க நாட்டில் பாட்டேர்ன் (pattern) செய்யப்பட்டுள்ளது. பசு கோமியத்திற்கு 3 பாட்டேர்ன்கள் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிலிருந்து பசு கோமியத்தை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் நாட்டில் கேன்சர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரித்து வருகிறது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கோமியத்தின் தற்போதைய விலையானது ரூ.1200 முதல் ரூ.1300/-வரையாகும். இந்த கணக்கின் படி இந்த கோமியத்தின் ஒரு நாள் வருமானமானது ரூ.3000/- அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் (3000x365) = ரூ.10,95,000/- எனவே ஒரு பசு தனது ஆயுள் காலத்தில் தனது கோமியத்தின் மூலம் தரக்கூடிய வருமானமானது (3000*365*20) = ரூ.2,19,00,000/-. இந்த பசு கோமியத்தின் மூலமாக மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நாம் சமையலறை, வாகனங்கள், கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இந்த வாதத்தை நீதிபதிகளின் அமர்வில் ஒரு நீதிபதி நம்பமறுத்தார். உடனே திரு. ராஜூ பாய் அவர்கள் நீங்கள் அனுமதித்தால் உங்கள் காருக்கு நான் மீத்தேன் வாயுவை நிரப்புகிறேன். பின்பு அதை நீங்கள் சோதித்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டு தனது காருக்கு 3 மாதங்கள் மீத்தேன் வாயுவை செலுத்தி நடத்தினார். அப்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ. 50/- காசு முதல் ரூ.60/-காசு வரை செலவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கு முன் இவர் ரூ.400/-டீசலுக்கு செலவு செய்தார். மேலும் டீசல் போல இதில் புகையோ , இரைச்சலோ, சுற்றுப்புற சூழல் பாதிப்போ, இதில் இல்லை. எனவே நீதிபதி முழு திருப்தியடைந்து ராஜூ பாய் அவர்களின் வாதத்தை ஒப்புக்கொண்டார்.

ஒரு நாளைக்கு 10 கிலோ பசு சாணத்தால் எவ்வளவு மீத்தேன் தயாரிக்க முடியுமென்றும் அது 20 வருடத்திற்கு இந்த நாட்டிற்கு எவ்வளவு வருமானத்தை தருமென்றும் கணக்கிட்டு சமர்ப்பித்தார். இதன்படி நம் நாட்டிலுள்ள 17 கோடி பசுகளால் சுமார் 1,32,000/-கோடி பணம் ஈட்ட முடியும் என்று நிரூபித்தார். நமது பயணம் முழுவதும் மீத்தேன் வாயுவையே ஆதாரப்பட்டிருந்தால் நாம் அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் வாயுவை இறக்குமதி செய்ய தேவையில்லை.

இதேபோல் வெளிநாட்டிற்கு நமது செல்வத்தை செலவு செய்ய தேவையில்லை. உலக அளவில் நம் ரூபாயின் மதிப்பு கூடும், இது பசுவின் மூலமே சாத்தியமாகும். இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து திரு. ராஜூ பாய் சமர்ப்பித்த கணக்கில் அனைத்தையும் துல்லியமாக பரிசீலித்து அவரின் வாதத்தில் உள்ள உண்மையை அறிந்து கொண்டு பசு பாதுகாப்பின் மூலமாக நம் இந்திய நாட்டிற்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்குமென்று உறுதிசெய்தது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்மானித்தவுடன் பசு வதை செய்பவர்கள் சார்பாக பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மதரீதியான உரிமை என்று வாதிட்டனர். இதற்கு பதிலளித்த திரு. ராஜூபாய் அவர்கள் அப்படியானால் எத்தனை இஸ்லாம் மன்னர்கள் இந்த மதரீதியான உரிமையை பயன் படுத்த சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவ்வாறு சொல்லக்கூடிய இஸ்லாம் நூல்கள் எவை என்பதை கூறும்படி கேள்வி எழுப்பி இந்த கேள்விகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார்.

 அப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த அம்சங்களை பரிசீலிப்பதற்காக ஒரு விசாரணை குழுவை நியமித்தனர். இந்த கமிட்டியானது அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக பரிசீலித்து இஸ்லாம் மன்னர்கள் மற்றும் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள், இஸ்லாம் மத நூல்கள், பசு மாமிசத்தை சாப்பிடுவது பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இப்படி ஒரு உரிமை உள்ளதா, இல்லையா என்பதை பற்றியும் கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கமிட்டி வரலாற்று ரீதியான ஆவணங்களையும் மத நூல்களையும் பரிசீலித்து கொடுத்த முடிவுரையாவது:
நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் யாரும் பசு வதையை ஆதரிக்க வில்லை என்றும்,  ஒரு சில இஸ்லாமிய மன்னர்கள் பசு வதைக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள் என்றும் அவர்களில் முதன்மையானவர் பாபர் என்றும் அவர் தன்னுடைய பாபர் நாமாவில் பசு வதை தவறு என்றும் அத்தகைய குற்றத்தை இந்த நாட்டில் தான் இறந்த பிறகும் நடக்கக்கூடாது என்றும், தான் ஏற்படுத்திய பசு வதை தடுப்பு சட்டம் நடைபெறவேண்டும் என்றும் எழுதி  வைத்து, அவருடைய சந்ததி அனைவரும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் கூறி  உள்ளார் மற்றும் மன்னர் ஹூமாயூனும் அதே சட்டத்தை நிலைநாட்டினார்கள்.

அதன் பிறகு வந்த ஹிந்து சம்பிரதாயங்களை கொடூரமான முறையில் அடக்கி உடைக்கி அனைத்து விட்ட ஹாவ்ரங்க சீப் அவர்கள் கூட பசு வதையை எதிர்த்து அவரது முன்னோர்கள் ஏற்படுத்திய சட்டத்தை வழி நடத்தினார்.

அதே போல் தென்னிந்தியாவை ஆண்ட திப்பு சுல்தான் அவர்களின் தந்தை ஹைதரலி அவர்கள் பசுவதை செய்வோரை கண்டால் அவர்கள் தலையை துண்டிக்கும் படி கூறியதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட பலரை இந்த தண்டனையின் மூலம் பலியிட்டார். இதன் பின்பு அவரது மகன் திப்பு சுல்தான் மன்னரான பின்பு இந்த குற்றத்தின் தண்டனையான தலை துண்டிப்பை மாற்றி கைகளை துண்டிக்கும் படி இயற்றினார்.

