வெள்ளி, 31 டிசம்பர், 2021

செயற்கை இன்பம் இயற்கை இன்பம் !

 *செயற்கைஇன்பம்!*

 *இயற்கைஇன்பம்!* 


*செயற்கை இன்பம் இயற்கை இன்பம் என இரு வகைப்படும்!*


*செயற்கை  இன்பம் என்பது? இந்திரிய இன்பம்.கரண இன்பம்.ஜீவ இன்பம் ஆன்ம இன்பம் என பலவகைப்படும் இது எதுவும் நிரந்தரம் அல்ல. இயற்கை இன்பம் என்பது? அருள் இன்பம் ஒன்றுமட்டுமே என்றும் அழியாதது நிரந்தரமானது*..


 *அதேபோல் செயற்கையான ஆசைகள் மண்ணாசை பெண்ணாசை.பொன்னாசை என பலவகையான ஆசைகள் உண்டு . இயற்கையான ஆசை ஒன்றே ஒன்றுதான்* *அது என்றும் அழியாத அருள் ஆசை என்பதாகும்.*


 *மேலும் செயற்கையான லாபம் இம்மை இன்பலாபம்.மறுமை இன்பலாபம் என இரண்டு வகையாக உள்ளன.இயற்கை இன்பலாபம் ஒன்றுமட்டுமே உண்டு *அது என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் லாபமாகும்* 


*ஆன்ம இன்ப லாபம்!*


*உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும் என்பார் வள்ளலார்*


*நம் உடம்பில்  இந்திரிய இன்பம்.  கரண இன்பம். ஜீவ இன்பம். ஆன்ம இன்பம் என நான்கு வகை இன்பங்கள் உண்டு.* *இவற்றில் ஆன்ம இன்ப லாபத்தை காலம் உள்ள போதே பெற்றுக்கொண்டால் அடுத்து அருள் இன்பத்தைப் பெற்று மரணத்தை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.*

ஆன்ம இன்ப லாபத்தில் மூன்றுவகையான இன்பலாபம் அடங்கி உள்ளன.


*அவை இம்மைஇன்ப லாபம். மறுமை இன்ப லாபம். பேரின்ப லாபம் என்பதாகும் இதில் பேரின்ப லாபமே இயற்கை இன்ப லாபமாகும்*


*வள்ளலார் பாடல் !*


இடம்பெறும் இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

இன்பம் உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்


தடம்பெறும் ஓர் *ஆன்மஇன்பம்* தனித்த அறி வின்பம்

சத்தியப்பேரின்பம் முத்தி இன்பமுமாய் அதன்மேல்


நடம்பெறு *மெய்ப் பொருள்இன்பம்* நிரதிசய இன்பம்

*ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்*


திடம்பெற ஓங்கிய *இயற்கைத் தனி இன்ப மயமாம்*

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.! 


*இன்பங்களை எந்த எந்த வழிமுறைகளில் அனுபவிக்கிறோம் எவ்வாறு கிடைக்கிறது அவற்றை எதன் மூலம் அனுபவிக்கிறோம் என்பதை மேலே உள்ள பாடலில் தெளிவாக விளக்கமாக சொல்லி உள்ளார்.* அவற்றில் இறுதியாக நாம் பெற்று அனுபவிக்க வேண்டிய இன்பம் *திடம் பெற ஓங்கும் *இயற்கை தனிஇன்பமாகும்* 

அந்த இன்பத்தை வழங்கும் கடவுள்  திருச்சிற்றம்பலம் தனிலே விளங்கும் தெய்வம் ஒன்றே கண்டீர்  என்று சொல்லுகின்றார். 


நாம் பெற வேண்டிய இறுதியான இயற்கை  இன்பம் *பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.*

அதற்கு என்ன அர்த்தம் உண்மை என்றால் *கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.*

கடவுளுடன் கலந்தால் மட்டுமே மீண்டும் பிறப்பு இறப்பு இல்லை என்பதாகும். அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்


*எந்த கடவுளுடன் கலப்பது ?*


இங்கே நாம் முக்கியமாய். தெரிந்து கொள்ள வேண்டியது *இயற்கை உண்மை கடவுள் யார்? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*


வள்ளலார் ஆரம்ப காலத்தில் உலகியல் வழக்கப்படி பல தத்துவ கடவுள்களை வணங்கியும் வழிபட்டும். அக்கடவுள்கள் மீது ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியும் பதிவு செய்துள்ளார். 


*உண்மையான கடவுள் யார்? என்பதை அறிந்தபின்பு  தான் வழிபட்டு வணங்கிய  கடவுள்கள் யாவும்  தத்துவங்கள் என அறிந்துகொண்டார். அந்த கடவுள்களின் பெயரில்  பாடிய பாடல்கள் அனைத்தும் தத்துவ  பாடல்களேத் தவிர உண்மையான இறைவன் மேல் பாடிய பாடல்கள் அல்ல என்பதை தெளிவாக பேருபதேசத்தில்  விளக்கி உள்ளார்*.


மேலும் சொல்லுகிறார் சைவ சமயத்தெய்வங்களை பாடியகாலத்தில் எனக்கு அப்போது *அற்ப அறிவாக* இருந்தது என வெளிப்படையாக சொல்லுகின்றார்.


*அருள் வழங்கும் தெய்வம் ஒன்றே ஒன்றுதான் அதைக் கண்டேன் களித்தேன் கலந்துகொண்டேன்  அதன் பெயர் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! என்னும் இயற்கை உண்மை கடவுளாகும் என்பதை உலக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்*


வள்ளலார் பாடல்!


எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று


கைவகையே கதறுகின்றீர் *தெய்வம்ஒன்றென் றறியீர்*

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்


ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்


உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.! 


*தெய்வம் ஒன்று உண்டு அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது தெரியாமல் மதங்களும் சயங்களும் பொய்வகையான சாத்திரங்களும் எமது தெய்வம் எமது தெய்வம் என்று குருடன் யாணையைத் தொட்டுபார்த்து சொல்வதுபோல் சொல்கின்றீர்* *மரணம் வரும்போது எந்த கடவுளும் காப்பாற்றாது எனத்தெரிந்தும் அதே தவறை செய்துகொண்டே உள்ளீர்கள்.* 


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்லுவதற்கு வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்* 


*எனவே நாம் பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் இயற்கை இன்பத்தை பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இயற்கை உண்மை கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிவால் அறிந்து அருளைப் பெறுவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன* 


*ஒன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு துன்பம் செய்யாமலும் அவ் உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்கும் ஜீவகாருண்யம் ஒன்றே முதல் வழியாகும்.*


*வேறுஒன்று நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து தொடர்பு கொள்வதற்கு சத்விசாரம் செய்ய வேண்டும். அதாவது அக்கடவுள் மீது இடைவிடாது அன்புநிறைந்த தொடர்பும். பிரார்த்தனையும் தோத்திரமும் செய்து கொண்டே இருக்க வேண்டும்*


மேலே கண்ட இரண்டு வழிகளிலும் இடைவிடாது பயணம் செய்தால் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்.


*தெளிவோம் தெளிவடைவோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

சனி, 25 டிசம்பர், 2021

கரு உண்டாகும் விதம் !

 *கரு உண்டாகும் விதம் !* 


சுக்கிலம்( விந்து) உண்டாவதற்கு காரணம் !


