வியாழன், 28 மார்ச், 2019

நெற்றிக் கண் திறக்கும் வழி !

நெற்றிக் கண் திறக்கும் வழி !

ஒவ்வொரு மனித ஜீவர்களிடத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடம் தான் புருவமத்தி என்பதாகும் அதற்கு சிற்சபா அங்கம் என்றும் பெயர்.லலாடம் என்றும் முச்சந்தி என்றும்  பெயர்.

அந்த இடத்தில் நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குவதால் அதற்கு நெற்றிக் கண் என்று பெயர்.

நெற்றிக் கண்ணைத் திறந்துகொண்டவர்களுக்கு .பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம் .கொலை.என்னும் துன்பங்கள் எக்காலத்தும் வராது.

மேலே கண்ட துன்பங்கள் வராமல்  தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மனிதன் நெற்றிக் கண்ணைத் திறக்க பழக வேண்டும்.

நெற்றிக் கண்ணைத் திறந்து அதில் உள்ள அமுதம் என்னும் *அருளை* உடம்பு முழுவதும் செலுத்தினால் மட்டுமே ஊன  உடம்பு  ஒளி உடம்பாக மாற்றம் அடையும அதற்குத்தான் ஆன்ம தேகம் என்று பெயர்.

*உயிர் உள்ள தேகத்திற்கு ஜீவதேகம் என்று பெயர்...ஆன்மா மட்டும் உள்ள தேகத்திற்கு ஆன்ம தேகம் என்று பெயர்*

உயிரை அழிக்காமல் மீண்டும் பிறப்பு எடுக்காமல் உயிரைத் தன்வசமாக மாற்றிக் கொள்வதே வள்ளலார் காட்டிய நெற்றிக்கண்ணைத் திறக்கும் வழியாகும்.

ஆன்மா ஒரு கோடி சூரியபிரகாசம் ஒளித்தன்மை உள்ளது. அந்த ஆன்மா அருட்பெருஞ்ஜோதியாக. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்படி மாற்றிக் கொள்வதால் பஞ்ச பூதங்களால் பின்னப்பட்ட பூத உடம்பு அருள் ஒளியால் பிரிக்கப்படுகின்றன.

பஞ்ச பூதங்களான உடம்பை மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் பதிவுசெய்துள்ளதை ஊன்றி படிக்கவும்.!

ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏக தேசங்களாயும்.இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குவதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும்.

அந்த ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூத காரிய தேகங்களே உரிமையாக இருக்கின்றன என்றும் அந்த தேகங்களில் ஆன்மாக்கள் ஜீவர்களாகி.அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடும் என்பதால்

*பூதகாரிய தேகம் அவசியம் ஆன்மாவிற்கு தேவைப்படுகின்றது.*..

 பூதகாரிய தேகங்களுக்கு மாயை முதற் காரணம் ஆதலால் அந்த மாயையின் விகற்ப ஜாலங்களே .பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற செயல்களால் தேகத்திற்கு துன்பமும் மரணமும்.பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்டே வருகின்றன..

எனவே இந்த பிறப்பை இறுதிப் பிறப்பாக நிறுத்திக் கொள்வதே மனிதனுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடையாகும்..

ஆன்மாவின் அருள் ஒளியால் தேக மாற்றம் !

ஆன்மாவை வெளியே தெரிய வொட்டாமல் அறியாமை.அஞ்ஞானம் என்னும் ஏழு மாயா திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன..

அத்திரைகளை நீக்கி ஆன்மாவை காண்பதற்கு வழிகாட்டுவதே வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கமாம்..

ஆன்மாவிற்குள மூன்று தேகம் உள்ளது..!

அந்த ஆன்ம தேகத்திற்குள் மூன்று தேகம் அடங்கி உள்ளது.

அதாவது சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் எனபனவாகும்.

சுத்ததேகம்.பிரணவதேகம்.
அடைந்தவர்கள் நிறைய அருளாளர்கள் உள்ளார்கள்.

ஞானதேகம் அடைந்தவர்கள் எவரும் இல்லை.

வள்ளலார் மட்டுமே சுத்த பிரணவ ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்றவர்..ஃ

நெற்றிக் கண்ணை முழுமையாக திறந்து அதில் உள்ள முழு (பூரண) அமுதத்தையும் அனுபவித்தவர் வள்ளலார்..

நெற்றிக் கண்ணைத் திறந்தால் ஐந்து வகையான அமுதவகைகள் நிரம்பி இருக்கின்றது.. அவைகள் என்ன என்ன அமுதவகைகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்..

வள்ளலார் சொல்லுவதைப்
பார்க்கலாம் !

ஐந்துவிதமான அமுதமும் பக்குவ ஞானத்தால் நெற்றிக் கண்ணைத் திறந்தால் மட்டுமே கிடைக்கும்.

பக்குவ ஞானம் என்பது ஞானயோக்க் காட்சி என்பதாகும் ..

1 .வது அமுதம் நாக்கு நுனியில் பக்குவ ஞானத்தால் சிருஷ்டி வல்லப்ப் பிரஞ்ஞையால் சுரக்கும் அமுதமாகும்.

2.வது புவனா அமுதம் நாக்கு மத்தியில் பக்குவ கிரியையால்  ஸ்திதி பிரஞ்ஞை உணர்ச்சியால் சுரக்கும் அமுதமாகும்.

3.வது மண்டலா அமுதம் நாக்கினடியில் பக்குவ இச்சை சம்மார உணர்ச்சியால் சுரக்கும் அமுதமாகும்.

4.அது ரகசியா அமுதம் உள் நாக்கினடியில் பக்குவ திரோபவம் உணர்ச்சியால் சுரக்கும் அமுதமாகும்.

5.வது மவுனா அமுதம் உண்ணாக்குக்கு மேல்.பக்குவ அனுக்கிரம்.அனுக்கிரகம் உணர்ச்சியால் ...சுரக்கும் அமுதமாகும்.

சுபாவத்தினது அனுபவம் துரியநிலை என்கிறார் வள்ளலார்...

இந்த ஐந்தாவது அமுத்த்தின் சுவையை அனுபவித்தவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் உண்மை நிலைகளை காட்டுவதற்கு சில பயிற்சிகளை வைப்பார் ...அதுதான் சித்தி நிலை அனுபவம்.

ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு கோடியும் விளங்கக் குலவு மெய்ப் பொருளே !

என்கிறார் வள்ளலார் ...

 அளவில் அடங்காத. எல்லா சித்திகளையும் பெற்ற வள்ளலார் ஒரு சித்துகூட சுயநலத்திற்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அனுமதி இல்லாமல்  உபயோகப் படுத்தியது இல்லை...

எனவேதான் வள்ளலார்... ஞானசபைத் தலைவருக்கு நல்ல பிள்ளை நானே ! முதற்பிள்ளை நானே ! செல்லப்பிள்ளை நானே ! என்கின்ற பட்டம் பெற்று  வெற்றி அடைகின்றார்.

எனவே மனிதர்களாகிய நாம் நெற்றிக் கண்ணைத் திறந்து அருளைப்பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே எளிமையான உண்மையான பயிற்சியைச் சொல்லிக் கொடுத்துள்ளார்...

ஆதலால் சாதி.சமய.மதங்கள் சொல்லிய கற்பனையான பொய்யான வழிகளில் செல்லாமல்.

உண்மை அன்பு.உண்மை தயவு.உண்மை ஒழுக்கம் .உண்மை கருணை.உண்மை இரக்கம் கொண்டு ஜீவகாருண்ய பணியை முழுமையாக செய்து..மோட்ச வீட்டின் திறவுகோலைப் பெற்று .நெற்றிக் கண்ணைத் திறந்து உள்ளே செல்வோம்...

அதே நேரத்தில் இயற்கை உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் என்பதை உணர்ந்து இடைவிடாது அவரிடம் தொடர்பு (சத்விசாரம்) கொண்டால் மட்டுமே.

ஜீவகாருண்யம் சத்விசாரம் என்ற இரண்டு துவாரங்கள் வழியாகத்தான் நெற்றிக் கண்ணைத் திறந்து பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

வள்ளலார் பாடல் !

கையறவிலாது நடுக் கண்புருவப் பூட்டு..
கண்டு களிகொண்டு திறந்து உண்டு.. நடுநாட்டு ..
ஐயர் மிக உய்யும் வகை யப்பர் விளையாட்டு..
ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு !

சிற்சபையும் பொற்சபையுஞ் சொந்தம் எனதாச்சு..
தேவர்களும் மூவர்களும் பேசுவது என்பேச்சு..
இச்சமய வாழ்வில் எனக்கு என்ன யேச்சு..
என்பிறப்புத் துன்பம் எல்லாம் இன்றோடே போச்சு...

என்னும் ஆனந்த மேலீடு என்னும் தனிப்  பதிகத்தில் ஆனந்தமாக 11 கன்னிகளில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்...
படித்து உணர்ந்து பயன் பெறுங்கள்...

விரிக்கில் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 24 மார்ச், 2019

அரசியல் எல்லோருக்கும் வேண்டும் !

அரசியல் எல்லோருக்கும் வேண்டும் !

நாம் எல்லோரும் அரசியல் சார்ந்துதான்  வாழ்ந்து கொண்டு வருகிறோம்..

அரசியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை..ஆன்மீகம் இல்லாமல் அரசியல் இல்லை..

உயிர் இல்லாமல் உடம்பு இல்லை .உடம்பு இல்லாமல் உயிர் இல்லை என்பது போல்..

சுத்த சன்மார்க்கிகளாகிய நமக்கும் நாட்டைக் காப்பாற்றும்  பொறுப்பு அதிகம் உள்ளது...

ஆன்மீகம் என்பதும் தூய்மையான அரசியல் என்பதும் மக்களுக்கு நன்மை செய்யும் பொறுப்பக்கள் கொண்டது...

சாதி சமய மதங்களின் கொள்கையால் தான் உலகம் முழுவதும் ஆட்சி அதிகாரங்களை சமய மதங்கள பிடித்ததுள்ளன.

அவர்களின் மூடநம்பிக்கை கொள்கையால் தான் நாடும். நாட்டு மக்களும் அழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கியுள்ளார்.

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

*பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்*

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

*போருற் றிறந்துவீண் போயினார்* இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ*

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்..

மேலும் மக்களைக் காப்பாற்ற புனிதமுறு சுத்த சன்மாக்க நெறியைக் காட்டி அதன் கொள்கைகளை வகுத்து மக்களுக்குப் புரியும்படி விளக்கி.

மெய்ப்பொருளை விளக்கி.எல்லோரும் சுகநிலையுடன் வாழவேண்டும் என்பதற்காக

என்னுடைய  நல்லப்பிள்ளை செல்லைப்பிள்ளை என்பதால் இந்த பணியை.. உயர்ந்த பொறுப்பை ஏற்று செயல்படுவதற்காகவே   இவ்வளவு பெரிய மகத்தான வேலையை..

அதாவது உலக அருள் ஆட்சி பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்து உள்ளேன் என்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்....

எனவே சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்...

மக்களை நல்வழிப்படுத்த சுத்த சன்மார்க்க கொள்கைகளால் மட்டுமே முடியும்..

சாதி சமய மதமற்ற பொது சேவையால்  எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்றால் சுத்த சன்மார்க்கத்தால் மட்டுமே முடியும்..

 *நாம் உண்மையை எடுத்துச் சொல்ல பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.*..

ஏன் என்றால்

1874 -1-30 ஆம் நாள் வள்ளலார் சித்தி பெற்ற நாள்.

அந்த நாள் உலகிற்கு ஈடு இணையற்ற ஒரு பொன்னான சிறந்த நாள் ..

அன்றுதான் உலக அருள் ஆட்சி பொறுப்பை வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்குகிறார்...

வள்ளலார் சொல்லுகின்றார் !

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!

 மேலே கண்ட பாடலில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் பறை சாற்றுகிறார்.

எனவே அண்டகோடிகளில் எல்லாம் வள்ளலார் தலைமையில் அருள் ஆட்சி நடந்து கொண்டுள்ளது..

இனிமேல் சமய மதங்களின் ஆட்சி அதிகாரங்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படும் என்கிறார் வள்ளலார்...

வள்ளலார் பாடல் !

கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே

பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்

விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற

*தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.!*

மேலும்


*பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே*

*சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்

தெல்லா உலகும் இசைந்தனவே* எம்பெருமான்

*கொல்லா நெறிஅருளைக் கொண்டு.!*

மேலும் பதிவு செய்கின்றார் !

*முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன*

*மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது*

பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின

என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.!

இப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் தெரிவிக்கின்றார்..

மேலும் !

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக சொல்லியுள்ளார்

*உலகம் எல்லாம் போற்ற ஒளிவடிவனாகி நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாலே ...எனக்கு தனிப்பட்ட முறையில் அவரின் அருள் செங்கோல் வழங்கப்பட்டு உள்ளன என்கிறார்.*

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள சுத்த சன்மார்க்க அன்பர்கள் அரசியலிலும் ஆன்மீகத்திலும் தொடர்பு கொள்வது எந்த வித்த்திலும் தவறு இல்லை...

நல்லவர்கள் ஒதுங்கி இருப்பதால் தீயவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து நாட்டையே அழித்துக் கொண்டுள்ளார்கள்..

*நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது சுத்த சன்மார்க்கிகளால் மட்டுமே முடியும்..*

அந்த பொறுப்பை வள்ளலார் நம்மிடம் தந்து உள்ளார்.

கருணை இல்லாத ஆட்சியை அகற்றி கருணை உள்ள ஆட்சியை கொண்டு வருவதற்கு சுத்த சன்மார்க்கிகள் அயராது உழைக்க வேண்டும்..

*அதே நேரத்தில் அருளைப் பெறுவதற்கு சுத்த சன்மார்க்க கொள்கைகளை.தடம் மாறாமல் இடைவிடாது கடைபிடிக்க வேண்டும்.*.

*நாம் சொல்வதை மக்கள் கேட்கும் அளவிற்கு அகமும் புறமும்  ஒழுக்கம் நிறைந்து அன்பும் தயவும் நிறைந்த வடிவமாக வாழ்ந்து காட்டி போதிக்க வேண்டும்...*

வள்ளலார் பாடல் !

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

*அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க -* தெருள்நயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்

*தெல்லோரும் வாழ்க இசைந்து.!*

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 22 மார்ச், 2019

சாதி சமய மதங்களை சாடுவது ஏன் ?

*சாதி சமய மதங்களை சாடுவது ஏன் ?*

சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி !

*சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன்...*
வள்ளலாரின் அருள் வாக்காகும்..

சாதி சமய மதங்களின் சூழ்ச்சிகள் !

ஒரே கடவுள் கொள்கையை பல கடவுள்களாக  மாற்றியது !

உண்மைக் கடவுளை வெளிப்படையாக காட்டாமல் மண்ணைப்பொட்டு மறைத்து விட்டது !

பொய்யான பல கடவுள்களை உருவாக்கியது !

இந்து மதம் மட்டும் அல்ல. எல்லா மதங்களுமே கடவுளின் உண்மை அறியாமல் பொய்தான் சொல்லி உள்ளன !

 எல்லா மதங்களுமே உலக ஒற்றுமையை குலைத்து உள்ளன !

மனித நேயத்தை.ஆன்மநேயத்தை சீர் குலைத்து உள்ளன !

வேற்றுமையை உருவாக்கி உலகத்தை போர்களமாக மாற்றி உள்ளன !

எல்லைகளை வகுத்து பிரிவினையை உருவாக்கி.எல்லை பாதுகாப்பு என்ற பெயரில் விரோதத்தை உருவாக்கி உள்ளன !

இறைவன் குடியிருக்கும் உயிர்களை கொலை செய்ய வழிவகை செய்து கொடுத்து உள்ளன !

மனிதர்களுக்காகவே மற்ற உயிர்கள் படைக்கப்பட்டன என்று உயிர்களை கொன்று திண்பதற்கு அதிகாரமும்.ஆதரவும் அளித்தது மட்டும் அல்ல .அதற்குண்டான கடவுள்களையும் படைத்துள்ளன.

ஜீவ காருண்யமும்.உயிர் இரக்கமும் இல்லாமல் மனிதனை  கடின மனம் உள்ளவனாக மாற்றி உள்ளன !

உயிர்நேயம்.மனித நேயம..ஆன்மநேயம் இல்லாமல் .சுயநலத்தோடு வாழ்ந்து அழிந்து போவதற்கு வழிவகை செய்து உள்ளன !

பொதுவான கடவுள்  வழிபாட்டுக் கொள்கையை தோற்றுவிக்காமல்.
பல வழிபாட்டுக் கொள்கையை தோற்றுவித்தது !

 சமத்துவம் சமாதானம்.ஒற்றுமை சகோதர உரிமை யாவும் இல்லாமல் வேரோடு சாய்த்து உள்ளன !

மனிதர்களை சாதியின் பெயரால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமையை உண்டாக்கி உள்ளது !

மனிதனை மனிதனே பிரித்து வைத்து வேற்றுமையை உண்டாக்கியது !

சாதியால்.சமயத்தால்.
மதத்தால் மனிதனை மனிதன் பிரித்து வைத்து தீண்டாமையை உண்டாக்கியது.

பணத்தால் குணத்தால் தெய்வத்தால் உயர்ந்த சாதி.தாழ்ந்த சாதி  என்ற வேற்றுமையை உண்டாக்கியது.!

பொருளாதாரத்தை வைத்து ஏற்றதாழ்வை உண்டாக்கி உள்ளது !

குலக் கல்வி முறையைக்  கொண்டு வந்து ஓர்சாரார் மட்டுமே கல்வி கற்க வைத்தது  !

மக்களுக்கு பொருள் சார்ந்த சாகும் கல்வியை போதித்தது !

அனைவரும் கற்க வேண்டிய சாகாக் கல்வியை மறைத்தது !

உண்மையான ஆன்மீக அறிவை மழுங்க வைத்தது !

பொருள் அறிவைக் கொண்டு. அருள் அறிவை குழிதோண்டி புதைத்துவிட்டது !

தெய்வங்கள் பெயரால் வாய் பேசாத அப்பாவி உயிர்களை பலி கொடுக்க வைத்தது !

ஆணுக்கு ஒரு நீதி.பெண்ணுக்கு ஒரு நீதி என்ற பேத்த்தை உண்டாக்கியது !

பொய்யான தியானம்.தவம்.யோகம்.யாகம் போன்றவைகளை  சொல்லி மனிதனை படு குழியில் தள்ளியது !

கணவன் இறந்தால் மனைவியை தாலி வாங்க வைத்தது !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வைத்தது !

கணவன் இறந்தால் மனைவியை உயிரோடு எரிப்பது !

கடவுளின் பெயரால் பெண்களின் கற்பை சூரையாடுவது !

ஆண்களுக்கு மட்டும் யோகம் முதலிய சாதனங்களை பயிற்றுவித்து.பெண்களை புறம் தள்ளியது !

பெண்களுக்கு ஞானமும் அருளும் தோன்றாது என்றது.

கடவுளுக்கு குடும்பம் மனைவி.குழந்தைகள் இருப்பதாக சொல்லி .கடவுளை அசிங்கப்பட செய்ய வைத்தது !

கடவுளுக்கு மனிதன் திருமணம் செய்வது ! முதல் இரவிற்கு கடவுளை அனுப்புவது !

பொது சட்டங்களை சுய நலத்திற்காக .சாதி்சமய மதங்களுக்காக பொது நலம் இல்லாமல் இயற்றியது !

வேதம் ஆகம்ம் புராணம்.இதிகாசம்.சாத்திரம் என்ற பொய்யான கலைகளை மக்கள் மனங்களில் தினித்தது !

தெய்வங்கள் பெயரால் சில இனத்தாரை கொள்ளை அடித்து வாழ்வதற்கு வழி வகுத்து தந்த்து !

 எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்று  சொல்லி மனிதனின் உயர்ந்த அறிவை தெளிவு அடையச் செய்யாமல் விதி என்ற பெயரில் மழுங்க வைத்தது.!

கடவுளின் பெயரால் இயற்கை வளங்களை சுயநலத்திற்காக அழித்தது.!

கடவுளின்் பெயரால் பொது சொத்துக்களை இயற்கை வளங்களை கையகப்படுத்தியது.

 பேசும் தெய்வங்களான மனிதர்களை பசி.பட்டினி.வறுமையில் தள்ளிவிட்டு.பேசாத தெய்வங்களுக்கு உணவைப் படைத்து  வழிபாடு செய்வது !

 சொர்க்கம்.நரகம். கைலாயம்.வைகுண்டம்.சத்தியலோகம்.பிரம்மலோகம் போன்ற லோகங்கள் இருப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றம் அடைய செய்ய வைத்தது !

தன்னுள் இருந்து இயங்கும்  கடவுளை அறிந்து கொள்ளாமல்.ஆலயங்களில் கடவுள் இருப்பதாக சொல்லி மக்களை வெளியே அலையவிட்டது !

அருள் அறிவை பெற வேண்டிய மனிதனை பொருள் அறிவுக்குத் தள்ளியது !

மரணம் அடையாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்.
மனிதனை மரணம் அடைய வழிவகையை சொல்லிக் கொடுத்தது !

மரணம் என்பதை இயற்கை அல்ல .செயற்கை என்பதை அறியாமல் இருந்த்து..!

ஆறிலும்  சாவு.நூறிலும் சாவு என்ற பொய்யான தகவலை மக்கள் மனதில் பதிய வைத்தது !

அருள் தரும் கடவுளைக் காட்டாமல் பொய்யான கற்பனைக் கடவுள்களைக் காட்டி மக்களை நம்ப வைத்தத்து !

*சித்தி பெறும் மனிதனை முத்தியோடு நிறுத்தியது !*

 கடவுளின் அருள் அறிவை பெற வேண்டிய மனிதனை தாழ்ந்த மருள் அறிவுக்கு தள்ளியது !

*இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்ளாமல்.
கற்பனையான தத்துவங்களை  கடவுள்களாக  தோற்றுவித்தது.
மக்களை படுகுழியில் தள்ளியது..**

இப்படி பலவகையான பொய்களைச் சொல்லி மனித இனத்தை படுகுழியில் தள்ளியதால் .சாதி.சமய.மதங்களை வள்ளலார் சாடுகின்றார்...

