வெள்ளி, 30 ஜூன், 2017

பிறப்பின் இரகசியம் ........ உண்மையை தேடி .........

பிறப்பின் இரகசியம் ........
 உண்மையை தேடி .........
****************************

இதையே நம் திருமூலர் பின்வரும் பாடலில்
விளக்குகிறார். திருமந்திரம் – (2008)

அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

பிறப்பின் இரகசியம்.
மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல்
பிணம்!
மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர்
இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம்
சவம்!

உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர்
உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்!

உடலும் உயிரும் சேர்ந்திருந்தால
ே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம்
இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே
இயக்கம்!

உடலைவிட உயிரே முக்கியமானது!
உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத
ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி “தலை கால்” தெரியாமல்
ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே!
ஒருவன் எப்படி பிறக்கிறான்?
பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?
இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை
பிறந்து விடுமா? நடக்காது!?
இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள்
எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?
விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை
உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி
செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம்
ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!
விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே!
இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின்
பரிமாணம் தான் மறுக்க முடியாது!

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது
செய்து ஏதோதோ கண்டுபிடித்து
சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!
எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள்
தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள்,
இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ
வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்?
பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்!
எல்லோரும் – பெரும்பாலானவர்கள்
இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது
எங்கே!?
பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்?
இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது
வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு
இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு
உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி
உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது
உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே
மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும்
போவதும் தான்!
நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல்
மட்டுமே! அன்னையின் உடலில்
உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும்
உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித
சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு
கருவாகி பிண்டம் உருவாகிறது!

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்!
நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன்
மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!
ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர்
சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான்
புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!
ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும்,
பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே
சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!
தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது
பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான்
உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு
உயிர் எப்படி வந்தது?

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது
மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே
குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர்
எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து
சேர்க்கிறது!
இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும்
என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம்
வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள்
ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே
வருகிறது!

இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது?
யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த
காலத்தில் வருகிறது - வந்தது என்று
அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார்
இல்லை?!

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது?
எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில்
எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில்
இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே
ஞானி!! அவனே சித்தன்!!

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து
பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27
நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10
மாதம் என்றால் 270 நாட்களே.
பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு
அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே
மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம்
குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள்
கொடி மூலம் வேண்டிய உணவை
தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!
படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும்
ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்!

அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற
அதிஉன்னத செயலாகும்!
படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன்
தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின்
கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து
காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள்
தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து,
நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்?
இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து
ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில்
விட்டுவிடுகிறான்! என்னே! அவனின்
திருவிளையாடல்!

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா
உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில்
தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்!
ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே!
எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே
உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும்
தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்!

மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன்
அருளும் அரிய சந்தர்ப்பம் இது!
மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும்
எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர்
வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும்
வைக்கிறான்! அதாவது உடலை அழித்து
அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்
குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!
அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!
அவரே மறைக்கிறார் அப்போது அவர்
மகேஸ்வரன்!
அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!
அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!
ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!
எல்லாமே அவன் செயலே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம்
புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன்
திருவிளையாடல்களே! அற்புதங்களே!
அனுவுக்கு அனுவானவன், எல்லாம்
ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன
ே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக
ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித
உடலினுள் பலகோடி அணுத்துகள்கள்
உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும்
இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும்
இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும்
இருக்கிறான் “உயிராக”!!
இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள்
எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில்
சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம்
பிரம்மாஸ்மி”.
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி
ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை
குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக
பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம்
கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து
இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே
என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று
உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது!
கடவுளே என்று உடலிலே தேடுபவன்
காண்பான் கண்களினாலேயே! வெளியிலே
தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது
ஞானம்!

இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான்
கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர்
பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும்
ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!....

அறிவுடையோருக்கு சில உண்மைகள்.......

“ வேண்டுதல்வேண் டாமை இலானடி
சேர்தார்க்கு
யாண்டு இடும்பை இல”…. திருக்குறல்

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில்
கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
- திருமந்திரம் – 725

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு- திரு தமிழ்
மறை…

அறிவு வேண்டும்….! தெளிவு வேண்டும்….!

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

“தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்-
தோன்றலிற் தோன்றாமை நன்று”
உணர்த்தியுள்ளது…
- வேதாத்திரி மகரிஷி

எங்கும் நிறைந்துள்ள சுத்தவெளிதான் எல்லா
உயிர்களிலும்
எல்லா தோற்றங்களிலும் மூலப்பொருளாக
உள்ளது.

