ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இவ்வுலகம் கண்ட உண்மைகள் !

🙏🌺🙏🌻🙏🔥🙏🌺🙏🌻🙏🔥🙏🌺🙏🌻
அருட்பெருஞ்ஜோதி!அருட்பெருஞ்ஜோதி!தனிப்பெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி !

🙏🔥 *சுத்தசன்மார்க்கப் பெருநெறியால் இவ்வுலகம் கண்ட உண்மைகள்* 🔥🙏
🙏🌺🙏🔥🙏🌻🙏🌺🙏🔥🙏🌻🙏🌺🙏🔥
        ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்குப் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை பணிவுடனும் தயவுடனும் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு பொதுமறை என்று புகழாரம் வந்ததற்கு காரணமே ,

அதில் உலகப்பொது நியதிகளை வகுத்து *எந்த ஒரு சாதியையும் எந்த ஒரு சமயத்தையும் எந்த ஒரு மதத்தையும்* குறிப்பிட்டுக் காட்டாமல்
 *ஆதிபகவன்* என்ற எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு கடவுளை மட்டுமே குறிப்பித்துக்காட்டியதனால்தான் இன்று இவ்வண்டம் முழுவதும் உள்ள எல்லா சமூகத்தினரும் அவற்றை ஏற்றுக்கொண்டு பல்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து புத்தகம் வெளியிடுகின்றார்கள்🌻

இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருக்குறள் ஏறத்தாழ பதினெட்டாம் நூற்றாண்டுவரை (1600 ஆண்டுகள்) தமிழ்மொழி ஒன்றில் மட்டுமே இயற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டாகிய தற்காலம் இந்த அளவிற்கு திருக்குறளை உலகமறிய செய்து பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதுகூட நமது *வள்ளல் பெருமானார் நடத்துகின்ற சுத்தசன்மார்க்க அருளாட்சியினால்தான் என்பதை நாம் நன்றாக உணர்தல் வேண்டும் 🌺🙏*

எப்படி திருக்குறள் எந்த சாதியையும் எந்த மதத்தையும் எந்த சமயத்தையும் குறிப்பிட்டுக் காட்டாததினால் அது உலகப்பொது நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோ !அதேபான்று ,
 *எந்த சாதியையும் எந்த சயத்தையும் எந்த மதத்தையும் சார்ந்திடாது ,*

 *ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்னும் பேதம்பாராது,*

 *தேசம்,மொழி ,இனம்,குலம்,தொழில் பாராது ,*

 *உயிர்க்குலம் அனைத்திலும் ஆன்மநேய உணர்வு கொண்டு ,*

 *ஆன்மாவே சபை அதன் உள்ளொளியே பதி அந்தந்த உயிர்கள் எடுத்துள்ள தேகங்களே கடவுள் வாழும் ஆலயங்கள் என்று அறிவால் அறிந்து ,*

 ஒவ்வோர் உயிருக்குள்ளும் இறைவன் உள்ளொளியாய் இருந்து ஆளுகின்றார் என்பதை மதித்து அவ்வுயிர்கள் வினையாலும் அஜாக்கிரதையாலும் படுகின்ற துன்பங்களை தனது துன்பங்களாகக் கண்டு அவ்வுயிர்களின்பால் இரக்கம்கொண்டு அவைகளுக்கு *மனத்தாலும் வாக்காலும் செயலாலும் திரவியத்தாலும் உபகாரம் செய்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கமே இறை வழிபாடு* என்றும்,

 *இச்ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால்தான் கடவுளது மேலான அருளைப்பெற்று முத்தியாகிய மோட்சவீட்டை அடைய இயலும்* என்றும் கூறுவதுடன் ,

*அதற்கும் மேலான மரணமிலாப் பெருவாழ்வு என்னும் அருட்பெருஞ்ஜோதி அனக வாழ்விற்கும் வழிதுறை காட்டுகின்ற திருவருட்பாவே* இனி இச்சுத்தசன்மார்க்க உலகத்தில்  *உலகப் பொது அருள்வேதப் பொக்கிஷ நூலாக திகழ்வதாலும்* அவற்றிற்கெல்லாம் மேலாக , எல்லாம் செய்ய வல்ல *சர்வசித்தியாகிய ஞானசித்தியைப் பெற்றுக்கொண்ட பெருமானே சுத்தசன்மார்க்கத்தை இவ்வண்டம் முழுவதும் முன்னின்று நடத்துவதால்* ,

ஒவ்வொரு நாட்டிலும் உயிர்இரக்கம் கொண்ட சுத்தசன்மார்க்க அன்பர்களைக் கொண்டு ஆங்காங்கு *சங்கம் சபை சாலை* என்று அமைத்து ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து பசிநிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகின்றார்கள் நமது பெருமான் .

தற்போது பலமொழிகளிலும் திருவருட்பா மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்டுவருகின்றோம் இக்காலம் சுத்தசன்மார்க்கத்தின் ஆரம்பகாலம் மட்டுமே இனி ஊழிதோறும் சுத்தசன்மார்க்கமே நிலைத்து நின்று தழைத்திட இருப்பதால்  *திருவருட்பாவை விரைந்து இவ்வண்டம் முழுவதும் அறிந்து கொள்ளும்* என்பதும் நிதர்சனமேயாகும்
 🌺🔥

🙏🌺🌻 *பொதுக் கடவுள்* 🌻🌺🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பளித்தும் ,

காணர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளித்தும்,

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளித்தும்,

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்றும் ,

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுத்தும் ,

தன்னை மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுத்தும் ,

இப்படி *எல்லார்க்கும் பொதுவில் இருந்து நடம்புரிந்து கொண்டும்,*

 *அறிவார் அறியும் வண்ணமாயும் ,*

 *கருதுவார் கருதும் வண்ணமாயும்,*

 *துதிப்பார் துதிக்கும் வண்ணமாயும்*
ஆகிய எல்லா வண்ணமுமாய் இருந்தும் *அவரவர்களுக்கும் பொதுவாய் பொதுவில் இருந்து (சிற்றம்பலம்)* *அருள்பாலிக்கின்ற கருணைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் பதியாகிய அற்புதக் கடவுள் ஒருவரேயாகும்* 🔥🙏

🙏🌺🌻 *பொது ஆலயம்* 🌻🌺🙏
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
 *இந்த சாதி இந்த மதம் இந்த சமயம் என்னும் வாய்ச் சழக்குகள் எதுவும் இல்லாமல்* ,

சமய மதத்தில் ஆளப்படுகின்ற ஆச்சாரங்களாகிய , சாதி ஆசாரம், குலஆசாரம்,
ஆசிரமாசாரம்,
லோகாசாரம்,
தேசாசாரம்,
கிரியாசாரம்,
சமயாசாரம்,
மதாசாரம்,
மரபாசாரம்,
கலாசாரம்,
சாதனாசாரம்,
அந்தாசாரம்,
சாஸ்திராசாரம்,
முதலிய ஆசாரங்கள் எதுவும்இன்றி *எவ்வுயிரையும் தன்னுயிர்போல் பார்க்கும் ஞானசாரத்தை மட்டுமே கொண்டு ,*

ஆன்மாவை சபையாகவும் அதன் உள்ளொளியைப் பதியாகவும் கண்டு அவற்றின் தேகங்களையே ஆலயமாக்கொண்டு வணங்கிட வேண்டும் என்ற உண்மையை இவ்வுலகில் தத்துவமாய் விளக்குவதற்காகவே கோயில்களைக் கட்டிட வடிவத்தில் கட்டி கருவறையில் அவரவர்கள்  சார்ந்துள்ள சமயத்தையும் மதத்தையும்  அடிப்படையாக்கொண்டு அதற்குரிய மூர்த்திகளை வைத்து ஆடை அணிகளன் ஆபரணங்கள் சாத்தி மற்ற எல்லா பூசைகளையும் செய்தபிறகு முடிவிலே *கடவுள் உண்மையை(ஜோதி சொரூபம்)* வெளிப்படுத்தும் வண்ணம் கற்பூர தீபாராதனை செய்து வழிபாட்டின் முடிவிலேதான் ஜோதியை காண்பித்து முடிப்பார்கள் .

அதற்கு , பரமாத்மாவில் ஜீவாத்மா இப்படித்தான் கலந்து பிறவிவேரை  நீக்கிக்கொண்டு முத்திஇன்பமாகிய ஆன்ம மோட்சத்தை அடைதல் வேண்டும் என்று விளக்கமும் கொடுத்தார்கள்.

ஆனால் அனைவருக்கும் அது ஓர் கற்பூரதீபமாகத்தான்  தெரிந்ததே தவிர அதுதான் நமது அகத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆண்டவர் என்ற உண்மையை வெளிப்படையாக ஆச்சாரியார்கள் உண்மையை தெரிவிக்கவில்லை 🌺

அப்படி உண்மை தெரிந்திருந்தால் இந்த மூர்த்திகள் இங்கு எதற்கு என்ற கேள்வி எழுந்திருக்கும் .

அப்படிக் கேள்வி எழுந்திருந்தால் கடவுள் உண்மையை தத்துவமாக விளக்கி காட்டுவதற்காக கட்டப்பட்ட தத்துவங்களையே உண்மைக்கடவுளாக எண்ணி வீண்காலம் கழித்திருந்திருக்க மாட்டார்கள் ,

 *தத்துவம் எல்லாம் கடந்து தத்துவாதீதமாக இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மையை* அறியாமல் அடையவேண்டிய ஆன்ம லட்சியத்தை அடைய முடியாமல்  பிறப்பு இறப்பை நீட்டிக்கொண்டார்கள் .

 *நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரணமான அருளைப் பெற்றுக்கொண்டதனால்* இவ்வண்ட வரலாற்றில் முதன்முதலில் ஓர் ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அடிமுடியைக் கண்டுகொண்டு ,
தனது ஆன்ம லட்சியத்தை பூரணம் செய்தது .

அதன்பொருட்டே அந்த ஆன்மாவிற்கு *கடவுளது முதல் பிள்ளை* என்ற பட்டம் சூட்டப்பட்டது.

 *கடவுளது ஆதி அந்தம் அறிந்துகொண்டதால் அந்த ஆன்மாவிற்கு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மையை வெளிப்படுத்தும் ஆன்ம ஆலயம் கட்டுவதற்கு என்ற அதிகாரமும் வழங்கப்பட்டது* .

இதுவரை இவ்வுலகில்  அட்டமூர்த்தங்களால் ஆன ஆன்ம தேகத் தத்துவ விளக்கத்தை வெளிப்படுத்துவதற்கு என்று,                             *அட்ட மூர்த்தங்களாகிய சூரியன்,           சந்திரன்,                நிலம் ,                              நீர்,                          நெருப்பு,                 காற்று ,              ஆகாயம்* என்ற ஏழு மூர்ந்தங்களுக்கு ஆலயம்* கட்டி வழிபடச் செய்த அருளாளர்கள் ,

 *ஏன் எட்டாவது மூர்த்தமாகிய ஆன்மாவிற்கு என்று இதுவரை ஓர் ஆலயத்தை வெளிப்படையாக யாரும் கட்டவில்லை   ?*

அப்படிக் கட்டியிருந்தால் அந்த ஆலயத்தில் கருவறையில் மூர்த்திகளுக்கு இடமில்லாமல் அருட்பெருஞ்ஜோதி *சுடரைத்தான் நேரடியாக வழிபடச்செய்திருப்பார்கள்.* ஆனால் அதற்குரிய *கடவுளது பூரண அருளை எந்த அருளாளர்களும் இதற்குமுன் பெறாததினால் அவ்வாறு இருக்க நேரிட்டது .*

 *தற்போது வள்ளல் பெருமான் அருள் பூரணத்தைப் பெற்றார்கள்* . *உண்மைக்கடவுளை நேரடியாக் கண்டு களித்து கனிந்து கலந்து அனுபவித்ததால் , வள்ளல் பெருமானரது ஆன்மா பூரண லட்சியத்தை அடைந்தது. அதனால் நமது வள்ளல் பெருமானாருக்கு எட்டாவது மூர்த்தமாகிய ஆன்மாவிற்கு என்று ஓர் ஆலையத்தை  கட்டுவதற்குரிய பூரண அதிகாரம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்பட்டது.*

இதன்பொருட்டே இவ்வண்டத்திலேயே முதன்முதலாக *புண்ணியப் பூமியாம் வடலூர் பெருவெளியிலே சத்திய ஞானசபை என்ற பெயரிலே ஆன்மாவின் தேக விளக்கத்தைக் காட்டும் எண்கோணத்தில் ஆலயம் அமைத்து அதனுள் பதியாகிய கடவுள் உள்ளொளியாய் இருப்பதை அருட்பெருஞ்ஜோதி சுடராய் அமைத்து ,* உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் உண்மை வழிபாட்டை இவ்வுலகிற்கு உணர்த்திடவும் ,
எல்லாருக்கும் *பொதுவானக் கடவுளை பொதுவில் கண்டு வணங்கிடவும்(சிற்றம்பலத்தில்)"* எல்லோரும் சமரசத்துடன் பேதமின்றி தரிசிக்கும் வண்ணம் ஓர் *"ஆன்ம பொது ஆலயத்தை* "  நமது வள்ளல் பெருமான் ஆண்டவர் சம்மதத்துடன் இங்கு அமைத்துக்கொடுத்தார்கள் 🔥🙏

🙏🌻🌺 *பொது நெறி* 🌺🌻🙏
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
தருநெறி  எல்லாம் உள்வாங்கும் சுத்தசன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண்டோங்கும் திருநெறிக்கே சென்று பாரீர் ;

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி இதுவரை பரவியதிதனால்

சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர் செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

 *புன்னெறி தவிர்த்து பொதுநெறி எனும் வான் புத்தமு தருள்கின்ற சுத்தசன்மார்க்கத்*

 *தன்னெறி செலுத்துக* என்றஎன் அரசே தனிநடராஜஎன் சற்குரு மணியே.

    ஆண்டவர் பெருமானிடம் அப்பா ; இதுவரை இவ்வுலகில் பலப்பல நெறிகளைக்கொண்ட *சமயங்கள் மதங்கள் என்கின்ற பிறப்பு இறப்பை நீட்டிக்கின்ற பவநெறியே இதுவரை பரவியிருந்தது .*

அதனால் அவர்கள் மரணத்தை தவிர்த்து அருள்வாழ்வழிக்கும் *பெருமைமிகு திருவருள் நெறியை* அறியாமல் இறந்து இறந்து உலகவர்கள் அதிகம் இருளடைந்தார்கள்.

அதனால் ,
இனி நீ அந்த *பொய்நெறிகளை எல்லாம் தவிர்த்து (நீக்கி) ஞான அமுதத்தை வழங்குகின்ற என்னுடைய நெறியாம் (தன்னெறி) சுத்தசன்மார்க்கத்தை இவ்வுலகில் நடத்துக என்று பெருமானுக்கு ஆணையிடுகின்றார்கள் .*

🙏🔥🌻 பொது நேயம் 🌻🔥🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 *ஒரு மனிதன் தன்னை ஒத்த மற்ற மனிதர்களின்பால் காட்டுகின்ற நேயம் மனித நேயம் .*
அந்த மனிதநேயம் மட்டுமே இருப்பவர்களுக்கு தன்னைப்போன்ற மனிதர்களைத் தவிர மற்றைய விலங்குகள் பறவைகள் மற்றும் உள்ள உயிர்கள் அனைத்தும் படுகின்ற துன்பங்களைக் கண்டு இயற்கையாக இரக்கம் அடையார்கள் .

