ஞாயிறு, 30 ஜனவரி, 2022

மனமே மனிதன்!

 *மனமே மனிதன் !*


மனம் என்ற சொல் எல்லோராலும்  உபயோகிக்கும் சொல்லாக ஆன்மீக அருளாளர்களால்  வழங்கப்பெற்று நிலைபெற்று உள்ளன.


மனிதன் என்ற உருவம் மனத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டதாகும் மனம் ஓர் உயர்ந்த ஆற்றல்கள் மிகுந்த அருள் காந்த சக்தி அலைகளால் பின்னப்பட்ட கருவியாகும். அக்கருவிக்கு துணைக்கருவிகளாக புத்தி சித்தம் அகங்காரம் என மூன்று கருவிகள் உள்ளன. மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கருவிகளுக்கு கரணங்கள் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக் கரணங்கள் சாதாரண புறப்புற இந்திரியங்களான  கண் காது  மூக்கு வாய் உடம்பு களுக்குத் புலப்படாது.

ஆனாலும் கரணங்களினால்தான் இந்திரியங்கள் இயங்குகின்றன.  அதேபோல் ஆண்டவரும் ஆன்மாவும் ஜீவனும் கண்களுக்குப் புலப்படாது. ஆனாலும் மனம் உள்ளவரை உடம்பை  இடைவிடாது இயக்கிகொண்டே இருக்கின்றன. 


*மனம் சார்ந்த மனித உருவத்தில் ஆன்மா ஜீவன் கரணங்கள் இந்திரியங்கள் என நான்கு பிரிவுகள் உள்ளன.நான்கு பிரிவுகளையும் இயக்குவது கடவுளின் அருள் சக்தியாகும்.*


ஆன்மா அகமாகவும் ஜீவன் அகப்புறமாகவும்.

கரணங்கள் புறமாகவும் இந்திரியங்கள் புறப்புறமாகவும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் எண்ணிபார்க்க முடியாத. எவராலும் உருவாக்கமுடியாத  அதிசயமான அற்புதமான நூதனமான சுத்த பூதகாரிய  அணுத் துகள்களைக் கொண்டு மனித உடம்பும் அதனுள்  எலும்பு நரம்பு தசை   தோல் ஜவ்வு மூளை போன்ற அணுக்கருவிகளும்  அதற்குத் தகுந்த கலைகளும் மற்றும் தத்துவங்களும் தத்துவங்களை இயக்கும் ஆதாரங்களும் மற்றும் பலகோடி அணுத்துகள்களால் பின்னப்பட்ட உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று சிக்கல் இல்லாத தொடர்புடன் மிக நேர்த்தியாக கடவுளின் அருள் சக்தியால் பின்னப்பட்டுள்ளன. 


*மனித உடம்பே உலக அதிசயங்களில் ஒன்றாகும்* ஆகையினால் உயர்ந்த அறிவுபெற்ற தேகம் மனித்தேகம். 

  

உடம்பை இயக்குவதற்கு கடவுளால் படைத்த  ஆன்மா என்ற உள் ஒளியும் மாயையினால் கொடுத்த உயிர் ஒளியும் (ஜீவஒளி) இணைந்தால்தான் கரணங்கள் மற்றும் இந்திரியங்கள் மற்றைய தத்துவங்கள் ஆதாரங்கள் கலைகள் யாவும் தடுமாற்றம் இல்லாமல் நன்மை தீமைக்குத் தகுந்தாற்போல் இயங்கும்.


*இவ்வுலகில் ஆன்மா  வாழ்வதற்கு மனத்துடன் கூடிய எண்ணம் சொல் செயல் சார்ந்த மூன்று வகையான இயக்கம் மிகவும் அவசியமாகும்.* அதாவது *மனம் வாக்கு காயத்தால்தான் நன்மை தீமைகளும் நல்வினை தீவினைகளும் அறியாமை அஞ்ஞானங்களும் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன* அதுதான் திரைமறைப்பு என்பதாகும்.


*மனமானது உலகியல் சார்ந்த பொருள் பற்று உள்ளவரையிலும் ஆண்டவரையும் ஆன்மாவையும் தொடர்பு 

கொள்ளவே முடியாது* *ஆண்டவரை ஆன்மாவை தொடர்பு கொள்ளாதவரை அருள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. மனித தேகத்திற்கு பிறப்பு இறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்*. 


*ஆன்மா அருள் பெறுவதற்காகவே  மனம் என்ற கருவி மனிதனுக்கு தேவைப்படுகிறது.* மனம் இல்லையானால் மனித பிறப்பு தேவை அற்றது. மனத்தை வெளியில் செல்ல அனுமதித்தால் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் 


*மனம் அடங்கும் இடம் !*


*உலகில் தோன்றிய அருளாளார்கள் மனத்தை அடக்க வேண்டும் என்பதற்காக சரியை கிரியை யோகம் ஞானம் போன்ற ஆன்மீக வழிமுறைகளை எல்லாம் மக்கள் பின்பற்றினார்கள்* 


*மேலும் காடு மலை குன்று குகை முழைகளுக்கு சென்று புதிய புதியதான தவச்சாலைகள் அமைத்தும்  குகைகளை அமைத்தும்  கடுமையான அமைதியான நூதனமான தியானம் தவம் யோகம் செய்து வந்தார்கள்.

தலைகீழாக நின்று  கடுமையான  உடற்பயிற்சிகளும் செய்து மனத்தை அடக்கி பார்த்தார்கள்.

மேலும் பலவிதமான மந்திர தந்திரங்களைச்   சொல்லியும் பார்த்தார்கள்.

மேலும் பலவிதமான மணிமாலைகளைக் கொண்டு உண்ணாமல் உறங்காமல் இரவு பகலாக உருட்டி உருட்டி எண்ணி எண்ணி மனத்தை அடக்கி பார்த்தார்கள் எதனாலும் எவராலும் மனத்தை அடக்க முடியவில்லை*.

இறுதியாக சிலர் மனதை அடக்கமுடியாமல் அருள் பெறமுடியாமல் சமாதி நிலை அடைந்தார்கள்.

மற்றும் மேலும் இன்றுவரை மனத்தை மாற்றத் தெரியாமல் அனைவரும் மாண்டுகொண்டே உள்ளார்கள்.


இறுதியாக மனம் ஒரு குரங்குகுணம் உடையது.குரங்குபோல் ஒன்றை விட்டு ஒன்றை பிடித்து தாவிக் கொண்டே இருக்கும் அதனால் மனதை அடக்கவே முடியாது என்றார்கள்.  *மனம் பேய்பிடித்த குரங்கு போன்ற குணம் உடையது என்றார் வள்ளலார்.*


*மனத்தை அடக்க முடியாது மனத்தை மாற்றமுடியும் என்ற ஒரு புதிய கோணத்தை கண்டுபிடித்தார் வள்ளலார்.*  


*வள்ளலார் பாடல்!*


மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்

மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்


இனமுற என் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்

இருந்திடு நீ என்சொல்வழி ஏற்றிலை 

ஆனாலோ


தினையளவுன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகம்

சிரிக்கஉனை அடக்கிடுவேன் *திருவருளால்* கணத்தே


நனவில்எனை அறியாயோ யார்என இங் கிருந்தாய்

*ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.!*


*மேலே கண்ட பாடலில் ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நான் அதனால் உன் அதிகாரம் என்னிடத்தில் செல்லுபடியாகாது.* *மற்றவர்களை ஏமாற்றுவது போல் என்னை ஏமாற்ற முடியாது* *உலகம் சிரிக்க உனை நான் அடக்கி விடுவேன் சாக்கிரதையா இரு உன்சேட்டை என்னிடம் பலிக்காது  அதனால் நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என்கிறார் வள்ளலார் . கேட்கவில்லை என்றால் உன்னை எவ்வாறு என்வசமாக மாற்றுவேன் என்பது எனக்குத் தெரியும் என சொல்லி தன்னுடைய மனத்தை மிரட்டுகிறார் வள்ளலார்.* 


