செவ்வாய், 26 ஏப்ரல், 2022

தாவரங்களும் உயிர்கள் தான்!

 *தாவரங்களும் உயிர்கள் தான் !*


*ஓர்  ஜீவனைக் கொன்று (உயிர்களை) ஒரு ஜீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுவித்தல் ஜீவகாருண்ய ஒழுக்கமே அல்ல என்றும் கடவுள் சம்மதமும் அல்ல என்றும்.*


*இந்த பழக்கம் இயற்கைக்கு முழு விரோதம் என்றும் அறியவேண்டும்*


பொதுவான உணவு !


*உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் தாவர உணவே சிறந்த முக்கிய உணவாக இறைவன் படைத்துள்ளார்.*


  *மனிதர்களுக்கு ஊழ்நியதி ஆகாரத்தோடு ஆகாமிய முயற்சி ஆகாரம் அவசியம் தேடி உட்கொள்ள வேண்டும் என்பது இறைவன் விதித்த ஆணையாகும். இவற்றைப் பற்றிய உண்மையை நம் ஆன்மீகம் சார்ந்த முன்னோர்கள் எடுத்துச் சொல்ல தவறிவிட்டார்கள்.*

*தாவரங்களும் உயிர்கள்தான் அதனால் எந்த தாவரத்தையும் வேறோடு பிடுங்கி உணவாக உட்கொள்ளக் கூடாது.அப்படி உணவாகக் கொண்டால் அதுவும் கொலைக்கு சமம் என்கிறார் வள்ளலார்.* 


*தாவரங்களில் உள்ள இலை.பூ.காய்.கனிகள் இவற்றை பரித்து உண்பதால் அவைகள் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டும் காய்த்துக் கொண்டும் இருக்கும் அதனால் அவற்றை உண்பதால் கொலை அல்ல என்பதை உயர்ந்த அறிவுள்ள மனிதன் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்*


உதாரணம்!


*வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:-* 


*தத்துவ விருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமும் இல்லை. உயிர்க்கொலையும் அல்ல*


*ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்*


*மேலும் வள்ளலார் சொல்லுகிறார்!*


*மரம்.புல்.நெல்.இலை.காய்.கனி முதலான தாவரங்களும் உயிர்கள்தான்.அவைகளை இம்சை. செய்து ஆகாரங் கொண்டால் அதுவும் ஏகதேச தாமச ஆகாரம்தான்.அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்த கரண சந்தோஷம்தான் ஆனாலும்  அப்படியல்ல*


*மாமிசம் உண்ண வேண்டாம் என்பதற்கு வள்ளலார் சொல்லும் உதாரணம்!*


*எல்லாச் சீவர்களும் ( உயிர்கள்) இயற்கையுண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும், கடவுள் இயற்கை விளக்கம் மாறுபடும் போது சீவத் தன்மை இல்லாதபடியாலும், கடவுள் இயற்கை விளக்கமும். ஜீவன் இயற்கை விளக்கமும் ஒன்றோடொன்று மாறுபாடு இல்லாத்தாலும். கடவுளியற்கை விளக்கமுஞ் சீவன் இயற்கைவிளக்கமும் அந்தந்தத் தேகங்களினும் விளங்குகின்ற படியாலும், ஒரு சீவனை வதைத்து (கொன்று) அதனால் மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்* 


*வள்ளல்பெருமான் திருவள்ளுவர்  இருவரும் மட்டுமே உயிர்க்கொலை செய்வதையும் அதன் புலால் உண்பதையும் கடுமையாக சாடி உள்ளார்கள்.*


 *மற்ற ஞானிகள் மக்களைப் பற்றி கவலைப்படாமல்.பட்டும் படாமலும் ஏகதேசம் சொல்லி உள்ளார்களேத் தவிர அவற்றால் உண்டாகும் தீமைகளை தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.*


*உயிர்க்கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் இயற்கைக்கு விரோதம் அல்ல என்றும்*  