*நாம் தினம் ஆகாரம் கொள்கிறோம் அந்த ஆகாரம்   மார்பினிடத்தில் ஒருதட்டில் தங்கும் அந்த தட்டின்மேல் கடவுள் கடவுளி என்ற இரண்டு நரம்புகள் இருக்கும் ஒருநரம்பு சக்தியை கொடுத்து கொண்டேஇருக்கும் ஒருநரம்பு யானை துதிக்கைபோல் அசைந்துகொண்டே இருக்கும் அந்த நரம்புகளுக்கு சமயத்தில் விநாயகர் முருகன் என்று பெயர் வைத்துள்ளார்கள்* *அந்த இரண்டு நரம்புகளும் மிகவும் முக்கியமானதாகும். சகோதர உரிமை உடையதுபோல் இடைவிடாது ஓய்வில்லாமல் இயங்கி கொண்டே இருக்கும்..உண்ணும் உணவை அரைத்துக்கொண்டே இருக்கும்*


*உண்ட அன்னத்தை ஒருமணிநேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய தத்துவங்களுக்கு ஊட்டுகின்றது*. *மறுபடியும் இரண்டுமணி நேரத்தில் மேற்படி அன்னத்தினது  மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி இரண்டரை வராகன் எடையில் கோசநுனியில் ஒன்றும். நாபியில் ஒன்றும். பிரமந்திரத்தில் அரையும் சேர்த்து விடுகின்றது* *மீதமுள்ள மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ஈளை. குரும்பை. நகத்தூசு. தொப்புள் அழுக்கு. கண்பீளை முதலிய அழுக்கை வெளிப்படுத்துகின்றது*


*மேற்படி மீதமுள்ள  அன்னத்தை 3 மூன்று மணிநேரத்திற்குள்  அதிலுள்ள  திரவாம்சத்தைப் பிரித்து உதிரமாக்கி (இரத்தம்) உடம்பு எங்கும் ஊட்டுகின்றது* *மூன்று மணி நேரத்திற்குமேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது* *இதுபோல் நாம் உன்னும் எந்த உணவுப்பொருள்களையும் பிரிக்கின்றது. ஆதலால் ஆகாரம் கொண்ட மூன்று மணி நேரத்திற்குமேல் ஆகாரம் கொள்ள வேண்டும்* இது *ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்* 


*சுக்கிலம் சுரோணிதம்!*


*ஆணிடம்  விந்து தங்குவதற்கு (லிங்கத்தடி) சுக்கிலம் என்றும் பெண்ணிடம் விந்து தங்குவதற்கு சுரோணிதம் என்று பெயர். இதைத்தான் சமயக் கோயில்களில் மூலஸ்தானத்தில் (சக்தி சிவம் என்று பெயர் வைத்து) ஆண் உறுப்பையும் பெண் உறுப்பையும் சிவலிங்கமாக வடிவமைத்து வைத்துள்ளார்கள்*


கரு உற்பத்தியாகும் விதம்! 


*சுக்கிலம் இரண்டரை வராகன் எடை அளவா இருக்கும் அதில் விஷபாகமாகிய சத்தி 1 ஒருபாகம்.. சாதாரணம் என்னும் பூதபாகமாகிய அறிவு 1 பாகம். அசாதாரண அமுதபாகமாகிய விந்து அரை பாகம்*  *ஆக இரண்டரை அளவு உள்ளன இதுபோல் பெண்பால் இடத்தும் சுரோணிதம் உள்ளது*


*மேற்கண்ட சுக்கில சுரோணிதம் இரண்டிலும் கடவுள் ஆவி உள்ளது*


*ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளும்போது கோசத்தின் முன்வருவது விஷம். அதை அடுத்து பூதம். அதற்கு மேல் அமுதம் உண்டு* *இவ்வாறு பெண்பாலிடத்தும் உண்டு*


*முன்னுள்ள விஷபாகம் புணர்ச்சி காலத்தில் வெளிப்பட்டால் தேகநட்டம். பூதம் வெளிப்பட்டால் வியாதி. அமுதம் வெளிப்பட்டால் சந்த்தி விருத்தி (குழந்தை) கரு உண்டாகும்*


*கடவுள் அருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி விஷபாகத்தை பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார்* இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குச் கர்ப்பமில்லை.

மேலும் விந்துவளம்.இடவளம்.வன்னி.கிருமி.மோகம்.விசேடம் இவற்றாலும் கர்ப்பமில்லை.


*சுக்கில சுரோணிதம்*


*பெண்ணின் சுரோணிதப் பையிடத்தில்  3.  மூன்றுமணி சேர்ந்த  கொத்து ஒன்று வலது புறத்திலும். நான்கு மணிசேர்ந்த கொத்து 1ஒன்று  இடது புறத்திலும் இருக்கின்றன*.

*சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பம் தரிக்கின்ற காலத்தில் மூன்று மணி சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் ஆண் குழந்தையும் நான்குமணி சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும்*.


*மேலும் புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாகப் புணர்ந்தால் ஆணும் இடதுபுறம் சாய்வாக் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.*


*மேலே கண்டவாறு  இல்லறத்தில் (குடும்பவாழ்க்கையில்) ஈடுபடுபவர்களுக்கும் கரு உண்டாகும் விபரத்தையும். கடவுளின் கருணையும் எவ்வாறு ஒழுக்கமாக உடல்உறவை கடைபிடிக்க வேண்டும்  என்ற தெளிவையும்* *அமுதபாகம் எவ்வளவு முக்கியமானது என்பதையும்*

*வள்ளலார் விளக்கமாக விளக்கி சொல்லி உள்ளார்*  இதற்காக சோதிடர்களைத் தேடி அலைய வேண்டியதில்லை.


மேலும் கரு உண்டாவதற்கு ஒரு புதிய வழியையும் சொல்லியுள்ளார்.


*பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு தக்கபடி பசித்த ஏழைகளது  பசியை ஆற்றுவிப்பதே  விரதமாக அனுசரித்தார்களானால் அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை (குழந்தையை) உண்டுபண்ணும் என்பது உண்மை என்றும் சொல்லி உள்ளார்*.


*புரியாதவர்கள் புரிந்து கொள்ளுங்கள் அறியாதவர்கள் அறிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடியுங்கள்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 22 டிசம்பர், 2021

ஆன்மா உயிர் உடம்பு கடவுள்!

 *ஆன்மா உயிர் உடம்பு ! கடவுள்!*


**உயிர்உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே ! (அகவல்)*


*ஆன்மாக்களுக்கு  உயிர் உடம்பை கொடுத்த இறைவன்  உடம்பிற்குள்ளே  ஒளிஉருவமாக இயங்கிக்கொண்டு உள்ளார் என்பதை அறிந்து உணர்ந்து எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து  உயிர்களுக்கு வரும் (இடையூறுகளை) ஆபத்துகளை நீக்க வேண்டும் என்பதை அறிந்தவனே உயர்ந்த அறிவுள்ள மனிதனாகும்.* 


*தன்உள் இயங்கும் உள் ஒளியான மெய்ப்பொருள் கடவுளை அறிந்து கொள்ளாமல் தொடர்பு கொள்ளாமல் கடவுளை வெளியில் தேடும் மூடர்கள் உலகம் எங்கும் நிறைந்து உள்ளார்கள். ஆதலால் ஒவ்வொருவரும்  தன்னை அறிந்து இன்பம் பெறவேண்டும் என்ற "தந்திரத்தை" உலகம் எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவரே வள்ளல்பெருமான் என்பவராகும்*


உண்மை உரைத்த திருஅருட்பா!


*வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவில் உள்ள  உண்மையான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்* *கொள்கைகளையும் கருத்துக்களையும்   விளக்கங்களையும் சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் படித்து அறிந்து தெரிந்து  தெளிபெறாமல் தன்னுள் இயங்கும் இறைத் தன்மை உள்ள  ஆன்மாவைத் தொடர்பு கொள்ளாமல்.புறத்தில் மனம் போன போக்கெல்லாம் போய்கொண்டு உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது.*


*வள்ளலார் பாடல்!*


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லது ஒன்று என்று அறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின்றேன் பொதுப் பாட்டே.! 


*எல்லா உயிர்களிலும் இறைவன் நடம்புரியும் இடம் என அறிந்தேன்  ஆதலால் எக்காலத்திலும் எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமலும். துன்பம் கொடுக்காமலும். அழிக்காமலும். வாழப்பழகிக் கொண்டேன் என்கிறார் வள்ளலார்*


 *மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள். இறைவன் வாழும் ஆலயமான உயிர்களை உயிர்க்கொலை செய்வதும் அதன் புலாலை உண்பதும் மிகவும் பெரிய பாவச்செயலாகும். மேலும் மன்னிக்க முடியாத பெரிய குற்றமாகும். உயிர்உள்ள உடம்பை  உயிர்வேறு உடம்பு வேறாக பிரிப்பது என்பது. இறைவன் வாழும் வீட்டிலிருந்து இறைவனை வெளியே  விலக்குவதற்கு ( துரத்துவதற்குசமம்) சமமாகும் ஆதலால் இறைவனை அறியுவும்   அருளைப்பெறவும் மரணத்தை வெல்லவும் வாய்ப்பு இல்லாமல்  ஆன்மாவின் உள் ஒளியாக விளங்கும் மெய்ப்பொருளை தெரிய வொட்டாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது*


*மெய்ப்பொருள் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆன்ம வடிவமாக தோன்றி ஆணின் விந்துவில்( சுக்கிலத்தில்)  கலந்து ஆகாசம் பிரகிருதி ஆன்மா என்னும் மூன்று விதமான பகுதிப் பேரணு உருவிற் பெருகி சுக்கிலத்தில் எண்ணில் அடங்கா திரவ அணுக்களின் கூட்டத்தின் சுழற்ச்சியின் மத்தியில் அமர்ந்து இரண்டு மாதங்களில் உயிர் என்னும் காரிய ஒளியை உண்டாக்கிகொள்கிறது*


*உயிர் இயக்கம் உண்டாகுகின்ற தருணத்தில் பெண்ணின் சோனிதவழியாக உள்ளே சென்று கருவறையில் தங்கிக் கொள்கிறது*

*பெண்ணின் சுக்கிலத்தில் உள்ள பிருதிவி அப்பு தேயு வாயு ஆகிய நான்கு வகையான அணுக்களும் ஆணிடம் இருந்தவந்த மூன்று வகையான அணுக்களும் இணைந்து சேர்ந்து பெண்ணின் 

 கருவறையில் ஆன்மா வாழ்வதற்கும் உயிர் இயங்குவதற்கும் வேண்டிய உடம்பு என்னும் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது* 


உயிர் கொடுத்ததால் ஆண் உருவை தந்தையாகவும் உடம்பு கொடுத்ததால் பெண்உருவை தாயாகவும் உலகில் சொல்லப்படுகிறது


*உபசாரத்தால் பெற்ற தந்தையின் சுக்கிலத்தில் தோன்றி தாயென்பாள் ஒருத்தியின் சோணித்த்திரளில் என்னுருவைச் சேர்க்கும் வரையில்  அப்போதப்போது என்னுருவைச் சிதைப்பதற்கு எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகஞ் செய்து அருளினீர் இங்கனம் புரிந்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம்  அறிவேன் எவ்வாறு கருதுவேன் என்னென்று சொல்வேன் என்கிறார்*


*ஆனாலும் உண்மை என்னவென்றால் தாய் தந்தை என்பவர்கள் உபகாரக் கருவிகளேத் தவிர உண்மையான தாய் தந்தையர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்*

 

வள்ளலார் பாடல்! 


கருவிற் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என்

கண்ணிற் கலந்த ஒளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்


உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவே என்

உணர்விற் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே


தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான

சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்


மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே

வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.!


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடம்பில் உயிரில் ஆன்மாவில் மற்றும் எங்கெல்லாம் கலந்து எவ்வாறு செயல்படுகிறார் எவ்வாறு சித்தி அளிக்கிறார் என்பதை மேலே உள்ள பாடலில் வள்ளலார் அனுபவித்து தெளிவாக விளக்கி உள்ளார்  பொறுமையாக படித்து உணரந்து அவற்றைத் தெரிந்து  கொள்ளவேண்டும்* 


*அவ்வாறு ஒவ்வொரு ஆன்மாவிற்கும் உயிருக்கும் உடம்பிற்கும் உற்ற துணையாக உள்ள ஆண்டவரை எவருடனும் ஈடு இணையாக வைத்து சொல்லமுடியாது.  இறுதிவரை நமக்கு துணையாக இருப்பவர் நமது அருட்பெரும் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்பதை உணர்ந்து. புறத்தில் அலைபாயும் மன த்தை அகத்தில் புருவமத்தியில் உள்ள சிற்சபையின் கண் இடைவிடாது செலுத்த வேண்டும்* 


*மனதும் ஆன்மாவில் உள்ள உள் ஒளியும் இடைவிடாது இணைவதால்  (புணர்வதால்) உணர்ச்சி பெருகி இன்பம் உண்டாகி அசுத்த உஷ்ணம் விலகி சுத்த உஷ்ணம் உண்டாக உண்டாக அந்த இன்பத்தின் உச்சகட்டமான   உணர்ச்சி மேலோங்கும் தருணத்தில் நன்நிதியான அருள்அமுதம் ஆன்மாவின் உள் இருந்து சுரக்கும். அவ் அருள்அமுதம் உயிர் உடம்பெல்லாம் கலந்து நிறைந்து  பூரணமாகி பொங்கி ததும்பி வேதித்து பூத உடம்பு பொன்னுடம்பாக மாற்றம் அடையும்*


பொன்னுடம்பு  எனக்குப் பொருந்திடும் பொருட்டா

என்னுளங் கலந்த என்றனி யன்பே! ( அகவல்) என்றும்


தன்னையே யெனக்குத் தந்து அருள் ஒளியால்

என்னை வேதித்த என்றனி யன்பே !( அகவல்) என்றும் 

 சொல்லுவார்.


மேலும் மிகவும் அழுத்தமாக நமக்கு சொல்லுகிறார் *வள்ளலார் பாடல்!*


குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்


*பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே* அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்


செறித்திடு *சிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்* சித்தி எல்லாம்

 இத்தினமே சத்தியம் சேர்ந் திடுமே.!* 


ஆன்மா உயிர் உடம்பு கடவுள் இணைந்து இயங்கும் நமது உடம்பை விட்டு உயிரைவிட்டு எதுவும் பிரியக்கூடாது. பிரியாமல் அருள்பெற்று வாழும் வாழ்க்கையே பேரின்ப சித்தி பெரு வாழ்க்கையாகும் மரணம் இல்லாப் பெருவாழ்க்கை என்பதாகும்.


