சனி, 29 ஏப்ரல், 2023

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்!

 *வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்!*


*இறைவனால் வருவிக்க உற்றவர் என்றால் ?* 


*ஆண் பெண் உடல் உறவு கொண்டு, சிற்றின்ப உணர்ச்சியல் வரும் விந்து விளக்கத்தால் உற்பத்தியாகும் கருமுட்டைகளின் கூட்டுறவின் மூலமாக உயிர் உடம்பு கொடுத்து பிறப்பு எடுத்தவர் வள்ளல்பெருமான் அல்ல !*


*வள்ளல்பெருமான் இராமய்யாவிற்கும் சின்னம்மைக்கும் உண்டான சிற்றின்ப  உணர்ச்சியால் பிறந்தவர் அல்ல* *ஆனாலும் சின்னம்மை வயிற்றின்  கருவறையில் உடம்பு எடுத்தவர் வள்ளலார் என்ற உண்மையை அறிந்து கொள்வது சிறப்பானதாகும்* 


*வள்ளலார் சொல்லும் உண்மையை கவனிக்கவும்!*


கலை


*பெண்பாகத்தில் கலை 4, ஆண்பாகத்தில் கலை 3, ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும்,*

*இது சாதாரண உலகியல் வாழ்க்கையில் உயிர் உடம்பு எடுத்து வாழும் "அபக்குவ பக்குவா" ஆன்மாக்களின் வாழ்க்கை முறையாகும்*


*சிருஷ்டி வகை* *பற்றி வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்கவும்*


*சிருஷ்டிவகை 5:*


 *1.அணுபக்ஷம், 2,பரமாணுபக்ஷம், 3,சம்புபக்ஷம், 4,விபுபக்ஷம், 5,பிரகிருதிபக்ஷம்.என ஐந்து வகையான பிறப்பு ஆன்மாக்களுக்கு கொடுக்கப் படுகிறது.* 


*இவற்றில் சம்புபட்சம்,  விபுபட்சம் தவிர மற்றவைகளுக்குப் பக்குவம் அபக்குவம் உண்டு. அணுபக்ஷத்தில் அபக்குவ சிருஷ்டியாவது, ஓஷதிகளையும், பவுதிகங்களையும் உள்ளுக்குக் கொடுத்து, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தோடு பிரஜோத்பத்தி செய்வது;* 


*பக்குவ சிருஷ்டி புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பதுபோல் அஸ்தத்தால் தடவி ஊன்றிப் பார்த்து, தேக சம்பந்தம் செய்து ஸந்தானத்தை உண்டாக்குவது. பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டியாவது புருஷன் தேகத்தைத் தடவிப்பார்த்த உடனே கருத்தரித்தல்; பரமாணுபக்ஷ பக்குவ சிருஷ்டியாவது கண்ணால் பார்த்தவுடன் கருத்தரித்தல். சம்புபட்சம், அபக்குவ சிருஷ்டி வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல்.* 


*சம்புபக்ஷ* *பக்குவ சிருஷ்டியாவது சங்கற்பித்த மூன்றே முக்கால் நாழிகைக்குள் கருத்தரித்துக் கீழே பிண்டம் வெளிப்படல்.* 


*விபுபக்ஷமாவது பார்த்தவுடன் திருண முதலானவற்றை மனுஷ’யனாகச் செய்து, அதில் அனேக விசித்திரங்கள் செய்தல்.*


*பிரகிருதி பக்ஷம்?*

 *மும்மலபேதமும் சிருட்டியும்*


*ஆணவம் மாயை கன்மம் என மலம் மூன்று. இதில் பக்குவம் 3, அபக்குவம் 3 - ஆக 6. இவை ஒவ்வொன்றும் மும்மூன்றாக விரிதலின் 18 ஆம். இந்தக் கன்ம பேதத்தால் அருட்சத்தியின் சமுகத்தில் எழுவகைத் தோற்ற முண்டானது.* 


*மேற்படி கன்ம மலத்தால் சிருட்டி உண்டாகும் விவரம் ஒருவாறு:-* 


*பக்குவ ஆணவம், பக்குவமாயை - இவ் இரண்டினாலும் விஞ்ஞான கலாபேதம்.*

 *அபக்குவ மாயை, அபக்குவ கன்மம், அபக்குவ ஆணவம் கூடிய தேவ நரக பைசாசங்கள்.* 


*பக்குவ மாயை, அபக்குவ கன்மம் கூடியது ஜீவர்கள்.* 


*அபக்குவகன்மம், அபக்குவ கன்ம ஆணவம், அபக்குவ கன்ம மாயை - இவை கூடியது தாவர உயிர்கள்.* 


