செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அருள் நெறி !

அருள்நெறி

கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்?
 வள்ளலார் அருள் வாய்மொழி !
 அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.
அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? 
நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.
அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது? காண்பார் காணுமிடம் காணப்படுமிடம், அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம், தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம், கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம், முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம், கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம் முதலியவாய் விளங்கும்.
இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? 
புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.
நன்மை தீமை என்பவை யாவை? 

நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம். புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.
புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன? 
மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். 
அவையாவன:- 
மனத்தினால் உண்டாகும் பாவம் !
பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். 
வாக்கினால் உண்டாகும் பாவம் ! 
 பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். 
தேகத்தினால்:-உண்டாகும் பாவம் !
பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள்.
புண்ணியங்கள்...
மனத்தால் வரும் புண்ணியங்கள்.!
 இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள். 
வாக்கால் வரும் புண்ணியங்கள்!
பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள். 
தேகத்தால் வரும் புண்ணியங்கள்! 
அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.
அறிந்து செய்த பாவங்கள் அறியாமல் செய்த பாவங்கள் ! 
அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்? 
அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று 
பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச்சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி; யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து, இயன்ற அளவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும்.
மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும். 
மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற் கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.
அறியாத பாவங்கள் யாவெனில், 
நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் தினஞ் செய்யுஞ் ஜபத்தாலும், பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், விருந்துபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.
பிராயச்சித்த முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடையுங் கதி யென்ன? மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும். வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.
வேதாந்திகள் "பாவம் முதலிய கருமங்களும், புண்ணியம் முதலிய ஏதுக்களும் நமக்கில்லை, நாம் சர்வசாக்ஷி" என்கின்றார்களே -அஃதென்ன?
 தேகவாசனை, இந்திரியவாசனை, கரணவாசனை, பிராணவாயுவின் செயற்கையிலுண்டாகும் வேறுபாடு முதலிய நன்மைகளில் சலிப்பற்று ஆகாரம், நித்திரை, பயம் முதலியவைகளில் தாம் சலித்தும் சோர்ந்தும் திடுக்கிட்டும் இல்லாமல், நிவாததீபம் போல் விளங்கும் ஜீவன் முத்தர்கள் சமூகத்தில் பாவ கிருத்தியங்கள் நடவா
; புண்ணியங்களும், பிரயோஜனம் பற்றிச் செய்யார்கள்; பொன்னும் ஓடும் சரியாகக் காண்பார்கள். அத் தன்மையுடைய நித்திய முத்த சுத்த ஞான தேக சித்தர்கட்குப் பாவ புண்ணியமில்லையென்று அவர்கள் சொல்ல வேண்டியதில்லை; நமக்கே தெரியும்.
மேலும், அவர்கள் இந்தப் பவுதிக சரீரத்தில் வசித்தாலும், சரீரமாகிய தத்துவ தாத்விகங்கள் இப்போது நமக்கு அசுத்த தேகமாயும் அசுத்தப் பொறியாயும் அசுத்தக் கரணமாயும் அசுத்த அனுபவமாயும் அசுத்த அறிவாயும் இருப்பது போல் இரா. 
தத்தபடத்தைப் போல் காரியத்தில் இலதாயும் காரணத்தி லுளதாயும், அறிவேவடிவாய் அறிவேபொறியாய் அறிவேமனமாய் அறிவேயழகாய் அறிவேயுருவாய் அறிவேயுணர்வாய் அறிவேயனுபவமாய் அறிவேயறிவாய் விளங்கும்.
மேலே கண்ட பாவங்களை செய்யாமல்.மேலே கண்ட நன்மைகளை செய்தால் கடவுள் அருளை தடை இல்லாமல் பெறலாம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

திங்கள், 27 ஏப்ரல், 2020

வள்ளலார் சொன்னார் !

*வள்ளலார் சொன்னார்* !

வள்ளலார் சொன்னார் கேட்கவில்லை !

150 ஆண்டுகளுக்கு முன்னாடியே வள்ளலார் சொன்னார் !

*பசித்திரு. தனித்திரு. விழித்திரு என்று வள்ளலார் சொன்னார்*.

அதனால் அடைய வேண்டிய ஆன்மலாபத்தையும் அருள் வல்லபத்தையும் தெளிவாக சொல்லியும் எவரும் கேட்கவில்லை பின்பற்றவில்லை.

வள்ளலார் சொல்லியபடி கடைபிடித்து வாழ்ந்து இருந்தால். *துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம்* வராது.என்பதை தெளிவாக சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார்.

*தான் சொல்லிய வண்ணம் வாழ்ந்தும் காட்டி உள்ளார்*.

அதே நேரத்தில் நான் எதுவும் சொல்லவில்லை.அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் என் உள் இருந்து இயங்கி கொண்டுள்ளார்.அவர்தான் சொல்லுகின்றார் என்கிறார்.

வள்ளலார் பாடல் !

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியதை  அப்படியே சொல்லியும் எவரும் கேட்கவில்லை.நான் அடைந்த அருள்  சுகத்தை. *உங்களின் மீது உள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையால்* இரக்கத்தால் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.

நான் சொல்லியதை தவறாமல் கடைபிடித்து வாழ்ந்து இருந்தால் இறைவன் அருள் பெற வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்.உயர்ந்த பதவி.உயர்ந்த சுகம் கிடைக்கும் என்றும் சொல்லி உள்ளார்.

உலகில் ஒருவரும் வள்ளலார் சொல்லியதை கேட்கவில்லை  பின்பற்றவில்லை.என்பதை உணர்ந்து சலிப்பும் வேதனையும் அடைந்தார்.

*இப்போது நான் சொல்வதை கேட்கமாட்டோம் என கங்கனம் கட்டி உள்ளீர்களா* என்று வேதனையுடன் அப்போதே தெரிவித்துள்ளார்.

*உங்களை எப்படி கேட்க வைக்க முடியும் திருத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும்*.

இப்போது உலகில் உள்ள அனைவரையும்.
*பசித்திருக்கவும்*.
*தனித்து இருக்கவும்.விழித்திருக்கவும்*. இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி கடைபிடிக்க வைத்து விட்டார்.

உலகையே அச்சுறுத்தி பயமுறுத்தும் கொரோனோ தொற்று வைரஸை அனுப்பிவிட்டார். *இறைவனே அனுப்பியதால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை*.

உலக மக்களுக்கு இதுவும் ஒரு நல்ல அதிர்ச்சி அனுபவமே !

முன்பே வள்ளலார் சொல்லியவாறு ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து  பழகி இருந்தால்  துன்பபட வேண்டிய சோதனையும் சூழ்நிலையும்.
அவசியமும் வந்திருக்காது.சிரமப்படவேண்டியதில்லை.

வள்ளலார் வருவிக்க உற்ற நோக்கமும். அவருடைய பெருமையும் புகழும்.அருள் ஆற்றலும்.ஆட்சி செய்யும் தமிழக அரசுக்கும் தெரியவில்லை.மத்திய அரசுக்கும் தெரியவில்லை.உலக மக்களுக்கும்.அறிவு சார்ந்த மக்களுக்கும் தெரியவில்லை.
தெரிந்து கொள்ளும் பக்குவமும் எவருக்கும் இல்லை.