எனவே சமய மதங்கள் தோற்றுவித்த பொய்யான கடவுள்கள் யாவும் பொய்யானது என்று அறிந்து தெரிந்து புரிந்து அவைகளை வணங்காமல் வழிபடாமல் பின் தொடராமல். இயற்கை உண்மை கடவுள் விளங்கும் ஆலயமான நமது உடம்பின்  சிற்சபையில்(புருவமத்தியில்) உள் ஒளியாக  நடம்புரியும் நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்.


*திருந்துவோம் செயல்படுவோம் வெற்றி நிச்சயம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

சனி, 18 டிசம்பர், 2021

பிறவுச் சட்டத்தை கிழித்தவர் !

 *பிறவிச் சட்டத்தை கிழித்தவர்!* 


வள்ளலார் பாடல்! 


கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்

கலக்கமும் தீர்ந்தனன் *பிறவிச்*


*சட்டமும் கிழித்தேன்* தூக்கமும் துறந்தேன்

*சாவையும் நோவையும் தவிர்ந்தேன்*


சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்

*செல்வமெய்ப் பிள்ளை* என் றொருபேர்ப்


பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்

பண்ணிய தவம்பலித் ததுவே.! 


*மேலே கண்ட பாடல் மிகவும் முக்கியமான பாடலாகும்.  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று தூக்கத்தை துறந்தேன் மேலும் நரை திரை பிணி மூப்பு பயம் நீங்கி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வென்றுவிட்டேன்* ஆதலால் எனக்கு செல்வ மெய்பிள்ளை என்று ஓர் பட்டமும் பெற்றேன் என்கிறார்

எனக்கு மட்டும் கிடைத்தால் போதாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என்கிறார்.


*அதற்காக பழைய சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை படைக்கிறார் வள்ளலார்*


*ஆன்மாக்கள் இவ்வுலகிற்கு வந்த காலம்முதல்  தொடர்ந்து பிறந்து பிறந்து இறந்து இறந்து பலகோடி பிறவிகள் தொடர்ந்து  எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதுவரையில் எவராலும் தீர்வுகாண முடியாத சட்டமாக இருந்த்து* *இந்த சிக்கலான தீர்வு காணமுடியாத பிறவிச் சட்டத்தை  கிழித்தவர் நமது வள்ளல்பெருமான் ஆவார்கள்*


*உடல் உயிர் ஆன்மா மூன்றும்  மனித உடம்பின் முக்கிய அம்சமாகும் இதைத்தான் பதி பசு பாசம் என்பார்கள்* *பதி என்னும் கடவுளுக்கு சமமான ஆன்மாக்கள்  ஆணவம் மாயை மாமாயை பெருமாயை  கன்மம் என்கின்ற ஐந்து மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு என்று சொல்லப்படுகிறது*


*ஆன்மாக்கள் அருள் பெற்று வாழ்வதற்கு வசதியாக  இவ்வுலகிற்கு வந்து உயிர் உடம்பு எடுத்து வாழ்கின்றது.* * இயற்கையில் தயவுள்ள ஆன்மா  தான்வாழ்வதற்கு வசதியாக  பஞ்சபூத அணுக்களால் பின்னப்பட்ட வீடான அசுத்த பூதகாரிய உடம்பையும். தமக்கு முற்றிலும் சரியான  துணையாக இருந்த சுத்த பூதகாரிய உயிரையும் அழிக்கவோ அவற்றை பிரிந்து விட்டுவிட்டு செல்வதோ ஆன்மாக்களின் இயற்கை உண்மை தயவுக்கு விரோதமானது என்பதை ஒவ்வொரு ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.


*ஆன்மா உயிரையும் உடம்பையும் இழந்து விடுவதால்  அதற்கு மரணம் என்று பெயர் சூட்டப்பட்டது தான்வாழ்ந்து வந்த உடம்பு என்னும் வீட்டை இழந்துவிடுவதால் இவ்வுலகிலேயே வேறு ஒரு அசுத்த பூதகாரிய தேகம் எடுத்து வாழவேண்டுமேத் தவிர இவ்வுலகை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாது இதுதான் இவ்வுலகின் சட்டதிட்டமாகும்* 


*அருள் பெற்று ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டால் மட்டுமே எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது அருள் சட்டமாகும்*


*உயிரையும் உடம்பையும் அழிக்காமல் வாழும் வழியை கண்டு பிடித்தவர் வள்ளலார்* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*ஆன்மாக்களை படைத்து  இவ்வுலகிற்கு அனுப்பிய இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற வேண்டும்* அருளினால் மட்டுமே தேகம் மாற்றம் உண்டாக்க முடியும்.


*நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த அசுத்த பூதகாரிய தேகத்தை அழிக்காமல் சுத்த  பிரணவ ஞான தேகமாக மாற்ற வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சட்டதிட்ட கொள்கையாகும*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதிலும் அருளைப் பெறும் வழிகளிலும் ஆன்மாக்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது* அதாவது  அசுத்த பூதகாரிய திரைகளால் ஆன்மா மறைக்கப் பட்டுள்ளது. அச்சிக்கலை உடைக்கவும் நீக்கவும் வந்தவரே வள்ளலார் 


அருள்பெறும் *உண்மைத் தன்மை தெரியாமல் தவறான சிக்கலை உருவாக்கி ஆன்மாக்களை அலைய விட்டவர்கள் சாதி சமய மதக் கொள்கைகளை உருவாக்கியவர்கள் ஆன்மீக குருமார்கள் போதகர்கள் கர்த்தாக்கள் மற்றும்  சித்தர்கள் யோகிகள் ஞானிகள் என்பதை நூற்றுக்கணக்கான பாடல்கள் வாயிலாகவும் உரைநடைப்பகுதிவாயிலாகவும் தெளிவாக ஆறாம் திருமுறை திருஅருட்பா நூலில் பதிவு செய்து உள்ளார்* 


செயற்கையான மரணச் சட்டத்தை மாற்றி புதியதான சுத்த சன்மார்க்க இயற்கை சட்டத்தை படைத்துள்ளார்.


*புதிய சட்டத்தில் முதலில் சாதி சமய ம் மதம் சார்ந்த  பற்றுதல்கள் முழுவதையும் பற்று அற விட்டுவிட்டு சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் 


*சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !* ( அகவல்)

*சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி!* (அகவல்)


*சாதி சமய மதச் சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார்* இயற்கை *உண்மையான  கடவுளைத் தொடர்பு கொள்வதற்கும் அருளைப் பெற்று மரணத்தை வெல்வதற்கும்  பொய்யான சாதி சமய மதக் கொள்கைகளே காரண காரியமாக உள்ளதால்* 


*பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐயரைக் கண்டேன் என்று தெளிவாக தெரியப்படுத்துகின்றார்* 


*மரணத்தை வெல்வதற்கு உலகியல் படிப்பு பட்டம் பதவி வசதியானவாழ்க்கை  பணம் புகழ்  எதுவும் தேவையில்லை* இந்திரிய கரண ஜீவ ஆன்ம 

ஒழுக்கமே மனித தேகத்திற்கு முக்கியமானதாகும்* 


*பழைய பொய்யான   கல்விமுறை சட்டத்தை மாற்றி புதிய கல்விமுறை சட்டத்தை கொண்டு வந்தவர் வள்ளலார்*


*வள்ளலார் கற்றுத்தருவது சொல்லிக்  கொடுப்பது புதிய அருள்பெறும்  கல்விமுறை கொள்கையாகும் அதுவே  சாகாக்கல்வி என்பதாகும்* *ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமானால்தான் சாகாக்கல்வி கற்க முடியும் என்பதே வள்ளலார் சொல்லும் உண்மையாகும்.*


வள்ளலார் பாடல்! 


சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்தான் என அறிந்தஅறிவே

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே

தனித்த பூரண வல்லபம்


வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்

விளைய விளை வித்ததொழிலே

மெய்த் தொழிலதாகும் இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம் எல்லாம்


மாகாதலுற எலாம் வல்ல சித்தாகி நிறை

வானவரமே இன்பமாம்

மன்னும்இது நீபெற்ற *சுத்தசன் மார்க்கத்தின்*

மரபென் றுரைத்தகுருவே


தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்

தேற்றி அருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

தெய்வநட ராஜபதியே.! 


சுத்த சன்மார்க்க மரபு என்ன என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவாக எளிய தமிழில் பதிவு செய்துள்ளார்.


சுத்த சன்மார்க்க மரபை பின்பற்றுவதற்கு எவை எவை தடையாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் தூக்கி எரிந்து விடவேண்டும். 


வள்ளலார் பாடல்! 


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால்* அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


*பற்றியபற் றனைத்தினையும்* *பற்றறவிட்டு அருள் அம்*

*பலப்பற்றே பற்றுமினோ* *என்றும்இற வீரே.!* 


*இந்த மனிதப்பிறப்பு போனால் மீண்டும் மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது உறுதி அல்ல* ஆதலால் காலம் தாழ்த்தாமல் சாதி சமய மதப் பற்றுகளையும் மற்றும் உலகியல்  பற்றுகளையும் மேலும் பற்றிய பற்றுகள் அனைத்தினையும்  பற்றுஅற விட்டுவிட்டு  அம்பலத்தாடும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி கொள்ள வேண்டும். 


பழைய சட்டமான சாதி சமய மதக் கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு வள்ளலார் வகுத்துதந்த சுத்த சன்மார்க்கத்தின்  புதிய சட்டதிட்டத்தின் கொள்கைபடி அதன் மரபுப்படி வாழ்க்கை அமைத்துக்கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 14 டிசம்பர், 2021

சாவதுதான் பெரிய பாவம்!

 *சாவதுதான் பெரிய பாவம் !* 


*உலகிலே பெரிய பாவச்செயல் சாவதுதான்(இறப்பு) என்கிறார் வள்ளலார்*


*பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்லப் படுகிறது* 


*உலகியல் சட்டத்திலும் பெரிய  இறுதி தண்டனை மரண தண்டனைதான் என்பது அனைவரும் அறிந்ததே* *அதேபோல் இறைவன் படைப்பிலும்  மரணம் என்பதும் பெரிய தண்டனையாகும்*


*இந்த உண்மை தெரியாமல் சாவதும் பிறப்பதும் இயற்கையானது  என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் நடந்து கொண்டே வருகிறது*. 


*ஆன்மா சாகாதது (அழியாதது) உயிர் உடம்புதான் சாகும் ( அழிந்துவிடும்) என்பது உலக ஆன்மீகவாதிகளின் ஒட்டுமொத்த  கருத்துகளாகும்*


ஆன்மா உயிர் உடம்பை விட்டு பிரிந்தால்  சொர்க்கம் வைகுண்டம் கைலாயம் பரலோகம்  மோட்சவீடு அடைந்துவிடும் என்றும் பொய்யான கற்பனை கட்டுக்கதைகளை கட்டி மக்களிடம் விதைத்து விட்டு சென்றுவிட்டனர். 


ஆன்மா உயிர் உடம்பு எடுத்து மரணத்தை வெல்ல முடியாமல் மரணம் அடைந்தால் நல்வினை தீவினைக்குத் தகுந்தாற்போல் மீண்டும் பிறப்பு எடுக்கும் ஆனால் எந்த பிறப்பு என்பது  எவருக்கும் தெரியாது அதுதான் ரகசியம்.


*மேலும் சிலர் ஜீவசமாதி அடைந்து விட்டார்கள் என்றும் பஞ்ச பூதங்களில் கலந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள்.* *எதில் கலந்தாலும் எவ்வாறு வாழ்ந்தாலும்  இறந்தாலும் அவர்களுக்கும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதே உண்மை என்கிறார் வள்ளலார*


*ஆனால் வள்ளலார் இவை யாவும்  பொய்யான கற்பனைக் கதைகள்  என்று தான் வாழ்ந்து மரணத்தை வென்று  நிரூப்பித்து காட்டியுள்ளார்*  


*வள்ளலார் பாடல்!*


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே 


நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே


உலைவறும் இப் பொழுதே நல் தருணம்என நீயே

உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


*உலகில் உள்ள ஆன்மீக வரலாற்று கதைகள் கொள்கைகள் யாவும் பொய்யானது என்றும். கற்பனையானது என்றும். எல்லாம்வல்ல  இயற்கை உண்மை கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் அறிந்து தெரிந்து கொண்டேன் என்கிறார்*.

மேலும் ஒரு பாடலில் சொல்லுகிறார்


வள்ளலார் பாடல்! 


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற *பெரும்பாவம்* தன்னைஎண்ணி


நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த 

நோவை நீக்கி


ஈவது மன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவ ராலே


ஆவதொன்றும் இல்லை என்றால்  அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே ! 


என்ற பாடலில் *சாவதையும் பிறப்பதையும் தடுத்து வெற்றி பெற வேண்டுமானால் நம்மைப்படைத்த  இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள்பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்* 


*மற்றைய தத்துவ கலைகளான கடவுள்களை தொடர்புகொண்டு வணங்குவதாலும் வழிபடுதலாலும் காடு மலை குன்று குகை போன்ற இடங்களில் சென்று தியானம் தவம் யோகம் செய்வதாலும் எந்த பயனும் கிடைக்காது மரணத்தை வெல்லவும் முடியாது என்கிறார் வள்ளலார்* 


*ஆன்மாக்கள் உயிர்  உடம்பு எடுத்து பிறப்பதும் இறப்பதும் மீண்டும்  பிறப்பு எடுப்பதும் தொடர்கதையாக உள்ளதால்  இவற்றை தடுத்து நிறுத்திவிடலாம் மரணத்தை வென்றுவிடலாம் என்னோடு சேர்ந்துவிடுங்கள் என்று அன்போடு ஆன்மநேயத்தோடு அழைக்கிறார்*


வள்ளலார் பாடல்! 


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

*எல்லாம்செய் வல்லசித்தி* இறைமையும்பெற் றிடலாம்


அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்


பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே


வன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.! 


என்று அன்புடன் அழைக்கின்றார்.


