புதன், 29 மே, 2019

பசியின் சகியாமை !

 *பசியின் சகியாமை !*

பசி என்பது ஒரு உபகாரக்கருவி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட நல்வினையாகும்.

இந்த பஞ்ச பூத உலகில் ஜீவன்கள் மற்றும் ஜீவர்கள் பசியில்லாமல்  வாழவே முடியாது...

*பசிக்கு ஏழை பணக்காரன் என்ற பேதம் கிடையாது*

எனவேதான் எல்லா உயிர்களுக்கும்  பசி என்பது ஒரு உபகாரக்கருவியாக இறைவன் தந்து உள்ளார்..

பசியினால் மட்டுமே ஒரு ஜீவனை ஒரு  ஜீவனை தொடர்பு கொள்ள முடியும்.வேறு வழிகளில் தொடர்ர்பு கொள்ளவே முடியாது.

*அதற்கு பெயர்தான் அன்பு தயவு கருணை அருள் என்பதாகும்*

எனவேதான் ஜீவகாருண்யம் என்னும் கருவியை ஒவ்வொரு ஜீவர்களும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்பதை வள்ளலார் வலியுறுத்துகின்றார்..

*அதற்கு ஜீவகாருண்யம் என்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்துள்ளார்*

*ஆன்மாவில் இருக்கும் *அருள்*.அறியாமை.
அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால. மறைக்கப் பட்டுள்ளன.

அந்த மாயா திரைகளை நீக்க .அகற்ற.விலக்க  ஜீவகாருண்யம் மட்டுமே நேர் வழியாகும்.

*எனவே தான் ஜீவகாருண்ய மே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார்*

பசியைப் போக்குவதற்கு உணவுதான் முக்கிய காரண காரியமாக உள்ளன.

பசியைப் போக்கும் போது கொடுப்பவர்களுக்கும்.அவற்றைப் பெற்று  அனுபவிப்பவர் களுக்கும்.*அன்பும் அறிவும்* உடனாக நின்று விளங்குகின்றது..

இதற்குத்தான் *உபகாரசக்தி* என்று வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்..

உபகாரசக்தி என்பதுதான் பாவத்தை நீக்கி.
*ஆன்மா புண்ணியும் பெறும் வழியாகும்*.

அந்த புண்ணியத்தால் மட்டுமே *இறைவன் அருளைப் பெற வேண்டும்* என்பது இறைவன் சட்டத்தின் நியதி யாகும்...

பசி என்பது ஏழை.பணக்காரன் அனைவருக்கும் பொதுவானது என்றாலும்.பொருள் உள்ளவர்கள் பசியை சிரமம் இல்லாமல் போக்கிக் கொள்வார்கள்..

*ஏழைகள் பசியினால் படும் அவத்தைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை* என்பதை பொருள் உள்ளவர்கள் தெரிந்து கொண்டு ஏழைகளின் பசியைப் போக்க வேண்டும்.

*பசியைப் போக்கும் ஒரே வழிதான் அருளைப் பெறும் துவாரமாகும்*

*பசியின் சகியாமையால்* ஏழைகள் படும் அவத்தைகளை வள்ளலார் *ஜீவகாருண்ய ஒழுக்கம்* என்ற உரைநடைப் பகுதியில் பதிவு செய்துள்ளதை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

 *பசியினால் துன்பம் நேரிட்டபோது*

 மன எழுச்சியால் அத்துன்பத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள்.

பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால்,

 அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்கள் என்பது சொல்ல வேண்டுவதில்லை.

உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசி நேரிட்டபோது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் *'பசி நேரிட்டது, என்ன செய்வது!*' என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான்.

 பகைவரால் எறியப்பட்டு மார்பில் உருவிய பாணத்தையுங் கையாற் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரை யெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க *சுத்த வீரரும் பசி நேரிட்டபோது, சௌகரியத்தை யிழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து '*இளைப்பு வருமே' சண்டை எப்படிச் செய்வது!*' என்று முறையிடுகின்றார்கள்.

 இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து *அறிவையறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும்*

 இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற *யோகிகளும்,*

இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய *சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும்* பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவலட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பசியைப் போக்கிக் கொள்ள வருகின்றார்கள்;
உணவு  நேராதபோது நிலை கலங்குகின்றார்கள்.

சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர் விடத்தக்க *மானிகளும்* பசி நேரிட்டபோது, சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங் குலைகின்றார்கள்.

*சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும்* பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள்.

*கல்வி கேள்விகளில் நிரம்பி* அறிதற்கரிய நுட்பங்களை யறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்கவல்லவர்களும் பசி நேரிட்டபோது, *அறிவுங் கருத்தும்* அழிந்து தடுமாறுகின்றார்கள்.

 *இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்டபோது, புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள்*.

 நாமே பெரியவர் நமக்குமேற் பெரியவரில்லை யென்று *இறுமாப்படைகின்ற அகங்காரிகளும்* பசி நேரிட்டபோது, அகங்காரங் குலைந்து ஆகாரங் கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள்.

 ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற *டம்பர்களும்* பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள்.

*பொருள் உள்ளவர்கள்  பசி நேரிட்ட போது இப்படி கலங்குகிறார்கள் என்றால் ஏழைகளின் நிலையை நினைத்து பார்க்க வேண்டும்*

 இவரிவர் இப்படி இப்படியானால் *ஒருவகை ஆதாரமும் இல்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது* என்ன பாடு படார்கள்! அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங்கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷமுண்டாகும்!

 அந்தச் சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு *எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்!* இப்படிப்பட்டதென்று சொல்லுதற்கும் அருமை என்றறிய வேண்டும்.

*ஆதலால் ஆன்ம லாபம் பெறுவதற்கு ஜீவகாருண்யமே நேர்மையான நேர்வழியாகும்*..

 எனவே *உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகம் எடுத்துள்ள நாம்* ஒவ்வொருவரும் ஆன்மலாபம் பெற வேண்டும் என்பதே இறைவன் ஆணையாகும்.
இறைச் சட்டமாகும்.

ஆன்ம லாபம் பெற்றால் அன்பும் அறிவும் உண்மையைத் தேடும்..

உண்மை என்பது மெய்ப்பொருள் என்பதாகும்.
மெய்ப்பொருள் என்பது கடவுள் ஒருவரே என்பதாகும்..
*அந்த ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி* என்பதாகும்..

அருளை வழங்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து உணர்ந்தவர்களே *மெய்ப்பொருளை அறிந்த  *சுத்த சன்மார்க்கிகள் ஆவார்கள்..*

அவர்களே மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவர்கள்...

வள்ளலார் பாடல் !

துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே

தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்

*சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்*

*சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்*

பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்

*பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்*

என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை

*எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!*

என்னும் பாடல் வாயிலாக பசியைப் போக்கி சாவையும் பிறப்பையும் தவிர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்..

பசியைப் போக்கினால் மட்டுமே ஆன்ம லாபம் கிடைக்கும்.
ஆன்ம லாபம் பூரணம் பெற்றால் தான் இறைவன் அருள் கிடைக்கும்.இறைவன் அருள் பூரணம் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்...

தொடரும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 27 மே, 2019

இறைவன் நேரில் பேட்டி !

*இறைவன் நேரில் பேட்டி கண்ட அருளாளர் யார் ?*

உலகில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும்  இறைவனைத் தேடி அலைந்தார்கள்.
அதனால்  அவர்கள் அடைந்த துன்பம்.துயரம்.அச்சம்.
பயம்.சோதனைகள் அளவில் அடங்காதது என்பது அவரவர்களின்  வரலாறுகள் சொல்லுகின்றன.

அவர்களை ஒருநாளும் இறைவன் தேடிச் சென்றதில்லை.

*இவ்வுலகில் இறைவனே  தேடிவந்து பேட்டி கண்ட ஒரே ஒரு அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலாரை மட்டுமே !*

வள்ளலார் பாடல் !

நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே

நேர்காண வந்தனம் என் றென்முடிமேல் மலர்க்கால்

தான் நிலைக்க வைத்தருளிப் படுத்திட நான் செருக்கித்

தாள்கள் எடுத் தப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே

ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே

எனக்கிலையோ என்றருளி எனை யாண்ட குருவே

தேன் நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே

தெய்வ நடத்தரசே என் சிறுமொழிஏற் றருளே.!

என்னும் பாடலிலே தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்..

*நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்து தான் உம்மை நேர்காண வந்தோம் என  வள்ளலார் இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகிறார்*

மேலும் அவற்றைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் வள்ளலார் இருக்க...ஏன் ?  என் மகனே எனக்கு உன்னை பேட்டிகாணும் சுதந்திரம் எனக்கு இல்லையோ என வள்ளலாரிடம் இறைவன் கேட்கும் பாங்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டுகின்றது.

இந்த நிலை உலகில் எந்த அருளாளருக்கும் கிடைக்காத மாபெரும் நிகழ்ச்சி யாகும்.

*அப்படி என்ன ? வள்ளலார் செய்த நன்மைகள்..*.

உலகில் தோன்றிய சித்தர்கள் ஞானிகள் யாவரும் உண்மைக் கடவுளைக் காண முயற்சி செய்து.முயற்சி வெற்றி அடையாமல் தோல்வி தான் அடைந்தார்கள்.

பின்பு தத்துவங்களை கடவுளாக ஏற்று வழிப்பட்டு .தியானம்.
தவம்.யோகம் போன்ற சாதனங்களில் ஈடுபட்டு சிறு அருள் ஒளியை பெற்று.வானகத்தும்.வையகத்தும் மற்றகத்தும் சென்று அலைந்து.திரிந்து. காலத்தை வீணாக கழித்து இறுதியில் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுத்து கொண்டே இருந்தார்கள் இருக்கின்றார்கள்...

*வள்ளலார் சென்ற பாதை தனியானது.*.

*வள்ளலார் அவ்வழியில் செல்லாமல்..இறைவனால் படைக்கப்பட்ட  எல்லா உயிர்களையும்.தம் உயிர்போல்  நேசித்தார்..அவ்வுயிர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்க. அரும்பாடு பட்டார்.வெற்றியும் கண்டார்*

மேலும் எல்லா உயிர்களையும் இயக்கும் உள் ஒளியாகிய *ஆன்மாக்களின்* தன்மையைக் கண்டார்.