ஆனால்,
இவ்வுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் தன்னைப்போன்றே இவ்வுலகில் வாழ்வதற்கு இறைவன் தேகம் கொடுத்து பிறப்பிக்கச் செய்துள்ளார்கள். என்பதை அறிவால் அறிந்து அவைகளின் துன்பம் கண்டு வருந்தி அவ்வுயிர்களின்பால் நேயம் கொள்வதென்பது *எவ்வுயிர்களையும் தன்னுயிர்போல் பார்க்கும் ஆன்மநேயமாகும் .*
ஆகலில் *ஆன்மநேயம் உள்ளவர்களே கடவுளின் கருணையாகிய அருளைப் பெறுவதற்கு  தகுதியுடைவர்கள் ஆவார்கள்.* 🌻🔥🙏

🙏🔥🌻 *பொது உணர்வு* 🌻🔥🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்ணால் பார்த்தல்,
காதால் கேட்டல்,
மூக்கினால் நுகர்தல்,
நாக்கினால் சுவைத்தல்,
உடலினால் தொடுஉணர்வறிதல்.

இவையெல்லாம்  *பஞ்சேந்திரியங்களின் வழியாகப் பெறப்படுகின்ற உணர்வுகள் .*
இந்த உணர்வுகளை மேற்கண்ட கண்முதலாகிய ஐந்து கருவிகளின் மூலம் பெறப்படுவதினாலேயே இதற்கு *ஞானேந்திரியங்கள்* என்று பெயர்.

இவைகளின்மூலம் பெறப்படுகின்ற *உணர்வுகளைத்தான்  ஓரறறிவு முதல் ஐந்து அறிவுகள் என்று கூறுகின்றோம் ஆறாது அறிவை பகுத்தறிதல் என்றும் கூறுகின்றோம்* .

 *கடவுள் ஒவ்வோர் உயிர்களுக்குள்ளும் உயிராயும் உணர்வாயும் ஒளியாயும் வெளியாயும் உள்ளார்கள்*

ஆகலில் ,
மனிதர்களாகிய நமக்கு உண்டாகும் இன்பதுன்பங்கள் அனைத்துமே, மலத்தில் புழுத்த புழு முதல் மதம்கொள்ளும்  யானை ஈறாக அனைத்து உயிர்களுக்கும் பொதுவில் உள்ளனவேயாகும் .

 *நமக்கு ஏற்படுகின்ற வலியும் வருத்தமும் அவைகளுக்கும் உண்டு.*

 *தண்ணீரில் அழுகின்ற மீனின் கண்ணீரை யார் அறிவார் ?*

 *தரையில் ஊறுகின்ற எறும்பின் வலியை யார் அறிவார் ?*

 *தழைத்து வளர்ந்த மரம் வெட்டுப்படும்போது அதன் வலியை யார் அறிவார் ?*

 *வெட்டுவதற்காக கட்டிப்போட்டுள்ள  ஆட்டின் உள் உணர்வுகளை யார் அறிவார் ?*

 *இன்பதுன்பங்களை வெளியில்  சொல்ல இயலாத வாயற்ற ஜீவன்களின் வாதனைகளை எல்லாம்  அவற்றைப் படைத்த இறைவன் ஒருவரே அறிவார்.*

ஆனால் அந்த இறைவனுடைய உணர்வு நமக்கும் வரவேண்டும் என்றால்!
இறைவன் குடியிருக்கும் அனைத்து உயிர்களையும் தன்னுடைய உயிர்போன்று பார்க்கின்ற  பொதுஉணர்வு நம்மிடையே இருக்குமானால் மேற்கூறிய அந்த உயிர்களின் இன்பதுன்பங்களை நாமும் அறிந்துகொள்ளலாம்.
அவற்றின் வலியை நாமும் உணரலாம்.

" *பொதுஉணர்வு உணரும்போதலாற் பிரித்தே அதுவெனிற் தோன்றா அருட்பெருஞ்ஜோதி"*
 ......அருட்பெருஞ்ஜோதி அகவல்.
 எனவே பொதுஉணர்வு என்னும்  ஆன்மநேய உணர்வு இல்லை என்றால் இறையுணர்வை பெற இயலாது என்று அறிதல் வேண்டும்🌻🔥🙏

🙏🔥🌻 *பொது விண்ணப்பம்,* 🌻🔥🙏
ஜீவர்கள் தனக்கு உற்ற துன்பங்களை எண்ணியோ !
அல்லது தமக்கு வரஇருக்கின்ற  ஆபத்துக்கருதியோ !
அல்லது தமக்கு உள்ள குறைகளைக் கருதியோ !
அல்லது தாம் எதிர்பார்க்கி்ன்ற சகாயத்தின் பொருட்டோ கடவுளிடம் விண்ணப்பம் செய்துதான் பெறவேண்டியதைப் பெறவேண்டும் .

பெருமான்கூட ஆண்டவரிடம் பல விண்ணப்பங்கள் வைத்துதான் பெறவேண்டியதை பெற்றுக்கொண்டார்கள்.
1:பிள்ளைச்சிறு விண்ணப்பம்,
2:பிள்ளை பெரு விண்ணப்பம்,
3:சமரச சுத்தசன்மார்க்க சத்தியச் சிறுவிண்ணப்பம்,
4:சமரச சுத்த சன்மார்க்கப் பெரு விண்ணப்பம்,
5:சமரச சுத்தசன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம் ,
6:சமரச சுத்தசன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம். முதலிய பலவிண்ணப்பங்கள் இவற்றில் அடங்கும் இவையல்லாது பல வேண்டுகோள் விண்ணப்பங்களும் உள்ளன.
 *இவை எல்லாவற்றிலுமே பெருமான் தமக்கென்று கேட்பது மட்டுமன்றி அவற்றை இந்த உலகவர்கள் அனைவருக்கும் கொடுத்திடல் வேண்டும்என்று பொதுவிண்ணப்பம் செய்வார்கள்,*

 " *இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்திடல் வேண்டும்"*
என்று சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்திலும்,

 *"நீதிநடம்செய் பேரின்பநிதி நான் பெற்ற நெடும்பேற்றை ஓதிமுடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே* " என்று ஆறாம்திருமுறை பிரிவாற்றமையிலும்,

" *எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம் எல்லார்க்கும் செய்யாமை யாது குறித் திசைஎனக்கே* " என்று தனித்திரு அலங்கலிலும் .

இன்னும் பலப் பாடல்களிலும் இவ்வுலக மக்களின்பொருட்டே பெருமான் பொது விண்ணப்பம் செய்து ,அந்த பொது உணர்வால் இறைவனிடம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டார்கள்.
இங்கு நாமும் அப்படி இறைவனிடம் பெறவேண்டியதைப் பெறவேண்டுமானால் *நமக்காக மட்டுமன்றி மற்ற அனைவருக்காகவும் விண்ணப்பம் செய்வதே சுத்தசன்மார்க்க ஒழுக்கமாகும்* 🌻🔥🙏

🙏🔥🌻 *பொது வழிபாடு* 🌻🔥🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
எல்லா உயிர்களுக்கும் பொதுவானக்கடவுளை,
ஆன்மாவே சபை அதன்உள்ளொளியே பதி, அதன்தேகமே ஆலயம் என்று பொதுவில் கண்டுகொண்டு, பொதுநெறி,
பொதுநேயம்,
பொதுஉணர்வு ,
பொது விண்ணப்பம் என்று எல்லாம் சுத்தசன்மார்க்கத்தில்பொதுவில் விளங்கும்போது இனி்இங்கு நமக்கென்று சுயநலவழிபாடு  என்ன இருக்கின்றது ?

" *உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே"*
என்று அகவல் வரியில் கூறியுள்ளது போன்று,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே  எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கின்றார்கள் என்பதும்,
எல்லா உயிர்களும் ஆண்டவருக்குள் அடக்கம் என்பதையும் உணர்ந்து ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு முறையும் செய்கின்ற வழிபாட்டில் எல்லாம் " *எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும்* " என்று விண்ணப்பித்து தன்னால் முடிந்தவரை *ஜீவகாருண்யம் செய்து வழிபடுகின்ற உயிர்இரக்க பொதுவழிபாடே சுத்தசன்மார்க்க வழிபாடாகும்.* 🌻🔥🙏
...நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி போற்றி!
...பெருமான் துணையில்🙏
...தயவுடன் வள்ளல் அடிமை🙏
...வடலூர் இரமேஷ்;

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பொருளைத் தேடும் மனிதர்கள் அருளைத்தேடுவதில்லை!

பொருளைத் தேடும் மனிதர்கள் அருளைத் தேடுவதில்லை !


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.!

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் நாயகன் வார்த்தை என்கிறார் வள்ளலார்.....

பொருளைத் தேடும் மனிதர்கள் அருளை ஏன் தேடுவதில்லை என்ற வினாவிற்கு பதிலைத்தேடி அதன் உண்மை அறிந்து அருளைப்பெற்று.
மரணத்தை வென்று.இறைவனோடு கலந்து அனுபவித்து.

நாமும் அருளைத் தேட வழிகாட்டியவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார்.அந்த அருளை முழுமையாக பெற்றவர்தான் வள்ளலார்....

எந்த கடவுளிடம் அருளைப் பெற வேண்டும் !

கடவுளிடம் தான் அருளைப்பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்..

அருளைக்  கொடுப்பவர் ஒரு கடவுளா ? இரண்டு கடவுளா ? அல்லது நிறைய கடவுள்கள் உள்ளார்களா ?  என்பதை நாம் முதலில் தெரிந்து  கொண்டால் தான் அறிவும் அதன் விளக்கமும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்..

இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களையும்.உயிர்களையும் படைத்தது ஒரு கடவுளா? அல்லது பல கடவுள்களா ? எல்லாக் கடவுளும் சேர்ந்து  படைத்தார்களா ?   என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

பல கடவுள்கள் சேர்ந்து படைத்திருக்க முடியாது.ஒரு கடவுள்தான் படைத்திருக்க முடியும்.என்பதும் எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியும்...

படைத்தது ஒருவர் தான் நிர்வாகம் செய்ய இலாக்கக்கள் நிறைய உள்ளன..

நிர்வாகம் செய்பவர்கள் எல்லாம் கடவுள் ஆக முடியாது.

*ஒரே கடவுள் !*

ஒரே கடவுள் என்றால் அந்த ஒருகடவுள் யார் ? என்பதுதான் அப்போதும் இப்போதும் உள்ள பிரச்சனை களாகும்..

பிரம்மாவா.விஷ்ணுவா.சங்கரனா.மகாதேவனாசிவனா .ஏசுவா. அல்லாவா.புத்தனா.
பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவா தேவர்களா. மூவர்களா.பிசாசுகளா.சைத்தான்களா...மற்றும் வேறு யாராவது இந்த உலகத்தை படைத்தார்களா என்று வினா எழுப்பித் தெரிந்து கொள்வது அறிவுடைய மனிதனின் செயலாகும்...

ஆன்மீகவாதிகளைக் கேட்டால் எல்லா தெய்வங்களும் கடவுள்களும் ஒரே கடவுளைக் குறிப்பதாகும் என்பார்கள் அதற்கு ஒரு உதாரணங்களும் சொல்லுவார்கள்...

எல்லா நதிகளும் கடலில் போய் சேர்ந்து கலப்பதுபோல் நாம் எந்த தெய்வத்தை வழிப்பட்டாலும் எல்லாம் அந்த பரம்பொருளிடம் போய் சேர்கின்றது என்பார்கள்...

அந்த பரம்பொருள் யார் ? என்று கேட்டால்..
ஒவ்வொருவரும் ஒரு கடவுளைச் சொல்வார்கள்..
அதிலாவது ஆன்மீகவாதிகளுக்கு ஒத்த கருத்து உள்ளதா என்றால் ஒருவருக்கும் இல்லை....

*இப்படித்தான் இந்த  ஆன்மீகம் உலகம் உள்ளது*

அருளை கொடுக்கும் கடவுள் யார் ?

எந்தக் கடவுளைத் தொடர்பு கொண்டால் அருள் கிடைக்கும்...

இந்த உலகத்தையும் ஆன்மாக்களையும் உயிர்களையும் அனைத்தையும்  படைத்த கடவுளால் தான் அருள் வழங்க முடியும் ...(பெற்ற தாயால்தான் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும் என்பது போல்)..

*அருள் கொடுக்கும் ஒரே கடவுள் தான். அவர்தான் அருட்பெருஞ்ஜோதி*

என்பதை அருளாலே  அருட்பெருஞ்ஜோதி யைக் கண்டு பிடித்தவர்தான்..
திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்...
அதனால்தான் அவருக்கு திருஅருட்பிரகாச வள்ளலார் என பெயர் வழங்கப்பட்டதாகும்...

அருளைப் பெற்றால் தான் கடவுளைக் காணமுடியும்.என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லி விட்டார்.மனித தேகத்தில் மட்டுமே அருளைப் பெற முடியும்.

அருளைப் பெறுவது எங்கனம் என்பதை காட்டுவதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம்...

சமய மதங்களால்  தோற்றுவித்த சாதி.சமய.மதங்களை விட்டு வெளியே வந்து *பொது நோக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே* இறைவனை தொடர்பு கொள்ள முடியும்.அருளைப் பெறமுடியும் என்பதை அழுத்தமாக சொல்லி உள்ளார்..வள்ளலார்.

*பொது உணர்வு உணரும் போதலாற் பிரித்தே*

*அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி !**

என்று திருஅகவலில் பதிவு செய்துள்ளார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றுக்கும் பொதுவாக உள்ளார்.அதேபோல் நாம் சாதி.சமய.மதம் போன்ற பேதங்கள் இல்லாமல் பொதுவாக வாழ்ந்தால் மட்டுமே இறைவன் நம்மிடம் தொடர்பு கொள்வார்.அருளை வழங்குவார்...

வள்ளலார் பாடல் !

பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

சதுமறை
ஆகமங்கள் எலாம் சாற்றரிய பெரிய

தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்

எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்

இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே

இதுதருணம் என்றேன் நான் என்பதன்முன் கொடுத்தீர்

என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.!

வள்ளலார் பொது நோக்கம் கொண்டு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்ந்தார்  அருளைப் பெற்றார் மரணத்தை வென்றார்..

நாம் மனிதநேயமே  இல்லாமலும்.ஜீவநேயம்(உயிர்) இல்லாமலும் வாழ்கின்றோம்.எப்படி ஆன்மநேயத்துடன் வாழமுடியும்..சிந்திக்க வேண்டும்....

கடவுளை வெளியில் தேடுகின்ற வரை ஆன்மநேயத்தை உணரமுடியாது....

ஜீவ உணர்வால் ஜீவன்களை அறிந்து.ஜீவன்களுக்கு வரும் துன்பங்களைப் போக்க. ஜீவகாருண்யம் செய்தால் மட்டுமே ஆன்ம உணர்வு உண்டாகும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்.

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயத்தில் பொதுவாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்து வாழ்தல் என்று அறிய வேண்டும்.என்கின்றார்.

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆனம உருக்கம் காருண்யம் .உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்.

அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும்.அவ் அனுபவம் பூரணமாதலே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும்...என்று தெளிவாக விளக்குகின்றார்...

புற வழிப்பாட்டை.உதரித் தள்ளி விட்டு ஜீவகாருண்யமே உண்மையான வழிபாடு என்றவர் வள்ளலார்...

ஜீவகாருண்யத்தால் அறிவு விளங்கி மனத்தை புறத்தில் செல்ல வொட்டாமல் ஆன்மாவில் தொடர்பு கொள்ளும் வழி கிடைக்கும் என்றார்...

மனம் ஆன்மாவில் தொடர்பு கொள்வதே சத்விசாரம். என்பதாகும்.

மனம் ஆன்மாவில் தொடர்பு கொண்டால் மட்டுமே எல்லா உயிர்களும் ஒன்றே ! .எல்லா ஆன்மாக்களும் ஒன்றே.! எல்லாவற்றையும் படைத்த இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒன்றே .. என்ற உண்மை அறிவு விளங்கும் .அப்போது
தான் அருள் விளக்கமும் உண்டாகும்

*எனவேதான் ஜீவர்களிடத்தில் இரக்கமும்..ஆண்டவரிடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் என்கின்றார்*

*அப்போது தான் ஆன்மநேயம் என்ன என்பது புரியும்....*

ஆன்மநேயம் என்றால் என்ன என்பதை. புரிந்து தெரிந்து அறிந்து அதன்படி வாழ்ந்தால் மட்டுமே பொது நோக்கம் வரும்.பொது உரிமை தோன்றும்..

பொது உரிமை உள்ள ஆன்மாக்களுக்கு மட்டுமே இறைவன் அருளை வாரி வாரி வழங்குவார்...

அருள் என்பது வெளியில் இல்லை...ஆன்மாவில் தான் வைக்கப்பட்டு உள்ளது..

அவற்றை தொடர்பு கொள்வதற்கு தடையாக  இருப்பது.ஆன்மாவை சுற்றி ஒரு கதவும்.ஒரு பூட்டும் போடப்பட்டு உள்ளது

ஜீவகாருண்யத்தால் பூட்டைத் திறக்கும் திறவு கோல் கிடைக்கும்...சாவியால் பூட்டைத் திறக்க முடியும்.கதவைத் திறக்க முடியாது..
சத்விசாரத்தால் கதவு திறக்கும்...

எனவே தான் ஜீவகாருண்யமும் வேண்டும் .
சத்விசாரமும் வேண்டும்.

இரண்டும் இரண்டு கண்கள் போன்றது..எனபதை புரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பாடல் !

 பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிது நீ

பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்

எட்டிரண்டும் தெரியாதேன்  என்கையிலே கொடுத்தீர்

இதுதருணம் திறந்ததனை எடுக்க முயல் கின்றேன்

அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்

அரைக்கணத்துக் காயிரம் ஆயிரங்கோடி ஆக

வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை

மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.!

ஆன்மா என்ற பெட்டிக்குள் அரும் பெரும் பொருளான அருள் நிறைம்பி உள்ளது...

அவற்றை பெறுவதற்கு ஜீவகாருண்யம்.
சத்விசாரம் என்கின்ற இரண்டையும் சம்மாக கடைபிடித்து வாழ்பவர்களுக்கு உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூட்டையும்.கதவையும் திறந்து உள்ளே சென்று அருளைப் பெற துணையாக இருப்பார்.

அருளைப் பெற்றால் தான் முத்தேக சித்திப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ முடியும்....

விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 20 டிசம்பர், 2018

ஆன்மசுகம் ஆன்ம இன்பம் என்றால் என்ன ?

ஆன்ம சுகம் ஆன்ம இன்பம் என்பது என்ன ?

உலகில் உருவத்தை வைத்து ஆண்பெண் என்பது தவறு...ஆன்மாவாகிய அனைத்தும் பெண் தன்மை கொண்டது .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே ஆண் தன்மை கொண்டவராகும்....

உலகியல் ஆண்பெண் என்ற உறவு ஓர் இனச் சேர்க்கை உறவு என்பது போலாகும்..

ஆன்மாக்கள் யாவும் பெண் இனத்தைச் சார்ந்தது. பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வது உலகியல் இன்பம் அதற்கு சிற்றின்பம் என்பது பெயர்..அவை உடம்பையும் உயிரையும் அழித்துவிடும்.

அதாவது ஆன்மா வாழும் உடம்பின் மீது பற்றுக் கொண்டு காதலித்து அழிந்து கொண்டு உள்ளோம்

ஆன்மாவும் பரமான்மாவும் உறவு கொள்வது தான் உண்மையான இன்பம்.உண்மையான சுகம்.அந்த இன்பம் என்றும் அழியாதது.

உலகியல் இன்பத்தால் சுக்கிலம் சுரக்கும்.சுக்கிலம் தோன்றும்.அவை உடம்பையும் உயிரையும் அழித்துவிடும்.அதற்கு சிற்றின்பம் என்று பெயர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் உறவு கொள்ளும் போது அருள் சுரக்கும்.அருள் தோன்றும்.ஆன்மா அருள் சுகத்தை அனுபவிக்க வேண்டும்

அதற்கு பெயர்தான் பேரின்பம் என்று பெயர்.

எனவே தான் சித்தர்கள்.யோகிகள் ஞானிகள் எல்லாம் உலகியல் திருமணம் செய்து கொள்ளாமல் இறைவனைத் தொடர்பு கொள்ள தேடினார்கள்..இறைவனைக் காதலித்தார்கள் ..

சித்தர்கள் யோகிகள் ஞானிகள் எல்லாம்  எல்லாம் இறைவன் என்று காதலித்தது எல்லாம் உண்மையான இறைவனை அல்ல.அதனால் அவர்கள் ஆன்மாவின் முழு இன்பத்தையும் சுகத்தையும் அனுபவிக்க முடியவில்லை..

வள்ளலார் மட்டுமே உண்மையான இறைவனைக் கண்டுபிடித்தார் காதலித்தார்..திருமணம் செய்து கொண்டார்

அந்த இறைவன் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

வள்ளலார் பாடல் !

காதல் கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ

கண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்

உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.!

உடம்பை கொடுத்த மாயை யான தாய் இந்த இராமலிங்கம் என்ற பெயர் கொண்ட ஆனமாவாகிய பெண் உன்னையே நினைத்து காதல் கொண்டுள்ளாள்.என்று ஆண்டவருக்கு தூது அனுப்புகிறாள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னை முழுமையாக காதலித்த இராமலிங்கபெருமான் வள்ளலாரின் உண்மையான காதலைத் தெரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டார்....

வள்ளலார் பாடல் !

எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்

எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ

நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்

நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே

பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்

பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்

வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கிவளே

வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை திருமணம் செய்து கொண்ட ஒரே பெண் (ஆன்மா) இவள்தான் என்று...இந்திரர்.
நான்முகர்
நாரணர்.மற்றும் பல்லோரும் நல்லோரும் எல்லோரும் போற்றி வாழ்த்துகிறார்களாம்...

திருமணம் செய்து கொண்டது மட்டும் அல்ல..எங்கனம் அனுபவிக்கின்றார் என்பதை வள்ளலார் விளக்குகின்றார்...

வள்ளலார் பாடல் !

கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்

கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்

எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே

இணைந்து இரவு பகல் காணா தின்புறச்செய் கின்றார்

மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்

மற்றுள
எல்லாம் உறங்கும் மாநிலத்தே நமது

பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்

பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.!

என் இறைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரவு பகல் காணாது  இன்பம் உற செய்கின்றார்.என் மகள் செய்த தவமே பெரியதே என்கிறார் தாய்

மண்உறங்கும் மலை உறங்கும் வளைகடலும் உறங்கும் மற்றும் உள்ள எல்லாம்  உறங்கும் மானிலத்தே  என் பெண் உறங்காள் என்று எல்லோரும் பேசி மகிழ்கின்றார்கள்.
என்கின்றார்

என்பெண் செய்த தவம் யாரும் செய்யவில்லையே.

இந்த உலகில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் வள்ளலாரைப்போல்
ஒரே நோக்கத்தோடு ஒரே குறிக்கோளோடு.
உண்மை அன்போடு
. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலித்து திருமணம் செய்து பூரண அருளைப் பெற்றால் மட்டுமே மரணத்தை வென்று..

பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழமுடியும்.

இதுவே ஆன்மாவின் இம்மை இன்ப வாழ்வு....மறுமை இன்பவாழ்வு..பேரின்ப வாழ்வாகும்

இம்மை இன்ப லாபம்.மறுமை இன்ப லாபம் பேரின்ப லாபமாகும்....

வள்ளலார் அழைக்கின்றார் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

என்ற பாடல் மூலம் ஆன்மாக்கள் எல்லாம் அருள்பெற்று இன்பம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்பு.தயவு. கருணையோடு அழைக்கின்றார்....

ஆசை உண்டேல் வாருங்கள் !


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!

விரிக்கில் பெருகும்.....

எல்லா ஆன்மாக்களும் இன்புற்று வாழ்க !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஆட்சி அதிகாரங்கள் மாற்றப்பட்டது !

ஆட்சி அதிகாரங்கள் மாற்றப்பட்டது ! ..

இந்த உலகத்தை ஆட்சி செய்வது மாயை.மாமாயை.பெருமாயை என்பதாகும்.

இவைகள் தான்  பஞ்சபூதங்களை ஆட்சி செய்யும் அதிகாரிகள்..

பஞ்சபூதங்களுக்கும் தனித்தனி தன்மையும் சக்தியும் உண்டு.
ஐந்து பஞ்சபூதங்களும் சேர்ந்தால்தான் ஒரு ஆற்றலையோ உருவத்தையோ உருவாக்க முடியும். பஞ்ச பூத கலவை இல்லாமல் எதுவும் நடக்காது செயல்படாது.

இறைவன் அனுப்பி வைக்கின்ற  ஆன்மாக்கள் வாழ்வதற்காக இவ்வுலகம் படைக்கப்பட்டது.

ஆன்மாக்கள் ஏழு பிறப்பு எடுத்து இறுதிபிறப்பில் மனிதபிறப்பு எடுத்து இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் சட்டம்.நியதி..
என்பதாகும்

ஆனால் இங்கு இந்த உலகத்தில் என்ன தடந்தது.!

இங்கு மனிதபிறப்பில் அருளைப் பெற்ற அருளாளர்கள் மனிதர்களுக்கு நல்வழிக்  காட்டிவிட்டு இறைவன் சட்டப்படி இறைவனுடன தொடர்பு கொண்டு சென்று இருக்க வேண்டும்.

ஆனால் அருளாளர்கள் தங்களுக்குக் கிடைத்த அருள் ஆற்றலை பயன் படுத்தி பொய்யான ஆட்சி புரிய ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களுக்கு கர்மசித்தர்.
யோகசித்தர் .
ஞானசித்தர்
என்று பெயர்

அவர்களின் தனித்தனிக் கொள்கையால் மக்களைத் தங்கள் வசமாக தனித்தனியே மாற்றிக் கொண்டார்கள்.

உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளாமல்.அவரைக் காட்டாமல் அங்கு செல்லாமல்..அவரிடம் மட்டும் அருளைப்பெற்று. பொய்யான கற்பனை கலந்த தெய்வங்களைப் படைத்து விட்டார்கள்.

ஆண்டவரின் அருளைப் பெற்று ஆண்டவரிடம் செல்ல வேண்டிய ஆன்மாக்களை தவறான வழியைக் காட்டி இங்கு ஆன்மீக  அரசியல் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ஒவ்வொரு அருளாளர்களுக்கும் ஒவ்வொரு கட்சி. சின்னம்.பெயர் கொள்கைகள் என வைத்து கூட்டம் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த கட்சிகளில் மக்கள் கூட்டத்தை வைத்து பெரிய கட்சி.சிறியகட்சி.
அதற்கும் கீழ் உள்ள கட்சிகள் எனப் பிரிக்கப் பட்டன.

பொய்யான கதைகளை மக்களிடம் சொல்லி...பொய்யான கடவுள்களை உலகில் அறிமுகப் படுத்தி.ஏதும் அறியாத மக்களை கூறு போட்டு பிரித்து விட்டார்கள்.

அந்த ஆன்மீக கட்சிகள் !

இந்துமதம்.
இஸ்லாம்மதம்.
கிருத்துவமதம்.
பவுத்தமதம்.
ஜைனமதம்

போன்ற பல பெரிய மதங்கள்.பல சிறிய மதங்கள்..

அதில் பல சமயங்கள்.பலசாதிகள்..அதனுள் பல உட்பிரிவுகள் போன்ற கேவலமான.
அருவறுக்கத் தக்க கொள்கைகளைப் படைத்து விட்டார்கள்.

அதில் சமயங்கள் மதங்கள்.மார்க்கங்கள் எனபவற்றின் ஆச்சார.சங்கற்ப விகற்பங்களும்.
வருணம்.ஆசிரமம்.முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களையும்.
காட்டி வைத்து.
பழக்கப்பட வைத்து.மக்களை பின்பற்ற வைத்து விட்டார்கள்

*உயர்ந்த அறிவுள்ள.அருள்பெறும் தகுதியுள்ள மனித்தேகம் கிடைத்த மக்களை அழிவுப் பாதையில் தள்ளி விட்டார்கள்..*.

மாயை !

அதனால் இந்த உலகத்தை நிர்வாகம்  *மாயையானது*.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  ஆணையின்படி.துன்பத்தைக் கொடுத்து நல்வழிக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்தது.

இந்த அருளாளர்கள்  தவறான வழியில் மக்களை அழைத்துக் கொண்டு செல்வதை கவனித்த மாயையானது.

தன் நிர்வாகத்தில் உள்ள.. பஞ்ச பூதங்களைக் கொண்டு.பஞ்ச பூத செயல்களின் வழியாக. அதன் அதன் நியதிகளை  மாற்றி.அதன் காலம்.அளவு.செயல் போன்ற பணிகளை குறைவு செய்து.

பசி.பிணி.தாகம்.
இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற துன்பங்களை கொடுத்து மக்களை மாற்ற முயற்சி செய்தது

அதனாலும் ஆன்மீக அருளாளர்களும் மக்களும் திருந்தவில்லை...
திருத்த முடியாத அளவிற்கு அவர்களின் ஆன்மாவில் அறியாமை அஞ்ஞானம் என்னும்.ஏழு திரைகள்.ஆன்மாவின் உண்மையை மறைத்துக் கொண்டது .

அந்த திரைகளை நீக்க வழி தெரியாமல் அலைந்து அழிந்து.மரணம் அடைந்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.  எப்படியாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக...

உண்மைக் கடவுளான உலகத்தைப் படைத்த கடவுளான *அருட்பெருஞ்ஜோதி.* ஆண்டவரால் அனுப்பி வருவிக்க உற்றவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்....

அவர் சாதி சமய மதங்களைச் சார்ந்த தெருக்கூட்ட பரபில் சார்ந்தவர் அல்ல என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்னும் பாடலில் தெளிவாக சொல்லி உள்ளார்...

மேலும் உண்மைக்கு புறம்பான ஆட்சி அழியவேண்டும் என சாபம் விடுகின்றார்...

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்

தெல்லோரும் வாழ்க இசைந்து.!

கருணை இல்லாமல் செயல்படுகின்ற பொருள் ஆட்சியை ஒழித்து. அகற்றிவிட்டு ..மக்களை காப்பாற்றும் அருள் ஆட்சி வரவேண்டும்.
அருளாளர்கள் ஆட்சியில் அமரவேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்.

அருளாளர்கள் ஆட்சியில் இருந்தால் அருளைப்பெற்று மரணத்தை வென்று நித்திய வாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ வழி காட்ட முடியும் என்பது சத்தியம்.எனவே அருள் ஆட்சி அவசியம் ....