*வள்ளலார் கரண ஒழுக்கத்தில் சொல்லியது.*


 *சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்று எந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில்  இடைவிடாது செலுத்தவேண்டும் என்று தெளிவாகச் சொல்லுகின்றார்* 


*நம் உடம்பின் தலைபாகத்தில் உச்சிக்கும் கீழே உள்நாக்கிற்கும் மேலே மத்தியில் சிற்சபை என்னும் இடத்தில் உள் ஒளியாக  இயங்கிக் கொண்டு இருக்கும் ஒளிக்கு  பெயர்தான்  ஆன்மா என்பதாகும்.* 


*நம்முடைய மனத்தை வெளியே செல்ல வொட்டாமல் இடைவிடாது ஆன்மாவைத் தொடர்புகொண்டால் மட்டுமே மனம் அடங்கும் அதனால் மனதை கட்டவேண்டிய இடத்தில் கட்டிபோட வேண்டும்* *ஆன்மாவிற்குள் மனதை செலுத்திவிட்டால் ஆன்மா மனத்தை வெளியே விடாது இறுக்கி பிடித்திக் கொள்ளும்.* இதுவே மனத்தை மாற்றும் உளவு எனும் தந்திரமாகும்.


*குரங்கு எங்கு தாவினாலும் அதன் குட்டி விடாமல் குரங்கை கட்டி பிடித்துக் கொள்வதுபோல் ஆன்மாவை மனம் இடைவிடாது கட்டிபிடித்துக் கொள்ள வேண்டும்.*


*வள்ளலார் பாடல்!*


நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்

பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம் ஈந் தாண்ட பதிக்கொடியே

தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த

கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.!  


*ஒரே மனம் பல இடங்களில் பல வகையாக பல குணங்களாக இடத்திற்கு தக்கவாறு செயல்படுகிறது*.*புறத்தில் வெளியே மனம் செல்லும் போது கொடிய மனமாக வெவ்வேறு விதமாக சூழநிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொண்டு செயல்படுகிறது.*

*அதே மனம் சிற்சபையைத் (உள்ஒளியை) தொடர்பு கொள்ளும்போது நல்ல மனமாக நல்ல குணமாக உண்மைத் தன்மையுடன் தன்னை மாற்றிக் கொள்கிறது*


*உலக போகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஆன்மாவின் குணத்திற்கு தக்கவாறு மனம் ஆன்மாவை சார்ந்த வண்ணமாக மாறிவிடுகிறது* 


மனம் ஆன்மாவில் லயித்துவிட்டால் மனிதன் உயர்ந்த இடத்திற்கு செல்லும் வாய்ப்பு உடனடியாக கிடைத்துவிடும்.பொருளைப் பற்றும் மனம் அருளைப்பற்றத் தொடங்கிவிடுகிறது. 


*மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை.* 


*வள்ளலார் பாடல்!*


குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்


பொறித்த மதம் சமயம் எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்


*செறித்திடு *சிற் சபைநடத்தைத்* *தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே* *சத்தியம்சேர்ந் திடுமே.!*  


மேலே கண்ட பாடலில் வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர் சிற்சபையில் நடம்புரியும் சிவமாகும்.

அவற்றை தெரிந்து மனத்தை அங்கே செலுத்த வேண்டும் என்கிறார்.


உலகில் உள்ள பொறித்த சமயங்கள்  மதங்கள் யாவும் மனதை அடக்குவதற்கு தவறான வழிமுறைகளையே சொல்லி உள்ளன ஆகையினால் அவற்றில் உள்ள வழிமுறைகளை எதையும் நம்ப வேண்டாம். அவற்றை குறித்து

தெளிவான உண்மையைச் சொல்லுகிறேன்.

அவைகள் யாவும் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் என்கிறார். உங்களால் எனக்கு ஒருபயனும் வேண்டியதில்லை.எனது மெய் உரையை பொய் உரையாக எண்ணாதீர்கள் தயவு செய்து கேளுங்கள்.


குரங்கு போன்ற மனத்தை நன்மனமாக்க இதுவே நல்ல தருணம் வாருங்கள் என ஆன்மநேயத்தோடு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.


இதுநல்ல தருணம் அருள் செய்ய இதுநல்ல தருணம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அழைக்கிறார்.


மனித மனத்தை நன்மயமாக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் இடைவிடாது தொடர்பு கொண்டு உணர்வுபூர்வமாக  நினைக்கின்றதாலும் தோத்திரம் செய்கின்றதாலும் நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது  விசாரம் செய்வதோடு ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற நன் முயற்சி யுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார். 


 ஆண்டவரை மனத்தினால் தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் கோடிப் பங்கு பத்துகோடிபங்கு அதிகமான சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்கிறார்.


எவ்வாறு எனில்? 


 ஒரு ஜாமநேரம் மனத்தில் இகவிசாரம் இன்றிப் பரவிசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால் நாம் பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம் என்கிறார். 


பெறவேண்டியது எது எனில்? அருள் அருள் அருள்  பெற்றால் மனிதனின் பூத உடம்பு சுத்த பிரணவ ஞானதேகமாக மாற்றம் அடைந்து மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்.


வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கத்தின்  பெருநெறியின்  ஒழுக்கங்களான இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து மனத்தை அகத்தில் தொடர்பு கொண்டு திரைகளை விலக்கி ஞானசபாபதியின் நல் அருளைப் பெறுவோம்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வெள்ளி, 28 ஜனவரி, 2022

முத்துஇராமலிங்கதேவர் !

 வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர் வருவர்.

வழக்கம் போல் தைப்பூசத்தன்று வடலூரில் தேவர் பேசத் தொடங்குவதற்கு முன்பு. முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

"வடலூர் இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் இராமலிங்க அடிகளார் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுவடி இருக்கிறது. அதனை மடத்துக்குத் தந்தால், அச்சில் ஏற்றி நூல் வடிவாக எல்லோரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்" என்றும் "அடிகளாரின் உறவினரிடம் பல தடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்" என்றும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தேவரிடம் கூறினார்.

"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று ஓ.பி.ஆரிடம் கூறிவிட்டு தேவர் பேசத் தொடங்கினார்.

இராமலிங்க அடிகளாரின் அருட்பா பற்றி ஒரு மணி நேரம் பேசிவிட்டு இராமலிங்க அடிகளார் உறவினர் பற்றி, "இராமலிங்க அடிகளார் அவர்களால் பாடப்பட்டு. இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துக் கொண்டு மடத்துக்குத் தர மறுப்பதாகவும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் என்னிடத்திலே சொன்னார்.


அடிகளாரின் உறவினருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக சொல்கிறேன். அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள். அல்லது தாங்களே அச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் தாங்கள் பிடிவாதமாக இருப்பதால். அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும் உலகத்துக்குத் தெரியாமலே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

இதுவரை உலகத்திற்குத் தெரியாமல் நீங்கள் ஒளித்து வைத்திருந்த அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன் கேளுங்கள்" என்று மடைதிறந்த வெள்ளம் போல் மடமடவென அந்த ஒன்பது பாடல்களையும் வெங்கல நாதத்தில் தேவர் பாடி முடித்தார். பாடி முடித்த சிறிது நேரத்தில் இராமலிங்க அடிகளாரின் உறவினர் கையில் அந்த ஏட்டுச் சுவடியோடு வந்து தேவரின் பாதத்தில் விழுந்து வணங்கி, "அய்யா, தாங்கள் தேவரல்ல, தாங்கள்தான் இராமலிங்க சுவாமிகள், என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறி. "தாங்கள் பாடிய ஒன்பது பாடல்கள்தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.

