சனி, 28 மே, 2016

புலால் உண்பவர்கள் ! விட்டுவிடுங்கள் !

புலால் உண்பவர்கள் ! விட்டுவிடுங்கள் !

புலால் உண்பவர்களை மனித இனத்தின் மனித குலத்தின் தகுதியை இழந்தவர்கள் என்கின்றார் வள்ளல்பெருமான் .

எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும்.நாட்டை ஆண்டு கொண்டு உள்ள அரசர்களாய் இருந்தாலும் மந்திரிகளாக இருந்தாலும்.அணுஆராச்சியில் வல்லுனர்களாய் இருந்தாலும்

முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும்,தினமும் கடவுளை இடைவிடாது வழிபடும் பழக்கமுள்ள பக்தி உள்ளவர்களாக இருந்தாலும்,

இறந்தவர்களை எழுப்புகின்ற அருள் பெற்ற சித்தர்களாய் ,அருளாலர்களாய் இருந்தாலும்
அவர்கள் மாமிசம் என்னும் புலாலை உண்பவர்களாக இருந்தால் .
அவர்கள் மனித தகுதியை இழந்தவர்கள் என்கின்றார் வெறி பிடித்த காட்டு மிருகங்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்.

அவர்களை கடவுள் எக்காலத்திலும் மன்னிக்கவே மாட்டார் .

உயிர்க்கொலை செய்வதும் அதன் புலாலை உண்பதும் மாபெரும் குற்றம் என்பதை அறிவினால் அறிந்து விட்டுவிட்டால் மட்டுமே பாவ மன்னிப்பு கிடைக்கும்.

உயிர்க் கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே
மயற்ப்பறு மெய்த்தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும்
மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே !

புலால் உண்பவர்கள் கடவுள் அருகில் செல்ல தகுதி அற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் பசியினால் துன்பப்படுகின்ற போது தாவர உணவினால் பசியைப் போக்குங்கள் என்கின்றார்.

அவர்கள் உண்மை அறிந்து புலால் மறுத்து சுத்த சன்மார்க்கத்திற்கு வரும் வரையில் அவர்களுக்கு போதிக்க வேண்டாம் என்கின்றார்.

ஏன் என்றால் அவர்கள் புலால் உண்ணும் வரையில் அவர்கள் அறிவு உண்மையைத் தெரிந்து கொள்ளும் தெளிவு இல்லாமல் இருக்கும். ஆதலால் போதிக்க வேண்டாம் என்கின்றார்.

இருந்தாலும் எப்படியாவது அவர்களை நம்மவர் ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு துன்பம் வரும் போது துன்பத்தைப் போக்கினால் சுத்த சன்மார்க்கத்திற்கு விரைவில் வந்துவிடுவார்கள்.

புலால் உணவு இறை அருள் பெறுவதற்கு தடையாக உள்ளது எனவே புலால் என்னும் மாமிச உணவை உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.

என்று வள்ளலார் திரு அருட்பாவில் பதிவு செய்து உள்ளார்..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

புதன், 4 மே, 2016

2-5-2016 இன்று 50 ஆம் ஆண்டு திருமணம் நாள் !

2-5-2016 இன்று 50 ஆம் ஆண்டு திருமணம் நாள் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் அருளால் எங்களுக்கு திருமணம் நடந்து 50 ஆம் ஆண்டு தொடங்குகிறது ,

இன்று ஈரோடு சன்மார்க்க சங்கத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப் படுகிறது

எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் படி பிரார்த்தனை செய்யப்படுகிறது .