மேலும்.

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

*என்பிள்ளை ஆதலாலே*

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!

மேலே கண்ட பாடலில் உள்ள கருத்துக்களை ஊன்றி படிக்க வேண்டும் விளக்கம் தேவை இல்லை.

நீ என் பிள்ளை என்பதால்.சாதி சமய மதங்களை ஒழித்து.அழித்து மக்களை காப்பாற்றி.புதிய பொது நெறியான தனிநெறியான *சுத்த சன்மார்க்கத்தை நிறுவ  வேண்டும்* என்கிறார் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்....

மேலும்.

 அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

மேலே கண்ட பாடலிலே என்னை அனுப்பியவர் அருளை வழங்கியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை ..மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

மேலும்.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே

வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!

சாதி சமய மதங்களிலே  ஆதியில் இருந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள் இனிமேல் உங்களை அழியாமல் அழிக்காமல் காப்பாற்ற வேண்டியது இறைவன் ஆணை...

எனவே உங்களை எல்லாம் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை உரிமை என வாருங்கள் வாருங்கள் என கூவி கூவி அழைக்கிறார். வள்ளலார்..

மேலும்

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்

சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படித்துப் பாருங்கள்.

சாதி சமயம் மதம் சாத்திரம் எல்லாம் ஒதிக்கித் தள்ள வேண்டிய குப்பைகள் என்கிறார்..

இப்போது ஓதி உணர்ந்த அருளாளர்கள் எல்லாம் சுத்த சன்மார்க்க கொள்கை மட்டுமே உலகின் உண்மையான பொதுக் கொள்கை என தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு... எனைக் கேட்டு பின் பற்றி.பின் தொடர்ந்து வருகின்றார்கள... நீங்கள் வருவதற்கு ஏன் ? தயங்க வேண்டும் என்று அன்போடு தயவோடு.
கருணையோடு அழைக்கின்றார்...

*இதை எல்லாம் ஈரோடு கதிர்வேல் சொல்லவில்லை*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் சொல்லுகின்றார்..

இப்போது இந்தத் தருணம் அருள் ஆட்சியில் வள்ளல்பெருமான் அமர்ந்து கொண்டு சொல்லுகிறார்.

வள்ளலார் பாடல் !

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா விருந்தின்

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி அருள் ஆட்சியில் அமர்ந்து கொண்டு இந்த உலகத்தை ஆண்டு கொண்டு உள்ளவர்தான் நமது பூரண அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை அறிவுள்ளவர் அறிந்து கொண்டு மக்களுக்கு அறிவு புகட்ட வேண்டும்...

மாயை மாமாயை. பெருமாயை பஞ்ச பூதங்கள் கிரகங்கள் யாவும் அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது..என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்....

இன்னும் நிறைய மாற்றங்களை வந்து கொண்டே இருக்கும் மக்களை நல்வழிக்கு கொண்டு செல்லும் காலம் சுத்த சன்மார்க்க காலமாக மாற்றம் அடையும்...

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது !

உலக வரலாற்றில் சாதி சமயம் மதம் அற்ற ஒரே மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம்.

உலக வரலாற்றில் சாதி சமய மதம் அற்ற பொது வழிபாடுதான் வடலூரில் உள்ள சத்திய ஞானசபையின் அருட்பெருஞ்ஜோதி வழிபாடாகும்

விரிக்கில் பெருகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்பதுதான் வள்ளலாரின் தாரக மந்திரம்.

அதற்கு கொல்லா நெறியே உலகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 17 டிசம்பர், 2018

இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார் !

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் !

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்  என்பதைப் புரிந்து கொள்ளாமல் தெரிந்து கொள்ளாமல்..சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் .
சன்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள்.சுத்த சன்மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல்..

வள்ளலாரின் உண்மை வாழ்க்கை முறையை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளாமல் ஒன்று கிடக்க ஒன்றை உளரிக் கொண்டு உள்ளார்கள்...்

வள்ளலார் பிறந்தது முதல் சித்தி பெறுகின்ற வரையில் மக்களை சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியில் கொண்டு வருவதற்கு அளவுகடந்த அரும்பாடு பட்டுள்ளார்.

வள்ளல்பெருமானுக்கு  ஏதோ ஒன்றும் தெரியாதது போலவும்..சமயநெறிக் கொள்கைகளை பின்பற்றி வந்தது போலவும்.பல சமய தெய்வங்களைப் பற்றி பாடியதால்.சமய தெய்வங்களை வணங்கியதால்.சமயப்பாடல்களை எழுதிவைத்து. வழிபட்டுத்தான் மேல்நிலைக்கு வந்த்தாகவும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.

சமயக்குரவர்களை பின்பற்றி வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் வள்ளலாரும் ஒருவர் என நினைத்துக் கொண்டும்.எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்..

வள்ளலார் சமய தெய்வங்களை வண்ங்கியது ஏன்?.பாடியது ஏன்? .எழுதிவைத்ததுள்ளது எதற்காக ஏன் ? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் உண்மை வெளிப்படும்..

*வள்ளலார் நடத்திய நாடகத்தின் ஒருபகுதி !*

மக்களைத் திருத்த வேண்டுமானால் அவர்களின் வழிகளிலே சென்று தான் திருத்த வேண்டும்.திருத்த முடியும் என்பதை உணர்ந்து அறிந்து செயல்படுகின்றார்.

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்று எவருக்கும் தெரியாது.

உலகில் உள்ளவர்கள் எல்லோரும் சாதி சமய மதங்களையே பின்பற்றி வருகிறார்கள்.
அவர்களுக்கு உடனே உண்மைச் சொல்லி புரிய வைக்க முடியாது.சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது வள்ளலாருக்குத் தெரியும்.

எனவே மற்றவர்கள் சமய மதத் தெய்வங்கள்மேல் பாடிய பக்திப்   பாடல்களை விட உயர்ந்த கருத்தாழமுள்ள.எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பக்திப் பாடல்களை பாடியும் எழுதியும் வைத்துள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும்...

மக்களை தன்வசமாக திசை திருப்புவதற்காக.மாற்றுவதற்காக.உண்மையை உணர வைப்பதற்காக. உண்மைக் கடவுளைத் தெரிந்து கொள்வதற்காக.
இறை அருளைப் பெறுவதற்காக.
மரணத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக.

சமய மதங்களில் விழுந்து அழிந்து கொண்டு இருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்காக...

அன்பு.தயவு.கருணைக் கொண்டு மக்களின் அறியாமையை போக்குவதற்காகவே சமய மத தெய்வங்களைப் பற்றி பாடியுள்ளார். வணங்கி உள்ளார் என்பதை தெரிந்து கொண்டால் தெள்ளத் தெளிவாக உண்மை விளங்கும்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்றால் என்ன ? என்பதை அனுபவத்தால் அறிந்து கொண்டால் மட்டுமே அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் விளங்கும்...

வள்ளலாரே சொல்லி எழுதி வைத்துள்ளார்..

வள்ளலார் எழுதி வைத்துள்ளது ! ..

*சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப்பம்*

என்ற விண்ணப்பத்தில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக எழுதி வைத்துள்ளார்..

இறைவன் என்னை வருவிக்க உற்றது ஏன் ? என்பதை தெளிவு படுத்தி உள்ளார்...

ஆழ்ந்த அறிவோடு பொறுமையாக பல தடவைப் படித்தால் தான் தெளிவு பெற்றுக் கொள்ள முடியும்.

*அவற்றில் ஒருபகுதியை உங்கள் முன் பதிவு செய்கிறேன்.....*

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே!

குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது,

பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி
(தமிழ்மொழி) ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

*இங்குதான் அவசியம் கவனிக்க வேண்டும்*

அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து

அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.


*வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னரே அருட்பெருஞ்ஜோதி யை தெரிந்து கொண்டுள்ளார்...*

*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.*

வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்,

அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,

உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.

அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும்

*சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*

அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் *எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும்* கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச்

சுத்த நீண்ட சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத *சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம்* என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்

கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும் *கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி* முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு

அருட்பொருஞ்ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும்

எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.

இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

என்று தன்கையொப்பம் இட்டு எழுதி வைத்துள்ளார்....

இறைவன் வருவிக்க உற்றதின் நோக்கத்தை தெளிவாக விளக்கி உள்ளார்.

வள்ளலார் எழுதி வைத்துள்ள நான்கு விண்ணப்பங்கள் அவர் வாழ்க்கை முறையை தெளிவு படைத்துக்..

ஜீவகாருண்ய  உணர்வோடு படித்தால் தான் அறிவு விளங்கும்.பொது நோக்கத்தோடு படித்தால் தெளிவடையும்.படித்து பயன் பெறுங்கள்.

வாதம் கோபம் சுயநலம் இல்லாமல் சமய மதப் பற்று இல்லாமல் பொது நோக்கத்தோடு படித்து. உணர்ந்து தெளிவு பெற வேணுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஒங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 15 டிசம்பர், 2018

படம் வேண்டாம் என்பவருக்கே படம் வைத்துள்ளார்கள் !

படம் வேண்டாம் என்பவருக்கே படம் வைத்துள்ளார்கள் !

வள்ளலாரின் செயற்கை யான போட்டோ படம் சன்மார்க்க சங்கங்களிலும்.வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களிலும் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

வடலூர் சத்திய ஞானசபையில்.மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் மட்டுமே ஒளிவழிபாடு நடந்து கொண்டு வருகிறது.

வள்ளலார் பிறந்த மருதூர்.தண்ணீர் விளக்கு எரித்த கருங்குழி.வடலூர் தருமச்சாலை போன்ற இடங்களில் வள்ளலாரின் கற்பனை உருவமான படங்களை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்..

மேலும் வள்ளலார் படத்திற்கு சமயச்சின்னமான விபூதியை அணிவித்த படங்களை வைத்துள்ளார்கள்.

*முதலில் வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்களை தூய்மைப் படுத்த வேண்டும்...*

சமயக் கோயில்களைப்போல்..விபூதி பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

இந்த பழக்கம் வழக்கம். விளக்கத்திற்கு எப்படி வந்த்து...

எல்லாமே வள்ளலார் உடன் இருந்த சமய மதவாதிகளின் சூழ்ச்சியா ? அல்லது சமய மத வாதிகளின்  அறியாமையா ? என்பது தெரியவில்லை...

*வள்ளலார் உடன் இருந்தவர்கள் எல்லோருமே சைவ சமய மத வாதிகள்*.

*வைணவர்கள் வள்ளலார் உடன் இருந்து இருந்தால் வள்ளலார் படத்திற்கு நாமம் போட்டு இருப்பார்கள்.*

முதன்முதலில் வள்ளலார் படம் வெளி வந்தது.!

ஆறு திருமுறைகளும்  சேர்ந்த அருட்பாவின் முதற் பதிப்பு 1892 ஆண்டு வெளிவந்துள்ளது.
இதில்தான் முதன்முதலாக இராமலிங்கம் பிள்ளையவர்கள் சரித்திரச் சுருக்கம்  என்று சேர்க்கப்பட்டுள்ளது..

*வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கை எழுத்து இடுவார்*...

இவர்கள் இராமலிங்க பிள்ளையவர்கள் சரித்திரச் சுருக்கம் என்று வள்ளலாருக்குத் சாதிப் பெயரை சூட்டி உள்ளார்கள்...

வள்ளல்பெருமானின் திருவுருவப்படமும் இதில்தான் முதன் முதலில் விபூதியுடன் வெளியிட்டுள்ளார்கள்..அவை அப்படியே மக்கள் மத்தியில் பரவிவிட்டன..

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை சிறந்த முறையில் ஆர்வத்தோடும்.பக்தியோடும் வெளியிட்டுள்ளார்கள்..அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

*இருந்தாலும் அவர்களுக்கு வள்ளலார் சொல்லிய உண்மைக் கடவுள் ஒருவரே ! என்றும்.அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதும் விளங்கிக் கொள்ள முடியவில்லை போலும்.*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது சாதி.சமயம்.மதம் சார்ந்த கடவுள்களில் ஒருவர் அல்ல என்பதை ..அப்போது வள்ளலார் உடன் இருந்தவர்களுக்கு புரியவில்லை....

*சைவ சமயமும் சுத்த சன்மார்க்கமும் ஒன்று என்றே நினைத்து இருப்பார்கள் போலும்*.

இப்போது வளர்ந்து வருகின்ற இளையசமுதாயம் வள்ளலார் கொள்கைகளை ஆழமாக சிந்தித்து .சாதி.சமய.
மதம் அற்ற சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றி வருகிறார்கள்.பாராட்டிற்குரியதாகும்.

வள்ளலார் என்னை வணங்க வேண்டாம் வழிபட வேண்டாம் என்றார்!

வள்ளலார் உருவத்தை பலமுறை போட்டோ எடுத்தும் அவர்படம் போட்டோவில் பதிவாகவில்லை.படம் போட்டோவில் விழவில்லை.ஏன் ? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

போட்டோவில் அவர் உருவம்  விழவில்லை.அவர் உடம்பு ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டார் ஒளி ஒளியில் பதியாது.்்நிழல் இல்லாத உடம்பு எனவே நிழல் படத்தில் விழவில்லை....

அவர் போட்டோவே  இல்லாதபோது எப்படி போட்டோ படம் வெளியில் வந்தது..

வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரான வேலாயுதனார் அவர்கள் .. வள்ளலார் உருவ தோற்றத்தை சொல்லிய வண்ணம் யூகமாக படம் வரைந்து வள்ளலார் படம் மக்கள் மத்தியில் பரவத்தொடங்கியது..

தன்னுடைய படம் இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விட்டுவிட்டு..சமய மதவாதிகள் போல் என்னை வணங்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது வள்ளலாருக்குத் தெரியும்....

அவர் உருவ பொம்மையை மண்ணால் செய்து கொண்டு வந்து வள்ளலார் இடம் காண்பித்தபோது..
பொன்னான உடம்பை மண்ணாக்கி விட்டீர்களே என்று கோபத்துடன் கீழே போட்டு விட்டார்..அந்த பொம்மை உடைந்து சிதறிவிட்டது...

வள்ளலாருக்குத் தெரியும்...இந்த மக்கள் தம்மை கடவுளாக்கி வழிபடுவார்கள் என்று.

பேருபதேசத்தில் வள்ளலார் பதிவு செய்துள்ளது கவனிக்கவும்...!

சமயம் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி.சித்தாந்தி என்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும்.உண்மை அறியாது .சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள் என்கிறார்..

மேலும்.ஆதலால் நீங்கள் அவை ஒன்றையும் நம்ப வேண்டாம்.
எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்பட சொல்லவில்லை.

**தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் என சுற்றுகிறார்கள்**

ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாத தினாலே அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்.என்று நான் உள்ளும் புறமும் பரிதாப்ப் பட்டுக் கொண்டே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்..என்று தெளிவாக வள்ளலார். சொல்லி உள்ளார்

மேலும் ..தெய்வத்தை ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால்.ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அந்தப் பதார்த்ததினுடைய ருசி தெரியாது...

ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது..அதுபோல் .தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லது.தெய்வத்தின் இடத்தில் பிரியம் வராது.

ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற முக்கிய லட்சயத்தில் இருந்து கொண்டு விசாரஞ் செய்து கொண்டு இருங்கள் என்று எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லி எழுதி வைத்துள்ளார்....