**அந்த உண்மையைத்தான் வெளிப்படையாக  நான் வெளியிடுகிறேன்
அவ்வளவுதான்**.

*இன்று கடவுளின் பெயரால் ஏற்படுத்திய கொள்கைகள். சட்ட திட்டங்கள் தான் மனிதனை அழித்துக் கொண்டு உள்ளன !*

யார் மீதும் விருப்பமமோ.வெறுப்போ எனக்கு இல்லை...

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் .அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற பெருங்கருணையுடன் என் பதிவுகள் இருக்கும்....

இந்த பிறவியில்.உயர்ந்த அறிவுள்ள மனிதன் அடைய வேண்டிய ஆன்ம லாபத்தை காலம் உள்ளபோதே பெற்று.இம்மை இன்பலாபம்.மறுமை இன்பலாபம்.பேரின்ப லாபம் பெற்று மரணத்தை வென்று

என்றும் அழியாத முத்தேக சித்தியை பெற்று சுத்த பிரணவ ஞான தேகத்தை பெற்று இறைவனுடன் ஒன்றி கலந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே...

வள்ளல் பெருமானின் பேராசை பெருங்கருணையாகும்..எனவேதான் வள்ளலார் மனித குலத்திற்கு உண்மையை மறைக்காமல் உண்மையை உலகிற்கு  வெளிப்படுத்துகின்றார்.

அதுவே என் விருப்பமும் ஆகும்..

வள்ளலார் பாடல் !

நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ

நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ

சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்

தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்

சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்

சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த

ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்

உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.!

என்னும் பாடலில் ..
நீங்கள் அனைவரும் என்னுடைய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடன் பிறப்புக்கள் என்பதால் வெளிப்படையான உண்மையை வெளிப்படுத்துகிறேன் என்கிறார் வள்ளலார்.

*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்ற உண்மையை உள்வாங்கி ..என்றும் இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி யைத் தொடர்பு கொண்டு.அருளைப் பெறுவோம்.
*ஆன்ம இன்ப லாபம் பெற்று.ஆன்ம இன்ப பெருவாழ்வு அடைவோம் !*

* *மரணத்தை வென்று முத்தேக சித்தி பெறுவோம்..*

*கடவுளின் உண்மையை அறிந்து கொள்வதற்கே வடலூரில் "*சமர சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை*" தோற்றுவித்துள்ளார்*.

*வடலூர் வந்து வந்து நம் உண்மைத் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உரிமையுடன் தொடர்பு கொள்வோம்.*

பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்.

இன்னும் விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 21 மார்ச், 2019

வள்ளலார் கொடுத்த சவுக்கடி !

வள்ளலார் கொடுத்த சவுக்கடி !

கடவுள் பல உண்டு என்பவருக்கும்.கடவுள் இல்லை எனபவருக்கும் சரியான பாடலால்  சவுக்கடி கொடுத்தவர் வள்ளலார்..

கடவுளின் உண்மைத் தெரியாமல் தத்துவங்களை கடவுள்களாக பாவித்து படைத்து ஆலய வழிபாட்டை உறுவாக்கினார்கள்..

ஆலயங்களைக் கட்டியவர்கள் அக்கால மன்னர்கள்...

மன்னர்களை.
அவர்களின் ஆட்சியை புகழ்ந்து  பாடி பேசி ஏமாற்றி அவர்களை நம்ப வைத்து  ஆலயங்களை எழுப்ப வைத்தது ஒரு கும்பல்..

தங்களுடைய சுய நலத்திற்காக வேதம் ஆகமம்.புராணம்.இதிகாசங்கள் போன்ற பொய்யான காவியங்களை கற்பனைகளாகப் படைத்து மக்களையும் .
மன்னர்களையும். கடவுளின் பெயரால்  நம்ப வைத்து ஏமாற்றி பிழைத்து கொண்டு வந்துள்ளார்கள்..
அவர்களுக்கு உயர்ந்த சாதி என்றும் உயர்ந்த பதவி என்றும் மன்னர்கள் கொடுத்து வந்தார்கள்.

கடவுள் பெயரால்.சாதி.சமய.
மதங்களைத் தனித்தனியே பிரித்து மக்களை.உயர்ந்த சாதி.தாழ்ந்த சாதி எனப்பிரித்து மக்களை அடிமைப் படுத்தி அலைய விட்டார்கள்..

ஒவ்வொரு சாதிக்கும்.சமயத்திற்கும்.மதத்திற்கும் தகுந்தாற்போல் கடவுளையும் பிரித்து வைத்து விட்டார்கள்...

அதிலே சைவக்கடவுள்.அசைவக்கடவுள் என பிரித்து வைத்து விட்டார்கள்.அதாவது உயிர்களை பலிவாங்கும் தெய்வங்கள்.
பலிவாங்காத தெய்வங்கள் என பிரித்து .ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு பெயர்களை வைத்து நம்ப வைத்து விட்டார்கள்.

சுமார் ஐந்து ஆயிரம் ஆண்டுகளாக கடவுளின் உண்மைத் தெரியாமல்  இந்த மோசடி செயல்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன..

வள்ளலார் சகட்டுமேனிக்கு எல்லாத் தெய்வங்களையும் சிறு தெய்வங்கள் என்றும்.சிறு தெய்வ வழிபாடு வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.

உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்ற வள்ளலார் வந்து வாழ்ந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று.கடவுளின் உண்மையை உலகிற்கு பறை சாற்றுகிறார்..

தெய்வங்கள் பலப்பல உண்டு என்பவர்களுக்கும் அவற்றைப் படைத்தவர்களுக்கும் .வழிபடுபவர்களுக்கும்.அறிவு தெளிவு இல்லை என்று வெளிப்படையாக  பாடலிலே பதிவு செய்கிறார்..

வள்ளலார் பாடல். !

 தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கு அறிவு அருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!

மேலே கண்ட பாடலிலே .அறிவு இல்லாமல் பல தெய்வங்களை வழிபாடு செய்து வணங்கி வருகிறார்கள். அவர்களுக்கு உண்மை அறிந்து கொள்ள அறிவை கொடுங்கள் என்று... உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யிடம் மக்களுக்காக வேண்டுகின்றார்.

மேலும் வேதம் ஆகமம் புராணம் இதிகாசங்கள் யாவும் பொய் அவற்றை நம்பாதீர்கள் என்பதை பாடலிலே பதிவு செய்கிறார்...

வள்ளலார் பாடல் !

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.?

என்னும் பாடலில்.

மக்களுக்கு உண்மையை சொல்லாமல் பொய்யானவற்றை சொல்லி மக்களை ஏமாற்றுவதால் என்ன பயன் அடையப் போகிறார்கள்.போகிறீர்கள் என்பதை தெளிவாக பறை சாற்றுகிறார்..

மேலும் பாடல் !

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

என்ற பாடலில் ...
எல்லா உலகத்திற்கும் *ஒரே கடவுள் தான் உண்டு அவரே அருட்பெருஞ்ஜோதி* யாக எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டு உள்ள அருள் ஆற்றல் படைத்த இயற்கை உண்மை என்னும் அருள் ஒளிதான் தனிப்பெரும் தலைமை கடவுள் என்பதை அறிந்திடாத.உணர்ந்திடாத .சமய மதவாதிகள்  பொய்யான சாத்திரங்களையும் அதற்குண்டான கடவுள்களையும் படைத்து எமது தெய்வம் .எமது தெய்வம் என்று பங்குபோட்டு வணங்கி வழிபாடு செய்து.. அவர்களும் அழிந்து.மக்களையும் அழிய வைத்து விட்டார்கள் ...