*ஓர் உயிரைக்கொன்றுஓர்உயிர் உண்பதுதான்* 

*இயற்கை விதித்த விதி என்றும்* *அவற்றை உண்பது தவறுஅல்ல என்றும் தவறு செய்பவர்கள் அவர்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள்*


*இது எவ்வளவு பெரிய அறியாமை என்பதையும் முழுமையான அறிவு விளக்கம் இல்லை என்பதையும் நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.* 


*மாமிசம் உண்பவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும்.* *உயர்ந்த பொருப்பில் இருந்தாலும்* *உயர்ந்த விஞ்ஞான அறிவியல் சார்ந்த உலக அறிவாளிகளாக இருந்தாலும்.* 


*அருள் சார்ந்த  ஆன்மீக வாதிகளாக இருந்தாலும்.*

*சாதி சமயம் மதம் சார்ந்த தலைவர்களாக இருந்தாலும்.இறந்தவரை எழுப்புகின்ற சித்து விளையாட்டுத் தெரிந்தவர்களாக இருந்தாலும்.அவர்களை மனித வர்க்கத்தில் இருந்தும் மனித தரத்தில் இருந்தும் இறைவன் நீக்கிவிடுவார் என்கிறார் வள்ளலார்.*


 *அவர்களை உயர்ந்த மனிதர்களாக எண்ண வேண்டாம் என்கிறார்.*


வள்ளலார் பாடல்! 


மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்


உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்


கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்


குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.!


*ஒரு பெண்ணை ஆணாக்கவும் ஆணை பெண்ணாக்கவும் அறிந்த ஞானியாக இருந்தாலும்.*


*இறந்தவரை எழுப்புகின்ற வல்லமை பெற்ற சித்தர்களாக இருந்தாலும்.*  *உயிர்மேல் இரக்கம் இல்லாமல்* 

 *ஓர்உயிரை அகற்றி* *அதன் மாமிசத்தை கடித்து உண்ணும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும்.*

*அப்படி உண்பவர்களுக்கு துணை போகிறவர்களாக இருந்தாலும்.*

*அவரை ஞானி எனக் கூறாதே என்று ஆண்டவர்மீது சத்தியம் வைத்து சொல்லுகின்றார்* 

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட உயிரையும் உடம்பையும் அழிப்பதற்கு இவ்வுலகில் எவருக்கும் உரிமை கிடையாது.என்பதை உயர்ந்த அறிவுள்ள ஒவ்வொரு மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்*


*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி*!


நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்


*பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்*


பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்


கலியுறு சிறிய தெய்வ வெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.! 


*ஒவ்வொரு ஊரிலும் குல தெய்வம் என்ற பெயர்களிலும் மற்றும் சிறு தெய்வங்கள் என்ற பெயர்களிலும் விகாரமான உருவங்களை  சிலைகளாக செய்து வைத்து* *அத் தெய்வங்கள் பெயரால் ஆடு. மாடு.கோழி.பன்றி போன்ற வாய்பேசாத அப்பாவி உயிர்களை பலி கொடுத்து அதன். புலாலை பங்கிட்டு  உண்பது எவ்வளவு பெரிய பயங்கரமான கொடூரமான கொலை குற்றம் என்கிறார்.*

*அதனால்தான் சிறுதெய்வ வழிபாடு செய்ய வேண்டாம் என்றும் அத் தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்ய வேண்டாம் என்றும் சாடுகின்றார்*


*அவ்வாறு செய்பவர்களையும்*  *அந்த சிறிய தெய்வங்களையும்*  *கண்ட காலத்தில் எல்லாம்* *பயந்து நடுங்கினேன்*

என்கின்றார்


ஏன் பயந்து நடுங்குறார் என்றால்? 


