செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

திருக்குறளும் ! திரு அருட்பாவும் !

   '' திருக்குறள் எழுதிய திருவள்ளுவரும் ! திரு அருட்பா
     எழுதிய திரு அருட்பிரகாச வள்ளலாரும்!உலகத்தின்
     இரு  கண்களாகும் .''


       திருவள்ளுவர் !


    திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் .அறம்,பொருள் ,
இன்பம் ,என்ற முப்பால்களை கொண்டதாக  உள்ளன .
அதாவது 1 ,இம்மை இன்பவாழ்வு,2 , மறுமை இன்பவாழ்வு,
3 ,பேரின்ப வாழ்வு என்பதாகும்.உலக உயிர்கள் எப்படி
வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தி எழுதப்பட்ட
நூலாகும்.ஆதலால் உலகப் பொதுமறை எனறு பெயர்
வழங்கப் பட்டன .


திருக்குறளுக்கு சரியான விளக்கம் இதுவரை எவராவது 
தந்து இருக்கிறார்களா ?என்றால் இல்லை என்றுதான் 
சொல்ல வேண்டும் .!
  
      கடவுள் கொள்கை  உடையவர்கள் ,இல்லாதவர்கள் ,
இருதரப்பினரும்,திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதி
இருக்கிறார்கள் .கடவுள் கொள்கை உள்ளவர்கள் ,உண்மையான
கடவுளை அறியாதவர்கள் ,தெரியாதவர்கள். பழைய குப்பைகளான
வேதம் ,ஆகமம் .புராணம் ,இதிகாசங்களை படித்துவிட்டு
பொய்யான தத்துவங்களை ,கடவுளாக பாவித்து வணங்கி ,
வழிபாடு செய்து ,அறிவில்லாமல் ஒன்றுகிடக்க ஒன்றை
உளறிக்கொண்டு இருப்பவர்கள் .அவர்களால் திருக்குறளுக்கு
 சரியான விளக்கம் தர இயலாது .


     அடுத்து கடவுள கொள்கை மறுப்பவர்கள் ,பகுத்தறிவு எனறு
சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் .அவர்களும் கற்களான,
சித்திர சிலைகள்,பொம்மைகள்,   ,நிழல் படங்கள் போன்ற
 பொய்யான பொருள்களை  வைத்து வணங்குகிறார்கள் .
கேட்டால் தலைவர்கள் ,வழிகாட்டியவர்கள் ,பெரியவர்கள்
எனறு சொல்லி சமாளித்து விடுகிறார்கள் .அவர்களும்
 உண்மையான கடவுள் யார் ?என்பது  தெரியாதவர்கள்.
அவர்களும் மூட நம்பிக்கை உடையவர்களே !  


    மேலே உள்ள இரு தரப்பினரும் திருக்குறளுக்கு ,உண்மையான
விளக்கம் எப்படி?தரமுடியும் ,திருக்குறள்படி வாழ்ந்தார்களா ?
வாழ்வதற்குத்தான் முயற்ச்சி செய்தார்களா ?என்றால் இல்லை
என்றுதான ,விளங்ககுகிறது ,


திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்படி வாழ்ந்து வழி காட்டியவர்
திரு அருட்பிரகாச வள்ளலார் .என்பவராகும் .


திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார் ,திருஅருட்பிரகாச வள்ளலார்
திருஅருட்பா எழுதினார் .


திருக்குறள் வாழ்வதற்கு வழிகாட்டியது .
திருஅருட்பா வாழ்ந்து காட்டியது .


     திருக்குறள் ;--


திருக்குறள் ஆயிரத்து மூன்று நூற்று முப்பது குறளுடையது
முதல் குறளிலே, அனைத்து குறளும் அடங்கி இருக்கிறது .
அதே போல் ஒவ்வொரு குறளிலும் அனைத்தும் அடங்கி
இருக்கிறது .ஒருகுறள் படித்தாலே அனைத்தையும்
தெரிந்து கொள்ளலாம் ..புரியாதவர்கள் அனைத்தையும்
படித்தாலும் புரிந்து கொள்ள முடியாது .உயிர்கள் மேல்
கடவுள்மேல், உண்மை அன்பு, .உண்மை இரக்கம்
இருந்தால் தான்.திருக்குறளின் உண்மையான கருத்துக்களை
தெரிந்து ,அறிந்து விளக்க முடியும்..
வடலூரில்;-
   வள்ளலார் இடம் பல அன்பர்கள் திருக்குறளுக்கு
விளக்கம் அறிந்துகொள்ள வேண்டினர் .வள்ளலார் அவர்கள்
வடலூரில் சன்மார்க்க பாடசாலை வைக்க எண்ணி
படித்தவர்களைக் கூடடித் தன்னுடைய முதன்மை
அன்பரான, பன்மொழிப்புலவர் திரு, வேலாயுதம் அவர்களை
உபாத்தியாயராக அமைத்துத்  திருக்குறள் பாடம் நடத்துவிக்கக்
கட்டளையிட்டனர் ,மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரம்
நடவாமையால் ,வாசிப்போர்கள் வள்ளலாரிடம் குறைகூற
வள்ளலார் ''மூடம் முண்ட வித்வானைக் கூப்பிடும்''
எனறு கூற,வேலாயுதம் அவர்கள் வந்து வாய் புதைத்துப்
பின் புறத்தே கைகட்டித் தூசுஒதுக்கி நிற்க ,வள்ளலார்
''பிச்சு'' மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரந்தானும்
நடக்கவில்லையாம் ,எனறு கோவம் கொண்டு ,
பாடசாலை வேண்டாம்! .வித்வான்களே !உங்களுக்குத்
தானாகவே கல்விவரும் .அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல்
திருக்குறளின் விளக்கம் தெரியும் ,எனறு கூறிப் பாடசாலையை
நிறுத்திவிட்டனர் .
      