கடவுளின் உண்மையை தெரிவித்த வள்ளலார் மீது..சமய மதவாதிகள்  கடுமையான கண்டனம் தெரிவித்து.அவர் எழுதிய திருஅருட்பாவை மருட்பா என்று வாதம் செய்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தோல்வி அடைந்தார்கள்...

எனவே கலையை உரைக்க  வந்த கற்பனைக் கதைகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று..இருட்டில்  தவித்த  மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் வள்ளலார்..

வள்ளலார் பாடல் !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

மேலே கண்ட பாடலிலே கலை உரைத்த கற்பனையை நிலையானது என்றும் உண்மை என்றும் கண்மூடித்தனமாக மக்களை நம்ப வைத்த கற்பனைக் கதைகள் அனைத்தையும் மண்ணில் போட்டு புதைக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்...

இப்படி எவரும் சொல்லாத சொல்லமுடியாத உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்து உரைத்து.உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்து...மக்கள் நல்வாழ்வு  வாழ்வதற்கு நல்வழிக் காட்டியவர் தான் வள்ளலார்...

கடவுள் இல்லை என்பவர்கள் !

சில பகுத்தறிவாளர்கள்.
மற்றும் நாத்தீகம் பேசுபவர்கள் கடவுள் இல்லை.இல்லவே இல்லை என்பவர்களுக்கு  வள்ளலார் சரியான பதிலடி கொடுக்கின்றார்...

வள்ளலார் பாடல் !

 கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

2. சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

3. ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

4. ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

5. மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.

6. துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.

7. சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.

8. சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
இற்பகரும் இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

9. வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.

10. அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

11. **நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு**

மேலே கண்ட பாடலில்  இறைவனைப் பற்றியும் நம் உடம்பில் இறைவன் எவ்வாறு இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதையும் அனுபவித்து சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் ...

*நாத்திகம் சொல்கின்றவர் தம்நாக்கு முடைநாக்கு என்றும் அவர்கள் நாக்கு ருசிக் கொள்வது நாறிய பிண்ணாக்கு என்கிறார்...*

*நாக்கு முடை நாக்கு என்றால் ஊமையன் என்பதாகும் ..*

*நாரிய பிண்ணாக்கு என்றால் மலம் என்பதாகும் .*.

*கடவுள் இல்லை என்பவன் ஊமையன் என்றும் அவன் நாக்கு ருசிக் கொள்வது மலம் தின்பதற்கு சமமானது  என்கிறார்..*

இதைவிட கீழ்த்தரமான வார்த்தைகளே கிடையாது...

*எனவே பல கடவுள் உண்டு என்று வழிபடுபவன் பைத்தியக்காரன் என்றும்..*

*கடவுள் இல்லை என்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்பவன் என்றும்.*

*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ! ஆண்டவர் என்று அறிந்தவன் உண்மையான அறிவுள்ளவன் என்றும் புரிந்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.*.

எப்படி இருப்பினும் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களையும் நம்மவர்களாக்கி கொள்வதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க ஆன்மநேய  ஒருமைப்பாட்டு உரிமையாகும்.....
மனித நேயமாகும்.

உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும் உயிர்களும்.  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்டது  என்பதுவே உண்மையாகும்

சிந்திப்போம் திருந்துவோம் செயல்படுவோம்.

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 13 மார்ச், 2019

உலக உயிர்களின் பாதுகாப்பு மய்யம் வடலூர் !

உலக உயிர்களின் பாதுகாப்பு மய்யம்!

 கடலூர் மாவட்டத்தில் உள்ள உத்தர ஞான சிதம்பரம் என்னும் பெயருடன் விளங்கும் வடலூர் தான் உலக உயிர்களின் பாதுகாப்பு மய்யமாக இயங்கிக் கொண்டுள்ளது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.!
படைக்கும் தொழிலை செய்வது..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !
காக்கும் தொழிலை செய்வது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை !
அருளும் தொழிலை செய்வது..

இவைகள் மூன்றும் அருட்பெருஞ்ஜோதி ஆணைப்படி வள்ளலார் வடலூரில் தோற்றுவித்துள்ளார்..

உலக உயிர்களின் பசி.பிணி.தாகம் .இச்சை.எளிமை.பயம் கொலை போன்ற துன்பங்களில் இருந்து காப்பாற்றும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமை பீடம் தான் வடலூர்..

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்கிறார் வள்ளலார்..
.
வள்ளலார் பாடல் !

உலகமெலாந் தொழ உற்றது எனக்குண்மை ஒண்மைதந்தே
இலக எலாம் படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்
கலக மிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகமெனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே.!

அடுத்து ஒருபாடல் !

உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்

கலகநிலை அறியாத காட்சி யாகிக்
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி

இலகு சிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி

அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
தானந்த மயமாகி அமர்ந்த தேவே.!

என்னும் பாடல் வரிகளின் மூலம்.உலக உயிர்களை காப்பாற்றும் தலைமை மய்யமாக வடலூர் விளங்கிக் கொண்டு உள்ளதை. அறிந்து கொள்ளலாம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 12 மார்ச், 2019

ஆணும் பெண்ணும் தவறு செய்யக் காரணம் ?

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தவறு செய்ய முக்கிய காரணம்..

நம் உடம்பிற்கு உள்ளே செல்லும் ஒரே வழி வாய்தான்...

வாயின் வழியே தான் எந்த உணவாக இருந்தாலும் அனுப்ப முடியும்.

வாயைக் கட்டாதவன் வழி தவறி செல்வான் !

ஒவ்வொருவரும் உண்ணும் விகார உணவுதான் உணர்ச்சியை தூண்ட காரண காரியமாக  இருக்கின்றது.

அதிலும் மாமிச உண்பவர்கள் தவறு செய்ய தயங்கவே மாட்டார்கள்..

தாமச உணவு சாத்வீக உணவு என இரண்டு வகை உள்ளது...

சாத்வீக உணவான காய்கறிகள் கீரைவகைகள் உண்பவர்கள் உணர்ச்சியை கட்டுபடுத்துவார்கள்..

இப்போது உள்ள உணவு வகைகளான.மசால் சம்பந்தப்பட்ட மாமிசம்.கிழங்குவகைகள்.மாவு வகைகள்  சம்பந்தபட்ட எந்த வகை உணவாக இருந்தாலும் உண்பவர்கள் ..

தெரிந்தும் தெரியாமலும் தவறு செய்து கொண்டே தான் இருப்பார்கள்..

இப்போது டிவி சேனல்களில் கண்ட கண்ட உணவு முறைகளை செய்து காட்டி மக்களை படுகுழியில் தள்ளிக் கொண்டு உள்ளார்கள்...

அவர்கள் பணம் சம்பாதிக்க மக்களை தவறான உணவு முறைகளுக்கு கொண்டு செல்கிறார்கள்...

நாக்கை தேவை இல்லாத ருசிக்கு பழக்கி விட்டோம்..

நாக்கு ருசி கொள்வது நாரிய பிண்ணாக்கு என்பார் வள்ளலார்.

(நாரிய பிண்ணாக்கு என்பது மலத்தை குறிப்பதாகும்)

அதனால் பலவகைப்பட்ட ருசியை பழகிவிட்டோம்.அந்த ருசி கண்ட உணவுமுறைகளால் கேள்விப்படாத நோய்கள் வந்து மக்கள் அவதிப்பட்டு அழிந்து போகிறார்கள்..

இறுதியில் எதையும் சாப்பிட முடியாமல் கஞ்சி குடிக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள்..

