வெள்ளி, 26 மார்ச், 2021

உயிர் எலாம் நடம் புரியும் ஒரே இறைவன் !

 *உயிர் எலாம் நடம் புரியும் ஒரே இறைவன்!*


*வள்ளலார் பாடல்!*


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒரு திருப்பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப்  *பதியெலாம்* *களிக்கப்*

*பாடுகின்றேன்* *பொதுப் பாட்டே*


எல்லா உயிர்களிலும் எக்காலத்தும் எவ்விடத்தும்.

எவ்வளவும் தடைபடாது இடைவிடாது பொது நடம்புரியும் ஒரே இறைவன் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்னும் உண்மையை முழுமையாக சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் அறிந்து கொண்டேன். உலக மக்கள் அனைவரும் என்போன்று அச்சம் திரிபு மயக்கம் இன்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசைப் பற்றியே பொது நோக்கத்தோடு வெளிப் படுத்துகிறேன் என்கிறார் வள்ளலார் .


*அவ்வாறு விளங்குகின்ற  உண்மைக் கடவுள் ஒருவரேயாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*.


எல்லா அணுக்களிலும் காரியத்தாலும். எல்லா 

உயிர்களிலும் காரண காரியத்தாலும். *அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும்* நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்றவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்ற உண்மையை. *ஒழுக்கத்தால் தயவால்.அன்பால் கருணையால். அறிவால். அருளால். அனுபவத்தால் அறிந்து கொண்டேன் என்கிறார்.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கிருந்து இயங்கிக் கொண்டுள்ளார் ?*


சமய மதங்கள் சொல்வதுபோல் பஞ்ச பூத தத்துவங்களில் ஆன்மாவோ.

உயிரோ. உணர்ச்சியோ.

மனமோ.

புத்தியோ.

அறிவோ

இயக்கமோ எதுவும் இல்லை. அதில் கடவுளும் இயங்கவில்லை.


இயங்குகின்ற பொருளில் கடவுள் இருக்கின்றார்.

இயங்காதப் பொருளில் கடவுள் இல்லை. உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தில் காரணத்தாலும் காரியத்தாலும் *ஆன்ம ஒளியாக.உயிர் ஒளியாக செயல்படுகின்றார்* 


எல்லா அண்டங்களையும்.

எல்லா உலகங்களையும்.

எல்லா உயிர்களையும் எல்லாப் பொருள்களையும்.

மற்றை எல்லா வற்றையும். 


1 தோற்றுவித்தல்.

2.விளக்கஞ் செய்வித்தல்.

3.துரிசு நீக்குவித்தல்.

4.பக்குவம் வருவித்தல்.

5.பலன் தருவித்தல் .

போன்ற ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை  இயற்றிக் கொண்டு்ம் இயங்கிக் கொண்டும் எங்கும் பூரணராகி விளங்கிக் கொண்டுள்ள உண்மைக் கடவுள் ஒருவரே! தனிப்பெருந் தலைமை *அருட்பெருஞ்ஜோதியர் என்பதை சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக்கடவுள் ஒருவரே !*  


அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்தமெய் அறிவு என்னும் பூரண பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்கி கொண்டு ள்ளார் *அருட் செங்கோல் ஆட்சி நடத்தும் இடம் தான் அருட்பெருவெளி என்பதாகும்*


*அருட்பெருவெளி என்பது அருள் நிறைந்த பெருவெளி என்பதாகும்* *அங்கு பஞ்சபூத அணுக்கள் கிடையாது*.


*வள்ளலார்பாடல்* ! 


வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகள் எலாம் வயங்குவெளி யாகி


எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்தபர வெளியாகி இயல் உபய வெளியாய்


அண்ணுறு சிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்


*திண்ணமுறும்* 

*தனிஇயற்கை* *உண்மைவெளி யான*

*திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.!*


இயற்கை உண்மை வெளியான தனிப்பெரும் 

வெளியே திருச்சிற்றம்பலம் என்னும் அருட்பெரு வெளியாகும்.அதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமாகும். 


மேலும் வள்ளலார் சொல்வதை கேளுங்கள்.


*வள்ளலார் பாடல்*


ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே

உன்ன முடியாது அவற்றின்

*ஓராயிரங் கோடி மால்அண்டம்* *அரன்அண்டம்*

*உற்ற கோடாகோடியே*


*திருகலறு பலகோடி ஈசன் அண்டம்* *சதாசிவ அண்டம்* *எண்ணிறந்த*

*திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தம்*

*சீரண்டம் என் புகலுவேன்*


உருவுறும் இவ் வண்டங்கள் அத்தனையும் *அருள்வெளியில்*

*உறுசிறு அணுக்களாக*

*ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்*

ஒருபெருங் கருணைஅரசே


*மருவி எனை ஆட்கொண்டு* *மகனாக்கி அழியா*

*வரந்தந்த மெய்த்தந்தையே*

*மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வமே*

 *எலாம்வல்ல நட ராஜபதியே*.!  


மேலே கண்ட பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடத்தை தெளிவாக எளிய தமிழில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தெரியப்படுத்துகின்றார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நாம் தெரிந்து கொள்வது எங்கனம்*? 


அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், 


*பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக்  கொண்டு,* *நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்;* *வீண்போகின்றோம்.*


ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் *உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம்* முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், 


எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்* பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - 


மேற்குறித்த இயற்கை உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு *சுத்த சன்மார்க்கத்தின்* முக்கிய லக்ஷியமாகிய *உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச்* சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த *உத்தரஞான சிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில்* 


தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, *இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்* அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்என்னும் திருக்குறிப்பை 


இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய *அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார்* முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை *வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி,* 


அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளி எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு, 

அருள் அரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளுகின்றார்  


*உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட்டு எழுந்தருளி அருள் வழங்கி கொண்டுள்ளார்.*


*சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் !*


நாம் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய  ஒழுக்கங்களாகிய இந்திரய ஒழுக்கம். கரணஒழுக்கம்.

ஜீவ ஒழுக்கம்.

ஆன்ம ஒழுக்கங்களை முழுவதும் கடைபிடித்து.


அவற்றின்  பெரும் பயன்களாகிய


1.சாகாக்கல்வி.

2.தத்துவ நிக்கிரகம் செய்தல்

3.ஏமசித்தி.

4.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.


போன்ற  எக்காலத்தும் நாசமடையாத 

சுத்ததேகம்.

பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் 

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும், 


கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், *கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி* முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான காலம் இக்காலமே.


*இக்காலமே சுத்த சன்மார்க்க காலம்*


உயர்ந்த அறிவுள்ள மனிததேகம் பெற்றவர்கள் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல்.

உண்மை அறிவை பயன்படுத்தி தெளிவு பெற வேண்டும்.


உலகியலில் இயற்கைக்கு புறம்பான பஞ்ச பூத தத்துவக் கடவுள்களான தெய்வங்களை ( அதாவது ஜடபொருள்களை) தொடர்பு கொள்ளாமல்.


*இயற்கை உண்மை கடவுளான மெய்ப்பொருள் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அவரின்  தனிப்பெருங் கருணையினால் பூரண அருளைப்பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.* 


எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து  ஆன்ம ஒளியையும் உயிர் ஒளியையும் இயக்கிக் கொண்டுள்ள இயற்கை உண்மைக் கடவுள் ஒருவரே ! அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வியாழன், 25 மார்ச், 2021

அரசியலில் எல்லோரும் குற்றவாளிகளே !

 *அரசியலில் எல்லோரும் குற்றவாளிகளே* ! 


நடிகர் கமல் அவர்கள் நான் முறையாக வரிகட்டுகிறேன் என்கிறார்.மகிழ்ச்சிதான்.

நீங்கள் வாங்கும் கருப்பு பணம் வெள்ளை பணம் எவ்வளவு  என்று வெளிப்படையாக சொல்லுங்கள். 


சினிமாவில் தான் கருப்பு பணம்  நிறைய விளையாடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.


சினிமா நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை உண்மையாக  வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை.


அரசியல்வாதிகளை விட சினிமா நடிகர் நடிகைகளே பண மோசடி பேர்வழிகள்.


ஒருசினிமாவல் நடிக்க அனைத்து நடிகர் நடிகைகளின் காலம் மொத்தமாக 3 மணிநேரம்தான்  தேவைப்படுகிறது.அதற்கு செலவாகும் பணம் கோடி கோடியாக செலவழிக்கப்படுகிறது.


அவரவர்கள் நடிப்பதற்கு வாங்கும் பணம் எவ்வளவு.அதில் கணக்கில் காட்டுவது. கணக்கில் காட்டாதது எவ்வளவு என்று வெளிப்படையாக அறிவிப்பார்களா ?  


அரசியலுக்கு வந்துவிட்டால் பணம் இல்லாமல் கட்சி நடத்த யாராலும் முடியாது.தேர்தலில் நிற்கவும் முடியாது என்பது சாதாரண மக்களுக்கும் தெரியும்.


அதே நேரத்தில் உண்மை பேசும் அரசியல்வாதிகளும் இல்லை சினிமாக்காரர்களும் இல்லை. அரசியல்வாதிகளை கூட நம்பலாம். சினிமாக்காரர்களை நம்பவேக் கூடாது.