   இதிலிருந்து என்ன விளங்குகின்றன எவ்வளவு பெரிய
படிப்பு படித்திருந்தாலும் ,அருள் ,அறிவு தெளிவுயில்லாமல்
மெய்ப்பொருளான திருக்குறளுக்கு விளக்கம் தர இயலாது .
என்பது தெளிவாகின்றன ,


    ஆதலால் திருக்குறளுக்கு சரியான விளக்கம் வேண்டுவோர்
திருஅருட்பாவை படித்தால் அறிந்து கொள்ளலாம் .


    வள்ளலார் வழியில் இருப்பவர்களும் ,வள்ளலார்
எழுதியுள்ள திருஅருட்பா நூலின் உண்மைகளை
இன்னும் அறிந்துகொள்ளவில்லை ,


    சாதி,சமய ,மத ,இன ,நாடு ,என்ற பற்று இல்லாமல் ,
உலகம் அனைத்தும் ஒரு குடையின் கீழ்,
செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது ,என்பதை
அறிவு தெளிவோடு,புரிந்து கொண்டு ,ஆன்மநேய
ஒருமைப்பாடு  வந்தால்தான் ,திருக்குறளையும் ,
திருஅருட்பாவையும்,அறிந்துகொள்ளமுடியும் .


    ''திருக்குறள்'' முதல் குறளாகிய கடவுள் வாழ்த்து ,


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ,


    அகரம் ,உகரம், உடம்பு, உயிர் இவை இரண்டையும்
அறிந்துகொள்ள எழுத்தும் என்னும் தேவைப்படுகிறது.
எழுத்தும் என்னும் ,ஆதியிலுள்ள பகவானாகிய ,
அருட்பெரும்ஜோதியாகிய ஒளியால் இந்த உலகம்
முதலாவதாக கொண்டுள்ளன.அந்த அருட்பெரும்ஜோதியாகிய
ஆண்டவரால் ,''அ'' என்ற எழுத்து முதல் அனைத்து
எழுத்துக்களும் உருவாக்கப்பட்டதாகும் .அவை
தமிழ் எழுத்துக் களாகும் .


     ஓர் அறிவு முதல்,ஆறு அறிவுள்ள மனிதர்கள் வரை .
உள்ள உயிர்கள் ஒரே தன்மையுள்ளது .உடம்பு வேறாக
இருந்தாலும் உயிர்களில் மாற்றமில்லை,


    பலகோடி பிறவிகளுக்குப் பிறகு மனிதபிறவி கிடைத்து
உள்ளது .மனித பிறவி கிடைத்ததின் முக்கிய நோக்கம்
ஆதி பகவனாகிய அருபெரும்ஜோதி ஒளியிடம் சென்று
அடையவேண்டியதாகும்.அதைத்தான் திருவள்ளுவர் ,
திருக்குறளிலே ம்தன்மையாக தெரியப்படுத்தியுள்ளார் .


               ''பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்''  


என்பதின் நோக்கம் எல்லா உயிர்களும் இன்பமுடன்
வாழ்வதற்கு ,வழிகாட்டியாக இருப்பவர் ,ஆதியிலே
உள்ள ஆதி பகவனாகிய அருட்பெருஞ்ஜோதியாகிய
ஒளிதான் காரண காரியமாக இருந்துகொண்டு இருக்கின்றன .
என்பதை முதல் குறளிலேயே தெரியப்படுத்தியுள்ளார் .
திருவள்ளுவர் .


    மனிதனாக பிறந்தவர்கள் மெய்ப்பொருளாகிய
ஆதிபகவனை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானதாகும் .
என்பதை  திருவள்ளுவர் அவர்கள் ஒழுக்கமுடைமை
என்ற தலைப்பில் பத்து குறள்கள் பதிவு செய்துள்ளார் .
அதிலொன்று;-- .
            ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
            உயிரினும் ஓம்பப் படும்.


   அந்த ஒழுக்கம் என்ன என்பதை வள்ளலார் அவர்கள்
திரு அருட்பாவில் தெளிவு படுத்துகிறார் . அவற்றைப்
பார்ப்போம் .
அக ஒழுக்கம் ,புற ஒழுக்கம் ,என இரண்டுவகைப்படும்.
புற ஒழுக்கம் ஒழுக்கம் அல்ல ,அக ஒழுக்கம் மிக,மிக
முக்கியமானதாகும்.அவை யாது என்பதைப் பார்ப்போம் .