உணவே மருந்து.மருந்தே உணவு என்பதை மக்கள் மறந்து விட்டார்கள்.மறக்க வைத்துவிட்டார்கள்.

விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி...

ஒவ்வொரு மனிதர்களின் உண்ணும் உணவுக்கு தகுந்தாற்போல் உடம்பில் உண்டாகும்  இரத்தம் வேறுபடும்..சுக்கிலம் வேறுபடும் அதாவது விந்து வேறுபடும்..வீரியமுள்ள சுக்கிலத்தினால். ஆண் பெண் இருபாலரும் தவறு செய்ய தயங்கமாட்டார்கள்..

வீரியமுள்ள சுக்கிலத்தின் தன்மையானது  தவறு செய்ய தூண்டிக் கொண்டே இருக்கும்..

ஒழுக்கத்தைப் பற்றி மேடையில் பேசுபவர்களே அதிகம் பேர்  தவறு செய்பவர்களாகவே இருப்பார்கள்..

எனவே அவை  அவர்கள் குற்றம் அல்ல.அவர்கள் உண்ணும் உணவே எல்லாவற்றுக்கும் காரண காரியமாக இருக்கின்றுது..

எனவே வள்ளலார் தெளிவாக  சொல்லுவார்.

சோற்றாசையோடு காம சேற்றாசைப் படுவாரை துணிந்து கொள்ள கூற்று ஆசைப்படும் என்பார்.

காமத்தின் வேட்கையிலே இருப்பாரை கூற்றுவன் என்னும் எமன் சீக்கிரம் வந்து கொண்டுபோய் விடுவான் என்கிறார்...

நோய் வருவதற்கு காரணம் துன்பம் வருவதற்கு காரணம் நாம் உண்ணும் உணவேயாகும்..உணவினால்  உண்டாகும் இரத்தம்.அதில் இருந்து உண்டாகும் சுக்கிலம் என்னும் விந்துவே தவறு செய்வதற்கு காரண காரியமாகின்றது.

எனவேதான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் மேலோர்..

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார். !

காரமும் மிகுப்புளி சாரமும் கைப்போடே உப்போட கசப்போடு கூட்டி ஊரமுது உண்டு நீ ஒழியாதே என்பார்...

காரம் உப்பு புளிப்பு கசப்பு அதிகமாக உணவிலே சேர்த்துக் கொள்கிறோம்.

துவர்ப்பு இனிப்பு இரண்டையும் உணவில் சேர்க்க விட்டு விடுகின்றோம்..

மேலே கண்ட ஆறுசுவைகளில் சரி சமமாக உண்டால் நோய் வராது.துன்பம் வராது...

நமக்கும் கீழ் உள்ள மிருகங்கள் தாவரம் வகை உணவை உட்கொள்ளும்.யானை.குரை.ஆடு.மாடு.எருமை.ஒட்டகம் போன்றவைகள் ரொம்ப பலசாலியாகவும் மனிதர்களுடன் சேர்ந்து  பழகும் வகை சார்ந்த்தாகவும் இருக்கும்..

மாமிசம் உண்ணும் பழக்கம் உடைய.கரடி.புலி.சிங்கம் போன்ற மிருகங்கள் கரடுமுரடான காட்டில் வாழ்கின்றன..எந்த உயிரையும் அடித்து கடித்து கொன்று உண்ணும் பழக்க முடையதாக இருக்கின்றது...மனிதர்களோடு சேர்ந்து வாழாது...

இதில் இருந்து நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்...

உலகில் உள்ள எல்லா தவறுகள் நடப்பதற்கும் மற்ற எல்லாவற்றுக்கும் அடைப்படைக் காரணம் நாம் உண்ணும் உணவே காரணம் ...

காரணம் இல்லாமல் காரியம் நடக்காது...

உயர்ந்த அறிவுள்ள மனிதன் காரம்.உப்பு.புளிப்பு மற்றும் மசாலா கலந்த மசாலா உணவை உட்கொள்கின்றவன்  தாழ்ந்த அறிவுள்ள வனாக மாறிவிடுகிறான்..

அதனால் கொலை.கொல்லை.கற்பழிப்பு.
குடிபழக்கம்.தீவிரவாதம்.பயங்கரவாதம்.பொய் சூது.பொறாமை.ஏமாற்றுதல். .நாடுகடத்தல் .பணம் கடத்தல் . லஞ்சம்.லாவண்யும்.அரசியல் சூதாட்டம்.அதிகார அக்கரமகங்கள்..போன்ற எல்லாமே நடக்கும் நடந்து கொண்டே இருக்கும்...

உண்மை.நேர்மை.ஒழுக்கம்.சத்தியம். தர்மம்.பகுத்தறிவு .ஒற்றுமை.ஜீவகாருண்யம். மற்றும் ஆன்மநேய ஒருமைப்போடு போன்ற ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டுமானால் சாத்வீக உணவை உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிட்டால ..

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உயர்ந்தவர்களே !உயர்ந்த அறிவு பெற்றவர்களே !

நம்மைப் படைத்த இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அன்போடு ஆசையோடு ஏற்றுக்கொண்டு துன்பம் தராமல் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டே இருப்பார்.

மனித வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே ! இறைவன் படைத்துள்ளார்.

உயர்ந்த அறிவுள்ள மனிதன் தாழ்ந்த நிலைக்கு செல்வதால் தானும் அழிந்து மற்றவர்களையும் அழித்து விடுகிறான்..

நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 11 மார்ச், 2019

ஆன்மாவை அறியாதவர்கள் மனிதபிறவிக்கு தகுதி அற்றவர்கள் !

ஆன்மாவை அறியாதவர்கள் மனிதப்பிறவிக்கு தகுதி அற்றவர்கள். !

*ஒவ்வொரு பிறவியாக கடந்து இறுதியில் .உயர்ந்த அறிவுள்ள பிறவியாக மனித தேகம் கொடுத்துள்ளது இறைவன் வழங்கிய கொடையாகும்..*

உயர்ந்த அறிவுள்ள பிறவி கிடைத்த மனிதன் உயர்ந்த இடத்திற்கு செல்லாமல் .தாழ்ந்த நிலையிலே வாழ்ந்து அழிந்து போகிறான்...

காரணம் !

உயர்ந்த இடத்திற்கு செல்லும் வழியை வள்ளலார் மட்டுமே ..

**துறைஇது.வழிஇது.
துணிவிது.நீ செய்யும் முறைஇது என மொழிந்துள்ளார்**

மனிதர்களாகிய நாம் இதுவரையில் வள்ளலார் சொல்லியுள்ள நேர்வழிப்பாதையை பின் பற்றாமல்.தவறான பாதையையே பின்பற்றி பிறந்து பிறந்து .இறந்து இறந்து வீண் போகின்றோம்....

*நம்மை இடைவிடாது.நம் உடம்பிலே அமர்ந்து.உயிர் உடம்பு கரணங்கள்.இந்திரியங்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவை அதாவது உள் ஒளியை தொடர்பு கொள்ள நேர்வழி தெரியாமல் தவறான வழியை பின்பற்றி அழிந்து அழிந்து வீண் போகின்றோம்...*

*ஆன்மா கோடி சூரிய பிரகாசம் உடையது.*.

அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளால்.அகத்தில் உள்ள ஆன்மா . மறைக்கப்பட்டுள்ளது அவை திரைமறைப்பில் இருந்து அனகமாக அதன் வேலையை ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டு உள்ளது..

ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் நீங்கினால் தான் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும்..

ஆன்மாவுக்குள் உள் ஒளியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கிறார்..

உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட வெள்ஒளி காட்டிய மெய்  அருட் கனலே !

என்கிறார் வள்ளலார்..
மெய் அருட்கனல் என்பதுதான் அருட்பெருஞ்ஜோதி யாகும்...

நம் உள் இருக்கும் ஆன்மாவையே பார்க்க முடியாமல் தொடர்பு கொள்ள முடியாமல்.பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எப்படி பார்க்க முடியும் ! எப்படி தொடர்பு கொள்ள முடியும்.! எப்படி அருளைப் பெற முடியும் ! எந்த வகையில் மரணத்தை வெல்ல முடியும்...

எந்த வகையில் கடவுள் நிலை அறிந்து அம் மயமாக மாற்ற முடியும்.

உயர்ந்த அறிவு விளங்கிய மனிதர்கள் சிந்திக்க வேண்டும்....

ஆன்மாவைத் தொடர்பு கொள்ள இரண்டே இரண்டு வழிதான் வள்ளலார் சொல்லி உள்ளார்....

ஜீவகாருண்யம் என்னும் பரோபகாரம் ஒன்று...உண்மைக்  கடவுளை அறிந்து கொள்ள சத்விசாரம்.இவ்இரண்டினால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை விலக்கமுடியும் .

இத்திரைகள் சாதாரண மாக விலகாது...அதி உஷ்ணத்தால் மட்டுமே விலகும்.

அதி உஷ்ணம் என்றால் !

நம் உடம்பில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவின் தன்மையானது  கோடி சூரிய பிரகாசம் உள்ளது.

 அந்த உஷ்ணத்தை அதாவது சுத்த உஷ்ணத்தை தாங்கும் அளவிற்கு உடம்பு  மாற்றம் அடைய வேண்டும்..

ஆண்டவர் அருளைப் கொடுக்க தயார் நிலையில் உள்ளார்..அந்த சுத்த உஷ்ணத்தை கொடுத்தால்  நம் பூத உடம்பு தாங்குமா என்றால் தாங்காது...

இந்த உண்மைத் தெரியாமல்.அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் அறியாமல். வெட்டி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளோம்..

நமக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வு எங்கனம் கிடைக்கும்..சிந்திக்க வேண்டும்....

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால் வள்ளலார் போல் சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே கிடைக்கும்...

நம் விருப்பம் போல் வாழ்ந்து கொண்டு வீண்காலம் கழிக்கின்றோம்.

வள்ளலார் எவற்றை எல்லாம்  விடச்சொன்னாரோ .
எவற்றையும் விடாமல்.எவற்றை எல்லாம் பின்பற்ற சொன்னாரோ எவற்றையும் பின் பற்றாமல்..
விடாப்பிடியாக உலகியல் வாழ்க்கையைப் பின் பற்றி பிடித்துக் கொண்டு... மரணத்தை வென்றுவிடலாம் என்று நினைப்பது அறியாமையாகும் .பகல் கனவாகும்...

ஆன்மாவை தொடர்பு கொள்ள எவை எவை தடையாக உள்ளதோ அவற்றை எல்லாம் சுத்தமாக அகற்றினால்  மட்டுமே திரைகள் விலக வாய்ப்புண்டு..

நமக்கு உண்மைக் கடவுள் யார் ? என்றே தெரியாமல்..
பொய்யான கடவுள்களைத் தொடர்பு கொண்டு உள்ளோம் ..ஆதலால்  ஆன்மாவை எக்காலத்திலும் காணவே முடியாது..அருளைப் பெறவே முடியாது.. 

அதனால் தான் உண்மை உரைக்கின்றேன் உவந்தடைமின்  என்கிறார் வள்ளலார்.

உண்மைக் கடவுள் தெரியாமல் சத்விசாரம் எப்படி செய்ய முடியும்..சிந்திக்க வேண்டும்.

பொய்ந் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் செந்நெறி செலுத்திய சிற்சபை சிவமே !

என்கிறார் வள்ளலார் ...
பொய்நெறியில் சென்றால் அருள் கிடைக்காது என்பதால் உண்மை நெறியாகிய செந்நெறியில் செலுத்திய சிவமே !  சிற்சபையில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்கிறார்..

இங்கே சிவமே என்பது ஆன்ம ஒளியாகும்...எனவே ஆன்மாவை இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே சத்விசாரம் என்னும் உண்மைக் கடவுளைத் தொடர்பு கொள்ள முடியும்....

ஜீவ காருண்யத்தால் மோட்ச வீட்டின் திறவு கோல் என்னும் சாவி மட்டுமே கிடைக்கும் ..

*சாவியைக் கொண்டு பூட்டை மட்டுமே திறக்கலாம் கதவு திறக்காது.*.

சத்விசாரம் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதை அறிவால் அறிந்து முழுமையாக  தெரிந்து கொண்டு..
நினைந்து நினைந்து. உணர்ந்துஉணர்ந்து .நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து. வாழ்ந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கதவைத் திறப்பார்...

ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள திரைகளை நீக்க வேண்டுமானால் ..
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது ஒரு கதவும் பூட்டும் உள்ளது என்பார் வள்ளலார்..

பூட்டையும் திறக்க வேண்டும் கதவையும் திறக்க வேண்டும்..
அப்போதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்சி கொடுப்பார்..

நாம் பூட்டை திறக்கும் திறவு கோலைப் பெறமுடியாமலே தவிக்கிறோம்.

நாம் சாவிக் கிடைத்து பூட்டைத் திறக்கனும்..அதன்பிறகுகடவுள் தயவால் கடவுள் கதவைத் திறக்கனும்.
கடவுளை நாம் பார்க்கனும்..கடவுள் நம்மைப் பார்க்கனும் இருவரும் ஒன்றாய் சேரனும் .

*இரு உருவமும் அருளால்  ஒரே உருவமாக மாற்றம் அடைய வேண்டும்*.

ஆன்மாவும் பரமான்மாவும் ஒன்று சேர்ந்தபின் உயிர் உடம்பு யாவும்  ஒளி உடம்பாக மாற்றம் அடைய வேண்டும்.

*அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்..*

வள்ளலார் பாடல் !

திருக்கதவும் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்ஜோதித் திரு உருக்காட்டாயோ

உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும்.ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ.

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ.

செருக் கருதாதவர்க்கருளும் சித்தி புரத்தரசே சித்த சிகாமணியே திருநடநாயகனே ! 

மேலும்.

மணக்கதவும் திறவாயோ மறைப்பை எல்லாம் தவிர்த்தே மாற்றறியாப் போன்னே நின் வடிவது காட்டாயோ.

தணிக்கறியாக் பெருநிலையில் என்னோடு நீ கலந்தே கரைகடந்த பெரும்போகம் கண்டிடச் செய்யாயோ.

தணிக்கறியாக் காதல் மிகப் பெருகுகின்ற தரசே தாங்க முடியாது இனி என் தனித்தலைமைப் பதியே

திணிக்கலையாதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே.
சித்த சிகாமணியே என் திரு நடநாயகனே !

மேலே கண்ட பாடலில்.. ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை விலக்க வேண்டும் என  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் காதல் கொண்டு வேண்டுகிறார் வள்ளலார்...

இப்படி ஒரு அருளாளர் உலகில் எங்கேனும் உள்ளார்களா !

என்னே அருமையான அற்புதமான் விளக்கம்.எளிய தமிழில். அப்பப்பா சொல்லவோ. அள்ளவோ. வெல்லவோ.  வார்த்தைகளே இல்லை..

தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்பவர் எவரோ அவரே உயர்ந்த மனிதன்...அவரே ஆன்மீகவாதி..அவரே அருள் பெறும் தகுதி உடைவர்.அவரே கடவுளைக் காணும் தகுதி பெற்றவராகும்..

மரணத்தை வெல்லும் வாய்ப்பு பெற்றவராகும்.

விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

ஞாயிறு, 10 மார்ச், 2019

கடவுள் விளங்கும் இடம் !

*கடவுள் விளங்கும் இடம் !*

இந்த உலகத்தில் கடவுள் விளங்கும் இடம் தெரியாமல் மக்கள் ஆலயங்கள்.சர்ச்சுக்கள்.மசூதிகள்.புத்தகயா மற்றும் சிறிய பெரிய தெய்வங்கள் இருப்பதாக எண்ணி  பற்பல இடங்களுக்குச் சென்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி மாறி மாறி அலைந்து கொண்டே உள்ளார்கள்...

தங்கள் குறைகள் முழுவதுமாக தீர்ந்த்தா ?  என்றால் எப்போதும் தீர்ந்தபாடு இல்லை..

மக்கள் செல்லுகின்ற இடங்களில் கடவுள் இருந்தால் தானே வேண்டுதலை  நிறைவேற்றி வைப்பார்

பாவம் மக்கள் !  உண்மைக் கடவுள் இருக்கும் இடம் இயங்கும் இடம்.அருள் வழங்கும் இடம் எந்த இடம் என்று அறிந்து கொள்ளாமல் . அறியாமையில் வெளியில் தேடி அலைகிறார்கள் சுற்றுகிறார்கள்

 என்பதை உணர்ந்த கருணையே வடிவமான வள்ளலார்..

மக்களுக்கு இயற்கை உண்மைக் கடவுள் இருக்கும் இடத்தை தெரிவித்து.அந்த கடவுளின் இயற்கை விளக்கத்தை வெளிப்படக் காட்டுவதற்காக

 *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை .தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் வடலூர் என்னும் சிற்றூரில் எண்பது காணி நிலப்பரப்பின் மத்தில் தோற்றுவித்துள்ளார்*

அந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையானது எல்லா உலகுக்கும்.எல்லா மக்களுக்கும் எல்லா உயிர்களுக்கும்  பொதுவானதாகும்..

*சாதி சமயம் மதம் கடந்த்து*

எல்லா உயிர்களிலும் இறைவன் ஒளிமயமாய் விளங்குகின்றார் .அவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி யாக ஐந்தொழில் வல்லபத்தையும் இடைவிடாது செய்து கொண்டு இருப்பவர் என்பதை அறிந்தவர்.தெரிந்தவர்.அதனுடன் கலந்தவர் .கண்டவர் வள்ளலார் ஒருவரே.

வள்ளலார் பாடல் !

அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்

ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே

கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்

கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்

கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்

ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

மேலே கண்ட பாடலில்... *எல்லாம் வல்லவராய் விளங்கும் தனிக்கடவுள் ஒருவரே என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதி யர் என்றும் ஆணித்தரமாக அறிந்து தெளிந்து  மக்களுக்கு தெரிவிக்கிறார்..*

அந்தக் கடவுளை கண்டு அதனுடன் கலந்து கொண்டதையும் விளக்குகின்றார்...

இதோ வள்ளலாரின் அனுபவ பாடல் !

*கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்*

*கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்*

* *திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்*

*அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்*

*உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்*

*உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்*

*இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே*

*இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!**

மேலே கண்ட பாடல் எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.

இந்தப் பாடலில் ஒரு உண்மையைத் தெளிவாக விளக்கி உள்ளார்..உண்மையான  இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டதால் அருள் முழுமைப் பெற்றேன்  இடர் தவிர்கும் சித்தி எலாம் பெற்றேன் என்கிறார்...

*அதாவது மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் சித்தி வல்லபம் யாவும் பெற்றேன்* என்கிறார்.

சித்தி வல்லபம் பெற்றதால் தான் உண்மைக்கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்த . ஆன்மநேய உரிமையுடன் *வடலூரில்  சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை தோற்றுவித்து* வழிபடவும் வணங்கவும் வழிவகை செய்துள்ளார்.. என்பதை. மனித தேகம் பெற்ற ஒவ்வொருவரும் அறிவு பூர்வமாக அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்..

மனிதர்களுக்கு வரும் தீமைகளை தீர்க்கும் ஒரே இடம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்...

*வடலூருக்கு வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை.வணங்கி வழிபாடு செய்பவர்களுக்கு எவ்விதமான துர்மரணமும் இதுவரை வந்த்தே இல்லை என்பது உலகம் அறியும்.*

இதுவே வடலூர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழிபாட்டிற்கும் மற்ற வழிபாட்டிற்கும் உள்ள வேற்றுமை ஒற்றுமையாகும்.

*மரணத்தை வென்று வாழ்வது பெரிய விஷயம் அதற்கு வள்ளலார் போன்றோரின் தகுதி பெற வேண்டும்*

*நாம்  உயிர்நலம் உடல்நலம். குடும்பநலம் பெற்று என்றும் மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வள்ளலார் தோற்றுவித்த உண்மைக்கடவுள் விளங்கும் இடமான சத்திய ஞானசபை வழிபாடே சிறந்ததாகும்..*

 இங்கு வந்து வந்து  தரிசிப்பீர்களானால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்...

வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்...

சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும்,

பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே,

இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை

எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!

இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து

 இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

என்னும் விண்ணப்பத்துடன் வேண்டி.. வந்து வந்து தரிசிக்க வேண்டும் என்று நமக்கு வள்ளலார் சொல்லிக் கொடுக்கின்றார்...

அப்படி தரிசித்து வந்தீர்களானால்

*கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்.மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பு அடையலாம்.இது சத்தியம் சத்தியம் சத்தியம் இது ஆண்டவர் கட்டளை  என்கிறார்*.

மேலும் சொல்கிறார்...

எல்லோருக்கும் தாய்.தந்தை.அண்ணன்.தம்பி.முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ ..

அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்...்இது ஆண்டவர் கட்டளை....

என்று உலக மக்களின் நலனுக்காக அன்புடனும்.தயவுடனும்.கருணையுடனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளலார்...

மேலும் வந்தவர்கள். மற்றவர்களையும் அழைத்து வாருங்கள் என்கிறார் ஏன் ? என்றால் ..

 வடலூர் உள்ள சத்திய ஞானசபையில் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  வந்து அமர்ந்து அருள்பாலிக்கின்றார்...

எனவே வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்பதை அழுத்தமாக.. உண்மையைச்  சொல்லி அன்புடன் அழைக்கின்றார்.... ்

வள்ளலார் பாடல் !

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!

என்ற பாடல்வாயிலாக உண்மைத் தெய்வம் விளங்கும் இடத்தை தெளிவாக விளங்க வைக்கிறார்.....

மேலும் வள்ளலார் பாடல் !

உலகமெலாஒம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே

இலக எலாம் படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்

கலக மிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்

திலகம் மெனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே.!

 உலகத்திற்கே திலகமாய் விளங்குகின்றது தான் உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலாரில் உள்ள சத்திய ஞானசபையாகும்....

உண்மையை உணர்ந்து வடலூர் வருகை புரிந்து உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கி வழிபட்டு பெற வேண்டியதை பெறுவோம்...

அன்புடன் வரவேற்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ...

வாருங்கள் வாருங்கள் வாருங்கள்...வந்தால் பெறலாம் நல்ல வரமே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.