இந்த உண்மையை நான் ஏன் சொல்கிறேன் என்றால் .நான்சினிமா உலகில் இருந்தவன்.சினிமா ஆசையில் நண்பரகளுடன் இரண்டு படம் எடுத்தவன். சினிமா உலகம் மோசமான உலகம் என்பதை தெரிந்து கொண்டவன். ஆதலால் சினிமா உலகம் வேண்டாம் என்று வெளியே வந்தவன்.


நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வேண்டாம் என்று சொன்னவன் சினிமா உலகில் நான் ஒருவனே ! 


அதனால் தான் சினிமா உலகம் என்பது தனி உலகம். அவற்றில் உள்ள குறைகளை அதிகம் சொல்ல விரும்பவில்லை. சினிமா மோகத்தில் அழிந்தவர்கள் அளவிடமுடியாது.


நடிகர்கள் நடிகைகள் அரசியலுக்கு வந்துவிட்டால் உத்தமர் வேடம் போடுவது ரொம்ப காலமாக உள்ளது. அவை மக்களை ஏமாற்றும் அசிங்கமான செயலாகும்.


அரசியலில் மக்களுக்காக உழைத்தவர்கள். உழைக்க தயாராக உள்ளவர்கள் யார் ?  என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது இருக்கின்றவர்களில் மக்களுக்கு நன்மை செய்கிறவர்கள் யார் ?  என்பதை சிந்தித்து ஓட்டு அளித்து *சட்டமன்ற உறுப்பினர்களை*  தேர்வு செய்வதே இன்றைய மக்களின் தலையாய கடமையாக இருக்கிறது. 


சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

ஓட்டு போடுங்கள். 


ஜனநாயகம் உங்கள் கையில். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896

செவ்வாய், 23 மார்ச், 2021

வடலூர் வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞானசபை.!

 *வள்ளலார்  தோற்றுவித்த  சத்திய ஞான சபையை*!


வள்ளல் பெருமான் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க நெறிமுறைகளுக்கு.கொள்கைகளுக்கு புறம்பாக.

விரோதமாக சத்திய ஞானசபையை நிர்வகித்து நடத்தி வந்தவர்  வள்ளலார் காலத்தில் இருந்தவர் ஆடூர் சபாபதி குருக்கள் என்பவராகும்.


மற்றும் வடலூரில் வள்ளலார் விருப்பத்திற்கு இணங்க மக்களால் கொடுக்கப்பட்டது 80 காணி இடமாகும்.  


அறச் செயலுக்காக கொடுக்கப்பட்ட வடலூர் பொது சொத்துக்களில் பல ஏக்கர் நிலத்தை அதிகாரிகளின் துணைக்கொண்டு தன்  பெயருக்கு  மாற்றியும்  வருமானங்களை சுய லாபத்திற்காக பயன்படுத்தியும் வந்துள்ளார்      சபாபதி சிவாச்சாரியார்.


அதன் உண்மை தெரிந்த அன்பர்கள்   நிறைய புகார்கள்  கட்டுக்கட்டாக  இந்து சமய அறநிலையத்துறை வாரியத்திடம் குவிந்திருந்தன என்னும் உண்மையை  ஆ. பாலகிருஷ்ண பிள்ளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 


பின்னர் புகார்களின் உண்மைத்தன்மை அறிந்து சட்டத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்  துறையின்  முழு கட்டுப்பாட்டிற்கு  *சத்திய ஞான சபை* *சத்திய தருமச்சாலை,* *சித்திவளாகம்*

*கருங்குழி* *மருதூர்* ஆகிய ஐந்து இடங்களும் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது.


எனினும், ஞான சபை வழிபாடு பூசைகள்  சபாபதி சிவாச்சாரியார்கள் கையிலேயே  தொடர்ந்தது நடைபெற்றுக் கொண்டு வந்த்து. 


திரு .ஊரன் அடிகள் 1967 இல்  வெளியிட்ட  *வடலூர் வரலாறு* என்ற நூலின் வழி  பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்ட பின்  நடந்த  வரலாற்று உண்மைகளை  முழுவதும் உணர்ந்த  சுத்த சன்மார்க்க   ஞானி *திரு துறவி கந்தசாமி ஐயா* அவர்கள்,  பெருமான் ஞான சபை வழிபாடு குறித்தும் தரும பரிபாலனத்திற்கு வழங்கிய சொத்துக்களை  மீட்கவும் பல வழக்குகள் ஆகியவற்றை  நீதி மன்றங்களில் முறையிட்டார். 


ஆனால் அவருக்கு உதவ போதிய வலுவான அன்பர்களின்  ஆதரவு இல்லை.   துறவி கந்தசாமி  ஐயா அவர்களின் கடும் உழைப்பு / செயல் அனைத்தும் போற்றுதலுக்கு உரியது. 


அந்த நாட்களில்  (இராமநாதபுரம்)  பார்த்திபனுர் வெ.பெருமாள் ஐயா ,  சுத்த சன்மார்க்க கொள்கை நெறியில் மிகவும் துடிப்புடன் தமிழகம் முழுவதும் சொற்பொழிவு ஆற்றி வந்த *திரு. ஈரோடு  கதிர்வேல் ஐயா* ஆகிய இருவரும்  ஞான சபையை சுத்தம் செய்யும் பணியிலும் சீற்திருத்த பணியிலும் மாதந்தோறும் ஈடுபட்டு வந்துள்ளனர்.  


துறவி கந்தசாமி ஐயா போராட்டத்தால்  ஈர்க்கப்பட்ட, ஈரோடு  கதிர்வேல் அவர்கள்.துறவியாரின் துணை கொண்டு வடலூர் சீர்திருத்த பணியில் மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.


2006 வரை பூசாரியாக இருந்த  சபா ஒளி சிவாச்சாரியார் இடம்  அணுகி  பெருமான் வகுத்த வழிபாட்டிற்கு புறம்பாக  செய்யபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். 

சிவாச்சாரியார்  அதையெல்லாம் காதில் வாங்காமல் மாத பிரதோஷம் சிலை வழிபாடு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் விபூதிபிரசாதம் போன்ற சைவநெறியுடன்  வைணவ மரபுடனும் விஷேச  நாட்களில்  பூஜை செய்வதை தொடர்ந்து செய்து வந்துள்ளார்கள்.


அத்துடன்  சிவலிங்கதிற்கு  பால் அபிஷகம் செய்து விட்டு ஞானசபை தீப தரிசனம் காட்டுவதை  வழக்கமாக கொண்டு இருந்தனர். 


மாத பூசத்தன்று பகல் 12 மணி ஜோதி தரிசனம் கட்டிவிட்டு, வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு விபூதி பிரசாதமும். பால் அபிஷேகம் செய்த தீர்த்தமும் வழங்கியுள்ளார். இதையெல்லாம் இடைவிடாது கவனித்து வந்த *ஈரோடு கதிர்வேல் அவர்கள்*, மீண்டும் அவரிடம் நேரில் தொடர்பு கொண்டு. இப்படி செய்வது வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமானது என்று விளக்கத்துடன் தெரிவித்துள்ளார்.


தங்களுக்கு வேண்டிய பொருள்/ மற்றும்  உதவிகள் எது வேண்டுமானாலும்  செய்கிறோம்.வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக செயல்படாதீர்கள் என்று எச்சரித்தும் உள்ளார்.


அதற்கு பிரதிபலனாக ஞானசபை  வழிபாடு செய்வதை பெருமான் கட்டளைப்படி 72 வயது கடந்த முதிர்ந்த  சன்மார்க்க அன்பர்கள் பொறுப்பில் விட்டு விடுங்கள் என்றும் கோரியுள்ளார்.  அதற்கு சிவாச்சாரியார் , வள்ளலார் சித்தி பெற்ற காலத்தில் இருந்தே எங்கள் மூதாதையர் செய்துவந்துள்ளபடி. அவர்கள் கொடுத்த படிக லிங்கத்திற்கு  முதல் பூஜை திரைக்கு பின்னால்  செய்து விட்டு பிறகே  ஜோதிவழிபாடு காட்டி தீபாராதனை  செய்வது. ஒரு நூற்று ஆண்டுக்கு மேல் நடைபெற்று வந்த செயல்களாகும் என்றனர்.


வள்ளலார் சொல்லியே என் மூதாதையர் செய்தனர் நாங்களும் அவர்கள்  செய்ததையே இதுநாள்வரை செய்து கொண்டு வந்த்தாக  கூறினார்.


சிவாச்சாரியார் விளக்கத்தை  ஏற்றுக் கொள்ளாத *ஈரோடு கதிர்வேல்* அவர்கள் , ஞான சபை  சாவியை தந்திரமாக  *சபாஒளி*  சிவாச்சாரியிடமிருந்து  கைப்பற்றி எடுத்து கொண்டு தெய்வ நிலையத்திற்கு வந்து அடைக்கலமானார். இது உள்ளூர் மக்களிடம்  பெரும் பரபரப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தியது.கதிர்வேல் அவர்களை அடிப்பதற்கு தருமச்சாலையில் மக்கள் குவிந்து விட்டார்கள்.துறவி கந்தசாமி ஐயா அவர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.


வடலூர் காவல் துறை , மாவட்ட ஆட்சித்துறை , அறநிலைய ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள்  அனைவரும் வந்து விசாரணை நடந்தது. மதியம் முடிந்து இரவு 7-00 மணி வரை தொடர்ந்து விசாரணை நடந்த்து.