தேவர் அந்தச் சுவடியைப் பெற்றுக் கொண்டு "எல்லாம் ஈசன் செயல்" என்று சொல்லி முடிப்பதற்குள், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் எழுந்து வந்து, தேவர் அவர்களைக் கட்டிப்பிடித்து, அவரது கைகளை எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டு. "இராமலிங்க சுவாமிகளே நீங்கள்தான்" என்று உரக்க சத்தமிட்டுக் கூறியதும் கூடியிருந்த கூட்டம் கரவொலி எழுப்பி பெருத்த ஆரவாரம் செய்தது.

புதன், 26 ஜனவரி, 2022

ஜீவகாருண்யம் என்றால் என்ன ?

 *ஜீவகாருண்யம் என்றால் என்ன ?*


நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்


*ஜீவன் என்றால் உயிர். காருண்யம் என்றால் உயிர் இரக்கம் என்றும் தயவு  என்றும் பொருள்படும்*.



*ஒன்று அன்னிய உயிர்களுக்கு  இம்சை உண்டாகாது (தீங்கு) நடத்தலே ஜீவகாருண்யம் என்பதாகும்.* *மற்றொன்று*

*உயிர்கள் படும் துன்பத்தை கண்ட போதும் துன்பப்படும் என்பதை அறிந்தபோதும் அத்துன்பத்தை போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்.*  


*ஜீவகாருண்யமும் சித்தியும்!* என்னும் தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ளது!


*ஆன்மாக்கள் ஆன்மலாபம் அடைய வேண்டும்*. *ஆன்மலாபம் அடைவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பும் அவருடைய அருளும் வேண்டும்.*


அதற்கு வள்ளலார் பதில் சொல்கிறார்!


*நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும் அவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது* *அவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால் அடைவது அரிது  அந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது துவாரம் யாதெனில்*?


*கடவுள் உடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே சத்விசாரமாகும்* *மேலும் அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்யம் என்பதாகும்* 


*ஜீவர்களுக்கு உண்டாகும் பசி. பிணி. தாகம். இச்சை. எளிமை. பயம். கொலை போன்ற துன்பங்களினால் வருந்துகின்ற போது பொருள் உள்ளவர்கள் அத்துன்பத்தைப் போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்*.. *இதுதான் முத்தி அடைவதற்கும் சித்தி அடைவதற்கும் முதற்படியாக இருக்கின்றது ஆதலால் இதைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் ஜீவகாருண்யம் தவிர வேறு படிகளும் உள்ளன என்கிறார் வள்ளலார்*  


கீழே கண்ட வாக்கியத்தை பலமுறை சிந்தித்து ஊன்றி கவனிக்க வேண்டும்


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய அருளைப் பெறுவதற்கு ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்.


*அடுத்து நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும் என்கிறார்*


*இங்கே சாவி என்கின்ற அருள் பெற்றால் தான் ஆண்டவர் எழுந்தருளி இருக்கும்  கோட்டையின் கதவு திறக்கும் என்கிறார்.அப்படி என்றால் இங்கே அருள் என்னும் சாவி வழங்குபவர் யார் ?  அங்கே அருள் வழங்குபவர் யார்? என்ற கேள்வி எழுகின்றது.* 


*அதற்கும் வள்ளலார் தெளிவான விளக்கத்தை தருகிறார்!*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒவ்வொரு ஆன்மாவிலும் உள் ஒளியாக புறக் கண்களுக்குத் தெரியாமல் இயங்கி கொண்டுள்ளார்*

*மேற்படி கண்களுக்குத் தெரியாமல் ஒரு அகக்கண் உள்ளது ( நெற்றிக்கண் என்பார்கள்) அக் கண்ணைத் திறப்பதற்கு ஒருகதவும் பூட்டும் உள்ளது மேற்படி பூட்டை அருள் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் திறக்கவேண்டு என்கின்றார்.*


*ஆதலால் மேற்படி அருள் என்பது  ஆன்ம இயற்கையால் அடையும் பெருந்தயவாகும். நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் நேரும் அந்த அக அனுபவ உணர்வே அருள் என்னும் சாவியாகும் என்கிறார்* 


*அதாவது நினைந்து நினைந்து. உணர்ந்து உணர்ந்து. நெகிழ்ந்து நெகிழ்ந்து.

அன்பே 

நிறைந்து

நிறைந்து.

ஊற்றெழும் கண்ணீர் அதனால். உடம்பு 

நனைந்து நனைந்து. அருள்அமுதே

நன் நிதியே  ஞான நடத்தரசே என் உரிமை ஞாயகனே என்பதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது வைத்துள்ள தீராத அன்பு (காதல்) அனுபவ  உணர்வாகும்*


மேலும் வள்ளலார் சொல்கிறார் ! 


*மேலும் வள்ளலார் சொல்லியுள்ள உண்மைப் பொதுநெறியான ஜீவகாருண்ய ஒழுக்கம் யாதெனில் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களாகும்* அவை யாதெனில் ? 


*கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக*  *என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை யேற்றி விட்டது யாதெனில்* ? *தயவு. தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது.*


*அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்*


*இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கும் அப்பாலும் கடந்திருக்கிறது அது அந்த "ஒருமையினாலே தான் வந்தது" நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்*  


*மேலும் நான் இங்கே இருக்கின்ற ஜனங்கள் மட்டில் மாத்திரம் அல்ல உலகத்தில் இருக்கின்ற எல்லா ஜனங்களையும் குறித்தே ஆண்டவரிடத்தில் விண்ணபித்துக் கொண்டேன் ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்? எல்லவரும் சகோதரர்கள் ஆதலாலும் இயற்கை உண்மை ஏக தேசங்கள் ஆதலாலும் நான் அங்கனம் "ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வைத்துக்  கொண்டு இருக்கிறேன்" என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.* 


*இதுவே இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கத்தின் முடிந்த முடிபாகும்*


வள்ளலார் பாடல்!


எத்துணையும் பேதமுறாது *எவ்வுயிரும்*

*தம்உயிர்போல் எண்ணி* உள்ளே


ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் *எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன்* அந்த


வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தைமிக விழைந்த தாலோ.!  


எல்லா உயிர்களும்  ஆன்மநேய சகோதர உரிமை உடையது என்று என்னும் உண்மையை உணர்ந்தவர் எவரோ அவருடைய ஆன்மாவில்.

மற்றும் உள்ளத்தில்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கி அருள் நடம் புரிகின்றார் என்பதை அறிந்தவர் எவரோ  அவரே எல்லாம் தெரிந்த *வித்தகர்* என்பவராகும்  அவரையே  அருட்பெருஞ்ஜோதி யாக வணங்கி வழிபடுவேன் என்பதை  பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.


சன்மார்க்கத்தில் உள்ள ஆன்ம நேய சகோதரர்கள் ஒவ்வொருவரும்  எந்நிலையில் உள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 


*ஒவ்வொரு சன்மார்க்க சங்கங்களும் சன்மார்க்க அன்பர்களும் பசியைப் போக்குகிறீர்கள் மகிழ்ச்சியான செயல்தான் (பசிஎன்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக்கருவியாகும் பசி இல்லாமல் எந்த உயிரும் இவ்வுலகில் வாழமுடியாது என்பதும் உண்மைதான் எல்லா உயிர்களுக்கும் இறைவன் எவ்வகையிலாவது பசியைப் போக்குவதும் உண்மைதான் ) பசி என்பதும் ஒருவகையான பிணியாகும் அதனால்தான் அதற்கு பசிப்பிணி என்று  வள்ளலார் பெயர் வைத்துள்ளார். பசிப்பிணியைப் போக்குவதுதான் அடிப்படையான முதன்மையான ஜீவகாருண்யம் ஆகும்.*