*இதை விரிக்கில் பெருகும்.*


*ஆணவம், மாயை, கன்மம் - இம்மூன்றில் பக்குவம் 3, அபக்குவம் 3 ஆக 6-ல் ஒவ்வொன்றில் மும்மூன்றாக விரிந்தவை 18.* 


*பக்குவ ஆணவம், பக்குவ மாயை யிவ்விரண்டும் தனித்து நிற்பது விஞ்ஞானகலர்.* 


*சுரநரக பைசாசங்கள் அபக்குவ மாயை அபக்குவ கன்மம் அபக்குவ ஆணவம் கூடித் தடித்தது.* 


*ஜீவர்கள் பக்குவ மாயை அபக்குவ கன்மம்.* 


*தாவரங்கள் அபக்குவ கன்மம், அபக்குவ மாயை, அபக்குவ ஆணவம்.*


*இப்படி ஐந்து வகையான பிறப்புக்கள் ஆன்மாக்களுக்கு உண்டு.*


*இந்த மனித தேகம் எடுத்த உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்கள்,அறியாமையினாலும் அஞ்ஞானத்தாலும் இறைவனை தொடர்பு கொள்ள முடியாமலும்  அருளைப் பெற முடியாமலும் மரணத்தை வெல்ல முடியாமலும் இறந்த இறந்து,பிறந்து பிறந்து இவ்வுலகில் தொடர்ந்து எதாவது ஒரு பிறப்பு எடுத்து வாழ்ந்து கொண்டே உள்ளது*


*உயர்ந்த மனிதப்பிறப்பே இறைவன் அருளைப் பெறுவதற்காகவே இறுதி பிறப்பாக கொடுக்கப் பட்டுள்ளது.*


*அவ்வாறு அறியாமல் வாழும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்திற்கு நல்வழி காட்டவும் அருள் பெறவும், இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும்.இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்ற பக்குவ ஆன்மாதான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*வள்ளலார் பிறப்பு !*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிவனடியார் வேடம் பூண்டு, கடலூர் மாவட்டம்,சிதம்பரம் வட்டம் மருதூர் என்னும் கிராமத்தில்  வசித்துவந்த கிராம கணக்கர் இராமய்யா அவர்களின் துணைவியார் சின்னம்மையைத் தேடிச். சென்று சந்தித்து பசிப்பதுபோல்  உணவு கேட்டு, உணவு அருந்திவிட்டு, சின்னம்மையை பார்த்து,அகம் கருத்து புறம் வெளுத்து வாழ்கின்ற உலக மக்களைத் திருத்துவதற்கு ஒரு ஞானக் குழந்தை உமக்கு பிறக்கும் என்று வாக்கால் சொன்னவுடன் கரு தரித்தவர்தான் இராமலிங்கம் என்னும் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்* 


*இதற்கு சம்பு பட்சம் என்பதாகும்.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நேரிடையாக  பார்த்து வாக்கால் சொன்னவுடன்,பூரண அருளால் பிறந்தவர் என்பதால் ஓதாது எல்லாவற்றையும் உணர்ந்தவராக திகழ்ந்தார், மனிதனாக பிறந்து இப்படித்தான் வாழ்ந்து அருளைப்பெற வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்தான் வள்ளலார்.*


*வள்ளலார் பாடல்!*


ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி!


ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்

ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி!


ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான்!


கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே கண்டதும் நின்னிடத்தே  உட் கொண்டதும் நின்னிடத்தே பெற்றதும் நின்னிடத்தே  இன்புற்றதும் நின்னிடத்தே !


உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி தீது நெறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்துத் திரு அருண் மெய்ப் நெறியில் செலுத்தினாய் ! 


ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச் செய் உறவு!


*என்றும் தெளிவுப் படுத்துகின்றார்_ நாம் அனைவரும்_ அருள் பூரணம் பெற்ற வள்ளலார் வாழ்ந்து காட்டியவாறு வாழ்ந்தால் மட்டுமே,பூரண திருவருள் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.*


*வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் பிறந்தவர் அல்ல என்பதையும் சன்மார்க்கிகள் அறிந்து கொள்ள வேண்டும்.*


*வள்ளலார் இறைவனால் அனுப்பிய ஒரு தனிப்பிறவியாகும்*


தொடரும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர்  ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

புதன், 19 ஏப்ரல், 2023

இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம்!