இவ்வளவு சொல்லியும் எழுதிவைத்தும்  வள்ளலார் படத்தை வணங்குவதும் வழிபடுவதும். வள்ளலார் சொல்லிய கருத்திற்கு  ஏற்புடையதாகுமா ? வள்ளலார் வார்த்தைக்கு.கொள்கைக்கு  மீறிய செயல் அல்லவா ?

இவற்றை வெளிப்படையாக ஈரோடு கதிர்வேல் சொன்னால் சில சன்மார்க்க அன்பர்களும் .சமயம் சார்ந்த சன்மார்க்க அன்பர்களும் கோபித்துக் கொள்கிறார்கள்.
வருத்தப்படுகிறார்கள் .

கதிர்வேல் பெரியார் கடவுள் மறுப்புக் குரூப்பை சேர்ந்தவன் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

அவற்றைப்பற்றி நான் கவலைப்படுபவன் அல்ல.நான் வள்ளலார் கொள்கையில் என் வாழ்க்கை முழுதும் அர்பணித்துக் கொண்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும்..

வள்ளலார் கடவுள் மறுப்பு கொள்கை உடையவரா?

உண்மைக் கடவுளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே உலகிற்கு வரவைத்தவர்..
வரவைத்த இடம் தான்

****மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகம்***.என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்****

வள்ளலார் பாடல் !

மருணெறி சேர் மலவுடம்பை யழியாத விமலாவா வடிவாக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளைத்

தருணமது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த தயாநிதியை எனையீன்ற தந்தையை என்தாயைப்

பொருணிறை சிற்றம்பலத்தை விளங்குகின்ற பதியைப் புகலரிதாஞ் சுத்த சிவ பூரண மெய்ச் சுத்தக்

கருணை அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை என்கண்ணாற் கண்டு கொண்டேன் கனிந்த கொண்டேன் கலந்து கொண்டேன் களித்து !

என்பன போன்ற பலநூறு பாடல்களில் தெரிவித்து உள்ளார்..

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதி யாகவே உள்ளார்.என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அழுத்தமாக பதிவு
செய்கின்றார் !

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீரந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !

என்று வள்ளலார் முரசு கொட்டி மகிழ்ச்சி அடைகிறார்...

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

வள்ளலார் மனித உருவத்திலோ.போட்டோ உருவத்திலோ.சிலை வடிவத்திலோ இல்லை..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உருவத்தில் உள்ளார் அதாவது அருட்ஜோதி உருவத்தில் ஐந்தொழில்களை செய்ய வல்லவராய் உள்ளார்...செய்து கொண்டும் உள்ளார்.

வள்ளலார் உருவத்தை வைத்து வழிபடுவதால் எந்த பயனும் லாபமும் இல்லை...

அப்படி வணங்கினால் அவை  சன்மார்க்க வழிபாடும் அல்ல ஆகாது..சமய.மதம் சார்ந்த வழிபாடாக மாறிவிடும்.

அருட்பெருஞ்ஜோதி யை வணங்கினால் வழிப்பட்டாலே எல்லா நன்மையும் லாபமும் கிடைக்கும்.

வள்ளலார் உருவத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இல்லை.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உருவத்தில் வள்ளலார் உள்ளார்...

எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வழிபடுவதும் வணங்குவதும் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்  வழிபாடாகும்....

சாதாரண மக்கள் புரிந்து கொள்கிறார்கள்..சமயச்
சன்மார்க்கிகள் திருந்தி மற்றவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.என்று உங்கள் தாழ்வணங்கி கேட்டுக் கொள்கிறேன்..

வள்ளலார் பாடல் !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர் எல்லாஞ் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத்தவர் போலே வேறு சிலபுகன்றே புந்தி மயக்கடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்

தன்மார்க்கமாய் விளங்கச் சுத்த சிவம் ஒன்றே தன்னாணை என்னாணை சார்ந்து அறிமின் நீண்ட !

என்னும் பாடலின் வாயிலாக.. என்னைத் தொழாமல் .எல்லாம் செய்ய வல்ல நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தொழவேண்டும் என்று   சன்மார்க்கி களின் தாழ் வணங்கி ஆணையிட்டு சொல்லுகின்றார்.

 தெளிவாக பதிவு செய்துள்ளார்..நாம்தான் புரிந்து கொள்ளாமல் தவறான பாதையில் செல்லுகின்றோம்....

நாம் அனைவரும் மாறுவோம் மற்றவர்களையும் மாற்றுவோம்..

இப்போது நடந்து கொண்டு. இருப்பது சுத்த சன்மார்க்க காலம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

முன்னாள் மார்க்கங்கள் யாவும்
முடிந்தன

மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது

பன்னுளந் தெளிந்த பதிநடம் ஓங்கின.

என்னுளத்து அருட்பெருஞ்ஜோதி யார் எய்தவே !

என்னும் பலபாடல்களில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

நாம் பின்பற்ற வேண்டியது.ஜீவகாருண்ய ஒழுக்கம்(இதுதான் வழிபாடு )
சத்விசாரம் என்பன போன்ற இரண்டு வழிகள் போதுமானதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

புயல் வருவதற்கு காரணம் !

புயல் வரக் காரணம் !

கடலில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களை தினமும் கொன்று தின்பதுதான் என்பது மக்களுக்கும்.அறிவியலுக்கும். அரசாங்கத்திற்கும் தெரியவில்லை.

வள்ளலார் பாடல் !

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!

வள்ளலார் பாடல் !

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்

எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.!

உயிர்கள் கொலை செய்யப்படுவதையும் அதனால் அவைகள் படும் துன்பத்தையும்  தினமும் கண்டு கண்டு வள்ளலார் உள்ளம் நடுங்குவதை வெளிப்படுத்துகின்றார்.

எல்லா உயிர்களும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களையும் கொலை செய்யாமலும் அதன் மாமிசத்தை உண்ணாமலும்.வாழ்கிறார்களோ

அப்போது தான் இயற்கை சீற்றங்கள் வரவே வராது.

வள்ளலார் பாடல் !

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.!

உயிர்களைக் கொல்லாமல். எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்று நினைத்து உணர்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன் என்கிறார் வள்ளலார்.

இறைவனால் படைத்த உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை.

உயிர்களை பரிக்கும் வரை.மனிதர்களுக்கு துன்பங்களும் சோதனைகளும்  வந்து கொண்டே தான் இருக்கும்..

வள்ளலார் பாடல் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்றார் வள்ளலார்.

வள்ளலார் என்ற சாதாரண மனிதன் சொல்லியது அல்ல.அருளைப்பெற்று மரணத்தை வென்ற மகான் சொல்லியது.

உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே !

 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த்
 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே!

உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் இறைவனை நினைக்க தகுதி அற்றவர்கள் என்கிறார் வள்ளலார்.

இயற்கை பேரழிவு வருவதற்கு அடிப்படை  காரணமே உயிர்களை அழிப்பதுதான்..

உயிர்க்கொலை யை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை அனைத்து சமய மத வாதிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புயல் வருவதற்கு காரணம் !

புயல் வரக் காரணம் !

கடலில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களை தினமும் கொன்று தின்பதுதான் என்பது மக்களுக்கும்.அறிவியலுக்கும். அரசாங்கத்திற்கும் தெரியவில்லை.

எல்லா உயிர்களும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களையும் கொலை செய்யாமலும் அதன் மாமிசத்தை உண்ணாமலும்.வாழ்கிறார்களோ

அப்போது தான் இயற்கை சீற்றங்கள் வரவே வராது.

இறைவனால் படைத்த உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை.

உயிர்களை பரிக்கும் வரை.மனிதர்களுக்கு துன்பங்களும் சோதனைகளும்  வந்து கொண்டே தான் இருக்கும்..

வள்ளலார் பாடல் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்றார் வள்ளலார்.

வள்ளலார் என்ற சாதாரண மனிதன் சொல்லியது அல்ல.அருளைப்பெற்று மரணத்தை வென்ற மகான் சொல்லியது.

உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே !

 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த்
 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே!

உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் இறைவனை நினைக்க தகுதி அற்றவர்கள் என்கிறார் வள்ளலார்.

இயற்கை பேரழிவு வருவதற்கு அடிப்படை  காரணமே உயிர்களை அழிப்பதுதான்..

உயிர்க்கொலை யை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை அனைத்து சமய மத வாதிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 13 டிசம்பர், 2018

வள்ளலார் சொல்லியுள்ள விளக்கம் !

வள்ளலார் சொல்லி உள்ள விளக்கம் !

நம் உடம்பில் உள்ள உறுப்புகள் மற்றும் உறுப்புக்கள் அல்லாது செயல் படும்.சூஷ்ம கரணங்களின் செய்கைகளினால்.
நினைவு.
சொல். செயல் .
உணர்வு.மனம்.புத்தி.
சித்தம் அகங்காரம்.உள்ளம்.
பார்வை.அறிவு
போன்றவை எவ்வாறு மாற்றம்  அடைகின்றன.
செயல்படுகின்றன. என்பதை கீழே கண்ட விளக்கத்தைக் கொண்டு நாம் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.

கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குப் பொருள்:!

சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிகள் அனேகம்; மதத்தில் பிரமம் ஏகம், ஜீவர்கள் அனேகம்;

சாதாரணத்தில் கடவுள் ஏகம், பசுக்கள் (ஆன்மாக்கள்) அனேகம்;

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தில் தனிக்கடவுள் ஏகம், அவ்வருளால் சுத்தமாதி ஞான தேகம் வேறாகப் பெற்ற ஞானிகள் அனேகம்.

கடவுள் ஒன்றும் இரண்டும் ஆதல்
கடவுள் ஒன்றல இரண்டல ஒன்றுமிரண்டுமானார் என்பதற்குத் தாத்பரியம்:

ஒன்றல - கடவுளானவர் ஒன்றாகிய ஞானதேகியும் அல்ல. இரண்டல - சுத்தப் பிரணவதேகியும் அல்ல. ஒன்றுமிரண்டுமானார் - கடவுளானவர் தன்னருளைப் பெற்ற சுத்த ஞானிக்கு ஞானதேகத்தையும் சுத்தப் பிரணவதேகத்தையுங் கொடுக்க முதற் கருவியாக இருக்கின்றார். இதை அனுபவத்தால் குருமுகத்தில் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே குரு ) உணர்க.

வள்ளலார் பாடல் !

ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்

அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்

என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்

ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

உயிர்களின் உயர்வு !

மனித தேகத்தின் மூவகை உயிர்களின் மாற்றம்..

சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆக 3.

சகலர் இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை. செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் இம்மூன்று முள்ளவர்.

பிரளயாகலர்... இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை இவ்விரண்டு முள்ளவர்.

விஞ்ஞானகலர் இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளவர்.

சகலர் ஜீவர்கள்.

பிரளயாகலர் ..கல்ப தேகிகள்.

விஞ்ஞானகலர்.. காலாதீதர்கள்.

சுத்தம் 9, அசுத்தம் 9, ஆக 18.

முக்குணம்!

தானாக நிற்றல் சத்துவகுணம்,

ராகத் துவேஷ சம்பந்தமுடையது ராஜசம்,

சோம்பலாதி ஜீவ இம்சைக் கிடனாவது தாமசம்.

ஆன்மாவின் செயற்கை ராஜோதமங்கள், இயற்கை சத்துவம்.

ஜனன மரண ஏது செயற்கையாலுண்டாம்; இயற்கையான அருளைப் பெற்றவர்களுக்கு.
ஜனன மரணம் என்னும் பிறப்பு இறப்பு உண்டாகாது.

இயற்கையால் சிவானுபவம் பெறலாம். இதை விரிக்கில், ஒவ்வொன்றும்

மும்மூன்றாகும், அனந்தமுமாம்.

சத்துவம். ராஜசம். தாமசம்.

தானாக நிற்றல் சத்துவம்.

இராகத் துவேஷாதிகளோடு கூடியது இராஜசம். ஜீவஹ’ம்சை செய்தல், சோம்பல், நித்திரை முதலியன தாமசம்.

ஆகையா லியற்கையாகிய சத்துவத்தோடு கூடிச் செயற்கையாகிய ராஜச தாமசத்தைச் சிறுகச் சிறுக நீக்க வேண்டியதில்.இயற்கை உண்மையாகிய  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில்.சதா ஞாபகம் செய்யவேண்டியது அவசியம்.

குணவகை
சத்துவம், ராஜஸம், தாமசம் என்று குணங்கள் 3. ஒவ்வொன்றிலும் 3 சேர்ந்து 9 ஆயின. இந்த 9-ம் சுத்தம் அசுத்தம் என்னும் பேதத்தால் 18 ஆயின.

மூன்றாசை
சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம்.

அவஸ்தை மூன்று:

ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி.

இவற்றில் உள்ளம் பித்த உஷ்ணத்தோடு கூடி லலாட ஸ்தானத்தில் நிற்பது ஜாக்கிரம்;

சொப்பனமாவது உள்ளம் வாத நாடியோடு கூடிக் கண்ட ஸ்தானத்தில் இருப்பது;

சுழுத்தியாவது உள்ளம்
சிலேத்தும நாடியோடு கூடி மார்பு ஸ்தானத்தில் நிற்பது.

மூவகை ஞானம்!

ஞானமென்பது மூன்று வகைப்படும். அவை

உபாயஞானம், உண்மைஞானம், அனுபவஞானம்.

இவற்றின் தாத்பர்யம்:

நக்ஷத்திரப்பிரகாசம் போல் தோன்றிய ஜீவஅறிவே உபாயஞானம்;

சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்மஅறிவே உண்மைஞானம்;

எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுளறிவே அனுபவஞானம்.

காட்சிகள் !

ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது இந்திரியக்காட்சி, இந்திரியஅறிவு;

கூடமாக அறிதல் கரணக்காட்சி, கரணஅறிவு;

இன்னதென்று தெரிதல் ஜீவக்காட்சி, ஜீவஅறிவு;

எதையுந் தானாக அறிதல் ஆன்மக்காட்சி, ஆன்மஅறிவு;

இதற்குத்
தோன்றும் அறிவு 1,
தோற்றும் அறிவு 1, தோற்றுவிக்கும்
அறிவு 1,

பதியறிவு 1. பதி அறிவு என்பது கடவுள் அறிவு.

ஆதலால், ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவா என்பதாகும்.

அதை அனுபவிக்க வேண்டுமென எழுந்தது ஆசை என்பதாகும்.

அதன் மயமாதல் காமம் என்பதாகும். அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம் என்பதாகும்.

எந்த வஸ்துவிடத்திலும் மோகமாதிக ளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும்.

அவாமாத்திரம்
இந்திரியக்காட்சி என்பது ஒரு வஸ்துவின் நாமரூபமின்றிக் காணுதல்;

கரணக்காட்சி என்பது அந்த வஸ்துவைப் பற்றல்;

அதை அனுபவிக்கவேண்டு மென்கிற சித்தவிருத்தி உண்டாகிறது ஆசை என்னும் காமம்;

அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகம். ஆதலால் எந்த வஸ்துவினிடத்திலும் மோகம் காமம் முதலியவை யின்றி அவா மாத்திரமாய் இருத்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தில் அவாவும் ஏகதேசத்திலும் கூடாது.

ஞான வகை மூன்று வகைப்படும் !

உபாய ஞானம் - ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.

உண்மை ஞானம் - ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.

அனுபவ ஞானம் - கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.

உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு.

உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு.

அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு.

ஆகையால் கடவுளை உபாய ஞானத்தால் அறியாமல் .உண்மை ஞானத்தால் அறிய வேண்டும். ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.

 பர அபர ஞானங்கள்

ஞானம் பரஞானம் அபரஞானமென இரண்டு.

பரஞான மென்பது முன், சாத்திரஞானம் அல்லது விசாரஞானம், வாசா கயிங்கரியம், சாதனம், வாச்சியார்த்தம்.

அபரஞானமென்பது பின்,

அனுபவ ஞானம், சாத்தியம், லக்ஷியார்த்தம். மேலும் பரம் முன், அபரம் பின் சாத்திரம் முன், அனுபவம் பின்;
சாதனம் முன், சாத்தியம் பின்.

ஆதி - முதல், அந்தம் - கடை,

அநாதி - ஆதி அந்த மில்லாதது.

மூவிடம் (தன்மை முன்னிலை. படர்க்கை)
தமிழில் தன்மை முன்னிலை, படர்க்கை என்பவை யாவை? அவற்றின் கருத்து யாது?

தன்மை, பண்புச்சொல், சார்புமயமாய் இருத்தலைப்பற்றி - தனக்கு மேல் ஒன்றினைச் சார்ந்திருப்பதனால் - பண்புச் சொல் ஆகிறது. தன்னை அறிதல் தன்மை.

முன்னிலை என்பது முன்-நிலை, முன் இடங் கூறினது. அருகில் காண்பது.

ஆனால் மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்பது என்னெனில்:

படர் - படரும்படியான, கை - இடம்,

நிலை - அகண்ட இடம். கை என்பது குறுகிய இடம். ஆதலால் பேதாபேதம் குறிக்கும் நிமித்தம் இரண்டாம் இடத்துக்கு முன்னிலை என்றும், மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்றும் பெயர்கள் வந்தன என அறியவும்...

மேலே கண்ட விளக்கம் நம் உடம்பின் செயல்களும்.செயல்பட வேண்டிய காரியம்.காரணம். காரிய காரணங்களையும் தெளிவாக வள்ளலார் விளக்கி உள்ளார்...

இதன் உண்மை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமானால்.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து. ஜீவகாருண்யம் அவசியம் செய்ய வேண்டும்...

ஜீவ காருண்யம் விளங்கினால் அன்பும் அறிவும் தானாக விளங்கும் என்கிறார் வள்ளலார்....

ஜீவகாருண்யம் செய்து அன்பும் அறிவும் பெறுவோம்.

படித்து பயன் பெறுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

5000.ஆண்டுகளுக்கு பின் சுத்த சன்மார்க்க காலம் !

5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
   

    ஆச்சரியப்பட தயாராக இருங்கள்.

    1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
     [பாகவத புராணம் 12.2.1]

    2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
     மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.

     மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
     [பாகவத புராணம் 12.2.2]

    3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.

     தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.36)

    4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
     கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.

     வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
     [பாகவத புராணம் 12.2.4]

    5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.

     குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
     [பாகவத புராணம் 12.2.5]

    6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
     முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும்.

    வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.
    பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.6]

    7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.

    தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
    [பாகவத புராணம் 12.2.7]

    8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
    இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.

    (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.9]

    9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
     இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.10]

    10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
    [பாகவத புராணம் 12.2.11]

    11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான்.
   [பாகவத புராணம் 12.3.42]

    12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
     நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
     [பாகவத புராணம் 12.3.41]

    13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
     தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.

     தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.
    [பாகவத புராணம் 12.3.38]

    14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.

     இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
     நன்றிகடன் மறக்கப்படும்.
    [பாகவத புராணம் 12.3.36]

  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.
       அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள்.

     போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
   [பாகவத புராணம் 12.3.32]
************

இது உண்மைதான் இந்த சூழலில் இருக்கும் மக்களை காப்பாற்ற வந்தவர்தான் வள்ளலார்.

5000 ஆண்டுகளாக  புரையோடிப்போன சமய மதங்களின் பொய்யான வழிகாட்டுதலால் தான் மக்கள் தவறான வழிக்குத் தள்ளப்பட்டார்கள்...

இனி மக்களைக் காப்பாற்றுவது வள்ளலார் சொல்லிய காட்டிய சுத்த சன்மார்க்க கொளகைகளால் மட்டுமே முடியும்...

இனி புனிதமான சுத்த சன்மார்க்க நெறி உலகம் முழுவதும் பின்பற்றப்படும்....

அன்புடன் ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

அண்டமும் பிண்டமும் !

அண்டமும்.பிண்டமும் !

உண்மையான கடவுளை மறைத்து தத்துவ உருப்புக்களை எவ்வாறு கடவுள்களாக.
இவ்வுலகில்  படைத்துள்ளார்கள்...
என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்..

பொருமையாக படித்து உணருங்கள்....
**இதுவே சத்விசாரம்*....*

மனித உடம்பின் பிண்டானுபவ லட்ஷணம் !

மனித
கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்குமேல் நாற்சதுரமான ஒரு பையுண்டு. அதில் 16 வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது. அதைத்தான் *மானசதடாகம்* மென்று சொல்லுகின்றது. அதாவது (குண்டலினி பை)

16-க்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகிறது. அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் *பொன்வர்ணமாக* இருக்கும். அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும். அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றுக்கு நூற்றிலொரு பங்காக வெகு நேர்மையாக இருக்கும். அதன் வண்ணம் பொன்மயமாயிருக்கும். அதற்கு அதிஷ்டான தெய்வம் *பிரமனென்று* சொல்லப்படும். (பிரம்மா) என்ற தெய்வத்தை படைத்தது இவற்றைத்தான்.

அந்த ஆவி உண்டாகுங் காலம் அவருக்குச் *சகலகாலம் என்றும் அடங்குங் காலம் கேவலகாலம்* என்றும் சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலத்தில் செயற்கையானால் *கருத்தரிக்கும்*. அது சிருட்டியென்று சொல்லப்படும்.( இவற்றை படைத்தல் தொழில் தெய்வமாக படைத்தார்கள் )

அதில் ஆவியுண்டாகத் தொப்புளிலிருந்து ஒரு நாடி தோன்றி அதன் மத்தியில் முகந்து கொண்டிருக்கிறது. அதன் மூலமாய் அக்கினியி ருக்கின்றது. அது *மூலாக்கினி* என்று சொல்லப்படும்.

அது தொப்புளிலிருந்து உண்டாவதால் *விஷ்ணு* தொப்புளிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதன் மேல் இரண்டரை அங்குலத்தில் உந்திக்கு நேராக உட்பாகத்தில் சதுரமாய் ஒரு பையுண்டு. புசித்த அன்னத்தை ஐந்து நாழிகையில் பால் போன்ற ஜலமாய் *ருத்திர பாகத்திலுள்ள ஆவி* பிரித்து அந்தப் பையில் சேர்க்கின்றது.

அதை *க்ஷீராப்தி என்று சொல்லுகிறது. அந்தப் பையிலிருக்கும் பால் போன்ற ஜலத்தின் மேல் ஆலிலை வடிவையுடைய வயிற்றி னுட்பாகம் படிவதனால் அதே வண்ணமாக ஓராடை கட்டியிருக்கும். அதை ஆலிலையென்று சொல்கின்றது. அந்த ஆடையின் மேல் ஒரு நரம்பு வட்டமாய்த் தலை தூக்கியிருக்கின்றது. அதைச் *சேஷனென்று* சொல்லுகின்றது. அந்தக் குண்டலி வட்ட சேஷனென்னும் நாடி மத்தியில் செம்பினது களிம்பு போன்ற *பச்சை மேனியா* யொரு சத்தியுண்டு.

அதை *விஷ்ணுவென்றும்,* அச்சத்தியில் முன் பின் நடுவென்னும் இடத்தில் அதன் காரணச் சத்து *பொன் வண்ணமாயும் அரித்திராவண்ணமாயும் குங்கும வண்ணமாயும்* மூன்று உள்ளன.

*அவற்றைச் சீதேவி, பூதேவி, நீளாதேவியெனச் சொல்லுகின்றது.*

மத்தியில் ஒரு சத்தியிருப்பதால் *விஷ்ணு மார்பில் லக்ஷ்மியை* வைத்தாரென்பது.
குண்டலிவட்டமான நாடி மத்தியிலுள்ள பச்சை வண்ணமான சத்தியிலிருந்து ஒரு நாடி உண்டாய் *இரண்டு தலையாய் விரிந்து ஒரு தலை மேலும் ஒரு தலை கீழும் செல்லுகின்றது*.

இந்த நாடிகளின் மூலமாய் அந்தச் சத்து மேலே செல்லும்போது பசுமைவண்ணமாகவும் கீழ்ச் செல்லும்போது பீதவண்ணமாகவும் செல்லுகின்றது. *மேலே செல்லுவதினால் ஜீவர்களுக்கு ஜீவிப்பும் அதின் சாரம் கெட்டுக் கீழே செல்வதினால் ஜீவிப்பின்மையும் உண்டாகின்றது*.

மேலே செல்வதில் ஜீவிப்புண்டாகுவதால் *காத்தல் தொழிலை* உணர்த்துகின்றது. மேலும் மேலே செல்லுகின்றதை *விஷ்ணு வைகுந்தம் போகின்றா ரென்றும்* கீழே செல்லுகின்றபோது க்ஷீராப்தியில் இருக்கின்றாரென்றும் சொல்லுகின்றது.

கீழே செல்லும் நாடி முன் சொன்ன தொப்புள் நாடியுடன் கலப்புண்டாய் பிரமனுக்கு உஷ்ணத்தைத் தருகின்றது.
அன்றியும் இந்தச் சதுரமான பையின் வலப் பாகத்தில் ஒரு பையுண்டு. அந்தப் பையில் *அக்கினி நிரம்பிக் காரணமாயிருக்கின்றது*.
அது புசித்த வஸ்துக்களின் சத்தைக் கிரகித்துக்கொண்டு அந்தசத்தை மலமாக இடது பாகத்தில் சேர்த்து விடுகின்றது.

 கிரகித்த சத்தை முன்சொன்ன க்ஷீராப்திப் பையில் சேர்க்கின்றது. இதை *வடவாக்கினி* என்று சொல்லுகின்றது. மேலும் இந்த வெள்ளை ஜலத்தை அக்கிரமமின்றிச் சமப்படுத்திப் *பிரளயம்* வாராது காத்துக் கொண்டிருக்கின்றது. *இந்த உதராக்கினி குறைவுபட்டு க்ஷீராப்தியின் ஜலத்தின் தரங்கெடுமானால் நோயுண்டு.*
இந்தப் பையாகிய ஸ்தானத்திற்குமேல் இரண்டரை அங்குலத்தில் இருதயத்தில் *மலர்ந்த வாழைப்பூப்போல் ஒரு பையுண்டு. அது வெண்மையாயிருக்கும். இதைக் *கைலாயம்* மென்று சொல்லுகின்றது. இந்தப் பையுள் முன் சொன்ன காற்றில் *பதினாயிரங் கோடி பங்கிலொரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவியிருக்கும். இதற்குக் *காரணாக்கினி* யென்று பெயர். இவ்வக்கினியைக் *காலசந்திர ருத்திரமூர்த்தி* யென்பர். இப்பையின் அருகில் இடப் புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பையுண்டு. அந்தப் பை பசுமை வண்ணமாயிருக்கும். அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய்க் *காரணாக்கினி* அதிகப்படுத்தாமலும் குறைவுபடுத்தாமலும் சமப்படுத்தி வைக்கும். இந்த மலர்ந்த பைக்கும் கீழிருக்கும் க்ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடியுண்டு.

அதன் மூலமாய் அதற்கு உஷ்ணங் கொடுத்து நிலையில் வைக்கும். இதனால் *ருத்திரனிடத்தில் விஷ்ணு பிறந்ததாய்ச் சொல்லுகின்றது.* இந்த நாடி மூலமாக விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் பிரமனிடமாகிய இந்திரியத்திலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் *ருத்திரனைச் சம்ஹார கர்த்தா வென்று சொல்வது.*

இந்த அக்கினிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு. அதில் மூன்றாகப் பிரியும் கிளையுண்டு. அது மூல முதல் பிரமரந்திரம் வரையில் இடம் வலம் நடு வென்று கத்தரிமாறலாய்ப் *பிராணாபானனுக்கு* இடங்கொடுத்து ஊடுருவி நிற்கும். இந் நரம்புகளுக்குச் *சோம சூரி யாக்கினி* யென்று பெயர்.
இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு,

*வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன.* வலத்திலுள்ளது *கணபதி* யென்றும், இடத்திலுள்ளது *சுப்பிரமணிய ரென்றும்* பெயர் சொல்லுவது. மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும்.

இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் *கணபதியென்று பெயர்.* மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் இரண்டிலும் *சித்திதத்துவம் புத்திதத்துவம்* உண்டு. இடத்திலுள்ள

ஆறு கவருடைய நாடிக்குக் கீழ் அனந்த வண்ணமான நாடி ஒன்றுண்டு. இதற்கு *மயூரமென்று பெயர்.* இந்த நாடியின் அசைவால் *எழுபத்தீராயிரம் (72,000) நாடியும் அக்கிரமமின்றி நிலைபெறுகின்ற படியால், இதற்குச் *சேனாதிபதி* யென்றும் பெயர்.

மேலும் வலது புறத்து நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரையும் இடதுபுறத்து நாடிக்கு நாற்பது மாத்திரையும் அளவு வித்தியாசமிருப்பதால், இவர்களைச் *சகோதரர்களாகச்* சொல்வதுமன்றி, மேற்படி ருத்திராம்சமாகவே சொல்லுகின்றது.

இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் *மகேசுவரனும்,* அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் *சதாசிவமும்,* அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் *விந்துவும்*, அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் *நாதமும்,* அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் *பரவிந்துவும்,* அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் *பரநாதமும்,* அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் *திக்கிராந்தம்* *அதிக்கிராந்தம்* *துவாதசாந்தம்* முதலானவைகளும்,

அதீதத்தில் *சுத்தசிவமு முள.* மகேசுவர ஸ்தானம் முதல் விந்துஸ்தானம் வரையிலும் முன் போல் இடம் நாடி தொழில் வண்ணம் முதலியவு முள்ளன.

நாதஸ்தானந்தொட்டுத் துவாதசாந்தம் வரையில் அனுபவவெளியாகிய *ஆகாச பேதமயமா யிருக்கும். அதற்குமேல் அதிகாரண மாத்திரமாய் *ஆன்மானுபவத்தில்* விளங்கும்.
மேலும் பிரமஸ்தானந் தொடங்கிச் சுத்தசிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம், இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் அதற்கு மேல் *அக்கினி* வண்ணமாயும் இருக்கும். இது அடியிற் பருத்து வர வர நேர்மையாய், *இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கணுவாய், ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய், ஆன்மக்காட்சியில் அருகித் தோன்றுவதாய், இரண்டற நிற்கும்.* இதற்குச்சிவாகார *பூரண ஸ்தம்பம்* என்று பெயர்.

முன் சொன்ன இருதயாக்கினிப் பை அக்கிரமமாய் விரிந்து, விசேஷ அக்கினி ஜ்வாலை விசிரிம்பித்துக் கீழிருக்கும் க்ஷீராப்திப் பையிலிருக்கும் ஜலத்தைச் சுருட்டிக்கொள்ள, *ஜீவனுக்கு மரண காலம் நேரிடும்*. மேற்படி பை விரிவதற்கு *ஆதாரம் அருந்தல் பொருந்தல்*.இவை சமமானால் மிருத்தியு வராது ! மரணம் வராது..