*மனிதனை மனிதன் கொலை செய்தால் உலகியல் சட்டத்தில் கொலைக்குத் தகுந்தாற்போல் ஆயுள் தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ வழங்கப்படுகிறது.* 


*வாய் பேசமுடியாத ஜீவன்களை நேருக்குநேர் கதற கதற. துடிக்க துடிக்க கூர்மையான ஆயுதங்களை கொண்டு கொலை செய்பவர்களுக்கு என்ன என்ன தண்டனை கிடைக்கப்போகிறதோ அதனால் அவர்கள் என்ன என்ன துன்பத்தை அடையப் போகிறார்களோ என நினைந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் பயந்து நடுங்குகிறார் வள்ளலார்.*


*இவர்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்  செய்யும் கொலை குற்றங்களை இனிமேலாவது நன்கு உணர்ந்து கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும். ஜீவகாருண்யமே விரதமாக அனுசரிப்பார்களே யானால்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றி நல்வழிக்காட்டி மேலேற்றுவார் இது சத்தியம்.* 


*உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் உடையவர் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் என்கிறார்.* *அதற்கு அர்த்தம் உயிர்க்கொலை செய்பவரும் புலால் உண்பவரும் இறைவன் அருகில் செல்ல தகுதி அற்றவர்கள் என்கிறார்.*


*வடலூர் சத்திய ஞானசபையின் வெளியில் கொலை செய்பவரும் புலால் உண்பவரும் உள்ளே பிரவேசிக்க கூடாது என்று எழுதி வைத்துள்ளார்.*


வள்ளலார் பாடல்! 


உயிரெலாம் பொதுவில்  உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

(அகவல்)


உயிருள்யாம்  எம்முள் உயிர் இவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுக என்று  உரைத்த மெய்ச் சிவமே! ( அகவல்) 


மேலும் சொல்லுகிறார்.


எத்துணையும் பேதமுறாது தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தைமிக விழைந்த தாலோ.!


*எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் அறிவுள்ளவர் எவரோ அவரே உத்தமர் என்பவராகும். அந்த உண்மை தெரிந்தவர் எவரோ அவரே வித்தகர் என்பவராகும்.அந்த குணம். உள்ளவர் உள்ளத்தில் இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நடம் புரிகின்றார் என்பதை நான் அறிந்து கொண்டேன்* 


*ஆதலால் அவரையே கடவுளாக எண்ணி வழிபடுவேன்.அவர் இட்ட கட்டளையை  சிரமேற் கொண்டு நிறைவேற்ற என் சிந்தை மிகவும் விரும்புகிறது என்கிறார்*


*எனவே உயர்ந்த அறிவுள்ள மனிதர்களாகிய நாம் உயிர் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் தாவர உணவுகளையும் வேரோடு பிடுங்கி உண்ணாமல்.சுத்த பூதகாரிய உணவான இலை தழை.பூ.காய்.கனி.நெல்.அரிசி. கம்பு .கேழ்வரகு.சோளம்.கொள்ளு.துவரை.வரகு.சாமை. போன்ற தானியங்களை  உணவுகளாக உட்கொண்டு தேகங்களை வலிமை உள்ளதாக்கி நரை திரை பிணி மூப்பு பயம் இல்லாமல் ஆன்மநேய உறவோடு.ஆன்ம அறிவோடு வாழ்ந்து ஆண்டவர் அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 23 ஏப்ரல், 2022

முதல் மனித பிறப்பு வள்ளலார்!

 *முதல் மனித பிறப்பு வள்ளலார் !*


*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்ற அருள் நிறைந்த பக்குவ ஆன்மா* *ஆதலால் உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பே முதல் பிறப்பாகும்.* 


*வள்ளலார் வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்ட மரபினில் வந்த  ஒருவர் அல்ல..*

அவர் ஒரு தனிப்பிறவியாகும் 


*வள்ளல்பெருமானுக்கு முன் பிறப்பும் இல்லை.பின்பிறப்பும் இல்லை யாரையும் பின்பற்றவும் இல்லை* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் மரணத்தை வென்று ஐந்தொழில் வல்லபம் பெற்றவர்*


*ஆன்மாக்கள் சாதி.சமயம்.மதம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றி அறிவு விளக்கம் இல்லாமல் தாழ்ந்த கதி அடையும்போது உண்மையை விளக்கி மேல்நிலைக்கு கொண்டு செல்லவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பபட்டவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பக்குவ ஆன்மாவாகும்* 


வள்ளலார் பாடல்!