மரத்திலே விதையும், விதையிலே மரமும்
போல் மனிதரிலே
தெய்வமும், தெய்வத்திலே மனிதனும்
உள்ளான். பஞ்சபூதக்
கூட்டினால் ஆன இந்த உடலில் அதுவே
அறிவாகவும்
உள்ளதை அறியவேண்டும்…

சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலொ!
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும்
ஒன்றலோ!
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன்
ஒன்றலோ!
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன
தன்மையே-சிவவாக்கியர்

என்னகத்துள் என்னை நானெங்குநாடி
ஓடினேன்
என்னகத்துள் என்னை நானறிந்திலாத
தாகையால்
என்னகத்துள் என்னை நானறிந்ததுமெ
தெரிந்தபின்
என்னகத்துள் என்னையன்றி யாது
மொன்றுமில்லையே..

அன்பெனும் கடத்துள்(உடல்) அடங்கிடும்
கடலே
அன்பெனும் உயிரொனிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புறு வாம் பர சிவமே.. அன்பின் வடிவம்
சிவபிரகாசவள்ளலார்…


புதன், 28 ஜூன், 2017

சுத்தசன்மார்க்ககொள்கைகள்!

[28/06, 5:50 p.m.] Apj Arul. Madurai: :::::: தியானம்:::::

தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.

- திருவருட்பிரகாச வள்ளலார்
[28/06, 5:50 p.m.] Apj Arul. Madurai: சன்மார்க்க சாதனம்

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.

102. சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.

பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்
சோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*

என்பதே என் பிரார்த்தனை யாகும்.
[28/06, 5:51 p.m.] Apj Arul. Madurai: சன்மார்க்கக் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி, ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால், சமயத்தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத் தெய்வங்கள் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.

ஆங்கீரச வருடம் ஆவணி மாதம் **. இதற்குப் பிரமாணம்: அருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" "அறங்குலவு தோழியிங்கே நீயுரைத்த வார்த்தை" என்னும் இரண்டு திருப்பாசுரங்களின் தாத்பர்யத்தால் காண்க.

96. சுத்த சன்மார்க்க முடிபு

சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன்.சாகாதவனே சன்மார்க்கி.

97. சாகாத கல்வி

வேதங்கள் முக்கியம் சாகாதகல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.

98. சாகாக்கல்விக்கு ஏது

தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகைதூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.

(வேறுகுறிப்பு)

ஒருவன் இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருஷம் ஜீவித்திருப்பான். எப்போதுஞ் சலிப்பில்லாமல் சுத்தக் கரணமாய் அருள் வடிவாய்த் தானாக நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது.

99. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.
[28/06, 5:51 p.m.] Apj Arul. Madurai: 101. சுத்தசன்மாக்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)

பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவியம் நேராத பட்சத்தில், திரிகரண சுத்தியாய் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல். சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது. சிவானுபவமாகிய தேகத்திரயம் பெறுவதற்கு மேற்குறித்த இரண்டு துவாரந் தவிர வேறில்லை. மேலும் தயவென்பது இரண்டு வகைப்படும். யாவெனில் கடவுள் தயை ஜீவ தயை ஆகிய இரண்டு. கடவுள் தயை யென்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பட்சி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோம சூரி யாக்கினிப் பிரகாசங்களைக் கால தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல், பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல். ஜீவதயை யென்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்: பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது. சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.

கடவுள் தயவும் ஜீவ தயவும்

கடவுள் தயை, ஜீவதயை யென்பது: கடவுள்தயை யென்பது இறந்தவுயிரை யெழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பக்ஷி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் கொடுத்தல், கால சக்கிரத்தின்படி சோமன் சூரியன் அக்கினிப் பிரகாசங்களை அளவு மீறாமல் நடத்தி வைத்தல் முதலியன. இவற்றை விரிக்கில் பெருகும். ஜீவதயை யென்பது தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல், அன்னிய ஜீவதோஷ விசாரம் கனவிலும் செய்யாதிருத்தல் முதலியவாம்.
[28/06, 5:52 p.m.] Apj Arul. Madurai: 103. சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்

ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மஹா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும். தத்துவவொழுக்கம்பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றிஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

கடவுள் மயமாவது

ஜீவ காருண்யத்தால் பிரமாவினுடைய ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணுவுடைய ஆயுசும், ஈசுரபத்தியால் ருத்திரனாயுசும், பிரமஞானத்தால் என்று மழியாத சுவர்ண தேகம் முதலியவையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

தயவும் கடவுளும்

கடவுள் சர்வஜீவ தயாபரர். ஆகையால் சர்வ வல்லபமுடையவர். அதுபோல் நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லபத்தையும் பெற்றுக் கொள்ளும்படி செய்வார். ஞானிக்குத் தயை அதிகப்பட்டிருப்பதால், அவர் இறந்தவர்களை யெழுப்புதல் முதலிய அற்புதங்களைச் செய்யும் வல்லப முடையவரா யிருக்கின்றார். யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார். அந்தத் தயை யில்லாதவர்களிடத்துக் கடவுளிருந்து மில்லாமையா யிருக்கிறார். கடவுளிடத்தில் சதா அன்பும் பத்தியும் செலுத்த வேண்டும்.

