சனி, 29 ஜூன், 2019

இன்பம் துன்பம் என்றால் என்ன ?

*இன்பம் துன்பம் என்றால் என்ன ?*

இவ்வுலக மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் என இரண்டு வகை உள்ளது..

நாம் இன்பம் என்பதும்.துன்பம் என்பதும் இரண்டுமே துன்பம் தரும் வாழ்க்கைதான்.

மரணம் வராமல் வாழக்கூடிய வாழ்க்கை மட்டுமே இன்பம் தரும் வாழ்க்கையாகும்.

இவ்வளவு காலமாக வள்ளலார் சொல்லிய வண்ணம் ஜீவகாருண்யம் செய்தேன்.நிறைய சமரச சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்து அன்னதானத்திற்கு உதவிகள் செய்தேன் .ஜீவகாருண்ய செம்மல் என்ற பட்டமும் பெற்றேன்..

இறுதியில் மரணம் வந்து என் உயிரும் பிரியப்போகிறது .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை கைவிட்டுவிட்டார் என்று புலம்பிக் கொண்டு இருப்பதால் எந்த பயனும் இல்லை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மைக் கைவிட வில்லை.நாம்தான் ஆண்டவரை கை விட்டு விட்டோம்..என்பதை கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்...

*இறந்தவரை இந்த உலகம் போற்றினாலும் இறைவன் போற்றுவதில்லை.*.

சாகாதவனே சன்மார்க்க என ஆணித்தரமாக சொல்லி உள்ளார் வள்ளலார்.

ஆன்மாவின் உயிர்.உடம்பு பிறப்பும் இறப்பும் உண்டாவதுதான் பெரிய துன்பமாகும்...பிறப்பு இல்லாமல் வாழ்வதுதான் பெரிய இன்பம்...அதுதான் பேரின்பம் என்பதாகும்.

மீண்டும் இறப்பு பிறப்பு இல்லாமல் வாழ்வதற்குகாகவே உயர்ந்த அறிவுள்ள மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது..

இதை அறியாமல் நாம் சமய மதக் கொள்கைகள் சொல்லியவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சன்மார்க்கத்தையும் பிடித்துக் கொண்டு வாழ்வதால் தான் மரணம் வருகின்றது...

வள்ளலார் பாடல் !

முயன்று உலகில் பயன் அடையா  மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே

இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்

துயின்று உணர்ந்து தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்

பயின்று அறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே !

என்னும் பாடலிலே தெளிவாக விளக்கி உள்ளார்.

பலகாலம் முயன்றும் பயன் அடையாத மூடமான மதங்களின் கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு அழிந்து போகாதீர்கள்.

இப்போது உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் அருளாலே உலகத்தை மாற்றுவதற்காக.உலக மக்களைக் காப்பாற்றுவதற்காக. எழுந்து அருளல் இதுவே தருணம்.இவை தொடர்ந்து நடைபெறும்.

இறந்தவர்களையும் எழுப்பித் தருவார்.எனவே இனிமேலாவது நான் சொல்லுவதை கவனமாக கேட்டு வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளலார்...

நான் சொல்லும் படிப்பு அதாவது கல்வி.இதுவரையில் யாரும் படிக்காத படிப்பு.சொல்லித்தராத கல்வி.அதுதான் சாகாக்கல்வி என்கிறார்.

மேலும் சுகமும் துன்பமும் என்னவென்றே தெரியாமல் வாழ்க்கையை வீண் அடித்துக் கொண்டு உள்ளீர்கள்.இனிமேலாவது தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளுங்கள்.என்கிறார் வள்ளலார்.

பாடல் !

சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகில்
சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலரே

இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்தீர்
என் புரிவீர் மரணம் வரில் எங்குறுவீர் அந்தோ

அகம் அறியீர் அனகம் அறிந்து அழியாத ஞான
அமுதம் வடிவம் பெறலாம் அடைந்திடுமின் ஈண்டு

முகம் அறியார் போல்இருந்தீர் என்னை அறியீரோ
முத்தர் எலாம் போற்றும் அருட் சித்தர் மகன் நானே !

மேலே கண்ட பாடலில் தெளிவான தமிழில் அற்புதமாக தெரிவிக்கின்றார்.

ஒவ்வொருவரின் அகத்தில் உள்ள ஆன்மாவான உள் ஒளியைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று அந்த அருளை உடல் முழுவதும் (அனகம் ) பரவச்செயது ஊன உடம்பை அருள் ஒளி உடம்பாக (அமுதவடிவம் ) மாற்றிக் கொள்ளலாம். வாருங்கள் என அழைக்கின்றேன் .

என்னை அறியாதவர்போல் இருக்கின்றீர் நான் யார் தெரியுமா ? நீங்கள் எல்லாம் வாழ்த்தி வணங்குகின்ற சித்தர்கள் முத்தர்கள் எல்லோரும் போற்றும் அருட.பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்சித்தர் மகன் நான் என்பதை தெளிவுப் படுத்துகின்றார்..

நமது வாழ்க்கை !

நாம் ஆண் பெண் என்ற இரண்டு உருவங்களின் இன்பத்தில் தான் பிறந்தோம்.இன்பத்தில் பிறந்த நாம் இன்பம் அடைவது தானே நியாயம்.துன்பம் அடைவதற்கு என்ன காரணம்.?

நாம் இவ் உலகியலில் தோன்றியதில் இருந்து.உற்றவர்.பெற்றவர் மற்றவர் உடமைகள் உலகியலில் உள்ள சாதி.சமய.மதங்களின் கொள்கைகள் .பழக்க வழக்கங்கள் எல்லாம் நம்மைப் பற்றிக் கொண்டது அதுவே நமது அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளாக நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன.

அத்திரைகளை நீக்க வேண்டும் என்கிறார் வள்ளலார் அத்திரைகளை எப்படி நீக்குவது ?  அத்திரைகள் நீங்கினால் மட்டுமே ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும்.

ஆன்மாவின் திரைகள் நீங்கினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொள்வார்.

தாய் தந்தையின் அன்பு என்னும் இன்பத்தில் இணைந்து சுக்கிலம் தோன்றி உயிர் உடம்பு பிறந்தது போல்...ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் அன்பு என்னும் இன்பத்தில் இணைந்து இன்பம் அனுபவிக்கும் போது அங்கே அருள் சுரக்கும்..


அந்த அருளால் உடம்பும் உயிரும் அழிக்காமல்..ஒளியாக மாற்றம் அடையும்..பஞ்ச பூத அணுக்களால் தோன்றிய உடம்பும் உயிரும் அருள் உடம்பாக மாற்றப்படும்..

இதைத்தான் ஞான சரியை முதல் பாடலிலே தெரிவிக்கின்றார்...

ஞானசரியை முதல் பாடல் !
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து  ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
 நனைந்து நனைந்து அருள் அமுதே நன்நிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்துது நாம்  வம்மின் உலகியலீர்
*மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்ணர்*

 புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என்கிறார்...

புனைந்து உரையேன் பொய் புகலேன் என்கிறார்..அதாவது மற்றவர் போல் உண்மையை மறைத்து சொல்லவில்லை.பொய்யான கற்பனைக் கதைகள் போல் சொல்லவில்லை.

என் உரிமை நாயகன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஆனந்த கண்ணீர் கொண்டு அனைந்தேன் .

அழியாத நன் நிதியாகிய அருள் அமுதைந வாரி வாரி வழங்கி என் உடம்பு முழுவதும் நனைந்து நனைந்து பொங்கி எழும் பொருட்டு நிறைப்பி விட்டார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமையும் புகழையும் நினைந்து நினைந்து.அதனால் கிடைக்கும் அருள் இன்பத்தை உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து.அன்பே நிறைந்து அனுபவித்தேன்.

அதனால் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றேன்..நீங்களும் அந்த மரணம் இல்லாப் பெருவாழ்வைப்  பெறலாம்..அதற்கு எந்த தடையும் இல்லை..வாருங்கள் வாருங்கள் என உலக மக்கள் அனைவரையும் அழைக்கின்றார்.

அருளைப் பெறுவதற்கு தடையாக இருப்பவை எவையோ அவை எல்லாம் நம்மிடம் இருந்து விளக்கிக் கொள்ள வேண்டும்..

எவை எல்லாம் உலக வாழ்க்கைக்கு நமக்கு சாதகமாக. உற்ற துணையாக இருக்கின்றது என்று நினைத்தோமோ .அவை எல்லாம் தடையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடலை பாருங்கள் !

புகுந்தருணம் இதுகண்டீர்  நம்மவரே நான்தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே

தகுந்த தனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே !

என்னும் பாடலில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

நம்மை படைத்தவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அவரிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதற்காகவே மனிதப் பிறவி கொடுக்கப்பட்டது..

இந்த உண்மைத் தெரியாமல் நம்மை அழித்துக் கொண்டு இருக்கும் பற்றை எல்லாம் பற்றிக் கொண்டு உள்ளோம்..

எனவேதான் பற்றிய பற்று அனைத்தும் விட்டு அம்பலத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்றிக் கொள்ள வேண்டும்..என்கிறார்..

எனவே தான் இடைவிடாது ஜீவ காருண்யமும் சத்விசாரம் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்.

ஜீவகாருண்யம் அன்பை பெறுவதற்கு... சத்விசாரம் அருளைப் பெறுவற்கு என்பதின் உண்மையை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

அவ்விசாரம்...பரம் அபரம் என்று இருவகையாக இருக்கின்றது.. இவற்றில் பரம் என்பது...பரலோக விசாரத்தை குறிப்பதாகும்.அபரம் என்பது இகலோக விசாரத்தை குறிப்பதாகும்.

சத்விசாரம் என்பது பரலோக விசாரத்தையே குறிக்க வந்தது..

தண்ணீரில் உள்ள பாசியை நீக்குவது போல் நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடி இருக்கிற திரைகளை நீக்க வேண்டும்.அந்த திரைகளை நீக்க அதிகமான அதிதீவிர  சுத்த உஷ்ணம் வேண்டும்.வேறுவிதமான உஷ்ணத்தால் நீக்க முடியாது.அந்த உஷ்ணம் எதனால் உண்டாகும் எனில்...

உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான ஆன்மாவைத் தொடர்பு கொண்டு..தோத்திரம் செய்கின்றதாலும்.தெய்வத்தை இடைவிடாது நினைக்கின்றதாலும் அதிக உஷ்ணம் உண்டாகும்.அந்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு திரைகள் ஒவ்வொன்றாக விலகும்..

இதுதான் துக்க நிவர்த்தி என்கிறார். வள்ளலார்.துக்கம் என்னும் துன்பம் நீங்கினால் இன்பம் தானே பொங்கும். அந்த இன்பம் தான் பேரின்பம்.அதுவே பேரின்ப வாழ்வு என்பதாகும்..மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்...

பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய்வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனகவடிவாகிப்

பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரியதாம் மணியே சிற்சபையின் மாமருந்தே
என்று உரைமின் தீமை எலாம்
தவிர்த்தே !

மேலே கண்ட பாலில் இன்பம் பெறுவதற்குண்டான வழியைச் சொல்லுகின்றார்.

தீமையை ஒழித்து.அருள் பெறும் நன்மை யைக் காட்டுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் கல்வியே சாகாக்கல்வியாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.



வெள்ளி, 28 ஜூன், 2019

தாயின் உள்ளம்.!

தாயின் உள்ளம் !

அம்மா அப்பா இருவரும் குடும்பத்தின் குலவிளக்குகள்.இரு விளக்கும் இரண்டு கண்கள் போன்றது.

இரண்டு தூண்களும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கிய பாரமாகும்.

இருவரின் இல்லற இன்பத்தில் உதித்ததுதான் குழந்தைகள்.

அந்த குழந்தைகளை தன் கண்ணின் ஒளிபோல் பாது காப்பது தாயின் உணர்வுகள்.அதற்கு ஈடு எதையும் சுட்டிக்காட்ட முடியாது.

தந்தை எவ்வளவு உழைத்துப் பொருள் ஈட்டினாலும் தந்தைக்கு முன்னுரிமை தராமல் தாய்க்கு மட்டுமே குழந்தைகள் முன்னுரிமை தருகின்றார்கள்.

காரணம்...

குழந்தையை பத்துமாதம் சுமந்து தவமா தவம் கிடந்து தன் உயிருக்கு மேலாக பாதுகாத்து தன் உதிரத்தின் மூலமாக பெற்று எடுப்பவள் தாய் என்பதை யாரும் மறுக்க முடியாது. .

கருவரையிலே வளரும் குழந்தைகளின் ஆன்மாவில் தெரிந்தோ தெரியாமலோ பதிவாகி உள்ளது...

மேலும் குழந்தை பிறந்தது முதல் .தாயின் அரவணைப்பிலே..தாயின் உடம்பிலே சுரக்கும் பாலைக் குடித்து.பெரியவர்களாக வளரும் வரையில் பசிகண்ட போதெல்லாம்.அன்புடன் ஆசையுடன் மனம் கோணாமல் உணவு வழங்குபவள் தாய்தான் என்பதை குழ்ந்தைகளின் மனதிலே பதிவாகி விடுகின்றது..

இதை எல்லாம் நேரில் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைபவர் அப்பாவாகத்தான் இருக்க முடியும்.

மனைவி குழந்தைகளின் மீது காட்டும் அன்பும் உபசரிப்பும் வளர்க்கும் விதமும் கண்களில் கண்டு ஆனந்தம் கொள்வது தந்தையின் குணமாகும்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு தாய் பாசத்துடன் வழங்கும் உணவு முறைகளை.புசித்து அனுபவித்து  ஆனந்தம் கொள்வது குழந்தைகளின் தாய் பாசத்திற்கு காரணமாகி விடுகின்றது.

 அந்த பதிவுகள்தான் ..அப்பாவை விட...அம்மா மீது குழந்தைகளின் பாசத்திற்கு காரண காரியமாக இருக்கின்றது.

என் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம். !

எனக்கும் என் குழந்தைகளுக்கும் உற்ற துணையாக இருந்து  குடும்பத்தை சுமந்து கொண்டு வந்தவள் என் மனைவிதான்.

எங்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள்.அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

உங்களுக்கு யாருடன் இருந்தால் வசதியாக இருக்குமோ அவர்களுடன் இருங்கள் என்று மூவர்களும் சொன்னார்கள்.

எல்லோரும் நல்லவர்களே!  இருந்தாலும் நாங்கள் சின்ன மகனுடனே இருக்கிறோம் என்று சொல்லி அவனுடனே இருக்கிறோம்.அடிக்கடி எல்லோரும் வருவார்கள் போவார்கள்.நாங்களும் போவோம் வருவோம்.

வியாழன், 27 ஜூன், 2019

ஆன்மாக்களின் வாழ்க்கை !

*ஆன்மாக்களின் வாழ்க்கை !*

ஆன்மா என்பது அருள் பெறாத சிற்றணு வடிவமானது.ஆனாலும் அவை கோடி சூரிய பிரகாச ஒளித் தன்மை உடையது.

அந்த ஆன்மா இருக்கும் இடம்... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடமான அருட்பெருவெளி என்ற இடத்தின் ஒரு பகுதியில் ஆன்மாக்கள் சூழ்ந்து இருக்கும்.அந்த இடத்திற்கு "ஆன்ம ஆகாயம்* என்று பெயர்..

அந்த இடத்தில் தான் ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.

அருட்பெரு வெளியில்  உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
இயற்கை உண்மை .
இயற்கை விளக்கம்.
இயற்கை இன்பம்
போன்ற இயற்கையான மூன்று விதமான அளவில் அடங்காத அருள் ஆற்றல் தன்மைகளைக் கொண்டவர்

பலகோடி ஆண்டங்களையும்.உலகங்களையும் படைத்தவரும் அவரே ..

பலகோடி ஆண்டங்களையும் உலகங்களையும் படைத்ததின் நோக்கம் காரணம்.ஆன்மாக்கள் வாழ்வதற்கும் அருளைப் பெறுவதற்கும் தேவையான வசதி வாய்ப்புக்கள் வேண்டும் என்பதற்காகவே பஞ்ச பூத உலகம் படைக்கப்பட்டதாகும். ! அதற்கு காரண காரிய  பஞ்சபூத உலகம் என்று பெயர்.

ஆன்மாக்கள் அருளை ஏன் ? பெற வேண்டும் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் நாம் யார் என்ற உண்மை விளங்கும்....

*ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் !*

ஆன்மாக்கள் எங்கு இருந்தன என்பதை மேலே கண்டு உள்ளோம்.

அந்த ஆன்மாக்களுக்கு தன் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பெரு வெளியில் அருகில் இருந்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண்பதற்கும் தொடர்பு கொள்வதற்கும் வாய்ப்புகளே கிடையாது.

அந்த ஆன்மாக்கள் தன் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்றால் தான் அவரிடம் தொடர்பு கொண்டு பேரின்ப வாழ்க்கை என்னும் பெரிய வாழ்க்கை வாழ்வதற்கு வசதி கிடைக்கும்.