*உலக வரலாற்றில் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் ? என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தி காட்டியவர்.அக்கடவுள்தான் ஆன்மாக்களையும் உலகங்களையும் உயிர்களையும் மற்றும் உள்ள எல்லா பொருள்களையும் படைத்தவர். அவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்லமுடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தி காட்டி உள்ளார்.அதற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் புதிய மார்க்கத்தை தொடங்கி வைத்தவர் வள்ளலார்* 


வள்ளலார் பாடல் !


இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

*இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்*


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடுசன் மார்க்கம் ஒன்றே* *பிணிமூப்பு* *மரணம்*

*சேராமல்* *தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே*


*பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு*

*பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!* 


ஒவ்வொருவரும் இறக்கும் போது கூடி கூடி சேர்ந்து சேர்ந்து தலையிலும் மார்பிலும் அடித்து அடித்து அழுகின்றீர் இறவாத வரம் பெறுவதற்கு உண்டான வழி இருக்கிறது காட்டுகிறேன் வாருங்கள் என்றும்  அதற்குண்டான வழியையும் ஒழுக்கத்தையும் சொல்லித்தருகிறேன் என்றும் சொல்லுகிறார். 


*செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகிறது என்பதுபோல் ஒவ்வொருவரும் அதே வேலையை செய்து கொண்டுள்ளீர்கள்* இனி அவ்வாறு  அழ வேண்டியதில்லை.


*நாம் செய்ய வேண்டியது மரண தண்டனையில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இதுவே மனிதப்பிறப்பின் வெற்றியாகும்* *இதற்கு ஒரே வழி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதேயாகும்* *தொடர்புகொள்ளும் வழியைக் கற்றுத்தருவதே  சாகாக்கல்வியாகும்* *கற்றுத்தரும் இடமே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும்*


*கற்றுத்தருபவர்கள் சாகாமல் இருக்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்* 


வள்ளலார் பாடல்! 


*சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்*

*சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்*


மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்


ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்


தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*


*நமக்கு உண்மையான  குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு எவரும் இல்லை இருக்கவும் முடியாது இருக்கவும் கூடாது.*


மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல் வரிகள்) 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

என்மார்க்கம் நன்மார்க்கம் !

 *என்மார்க்கம் நன்மார்க்கம் !*


*என்மார்க்கம் நன்மார்க்கம் என்றும் என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்றும்  சொன்னவர் வள்ளலார் ஒருவரே !* 


*என்மார்க்கம் மற்ற மார்க்கங்கள் போல் பொய்யான மார்க்கம் அல்ல உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் தனித்தன்மை வாய்ந்த தனி மார்க்கமாகும் அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்னும் தனித்தன்மை வாய்ந்த  உலகப் பொது மார்க்கமாகும் என்கிறார் வள்ளலார். 


*உலக மக்களை அழித்துக் கொண்டு இருந்த துன்மார்க்கங்கள்  எல்லாவற்றையும் தொலைத்துவிட்டேன்* *இனி எல்லா உலகும்  என்மார்க்கம் சன்மார்க்கம் ஒன்றே வழங்கும்* 


*வள்ளலார் பாடல்*!


*துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்* - 


*என்மார்க்கம்*

*நன்மார்க்கம்* என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து. 


*வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் அவசியம் தெரிந்து  கொள்ள வேண்டிய உண்மை இதுவேயாம்* 


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!* 


உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்


கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும் சம் மதமோ


சற்றும் இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்

*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!* 


*மேலே கண்ட பாடலில் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்று  தெளிவாக சொல்லி புரிய வைக்கிறார் வள்ளலார்* 


*இவ்வளவு தெளிவாக சொல்லியும் சன்மார்க்கிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் தெரிந்து கொள்ளாமல் மறுட்டுலகில் இருட்டுலகில் மடிந்து கொண்டே உள்ளார்கள்*


 *இவ்வாறு மக்கள் மடிந்துகொண்டு உள்ளது ஆண்டவருக்கு ஏற்புடையது அல்ல*  *ஆன்மாக்கள் அடைய வேண்டிய ஆன்ம லாபத்தை பெறவொட்டாமல் பொய்யான ஆன்மீக கொள்கைகளை மக்கள் மனதில் விதைத்து தடுத்துவிட்டார்கள் துன்மார்க்க பாவிகள்* அவர்கள் மனம் கன்மனமோ வன்மனமோ அறியேன் என்கிறார் வள்ளலார் 


*இந்த கொடுமையான வேதனையான நடைமுறையில் வழக்கத்தில் மக்கள் படும் அவத்தையான  துன்பம்  துயரம் அச்சம் பயம் மரணத்தில் இருந்து இனிமேல் தவிர்த்து கொள்ளலாம் என்னோடு சேர்ந்துவிடுங்கள் என்மார்க்கம் இறப்பை ஒழிக்கும்  சன்மார்க்கமாகும் என்கிறார்*


*ஆன்மாக்களின் உண்மை*!


*ஆன்மீகத்தின் அடிப்படை உண்மையானது ஆன்மாக்கள் ஆன்ம தேகத்தோடு இங்கு வந்து பஞ்சபூத தேகம் எடுத்து பலகோடி பிறவிகளைத் தாண்டி உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகம் எடுத்துள்ளது* 


*இத்தேகத்தில் உடம்பை அழிக்காமல் உயிரைப் பிரிக்காமல் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று அருள்தேகமாக மாற்றி என்றும் எக்காலத்தும் அழியாமல் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதே பேரின்பசித்தி பெருவாழ்வு என்பதாகும்.* *இதுவே ஆன்மாக்கள் அடையும் அற்புதமான அருள் வாழ்க்கை முறையாகும்.*


*இந்த உண்மைத் தெரியாமல் கற்றவரும் கல்லாதாரும் மற்றும் சித்தர்கள் யோகிகள் ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களும்.வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் தெரிந்தவர்களும்  அவரவர்களுக்கு தெரிந்த ஆன்மீக மார்க்கங்களின் கருத்துகளை கொள்கைகளை எழுத்து வடிவிலும்  சிற்பங்கள் வடிவிலும் வண்ணங்களாகவும் வடிவங்களாகவும்  ஆலயங்களை மசூதிகளை சர்சுக்களை பிரமிடுகளை படைத்து மக்களுக்கு ஆன்மீகத்தின் குறுக்கு வழிகளைக் காட்டியுள்ளார்கள்* அதில் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் மக்கள் மாண்டு கொண்டே உள்ளார்கள்


*உண்மைக்கு புறம்பான தவறான வழிகளைக் காட்டியுள்ளதால் நேர்வழி தெரியாமல் எல்லோரும் பிறந்து பிறந்து இறந்து இறந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்*

*ஆகையால் முன் உள்ள ஆன்மீக வாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரும் ஒன்றுகிடக்க ஒன்றை உளறிக்கொண்டே உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்*


*உணமையை  மறைத்தவன்* 


*வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்ற வள்ளலார் இறுதியாக சன்மார்க்க கொடி ஏற்றி மக்களுக்கு ஒரு பெரிய நீண்ட மகாஉபதேசம் செய்கிறார் அதில் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக  தெரிவிக்கிறார். அதில் சில பகுதிகள்*


*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.*


  ஆன்மாக்களின் உண்மையும் கடவுளின்  உண்மையும் பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள் என்கிறார்.  


*சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்*


*சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்*


*அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு*


என்பதை வெளிப்படையாக துணிச்சலோடு சொல்லுகிறார்.