 இவ்வாறு வரலாற்று ஆவணங்களை பரிசீலித்து விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை திரு. ராஜூ பாய் அவர்கள் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. அவர் தனது வாதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மத உரிமை என பசு வதைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடுபவர்கள் கூறுவது உண்மையென்றால் இஸ்லாம் மன்னர்களான  இந்த நாட்டை ஆண்ட பாபர், ஹோமையுன், மற்றும் ஹவுரங்கசீப் அவர்கள் கூட பசு வதை தடுப்புச் சட்டங்களை ஏன் அமல்படுத்தினர் என்று கேள்வியெழுப்பினார்.

 இதனை தொடர்ந்து திரு. ராஜூ பாய் அவர்கள் தனது இறுதி வாதத்தை முன் வைத்து உச்சநீதிமன்றம் அனுமதியோடு புனிதகுரான், ஹதீத், மற்ற இஸ்லாமிய நூல்கள், அனைத்தும் பசு வதை பற்றி என்ன கூறியுள்ளன என்று பரிசீலிக்க வேண்டுமென கூறினார். எந்த இஸ்லாமிய நூல்களும் பசு வதையை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் ஹத்திதுகள் பசுக்களை காப்பாற்றினால் அவை உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர், என தெளிவு படுத்தினர்.

 மஹத் அவர்கள் பசு என்பது ஒரு பரிதாபத்துக்குரிய பிராணி என்றும் அதன்மீது அனைவரும் பரிதாப உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் வாதிட்டார். திரு.முஹம்மத் அவர்களுடைய புனித வசனங்கள் பசுவை வதை செய்தவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்று கூறியுள்ளார். இவற்றையெல்லாம் குறிப்பிட்ட திரு. ராஜூ பாய் அவர்கள் தனது வாதத்தை முடிக்கும் நோக்கில் புனித குரானும், மொஹமத் வசனங்களும், ஹத்தித்குறிப்புகளும், பசு வதையை எதிர்க்கும் போது, பசு வதை எவ்வாறு இஸ்லாம் மத உரிமையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இங்கு பசு வதையை ஆதரித்து அது இஸ்லாம் மத உரிமை என்று வாதிடுபவர்கள் தான் குறிப்பிட்ட புனித நூல்கள் எதிலும் அவ்வாறு இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு கூறமுடியும் என்றும், இவர்கள் கூறுவதற்கு ஆதரவாக மெக்கா, மற்றும் மதீனாக்களில் வேறு ஏதேனும் நூல்களில் அவ்வாறு பசு வதை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளதா என்று காட்டும் படி கேட்டார். அவ்வாறு எந்த நூலிலும் இல்லையென்றும், இஸ்லாம் மத பெரியவர்களுக்கு ஏன் தெரியவில்லையென்றும் எனக்கு புரியவில்லையென்றும், வாதத்தை முடித்துக் கொண்டார்.

பசு வதைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற அமர்வு நீங்கள் வெறும் வாதங்கள் செய்தால் போதாது உங்கள் இஸ்லாம் மத நூல்களில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கூறும்படி கேட்க அவர்களால் எந்த நூல் குறிப்புகளையும் தர இயலவில்லை. உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு எந்த வழக்கின் மீது 26-10-2005-ல் தீர்ப்பினை வெளியிட்டது.
இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றம் வெப்சைட்டில் காணலாம். இந்த 66 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக கூறப்படுகிறது.

மொழி பெயர்ப்பு
வினோபா.

மிகவ

74 ஆம் ஆண்டு பிறந்தநாள் !

*74 ஆம் ஆண்டு பிறந்த நாள் !*

*அன்புடன் ஈரோடு கதிர்வேல்*.

அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்.

01-07-1947 ஆம் ஆண்டு இந்த உலகத்திற்கு வந்த  பிறந்த நாள் 01-07-2020 ஆம் நாள் அன்று *74* ஆம் ஆண்டு தொடங்குகிறது.

ஆன்மநேய அன்புடைய சகோதர சகோதரிகளின் அன்பினாலும்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாலும்*.

*மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளல்பெருமானின் வழி காட்டுதலாலும்*

என் மனைவி மக்கள் சுற்றங்களின் ஆதரவாலும்.
இன்றுவரை எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்ந்து வருகிறோம்.

*வள்ளல்பெருமான் பாடல்* !

அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
*ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்*

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை *நின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்*

செப்பாத மேனிலைமேல் *சுத்தசிவ மார்க்கம்*
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

*தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்*
*தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே*.!

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளேன்.

எப்போதும் போல் உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் இந்த ஆண்டும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

திங்கள், 29 ஜூன், 2020

இன்பம் துன்பம் என்றால் என்ன ?

*இன்பம் துன்பம் என்றால் என்ன ?*

இவ்வுலக மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் என இரண்டு வகை உள்ளது..

நாம் இன்பம் என்பதும்.துன்பம் என்பதும் இரண்டுமே துன்பம் தரும் வாழ்க்கைதான்.

மரணம் வராமல் வாழக்கூடிய வாழ்க்கை மட்டுமே இன்பம் தரும் வாழ்க்கையாகும்.

இவ்வளவு காலமாக வள்ளலார் சொல்லிய வண்ணம் ஜீவகாருண்யம் செய்தேன்.நிறைய சமரச சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்து அன்னதானத்திற்கு உதவிகள் செய்தேன் .ஜீவகாருண்ய செம்மல் என்ற பட்டமும் பெற்றேன்..

இறுதியில் மரணம் வந்து என் உயிரும் பிரியப்போகிறது .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை கைவிட்டுவிட்டார் என்று புலம்பிக் கொண்டு இருப்பதால் எந்த பயனும் இல்லை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மைக் கைவிட வில்லை.நாம்தான் ஆண்டவரை கை விட்டு விட்டோம்..என்பதை கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்...

*இறந்தவரை இந்த உலகம் போற்றினாலும் இறைவன் போற்றுவதில்லை.*.

சாகாதவனே சன்மார்க்க என ஆணித்தரமாக சொல்லி உள்ளார் வள்ளலார்.