ஆன்மாக்களின் பூலோக வாழ்க்கை !

ஆன்மாக்கள் பஞ்ச பூத உலகில் வந்து உயிர் பெற்று உடம்பு எடுத்து   இன்பம் துன்பம் அனுபவித்து ..அதாவது

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் நான்கு காலங்களில்  அனுபவித்து பின்பு பற்று அற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்றால்தான் ஆன்மாக்கள் இறைவனைக் கண்டு அதன் மயமாக மாற முடியும்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே அருள் வழங்கும் தகுதி உடையவர்.

இந்த உண்மைத் தெரியாமல் சமய மதவாதிகள் தவறான தத்துவக் கடவுள்களான உருவங்களை படைத்து பக்தி என்னும்  குறுக்கு வழியைக் காட்டி ஆன்மாக்களை  அலைய விட்டு விட்டார்கள்.

ஆன்மாக்களுக்கு சொர்க்கம்.நரகம்.கைலாயம்.
வைகுண்டம்.முத்தி பரலோகம்.போன்ற பதப்பிராப்திகள் எதுவும் வேண்டியதில்லை. இவைகள் எல்லாம் மனித உடம்பிலே உள்ளன.

ஆன்மாக்கள் முக்கியமாக அவசியம் பெற வேண்டியது .எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முழுமையான அருளைப் பெறுதலே அதன் முக்கிய கட்டளையாகும் .அதுவே இயற்கையின் சட்டமாகும்.

*ஆன்மாக்களுக்கு உண்மையான நேர் வழிக் காட்டவே ஒரு பக்குவமுள்ள ஆன்மா இங்கு வருகின்றது.*

அந்த  பக்குவம் உள்ள ஆன்மாவைத் தேர்வு செய்து உலகிற்கு அனுப்பி வைத்தவர்தான்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். ..

இந்த உலகிற்கு வந்த அந்த பக்குவ ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் பஞ்ச பூத உடம்பை எடுத்து .வாழ்ந்து.அருளைப் பெற்று.பஞ்ச பூத உடம்பை.அருள் நிறைம்பிய  ஒளி உடம்பாக மாற்றி. மரணத்தை வென்று இறைவனிடம் தொடர்பு கொண்டு இறை நிலையை அடைந்த அந்த ஆன்மாவின் பெயர்தான் உலகியலில் வைத்த பெயர் இராமலிங்கம். அருள்பெற்று மரணத்தை வென்ற பின் திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் சூட்டப்பட்டதாகும்.

அவரைப்போல் ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து அருளைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதற்காகவே ஆன்மாக்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பஞ்ச பூத உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆன்மாக்கள் இந்த உலகத்தை விட்டு வெளியே செல்வது எங்கனம் ?

*இந்த உலகம் ஒரு கோழிமுட்டை வடிவமானது*..
பலகோடி மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது..

*அதேபோல் தான் ஆன்மா இந்த பூத உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளன*.

இந்த அண்டத்திற்குள்  வால்அணு. திரவ அணு.குருஅணு.லகுஅணு.அணு.பரமாணு.விபு அணு..என ஏழு விதமான அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் நிறைந்துள்ளது.

சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் போன்ற கிரகங்கள் அனைத்தும் தன்னைத்தானே தன் கடமைகளை ஆற்றிக்கொண்டுள்ளன.
எல்லாமே ஐந்து வண்ண ஒளித்தன்மை உடையதாகும்.

இந்த அணுக்களின் பல வகையான ஒளி வண்ணத்தின் தொடர்பால் எல்லா ஆன்மாக்களுக்கும் உயிர்.உடல் தோற்றம் பல வண்ணங்களாக.பல வடிவங்களாக பின்னப்பட்டுள்ளன.

ஆன்மா உயிர் இரண்டும் ஒளித்தன்மை உடையது..ஆன்மா குடியிருக்கும் வீடு என்னும் உடம்பு மட்டும் அணுக்களின் சேர்க்கைக்கு தக்கவாறு உரு மாற்றங்கள் வெவ்வேறு விதமான வண்ணங்களும் வடிவங்களும் படைக்கப் படுகின்றன.

உயர்ந்த அறிவு !

இந்த உலகத்தில் உயர்ந்த இறுதிப் பிறப்பான மனித தேகத்திற்கு மட்டுமே உயர்ந்த அறிவு வழங்கப் பட்டுள்ளன.

எதற்காக உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டது ஏன் ? என்றால்.உண்மையை அறிவால் அறிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  தன்னை உணர்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று இறை நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப்பட்டது.

*கோடி சூரியப் பிரகாசம் உஷ்ணம் உள்ள ஆன்மா..அருள் பிரகாசமாக மாற்றம் அடைய வேண்டும்*. அதற்கு அருள் சுதந்திரம் என்று பெயர்.

கருணையின் மொத்த உருவமே அருள் பிரகாசமாகும்.

அதனால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *தனிப்பெருங் கருணை* வாய்ந்தவர் என்று சொல்லப்படுகின்றது.

ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள அதன் தன்மையாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எவ்வாறு மாற்றிக் கொள்வது !

இந்த உண்மையைத் தான் வள்ளலார்.*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சத்திய விண்ணப்பத்தில்* நமக்குத் தெரிவிக்கின்றார்.

கவனமாக படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.!

சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.!

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில்,

இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!

இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு

எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய *கடவுளது திருவருட் சுதந்திரம்* ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்.

கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!

மேலே கண்ட விண்ணப்பத்தில் கண்டபடி.இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு கொடுத்த சுதந்தரத்தினால் பிணி.மூப்பு .பயம்.துன்பம்.மரணம். போன்ற அவத்தைகள் வந்து இறந்து.இறந்து .பிறந்து பிறந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்து கொண்டேன்..

எனவே நமக்கு கிடைத்த  தேகசுதந்திரம்..போக சுதந்திரம்.ஜீவசுதந்திரம் என்னும் மூவவை சுதந்திரத்தையும்.திருப்பிக் கொடுத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் திருவருட் சுதந்திரம் பெற்றால் மட்டுமே மரணத்தை வென்று என்றும் அழியாத  பேரின்ப சித்திப்  பெருவாழ்வு ஆன்மாக்கள் வாழமுடியும்.

இதுவே ஆன்மாக்களின் இயற்கை உண்மை வாழ்க்கையாகும்...

பொய்யை ஒழித்து மெய்யை உணர்ந்து வாழ்வோம்.

பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மற்றாடும் ஐயரைக் கண்டேனடி என்று வள்ளலார்  அழுத்தமாக சொல்லி உள்ளார்.

ஆன்மாக்கள் பூத தேகத்தை விட்டு அருள் தேகத்தைப் பெற்றால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு வெளியே செல்லமுடியும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அருள் கண்களால் காணமுடியும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி அளித்தால் மட்டுமே.அண்டகோடிகள் எல்லாம் ஊடுருவி செல்லும் ஆற்றல் ஆன்மாவிற்கு கிடைக்கும்.  வேறு எந்த வழியாலும் செல்ல வாய்ப்பே இல்லை.

வள்ளலார் பாடல் !

அண்ட கோடி அனைத்தும் காணுங் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே
பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே
பேசிப் பேசி வியக்கின்றேன் இப்பிறவி தன்னையே !

என்னும் பாடலிலே தான் கண்ட காட்சியைத் தெளிவாக விளக்குகறார் வள்ளலார்..

மேலும் நம்மை அன்புடன் அழைக்கின்றார்

வள்ளலார் பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்பின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனக வடிவமாகிப்

பொன்புடை நன்கொளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற் கரிதாம் மணியே சிற்சபையின் மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்த்தே !

என்னும் ஞானசரியை பாடலிலே எளிய தமிழில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்

எல்லா ஆன்மாக்களும் இன்புற்று வாழ்க !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 22 ஜூன், 2019

இறைவன் அளித்த அருள் ஆட்சி கொடை !

இறைவன் அளித்த அருள் ஆட்சி கொடை !

வள்ளலார் ஒரு புரட்சியாளர். விஞ்ஞானி.அருள்ஞானி.சாதி.
சமய.மதங்களை ஒழித்த தத்துவஞானி.தத்துவங்களை வென்றவர் .ஜீவகாருண்ய செம்மல்.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்.இரக்கமே உருவானவர்.
மரணத்தை வென்ற மகான் என்றெல்லாம் நாம் வள்ளலாரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டு வருகிறோம்...

எல்லாமே உண்மைதான் ...

இதெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்று உள்ளது !

1874 ஆம் வருடம் நட்ந்த நிகழ்ச்சு !

ஓய்வு எடுத்துக் கொண்டவர்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

*எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் அருள் ஆட்சியை வள்ளலார் இடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்...*

*இதுதான் வள்ளலார் பெற்ற மாபெரும் வெற்றியாகும்*..

அண்டங்கள் உலகங்கள் யாவும் ஆட்சி செய்யும் அருள் ஆட்சி பெற்றவர் தான் வள்ளலார்.

இறைவன் என்றும்.நித்தியமானவர். நிலைப்பெற்றவர்.அதே போல் வள்ளலார் என்றும் நித்தியமானவர் நிலைப்பெற்றவர் என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதியும் அந்தமும் கடந்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அதேபோல் ஆதியும் அந்தமும் கடந்தவர் வள்ளலார்.

வள்ளலார் ஆண்டவரிடம் சொல்லுவதைப் பாருங்கள் !

 *பொறுமையாக ஊன்று படிக்கவும்*..

அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் !

துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

எல்லா நன்மையு மென்றனக் களித்த
எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்த என் தனித் தந்தையே

நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே

அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே

புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே

அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்த மெய்த் தந்தையே

*இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே*

*ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே*

எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே

*தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே*

*தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே*

*தன்வடி வனைத்தையுந்
தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே*

*தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என் சித் தாக்கிய என்றனித் தந்தையே*

*தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே*

*தன் கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என் கையிற் கொடுத்த என்றனித் தந்தையே*

*தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே*

*தன்னி இயல் என்னியல் தன்செயல் என்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே*

*தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே*

*சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே*

மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

*உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே*

*துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே*

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே

*எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே*

இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே !

மேலே கண்ட அகவல் வரிகளில் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் செயல்கள் அனைத்தையும் நம் வள்ளல் பெருமானுக்கு அளித்து

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆடசி சிம்மாதனத்தில் அமர வைத்துள்ளார்...

உலகில் எந்த அருளாளர்களும் பெறமுடியாத ஈடு இணையற்ற வெற்றியாகும் .

*இவைதான் வள்ளலார் பெற்ற தனித்தன்மை அருள்ஆட்சி திருமுடியாகும்.*

தன் கையில் பிடித்திருந்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே என்பது தான் உச்சகட்ட வெற்றியாகும்...

*அகவல் இறுதியில் வள்ளலார் சொல்லுவதை கவனித்து படியுங்கள் !*

என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து

உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில் பேரருளா லறிவது விளக்கிச்

 சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து

சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்

ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி

வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

 உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

*மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை*

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

 போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க

சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! 

மேலே கண்ட அகவல் வரிகளில் ஆண்டவர் சொல்லியவாறு  அருள் ஆட்சி செய்வதாக ஏற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ்ந்து வாழ்த்துகிறார்...

இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையோடு அருள் ஆட்சி புரிந்து கொண்டு செயலாற்றிக் கொண்டுள்ளார்..என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வாக்கு

பாடல்  !

துன்பெலாந் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்ததருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம தானது

உலகில்
வன்பெலாம் நீக்கி நல்வழி யெலாம் ஆக்கி மெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத் தனை.

உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளை
யாடுக

*அருட்சோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை*

என்றே
இன்புறத் திருவாக்களித்து என்னுள்ளே கலந்து
இசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ் செய்வல்ல சித்தாகி்மணி மன்றினில்
இலங்கும் அருட்பெருஞ்ஜோதி
நட ராஜபதியே.

என்னும் பாடலிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருட் கொடையை தெரிவிக்கின்றார்..

தெளிவோம் தெரிந்து கொள்வோம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வெள்ளி, 21 ஜூன், 2019

தமிழ் அறிஞர்கள் பொய் பேசிக் கொண்டு உள்ளார்கள் !

தமிழ் அறிஞர்கள் பணத்திற்காக பொய் பேசிக் கொண்டு உள்ளார்கள்!

தமிழ் நாட்டில் தமிழ் படித்த தமிழ்  அறிஞர்கள்.தமிழ் ஆசிரியர்கள்.தமிழ் பேராசிரியர்கள்.

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள். அமைச்சர் பெருமக்கள்  வள்ளலாரைப் பற்றியும் அவர்கள் கொள்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளாமல்.
இருப்பது வேதனைக்கு உரிய  விஷயமாகும்.மிகவும் வருந்ததக்க விஷயமாகும்.

வெளிநாட்டில் உள்ளவர்கள் வள்ளலாரைப் பற்றியும் அவர் உலகிற்கு கொடுத்த அருள் உண்மைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வடலூர் வந்த வண்ணம் உள்ளார்கள்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி உலகிற்கே சொன்னவர் வழிகாட்டியவர்.வள்ளலார்

பள்ளிக்கு செல்லாமலே.ஆசிரியர் இன்றியே எல்லா மொழிகளையும் இறை அருளால் கற்றவர்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றவர். வாடியப்பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்த மண் தமிழ்நாடு.

இலக்கண இலக்கிய குற்றம் இல்லாமல் எளிய தமிழிலே.பாமர மக்களும் படித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு. ஆராயிரத்திற்கும் மேலான அருட்பாக்களையும்.உரை நடைப்பகுதி தமிழிலும் மக்களின் நல்வாழ்விற்காக எழுதி வைத்துள்ளவர் வள்ளலார்

சாதி.சமய.மதங்கள் மனிதனை அழித்துக் கொண்டுள்ளன...ஆதலால் முதன் முதலில் சாதி.சமய.மதங்களை அழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் வள்ளலார் அழித்துக் கொண்டும் வருகின்றார்.

*சாதி.சமய.மதம் அற்ற..இறை  பொது வழிபாட்டு முறையைக் கொண்டு வந்தவர் வள்ளலார்*

அதற்காகவே வடலூரில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* நிறுவியவர் வள்ளலார்*.

ஏழைகளின் பசிப்பிணியைப்போக்க 1867 ஆண்டில் சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்தவர் வள்ளலார்.

பகுத்தறிவு சிந்தனையை முதன் முதலில் கொண்டு வந்தவர் வள்ளலார்.

மூடநம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்தவர் வள்ளலார்.

தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிவித்து.மக்களுக்கு வாழும் வழிகாட்டியவர் வள்ளலார்.

*சமுதாய ஆன்மீகப் புரட்சி.அருள் புரட்சி.அறிவியல் புரட்சி  செய்து காட்டியவர் வள்ளலார்*

இன்னும் அளவில் அடங்காத முற்போக்கு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர் வள்ளலார்.

மரணத்தை வென்ற மகான் பிறந்த மண் தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்கள். பொய்யான கற்பனைக் கதைகளான மகாபாரதம்.ராமாயணம் போன்றவற்றை படித்துவிட்டு பட்டிமன்றம் நடத்தி பணம் சம்பாதித்து வயிற்றை வளர்த்திக் கொண்டு உள்ளார்கள்.

வள்ளலாரைப்பற்றி தெரிந்து கொள்ளாத இவர்களை இயற்கை உண்மைக்  கடவுள் மன்னிக்கவே மாட்டார்.

இவர்களை தமிழர்கள் என்று எப்படி சொல்லுவது. பாராட்டுவது...

தயவு செய்து தமிழன் என்று தங்களைச் சொல்லாதீர்கள். சொல்லிக் கொள்ளாதீர்கள்.

மிகவும் வருத்தத்துடன் எழுதுகிறேன்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !

*இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !*

*ஜீவசமாதி என்றால் என்ன... திருமூலர் வள்ளலார் வகுத்துள்ள உண்மை இலக்கணங்கள்!*

*வள்ளலார் திருமூலர் இருவரும் மரணம் அடைந்தவர்களையும் ஜீவசமாதி அடைந்தவர்களையும் புதைக்க வேண்டும் எரிக்க கூடாது என்பதை மக்களுக்கு கட்டளையாகவே அறிவிக்கின்றார்கள்*

*இன்று மழையில்லாமல் தண்ணீர் பஞ்சம் வருவதற்கும்.இயற்கை தன் கடமையை செய்யாது இருப்பதற்கும் காரணமே...*

இறந்தவர்களை தீயிட்டும்.மின்சாரத்தின் துணைக்கொண்டு.கண்மூடித்தனமாக எரிப்பதும் இயற்கைக்கு மாறான துன்மார்க்க செயல்களாகும்.