இதேபோல் அண்டத்திலும் உள்ளன..

மேலே உள்ள மனித உறுப்புகளையும்.இந்திரியம்.கரணங்கள்.ஜீவன்.போன்றவற்றை புறத்திலே கடவுள்களாக படைத்துள்ளார்கள்..

அகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளிக்கு ஆலயம் எங்கும் இல்லை..

அகத்தில் உள்ள ஆன்ம ஒளி விளங்கும் இடமாக வடலூரில்.
*சத்திஞானசபை* யை வள்ளலார் தோற்றுவித்துள்ளார்.

அதுதான் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை விளக்கமாக உலகிற்கு தந்துள்ளார் வள்ளல்பெருமான்....

எனவே அண்டங்களையும்.
உலகங்களையும்
உயிர்களையும்.கிரகங்களையும்.ஆன்மாவையும். படைத்த இறைவன் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.! என்ற உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யை வழிபடுவதே .
மனிதகுலத்தின் அறிவு சார்ந்த செயலாகும்...

வள்ளலார் பாடல் !

அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்

அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்

பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்

பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்

இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்

எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்

சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.!

மேலே கண்டபாடலை ஊன்றி படிக்கவும்.

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 5 டிசம்பர், 2018

அமுதம் சுரக்கம் வழிகள் !

அமுதம் சுரக்கும் வழிகள் !

மனிதர்களாக பிறப்பு எடுத்தவர்கள் அடையக்கூடிய லாபம் .
பெறக்கூடிய லாபம் ஆன்மலாபம் என்பதாகும்..

நாம் ஜீவ லாபமாகிய மண்ணாசை.
பெண்ணாசை.
பொன்னாசை
என்னும் சிற்றின்ப லாபம் மட்டுமே பெற்று.அற்ப மகிழ்ச்சி அடைந்து வாழ்ந்து இறுதியில் மரணம் அடைந்து. மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளோம்.

இது மனித வாழ்க்கை அல்ல ! மனிதர்களுக்கு அரிய பெரிய அறிவையும். அருளையைம் பெற்றுக் கொள்வதற்காகவே இறைவனால் கொடுக்கப்பட்ட உயர்ந்த பிறவி மனிதப்பிறவியாகும்.

ஆன்ம லாபம் !

மனித தேகத்தில் ஆன்மா இயங்கும் இடத்தை தெரிந்து கொண்டு. இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்..

தொடர்பு கொள்ளும் வழியைக் கண்டுபிடித்து.அதற்கு சுத்த சன்மார்க்கம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்...

இடைவிடாது தொடர்பு கொள்வதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ..அவற்றை எல்லாம்.பற்றுஅற அப்புறப்படுத்த வேண்டும்.

அந்த தடைகள் என்ன என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்

வள்ளலார் சொல்லுவதை கவனமாக படித்து பின்பற்ற வேண்டும் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்தசன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.
மார்க்கங்கள்.எனபவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம்.ஆசிரமும் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் *அருள்* செய்தல் வேண்டும் .

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள்.
எக்காலத்தும்.
எவ்விடத்தும்.
எவ்விடத்தும்.
எவ்வளவும்.விலகாமல் *நிறைந்து* விளங்க செய்வித்து அருளல் வேண்டும்.

என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்...அதன்படி ஒழுக்க நெறியில் நின்று பின்பற்றினால்.
ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும் இரகசியத்தை.(உளவை) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்துவார்....

உளவினி லறிந்தா லொழிய மற்றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி!.

உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண

உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்

கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தள்ளா

தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி

எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!

மேலே கண்ட பாடல் வரிகளில் உண்மை வெளிப்பட சொல்லியுள்ளார்...

அவற்றை எல்லாம் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றினால்.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை. அஞ்ஞானம் என்னும் திரைகளாகிய கதவுகள் ஒவ்வொன்றாக திறந்து ஆன்மாவின் வழியாக அருள் சுரக்கும்..

அருள் அமுதம் ஐந்து சுவைகளாக இருக்கின்றது! 

ஆண்டவரிருக்கும் பொது ஸ்தானங்கள் 5. இவைகள் பஞ்ச சபைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

பிருதிவி - பொற்சபை
அப்பு - ரஜிதசபை
தேயு - தெய்வசபை
வாயு - நிருத்தசபை
ஆகாயம் - சிற்சபை

பஞ்ச அமுத ஸ்தானங்கள்
சுத்த அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போலிருக்கும்.

2-வது அமுதம் உள் நாக்குக்குமேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்.

3-வது மூக்கு முனையில் காய்ச்சின சர்ப்பரைப் பாகு போலிருக்கும்.

4-வது நெற்றி நடுவில் முதிர்ந்த மணிக் கட்டியாகவிருக்கும்.

5-வது மகா இனிப்புள்ள மணிக் கட்டியாகவிருக்கும்; அதிக குளிர்ச்சியாகவுமிருக்கும்.

இந்த 5-வது அமுதத்தை யுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்.

பஞ்ச அமுத ஸ்தானங்கள்
யோகானுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கு நுனியில். பக்குவஞானத்தால்.
சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால்.

2-வது புவனாமுதம் - நாக்குமத்தியில், பக்குவ கிரியையால், ஸ்திதி
பிரஞ்ஞை யுணர்ச்சியால்.

3-வது மண்டலாமிருதம் - நாக்கினடியில், பக்குவஇச்சை, சம்சார உணர்ச்சியால்.

4-வது ரகசியாமிருதம் - உள் நாக்கடியில், பக்குவதிரோபவம்.

5-வது மௌனாமிருதம் - உண்ணாக்கு மேல், பக்குவ அனுக்கிரகம்.
அனுக்கிரகம், சுபாவத்தினது அனுபவம், துரியநிலை.!

மேலே உள்ளபடி ஐந்து வகையான அமுதம் ஆன்மாவில் இருந்து  சுரக்கும்..

இதில் ஐந்து அமுத சுவைகள் உள்ளன.

ஐந்தாவது அமுதம் கிடைப்பது ரொம்ப சிரமம்..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை யால் மட்டுமே கிடைக்கும்...

ஐந்து வகையான அமுதமும் சிந்தாமல்.சிதறாமல் பெற்றவர் வள்ளல்பெருமான் ஒருவரே !

சித்தர்கள்.யோகிகள்.ஞானிகள் பெற முடியாத அமுதத்தை.
மனிதர்களாகிய நாம் ஜீவகாருண்யத்தாலும். சத்விசாரத்தாலும். எளிதாகப் பெறுவதற்குண்டான வழியைக் காட்டி உள்ளார் வள்ளலார்..

ஐந்து அமுதம் சொல்லியதின் உளவை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..தொடரும்...

முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

மரணத்தை தடுக்கும் மாமருந்து !

மரணத்தை தடுக்கும் மாமருந்து !

உலகில் தடுத்து நிறுத்த முடியாத பெரும்பிணி மரணம் என்னும் பெரும்பிணி.

அவற்றை தடுக்கும் மருந்தை கண்டு பிடித்தவர் தான் வள்ளலார்.

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!

மரணம் வராமல் காப்பாற்றும் மருந்திற்கு பெயர் ஞானமருந்து என்னும் அருள்மருந்து.

இந்த மருந்து மனித ஆன்மாவில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கின்றது.

மறைப்புதான் ஆன்மாவைச் சுற்றியுள்ள அறியாமை .அஞ்ஞானம் என்னும் திரைகள்.

திரைகளை நீக்குவதற்கு வள்ளலார் சொல்லியுள்ள இந்திரிய கரண ஒழுங்கங்களை பூரணமாக கடைபிடிக்க வேண்டும்..

கடைபிடித்தால் திரைகள் நீங்கப்பெற்று.ஆன்மாவின் வழியாக அருளைப்பெற்று மரணத்தை வெல்லலாம்.

திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

வள்ளலார் திரைமறைப்பை எல்லாம் நீக்கி அருளைப்பெற்று மரணத்தை வென்றார்..

நாமும் முயற்சி செய்தால்  மரணத்தை வெல்லலாம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 3 டிசம்பர், 2018

அருட்பெருஞ்ஜோதி !

🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங் கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

🙏🔥🔥 நிறை அருள் பூரணத்தால் பெற்ற தெருள் நிறை திருவருட்பா 🔥🔥🙏
🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼
       ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🔥🙏
   
கலியுக முடிவு சுத்தசன்மார்க்க யுகம் தொடக்கம் 🌺

கர்மசித்தர் ஆட்சி முடிவு ஞானசித்தர் ஆட்சி தொடக்கம்🌺

உருவ வழிபாடு முடிவு ஜோதி வழிபாடு தொடக்கம்🌺

சாதி சமய மதங்களின் முடிவு சமரச சுத்தசன்மார்க்கத்தின் தொடக்கம்🌺

மனிதநேயம் கடந்த ஆன்மநேயம் வெளிப்படுதல்🌺

கோயிலில் சென்று இறைவனிடம் பத்தி செய்து முக்தி பெற்றது நீங்கி,

ஒவ்வொரு உயிர்களின் தேகங்களையே கோயிலாகக் கொண்டு அவற்றின் உயிர்களையே கடவுளாக கண்டு அவைகளுக்கு உபகாரம் செய்கின்ற ஜீவகாருண்ய செய்கையே கடவுள் வழிபாடாகவும்  அறிந்து, அந்த ஜீவகாருண்யத்தினால் மட்டுமே மோட்சமாகிய அருள்வீட்டை அடைந்திடும் வழியாகவும் கண்டுகொள்ளப்பட்டது 🌺

பிரபஞ்ச வரலாற்றில் முதன்முதலில் ஓர் ஆன்மா ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் வல்லபத்தைப் பெற்றுக்கொண்டு அருள்சக்தியின் வடிவாய் நின்று இவ்வுலகை அரசாளுகின்றது🌺

இதுவரை இவ்வுலகில் நிலம்,
நீர்,
காற்று,
நெருப்பு ,
ஆகாசம் ,
சூரியன்,
சந்திரன் என்று ஏழு மூர்த்தங்களுக்கு கர்மசித்தர்களின் ஆட்சியில் ஆலயங்கள் கட்டப்பெற்று உருவ வழிபாட்டால் வழிபடப் பட்டது 🌺

ஆனால் ,
எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஓர் ஆலயம் எங்குமே இல்லாமல் இருந்தது🌺

ஏனென்றால் எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் ,
 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு, பூரணஅருள்வடிவாகி,
அருட்பெருஞ்ஜோதி மயமாய் நின்று,
இவ்வுலகில் எல்லாம் செய்யவல்ல ஞானசித்தியைப் பெற்றுக்கொண்ட ஓர் சுத்தசன்மார்க்க ஞானசித்தரால்தான் ,

அட்ட மூர்த்தங்களின் கடைசி மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஒரு திருக்கோயிலை,
உண்மை கடவுள் வழிபாடான ஜோதிவழிபாட்டுடன்  கட்டப்படவேண்டும் என்பது திருவருள் சித்தமாய் இருந்ததனால்,

நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானும் இதுவரை இவ்வுலகில் யாரும் பெறாத பூரண அருள் அனுபவத்தை பெற்றுக்கொண்டதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ,

அருட்பிரகாச வள்ளல் பெருமானின் அகமாகிய சத்தியஞானசபையில் வந்தமர்கின்றார்கள்🌺

இதனால் ,
பூரண அருள் ஞானசித்தராய் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தனது அகமாகிய சத்தியஞான சபையில் கண்டு தரிசித்து அனுபவித்த " அகவாழ்வாகிய சிற்சபை " அனுபவத்தையும்,

அகத்திலிருந்து  அனகமாக பெற்ற
 " பொற்சபை வாழ்வாகிய அனகவாழ்வு " அனுபவத்தையும் பெற்றுக்கொண்டதால்,

இப்பிரபஞ்சத்தில் பக்குவ ஆன்மாக்களாகிய ஞானிகளும் அருளாளர்களும் தனது அகத்தே கண்டு அனுபவித்துவந்த அருட்பெருஞ்ஜோதி அருள் தரிசனத்தை ,

இனி,
இவ்வுலகவரும் புறத்தே கண்டு தரிசித்திட வேண்டி ஆண்டவரும் திருவுள்ளங்கொண்டு ,

முதன் முதலில் இப்பூவூலகில் புண்ணியபூமியாம் வடலூரில்,
இயற்கை உண்மை (சத்து) நிறைவாகிய திருவுருவை தரித்து,

இயற்கை விளக்கம்(சித்து) நிறைவாகிய சுத்த சிவானுபவ சத்தியஞானசபையில்,

இயற்கை இன்பம்(ஆனந்தம்) நிறைவாகிய ஓர் சிவானந்த ஒருமை திருநடச் செய்கையை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையும் பொருட்டும்,

மற்றும் தனது சச்சிதானந்த  உண்மையை(மெய்யறிவானந்தம்) எவ்வுயிர்களும் அறிந்து
அந்த சச்சிதானந்தமயமாய் அருள் வாழ்வு வாழ்ந்திட வேண்டியும் ,

வேதாந்தம்,சித்தாந்தம்,சுத்தவேதாந்நம்,
சுத்தசித்தாந்தம் கடந்த பூரண அருள்நிலையான சுத்தசன்மார்க்க சுகப் பெரு நிலையில் கண்டுகொள்ளப்பட்ட சுத்தசிவமாகிய அருட்பெருஞ்ஜோதி கடவுளை பற்றி அனைவரும் அறிந்து தெளிந்து அனுபவம் பெறுவதற்கும் என்றே,

வடலூர் பெருவெளியில் சத்தியஞானசபையை திருவருட்பிரகாசப் பெருமானாரால் கட்டிமுடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் அத்திருச்சபையில் சித்திஎல்லாம் விளங்க திருநடம் செய்து அருள்பாலிக்கின்றார்கள் 🌺

இதன்பொருட்டு இவ்வுலகில் புலைகொலை தவிர்த்த சுத்தசன்மார்க்கப் பெருநெறியை திருவருள் சம்மதத்துடன் நமது வள்ளல் பெருமானாரால் முன்னின்று நடத்தப்படுகின்றது.

அந்த சுத்தசன்மார்க்கப் பெருநெறி அனுபவத்தைப் பெறுவதற்கு , அதற்குரிய பக்குவத்தையும் பதத்தையும் அடைவதற்கு ஏதுவாக பூரண அருள் ஞானியாம் நமது அருட்பெருந்தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரால் கொடுக்கப்பட்ட சுத்தசன்மார்க்க சுத்தவேதப் புத்தகமாகிய திருவருட்பா ஆறு திருமுறைகளை உள்ளடக்கமாய் கொண்டு விளங்குகின்றது 🌺

இதில் முதல் ஐந்து திருமுறைகள் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே அவரவர்களின் அருள் அனுபவத்திற்கு தக்கவாறு "அனேகராய்" இருந்த நிலையைக் காட்டியும்,

ஆறாம் திருமுறை,
பூரணமான அருள் அனுபவம் பெற்றபின் தனது முழு அருள் அனுபவ உண்மையை வெளிப்படுத்தி , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே "ஏகராய்" இருக்கின்ற அருட்பெருநிலையையும் காட்டி அம்மயமாய் தம்மை ஆட்கொள்ளுகின்ற தன்மையையும் விளக்குவதாய் உள்ளது🌺

இதுவே இவ்வுலகின் கடைசி வேதப் புத்தகமாகும்.
இத்திருவருட்பா ஒன்றே இனி இவ்வுலகில் எங்கெங்கும் ஓதப்பட இருக்கின்ற வேதப் பொக்கிஷமாகும்🌺

காரணம் இது வரை இவ்வுலகில் நிலைபெற்று வந்த சமயம் மதம் மார்க்கங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டன,

அந்தந்த மதத்திலும் சமயத்திலும் ஓதிவந்த சமய மத நூல்களும் இனி சிறிது சிறிதாக ஓதுவார் இன்றி ,

எல்லோரும் சுத்தசன்மார்க்கம் சார்ந்து திருவருட்பா ஒன்றையே ஓதுவார்கள் இதுதான் திருவருள் ஆணையாகவும் உள்ளது🌺

சமய மதத்திற்காக வாதம் செய்கின்ற வாதிகள் கடைசிவரை இருக்கத்தான் செய்வார்கள் .

