புதன், 23 பிப்ரவரி, 2022

நித்திய துறவு !

 *நித்திய துறவு !*


*தாவரம் ஊர்வன பறப்பன நடப்பன அசுரர் தேவர் இறுதியாக மனித பிறப்பு ஏழாவது வகை பிறப்பாகும்* 


*நல்லது கெட்டது.நன்மை தீமை. நல்வினை தீவினை.பேசும் திறன்.கேட்கும் திறன். கொடுப்பது வாங்குவது மற்றும் உண்மை உணரும் திறன்.செயல்படும் திறன். மரணம் எதனால் வருகிறது  மரணம் இல்லாமல் வாழ்வது எவ்வாறு. இவையாவையும் அறிந்து கொள்ளும் அறிவு பெற்றதால் மனிதனுக்கு மட்டும் உயர்ந்த அறிவு பெற்ற மனிதபிறப்பு என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது.* 


*மேலும் இயற்கை உண்மை கடவுள் யார்? என்பதை தெரிந்து கொள்ளும் அறிவும் ஆற்றலும் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு*


பெரியோர்கள் வாக்கு !


*மேலும் மனிதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தவாறு சொர்க்கம்.நரகம்.வைகுண்டம் கைலாயம்.பரலோகம். பரந்தாமம்.சத்தியலோகம் போன்ற இடங்களுக்கு ஆன்மாக்கள் அதனதன் செயலுக்குத் தக்கவாறு  செல்லும் என்பதை ஆன்மீக துறவிகள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.*


*மேலும் பாவம் புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு அடுத்த பிறவிகள் எடுத்துக்கொண்டே இருக்கும் என்னும் கருத்துக்களையும். வேதம் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் போன்ற கற்பனை கதைகளின் வாயிலாகவும்.தத்துவ சிற்பங்களின் வாயிலாகவும் சொல்லி உள்ளார்கள்.*


*நித்திய துறவு !*


*ஆன்மாவை தெரிந்துகொள்ளவும் இறைவனை தொடர்பு கொள்ளவும் இல்லறத்தில் ஈடுபாடு உடையவர்களால் ஆண்டவரை  அறியமுடியாது. தொடர்பு கொள்ள முடியாது.அருள்பெறமுடியாது என்றும். வாழ்க்கையில் பேரின்ப சித்திப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழவே முடியாது என்றும் சொல்லி வைத்து உள்ளார்கள்.*


*துறவறம் பெற்று (சந்நியாசம்) வாழ்பவர்களால் மட்டுமே இறைவனைத்  தொடர்புகொள்ளமுடியும் என்றும் இறை அருளைப் பெற்று பேரின்ப லாபத்தை அடையமுடியும் என்றும். ஆன்மீக பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்* 


*அதனால் ஆன்மீகவாதிகள் என்றாலே துறவு கோலம் பூண்டவர்கள். காவி உடை அணிந்தவர்கள். சந்நியாசம் பெற்றவர்கள் என்னும் பழக்க வழக்கங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்று மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.*


*மேலும் பெண்களுக்கு அருள் பெறும் வாய்ப்பும் ஞானம் அடையும் வாய்ப்பும் கிடைக்காது என்றும்.கோயிலின் மூல ஸ்தானத்தின் உள்ளே பெண்கள் செல்லக்கூடாது என்றும் பெண்கள் தத்துவக்கடவுள் சிற்பங்களுக்கு அபிஷேகம் ஆராதணை செய்யக்கூடாது என்றும் சொல்லி வைத்துள்ளார்கள்* *ஆண்கள்தான் பூசகர்களாக உள்ளார்களேத் தவிர பெண்கள் பூசகர்களாக இன்றுவரை எவரும் இல்லை*


*ஒவ்வொரு ஊரில் உள்ள ஆலயங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் அந் நிகழ்ச்சிகளுக்கு ஆண்கள்தான் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்கிறார்களேத் தவிர பெண்களுக்கு முன்னுரிமை இன்றுவரை தருவதில்லை*.

*ஆன்மீகத்தில் இன்றுவரை ஆண்கள் ஆதிக்கமே சிறந்து விளங்குகிறது* *அதுவும் துறவிகள் என்றால் அவர்களை தெய்வங்களாக பாவித்து வணங்கி வழிபாடு செய்துவருகிறார்கள்.* 


*இதில் வள்ளலார் முற்றிலும் வேறுபடுகிறார்* 


*துறவிகள் என்றால் யார்? என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகிறார்*


நித்தியத் துறவு ! 