    '' திருஅருட்பா ''


    ஒழுக்கம் நான்கு வகைப்படும் ;--


1,இந்திரிய ஒழுக்கம் ;-----  புறப்புறம் .
2,கரண ஒழுக்கம் ----------- புறம்.
3 ,ஜீவ ஒழுக்கம் .------------ அகப்புறம்
4 ,ஆன்ம ஒழுக்கம் .--------அகம்


மனித உடம்பில் நான்கு பிரிவுகளாக உள்ளது .
அவை;-- ,அகம் ,அகப்புறம் ,புறம் ,புறப்புறம் என்பவையாகும் .
அவைகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் ,
ஒழுக்கமாகும் .அவைகளை முழுவதுமாக கடைபிடித்தவர்
வள்ளலார் ஒருவர்தான் .அவருக்கு முன்னாடி யாரும்
கடைப்பிடித்ததாக தெரியவில்லை .திருக்குறளை எழுதிய
திருவள்ளுவரும் கடைபிடிக்கவில்லை .அக அனுபவங்களை
தெரிந்து கொண்டார் ,உலக ரகசியங்களை தெரிந்து கொண்டார் .
உலக ம்க்கள் அறிந்து கொள்வற்கு திருக்குறள்,எழுதிவைத்துள்ளார்.அவருக்கு அதற்குள் மரணம் வந்துவிட்டது .


     மரணத்தை வெல்லும் வழிமுறைகள் யாவும் திருக்குறளில்
உள்ளது .திருவள்ளுவர் ,மறுபடியும் வள்ளலாராக பிறவி
எடுத்து இருப்பாரோ என்ற சந்தேகம் தோன்றுகிறது .அந்த
அளவிற்க்கு திருக்குறளுக்கும் ,திரு அருட்பாவிற்க்கும்
நெருங்கிய தொடர்பு இருக்கிறது ,


    ஒழுக்கம் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ளது ;--


1 ,இந்திரியம் என்பது ;--கண் ,காது,மூக்கு,வாய் ,மெய் [உடம்பு ]


2 ,கரணம் என்பது ;------மனம் ,புத்தி ,சித்தம் ,அகங்காரம் ,ஆச்சர்யம் .


3 ,ஜீவன் என்பது ;--------உயிர் காற்று


4 ,ஆன்மா என்பது ;-----ஆன்ம ஒளி [உயிர் ஒளி ]


  [ ஒழுக்கம் என்ன என்பதை கண்டுபிடித்து தெரிந்து அதன்படி
காக்க வேண்டும் அவைதான் வாழ்க்கைக்குச சிறந்த
துணையாகும் என்கிறார் திருவள்ளுவர் ;
திருக்குறள் ;--


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை .]


திருக்குறள் சொல்லியபடி வள்ளலார் ,ஒழுக்கம் என்ன
என்பதை தெரிந்து ஆராய்ந்து அதன்படி வாழ்க்கையை
வாழ்ந்துகாட்டினார் ,மேலும் ஒழுக்கத்தைப் பற்றி
விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார் ,
புறப்புறம் ;--புறப்புறம் ஒழுக்கம் '==
    இந்த நான்கு ஒழுக்கங்களில் புறப் புறமாகிய கண் ,காது,
மூக்கு ,வாய் ,மெய் இவை ஐம்புலன்களாகும் .கண்களுக்கு
தெரிந்து ,பார்த்து செயல்படுகின்றன .


  புறம்;--  மாகிய ;-- கரண ஒழுக்கம் மனம் ,புத்தி ,சித்தம் ,
அகங்காரம் ,ஆச்சர்யம் இவை கண்களுக்கு தெரியாது
உருவம் கிடையாது ,ஆனால் செயல்பட்டுக் கொண்டு
இருக்கின்றன ,


  அகப்புறம் ;--ஜீவ ஒழுக்கம் ,உயிர்க் காற்று, கண்களுக்கு
தெரியாது ,உருவம் கிடையாது ஆனால் செயல்பட்டுக்
கொண்டு இருக்கின்றன .


அகம் ;--ஆன்மா ,உயிரொளி கண்களுக்கு தெரியாது ஆனால்
செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது .


     மேலே கண்ட நான்கு செயல்பாடுகளும் ,மனித தேகம்
எடுத்த அனைவருக்கும் பொதுவாகவே இருக்கின்றன .
ஆனால் செயல்பாடுகள் வித்தியாசமாகவே இருக்கின்றன .
இந்த வித்தியாசம் ஏற்படுவதற்க்கு என்ன காரணம் .


    ஒவ்வொரு பிறப்பிலும் அவர் அவர் செய்யும் செயல்களுக்கு
தகுந்தாற்போல் அணுச்சேர்க்கை ஆன்மாவை [உயிர் ஒளியை ]
சுற்றி பற்றிக்கொள்கிறது ,அதனால் உயிரொளி ஒன்றுபோல்
இருந்தாலும் உருவம் வேறு வேறுவாகக் காணப் படுகின்றன .


   ஐந்து பூதங்கள்;---


    இந்த உலகம் என்னும் அண்டப் பரப்பில்,நீர் ,நிலம் ,நெருப்பு ,
காற்று, ஆகாயம் என்னும் ஐந்துவிதமான  பஞ்ச பூத அணுக்கள்,
ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்ப் பட்டுக் கொண்டு இருக்கின்றன ,
இவைகள் யாவும் உயிர் ஒளியான ஆன்மாக்கள் வாழ்க்கைக் காக
படைக்கப் பட்டவைகளாகும் .இவைகள் ஆன்மாக்களுக்கு
துணையாக இருக்குமே அல்லாது, விரோதமானதல்ல ,
ஆன்மாக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடம்பு எடுத்துக்
கொள்கின்றன .பஞ்ச பூதங்கள்,ஆன்மாக்களின்  விருப்பத்திற்கு
தகுந்தாற்ப் போல் அணுக்களை சேர்த்து கொள்கின்றன ,


    இதைத்தான் வள்ளுவர்
''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமை யான ..


   எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரே மாதிரியாக .
இருந்தாலும்,உயிர்களின் உடம்பும்,  செய்கின்ற
தொழில்களிலும் ,உயர்வு தாழ்வு ,சிறப்பு மாறுபடுகின்றது.   
     
   உயிர் தோற்றங்களில் உயர்ந்த தோற்றமுடையது,
மனித தோற்றமாகும் ,மனித தோற்றம் கிடைத்ததின்
நோக்கம்,மெய்ப் பொருளான ஆதிபகவன் என்னும்
அருட்பெருஞ்ஜோதியை சேர்ந்து அடைவதுதான் என்பதை
திரு வள்ளுவர்;--


   மலர்மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார்
  நிலமிசை நீடுவாழ் வார் .


    என்கிறார் வள்ளுவர் .உயிர்களின் உயிர் ஒளியாக
இயங்கிக் கொண்டு இருக்கும் இறைவனுடைய  திருவடிகளை
பற்றி அதனுடன் சேர்ந்து வாழ்பவர்களால் தான் ,உலகிலுள்ள
உயிர்களுக்கு உபகாரங்கள் செய்யமுடியும் .அவர்கள் இந்த
உலகில் என்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
என்பது திருக்குறளின் தெளிவாகும் .


    வள்ளலார் அவர்கள் திரு அருட்பாவில் அதே கருத்தை
வலியுறுத்தி பதிவுசெய்துள்ளார் ;--


                     திருஅருட்பா ;---


உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை அறியீர்
உடல் பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்றறியீர்
இடம் பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ் சார்வீரே .


   எனறு தான் அனுபவித்து வாழ்ந்த அனுபவங்களை
மனித சமுதாயத்திற்கு பறை சாற்றுகின்றார் வள்ளலார் .
உடம்பையும் ,உயிரையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால்
புற ,அக, ஒழுக்கம் மூலமாகத்தான் அறிந்து கொள்ள கூடுமே
அல்லாது, வேறுவகையால் அறிந்துகொள்ள கூடாது எனறு
திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார் திருஅருட்பாவில் .


                  திருஅருட்பா ;--


மெய் மொழியும் ஒழுக்கமும் ;--


     உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய
மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும்
அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் உஆதேனில் ;--


     இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவரென்றும்,
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றார் என்றும் ,
இரண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும் ,எல்லா அண்டங்களையும் ,
எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும் ,எல்லா
சத்திகளையும்,எல்லா சத்தர்களையும், எல்லா கலைகளையும் ,
எல்லாப் பொருள்களையும் ,எல்லா தத்துவங்களையும் ,
எல்லா தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும் ,எல்லா
செயல்களையும்,எல்லா இச்சைகளையும் ,எல்லாஞானங்களையும்,
எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை
எல்லாவற்றையும் .


     தமது திருவருட் சத்தியால் ;--
1 ,தோற்றுவித்தல்
2 ,வாழ்வித்தல்
3 ,குற்றம் நீக்குவித்தல்
4 ,பக்குவம் வருவித்தல்
5 ,விளக்கம் செய்வித்தல்
      என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத்
தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும் ,எல்லாம்
வல்லவர் என்றும் ,ஒன்றும் அல்லாதவர் என்றும் ,
சர்வ காருனயர் என்றும்,சர்வவல்லபர் என்றும் ,எல்லாம்
உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும் ,ஒப்பு உயர்வு இல்லாத
தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர்என்றும் .


   சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே
,அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த
சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில்,
அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .


    அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை ,
இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து ,
அருளை யடைந்து ,அழிவில்லாத சத்திய சுகபூரணப்
பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு மார்க்கங்களிலும்
பல்வேறு லஷியங்களைக் கொண்டு ,நெடுங்காலம் பிறந்து
பிறந்து ,அவத்தை வசத்தர்களாகிச சிற்றறிவு மின்றி ,
விரைந்து ,விரைந்து பல்வேறு ஆபத்துக் களினால்
துன்பத்திலழுந்தி,இறந்து,இறந்து வீண்போயினோம்,
வீண்போகின்றோம்.


     ஆதலால் ,இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து ,
விரைந்து ,இறந்து ,இறந்து வீண்போகாமல் ,உண்மை அறிவு ,
அண்மைய அன்பு ,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப்
பெற்று ,நற்செய்கை உடையவர்களாய் ,எல்லா சமயங்களுக்கும் ,
எல்லா மதங்களுக்கும் ,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்
பொது நெறியாகி விளங்கும் ,சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்
பேரினப் சித்திப் பெருவாழ்வு வாழ்வதே மனிதப் பிறவியின்
செய்கையாகும் ,


    அதற்கு மேலே கூரியஒழுக்கம் நான்கும் மிக முக்கியமாகும் .
திருவள்ளுவர் கூரிய ஒழுக்கம் என்ன என்பதுப் பற்றி
வள்ளலார் விளக்கம் தருகிறார் ;--