ஈரோடு கதிர்வேல் அவர்கள் கோரிக்கை ஞாயத்தை உணர்ந்த மேல் அதிகாரிகள் ,  இரவு 8 மணி பூசை நடத்த வேண்டி நடத்திட  சன்மார்க்க  அன்பர்களில்  72 வயது நிரம்பியவர்கள்  யாரேனும் முன்வர வேண்டுகோள் வைத்தனர்.  அங்கு 10 க்கு மேற்பட்ட  72 அகவை முதிர்ந்தவர்களிருந்தும் எவரும் முன் வரவில்லை.  எனவே வேறு வழியின்றி.மீண்டும் சபாஒளி சிவாச்சாரியார் வசம் ஞானசபை திறவுகோலைக் கொடுத்து  பூசை செய்யும் உரிமையை தொடர்ந்து வழங்கப்பட்து.


ஞான சபை சுத்த சன்மார்க்க வழிபாட்டு  முறை மாற்றத்திற்கு இந்த தலைமுறையில் செயல் வடிவம் கொடுக்க காரணமாயிருந்த *ஈரோடு கதிர்வேல் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.*


மேலும் சத்திய தருமச்சாலை ஒடுமேய்ந்த கட்டிடம் பழையதாகி மழை வெயில் உள்ளே போகும் அளவிற்கு சிதிலமடைந்து இருந்த்து.


புதியதாக தார்சு கட்டிடம் கட்டவேண்டி போராட்டங்கள் நடத்தி.தைப்பூசம் அன்று *வடலூர் சீர்திருத்தம்* என்கின்ற கோரிக்கைகளை எழுதி முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து கைதுசெய்யப்பட்டு காவல்நிலையம் சென்று.அங்கும் உண்ணாவிரதம் கடைபிடித்து மாலைவரை இருந்து விடுதலை செய்யப்பட்டது.


இப்போது உள்ள தருமச்சாலை கட்டிடம் ஈரோடு கதிர்வேல் அவர்களின் விடாமுயற்சி யினால்  கட்டப்பட்டதாகும்.


பல சன்மார்க்க அன்பர்களின் விடா முயற்சியால்.உழைப்பால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து குருக்களிடம் இருந்து சத்திய ஞானசபை திறவுகோலைப் பெற்று வள்ளலார் சொல்லியவாறு சன்மார்க்க கொள்கைபடி சத்திய ஞானசபையில் முதியவரைக் கொண்டு ஜோதிவழிபாடு நடந்து வருகிறது. 


இந்த செய்திகள் எல்லாம் இப்போதுள்ள சன்மார்க்க அன்பர்களுக்குத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.


இனி வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கை உலகம் முழுவதும் கொண்டு செல்ல எந்த தடைகளும் தடுக்க முடியாது இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையாகும்

ஞாயிறு, 21 மார்ச், 2021

வடலூரில் சர்வதேச மையம் !

 *வடலூரில் சர்வதேச மையம்!*


வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திமுக கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார் அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்த்துக்கள்.


திமுக ஆட்சி காலத்தில்தான் வடலூருக்கு நல்ல பல செயல்களை செய்துள்ளார்கள் என்பதை நினைவு கூறுகிறோம். 


உதாரணமாக வடலூர்  சத்தியஞானசபை ரோடு பிரமாண்டமாக விரிவுப்படுத்தியது.


சத்திய ஞானசபையில் பூணுல் அணிந்த இளம்வயதுடைய இல்லறம் நடத்தும்  பிராமணர் பூசகரை நீக்கி. வள்ளலார் சொல்லியவாறு சாதி சமயம் மதம் போன்ற பற்று இல்லாத பொதுநோக்கம் உடைய  சன்மார்க்கிகளால்  ஜோதி வழிபாடு செய்ய வைத்தது.  


திமுக ஆட்சிக்கு வந்தால் வடலூர் புனித நகரமாக மாற்றப்படும்.


மேலும் வள்ளலார் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல *வடலூர் வள்ளலார் சர்வதேச மையம்* மிகுந்த பயன் உள்ளதாக அமையும் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896.

வெள்ளி, 19 மார்ச், 2021

எல்லாம் செயல் கூடும்!

 *எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே* !

*எல்லாம் வல்லான் தனையே ஏத்து* !


*அருட்பெருஞ்ஜோதி அகவல் !*


சாதியு மதமுஞ் சமயமுங் காணா

ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!


சாதியு மதமுஞ் சமயமும் *பொய்யென*

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி! 


*சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்*

அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி !


*சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த*

அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி ! 


இயற்கை உண்மையாம் மெய்ப்பொருள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்னும் கடவுள். *உலகில் உள்ள எந்த சாதி சமயங்கள் மதங்களையும் சார்ந்தது அல்ல.*


அக்கடவுள் தன்னை வெளியே காட்டாமல் அமர்ந்து இயங்கும் இடம் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்! 


*அருட்பெரு வெளியில்* அருட்பெரு உலகத்

தருட்பெருந்தலத்து மேல் நிலையில்


அருட்பெரும்பீடத் *தருட்பெரு வடிவில்*

அருட்பெருந்திருவிலே அமர்ந்த


*அருட்பெரும்பதியே அருட்பெரு நிதியே*

*அருட்பெருஞ் சித்தி என்அமுதே*


அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


என்னும் பாடலின் வாயிலாக எளிய தமிழில்  தெரியப்படுத்துகின்றார்.


மேலும் ஒருபாடல் ! 


எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே

*இதுஅது* எனஉரைப் பரிதாய்த்


தங்கும் ஓர் இயற்கைத் தனி அனுபவத்தைத்

தந்து எனைத் தன்மயம் ஆக்கிப்


பொங்கும் ஆனந்த போக போக் கியனாய்ப்

புத்தமு தருத்தி என்உளத்தே


*அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த*

*அருட்பெருஞ் சோதிஎன் அரசே*.!*


எங்கும் நிறைந்துள்ள உயிர்களிலும் *ஆன்மா என்னும் சிற்சபை இடத்தும்* விளங்கி இயங்கிக் கொண்டுள்ள *உள்ஒளியே அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.*


*அது தனித்து இயங்கும் இடம் எது என்றால் ?  பஞ்ச பூதங்களையும் கடந்து.பல கோடி அண்டங்களையும்.பலகோடி உலகங்களையும் கடந்து.அப்பாலுக்கு அப்பால் தனித்த இடமான. அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த பெருவெளியில் தனித்து இயங்கும் ஒரே கடவுள் ! அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்*


அந்த அருட்பெருஞ்ஜோதி மனித உடம்பில் *அந்த கரணக் கூட்டத்தில் மத்தியில் உள்ஒளியாக உயிர்ஒளியாக விளங்கி இயங்கி கொண்டுள்ளது* 


எந்த சமய மதக்கடவுளையும் அருட்பெருஞ்ஜோதியிடம் 

*இது அது* என்று ஒப்பிட்டு சொல்ல முடியாத  தனத்தலைமை பெரும்பதி கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்.


அக்கடவுள்தான் அதன் இயற்கை உண்மை தனிஅனுபவத்தை (அதாவது அருளை) எனக்குத் தந்து என்னை தன்மயமாக்கி ஆட்கொண்டது.


ஆதலால்தான் மரணத்தை வென்று *சத்து சித்து ஆனந்தம்* என்னும் பெரும் போகத்திலே வாழ்ந்து கொண்டுள்ளேன்.


*இப்போது நான்வேறு கடவுள் வேறு அல்ல*. என் உள்ளத்தே அங்கையர் கனிபோல் அமர்ந்து அருள் கண்களால் பார்த்து ரசித்து நிலைத்து என்றும் பிரியாமல். எதனாலும் தடைஇல்லாமல்  அருள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளேன் என்கிறார்.


*வள்ளலார் பாடல் !*

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி *அருட்சோதி* அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா *தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே*.!


மேலே கண்ட பாடலில்.நான்பெற்ற நெடும் பேற்றை சொல்லுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் வார்த்தைகள் இல்லை என்கிறார்.


எனக்கு அறிவை விளக்கி அருளை அளித்து ஆட்கொண்டது போல். எல்லா உலகில் உள்ள உயிர்களுக்கும் அருளை அளித்து ஆட்கொள்ள வேண்டும் என்ற அன்பால் தயவால் கருணையினால் ..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்* வேண்டுகிறார்.


ஆதலால் நாம் சமய மதங்களினால் படைக்கப்பட்ட தத்துவக் கடவுள்களை புறத்தில் பார்த்து வணங்கி வழிபடாமல்.

*இயற்கை உண்மை*

*இயற்கை விளக்கம்*

*இயற்கை இன்பம்*

என்னும் சிரநடு சிற்சபையின் அகத்தில் நடம்புரியும் ஆன்மா என்னும் உள்ஒளியை இடைவிடாது தொடர்பு கொள்வோம்.

*அருளைப் பெறுவோம்*

*மரணத்தை வெல்வோம்*

*மகிழ்ச்சியுடன் வாழ்வோம்*.


*வள்ளலார்பாடல் !*


குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்


*பொறித்த மதம் சமயம் எலாம் பொய்பொய்யே* அவற்றில்

புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

 

செறித்திடு *சிற்சபை* நடத்தைத் தெரிந்து 

துதித்திடுமின்

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந் திடுமே*.! 


