புதன், 25 மார்ச், 2020

இருமலுக்கு மூலிகை !

இருமலுக்கு மூலிகை !

வள்ளல் பெருமான் அவர்கள்.சென்னையில் உள்ள தன் நெருங்கிய அன்பர் திரு இரத்தினமுதலியார் அவர்களுக்கு
20-09-1864 ஆம் ஆண்டு ஒரு கடிதம் எழுதி அனுப்புகின்றார்.

அந்த கடித்த்தில் உள்ள செய்தியை நாம் அனைவரும் படித்து தெரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.

அன்பு.அறிவு.ஒழுக்கம் முதலிய நற்குணங்கள் வாய்ந்து நம்மிடத்து உள்ளன்பு வைத்த சிரஞ்சீவி இரத்தினம் முதலியார்க்கு சிவகடாக்ஷத்தினால் தீர்க்க ஆயுளும் திடதேகமும்.சகல சம்பத்தும் மேன் மேலுண்டாவனாக.

தங்கள் சுப சரித்திரங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன்.தங்களுக்கு *இருமலால்* தேகம் அபக்குவமாக இருக்கிறதாகத் தபாலில் எனக்குத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது தொடங்கி என் நினைப்பெல்லாம் தங்களிடமாகவே இருக்கிறது.நித்திரை பிடிக்கிறதுமில்லை.

நான் தொடங்கிய காரியங்கள் ஒன்றும் நடக்கிறதுமில்லை.மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது.உடனே புறப்படுவேன்.இவ்விடத்தில் ஒரு பெரிய தடை நேரிட்டிருக்கின்றது. அது இன்னும் பதினைந்து தினத்தில் விடும்.அதற்கு மேல்  பிரயானப்படுகிறேன்  என்றும்.

எவ்விதத்தினும் ஐப்பசி மாதம் 12 நாளில் பிரயாணப்பட்டு வருகிறேன் .தாங்கள் நமது சாமி அவர்களைக் கொண்டு உபசாந்தி செய்து கொண்டு அதிக உழைப்பு எடுத்துக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக வரவேண்டும் கடினமான அவுஷதங்களைக் கொள்ள வேண்டாம் என்று கடித்த்தில் எழுதுகின்றார்.

*நாம் கவனிக்க வேண்டியது*!

இரத்தினமுதலியாருக்கு கொரோனோ வைரஸ்போல் தாக்கி இருமல் வந்துள்ளது.அதனால் எந்த வேலையையும் செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும்.வேலை போனால் போகட்டும் உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளல்பெருமான் கடிதத்தில் எழுதுகிறார்.

மேலும் அந்த இருமலுக்கு மூலிகை மருந்தை சொல்லி எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றார்.

முசுமுசுக்கை சமூலம் கொண்டு வந்து.பசும்பாலில் ஊறவைத்து.உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு நித்தியம் காலையில் தேயிலைத் தண்ணீர் காச்சி சாப்பிடுவதுபோல சலத்தில் போட்டு சுண்ட வைத்து.

பசும்பால் நாட்டுசக்கரை.மிளகுப்பொடி கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு வரவேண்டும்.

இதை சாமிகளுக்குத் தெரிவித்து அவாளைக்கொண்டு செய்வித்து சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டும்.

உத்தியோகம் தடை இருந்தால் அதை விடுத்து தெகத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். தேகம் பக்குவமான பின்பு சிவானுக்கிரகத்தால் உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

அது பரியந்தம் கடன் பட்டாவது ஜீவனம் செய்யலாம்.அது குறித்து அஞ்ச
வேண்டாம். என்று வள்ளலார் கடித்த்தில் எழுதி உள்ளார்.

*இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது*.!

இருமல் கொரோனோ போன்ற கொடூரமான வியாதி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.நுறையீரலை பாதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.உடனே கவனிக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லியதோடு அல்லாமல்.

அதற்குண்டான மூலிகை மருத்துவத்தை தெளிவாக சொல்லி உள்ளார்.
வள்ளலார் சாதாரண மனிதர் அல்ல. முற்றும் அறிந்த தெரிந்த.உணர்ந்த  அருளாளர்.