     1 ,  இந்திரிய ஒழுக்கம் ;--


1,கொடிய சொல் செவி புகாது நாதம் முதலிய தோத்திரங்களைக்
கேட்டல் ;2 ,அசுத்த பரிசமில்லாது தயாவண்ணமாகப்
பரிசித்தல் ,3 ,குறுரமாகப் பாராதிருத்தல் 4 ,ருசி விரும்பாதிருத்தல்
5 ,சுகந்தம் விரும்பாதிருத்தல் ,6 ,இன்சொல்லாடல் ,
7 ,பொய்சொல்லாதிருத்தல்,8 ,ஜீவ இம்சை நேரிடும் காலத்தில்
எவ்வித த்ந்திரத்திலாவது தடை செய்தல் 9 , பெரியோர்கள்
எழுந்தருளி இருக்கும் இடங்களுக்குச செல்லுதல்,
10 ஜீவ உபகாரம் நிமித்தமாய் ,சாதுக்கள் வாசம் செய்யும்
இடங்களுக்கு சென்று உபகாரம் செய்தல் ,11 ,நன்முயற்சியில்
கொடுத்தல் எடுத்தலாதி செய்தல் 12 ,மல ஜ்லோ பாதிகளைக்
கிராமமாய் ஒழித்தல் ,15 ,கால பேதத்தாலும் உஷ்ண
ஆபாசாத்தாலும்,தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்
பவுதிக மூலங்களாலும்,தடை தவிர்த்துக் கொள்ளல் ,௧௬
16 ,சுக்கிலத்தை அக்கிரம மாதிக்கிரமத்தில் விடாது நிற்றல் .
17 ,எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல் ,
18 ,இடைவிடாது கோஷத்தைக் கவசத்தால் மறைத்தல் ,
19 ,இது போல் உச்சி ,மார்பு முதலிய அங்கங்களையும்
மறைத்தல் ,20 ,சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல் .
21 அழுக்காடை யுடுத்தா திருத்தல் முதலியன
இந்திரிய ஒழுக்கமாகும் ,


       2    கரண ஒழுக்கம் ;-
1 ,மனதைச சிற்சபையின் கண்ணே நிறுத்தல் .;--அதாவது 
முதலில் ,புருவமத்தியில் நிற்கச செய்தல் ;2 ,துர்விஷயத்தை 
பற்றாதிருக்கச் செயதல்;3 ,ஜீவதோஷம் விசாரியாதிருத்தல் ,
4 ,தன்னை மதியாதிருத்தல் ;5 ,செயற்கைக் குணங்களால் 
ஏற்ப்படும் கெடுதிகளை [இராகாதி ] நீக்கி இயற்கையாகிய 
சத்துவ மயமாதல் ;6 ,பிறர் மீது கொபியாதிருத்தல் ;
7 ,தனது சத்துருக்களாகிய தத்துவங்களை அக்கிரமத்திற் 
செல்லாது கண்டித்தல் முதலியன;-- கரண ஒழுக்கமாகும் .


     3 ,ஜீவ ஒழுக்கம் ;--


ஜீவ ஒழுக்கமாவது;--ஆண்மக்கள் ,பெண்மக்கள் முதலிய 
யாவர்களிடத்தும் ,ஜாதி ,சமயம் ,மதம் ,ஆசிரமம் ,சூத்திரம்,
கோத்திரம் ,குலம் ,சாஸ்த்திர சம்பந்தம் ,தேசமார்க்கம் ,
உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,--என்னும் பேதம் நீங்கி எல்லவரும்
தம்மவர்களாய்ச சமத்திற் கொள்ளுதல் ;--ஜீவ் ஒழுக்கமாகும் .


     4 ,ஆன்ம ஒழுக்கம் [உயிர் ஒளி ஒழுக்கம் ]


ஆன்ம ஒழுக்கமாவது ;--யானை முதல் எறும்பு ஈறாகத் 
தோன்றிய சரீரங்களிலும்,ஜீவான்மாவே திருச்சபை யாகவும் 
அதனுள் பரமான் மாவே [அருளொளி ] பதியாகவும் கொண்டு 
யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல்
ஆன்ம ஒழுக்கமாகும் .


    இத்துடன் ,இடம் தனித்திருத்தல் ,இச்சை இன்றி நுகர்தல் 
ஜெபம் தபம் செய்தல்,தெய்வம் பராவல் .பிற உயிர்க்கு இரங்கல் 
பெருங்குணம் பற்றல் ,பாடிப் பணிதல் ,பத்தி செய்திருத்தல் ,
முதலிய நற் செய்கைகளில் பல கால் முயன்று முயன்று 
பழகிப் பழகி நிற்றல் வேண்டும் .


 திருக்குறள் ;--

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ வார் .

    கண் ,காது ,மூக்கு, வாய்,உடம்பு ,என்ற ஐம்பொறிகளின்
வழியாக உண்டாகும் கெடுதிகளை அகற்றி ,வள்ளலார்
கடைபிடித்து காட்டிய ஒழுக்கத்தை பின் பற்றினால் ,
உண்மையான நிலையான நல்ல வாழ்க்கை வாழலாம்.


   மேலே சொன்ன ஒழுக்கங்களை யார் பின் பற்றுகிறார்களோ
அவர்கள் தான் உலக உண்மையை காணமுடியும் ,ஆதி பகவனை
காணமுடியும் ,திருக்குறளுக்கு சரியான விளக்கம் தரமுடியும் ,
ஏட்டுப்படிப்பு ,வேலைக்கு உதவாது .இப்போதுள்ள தமிழ் புலவர்கள்
தமிழ் சான்றோர்கள் ,தமிழ் ஆராச்சி யாளர்கள் ,தமிழ் பல்கலைக்
கழகங்கள் அனைத்தும் ஒன்றுகிடக்க ஒன்று உளறிக் கொண்டு
இருக்கிறார்கள் ,

   திருக்குறளுக்கு சரியான விளக்கம் திரு அருட்பாவில் தான்
இருக்கிறது .திருக்குறள் சொன்ன ஒழுக்கத்தின் படி வாழ்ந்தவர்
திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்களாவார் !