பத்தி

பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.

(வேறு குறிப்பு)

தத்துவ நியாயத்தை அனுசரித்துச் சமயங்க ளேற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலியவைகள் ஆதலால், இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது.

சத்திய ஞானாசாரம்

ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும். அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.

104. ஆன்ம இயற்கையாகிய தயாமூலதன்மம்

தர்மமென்பதற்குப்பொருள் சீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரம தர்மம், சாதிதர்மம் முதலியவாக விரியும். இதில் அதிணுண்மை அதின் தன்மை... தன்மை என்பது அதின் சுபாவம். சுபாவமென்பது இயற்கைக் குணம். அதுவென்பது ஆன்மா. ஆதலால்,ஆன்மாவுக்கு இயற்கைக் குணம் தயை.ஆன்மாவின் இயற்கையென்பதே தர்மத்திற்குப் பொருள். ஆன்ம இயற்கையோடு இருந்தால் சிவமாகலாம். இதைப் பலவாகத் தர்மமென்று பெயரிட்டார்கள். அருள்வெளியாகிய ஆன்ம இயற்கையால் சிவானுபவத்தைப் பெறுவது உண்மை. இதற்கு வேதாகமங்களில் பலபட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில் சில:- அருட்சத்தி, அருள்வெளி, விருஷபம், தர்மதேவதை, அனாதியியற்கைக்குணம், பரஞானம், அகரவுகரம், அருள்நடம், அன்பு, ஆன்மநெகிழ்ச்சி, ஆன்மஅசைவு, சுத்ததத்துவம், ஆன்மஅறிவின்பேதம் - என இதை விரித்தார்கள். அருள்வடிவாய்ச் சிவமாகிப் பின்னமன்றிப் பூரணமாயிருப்பது நிரதிசயானந்தம். ஆனந்தமென்பது சந்தோஷம். நிரதிசயமென்பது ஆனந்தமின்மை(?). சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.

தருமம்

தர்மமாவது ஜீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரமதருமம், ஜாதிதருமம் முதலாகப் பலவகையாம். இதனது உண்மை ஆன்மாவின் தன்மை. தன்மை என்பது ஆன்மாவின் சுபாவம். சுபாவமென்பது ஆன்மாவின் சுபாவகுணம். சுபாவகுணமென்பது ஆன்மாவின் இயற்கைக்குணம் தயை. ஆன்மாவினியற்கை என்பதே தருமத்துக்குப் பொருள். தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடையமாட்டான்.

அருளொளி

அருள்வெளியில் சன்மார்க்கத்திலுள்ள அனுபவங்களைப் பெறலாம். இதற்கு அருட்சத்தி என்றும், அருள்வெளி என்றும், ரிஷப மென்றும், அதின் தன்மை என்றும், அனாதி இயற்கை என்றும், பரஞான மென்றும், பூர்ண நிஷ்டை என்றும், அகர உகர மென்றும், அருள்நடன மென்றும், ஆன்ம நெகிழ்ச்சி என்றும், ஆன்ம அசைவென்றும் பலபட விரிந்த நாமங்கள் உண்டு. அருள்வெளியின் வடிவாய் உண்மை என்னும் சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்தி லிருப்பதே உண்மை.

ஆனந்தம்

ஆனந்தமென்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷ’ப்பித்துத் தானதிசயமின்றி நிற்றல்.

105. ஜீவகாருண்யமே முத்திக்கு முதற்படி

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையா லடைவதரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தாலல்லது வேறுவகையால் வாராது. ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில்: கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னியவுயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம். இதுதான் முத்தியடைவதற்கு முதற் படியாயிருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

ஜீவகாருண்யமும் சித்தியும்

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையாலடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்ணியத்தாலல்லது, வேறு வகையில் வாராது. ஜீவகாருண்ணியத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ணியம் உண்டாவதற்கு மார்க்கம் யாதெனில்: கடவுளினது பெருமையையும் வல்லமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தல்தான். அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்ணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதற்படியாகவிருக்கின்றது. ஆதலாலிதைப் பாதுகாத்தல் வேண்டும்.

106. ஞானசித்தியும் ஒளிநிலையும்

இரவில் தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. ஏனெனில், அஃது பிராண நஷ்டம் பண்ணும். ஆதலால், நமது கிருகத்தில் தீபம் வைத்து இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரையில்லாதிருந்தால், ஆயுள் விருத்தியாம். இஃது சாத்தியனுக்கு. சாதகன் ஒருவாறு நித்திரை செய்தல் வேண்டும். கிருகத்தில் இருளில்லாது எங்கும் பிரகாசமாய் தீபம் வைத்தால், மேற்படி இருள் அந்தத் தீபத்தில் அடங்கும். அதுபோல் ஜீவதீபமாகிய நாம் வசிக்கிற கிருகத்தில் பிரகாசமில்லாவிட்டால், மேற்படி இருள் ஜீவப் பிரகாசமாகிய நம்மிடத்தில் சேர்ந்து நஷ்டத்தைப் பண்ணும். அதுபோல் ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிற கிருகத்தில் அருட்பிரகாச மில்லாது மருளாகிய அஞ்ஞான சம்பந்தமுடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் சீக்கிரமாம்.

ஆதலால், நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்.ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்தஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்றெழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால். உடனே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டுமுளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.

மேலும் அந்தச் சுத்தஞானி இறந்த உயிர்களை எழுப்புவதற்குப் பிரமாணம் யாதெனில்: ஒருவாறு தீபப் பிரமாணத்தா லறிக. தீபப் பிரமாணமென்பது யாது? தீபத்தினிடத்தில் காரியஒளி, காரிய காரண ஒளி, காரணஒளி என மூன்று. மேற்படி ஒளியாவன ஒளி, சோபை, பிரகாசம். ஆதலால் கடவுள் காரியமாய்ப் பிரகாசம்போல் சுவர்ணதேகியாய்த் தோன்றினால், அதிதூரத்திலிருக்கிற இருளென்னும் அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது பிரகாசமயம். அதுபோல் ஒளி மேற்படி பிரகாசத்திலடங்கிச் சோபை காரிய காரணமாய் இருக்கின்றதுபோல், ஆன்மாக்கள் அஞ் ஞானத்தில் கட்டுண்டு அறிவாகிய தீபத்தைக் கருதினால் மேற்படி அறிவாகிய தீபம் தோன்றின கணமே அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளின் சோபையைக் கண்டால், பஞ்சகிருத்தியமுஞ் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல், இறந்த பிரேதத்தை அவர்க்குச் சமீபிக்கச் சேர்த்தால், தக்கணமே அது ஜீவிக்கும். மேலும் பிரகாசம் எங்குமுள்ளது. எந்த இடத்தில் புலை கொலை அகற்றிய சீவர்கள் பிரார்த்தித்தாலும் தக்கணமே அவரது காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்று காரிய உருவமாகிய ஒளி வடிவாய்த் தோன்றி அருள் செய்வர். இதற்குப் பிரமாணம்: சித்தமார்க்கத்திலுள்ள துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் தோய்த்த நூலை நெடுந்தூரங்கட்டி, அங்கங்கு காயாது உபகரணம் பூசி, மனிதர்களை நிற்க வைத்து, மேற்படி சுண்ணத்தை அடியில் காட்டின தக்ஷணமே நுனியில் சிவப்பேறும்.
[28/06, 5:52 p.m.] Apj Arul. Madurai: 128. சகஜ நிலை

சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.

129. சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள. மேலும் இவை மூன்றும் பிண்டத்தில் நாலிடத்திலும் அண்டத்தில் நாலிடத்திலும் உள. அவைகள் பிண்டாண்ட ருத்திர சதாசிவ பேதம். சாகாக் கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல்நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனது காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்.

மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்... மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். (?) ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.

ஆங்கிரச ஸ்ரீ புரட்டாசி மாதம் 5ஆம் நாள்.

வேதாகமச் சிறப்பு

இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை.ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக் காணப்படுமாகில், அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது உண்மை.

பொன்னும் மகத்துவமும்

ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட பொன்னால் செய்த விக்கிரகங்கள் வைத்திருக்கும் தேவாலயங்களில் மகத்துவங்க ளுண்டாகும். மகத்துவத்தின் உயர்வு தாழ்வு பொன்னினது மாற்றுயர்வு தாழ்வாகவேயிருக்கும். மாற்றுயர்ந்த தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தை அடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க மகத்துவங்களுண்டாகும். இது ரகசியம்.

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகாப்புனல் அக்கினி. சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால் என்பது மயேசுரபாகம் மயேசுரதத்துவம். போகாப்புனல் என்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம். இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு. மேலும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்கிற தத்துவங்கள் பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4 இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு. இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள் முதலிய ருத்திர மயேசுர சதாசிவ பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த இந்த நாற்பத்துமூன்று நிலைகளில் முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1 கற்பம். இப்படி 43 நிலைகளும் ஏறியனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப் பொருள் சிலர் உப்பு வகைகளின் பேதமென்று சொல்லுவது பிசகு. அவைகளினுண்மைப் பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களேயென்று அறியவேண்டும்.
[28/06, 5:52 p.m.] Apj Arul. Madurai: 130. மூவகைச் சித்தி

கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி எனச் சித்திவகை மூன்றாம்.

கர்மசித்தியாவது:-

அணிமா - துரும்பை மேருவாக்குகிறது

மகிமா - மேருவைத் துரும்பாக்குகிறது

கரிமா - மேருவை ஒன்றுமில்லாமல் செய்கிறது

லகிமா - ஒன்றுமில்லாத இடத்தில் அனேகங்களாகச் செய்கிறது

பிராத்தி - வேண்டுவன அடைதல்

ஈசத்துவம் - குளிகை வல்லபத்தாலெங்கும் செல்லுகிறது

பிராகாமியம் - பரகாயப்பிரவேசம்

வசித்துவம் எழுவகைத் தோற்றமாகிய தேவமானுஷ்ய நரக மிருக பக்ஷி ஊர்வன விருக்ஷம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துகிறது.