அவர்சொல்லிய மருத்துவத்தை அசட்டை செய்யாமல் செய்து சாப்பிட்டு வாருங்கள்.கொரோனோ போன்ற இருமல் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும் மறைந்துவிடும்.

மருந்தை சாப்பிட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலே ஓய்வு எடுத்தால் போதுமானது.

இதுநல்ல தருணம் அருள் செய்ய இதுநல்ல தருணம்..

வள்ளலார் எழுதிய இந்த கட்டுரையை ஆன்மநேய சகோதர சகோதரிகளுக்குத் தெரியப்படுத்தவும்.

எல்லா வியாதிகளுக்கும் நம் தமிழ்நாட்டில் வாழ்த்த அருள் ஞான சித்தர்கள் மூலிகை கண்டுபிடித்து வெளியிட்டு உள்ளார்கள். நாம் கடைபிடிக்க தவறி விட்டோம்.அதனால் துன்பப்படுகின்றோம்.

வரும் முன் காப்பதே சித்தர்கள் கண்டுபிடித்த  சித்த மருத்துவம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 24 மார்ச், 2020

கொரோனோ தொற்று வைரஸ் !

கொரோனோ தொற்று வைரஸ்!

இங்கே இரண்டு கேள்வி வைக்கப்படுகிறது.

வைரஸ் கிருமி காற்றின் வழியாக வந்து மனிதர்களை தாக்குகிறது அதனால் மனிதன் சிகிச்சை பலன் இன்றி மாண்டு போகிறான். என்பதை கண்கூடாக பார்த்து அறிந்து பயந்து நடுங்கி கொண்டு உள்ளோம்.

இந்த கிருமி உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இங்கே இரண்டு கேள்விக்கு விடை தேடவேண்டும்.

திருவள்ளுவர் வள்ளலார் போன்ற ஞானிகள் சில உண்மைகளை தெரிவித்து உள்ளார்கள்.

மனிதன் உட்கொள்ளும் உணவு இரண்டு வகையாக உள்ளது.

ஒன்று சைவ உணவு என்னும் தாவர உணவு.

இன்னொன்று மாமிசம் உணவு என்னும் உயிர்களை கொன்று உட்கொள்ளும் புலால் உணவாகும்.

இந்த கொரோனோ வைரஸ் கிருமியானது புலால் உண்பவர்களை தாக்குகிறதா ? சைவ உணவான தாவர உணவு உண்பவர்களை தாக்குகிறதா ?

இல்லை யாராக இருந்தாலும் தாக்குகிறதா என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

புலால் உண்பவர்களை தொற்றிக் கொண்டால் அதற்குண்டான மருந்து தேவைப்படும்.

சைவ உணவான தாவர உணவு உண்பவர்களை தொற்றிக் கொண்டால் அதற்குண்டான மருந்து தேவைப்படும்

மருத்துவ வல்லுனர்கள் இந்த ரகசியத்தை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.

இதுவரை கொரோனோ தாக்கி இறந்தவர்கள் மாமிசம் உண்பவர்கள்  எத்தனைபேர்.சைவ உணவான தாவர உணவு உண்பவர்கள் எத்தனைபேர் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

தாவர உணவு உண்பவர்களை வைரஸ் கிருமி தாக்காது என்பது .திருவள்ளுவர் வள்ளலார் போன்ற அருளாளர்களின் அருள் சிந்தனை அருள் வாக்காகும்.

திருவள்ளுவர் கொல்லாமை புலால் மறுத்தல் என்னும் இரண்டு அதிகாரங்கள் எழுதி விளக்கம் தந்துள்ளார்.

வள்ளலார் .உயிர்க்கொலை செய்பவர்களும் அதன் புலாலை உண்பவர்களும் கடவுளை நினைக்க.வணங்க தகுதி அற்றவர்கள் என்கிறார்.

புலால் உண்ணாதவர்களை உறவு இனத்தார் என்றும்.புலால் உண்பவர்களை புற இனத்தார் என்றும் பிரித்தவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

சனி, 21 மார்ச், 2020

உலகம் உறங்குகின்றது !