*உயிர் இரக்கத்தையும்.
ஆன்ம நேயத்தையும் கண்டு.*உயிர் நேயத்தையும்.ஆனம நேயத்தையும்* கடைபிடித்து மக்களுக்கு இறை அருள் உண்மைகளைப் பற்றி  பறை சாற்றினார்.*

*உயிரையும்.ஆன்மாவையும் படைத்த இறைவன் யார்? என்பதை அறிந்து.அந்த ஒரே இறைவன் தான் அருட்பேரொளி என்பதை அறிந்து அவருக்கு அருட்பெருஞ்ஜோதி என்று பெயர் சூட்டினார்*

மேலும் இறைவனால் படைத்த உயிர்களான *தாவரங்களும்* தண்ணீர் இல்லாமல் வாடுவதைக் கண்டு தானும் வாடினார்.

வள்ளலார் பாடல் !

*வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்* பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்து கின்றோர் என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.!

தாவரம் முதல் எல்லா உயிர்களும் ஒரேத் தன்மை உடையது என்பதை அறிந்து கொண்டு ஜீவ நேயத்தை கடைபிடித்தார்.

*மேலே கண்ட பாடல் தான் வள்ளலாரை ஏறாநிலை மேல் ஏற்றியதாகும்.*

*வள்ளலாரின் இந்த உண்மை நிலையை அறிந்து உணர்ந்து தெரிந்து தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை நேர்காண வந்தார்.* என்பதை ஒவ்வொரு அறிவுபெற்ற சன்மார்க்க சான்றோர்களும் .உலக
மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

*வள்ளலாரை  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேர்காண வந்ததின் நோக்கம் வள்ளலாருக்கு தெரியவில்லை....*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகிறார்..

*நான் உமக்கு ஒரு மாபெரும் பரிசு கொடுக்கப் போகிறேன் நீ மறுக்காமல் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் .*
அதற்காகவே உன்னை நேர்காண வந்தேன் என்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*

*அந்த பரிசு என்ன ?*

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் உடம்பினில் புகுந்தேம்

இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே

இன்புறக் கலந்தனம் அழியாப்

*பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்*

*பரிசுபெற் றிடுகபொற் சபையும்*

*சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்*

தெய்வமே வாழ்கநின் சீரே.!

என்னும் பாடலில் ...*உன் தூய உடம்பினில் கலந்து என்றும் பிரியாமல் வாழப்போகிறேன்*.
உமக்கு என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கைத் தரப்போகிறேன் என்கிறார் .**அதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழும் மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்**

*அதுதான் பேரின்ப சித்தி பெருவாழ்வாகும்*

*மேலும் நேர்காணலில் அதிர்ச்சியும் ஆனந்தமும் தரும் செயதியை வெளிப்படுத்துகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*

வள்ளலார் பாடல் !

*துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்*

*சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே*

*சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே*

*சுதந்தரம் ஆனது உலகில்*

*வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்*

*வாழ்வெலாம் பெற்று மிகவும்*

*மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்*

*மனநினைப் பின்படிக்கே*

*அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை*

*யாடுக அருட்சோதியாம்*

*ஆட்சி தந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்*

*ஆணைநம் ஆணைஎன்றே*

*இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்*

*திசைவுடன் இருந்தகுருவே*

*எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்*

*இலங்குநட ராஜபதியே.!*

மேலே கண்ட பாடல் தான் வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருட்கொடையாகும்...

இந்த உலகமும் உலக உயிர்களும் தவறான வழியிலே சென்று அழிந்து கொண்டு உள்ளது..

*அதற்கு காரண காரியமானவர்கள் சாதி.சமய.மதங்களை தோற்றுவித்த அருளாளர்கள்..*
அவர்களுடைய துன்மார்க்க ஆட்சி அதிகாரங்களை இன்றுடன் அழித்து *வள்ளலாரிடம்*  ஐந்தொழில் வல்லபமான அருள்  ஆட்சியை ஒப்படைக்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அதுதான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஆட்சியாகும்*

மேலும் ஆண்டவர் சொல்லுகிறார்.. *இதுவரையில் எனக்கு துன்பம் இருந்தது இனிமேல் எனக்கு எந்த துன்பமும் வருத்தமும் வாட்டமும் இல்லை*

ஏன் என்றால் ? நீ ஒருவன் தான் நான் சொன்ன எல்லா உண்மைகளையும் மறைக்காமல். ஒளிவு மறைவு இல்லாமல் உலகத்திற்கு வெளிப்படுத்தி விட்டாய்..

மேலும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெரும் பணியை சிரமேற்க் கொண்டு *வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினாய்*.*உயிர்களின் கொல்லாமையை உலகிற்கு அழுத்தமாக போதித்தாய்.* என்பதற்காகவே ஐந்தொழில் ஆட்சியை ஒப்படைக்கின்றேன்... என்கிறார் ..

*வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம்  சித்தி வளாகத் திருமாளிகையில் வள்ளலார் தனிமையில்  இருக்கும் போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரில் வந்து நேர்காணலில்.. ஐந்தொழில்  வல்லபத்தை கொடுத்துள்ளார்.*

என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு வள்ளலார் காட்டிய *சுத்த சன்மார்க்க* பெருநெறியை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார

நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்

ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.!

என்னும் பாடலிலே உண்மையை வெளிப்படுத்துகிறார்..

இப்போது வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடிவமான சுத்த வடிவம் என்னும் சுகவடிவம் பெற்று என்றும்  மாறாத மாற்ற முடியாத  ஓங்கார நித்த வடிவமான.இயற்கை உண்மையான  *ஞான வடிவம்* பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டுள்ளார்..
என்பதை உண்மை அறிவு கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்வதற்கு இரண்டே வழிதான்..

ஒன்று ஜீவகாருண்யம்.
ஒன்று சத்விசாரம்..

*சத்விசாரம் என்பது இறைவனைக் காணும் வழியாகும்*

*ஜீவகாருண்யம் என்பது அருளைப் பெறும் வழியாகும்*.

 இந்த இரண்டு வழிகளால் மட்டுமே இறைவனைக் கண்டு இறைவனிடம்  அருளைப்பெறும் நேர்வழியாகும்...

விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 21 மே, 2019

தருமச்சாலையை தோற்றுவித்தார் வள்ளலார் !

*தருமச்சாலையை தோற்றுவித்தார் வள்ளலார்..*

25-5-1867.ஆம் நாள் வடலூரில் வள்ளலார் முதன் முதலில் தருமச்சாலையைத் தோற்றுவித்தார்.

*தருமச்சாலை ஏன் தோற்றுவித்தார் ?*

உலகில் உள்ள எல்லவரும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள்..

மனிதர்களைத் தவிர இறைவனால் படைக்கப்பட்ட எல்லா  ஜீவராசிகளுக்கும்  நியதி ஆகாரம் இறைவனால் வழங்கப் படுகின்றது.

நம்மை போன்ற உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட நியதி  ஆகாரம் கிடையாது...

ஆகாமிய ஆகாரமான முயற்சி ஆகாரம் பெற்று தான் உயிர் வாழ வேண்டும் என்பது இறைவன் ஆணையாகும்.

அந்த முயற்சி ஆகாரம் கிடைக்காமல் மக்கள் மாண்டு போகிறார்கள்.
அவர்களை காப்பாற்றுவதே..
பொருள் இருக்கப்பட்டவர்களின் கடமையாகும்.

பொருள் உள்ளவர்கள் பொருள் இல்லாதவர்கள் என்ற நிலை உலகில் இறைவன் சட்டத்தை மீறி நடந்து கொண்டு உள்ளன. *அதை ஒழித்து* ஒத்தாரும்.உயர்ந்தோரும்.தாழ்ந்தாரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்பது இறைவன் ஆணையாகும்...

உள்ளவர்கள் இல்லாதவர்கள் உள்ளதால் தான் ஏழைகள் உருவானார்கள்.

*இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே ஜீவகாருண்யம்*.அதுவேஒவ்வொரு மனித  ஆன்மாக்களின் கடமையாகும்..

இறைவன் கட்டளைப்படி உலகில் பசியோடு.எவ்வுயிரும்
மற்றும்  மனிதரகள் இருக்கக் கூடாது. என்பது இறைவன் சட்ட நியதியாகும்.பசியோடு இருப்பவர்கள் எல்லோரும் ஏழைகள் தான்.எனவே தான் *பசித்த ஏழைகளுக்கு உணவு அளிப்பதே மனிதர்களின் முதல் பணியாகும்* என்பதால் இறைவன் ஆணைப்படி வடலூரில் சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார் வள்ளலார்.

அதற்கு ஜீவகாருண்யம் என்றும்.ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்தார்.

கடவுள் அருளைப் பெறுவதற்கும்.
கடவுளைத் தொடர்பு கொள்வதற்கும்.கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஒரே வழி ஜீவகாருண்ய ஒழுக்கம்  மட்டுமே என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சத்திய தருமச்சாலையை வடலூர் தோற்றுவித்து .சாலை என்னும் வழியைக் காட்டுகின்றார்..

மேலும் *ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற. தவம்.தியானம்.யோகம்.புறவழிபாடுகள் எல்லாம் வெற்று மாயா ஜாலங்களே என்னும் உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்...*

வள்ளலாருக்கு ஆண்டவர் காட்டிய உண்மை வழிகளை.பாடல்கள் மூலமும்.உரைநடைகள் மூலமும் வள்ளலார் மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற தலைப்பில் மூன்று பிரிவுகளாக வசன பாகத்தில் எழுதி வைத்துள்ளார்..

மேலும் பாடல்களிலே தெளிவுப் படுத்தி உள்ளார்...

அதிலே சில பாடல்களை பதிவு செய்கிறேன்...

என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன் என்

தன் பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்

காலையிலே வந்து கருணைஅளித்தே தருமச்

சாலையிலே வா என்றான் தான்.!