 *இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம்!* 


*என் மார்க்கம் இறப்பு ஒழிக்கம் சன்மார்க்கம் தானே என்று வள்ளலார் திருஅருட்பாவில் பதிவு செய்கின்றார்.*


*வள்ளலார் பாடல்!*


உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்


கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும் சம் மதமோ


சற்றும் இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடுமின்

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!


*வள்ளலார் தோற்றுவித்த மார்க்கம் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்னும் தனி மார்க்கமாகும்*


*வள்ளலார் பாடல்!* 


திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மை உரைத் தேனே.!


*இந்த மார்க்கம் சமய மதங்களை சார்ந்த சரியை,கிரியை,யோகம் சார்ந்த மார்க்கம் அல்ல ! சாகாக்கல்வியை போதிக்கும் ஞான மார்க்கமாகும்.சமய மதங்களைச் சார்ந்தவர்கள் இந்த மார்க்கத்தில் வந்து சேரலாம்,சேர்ந்து விட்டபிறகு சமய மதங்களை முற்றும் பற்று அற விட்டு விட்டு  வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை மட்டும் முழுமையாக கடைபிடிக்க  வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி சொல்லி உள்ளார்* 


*மரணத்தை வெல்ல எவராலும் முடியவில்லை !*


*இதுநாள் வரை மரணத்தை வெல்ல எவராலும் முடியவில்லை என்ற குற்றசாட்டு மக்கள் மத்தியில் கேள்வி கனைகளாக கேட்கப்படுகிறது.பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்*


காரணம்! 


*இங்கு உள்ளவர்கள் எவரும் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கவில்லை.சமய மதங்களை சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள், ஒன்றுகிடக்க ஒன்றை உளறிக்கொண்டே உள்ளார்கள். ஆதலால் அவர்களுக்கு அறிவு விளக்கமும், ஆன்ம விளக்கமும், அருள் விளக்கமும், கடவுள் விளக்கமும்  தோன்றாமல் அறியாமை, அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால் மறைக்கப்பட்டு இருக்கின்றது,சாதி சமய மதங்களின் கொள்கைகளை  விட்டு விலகி சுத்த சன்மார்க்க கொள்கையை மட்டும் பின்பற்றினால்.அறிவு விளக்கம்,ஆன்ம விளக்கம்,அருள்விளக்கம்,கடவுள் விளக்கம் தன்னைத்தானே விளங்கும்.அப்போது பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்.*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!* 


*வள்ளலார் சொல்லியதை தினமும் படித்தும் கேட்டும் வருகிறோம், எவரும் பினபற்றாமல் உலக வாழ்க்கையிலே  நீந்திக் கொண்டே உள்ளோம்.ஆதலால் மரணம் என்னும் பெரும்பாவி வந்து கொண்டே உள்ளன.* 


*சுத்த சன்மார்கத்திற்கு உரியவர்கள்!*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*!


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.* 


*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.!* 


*இந்த உண்மையை அறிந்து வாழ்க்கையில்  கடைபிடிப்பவர்களால் மட்டுமே மரணத்தை வெல்லமுடியும்,*


*சுத்த சன்மார்க்க சாதனம்!*


சுத்த சன்மார்க்க சாதனம்


*சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்: பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது.* 


*சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று ( சுத்ததேகம், பிரணவதேகம்,ஞானதேகம்) தேகங்களைப் பெற வேண்டும்.!*


*சாகாத்தலை.வேகாக்கால்,போகாப்புனல் என்பது சுத்த சன்மார்க்க  சாகாக்கல்வி பயிற்சியாகும்இது சாதாரண பயிற்சி அல்ல,அதி தீவிர பெருமுயற்சியான பயிற்சி வேண்டும். அதாவது ஆன்மாவே கோடி சூரிய பிரகாச உஷ்ணம் உடையது. அந்த உஷ்ணத்தைவிட அதிக உஷ்ணத்தை உடையது அருள் உஷ்ணம்.(சுத்த உஷ்ணம்) அந்த உஷ்ணத்தை தாங்கும் அளவிற்கு உடம்பை மாற்றம் செய்ய வேண்டும்*


*இயற்கை உண்மை கடவுளின்,இயற்கை விளக்கமான அருள் பிரகாசத்தின் உஷ்ணத்தை சுத்த சன்மார்க்கிகள்  பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக அதாவது வேதியல் மாற்றம் போல் உருமாற்றம் செய்ய வேண்டும். அவற்றை தாங்கும் சக்தி பெற வேண்டும். அதுதான் ஒளி உடம்பு என்பதாகும். அதன் பின்புதான் இயற்கை இன்பமான கடவுள் நிலை அறிந்து ( ஞானதேகம்) அம்மயமாக மாறமுடியும் இதுவே மரணத்தை வெல்லும் நேர் வழிகளாகும்*


சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!