எனவே நாம் இதுவரையில் இருந்தது போல் இனியும். வீண்காலம் கழிக்காமல் சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வெள்ளி, 10 டிசம்பர், 2021

சுத்த மெய் அறிவு !

 *சுத்த மெய் அறிவு !* 


*மனிதபிறப்பு என்பது கீழ் அறிவு நிலையில் இருந்து  மேல் அறிவு நிலைக்கு ஏற்றப்படும் பிறப்பாகும்*

*அதனால் உயர்ந்த அறிவுள்ள மனிதப்பிறப்பு என்று சொல்லப்படுகிறது.*


சாதி சமயம் மதம் சாத்திரம்  என்ற குப்பைகளை மனித குலத்தில் வீசப்பட்டதால் மனித குணத்தின் மெய் அறிவு வெளிப்படாமல் மழுங்கிபோய் விட்டது.


*இந்த பாவச்செயலை உலகம் எங்கும் விதைத்து மனிதர்களின் சுத்த மெய் அறிவை  ஆதியிலே மழுங்கச் செய்தவர்கள் சாதி சமயம் மதத்தை தோற்றுவித்த போலியான ஆன்மீக தலைவர்கள் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்* 


*அவர்களின் போலியான முகமூடிகளை கழட்டி உலக மக்களுக்கு தெரியப்படுத்தவே "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை" 1872 ஆம் ஆண்டு வடலூரில் தோற்றுவிக்கிறார்* 


*இந்த உண்மையை ஈரோடு கதிர்வேல் ஆகிய நான் சொல்லவில்லை* *வள்ளலார் பதிவு செய்கிறார்*


வள்ளலார் பாடல்! 


பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

*பவநெறி* இதுவரை பரவிய திதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

*செறிஇருள்* அடைந்தனர் ஆதலின் இனி நீ


*புன்னெறி தவிர்த்தொரு* *பொதுநெறி* எனும்வான்

புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*


தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!  


 என்று மிகத் தெளிவாக பதிவு செய்கிறார் மேலும்


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே *கோத்திரச்சண் டையிலே*


*ஆதியிலே* அபிமானித் தலைகின்ற உலகீர்

*அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே*


*நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே* நிறுத்த

நிருத்தமிடும் *தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே*


*வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய*

மேவுகின்ற தருணம்இது *கூவுகின்றேன்* உமையே.! 


*மேலே கண்ட பாடல்கள் போல் நூற்றுக்கணக்கான பாடல்களிலே சாதி சமயம் மதவாதிகளின் சூதுகளை தோல்உரித்து வெளிச்சம் போட்டு திருஅருட்பாவில் காட்டுகிறார்*.


*அதனால் அவர் அடைந்த எதிர்ப்புக்கள். பிரச்சனைகள். கேவலமான பேச்சுக்கள். தேவையற்ற வாதங்கள் அளவில் அடங்காது* மேலும் *அவர்மீது வழக்கு தொடர்ந்து  நீதி மன்றம் வரை சென்று பார்த்தார்கள் ஆனாலும் வள்ளலாரை யாராலும் அசைக்க முடியவில்லை அழிக்கமுடியவில்லை* *எல்லா தரப்பிலும் வள்ளலாரே வெற்றி பெற்றார்*.


*அதற்கு என்ன காரணம் ?*


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்* *சுத்த மெய் அறிவால் ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  அருளைப்பெற்று   செயற்கையான ஊன் உடம்பை இயற்கையான ஒளி உடம்பாக்கி மரணத்தை வென்றவர் அதனால் வள்ளலாரிடம் எவராலும் நெருங்க முடியாத தொடமுடியாத அழிக்கமுடியாத அளவிற்கு  அவர் உடம்பு ஒளி தேகம் பெற்றவர்* ஆகையினால் அவரால் எல்லாவற்றையும் வெற்றியுடன் வெல்ல முடிந்தது.மேலும் உலக மக்களுக்காக  உண்மையை வெளிப் படுத்தியவர்


உலகம் எங்கும் நிறைந்துள்ள *சாதி சமய மதங்களை அழித்து ஒழித்து இருக்கும் இடம் தெரியாமல் நிறுவி அதன்மேல் உலக பொது நெறியாக விளங்கும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்து உள்ளார்.* 


*அச்சங்கத்தின்  அடிப்படைக் கொள்கைகள் இறைவன் குடியிருக்கும் ஆலயமான மனித உடம்பின்  அகத்தையும் புறத்தையும்  தூய்மை படுத்தும்  ஒழுக்கத்தை போதித்து மனித குலத்தை அழிக்காமல் அதாவது மரணம் அடையாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலாரின் முக்கிய நோக்கமாகும் புதிய பொதுக் கொள்கையாகும்*


*மரணத்தை வென்றவனே சாகாதவன்* *மீண்டும் பிறப்பு இறப்பு அற்றவன்*. *சாகாதவனே சன்மார்க்கி என்று பட்ட பெயர் சூட்டியுள்ளார்.* *மரணத்தை வென்றவனையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்*


சன்மார்க்கத்தை பின்பற்றும் அன்பர்கள்  இன்னும் வள்ளலார் கொள்கையை முழுமையாக சரியாக  முறையாக தெளிவாக  புரிந்து தெரிந்து  அறிந்து கொள்ளாமலும் அகம் புறம் முதலிய ஒழுக்கத்தை கடைபிடிக்காமலும் இருப்பதால் *சுத்த மெய் அறிவு* வெளிப்படாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும் முடியாமல் அருளைப் பெறவும் முடியாமல் அழிந்து கொண்டே உள்ளார்கள்*


*ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மாவின் உள் இருக்கும் சுத்த மெய் அறிவு வெளிப்பட வேண்டும்* *சுத்த  மெய் அறிவு வெளிப்பட்டால் மட்டுமே வள்ளல்லாரைப்போல் உண்மையை உணர்ந்து  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்லமுடியும்* 


மனிதர்கள் இந்திரிய கரணங்களில் உள்ள *மனம் புத்தி சித்தம் அகங்காரத்தில்* வாழ்ந்து கொண்டுள்ளார்கள். *ஜீவன் ஆன்மாவில் உள்ள  சுத்த மெய் அறிவைத் தொடர்புகொண்டு வாழ்வதில்லை*.

*அதனால் உண்மை வெளிப்பட வாய்ப்பில்லாமல் பொய்யை நம்பி பொய்யிலே வாழ்ந்து  அழிந்துகொண்டு உள்ளார்கள்*  


*எனவே சன்மார்க்கத்தை பின்பற்றும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய சகோதரர்கள் இனிமேலாவது ஆன்மாவின் உள்ளே உள்ள சுத்த மெய்அறிவைத் தொடர்புகொள்ள வேண்டும்* 


*சுத்த மெய்அறிவை  தொடர்புகொள்ள தடையாக இருப்பது என்ன என்பதை சுத்த சன்மார்க்கத்தில்  வள்ளலார் தெளிவுப்படுத்துகிறார். அவற்றை பின்பற்றினால் மட்டுமே உண்மை வெளிப்படும்.* 


*அவற்றை ஊன்றி கவனித்து படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் !*


*எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !*


*இதுதொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்*


*வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும். எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செயதல் வேண்டும்* 


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும் என மனித குலத்திற்கு சொல்லிக்கொடுக்கிறார் வள்ளலார்.*


*வள்ளலார் பாடல் !* 


அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே 


செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !  