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌

தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றன் என்னன்னெவோ உலக நியதி என்றான்

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்

ஓடினான், பற்ந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான், கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்

முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்

பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்

மன்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைகின்றான்

காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது

கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு, மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்துகொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி

நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து, நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன் இனம்

தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்

கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில், வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்.

சாதி சமயம் மதம் என்ற ஆணவத்தில் அலைந்து திரிந்து மனித இனம் அடங்கி கிடக்கிறது.

கொள்ளை அடித்து சேர்த்து வைத்த பணம் அனுபவிக்க முடியாமல் அடங்கி கிடக்கிறது.

இயற்கை மனிதனை திருந்த செய்த ஒருசிறிய தொற்று வைரஸ் இவ்வளவு வேலை செய்கிறது என்றால். தன் முழு பலத்தையும் வெளிப்படுத்தினால் என்னவாகும் உலகம்.

இயற்கை என்றும் கருணை உள்ளது.
அதுதான்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!!

திருந்தி வாழ கற்றுக் கொள்வோம்.பகிர்ந்து வாழ கற்றுக் கொள்வோம்.

நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.

எல்லா உயிர்களும். இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 18 மார்ச், 2020

கடவுள் மனித வடிவில் உள்ளார்!

*கடவுள் மனித வடிவில் உள்ளார்*

உலகம் முழுவதும் மக்களை பயத்தில் நடுங்க வைத்துக் கொண்டு இருப்பது கொரோனோ வைரஸ் தொற்று நோயாகும்.

மனிதர்களை காப்பாற்ற  பல சமயங்கள் மதங்கள் தோன்றி உள்ளன.பல கடவுள்கள் படைக்கப்பட்டுள்ளன.

கடவுள்கள் வாழும் இடமாக.வழிபடும் இடமாக ஆலயங்கள்.
கோயில்கள்.சர்ச்சுகள்.மசூதிகள்.பிரமிட்டுக்கள்.புத்தகயாக்கள் போன்ற பல்வேறு வழிப்பாட்டு தலங்கள் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

கொரோனா வைரஸ் கொடூர தாக்குதலை தடுக்க எந்த கடவுளும் முன்வரவில்லை.

இவ்வளவு காலமாக கடவுளை வணங்கி வேண்டி என்ன பயன்.காலமும் நேரமும் பணமும் பொருளும் தான்  விரையமானது.

மனிதனை காப்பாற்ற மனிதனால் தான் முடிகிறது. எந்த கடவுளாலும் முடியவில்லை.

கொரோனோ வைரஸ் அழிக்க மனிதன் தான் மருந்தை கண்டு பிடிக்கிறான்.

மனிதன்தான் மனிதனை பாதுகாக்கிறான்.

இங்கே சமயங்கள் மதங்கள் தோற்றுவித்த கடவுள்களுக்கு வேலை இல்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் வள்ளலார் சொல்லியுள்ள இந்திரிய.கரண.ஜீவ.
ஆன்ம ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் எந்த வைரஸும் தாக்காமல் மகிழ்ச்சி யோடு வாழலாம்.

ஒவ்வொரு மனிதனையும் அவன் கடைபிடிக்கும் ஒழுக்கம் தான் காப்பாற்றும்.மற்றபடி எந்த கடவுளும் காப்பாற்ற முடியாது.

மனிதன் துன்ப்படும்போது மனிதன்தான் காப்பாற்ற முன்வருகிறான்.நாம் வணங்கும் கடவுள்கள் முன் வருவதில்லை.

எனவே மனிதநேயம் ஆன்மநேயம்  ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு.தயவு.கருணை கொண்டு வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கொரோனோவில் தப்பித்து கொள்ள ஒரே வழி !

கொரோனோவில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி !

வள்ளலார் சொல்லியதை கடைபிடிக்க வேண்டும்.

200 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

நமக்கு எப்போது ஆபத்து வரும் என்பது தெரியாது.தன் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் பிற உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலாரின் அழுத்தமான கொள்கை.