ஆன்மாவின் உயிர்.உடம்பு பிறப்பும் இறப்பும் உண்டாவதுதான் பெரிய துன்பமாகும்...பிறப்பு இல்லாமல் வாழ்வதுதான் பெரிய இன்பம்...அதுதான் பேரின்பம் என்பதாகும்.

மீண்டும் இறப்பு பிறப்பு இல்லாமல் வாழ்வதற்குகாகவே உயர்ந்த அறிவுள்ள மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது..

இதை அறியாமல் நாம் சமய மதக் கொள்கைகள் சொல்லியவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சன்மார்க்கத்தையும் பிடித்துக் கொண்டு வாழ்வதால் தான் மரணம் வருகின்றது...

வள்ளலார் பாடல் !

முயன்று உலகில் பயன் அடையா  மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே

இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்

துயின்று உணர்ந்து தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்

பயின்று அறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே !

என்னும் பாடலிலே தெளிவாக விளக்கி உள்ளார்.

பலகாலம் முயன்றும் பயன் அடையாத மூடமான மதங்களின் கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு அழிந்து போகாதீர்கள்.

இப்போது உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் அருளாலே உலகத்தை மாற்றுவதற்காக.உலக மக்களைக் காப்பாற்றுவதற்காக. எழுந்து அருளல் இதுவே தருணம்.இவை தொடர்ந்து நடைபெறும்.

இறந்தவர்களையும் எழுப்பித் தருவார்.எனவே இனிமேலாவது நான் சொல்லுவதை கவனமாக கேட்டு வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளலார்...

நான் சொல்லும் படிப்பு அதாவது கல்வி.இதுவரையில் யாரும் படிக்காத படிப்பு.சொல்லித்தராத கல்வி.அதுதான் சாகாக்கல்வி என்கிறார்.

மேலும் சுகமும் துன்பமும் என்னவென்றே தெரியாமல் வாழ்க்கையை வீண் அடித்துக் கொண்டு உள்ளீர்கள்.இனிமேலாவது தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளுங்கள்.என்கிறார் வள்ளலார்.

பாடல் !

சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகில்
சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலரே

இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்தீர்
என் புரிவீர் மரணம் வரில் எங்குறுவீர் அந்தோ

அகம் அறியீர் அனகம் அறிந்து அழியாத ஞான
அமுதம் வடிவம் பெறலாம் அடைந்திடுமின் ஈண்டு

முகம் அறியார் போல்இருந்தீர் என்னை அறியீரோ
முத்தர் எலாம் போற்றும் அருட் சித்தர் மகன் நானே !

மேலே கண்ட பாடலில் தெளிவான தமிழில் அற்புதமாக தெரிவிக்கின்றார்.

ஒவ்வொருவரின் அகத்தில் உள்ள ஆன்மாவான உள் ஒளியைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று அந்த அருளை உடல் முழுவதும் (அனகம் ) பரவச்செயது ஊன உடம்பை அருள் ஒளி உடம்பாக (அமுதவடிவம் ) மாற்றிக் கொள்ளலாம். வாருங்கள் என அழைக்கின்றேன் .

என்னை அறியாதவர்போல் இருக்கின்றீர் நான் யார் தெரியுமா ? நீங்கள் எல்லாம் வாழ்த்தி வணங்குகின்ற சித்தர்கள் முத்தர்கள் எல்லோரும் போற்றும் அருட.பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்சித்தர் மகன் நான் என்பதை தெளிவுப் படுத்துகின்றார்..

நமது வாழ்க்கை !

நாம் ஆண் பெண் என்ற இரண்டு உருவங்களின் இன்பத்தில் தான் பிறந்தோம்.இன்பத்தில் பிறந்த நாம் இன்பம் அடைவது தானே நியாயம்.துன்பம் அடைவதற்கு என்ன காரணம்.?

நாம் இவ் உலகியலில் தோன்றியதில் இருந்து.உற்றவர்.பெற்றவர் மற்றவர் உடமைகள் உலகியலில் உள்ள சாதி.சமய.மதங்களின் கொள்கைகள் .பழக்க வழக்கங்கள் எல்லாம் நம்மைப் பற்றிக் கொண்டது அதுவே நமது அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளாக நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன.

அத்திரைகளை நீக்க வேண்டும் என்கிறார் வள்ளலார் அத்திரைகளை எப்படி நீக்குவது ?  அத்திரைகள் நீங்கினால் மட்டுமே ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும்.

ஆன்மாவின் திரைகள் நீங்கினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொள்வார்.

தாய் தந்தையின் அன்பு என்னும் இன்பத்தில் இணைந்து சுக்கிலம் தோன்றி உயிர் உடம்பு பிறந்தது போல்...ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் அன்பு என்னும் இன்பத்தில் இணைந்து இன்பம் அனுபவிக்கும் போது அங்கே அருள் சுரக்கும்..

அந்த அருளால் உடம்பும் உயிரும் அழிக்காமல்..ஒளியாக மாற்றம் அடையும்..பஞ்ச பூத அணுக்களால் தோன்றிய உடம்பும் உயிரும் அருள் உடம்பாக மாற்றப்படும்..

இதைத்தான் ஞான சரியை முதல் பாடலிலே தெரிவிக்கின்றார்...

ஞானசரியை முதல் பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து  ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு

 நனைந்து நனைந்து அருள் அமுதே நன்நிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்துது நாம்  வம்மின் உலகியலீர்
*மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்ணர்*

 புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என்கிறார்...

புனைந்து உரையேன் பொய் புகலேன் என்கிறார்..அதாவது மற்றவர் போல் உண்மையை மறைத்து சொல்லவில்லை.பொய்யான கற்பனைக் கதைகள் போல் சொல்லவில்லை.

என் உரிமை நாயகன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஆனந்த கண்ணீர் கொண்டு அனைந்தேன் .

அழியாத நன் நிதியாகிய அருள் அமுதைந வாரி வாரி வழங்கி என் உடம்பு முழுவதும் நனைந்து நனைந்து பொங்கி எழும் பொருட்டு நிறைப்பி விட்டார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமையும் புகழையும் நினைந்து நினைந்து.அதனால் கிடைக்கும் அருள் இன்பத்தை உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து.அன்பே நிறைந்து அனுபவித்தேன்.

அதனால் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றேன்..நீங்களும் அந்த மரணம் இல்லாப் பெருவாழ்வைப்  பெறலாம்..அதற்கு எந்த தடையும் இல்லை..வாருங்கள் வாருங்கள் என உலக மக்கள் அனைவரையும் அழைக்கின்றார்.