*ஆன்ம அறிவைக் கொண்டு சுத்த மெய்அறிவைத் தொடர்பு கொள்ளும் போது அருளின் உருவம் தெரியும்*


*அடுத்த பாடல்*


அருளாலே அருள்இறை அறிகின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே


தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்  திருநட இன்பம் என்று அறியாயோ மகளே ! 


அருளைக் கொண்டு அருளை அறிகின்ற போதுதான் இறைவனின் திருநட இன்பத்தை காணமுடியும் என்கிறார்


*என்று இப்படி ஒரு உயர்ந்த அனுபவத்தை உலகத்தில் எவராலும் சொல்ல முடியாது*


*ஆன்ம அறிவை அறிதலே சுத்த மெய் .அறிவு என்பதாகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வியாழன், 2 டிசம்பர், 2021

அருள் சுதந்தரம் பெற வேண்டும் !

 *அருள் சுதந்தரம் பெற வேண்டும்!*


ஆன்மாக்கள் மனித தேகத்தில் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் சுதந்தரம் பெற்று மரணத்தை வென்று ஆண்டவருடன் சேர்ந்தால் மட்டுமே மீண்டும் பிறப்பு இறப்பு என்பது கிடையாது.


*வள்ளலார்  பாடல்*!


*படமுடியாது இனித்துயரம்* *படமுடியாது அரசே*

*பட்டதெல்லாம் போதும்*  இந்தப் பயந்தீர்த்து இப் பொழுது *என்*


உடல் உயிராதியை எல்லாம் நீ எடுத்துத் கொண்டு *உன்*

*உடல் உயிராதியை எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்*


வடலுறு சிற் றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்

மணியே என் குருமணியே மாணிக்க மணியே


நடனசிகாமணியே என் நவமணியே ஞான

நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.!


என்ற பாடல் வாயிலாக சொல்லுகிறார். *இவ்வுலகியல் வாழ்க்கையில் துன்பம் துயரம் அச்சம் பயம்  சூழ்ந்து மரணம் அடைந்து பிறப்பு இறப்பு தொடர்ந்து  கொண்டே உள்ளது*. *அவற்றை என்னால் தாங்கமுடியவில்லை.என்னுடைய பயத்தை நீக்க வேண்டும் ஆதலால் நீங்கள் இந்த உலக வாழ்க்கையில்  வாழ்வதற்காக எனக்கு வழங்கிய உடல் பொருள் ஆவியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்னுடைய உடல் பொருள் ஆவியை உவந்து (மகிழ்ந்து) எனக்கு அளிக்க வேண்டும் என்று முறையிடுகிறார்*

*ஆன்மாக்கள் பஞ்சபூத உலகில்  வாழ்வதற்கு அருட்பெருஞ்ஜோதி அனுமதியோடு மாயையால் கொடுக்கப்பட்ட  சுதந்தரம் மூன்று.*


அவை *தேகசுதந்தரம்*

*போகசுதந்தரம்*

*ஜீவசுதந்தரம் என்பவைகளாகும்*


இந்த மூன்று சுதந்தரத்தையும் வைத்துக்கொண்டு இவ்வுலகில் பொருள் சம்பாதித்து எந்த எந்த வகையில்  எவ்வாறு வேண்டுமானாலும் விருப்பம் போல் வாழலாம். *ஆனால் அருள் சுதந்தரம் பெறமுடியாது*


*அருள் சுதந்தரம் பெறவில்லை என்றால்   துன்பம் துயரம் பிணி மூப்பு அச்சம் பயம் மரணம் வந்து கொண்டே இருக்கும்*.


மேலும் இறந்து இறந்து பிறந்து பிறந்து  வீண்போது கழித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

*மீண்டும் மனித்தேகம் கிடைப்பது என்பது உறுதியல்ல*


*ஆன்ம சுதந்தரம் அருள் சுதந்தரம் பெறும் ரகசியத்தை கண்டுபிடித்தவர் வள்ளலார்*.


*உயர்ந்த அறிவு பெற்ற மனித்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொள்ள வேண்டும்*.


*எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும்  எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் கோரிக்கை வைக்கிறார் வள்ளலார்*.


*வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது*

*எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்தரம் ஒன்றாலே பெறுதல் கூடும்* *என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க அறிந்து கொண்டேன் என்கின்றார்.*


*திருவருட் சுதந்தரம் நமக்கு எந்தவழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்தே*.

*எனது யான் என்னும்* *தேகசுதந்தரம்* *போகசுதந்தரம்*

*ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும்* *நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்*.


*ஆதலால் மூவகைச் சுதந்தரத்தையும் திருவருட்கே சர்வ சுதந்தரமாக திருவருட் சாட்சியாக கொடுத்துவிட்டேன்*


*ஆதலால் தேவரீர் திருவருட் (ஆன்மசுதந்தரம் அருள் சுதந்தரம் ) சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத  பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வித்தல் வேண்டும்* என்கிறார்.


*ஆன்மா எந்த சுதந்தரம் இல்லாமல்   இவ்வுலகில் தனித்து வாழமுடியாது.*

*ஆதலால் வள்ளலார் வேண்டுதல்படியே ஆண்டவரின் அருள் சுதந்தரத்தை ஆன்மாவிற்கு கொடுத்து மகிழ்கின்றார்*.


வள்ளலார் பாடல்! 


*என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே*

இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே


*தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும்* *எனக்கே*

*தந்துகலந்* *தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே*!


மேலும்


*சுதந்தரம் உனக்கே கொடுத்தனம்* *உனது*

*தூயநல் உடம்பினில்* *புகுந்தேம்*


*இதந்தரும் உளத்தில் இருந்தனம்* *உனையே*

*இன்புறக்* *கலந்தனம்*   *அழியாப்*

*பதந்தனில் வாழ்க* *அருட்பெருஞ் சோதிப்*

*பரிசுபெற்றிடுக*


 *பொற் சபையும்*

*சிதந்தரு சபையும்* *போற்றுக என்றாய்*

*தெய்வமே வாழ்கநின் சீரே.!*


என்றும் மேலும்


தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்

என்னை வேதித்த என்றனி யன்பே!(அகவல்)


வள்ளலார் விரும்பி கேட்டவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்ந்து *என்றும் அழியாத  நன்நிதியான அருள் சுதந்தரத்தையும் ஆன்ம சுதந்தரத்தையும்  கொடுத்துள்ளார்* என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவாக பதிவு செய்கிறார்.


மேலும் மனித தேகம் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவர்களையும் உரிமை உடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும் என நமக்காகவும் வேண்டுகிறார்.


எனவே உயர்ந்த அறிவுபெற்ற  மனித தேகம் எடுத்த நாம் *நல் ஒழுக்கத்தைப் பின்பற்றி அதனால் விளங்கும் அன்பையும் அறிவையும் பயன்படுத்தி அருளைப்பெற்று ஊன் தேகத்தை அருள் ஒளி தேகமாக மாற்றி மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த உயர்ந்த பேரின்பசித்திப் பெரு வாழ்க்கையாகும்*

 

*இது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல மனிதன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய உண்மை சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியாகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.