   ஆதலால் திருக்குறளும், திரு அருட்பாவும் உலகத்திற்கு
கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களாகும் ,அவைகளை ப்
படித்து ,பின்பற்றி வாழ்ந்தால் மனிதகுலம் மேண்மையடையும்
உலகம் ஒற்றுமையுடன் ஓங்கும் ,எல்லா உயிர்களும்
இன்பமுற்று வாழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

    திருக்குறளும் ,திரு அருட்பாவையும் பற்றி அடுத்த
    வலைப்பூவில் பார்ப்போம் .

அன்புடன் ;-கதிர்வேலு ,
மிண்டும் பூக்கும்..
                                  

சனி, 7 ஆகஸ்ட், 2010

'' வள்ளலார் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது ''

        
  •  அருட்பெருஞ்ஜோதியால் 
  • வள்ளலார் வசம் பூலோக
  • ஆட்சியை ஒப்படைக்கப் பட்டுள்ளது.!


      ஆன்ம நேய அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் .
அருட்பெரும்ஜோதியால் இவ்வுலகத்திற்கு அனுப்பி
வைக்கப் பட்டவர் வள்ளலார் அவர்கள் ,என்பதை நாம்
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் .

     ஏன் அனுப்பி வைக்கப்பட்டார் ;--
இவ்வுலகில் மனிதர்கள் மனிதர்களாக வாழாமல் தவறான
பாதையில் சென்று வாழ்ந்து வருகிறார்கள் .மனித பிறவியின்
முக்கியமான நோக்கம் ;--
அருட்பெரும்ஜோதி  ஆண்டவரின்  குழந்தையாகிய நாம்
எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்லவேண்டும் என்பதுதான்
நியதி, அதாவது அருட்பெரும்ஜோதி அருளின் சட்டமஆகும் .

     ஆனால் மனிதபிறவி எடுத்த ஆன்மாக்கள் வள்ளலாருக்கு
முன்புவரை யாராவது சென்று இருக்கிறார்களா ?என்றால்
இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .

      விலாசம் தெரியாத ஆன்மாக்களாக இருந்துகொண்டு
இருககிறோம் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கும் ,உலக
உயிர்களுக்கும் உண்டான தொடர்பு துண்டிக்கப் பட்டு
விட்டன.ஆதலால் உண்மையான விலாசம் தெரியாமல்
பொய்யான விலாசத்தை ,தேடி அலைந்து ,திரிந்து ,
அல்லல் பட்டு ,அறிவிழந்து அழிந்து கொண்டே இருககிறோம் .

    நமக்கு வழி காட்டிகளாக வந்த அருளாலர்கள் ,வியாசமுனிவர் ,
அவருக்கு போட்டியாக வந்த வால்மீக முனிவர் ,போன்றவர்கள்
பொய்யான ,கற்பனைக் கதைகளை ,தத்துவங்களை ,மக்கள்
மத்தியில் விதைத்து விட்டு சென்றுவிட்டார்கள் .அவைகள் வளர்ந்து உலகமுழுவதும் பரவிவிட்டது.அதனாலுண்மை தெரியாமல் மக்கள் துன்பப் படநேரிட்டது.

     அவர்களுக்கு பின்னாடி வந்த பெரியோர்களான ,புத்தர் ,
ஏசுபிரான் ,நபிகள்நாயகம் ,போன்ற பெரியோர்களும் ,
ஒன்று கிடக்க ஒன்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் .

     அதனால் மக்கள் சாதி ,சமயம் ,மதம் போன்ற பிரிவினைகளால்
போரிட்டு வீணாக அழிந்து கொண்டு இருக்கிறார்கள் .

    அதற்கு பின்னாடி வந்த பெரியோர்களும் ,கண்ணை மூடிக் கொண்டு
உண்மை தெரியாமல் ,பிரிவினையை உண்டு பண்ணி ,அவரவர்
அறிவுக்கு தகுந்தாற்  போல் மக்களை பிறித்துவிட்டார்கள்.

     ஒரே இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்கள் ,அதாவது
உலக உயிர்கள் ,ஆன்ம நேயத்தோடு வாழ  வேண்டியவர்கள்
தவறான் வழி காட்டுதலால்,தவறான வழியில் வாழ்ந்து ,
பிரிவினைகள் ஏற்பட்டுவிட்டன .


  •   '' இவைகளை பார்த்து வேதனை அடைந்த அருட்பெரும்ஜோதி

ஆண்டவர் ,அவசர,அவசரமாக அருலாளர்கள் மகாசபையை
கூட்டுவதற்கு அழைப்பு அனுப்புகிறார்.''
  •      மகாசபை !.       
      உலகிலுள்ள பல கோடி அருளாலர்கள் அவசர அழைப்பை 
ஏற்று ,அருட்பெரும்ஜோதி மகா மண்டபத்தில் வந்து அமர்ந்து 
விடுகிறார்கள் .

     அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்து ,தனது'' ஞான சிங்காதன ''
மேடையில் அமருகிறார் .அனைவரும் என்ன நடக்கப் 
போகிறது என்பதை ஆவலுடன் எதிர்ப் பார்த்துக் கொண்டு 
இருக்கிறார்கள் .

       அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ;--
இங்கே உங்களை எதற்காக அழைத்திருக்கிறேன் என்பதை 
தெரியப் படுத்தபோகிறேன் .சற்று கவனமாக கேளுங்கள் .
நீங்கள் அனைவரும் பக்குவமுள்ள ஆன்மாக்கள் ,உங்களை 
பூலோகத்தில் உள்ள உயிர்களை காப்பாற்ற வேண்டும் 
என்ற, நோக்கத்தில் அனுப்பி வைத்தேன் .நீங்கள் அனைவரும் 
என்ன செய்தீர்கள் ? 

     உண்மையை சொல்லாமல் பொய்யான கதைகளை 
சொல்லி மக்களை ஏமாற்றி விட்டீர்கள் .உண்மையை மறைத்துவிட்டீர்கள்.                உங்களால் 
உலக உயிர்கள் அனைத்தும், துன்பமும் ,துயரமும் ,அச்சமும் ,
அடைந்து வருகின்றன .அவர்களுக்கு உண்மையான 
விலாசத்தை கூட ,தராமல் விட்டு விட்டீர்கள் .
''தத்துவங்களை கடவுளர்களாக அறிமுகப் படுத்தி விட்டீர்கள் !''
தத்துவங்களை உண்மைக்கடவுள் எனறு நம்பி ,ஏமாந்து ,அழிந்து 
கொண்டு இருக்கிறார்கள் .

  •   உங்களை அனுப்பி வைத்தது வீண் விரயமாகி விட்டது .

ஆதலால் உங்களுக்கு ,இப்பொழுது ஒரு செய்தியை
வெளிப்படையாக வெளியிடுகிறேன்,அனைவரும்
கேளுங்கள் .

     இந்த அருளாலர் மகா சபையிலே உண்மையான ஒருவரை
அறிமுகப் படுத்த போகிறேன் ,அவர் யார் தெரியுமா ?
அவர்தான் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .எனறு
வள்ளலாரை அழைத்து சபையின் நடுவே நிறுத்தி ,
அனைவருக்கும் அறிமுகப் படுத்துகிறார் அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் .அனைவரும் ஆச்சிரியமாக பார்க்கிறார்கள் ,
பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் .

    அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ;--
இனிமேல் நீங்கள் அனைவரும் வள்ளலார் நிறுவி இருக்கும் ,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து ,
வள்ளலார் கருத்துகளுக்கு இணங்கி ,கட்டுப்பட்டு
செயல்பட வேண்டும் .

  •   உங்களுடைய பொய்யான கருத்துக்கள் ,கதைகள்

தத்துவங்கள் ,செய்திகள் சட்டதிட்டங்கள் ,அனைத்தும்
இருக்கும் இடம் தெரியாமல் மறைக்கப்படும்.இவைகள்
யாவும் என்னுடைய ஆணையாகும் .எனறு அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் ஆணையிடுகிறார் .இந்த ஆணையானது
30 ---1 ---1874 , ஆம், ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் .
என்பதை தெரிவித்துக கொள்கிறேன் .

   30---1 ---1874 ஆம், ஆண்டுக்கு பிறகு வள்ளலாரின்
சுத்த சன்மார்க்க கொள்கைகள் உலகமெங்கும் ,
நிறுவப்படும் .இனிமேல் உலகிலுள்ள அனைத்து உயிர்களும்
வள்ளலார் ,காட்டிய'' சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''
என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு பயன் அடைய
வேண்டும் .வேறு எதையும் பின் பற்றக்  கூடாது .இது
என்னுடைய ஆணையாகும் .எனறு ,அனைத்து
அருளாலர்கள் முன்னிலையில் ,சட்டதிருத்தம்
நிறைவேற்றப் பட்டது .

மேலே கண்ட தேதியில் இருந்து உலகம் முழுவதும்,
வள்ளலார் கொண்டு வந்த சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்க ,ஆட்சி நடைபெறும் ,இந்த ஆட்சி
அருட்பெரும்ஜோதி ஆணடவரின் நேரடி பார்வையில்
நடைபெறும் என்பது உண்மையாகும் .

   மேலே கண்ட நிகழ்வுகளைப் பற்றி வள்ளலார்
திரு அருட்பாவில் பதிவு செய்துள்ள பாடல் ஒன்று ;--

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான் போய்ப்
பொது நடங்கண்டு உளங்களிக்கும் போது மணவாளர்
மெய்பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக எனறு எனது
கைபிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனி உணை நாங் கை விடோம் மென்றும்
மைபிடித்த விழி உலகர் எல்லாருங் காண
மாலை யிட்டோம் மென்று எனக்கு மாலை அணிந்தாரே.

  என்ற பாடலை ;-- திரு அருட்பா அனுபவ மாலையில்
தெளிவாக பதிவு செய்துள்ளார் வள்ளலார் அவர்கள் .


  • அடுத்து அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு இருந்த துன்பம் போக்கியதாக ஒரு பாடல் ;--

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச
சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுத்ந்தரம தானது உலகில்
வன்பெலாம் நீக்கி நல வழியெலாம் மாக்கி மெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெறுக உலவாது நீடுழி விலை
யாடுக அருட்ஜோதியாம் 
ஆட்சி தந்தோம் உனைக் கை விடோங் கைவிடோம்
ஆணை நம் மாணை யென்றே
இன்புறத் திருவாக் களித்து என் உள்ளே கலந்
திசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நடராஜ பதியே .