எனவே பருவகாலங்களில் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போவதற்கு அதிகப்படியான காரணங்கள். பிணங்களை எரிப்பதே காரண காரியமாக இருக்கின்றது.

*இயற்கையை எதிர்த்து செயல்படுவதால் இயற்கை நமக்கு தரும் தண்டனையாகும்*

ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன்செய்தல் என்றுப் பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள்

புத்தி சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறி முறைகளையும் தனது இருகண்களினும் மேலாகப் பின்பற்றி வருகின்றனர்.

உடலையும், உள்ளத்தையும் மாசின்றி பேணிக்காக்கின்றனர்.
அலைமோதும் ஜீவனை ஒருநிலைப்படுத்தி, தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர்களின்  கலைகளாகும் .

'தன்னை அறிய தனக்கொரு கேடில்லை' என்கிறார் திருமூலர்.

தன்னை அறந்து இன்பம் உற ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என்கிறார் வள்ளலார்.

 இறைவனை அடைய அனைவரும் சொன்ன ஒரே வழி, 'அன்புமார்க்கம்'தான்.

பக்தர்கள் சித்தர்கள் !

*கடவுளைக் காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள். ஆனால், கண்டும் காணாமலும் தெளிந்தவர்கள் சித்தர்கள்.*

யோக் என்றால் சமஸ்கிருதத்தில் வழி என்று பொருள். இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி. பாவங்களை அகற்றக்கக்கூடிய, துன்பங்களை களையக்கூடிய, இறைவனைப் பற்றிய சிந்தனையுடன்

 சின் முத்திரை அல்லது ஆதி போன்ற முத்திரையில், யோகி அமரும் ஆசிரமம்தான் யோகாஸ்ரமம் எனவும் கூறுகின்றனர்.

*சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல* இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒருகாலத்திற்க்குள் நடத்தி காட்டிய பிறகு முக்தி அடைவதே சிறந்த்து என நினைத்தார்கள்.

*அதற்கு மேல் சித்தி நிலை உள்ளது அதற்கு மேல் ஞான நிலை உள்ளது என அறியார்கள்.*

ஆனால், அந்த சித்தர்களின் ஞானிகளின் ஆற்றலும், அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்துவிட்டு, இறைவனோடு இரண்டறக்கலக்கின்ற முயற்சியில் ஈடுபட்டார்கள்.முயற்சி பலன் அளிக்காமல் சமாதி நிலை அடைந்தார்கள்..

சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது.

*இவர்களின் உடல்,
மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயிர் உடலை விட்டுப் பிரிவதில்லை* என்கிறார் திருமூலர்.வள்ளலார்.

எனவே இறந்தவர்களின் உயிர் பிரிந்துவிட்டது என நினைத்து எரித்து விடுகின்றார்கள்.

உயிர் பிரிவதில்லை உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது..என்கிறார் வள்ளலார்.

இறந்தவரை எரிப்பது கொலைக் குற்றத்திற்கு சம்மானதாகும் என்கிறார் வள்ளலார்.

இறைவனோடு இறைவனாக கலக்க முயற்சி செய்து .அவை நடைபெறாமல.
நிலைத்து நிற்பதே ஜீவசமாதியாகும்.

அத்தகைய ஜீவசாமதி அடைந்த மேன்மக்களை அவர்களது சீடர்கள் உதவியோடு ஜீவசமாதிக்கான ஒரு குறிப்பிட்ட முறையான சடங்குளைப் பின்பற்றி அவர்களின் உடலை சமாதி செய்யவேண்டும் என நினைத்தார்கள்.

 இவ்வகையான முறைக்கு 'சமாதிக்கிரியை' என்று பெயர். எந்த இடங்களில் ஜீவசமாதி அமைக்கவேண்டும் என்ற குறிப்புகளையும், எவ்வாறு குழிதோண்டுவது என்றும், நிலவறை அமைக்கும் வழிமுறையினையும், உடலை எப்படி இருத்துவது போன்ற அத்தனை சடங்குகளைப் பற்றியும் தனது திருமந்திரம் என்னும் நூலில் திருமூலர் காரண காரியத்துடன் பாடல்களின் வாயிலாக  விளக்குகிறார்.

தெளிந்த ஞானம் கொண்ட தவயோகிகளின் உடலை ஜீவசமாதி அமைத்திட வேண்டியதின் அவசியத்தை வேறு எவரும் சொல்லாத வகையில் அழுத்தமாக திருமூலரும் வள்ளலாரும் கூறியுள்ளார்.

ஜீவசமாதியின் அவசியம்:

“அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்தவுடல் தான் குகை செய்திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி யுள்ளோரும்
அந்தமி லின்ப அருள்பெறு வாரே.

*மரணம் அடைந்தவரை புதைக்காமல் எரிப்பது நாட்டிற்கே தீமையாகும் என்கிறார் திருமூலர்*

*புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது
நண்ணி யனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியி லலங்கார பங்கமா
மண்ணுலகெல்லாம் மயங்கும் அனல் மண்டியே…” என்கிறார் திருமூலர்..

வள்ளலார் சொல்லும் பாடல் !

கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேயுலகீர் கலை சோர்ந்தாரைப்

பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர் புதைக்க நேரீர்

சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாதென சொல்லீர் நும்மைத்

தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதியிலை மேல் சூழ்வீர் அன்றே !

மேலும்.

பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப் பகர்கின்றேன் நீர்

சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி

உரனளிக்க எழுகின்ற திருநாள் வந்தடுத்தன ஈ து உணர்ந்து நல்லோர்

வரனளிக்கப் புதைத்த நிலை காணீர் கண்கெட்ட மாட்டினீரே !

எனப் பலபாடல்களில் இறந்தவரை புதைக்காமல் எரிப்பது.அறிவில்லாத குருட்டுத் தனமான செயல்களாகும் என்கிறார் வள்ளலார்..

மீண்டும் பிறப்பு எடுக்கும் ஆன்மா உயிர் இவை என்தை அறியாமல் குருட்டுத்தனமான வேதங்கள் சொல்லுவதை கேட்டு பிணத்தை எரிப்பது .நாட்டிற்கே தீங்கு விளைவிக்கும் செயலாகும் என்கிறார்.

*ஜீவசமாதி அடைந்தவர்களை அடக்கம் செய்வது எப்படி என்பதை தெரிவிக்கின்றார்கள்.*
அதாவது ஜீவசமாதி அடைந்த யோகியின் உடலை குழி தோண்டி அதில் இருத்தி புதைக்கவேண்டும். அதுவே புண்ணியமும் ஆகும். *இதற்கு மாறாக தீயிட்டு கொளுத்தினால் நாட்டில் பஞ்சம் ஏற்படும்.**

*பல கேடுகள் விளையும். மக்களுக்கும் பகைமை உண்டாகி ஒருவரையொருவர் அழித்துக் கொள்வர்*.

திருமூலர் பாடல் !

“அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே.

எண்ணிலா ஞானி உடலெரி தாவிடின்
அண்ணல் தன் கோவில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவீழா வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பார் அரசே.”….


*ஞானியின் உடலை முறையாக புதைக்காமல், கேட்பாரற்று நிலத்தின் மேல் அழிந்து போக விட்டுவிட்டால், அந்நாட்டில் மழையின்றி பெரும் பஞ்சம் ஏற்படும். அரசனும் தன் பதவியை இழப்பான். நாட்டுமக்களும் அழிவர்.*

 எனவே ஞானியரின் உடலை சமாதிக்கிரியை என்னும் முறையான சடங்கின்படி புதைப்பதே சிறந்தது என்கிறார் திருமூலர்.

*எந்த சரியை கிரியைப் போன்ற சடங்குகள் வேண்டாம் என்கிறார் வள்ளலார்*

ஏன் என்றால் உயிர் அடக்கம் கொண்டவர்கள் நீங்கள் செய்யும் சடங்குகளை எதிர்பார்ப்பது இல்லை.மீண்டும் பிறப்பு எடுப்பார்கள் எனவே எந்த சடங்குகளும் வேண்டாம்..என்கிறார்

அன்று நேரிட்ட மட்டில் அன்னவிரயம் செய்தால் போதுமானது என்கிறார் வள்ளலார்.

திருமூலர் சொல்வது !

சமாதிக்கான இடத்தேர்வு குறிப்புகள்:
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே.

திருமூலரின் பாடல்களில் குறிப்புகளாக, மனை, சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றின்படுகை, மணம் கமழும் மலர்வனம், நகரில் நல்லதோர் இடம், அடர்ந்தகாடுகள், மலைச்சாரல் போன்ற இடங்கள் ஜீவசமாதி அமைக்க உகந்த இடங்களாக திருமூலர் கூறுகிறார்.