ஏதும் தெரியாது என்பாட்டுக்கு ஏதோ பாடிக்கொண்டும்.எழுதிக்கொண்டும் வழிப்பட்டுக் கொண்டும்  இருந்த என்னை தருமச்சாலை வழியாகத்தான் வரவேண்டும் என கட்டளை இட்டார் இறைவன் என்பதை மேலே கண்ட பாடல் மூலம் தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்..

மேலும் கீழே வரும் பாடலை கவனிக்கவும்...

காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே
தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்

சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே !
சமரச சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்த மொழிமாலை அணிந்து ஆடும்
மாநடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே !

அதாவது.

*இம்மை இன்ப வாழ்வு.
மறுமை இன்ப வாழ்வு.
பேரின்ப வாழ்வு*
போன்ற முத்தேக சித்தி பெறும் வல்லபம் முழுவதும்.அந்த பெரும் பயனாம் விளைவை எல்லாம் ..

*ஒரே ஒரு பகலில் தருமச்சாலை வழியாக.இறைவன் அருளைப் பெற்றுக் கொண்டேன் என்கிறார் வள்ளலார்.*

அதே நேரத்தில் ..உலகில் எவ்வளவோ அருளாளர்கள் பாமாலைகள் தொடுத்து இருந்தாலும்..*என் பாமாலைகளை சிறந்த மொழி மாலைகள் என்று ஏற்றுக் கொண்டாய்* என்னே என்மேல் உங்கள் கருணை என்று...உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப்  போற்றி புகழ்கின்றார்.

 மேலும்

காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்

சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்

சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்

ஏகா நினக்கடிமை ஏற்று.!

என்றும்.

காலையிலே அமுதக்காற்றை அருந்தி நின்தன்னை கண்டு கொண்டேன்.
தருமச்சாலையை யிலே இன்பம் பெறுகின்றேன்.

மேலும் சாகா வரமும் பெற்றுக் கொண்டேன்.
தத்துவங்களை எல்லாம் கடந்து.தத்துவத்தின் மேல் நடிக்கும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. ஏகனே அனேகனே என்னையும் உமக்கு அடிமையாக ஏற்றுக் கொள்வாய்.ஏற்றுக் கொண்டாய் என்று போற்றி புகழ்கின்றார்..

மேலும்....

மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்

வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே

காலையிலே கலப்பதற்கு இங்கு எனைப் புறம்போ என்றாய்

கண்டிலன் ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி

ஓலையிலே பொறித்ததை நீ உன்னுளத்தே கருதி

உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்

சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.!

ஆண் பெண் உலகில் உறவு கொள்வது மாலை நேர வழக்கம் என்பது அனைவரும் அறிந்த்தே...

ஆனால் இங்கு ஓர் அதிசயம் நிகழ்கின்றது..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை கலப்பதற்கு காலையிலே வருகின்றார்...

உலகில் தோன்றிய அருளாளர்கள் இரவில் தான் கலப்பதாக ஓலையிலே எழுதி வைத்துள்ளார்கள்.

அது உண்மை என்று படித்து.பிடித்து உளரிக் கொண்டு உள்ளீர்கள்..

ஆண்டவரின் உளவைத்  தெரிந்து கொள்வார் உலகில் ஒருவரும் இல்லை.

நான் தோற்றுவித்த *சத்திய தருமச்சாலையிலும் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திலும்*  இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் அந்த உளவை அறிவால் அறிந்து கொள்வீர்கள் என்கிறார்...

எனவே இறைவன் அருளைப் பெறுவதற்கு சத்திய தருமச்சாலை வழிதான் *உளவு* என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றார் வள்ளலார்...

*ஜீவகாருண்யம் இல்லாத போது அருள் விளக்கம் தோன்றாது.அது தோன்றாத போது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாத போது முத்தி இன்பம்.சித்தி இன்பம் ஒருவரும் பெற மாட்டார்கள்*
அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாது என்பதை அறிய வேண்டும்* என்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் பதிவு செய்கிறார் வள்ளலார்..

*ஜீகாருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் கதவைத் திறக்க திறவுகோல் என்னும் சாவியைப் பெறமுடியும்* என்கிறார்.

*மேலும் ஜீவகாருண்ய மே கடவுள் வழிபாடு என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறார்*

 வள்ளலார் ஆரம்ப காலத்தில் பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து வந்தார்..அந்த மார்க்கத்தால் இறைவன் அருளை. முழுமையாக பெற முடியாது.முடியவில்லை  என்பதை உணர்ந்த வள்ளலார் ஞான மார்க்கத்தை தோற்றுவித்தார்..

ஞான மார்க்கம் என்பதுதான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்பதாகும்...

இந்த மார்க்கத்தின் முதல்படி .முதல் பயிற்சி என்பது *ஞானசரியை* என்பதாகும்.

*ஞானசரியை என்பது இந்திரிய ஒழுக்கம்* என்பதாகும்.

*ஞான கிரியை என்பது கரண ஒழுக்கம்* என்பதாகும்

*ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கம்* என்பதாகும்

*ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கம்* * என்பதாகும்.

மனித உயிரான ஜீவனை மனித உடம்பில் இருந்து வெளி யேற்றாமல்  காப்பாற்றுவதே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்..

எனவே தான் வள்ளலார் ஜீவனைக் காப்பாற்றும் முதற் கருவியான *பசிப் பிணியைப் போக்க* சத்திய தருமச்சாலையைத் வடலூர் தோற்றுவித்து உள்ளார்.

பசிப் பிணியைப் போக்க வள்ளலார் மூட்டிய அடுப்பு அன்று முதல் இன்று வரை அணையாமல் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகின்றது.

இன்று உலகம் முழுவதும் மக்கள்.வள்ளலார் கொள்கையை சிரமேற்க் கொண்டு ஏழைகளின் பசிப்பிணியை போக்கிக் கொண்டு வருகிறார்கள்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அறியும் போது.காணும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் அடைகின்றோம்.

வடலூரிலும் சன்மார்க்க சங்கங்களிலும் வருகின்ற 25- 5-2019 அன்று தருமச்சாலை தோற்றுவித்த நினைவு  தினமாக உலகம் முழுவதும் விழாக்களும் அன்னதானமும்.சான்றோர்களின் சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்தி *சத்திய தருமச்சலையின்* வழியாக  மக்கள் வரவேண்டும்.மகிழ்ச்சி யுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பறை சாற்றிக் கொண்டுள்ளார்கள்.

சாதி.சமயம்.மதம் என்ற பிரிவினை இல்லாமல் ..அன்பு.
தயவு.இரக்கம். கருணை.அருள் பெறுவதற்கும் மக்களை நல்வழிப் படுத்துவதற்கும்  ஜீவகாருண்யம் ஒன்றே..வள்ளலார் காட்டிய சிறந்த  வழியாகும்

இன்று உலகம் முழுவதும் உள்ள அறிவு சார்ந்த மக்கள் உண்மையைத் தெரிந்து புரிந்து அறிந்து கொண்டு ஜீவகாருண்ய பணியைப் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள்..மிகவும் பாராட்டுக்குறியதாகும்.

இனி சுத்த சன்மார்க்கம் ஒன்றே எக்காலத்தும் விளங்கி ஓங்கி உயர்ந்து நிற்கும் மார்க்கமாகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 20 மே, 2019

வள்ளல் பெருமானுக்கு எல்லாம் தெரியும் !

*வள்ளல் பெருமானுக்கு எல்லாம் தெரியும் !*

வள்ளலார் சமய.மதத்தில் இருந்துதான் சன்மார்க்கதிற்கு வந்தார் என்று சன்மார்க்கிகளும்.மற்ற  சமய மதத்தார்களும் நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்கள்..

*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்* என்பதை மறந்து பேசிக் கொண்டு உள்ளார்கள்..

வள்ளலார் ஆரம்பத்தில் சமயத் தெய்வங்களை வழிபடுவதும்.சமயத் தெய்வங்கள் மீது பாடல் இயற்றுவதும்..மக்களை தன் வசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக .அவர் நடித்த உண்மை நாடத்தின் ஒரு பகுதியாகும்..

அவரே பின்னாளில் பாடலில் பதிவு செய்கிறார்...!

*படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய்*

*நீயே படிப்பிக்க வைத்தாய் அன்றியும் அப்படிப்பில் இச்சை*

*ஒடித்தேன் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின்*

*உள்ளபடியே துணை என  நான் உறுதியாகப் பிடித்தேன்*

*மற்ற அதுவும் நீ பிடிப்பித்தாய் இப்பேதையேன்*

*நின் அருளைப் பெற்றோர் போல*

*நடித்தேன் எம் பெருமான் இது ஒன்றும்*

*நானே நடித்தோனோ அல்லது நீயே நடிப்பிக்க வைத்தாயோ !*

என்று மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்டி வைக்க வள்ளலார் ஆடுகின்றார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்..

மேலும் ஒரு பாடலிலே பதிவு செய்கின்றார்..!

*பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்*

*கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை*

*ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும்*

*ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.!*

வள்ளலார் செய்யும் செயல் அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படியே செய்து வருகின்றார்..

உண்பது.உறங்குவது.பாடுவது.வணங்குவது.பேசுவது. எழுதுவது எல்லாமே ஆண்டவர் சொல்படிதான் செய்து கொண்டு வருகின்றார் என்பதை அறிவுள்ள சன்மார்க்கிகள் முதலில் தெரிந்து கொண்டால் தான்.மக்களிடம் உண்மை நிலையை சொல்ல முடியும்.சுத்த சன்மாக்கத்தை விதைக்க முடியும்.

மேலும் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில்* உரைநடைப் பகுதியில் தெளிவாக பதிவு செய்கிறார்....!

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே!

குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து.

 அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

*அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்*.

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.

*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்*

. *வாலிபப்பருவம் தோன்றிய போதே* சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்,

*அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,*

 உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். அன்றியும்

*வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*

அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் *பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை* முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல்

*எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் *சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து*

 எக்காலத்தும் நாசமடையாத *சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம்* என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்.

* *கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும்*

* கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி*
 முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி

*நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும்,* நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது *அகத்தினும் புறத்தினும்* இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.

*இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!*

மேலே கண்ட விண்ணப்பத்தில் தெளிவாக விளக்கி உள்ளார்..

நாம் கண்டபடி மேடைகளில் உளறாமல் .நமக்குத் தெரிந்தை மட்டும் வைத்துக் கொண்டு.சாதி. சமய மதக் கொள்கைகளையும்.
சுத்த சன்மார்க்கத்தையும் இணைத்து மக்களை குழப்ப வேண்டாம்...

என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

திருஅருட்பாவை நன்கு படியுங்கள் தெளிவு அடையுங்கள்.உண்மை அறிந்து அருளைப் பெற முயற்சி செய்யுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..






 .

சனி, 18 மே, 2019

பேரின்ப லாபத்தின் பெருமை !

மரணம் அடையாமல் வாழ்பவர்களின் நிலைப்பாடு.!

இவ்வுலகில் மரணத்தை வென்ற மகான் ஒருவரே ! அவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் பெற வேண்டிய லாபமே மரணத்தை வெல்லுவதுதான்.அதற்காகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மனிதப்பிறப்பு என்னும் உயர்ந்த பிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்ம லாபம் என்று பெயர்.

அந்த லாபம் மூன்று வகைப்படும்.

1.இம்மை இன்ப லாபம்.
2.மறுமை இன்ப லாபம்
3.பேரின்ப லாபம்

என மூன்று வகையாக உள்ளன.

முதலில் நமது வாழ்க்கை வள்ளலார் சொல்லிய வழிக்காட்டிய வண்ணம்  நேர்மை.உண்மை.ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் சுத்த தேகமாக மாற்றம் அடையும்.

அந்த அருளை விரயம் செய்யாமல் வாழ்கின்ற போது அடுத்த கட்டமாக பிரணவ தேகமாக மாற்றம் அடையும்.

மேலும் அருளை விரயம் செய்யாமல் வாழ்கின்ற போது தான் மரணத்தை வெல்ல முடியும்..அதற்கு முத்தேக சித்தி என்றும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும் பெயர்.

இவைகள் எல்லாமே ஆன்ம லாபம் என்று பெயர்.

அந்த பேரினப ஆன்ம லாபம் அடைந்தவர் பெருமை !

எப்படி இருக்கும் என்பதை வள்ளலார் விளக்குகின்றார்.

👉யாவும் தாமாய் விளங்குவது அவர் தேகம் ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் உலாவும்

👉தோல்,நரம்பு,எலும்பு,
தசை,இரத்தம்,சுக்கிலம் முதலிய அசுத்த பூதகாரியங்களும்,அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்

👉பொன்வடிவாக தோன்றுதல் மாத்திரமே அன்றி,ஆகாயம் போல் பரிசிக்கப்படாத சுத்த பூதகாரண பிரணவ தேகத்தையும், தோன்றப்படுதலும் இன்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞானதேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்

👉உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்,புறத்தே மண்,கல் முதலியவற்றால் எறியினும்,அவை அவர் வடிவை தாக்குவனவல்ல

👉உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள்,புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது

👉உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள்,புறத்தே நெருப்பில் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல

👉உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்,புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித்து அசைக்க மாட்டாது

👉உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்,புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்க மாட்டாது

👉அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும்,வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும்,பார்த்தல், பேசுதல் முதலிய விஷயங்களை பற்றுவனவல்ல

👉தயையினால் விஷயங்களை பற்றவேண்டில்,சுவர்,மலை முதலிய தடைகள் அவர் கண்களை மறைப்பனவல்ல

👉அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த இடத்து இருந்தே கண்டறியும்

👉அண்ட பிண்டங்களில் எவ்விடத்திலிருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்தில் இருந்தே கேட்டறியும்

👉எவ்விடத்து இருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த இடத்திருந்தே சுவைத்தறியும்

👉எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்தவிடத்திருந்தே பரிசித்தறியும்

👉எவ்விடத்தில் இருக்கின்ற சகந்தங்களையும் அவர் நாசி இருந்த இடத்திருந்தே முகந்தறியும்

👉எவ்விடத்தில் இருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த இடத்திருந்தே கொடுத்தல் கூடும்

👉எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்தவிடத்திருந்தே நடத்தல் கூடும்

👉அவரது வாக்கு எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வெவர்களோடும் இருந்த இடத்திருந்தே பேசுதல் கூடும்

👉அவரது மற்ற இந்திரியங்கள் இருந்த இடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்தித்தல் கூடும்

👉அவரது மனம் முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவனவல்ல

👉தயவினால் பற்றத் தொடங்கில் எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும்

👉அவரது அறிவு ஒன்றையும் சுட்டியறியாது,தயவினால் சுட்டியறியத் தொடங்கில் எல்ல அண்டங்களையும்,எல்லா உயிர்களையும், எல்லாப் பண்புகளையும், எல்லா அனுபவங்களையும் எல்லாப் பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டியறியும்

👉அவர்கள் நிர்க்குணத்தராவார்கள்,உள்ளே தாமச இராசத சாத்துவிகம் முதலிய முக்குணங்களாலும் விகாரப்படார்கள், புறத்தே அவரது குணங்கள் கரணங்களை  ப் பற்றுவனவல்ல

👉உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்,புறத்தே அவரது பிரகிருதி குணங்களை பற்றுவனவல்ல

👉உள்ளே காலதத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்,புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது

👉உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்,புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது

👉காலம்,வித்தை,ராகம்,புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும் அவர்களுக்கு இல்லை

👉மாயையால் பேதப்படார்கள்,சுத்த மகாமாயையைக் கடந்து அதன்மேல் அறிவுருவாக விளங்குவார்கள்

👉ஆகாரம்,நித்திரை,மைதுனம்,பயம் என்பவைகளால் தடைபடார்கள்

👉அவர்கள் தேகத்திற்க்கு சாயை,வியர்வை,அழுக்கு,நரை,திரை,மூப்பு,இறப்பு முதலிய குற்றங்கள் உண்டாவனவல்ல

👉பனி,மழை,இடி,வெயில் முதலியவற்றாலும்,இராக்கதர்,அசுரர்,பூதம்,பிசாசு முதலியவற்றாலும்,தேவர்,முனிவர்,மனிதர்,நரகர்,மிருகம்,பறவை,ஊர்வன,தாவரம் என்பவைகளாலும்,எவ்விடத்தும்,எக்காலத்தும், அவர் தேகம் வாதிக்கப்படாது

👉கத்தி,வாள் முதலிய கருவிகளாலும் கண்டிக்கப்படாது

👉எல்லா அண்டங்களும் அணுக்கள்போலச் சிறிதாகத் தோன்றுதலும்,எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரிதாகத் தோன்றுதலும் அவர் தேகத்திற்கு சாத்தியம்

👉இறந்தாரை எழுப்புதல்,வார்த்திபரை வாலிபராக்கல் முதலிய கரும சித்திகளும்,யோக சித்திகளும்,ஞான சித்திகளும் அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்

👉சிருஷ்டித்தல்,காத்தல்,
அழித்தல்,மறைத்தல்,அனுக்கிரகித்தல் என்கின்ற ஐந்தொழில்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்

👉பஞ்ச கர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள்

👉அவர்கள் அறிவு கடவுளறிவாக இருக்கும்,அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்,அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்

👉சர்வ சக்தியும் உடையவர்களாய்,எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய் ஆணவம்,மாயை,கன்மம் என்னும் மும்மலங்களும்,அம்மல வாதனைகளும் இல்லாதவர்களாய் பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்

👉சடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர்பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்

👉அவரது பெருமை வேதாந்த,சித்தாந்த,கலாந்த,போதாந்த,நாதாந்த,யோகாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும்,அவற்றைக் கடந்தும் விளங்கும்..

இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையாகும்

இந்த நிலையை அடைந்து இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் வள்ளலார்.

மனித தேகம் பெற்ற அனைவரும் இந்த பேரின்ப லாபத்தை அடைய வேண்டும் என்பதே..சுத்த சன்மார்க்கம் காட்டும் சாகாக்கல்வி யாகும்.

நல்லதை செய்வோம் நலம் பெற வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

புதன், 15 மே, 2019

உலகம் முழுவதும் மத வெறியர்கள் !

உலகம் முழுவதும்  மத வெறியர்கள் !

உலகில் தோன்றும் குற்றங்களுக்கு எல்லாம் காரண கர்த்தாவாக இருப்பவர்கள் சமயவாதிகளே ! மதவாதிகளே !

தீவிரவாதம்.பயங்கரவாதம்.
தேசதுரோகம்.
நக்ஸல்பார்ட்டி.கொலை.கொள்ளை. கற்பழிப்பு.போன்ற எல்லா குற்றங்களும் செய்பவர்கள் மதவாதிகளே என்பது உலகம் அறிந்த உண்மை...

ஒவ்வொரு மதமும்.ஒவ்வொரு சமயமும் பொய்யான கடவுளை படைத்து.என்கடவுள் பெரியது என்றும் உன் கடவுள் சிறியதும் என்றும் போட்டிப்போட்டுக் கொண்டு கடவுள் பெயரால் உலகை அழித்துக் கொண்டு உள்ளன.

இதுவே சமய.மத வெறியர்களின் தூண்டுதலுக்கு காரண காரியமாக உள்ளன.

இன்று உலகை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் சமய.மதவாதிகளே.இவர்களால் உலகையோ.மக்களையோ.இயற்கை வளங்களையோ.உலக உயிர்களையோ. எக்காலத்திலும் காப்பாற்ற முடியாது..

*எல்லோருமே சமய மதவாத குருடர்கள்.திருடர்கள் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.*

*முதலில் மதங்கள் தோன்றின.பின் சமயங்கள் தோன்றின.சமயங்கள் வாயிலாக சாதிகள் தோன்றின*.

சாதி.சமய.மதங்கள் வாயிலாக மக்களை கூறு போட்டு பிரித்து விட்டார்கள்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை மாறி ..மக்களை வேறுபடுத்தி விட்டார்கள்.ஆதலால் மக்கள் மனிதநேயம் இல்லாமல்.ஆன்மநேயம் என்னதென்று தெரியாமல்.வெறிபிடித்த மிருகம் போல் மாறி விட்டார்கள்.நாடு கொலைகளமாக.சுடுகாடாக மாறிவிட்டன.