ஆன்ம நேய அன்பு உள்ளங்களின் அன்பாலும் ஆசியாலும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் அருளாலும் நலமுடன் வாழ்வதற்கு அருளிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ,

உள்ளம் கனிந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

என்றும் உங்கள் ஆன்ம நேயர்கள்

ஈரோடு கதிர்வேல்
அமுதாகதிர்வேல்

திருப்பள்ளி எழுச்சி
tiruppaḷḷi eḻuchsi

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
    1. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
    பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
    தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
    சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
    முழுதும்ஆ னான்என ஆகம வேத
    முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
    எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
    என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
    2. துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
    தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
    சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
    சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
    நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
    நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
    எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
    என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
    3. நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
    நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
    அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
    அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
    புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
    போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
    இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
    என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
    4. கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
    கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
    பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
    பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
    நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
    நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
    எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
    என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
    5. புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
    பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
    சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
    சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
    மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
    வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
    என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
    என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
    6. ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
    ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
    பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
    பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
    அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
    அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
    இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
    என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
    7. சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
    சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
    நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
    நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
    முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
    முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
    எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
    என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
    8. மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
    வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
    கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
    கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
    பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
    பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
    இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
    என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
    9. மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
    வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
    அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
    அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
    தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
    சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
    இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
    என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
    10. அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
    அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
    வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
    வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
    விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
    விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
    இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
    எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் 

சுத்த சன்மார்க்க உணவு என்பது எது ?

உணவில் மூன்று வகை உண்டு

தாவர உணவு
புலால் உணவு
அருள் உணவு

தாவர உணவு உடம்புக்கு வியாதி வராமல் ( ஆபத்து ) வராமல் பாதுகாப்பான உணவாகும் .

மாமிசம் என்னும் புலால் உணவு உணபதால் உடம்பிற்கு வியாதிவரும் துர்மரணம் வரும் அடிக்கடி ஆபத்துக்கள் வந்து கொண்டே இருக்கும்

மேலே கண்ட இரண்டு வகை உணவும் உடம்பையும் உயிரையும் பாதுகாப்பாது .

 உண்ணும் உணவிற்கு தகுந்தாற் போல் தான் அறிவும், ஜுவனும்  புத்தியும் ,மனமும் செயல் படும் ,

மேலே கண்ட உணவு வகைகள் வேறு பட்டாலும் செயல்கள் வேறு பட்டாலும் மரணம் என்பது நிச்சயம் உண்டு .பிறப்பு என்பது நிச்சயமாக உண்டு .

தாவர உணவும் புலால் உணவும் வேறு வேறு குணங்கள் இருந்தாலும் வாயின் வழியாகத்தான் உடம்பிற்கு செல்கிறது .

வாயின் வழியாக எந்த பொருள் சென்றாலும் அவை மலமாக வெளியே வந்து கொண்டே இருக்கும் .

அதற்கு பெயர் புழுக்கின்ற உணவு ,
புழுக்கின்ற உணவு எதுவாக இருந்தாலும் மலமாகும் உணவு எதுவாக இருந்தாலும் .வாயின் வழியாக செல்லும் எந்த உணவாக இருந்தாலும் மரணம் என்பது நிச்சயமாக உண்டு ,

எனவே அருள் உணவு ஓன்றினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் .

அருள் உணவு எங்கே இருக்கிறது அதை பெறும் வழி எப்படி எனபதை தெரிந்து கொள்வது தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் .

அதற்கு பெயர் சுத்த சன்மார்க்க உணவு என்பதாகும் .

நாம் பழுக்கின்ற உணவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து புழுக்காத உணவை உட்கொள்ள வேண்டும் .

புழுக்காத உணவு வகைகள் !

தேன் ,வெல்லம் ,நாட்டு சர்க்கரை , கற்கண்டு ,அயம் முதலிய செந்தூரம் ,தாமிரம் அயம் முதலிய பஸ்பம் ,இவைகளை உட்கொள்ள பழகி தேகத்தை நீட்டிக்க வைத்து கொள்ள வேண்டும் ,

இவைகள் யாவும் புழுக்காத உணவுகள் மலம் வராத உணவு வகைகள்

இந்த உணவால் உடம்பு நீண்ட நாள் நீட்டிக்கலாம் அருள் பெருவதற்கு சகாயமாக இருக்கும் .