நிலவறையும் சடங்குகளும்:
ஞானியரின் உடலை வைக்கும் இடமே நிலவறை என்று பெயர்.

இந்நிலவறை எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் திருமூலர் கூறுகிறார்.
நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழவைஞ் சாணாகக் கோட்டித்து
அவ மிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

ஒண்பது சாண் ஆழத்திற்க்கு ஒரு குழியைத் தோண்ட வேண்டும். வெட்டி எடுத்த மண்ணை அந்தக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்ட வேண்டும். முக்கோண வடிவமாக அந்த குகையைச் செய்ய வேண்டும். அதன் பக்கங்கள் மூன்று சாண் அளவு இருக்க வேண்டும். அதில் அந்த ஞானியின் உடலைப் பத்மாசனத்தில் இருத்த வேண்டும்.

இவ்விடத்தை குகை அல்லது நிலவறை என்பர்.

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேலா சனமிட்டு
முஞ்சிப் படுத்து வெண்ணீ றிட்டதன் மேலே
பொன் செய் நற்சுண்ணம் பொதியலுமாமே.

நள்குகை நால்வட்டம் படுத்தன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமம் கலாபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புனுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய பஞ்சலோகங்களையும், நவ ரத்தினங்களையும் முக்கோணவடிவில் குழியின் ஆழத்தில் பரப்பி, அதன் மீது தர்ப்பை புற்களை விரித்து, வெண்ணீற்றையும், பொன்னிறசுண்ணப்பொடியையும் கொட்டி நிரப்பி இருக்கை அமைக்க வேண்டும்.

மலர்கள், சந்தனம், புனுகு, கஸ்தூரி மற்றும் பன்னீர் கலந்து குழியைச்ச்சுற்றி சதுரமாய் தெளித்து, தீபம் ஏற்றி வைத்துவிட வேண்டும்.

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினி லிட்டா சனத்தின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமு நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னாகமிள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல் வட்டம் சாத்திடு வீரே.

சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனஞ் செய்துபார்

*பதிமூன்றுக்கு மூன் றணி நிலம் செய்யுமே*.

உடலை இருக்கையின் மேலே இருத்த வேண்டும். குகையில் வைத்து நாலாப் புறங்களிலும் மண்ணை விரித்துச் சமமாக்க வேண்டும்.

மேலே சொன்ன முறைகளை எல்லாம் செய்த பின்னர்  மூடி, ஞானி சமாதியின் சந்நிதி வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைத்து, அதற்கு அன்புடன் பதினாறு வகையான உபசாரங்களையும் செய்ய வேண்டும் என்று திருமூலர் தனது திருமந்திரம் என்னும் நூலில் மிகவும் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

ஜீவசமாதி உள்ள இடத்திற்க்கு சாதாரண மக்கள் சென்றால் மனம் அமைதியடையும். நோய்கள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மால் நல்ல நுண் அதிர்வலைகளை அவ்விடத்திலே உணரமுடியும். வாழ்வில் நற்திருப்பங்களும் ஏற்படும்… இவை போன்ற பலன்கள் பலர் வாழ்வில் அனுபவப்பூர்வமாக நடக்கவே செய்திருக்கின்றன.

ஜீவசமாதிகள் கோயில்களுக்கு இணையான தெய்விகத் தன்மை கொண்டவைகள் ஆகும்...

*வள்ளலார் தெளிவாக.சமாதி வற்புறுத்தல் என்ற தலைப்பில்  விளக்குகின்றார்*

இறந்தவரை கண்டிப்பாக புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது என்று இயற்கையின் சட்டத்தையே  பிறப்பிக்கின்றார்.

எனவே நாம் இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது !

திருமூலர் வள்ளலார் என இரண்டு ஞானிகளை குறிப்பிட்டது எதனால் எனில் .இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது என்பதில் இருவரும் ஒத்த கருத்து உடையவர்கள் என்பதால் மக்களுக்கு திருமூலரையும் சேர்த்து வெளிப்படுத்தி உள்ளேன்...

மக்கள் இயற்கையுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால்.
இயற்கைக்கு மாறாக செயல் படக்கூடாது.

 மக்களும்.மக்களை வழிநடத்தும் ஆட்சியாளர்களும் உண்மை உணர்ந்து.
இறந்தவர்களை எரிக்காமல் புதைக்க வேண்டும்.

உலகில் தண்ணீர் பஞ்சம்.பசி.பட்டினி. வறுமைக்கு காரணமே இறந்தவரை சமாதி செய்யாமல் எரிப்பதே காரணமாகும்

இவற்றை அரசும் மக்களும் உடனடியாக கடைபிடித்து செயல்பட்டால் மக்கள் எக்குறையும் இல்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழலாம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சுத்த சன்மார்க்கிகளுக்கு வாழ்த்துக்கள் !

*சுத்த சன்மார்க்கிகளுக்கு வந்தனம் வாழ்த்துக்கள் *!

சுத்த சன்மார்க்கம் மிகவும் வேகமாக மக்களின் மனதை ஈர்த்துக் கொண்டு வருகின்றது.

அந்த அளவிற்கு சுத்த சன்மார்க்க மெய் அன்பர்கள் அயராது ஜீவகாருண்ய பணியிலும் சத்விசாரத்திலும்  ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள்.

தாய் போல் உரைப்பர் சன்மார்க்கத்தவர் என்ற வள்ளலாரின் வாக்கிற்கு இணங்க
அன்பெனும் பிடியுள் மக்களை நல்வழியில் கொண்டு செல்லும் சன்மார்க்க தயவுள்ளவர்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்ற அளவிற்கு  அயராது உழைத்து வருகிறார்கள்.

வள்ளலார் பெயரைச் சொல்லிக் கொண்டு சமய மத வாதிகள். சன்மார்க்கத்தை பின் பற்றுவதுபோல் உள்ளே நுழைந்து கொண்டு குழப்பத்தை உருவாக்கிக் கொண்டு உள்ளார்கள்.

அதிலே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அவர்களையும் நம்மவர்களாக்கி கொள்ள வேண்டும்..

நம் தந்தை நமக்கு சொல்லிக் கொடுத்தது.ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்.

உலகில் உள்ள எல்லா உயிர்களையும் இந்திரிய.கரணங்களையும் தனக்காக பயன் படுத்தி வாழ்வதற்காக . இயங்கிக் கொண்டு இருப்பதுதான் உள் ஒளியான ஆன்மாவாகும்...

தன் குழந்தைகளாகிய எல்லா ஆன்மாக்களையும் இயக்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் ஒளியாகும்.

உடல் வேறு உயிர்வேறாக இருந்தாலும் உள்ளே இயங்கும் உள் ஒளியான ஆன்மா ஒரேத் தன்மை உடையதாகும்.

எனவேதான் சுத்த சன்மார்த்தின் முக்கிய லட்சியமாகிய  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள் .எக்காலத்தும் .
எவ்விடத்தும் .எவ்வித்த்தும்.எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்வித்து அருளல் வேண்டும் என்ற விண்ணப்பத்தை கட்டாயமாக்கி போதித்து உள்ளார் நம் அருள்தந்தை திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான்.

நாம் அவற்றை இடைவிடாது பின்பற்ற வேண்டும்..

மேலும் கண்டிப்பாக கவனிக்க வேண்டியது !

மக்களின் மனநிலையானது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை.சாதி.சமய.மதங்களிலே பற்று வைத்துள்ளார்கள்.. அவர்களை சுத்த சன்மார்க்கத்திற்கு மாற்ற வேண்டும்.

அவர்களும் நம் சகோதர உரிமை உடையவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது..

வள்ளலார் நமக்கு சொல்லித் தருவதை கவனிக்கவும் !

எல்லாம் வல்லத் தனித்தலைமைக் கடவுளே !  உங்கள் அற்புதத் திருவருள் விளக்கத்தால்.!

எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும்.உண்மை அடியர்களாக்கி உண்மை அறிவை விளக்கி.உண்மை இன்பத்தை அளித்துச் *சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும் என்கின்றார்.*

சமய மதவாதிகளையும் நம்மவர்கள் ஆக்கிக் கொள்வதே நம் குறிக்கோலாகும்...

அதே நேரத்தில் சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோத மான செயல்களில் ஈடுபாடு வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றார்...

வள்ளலார் சொல்லுவதை கவனமாக கவனித்து பின்பற்றி வாழவேண்டும் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்த்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள்.என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம்.ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் .எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்..