மதங்களையும்.சமயங்களையும்.
சாதிகளையும் தோற்றுவித்தவர்கள் முதல் குற்றவாளிகள் ஆவார்கள். அவர்கள் விதைத்தை விதைகள் உலகம் முழுவதும் வேர் ஊன்றி படர்ந்து விட்டன.

அவர்களை ஆன்மீகவாதிகள் என்றும் ஆன்மீகத் தலைவர்கள் என்றும்.அவர்களையே கடவுள் என்றும்.மக்கள் போற்றி வழிபட்டுக் கொண்டு வருகிறார்கள். அவைகள் முற்றிலும் தவறான வழிபாடாகும்.

*விதை கொடுத்தவன் மதவாதி.விதை போட்டவன் சமயவாதி.. அறுவடை செய்தவன் சாதீயவாதி..அதை அனுபவிப்பவர்கள் மக்கள்*.

அந்த மக்கள்தான் இன்று உலகம் முழுவதும் துன்பத்தில் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

பாவம் அப்பாவி மக்கள் ! உண்மை ஒருபுறம் இருக்க பொய்யைப் பிடித்துக் கொண்டு குருடர்கள் போல் தடுமாறிக் கொண்டு உள்ளார்கள்.

இவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே...உலகத்தையும் உயிர்களையும் படைத்த  உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..ஓர் மாபெரும் சக்தி வாய்ந்த பக்குவம் வாய்ந்த ஆன்மாவை உலகிற்கு அனுப்பி வைக்கிறார்.

அந்த ஆன்மா மனித உருவம் எடுத்து இவ்வுலகிற்கு வருகின்றது...

*அவர்தான் திருவருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்..*

அவர் உலக கல்வி கற்காமல் அருள் கல்வியை இறைவனிடமே கற்றவர்.

மரணத்தை வென்ற மகான் ஆவார்..

மரணத்தை வென்ற பிறகுதான் உலக மக்களுக்கு உண்மையை போதிக்கிறார்..

*மரணத்தை வெல்லாமல் உண்மையை போதித்து இருந்தால்.காந்தியை கொன்றது போல் .தன்னையும் இம்மதவாதிகள் கொன்று விடுவார்கள் என்பது வள்ளலாருக்குத் தெரியும்*.

எனவேதான் இறைவனிடத்திலே சாகா வரம் பெற்று உலக மக்களை திருத்திக் கொண்டு உள்ளவர் வள்ளலார்.

சமய மதவாதிகளின் பொய்யான சூது வாது ஆட்டம் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

பேய் பிடித்தவர்கள் சமய மத வாதிகள் !

வள்ளலார் பாடல் !


மேலே கண்ட பாடலில் 

...சாதி.சமய.மதங்களின் வெறிபிடித்த கொலை வெறி ஆட்டத்தை அடக்கவும்.புதிய உலகத்தை உறுவாக்கவும்.சாதி.சமய.மதங்களின் பிடியில் இருந்து .மக்களை காப்பாற்றவும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி... பெரிய பொருப்பை வள்ளலார் ஏற்றுள்ளார்.

 இனி நட்க்கவிருக்கும் புதிய சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தையும்.அதனால் மக்கள் அடையும் ஆன்ம லாபத்தையும்.அறிவு சார்ந்த சுகநிலைப்பற்றியும் தெளிவுப் படுத்துகின்றார்.

மேலும் சொல்லுகிறார் ! 

மேலே கண்ட பாடலில் மிகவும் தெளிவாக விளக்குகின்றார்.

இதுவரை உலகில் தோன்றிய பலப்பல சமயங்கள் மதங்கள் யாவும் பவநெறி என்கிறார் வள்ளலார்...பவநெறி என்பது பொய்யான கற்பனை நெறிகள் என்கிறார். 

அதனால் உண்மை நெறி என்ன என்பது தெரியாமல் மக்கள்  அழிந்து கொண்டுள்ளார்கள். எனவே மக்களை காப்பாற்றுவது இறைவன் கட்டளையாகும்.

இறைவன் ஆணையை சிரமேற் கொண்டு .உண்மையான இறைவன் யார் ? என்பதை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி. உலக மக்கள் அனைவரும் இறைவன் குழந்தைகள் என்பதை உணர்த்தி.மனித நேயத்தை உண்டாக்கி..ஆன்மநேயத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க சுகநிலை என்பதாகும்..

உலகப் பொது நெறியான சுத்த சன்மார்க்க நெறி ஒன்றுதான் மக்களை புனிதர்களாக்கும் பொது நெறியாகும்.

எனவே உலகில் தோன்றியுள்ள பொய்யான சாதி சமய மதங்களின் கொள்கைகளை...மக்களுக்கு   பொய் என்பதை உணர்த்த வேண்டும்.பொது நெறிக்கு மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்கிகளின் தலையாய கடமையாகும்...

இந்த சுத்த சன்மார்க்க நெறிக்கு தலைமை வகிப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை மக்கள் தெரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்..

செயல் தலைவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! 

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச்
சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே..

*சுத்த சிவ சன்மார்க்கத் தலைவனே*நிற்போற்றும்
என்மார்க்கம் நின் மார்க்க மே !

என்கிறார் வள்ளலார். நாம் தெளிவு பெற வேண்டும்...

வள்ளலார் இடம் பொறுப்பை ஒப்படைக்கும் பாடல் !

கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்லப்
பிள்ளை என எனக்கு பெயர் இட்டாய்..

தெள்ளமுதம் தந்தாய்

 *சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்*

எந்தாய் கருணை இது !

என்னும் பாடலிலே தெளிவாக விளக்கி காட்டுகிறார்..

எனவே துன்மார்க்கங்களை தொலைத்துக் கொண்டுள்ளார் வள்ளலார்.

வள்ளலாரின் தெளிவான பாடல் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்.. என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத்தாலே மகிழ்ந்து !

மேலே கண்ட பாடலின் வழியாக தெளிவுப் படுத்துகின்றார்..

எனவே உலக மக்கள்  சாதி.சமய.மதம் அற்ற உலகப் பொது நெறியான சுத்த சன்மார்க்க தனி நெறியைப் பின்பற்றி
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு

என்றும் அழியாத அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்...

உண்மைக் கடவுளை தெரிந்து கொள்ள வடலூரில் சத்திய ஞானசபையும்.

உலக உயிர்களைக் காப்பாற்ற வடலூரில் சத்திய தருமச்சாலை யும் தோற்று வித்து உள்ளார்.

இறைவன் வள்ளலாரைத் தொடர்பு கொண்டு சித்திபெற்ற இடம் வடலூரை அடுத்த மேட்டுகுப்பத்திலும் உள்ளன.

எல்லோரும் தொடர்பு கொண்டு பயன் அடைவீர் அருள் பெறுவீர்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 14 மே, 2019

தயவு இரண்டு வகைப்படும் !

*தயவு இரண்டு வகைப்படும் !*

அவை ...
கடவுள் தயவு ! ஜீவ தயவு ! என இரண்டு வகை உள்ளது..

*ஜீவர்கள் தயவு வேறு.. கடவுள் தயவு வேறு..*

சில சன்மார்க்க அன்பர்கள் தயவு தயவு என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.
கடவுள் தயவைச் சொல்கிறார்களா ! ஜீவ தயவைச் சொல்லுகிறார்களா ! என்பது தெரியவில்லை..

வள்ளலார் பேருபதேசத்தில் தெளிவாக சொல்லுகிறார்.

தயவு.கருணை.அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும் ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம் அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம்.

இஃது வாச்சியார்த்தம்.இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் .முடிவான இன்பானுபவம் பெறுவதற்கு தடையில்லை என்கிறார்...

*முதலில் சாதனம் என்னும் ஜீவ தயவு வேண்டும் *.

சாதனம் என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உண்மை உணர்ந்து தெளிந்து ஜீவர்களிடத்தில் உயிர் இரக்கம் கொண்டு ஜீவர்களிடத்தில் உண்டாகும்
பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம் கொலை போன்ற துன்பங்களை நிறைவாக போக்க வேண்டும்.இதுதான் சுத்த சன்மார்க்க சாதனம் என்பதாகும்.

சாதனம் முதிர்ந்தால் சாத்தியம் கைகூடும்.

*சாத்தியம் என்பது கடவுள் தயவு !  கடவுள் தயவால் எல்லா நன்மை களும் தானே கிடைக்கும்.*

வள்ளலார் பாடல் !

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ !

என்னும் பாடலில் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் உள்ளவர் எவரோ அவரே அருள் பெறும் தகுதி உடையவர் என்றும்.அவரையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொள்வார்.அவரை நான் கடவுளாக நினைந்து வணங்குவேன் என்கிறார் வள்ளலார்.

இதுதான் ஜீவ தயவு என்னும் ஜீவகாருண்யம் முழுமை பெற்றதாகும்.

*மேலும் உரைநடைப் பகுதியில் ..
கடவுள் தயவும் ..ஜீவர்கள் தயவும் ! என்ற தலைப்பில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.*

கடவுள் தயவு .ஜீவ தயவு என தயவு இரண்டு  வகைப்படும்.!

கடவுள் தயவு என்பது
1.இறந்த உயிரை எழுப்புதல்.

2.தாவரங்களுக்கு மழை பெய்வித்தல்.

3.மிருகம்.பட்சி.ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால்  ஊட்டி வைத்தல்.

4. சோம.சூரிய.அக்கினிப் பிரகாசங்களைக் கால.தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல்.

5. பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல்.

6.அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல்.என்பன கடவுள் தயவாகும்..

ஜீவ தயவு என்பது ....

தன் சக்தியின் அளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்ம நேய சம்பந்தம் பற்றித் தயவு வடிவாய் நிற்றல்.
இதுவே ஜீவ தயவாகும்.

*கடவுள் தயவு உள்ளவரேத் தவிர தயவே கடவுள் உருவம் அல்ல*

மக்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெயரை எப்படி உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக...