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த *உலகர் அனைவரையும்*


*சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்*


*இகத்தே பரத்தைப்* பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!*


*என்னும் பாடலின் வாயிலாக தெளிவான விளக்கம் அளிக்கிறார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையும் ஆன்மாக்களின் உண்மையும் தெரிந்து கொண்டால் மட்டுமே தெளிவான உயர்ந்த அறிவு சார்ந்த உண்மை விளங்கும்*


*ஆன்மாக்கள் !*


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் இடம்தான் அருள் நிறைந்த பெரு வெளியாகும்* 


வள்ளலார் பாடல்!


*அருட்பெரு வெளியில்* அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்


*அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்*

அருட்பெருந் திருவிலே அமர்ந்த


அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே


அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதி என்அரசே.!


*என்னும் பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் ஆட்சி புரியும் இடத்தை தெளிவாக சொல்லி விளக்குகின்றார்*


*அந்த அருள் பெருவெளியான கடவுள் சமூகத்தில் ஆன்ம ஆகாயம் என்று ஓர்  பகுதி உள்ளது அங்கு 1.பக்குவ ஆன்மாக்கள்.*

*2.அபக்குவ ஆன்மாக்கள். 3.பக்குவாபக்குவ ஆன்மாக்கள் என மூன்று வகையான ஆன்மாக்கள் நிறைந்து உள்ளன*  


*ஆன்மாக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் கடவுள் சமூகத்தில் உள்ள அருள் சக்தியே காரணமாகும்.*


(ஆன்மாக்களை பிரித்து எடுக்கும் ஆற்றல் அங்கு விளங்கும் அருட்சக்தியால் மட்டுமே முடியும்)


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பலகோடி உலகங்களையும் அண்டங்களையும் படைத்தது ஆன்மாக்கள் சென்று வாழ்வதற்கே படைக்கப்பட்டதாகும்.* 


*வள்ளலார் பாடல்!*


*குலவு பேரண்டப் பகுதி* ஓர் அனந்த

கோடி கோடிகளும் ஆங்காங்கே


நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்

நிகழ்ந்த பற் பலபொருள் திரளும்


விலகுறாது அகத்தும் புறத்து மேல் இடத்தும்

மெய்யறி வானந்தம் விளங்க


அலகுறாது தொழியாது அதுவதில் விளங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


*எண்ணில் அடங்காத பலகோடி அண்டங்கள் ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்காகவும் வாழ்க்கை வசதிக்காகவும் படைக்கப்பட்டுள்ளதாகும்*


ஆன்மாக்களின் உண்மையை ஓர் உதாரணத்துடன் விளக்குகிறார் வள்ளலார் ! 


*பஞ்ச பூத உலகத்தில் ஆகாயம் அனாதி அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி*


*அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி.அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ.அதேபோல் கடவுள் இடத்தில் (சமூகத்தில் ) அருட்சக்தி அனாதியாய் இருக்கின்றன.*


*ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன அதுபோல் கடவுள் சமூகத்தில் ஆன்மாகாசத்தில் அணுக்கள் சந்தானமயமாய்  நிரம்பி இருக்கின்றன.*

*அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.*


அணுக்களின் பேதம்!


பஞ்சபூத  ஆகாயத்தில் இருக்கும் சாதாரண அசாதாரண அணுக்கள் ஏழு வகையாகப்பிரியும்அவை யாவன...

1.வாலணு.

2.திரவவணு.

3.குருவணு.

4.லகுஅணு.

5.அணு.

6.பரமாணு.

7.விபுவணு


மேற்படி அணுக்கள்  அனந்தவண்ண பேதமாய் இருக்கும். இந்த ஏழுவிதமான அணுக்களின் சேர்க்கையால் தான ஆன்மாக்களின் தகுதிக்கு தகுந்தவாறு உயிரும் உடம்பும் கொடுக்கப்படுகிறது.