வள்ளலார் சொல்லியதை பின்பற்றி இருந்தால் பசிப்பிணியைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

எல்லாமே பழக்கத்தின் ஒழுக்கத்தின் வழியாக  மனித உடம்பின் தன்மை.உயிரின் தன்மை.ஆன்மாவின் தன்மைக்கு தகுந்தவாறு உயர்ந்த அனுபவமாக மாறி இருக்கும்...

ஒவ்வொன்றையும் அனுபவத்தால் அறிந்து கொள்ள வேண்டும் என்பார் வள்ளலார்.

இப்போது பரவிவரும் கொரோனோ போன்ற தொற்று நம்மை அனுகாமல் எதிர்ப்பு சக்தியுடன்.பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்கலாம்.

*குற்றம் புரிதல் நமக்கு இயல்பே.குணமாக கொள்ளல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயல்பே*.

இனிமேலாவது வள்ளலார் சொல்லிய உண்மை ஒழுக்க நெறியை கடைபிடித்தால். எல்லா ஆபத்தில் இருந்தும் காப்பாற்றப்படுவீர்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயற்கையில் அன்பு தயவு தனிப்பெருங்கருணை உள்ளவர் .அருள் நிறைந்த ஆற்றல் உள்ளவர்.நம்மை படைத்தவர்.நம்மை காப்பாற்றும் தகுதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மட்டுமே உள்ளது.

வள்ளலார் பாடல் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

*உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே கடவுள்! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* !  என்னும் உண்மை உணர்ந்து .சாதி.சமய.
மதம் என்ற குப்பைகளை அகற்றி இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்.
இயற்கை இன்பம்
பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் ஒன்றி இணைந்து வாழவேண்டும்.

*இதுவே இயற்கை கடவுள் சம்மதம்* !

பல தத்துவ கடவுள்களை வழிபடுவதாலும் தொடர்பு கொள்வதாலும் நமக்கு எந்த பிரச்சினைகளும் தீவினைகளும் எக்காலத்தும் விலகாது.

எனவே உண்மை உணர்ந்து *ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை கடைபிடித்து தீவினையை அகற்றி நல்வினையை ஆன்மாவில் நிறைப்பி.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தொடர்பு கொண்டு அருள் பெற்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கிண்டல் அடித்த சமுதாயம் !

*கிண்டல் அடித்த சமுதாயம்* !

வள்ளலார் கொள்கையில் முக்கியமானது ஜீவகாருண்யம்.
அதில்  *பசிப்பிணியை போக்குவதே முதல் செயலாகும்*.

* *அடுத்து உயிர்க்கொலை செய்யக்கூடாது அதன் புலாலை உண்ணக்கூடாது என்பதாகும்*

*அதற்காகவே வள்ளலார் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார்*

சாதி.சமயம்.மதம் சாராத உலகப்  பொதுநெறியான திருநெறியை *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற பெயரில்   1872 ஆம் ஆண்டு வடலூர் தோற்றுவித்தார்.

அதே தேதியில் உலகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கடவுள் என்ற கொள்கையை ஆன்மீக அருளியல் ஆதாரத்துடன் மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* தோற்றுவித்துள்ளார்*

*கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்ற உண்மையை உலக மக்களுக்கு அழுத்தமாக தெரியப்படுத்துகின்றார்.
கடவுள் ஒளியாக உள்ளார் என்பதனால் சத்திய ஞானசபையில் ஒளி வழிப்பாட்டை ஏற்படுத்தி இன்றுவரையில் தொடர்ந்து தினமும் ஒளிவழிபாடு நடந்து கொண்டு வருகின்றது.

* *உண்மையான ஒளி வழிபாட்டை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளபட்டது*.
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்னும் உண்மையை. வள்ளலார்  ஏற்படுத்திய சன்மார்க்க சங்கங்களின் வாயிலாக உலக  மக்களுக்கு தெரிவித்து *ஜீவகாருண்ய பணியை*.உலகில் உள்ள எல்லா சன்மார்க்க சங்கங்களும் கடைபிடித்தும். செயல்படுத்திக் கொண்டும் வருகிறார்கள்.

சன்மார்க்க சங்கங்களில் ஏழை எளிய வசதி இல்லாத வறுமையில் வாடும் மக்களுக்கும். பசியோடு வருபவர்கள் யாராக இருந்தாலும் ஏழை பணக்காரன்.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லாமல் சாதி சமய மத வேற்றுமை இல்லாமல் அனைவருக்கும் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறார்கள்.

*கேலி கிண்டல் செய்தார்கள்* !

சன்மார்க்க சங்கங்களில் எல்லோருக்கும் அன்னதானம் ((சோறுபோட்டு) வழங்கி வேலைக்கு போகாமல் மக்களை சோம்பேரிகளாய் ஆக்கி விட்டார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்தார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பார்த்தார்.. உலகமே பயந்து நடுங்கும் வகையில் கொரோனோ என்ற கொடூரமான தொற்று வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
அனைவரும் அறிந்த்தே.

அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டும் என்ற தடை உத்தரவை உலகமே செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

நம் இந்தியநாடும் தடை உத்தரவை கடைபிடித்து வருகின்றது. தமிழ்நாடும் தமிழக அரசும் கடைபிடித்து வருகின்றது.

இன்று ஏழை எளிய ஆதரவு அற்ற அனைத்துதர  மக்களும் வேலை இல்லாமல் .வேலைக்கு போகமுடியாமல்.பொருளாதாரம் இல்லாமல்  பசியால்  வாடி வதங்கி பசிவேதனையை தாங்க முடியாமல்.மக்கள் தினமும்  சொல்ல முடியாத வேதனையில் துவண்டு கொண்டு உள்ளார்கள்.

*நரகவேதனை. ஜன்னவேதனை. மரண வேதனையைவிட மிகவும் கொடுமையான வேதனை  பசியின் வேதனை* என்பதை அருள் அனுபவத்தில் அறிந்துதான் சத்திய தருமச்சாலை யை நிறுவினார் வள்ளலார்.

இன்று அரசியல் வாதிகள்.ஆன்மீகவாதிகள்.தொண்டு நிறுவணங்கள்.சினிமாத்துறையை சார்ந்தவர்கள்.வியாபார நிறுவனவ்கள்.விவசாயிகள்.மற்றும் தனிநபர்கள்.ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகள் போட்டிப்போட்டுக் கொண்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறார்கள்.

உயிர்களின் பசியின் அவத்தையை .பசிப்பிணியை புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்தவர்கள்.
கேலிசெய்தவர்கள் எல்லாம் சோற்றுக்காக வரிசையில் காத்துக் கொண்டு
உள்ளார்கள்.என்பதை மக்கள் தினமும் கவனித்துக் கொண்டு உள்ளார்கள்.

மக்களை நல்வழிப்படுத்தவே இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார் .

இனி வள்ளலார் சொல்லிய வண்ணம் ஒழுக்க நெறிகளை மக்கள் கடைபிடித்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல். மகிழ்ச்சி யுடன் வாழலாம்.

*இல்லையேல் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை*.

 வள்ளலார் பாடல் !

உண்மை யுரைக் கின்றேன் இங் குவந்தடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறிஅழி யாதீர்

எண்மையினான் எனை நினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள்அமர்ந்து இசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்து விரைந் தேறுமினோ சத்திய வாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே.!

என்ற பாடலின் வாயிலாக உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக சொல்லுகின்றார்.

எல்லாம் செய்ய வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து சொல்ல சொல்ல நான் சொல்கிறேன் என்கிறார்.

நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 22 ஏப்ரல், 2020

மக்களின் குரல் !

*மக்களின் குரல்.*

கொரோனோவால் நாங்கள் சத்தியமா சாகமாட்டோம்.

*உணவு இல்லாமல் கண்டிப்பா செத்துபோயிடுவோம்* .
என்று ஏழை எளிய ஆதரவு அற்ற மக்கள். வேலை இல்லாத வேலைக்கு போகமுடியாமல .பொருளாதாரம் இல்லாமல் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் லட்சகணக்கான மக்களின் ஒட்டுமொத்த குரல் இதுவேயாகும்.

உலகம் முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளே சும்மாவே இருந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் அரசாங்கத்தால் மட்டும் எவ்வளவு நாட்களுக்கு பாதுகாக்க முடியும்.

*நாட்டுக்கு நாடு கொடுத்து உதவலாம் என்றால் எல்லா நாடுகளிலும் ஒரே கொரோனோ பிரச்சினை யாகவே உள்ளன*.

அந்த அந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாமல் திண்டாடிக்கொண்டு உள்ளன.

*எங்கோ போய் கொண்டு இருக்கிறது இந்த  உலகம்.*

மனித சக்தியால் மக்களை காப்பாற்றுவது பொருள் இருக்கும் வரையில்தான்.பொருள் உற்பத்தி நின்று விட்டால் மக்களின் உயிர் நின்றுவிடும்.

*உலக அறிவியல் மேதைகள் சிந்திக்க வேண்டும்*

இதற்கு எல்லாம் இயற்கை என்னும் மெய்ப்பொருள் தான் வழிகாட்ட வேண்டும்.வழிகாட்ட முடியும்.

*இந்த மாற்றம் உண்டாக என்ன காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்*.

சிறிய உயிர்கள்  பெரிய உயிர்கள் என நினைத்து பிரித்து .சிறிய உயிர்களை அழித்து கொண்டே வந்த்தால்.பெரிய உயிர்களுக்கு ஆபத்து வந்துவிட்டது.

*இது சத்தியத்தின் சோதனை*!

எல்லா உயிர்களும் தம் உயிர்போல்  ஒரே தன்மை உடையது  என்று நினைத்து வாயில்லாத பேசமுடியாத.எதிர்த்து குரல் கொடுக்க முடியாத உயிர் இனங்களை கொலை செய்யாமல் அதன் மாமிசத்தை உண்பதற்காக  அழிக்காமல் மனித இனம் வாழ்ந்து இருந்தால்

இந்த கொரோனோ வைரஸ் தொற்று போன்ற துயர சம்பவங்கள் வந்து மனித இனத்தை பயம்முறுத்தாது தாக்காது.

*உயிர்களை படைத்தவனால் மட்டுமே உயிர்களை காப்பாற்ற முடியும்*.

எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே முடியும் என்பது சத்தியவான் வார்த்தை !

வள்ளலார் பாடல் !

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் அத்தினங்கள் எலாம் இன்பம் உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்
திருவருட் செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!

*மேலே கண்ட பாடல் சத்திய வாக்கு*.

 இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்
இயற்கை இன்பம்
என்பதே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலையாகும்.

மனித சக்தியால் காப்பாற்றுவது மிக மிக கடினம்.

இயற்கையை நேசிப்போம்.
இறய்கையை போற்றுவோம். இயற்கையை வழிபடுவோம். இயற்கையை பாதுகாப்போம்.
இயற்கையுடன் ஒன்றி வாழ்வோம்.
இயற்கை காப்பாற்றுவது சத்தியம்
இயற்கையுடன் ஒன்றி இன்பமுடன் வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஆராய்ச்சி செய்து பாருங்கள் !

*ஆராய்ச்சி செய்து பாருங்கள்* !

ஏது எதுவோ டெஸ்ட்(பரிசோதனை) செய்து பார்த்து தெரிந்துகொள்ளும் அறிவியல் மருத்துவ சுகாதார ஆராய்ச்சி மையம்.அணு ஆராய்ச்சி மையம்.அவசியம் இவற்றையும் கண்டுபிடித்து தெரிவித்தால் மக்களுக்கு உண்மைத் தெரியும் வாய்ப்பு நிறைய உள்ளது.

இப்போது உலகையே பயமுறுத்தி மனித இனத்தையே தொடர்பு  கொண்டு மனித உடம்பில் நுழைந்நு கொண்டு மரண விளையாட்டில் நடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும்

கொரோனோ வைரஸ் தொற்று எந்த எந்த உடம்பில் பற்றிக் கொள்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என கருதுகிறோம்.

*எங்களுக்குத் தெரியும்.நாங்கள் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள்*.

இதுவரை தொடர்பு கொண்டுள்ள கொரோனோ வைரஸ்.மாமிசம் உண்பவர்களைப் பற்றி உள்ளதா ? மாமிசம் உண்ணாதவர்களை பற்றி உள்ளதா ! என்பதை கணக்கு எடுத்து விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் மாமிசம் உண்பவர்களா? உண்ணாதவர்களா ? என்பதை அறிந்து உலக மக்களுக்குத் தெரிவித்தால் .மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்.

பரிசோதனை செய்து பார்த்தால் தான் .தமிழ்நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் திரு அருட்பிரகாசவள்ளலார் போன்ற அருளாளர்கள் சொல்லியுள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

இன்று உலக அறிவியல் ஆராய்ச்சி கழகம் என்ன சொல்கிறதோ அதைத்தான் எல்லா நாடுகளும் பின்பற்றி வருகிறது.

*இந்த உண்மையைத் தெரிவித்தால்*
*மக்களும் உணவு பழக்கத்தை மாற்றி தங்களை காப்பாற்றி கொள்ள வாய்ப்பாக இருக்கும்*.

எல்லா உயிர்களும் கொலை புலையில் இருந்து காப்பாற்றப்படும்.

இல்லையேல் இன்னும் பயங்கர கொடூரமான வேறு வேறு பிரச்சினைகள் வந்து மக்களை காப்பாற்ற முடியாமல் சிரமப்படும் சூழ்நிலைகள் வந்து கொண்டே இருக்கும்.

செய்வார்களா ! செய்தால் அனைத்து உலக மக்களுக்கும் காப்பாற்றப்படுவார்கள். நல்லது நடக்கும்.மகிழ்ச்சி யுடன் வாழ்வார்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வயிற்றில் புதைப்பதை நிறுத்துங்கள்!

*வயிற்றில் புதைப்பதை நிறுத்துங்கள்*!

கொரோனோ தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற  இரவு பகலாக  உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள் மருத்துவர்கள்.

அந்த வழியில் பணியாற்றி வந்த மருத்துவர் டாக்டர் திரு சைமன் அவர்கள் தன் உயிரை இழந்து விட்டார் என்ற செய்தி அனைத்த்து மருத்துவர்களுக்கும்.மக்களுக்கும்.அரசாங்கத்திற்கும்.சுகாதார துறைக்கும் பயமும் வருத்தமும் உண்டாகி இருக்கிறது.

இறந்த டாக்டரை  அடக்கம் செய்ய இடம் தரமாமல் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்த அறிவு கெட்ட ஜென்மங்களை (மக்களை) என்னவென்று சொல்வது எப்படி  திட்டுவது என்றே தெரியவில்லை. *இருந்தாலும் நம்மவர்களே* !

ஒவ்வொரு நாளும் பல உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை(புலாலை) உங்கள் வயிற்றில் புதைக்கின்றீர்களே.