 மகா மந்திரத்தை நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்

நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!!

என்னும் திருமந்திரத்தை  வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.

*அன்பு.தயவு.அருள்.கருணை என்பது ஒன்று போலவே தெரியும்*

கருணைக்குள் அன்பு.தயவு.அருள்  எல்லாம் அடங்கி விடுகிறது.என்பதை ஆன்மநேய அன்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

கருணையும் சிவமுமே பொருள் !

கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம்

மருள்நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்று இருக்கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்தது ஒன்றிலையே !

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்....

மேலும்

தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்கத் *தனிநெறி* உலகெல்லாம் தழைப்பக்

கருணையும் சிவமே பொருள் எனக் கருதும் கருத்தும் உற்று எம்மனோர் களிப்பப்

பொருள் நிறை ஓங்கத் தெருள் நிலை விளங்கப் புண்ணியம்  பொற்புற வயங்க

அருள் நயந்து அருள்வாய் திருச்சிற்றம் பலத்தே அருட்பெருஞ்ஜோதி என் அரசே !

என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்..

எனவே மகா மந்திரத்தை மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை..

மகா மந்திரத்தில் கருணை தான் முதலிடம் பெறுகிறது என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

*சிறிய ஜீவ தயவைக் கொண்டு. பெரிய அருள் தயவைப் பெறுவதே சுத்த சன்மார்க்கிகளின் செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.*

நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயற்கை உண்மையாய்.
இயற்கை விளக்கமதாய்
இயற்கை இன்பமுமாய்

செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
கடவுளுடைய இயற்கை உண்மை என்பது கருணை.

இயற்கை விளக்கம் என்பது அருள்

இயற்கை இன்பம் என்பது அருளினால் அடையும் இன்பமான என்றும் அழியாத பேரின்பம்.

கருணையில் இருந்து பெறுவது அருள்...*அருள் என்பது தான் கடவுள்  தயவு என்பதாகும்.*

எனவே ஜீவதயவைக் கொண்டு கடவுள் தயவைப் பெற வேண்டும் என்பது தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்..

எனவே தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்..

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்...

பக்தியால் எக்காலத்தும் அருள் பெற முடியாது.

*கல்லையும் மண்ணையும்.பொன்னையும் வணங்கி வழிபாடு செய்வதால் அருள் கிட்டாது*..

இறைவனால் படைத்த உயிர்களுக்கு உபகாரம் செய்தால் மட்டுமே அன்புண்டாகும்.அன்பு உண்டானால் அருள் உண்டாகும்.அருள் உண்டானால் மரணத்தை வெல்ல முடியும்.

மரணத்தை வென்றால் மட்டுமே பேரின்ப லாபத்தைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக முடியும்...

வள்ளலார் பாடல் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செலுத்தல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்று
எந்தை நின் அருட்புகழை இயம்பி யிடல் வேண்டும்

செப்பாத மேனிலையேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்து ஓங்குக அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தால் வேண்டும்
தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

மேலே கண்ட பாடலில் எளிய தமிழில்   ஆருயிர்க்கு எல்லாம் அன்பு செலுத்த வேண்டும்.என்கிறார் வள்ளலார்.

உயிர் உள்ள ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்தினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மீது அன்பு காட்டுவார் என்பதை அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.








வியாழன், 9 மே, 2019

நான் கண்ட சிறந்த மருத்துவமனை !

நான் கண்ட சிறந்த மருத்துவமனை !

என் பெயர் கதிர்வேல்.நாங்கள் சென்னையில் வசித்து வசிக்கிறோம்.

என் மனைவிக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருந்த்து.
எங்கள் வீட்டிற்கு அருகாமையில் பெரிய கார்பரேட் மருத்துமனை உள்ளது.பெயர் சொல்ல விரும்ப வில்லை.

அங்கு சென்றோம் அட்மிஷின் பீஸ் 200 ரூபாய்.டாக்டர் பீஸ் 600 ரூபாய் கேட்டார்கள்.பிரச்சினை தீர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் பணம் கட்டி டாக்டரைச் சந்திந்தோம்.

டாக்டர் பரிசோதனை செய்து CT ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் தான் என்ன பிரச்சினை என்பது தெரியும் என்று சொன்னார் .சரி என்றோம் .ஸகேன் எடுக்க சீட்டு எழுதிக் கொடுத்தார்.
எவ்வளவு பணம் ஆகும் என்று டாக்டரைக் கேட்டோம் கவுண்டரில் சொல்வார்கள் என்றார்.

கவுண்டரில் சென்று கேட்டோம்.13000.பதிமூன்று ஆயிரம் ஆகும் என்று சொன்னார்கள் அதிர்ந்து போனோம்.

உடனே என்மகன் நண்பருக்கு தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னோம்.அவர் மனைவி சென்னையில் உள்ள *பிரபல சவீதா மெடிக்கல் சென்டருக்கு* (Saveetha) போங்கள் அங்கே நல்ல அனுபவம் உள்ள சிறந்த டாக்டர்கள் உள்ளார்கள்.ஸகேன் எடுக்க கட்டணம் மிக மிக குறைவு என்றார்.அதுவும் கார்ப்பரேட் மருத்துவமனைதான் என்றார்.

இங்கு அட்மிஷன் பீஸ்.டாக்டர் பீஸ் கட்டிவிட்டோம் இருந்தாலும் டாக்டர் சொன்னபடி ஸ்கேன் எடுக்கலாம் என்று சவீதா மெடிக்கல் சென்டருக்கு சென்றோம்

அங்கு பெரிய அனுபவம் உள்ள டாக்டரை தொடர்பு கொள்ள 100 ரூபாய்தான்.அட்மிஷன் பீஸ் 100 ரூபாய்தான்

ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர் எழுதிக் கொடுத்த ரிப்போட்டர் சீட்டை கொடுத்தோம்..

எல்லா பரிசோதனைக்கும் சேர்ந்து  5000 ஐந்து ஆயிரம் ரூபாய் கேட்டார்கள்.நாங்கள் ஆச்சரியப்பட்டு விட்டோம்.

13000 ஆயிரம் எங்கே ! 5000 ஐந்துஆயிரம் ரூபாய் எங்கே!..8000 ஆயிரம் ரூபாய் வித்தியாசம்.

மிகத் துல்லியமாக ஸ்கேன் எடுத்து CD யும் போட்டு கொடுத்தார்கள்.

மக்கள் விபரம் தெரியாமல்.மற்ற மருத்துவமனைகளின் செயல்பாடுகளை .விசாரிக்காமல் பணம் விரயம் செய்ய வேண்டாம் என்பதற்காக இந்த செய்தியை தெரிவிக்கிறேன்..

சவீதா மெடிக்கல் சென்டர்.பூந்தமல்லி தாண்டி தண்டலம் என்ற இடத்தில் மெயின்ரோட்டில் உள்ளது.

தீர்க்க முடியாத எல்லா வியாதிகளுக்கும் சிறந்த அனுபவம் உள்ள டாக்டர்களைக் கொண்டு குறைந்த பணச்செலவில் சிறந்த முறையில் கவனிக்கும் மருத்துவமனை சவீதா மெடிக்கல் சென்டர் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்தேன்.

நீங்கள் அங்கு சென்று பார்த்தால் உண்மை உணர்வீர்கள்.

சாதாரண நடுத்தர மக்களுக்கு நல்ல மருத்துவமனையாக சவீதா மெடிக்கல் சென்டர் விளங்குகிறது.

சவீதா மெடிக்கல் சென்டர் நிர்வாகி் டாக்டர் திரு வீரய்யன் அவர்கள் ஏழை எளிய சாதாரண மக்களுக்காக பொதுநல நோக்கத்தோடு செயல்படுகிறார்  என்பதை அறிந்து நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

இப்படிக்கு
ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்.
9865939896.



ஞாயிறு, 5 மே, 2019

அப்பா அம்மாக்கள் ஜாக்கிறதை !

அப்பா அம்மாக்கள் ஜாக்கிறதை !

திருமணம் செய்து குடும்பம் நடத்தி நல்ல தொழில் செய்து வருமானம் ஈட்டி வாழ்ந்து வரும்போது இல்லற இன்பத்தில் குழந்தைகள் பிறந்து விடுகின்றன.

குழந்தைகளை அன்புகாட்டி பாலூட்டி தாலாட்டி வளர்த்து பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து பெரிய ஆட்களாக வளர்த்து விடுகின்றோம்.

அதன்பின் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறோம்.

அதற்குள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வயதாகி விடுகின்றது.வருமானம் குறைந்து விடுகின்றது

அப்பா அம்மாவை விட மகனோ மகளோ நல்ல வருமானத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் வசதி வாய்ப்புக்கள் வருமானம் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சொந்தம் என நினைத்து விடாதீர்கள்.

அவர்களுக்கு சொந்தமாக பங்களா வீடு இருக்கும் அப்பா அம்மாவிற்கு சொந்தம் ஆகாது.

சொந்தமாக கார்.பைக் இருக்கும் அப்பா அம்மாவிற்கு சொந்தம் ஆகாது.

நிறைய பணம் சொத்து இருக்கும் அப்பா அம்மாவிற்கு சொந்தம் ஆகாது..

அப்பா அம்மா சேர்த்து வைத்த சொத்து மகன் மககளுக்கு சொந்தம்.

மகன் மகள் சொத்து அப்பா அம்மாவிற்கு சொந்தமாகாது.

மகன் மகள் சம்பாதித்த வசதி வாய்ப்புக்களை அப்பா அம்மா சொந்தம் கொண்டாடுவது பெரிய தவறாகும்.

அதுதான் உலகத்திலே பெரிய தவறாகும். ஏன் என்றால்.அப்பா அம்மா கொடுத்த சொத்து அல்ல.  எல்லாம் அவர்கள் சம்பாதித்தது...எனவே சொந்தம் கொண்டாடுவது தவறுதானே !

அப்பா அம்மா வசதி குறைந்து மகன் மகளிடம் கை ஏந்தும் நிலை வந்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கூனி குறுகி அசிங்கப்பட வேண்டி வரும்.

எனவே யாரிடமும் கை ஏந்தாமல் வாழ்வதற்குண்டான வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதே நல்ல வாழ்க்கையாகும்.