மேலே கண்ட பாடலை பலமுறை ஊன்றி படித்து பயன் பெறுவோம்..


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ! 

9865939896.

புதன், 17 மார்ச், 2021

ஆன்மா உயிர் உடம்பு !

 *ஆன்மா உயிர் உடம்பு*!  


ஆன்மா (உள்ஒளி) உயிர். உடம்பு ..இவை மூன்றும் சேர்ந்தது தான் மனித இயக்கம் என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.


*இவற்றை பதி.பசு.பாசம் என்பார்கள் சைவ சமயத்தார்கள்.*


*வள்ளலார் பாடல்*!


உடம்பு வரு வகைஅறியீர் உயிர் வகையை அறியீர்

உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்


மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர்


இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே


நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.! 


மேலே கண்ட பாடலில் .உடம்பு வந்த வழியும்.உயிர்வந்த வழியும்.ஆன்மா என்கின்ற உள்ஒளி வந்த வழியும் தெரியாமல்.உடல் பருக்க உணவு உண்டு தினமும் தூங்குவதற்கும் விழிப்பதற்கும் மட்டும் தெரிந்து கொண்டு இருக்கின்றீர்கள். உலகத்தையும் உலகில் உள்ள பொருள்களையும் படைத்தது யார் ? என்ற *உளவு அதாவது அதன் ரகசியத்தையும்* தெரிந்து கொள்ளாமல்.


மடம்புகு பேய் பிடித்த மனம் போல் மயங்கி அலைந்து திரிந்து கொண்டு உள்ளீர்கள். வெளியே திரியும் மனதை தன் வசப்படுத்தும் வழிதுறை கற்று கொள்ள அறியீர்.மேலும் உலகியலின்  பொய்யான வாழ்க்கையில் உழன்று இன்பம் துன்பம் அடைந்து எண்ணி எண்ணி அதாவது நினைந்து நினைந்து  இளைக்கின்றீர்.

ஏழை உலகியரே *இனிமேலாவது நான் சொல்லுவதை  கேளுங்கள். இனிமேல் தீமையில் இருந்து விலகி நன்மை அடைவீர்கள்* வாருங்கள் என்று மக்களை அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.


உடம்பையும் உயிரையும். *ஆன்மாவிற்குள்  உள் ஒளியாக நடம் புரிந்து இயக்கிக் கொண்டுள்ள தனித்தலைமை தனித் தந்தையாகிய இயற்கை உண்மையாம்  *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம் இதுவே. நீங்களும் ஆண்டவரைத் தொடர்பு கொண்டு என்றும் அழியாத *அருள்* பெற்று இன்பம் துன்பம் பாவங்கள் நீங்கி பூரண புண்ணியம் பெற்று மரணத்தை வென்று 

*சுத்த தேகம் பிரணவதேகம் ஞானதேகம்* என்னும் *முத்தேக சித்தி* பெற்று என்றும் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவும் விலகாமல் அழியாமல் நிலைத்து வாழலாம் வாருங்கள் என ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.


*ஆணவம் மாயை.மாமாயை.பெருமாயை. கன்மம்*  !  


ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள  ஆணவம்.மாயை.

கன்மம் என்னும் மூன்று மலங்கள் என்பார்கள் சைவ சமயத்தார்கள். 


*ஆணவம். மாயை*் *மாமாயை*.

*பெருமாயை. கன்மம்* என ஐந்து மலங்கள் உண்டு என்கின்றார் வள்ளலார்.


ஆன்மாவை வெளியே காட்டாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் ஆன்மாவின் *துணைக் கருவிதான் ஆணவம்* என்பதாகும். 


ஆன்மா பூரண அருள்பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு. *ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் கொண்டு. கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் தருணத்தில் தான் ஆன்மாவைவிட்டு ஆணவம் விலகி செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடும்.* 


ஆன்மாவின் உள் இருந்து உயிர் என்ற ஜீவ ஒளி வெளிப்பட்டு பஞ்ச பூததேகம் எடுப்பதால் ஜீவதேகம் என்று பெயர் வழங்கப்படும். ஜீவ அணுவை வெளிப்படுத்திய பின்பு பஞ்ச பூதங்களில் அனந்த வண்ண பேதமாய் உள்ள  ஏழுவித  அணுக்களான வாலணு.திரவணு.

குருவணு.லகுவணு.அணு.பரமாணு விபுவணு. போன்ற அணுக்களால் பின்னப்பட்டதுதான்  ஜீவதேகம் என்னும் மனிதஉடம்பாகும்.


*ஆண்பாகம் 3 .பெண்பாகம் 4.*


பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி! அகவல்.


இதில் ஆணிடம்  மூன்றுவிதமான அணுக்கள்.

பெண்ணிடம் நான்குவிதமான அணுக்கள் ஒன்று சேர்ந்து கலவையாகி பெண்ணின்  கருவறைக்குள் சென்று.

அந்த மாபெரும் இருட்டு அறையில். அங்குதான் அணுக்களின் கூட்டு சேர்க்கைக்குத் தகுந்தாற்போல் பின்னப்பட்டு ஆண் பெண் என்ற உருவம்  தோற்றுவிக்கப் படுகிறது. 


அணுக்களால் பின்னப்பட்ட  

மனிததேக உடம்பை உருவாக்கியதுதான் *மாயை*. *மாமாயை*

*பெருமாயை என்னும் சக்திவாய்ந்த அணுக் கருவிகளாகும்.*

ஆதலால் தான் அதற்கு *மாயா சக்தி*  *என்றும் சாத்தான் என்றும்* *சைத்தான் பெயர்*. 


*ஆன்மாவை அனுப்பியது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். உயிர் உடம்பைக் கொடுத்தது மாயா சக்திகள்.*


*வள்ளலார் பாடல் !*

*பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை* *நீதான்* *பெற்ற*

*உடம்பு இது* 

*சாகாச் சுத்த உடம்பாக்கி*


ஒரு ஞானத் திருவமுதம் உண் டோங்குகின்றேன் இனி நின்

உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்


அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின்றது நீ

அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க


தெருளாய உலகிடை என் சரிதமுணர்ந் திலையோ

சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.!


மேலே கண்ட பாடலில் உடம்பு கொடுத்தது பெருமாயை என்னும் பெண்பிள்ளை நீ தான் என்பதை தெளிவுப்படுத்துகிறார். எல்லாவற்றுக்கும் காரண காரியமானது  அருட்பெருஞ்ஜோதி தான் என்பதை அறிந்து கொண்டேன். ஆதலால் உம் உபசரிப்பு உபகாரம் எதுவும் எனக்கு வேண்டாம்.

இப்போது அருட்பெருஞ்ஜோதி என்னை ஆண்டு கொண்டு உபசரிக்கின்றது என்கிறார்.


*ஆன்மாவானது உயிர் உடம்பு எடுத்து இந்த பஞ்ச பூத உலகில் பற்றுக்கொண்டு *தேக சுதந்திரம்* *போக சுதந்தரம்* *ஜீவ சதந்திரம்* என்னும் மூவகை சுதந்தரம் பெற்று அனுபவித்து நல்வினை.தீவினை என்னும் பாச வலையில் சிக்கி வாழும் வாழ்க்கையின் செயல் அனைத்தும். ஆன்மாவில் பதிவாகியதற்கு பெயர் கன்மம் என்றும் கன்மபலன் என்றும் சொல்லப் படுகின்றது.


*ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது எதுவோ  *அதுவே மாயா திரைகளாகும்*


*உடம்பையும் உயிரையும் அழிக்காமல் காப்பாற்றும் வழியைத் தெரிந்து கொண்டு மரணம்இல்லாப் பெருவாழ்வு வாழ்வதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்* அக் கொள்கையில் மிகவும் முக்கியமானது. *சாகாக்கல்வி.*

*சாகாக்கலை* கற்றுக் கொள்வதாகும்.


*எனவேதான் சாகாதவனே சன்மார்க்கி  என்கிறார் வள்ளலார்*


*ஆன்மா அழியாது  உயிர் உடம்பு அழிந்துவிடும்.*

*உடம்பைவிட்டு ஆன்மா பிரிந்து விட்டால் பின் பாவம் புண்ணியங்களுக்குத் தகுந்தாற் போல் மீண்டும் பிறப்பு எடுக்கும் என்பது உண்மைதான்*


இறை சிந்தனை உள்ளவர்கள் மற்றும் சித்தர்கள்.யோகிகள் ஞானிகள் போன்றவர்கள் கடுமையான பக்தி.தியானம். தவம்.யோகம் செய்பவர்களின் ஆன்மாவானது. உடம்பு உயிரை விட்டு மரணம் அடைந்தாலும்.

மீண்டும் பிறப்பு உண்டு.


*உடம்பு உயிரோடு  பஞ்ச பூதங்களில் கலந்து கொண்டாலும்.* *சமாதிநிலை. *ஜீவசமாதி நிலை அடைந்தாலும்.* ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு

*மீண்டும் பிறப்பு உண்டு*


ஆன்மா  சொர்க்கம்.

கைலாயம்.

வைகுண்டம்

பரலோகம் 

மோட்சம்  போன்ற இடங்களுக்கு

சென்று கடவுளுடன் கலந்து கொள்வார்கள் என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத பொய்யான கற்பனை கருத்துகளாகும்.