*இவற்றில்  *காரணவணு.*

*காரியவணு காரண காரியவணு* என மூன்று வகையாய் *பக்குவம் அபக்குவம்.*

*பக்குவாபக்குவம் என நிற்கும்.*


*இவைபோல் ஆன்ம ஆகாயமான கடவுள் சமூகத்தில் ஆன்மாக்களும் மூவகையாய் நிற்கும்.*

யாவை எனில் ...


*பக்குவ ஆன்மா*

*அபக்குவ ஆன்மா*

*பக்குவாபக்குவ ஆன்மா*

என மூவகைப்படும்


*ஆகாயத்தில் இருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம்.*


*அதுபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்குக் காரணம் கடவுள் சமூகத்தில் உள்ள அருட்சத்தியேயாம்*


*அப்படி மூவகையான ஆன்மாக்களுக்கு அருட்சத்தியின் சமூகத்தில் தோன்றிய இச்சை.கிரியை.ஞானம் என்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்றுள...*


அவை யாதெனில்?


*கர்மதேகம்.*

*பிரணவதேகம்*

*ஞானதேகம்*

என மூன்றுவிதமாகும்*.அப்படி மூன்று தேகம் உண்டானதற்குக் காரணம். *பூத ஆகாயத்தில் உண்டான வாயு பேதத்தினால்  சோம சூரிய அக்கினி என மூன்று வகை நிற்பன போல் உணர்க என்கின்றார் வள்ளலார்* 


*மேலே கண்ட உண்மையான  காரண காரியங்களை விபரமான விளக்கங்களை சாதாரண அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாது* ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாறினால் *ஆன்ம அறிவு விளங்கி *அருள் அறிவால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.* இதற்கு அனுபவ அறிவு என்று பெயர்


வள்ளலார் சொல்கிறார் !


*ஆன்மாக்கள் !*


*ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் (விருப்பத்தால்) அருட்சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க ( அசைவு கொடுக்க ) ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழில்படும்.*

*மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே.மேற்படி ஆகாயம் சந்தானமானதால் ஆன்மாக்கள் நிரம்பி இருக்கும்.*


*ஆதலால் பஞ்ச கிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது.*

*ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதி இயற்கை அல்ல.ஆதி செயற்கையேயாம்.*

*அதேபோல் ஆணவம் அனாதியில் இயற்கையேயாம்.* *இதன் இரகசியம் குருமுகமாய் அறிக என முடிக்கிறார்.*


*இங்கே குரு என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதாகும்*


மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


*பக்குவம். அபக்குவம். பக்குவா அபக்குவம்  உள்ள ஆன்மாக்களில் அபக்குவம் உள்ள ஆன்மாக்களை மட்டுமே பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.*

*அந்த ஆன்மாக்கள் பல தேகங்கள் எடுத்து வாழ்ந்து இறுதியாக மனித தேகம் எடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று பக்குவம் அடைந்து அருட்பெருவெளிக்கு செல்ல வேண்டும்*


*பக்குவம் உள்ள ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டுபாட்டில் இருந்து கொண்டே இருக்கும்.அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படும்*


பக்குவாபக்குவம் உள்ள ஆன்மாக்கள்  மாயையின் கட்டுபாட்டிற்கு அனுப்பி மாயையின் ஆணைப்படி அதிகாரத் தலைவர்களாக செயல் படுத்தப்படும்.


அபக்குவம் உள்ள ஆன்மாக்கள் சகலர் என்பதாகும்.


பக்குவாபக்குவம் உள்ள ஆன்மாக்கள் பிரளயாகலர் என்பதாகும்.


பக்குவம் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் அறிந்த விஞ்ஞானகலர் என்பதாகும்.


*வள்ளல்பெருமான் வந்த விபரம்!*


சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பத்தில் வள்ளலாரே சொல்கின்றார்!


*இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில்.இயற்கை விளக்க நிறைவாக விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய்.இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பம் அடையும் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்து அருள்கின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே !*


*அறிவு என்பது ஒரு சிறிதும் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் நெடுங்காலம் சிற்றணுப் பசுவாகி யருகிக்கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி யிருந்து அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து*.


*எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள  இம்மனிதப் பிறப்புஉடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச்செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் எவ்வாறு கருதுவேன் என்னென்று சொல்வேன் என்கிறார்.*


மேலும் சொல்கிறார்!


*சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக் கடவுளே! ஜீவர்களாற் கணித்து அறியப்படாத பெரிய உலகின் கண்ணே போராசை.பெருங்கோபம்.பெருமோகம்.பெருமதம்.பெருலோபம்.பேரழுக்காறு.பேரகங்காரம்.பெருவயிரம். பெருமடம் பெருமயக்கம் முதலிய பெருங் குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றை யிடங்களிற் பிறப்பியாமல்*


*குணங்களே பெரும்பாலும் விளைதற்குரிய இவ்விடத்தை உறுப்பிற் குறைவுபடாத உயர் பிறப்பாகிய இம் மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னவென்று கருதி என்னவென்று துதிப்பேன் என்கிறார்.*


மேலும் சொல்லுகிறார்!


*வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற  அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்கு வித்தருளினீர்* என்கிறார்


மேலும் சொல்கிறார்.


*வாலிபப் பருவம் தோன்றுயபோதே சைவம்.வைணவம்.சமணம்.பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்.அச் சமயங்களிற் குறித்த  சாதனங்களும்.தெய்வங்களும்.கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்*


*அந்த சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கு அறிவித்து அச் சமய ஆச்சாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற் தடை செய்வித்து அருளினீர் என்கிறார்*


*இவற்றை எல்லாம் எப்போது ?  சொல்கிறார் வாலப பருவம் தோன்றுவதற்கு முன்னமே தெளிவாக அறிந்து சொல்கிறார்*


மேலும் சொல்லுகிறார் ! 


*தமிழ் மொழி!*


*இடம்பத்தையும்.*

*ஆரவாரத்தையும்*. *பிரயாசத்தையும்* *பெருமறைப்பையும்* *போது போக்கையும்* உண்டு பண்ணுகின்ற *ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது.*


*பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் லேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்.*

*சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த  தென்மொழி யொன்றிடத்தே மனம் பற்றச் செய்து அத் தென்மொழிகளாற்  பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்து அருளினீர் என்று தெளிவாக சொல்லுகிறார்.*


இன்னும் விரிக்கில் பெருகும்...


மனிதர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்? 


*வள்ளலார் எழுதிய திருஅருட்பா  திருவருளால்  எழுதி படைக்கப்பட்ட இயற்கை உண்மை நூலாகும்.*


*மனித தேக ஆன்மாக்களை அருள்தேகமாக  மாற்றி இயற்கை இன்பத்தை அனுபவிக்க அருட்பெருவெளிக்கு அனுப்ப  வந்தவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை ஒவ்வொரு மனித ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*உலகிலே எல்லா வகையிலும். எல்லாத் தரத்திலும்.எல்லா குணத்திலும் உண்மையை மட்டும் சொல்ல வந்த உயர்ந்த ஒரு அருள் நூல் திருஅருட்பா மட்டுமே என்பதை அறிந்து படித்து பயன்பெற வேண்டும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

புதன், 20 ஏப்ரல், 2022

மனித பிறப்பு !

 *மனித பிறப்பு !*


*மனிதபிறப்பு என்பது முதல்பிறப்பா? கடைசிபிறப்பா? என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக சரியான விடைதெரியாத புதிராகவே இருக்கிறது.*


*பல ஆன்மீக அருளாளர்கள் தாவரம்தான் முதல் பிறப்பு அதற்கு அடுத்து ஊர்வன பறப்பன நடப்பன தேவர் அசுரர் இறுதியாக மனிதர் என சொல்லி உள்ளார்கள் மனிதபிற்ப்பு என்பது  உயர்ந்த ஆறு அறிவுள்ள பிறப்பு என்றும் சொல்லி உள்ளார்கள்.*


சிவபுராணம் பாடல்!