தேகத்தைக் கல்பசித்தி செய்து கொள்ளுதல்; அபரமார்க்கி; சதாசிவாந்த அனுபவம்; சதாசிவகால வரை; பிரேதத்தை உயிர்ப்பித்தல்; சித்தி காலம் 3 3/4 நாழிகை முதல் 3 3/4 வருஷத்திற்குள்.

யோக சித்தி விவரம்:- 64 சித்திகளையும் தன் சுதந்தரத்தில் நடத்துகிறது; சங்கல்பகுளிகை; பிராணகல்பதேகி; பிரமகாலம்; பராபரமார்க்கி சித்திகாலம் 12 வருஷ முதல் 108 வருஷத்திற்குள்; புதைத்த தேகத்தை நாசமடையாமுன் உயிர்ப்பித்தல்.

ஞானசித்திகளின் விவரம் - அறுபத்து நாலாயிரம் சத்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துகிறது. 647 கோடியாகிய*, 688 கோடி (?) பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டம்போல் நடத்துகிறது; காலம் கடந்தது; அடிநிலை முடிநிலை சுத்தகர்ம, சுத்தயோக, சுத்தஞான சித்திவல்லபங்களைத் தன் சுதந்தரத்தால் நடத்துகிறது.

* ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப்பொருளே
- அருட்பெருஞ்ஜோதி அகவல் 911-2


131. சுத்தமாகி தேகங்கள்

சுத்தமாதி மூன்று தேக விவரம்: சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம்.


சுவர்ண தேகம் பிரணவ தேகம் ஞானதேகம்


காரிய ரூபம் காரிய காரண ரூபம் காரண ரூபம்
பரதேகம் பரம்பர தேகம் எங்கும் பூரண
பர உணர்ச்சி பரம்பர உணர்ச்சி வியாபகம்
பர அறிவு பரம்பர அறிவு பராபர அறிவு
பரத்துவம் பரம்பர தத்துவம் பராபர தத்துவம்
பொன் வண்ணம் 16 முதல் 108 வரையில் அளவு கடந்த மாற்று
அபரஞ்சி மாற்று மாற்று, உரைபடாதது
12 வயது பருவம் 5 முதல் 8 வயது சப்த மயதரிசனம்
நரை, திரை, பிணி, தேகம் தோற்றும், உருவம் தோற்றியும்
மூப்பு, மலம், ஜலம், பிடிபடாது. தோற்றாமலும் இருக்கும்
வியர்வை, ஆகாரம்,
நித்திரை, தாகம்,
சாயை முதலியன
இல்லாமை
ரோம வளர்ச்சி
தாழ்ச்சி இல்லாமை
கர்மசித்தி சர்வ சித்தி சர்வ மகாசக்தி, சர்வ
கல்பதேகி பிராண கல்பதேகி சுதந்தரம்
அபரமார்க்கி பர அபர மார்க்கம் காலாதீதன்

132. சுவர்ண தேகிகள் ஆயுள்

சுவர்ண தேகிகள் ஆயுள்.

ஒரு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - நாலு லக்ஷத்து முப்பத்தீராயிரம்.

இரண்டு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - எட்டு லக்ஷத்து அறுபத்து நாலாயிரம்.

மூன்று மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - பன்னிரண்டு லக்ஷத்து தொண்ணூற்று ஆறாயிரம்.

நான்கு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - பதினேழு லக்ஷத்து இருபத்தெட்டாயிரம்.

ஐந்து மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதாயிரம்.

ஐந்து பூதங்களின் பேதம் பன்னிரண்டு லக்ஷத்து இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது கோடியாய் இருக்கின்றது.

133. அணுபக்ஷ சம்புபக்ஷ அனுபவ விவரம்

ஐந்து மாற்றுள்ள சுவர்ணதேகி பிரமன் வயசு - நாலு லக்ஷத்து முப்பத்தீராயிரம்.

ஆறு மாற்றுள்ள சுவர்ணதேகி விண்டு வயசு - எட்டு லக்ஷத்து அறுபத்து நாலாயிரம்.

ஏழு மாற்றுள்ள சுவர்ணதேகி ருத்திரன் வயசு - பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்று ஆறாயிரம்.

எட்டு மாற்றுள்ள சுவர்ணதேகி மயேசுரன் வயசு - பதினேழு லக்ஷத்து இருபத்தெட்டாயிரம்.

ஒன்பது மாற்றுள்ள சுவர்ணதேகி சதாசிவன் வயசு - நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதினாயிரம்.

இவர் அணுபக்ஷத்தார்.