அருளைப் பெறுவதற்கு தடையாக இருப்பவை எவையோ அவை எல்லாம் நம்மிடம் இருந்து விளக்கிக் கொள்ள வேண்டும்..

எவை எல்லாம் உலக வாழ்க்கைக்கு நமக்கு சாதகமாக. உற்ற துணையாக இருக்கின்றது என்று நினைத்தோமோ .அவை எல்லாம் தடையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடலை பாருங்கள் !

புகுந்தருணம் இதுகண்டீர்  நம்மவரே நான்தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே

தகுந்த தனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே !

என்னும் பாடலில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

நம்மை படைத்தவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அவரிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதற்காகவே மனிதப் பிறவி கொடுக்கப்பட்டது..

இந்த உண்மைத் தெரியாமல் நம்மை அழித்துக் கொண்டு இருக்கும் பற்றை எல்லாம் பற்றிக் கொண்டு உள்ளோம்..

எனவேதான் பற்றிய பற்று அனைத்தும் விட்டு அம்பலத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்றிக் கொள்ள வேண்டும்..என்கிறார்..

எனவே தான் இடைவிடாது ஜீவ காருண்யமும் சத்விசாரம் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்.

ஜீவகாருண்யம் அன்பை பெறுவதற்கு... சத்விசாரம் அருளைப் பெறுவற்கு என்பதின் உண்மையை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

அவ்விசாரம்...பரம் அபரம் என்று இருவகையாக இருக்கின்றது.. இவற்றில் பரம் என்பது...பரலோக விசாரத்தை குறிப்பதாகும்.அபரம் என்பது இகலோக விசாரத்தை குறிப்பதாகும்.

சத்விசாரம் என்பது பரலோக விசாரத்தையே குறிக்க வந்தது..

தண்ணீரில் உள்ள பாசியை நீக்குவது போல் நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடி இருக்கிற திரைகளை நீக்க வேண்டும்.அந்த திரைகளை நீக்க அதிகமான அதிதீவிர  சுத்த உஷ்ணம் வேண்டும்.வேறுவிதமான உஷ்ணத்தால் நீக்க முடியாது.அந்த உஷ்ணம் எதனால் உண்டாகும் எனில்...

உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான ஆன்மாவைத் தொடர்பு கொண்டு..தோத்திரம் செய்கின்றதாலும்.தெய்வத்தை இடைவிடாது நினைக்கின்றதாலும் அதிக உஷ்ணம் உண்டாகும்.அந்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு திரைகள் ஒவ்வொன்றாக விலகும்..

இதுதான் துக்க நிவர்த்தி என்கிறார். வள்ளலார்.துக்கம் என்னும் துன்பம் நீங்கினால் இன்பம் தானே பொங்கும். அந்த இன்பம் தான் பேரின்பம்.அதுவே பேரின்ப வாழ்வு என்பதாகும்..மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்...

பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய்வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனகவடிவாகிப்

பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரியதாம் மணியே சிற்சபையின் மாமருந்தே
என்று உரைமின் தீமை எலாம்
தவிர்த்தே !

மேலே கண்ட பாலில் இன்பம் பெறுவதற்குண்டான வழியைச் சொல்லுகின்றார்.

தீமையை ஒழித்து.அருள் பெறும் நன்மை யைக் காட்டுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் கல்வியே சாகாக்கல்வியாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 19 ஜூன், 2020

மரணபயம் தவிர்த்த வாழ்க்கை !

மரணபயம் தவிர்த்த வாழ்க்கை.!

வள்ளலார் பாடல் !

அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே

கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே

எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே
எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே

சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

*உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் மரண பயத்துடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன*. மரணம் என்பது இயற்கையானது.ஆறிலும்  சாவு.நூறிலும் சாவு என்பது. என்றும் உள்ள வழக்கச் சொல்லாகும்.

*மரணம் வரும் என்பது தெரிந்தும்.மரண பயத்துடன் மனிதன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளான்*.

மரணத்தில் இரண்டு வகை உள்ளன. *இயற்கை மரணம்.செயற்கை மரணம்*.வயது முதிர்ந்து நோய்வாய்பட்டு உயிர் பிரிவதை இயற்கை மரணம் என்றும்.தற்கொலை செய்து கொள்வது. பலவகையான ஆபத்துகளால் அகால மரணம் வருவதை செயற்கை மரணம் என்றும் சொல்லப்படுகிறது.

மரணம் என்பது பலவழிகளில் வருகிறது.ஐந்து பூதங்களாலும்..கிரகங்களாலும்..கொலைக் கருவிகளாலும். பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலும்.கொரோனோ
வைரஸ் போன்ற அணுக்களாலும்.அணு ஆயுதங்களாலும்.உடம்பைவிட்டு உயிர்கள் பிரிந்து விடுகின்றன.

 *உடம்பை விட்டு உயிர் பிரிவதை மரணம் என்கிறோம்*. *மரணம் வருவதை எமன் வந்து உயிரைப் பறித்துவிட்டான்* என்பது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள செய்திகளாகும்*.

*எமன் என்பதை வள்ளலார் மறுக்கவில்லை.*

மரணம் தானாக வருவதில்லை.அஜாக்கிரதையாலும்.அறியாமையாலும் *செயற்கையால் மரணம் வருகிறது* என்கிறார் வள்ளலார்.

மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லா அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும்.செயற்கை வசதிகளையும் கொண்டு கண்டுபிடித்த உயர்ந்த  அறிவுள்ள மனிதன்.உடம்பைவிட்டு உயிர் பிரியாமல் இருக்கும் *அருள் அறிவியல்* உண்மையைக் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள்.

மரணத்தை வெல்லும் வழியை கண்டுபிடிக்க ஆன்மீக அருளார்களும்  அறிவியல் மேதைகளும் மற்றும் விஞ்ஞான வல்லுனர்களும் முயற்சி செய்து மரணத்தை வெல்லும் *சூழ்ச்சி* அறியாமல்.தோல்வியைக் கண்டார்கள்.