உண்மையை சொல்லுவதற்கு வள்ளலார்
கிடைத்து விட்டதால் ,அருட்பெரும்ஜோதி
ஆண்டவருக்கு இருந்த துன்பங்கள் தீர்ந்து
விட்டதாம் .இனி கவலை இல்லை எனறு .
தன்னுடைய ஆட்சியை வள்ளலாரிடம்
ஒப்படைத்துவிடுகிறார் ,அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் .

    அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வேறு ,
வள்ளலார் வேறு அல்ல .இனிமேல் இருவரும்
ஒன்றே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .

     இனிமேல் உலகமக்கள் அனைவரும் ,குறிப்பாக
சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ,வள்ளலார் காட்டிய
வழியை  பின் பற்றி நடைமுறை படுத்தவேண்டும் ,

   இனிமேலும் சமய, மத மார்க்கங்களில் பற்று உள்ளவர்கள் ,
அவைகளை தூக்கி எறிந்து விட்டு ,சுத்த சன்மார்க்க
பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு
வாழ்ந்து ,மற்றவர்களையும் வாழ வைக்கவேண்டும் .

     எல்லாவற்றையும் விட்டு ,உண்மை அன்பால்
திரு அருட்பாவை படியுங்கள் ,ஜீவகாருண்யம் செய்யுங்கள் ,
தெரிவிக்க வேண்டிய அனைத்தும் ,அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் தெரிவிப்பார் .ஆதியும் நடுவும்  அந்தமும் இல்லா
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் .

குறிப்பு ;---

     இன்றைய காலகட்டத்தில் ,வள்ளலாரின் உண்மை
நெறியாகிய '' சுத்த சன்மார்க்க '' கொள்கைகளை
உலக மக்களுக்கு தெரியப் படுத்த மீடியாக்கள்
தேவைப்படுகிறது ..

    டிவி, ரேடியோ ,இன்டர்நெட் ,பத்திரிகைகள் .தினசரி
பத்திரிக்கைகள் ,வார பத்திரிக்கை ,மாத இதழ் ,சிறு சிறு
புத்தகங்கள் ,பொது கூட்டங்கள், மேடை பேச்சுக்கள் ,
சத்விசாரம் ,பரோபகாரம் .போன்ற ,கருவிகள் மூலமாக
சன்மார்க்கிகளாகிய நாம் வெளியிடவேண்டும் .

     இதற்க்கு உண்மையான ஓர் அமைப்பை உருவாக்க
வேண்டும் .இந்த அமைப்பின் மூலமாக ,வள்ளலாரின்
கருத்துக்கள் .ஒத்த கருத்துடைதாய் இருக்கவேண்டும் .
மாறுபட்ட கருத்துடையவர்களை ஒழுங்கு படுத்த
வேண்டும் .அனைவரையும் அழைத்து தெளிவுப்
படுத்தவேண்டும் .

    அதற்கு வள்ளலார் வழியை பின் பற்றி வாழும்
சுத்த சன்மார்க்கிகளாய் இருத்தல் வேண்டும் .அவர்கள்
வழி காட்டுதலால் செயல் படுத்துதல் வேண்டும் .
அவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும் .தகுதி
உடையவர்களை ,கண்டுபிடித்து ,வரவழைத்து ,ஓர்
அமைப்பை உருவாக்க வேண்டும் .அந்த அமைப்பின்செயல்பாடுகள்
மூலமாக ,வள்ளலார் கருத்துக்களை ,உலக முழுவதும்
பரப்ப ஆவன செய்ய வேண்டும் .

    வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையங்கள்
வள்ளலார் எண்ணப்படி ,கருத்துப்படி செயல்படவேண்டும் .
வடலூர் தூய்மை அடைந்தால் ,அனைத்தும் வெகு விரைவில்
துய்மை அடையும் .வடலூர் உள்ள தெய்வ நிலையங்கள்
 போலி சன்மார்க்கர்கள் கையில் சிக்கிக் கொண்டு உள்ளது .
அவைகளை சுத்த சன்மார்க்கர்கள் ,ஒன்று திரண்டு
 மீட்க வேண்டும் .

    இவைகள் அடியேனின் கருத்துக்களாகும் ,இவைகளில்
மாற்றுக் கருத்துக்கள் ,நல்லவைகளாக இருந்தால்
மாற்றிக் கொள்ளலாம் .

     மற்ற அமைப்புகள் போல் அல்லாமல் வள்ளலார்
கொள்கைகளுக்கு ,மாற்றம் இல்லாமல் வித்தியாசமாக
இருக்க வேண்டும் .அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி
இருக்கவேண்டும் .

    இவைகளை சன்மார்க்கிளாகிய நாம் செய்யாவிட்டாலும்
கண்டிப்பாக நடந்தே தீரும் .அப்பொழுது நாம் விலகி
இருந்து வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகும் .

  •  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,தகுதி உள்ளவர்களை 

தேடிக் கொண்டு இருக்கிறார் .இது சத்தியம் ,உண்மை .

ஒன்றுபடுவோம் .உண்மையை நாடுவோம் .
வாழ்க உலக உயிர்கள் !
வளர்க சுத்த சன்மார்க்கம் !.

அன்புடன் ;--ஆன்மநேயன் கதிர்வேலு !