அணுபக்ஷத்தில் நாற்பத்து மூவாயிரத்து இருநூறு லக்ஷங்கோடி விந்து சத்தியின் அளவு; அளவிறந்த கோடி நாதத்தின் அளவு.

அணுபக்ஷத்தில் பரவிந்து சுத்தமாயையைக் கடந்தது; பரநாதம் சுத்தமகாமாயையைக் கடந்தது.

சம்பு பக்ஷத்தில் பிரமன், விண்டு, ருத்திரன், மயேசுரன், சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்பவற்றில்:

பிரமன், விண்டு - சுத்த மகா மாயையைக் கடந்த ஞான அனுபவ பேதம்.
ருத்திரன் - சித் அனுபவம்
மயேசுரன் - ஆனந்த அனுபவம்
சதாசிவன் - சத் அனுபவம்
விந்து - சிதானந்த அனுபவம்
நாதம் - சதானந்த அனுபவம்
பரவிந்து - சச்சிதானந்த அனுபவம்
பரநாதம் - சிவானுபவம். இவை ஒருவாறு.

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்

சனி, 24 ஜூன், 2017

மனிதன் அறிவை முடக்கியது யார்? யார் ?

[24/06, 5:40 p.m.] aanmaneyan kathirvelu: மனிதன் அறிவை முடக்கியது யார்? யார் ?

இறைவன் படைப்பில் எல்லோரும் நல்லவரே !

உயர்ந்த அறிவு படைத்தவர்களே மனிதர்கள் !

தாழ்ந்த நிலைக்குப் போய்.தாழ்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அதற்குக் காரணம் சமய.மதங்களை தோற்றுவித்த ஆன்மிகவாதிகள். அவர்கள் காட்டிய நெறிகள் அனைத்தும் பவ நெறிகள் அதாவது பொய் நெறிகள்..அதனால் செந்நெறி தெரியாமல் பிறந்நு பிறந்து இறந்து இறந்து வீண் போய் கொண்டு உள்ளார்கள்.

மனிதர்கள் குற்றவாளிகள் அல்ல !

மக்களுக்கு வழிக்காட்டியவர்கள்.ஆன்மீக. பொய்யான அருளாளர்கள் என்பவர்கள.தான் குற்றவாளிகள்.

பொய்யான சாதி.சமய.மதங்களால் படைக்கப்பட்ட புன்நெறியை  அழித்தால் மட்டுமே மனிதர்கள் மனிதனாக வாழ முடியும்.

வள்ளலார் தோற்றுவித்த புனிதம் உறும் சுத்த சன்மாரக்கத்தை கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே முன்னேற முடியும். வேறு மார்க்கங்கள் மனிதர்களை அழித்துக் கொண்டேதான் இருக்கும்.

பழைய ஆன்மீக குப்பைகள் தான் ஆன்மாவைத் திரைகளாக மறைத்துக் கொண்டு உள்ளன.
[24/06, 5:56 p.m.] aanmaneyan kathirvelu: வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக பதிவு செய்து உள்ளார்.

சாதி.சமயம்.மதம்...இதுதான் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள்.என்கிறார்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என்கிறார்

சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்கிறார்.

வள்ளலாரைப்போல் நாமும் சாதி சமயம் மத்த்தை ஓழித்தால் மட்டுமே .ஆன்மா பரிசுத்தமாகி அருள் சுரக்கும்.அருள் கிடைத்தால் மட்டுமே.மரணத்தை வெல்ல முடியும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 21 ஜூன், 2017

ஒருவன் நல்லவனா ? கெட்டவனா ? எப்படி அறிவது ?

ஒருவன் நல்லவனா ? கெட்டவனா ? எப்படி அறிவது ?

அவன் உடம்பைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

பட்டம்.பதவி.புகழ்.செயல்களால் நல்லவன் என்று சொல்ல முடியாது.

நரை.திரை.பிணி.மூப்பு.பயம்.துன்பம்.மரணம் வருபவர்கள் அனைவரும் கெட்டவர்களே.என்கிறார் வள்ளலார்.

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே !

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரேநற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேபுத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவேஉரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடல்களின் வாயிலாக தெரிவிக்கின்றார்.

எனவே உலகில் மரணம்  வராமல் வாழ்கின்றவர் எவரோ அவரே நல்லவர்.மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்களே.

ஆதலால் நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையைக் கடைபிடித்து வள்ளலார் போல் வாழ்ந்து .நரை.திரை.பிணி.மூப்பு.பயம் மரணம் இல்லாமல் வாழ்ந்தால் மட்டுமே நல்லவரகள் ஆக முடியும்.

நாம் நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மாணிக்கும் அதிகாரம்.பொருப்பு.தீர்ப்பு அனைத்தும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் தான் உள்ளது.

என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே நாம் மேலே செல்ல முடியும். நாம் மேலே செல்வதற்கு கல்வி கற்க வேண்டும்.

அந்த கல்விக்குப் பெயர் சாகாக்கல்வி.சிற்றம்பலக்கல்வி என்று பெயர்.அந்த கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.