*நித்தியத் துறவு என்பது ! அறம் பொருள் இன்பம் வீடு இந்த நான்கையும் நித்தியம் 4 நான்கு காலங்களிலும் செய்து அனுபவித்துப் பின்பு பற்றுஅற்று இருப்பதே "நித்தியத்தை" அடைவதற்கு ஏதுவாக இருக்கும் என்கிறார்.* 


*நித்தியம் என்பது நம்மை படைத்த கடவுளைக் குறிப்பதாகும்.*


*கடவுளைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை வள்ளலார் மிகவும் தெளிவாக சொல்லி உள்ளார்.*


*இல்லறத்தில் ஈடுபாடு கொண்டு அறத்துடன் (ஒழுக்கத்துடன்) வாழ்ந்து நியாயமான முறையில் பொருள் ஈட்டி.*

*அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்துவிட்டு ஆனந்தம் அடைவதாகும். அதாவது (ஆனந்தம் என்பது சதாகாலமும் சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷிப்பித்துத் தான் அதிசயம் இன்றி நிற்றல்)  ஆன்ம இன்ப லாபத்தை அடைவதாகும். ஆண்டவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால்* *ஆன்மா ஆன்ம இன்ப லாபம் பெற்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும்*


*இதைத்தான் வள்ளலார் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்*


*அறம் என்பது இந்திரிய ஒழுக்கம்*


*பொருள் என்பது கரண ஒழுக்கம்*


*இன்பம் என்பது ஜீவ ஒழுக்கம்*


*வீடு என்பது ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.*


*மேலே கண்ட நான்கையும் நான்கு காலங்களில் முழுமையாக முறையாக செய்து அனுபவிக்க வேண்டும்.பின்பு அனுபவித்து விட்டோம் என்ற மனநிறைவோடு. அவற்றின் மீது விருப்பம் இல்லாமல் பற்று அற விட்டு இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வதே சிறந்த செயலாகும்.* 


*அவ்வாறு தொடர்பு கொள்வதால் ஆண்டவரிடம் அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆகலாம் என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்*


*சந்நியாசமும் காவி உடையும்.!*


*மூன்று ஆசைகளில் விசேஷம் பற்று உள்ளவர்களாகித் தயவு இல்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்று கொள்ள வேண்டும்.மேற்படி குற்றம் அற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை*


*சந்நியாசி காவி வேட்டி போடுவதற்கு நியாயம்.கடின சித்தர்கள் ஆகையால் தத்துவ ஆபாச உள்ளது.*


*தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி.அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி உடையாகும்.*


*வெற்றியான பிறகு அடைவது தயவு.ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை.தயவு வெள்ளை என்பதற்கு நியாயம்.தயவு என்பது சத்துவம்.சத்துவம் என்பது சுத்தம் சுத்தம் என்பது நிர்மலம்.நிர்மலம் என்பது வெள்ளை வரணம்.வெள்ளைஎன்பது ஞானம். ஞானம் என்பது அருள்.அருள் என்பது தயவு.தயவு என்பது காருண்யம்.* 


*எனவே ஜீவ காருண்யமே முதன்மையானதாகும்*


மேலே கண்ட செய்தியை ஊன்றி படிக்க வேண்டும்.


*தயவில்லாத கடின சித்தர்களாகிய காவி உடை அணிந்த சந்நியாசிகள் ஜீவகாருண்யம் செய்ய வாய்ப்பில்லாதவர்கள் துறவிகள. ஆகையால் அவர்களுக்கு அருளைப் பெறும் வாய்ப்பு  குறைவாக உள்ளது என்கிறார்*.


திருவள்ளுவரும் சொல்கிறார்.


*இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை!** 


*துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை !* 


என்று இல்வாழ்க்கை என்ற தலைப்பில் தெளிவாக சொல்லுகிறார்.


*தயவுடைய இல்லறவாசிகள் சந்நியாசிகளுக்கும் (துறவிகள்) எழைகளுக்கும் இறந்தவர்களுக்கும் துணையாக இருக்கின்றார்கள்.* 

 *இல்லறவாசிகள் ஜீவகாருண்ய வல்லபத்தால்.  அன்பும் அறிவும் விளங்கி உலக பற்று இல்லாமல் வாழ்ந்து  அருளைப்பெற்று மரணத்தை வெல்லலாம் என்பதே சத்தியமான உண்மையாகும்.*


*எனவே நித்திய துறவு என்பது அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கையும் நான்கு காலங்களில் அனுபவித்து பின்பு பற்றிய பற்று அனைத்தையும் பற்று அற விட்டு இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு அருளைப்பெறுவதே நித்திய துறவறமாகும்.*


*வள்ளலார் பாடல்!*


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை


எற்றி நின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழி கொண்டு உலகீர்


*பற்றியபற் றனைத்தினையும்* *பற்றறவிட் டருளம்*

*பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!* 


*எனவே சந்நியாசம் பெற்று துறவறம் செல்வதை விட இல்லறவாசிகளான சுத்த சன்மார்க்கிகள் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒத்து உரிமையுடன் ஜீவகாருண்யம் செய்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்மீது  அளவில்லா அன்பும் பற்றும்  கொண்டு வாழ்ந்தும் அருளைப்பெறுவதே நித்திய துறவாகும் என்கிறார் வள்ளலார்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

முத்தேக சித்தி !