வள்ளலார் வந்துதான் மரணத்தை வெல்லும் வழியையும் அதன் சூழ்ச்சியும் கண்டுபிடித்தார்.எமன் என்னும் கூற்றுவன் தன்னை அனுகாமல் பயந்து ஓடும் வழியைக் கண்டுபிடித்து வாழ்ந்து காட்டியுள்ளார்.

அவற்றிற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும்.முத்தேக சித்தி என்றும். பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும்  பெயர் வைத்துள்ளார்.

உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் கொடுக்கப்பட்டதே மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வதற்கே என்பதை அழுத்தமாக ஆணித்தரமாக அறிந்து உணர்ந்து தெரிந்து வாழ்ந்து வழிக்காட்டி உள்ளார் வள்ளலார்.

*மரணத்தை வெல்லுவது என்பது ஏதோ மாயாஜால வேலை அல்ல*.

அணுக்களால் உருவான பின்னப்பட்ட ஊன  உடம்பை அருள் ஒளி உடம்பாக மாற்றுவதே மரணத்தை வெல்லும் வழியாகும்.

அருள் வழங்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.அவரைத் தொடர்பு கொள்ள நான்கு ஒழுக்கங்களை மனிதன் கடைப்பிடித்து வாழவேண்டும்.

*அவை இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்பவைகளாகும்*.

நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடிப்பவர்களை நோக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரிடையாக வந்து அருள் வழங்குவார்.

நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்து அருளைப் பூரணமாகப்பெற்று *மரணத்தை வென்ற ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே* !

வள்ளலார் பாடல் !

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி அருட்

சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!

என்னும் பாடலிலே.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரவு 12 மணிக்கு நேரிலே வந்து வள்ளல்பெருமானை எழுப்பு உள்ளத்திலே நுழைந்து கலந்து அருளை வழங்கி்.ஊன்  உடம்பை ஒளிஉடம்பாக மாற்றி எனக்கு என்றும் அழியாத *பேரின்ப நிதியாகிய அருளை* வழங்கியதை சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் ஆனந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளேன்.

எனக்கு அளித்தது மட்டும் போதாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என. *ஆன்மநேய ஒருமைப்பாட்டு* உரிமையுடன். பொது நோக்கத்தோடு விண்ணப்பம் செய்கிறார்.

மரணம் பயம் வராமல் இருக்க எமன்எனும் கூற்றுவனை நெருங்கவிடாமல் வாழ்வதே மனித வாழ்க்கையாகும்.

மரணபயம் வராமல் வாழவேண்டும்!

வள்ளலார் பாடல் !

கரணம்மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்

மரணபயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே

திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்
சித்திபுரம் எனஓங்கும் உத்திர சிற் சபையில்

சரணம் எனக் களித்து எனையும் தானாக்க எனது
தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.!

கடல் உலகம் வானம் போன்றவற்றை ஆளுகின்ற ஆதிபதிகளாக இருந்தாலும் மரண பயத்தோடு வாழ்வதால் எந்த பயனும் இல்லை.

பட்டம் பதவி புகழ் அதிகாரம் எல்லாம் புறம் புறத்தில் உள்ள இந்திரியங்கள் கரணங்கள் மட்டுமே மகிழ்ச்சி அடைகின்றது. அகத்தில் உள்ள ஆன்மாவோ.அகப்புறத்தில் உள்ள ஜீவன் என்னும் உயிரோ மகிழ்ச்சி அடைவதில்லை..

இந்திரியம்.கரணம்.
ஜீவன்.ஆன்மா என்னும் நான்கு ஒழுக்கங்களும் ஒன்றுசேர பூரணமாக முழுமைப் பெற்றால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து அருளை வழங்கி மகிழ்ச்சி அடைய செய்விப்பார்.

வள்ளலார் சொல்லி உள்ள இந்த உண்மை தெரியாமல் பலபேர் பலவிதமாக சொல்லி மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள். *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே துணையாக இருந்து அனைவருக்கும் நல்வழிகாட்ட வேண்டும்.*

எனவே எமனை நெருங்கவிடாமல்  மரணம்பயம் இல்லாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே  உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.கருணை

திங்கள், 1 ஜூன், 2020

தமிழகத்தின் முதன் முதல் மந்திரி !


இந்தியா சுதந்திரம் அடைந்த்தும் தமிழகத்தின் முதன் முதல் மந்திரி ஓமந்தூர் இராமசாமி அவர்கள்.

ஓமந்தூரார் என்று தனிப்பெயருக்கு உரிமையானவர்.

*ஓமந்தூரார்* பற்றி பலருக்கு தெரிவதில்லை!

 வரலாற்று முதுகலையில் முதுநிலைப்பட்டம் பெற்ற அனைவருக்குமே வியப்பு...
பலர் வரலாற்றை நாம் படிக்கின்றோம், இவர் வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையே ...

 தெரிந்து கொள்ளுவோம், இனியாவது ...

   அரசியல் தலைமைக்கு அவர் ஆகாது போனது ஒரு காரணமென்றால் மீதிக் காரணம் முழுக்கவே அவராகவே இருந்தார்!

  பதவி ஏற்ற அன்றைக்கே விளம்பரப் பிரிவை அழைத்து "நானும் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ஆகி விட்டேன்! ஒரு அரசு ஊழியனுக்கு என்ன செய்வீர்களோ அதை மட்டும்தான் எனக்கு செய்ய வேண்டும்" என்று சொல்லி விட்டார்! அதனாலேயே அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஒன்றோ இரண்டோதான் இருக்கிறது!
 விளம்பரப் பிரிவுக்கு அவர் சம்பந்தபட்ட படங்களை அவரிடம் காட்டி ஒப்புதல் பெற பயம்!
  பாராட்டு விழா, சைரன் வைத்த கார், போலிஸ் அணிவகுப்பு, விளம்பரங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை!  மாலை மரியாதை, அன்பளிப்புகள், பொன்னாடைகள் எல்லாவற்றுக்கும் தடா!

  பார்வையாளர்களுடன்  போட்டோவுக்கு போஸ் தருவது கிடையாது! அவ்வளவு ஏன், தட்டச்சர் சுருக்கெழுத்தில் எழுத உதவியாளர் எழுத இருக்கும் போது மட்டுமே தேவையிருந்தால் சந்திக்க அனுமதி! தனிமையாக சந்திக்க அனுமதியில்லை!