வள்ளலாரும் அவர் இடத்தில் சென்றுதான் சாகாக்கல்வியைக் கற்று நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கி தேர்ச்சிப் பெற்றார்.

நல்ல பிள்ளை.செல்லப்பிள்ளை.கதிர்பிள்ளை.என்றும் ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை என்னும்
பட்டம் பெற்றார்.

சாகும் மனிதர்களிடம் இடம் இருந்து வாங்கும் பட்டங்கள் எல்லாம் அழிந்துவிடும்.

சாகாமல் என்றும் அழியாமல் உள்ள அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் வாங்கும் பட்டம் பதவி என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்சாவையும் நோவையும் தவிர்ந்தேன்சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்பண்ணிய தவம்பலித் ததுவே.!

என்ற பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உலகில் நல்லவர் ஒருவர்உண்டு என்றால் அவர் வள்ளலார் மட்டுமே.

அவர் கற்றக்கலவி.அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் நமக்கு பாடமாக எழுதி வைத்து உள்ளார்.

அந்த பாடத்தைப் படித்து அவர்போல் நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கினால் மட்டுமே நல்லவன் என்ற பெயர் உள்ள
 பட்டத்தை பெற முடியும்.

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக்  கருணைநெறிஉற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

வள்ளலாரைப்போல் சாகாக்கல்வி கற்க வேண்டும்

கற்காமல் இருக்கும் வரை நாம் அனைவரும் கெட்டவர்களே !

மரணம் அடைந்தவர்கள் அனைவரும் கெட்டவர்களே.

சிந்திப்போம் செயல்படுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திங்கள், 19 ஜூன், 2017

மருத்துவரை நாடாதீர்கள்!

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம்  செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!    

🌿🌱🌴🌿🌱🌴🌿🌱🌴🌿🌱

வெள்ளி, 16 ஜூன், 2017

கருணை உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார் !

கருணை உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார் !

உயிர் உள்ள ஜீவன்கள் !

கடவுள் தனியாக இல்லை.உயிர் உள்ள அனைத்து ஜீவன்கள் உள்ளும் க டவுள் இருக்கின்றார்.

வெளியில் கடவுளைத் தேடுகிறவர்கள் அறிவு இல்லாதவர்கள்.

எல்லா ஜீவன்களிலும் கடவுள் உள்ளார் எனபதை அறிந்து இயற்கையான அன்பு.தயவு.கருணை செலுத்துபவர்களே சிறந்த அறிவு உள்ள மனிதர்கள்.

உயிர்களின் மேல் கருணைக் காட்டாதவர்களைக் கடவுள் கண்டு கொள்வதே இல்லை.

கருணை இல்லாதவர்கள் .மனிதர்களாய் இருந்தும் மிருகங்களே.

கடவுளை வெளியில்்தேடாதே கிடைக்க மாட்டார்.

ஜீவன்கள் மேல் அன்பு காட்டு .கடவுள் உன்னைத் தேடி வருவார்.

வள்ளலார் பாடல்;-

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசேஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதேஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவேஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.!

மேலும் ஒரு பாடல்;-

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ. !

மேலே கண்ட இரண்டு பாடல்களையும் பல முறைப் படித்து பொருள் உணரந்து வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.

கடவுள் கருணையுடன் காப்பாற்றுவார்.என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 12 ஜூன், 2017

ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !

ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !


சுமார் நாற்பது ஆண்டுகளாக.வள்ளல்பெருமான் காட்டிய  சுத்த சன்மார்க்கத்தைப் பற்றி .மேடைகளிலும்,சன்மார்க்க சங்கங்களிலும்,மற்றும் வெளி நாடுகளிலும்  தொடர்ந்து  பேசிக் கொண்டே வருகிறேன் .எந்தப் பயனும் இல்லை .

மேலும் பேஸ்புக்,...வாட்ஸ்அப் ,...வலைத் தளங்களுளும் சுத்த சன்மார்க்கத்தைப் பற்றி எந்தக் கலப்படமும் இன்றி வெளியிட்டு வருகிறேன் .

இனி எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்..இனி அமைதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நினைவிலே செல்ல அறிவு விளக்கம் தருகின்றது.....பசித்து இருக்க விரும்புகிறேன்... தனித்து இருக்க விரும்புகிறேன்...விழித்து இருக்க விரும்புகிறேன் .

முக்கியமான சுத்த சன்மார்க்க விழாக்களில் மட்டுமே கலந்து கொள்வேன் .

சுத்த சன்மார்க்கம் தெரிந்து கொள்ள விரும்புவோர் .தொலை தொடர்பிலோ .அல்லது நேரிலோ,.தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மாதம் மாதம் வடலூர் மாதப் பூசத்திற்கு வந்து மூன்று நாட்கள் தங்கி இருப்பேன்.அது சமயம் நேரில் வந்து ஆர்வம் உள்ளவர்கள் சத் விசாரம் செய்து சுத்த சன்மார்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். .