உங்கள் வயிறும் ஒரு சுடுகாடுதானே ! நீங்கள் மக்களுடன் சேர்ந்து வாழலாமா ? நீங்கள் நடமாடும் சுடுகாடாக வாழ்ந்து வருகின்றீர்களே உங்களுடன்  எங்கனும் இனைந்து வாழ்வது சிந்திக்க வேண்டும்.

நீங்கள் இறந்துவிட்டால் உங்களை எந்த சுடுகாட்டில்.இடுகாட்டில் எரிப்பது அடக்கம் செய்வது.இந்த உலகத்தில் வாழ்வதற்கே உங்களுக்கு தகுதி இல்லையே என்று உலகத்தை படைத்த .உயிர்களை படைத்த. உங்களைப் படைத்தை எல்லாம் வல்ல இறைவன் நினைத்தால் என்ன செய்வீர்கள்.

இன்னும் அறியாமையில் மூடநம்பிக்கையில் வாழும் மனிதர்களே ! திருந்துங்கள் சிந்தியுங்கள்.

முதலில் ஜீவகாருண்யம் என்றால் என்ன என்பதை சிந்தியுங்கள்.ஜீவ தயவு .கடவுள் தயவு என்றால் என்ன என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

*உயிர்களிடத்தில் அன்பு.தயவு.கருணை.இரக்கம் காட்டுங்கள்*.

மனித நேயம் ஆன்மநேயம் என்றால் என்ன ? என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து உணர்ந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

மனிதனாக பிறந்தவன் என்ன என்ன தவறுகள் செய்யக் கூடாது என்பதை.
*மனுமுறைகண்டவாசகம்* என்னும் நூலில் வள்ளலார் தெளிவாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் எழுதி பதிவு செய்துள்ளார்.

*நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ*!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு
உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!

வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!

கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!

கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசிநின்றேனோ!

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!

பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!

ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!

சிவனடியாரைச் சீறி வைதேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!

தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

என்று மனுநீதிச்சோழன் மகன் வீதிவிடங்கன் ஆலய வழிபாட்டிற்காக தேர் ஓட்டிச்செல்கின்றபோது.தேர் சக்கரத்தில் அகப்பட்டு ஏதும் அறியாத  பசுங்கன்று இறந்து விடுகின்றது.

தன் குழந்தையை இழந்த தாய் பசுவானது நீதிகேட்டு அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியை தன் கொம்புகளால் அடித்து ஒலி எழுப்புகிறது.

 அதை அறிந்த மன்னன் பசுவின் கோபத்தையும் சோகத்தையும் அறிந்த மன்னன்  நீதி வழங்குகிறார்.வரலாறு.

பசுங்கன்று இறந்த செய்தி கேட்டு நீதி வழங்கிய மன்னன். மேலே கண்ட பாவங்கள் எல்லாம் நான் செய்தேனோ என்று இறைவனிடம் புலம்புகிறார்
மேலே கண்ட பாவச்செயல்களை செய்யாமல் வாழ்ந்தால் எந்த கொடூரமான வைரஸும் தொற்றாது.வியாதியும் வராது எமனும் நம்மைத் தேடி வரமாட்டான்.மரணபயம் இல்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழலாம்.

*இறை அருள் பெற்று மரணத்தை வென்ற மகான்களின் அருள் வாக்கியங்களை கேட்டு படித்து உணர்ந்து வாழ்க்கையை புனிதமாக மாற்றிக் கொள்ளுங்கள்*.

*உயிர் கொலை செய்யவும் அதன் புலாலை உண்ணவும்  வழிகாட்டும் எந்த சாதி.சமயம்.மதங்களையும் நம்பாதீர்கள்.இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார்*.

இனிமேலாவது திருந்தி வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

*கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார்*.

*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி!*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வள்ளலார் அழைக்கின்றார் !

*வள்ளலார் அழைக்கின்றார்*!

மனிதன் என்பவனுக்கு உயர்ந்த அறிவு இயற்கை என்னும் மெய்ப்பொருளால் கொடுக்கப் பட்டுள்ளது.

அந்த உண்மையை புரிந்து அறிந்து உணர்ந்து கொள்ளாமல். அறிவைத் தொடர்பு கொள்ளாமல் அறியாமையால் அழிந்து கொண்டுள்ளான்.

*இயற்கை என்றாலும் தெரியாது.மெய்ப்பொருள் என்றாலும் தெரியாது.இயற்கை விளக்கம் என்றாலும் தெரியாது.இயற்கை இன்பம் என்றாலும் தெரியாது.கடவுள் உண்மை எதுவும் தெரியாது*

*சுமார் 5000 ஐந்தாயிரம்*  ஆண்டுகளுக்கு மேலாக சாதி.சமயம்.மதம் என்ற குருட்டு வாழ்க்கையில் குறுக்குத் தனமாகவும்.கிறுக்குத் தனமாகவும்  ஏதும் தெரியாமல் வாழ்ந்து வீணே அழிந்து கொண்டுள்ளார்கள் .

வள்ளலார் பாடல் !

பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம் இங் கிது நான்
புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே

மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவது அழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே

பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே

அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.!

என்னும் பாடலிலே தெளிவாக சொல்லி உள்ளார்.

மனிதன் அறிவு விளக்கம் பெற்று என்றும் எக்காலத்திலும் அழியாமல் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை உள்ளது.
அவற்றைத் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்.உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களை அன்போடு அழைக்கின்றார்.

*நீங்கள் இங்கு வருவதால் உங்களை அடுப்பவரே அன்று எவராலும் தடுக்க முடியாது என்கிறார்* *வள்ளலார்*.

ஒழுக்கம் நிறைந்த சுத்த சன்மார்க்க சங்கத்தை இறை அருளால் தோற்றுவிக்கப் பட்டுள்ளது அதில் சேர்ந்து இணைந்து *இயற்கை உண்மைக் கடவுளான எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம் என்று அழைக்கின்றார்*.

உலகில் தோன்றிய எந்த ஞானிகளும்.அருளாளர்களும் மனிதர்களை இவ்வாறு அன்போடு ஆன்மநேயத்தோடு உரிமையோடு அழைத்தது இல்லை.

மக்கள் கற்பனையிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.உண்மை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல்.வழிதெரியாமல் குறுக்கு வழியில் சென்று கொண்டுள்ளார்கள்.

எனவே நேர்வழியைக் காட்டி இறை அருளைப் பெறுவதற்குப் பயிற்சி பெற வள்ளலார் வடலூருக்கு அழைக்கின்றார்.

இதற்காக எந்த பொருளாதாரமும் சிரமமும்  தேவை இல்லை.

*தன்னை அறிந்து கொள்ளும் தகுதி மட்டுமே போதுமானது*.

இது நல்ல தருணம் பயன் படுத்தி கொள்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

எவரும் தவறாக நினைக்க வேண்டாம்!

எவரும் தவறாக நினைக்க வேண்டாம்.!

கொரோனோ தொற்று வைரஸ் பரவியதைப் பற்றி உலகம் முழுவதும்.பல ஆராய்ச்சி யாளர்கள்.பல மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள்.  பல அறிவியல் விஞ்ஞானிகள் பலபேர் பலவிதமாய் பேசிக் கொண்டும். கருத்துக்களை சொல்லிக் கொண்டும். உள்ளார்கள்.

மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

நம் தமிழக முதல்வர்கூட இது பணக்கார்ர்களுக்கு வந்த நோய் என்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த தொற்று நோய் என்றும் சொல்லி உள்ளார்.