காரணம்,
அதுதான் அவர்களுக்கு இப்பிறவியில் கொடுக்கப்பட்ட வேலை ,அவற்றை அவர்கள் சரியாக செய்கின்றார்கள் .
அதுவும் திருவருள் காரியமேயாகும்🌺

அது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க சுத்தசன்மார்க்கம் உலகமெங்கும் வளர்ந்துகொண்டே இருக்கும்🌺

சமனத்தை கரையேற்ற திருஞானசம்பந்தர் வருவிக்கப்பட்டது போன்று ,

சமய மதத்தை கரையேற்றி கடவுள் உண்மையை வெளிப்படுத்தும் சுத்தசன்மார்க்கத்தை நிலைநிறுத்த வள்ளல் பெருமான் வருவிக்கப் பெற்றார்கள்🌺

எப்பொழுது சமயமடாதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இலங்கை ஆறுமுக நாவலரை அழைத்துவந்து கடலூர் நீதிமன்றத்தில் திருவருட்பாவை மருட்பா என்று குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துபொழுது,

அதில் திருவருட்பாவிற்கு சாதகமாக திருவருட்பா மருட்பா அல்ல அது திருவருட்பாவேயாகும் என்று நீதிமன்றம் நீதி வழங்கியதோ அன்றே சமயமும் மதமும் மறைவை நோக்கிய பயணத்தை தொடர்ந்தன🌺

இது எல்லாமே திருவருள் சம்மதம் ஆகும்.
எப்படி என்னில் அன்று சமய மடாதிபதிகள் எதிர்ப்புகாட்டி ஆறுமுகநாவலரைக் கொண்டு அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனால்தான் ,

உலகத்தின் எங்கோ ஒர் மூலையில் இருக்கும் வடலூர் என்ற ஊரில் தோற்றுவிக்கப்பட்ட சுத்தசன்மார்க்கம் ,

திருவருட்பாவிற்கு யாதும் தடைக்கிடையாது
அது மருட்பா அல்ல அருட்பாதான் என்று ,

திருவருட்பாவிற்கு அரசே அங்கீகாரம் தந்து இவ்வுலகமுழுதும் பரவியிருந்த சமயத்தார்கள் எல்லாம் அறிந்துகொள்ளும் அளவிற்கு திருவருட்பாவை அவர்களைக்கொண்டே உலகமறியச் செய்தது திருவருள் காரியமேயாகும் 🌺

திருவருட்பாவிற்கு எப்பொழுது அரசே அங்கீகாரம் கொடுத்து வழக்கு தொடர்ந்த சமயவாதிகளின் வழக்கு தோற்றுபோனதோ அப்பொழுதே சமயம் தேய்பிறையானது🌺

இவையெல்லாம் திருவருள் காரியமே என்பதைத்தான் நாம் அனைவரும் சத்தியமாக உணர்தல் வேண்டும்🌺

இங்கு ,
வாதம் செய்தல் கூடாது,
ஏனென்றால் இங்கு இதுவரை நான் சொல்லியுள்ளது எல்லாம் பெருமானே ஆறாம் திருமுறையில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள் மற்றும் தற்போது நாமும் ஒவ்வொரு சமயக்கோயில்களிலும் திருவருட்பாவே ஓதப்படுதலை கண்ணுறக் காண்கின்றோம்🌺

ஆகலில் ,
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய சகோதர சகோதரிகள்,
அனைவரும் இவ்வுண்மையை தயவாய் தங்களது மேலான அறிவால் ஆராய்ந்து உணர்ந்து,
இவ்வுலகில் அவர் "அன்றி ஓர் அணுவும் அசையாது என்றால்"

இன்று சாதி சமய மத பேதமற்ற சுத்தசன்மார்க்கம் இவ்வுலகில் நிலைபெற வேண்டி அருள்செய்தது அந்த ஒருவரே என்பதை உணர்ந்து ,

ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற பேதமற்ற சமரசத்தை போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை அனைவரும் அடைந்து ,

அருள் வாழ்வைப் பெற்று , அருள் நிலையில் வாழ ,சாகாக் கல்வியைப் போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை பற்றுவோம் ! போற்றுவோம் !🌺
......நன்றி !🔥🙏
......வள்ளல் மலரடிப் வாழ்க ! வாழ்க !🔥🙏
......பெருமான் துணையில் 🔥🙏
....தயவுடன் வள்ளல் அடிமை🔥🙏
.....வடலூர் இரமேஷ் ;

சனி, 1 டிசம்பர், 2018

ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுங்கள் !

ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுங்கள் !

ஆன்மா என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளாமல் வாழவதால் எந்த பயனும் இல்லை.

உலகில் தோன்றிய சமய மதங்கள் யாவும் ஆன்மாவின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவில்லை.

கற்பனைகளாலும் யூகத்தின் வாயிலாகவும் அற்ப அறிவாலும்.அற்ப அருளாலும் அவர்களுக்கு விளங்கியதை சொல்லிவிட்டு மாண்டு போனார்கள்.

*ஆன்மாவின் உண்மைத் தன்மை அறிந்தால் மட்டுமே அருளை அறியமுடியும்.அருளின் பூரணத்தை அனுபவித்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.மரணத்தை வென்றால் மட்டுமே நித்தியமான அருள் தேகத்தை பெறமுடியும்.*

நித்தியமான அருள் தேகத்தை பெற்றால் மட்டுமே ! இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அருள் கண்களால் காணமுடியும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வைக்கும் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி யில் கலந்து கொள்ள முடியும்.

உலக வரலாற்றில் அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்து ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஒரே அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார் ஒருவர் மட்டுமே ! என்பதை அருளாளர்கள் அறிந்து கொண்டார்கள்.

*ஆன்ம அறிவு விளக்கம் இல்லாத மனிதர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.*

ஜீவ அறிவை. ஆன்ம அறிவு என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.

ஆன்ம அறிவு உள்ளவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள்.ஜீவ அறிவு உள்ளவர்கள் குற்றம் செய்ய தயங்க மாட்டார்கள்.

மனிதர்கள் தன் உள் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவையும் அறிவையும் அருளையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அறிந்து கொள்வதற்காகவே இந்த கட்டுரை...

*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும்*.

பலகோடி அண்டங்களையும் உலகங்களையும் படைத்தவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.ஆன்மாக்களின் வாழ்க்கையாகவே அனைத்தும் படைக்கப் பட்டுள்ளன..

ஆன்மாக்கள் நன்மை தீமை அறிந்து வாழ வேண்டும்.

ஆன்மாக்கள் இவ்வுலகிற்கு வந்து தாவரம்.ஊர்வன.பறப்பன.நடப்பன.
அசுரர்.தேவர்.மனிதர் போன்ற ஏழு வகையான பிறப்பு எடுத்து.இறுதி பிறப்பான மனிதபிறப்பில் உண்மையானக் கடவுளை.அறிவால் அறிந்து அருளைப்பெற்று.கடவுளிடம் செல்ல வேண்டும்..

*இதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்ற உண்மையைச் சொல்லுகின்றார்.*

கடவுள் நிலையை ஆன்மாக்கள் ஏன் அறிய வேண்டும் ?

ஆன்மாக்கள் முதலில் எங்கு இருந்தன ?என்பதை தெரிந்து கொண்டால் விடை கிடைத்து விடும்..

ஆன்மாக்கள் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருட்பெருவெளி என்பதாகும்.(அதாவது அருள் நிறைந்த பெருவெளி)
அங்கு பஞ்ச பூதங்கள் (அணுக்கள்) கிடையாது...

வள்ளலார் பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்

அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே

அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி அந்த அருட்பெருவெளியில் ஆன்ம ஆகாசம் என்று ஒரு வெளி ஒன்று உள்ளது.அங்கு தான் எல்லா ஆன்மாக்களும் ஆனம சிற்றுரு ஆணுக்களாக இருந்தன...

வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும் !

உதாரணம் சொல்லுகின்றார்....!

அதற்கு சிருட்டி நியாயம் என்று பெயர் வைத்துள்ளார்..!

ஆகாசம் அனாதி.அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி..அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி.அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ....

அதுபோல...்்அப்படிக் கடவுளிடத்தில் அருட்சக்தி அனாதியாய் இருக்கின்றது.ஆகாயத்தில்(அருள்வெளியில்)அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றது.

இதுபோல் கடவுள் சமூகத்தில் உள்ள ஆன்ம ஆகாசத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன.அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.என்பதை உதாரணத்தோடு தெளிவாக தெரியப்படுத்துகின்றார்....

*ஆன்ம தேகம் ! ஜீவ தேகம் !*

அந்த ஆன்மா இவ்வுலகத்திற்கு அனுப்பும் போது ஆன்ம தேகத்தோடு ஆணவத்தின் துணையாக அனுப்பபடுகின்றது.

ஆன்மாக்கள் !

இந்த உலகத்தில் ஆன்மா வாழ்வதற்கு பஞ்ச பூதங்களான ஜீவதேகம் மாயையால் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

ஆனம தேகத்திற்குள் ஜீவதேகம் அடங்கி விடுகின்றது.எனவே ஆன்ம தேகம் ஜீவதேக கண்களுக்குத் தெரியாது.ஆன்மதேகம் நித்திய தேகம்....ஜீவ தேகம் அநித்திய தேகம்.

இந்த விதிமுறைகள் தாவரங்களில் இருந்து மனித தேகம் வரை பொதுவானதாகும்.மனித தேகத்தில் மட்டும் ஆன்ம அறிவு விளக்கம் பெற்று உண்மை அறிதல் வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆணையாகும்..

வள்ளலார் சொல்வதை கவனிக்க வேண்டும்.!

அறிவென்பது ஓர் சிறிதும் தோன்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில்.நெடுங்காலம் .சிற்றணுப் பசுவாகி அருகிக் கிடந்த அடியேனுக்குள் உள் ஒளியாக இருந்து அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து.

எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வு உடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம்மானிப் பிறப்பு உடம்பில் என்னைவிடுவித்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் !எவ்வாறு கருதுவேன் ! என்னென்று சொல்வேன் ! என்று

சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில் தெளிவாக விளக்கி விளங்க வைக்கின்றார்...

என்றும் அழியாத நித்திய தேகமாக மனித தேகத்தை மாற்றிக் கொள்ளவே.அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும்.கடவுள் விளக்கமும் மனித தேகத்தில் உள்ள ஆன்மாவிற்கு கொடுக்கப் பட்டுள்ளது...

ஜீவதேகம் உலக போகத்தி்ல் ஈடுபட்டதால்.நல்வினை.தீவினை ஆன்மாவில் பதிவாகி விடுகின்றது.தீவினையை போக்க தெரியாமல் ஜீவதேகம் மரணம் அடைந்து அழிந்து போகின்றது...

ஜீவதேகம் அழியக் கூடாது என்பதை சொல்லுவதுதான் வள்ளலார் சொல்லும் சுத்த சன்மார்க்கம்.

ஜீவ தேகத்தை அழிக்காமல்.ஜீவதேக அணுக்களை.அருளால் வேதித்து பிரித்து எடுத்துவிட்டு .நித்திய தேகமாகிய ஆன்ம தேகமாக மாற்ற வேண்டும்...

ஆன்ம தேகத்தில் மூன்று தேகம் உள்ளன..!

சுத்த தேகம்.
பிரணவ தேகம்..
ஞான தேகம்.

மூன்று தேகத்தையும் ஒருதேகமாக மாற்ற வேண்டும்.

இந்த மூன்று தேகத்திலும் உயர்ந்த தேகம் ஞான தேகம் என்பதாகும்.அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்...

ஆன்ம தேகம் ஜீவதேகத்தில் இருந்து விடுபட்டு அருள் தேகமாக மாற்றிக் கொள்வதையே சாகாக் கல்வி...என்னும் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்..

சாகாக்கல்வியை யாரிடம் கற்றுக் கொள்வது.?

ஆன்மாவை அனுப்பிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு தான் கற்க வேண்டும்.

பொய்யான சமய மதங்களின் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு..வள்ளலார் சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க...கொள்கைகளை வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்க வேண்டும்.

கற்றேன் சிற்றம்பலக்கல்வி !

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி விளங்க வைக்கிறார் வள்ளலார்.

பிறர் சொல்லும் கொள்கைகளைப் பின்பற்றாமல்.அருட்பெருஞ்ஜோதி என்னும் சிவானந்த சிற்றம்பலத்தை தொட்புகொண்டு கற்றேன்.கருணைநெறி உள்ளேன்..சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றேன் என்கிறார் வள்ளலார்...

ஆன்மாவானது ஜீவதேகம் எடுத்துதான் என்றும் அழியாத நித்திய தேகமாகிய அருள்தேகம் பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் கலந்து கொள்ள முடியும்..கலந்து கொள்ள வேண்டும்..என்பது இறை சட்டம்..

ஆன்மா தன்னை உணர்ந்து கொள்ள உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் இறைவனால் கொடுக்கப்பட்டது...

மனிதன் வள்ளலார் சொல்லிய வண்ணம் ஒழுக்கம் நிறைந்து கருணைவடிவமாக மாற வேண்டும்

வள்ளலார் பாடல்!

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

கண்டதை எல்லாம் கேட்டு படித்து  களித்து உண்டு இறுதியில் மரணம் வந்து மாண்டு போகாதீர்கள்.

இனிமேலாவது மெய்நெறியான சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து.மெய்ப் பொருளான அருட்பெருஞ்ஜோதி யை அறிந்து.உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து ஊற்று எழும்புவது போல் அழுது உடம்பு நனைந்து அருளைப் பூரணமாகப் பெற்று கொண்டு...

என்றும் இறவாமல்.பிறவாமல் வாழ்வதற்கு வரம் பெற்று என்றும்அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் பெரிய லாபத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

ஆன்மாவின் உண்மைத் தரத்தை உணராமல் சமய மதங்கள் தவறான. பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி.மூடமான வழியைக் காட்டியதால் மனித இனம் அழிந்து கொண்டுள்ளது.

வள்ளலார் பாடல் !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

மேலே கண்ட பாடலில்.உடம்பு.உயிர்.ஆன்மா வந்த வழியைத் தெரிந்து கொண்டால் தான் .உடம்பையும்.உயிரையும் அழிக்காமல் நித்திய தேகமாகிய அருள் தேகம் பெற முடியும் என்பதை சொல்லி உள்ளார்.

விரிக்கில் இன்னும் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.