உடல்நிலை நல்ல முறையில் இருந்தால் அவர்களுக்கு அப்பா அம்மா வேலைக்காரர்களாக ஆக்கிவிடுவார்கள்.
வீட்டின் வாச்சுமேன் வேலைக்கு வைத்து விடுவார்கள்.

உடல்நிலை குன்றி போயிருந்தால் அவர்களின் வெறுப்பிற்கு ஆளாகி விடுகின்றார்கள்.வீட்டின் ஓரம் தள்ளி வைத்து விடுவார்கள்.

அப்பா அம்மாவின் சொல்பேச்சு கேட்டு வளர்ந்த மக்கள்... அவர்கள் சொல் பேச்சை கேட்கும் நிலைக்கு அப்பா அம்மா தள்ளப்படுகிறார்கள்.

உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிலவிற்கு உதவி கேட்கும் சூழ்நிலை வந்தால்  சலித்துக் கொண்டே பணம் கொடுப்பார்கள்

அவர்களின் பொருளை எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட உரிமை கோர முடியாது.

நல்ல மக்களாக அறிவுள்ள மக்களாக இருந்தாலும். அப்பா அம்மாவை நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் .நினைத்தாலும் சூழ்நிலைகள் இக்காலத்தில் மாறிக் கொண்டே வருகின்றது. அதுதான் உண்மை.

தேவை இல்லாத செலவுகள் நிறைய செய்வார்கள் .அப்பா அம்மாவின் தேவைகளுக்கு செலவு செய்ய தயங்குவார்கள்.

அப்பாக்கள் இறந்து அம்மாக்கள் இருந்தாலும் கொடுமை..
அம்மாக்கள் இறந்து அப்பாக்கள் இருந்தால் அதைவிட பெரிய கொடுமை வேறில்லை.

எனவே நம் மக்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என நினைத்து வாழ்வது அப்பா அம்மாவின் அறியாமையாகும்.

ஏன் என்றால் அப்பா அம்மாவின் உடல் இன்பத்தால் பிறந்த குழந்தைகள் அவர்கள்..அதனால் அவர்கள் நம் சொந்த குழந்தைகள் அல்ல.

காம இன்பத்தின் வேகத்தில் பிறந்த குழந்தைகள்.

எனவே அவர்கள் காப்பாற்றுவார்கள் என நினைப்பது அறியாமையிலும் அறியாமையாகும்.

இறைவன் தான் காப்பாற்றுவார் !

நம்மை படைத்தவர் ஒருவர் உள்ளார் அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். என்பவராகும்..

அவர்தான் தாயாகி தந்தையுமாய. தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித்தலைமை தெய்வம் என்பவராகும்.

அவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே எந்த குறையும் இல்லாமல் வாழ வைப்பார் என்பதுதான் சத்தியமான உண்மை.

(இன்று நம் மக்கள் நாளை அவர்களும் அப்பா அம்மாக்கள் ஆகி விடுவார்கள்)

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ....அவர்தான் இறுதி காலத்தில் கைவிடாமல் காப்பாற்றுவார்.

இந்த உலகில் உள்ள அனைத்து அப்பா அம்மாக்களுக்கும் இந்த செய்தி பொருந்தும்.

எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகிறார்...

கைவிட மாட்டான் என்று ஊது ஊது சங்கே
கனக சபையான் என்று ஊது ஊது சங்கே !

எல்லாம் செய் வல்லான் என்று ஊது ஊது சங்கே
எல்லார்க்கும் நல்லான் என்று ஊது ஊது சங்கே
எல்லாம் உடையான் என்று ஊது ஊது சங்கே
எல்லாமும் ஆனான் என்று ஊது ஊது சங்கே !

கருணா நிதியர் என்று ஊது ஊது சங்கே
கடவுள் அவனே என்று ஊது ஊது சங்கே.
அருள் நாடகத்தான் என்று ஊது ஊது சங்கே
அம்பலச் சோதி என்று ஊது ஊது சங்கே !

நம்மை கருவரையில் இருந்து இரவும் பகலும் எந்நேரமும் காப்பாற்றி வந்த இறைவன் முதுமையிலும் காப்பாற்றுவார் என்ற முழு நம்பிக்கை யுடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்...

இறைவனைத்தவிர வேறு எவரும் நம்மை காப்பாற்ற முடியாது..

எனவேதான் மக்களுக்காக வள்ளலார் தெளிவாக  பதிவு செய்துள்ள பாடல் !

புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான்

புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்று என்னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்

உடைமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக்கரும்பே செங்கனியே கோற்றேனே

மெய்ப்பயனே கைப்பொருளே விலை அறியா மணியே !

தகுந்த தனிப் பெரும் பதியே தயா நிதியே கதியே

சத்தியமே என்று உரைமின் பத்தியொடு பணிந்தே !

என்னும் பாடலிலே தெளிவாக எளிய தமிழில் புரியும்படி சத்தியம் வைத்து பதிவு செய்துள்ளார்..

யாருடைய பொருளும் நம்மைக் காப்பாற்றாது நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்தான் நம்மை காப்பாற்றும்..

வள்ளலார் எவருடைய பொருளிலும் வாழ்க்கை நடத்தவில்லை.

எங்குறு தீமையும் எனைத்  தொடரா வகை கங்குலும் பகலும் மெய்க் காவல் செய் துணையே !

என்பார் வள்ளலார்

இறைவனுடைய அன்பிலே அறிவிலே அருளிலே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.மரணத்தை வென்று என்றும்  வாழ்ந்து கொண்டுள்ளார்.

நமக்கு இந்த பிறவியில் மரணத்தை வெல்ல முடியவில்லை என்றாலும் அடுத்த பிறவியில் மரணத்தை வென்று வாழ்வோம்.

எனவே அப்பா அம்மாக்கள் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் இறைவனைத் தொடர்பு கொள்ளுங்கள் இனிமையான வாழ்க்கை அமையும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

வெள்ளி, 3 மே, 2019

வள்ளலார் சொன்ன உளவு !

வள்ளலார் சொன்ன உளவு !

நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்.

இறைவனிடம் அருளைப் பெற வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகும்.

இறைவன் அருளைப்பெற சாதாரண மக்களால் முடியாது..ஏன் என்றால் ?அவர்களுக்கு இறைவன் யார் என்பதும் தெரியாது.அருளைப் பெறும் வழியும் தெரியாது.

எனவே அருளைப் பெரும் வழியைக் காட்டுவதற்கு அருளாளர்கள் பலர் உலகில் தோன்றினார்கள் .அவர்களுக்கு ஞானிகள் என்றும்.சித்தர்கள் என்றும்.ஆன்மீகத் தலைவர்கள் என்றும்  போற்றப் பட்டார்கள்.

சமயத்திற்கு தகுந்தாற்போல் பொய் சொல்லியவர்களுக்கு சமயவாதிகள் என்றும்.

அகங்காரத்தால்  பொய்யான  கடவுள்களை காண்பித்ததால் மதவாதிகள் என்றும்.

தொழிலுக்காக பொய்யான சாதியை வகுத்தவர்கள் சாதி வெறியர்கள் என்றும் சொல்லப்படுகின்றார்கள்.

மதம் என்னும் ஆணவத்தால் இருப்பவர்களை மதவாதிகள் என்றும் சொல்லப்படுவார்கள்.

அவர்கள் இறைவனைக் காண பலப்பல வழிகளைத் தேடினார்கள்.அவைகளிலே சரியை.கிரியை.யோகம்.ஞானம் என்னும் வழிகளைக் கண்டார்கள்.

அதிலே சரியை.கிரியை.யோகத்தோடு நின்று விட்டார்கள்.அதற்கு மேல் அவர்களால் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. செல்லவும்  முடியவில்லை.

அவர்கள் சென்ற வழியே முடிவானது என்று அறிந்து அதிலே நின்று விட்டார்கள் அதிலே மூழ்கி விட்டார்கள்.

அவர்கள் கண்ட கடவுள்கள் அனைத்தும் தத்துவங்களே என்பது அவர்களால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. அவைகளை உண்மைக் கடவுள் என்று நம்பி விட்டார்கள்.

அவர்கள்  நம்பிய கடவுள்களையே  மக்களுக்கு போதித்து வணங்குவதற்கு பலப்பல  வழிகளைக் காட்டினார்கள்.அவைகள்தான் தியானம்.தவம்.யோகம்.உருவ வழிபாடுகள்..அனைத்தும்.

அவைகளை தெரிந்து கொள்வதற்கு வேதம்.ஆகமம்.புராணம்.இதிகாசம்.சாத்திரங்கள்.போன்றவற்றை படைத்தார்கள்.

மக்கள் அவற்றை இன்றுவரை பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள்..

அதிலே சில அன்பர்கள் தங்களின் சிற்றறிவைக் கொண்டு அற்ப அருளைப்பெற்று முக்தி என்னும் நிலையை அடைந்தார்கள்.மேலும் உயிரை அடக்கி சமாதி நிலை அடைந்தார்கள்..

முக்தியால் இறைவனைக் காணமுடியவில்லை.உயிரை அடக்கிக் கொண்டு சமாதி நிலையை அடைந்தார்களாலும் கடவுளைக் காணமுடியவில்லை.

அவர்களை சொர்க்கம்.கைலாயம்.வைகுண்டம்.பரலோகம்.போன்ற இடங்களில் சென்று வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் என்றும் பொய்யான கற்பனைக் கதைகளைச் சொல்லி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்..

மக்களும் அந்தக் கதைகளை உண்மை என்று நம்புவதற்காக  இடம் வாகனம் பெயர்.ரூபம்.ஆயுதம்.தீர்த்தம்.ஆலயம்.
புண்ணிய ஸ்தலம் போன்றவற்றை நம்பும் படியாக தோற்றுவித்து உள்ளார்கள்..

கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திரங்களை கடவுள்களாக படைத்து விட்டார்கள்.அதிலே வரும் கதாநாயகன் பெரிய கடவுளாகவும்.மற்ற கதாபாத்திரங்கள் சிறிய தெய்வங்களாகவும் படைத்து விட்டார்கள்.