நாங்கள் பின்பற்றும் வள்ளலார் கொள்கையின்படி ஆராய்ச்சி செய்து பார்த்தால்.உயிர்க்கொலை செய்பவர்களுக்கும். அதன் மாமிசம் உண்பவர்களுக்கும்.எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

எனவே விஷத்தன்மையுள்ள வைரஸ் தொற்று  மாமிசம் உண்பவர்களை சீக்கிரம் பற்றிக்கொள்ளும் வாய்ப்பு நிறைய உள்ளது. 

எனவே உயிர்க் கொலை செய்பவர்களுக்கும் அதன் மாமிசம் உண்பவர்களுக்கும்.இரத்த வெறி பிடித்த  கொரோனோ தொற்று  வைரஸ்.

இரத்தம் உள்ள உயிர்களை கொன்று தின்பவர்களை சீக்கிரம் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை வள்ளலார் சொல்லும் ஆன்மீக அறிவு அருள் வல்லபத்தால் உணர்கிறோம்.

உயிர்க்கொலை செய்பவர்களுக்கும் புலால் உணவு உண்பவர்களுக்கும் இறை அருள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் இறைவன் தொடர்பு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும்   வள்ளுவரும் வள்ளலாரும் தெளிவாக சொல்லி உள்ளார்கள்.

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் ! ...திருவள்ளுவர்.

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு என்பெலாம் கருக இளைத்தனன்...வள்ளலார்

எனவே தாவர உணவான சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனோ தொற்று  வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்புக்கள் ரொம்ப குறைவு என்பதை நாங்கள் உணர்கிறோம்.

எனவே உயிர்க்கொலை செய்யாமல் அதன் புலாலை உண்ணாமல் இருந்தால்.கொரோனோ வைரஸ் தொற்றாமல்  தப்பித்துக் கொள்ள நிறை வாய்ப்பு உள்ளது.

சிந்தியுங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் தெளிவு பெறுங்கள்.

உலகிலே சிறந்த உணவு சைவ உணவு என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

உணவே மருந்து.மருந்தே உணவு என்பதை மறந்துவிட வேண்டாம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 13 ஏப்ரல், 2020

தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள்.!

14-04-2020.தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள்.!

இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் செயல்கள் !

1.தோற்றுவித்தல்

2.வாழ்வித்தல்.

3.குற்றம் நீக்குவித்தல்.

4.பக்குவம் வருவித்தல்.

5.விளக்கம் செய்வித்தல் .

மேலே கண்ட ஐந்தொழில்கள் உலகம் முழுவதும் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கும்.

இந்த ஐந்தொழில்களுக்கும் ஐந்து கர்த்தாக்கள் இருந்தார்கள்.

வள்ளலார் அருள் பெற்று மரணத்தை வென்று.சுத்த பிரணவ ஞானதேகம் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானதால்.

ஐந்தொழில் கரத்தாக்களிடம் இருந்த ஐந்தொழில்களையும் வள்ளலார் ஒருவரிடமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொடுத்துவிட்டார்.

 இப்பொழுது ஐந்தொழில்களையும் வள்ளலார்  ஒருவரே திறம்பட செயலாற்றிக் கொண்டு உள்ளார்.

இது கலை உரைத்த கற்பனை கதைகள் அல்ல.உண்மை சம்பவம் . 31-01-1874 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வள்ளலார் பாடல் !

ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதி செய் அருட்பெருஞ் ஜோதி! ...அகவல்

மேலும்.

ஐந்தொழில் நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்

வெந்தொழில் தீர்ந் தோங்கிய நின் மெய்யடியார் சபைநடுவே

எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்

செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.!

என்பன போன்ற ஆதாரமான பாடல்கள் திருஅருட்பா வில் நிறைய உள்ளன.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செந்தமிழில் வளர்வதாகவும்.எல்லா ஆன்மாக்கள் இயங்கும் இடமான சிற்சபையின் நடுவில் நடிப்பதாகவும் எளிய தமிழில் தெளிவாக விளக்கம் தருகின்றார்.

மனிதர்களாகிய நாம் இதுவரையில் இருந்தது போல்.இனியும் வீண்காலம் கழிக்காமல். காலம் உள்ளபோதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு ஆன்மலாபம் அருள்லாபம் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

வருகிற தமிழ் புத்தாண்டு தொடங்கி.துன்பம் நீங்கி இன்பம் மலர்ந்து மக்கள் எல்லா நலமும் பெற்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்வோம்.

ஒரே ஒரு வேண்டுகோள்!

எந்த உயிர்களையும் கொல்லாமல் அதன் புலாலை உண்ணாமல்.வள்ளலார் சொல்லியுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மட்டும் கடைபிடித்தால் போதுமானதாகும்.

ஒவ்வொரு வீட்டிலும் அணையா விளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.இருள் அகன்று ஒளி பிரகாசிக்கும்.உங்கள் வீட்டை சுற்றி அருளே பாதுகாப்பு வளையமாக கண்காணித்துக் கொள்ளும்

வருக தமிழ் புத்தாண்டு மகிழ்க உலக மக்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சத்திய தருமச்சாலை !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !

உலகில் உணவு இல்லாமல் மக்கள் இறந்துவிடக் கூடாது என்பதற்காக 1867 ஆம் ஆண்டு வைகாசி 11 ஆம் நாள் வள்ளல்பெருமான் அவர்களால் வடலூரில் தருமச்சாலை தோற்றுவிக்கப்படது.

வள்ளலார் ஏற்றிவைத்த அடுப்பானது அன்றிலிருந்து இன்றுவரை அணையாமல் எரிந்துகொண்டுள்ளது என்பது உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக சிந்தனையாளர்களுக்கும்.மற்றும் சன்மார்க்க சங்க அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.

வள்ளலார் தோற்றுவித்த சங்கத்திற்கு பெயர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் அடிப்படை கொள்கையே ஏழை எளிய ஆதரவு அற்ற மக்களின் பசிப்பிணியை போக்க வேண்டியதே அடிப்படை கொள்கையாகும்.

அதற்கு ஜீவகாருண்யம் என்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும்  பெயர் வைத்தவர் வள்ளலார்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

உண்மையான ஜீவகாருண்ய பணி !

உண்மையான ஜீவகாருண்ய பணி !

உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க சங்கங்கள். வள்ளலார் கொள்கையை சிரமேற்கொண்டு  பின்பற்றும் சன்மார்க்க தயவுடைய சான்றோர்கள் அனைவரும் உண்மையான ஜீவகாருண்ய பசிப்பிணி போக்கும் பணியை தங்களால் முடிந்த அளவு சிரமம் பாராமல் ஓய்வு இல்லாமல். சிறப்பாக  செய்து வருகிறார்கள். அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

இதுவே காலம் கருதி செய்யும் உண்மையான ஜீவகாருண்ய பணியாகும்.

உலகம் முழுதும் மக்களை பயத்தினால் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆபத்தான கொரோனோ தொற்று வைரஸ் கிருமியின் கோர தாண்டவம் சொல்லொனா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தருணத்தில் அனைத்து நாடுகளிலும் தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளார்கள்.

இந்த கொரோனோ வரக் காரணம் என்னவென்று தெரியாமல். அறிவியல் கழக ஆராய்ச்சி யாளர்களும்.உலக சுகாதார மருத்துவக் கழக ஆராய்ச்சி யாளர்களாலும்.மற்றும் ஆன்மீக சிந்தனையாளர்களும்.அதன் தன்மை உண்மை கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கின்றார்கள்.

*இது ஒரு உயிர்க்கொல்லி வைரஸ்*.

இறைவனால் படைத்த உயிர்களை மனிதர்கள் கொன்று குவித்து உணவாக உண்டு மகிழ்கிறார்கள். இவை உலகம் முழுவதும் பல்லாயிரம் ஆண்டுகளாக வெரித்தனமாக தினமும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

சாதி.சமய.மதம் என்ற ஆன்மீக கொள்கைகளிலும்.
கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்து மாமிசம் உண்ணும் பழக்கத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பசினாலும்.வறுமையாலும் உயிர்களைக் கொன்று  உணவாக உண்ணும் பழக்கம் ஆரம்பகாலத்தில் உண்டாகியுள்ளது.

இறைவனால் படைத்த உயிர்களை கொன்று உண்பது பெரிய குற்றம் என்றும்.தவறான பழக்கம் என்றும் எந்த ஆன்மீக அருளாளர்களும் வெளிப்படையாக சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த அருளாளர்கள். *திருவள்ளுவர்*. *திருஅருட்பிரகாச வள்ளலார்* .இவர்கள் இருவரும் மட்டுமே உயிர்க்கொலை செய்வதும்.அதன் மாமிசம் உண்பதும் கொடிய பாவச்செயல் என்பதை வெளிப்படையாக சொல்லி உள்ளார்கள்.

ஏதும் அறியாத. வாயால் பேசி தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியாமல். மனிதர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாத அப்பாவி
*உயிர்களைக் கொன்று உண்பதால். மனித உயிர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த கொரோனோ தொற்று வைரஸ் மக்களை பயமுறுத்தி வருகின்றது. என்பதை அறிவுள்ள சான்றோர்கள் அறிந்து கொண்டு மக்களுக்கு போதிக்க வேண்டும்*.

*இதுவே சிறந்த மருந்தாகும்*! .

இதில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரேவழி உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமல் இருப்பதே சிறந்த மருந்தாகும்.

எனவேதான் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

*உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமல் இருப்பதே சிறந்த உயர்ந்த ஜீவகாருண்யமாகும்*

ஜீவன் என்றால் உயிர்.காருண்யம் என்றால் காப்பாற்றுவது.

*மற்ற உயிர்களைக் காப்பாற்றினால் தன் உயிர் காப்பாற்றப்படும்*.
என்பதே வள்ளலார் சொல்லியுள்ள ஜீவகாருண்யமாகும்*.

*எனவேதான் ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்*.

ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற தியானம்.தவம்.யோகம்.வழிபாடுகள் யாவும் வெற்று மாயா ஜாலங்களே என்றார் வள்ளலார்.

மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் பசி.கொலை.பிணி.
தாகம்.இச்சை.எளிமை.பயம் போன்ற ஏழு வகையான துன்பங்களினால் ஜீவன் என்ற உயிர்களுக்கு துன்பம் உண்டாகி இறுதியில் மரணம் வருகின்றது.

வள்ளலார் ஜீவகாருண்யத்தை இரண்டாகப் பிரிக்கின்றார்.

*ஒன்று பர ஜீவகாருண்யம்*
*ஒன்று அபர ஜீவகாருண்யம்*.

பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் வரும் அபாயத்தை நிவர்த்தி செய்விப்பது சீவகாருணியத்திற்கு லக்ஷியமாக இருக்கவும்.

இவ்விடத்துப் பசியினாலும் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது தலைப்படும் காருணியம் என்று குறித்தது ஏன் என்று அறியவேண்டில்:-

சீவகாருணிய ஒழுக்கத்தில் பரசீவகாருணிய மென்றும் அபரசீவகாருணியம் என்றும் இருவகையாம். அவற்றில் *பசிநீக்கலும் கொலைநீக்கலும்* *பரசீவகாருணியம்*. *மற்றவை அபரசீவகாருணியம்*. ஆகலில், *பரசீவகாருணியம் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்று அறியவேண்டும்*.

அன்றியும், பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குவதற்குத் தண்­ணீர் கொடாமலிரார்கள். தண்­ணீர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்­ணீர் ஏரி, குளம், கால்வாய் முதலிய இடங்களிலும் இருக்கின்றது இதேபோல் உலக இன்பத்தை உண்டு பன்னுவது அபர ஜீவகாருண்யம் என்பதாகும்.

மனிதன் பசிப்பிணியைப் போக்குவதும்.உயிர்க்கொலை செய்யாமல் இருப்பது மட்டுமே ஜீவகாருண்யத்தின் முக்கிய வல்லபமாகும் செயலாகும்.

பசிப்பிணியைப் போக்குபவர்களுக்கும்.உயிர்க்கொலை செய்யாமலும் அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பவர்களுக்கு. *கொரோனோ* போன்ற கொடூர தொற்று தாக்குதலில் இருந்து மீட்கப்படுவார்கள்.

இதுவே ஜீவகாருண்யத்தின் முக்கிய வல்லபமாகும்.

என்வே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய. அன்புடைய சகோதர சகோதரிகளே *உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் சத்திய பிரமாணம் செய்து* கடைபிடியுங்கள் .இயற்கை பேரிடர் எதுவாக இருந்தாலும் இயற்கையாக காப்பாற்றப்படுவீர்கள்.

அதே நேரத்தில் பசியினால் துன்பப்படும் ஜீவர்கள் யாராக இருந்தாலும் பசிப்பிணியைப் போக்கி அவர்களை மகிழ்வித்து.அதனால் கிடைக்கும் ஆன்மலாபமான இறை அருளைப் பெற்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 9 ஏப்ரல், 2020

உயிர் எலாம் பொதுவில் நோக்குக !

*உயிர் எலாம் பொதுவில் உளம்பட நோக்குக என்றார் வள்ளலார்*!

வள்ளலார் பாடல் !

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்

பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!

*எல்லா உயிர்களிலும் இறைவன் திருநடம் புரியும் இடமாக அறிந்து கொண்டேன்*.

எனவே எந்த உயிர்களையும் கொல்லாதீர்கள்.அதன் புலாலை உண்ணாதீர்கள் என்று வள்ளலார் வெளிப்படையான உண்மையை எல்லோரும் புரியும் வண்ணம் சொல்லி உள்ளார்.

*எனவேதான்
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* !

*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக* ! என்றார் வள்ளலார்.

மனிதனுக்காக எல்லா உயிர்களும் படைக்கப்பட்டன என்ற குருட்டு நம்பிக்கையில் வாயில்லாத வாய் பேசாத உயிர்களை கடவுளின் பெயராலும் மூடநம்பிக்கை யாலும்.அறியாமை என்னும் பழக்கத்தினாலும்.உயிர்கள் துடிதுடிக்க கொன்று அதன் மாமிசத்தை உண்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டு சொல்லி உள்ளார்.

மேலும் உயிர்க்கொலை செய்பவர்களும் அதன் புலால் உண்பவர்களும் கடவுளைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் தகுதி அற்றவர்கள் என்கிறார் வள்ளலார்.

எவ்வளவு சொல்லியும் மனிதர்கள் கேட்கவில்லை என்பதால் இயற்கையின் கோர தாண்டவத்திற்கு ஆளாக நேர்ந்துள்ளன.

அதுதான் இப்போது *கொரோனோ* போன்ற வைரஸ் தொற்று உருவாக்க் காரணமாக இருக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

*இனிமேலாவது எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் உண்மையை தெரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்*.

தாவர உணவு உண்பவர்களுக்கு(ஜீவகாருண்யம் உள்ளவர்களுக்கு) எவ்விதமான பேரிடர் ஆபத்துக்களும்.கொடூரமான வைரஸ் தொற்றும் அணுகாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் மரணத்தை வென்ற மகான்.முக்காலமும் தெரிந்த அருள்ஞானி. ஐந்தொழில் வல்லபம் பெற்றவர் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேணும்.

வள்ளலார் கொள்கையை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

வள்ளலார் வாய்மொழி!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

புதன், 8 ஏப்ரல், 2020

இயற்கையை அழிக்காதே !

இயற்கை என்பது என்ன ?

இயற்கை என்பது மரம் செடி கொடி.காடு.மலை.ஆறுகள்.வாய்க்கால்கள் கடல்கள் போன்றவை மட்டுமே அல்ல.

தாவரம்.ஊர்வன.பறப்பன.நடப்பன.
தேவர்.அசுரர்.மனிதர்கள் யாவும். மற்றும் எல்லா  உயிர்களும் இயற்கையினால் படைக்கப்பட்டது.

இயற்கைக்கு எதிர்ப்பாக நடந்தாலோ.இயற்கையை அழித்தாலோ இயற்கையின் சீற்றம் கட்டுக்கு அடங்காது தன் வேலையை செய்ய ஆரம்பிக்கும்.

நில நடுக்கும்.பெரும்புயல் பெருங்காற்று பெருமழை.பெருங்கடல் கொந்தளிப்பு.பெரும்மின்னல்.பெரும்இடி.பெரும் வெப்பம். பெரும் கிரக மாற்றம் போன்ற ஆபத்துக்கள் வந்து கொண்டே இருக்கும்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மரணம் வராமல் வாழும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் !

*மரணம் வராமல் வாழும் வழியை கண்டு பிடித்தவர்* !

மரணம் வராமல் வாழும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவரே !

வள்ளலார் பாடல் !

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

மேலும் ஒருபாடல் !

ஆராலும் அறிந்து கொளற் கரியபெரும் பொருளே
அம்மே என்அப்பா என் ஐயாஎன் அரசே

காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே

சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான
சித்திபுரத் தமுதே என் நித்திரை தீர்ந் ததுவே.!

என்னும் பாடல்கள் வாயிலாக மரணத்தை வென்ற வழிமுறைகளை பதிவு செய்கிறார்.

*உயர்ந்த அறிவு இறைவனால் கொடுக்கப் பட்ட* . *பெறப்பட்ட உயர்ந்த பிறப்பு மனிதப்பிறப்பு* . .

*மனிதனுக்கு மரணம் வரக்கூடாது என்பது இயற்கையின் நியதி*.இயற்கையின் சட்டம்.மரணத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்கான சாத்திய கூறுகள் மனிதனுக்கு மட்டுமே உண்டு.

மேலே கண்ட பாடலில் மரணம் எந்த எந்த வழிமுறைகளில் வருகிறது என்பதை பட்டியல் போட்டு காண்பித்துள்ளார் வள்ளலார்.

*மரணம் வரும் வழி முறைகள்* !

சாதாரண மாக பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.
கொலை.பயம் இவைகளால் மரணம் வருகிறது.

இதில் தப்பிவிட்டால். *ஐந்து பூதங்களான* மண்.நீர்.அக்கினி.
காற்று.ஆகாயம்.
மற்றும் கோல்கள் என்னும் கிரகங்கள் இவைகளின் செயல்பாட்டால் மரணம் வருகிறது.

மேலும் *கூற்றுவன்* எனும் எமனாலும் மரணம் வருகிறது .கொலைக் கருவிகளாலும் மரணம் வருகிறது.

மேலும் அணு ஆயுதங்களாலும் மரணம் வருகிறது. மேலும் பிறர் இயற்றும் மந்திர தந்திர செயல்களாலும் மரணம் வருகின்றது.

*மேலும். *விஷக்காற்று*
*உஷ்ணக்காற்று*.
அசுத்த *பூதக்காற்று மூலமாகவும் வருகிறது* .

மேலும் *கொரோனோ* போன்ற கொடூரமான கிருமி தொற்றாலும் மரணம் வருகின்றன.

மேலும் வேற்றாலே மரணம் வருவதற்குண்டான வழிமுறைகளை கண்டு பிடித்தாலும் கண்டு பிடிக்கலாம்.

இதுபோன்று வரும் மரணத்தில் இருந்து என்ன காப்பாற்ற வேண்டும் என்று *இயற்கை உண்மைக் கடவுள்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் விண்ணப்பம் செய்கின்றார் வள்ளலார்.

இந்த மரணப் பெரும்பிணியில் இருந்து காப்பாற்ற  ஒரே வழி தான் இருக்கின்றது.ஒரே மருந்துதான் இருக்கிறது.

*அதற்கு பெயர்தான் அருள் ஞான மருந்து என்பதாகும்*

ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்து அந்த இறைவன் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே* தொடர்பு கொள்ள வேண்டும்.

அவரைத் தொடர்பு கொள்ள அறிவு விளக்கத்தோடு அறிந்து உணர்ந்து தெரிந்து. *உண்மை ஒழுக்க நெறியான  சுத்த சன்மார்க்கத்தை* கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே அருள் ஞான மருந்து பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

அப்படி வாழத் தவரிவிட்டால் மேலே சொன்ன வழிமுறைகளில் எதாவது ஒன்றால் மரணம் வந்துவிடும் என்பது நிச்சயம்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை கடைபிடித்து மரணத்தை வென்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்.

*வள்ளலார் எழுதிய அகவல் வரிகளின் தகவல்* !

664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடைய நன் மருந்தே

666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே

667. மலப்பிணி
தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே

668. சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே

அந்த அருள் மருந்து வெளியில் தேட வேண்டாம்.

நமது சிரநடு சிற்றம்பலம் என்னும் ஆன்மா இயங்கும் இடமான *சிற்சபையில் திருநடம் புரியும் அற்புத ஆனந்த மருந்துதான் அருள் ஞான மருந்தாகும்*.

*சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின்* சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

திங்கள், 6 ஏப்ரல், 2020

தெரிந்து கொண்டால் திருந்தி வாழலாம் !;

தெரிந்து கொண்டால் திருந்தி வாழலாம் !

கொரோனோவிற்கு குறுகிய கால உயிர் சக்தி உண்டு.அதே நேரத்தில் வேகமாக தொற்றும் சுவாசம் உண்டு

கொரோனோவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமல் இருந்தாலே போதும் தானாகவே மறைந்துவிடும்.

உயிர்க்கொலை செய்பவரையும் புலால் உண்போரையும் உடனே தாக்கும் வேகம் கொரோனோவிற்கு உண்டு.

தாவர உணவான சைவ உணவு உண்போருக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு.எனவே அவர்களை சீக்கிரம் தாக்காது.

ஒரு உடம்பில் இருந்து வேறு உடம்பிற்கு சொல்லும் மாமிசம் கலந்த இரத்த வாடை உள்ளவர்களை உடனே கொரோனோ வைரஸ் தொற்று சிரமம் இல்லாமல் தொற்றிக் கொள்ளும்.

இரத்த வாடையும் மாமிச வாடையும் கொரோனோவிற்கு ரொம்ப பிடிக்கும்.

திருவள்ளுவரும் வள்ளலாரும் சொன்ன உண்மையை உணர்ந்து கொண்டு  உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழ்பவர்களுக்கு எந்தவிதமான வைரஸ் கிருமிகளும் தொற்றாது

நம்மை நாமே பாதுகாக்கவும் காப்பாற்றிக் கொள்ளவும் நல்ல தருணம் இதுவே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் !

நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும்.!

தன்னை அறிந்து இன்பம்உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்று வள்ளலார் ஆண்டவரிடம் தந்திரத்தை கேட்டுப் பெறுகிறார்.

உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் எதாவது ஒரு வகையில் உணவு அவசியம்.

மனித உடம்பை உயிரைக் காப்பாற்ற மிகவும் முக்கியமானது உணவு என்பது அனைவரும் அறிந்த்தே.


புதன், 1 ஏப்ரல், 2020

காலம் கருதுவது ஏன் !

காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் !

காலத்தைக் கடந்தவன் கடவுள்.  காலம் கருதாது தன்னைத் தொடர்பு கொள்பவர்களை கட்டாயம் காப்பாற்றுவார்.

தற்போது நம் நினைவு அலைகள் எல்லாம் இயற்கை என்னும் ஆன்ம ஒளியை தொடர்பு கொள்வதே சிறப்பானதாகும்.

இது நல்ல தருணம் அருள் செய்ய !  இது நல்ல தருணம்.

பசித்திரு.தனித்திரு.விழித்திரு இதுவே வள்ளலார் வாக்கு.

வள்ளலார் சொல்லியதை அசட்டை செய்யாமல் கடைபிடிப்போம்.

வாழ்க்கை நமதே வாழ்வதும் நமதே !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

பரிசு வழங்கிய இறைவன் !

*பரிசு வழங்கிய இறைவன்* !

அழிந்து போவதை கண்டு பிடித்தவர்களுக்கு எல்லாம்.அறிஞர்கள் பட்டம் வழங்கி நோபல் பரிசு வழங்கி உலகம் பாராட்டி உள்ளது.

மரணத்தை வெல்லும் அருள்ஞான அறிவியலை கண்டு பிடித்த. தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கும் *திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானை* இந்த உலகம்கண்டு கொள்ளவே இல்லை.

வள்ளலார் அருள் அற்புதச் செயலை கண்டு வியந்து பாராட்டி போற்றி மகிழ்ந்த *எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*  அருட்ஜோதிப்பரிசு வழங்கி பாராட்டி உள்ளார்.

வள்ளலார் பாடல் !

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
*சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும்* - தேவாநின்
*பேரருளை* என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.!

உலகில் காகாவரம் பெற்ற வள்ளல்பெருமானாருக்கு *பேரருள்* என்னும் பரிசு இறைவனால் வழங்கப்பட்டது.

மனித தேகம் பெற்ற அனைவரும் மரண பயத்தை நீக்கி சாகாவரம் பெறலாம் என்ற உண்மையை கண்டுபிடித்து  மனித குலத்திற்கு வழிகாட்டிய வள்ளலாருக்கு.

 அழிந்து போகும் மனித குலத்தின் பரிசு பெறாமல் .அழியாமல் என்றும் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பரிசு பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும். வள்ளலார் வாழ்ந்து காட்டிய உண்மை வழியைப் பின்பற்றி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!*
*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக* *!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

நாம் செய்ய வேண்டியது !

*நாம் செய்ய வேண்டியது* !

*நமக்கு நல்ல ஓய்வு கிடைத்திருக்கு*.

நமக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் தகரக்கண்டி விளக்கோ.அல்லது அகல் விளக்கோ வைத்து தேங்காஎண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அணையாமல் தினமும் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

தினமும்
*அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி*
என்னும்  மகாமந்திரத்தை முடிந்த அளவு சொல்லுங்கள்.

*வள்ளலார் வாக்கு* !
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* !
*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக* !

என பலமுறை சொல்லுங்கள்.

*மாமிச உணவு உட்கொள்ளாமல் தாவர உணவான சைவ உணவை அளவோடு உட்கொள்ளுங்கள்*.

இரவு எட்டு மணிக்குள் உணவை உட்கொள்ளுங்கள்.

காலை 8 மணிக்கு காலை உணவு உட்கொள்ளுங்கள்.

இரவில் இருட்டில் படுக்காமல் சிறிய வெளிச்சத்தில் நித்திரை செய்யுங்கள்.

*வெளிச்சம் உள்ள வீட்டில் இருள் என்னும் கொடிய வைரஸ் நெருங்காது*.

*வீட்டை விட்டு வெளியே போகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்*.

ஒருகுடத்தில் தண்ணீர் ஊற்றி வேப்பிலை அதில் போட்டு மஞ்சள் இரண்டு ஸ்பூன் போட்டு ஊறவைத்து காலை மாலை கை கால்களை கழுவி.

மீதமுள்ள தண்ணியை நம் வீட்டின் முன் வாசல் காலியாக உள்ள இடங்களில் தெளிக்கவும்.

நல்லதை நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

*எங்குறு தீமையும் எனைத்தொடராவகை கங்குலும் பகலும்  மெய் காவல் செய் துணையே* !

என்பார் வள்ளலார்.

நம்மைப் படைத்த இறைவனே நமக்கு பாதுகாப்பாய்  இருப்பார்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் காலம் !

*சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் காலம்* !

மனிதகுல நல் வாழ்விற்காக வள்ளல்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டது தான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்பதாகும்.

வள்ளலார் கொள்கைகளில் மிகவும் முக்கியமானது . *உயிர் கொலை செய்யக்கூடாது*. *அதன் புலாலை உண்ணக்கூடாது* என்பதாகும்.

*வாடிய பயிரைக் கண்டு வாடியவர்* வள்ளலார் என்பது உலகமே அறியும்.

தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த திருவள்ளுவரும் வள்ளலாரும் *கொல்லாமை .புலால் உண்ணாமை* என்னும் விஷயத்தில்  ஒரே நேர்கோட்டில் நிற்கிறார்கள்.

உயிர்க்கொலை செய்வதாலும் அதன் புலாலை உண்பதாலும்.மனித குலத்திற்கு அளவில்லா துன்பமும்.துயரமும் அச்சமும் பயமும் ஆபத்தும் பிணியும் வந்து மனித உயிர்கள் சீக்கிரம் அழியும் வாய்ப்புள்ளது என்று தெளிவாக சொல்லி உள்ளார்கள்.

நாம் யாரும் செவிமடுத்து கேட்கவில்லை.

இனிமேலாவது திருவள்ளுவர் வள்ளலார் சொல்லிய ஞான கருத்துக்களை பின்பற்றி வாழ்ந்து பயன் அடைய வேண்டுமாறு *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்* தாள் வணங்கி கேட்டுக் கொள்கிறோம்.

*நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.*

பயம் இல்லாமல் வாழ்வோம்.

*இனி சுத்த சன்மார்க்க காலம்* !

*வள்ளலார் பாடல்* !

திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து
வல்லப சத்திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங் கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறி வீழ்ந்துழலாதீர் கலக்கம் அடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித்து உண்மை உரைத் தேனே.!

என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

திருநெறியான இறை அருள் பெறும் நெறியே சமரச சுத்த சன்மார்க்க சிவநெறி என்ற உண்மையைச் சொல்லுகிறேன் என்கிறார் வள்ளலார்.

*சிவநெறி என்பது இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது*. எனவே இனி சுத்த சன்மார்க்கத்தை மக்கள் பின்பற்றும்  காலம் இதுவே என்பதை மக்கள் அறிந்து.தெரிந்து.
புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்றி இறை அருளைப் பெறுவோம்.

*மரண பயத்தில் இருந்து மீண்டு* *மரணத்தை வென்று உடம்பையும் உயிரையும்*  *அழிக்காமல்
பாதுகாத்துக் கொள்வோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.