 *முத்தேக சித்தி !* 


*உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் இறைவனால் கொடுக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷமாகும்.   மனிதன் உலக வாழ்க்கையில் ஈடுபாடுகொண்டு உண்மை. நேர்மை.சத்தியம் ஒழுக்கத்தை கடைபிடித்து அறம் .பொருள். இன்பம். வீடு என்னும் நான்கையும் நான்கு காலங்களில் முழுமையாக பெற்று அனுபவித்து பின்பு பற்று அற விட்டு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டுவதே மனித இயல்பாகும்.*


*இறைவனிடம் சரணாகதி அடைந்த மனிதனுக்கு இறைவனுடைய அருள் தகுதிக்குத் தகுந்தவாறு தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது சத்தியம்* 


*அருள் பெறும் மனிதர்களுக்கு அருள் சக்தியின் தன்மைக்குத் தகுந்தவாறு  மனித தேகத்திற்கு மூன்று வகையான சத்தியும் சித்தியும் ஆனந்தமும் கிடைக்கும்.மேலும் அவற்றிற்கு உண்டான மாற்றங்கள் ஒவ்வொரு உடம்பின் அணுக்களுக்கும்  உள் ஒளியுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் ஆற்றல் வழங்கப்படுகிறது*


*அதாவது அவ்வாறு அருள் வழங்குவதால் மாற்றம் அடைந்த தேகத்திற்கு ஏக தேசமான சுத்ததேகம் பிரணவதேகமும்.அருள் பூரணத்தால் ஞானதேகமும் என மூன்று வகையான தேகம் கிடைப்பதாக வள்ளல்பெருமானால் சொல்லப்படுகிறது*


*வள்ளலார் பாடல்!!!*

*(அகவல்)*


கருமசித் திகளின் *கலைபல கோடியும்*

அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி! 

122. யோகசித் திகள்வகை *யுறுபல கோடியும்*

ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி!

123. ஞானசித் தியின்வகை *நல்விரி வனைத்தும்*

ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி!*

124. புடையுறு சித்தியின் பொருட்டே *முத்தியை*

அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி!

125. முத்தியென் பதுநிலை *முன்னுறு சாதனம்*

அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி!

126. சித்தியென் பது *நிலை சேர்ந்த*

*வநுபவம்*

அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி! 


*சுத்த தேகத்திற்கு கர்மசித்தி என்றும்.பிரணவ தேகத்திற்கு யோகசித்தி என்றும்.ஞான தேகத்திற்கு ஞானசித்தி என்றும் சொல்லப்படுகிறது*


*கர்மசித்தி யோகசித்தி ஞானசித்தி என்னும் மூன்று சித்தியும் சேர்ந்து பெற்றால்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்பசித்திப் பெருவாழ்வு பெறமுடியும்.*

*அதற்கு பெயர் முத்தேக சித்தி என்று சொல்லப்படுகிறது*


*மூன்று வகையான சித்திகளையும்  பெற்றவர்களுக்கும் மூன்று வகையான பூரண லாபமும் மூன்று வகையான பூரண வாழ்க்கையும் கிடைக்கிறது.*


*அதாவது சுத்ததேகம் பெற்றவர்களுக்கு இம்மை இன்ப லாபமும்.இம்மை இன்ப வாழ்க்கையும் கிடைக்கும்.*


*பிரணவதேகம் பெற்றவர்களுக்கு மறுமை இன்ப லாபமும்.மறுமை இன்ப வாழ்க்கையும் கிடைக்கும்*


*ஞானதேகம் பெற்றவர்களுக்கு பூரணமான பேரின்ப லாபமும் பேரின்ப வாழ்க்கையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்*


*இவைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளின் பூரணத்தால்  கிடைக்கும் பேரின்ப வாழ்க்கை முறையாகும்.*


*முத்தேக சித்திபெற்று மரணத்தை வென்று கடவுள் நிலைஅறிந்து அம்மயமானவர் வள்ளலார் ஒருவரே!* *வள்ளலாரைப் போல் வாழ்ந்து நாமும் மரணத்தை வென்று பேரின்பசித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம் என்பதே வள்ளலாரின் சத்திய வாக்காகும்*