அவற்றை பின்பற்றி வாழ்ந்து கொண்டு வரும் மக்கள் ஆன்ம லாபமும் அருள் லாபமும் பெற்றுக் கொள்ள முடியாமல் மாண்டு கொண்டே இருக்கிறார்கள்.

*உண்மைக் கடவுள் வருகை !*

*உண்மையை அறியாமல் அரைகுறை ஞானிகள் உண்மைக் கடவுளை தெரிந்து கொள்ளாமல் மறைத்ததால்*

மக்களின் அறியாமையைப் போக்குவதற்காகவும்.உண்மையை வெளிப்படுத்துவதற்காகவும்....

*கடவுளே உண்மையை உரைக்க இவ்வுலத்திற்கு வந்துள்ளார் வள்ளலார் !*

கடவுளே இவ்வுலகிற்கு வந்தாலும் மனித உருவம் தாங்கிதான் வரவேண்டும் என்பதுதான் இறைச்சட்டம்.

*வள்ளலார் உருவத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை*!

வள்ளலார் பாடல் !

அகத்தே கருத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே
எனை இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்னும் பாடலிலே தெளிவாக தெரியப்படுத்துகின்றார்..

உண்மையை உணர்த்த ஒரு மார்க்கம் வேண்டும் என்பதற்காக இறைவனே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* தோற்றுவிக்கின்றார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

அந்த உண்மை மார்க்கத்திற்கு தலைவன் யார் ? என்றால் தோற்றுவித்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தலைவன் ஆவார் !

வள்ளலார் பாடல்.!

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச் சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே

*சுத்த சிவ சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற் போற்றும் என் மார்க்கம் நின் மார்க்கமே !

சுத்த சன்மார்க்கம் என்பது இறைவன் படைத்த மார்க்கம்.இறைவன் படைத்த மார்க்கத்தில் உண்மைக்கு மட்டுமே இடம் உண்டு என்பதை தெளிவாக அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

இறந்தவர்களை எல்லாம் எழுப்பி சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்கத்தின் கட்டளைப்படி பின்பற்றி வாழவைத்து அருளைப் பெற்று மரணத்தை வெல்லும்
வழியைக் காட்டுவதே இறைவனுடைய நோக்கமாகும்.

சுத்த சன்மார்க்கத்தை மக்கள் பின்பற்ற வேண்டுமானால் ..*பொய்யான சாதி.சமய.மதமான துன்மார்க்கங்களை தொலைக்க வேண்டும்.அழிக்க வேண்டும்* என்பதற்காக  1872. ஆம் ஆண்டு எல்லா மார்க்கத்தையும் அழித்து விட்டார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..

பாடலை கவனியுங்கள் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்.சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்

என்மார்க்கம் நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார் மன்மார்க்கத்தாலே மகிழ்ந்து !

என்னும் பாடலிலே...சாதாரண மக்களாகிய உங்களுக்கு புரியாவிட்டாலும் வையகத்தில் வானகத்தில் மற்றகத்தில் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அரைகுறை ஆன்மீக அருளாளர்கள்  இந்த உண்மையை தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஏன் என்றால் மரணத்தை வெல்லும் வழிதெரியாமல்.முத்தி நிலை அடைந்த முத்தர்கள்.சித்தர்கள் யாவரும்  சித்தி நிலை அடையும் *உளவை*தெரிந்து கொண்டார்கள்.எனவே மகிழ்ச்சி அடைகின்றார்கள்..என்பதை சாதாரண அப்பாவி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் அருளைப் பெறும் *உளவை* வள்ளலாரிடம் சொல்லி அருளைப் பெறும் வழியைக் காட்டியவர் தான் நம் உண்மைத் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்...

தன்னிடம் உள்ள அருளை தம் குழந்தைகள் பெற்று மரணத்தை வென்று தம்மிடம் வரவேண்டும் என்பதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆசையாகும் ஆணையாகும்...

அருளைப் பெறுவதற்கு தியானம் .தவம்.யோகம்.வழிபாடு இவைகள் எல்லாம் வேண்டாம் அதிலே மூழ்கிவிட்டால் மூடம் உண்டாகும் என்கிறார் வள்ளலார்  .மூடம் என்றால் மரணம் என்பதாகும்.

அதேபோல் குரு சிஷயன் போன்ற ஆண்டான் அடிமை என்ற பேதங்களும் வேண்டாம் என்கிறார்.

உத்தமர்தம் உறவு மட்டுமே வேண்டும்.உத்தமர் உறவு கிடைத்தால் தான் நீங்கள் உத்தமராக முடியும்.
அந்த உத்தமர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்...

 குரு என்பவரும் அவரே!

*மருட்பகை தவிர்த்து வாழ்வித்து எனக்கே அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !*

மேலும்....

அகவலிலே இறுதியாக சொல்லுகிறார்..

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

*உயிர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்க வேண்டும்.*

*உத்தமர் தம் உறவு வேண்டும்*.

இந்த இரண்டு வழிகள் தான் *உளவு* என்பதாகும்.

உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவு அருட்பெருஞ்ஜோதி !

உயிர்களுக்கு வரும் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற இடையூறுகளை நீக்குவதே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

உத்தமர் தம் உறவு வேண்டும் என்பது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே உத்தமர் என்பவராகும்..

அவரிடம் தொடர்பு கொள்வதே *சத்விசாரம்* என்பதாகும்.

இந்த இரண்டில் முதலில் மிகவும் முக்கியமான உளவை வள்ளலார் பதிவு செய்கின்றார்..

பாடல் !
காலையிலே நின்றன்னைக் கண்டு கொண்டேன்.
சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்...
ஞானமிசைச்
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் ஏகா நினக்கு அடிமை ஏற்று !

தத்துவங்கள் கடந்து அதன்மேலே நடிக்கும் ஏகம் அனேகமாக எல்லா இடங்களிலும் நிறைந்து நடம் புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உம்மை தொடர்பு கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் பொருட்டு .அமுத காற்றை காலையிலே அனுப்புவதைக் கண்டு கொண்டேன்.  எனவே சன்மார்க்க சாலை வழியாக வந்து சாகா வரமும் பெற்றேன் என்கிறார்.

அதற்கும் மேலே சன்மார்க்க சாலை என்றால்.பசித்த ஏழைகளின் பசியைப் போக்கும் தருமச்சாலை என்னும் வழியைச் சாலை என்னும்  உளவைச் சொல்கின்றார்.

பாடலை உற்று கவனியுங்கள் !

என்பாட்டுக்கு எண்ணாததை எண்ணி இசைத்தேன் என்தன் பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான்

முன்பாட்டு காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்சாலையிலே வா என்றான் தான் !

நான் காலையிலே அமுதக்காற்றை சுவாசித்து அனுபவிக்கின்ற போது.எனது அறிவை விளக்கி தரும்ச்சாலை வழியாக வா என்று கட்டளை இட்டார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்கிறார்..

தருமச்சாலை வழியாக வருவதையே உளவு என்கிறார் வள்ளலார்.

மேலும் ஒரு அற்புதமான பாடல் !

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம்

தருமச்சாலை யிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே

சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்

மா நடத்தரசே என் மாலை அணிந்தருளே !

மேலே கண்ட பாடலிலே எளிய நடையில் எளிய தமிழில் விளக்கம் தந்துள்ளார் .மேலும் விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்..

அடுத்த பாடலில் தான் உளவை வெளிச்சம் போட்டு பதிவு செய்கிறார் !

மாலையிலே உலகியலார்  மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே

காலையிலே கலப்பதற்கு இங்கு எனைப்  புறம் போ என்கின்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி

ஓலையிலே பொறித்ததை நீ உன்னுளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் *இவ் உளவு* அறாயாய்

தருமச்சாலையிலே சன்மார்க்க சங்கம் தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே !

சாதி சமய மதங்களை தோற்றுவித்தவர்கள் ஓலையிலே எழுதி வைத்துள்ள பொய்யான கருத்துக்களைப் படித்து அதிலே உழன்று கொண்டு உள்ளீர்கள் .ஆதலால் இந்த உளவை தெரிந்து கொள்ள முடியாமல் அலைந்து கொண்டுள்ளீர்கள்.

மாலையிலே கணவன் மனைவி உறவு கொள்வது வழக்கமாக கொண்டு உள்ளீர்கள்..அதனால் மாண்டு போகின்றீர்கள்.

நான் அமுதக் காற்றை சுவாசித்து. காலையிலே இறைவனுடன் கலந்து தருமச்சாலை வழியாக சென்று கொண்டு உள்ளேன்.

நீங்களும் தருமச்சாலை வழியாகவும்.சன்மார்க்க சங்க வழியாகவும் வந்தால் அந்த உண்மை உளவை அறிந்து. தெரிந்து புரிந்து கொள்வீர்கள் ....

இந்த உளவைத் தெரிந்து கொள்ள உலக படிப்பான சந்தைப் படிப்பை விட்டு நம் சொந்த படிப்பை படிக்க வேண்டும்.

சொந்த படிப்புத்தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும் ...

*எனவேதான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதாகும்*.

கல்லார்க்கும்  கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

அருள் என்பது உலக கல்வி கற்று பெறுவது இல்லை...
இது அருள் கல்வி என்பதால் சாகாக் கல்வி என்னும் பெயர் சூட்டுகின்றார்.

அருள் கல்வி என்பது அன்பால்.தயவால்.கருணையினால் உயிர் இரக்கத்தால் கற்றுக் கொள்வதாகும்.

எனவேதான் ...

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சுவமே !

ஆரே என்னினும் இரங்கு கின்றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !

என்கிறார் வள்ளலார்..

மேலும்

உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே !

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே !

என்னும் உளவை தெளிவாகத் தெரியப்படுத்தி உள்ளார்.

ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும்.அன்பு உண்டானால் அறிவு உண்டாகும்.அறிவு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் ஊன  உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் உண்டாகும்.ஒளி உடம்பால் கடவுளைக் காணும் வழி உண்டாகும் .கடவுளைக் கண்டால் மரணத்தை வென்று கொள்ளலாம்.

கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்..

இதுவே பேரின்ப சித்தி பெருவாழ்வாகும்..மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.

தொடரும்.