*பசியைப் போக்கும் அன்பர்கள் அவரவர்கள் உழைப்பால் வரும் பொருளைக் கொண்டு பசியைப் போக்குகிறீர்களா ? மற்றவர்களிடம் உபயமாக வாங்கி ய பொருளைக் கொண்டு பசியைப் போக்குகிறீர்களா ?  அல்லது சுயநல வியாபார நோக்கத்தோடு பசிப்பிணியை போக்குகிறீர்களா ? என்பதையும் சிந்திக்க வேண்டும்.*


*பொருள் கொடுப்பவர்களுக்கும் பொருள் பெருபவர்களுக்கும். உணவு உண்பவர்களால் எவ்வளவு (சதவீதம்) பங்கு ஆன்மலாபம் கிடைக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்*  


*இயற்கையிலே உண்மையாக  பசிப் பிணியைப் போக்குகின்றவர்களுக்கு பசி எடுக்கபடாது. உணவு உட்கொள்ள விருப்பம் இருக்கபடாது. என்பதுதான் உண்மையான ஜீவ காருண்யம்*


*சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னும் நல் தவம் எல்லாம் ஆற்றிலே கரைத்த புளி எனப்போகும் என்கிறார்*


மேலும் *சோற்றாசையோடு காமச் சேற்றாசை படுவோரை துணிந்து கொல்ல கூற்று ஆசைப்படும் என்கிறார்* 


பசிப்பிணி வராமல் பாதுகாப்பதே ஜீவகாருண்யமாகும் 


உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு

மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே !( அகவல


உடற் பிணியும் உயிர் பிணியும் அருள் என்னும் மருந்தால்தான் போக்கமுடியும்.


*தன்னுடைய பசிப்பிணியை போக்கி உயிரையும் உடம்பையும் அருளைக் கொண்டு அழியாமல் காப்பாற்றுவதே ஜீவகாருண்யம் என்பதாகும்*


*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி! (அகவல்) 


*பிறப்பதையும் இறப்பதையும் தடுக்கவல்லதே ஜீவ காருண்யமாகும்*


*அன்னதானம் வழங்குபவர்களுக்கும் மரணம் வருகிறது உண்பவர்களுக்கும் மரணம் வருகிறது  இது என்ன சன்மார்க்கம் என மக்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு  உள்ளன என்பதையும் சிந்தித்து சன்மார்க்கிகள் செயல்பட வேண்டும் என்பதே வேண்டுகோளாகும்*


*மேலே வள்ளலார் சொல்லியுள்ள ஜீவகாருண்யம் என்றால் என்ன?  என்ன? என்பதையும் ஜீகாருண்ய ஒழுக்கம் என்றால் என்ன? என்ன? என்பதையும் தெளிவாக சொல்லியுள்ளார் அவற்றை முழுமையாக பின்பற்றி வாழ்ந்தால்தான் மோட்ச வீட்டின் திறவுகோல் என்கின்ற அருள் கிடைக்கும்.* 


*மோட்ச வீடு என்பதும் திறவுகோல் என்பதும் வெளியில் எங்கும் இல்லை எல்லாம் நம் உடம்பிற்குள்ளே உள்ளன என்பதை தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு வள்ளலார் சொல்லியவாறு ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும் அருளைப் பெறுவதற்கும் இரண்டே வழிதான் உள்ளன* 

*ஒன்று இயற்கையான ஜீவகாருண்யம். ஒன்று உண்மையான சத்விசாரம் என்பதாகும்*


*இந்த இரண்டு வழியைத்தவிர வேறு சாதி. சமயம். மதங்கள். சித்தர்கள். யோகிகள்.மற்றும் ஆன்மீக போதகர்கள் காட்டிய குறுக்கி வழிகளில் சென்றால் சிறு ஒளி உண்டாகும்  அதனால் பல் இலித்து இருமாந்து கெட நேரிடும். ஆதலால் நமக்கு கிடைக்க வேண்டிய பெரிய ஆன்ம லாபம் கிடைக்காமல் போய்விடும் என்பதை சன்மார்க்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.* 


மேலும் வள்ளலார் சொல்கிறார்! 


*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை மிகவும் அறிவுறுத்துகிறார்*


*ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் செய்யப்படுகின்ற ஞானம். யோகம். தவம். விரதம். ஜெபம். தியானம் முதலிய வைகளைச் செய்கின்றவர்கள் கடவுளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள். அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது என்றும். ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத மாயாஜாலச் செய்கைகளே யாகும் என்றும் அறியவேண்டும் என்கிறார்.*


*நாம் அடைய  வேண்டியது முடிவான ஆன்ம லாபமாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்.* 


*சாகும் கல்வியை அகற்றி சாகாக்கல்வியை கற்றுக் கொடுக்க வந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை நினைவில் வைத்துகொண்டு  சாகாக் கல்வியைக் கற்க வேண்டும்* 


*சாகாதவனே சன்மார்க்கி என்பது வள்ளலாரின் அருள் வாக்காகும்*


*வள்ளலார் பாடல்!*


*கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி*


*உற்றேன் எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்*


*பெற்றேன் உயர்நிலை பெற்றேன் *உலகில் பிறநிலையைப்*


*பற்றேன்** *சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!*


*என்னும் பாடல் மிகவும் அனுபவம் வாய்ந்த வள்ளலார் பெற்ற அறிவியல் சார்ந்த அணு வேதியல் மாற்றம் கண்ட  உண்மையான அருள் ஒளிதேகம்  என்பதை சந்தேகம் உள்ளவர்கள் திருஅருட்பாவை நன்கு படித்து தெளிவு பெற வேண்டும்*


*தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்*

*என்னை வே தித்த என்றனி யன்பே!* (அகவல்)


*ஆன்மாவை மறைத்துக்கொண்டுள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயாதிறைகளை நீக்குவதே சாகாக்கல்வி பயிற்சியாகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

வெள்ளி, 14 ஜனவரி, 2022

சாதி சமய மதங்களைச் சாடிய பாடல்கள்!

 *சாதி சமயம் மதங்களை சாடிய சில பாடல்கள்!* 


*வள்ளலாரைப் போல் சாதி சமயம் மதங்களை சாடியவர் உலகில் எந்த ஞானியும் இல்லை அதிலே சில பாடல்களை உங்கள் பார்வைக்கு!* 


சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்

நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்

நித்திய வாழ்க்கையும் சுகமும்

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதிஎன் !றறிந்தேன்

ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்

உரைப்பதென் அடிக்கடி உனக்கே.!


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே

வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!


சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.!


சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே ! அருள் அற்புதமே !


சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேன டி - அக்கச்சி

சோதியைக் கண்டேனடி.!


சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்

சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!


சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே

சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே

அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே

அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.!


தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.! 


எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!


வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.! 


வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநட நாயகனே.!


இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக

செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!


சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

அதுஇது என்னாமல் ஆடேடி பந்து

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!


பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!


ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்

உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்

வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்

மன்றினை மறந்ததிங் குண்டோ

ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்

ஐயவோ சிறிதும்இங் காற்றேன்

பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்

பரிந்தருள் புரிவதுன் கடனே.!


கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்

ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே

இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே

தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்

பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே

தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே

மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.!


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் 

அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.! 


இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே! 



குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!


மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்

மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ

சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே

சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ

பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்

பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்

சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று

தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.!


எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்

கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்

நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்

செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.! 


 மேலே கண்ட பாடல்கள் தவிர சாதி சமய மதங்களைச் சாடி இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்களை திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார்.

மேலும்  உரைநடைப்பகுதிகளிலும் நிறைய விளக்கங்களும்  சான்றுகளும் உள்ளன படித்து  பயன் பெறுங்கள்.


எல்லா உயிர்களும். இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

புதன், 12 ஜனவரி, 2022

கடவுளுக்கு கை கால் முதலியன இருக்குமா ?