*அருள் பெறும் வாய்ப்பு எவ்வாறு கிடைக்கும்.?* 


*நினைப்பு மறைப்பு.விருப்பு வெறுப்பு. மற்றும் பற்று அற்று இயற்கை உண்மை மெய் பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டு வாழ்ந்தால் மட்டுமே அருள் ஏகதேசமும்.அருள் பூரணமும் பெற முடியும்.*


*நினைப்பு மறைப்பு.விருப்பு வெறுப்பு. பற்று எதனால் உண்டாகிறது?* 


*விருப்பம் என்பது உலக வாழ்க்கையில் மனம் விருப்பம் கொண்டு. ஒன்றை வேண்டிப் பந்தப்பட்டு. பூரண அருள் லட்சியத்தை விட்டு அதிசயமாக பார்த்து நிற்றல்.இந்த விருப்பத்தால் தானுங்கெட்டு இதர வஸ்துவையும்  கெடுத்து. சாதனமும் தடைப்பட்டுவிடும்.ஆதலால் எவ்வகையிலும் விருப்பம் என்பது கூடாது.*


*வெறுப்பு என்பது யாதெனில்? வேண்டுதல். வேண்டாமை.துவேஷம்.முதலிய இதர வஸ்துவை மனம் பற்றாதிருத்தல்.*

*இந்த வெறுப்பால் இதர வஸ்துவிடத்தில் துவேஷந் தோன்றி ஜீவ உபகாரத்தைத் தடை செய்யும்* . *ஆகையால் வெறுப்பு கூடாது*


*அதேபோல் மனம் ஒன்றின்மேல் பற்று வைத்தால் ஆண்டவரிடம் பற்று செல்லாது*

*ஆகையால் மேற்குறித்த  விருப்பு வெறுப்பு பற்று மூன்றும் கூடாது* 


*விருப்பு வெறுப்பு பற்று இருக்கின்ற வரையில் தத்துவங்களை கடக்க முடியாமல் தத்துவங்களின் ஆதிக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும் அருளைப்பெற முடியாமலும் மரணம் வந்துவிடும்.*


*வள்ளலார் பாடல்!*


தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீத மேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்த அந் நிலைக்கண் யாமும் எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று


அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெரியப் படுத்துகின்றார்.


*ஆதலால் மனித தேகமானது சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் எனும் மூன்றுவிதமான தேகமாற்றம் உண்டாகி முத்தேக சித்தி பெறுவதே மனித தேகத்தின் முடிந்த முடிவாகும்.* 


*வள்ளலார் பாடல்!*


*சுத்த வடிவும்* சுகவடிவாம் *ஓங்கார*

*நித்த வடிவும்* நிறைந்தோங்கும் - 

சித்தெனும் ஓர்

*ஞான வடிவும்* இங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.! 


மேலும் பதிவு செய்கிறார்.


நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்

*நானே அருட்சித்தி நாடடைந்தேன்* - நானே

*அழியா வடிவம் அவைமூன்றும்* பெற்றேன்

இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.!


*மேலே கண்ட பாடல்களில் வள்ளலார் தான் பெற்ற உடம்பின் மூன்று மாற்றத்தின் அனுபவத்தை தெளிவாக தெரியப் படுத்துகின்றார்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

கதிர்வேல்.செ.(ஈரோடு) வாழ்க்கை சிறு குறிப்பு !

 கதிர்வேல் (ஈரோடு) வாழ்க்கை சிறு குறிப்பு !


பெயர்

கதிர்வேல்.செ

நடப்பு பெயர்.

ஆன்மநேயன் கதிர்வேல்.செ


தந்தைபெயர்..

சென்னிமலை

தாயார் பெயர்..

முத்தம்மாள்


பிறந்த ஊர் 

மேல்வண்ணக்கம்பாடி .

செங்கம் தாலுக்கா. 

திருவண்ணாமலை மாவட்டம். 


  பள்ளியின் பெயர்

கிராம அரசு பஞ்சாயத்து பள்ளி 


படிப்பு

எட்டாம் வகுப்பு.


பிறந்த்தேதி.

01-07-1947 


தற்போது வசிக்கும் முகவரி

D.109.

S&P Living Spaces

காமராஜர் தெரு

அயனம்பாக்கம் 

சென்னை 95.


செல் எண்

9865939896


மனைவியின் பெயர்

அமுதா கதிர்வேல் ஈரோடு 


குழந்தைகள்.

கார்த்திகேயன்

சுமதி

நந்தகுமார்.


தொழில் 

ஈரோட்டில் ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரில் 

தையல்தொழில்.