  அவ்வளவு பெரிய மெட்ராஸ் மாகாண முதல்வருக்கு (தற்போது உள்ள ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளடக்கிய ஆனால் திருவனந்தபுரம், ஹைதராபாத் இல்லாத இடம்) ஒரே போன்! அவர் அனுமதியோடே பேச வேண்டும்!
 மாகாண முதல்வருக்கு ஒரே கார்! அதற்கான பெட்ரோல் அலவன்ஸை ஏற்க மறுத்து தன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வைத்தார்!
 
 கல்கி, சின்னஅண்ணாமலை உள்ளிட்ட நாற்பது பிரபலங்கள் அவரை சந்தித்து அந்த ஒரு  பாராட்டு விழாவிற்காவது ஒப்புக் கொள்ள கெஞ்சினர்!

   "அரசு வீட்டில் குடியிருந்து கொண்டு, அரசு தரும் சம்பளத்தில் ஜீவிதம் செய்யும் அரசு ஊழியன் நான்! நான் பதவி விலகும் போது வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டார்! பதவி விலகியதும் கேட்டதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை!
    இத்தனை எளிமையான மனிதர் அந்தப் பதவிக்கான மரியாதையை விட்டுக் கொடுத்தாரா? அதுதான் இல்லை!

  மாகாண முதல்வர் என்பதாலே மாகாணங்களிலேயே முதன்முறையாக விமானம் வாங்கி "ஹனுமன்" என்றப் பெயர் சூட்டி டெல்லி பறப்பார்!
  அப்பாயின்ட்மென்ட் தந்திருக்கும் நேரத்தில் பார்க்காமல் காலதாமதித்தால் எழுந்து வந்து விடுவார்!
  ஒரு முறை மவுன்ட்பேட்டன் பிரபு "பத்து நிமிட காலதாமதத்துக்கு கோபித்துக் கொள்ளலாமா?" என்றார்!
"கோபம் ஓமந்தாரார் ராமசாமிக்கு, இல்லை சென்னை மாகாண முதல்வருக்கு" என்றார்! அடுத்த முறையிலிருந்து அங்கே அவருக்கு ராஜ உபச்சாரம்!
  பதவியின் மாண்பை காப்பாற்றியதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமென்று நினைக்கிறேன்!
 
500 நாட்களில் அவர் பதவி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளில் சில!

      இனி உண்டா இத்தனை சாதனை?

1) கோபுர சின்னத்தோடான வாய்மையே வெல்லும்  இலட்ச்சினை!
2) பாரதியார் பாடல்கள் நாட்டுடமை!
3) தமிழ் கலைக்களஞ்சியம் வடிக்க ஏற்பாடு!
4) பள்ளிகளில் திருக்குறள் பாடம்!
5) எல்லா பள்ளிகளிலும் காய்கறி தோட்டம்
6) முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கியது!
7) பூரண மது விலக்கு!
8) ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டம் (இந்தியாவுக்கே முன் மாதிரி! விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்)
9) மடாதிபதிகள் திருத்த சட்டம் (பதவியை விட்டுப்போக இந்த இரு சட்டங்களும் காரணமாயிற்று)
10) தேவதாசி முறை ஒழிப்பு!
11) இந்து சமய அறநிலைத்துறை சட்டம்!
12) ஹரிசன நல வாரியம்!
13) ஹரிசன ஆலயப்பிரவேசம்!
14) ஒரு லட்சம் கிணறுகள் தோண்ட மானியம்!
15) ஏரி, குளங்கள் ஆழப்படுத்தி, பயன் கொண்டு வர 1947ல்,19கோடியில் திட்டம்!
16) அரசியல் தலையீடற்ற சுதந்திர நிர்வாகம்!
17) வருவாய்துறை சீரமைப்பு!
18) நிலவரி பாக்கி வைத்துள்ள ஜமீன்தார் ஜப்தி நடவடிக்கை சட்டம்!
19) வீடூர் அனைக்கட்டு, பெரியாறு நீர் மின்திட்டம், துங்கபத்ரா திட்டம் என இன்னும் நிறைய!
20) முதன்முறையாக அரசுக்கு பொருளாதார ஆலோசகர் நியமனம்!

 சொல்லிக்கொண்டே போகலாம்! இடம்தான் போதாது!

ஐதராபாத்  நிஜாம் ஆளுமை கீழ்
ரஜாக்கர்கள் என்றால் யார்.
 
 அன்றைய ஹைதராபாத் சமஸ்தானம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து சேரும் அளவு நிலப்பரப்பு கொண்ட நாடு!
  ஒரு கோடியே அறுபது லட்சம் மக்கள் தொகை! இதில் 86 சதவீதம் இந்துக்கள்! தனி நாணயம், தனி ராணுவம், தனி அரசாங்கம் என ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி விட்டு தன்னிச்சையாக ஆண்டார் நிஜாம் மன்னர்...

  1937 யிலேயே, உலகின் புகழ்பெற்ற 'டைம்' அட்டைப் படத்தில் உலகின் பெரிய ஐந்தாவது பணக்காரர் என்று இடம் பெற்றார்!
  86 மனைவிகள், 216 மக்கட் செல்வங்கள்! 1948ல் தோல்வியுற்று, இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க வானொலியில் பேசிய போது "என்ன நடந்தது என்றே தெரியவில்லை, ரஜாக்கர் தலைவன் காசிம் ரஜ்வியின் கைப்பாவை ஆகிப் போனேன்!" என்று சொல்லி, இரண்டு லட்சம் அப்பாவி மக்களின் உயிர் பலியிலிருந்து தப்பித்துக் கொண்டார்!

  மத்திய அரசு அவருக்கு "ராஜ்யமுக்" என்ற விருதளித்தது!
   
 ரஜாக்கர்களும், தெலுங்கானா கம்யூனிஸ்ட்டுகளும் சென்னை மாகாணத்தின் எல்லையை தாக்கப்போவதாக 1948 ஒருநாள் இரவு பத்துமணிக்கு ஓமந்தூராருக்கு தகவல் வந்தது!

  ஓமந்தூரார் துளியும் யோசிக்கவில்லை, அடுத்த ஒரே மணி நேரத்தில் எட்டு இராணுவ விமானங்களை எல்லைப்பகுதிக்கு அனுப்பினார்!

 ஆடிப்போனார்கள் ரஜாக்கர்கள்! நிஜாம் உடனடியாக மத்திய அரசுக்கு கடும் ஆட்சேபனைகளை எழுப்பினார்!