நாம் முன் உள்ள சமய மதங்களில் பழக்க வழக்க தோஷத்தினால் பற்று வைத்தால்.நமக்கு கிடைக்க வேண்டிய அருள் கிடைக்காமல் போய்விடும்.

நாம் பெற வேண்டியது ஆன்ம லாபம்.ஆன்மலாபம் பெற்றால்தான் அருள் லாபம்பெற முடியும் அருள் லாபம் பெற்றால்தான் மரணத்தை வெல்ல முடியும்.

மரணத்தை வென்றால் தான் பேரின்ப லாபம் பெறமுடியும்.பேரின்ப லாபம் பெற்றால்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறமுடியும்.என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்துள்ளார்...

எனவே நாம் அடையப்போகிறது எல்லாமே லாபம் என்ற இன்பமாகும்.

அதுதான் என்றும் அழியாத பேரின்ப லாபமாகும்..

மனிதன் உயர்ந்த அறிவுள்ளவன். எனவே நன்கு உணர்ந்து சிந்தித்து ஆன்ம அறிவைக் கொண்டு செயல்படுவோம்..

*இங்குள்ள மனிதர்களுக்கு மட்டும் அல்ல.உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நெறியே வள்ளலார் காட்டிய.சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க புனித நெறியாகும்*

*அதேபோல் உலக மக்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்பதை ஆன்மாவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்*

*அவர்தான் தனிப்பெரும் கருணையே வடிவமானவர் *!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

தண்ணீர் விரயம் ஆவதில்லை !

தண்ணீர் விரயம் ஆவதில்லை.!

தண்ணீர் எப்போதும் வீணாவதில்லை தண்ணீர் தடம்மாறுகிறது இடம் மாறுகிறது.உருமாறுகிறது.சேமிக்கப் படுகிறது.கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் போகிறது..

இயற்கை வழங்கும் எந்தப் பொருளும் இந்த உலகைவிட்டு வெளியே செல்லமுடியாது.

ஏதோ ஒரு ரூபத்தில் இருந்து இயங்கி சென்று கொண்டேதான் உள்ளன.

மனித குணமே மாற்றங்களுக்கு எல்லாம் காரண காரியமாக இருக்கின்றது..

மழையோ உலகம் முழுவதும் பொழிந்து கொண்டே தான் உள்ளது இடம் மாறி மாறி பொழிகின்றது. அவ்வளவுதான்..

நமக்கு தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டதே என நினைக்கிறோம்..அதே தண்ணீர் வேறு மாநிலங்களில். வேறு நாடுகளில் நிறைந்து வழிகின்றது.

இதற்கு எல்லாம் காரணம் என்ன ?

இயற்கை உண்மைகளையும் இயற்கை செயல்களையும்.இயற்கை உணர்வுகளையும் தெரிந்து அறிந்து வாழ மனிதன் தகுதி அற்றவனாக இருக்கிறான்..

மனித சட்டத்தினாலோ.திட்டத்தினாலோ எதுவும் முழுமையாக இயற்கையிடம் இருந்து பெறமுடியாது.

ஆயிரக்கணக்கான பொய்யான கடவுள்களை வேண்டினாலும் மழை வராது..

கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டியது யாவும்  இயற்கையால் கிடைக்கும்.

இயற்கை உண்மை வடிவினன் கடவுள் ! என்கிறார் வள்ளலார்.

இயற்கை உண்மை வடிவினன் இயற்கை விளக்கமாக. இயற்கை இன்பம் தருபவனாக செயல் பட்டுக் கொண்டுள்ளார்.

அவர்தான் அருட்பெருஞ்ஜோதி பேரொளியாக இந்த உலகத்தை இயக்கிக் கொண்டு உள்ளவராகும்.

அவரைப்பற்றி அறிந்து கொள்ளாமல்
இறைவன் யார் என்ற உண்மை அறியாது எவ்வளவு தான் வேண்டியும் பயன் இல்லை.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ! என்பதுதான் இயற்கையின் நியதி..

உண்மை ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும்.

எல்லா உயிர்களிடத்தும்.அன்பும்.தயவும்.
கருணையும்.இரக்கமும் கொண்டு வாழ்ந்தால்.கொடுக்க வேண்டிய காலத்தில் .கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டே இருப்பார்..

இயற்கை நேசிப்போம் இன்பமுடன் வாழ்வோம்.

இயற்கை உண்மை என்பது ஆன்மா.அது தன்னுள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளது.அதுதான் உள் ஒளி என்பதாகும்.

அதுவே இயற்கை உண்மையாகும் அதுவே கடவுளின் ஏகதேசமாகும்..

அதுவே தன்னை அறிதலாகும்.

தன்னை அறிந்தால் தனக்கு ஒரு கேடில்லை என்பது சத்திய வாக்கு..

தன்னை அறிந்து இனபம் உற வெண்ணிலாவே ...ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே !

என்பார் வள்ளலார்.

தன்னை அறிந்து வாழ்ந்தால்.தண்ணீரும் வரும்.கண்ணீரும் வரும்.சுத்தமான பண்ணீரும் வரும்.என்றும் அழியாத அமுத மழையும் பொழியும்.

நாட்டில் பஞ்சம்.பட்டினி.வறுமை.பற்றாக்குறை என்றும் தலை தூக்கி ஆடாது...

எல்லா உயிர்குலமும் மகிழ்ச்சி யுடன் வாழும்வழி தானே கிடைக்கும்.

சிந்திப்பீர் செயல்படுவீர்..

இது அருள் வாக்கு !

அசட்டை செய்யாதீர்கள்.

ஒழுக்கம் நிறைந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்..

ஒழுக்கமும் அன்புமே உயர்வுக்கு வழி..

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் !

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் !

என்பது சான்றோர் வாக்கு....

தவம் என்பது தன்னை அறிதலே தவமாகும்.எதிர்பார்க்காமல் செய்யும் ஜீவகாருண்யமே தானம் என்பதாகும்.இந்த இரண்டும் இல்லை என்றால் வானம் மழை பொய்யாது என்பதாகும்.

உயிர் இனங்கள் வாழும் வகை அறியாமல் மாண்டுபோகும்.

எனவே மனிதனுக்கு.. தானமும் தவமும் மிகவும் முக்கியமாகும்.

நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் முழுவதும் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

செவ்வாய், 18 ஜூன், 2019

அருளாளர் மகாசபைக் கூட்டம் !

அருளாளர்கள் மகாசபைக் கூட்டம் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பெருவெளியில்  ஒரு மாபெரும் மகாசபையைக் கூட்டுகின்றார்.

*வள்ளல்பெருமானையும் அங்கு அழைக்கின்றார்..* வள்ளலார் அங்கு வந்து தனிமையில் அமர்ந்திருக்கின்றார்.

அருளாளர்கள் கூட்டம் !

அந்த மகாசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அருளாளர்கள் யாரெல்லாம் என்பதை வள்ளலார் பதிவு செய்கிறார்.

பாடல் !

உருத்திர்ர்கள் ஒருகோடி நாரணர்கள் பல்கோடி
உறுபிரமர் பல்கோடி இந்திர்ர்கள் பல்கோடி

பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில் அனந்தங்கோடி யாங்காங்கே கூடித்

திருத்தமுறு திருச்சபையின் படிபுறத்தே நின்று
தியங்குகின்றார் நடங்காணுஞ் சிந்தையரா அந்தோ

வருத்தம் ஒன்றுங் காணாதே நான் ஒருத்தி யேறி
மாநடம் காண்கின்றேன் என் மா தவந்தான் பெரியதே !

மேலே கண்ட பாடலில் யார் யார் எல்லாம் கலந்து கொண்டார் என்பதை வள்ளலார் பட்டியல் போட்டு சொல்லுகிறார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்சி செய்யும் அந்த  மாநடத்தை கண்டு அதிசயித்து நின்றேன்.என்ன புண்ணியம் செய்தோனோ என்கிறார்.

அடுத்து மேலும் யார் யாரை  எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைத்துள்ளார் என்பதை பாருங்களேன்!

பாருலகா அதிபர். புவனா அதிபர் ஆண்ட அதிபர்கள்.
பகிரண்டா அதிபர். வியோமா அதிபர்.முதலாம் அதிபர்

ஏருலவாத் திருப்படிக் கீழ் நின்று விழித்திருக்க
எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன்

சீருலவா யோகாந்த நடம் திருக்கலாந்தத்
திருநட நாதாந்தத்தே செயும் நடம் போதாந்தப்

பேருலவா நடங் கண்டேன் திருவமுதம் உணவும் பெற்றேன்
நான் செய்த தவம் பேருலகில் பெரிதே !