சாதியு மதமுஞ் சமயமுங் காணா

ஆதியநாதியா மருட்பெருஞ் ஜோதி!


சாதி சமயச் சழக்கைவிட் டேன் அருட்

சோதியைக் கண்டேனடி - அக்கச்சி அருள்

சோதியைக் கண்டேனடி.!


சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

மேதினியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்! அற்புதமே ! அருள் அற்புதம் அற்புதமே !


தொடரும்...


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன்

*முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வியாழன், 13 ஏப்ரல், 2023

அறிவும் அருளும் தமிழும்!

 *அறிவும் அருளும் தமிழும் !*


*அறிவும் அருளும் தமிழும் மனித தேகத்திற்கு மட்டுமே இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளன !*


*அறிவு விளக்கமும் அருள் விளக்கமும், தமிழ் விளக்கமும் இல்லை என்றால் மனித பிறப்பு எடுத்து எந்த பயனும் இல்லை என்றே சொல்லலாம்* 


*கடவுளால் படைக்கப்பட்ட  படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப்படைப்பாகும் அதனால்தான்உயர்ந்த அறிவு மனித ஆன்மாவில் வைக்கப்பட்டுள்ளன.*


*மனிதப் பிறப்பிற்கு மட்டுமே பேசும் ஆற்றல் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளதாகும். பேசுவதற்கு மொழி மிகவும் அவசியமானதாகும்.மொழியின் வழியாகத்தான் எல்லா உயிர்களிடத்தும் தயவும்,நம்மை படைத்த இயற்கை உண்மை கடவுளிடத்தும் அன்பும் வைத்து தொடர்பு கொள்ளவும் சிறந்த வாய்ப்புள்ளதாகும்.* 


*தாய்மொழி தந்தை மொழி !*


*உலகில் மனிதமொழி இறைமொழி என இரண்டு வகையாக உள்ளன.*


*சமயம் மதம் சார்ந்த தலைவர்களால் அதாவது மனிதர்களால் (மாயையால் சிக்குண்டவர்களால்) தோற்றுவிக்கப்பட்ட உலகியல் மொழியை,அவரவர்களால் பேசப்படும் மொழியைத் தாய் மொழி என்றும் சொல்லப் படுகின்றது*


*இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட கலவை இல்லாத இயற்கை உண்மை தொன்மையான ஒரே மொழி தமிழ்மொழி என்பதாகும், ஆதலால்தான் அதற்கு தந்தைமொழி என்று வள்ளலாரால் போற்றப்படுகிறது.* 


*சாகாக்கல்வி கற்க தமிழ்மொழி ஒன்றே சிறந்தது !*


*இயற்கை உண்மையான இறைவனைத் தொடர்பு கொள்ளவும், மனிதஅறிவு பூரணமாக விளங்கவும்,அருள் பூரணமாக பெறவும்,உயிரையும் உடம்பையும் அழியாமல் காப்பாற்றும் சாகாக்கல்வி கற்கவும் தமிழ்மொழியே சிறந்த மொழியாகும்*


*வள்ளல் பெருமான் சொல்வதை ஊன்றி கவனிப்போம்*


*இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி(தமிழ்மொழி) ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர். என்னும் உணமையை வெளிப்படுத்துகின்றார்.*


மேலும் தமிழ்மொழியை வள்ளலாருக்கு இறைவனே கற்றுத் தருகிறார்!


*எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர் என்கின்றார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞானதேகம் கொண்டவர்,ஆதலால் அவருக்கு மரணம் என்பதே இல்லை.அதேபோல் மனிதனும் ஞானதேகம் பெறவேண்டும்.ஞானதேகம் பெற்றால் மட்டுமே ஞான தேகத்தோடு இணைய முடியும் என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.ஞானதேகம் கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சாகாத மொழியாகிய தமிழ் மொழி கற்கவேண்டும்.* 


*தமிழ்மொழிக்கு அருட்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!*


*மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

யருட்குரு வாகிய மவருட்பெருஞ் ஜோதி! என தெளிவுப் படுத்துகின்றார்*


*பாடல்களின் வாயிலாகவும் தெரிவிக்கின்றார்.!*


*ஓதா துணர்ந்திட வொளியளித்து எனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி!*


ஓதாது உணர உணர்ந்திட உள்ளே நின்று உளவு சொன்ன நீதான் நினை மறந்தென் நினக்கேன் இந்த நீணிலத்தே !


கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே கண்டதும் நின்னிடத்தே  உட் கொண்டதும் நின்னிடத்தே பெற்றதும் நின்னிடத்தே இன்புற்றதும் நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே !


ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்ந்திட அருள் உண்மை நிலைகாட்டித் தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத் திரு அருண் மெய் பொது நெறியில் செலுத்தியும்!


ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து  உணர்வாம் உருவுறச் செய்உறவே !


சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய்! 


மேலும்..


நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப

நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்


ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே

இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ


பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே

பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்


கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற

குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.!


மேலே கண்ட வரிகள் தமிழ் மொழியின் அருமையும், பெருமையும், சிறப்பையும்,தனித் தன்மையும் பற்றிப் போற்றி புகழ்கின்றார் வள்ளலார். 


*தமிழ்மொழி !*


*தமிழ்மொழியில் மட்டுமே உயிரைப் பற்றியும்,உடம்பைப் பற்றியும்,ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பேசப்படுகிறது.*


*உயிரைப்பற்றி பேசுவதால் உயிர் எழுத்து எனவும்,உடம்பைப்பற்றி பேசுவதால் மெய் எழுத்து எனவும்,ஆன்மாவைப்பற்றி பேசுவதால் உயிர்மெய் எழுத்து எனவும்,கடவுளைப்பற்றி பேசுவதால் ஆயுத எழுத்து எனவும் சொல்லப் படுகிறது.*


*இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்மொழிக்கு இயற்கை தொன்மையாம் சாகாத மொழி என்றே பெயர்.மேலும் உயர்ந்த நன்நிதியாகிய அமுதை வழங்குவதால் அமுத மொழி என்றும் சொல்லப்படுகிறது.*


*உலகம் உள்ளவரை தமிழ் நிலைத்து நிற்கும்.என்றும் இளமை குன்றாத ஒரே மொழி தமிழ்மொழியாகும்.* 


*வள்ளல்பெருமானை கருவியாகக் கொண்டு இறைவனால் எழுதப்பட்ட நூல்தான் திருஅருட்பா என்னும் அருள் நூலாகும்.* 


*திருஅருட்பாவில்தான் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது*


*திருஅருட்பாவில் மட்டுமே அருள் பெறுவதற்கான நான்கு ஒழுக்கங்களை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தி உள்ளது.இந்திரிய,கரண,ஜீவ,ஆன்ம ஒழுக்கங்களை பூரணமாக கடைபிடிப்பவர்களுக்கே அருள் பெறும் வாய்ப்புள்ளது இந்த உண்மை தமிழ் மொழிக்கே சொந்தமானதாகும்.* 


*ஜீவகாருண்ய ஒழுக்கம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாக விளங்கும்,அன்பும் அறிவும் விளங்கும் போது அருள் தானாக விளங்கும்.அருள் விளங்கும்போது மரணத்தை வெல்லலாம். மரணத்தை வென்றாலே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்.*


*தமிழ்மொழியில்,தமிழ்நாட்டில் தான் கர்மசித்தர்,யோகசித்தர்,ஞானசித்தர்கள் என்னும் அருளாளர்கள் தோன்றி உள்ளார்கள்.*


**வள்ளலார் பாடல்!*


 *அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்

கனுபவ மாகின்ற தென்னடி தாயே

செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்

திருவருள் உருவம் என் றறியாயோ மகளே.!*


அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்

கனுபவ மாகின்ற தென்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்

திருநட இன்பம் என்றறியாயோ மகளே.!


அறிவில் அறிவை அறியும் பொதுவில்

ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்

செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி

செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.! 


*தயவு,கருணை,அன்பு,அறிவு,அருள் பெற்று மரணத்தை வெல்வதற்கு தமிழ்மொழி ஒன்றே சிறந்த உயர்ந்த தனித்தன்மை வாய்ந்த அருள் பெறும் மொழியாகும்.*


*தமிழைக் கற்போம் திருஅருட்பாவை படிப்போம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வோம்,அருளைப்பெறுவோம்,மரணத்தை வெல்வோம்,பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*