  யாருடைய உத்தரவில் விமானங்கள் போனதென அமைச்சரவைக் கூடி கவலையோடு விவாதித்தது!

 பட்டேலுக்கு முழு உண்மை தெரியும்! நேருவுக்கும் புரிந்திருந்தது! ஆக்ரோஷமான விவாதத்தில் பட்டேல், ரஜாக்கர் சதிச் செயலை சொல்லி தாம்தான் இராணுவ விமானங்களை அனுப்பியதாக சமயோசிதமாக சொன்னார்! நேருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை!

  கொலைகளும், கொள்ளைகளுமாக சமஸ்தானம் அதகளப்பட்டுக் கொண்டிருந்தது!

  இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவையும் காந்தியையும் எப்போதும் பிடிக்காத வின்ஸ்டன் சர்ச்சில், ஹைதராபாத் மக்கள் படுகொலையையும், நிஜாமின் செயல்பாடுகளையும் ஆதரித்து பேசினார்!

  வெகுண்டெழுந்த ஓமந்தூரார் அண்டை மாகாண முதல்வர் என்ற முறையில் நீண்ட கண்டனக் கடிதம் எழுதி கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டனுக்கு அனுப்பினார்!

  மவுன்ட்பேட்டன் குறிப்பிட்ட காலத்துக்கும் முன்பே ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும்பினார்! முதல் இந்திய கவர்னர் ஜென்ட்ரலாக பதவியேற்ற பெருமை தமிழர் ராஜாஜிக்கு கிடைத்தது!

 ராஜாஜி பொறுப்புக்கு வந்தது ஓமந்தூராருக்கு யானை பலம் தந்தது!

  1948 பிப்ரவரியிலிருந்தே உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஓமந்தூரார் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வந்தார்!

 கர்நாடக பெல்லாரி மாவட்ட ஹாஸ்பட் ரயில்வே பாலத்தை ரஜாக்கர்கள் தகர்க்கப் போகிறார்கள் என்றத் தகவல் ஓமந்தூராருக்கு கிடைக்கவே தீவிரமாக பாடுபட்டார்!

 அந்தப் பாலம் தகர்க்கப்பட்டால் சமஸ்தானம் தனித் தீவாகி விடும்!

 சென்னை அரசாங்க ரிசர்வ் படையும் மைசூர் காலாட்படையும் இரவுபகலாக ஓமந்தூரார் ஆனைக்கிணங்க காவல் காத்தது!

இந்தியாவின் நாணயத்தை சமஸ்தானம் தடை செய்தது, தேசியக்கொடி பறக்க தடை விதிக்கப்பட்டது!

 இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லையென்றாலும், மைசூர், பம்பாய் மாகாணங்களையும் சேர்த்துக்கொண்டு சமஸ்தானத்தின் மேல் படையெடுக்க ஓமந்தூரார் முடிவெடுத்தார்!

 அப்போதுதான் எல்லை பாதுகாப்புப் பணியிலிருந்த சென்னை அரசாங்க போலிசார், ரஜாக்கர்களிடம் இருப்பது போன்ற நவீன ஆயுதங்கள் தங்களிடம் இல்லாமல் எப்படி தாக்க முடியும் என்றார்கள்!

  நிஜாம் ஆஸ்திரேலியாவிலிருந்து நவீன ஆயுதங்களை தருவித்திருந்தார்! அதை ஓமந்தூராரும் உளவறிந்து மத்திய அரசுக்கு தகவல் சொல்லியிருந்தார்! வழக்கம் போல் மத்தியஅரசு கண்டு கொள்ளவில்லை!

 ஆயுதம் இல்லாமல் எப்படி போரிடுவது என்று யோசித்த ஓமந்தூரார் செயல்கள்தான் அவரை நிஜ ஹீரோ ஆக்குகிறது!

 தன் யோசனைக்கு மத்திய அரசு தடைதான் விதிக்கும் என்பதை அறிந்திருந்த அவர், பட்டேலிடம் கூட மூச்சு விடவில்லை!

 பெரம்பூரில் அப்போது ஒரு சாதாரண ரயில்வே தொழிற்கூடம் இருந்தது! அங்கு பணியாற்றிய நடராஜன் என்பவர் நாட்டுத் துப்பாக்கி செய்வதில் பயிற்சி பெற்றவர்!

 அவரை அழைத்தார் முதல்வர்! அவரிடம் ஆஸ்திரேலிய துப்பாக்கியை தந்தார்! ஒரே நாளில் அதன் நுட்பங்களை நடராஜன் பிரித்து மேய்ந்து கண்டு வந்தார்!

 துணிச்சலாக ஓமந்தூரார், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஒதுக்குகிறேன், இரவுபகலாக துப்பாக்கிகள் தயாரியுங்கள் என்று உத்தரவு போட்டார்!

 1945ல் டெக்ஸ்டூல் ஆலைக்கதிர் தொழிற்சாலை கோயம்புத்தூரில் செயல்பட ஆரம்பித்திருந்தது! அதன் உரிமையாளர் சுந்தரம் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்! அவரிடம் பேசி, அந்த ஆலைக்கு அனுமதி தந்து இயந்திர துப்பாக்கிகள் செய்ய வைத்தார்!

பாரதியாரின் கவிதைகளை நாட்டுடமை ஆக்கியவர் அல்லவா! தேசிய மகாகவியின் "வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்" பாடல் அவருக்கு மனப்பாடம்! அதில் வரும் "ஆயுதம் செய்யோம், கல்விச்சாலைகள் செய்வோம்" அவர் நினைவிலிருந்தாலும் சூழ்நிலை ஆயுதமும் செய்வோம் ஆக்கியது!

 செய்தியறிந்த நேரு, உடனே ஓமந்தூராரை கூப்பிட்டார்! ஆயுதங்கள் செய்ய யார் அனுமதியளித்தது என்று ஆவேசப்பட்டார்!

  இம்முறை ஓமந்தூரார் கோபப்படவில்லை! "என் மாகாண மக்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை! அப்பாவிகள் உயிர்பலியை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! இப்போது நான் உங்களிடத்தில் வந்திருப்பது ஆயுதம் தயாரிக்கும் அனுமதிக்காக அல்ல! ஆயுதம் தயாரிக்கும் நிதியுதவிக்காக! விரைந்து தந்தால் நலமாகயிருக்கும்!"