பொறுப்புக்கள்

ஈரோடு சன்மார்க்க சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.


வடலூர் உலக மைய்யத்தின்(சன்மார்க்கம்) பொது செயலாளராக இருந்துள்ளார்


வடலூர் சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளராக இருந்துள்ளார்.


வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் நிர்வாகம் வள்ளலார் சொல்லியவாறு செயல்படாத காரணத்தால் பல போராட்டங்கள் செய்து காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார். 



வடலூர் சத்தியஞானசபை பூசகர் சபேசன் அவர்கள் வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக வழிபாடு செய்து வந்ததால் அவரிடம் இருந்த ஞானசபை சாவியை பிடுங்கி பெரிய சர்ச்சையை உண்டாக்கி புரட்சி செய்து வள்ளலார் கொள்கைபடி வழிபாடு செய்ய தூண்டியவர்


வடலூர் சன்மார்க்க உலக மையத்தின்  செயலாளராக இருந்துள்ளார் 


43 ஆண்டுகளாக வள்ளலார் கொள்கையில் சன்மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

தன்னுடைய வாழ்க்கை முழுவதும் முழு நேரமும் சன்மார்க்க பணியே வாழ்க்கையாக கொண்டவர்.


திருஅருட்பா ஆராய்ச்சி மையம் வைத்து புதிய கோணத்தில் வள்ளலார் கொள்கைகளை வெளியிட்டுவருகிறார்.


தமிழ்நாடு ஆந்திரா பெங்களூர்.

பாண்டிசேரி மற்றும் சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் தொடர்ந்து சொற்பொழிவு செய்துவருகிறார்.சொற்பொழிவிற்காக எவரிடத்தும் பணம் வாங்குவதில்லை என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வருகிறார்.


தனது பேச்சு ஆற்றலால் லட்சக்கணக்கான மக்களை புலால் மறுத்துவர்களாக மாற்றி உள்ளார்.


 சுத்த சன்மார்க்கம் சார்ந்த நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார். டிவி மற்றும் யூ டியூப்களில் சொற்பொழிவு செய்து வருகிறார்


சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார் மேலும் எழுதிகொண்டேவருகிறார் எல்லாம் கூகுல் வலைப்பதிவில் பிளாக்கரில் உள்ளன.அடுத்து மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க புத்தகமாக வெளியிட உள்ளார்.


விஞ்ஞானம் அறிவில் சார்ந்த புதிய கோணத்தில் மக்களுக்கு புரியும்படி ஆன்மீகச் சொற்பொழிவு செய்துவருகிறார் 


பல மேடைகளில் பல சான்றோர்களால் பலவிதமான பாராட்டுகள் பெற்றுள்ளார்.


வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கையில் அதிதீவிரமான ஈடுபாடு கொண்டவர்.


தன்மனைவி குழந்தைகள் பேரன் பேத்திகள் அனைவரும் சன்மார்க்க கொள்கையில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.


உலக அளவில் சன்மார்க்கத்தில் தலைசிறந்த பேச்சாளர்.


சாதி சமயம் மதங்களால் பிளவுபட்ட மக்களை ஒன்றுபடுத்த அயராது பாடுபட்டு வருகிறார்.


கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை மேடைகள் தோறும் பறைசாற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்


மக்களிடம் அன்பு தயவு கருணை காட்டுவதிலும் ஜீவகாருண்யம் செய்வதிலும் அவருக்கு நிகர் அவரே.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் அவர்கள்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896.


வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

உயர்ந்த குலம்! தாழ்ந்த குலம்!

 *உயர்ந்த குலம்! தாழ்ந்த குலம்!*


*வள்ளலார் பாடல் !*


நரை மரண மூப்பறியா நல்லஉடம் பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்


வரையில் *உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்**

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்


புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம் என் றறிந்தே

புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே


உரைபெறும் என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.! 


மேலே கண்ட பாடலில் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறார்.


*இவ்வுலகில் சாதி சமயம் மதம் என்னும் தோற்றத்தில் பல பொய்யான கொள்கைகளை வகுத்து மனித குலத்தின் வாழ்க்கை முறைக்காக பல ஆன்மீக மதவாதிகள் சமயவாதிகள் மற்றும் அரைகுறை அருளாளர்கள் போதகரகள் கடவுளின் சிந்தனையாளர்கள் பல வகையான ஆச்சார சங்கற்ப விகற்பங்களான வேற்றுமையை உருவாக்கி மக்களுக்கு வழிகாட்டி உள்ளார்கள்.*


*அதிலே முக்கியமானது உயர்ந்தகுலம் தாழ்ந்தகுலம் என்பதாகும்.அதாவது உயர்ந்தசாதி தாழ்ந்தசாதி என்பதாகும்*


*இறைவனால் படைத்த உயர்ந்த அறிவு கொண்ட மனிதப் பிறப்பாகிய உயிர்குலத்தில் உயர்ந்த சாதி. தாழ்ந்த சாதி என்பது மிகவும் அருவறுக்கத்தக்க மிகவும் கொடுமையான பிரிவினையாகும்.* 


*இதுவே மனிதகுலத்தின் பொருளாதார ஏற்ற தாழ்விற்கும்*.

*பஞ்சம் பட்டினி வறுமை ஏழ்மைக்கும் காரண காரியமாக அமைந்துள்ளது.*

*பணம் வசதி உள்ளவர்களை உயர்ந்த சாதி எனவும்.*

*உழைக்கும் வர்க்கத்தையும் பணம் வசதி இல்லாதவர்களை தாழ்ந்தசாதி எனவும் பிரித்து வைத்துவிட்டார்கள்* *மற்றும் தொழில் வாயிலாகவும் சாதியை பிரித்து வைத்து விட்டார்கள்*


*அதேபோல்  சைவ உணவை (தாவர உணவு) வைத்து வழிபாடு செய்யும்  தெய்வங்களை பெரிய தெய்வம் என்றும் அவற்றை வழிபாடு செய்பவர்களை உயர்ந்தசாதி எனவும். உயிர்க்கொலை வாங்கும் சிறிய தெய்வங்களை வணங்குபவர்களை தாழ்ந்த சாதி எனவும் பிரித்து வைத்துவிட்டார்கள்* 


*இதனால் பல முற்போக்கு சிந்தனை வாதிகளின் தெளிவால் சாதிச்சண்டை சமயச்சண்டை மதச்சண்டைகள் இதுவரையில் உலகம் முழுவதும் நடந்து கொண்டே உள்ளன* 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

*பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்*

*பிள்ளைவிளை யாட்டென* உணர்ந்திடாது உயிர்கள் பல*


பேதமுற்று  *அங்கும்இங்கும்*

*போருற்று இறந்து* *வீண் போயினார்* இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

*புனிதமுறு* *சுத்தசன் மார்க்கநெறி* *காட்டிமெய்ப்*

*பொருளினை* உணர்த்திஎல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

*என்பிள்ளை* ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் 

அகற்றும்ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!


*மேலே கண்ட பாடலில் சாதியாலும் சமயத்தாலும் மதத்தாலும் மனித குலத்தை பிரித்து வைத்ததால் மக்கள் இன்றுவரை போரிட்டு அழிந்து கொண்டே உள்ளார்கள்*


*இயற்கை மரணத்தைவிட சாதி சமய மதச்சண்டைகளால் அடைந்த செயற்கை மரணம் அதிகம் என வரலாறு சொல்கிறது*


*உயர்ந்த அறிவுகொண்ட மனிதகுலம் இனிமேலும் வீண்போகாமல் காப்பாற்றவே புனிதமான சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்துள்ளார் வள்ளலார்.*


 *பேய்பிடித்த பைத்தியக்காரத்தனமான  சாதி சமயம் மதத்தை அழித்து சம்ப்படுத்த வேண்டும். உலகில் உள்ள  எல்லா உயிர்களுக்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். எல்லோரும் அக் கடவுளின் குழந்தைகளே என்ற உண்மையை மக்களுக்கு போதித்து சாதி சமய மதம் அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும் என்பதே வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*


*புழுக்குலம்!*


*மனித குலத்தின் உண்மைத் தெரியாமல் உயர்ந்த குலம் தாழ்ந்தகுலம் என்று வகுத்து வாழ்கின்றீர்கள்*.

*இறுதியில் இரு குலத்திற்கும் மரணம் வந்துவிடுகிறது.*

*பூமியில் புதைக்கின்றீர்கள் ஒரு மூன்று மாதம் கழித்து பிணம் புதைத்த இடத்தில் தோண்டி பார்க்கின்றீர் இருகுலமும் புழுக்கள் நிறைந்த குலமாக இருக்கின்றது*


*நீங்கள் வகுத்து வாழ்ந்த உயர்ந்த குலமும் தாழ்ந்த குலமும் எங்கே போனது ? இரண்டு குலமும் புழுக்குலம் என்பதை உணர்ந்து பேதம் இல்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழுங்கள் அதுவே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் விருப்பமாகும் என்கிறார் வள்ளலார்*