அப்படி எந்த இடங்களும் இல்லை என்கிறார் வள்ளலார். 


*நாம் எங்கிருந்து வந்தோம் என்று தெரிந்து அங்கு செல்வதே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் நிலையாகும் அதுவே முடிந்த முடிவான நிலையாகும்.* அதன் விபரம் தனி கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.


*வள்ளலார் பாடல் !* 

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி


நோவதின்று புதிதன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவ ராலே


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.! 


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே உயர்ந்த அறிவுபெற்ற மனிதஇனம் சாவதும் பிறப்பதும் என்னும் பெரும் நோயிலிருந்தும் அந்த பாவத்தில் இருந்தும் தப்பிக்க முடியவில்லை என்பது புதியது அல்ல.என்றும் உள்ளதால் அந்த நோயை நீக்குவதற்கு மருந்து கண்டு பிடித்தவர்தான் வள்ளலார். 


*அந்த மருந்திற்கு  ஞானமருந்து என்றுபெயராகும்* 


*அந்த மருந்தை வழங்குபவர் யார் ? என்றால் அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*


*ஞான மருந்தும் மருந்து சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து !* 

என்னும் தலைப்பில் 34 கன்னிகளில் பாடல் இயற்றியுள்ளார்.


மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் ஞான மருந்தைப்பற்றி பதிவு செய்துள்ளார்.


உடற்பிணி அனைத்தையும்  உயிர்ப்பிணி அனைத்தையும்

மடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே !


சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்

தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே!


இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியுஞ்

சிறந்த வல்லபமுறு திருவருண் மருந்தே ! 


மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே ! 


நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீர் உடைய நன்மருந்தே ! 


என்றே என்னினும் இளமையோடு இருக்க

நன்றே தருமொரு ஞான மாமருந்தே ! 


மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்

நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே ! 


சிற்சபை நடுவே திருநடம் புரியும்

அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே! 


என்னும் அகவல் வழியாக தகவல் சொல்லுகிறார்.


மனிதனின் தன் அசுத்த பூதகாரிய அணு தேகத்தை.சுத்த பூதகாரிய அணு தேகமாக மாற்ற வேண்டும்.அதற்கு இந்திரிய. கரண. ஜீவ ஒழுக்கங்களை கடைபிடித்து.மனம்.

புத்தி.சித்தம் அகங்காரம் எண்ணம் அவற்றை வெளியே செல்ல வொட்டாமல். உடம்பையும் உயிரையும் இயக்கும்  *சிற்சபையில் உள்ள ஆன்மாவை* இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணை உணர்வோடு ஆன்மாவின் வழியாக தொடர்பு கொண்டு அருள் என்னும் ஞான மருந்து வழங்குவார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால்* *ஆன்மாவில் தோன்றும் அருள் ஞானமருந்தின் வருகையால் வேதியல் முறைப்படி* *அசுத்த பூத காரிய தேகமானது*

*சுத்ததேகம்*

*பிரணவதேகம்*

*ஞானதேகம்*

*என்னும் மூன்று தேக மாற்றங்கள்* *உண்டாகும்.* மூன்று தேகமாற்றமும் ஒன்றாக இணைந்த தேகத்திற்கு *முத்தேக சித்தி* என்றும் சொல்லப்படுகிறது. அதுவே அருள்தேகம். ஒளிதேகம் என்பதாகும்.


*ஒளிதேகம் பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே இறைவனுடன் கலந்து பேரின்பமுடன் வாழமுடியும்.*


*வள்ளலார் பாடல்*! 


இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு *சன் மார்க்கம்ஒன்றே* பிணி மூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


*பிறந்த பிறப்பில் இதிற்றானே நித்திய* *மெய்வாழ்வு*

*பெற்றிடலாம்* *பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!*


ஆன்மா உயிர் உடம்பு வந்த வழியையும் அவற்றின் காரண காரியத்தையும்.

அவற்றை 

படைத்த இயற்கை உண்மை கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே நித்தியமான *பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.


.

திங்கள், 15 மார்ச், 2021

நேர்மைக்கு மகளையும் பலி தருவேன் !

 மகள் இறந்த போது  "நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்" என்று கூறிய  முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய்..இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா!


நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள்  சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்திச் சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச்சுவடுகளைக் காண முடியும்.


இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமமந்திரிகளில் ஒருவராக இருந்தவர் மொரார்ஜிதேசாய் என்பது நாம் அறியாதது அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாகக் கொண்டுவந்து மக்கள் பலரின் சுமையைக் குறைத்தவர் அவர். தாலி செய்வதற்குக் கூட தங்கம் வாங்க முடியாத அந்தக் காலத்தில் தங்கத்தின் விலையைப் பல மடங்காகக் குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று காட்டியவர். இப்படிப்பட்ட மொரார்ஜிதேசாய்க்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி இருந்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? நிச்சயம் முடியாது. தேசாய் போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்களே தவிர தனது சொந்த மக்களுக்காக சுயநலத்தோடு விளம்பரம் பண்ணிக்கொண்டு வாழவில்லை. 


மொரார்ஜி தேசாய் பம்பாய் (குஜராத்தின் பல பகுதிகள் சேர்ந்திருந்த கால கட்டம்) முதலமைச்சராக இருந்தபோது அவரது  மகள் இந்து மருத்துவ கல்லூரி இறுதித் தேர்வு எழுதியிருந்தார். நன்றாகப் படித்திருந்தும் அந்தப் பரீட்சையில் அவர் தோற்றுவிட்டார். மறுகூட்டல் செய்து பார்த்தால் நிச்சயம் தான் வெற்றி அடைவோம் என்று நம்பி அந்தப் பெண் தனது தந்தையாரிடம் அதற்கு அனுமதி கேட்டார்.


தேசாய் அதற்குச் சொன்ன பதில்: "அம்மா நீ ஒரு சாதாரண குடிமகனின் மகளாக இருந்தால் மறுகூட்டல் செய்தால் அதில் வெற்றி பெற்றால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் நீ இந்த மாநில முதல்வரின் மகள். தப்பித் தவறி மறுகூட்டலில் வென்று விட்டாய் என்று வைத்துக்கொள். தேசாய் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மகளை வெற்றியடையச் செய்துவிட்டார் என்று எல்லோரும் பேசுவார்கள்.எனவே நீ சிரமத்தைப் பார்க்காமல் இன்னொரு முறை படித்து பரீட்சை எழுது. இது தான் என் முடிவு" 


அந்தப் பெண் உலகம் அறியாத சிறிய பெண். வாழ்வில் அவளுக்கு அனுபவங்கள் எதுவுமே ஏற்பட்டது இல்லை. தனக்குச் சகலமும் தந்தை என்று வாழ்ந்திருந்தவள் தான் உயிருக்கு உயிராக நம்பிய தந்தை கூட தன் மனதைப் புரிந்து கொள்ளாமல் தனது கஷ்டத்தை உணர்ந்து கொள்ளாமல் தன்னுடைய நிலையிலிருந்தே பேசிவிட்டார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துக்கத்தைச் சொல்லி வெளியே அழக்கூட இயலாத நிலையில், தற்கொலை செய்துகொண்டார். 


தனது  மகளை துடிக்கத் துடிக்கப் பறிகொடுத்த மொரார்ஜி தேசாய் அப்போது என்ன சொன்னார் தெரியுமா? "நான் நேர்மையோடு வாழ்வதற்கு என் மகளைப் பலிகொடுத்து தான் ஆகவேண்டும் என்றால் என் மகளைக் கொடுப்பேனே தவிர நேர்மையைக் கைவிட மாட்டேன்"


மொரார்ஜி பதவியில் இல்லாத நிலையில் அடுக்கு மாடிக்குடியிருப்பில் குடியிருந்தார்.வீட்டு உரிமையாளர் தொடுத்த வழக்கில் மொரார்ஜி காலி செய்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.அதை தாங்க முடியாத அவரது மருமகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அந்தத் தலைவரையும் இன்றைய நமது தலைவர்களையும் ஒப்பிட்டால் உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் எரிமலை வெடிக்கச் சித்தமாக இருப்பதை அறிய முடிகிறது.


ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நான்காம் ஆண்டு, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில்  தினமணி நாளிதழின்  முதல் பக்கத்தில் பிரசுரமாகி இருந்தது ஒரு புகைப்படம்‌.


ஒரு முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவர் காலடியில் சில மூட்டை முடிச்சுகள், பாத்திர பண்டங்கள் கிடக்கின்றன. ஒரு வீடு, பூட்டு பூட்டித் தொங்கியபடி பின்னணியில் தெரிகிறது. புகைப்படத்திற்குக் கீழே குல்சாரிலால் நந்தா வாடகை கொடுக்க முடியாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற ஒரு செய்தி எழுதப்பட்டிருக்கிறது. யார் இந்த குல்சாரிலால் நந்தா?