அதற்கு பெயர்தான் ஜீவகாருண்யம் என்றும்.ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

அதில் முக்கியமானது.உயிர்க்கொலை செய்யக் கூடாது.அதன் புலாலை உண்ணக்கூடாது என்பதாகும்.

இன்று உலகம் முழுவதும் கடவுளால் படைத்த உயிர்களை கொன்று உணவாக உட்கொள்வதே  பழக்கமாகி விட்டது.

அதற்கு சமய மதங்களே துணையாக இருந்துள்ளன.

ஒரு உயிரைக் கொல்வதோ அதன் புலாலை உண்பதோ கடவுளுக்கு சம்மதமா என்றால் சம்மதம் கிடையாது.

கடவுள் பெயரைச் சொல்லியே உயிர்களை கொன்று குவித்துள்ளார்கள்.

அதன் விளைவுதான் கொரோனோ வைரஸ்.உலகம் முழுவதும் பரவுதற்கு காரண காரியமாக உள்ளது.

உயிர்க்கொலை செய்யாத ஜீவகாருண்ய முள்ள சமுசாரிகளுக்கு எந்த ஆபத்துக்களும் அவர்களை அனுகாது என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளார் வள்ளலார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள கருத்தை ஊன்றி படியுங்கள்!

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது, 

மண்ணும் சூடு செய்யாது - பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா - 

*விடூசிகை*  *விஷக்காற்று* *விஷசுரம்* முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா - 

அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் - 

அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் - 

சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - 

வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் - 

சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - 

துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் - 

சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.!

மேலே கண்ட விபரங்களை முன் கூட்டியே சொல்லி மக்களை நல்வழியில் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழிகாட்டி உள்ளார்.

உலகில் எந்த ஆன்மீக அருளாளார்களும் சொல்லாத.சொல்ல முடியாத உண்மைகளை மக்களுக்காக  தெளிவாக சொல்லி உள்ளார்.

மக்கள் செவிமடுத்து கேட்கவில்லை.

இன்று மிகப்பெரிய கொரோனோ வைரஸ் தொற்று நோயில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.மருந்து இல்லாத வியாதியாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கான உயிர்களை கொன்று தின்றார்கள் அதன் பாவச்செயல் தான் கொரோனோ வைரஸாக உலகம் முழுவதும் பரவி உள்ளது.

இப்போதும் தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.! 

இனிமேல் எந்த உயிரையும் கொல்ல மாட்டேன் அதன் புலாலை உண்ண மாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டு வாழ்ந்தால்.கொரோனோ வைரஸ் பிணியில் இருந்து உலகம் முழுவதும் தப்பித்துக் கொள்ளலாம்.

இதுதான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை கட்டளை.

பின் பற்றுங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதைவிட்டால் வேறு வழியில்லை.இவை வள்ளலாரின் அருள்வாக்கு உண்மை ! 

நம்பினோர் கெடுவதில்லை.

வள்ளலார் பாடல் ! 



மேலே கண்ட பாடலின் உண்மை தெரிந்தவன் பாக்கியவான்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 15 மார்ச், 2020

அருள் வழங்கும் இடம் !

அருள் வழங்கும் இடம் !

அருள் வழங்குவதற்கும் அருள் பெறுவதற்கும் ஓர் இடத்தை தேர்வு செய்கிறார் வள்ளலார்.

அருள் வழங்கும் தெய்வம் எங்கு இருக்கிறதோ அங்குதான் அருள் வழங்கப்படும்.

உலகில் அருள் வழங்கும் ஒரே தெய்வம்  அருட்பெருஞ்ஜோதி தெய்வம் மட்டுமே என்பதை வள்ளலார் கண்டு பிடித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுள்ளார்.

மூடநம்பிக்கையில் வாழ்ந்து கலை உரைத்த கற்பனைகளை நிலையானது என்று கண்மூடித்தனமாக பின்பற்றி அறிவு தெளிவு இல்லாமல்.அருளைப் பெற முடியாமல் வாழ்ந்து மக்கள் மாண்டு கொண்டே உள்ளார்கள்.

சத்திய ஞானசபை !

மக்களைக் காப்பாற்றவும் அருளை வழங்கவும் அருளைப் பெறவும் ஓர் இடத்தை தேர்வு செய்கிறார் வள்ளலார். அந்த இடம்தான்  *வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்*.

ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்தால் தான் அருளைப் பெறமுடியும்.எனவே வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வடலூர் சத்திய ஞானசபைக்கு அழைக்கின்றார்.

வள்ளலார் பாடல் !

  • வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
    வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
  • 2. திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
    சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
  • 3. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
    தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
    இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
    இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
  • 4. இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
    இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
    ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
    உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
  • 5. மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
    விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
    எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
    இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
    வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
    வந்தாற் பெறலாம்நல்ல வரமே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

வருவார் அழைத்துவாடி வந்தால் பெறலாம் நல்ல வரமே என்கிறார்.வரம் பெற்றால் போதாது நல்ல வரம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

யார் வந்தால் நல்ல வரம் பெறலாம் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்தால் தான் நல்ல வரமான அருளைப் பெற முடியும். எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வடலூர் சத்திய ஞானசபைக்கு அழைக்கின்றார் வள்ளலார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமரந்து அருள்பாலிக்கும் இடமாக சத்திய ஞானசபையைத் தோற்றுவித்து உள்ளார் வள்ளலார்.

வரத்தில் இரண்டு வரம் உள்ளன.ஒன்று பொருள் வரம்.ஒன்று அருள்வரம்.இங்கே நல்ல வரம் என்பது அருள் பெறும் வரத்தைச் சொல்லுகின்றார் வள்ளலார்.

பொருள் வரம் பெற்றால் மரணம் உண்டு.அருள் வரம் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.ஆதலால் வடலூர் வந்தால் பெறலாம் நல்ல வரமே என்கிறார் வள்ளலார்.

உலகில் அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர் சத்திய ஞானசபையாகும்.அருள் வழங்கும் ஒரேக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே !

சன்மார்க்க அன்பர்கள் !

சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு ஊரிலும் சன்மார்க்க சங்கம் அமைக்கலாம் .ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க தருமச்சாலை ஆரம்பிக்கலாம்.கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒளி வழிப்பாட்டு முறையை மக்களுக்கு போதிக்கலாம்.

வடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவதுபோல் .ஒவ்வொரு சங்கங்களிலும் சபையைக்கட்டி ஜோதி தரிசனம் காட்டுவது சரியானதா என்பதை சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்.

அருள் பெறும் இடம் .அருள் வழங்கும் இடம் வடலூர் மட்டுமே என்றும்.வடலூர் வந்தால் பெறலாம் நல்ல வரமே என்றும் தெளிவாக சொல்லியும்.சத்திய ஞானசபையை தோற்றுவித்தும் உள்ளார் வள்ளலார்.

ஜோதி தரிசனம் காணும் ஒரே இடம்.அருள் வழங்கும் ஒரே இடம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபை மட்டுமே என்பதை வள்ளலார் தெளிவுபட பதிவு செய்துள்ளார்..

வள்ளலார் பதிவு செய்துள்ளது !

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். 

இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். 
நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

மேலே கண்ட உண்மை தெரிந்து கொண்டு வடலூர் வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசித்து வேண்டும்போது எல்லா நன்மைகளும் பெற்றுக் கொள்ளலாம் என்றும்.இது ஆண்டவர் கட்டளை என்றும்.

இது சத்தியம் சத்தியம் என்றும்  கண்டிப்புடன் சத்தியம் வைத்துச் சொல்லி உள்ளார்.

நாம் வள்ளலார் சொல்லியதை எதையும் செவிமடுக்காமல் அவரவர் விருப்பம்போல் செயல்படுவதால் எந்த நன்மையும் எந்த லாபமும் பெறமுடியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பது சரியானதுதானா  என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்..

சிந்திப்போம் செயல்படுவோம் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 10 மார்ச், 2020

சிற்சபையின் உள்ளே செல்ல உளவு !


உளவு என்பது ரகசியம் என்பதாகும்.இதைத்தான் சிதம்பர ரகசியம் என்றும் சொல்லுவார்கள்.