*நரை மரணம் மூப்பு  அறியார்!*


*நரை திரை பிணி மூப்பு மரணம் அறியாத நல்ல உடம்பினரே நற் குலத்தார் எனபதை உணர்ந்து அறிந்து தெரிந்து வாழ்பவரே உயர்ந்த குலத்தார் என்பவர்களாகும்.*


எங்குலம் எம்இனம் மென்பது தொண் ணூற்றா

றங்குலம் என்றரு ளருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


எம்மதம் மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்

அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி! (அகவல்)


சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!(அகவல்)


சாதியு மதமுஞ் சமயமுங் காணா

ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!(அகவல்)


*மேலே கண்ட அகவலில் எல்லாம் பொய் என்பதை தெளிவாக அழுத்தமாக சொல்லுகிறார்.*


*அதாவது இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக  மாற்றிக்கொண்டு மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறுபவர் எவரோ  அவரே உயர்ந்த குலத்தை சார்ந்தவராகும் என்ற உண்மையை மக்களுக்கு தெளிவாக போதிக்கிறார் வள்ளலார்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

வாழ்க்கை வாழ்வதற்கே !

 வாழ்க்கை வாழ்வதற்கே !


*மரண பயம் தவிர்க்காத வாழ்க்கையில் எந்த பயனும் கிடையாது.*


**வள்ளலார் பாடல்!*


கரணம் மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்

கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்


*மரணபயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ*

மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே


திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்

சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்


சரணம் எனக் களித்தெனையும் தானாக்க எனது

தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.! 


*மேலே கண்ட பாடல் ஒவ்வொரு மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கும் பாடலாகும்.*


*மனிதனின் உடம்பு நான்கு பிரிவுகளாக பிரித்து இணைக்கப்பட்டுள்ளது.அவை இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன்(உயிர்) ஆன்மா என்பவைகளாகும்* இதில் புறக்கருவிகள் கரணங்கள் இந்திரியங்கள் என்பனவாகும்.


*கடலும் கடல்சூழ் உலகமும் காற்றும் அக்கினியும் வானமும் சேர்த்து ஆளுகின்ற  அதிபதிகளும்* மேலும்  உலகியல்  சார்ந்த வாழ்க்கையில் வாழும் உயர்ந்த மனிதர்கள் *பட்டம். பதவி. புகழ். ஆட்சி. அதிகாரங்களும். உயர்ந்த வசதியான வாழ்க்கை முறைகளும். குறைவில்லாத செல்வம். விலை உயர்ந்த பொருட்களும். பிரமிக்கத்தக்க அரண்மனை போன்ற வீடுகளும் அவற்றில் பணிபுரிய ஆயிரக்கணக்கான வேலை ஆட்களும். தங்களைச் சுற்றிலும் திறமைமிக்க பாதுகாவலர்களும். அழகான மனைவியும் அறிவுசார்ந்த மக்களும் அன்பான பாசமிகு சுற்றங்களும். உயிருக்கு உயிரான இணைபிரியாத நட்புக்களும்.*


 *மற்றும் சிறப்புமிக்க விருந்தினர்களும். அவர்கள் தங்குவதற்கு ஆடம்பரமான வசதி வாய்ப்புக்களும் அனைவருக்கும் விருப்பமான வித விதமான மாடல்களில் வாகனங்களும்.அவர்கள் விரும்பும் அறுசுவை உணவு வகைகளும் மற்றும் தங்களை பாராட்டி புகழ்பாடும் கலைஞர்களும் கவிஞர்களும் மற்றும் நாட்டிய கலைஞர்களும். எதிலும் குறைவு இல்லாத  உலக வாழ்க்கை  வாழ்வதற்கு உண்டான சுற்றுபுற சூழ்நிலைகளும் மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் யாவும் ஒவ்வொரு திறமைமிக்க மனிதனுக்கும் அமைந்து விடுகிறது.*

மேலும் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து வெற்றிவாகை சூடும் வல்லபமும் இவ்வுலகில் கிடைத்து விடுகிறது.


*மேலே கண்ட வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது இவ்வுலகின் பொருள்கள் தான் ஆதாரமாக உள்ளது.*


*பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்க்கைஅல்ல அருள்சார்ந்த வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பதை மக்கள் நினைந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்*


*மேலே கண்ட பொருள் வாழ்க்கையினால் அவ் வாழ்க்கையை அனுபவிப்பதும் மகிழ்ச்சி அடைவதும்  ஆனந்தம் அடைவதும்  களிப்படைவதும் எதுவென்றால்?* *மனித உடம்பில் உள்ள புறக் கருவிகளான இந்திரியங்களும் கரணங்களும் மட்டுமே* *களிப்படைகின்றது*  


நம் உடம்பில் உள்ள *ஜீவன் என்ற உயிரோ ஆன்மாவோ நம்மை படைத்த கடவுளோ எவ்வகையிலும் மகிழ்ச்சி அடைவதில்லை.*


*பொருள் சார்ந்த வாழ்க்கையால் இந்திரியங்கள் கரணங்கள் மட்டும். லாபம் அடைகின்றது  மகிழ்ச்சி அடைகின்றது. நெகிழ்ச்சி அடைகின்றது அதனால்  இந்திரியங்கள் கரணங்கள் சார்ந்த   உடம்பும் அதனுள் இயங்கும் தத்துவங்களும் முதிர்ச்சி அடைந்து நரை திரை பிணி மூப்பு அடைந்து இயங்கமுடியாமல்  இறுதியில் மரணம் வந்துவிடுகிறது.*


*இதைத்தான் வள்ளலார் மேலே கண்ட பாடலில் மரண பயம் தவிர்க்கமுடியாத வாழ்க்கையில் என்ன பயனோ என்பதை சுட்டிக் காட்டுகிறார்.* 


*இவ்வுலகில் எவ்வளவுதான்  உயர்ந்த பொருள் சா்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் இறுதியில் மரணம் வந்துவிடுகிறது.நாம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்துவந்த பொருள்களில் ஒரு சிறிய துரும்பை கூட எடுத்துச் செல்லமுடியாது என்பதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.*


*தெரிந்தும் பொருள் பற்றினால் அலைந்து திரிந்து பெற்று அழிந்து கொண்டே உள்ளார்கள்.பொருள் சுவையை அறிந்த மக்கள் அருள் சுவையை சுவைக்க தெரிந்து கொண்டால்  விடமாட்டார்கள். அருளின் சுவையை அறிந்து அனுபவித்து மரணத்தை வென்ற மகான் வள்ளலார் அருள்பெறும் வழியைக் காட்ட வந்துள்ளார்.*


*உயர்ந்த மனிததேகம் எடுத்த நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டியது ஆன்மலாபம் மட்டுமே* *அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்தலே ஆன்மலாபம் என்பதாகும்.* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*ஆன்மாக்களுக்கு அருள் வழங்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்பதை மனித தேகம் எடுத்த உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்* *எனவேதான் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரின் சிரநடு சிற்சபை என்னும் சித்திபுரத்தில் அமர்ந்து அருள்ஒளி வழங்கி மரணத்தை அகற்றி ஊன உடம்பை ஒளி உடம்பாக்கி உள் அமர்ந்து வாழ்ந்து வருகிறார்*. மேலும்

*வள்ளலாரைத் தன்மயமாக்கி தானாக்கி இயங்கி வருகிறார்.*

*நீங்களும் என்னைப்போன்று ஆன்ம லாபமான அருள் லாபத்தைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம் வாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அன்புடன் அழைக்கிறார்.*


*வள்ளலார் பாடல்!*


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

*எல்லாம்செய் வல்லசித்தி* இறைமையும்பெற் றிடலாம்


அன்புடையீர் வம்மின்  இங்கே *சமரசசன் மார்க்கம்*

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்


பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே


வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!  


*மேலே கண்ட பாடலில் எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு வள்ளலார் பதிவு செய்துள்ளார். படித்து பயன் பெற வேண்டும் என்பதே    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறி கொள்கையாகும்*

*அந்த ஒழுக்கங்கள் தான் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்* 


*இந்த நான்கு ஒழுக்கங்களில் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் என்ற இரண்டு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்தால் போதும். ஜீவ ஒழுக்கம் .ஆன்ம ஒழுக்கம் என்னும் இரண்டு ஒழுக்கங்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போனஸாக வழங்கி அருளை வாரி வழங்கி மரணத்தில் இருந்து மீட்டு தன்னுடன் அணைத்து இனைத்துக் கொள்வார் என்பது சத்தியவான் வாக்காகும்.*


*மனிதவாழ்க்கை என்பது வாழ்வதற்கே  என்பதை அறிவால் அறிந்து மரணத்தை வென்று வாழ்ந்து காட்ட வேண்டும்*.


வள்ளலார் பாடல்! 


சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்

திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்


ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே


வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ

மரணம் என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா


சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்

தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.! 


*மரணத்தை வெல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும்  தனித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திட வேண்டும் என்பதை தெளிவாக கண்டிப்பாக சொல்லுகின்றார் வள்ளலார்*. 


அதற்கு சரியான நேர் வழி கீழே சொல்லுகிறார்.


உலகினில்  உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்

விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க! ( அகவல்)


சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக வோங்குக வென்றனை ! ( அகவல்)


போற்றிநின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர்

ஆற்றலின்  ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.