இவர் பஞ்சாப் மாநிலம் சியால் கோட்டில் பிறந்தவர். மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். விடுதலைப் போரில் மகாத்மா காந்தியோடு பங்குபெற்று பலமுறை சிறை சென்றவர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இந்தியத் தொழிலாளர்களின் அவல நிலையை சர்வதேச அரங்கம் அறிந்து கொள்வதற்கு பல உலக மாநாடுகளில் கலந்துகொண்டு தனது சொல்லாற்றால், பல தலைவர்களை வசீகரித்தவர். விடுதலைக்குப் பிறகு, இந்திய திட்டக்கமிஷனின் துணைத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த குல்சாரிலால் நந்தா தொழிலாளர் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். பிரதம மந்திரிக்கு சமமான அதிகாரம் படைத்த இந்திய உள்துறை மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார். 


ஆச்சரியப்படாதீர்கள்.. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க செல்வாக்கு மிக்க இவர் கடைசி வரையில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கான பென்சன் தொகையான ரூபாய் ஐநூறிலேயே குடும்பம் நடத்தினார். தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டு, அதாவது தான் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பிறகு தியாகிகளுக்கான சலுகையாக சிறிய வீடு தரமுடியுமா என்று அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார். கருணையே வடிவான இந்தியப் பேரரசு அந்தத் தியாகியின் கோரிக்கையை அவர் இறக்கும் வரையில் ஏற்றுகொள்ள வில்லை.


ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக பொறுப்பேற்ற இரண்டு வாரத்திலேயே ஆடி காரில் பயணம் செய்யும் மனிதர்கள் மிகுந்த *இந்த நாட்டில் மந்திரியாகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த ஒருவர், ஐநூறு ரூபாய் பணத்திலே சாகும் வரை வாழ்ந்தார். தனது அதிகாரத்தை செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சல்லிக்காசு கூட தனக்கென்று சேர்க்காமல் நேர்மையாக இருந்தார்* என்பதை நினைத்துப் பார்க்கும் போது உடம்பு சிலிர்க்காமல் இருக்கவில்லை. 


*மொரார்ஜி தேசாய்களும், குல்சாரிலால் நந்தாக்களும் மாண்டு போயிருக்கலாம். ஆனால் அவர்கள் விதைத்து விட்டுப் போன மாண்புகள் இன்னும் மாண்டுவிடவில்லை* ஆயிரம் இடிமுழக்கங்கள், ஆயிரம் எரிமலைகள் தொடர்ந்து தாக்கினாலும் *இந்தியாவின் ஆத்மா எந்த அதிர்வும் அடையாமல் இன்னும் ஜீவித்துக் கொண்டிருப்பது போல தேச தர்மம் என்பதும் இன்னும் உயிரோடேயே இருக்கிறது. அதன் நிழலில் சில தலைவர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது மட்டும் தான் நமது வேலை*

கடவுளைக் குறித்து காமராஜர் கருத்து !

 *கடவுளைக் குறித்துப் பெருந்தலைவர் காமராசர்*


நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன்


அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?


அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,. 


*ஜெருசலத்தல* இருக்கிறவன் *கர்த்தர்* ன்னான், அதிலேயும் சிலபேரு *மேரியக்* கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு *உட்பிரிவுகளை* உண்டாக்கிட்டான்.


*மத்திய ஆசியா*விலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு *நூறு சாமியச்* சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான *திராவிடர்கள்* காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான்.


 எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். 


ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்.  சுருக்கமாக சொல்லனும்னா *காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.*

யார் யாருக்கு எதிலே *லாபமிருக்கோ* அதுல சேந்துக்குறான். 


மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, 

அவன் கஷ்டங்களப் போக்குமா?. 

இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு? 

உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!

இப்படியெல்லாம *அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?*


தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.


*நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?* என்று வினாத் தொடுத்தேன்.


தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். *டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?*


ராமன், கிருஷ்ணன்கிறது *கற்பனைக் கதாபாத்திரம்னேன்*. அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் *கட்அவுட்* வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் *புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும்*. காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி *கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.* அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் *பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க!*


புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். 


நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். *நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்* என்று விளக்கினார்.


*மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?* என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .


தலைவர், நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? *ஏழை* வீட்டுப் பெண்ணுக்கு ஒரு *தோடு , மூக்குத்திக்குக்* கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில *வைர* ஒட்டியாணம் செஞ்சி *காளியாத்தா* இடுப்புக்குக் கட்டி விடறான். *கறுப்புப் பணம்* வச்சிருக்கிறவன் *திருப்பதி* உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் *காசில ரோடு* போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு *பள்ளிக்கூடம்* கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்யமாட்டான்., *சாமிக்குத்தம்* வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். *மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வள

ர்த்திருக்கா?* படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன் என்றார்.


*கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?* இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” என்று கேட்டேன்.*


சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே *பத்ரகாளியம்மன்* கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே *சஞ்சீவரெட்டியோட திருப்பதி* மலைக்குப் போனேன். அவர் *மொட்டை* போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. *போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?* எல்லாம் முடி வெட்டுரவன்  (Barber Shop ) தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். *தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க ஆனா ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?* என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.


*அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?* என்று கேட்டேன்.


*அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை,*  இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்!!!


காமராசர் என்கிற அந்த *மனிதாபிமானி* என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து *ஏன் பள்ளிக்கூடம் போகலியா?* என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது.  

#படித்தேன்_பகிர்ந்தேன்

ஞாயிறு, 14 மார்ச், 2021

வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமானவர்கள் !

 *வள்ளலாரின் சுத்த சன்மார்க்க  கொள்கைகளுக்கு விரோதமானவர்கள்.!*


வள்ளலாரின் சுத்த சன்மார்க்க  கொள்கைகளுக்கு *எக்காலத்திலும்*  எதிரானவர்கள் தடையானவர்கள்.

விரோதமானவர்கள் சமய மதவாதிகள் தான் என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார். 


சாதியும் மதமும் சமயமும் பொய் என்கிறார். 


மேலும்


இது தொடங்கி *எக்காலத்தும்* சுத்த சன்மார்க்கத்தின் *முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், 


*வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்*, எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். 


சுத்த சன்மார்க்கத்தின் *முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். 


என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க வேண்டுதலும்  விண்ணப்பமுமாகும்.


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்கின்ற உண்மை அறியாது சாதி சமய மதங்களைப் பின்பற்றிக்கொண்டு சன்மார்க்கத்தில் இருப்பவர்கள் வள்ளலார் கொள்கைகளுக்கு நேர் விரோதமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


சாதி சமய மதவாத பற்று உள்ள  சன்மார்க்கிகளால்  சுத்த சன்மார்க்க கொள்கைகளை உலகம் முழுவதும் *எக்காலத்திலும்* கொண்டு செல்ல முடியாது. இருட்டடிப்பு செய்து கொண்டே இருப்பார்கள்.


*ஆதலால்தான் வள்ளலார் எக்காலத்தும் முக்கிய தடைகளாக உள்ளது சமயங்கள் மதங்கள் என்ற வார்த்தையை கையாளுகின்றார்*. 

எனவே சுத்த சன்மார்க்க பற்று உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும்.


*கடவுள் இல்லை என்பது ஏமாற்று வேலை!*


*கடவுள் பல உண்டு என்பது பைத்தியக்காரத்தனம் !*


*கடவுள் ஒருவர் என்பதே உண்மை அறிவு !* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

புதிய கட்டிடத்தில் பதவிப் பிரமாணம் !

 புதிய கட்டிடத்தில் பதவிப் பிரமாணம் !  


வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற  தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியானதாகும்.


வெற்றி பெற்றதும்.

மறைந்த முன்னாள் முதல்வர்  டாக்டர் கலைஞர் அவர்களால் வடிவமைக்கப்பட்டு பிரமாண்டமாக புதியதாக கட்டப்பட்டுள்ள சட்டமன்ற கட்டிடத்தில். 


மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும். மற்றும் மந்திரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும். சட்டசபை நிகழ்ச்சிகள் யாவும் அங்கேயே நடைபெற வேண்டும் என்பதே எங்களுடைய அன்பான வேண்டுகோளாகும்.


டாக்டர் கலைஞர் அவர்களின் எண்ணங்களை. திமுக தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு திரு .மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என எண்ணுகிறோம்.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

கல்பட்டு ஐயா நகர்.

வடலூர்.

9865939896.

புதன், 10 மார்ச், 2021

உண்மை உரைக்கின்றேன் !

 *உண்மை உரைக்கின்றேன்!*


*வள்ளலார் பாடல்!*


உண்மையுரைக் கின்றேன் இங்கு வந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்


எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்


தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்து விரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்


கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள் எனப்புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.! 


மேலே கண்ட பாடலில் உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் என்று உலக மக்களை ஆன்மநேயத்துடன் அன்புடன் அழைக்கின்றார் வள்ளல்பெருமான். 


உண்மை உரைக்கின்றேன் என்றால் ?  இதுவரையில் உலகில் தோன்றிய ஆன்மீக அருளாளர்கள்.

மற்றும் ஆன்மீக போதகர்கள் எவரும் *உண்மையான மெய்ப்பொருள்* என்னும் கடவுளை அறிந்து தெரிந்து உணர்ந்து அனுபவித்து உலக மக்களுக்கு நேரிடையாக  உரைக்க வில்லை என்ற உண்மையை வெளிப்படையாக வள்ளலார் சொல்லுகின்றார். 