என்னும் பாடலிலே கலந்து கொண்டவர்களின் பட்டியலை வெளியிடுகின்றார்..

இவர்கள் எல்லவரும் உலகங்களையும்.அண்டங்களையும்.
ஆட்சி செய்யும் அதிகாரம் பெற்ற அருளாளர்கள். *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  நியமிக்கப்பட்ட அருளாளர்கள்*. என்பதை வெளிப்படுத்துகின்றார்...

* இவர்கள் முன்னாடி  வள்ளலாரை அழைக்கின்றார்.* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.வள்ளலார் இடம் தன்னுடைய
ஆட்சியை ஒப்படைக்கும் காட்சியை வெளிப்படுத்துகின்றார்...

எல்லோரும் ஆச்சரியமாக என்ன நடக்கப் போகிறது என்பதை விழிமூடாமல் பார்த்துக் கொண்டுள்ளார்கள்...

வள்ளலார் பதிவு செய்து பாடலைப் பாருங்கள் !

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் களிக்கும் போது மணவாளர்

மெய் பிடித்தாய் வாழிய நீ  சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது

கைபிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனி உனை நாங்  கைவிடோம் என்றும்

மைபிடித்த விழியுலகர் எல்லோரும் காண
மாலை யிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !

என்னும் பாடலின் வாயிலாக மக்களுக்கு உண்மையைத்  தெரியப் படுத்துகின்றார்...

சபையின் புறத்திலே அமர்ந்திருக்கும் நாம் வணங்கும் அருளாளர்கள் எல்லோரும். பொய் பிடித்தவர்கள் என்பதை தெரிவித்து.வள்ளலாரை அழைத்து நீ ஒருவன் தான் மெய் பிடித்தாய் ஆதலால்.

*உலகத்தை கட்டி ஆளும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உலகம் முழுவதும் விளங்க.விளக்குக என என் கைபிடித்து கொண்டார்.நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கால் பிடித்துக் கொண்டேன் என்கின்றார்*.

இனிமேல் உம்மை கைவிடமாட்டேன் என்று மைபிடித்த விழி உலகர் எல்லோரும் காண *அருள்மாலை* அணிந்து.இன்று முதல் என்னாலும்  அருள் ஆட்சி புரிய ஆணை யிட்டார் என்பதை எல்லோரும் அறிய அறிவிக்கின்றார்.

*இது நடந்த்து எப்போது என்றால் 1874 ஆம் ஆண்டாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஆட்சி செய்யும் அருட்பெரு வெளியில்*.முன்னாடி  உள்ள அருளாளர்கள் முன்னிலையில்  திருஅருட்பிரகாச வள்ளலாருக்கு.அருள் ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் அதிகாரப்பூர்வமாக அருள் சுதந்தரத்தையும் கொடுத்து அறிவிக்கின்றார்..

இவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்த முன்னாள் ஆட்சி செய்த அருளாளர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி மயங்கிய நிலையில் எதோ பேசிக் கொண்டு உள்ளார்கள்.அப்போது மேலும் ஒரு அறிவிப்பை வெளியிடுகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..

பாடல் இதோ !

பொருத்தம் இல்லார் எல்லோரும்  புறத்திருக்க நான் பொய்ப்
பொது நடங் கண்டு வந்து நிற்கும் போது தனித்தலைவர்

திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
தெயவ மலரடி பிடித்துக் கொண்டேன் சிக்கெனவே

வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல் காண் அழியா
வாழ்வு வந்த்து உனக்கே ஏழுலகும் மதிக்கக்

கருத்தலர்ந்து வாழிய வென்று ஆழி அளித்து எனது
கையினிற் பொற் கங்கணமுங் கட்டினர்காண் தோழி !

என்னும் பாடலில் ...

இதற்கு முன்னணி அமரந்து இருக்கும் அருளாளர்களுக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிர்வாகம் செய்யும் பொருத்தமும்.தகுதியும் இல்லை. எனவே நீ வருத்தம் கொள்ளாமல் எல்லா உலகமும் மதிக்க அருள் ஆட்சி செய்வாயாக என்றும்.

*இதுநாள் வரையும் உண்மை இறைவனை உலகிற்கு அறிமுகப்படுத்த தகுதி இல்லாமல் வாழ்ந்தவர்கள் தான் முந்தைய அருளாளர்கள்.*

மேலும் மரணத்தை வெல்லும் வழியைக் காட்டாமல் ..ஆன்மாக்களை அலைய விட்டுவிட்டார்கள்..

கைலாயபதி என்றும்.வைகுண்டம் என்றும்.சத்திய லோகாதபதி என்றும்.சொர்க்கம்.நரகம் என்றும்.பரலோகம் என்றும்.அல்லா என்றும்.ஏசு என்றும்.புத்தம் என்றும்.பிரம்மம் என்றும்.பர பிரம்மம் என்றும் பல பொய்யான வழிகளை காட்டி உள்ளார்கள்...

எவற்றைப்பற்றியும் வருத்தம் கொள்ளாமல் மயக்கம் கொள்ளாமல்  ஆட்சி செய்வாயாக...நான் உன்னுடன் எப்போதும் பிரியாமல் இருப்பேன் என்றும் நிலைப்பெற்ற அருள் ஆட்சி செங்கோல் வழங்குகிறேன் என்றுகங்கணமும் கட்டி மகிழ்கின்றார்...

இப்படி இன்னும் நிறைய உண்மைகளை அனபவமாலைப் பகுதியில் பாடலில்.இறைவன் ஆணைப்படி பதிவு செய்து வைத்துள்ளார்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் உலக மக்களுக்கு எல்லா உண்மைகளையும் தெளிவுபட விளக்கி உள்ளார்.

இவற்றை எல்லாம் நாம் அறியாமல் உணராமல்..அழிந்து கொண்டு இருக்கும் சாதி.சமய.மதக் கொள்கைகளையும்.அவற்றில் காட்டியுள்ள பொய்யான தத்துவத் தெய்வங்களையும் வணங்குவதால் வழிபடுவதால் எந்த பயனும் இல்லை..

எனவேதான் சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி ! என்னும் வரிகளின் வயிலாக பதிவு செய்கின்றார்.

வள்ளலார் காட்டிய உண்மைத் தெய்வமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் ..அவர்காட்டியுள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க்க் கொள்கைகளான.இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து வாழ்வதே சத்திய வார்த்தையாகும்...சத்திய வாழ்க்கையாகும்..

ஆட்சி மாற்றத்தை கண்டு கடைபிடித்து வாழ வேண்டும்.

இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்சியாகும்..

வள்ளலார் பாடல் !

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு

மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !

என்னும் பாடலிலே தெளிவான விளக்கம் தந்து வெளிப்படுத்தி உள்ளார்..

இனிமேலும் கண்மூடித்தனமான கற்பனைக் கொள்கைகளைக் கடைபிடித்து.பின்பற்றி அழிந்து போகாமல்  என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழும் சமரச சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து வாழ்வோம்..

சுத்த சன்மார்க்க கொள்கைகளில் மிகவும் முக்கியமானது .கொல்லாமை.புலால் மறுத்தல்.

அடுத்து கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். என்ற உண்மையும்.. அடுத்து

எல்லா உயிர்களிலும் இறைவன் இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை உணர்ந்து ஜீவகாருண்ய உயிர் இரக்கமும் கொண்டு வாழ்வதே முக்கியமான வாழ்க்கை நெறி முறைகளாகும்.

இவற்றை இடைவிடாமல்  கடைபிடித்தால் இறைவன் அருள் வழங்க தயாராக உள்ளார்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 13 ஜூன், 2019

வள்ளலாரின் தனிச்சிறப்பு !

*வள்ளலாரின் தனிச்சிறப்பு*

வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..

காவி ஆடை உடுத்த மாட்டார்.

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாசனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரமம் அமைத்துக் கொள்ளமாட்டார்..

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..

சத்தம் போட்டு பேசமாட்டார்..

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..

ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..

புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..

வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சாத்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றவர்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..

தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.

கடவுளைத்தேடி காடு, மலை, குகை,
குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர்.

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

மூச்சுப் பயிற்சி, வாசியோகம், தியானம், தவம், யோகம், குண்டலினி போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.

தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.

உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.

ஆலய வழிபாடு, உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார் , தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.

ஒளி வழிப்பாட்டிற்காக
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.

மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான *திருஅருட்பா* வைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல என்றவர்.

மரணம் செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..

மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் பெருமையை சொல்லி மாளாது.