அருள் பெறாமல் இந்த உணவே உட்கொண்டே இருந்தாலும் ,நீண்ட வருடம் உயிர் உடன் வாழலாம் இறுதியில் மரணம் வந்தே தீரும் ,

இவைகள் யாவும் தேகம் நீட்டிக்க .அருளைப் பெற உபாய வகையாகும் அதற்கு பெயர் உபாய மார்க்கம் என்பதாகும் .

சுத்த சன்மார்க்கம் என்பது உண்மை மார்க்கம் ,

உணமையை அறிவினால் அறிந்து வள்ளலார் சொல்லி உள்ள  உண்மை ஓழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் அருளை சீக்கிரம் பெற்று விடலாம் .

ஆதலால் உபாயத்தைக் கொண்டு செல்லாமல் உண்மையான வழியில் செல்ல வேண்டும் ,

உடம்பையும் உயிரையும் சீக்கிரம் அழிப்பது நான்கு அவை.

ஆகாரம்,நித்திரை,மைத்துனம் ,பயம்

இதற்கு அடிப்படைக் காரணம் உணவு தான் என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும் .

உணவை மாற்றம் செய்ய இரண்டு வழிகள் வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார் .

இறைவன் மேல் இடைவெளி விடாத அன்பும் ,எல்லா உயிர்களும் தம் உயிர் போல் என்னும் ஆன்ம நேய ஓருமைப் பாட்டு உரிமையையும் வரவழைத்துக் கொள்ள வேண்டும் .

அதற்கு பெயர் தான் சத்விசாரம் பரோபகாரம் என்றும் பெயர் வைத்து உள்ளார் ,

சுத்த சன்மார்க்கம் எனபது அருளைப் பெறும் மார்க்கம் ,

அருளைப் பெறுவதற்கு எவை தடையாக இருக்கின்தோ அவைகளை எல்லாம் தாமதம் இல்லாமல் தூக்கி எறிய வேண்டும் .

முக்கிய தடையாக இருப்பது எது ?  

சுதத சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள் ,மதங்கள் , மார்க்கங்கள் எனபவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் ,

வருணம் ,ஆசிரமம்,முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் தடை யாக இருக்கிறது .

தடைகளை துணிச்சல் உடன் அகற்றுங்கள்

அதுதான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகள்

திரைகளை நீக்குங்கள் அருள் உடனே ஆன்மாவில் இருந்து சுரக்கம்

அருள் உணவு ஒன்றினால் மட்டுமே மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வு வாழ வழி கிடைக்கும் ,

வேறு எந்த குறுக்கு வழியாலும் அருள் சுரக்காது ,கிடைக்காது ,

புழுக்கின்ற உணவை நீக்கி புழுக்காத உணவை உட்கொண்டு

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணை யால் அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவோம்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
 9865939896 

ஜீரண சக்தியை எளிதாக்கும் கீரைகள்!
பொதுவாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்களை இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என ஐந்து வகையாகப் பிரிக்கலாம். அவற்றில் எளிதாகவும் விரைவிலும் ஜீரணம் ஆகக்கூடியவை கீரைகளே. பூ, காய், தண்டு, கிழங்கு போன்றவை தாமதமாக ஜீரணமாகக் கூடியவை.

தினமும் உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது. இரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் ஜீரண சக்தி குறைவதால் அவை சரியாகச் செரிக்காமல் இருக்கின்றன. இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.

கீரை, கறிகாய்களைப் பொடிப் பொடியாக நறுக்கி, நீர் சேர்த்து வேகவைத்து, பிழிந்து நீரை அகற்றி, எண்ணெய், கடுகு பெருங்காயம், மிளகு, இஞ்சி, புளிப்பு மாதுளை இவற்றை சேர்த்து சுண்டவைத்து சாப்பிட்டால் கேடு விளைவிக்காது. வயிற்றில் மல அடைச்சலை ஏற்படுத்தாது சுவையூட்டும்.