  பண்டிட்ஜிக்கு கோபம் மறைந்து போனது! ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதராக ஓமந்தூராரின் யதார்த்த பேச்சைக்கேட்டு புன்னகைதான் வந்தது!
 
      அப்படி ஒன்றும் உடனடியாக ஹைதராபாத் பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடவில்லை!
     ஓமந்தூரார் வற்புறுத்தலிணங்க ராஜாக்கர்கள் படையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசு எச்சரிக்கை தரவே 1948 ஏப்ரல் மாதத்திற்கு மேலாகியிருந்தது!
   இதற்குள் ஒரு லட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனர்! பல்லாயிரம் கோடி சொத்துகள் சூறையாடப்பட்டிருந்தது!
  இந்திய அரசின் எச்சரிக்கைக்குப்பிறகு இன்னும் நிலைமை மோசமானது! ஐம்பது லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் சமஸ்தானத்தை விட்டு வெளியேறி இருந்தனர்!
      நிலைமை மோசமாவதைப்பார்த்த நேரு, ஹைதராபாத் மேட்டரையும், காஷ்மீர் சங்கதி போல் ஐ.நா.சபைக்கு கொண்டு போய் விடலாம் என்றார்!
   வெகுண்டெழுந்தார் பட்டேல்! நேருக்கு நேராக நேருவிடம் சண்டைக்குப் போனார்! இந்திய அரசாங்கத்தையே ஐ.நா.சபையிடம் ஒப்படைத்து விடலாமே என்றார்! கோபம் கொண்ட பிரதமர், 'நீங்கள் மதவாதி! அப்படித்தான் பேசுவீர்கள்' என்றாராம்!

   கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் நேருவின் யோசனைக்கு ஒப்புக் கொள்ளாததோடு, இருவரையும் சமாதானப்படுத்தினார்!
  மாதங்கள் ஓடியது! இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சம் ஆனது! பாகிஸ்தானிலிருந்து விமானங்களில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதை ஓமந்தூரார் சொல்லிக் கொண்டேயிருந்தார்!
  சமஸ்தான நிர்வாகக் குழுவிலிருந்த ஜோஷி அதை உறுதி செய்த பிறகே நேருவுக்கு பயம் வந்து போர் தொடுக்க ஒப்புக்கொண்டார்!
  நேரு ஒப்புக்கொண்டதற்கு வேறு காரணமும் சொல்கிறார்கள்!
  காஷ்மீரைப் போலவே, கன்னியாஸ்திரிகளை சூறையாடிய சம்பவமும் ஹைதராபாத்தில் நடந்தது! அதில் 70வயது மூதாட்டியும் ஒருவர்! அந்த மூதாட்டியின் தாய்நாட்டு தூதர் நேருவுக்கு எழுதிய கடுமையான கண்டனக் கடிதமே நேருவை படையெடுப்புக்கு சம்மதிக்க வைத்ததாக சொல்கிறார்கள்!

                   போர்!

 ஓமந்தூரார், ஆயுதங்கள் தயாரித்ததை பட்டேல் மென்மையாக சொல்லி தவிர்த்தார்!

  தயாரித்திருந்த ஆயிரம் துப்பாக்கிகளை இந்திய அரசுக்கு தந்து விட்டு ஓமந்தூரார், "புற்று நோயை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து" என்று கசப்போடு சொன்னார்!

   1948 செப்டம்பர் மாதம்13ந் தேதி பம்பாய் மாகாண சோலாப்பூரிலிருந்தும், சென்னை மாகாண கர்நூலிலிருந்தும், விஜயவாடாவிலிருந்தும் இந்தியப் படைகள் சமஸ்தானத்தை தாக்கத் துவங்கின!

 இதுதான் ஏற்கெனவே ஓமந்தூரார் வகுத்துத் தந்திருந்த திட்டம்!

  17ந் தேதியே சமஸ்தானப் படைகள் சரணடைந்து விட்டன! 32 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டாலும், 490 நிஜாம் வீரர்களும், 1373 ரஜாக்கர்களும் கொல்லப்பட்டனர்!

  *ஆபரேசன் போலோ*  ஐந்தே நாட்களில் சக்சஸ்! தற்காலிக கவர்னராக ஜெனரல் செளத்திரி பொறுப்பேற்றுக்கொண்டார்!

  வலிமையான பாரதம் மட்டும் உருவாகவில்லை, நிஜாமின் திரண்ட சொத்துகளும் இந்தியாவுக்கு சேர்ந்தது!

 அண்மையில் கூட லண்டன் வங்கியிலிருக்கும் நிஜாமின் 350 கோடி ரூபாய் சொத்து இந்திய அரசுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட்  தீர்ப்பு சொன்னது!

  டெல்லி ரிசர்வ் வங்கி காப்பகத்திலிருக்கும் நிஜாமின் நகைகள் மதிப்பு ஐம்பதாயிரம் கோடி!

 கோல்கொண்டா கோட்டை, கிருஷ்ணா கோதவரி நதிகள் என எல்லாமே இந்தியாவுக்கு சொந்தம்!
 சொத்துக்களும் நிலங்களும் கிடக்கட்டும்! இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமையும், சமாதானமும், வளர்ச்சியும் தேசம் ஒன்றுபட்டதாலே கிடைத்தது!

ஓமந்தூர் ராமசாமி மட்டும் இல்லையென்றால் இந்திய வரைப்படம் மாறியிருக்கும்,

  எல்லாப்புகழும் அந்த ஒற்றை நாடி மனிதரையே சேரும்! கதர் தொள தொளா ஜிப்பா, நாலு முழ வேட்டி, கதர் அங்கவஸ்திரம், இரண்டு இட்லி, கப்அளவு சாதம், கொஞ்சூண்டு துவையல், மோர் என்று வாழ்ந்த மனிதனின் புகழை என் ஆயுள் உள்ளவரை சொல்லலாம்!

  பட்டேல்தான் வெற்றிக்குப் பிறகு, ' _புற்று நோயை வேரடி மண்ணோடு கிள்ளி எறிந்தவர் *ஓமந்தூரார்*_' என்று புகழ்ந்தார்!

    தனது தேச வரலாற்றை அறியாதவனை குடிமகனாக கொண்ட நாடு தலைநிமிர்ந்து நிற்ப்பதில்லை.

*அறிந்து கொள்வோம்*