ஒரு (மெய்ப்பொருள்) உண்மைப் பொருளை தெரிந்து கொள்வதற்கு தகுதியும் தரமும் வேண்டும்.தகுதி இல்லாதவர்களுக்கு உளவு சொன்னாலும் பலிக்காது. 

வள்ளல்பெருமான் வாழ்க்கையின் உண்மை நிலை உணர்ந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை என்கிறார்.

உள்ளே உள்ளான் யார் அவன் ? அவன் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். தனித்தலைமைப் பெரும்பதி. தாயாகவும் தந்தையாகவும் தாங்குகின்றவர்.அருளை வாரி வழங்கும் வள்ளல். தனிப்பெருங் கருணைக்கடல். இல்லை என்று சொல்லாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும் கற்பக விருட்சம்.

அவர்தான் ஆன்ம சிற்சபையின் நடுநின்று நடனமிடும் அருட்பேரொளி யாகும்.

சிற்சபை அப்பனை ஏழு கதவுகளால்  அடைக்கப்பட்டுள்ளன.

சிற்சபையின் உள்ளே உள்ளவனைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

*வள்ளலார் பாடல் *! 

மேலே கண்ட தகுதிகள் உண்மையாக இருந்தால் மட்டுமே கதவு திறக்கப்படும்.வள்ளல்பெருமானுக்கு கதவுகள் திறக்கப்பட்டு காட்சிகள் யாவும் கண்டு களித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று.சாட்சியாக காட்சிக் கொண்டுள்ளவர்..

மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் உளவு சொல்கிறார்.


உளவு என்னும் ரகசியத்தை அறிந்தால் ஒழிய மற்றபடி தலைகீழாக நின்று அளந்தாலும். அளக்க முடியாது.அளவினில் அடங்காது  அறிவினில் விளங்காது.அனுபவம் கிடைக்காது.அருளைப்பெற  முடியாது.

மேலும் அகவலில் பதிவு செய்கிறார்.!


  • பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
    தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
  • பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
    வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
  • சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
  • நவநிலை காட்டிய ஞானசற் குருவே! 
மூன்று ரகசியம் சொல்லுகின்றார் வள்ளலார்.


பிரமரகசியம்.
பரமரகசியம்.
சிவரகசியம்.

மேலே கண்ட மூன்று ரகசியங்களைக் கண்டவர்கள் உலகில் ஒருவரும் இல்லை.மறைக்கப்பட்ட மூன்று ரகசியங்களையும் கண்டுபிடித்து உள்ளே சென்றவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே ! 

ரகசியம் என்றும் மறைக்கப்பட்டவைகள் எல்லாம் வெளியே கொண்டுவந்து வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்.

சமய.மதங்கள் காணமுடியாது என்று சொல்லியுள்ள ரகசியங்களை எல்லாம் கண்டு களித்து கலந்து கொண்டவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் ! 



மேலே கண்ட பாடலில் தான் அனுபவித்த அனுபவத்தை தெளிவாக எளிய தமிழில் தெரியப்படுத்தி உள்ளார்.

மேலும் தெளிவுப்படுத்துகின்றார்.

வள்ளல் பாடல் ! 


மேலே கண்ட பாடலில் தன் அனுபவங்களை தெரியப்படுத்துகின்றார்.

சுத்த சன்மார்க்கத்தை பின் பற்ற ஆர்வம் உள்ளவர்கள்.வள்ளலார் வாழ்ந்து காட்டிய வழியில் பின்பற்றினால் மட்டுமே. சிற்சபை அப்பனைக் காட்டும் உளவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே காட்டிக் கொடுப்பார்.

குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்லுவதற்கு பெயர்தான் உளவு என்பதாகும்.

நாம் செய்யும் ஜீவகாருண்யத்தாலோ..வழிபாட்டாலோ அருளைப் பெறுவது மிகவும் கடினம்.

ஆண் பெண் அலி என்ற பேதம் இல்லாமல் ஆன்மாக்கள் யாவும் ஒரேத் தன்மை உடையது என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உளவின் ரகசியத்தை ஆண்டவர் வெளிப்படையாக தெரியப்படுத்துவார்.



அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.