நான் உண்மை உரைக்கின்றேன் என்றால் மன்றவர்கள் எல்லாம் பொய் சொல்லி உள்ளார்கள் என்பதுதான் உண்மையான அர்த்தம் என்பதை அறிவாலே அறிந்து கொள்ள வேண்டும்.


*அப்படி என்ன பொய் சொல்லி உள்ளார்கள் !* 


*வள்ளலாரே  சொல்லுகிறார்.*


சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!

என்றும்.  


*சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த அபயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி!*

மேலும் 

*எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு* ! என்னும் குறள் வாயிலாக திருவள்ளுவரும் 

சொல்லி உள்ளார். 


*சாதி சமயம் மதங்கள் சொல்லிய அனைத்து கொள்கைகளும் பொய்யானது என்று வெளிப்படையாக சொல்லியுள்ளார் வள்ளலார்*


இங்கே *மெய்ப்பொருள் என்பது எது ? என்றால் தோற்றம் மாற்றம் இல்லாதது. எக்காலத்தும் நிலையாக உள்ளது.தானே தானாகி எல்லாம் தானாக உள்ளது.குடும்பம் குழந்தைகள் இல்லாதது.அறிவு அருள் ஆற்றல் உள்ள மனிதர்களாலும்  உருவாக்க முடியாதது. படைக்கமுடியாதது* 

*உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி*!  

என்கின்ற சமரச சுத்த சன்மார்க்க *சத்தியத்தின்  உண்மை நிலையாக  உள்ளது எதுவோ ! அதுதான் அருள்நிறைந்த தனிப் பெருங்கருணை பொங்கிய பேரொளியாகும் அதுவே *மெய்ப்பொருளாகும்*  


*இயற்கை உண்மையாக*

*இயற்கை விளக்கமாக.*

*இயற்கை இன்பமாக* உள்ளதுதான் *அருட்பெருஞ்ஜோதி* ஆண்டவர் என்பதாகும்.


*சமய மதங்கள் !*


மெய்ப்பொருளான  உண்மைக் கடவுளை காண முடியாமல். தொடர்புகொள்ளும் வழியைத் தெரிந்து கொள்ள முடியாமல்.அறிந்து கொள்ளும் முறை துறை வழி தெரியாமலும்.

உண்மையான கடவுளை உலக மக்களுக்கு தெரியப்படுத்த முடியாமல்.

அவரவர்களுக்கு தோன்றிய விளங்கிய கற்பனைக் கதைகளை உருவாக்கி காவியங்களாக படைத்து. அக்கதைகளின் கதாநாயகர்களையும்.  கதாநாயகிகளையும்.மற்றும் துணை நடிகர்களையும் நடிக்க வைத்து அவர்களுக்கு தத்துவங்களின் பெயர்சூட்டி .

அவர்களையே *பெரிய தெய்வங்களாகவும்*

*சிறிய தெய்வங்களாகவும்*  பொய்யான கற்பனை தத்துவ கடவுள்களை *சமயங்களும் மதங்களும்*  படைத்து உள்ளன. 


அக்கடவுள்களை வணங்கவும் வழிபடவும் உலகம் முழுவதும் தேவாலயங்களையும்.கோவில்களையும்.

சர்ச்சுக்களையும்.

மசூதிகளையும்.

பிரமீடுகளையும்.மற்றும் புத்தமத சங்க கொள்கைகளையும் தோற்று வித்துள்ளார்கள். 


மேலும் அவற்றின் தத்துவ உருவங்களைத் தெரிந்து கொள்ள சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின்  ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம் ஆசிரமம் முதலியவைகளும் படைத்து வைத்துள்ளார்கள்.


*மேலும் அவைகளின் மூலப் பொக்கிஷங்களான* *வேதங்கள்*.

*ஆகமங்கள்.*.

*புராணங்கள்.*

*இதிகாசங்கள்.*

*சாத்திரங்கள் போன்ற நூல்களையும் எழுதி வைத்துள்ளார்கள்*


*வள்ளலார் பாடல்!* 


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே


மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ விழித்து இதுபார் என்றெனக்கு விளம்பிய சற் குருவே


கால்வருணங் கலையாதே வீணில் அலையாதே

காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப் பொருளே


மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்கு நடத்தரசே என் மாலைஅணிந் தருளே.!


மேலும்.


வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதம் ஆகமத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.! 


என்னும் பாடல்களின் வாயிலாக வெளிப்படையாக தெரியப்படுத்துகின்றார்.


*ஆரம்பத்தில் இவை எல்லாம் உண்மை என்று நம்பி பின்பற்றிய வள்ளலார் உண்மைக் கடவுள் யாராக இருக்கும் எவ்வண்ணமாக. எவ்வடிவமாக இருக்கும். என இடைவிடாது தேடினார் உண்மை அறிந்து கொண்டார். பின்னாளில் முன்னாடி  உள்ள சாதி.சமயம் மதங்களும் அவற்றில் போதிக்கப்பட்ட கொள்கைகள் யாவும் பொய் என்றும் அறிந்து கொண்டார்.* 


*வள்ளலார் வரிகள் !*


பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தாது எனை யருட்

செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே! 


பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்

ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி

ஐயரைக் கண்டேன டி.!


என்னும் வரிகளின் வாயிலாக. மக்களின் மனத்தை. அறியாமையை. மயக்கத்தை மூட பழக்க வழக்கங்களை உண்டாக்கிய சாதி சமயம் மதங்களின் கட்டுக்கதைகள் என்னும் பொய்யை அறிந்து கொண்டேன் என்கிறார்.


 *மெய்ப் பொருளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே* வள்ளலாருக்கு வெளிப்படையான உண்மையை உணர்த்தி காட்டிஉள்ளார். ( இதனை விளக்கினால் நீளும் என்பதால் சுருக்கமாக சொல்லுகிறேன்) 


*வள்ளலார் பாடல் !*

அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என்

அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்த சிகாமணியை


மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்


கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்

*கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தே*.! 


என்னும் பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார். உலகப் பற்றை விடுத்து இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக வாழ்ந்து. *வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றும். எல்லா உயிர்களையும் தம் உயிர்போல்  நிணைந்து உணர்ந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்ந்தும்.உயிர்களின் துன்பங்களை போக்கும் செயலோடும் உணர்வோடும் வாழ்ந்துள்ளதாலும்* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருள்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி சுத்த பிரணவ ஞானதேகம் பெற்றுள்ளதால்* 


*அருட்பெரு வெளியில். அருட்பெரு பீடத்து அருட்பெரு வடிவில்.அருட்பெருந் திருவிலே அமர்ந்து.அருட்பெரும் பதியாக.அருட்பெரும் நிதியாக.அருட்பெரும் சித்தி பெறும் அருள் அமுதமாக  அருள் அரசின் ஆட்சியில் அமர்ந்து அருள் ஆட்சி நடத்தும்  *மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு அனைத்து உண்மைகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தி காட்டி காட்டியுள்ளார்.*  


*வள்ளலார் பாடல்!*


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே


வான்உரைத்த மணிமன்றில் நடம்புரி எம் பெருமான்

வரவெதிர் கொண்டு அவன்அருளால் வரங்களெலாம் பெறவே


தேன்உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்து என் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்


ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

*யானடையும்  சுகத்தினை நீர் தான்அடைதல் குறித்தே.!*


என்னும் பாடல் வாயிலாக  நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வார்த்தை என்பதால் உண்மை உரைக்கின்றேன் என்கிறார். 


எனவே சாதி.சமயம்.மதங்களில் இருந்து விடுபட்டு.இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று துன்பம்.துயரம்.

அச்சம்.பயம் இல்லாமல் என்றும் மகிழ்ச்சியுடன்  வாழ்வாங்கு வாழ்வதற்காக உண்மை உரைத்து மக்களை அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார். 


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியை கண்டேன்*!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

செவ்வாய், 2 மார்ச், 2021

துன்மார்க்கம் ! சுத்த சன்மார்க்கம்!

 *துன்மார்க்கம்!*

*சுத்த சன்மார்க்கம்!*


*வள்ளலார் பாடல் !*

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - 


என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!  


மேலே கண்ட பாடலில் துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்.சுத்த சிவ சன்மார்க்கம் தலைப்பட்டேன் என்கிறார் வள்ளலார்.


மார்க்கம் என்றால் வழி என்றும் சாலை என்றும் பொருள்.அதில் ஆபத்தும் துன்பமும் இல்லாத வழியைக் காட்டுவது நல்வழி என்றும் நன்மார்க்கம் என்றும் சொல்லப் படுகின்றது.

ஆபத்துக்களும் துன்பங்களும் நிறைந்த வழியைக்காட்டுவது தீயவழி என்றும் புன்மார்க்கம் என்றும் துன்மார்க்கம் என்றும் சொல்லப்படுகின்து. 


*ஒரு மனிதனுடைய இன்பமும் துன்பமும் அனுபவிப்பது ஆன்மா என்னும் உள் ஒளிதான்.* *ஆன்மாவை மகிழ்ச்சி அடைய செய்விப்பதே ஆன்மீகம் என்பதாகும்*.