 *கடவுளுக்கு கை கால் முதலியன இருக்குமா ?* 


கடவுளுக்கு மனித உருவம் போல்  கை கால் முதலியன இருக்குமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் சமய மதவாதிகள் விழிக்கின்றார்கள்.


*நாம் இதுவரை பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் முதலிய கலைகளில் தெய்வத்தை  இன்னபடி என்றும் தெய்வத்தின் உண்மை இன்னதென்றும்  கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*


*அணு ( அளவாவது) மாத்திரமேனும் தெரிவிக்காமல்  பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டி உள்ளார்கள் யாதெனில்? கைலாசபதி என்றும். வைகுண்டபதி என்றும். சத்திய லோகாதிபதி என்றும். பரலோகம் என்றும்.சிவலோகம் என்றும். சொர்க்கம் என்றும். நரகம் என்றும். பெயரிட்டு அதற்கு தகுந்தாற்போல் நம்பும்படியாக ஆலயங்களை எழுப்பி அதற்கு தகுந்தாற் போல் பலவிதமான சிலைகளைச் செதுக்கி அவற்றிற்கு தகுந்தாற்போல் பெயரிட்டு இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம  முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்* மேலும் அசுத்தமான நீர்நிலைகளை புண்ணிய ஸ்தலங்களாக தீரத்தங்களாக சொல்லி காட்டி அதில் மூழ்கவும். குளிக்கவும். சாகவும் வழிவகை செய்துள்ளார்கள். உண்மைக்கு புறம்பாக வெளிப்படுத்தி மக்களை  அலைய வைத்து உள்ளார்கள்


கடவுளை நம்புகின்ற ஆன்மீகவாதிகளும் அறிஞர் பெருமக்களும் பிரபஞ்ச அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை உடைய பகுத்தறிவாளர்களும் மேலும் கடவுளைத் தெரிந்து கொள்ள விரும்பும் அறிவு சார்ந்த சான்றோர் பெருமக்களும் *தெய்வத்துக்கு கை கால்கள் முதலியன இருக்குமா ?* என்று கேட்பவர்களுக்கு. தெளிவான பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்.


( *கடவுளை நேரில்  பார்த்து இருந்தால் மட்டுமே கடவுளின் உண்மையை வெளிப்படுத்த முடியும்*)


*மேலே கண்ட  வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் போன்ற கற்பனைக் கதைகளில் கற்பித்த கடவுள்கள்  உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறிந்து கொள்ளாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ( குருடர்கள்போல்) உளறி இருக்கிறார்கள்* ஆதலால் எவற்றையும் நம்ப வேண்டாம் என்கிறார் வள்ளலார்.

  

*ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஒர் வல்லவன் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை* *அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்*


*வள்ளலார் வந்து கடவுளின் உண்மையை நேரிலே கண்டு களித்து கலந்து  வெளிப்படையாக மக்களுக்கு சொல்லியுள்ளார்*

 வள்ளலார் பாடல் !


இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்


வியப்புற வேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்


*உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபைதனிலே*

*ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!*


*மேலே கண்ட பாடலில்.. சமய மதவாதிகள் சொல்லிய பாசங்களோ. குணங்களோ. தத்துவங்களோ எதுவும் இல்லாதவர் கடவுள்* 


*மேலும் செயற்கையானவர் அல்லர் பிறப்பு இறப்பு இல்லாதவர் திரிபுஇல்லாதவர் தீமை ஒன்றும் செய்யாதவர்* *வேண்டுதல் வேண்டாமை  இல்லாதவர் மெய்யே மெய்யாகி  எங்கும் விளங்கி இன்பமயமாய்* *எல்லோருக்கும் பொதுவாய் விளங்குபவர். பஞ்ச பூதங்கள் அற்ற. இரவு பகல் அற்ற  அருட்பெரு வெளியில்  இயற்கை உண்மையாய் விளங்கி எங்குமாய் நிறைந்து இயங்கிக் கொண்டு இருப்பவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்* 


அவர்தான் *தனித்தலைமை பெரும்பதியான தனிக்கடவுள் ஒருவரே*! *என்னும் உண்மையை உலகம் அறிய வெளிப்படுத்துகின்றார்.*


மேலும் ஒருபாடல்!


ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்


அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் *அரும்பெருஞ்சோதியினார்*


என்று கனல் மதிஅகத்தும் புறத்தும் விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்


ஒன்றுறு தாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற *தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!*


என்பதை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி கடவுளின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகின்றார்.


மேலும் ஒரு பாடல் !


*எவ்வுலகில் எவ் எவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே*

*இறைவர்* என்பது அறியாதே இம்மதவாதிகள் தாம்


கவ்வைபெறு *குருடர் கரி கண்டகதை போலே*

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்


நவ்விவிழியாய் இவரோ சிலபுகன்றார் என்றாய்

ஞானநடம் கண்டேன் மெய்த் தேன்அமுதம் உண்டேன்


செவ்வைபெறு *சமரசசன் மார்க்கசங்கந் தனிலே*

*சேர்ந்தேன்*  அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.! 


*மேலே கண்ட பாடலில் எல்லா உலகிற்கும் எல்லா உயிர்களுக்கும் மற்றும்  எல்லா மனிதர்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே உள்ளார் என்ற உண்மைத் தன்மையை அறியாமல்*  *சமய மதவாதிகள் அனைவரும் கண் இல்லாத குருடன் யானையைக் கண்ட கதைபோலே கடவுளுக்கு கை கால் தலை போன்ற உறுப்புக்களை வைத்து பொய்யான கடவுள்களைப் படைத்துள்ளார்கள்*


*அவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொள்ளும் தகுதியோ. அருளைப் பெறும் தகுதியோ. சாகாத நிலையை அடையும் தகுதியோ அவற்றை அடையவோ முடியுமா  என்றால் முடியவே முடியாது என்கின்றார்* 


*நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஞானநடம் கண்டேன்  மெய்த் தேன்போன்று தெவிட்டாத அமுதம் உண்டேன்* *இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தனிலே சேர்ந்தேன் சாகாத கல்விகற்று மரணத்தை வென்றேன் என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றார்* 


*ஆதலால் பொய்யான சமய மதங்களின் தீமொழியில் இருந்து விலகி தேன்மொழியாகிய இறைவன் மொழியில் சேர்ந்து  மரணத்தை வென்று  சுத்த பிரணவ ஞானதேகம் பெற்று என்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டுள்ளேன்*  *நீங்களும் என்போன்று இன்புறலாம்* *எல்லா உலகும் ஏத்திட  வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்* *வாருங்கள் வாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையோடு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.* 


வள்ளலார் பாடல் ! 


கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்

*கதவுதிறந் திடப்பெற்றேன்* *காட்சியெலாம் கண்டேன்*


அடர்கடந்த திருஅமுதம் 

உண்டு அருள்ஒளியால் அனைத்தும்

அறிந்துதெளிந்து அறிவுருவாய் அழியாமை அடைந்தேன்


உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

*உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்*


இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே

*இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!*


*மேலே கண்ட பாடலில் தான் கண்ட இயற்கை உண்மை கடவுளின் காட்சியும்  கதவு  திறந்து அருள் அமுதம் உண்ட அனுபவத்தையும் உடல் குளிர்ந்து உள்ளம் மகிழ்ந்து தழைத்து உயிர்பிரியாமல் என்றும் அழியாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்று. கடவுள் நிலைஅறிந்து அம்மயமாய் விளங்கிகொண்டு உள்ளேன் என்ற உண்மையை தெளிவாக பதிவு செய்கிறார்*


*எனவே மனிதனைப்போல்  கடவுளுக்கு கை கால் தலை போன்ற உறுப்புக்கள் கிடையவே கிடையாது. கடவுள் அருள் ஒளியாக உள்ளார். அதனால் அவருக்கு அருட்பெருஞ்ஜோதி என்று பெயராகும் என்பதை அறிவும் தெளிவும் உள்ள அன்பர்கள் அறிந்து தெரிந்து  புரிந்து கொள்ள வேண்டும்.*


*மனிதன் கடவுள் ஆகலாம் கடவுள் மனிதனாக முடியாது*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நடுக்கடையாக வைத்தவர் !