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் சாகாக் கல்வியைப் பற்றி ஈரோடு கதிர்வேல் மேடை மேடையாய் பேசினான் .அவனும் செத்துப் போயிட்டான் என்ற அவச்சொல் எனக்கு வேண்டாம் என நினைக்கிறேன்.

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய காரியம் அல்ல .அதற்கு என தனித் தகுதி வேண்டும்.அந்த தகுதியை பெற வேண்டுமானால் அதி தீவிர பெரு முயற்ச்சி வேண்டும்...

அந்த தகுதி இப்போது எவரிடமும் இல்லை என்பதே தெளிவாகிறது.இனி வருங்காலம் எப்படி இருக்குமோ அது இறைவன் சித்தம்.அதி தீவிர முயற்ச்சி உடையவர்களுக்கு மட்டுமே இறைவன் கருணைக் காட்டுவார் . அதில் எந்த சந்தேகமும் இல்லை .

ஞான சரியைப் பாடல் !

ஞான சரியைப் பாடல்கள் 28,லும் மிகத் தெளிவாக வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .அதைப் படித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்...அதில் இருந்து விலகி வாழ்பவர்களுக்கு எக்காலத்திலும் மரணத்தை வெல்ல வாய்ப்பே இல்லை..இதுதான் உண்மை ..

ஞான சரியையில் உள்ள முதல் பாடலே நம்மை எல்லாம் உருக வைக்கும் பாடலாகும் . .பின் வரும் பாடல்கள் அனைத்தும் நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் வழியைக் காட்டுகின்றது.அவற்றைப் பின் பற்றி வாழுங்கள் எல்லா நன்மைகளும் நம்மைத் தேடி வரும்......அதி தீவிர பெரு முயற்ச்சி அவசியம் வேண்டும் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் நிச்சயம் கிடைக்கும்...

1. நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே 
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான 
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் 
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் 
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 


9865939896.
7904493699.....தொடர்பு கொல்லவும்.

ஆன்மீகம் என்றால் என்ன ?

ஆன்மீகம் என்றால் என்ன ?

இந்த உலகம் முழுவதும் ஆன்மீகம் என்ற பெயரில் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள்

உலகில் தோன்றிய அனைத்து ஆன்மீக வாதிகளும் .கடவுளின் உண்மைத் தெரியாமல் பொய்யே பேசி உள்ளார்கள்

எல்லோருமே கடவுள் விஷயத்தில் குருடர்கள்.

உண்மையான கடவுள் யார் என்பதை அறிய முடியாமல் உளறிக் கொண்டு உள்ளார்கள்.

உலக வரலாற்றில் கடவுளைக் கண்ட ஒரே அருளாளர் வள்ளல் பெருமான் ஒருவரே.

அவர் கண்ட கடவுள் தான் தத்துவம் எல்லாம் கடந்த தனிப் பொருளாகும்.

அவை அருள் நிறைந்த ஒளிப் பொருளாகும்.அவற்றை எவராலும் காண முடியாது.

அதற்கு உண்மைப் பெயர் வைத்தவர் வள்ளலார் .அவைதான்

அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி!

எனபதாகும்.

இந்த உண்மைக் கடவுளை தொடர்பு கொள்ளாமல. வேறு பொய்க் கடவுள்களையும்.பொய்யான தத்துவங்களான ஜடப்பொருள்கள் எவற்றைத் தொடர்பு கொண்டாலும் வாழ்க்கை சூன்யம் தான்.

இதை அறிந்து கொள்ளும் அறிவு உள்ளவன் எவனோ அவனே அறிவு உள்ள மனிதன் .

இந்த உண்மையை வள்ளலார் தெளிவாக பறைசாற்றி உள்ளார்.

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

ஏன் அப்படி சொல்லி உள்ளார் என்றால்

உண்மையான இறைவனைக் கண்டார் களித்தார்.அதிலே கலந்து கொண்டார்

மனித வடிவிலே சொல்லவில்லை .சொல்லவும் முடியாது.

இறைவனுடன் கலந்து அருள் வடிவிலே .பர நாத ஒலியிலே ஒளியிலே பேசுகின்றார் அவர் கண்ட உண்மையை எழுத்து வடிவிலே எழுதி வைத்து உள்ளார்.

கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்அழியாத் திருஉருவம் அச்சோ
எஞ் ஞான்றும்அழியாச்சிற் றம்பலத்தே யான்.

என்றும்

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்

என்எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்கலந்தான்

என் பாட்டிற் கலந்தான் உயிரில்கலந்தான் கருணை கலந்து.

என்ற அருள் வார்த்தைகளால் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையால் மக்களுக்கு போதித்து உள்ளார்.

அறிவு உள்ள மனிதர்களாய் இருந்தால் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மட்டுமே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அவர் மீது அன்பு நிறைந்து கண்ணீர் பெருக வழிபட வேண்டும்.

அப்போதுதான் உண்மையான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் நாம்  தொடர்பு கொள்ள முடியும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புள்ள ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.