செவ்வாய், 11 அக்டோபர், 2016

உண்மையான கடவுளைக் காட்டியவர் !

உண்மையான கடவுளைக் காட்டியவர் !     ' . .  
உலகில் உள்ள அருளாளர்கள் அனைவரும் தத்துவங்களைக் கடவுளாக அறிமுகப் படுத்தி உள்ளார்கள் ......

வள்ளலார் மட்டுமே உண்மையானக் கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் ...அறிமுகப்படுத்தியது மற்றும் அல்லாமல் ...அக்கடவுளை வழிபடுவதற்கு ,சாதி,சமயம்,மதம் ,இனம் ,நாடு என்ற வேறுபாடு இல்லாமல் ,அனைத்துத்தர மக்களுக்கும் பொதுவான "" சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வடலூரில் தோற்றுவித்துள்ளார் ""  

அது கோவில் அல்ல ,ஆலயம் அல்ல ,சர்ச் அல்ல ,மசூதி அல்ல .மிரமிடு அல்ல .     அங்கு சமய மதங்கள் போன்ற வழிபாட்டு முறைகள் இல்லை ,....அங்கு ஜோதிதான் வழிபடும் கடவுள் ....உண்மைக் கடவுளின் விளக்கமாக  அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை ஜோதியாக புறத்தில்  வைத்து உள்ளார் . . .

சமர.சுத்த சன்மார்க்க சத்திய  சங்கத்தை சார்ந்த அன்பர்கள் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கம் தந்து ,மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் ,.......அன்புடன்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு