வெள்ளி, 29 ஜூன், 2018

இயற்கையான செயற்கை உணவு!

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

*தயவு செய்து*
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* *தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!*
*கீரை வாரம் 3 முறை பருப்புக்கூட்டாகவும்,*
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* *இருமுறை கொடுக்கவும்!*
*ஆப்பிள்,ஆரஞ்சைவிட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!*
*தினமும் சாப்பிடக்கொடுங்கள்!*

கரிசாலையை சட்னியாகவோ.பருப்பில்சேர்த்தோ.ரசமாகவோ.கசாயமாகவோ.பவுடராகவோ.
லேகியமாகவோ. தினமும் ஒருவேலை கொடுக்கவும்.

*உங்கள்* *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
*தயவு செய்து மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும்* *வாங்கிக்கொடுக்கவும்!*
*தினமும்* *5பேரிச்சம்பழம்* *குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!*
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* *வலியுறுத்துங்கள்!*

*உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட* *மனைவியா நீங்கள்???*
🚪 *தயவு செய்து* *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*
🍅🥕🥒🍆🌰🥔 *ஃப்ரஷ்ஷான காய்கறிகளை, சமைக்கவும்!*
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* *குடிக்கக்கொடுக்கவும்!*

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ!* *அன்றே நாம் நோய்யின் பிடியில் சிக்கிக் கொண்டோம்...* *இழந்த ஆரோக்கியத்தை* *முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50%* *ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.*
*இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!*

*சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???*

*சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்*
*என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறது...!*

*தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு...*

*அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்....*

*பலரும் இன்று குக்கரில்* *வேகவைத்த சாதம்*
*சாப்பிடுகிறார்கள்.*
*கஞ்சியை* *வடிக்காமல்*
*சாதம்* *சாப்பிடுவதால்* *தான் நீரிழிவு* *ஏற்படுகிறது....*

*சாதம் வடித்த கஞ்சி சூடாக*
*இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்...!*

*அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்...!*

*சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை* *எடுத்துப்பருகினால்*
*நீர்க்கடுப்பை* *நீக்கும்.*

*கொதிக்கக்கொதிக்க சோறு*
*சாப்பிடக்கூடாது...!*

*மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்...!*

*அதே நேரம் சில்லென்று ஆறிப்போய்* *சாப்பிட்டால் கீல்*
*வாதம், மூட்டு* *வாதத்தை* *ஏற்படுத்தும்...*

*பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்* *நல்ல தெம்புடனும்*
*ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்...!*

*முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை*
*சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்*
*எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது...!*

*பழைய சோற்றில் தயிர் ஊற்றி*
*சாப்பிடக்கூடாது.* *மோரைக்கடைந்து*
*ஊற்றி சாப்பிட வேண்டும்....*

*சோறு* *வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்*
*தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்...!*

*பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்....*

*சிலர் சாம்பார், ரசம்,*
*வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்துசாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்*
*எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்...!*

*மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது...!*

*மாதாந்திர* *பிரச்சினை உள்ள*
*பெண்களுக்கு* *சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது...!*

*சம்பா அரிசி சோறு வயிற்றுப் பொருமலுக்கு மிகவும் நல்லது...*

*வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து*
*நன்மை* *செய்கிறது....!*

*வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை...*

*1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.*
*கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்...!*

*2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்*
*மலம் கழிக்க வேண்டும்...*
*கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்...!*

*காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்...*

*3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்*
*6 மாதத்திற்கு* *ஒருமுறை* *மாற்றுங்கள்...*
*ஒருநாள் பயன்படுத்திய பிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்...!*

*4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,*
*சர்க்கரையும்,* *இரத்தக் கொதிப்பு வராமல்* *தடுக்கப்படும்.*
*வந்தால் கட்டுக்குள் இருக்கும்...!*

*5. காலை* *உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்*
*தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்...*
*கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்...!*

*உணவை நன்றாக மென்று,*
*பொறுமையாக உண்ணுங்கள்...!*

*6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.*
*அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்...*
*புற்றுநோயை உருவாக்கும்...!*

*7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்...*
*வாழ்நாளைக் குறைக்கும்.*
*குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்...!*

*8.மதியம்* *சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு*
*சுக்குக் காபி* *சாப்பிடுவது மிகவும் நல்லது...!*

*9உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு*
*அடுத்த திட உணவு கூடாது...!*

*10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்...!*

*11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி,  வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்...!*

*12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி,*
*இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை*
*கட்டாயம் உறங்க* *வேண்டும்....!*

எக்காரணத்தைக் கொண்டும் மாமிச உணவை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.வீட்டிலும் செய்யக்கூடாது.

இயற்கை உணவே இன்பம் பெருகும். உயிரையும் உடம்பையும் காப்பாற்றும்.

 இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்.
"வாழ்க நலமுடன்"...

புதன், 27 ஜூன், 2018

மனித உடம்பு பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டது !

மனித உடம்பு பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டது !

மனித உடம்பானது .
வாலணு.
திரவ அணு.
குரு அணு.
லகுஅணு.
அணு.
பரமாணு.
விபு அணு...
என்னும் ஏழு வித கலப்பு அணுக்களால் அனந்த வண்ண பேதமாய் படைக்கப்பட்டு உள்ளன.

மேற்படி அணுக்கள்.பல வண்ணங்கள் உடையதால்.அந்த அணுக்கள்.ஆன்மாவின் தன்மைக்கு ஏற்ப பஞ்ச பூத உடம்பு கொடுக்கப் படுகின்றது. உடம்பு இயங்குவதற்கு உயிர் என்னும் உயிர் ஒளியும் கொடுக்கப்படுகிறது...

ஏழு விதமான அணுக்களும் உயிர் ஒளியும். ஆன்மா வாழ்வதற்காக.
இறைவன் ஆணைப்படி மாயையால் கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு வாடகை வீடாகும்..இதேபோல் எல்லா ஜீவராசிகளுக்கும் உடம்பு கொடுக்கப் படுகின்றது.... இதற்கு காரிய தேகம் என்றும் பஞ்ச பூத தேகம் என்றும் பெயர்..

மனித தேகத்திற்கு மட்டும் காரண காரிய தேகம் கொடுக்கப்பட்டுள்ளன.அதனால் தான் உயர்ந்த அறிவு மனித தேகத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன...
அதனால் தான் நம் உடம்பிற்கு அசுத்த பூத காரிய தேகம் என்றும் பெயர்.

வள்ளலார் அகவல் !

காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி !

உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும்..அதன் காரண காரியத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே சாகாக்கல்வி என்னும் கல்வியைக் கற்றுக் கொள்ள முடியும்..என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார்.

..மனித தேகம் கொடுத்த காரியத்தையும்.அதன் காரணத்தையும் இறைவன் வள்ளலாருக்கு ஒளிவு மறைப்பு இல்லாமல் காட்டி உள்ளார்....

வள்ளலார் பாடல் !

காரண காரியக் கல்விகள் எல்லாம்கற்பித்தென் னுள்ளே கலந்துகொண்டு

என்னைநாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றிநாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்

பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்புத்தமு தாம்அருட் போனகம் தந்தே

ஆரண வீதியில் ஆடச்செய் தீரேஅருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்...

ஆன்மாக்களின் காரணத்தை அறிந்து..உடம்பு என்னும் அசுத்த பூத  காரிய காரணமான உடம்பை.சுத்த பூதகாரிய உடம்பாக.சுத்தப்படுத்தி.அசுத்தங்களான அணுக்களை.சுத்த பூத காரிய அணுக்களாக மாற்றினால் தான் இறைவன் அருளைப் பெற முடியும்.

ஏன் அருளைப் பெற வேண்டும்?

உலகில் உணவு இரண்டு வகை உள்ளன.ஒன்று பொருள் உணவு..
ஒன்று அருள் உணவு.

பொருள் உணவு கீழ் பிறப்புகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றது

உயர்ந்த அறிவாகிய மனிதப்பிறப்பு எடுத்தவர்கள் பொருள் உணவை நிறுத்தி அருள் உணவு பெறும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்...

பொருள் உணவு இந்த உலகத்தில் மாயையால் கொடுக்கப் படுகின்றது...

அருள் உணவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப் படுகின்றது..

வள்ளலார் பாடல் !

அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே

தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்

மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.!

என்னும் பாடலிலே தெரியப்
படுத்துகின்றார். எனவே மாயையால் கொடுக்கப் படுகின்ற பொருள் உணவை நிறுத்தி.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் கொடுப்படும் அருள் உணவைப் பெறும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்...

அணுக்களால் ஆன அசுத்த பூத காரிய தேகத்தை .சுத்த பூத காரிய தேகமாக்கி.சுத்த பிரணவ தேகமாக்கி.சுத்த ஞான தேகமாக மாற்ற வேண்டும்.இந்த மூன்று தேக மாற்றம் உண்டாக அருள் உணவு தேவை.. அருளைப் பெறும் வழியைத்தான்.
வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்கத்தில் கற்றுத் தரப்படுகின்றது...

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் என்பதே ஆணுக்களின் கூட்டுச் சேர்க்கைதான.என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...அசுத்த பூதகாரிய அணுக்களை சுத்த பூதகாரிய காரண ஓளி அணுக்களாக மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றம் அடைய செய்விப்பதற்காகத்தான் மனிதனுக்கு உயர்ந்த  அறிவை இறைவனால் வழங்கப்பட்டுள்ளன.

அருளைப் பெறும் வழியைத் தான்..முதலில் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று வள்ளலார் பெயர் வைத்துள்ளார்... அடுத்தது சத்விசாரம் என்று பெயர் வைத்துள்ளார்....

இந்த இரண்டு வழிகள் தவிர வேறு வழிகளில் சென்றால் அருள் கிடைக்காது....

நாம் உண்ணும் உணவால்.விந்தும் .
விந்துவால் உண்டாகும் பேச்சும்.உலகியலின் செயலும். பின் மரணம் போன்ற கீழ்நிலைகள் கிடைக்கும்..

அருளால்...
பரவிந்து.
பரநாதம்.
திக்கிராந்தம்.
அதிக்கிராந்தம்.
சம்மேளனம்.
சுத்தம்.
அதீதம் என்னும் மேல் நிலைகள் தோன்றி.
மரணத்தை வென்று முத்தேக சித்தி என்னும்.ஆன்ம  காரண ஒளி தேகம் மாற்றம் கிடைக்கும.

பின் காரண காரிய தேகத்தை மாற்றி..அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் நிலையான. கடவுள் நிலை அறிந்து அம்மயமாக இறைவன் மாற்றிக் கொள்வார்..

வள்ளலார் அகவல் வரிகள்!

அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே !

498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே !

499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே !

500. அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே !

501. அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே !

502. அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே !

503. அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே !

504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே !

505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே !

506. அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே !

507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே !

508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே !

509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே !

முயற்சி செய்வோம் முடியாத்து ஒன்றும் இல்லை...

என்றும் அழியும் ஊன தேகமே போதுமா ?

என்றும் அழியாத ஒளிதேகம் வேண்டுமா ?

உங்கள் விருப்பம் தான்.

ஊதுகிற சங்கை ஊத வேண்டியது என் கடமை.என் ஆன்மநேய உரிமை

விரித்தால் பெருகிக் கொண்டே இருக்கும்.
.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 23 ஜூன், 2018

நான் எந்த நூலும் படிப்பதில்லை !

நான் எந்த நூலும் படிப்பதில்லை !

நான் வள்ளலார் எழுதிய திருஅருட்பா தவிர வேறு எந்த நூல்களும் படிப்பதில்லை..

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைக்கு வரும் முன் நிறைய நூல்களைப் படித்துள்ளேன்...

வள்ளலார் உலகியலில் உள்ள நூல்கள்  அனைத்தும் பொய். நூல்கள் என்கிறார்..பெய்ப்பொருளைப் பற்றி எந்த நூல்களும் சொல்லவில்லை... அதனால் எவற்றையும் படிக்க வேண்டாம் என்று அழுத்தமாக சொல்லுகின்றார்..

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக சொல்லி உள்ளார்...

எல்லா நூல்களும்..உலகியலில் வாழ்வதற்கும் பணம்.பட்டம்.பதவி.புகழ்  சம்பாதிக்கவும்.சாவதற்கும் வழிக் காட்டுகின்றது .மரணத்தை வெல்லும் வழியைக் காட்டவும்.பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழும் வழியையும் காட்டவில்லை...

திருஅருட்பா ஒன்றுதான் இறைவனால் கொடுக்கப்பட்ட. மெய் நூலாகும்.பெய்பொருளைக் காட்டும் நூலாகும்.எனவே திருஅருட்பாவை மட்டுமே படித்து வருகிறேன்....

மேலும் வள்ளலார் பாடல் !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்பெற்றேன் உயர்நிலை

பெற்றேன் உலகில் பிறநிலையைப்பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

வள்ளலாரே சிற்றம்பலக் கல்வியைக் கற்று உலகிற்கு வழங்கி உள்ளார்..

எனவே நாமும் உண்மையான மெய்நூலான திருஅருட்பாவை கற்று.உயிர்க் கருணையைப் பெற்று.
.கருணையினால் திருஅருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 22 ஜூன், 2018

ஜீவகாருண்யத்தை கடைப்பிடிப்பவர்கள் கவனித்திற்கு !

ஜீவ காருண்யத்தை கடைபிடிப்பவர்கள் கவனத்திற்கு !

ஜீவ காருண்யத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை கடைபிடித்துக் கொண்டு பசியாற்றுவிப்பதால் எந்த பயனும் கிடைக்காது.அருளும் கிடைக்காது.

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !.

உலகில்
சாதி ஆச்சாரம்.
குல ஆச்சாரம்
ஆசிரம ஆச்சாரம்
லோக ஆச்சாரம்
தேச ஆச்சாரம்
கிரியா ஆச்சாரம்
சமய ஆசாரம்
மத ஆசாரம்
மரபு ஆசாரம்
கலா ஆசாரம்.
சாதனா ஆசாரம்
அந்த ஆசாரம்.
சாஸ்திர ஆசாரம்.

முதலிய ஆசாரங்கள் உள்ளன.

ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து.

சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆச்சாரத்தை கடைபிடித்து பொது நோக்கம் வந்தால் தான்.

மேற்படி காருண்யம் விருத்தியாகும்.அப்படி விருத்தியானால் தான் கடவுள் அருளைப் பெற முடியும்.சித்தி முத்திகளைப் பெற முடியுமே அல்லது அப்படி இல்லாவிடில் எந்த பயனும் கிடைக்காது.

எனவே சன்மார்க்க அன்பர்கள் மேலே கண்ட உலக ஆச்சார சங்கற்பங்களை முழுதும்  பற்று அற விட்டுவிட்டு.ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால் மட்டுமே இறைவன் அருளைப்பெறும் தகுதி உடையவர்கள் ஆவோம்..

இனிமேல் ஜீவகாருண்யம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கை யோடு பொது நோக்கத்தோடு தங்கள் ஜீவகாருண்யப் பணியை செய்ய வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 20 ஜூன், 2018

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கட்டளைகள் !

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கட்டளைகள். !

1.கடவுள் ஒருவரே. அவரே
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உணர்ந்து பின் பற்ற வேண்டும் !

2.சிறு தெய்வ வழிபாடு கூடாது.என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.!

3.தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும் !.

4. புலால் ( மாமிசம்) எக்காரணத்தைக் கொண்டும் உண்ணக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் !

5.சாதி.சமயம்.மதம் போன்ற வேறுபாடுகள் மனத்தில் பற்றாவண்ணம் கடைபிடிக்க வேண்டும்!

6.எல்லா உயிர்களையும் தம் உயிர் போல்.எக்காலத்திலும் எண்ணுதல் வேண்டும்.!

7.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதை இடைவிடாது கவனித்து கடைபிடிக்க வேண்டும்!.

8.புராணங்களும்.வேதங்கள்.ஆகமங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள் போன்றவைகளால் உண்மையான கடவுளை தெரிந்து கொள்ள முடியாது.என்பதில் அறிவு சார்ந்து அகற்ற வேண்டும் !

9. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது.என்பதில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் !

10.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது.என்பதிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!

10.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது.என்பதை செயல் படுத்த வேண்டும்!

11.கருமாதி.திதி முதலிய சடங்குகள் .எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம் !

12. ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை உண்மையுடன் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.!

13.இந்திரியங்கள்.கரணங்கள்.ஜீவன்.ஆனம ஒழுக்கங்களை இடைவிடாது கடைபிடிக்க வேண்டும்.!

14. சமய மத உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் மனதில் பற்றாமல் தெளிவாக இருக்க வேண்டும்.

15.எதிலும் எப்போதும் எக்காலத்தும்.எவ்விடத்தும் பொது நோக்கம் தவறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

மேலே கண்ட 15. கட்டளைகளை. சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றுபவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று வள்ளலார் திருஅருட்பா வில் பதிவு செய்துள்ளார்.

மேலே கண்ட ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்களே.
**சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நடத்த தகுதி உடையவர்கள்* ஆவார்கள்..பின்பற்ற தகுதி உடையவர்கள்.

*மேலே கண்ட ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்கள் மட்டுமே.***
சாகாக்கல்வி கற்பதற்கு இறைவனால் தேர்வு செய்யப்படுவார்கள்***

மற்றவர்கள் எல்லாம் வீண் காலம் களித்து மரணம் அடைவார்கள்..

சன்மார்க்க அன்பர்கள்.சமய மத வாதிகள் போல் .
உள் ஒன்று வைத்து.புறம் ஒன்று பேசி. வெளிவேஷம் போட்டுக்கொண்டு. அலைவதால் எந்த பயனும் எக்காலத்திலும் கிடைக்காது....

காலம் உள்ளபோதே தங்களைத் திருத்திக் கொண்டு வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்க நெறிகளை பின்பற்றி .சாகாக்கல்வியைக் கற்று மரணத்தை வென்று .பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதற்கு. **வள்ளல்பெருமான்**.ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்....

வள்ளலார் சொல்லிய உண்மை ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவோம்.சாகாக்கல்வி யின்
தேர்வில் வெற்றி பெறுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 18 ஜூன், 2018

மனிதனுக்கு பெரிய தண்டனை எது ?

மனிதனுக்கு பெரிய தண்டனை எது ?

உயர்ந்த அறிவு  பெற்ற மனிதப் பிறப்பு கிடைப்பதற்கு பலகோடி புண்ணியம் செய்த பின்பு தான் இறுதியாக இந்த மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது..

மனிதன் தவறு செய்வதால் தான் மரணம் வருகின்றது.என்பதை தப்பாலே சகத்தவர்கள் சாவதற்கே துணிந்து விட்டார்கள. என்று வள்ளலார் சொல்லுகின்றார்.

மரணம் வருவதை மரணப் பெரும் பிணி என்கிறார்.

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகுகரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!

மரணம் என்னும் பிணி வராமல் காக்கும் மருந்து உள்ளது என்கின்றார் வள்ளலார்..

அந்த மருந்து என்ன எது ?
வெளியில் கிடைக்கும் மருந்தோ.நாம் தயாரித்து உண்ணும் காயகற்ப மருந்தோ அல்ல.நம் உடம்பிலே இறைவனால் வைக்கப்பட்டு உள்ளது.

என்றே என்னினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே ! ...என்றும் அவை இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.

சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே !

நம் சிரநடுவில் திருநடம் புரியும் ஆன்மாவின்
.. அன்பு தயவு கருணையின் செயல்பாட்டால் அந்த அருள் என்னும் ஞான மருந்து சிற்சபையின் வழியாக சுரக்கும் .அவைதான்  உண்மையான அருள் மருந்தாகும்...அந்த மருந்நை உண்டவர்கள் மரணத்தை வெல்ல முடியும்....

அடுத்து சுத்த சன்மார்க்கிகள் முயற்சி பற்றாமலும்.அஜாக்கிரதையாலும்.அறியாமையாலும்.மரணம் வந்தால்.அடுத்தப் பிறவி என்ன என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்...

அடுத்த பிறவி என்ன என்பது  மறைமுகமாக இறைவன்  கொடுப்பது தான் தண்டனையாகும்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்று என்று ஏசுபிரான் சொல்லுகின்றார்...

வள்ளலார் மரணம் என்பது பெரும் பிணி என்கிறார். பிணியால் மரணம் வருவது தண்டனை அல்ல .அடுத்தப் பிறவி கொடுப்பது தான் தண்டனை...என்கிறார்

மேல் பிறவியான மனித பிறப்பே பிறப்பதற்கு ஆன்மாவிற்கு வாய்ப்பு கொடுத்தால் அவை தண்டனை இல்லை.மீண்டும் மரணத்தை வெல்லும் வாய்ப்புக்கு அனுமதி வழங்கப் படுகின்றது.

மரணம் அடைந்து ஆன்மாவிற்கு கீழ் பிறவி எது கொடுத்தாலும் அவைதான் தண்டனை என்பதாகும் அந்த தண்டனை தான் தாங்க முடியாத தண்டனையாகும்.

கீழ் பிறவி யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பதைத்தான் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

வாய் பேசாத தாழ்ந்த பிறவியான   ஜீவ  உயிர்களை.தெரிந்தோ.தெரியாமலோ அளவில்லாமல் கொள்பவர்களுக்கும்.
அதன் மாமிசத்தை அளவில்லாமல் உண்பவர்களுக்கும்...
நிச்சயம் மனித பிறவி கிடைக்க வாய்ப்பே இல்லை....அதுதான் பெரிய தண்டனை.என்பதாகும்.

வள்ளலார் பாடல் !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிகபரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கேநயப்புறுசன் மார்க்கம்

அவர் அடையளவும் இதுதான்நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.!

என்ற பாடல் வாயிலாக தெளிவுப் படுத்துகின்றார்...

உயிர்க் கொலை செய்பவர்களும் .அதன் புலாலை உண்பவர்களும்  இறைவன் அருளைப் பெற தகுதி அற்றவர்கள்.அவர்கள் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதை ஆன்ம நேயத்துடன் வற்புறுத்துகின்றார்..
அவர்கள் கீழ்பிறவி செல்லாமல் மீண்டும் மனிதப் பிறவி கிடைக்க நல் வழி காட்டுவது சன்மார்க்கிகளின் ஆன்ம நேய உரிமையாகும்.கடமையாகும்..

மரணம் என்பது தண்டனை அல்ல.கீழ்பிறவிதான் தண்டனை....

மரணம் என்பது தண்டனை அல்ல.மன்னிப்பு கொடுத்து மீண்டும் மனித தேகத்தில் வாழ்ந்து மரணத்தை வெல்லுவதற்கு வாய்ப்பு என்னும் சலுகை இறைவனால் வழங்கப் படுகின்றது..இந்த சலுகையை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

மரணம் அடைந்து மீண்டும் மனிதப்பிறவி கிடைக்காமல் கீழ் பிறவி கிடைப்பதுதான் தண்டனை என்பதாகும்...

எனவே வள்ளலார் சொல்லும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நல் ஒழுக்கத்தில் வாழ்ந்து அஜாக்கிரதையால் மரணம் வந்தாலும் மீண்டும் மனிதப் பிறப்பு இறைவனால் வழங்கப்படும்...இது சத்தியம்.

வள்ளலார் பாடல் !

பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்

கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்றகளியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்

ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்

மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்....

விரித்தால் இன்னும் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

புதன், 13 ஜூன், 2018

இன்பம் என்றால் என்ன ?

இன்பம் என்றால் என்ன ?

இந்திரியம்.
கரணங்கள் அனுபவிப்பது.சிறிய இன்பம் அதாவது சிற்றின்பம்.

தொடர்ந்து அனுபவிக்க முடியாத இன்பம் சிற்றின்பம்...

உதாரணத்திற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து அனுபவிப்பது சிற்றின்பம்..

பேரின்பம் என்பது !

இந்திரியம்.கரணங்கள்.ஜீவன்.ஆன்மா நான்கும் ஒன்று சேர அனுபவிப்பது பேரின்பம்...

ஆன்மாவும் இறைவனும் சேர்ந்து  அனுபவிக்கும் போது இறைவனிடம் இருந்து மட்டுமே அருள் கிடைக்கின்றது.

அந்த அருளை ...ஆன்மாவானது தன்னை சார்ந்துள்ள உயிருக்கும் உடம்பிற்கும் வழங்கி இன்பத்தை பகிர்ந்து கொள்கிறது.

அதனால் உடம்பும் உயிரும் காப்பாற்றப்பட்டு மரணத்தை வெல்லுகின்றது...

உயிருக்கும் உடம்பிற்கும் ஆன்மாவானது அருள் வழங்காது எனத் தெரிந்தால்.இறைவன் அருள் வழங்கி இன்பம் தரமாட்டார்...

வள்ளலார் பாடல் !

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றைஓதி முடியாது

 என்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.

என்கிறார் வள்ளலார்...
எல்லா உயிர்களும் தம் உயிர்போல் எண்ணி.ஒத்து உரிமையுடன் வாழ்பவர்கள். ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ளவர்கள் எவரோ அவரைத்தேடித்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அனைத்துக் கொண்டு அருளை வாரி வழங்குவார்.

அருளைப்பெற்று அனுபவிப்பதுதான் பேரின்பமாகும். அவைதான் நிலையான இன்பம் என்பதாகும்..

நாம் ஆணும் பெண்ணும் அனுபவித்து கிடைக்கின்ற இன்பத்தைவிட கோடானுகோடி இன்பம் இறைவனால் கிடைக்கப் பெறுகிறது..

இதைத்தான் வள்ளலார் கீழ் கண்ட பாடலிலே பதிவு செய்கின்றார்.!

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞானபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

என்ற பாடலின் வாயிலாக அழைக்கின்றார்.

நாம் அடைய வேண்டிய இன்பம் என்றும் அழியாத பேரின்பமாகும்..அந்த இன்பத்தை அனுபவிப்பவர்களால்தான் மரணத்தை வெல்ல முடியும்.

அதற்குப்பெயர்தான் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.

நாம் சிற்றின்பத்தை புறம் தள்ளிவிட்டு இறைவன் தொடர்பு கொண்டு பேரின்ப லாபம் பெறலாம் வாரீர் வாரீர் என வள்ளார் அன்புடன் அழைக்கின்றார்..

சிற்றின்பத்தை விடுவோம்.பேரின்பத்தைப் பெறுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

செவ்வாய், 12 ஜூன், 2018

உடல் உறுப்புக்கள் தானம் செய்யலாமா ?

உடல் உறுப்புக்கள் தானம் செய்யலாமா !

உடல் உறுப்புக்களை தானம் செய்வது இயற்கைக்கு விரோதமானது.

ஒவ்வொரு உயிரும் உடம்பும். ஆன்மாவின் செயலுக்கும் பழைய பதிவுகளுக்கும் தகுந்தாற் போல் உடல் உறுப்புக்கள் இயற்கையால் (இறைவனால்) கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுதான் உடம்பு என்பதாகும்..

நமக்கு இறைவனால் அளித்த உடல் உறுப்புக்களை தானம் என்ற பெயரில் பெற்று மற்றவர்களுக்கு பொறுத்தி பணம் பறிக்கும் மருத்தவ மனைகள். உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

ஒருவர் உறுப்பை வேறு ஒருவருக்கு பொருத்துவதால் நீண்ட காலம் வாழ்ந்துவிட முடியாது..எல்லாமே மருத்தவர்களின் ஏமாற்று வேலை என்பதை மக்கள் அவசியம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரையில் எழுதி இருந்தேன்..அதற்கு நிறைய அன்பர்கள் ஜீவகாருண்யம் இல்லாமல் பேசுகிறீர்கள்.
எழுதுகிறீர்கள். என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள்..

இறந்து போகின்றவர்களின் உறுப்புக்கள் வீணாகத்தானே போகின்றது. அவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து. உயிரைக் காப்பாற்றுவது. ஜீவகாருண்யம் தானே என்று பலர் நினைக்கிறார்கள் .அது முற்றிலும் தவறானது...மருத்தவர்களின் பணம் பறிக்கும் சூழ்ச்சி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியே வேறு ஒருவரின் உறுப்பை பொருத்தியவர்கள் நீண்ட காலம் வாழ்ந்த்தாக வரலாறுகளே இல்லை..உயிர்.உடம்பை விட்டு. எப்போது பிரியும் என்பது இயற்கையின் நியதிப்படித்தான் நடக்கும். அதை நிர்ணிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

உயிருக்கும் உடம்பிற்கும் உருப்புக்களை.பொருத்துவது  இறைவன் நியதியின் கட்டளைப்படிதான் பொருத்தப்படுகின்றன.அவற்றை மற்றவர்களுக்கு தானம் செய்வதை இறைவன் ஏற்றுக் கொள்வதும் இல்லை..

வள்ளலார் திருஅருட்பா வில் எந்த இடத்திலும் உறுப்புக்களை தானம் செய்யுங்கள் என்று வள்ளல்பெருமான்  சொல்லவில்லை..

பசி.பிணி.தாகம்.இச்சை எளிமை.பயம்.கொலை.போன்ற துன்பங்களால் வருந்துகின்ற போது.அவரவர்களால் முடிந்த அளவு உபகாரம் செய்து.அந்த துன்பத்தைப்  போக்குவதுதான் ஜீவகாருண்யம் என்றும் உயிர் இரக்கம் என்று சொல்லுகின்றார்.

எனவே உடல் உறுப்புக்கள் தானம் செய்வது நமது உரிமை அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த உண்மை. விஞ்ஞான மருத்துவத்தின் மூலமே வெளியாகும்.பொறுத்து இருந்து பாருங்கள்.

ஒவ்வொருவரும் நல் ஒழுக்கத்தால் உடம்பையும் உயிரையும்  ஆபத்துக்கள் வராமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.அவைதான் இறைவன் வள்ளலார் மூலமாக. நமக்கு நல்வழி காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளாகும்...

ஒழுக்கத்தைக் கடைபிடிப்போம் உயிரையும்.உடம்பையும்  அழிக்காமல் காப்பாற்றிக் கொள்வோம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 6 ஜூன், 2018

ஏன் திருடுகிறான் !

மனிதன் ஏன் மற்றவர்களுடைய பொருளைத் திருடுகிறான்.

எந்தப் பொருளும் எவருக்கும். சொந்தமானது அல்ல என்பதால் திருடுகிறான்.

மனிதனுக்கு இவ்வுலகில் சொந்தமானது எது ?

அருள் ஒன்று மட்டுமே சொந்தமானது.

இவ்வுலகில் பொருளுக்காக வாழ்நாள் முழுவதும் அலைகிறார்களே ஏன் ?

மனிதன் செய்யும் முட்டாள் தனங்களில் பெரிய முட்டாள் தனமே அதுதான்

மனிதன் எதற்காக இவ்வுலகில் வாழ வேண்டும் ?

இறைவனிடம் அருளைப் பெறுவதற்காகவே மனிதப் பிறப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

ஆணும் பெண்ணும் எதற்காக படைக்கப்பட்டது ?

ஆன்மா உயிர் உடம்பு பெற்று அருள் பெறுவதற்கே படைக்கப் பட்டது.

அருள் பெறுவதால் என்ன பயன் ?

மரணம் இல்லாமல்.துன்பம் இல்லாமல்.அழிவில்லாமல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு.

தெரிந்தும் மனிதன் ஏன் தவறு செய்கிறான்.?

உண்மை தெரிந்தால் தவறு செய்ய மாட்டான்.தெரியாமல்தான் செய்கிறான்.

உண்மை தெரியாமல் வாழ்வதற்கு காரணம் என்ன ?

மக்களுக்கு வழிகாட்டிய அருளாளர்கள் தான் காரணம்.

ஞானிகளில் உண்மையானவர்கள் எவரும் இல்லையா ?

உலகில் இரண்டு ஞானிகள் மட்டுமே மக்களுக்கு நல் வழியைக் காட்டி உள்ளார்கள்.

யார் அவர்கள் ?

ஒருவர் திருவள்ளுவர்.
ஒருவர் திருஅருட்பிரகாச வள்ளலார்.

இவர்கள் மட்டும் எப்படி எந்த வகையில் உயர்ந்தவர்கள்.?

சாதி.சமயம்.மதம் இல்லாத மனித நேயத்தையும்.ஆன்ம நேயத்தையும் போதித்தவர்கள்.

மனித நேயத்தால் ஆன்ம நேயத்தால் என்ன பயன்?

மனித நேயமும் ஆன்ம நேயமும் விளங்கினால் தான் இறைவன் தொடர்பு கிடைக்கும்.

இறைவன் தொடர்பால் என்ன லாபம் ?

இறைவன் தொடர்பால் ஆன்மலாபம். அருள் லாபம் கிடைக்கும்.அருளைப் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.

மேலும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி அண்ட கோடிகள் எங்கும் அரசாட்சி செய்யும் அழிவில்லாத ஆற்றலை பெறலாம்.

அதனால் கிடைக்கும் இன்பம் என்ன ?

அதுதான் என்றும் அழியாத எதனாலும் அழிக்க முடியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 5 ஜூன், 2018

பூத விந்துவால் மரணம் வருகின்றது !

பூத விந்துவால் மரணம் வருகின்றது!

சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவோரை.துணிந்து கொல்ல கூற்று (எமன்) ஆசைப்படும் என்கிறார் வள்ளலார்.

நாம் உண்ணும் பஞ்ச பூத உணவினால் தான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் விந்து உற்பத்தி யாகிறது.

விந்துவை அதிகமாக பயன் படுத்தினால் சீக்கிரம் மரணம் வந்துவிடும்.

விந்துவை அதிகமாக பயன் படுத்தினாலும் .குறைவாக பயன் படுத்தினாலும் மரணம் என்பது நிச்சயம்..

விந்துவை அடக்க.காமத்தை கட்டுபடுத்த.. தியானம்.தவம்.யோகம்.போன்றவற்றை செய்வதற்கு.மக்களை விட்டு விலகி சென்று. மலைகளிலும்.காடுகளிலும் .குகைகளிலும் சென்று சிலபேர் தவம் செய்வார்கள்.அப்படி செய்வதால் ஆயுளை நீட்டிக்கலாம்.உயிரை நிறுத்தலாம்.சமாதி நிலை அடையலாம் இறுதியில் மரணம் என்பது நிச்சயம்.

ஆன்மாவிற்கு அருள் என்பது பூரணமாக கிடைக்காமல்.மீண்டும் இறந்து.எதாவது ஒரு பிறப்பு ஆன்மா எடுத்தே  ஆகவேண்டும்.இதுதான் இயற்கையின் நியதி.

வள்ளலார் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் !

மனிதப் பிறவி எடுத்தால் உணவு என்பது அவசியம் வேண்டும்.உணவு உண்பதால் தான் சுக்கிலம்.சுரோனிதம்  என்னும் விந்து உற்பத்தியாகின்றது.
விந்துவின் வீரியத்தால் தான் ஆண் பெண் உடல் உறவு கொள்கிறோம்..உறவு கொள்வதால் அந்த சுக்கில சுரோனித்ததின் சேர்க்கையால் ஆன்மா வந்து தங்கி தனக்கான உயிர்.உடம்பு உண்டாக்கிக் கொள்கிறது.

விந்து சக்தியின் அணு சேர்க்கையால்  குழந்தை உண்டாகின்றது..அதனால் ஆணுக்கும்.பெண்ணுக்கும் பிராணவாய்வு அதிகம் செலவாகி பிராணவாய்வு குறைந்து. உடம்பு பலவீனமாகி வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு இறுதியில் பிராணன் என்னும் உயிர் சக்தி நின்று மரணம் வந்து விடுகின்றது.

எனவே ஆண் பெண் கருஉண்டாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.மற்ற காலங்களில் இல்லறத்தார்க்கு உடல் உறவு வேண்டாம் என்கிறார் ..

இல்லறத்தில் இருப்பவர்கள் 15 நாளைக்கு ஒருதரம் உடல் உறவு கொள்ள வேண்டும் அப்படி கடைபிடித்தால் நீண்ட காலம் நோய் இல்லாமல். மரணம் இல்லாமல் வாழலாம்.அப்படி இருந்தாலும் இறுதியில் மரணம் வந்தே தீரும் என்கிறார்.

சுத்த சன்மார்க்கம் என்ன சொல்கிறது என்றால்.

ஆண் பெண் சேர்க்கை கூடாது.ஆணும் பெண்ணும் அலியும் உருவங்களில் வேறு வேறாக இருந்தாலும் அனைவரின் சிரநடுவில் உள் இருந்து இயங்கும் இயக்கும் ஆன்மா என்பது ஒரேத் தன்மையான ஓளியாக உடையது.

ஆன்மாக்கள் எல்லாம் பெண் தன்மை உடையது.எனவே ஆன்மாவும் ஆன்மாவும் உடல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். எல்லோரும் பெண் தன்மை உள்ளதால் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வது போல் தான் அதன் இன்பம் இருக்கும்.

பெண் குணம் உள்ள ஆன்மா ஆண் குணம் உள்ளவரைத்தான்  உறவு கொள்ள வேண்டும்..

ஆண் குணம் உள்ளவர் யார் என்றால் .***அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே**".எனவே ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

உலகியலில் உள்ள உருவங்களான ஆண் பெண் உடல் உறவு கொண்டால் சுக்கிலமான விந்து சுரக்கும். அதனால் கிடைக்கும் இன்பம் சிற்றின்பம்.சிற்றின்பத்தால் தான் மரணம் என்னும் இறப்பும் பிறப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் உடல் உறவு கொண்டால் அருள் சுரக்கும். அந்த இன்பம் என்றும் அழியாத பேரின்பம் என்பதாகும்.அந்த இன்பத்தால் பஞ்ச பூத ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து.மரணம் என்னும் இறப்பும் வராது.மீண்டும் பிறப்பும் உண்டாகாமல்.என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழலாம் என்கின்றார் வள்ளலார்..

நான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.அவரும் இடைவிடாது அன்பு கொண்டு என்னிடம் உடல் உறவு கொண்டு அருளை  வாரி வாரி வழங்கி என்னைத் தன்மயமாக்கிக் கொண்டார்..

அதைத்தான் ***கடவுள் நிலை அறிந்து அம்மயமாக்கிக் கொள்ள வேண்டும்*** என்கிறார் வள்ளலார்...

அதற்கு ஜீவன்கள் மீது ஈரமும்.இறைவன் மீது அன்பும் வேண்டும்..அதாவது சத்விசாரம்.பரோபகாரம் இரண்டும் வேண்டும்..

வள்ளலாரே பாடல் !

ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்

ஆரமு துண்டென்னோ டாடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பந்து !

என்கிறார்...

மேலும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை திருமணம் செய்து இரண்டு உருவமும்  கலக்கும் போது. அருள் சுரந்து.  பஞ்ச பூத்த்தால் ஆன  ஊன  உடம்பு  கற்பூரம் போல் கரைந்து அருள் மணம் வீசியது என்கிறார்.

உலகில் உள்ள மணம் போல் மறைவது அல்ல கண்டீர்..என்றும் மறையாத அருள் மணம் என்கின்றார்.

வள்ளலார் பாடல் !

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்

இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே

பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே

நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழிநான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே !.

என்னும் பாடலில்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நான் கண்டேன் அவரை புணர்ந்தேன்.நான் அதுவாகவே ஆனேன் என்கின்றார்.

சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றுபவர்கள் இறவனிடம்  இடைவிடாது அன்பு செலுத்தி காதல் கொண்டால் மட்டுமே...இறைவன் நம்மை காதலித்து திருமணம் செய்து கொண்டு். உடல் உறவு கொண்டு அருள் என்னும் அமுத்தை வாரி வழங்கி .மரணத்தை வெல்லும் இன்பத்தை வழங்குவார்...

மேலும் காதலைப் பற்றி வள்ளலார் பதிவு செய்கிறார்..!

காதல்
கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீகண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்தபிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்வரத்தினால் நான்பெற்ற மகளே.!

எப்படி எல்லாம் இறைவனைக் காதலித்தேன் என்பதையும்..இனி என்னால் தாங்க முடியாது. உன்னைத்தவிர வேறு எதையும் நான் கனவில் கூட நினைத்ததில்லை.. நீ என்னை.்கலந்து கொள்ளவில்லை என்றால் தப்பாமல் உயிரையும் விட்டு விடுவேன்.உன்மேல் பழியைப் போட்டுவிடுவேன் என்றெல்லாம்.பல பாடல்களின் வாயிலாக இறைவனிடம் மன்றாடி.காதல் கொண்டதை. உறவு  கொண்டதை வெளிப்படுத்துகின்றார்

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உடன் பிறப்புக்களே சும்மா வராது இறைவனுடைய காதல் .

வள்ளலார் போல் ரொம்ப கஷ்டப்பட்டு இறைவனிடம் தொடர்பு கொள்ள வேண்டும்...இறைவன் நம்மிடம் தொடர்பு கொள்ளும் அளவிற்கு .உண்மை.
நேர்மை.ஒழுக்கம்.அன்பு.தயவு.கருணையோடு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

அப்படி கடைபிடித்தால் மட்டுமே..இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம் நம்மைத் தேடிவரும்.

விரிக்கில் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.