 *நடுக்கடையாக வைத்தவர் !*


*கடைவிரித்தேன் கொள்வார் இல்லை கட்டிக்கொண்டேன் என்று வள்ளலார் சொல்லியதுபோல் சில மேதாவிகள் மேடைகளில் பேசியும் கட்டுரைகளில் எழுதியும் மக்கள் மத்தியிலே பொய்யான தகவல்களை விதைத்து குழப்பி வருகிறார்கள்.  அதனால் சன்மார்க்கிகள் சோர்வடையத் தேவைஇல்லை* 


*இந்த பொய்யான கருத்துக்களைப் பரப்புவர்கள் அனைவரும் சமய மதவாதிகளாகும் இதுவே அவர்கள் செய்யும் சூழ்ச்சியாகும்.*


காரணம் ! *வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் யாவும் சாதி சமய மதங்களுக்கு எதிரானவையாகும். சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் பின்பற்ற துவங்கிவிட்டால் சாதி சமய மதங்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்பது சரியை கிரியை யோகம் என்னும் பக்தி மார்க்கத்தை சார்ந்த சமய மதவாதிகள் அனைவருக்கும்நன்கு தெரியும்*


 *வள்ளலார் எவ்வளவு உண்மைகள்  சொல்லியும் மக்கள் கேட்கவில்லை. ஆதலால் கடைவிரித்தேன் கொள்வார் இல்லை கட்டிக்கொண்டேன் என்று வள்ளலார் சொல்லி உள்ளார் என்னும் பொய்யான வதந்தியை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்கள்*


*இந்த வார்த்தையோ வாக்கியமோ பாடலோ திருஅருட்பாவில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும்* 


*வள்ளலாரின் பாடல்!*


ஆரண வீதிக் கடையும் - சுத்த

ஆகம வீதிகள் அந்தக் கடையும்


சேர *நடுக்கடை* பாரீர் - 

திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.!

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி  


*என்னும் பாடலிலே சுத்த சன்மார்க்க கடையை எல்லாக் கடைகளுக்கும்  நடுவில் ( மத்தியில்) வைத்துள்ளதாக மிகவும் அழுத்தமாக மேலே கண்ட பாடலில் பதிவு செய்துள்ளார்*


*உலகில் ஆன்மீகம் என்ற பெயரில் பொய்யான கற்பனை கதைகளில் பொய்யான தத்துவ தெய்வங்களை வெளிப்படுத்தி (உருவகப்படுத்தி) நம்பும்படியாக  பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ள சமய மதங்களினால் சொல்லப்பட்டுள்ள ஆரண வீதிக்கடைகளுக்கும். ஆகமவீதி கடைக்களுக்கும் மத்தியில் அதாவது நடுவில் சுத்த சன்மார்க்க கடையை வைத்துள்ளேன் என்பதை தெளிவாக தெரியப்படுத்துகின்றார்*.


*சுத்த சன்மார்க்க நடுக் கடையை சுற்றியுள்ள சமய மதங்களினால் ஜோடிக்கப்பட்ட கடைகள் யாவும் அதிவேகப் புயலால் கடல் சீற்றத்தால் நான்கு புறமும் உள்ள கடல்களின் உள்ளே இழுத்துக்கொள்ளும் மீண்டும் வெளியே வந்து தலைகாட்ட முடியாமல் அழிந்துவிடும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க செய்தியாகும்.*


*நடு்க்கடையாக வைத்துள்ள சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகம் எங்கும் தழைத்து ஓங்கும் என்கிறார்.*


வள்ளலார் சொல்லுவதை பாருங்கள்!


*சன்மார்க்கப் பெரும்பதி வருகை !*


பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம் 12 ம் தேதி – 12 .4 . 1871 ஆம் நாள் வெளியிட்டது.


*சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை . தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும்* 


*பலவகைப்பட்ட சமய பேதங் களும் ,சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும் , ஆசார பேதங் களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் . *அது கடவுள் சம்மதம் . இது 29 மாதத்திற்கு மேல்*


*இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கா்த்தா்கள் , மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல* 


*இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத் தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதி  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே!.*


*இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை . பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள் அஞ்சவேண்டாம்* 


மேலே கண்டவாறு தெரிவித்துள்ள வள்ளலார் கடையை கட்டிக் கொள்வாரா ? *நடுக்கடையாக வைத்துள்ளார்* என்பதை சிந்திக்க வேண்டும். 


*வள்ளலார் பாடல்!*


சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே


*வெல்லுகின்ற வார்த்தைஅன்றி* *வெறும்வார்த்தை என்வாய்*

*விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்*


செல்லுகின்ற படியே நீ காண்பாய் இத்தினத்தே

தேமொழி அப் போதெனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்


ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடி நான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.! 


*வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தை என்வாய் விளம்பாது என்கிறார் அதன் அர்த்தம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என் உள் இருந்து இசைக்கின்றார்* *எனவே நான் உரைக்கும் வார்த்தை எல்லாம்- நாயகன்தன் வார்த்தை அதனால் பொய் என்பதற்கு இங்கு இடமே இல்லை என்கிறார்*


*புரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் தெளிந்து கொள்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வெள்ளி, 7 ஜனவரி, 2022

கருணை உள்ளவன் கடவுள் ஆகலாம்!

 *கருணை உள்ளவன் கடவுள் ஆகலாம்!*


எங்கே கருணை இயற்கையில் உள்ளன

அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே! ( அகவல்) 


*அளவிடமுடியாத பலகோடி உலகங்களையும் பலகோடி அண்டங்களையும் தோற்றுவித்தும். விளக்கம்செய்வித்தும். துரிசுநீக்குவித்தும். பக்குவம்வருவித்தும். பலன்தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உள்ளார் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை ஐயம் திரிபு மயக்கம்  இல்லாமல் அறிந்து கொண்டேன்.*


*கற்பனைக்கதைகளைச் சொல்லாமல் கடவுளின் உண்மையை மக்களுக்கு நேரடியாக உள்ளதை உள்ளபடி தெரிவித்தவர் வள்ளலார் ஒருவரே !*


*அந்த உண்மைக்கடவுளை அறிந்து தெரிந்து கொள்வதற்கும் தொடர்பு கொள்வதற்கும் கருணைத்தான் முக்கிய சாதனமாகும் அதுவே கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் நேரடியான பாலமாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்* 


கருணை இல்லாமல் செய்யப்படுகின்ற சரியை கிரியை யோகம் போன்ற சாதனங்களால் சாதனைகள் செய்து உடம்பை வருத்தி கெடுத்து பல வருடங்களாக காடு மலை குகைகளில் சென்று பக்தி தவம் தியானம் யோகம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் செய்வதால் எக்காலத்திலும் கடவுளைக்  காணமுடியாது அருளைப் பெறமுடியாது.

கருணை ஒன்றினால் மட்டுமே உயர்ந்த அருள் அறிவான ஞானத்தை பெற்று கடவுளைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக்கள் தன்னைத்தானே உண்டாகும். 


வள்ளலார் பாடல்! 


கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்

காடு மேடு 

உழன்று உளம் மெலிந் தந்தோ


வருண நின்புடை வந்து நிற் கின்றேன்

வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்


அருணன் என்றெனை அகற்றிடுவாயேல்

ஐயவோ துணை அறிந்திலன் இதுவே


தருணம் எற்ப அருள்வாய் வடல் அரசே

சத்தியச்சபைத் தனிபெரும் பதியே.! 


மேலும் வள்ளலார் கடவுளிடம் வேண்டுதல் !


கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்


தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும் வன் புலைகொலை இரண்டும்


ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே


மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண்எந்தாய்.!


கடவுளைத் தெரிந்து கொள்வதற்கும்  அருளைப் பெறுவதற்கும் கடவுளின் புகழை உலக மக்களுக்கு தெரிவிக்கவும் கடவுளால் படைத்தை உயிர்களுக்கு எந்தவிதமான துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் உண்டாக்காமல் அனைத்து உயிர்களிடத்தும் உண்மையான அன்பு செலுத்தி மகிழ்ச்சி அடையச் செய்விக்க வேண்டும் அதற்கு கருணைதான் முக்கியம் சாதனம்  என்பதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் எனவே என்னை  கருணை நன்முயற்சியில் செல்ல வழிகாட்ட வேண்டும் அதுவே எனது இச்சையாகும் (விருப்பம்) என்கிறார்.


*ஒவ்வொருவரும்  தன்னைப் படைத்த கடவுளை தெரிந்து கொள்வதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கடவுளால் கொடுக்கப்பட்டுஉள்ளதாகும்* 


கடவுளின் பெருமையும் தரத்தையும் கீழே கண்ட பாடலில் தெரிவிக்கின்றார்.


*வள்ளலார் பாடல்!*


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்


வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்


சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.! 


*மேலே கண்ட பாடலில் எளிய தமிழில் எதார்த்தமாக புரியும்படி தெளிபடுத்துகிறார். கடவுள் யார்! என்பதையும் மனித தேகத்தில் எவ்வாறு விளங்குகின்றார் என்பதையும் தெரியப்படுத்துகிறார். அவர் *தாயாகவும் தந்தையாகவும் நமது சிரநடு சிற்சபையில் தனித்து விளங்கும் ஆன்ம  ஒளியின் உள் ஒளியாக  நிலைபெற்று அருள் நடம்புரியும்  கருணை நிதிக் கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் அவர்தான் தன்னிகர் இல்லாத தனித்தலைமை பெரும்பதியாகும் அவரே தனிப்பெருங்கருணை உள்ள கடவுளாகும்.*


*அக்கருணை உள்ள கடவுளை தொடர்பு கொள்வதற்கு கருணைதான் முக்கியம்.* *கருணையைத் தொடர்பு கொள்ள கருணையினால் மட்டுமே முடியும் என்னும் உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.*


*வள்ளலார் பாடல்!*


கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுக மற் றெல்லாம்


மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்


இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்


தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.! 


*கருணை நெறி செல்லாமல் வேறு எந்த நெறியில் சென்றாலும் அது இருள் நெறி என்பதை அறிந்து மனம் கலங்கினேன் மேலும் மாயையால் கலங்கி  வருந்தியபோதும் சிறுநெறியில் சென்றபோதும் சிறுநெறி பிடித்ததில்லை அருள் நெறியையே தேடினேன் அருள் நெறியே பிடித்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்* 


கருணையும் 

சிவமும் பொருள் எனக் காணும் காட்சியைக் கண்டேன் என்கிறார். கருணையும் சிவமும் ஒன்றே என்கிறார்.சிவம் என்பது ஆலய வழிபாட்டில் உள்ள சிவன் என்னும் சிலைஉருவம் அல்ல. இங்கே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையே சிவம் என்கிறார் மேலும் சுத்தசிவம் என்று புரிய வைக்கிறார்.

*சிவன்* என்றால் உருவத்தை குறிக்கும்.*சிவம்* என்றால் ஒளியை குறிக்கும். 


*ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும். அன்பு உண்டானால் தயவு உண்டாகும். தயவு உண்டானால் கருணை உண்டாகும். கருணை உண்டானால் அருள் உண்டாகும். அருள் உண்டானால் மரணத்தை வெல்லலாம். மரணத்தை வென்றால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்*


*கருணை என்னும் ஞானத்தை பெறுவதற்கு ஜீவகாருண்யமே முதற்படியாகும்.*

*கடவுளைத் தொடர்பு கொள்வதற்கு இடைவிடாத நன்முயற்சி என்னும் சத்விசாரம் கடைசிபடியாகும்.*


கருணை அடைவதற்கு இந்த இரண்டு படிகளும் மிகவும் முக்கியமாகும்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

புதன், 5 ஜனவரி, 2022

கிளிப்பிள்ளை வாழ்க்கை !

 *கிளிப்பிள்ளை வாழ்க்கை !* 


*மனித வாழ்க்கை என்பது அறிவு சார்ந்த அருள் சார்ந்த புனிதமான  ஒப்பற்ற உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கே எடுக்கப்பட்ட. கொடுக்கப்பட்ட. படைக்கப்பட்ட தேகமே

மனித தேகமாகும்*


*தன்னுடைய அகத்தில் உள்ள ஆன்ம அறிவை அருள் அறிவைப் பயன்படுத்த தெரியாமல் மற்றவர்கள் எழுதி வைத்துள்ள கலைஉரைத்த கற்பனைக் கதைகளின் மூடநம்பிக்கையில் சிக்கி அவற்றில் உள்ள கருத்துக்களை  சிற்றறிவான மனம் புத்தி சித்தம் அகங்காரங்களை மட்டும் பயன்படுத்தி  பின்தொடர்ந்து படித்து கேட்டு சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளைப் போல் மனிதர்கள் தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக வீண்வாழ்க்கை வாழ்ந்து மரணம் அடைந்து கொண்டே வந்துள்ளார்கள்* 


*உலகில் தோன்றிய  ஞானிகளில் பலர் மனித உடம்பின் உள்ளே இயங்கும் தத்துவ  உருப்புக்களை   கலைகளாக பாவித்து பல உருவங்களாக  படைத்து பல கடவுள்களாக சித்தரித்து. பல பெயர்களை வைத்து. பல கோணங்களில் பலவிதமான  கற்பனை காவியங்களாக  கற்பனை கதைகளாக படைத்திருக்கிறார்கள் அதிலே முக்கியமானது வேதங்கள். ஆகமங்கள். புராணங்கள். இதிகாசங்கள் சாத்திரங்கள் என்பவைகளாகும்* 


*இவைகள் யாவும் உண்மைக்கு புறம்பானவைகளாகும்.உண்மைக்கு புறம்பான சொற்பொருள்கள் மற்றும் இலக்கண  இலக்கியங்கள் மற்றும் காவியங்கள் கதைகள். காவியங்களினால் புனைக்கப்படும் கற்பனைக் கதைகள்.அக்கதைகளில்  படைக்கப்பட்ட*

*கதாபாத்திரங்கள் யாவும் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளாகும்* 


*அந்த பொய்யான  காவியங்களையும் கதைகளையும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் யாவையும். உண்மையாக இருந்தது போலவும் நடந்தது போலவும் வாழ்ந்தது போலவும்  சித்தரித்து படைத்துவைத்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்* 


*அதற்கு தகுந்தாற்போல் புறத்தில் இடம். வாகனம். ஆயுதம். வடிவம். ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.* 


*ஆதலால் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம். ஆகமம். புராணம். இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று மிகவும் அழுத்தமாக சொல்கிறார் வள்ளலார்*


*கற்பனை காவியங்கள் படைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் இரண்டு முனிவர்கள். மகாபாரதம் எழுதிய வேதவியாசர் என்கின்ற முனிவர் ஒருவர்*

*இராமாயணம் எழுதிய வால்மீகி என்கின்ற முனிவர் ஒருவர்*மற்றும் சிறிய பெரிய சித்தர்கள் யோகிகள் மற்றும் ஏசு.நபிகள்.புத்தர் போன்ற ஆன்மீக போதகர்கள் குருமார்கள் அவர்களுடைய சீடர்கள் மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் போன்றவர்களும்  மற்றும் மன்னர்கள் அரசர்கள் மந்திரிகள் ஆட்சியாளர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான கற்பனை கதைகளை நிலை எனக்  கொண்டாடி மகிழ்ந்து உலகம் முழுவதும் விதைத்து மக்களை நம்பும்படி செய்துவைத்து விட்டார்கள் இன்னும் உலகம் முழுவதும் விதைத்து கொண்டே உள்ளார்கள்*


இதைத்தான் வள்ளலார் சொல்லுகிறார்.


*ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை*

*அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை  இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்*

*அதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் பொய்யர்களின் புழுகு மூட்டைகளை உடைத்து எரிந்துவிட்டேன் என்பதாகும்*


*உயர்ந்த மெத்த படித்தவர்கள் முதல் படிக்காத மாமரர்கள் வரை தங்களுடைய அறிவையும் அருளையும் பயன் படுத்த தெரியாமல் மனம் புத்தி சித்தம் அகங்காரத்தின் துணைகொண்டு குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் செம்மரி ஆடுகளின் கூட்டம்போல் மந்தை மந்தைகளாக சாரை சாரைகளாக பலபல பிரிவுகளாக தனித்து தனித்து கூட்டங்களாக பிரிந்து வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்*


*இன்று சாதி சமயம் மதம் போன்ற தீராத தொற்று நோய்கள் அதாவது கொரோனோ மற்றும் ஒமேக்கிறான் தொற்று போல் உலகம் முழுவதும் மக்களை பிடித்துக் கொண்டு்ம்  பேயாட்டம் ஆட்டிக்கொண்டும் வதைப்பதற்கு  காரண காரியமே உலகில் உள்ள கற்பனை கதைகளினால் உருவான சாதி சமயம் மதங்களேயாகும்*

*கதைகளில் வரும் தெய்வங்கள் உண்மை என்றால் உலகத்தையே ஆட்டி படைத்து பிடித்துக் கொண்டு இருக்கும் கிருமித் தொற்றை உலகை விட்டு அகற்றி மக்களைக் காப்பாற்றி இருக்கவேண்டும்*


இப்போது எல்லோரும் பொய்யான கதைகளைச் சொல்லியும் எழுதியும் மேலும் மக்களை குழப்பிக்கொண்டே வருகிறார்கள்.


*வள்ளலார் பாடல்!*


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

*கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக*


மலைவறு *சன் மார்க்கம் ஒன்றே* நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதி *யருள் வழங்கினைஎன் தனக்கே*


உலைவறும் இப் பொழுதே நல் தருணம் என நீயே

உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநாயகனே.!


என்றும் மேலும்


வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்


*ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி*

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே


ஏதமற உணர்ந்தனன் வீண் போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே


தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகாமணியே என் திருநடநா யகனே.! 


என்றும் மேலும் 


வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - 


*சூதாகச்*

*சொன்னவலால்*உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை*

என்ன பயனோ இவை.!


*மேலே கண்ட பாடல்களில் வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் இவை முதலான அனைத்தும் சூதாக சொல்லி உள்ளதே தவிர உண்மையை வெளிப்படையாக எவையும் சொல்லவில்லை* *ஆகையினால் இவைகளால் மக்களுக்கு எந்த வகையிலும் லாபமும் இல்லை. பயனும் இல்லை இவைகளை இனிமேலும் விட்டு வைத்தால் உலகத்தையே அழித்துவிடும் அதனால் இவைகளை வரண்டுபோன புன்செய் நிலத்தில் ஆழமான குழியைத் தோண்டி இருக்கும் இடம் தெரியாமல் புதைத்துவிட வேண்டும் என்கிறார் வள்ளலார்.* 


*வள்ளலார் பாடல்!*


*இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை*

*இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு*


*மருட்சாதி சமயங்கள்* *மதங்கள்  ஆச்சிரம*

*வழக்கெலாம்* *குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்*


தெருட்சாருஞ் *சுத்தசன் மார்க்க நன்னீதி*

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்


அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதி என் ஆண்டவர் நீரே! 


மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் சாதி சமய மதங்களை தோற்றுவித்த பொய்யர்களின் சூதுகளையும் சூழ்ச்சிகளையும் வெளிச்சம் போட்டு முகமூடிகளை கழட்டி எரிந்துள்ளார் வள்ளலார்.


இனி உலகமக்கள் யாவரும் வெளிப்படையான உண்மையை தெரிந்து அறிந்து புரிந்து. மனித நேயத்தையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையையும் கடைபிடித்து எக்காலமும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு பொதுவான புதிய தனிநெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* எனும் இயற்கை உண்மை நெறியைப் பின்பற்றி இயற்கை இன்பத்தை தருகின்ற இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு    அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

பொய் பேசுகிறவர்கள் !

 *பொய் பேசுகிறவர்கள் !*


*கடவுள் இல்லை என்பவனும் பொய் பேசுகிறான் கடவுள் உண்டு என்பவனும் பொய் பேசுகிறான்.*


*ஆத்தீக பொய்யர்களுக்கு  வள்ளலார்பாடல்!*


*தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்*

சேர்கதி பலபல செப்புகின் றாரும்


*பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்*

*பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்*


மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்


எய்வந்த துன்பொழித்து  *அவர்க்கு அறிவு அருள்வீர்*

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந்தீரே.! 


*மேலே கண்ட பாடலில் கடவுள் பல உண்டு என்று வெளியில் தேடுபவர்கள் அறிவு விளக்கம் விளங்காத  பொய்யர்கள்.அவர்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.*

*மேலும் மேல்விளைவு என்னவென்று அறியாமல் வீணாக வாழ்க்கையை அழித்துக் கொண்டு உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.*


*கடவுள் இல்லை என்ற  பொய்யர்களுக்கு வள்ளலார் பாடல்!*


நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் *நாறிய*

*பிண்ணாக்கு*! என்கிறார்.


*மேலே கண்ட பாடலில் கடவுள் இல்லை என்பவர்கள் நாக்கு ருசி கொள்வது நாறிய பிண்ணாக்கு உண்பதற்கு சமம் என்கிறார்* நாறிய பிண்ணாக்கு என்பது துர்நாற்றம் உள்ள *மலம்* என்பதாகும்.

மலம் திண்பதற்கு சமம் என்கின்ற வகையில் கடவுள் இல்லை என்பவர்களையும் சாடுகிறார் 


*கடவுள் இல்லை என்பவனும் பொய் பேசுகிறான் கடவுள் உண்டு என்பவனும் பொய் பேசுகிறான்.*


*தன்னை இயக்கிக் கொண்டு உள்ளவர் கடவுள் என்பது தெரியாமல்  இல்லை என்று சொல்கிறான் நாத்திகவாதி.*


*தன்னுள் இருக்கும் கடவுளைத் தெரிந்து கொள்ளாமல் கடவுளை வெளியில் தேடுபவன் அறிவு விளக்கம் பெறாத ஆத்தீகவாதி என்பவனாகும்*


*இருதரப்பினரும் பொய்யர்களே என்பதை வெளிப்படையாக சாடுகிறார் வள்ளலார்* 


*உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது*

 *நம் சிரநடு சிற்சபையில் ஆன்ம ஒளியாக இயங்கிகொண்டு இருக்கும் உள் ஒளியே கடவுளின் இயற்கை உண்மை விளக்கம் என்பதை அறிந்து  சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் பெற்றிடலாம் என்கிறார்*.


*வள்ளலார் பாடல்!*


குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்


பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்


*செறித்திடுசிற் சபைநடத்தைத்* *தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!*


மேலே கண்ட பாடலில் உண்மையான கடவுள் யார்? என்று தெரியாமல் பேய் பிடித்த மனம் போல் தேடித்தேடி புறத்தில் அலைகின்றீர்கள் மேலும் *கடவுளைப் பற்றி பேசுகின்ற மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்* என்கிறார். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896