*சாதி சமய மதங்கள்!*


துன்மார்க்கம் என்னும் தீயவழியை   தோற்றுவித்தவர்கள் யார்? யார்? என்ற வினாக்களுக்கு விடை கண்டு பிடித்துவிட்டால்

தான் உண்மை தானே விளங்கும். உண்மை விளங்கினால்தான் அன்பும்.தயவும். அறிவும் அருளும் விளங்கும்.அப்போதுதான் ஆன்மா தீயவழியான துன்மார்க்கத்தை விட்டு வெளியே வர வாய்ப்பாக அமையும்.


*உலகில் தோன்றிய சாதிகள் சமயங்கள் மதங்கள் மற்றும் ஆன்மீக சிந்தனை உடைய மார்க்கங்கள் அனைத்துமே* 

*துன்மார்க்கங்கள் என்ற வரிசையில் இயங்கிக் கொண்டுள்ளன*


உயர்ந்த அறிவு பெற்ற மனிதகுலமானது ஆன்ம லாபத்தையும் அருள் லாபத்தையும் அடையும் பொருட்டு.

எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று மனிதகுலம்

புனிதகுலமாகும் பொருட்டும்.

இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்ந்து  மேன்மை அடையும். பொருட்டும் சிறந்த உயர்ந்த சன்மார்க்க சங்க சத்தியத்தின் மூலம்

வழிகாட்டவும்.

உலகில் பல சமயங்கள் மதங்கள்  மார்க்கங்கள் போன்றவற்றை  தோற்றுவித்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.ஏகதேச அருள் பெற்ற மாமனிதர்கள் ஆவார்கள்.


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதகுலத்தை காப்பாற்றுவதற்காக எல்லாம் வல்ல பரம்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பல ஆயிரம் அருளாளர்களை இவ்வுலகிற்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்.அவர்கள் ஆன்மீக சிந்தனையுள்ள அறிவுள்ள அருளாளர்கள் ஆவார்கள். அவர்களால் தோற்றுவித்துள்ளது தான் சாதி சமய மதங்கள் 

என்னும் துன் மார்க்கங்களாகும்.

அவற்றிலும்   ஆயிரக்கணக்கான வேறு வேறு உட்பிரிவினைகளும் தோன்றியுள்ளன.


*மனித குலத்தை அழித்து கொண்டுள்ள சமயங்கள் மதங்கள்* !


*வள்ளலார் பாடல்!*


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்தொரு பொது நெறி எனும் வான்

*புத்தமுது* அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்


தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


உலகம் முழுவதும் பலவிதமான சாதி.சமயம். மதங்களின் கொள்கைகள்.

ஆன்மநேயம் இல்லாத பொய்யான துன்மார்க்கம் சார்ந்த பவநெறிகளான சாதி.சமயம். மதம் போன்ற துன்மார்க்கங்கள் உலகம் முழுவதும் பரவியதால். 

*உண்மைச் செந்நெறியான* *சுத்த சன்மார்க்க நெறியை* *மக்கள் அறிந்து கொள்ளமுடியாமல் உயர்ந்த அறிவுள்ள மனிதகுலம் இறந்து இறந்து.பிறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்* 


எனவே பொய்யான துன்மார்க்கங்களை அழித்து ஒழித்து. மெய்ப்பொருளை விளக்கும் வெளிப்படுத்தும் புதியதோர் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* தோற்றுவித்து.இறைவனால் படைத்த உலக உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக. *உண்மை. ஒழுக்கம். அருள் நிறைந்த பக்குவமுள்ள ஆன்மாவை இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுப்பி வைக்கிறார்.அந்த பக்குவமுள்ள ஆன்மாதான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !*


பேருற்ற உலகிலுறு சமய மத நெறிஎலாம்

பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்பிள்ளை விளை யாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல

பேதமுற்று அங்கும்இங்கும்


*போருற்று இறந்து வீண் போயினார்* இன்னும் வீண்

போகாதபடி விரைந்தே

புனிதமுறு *சுத்தசன் மார்க்கநெறி காட்டி* *மெய்ப்

பொருளினை உணர்த்தி* எல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி 

*நீஎன்பிள்ளை* ஆதலாலே

இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்த வரைஓங்கு

நீதிநடராஜ பதியே.!  


மேலே கண்ட பாடலில் தான் வந்த ரகசியத்தையும் இறைவனால் வருவிக்க உற்றவன்  என்ற உண்மையையும்.

தனக்கு ஆண்டவர் இட்ட 

அருள்தன்மை வாய்ந்த பணிகளையும்.

*புனிதம் உறு சுத்த சன்மார்க்கத்தையும்*  *தோற்றுவித்து*

*மெய்ப் பொருளான* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை* நன்கு உணர்த்தி உலகில் உள்ள எல்லோரும் சுகநிலை அறிந்திட    தெரிந்திட புரிந்திடவும் பணியிட்டுள்ளார்.


முன்னுள்ள பேய்பிடித்த பைத்தியக்காரத் தனமான சாதி சமயம் மதங்கள் பல பேதங்களை உருவாக்கி. *மனித நேயம் இல்லாமல்.*

*ஆன்மநேயம் என்றால் என்னவென்று தெரியாமல்* அன்பு தயவு.இரக்கம். ஒற்றுமை இல்லாமல்  போரிட்டு  சண்டையிட்டு. ஆண்டவரால் படைத்த உயிர்களையும்.

உடம்புகளையும் அழித்து கொண்டுள்ளார்கள்.


*அந்த துன்மார்க்கங்களையும் அவற்றை தோற்றுவித்த கொள்கைகளையும்.தோற்றுவித்தவர்களையும் இருக்கும் இடம் தெரியாமல் அழித்து.ஒழித்து மறைத்து விடவும்* *சுத்த சன்மார்க்கத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதுமே எனக்கு இட்ட முக்கிய பணியாகும் என்கிறார் வள்ளலார்.* 


*சுத்த சன்மார்க்கம் !* 


எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இட்ட கட்டளையை சிரமேற்க் கொண்டு உலகம் முழுவதும் புனிதம் சார்ந்த *சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை* நிறுவிக் கொண்டு வருகிறார்.


*சாதி சமய மதங்கள் அற்ற சுத்த சன்மார்க்கம்!*

*1872.ஆம் ஆண்டு முதல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் தலைமை இடமாக கொண்டு தோற்றுவித்துள்ளார்* சங்கத்தின் தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். சங்கத்தை இயக்குபவர் திருஅருட்பிரகாச வள்ளலார்.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் !*


செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்

சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே - *சுத்தசிவ*

*சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற்போற்றும்

என்மார்க்கம் நின்மார்க்கமே.! 


மேலும் பாடல்.


உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என

*நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 


மேலே கண்ட பாடலின் வாயிலாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவர் மற்றும் நடத்துனர் பற்றிய விபரங்களையும் மேலே கண்ட பாடல் வாயிலாக தெளிவாக  விளக்கியுள்ளார். காரணம் இம்மார்க்கம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.ஆதலால் *என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்* என்றும் சொல்லுகிறார்.


*எனவே ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்தாலே போதும்* 


அன்று முதல் இன்றுவரையிலும் மேன்மேலும் உலகம் முழுவதும் சாதி சமயம் மதம் அற்ற சுத்த சன்மார்க்க சங்கத்தின் கொள்கைகளையும். மனிதகுலம் பின்பற்ற வேண்டிய.இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களையும்.

*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!* என்ற உண்மையையும்.

மக்கள் மனதில் பதிய வைத்தும்.எல்லா நாடுகளிலும் சுத்த சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்தும் செயல்படுத்திக் கொண்டும் வருகிறார் வள்ளலார்.


எனவே முன் உள்ள மார்க்கங்கள் யாவும் கொஞ்சம் காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இது கடவுளின் சம்மதம் மற்றும் ஆணையாகும்.


*இனி உலகம் முழுவதும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரே மார்க்கம் மட்டுமே விளங்கும்*


*வள்ளலார் பாடல்!*


திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங் கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


*இனி உலகம் முழுவதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட உயர்ந்த அன்பு.தயவு. கருணை நிறைந்த திருநெறி ஒன்றான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற பெயரிட்டு வளர்ந்து வருகின்றது.*


உயர்ந்த அறிவு பெற்ற மனித குலம் சாதி.சமயம்.மதங்களை விட்டு விலகி  புனிதகுலமாவதற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து *அகம் என்னும் சிரநடு சிற்சபையில் தோன்றும் அருளைப்பெற்று அனுபவித்து அழியுடம்பை அழியாமல் ஆக்கும் அருள் உடம்பாக மாற்றி மரணத்தை வென்று.முத்தேக சித்தி என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.* 


*வள்ளலார் பாடல்!*


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

*எல்லாம் செய் வல்லசித்தி இறைமையும் பெற் றிடலாம்*


அன்புடையீர் வம்மின்இங்கே *சமரசசன் மார்க்கம்*

*அடைந்திடுமின்* அகவடிவிங் கனகவடி வாகிப்


பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே


வன்புடையார் பெறற்கரிதாம் மணியே *சிற் *சபையின்*

*மாமருந்தே* என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.! 


தீமையை போதிக்கும் சாதி.சமயம்.மதம் சார்ந்துள்ள துன்மார்க்கத்தை விட்டு விலகி. நன்மை பயக்கும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்த்தில் சேர்ந்து அருளைப்பெற்று ஆன்ம லாபம்.ஆன்ம மகிழ்ச்சி.ஆன்ம இன்பம் அடைவோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.