முளைக்கீரை:

அதிக ருசியும், பசியும் கொடுக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு வலுவேற்றி புத்துணர்வைத் தரும்.

தண்டுக்கீரை:

முளைக்கீரையின் முற்றியதே தண்டுக் கீரையாகும். இதில் இலை தண்டு இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதயத்திற்கு உகந்த கீரை. மலத்தை இளக்கும். இரத்தக் கொதிப்பு, இரத்த பேதியை கட்டுப்படுத்தும். வயிற்றுக் கடுப்பு, நீர்ச்சுருக்கை போக்கும் குணமுண்டு.

சிறுகீரை:

இதுவும் தண்டுக்கீரை இனத்தைச் சார்ந்ததுதான். கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இது நல்ல மருந்தாகும். இருமலைப் போக்கும். நல்ல குரல்வளத்தைக் கொடுக்கும். வயிற்றுப் புண், வாய்ப்புண்ணை நீக்கும். மூல நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். சொறி, சிரங்கு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

பசலைக் கீரை:

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமுண்டு. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும். நீர்கடுப்பு, நீர் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்றவற்றைப் போக்கும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும். ஈரலை வலுவூட்டும்.

கொடிப்பசலை:

சிகப்பு, வெள்ளை என இருவகை உள்ளது. இரத்தக் கொதிப்பை அடக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீரை அதிகம் வெளியேற்றச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

இதன் இலைச்சாற்றை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் சளித்தொல்லை நெருங்காது.

இதன் இலையை நீரில் போட்டு அலசினால் குழகுழப்புடன் ஒரு விதமான பசை வெளிப்படும். அதனைத் தலையில் பூச தீராத தலைவலி நீங்கும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

புளிச்ச கீரை:

அதிக புளிப்புச்சுவை கொண்டது. ஆந்திர மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

பண்ணைக் கீரை:

துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையுடையது. வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண், தொண்டைப்புண்ணை ஆற்றும். மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும். கரப்பான், கிரந்திப் புண் இவற்றை குணப்படுத்தும். வறட்டு இருமலைப் போக்கும்.

புளியாரை:

புளிப்பு சுவையுடையது. நன்கு பசியைத் தூண்டும். மூலம், இரத்த மூலம், அஜீரண கோளாறுகளை குணப்படுத்தும். இதன் இலையை அரைத்து பரு, கொப்புளம், கட்டிகளின்மீது பூசினால் விரைவில் குணமாகும்.

பருப்புக்கீரை:

இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடையது. இரத்தத்தின் சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்கக்கூடியது. குடல் புண்ணை ஆற்றும். சீதபேதி, இரத்த பேதி, கல்லீரல் நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இதன் இலையையும், விதையையும் அரைத்து தீக்காயங்களின் மீது தடவ புண்கள் விரைவில் ஆறும். இதன் இலையை அரைத்து கைகால் எரிச்சல் உள்ள இடங்களில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

புதினாக் கீரை:

நறுமணத்திற்கு மட்டும் உணவில் சேர்க்கிறோம் என்று நினைப்பீர்கள். ஆனால் இது அளப்பரிய குணங்களைக் கொண்டது. வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இதுவே சிறந்த கீரையாகும். உடல் வலியைப் போக்கும். ஜீரணச் சக்தியைத் தூண்டும்.

இதனை உலர்த்தி கஷாயமாக்கிக் குடித்தால் காமாலை, விக்கல், வயிற்றுவலி, குமட்டல், தலைவலி, சூதக வலி போன்றவை குணமாகும். இதன் பொடியை கொண்டு பல்துலக்கினால் வாய்ப்புண் ஆறும். வாய் மணக்கும்.

துத்திக் கீரை:

இதனைப் பருப்புடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் மூலவாயு தணியும். மலத்தை இளக்கி உட்புண்ணை ஆற்றும். சிறுநீரைப் பெருக்கும்.


ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்