புல்லாகிப் பூடலாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்


கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுராகி முனிவராய்த் தேவராய்ச் 


செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்


*என்னும் திருவாசகப்பகுதியில் சொல்லப்படுகிறது.ஆனாலும் பிறப்பைப்பற்றி கோர்வையாக விளக்கவில்லை*


*ஒருசில மதவாதிகள் குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் சொல்லி உள்ளார்கள்*


*அதேபோல் பலபேர் பலவிதமான கருத்துக்களை அவரவர் புத்திக்கு தகுந்தவாறு நம்பமுடியாத ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை உண்மைக்கு புறம்பாக சொல்லி உள்ளார்கள்*


*வள்ளல்பெருமான் சொல்லுவதை பார்ப்போம்!*


வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில் கீழ்கண்டவாறு  சொல்லுகின்றார்.!


*ஆன்மாக்கள்!*


(ஆன்மாக்களின் தகுதிகளைப்பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்)


*அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியாது உணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,*


*தாவரயோனி வர்க்கம்:*


இவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து *அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,*


*ஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:*


பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து *அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,*


*பறவையோனி வர்க்கம்:*


பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து *அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;*


*விலங்குயோனி வர்க்கம்:*


பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து *அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;*


*தேவயோனி வர்க்கம்:*


பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தைகளால் *இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்*;


*நரகயோனி வர்க்கம்:*


பின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து *அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.*


*கைமாறு:*


*அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி *அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை* 


*தாவரம்.ஊர்வன.

பறவை.விலங்கு.தேவர்.நரகர்.

இறுதியாக மனிதபிறப்பு என ஏழாவது பிறப்பே மனித பிறப்பு  கிடைத்துள்ளது என்பதை மிகவும் அழகாக கோர்வையாக தெளிவாக சொல்லி உள்ளார்.* 


*மேலும் ஒவ்வொரு உருவத்திற்கும் ஏழு பிறப்பு உண்டு என்கிறார்*


*மேலும் ஆன்மாக்கள் 84100000 எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களில் சென்று இறுதியாக மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது*

*என்கிறார்* *அதாவது சுமார்  84 லட்சம் யோனிபேதங்கள் ஆன்மா சென்று இறுதியாக மனித பிறப்பு எடுத்துள்ளது.*


*இந்த மனிதப் பிறப்பு போனால் மீண்டும் மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது நிச்சயம் அல்ல.உறுதி அல்ல என்கிறார் வள்ளல்பெருமான்.எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து இம் மனிதப்பிறப்பு கிடைத்துள்ளது என்பதை அறிவு பூர்வமாக சிந்தித்தால் மயக்கமும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தோன்றும். அவ்வாறு கிடைத்த இந்த மனித தேகத்தை தவறான வழியில் சென்று அழிக்க மனம் வருமா என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்.* 


*உலகியல் உள்ள பகுத்தறிவு வாதிகள் விஞ்ஞானிகள் அறிவியல் சார்ந்த அறிவாளிகள்  பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்கிறார்கள்* 


*ஆன்மாக்கள் பலலட்சம் பிறப்புகள் எடுத்து இறுதியாக மனிதபிறப்பு எடுத்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்திப்பெற்று  மரணத்தை வென்று கடவுள் நிலைஅறிந்து அம்மயமாக மாற வேண்டும் என்பதே மனித பிறப்பின் லட்சியமாகும்.* 


*மனித தேகத்தின் அருமையும் பெருமையும் மதிப்பையும் மரியாதையும் வள்ளல்பெருமான் போல் உலகில் ஒருவரும் தெளிவாக எடுத்து சொல்லவில்லை.* *எனவேதான் இந்த உயர்ந்த அறிவுடைய மனித தேகத்திற்கு மரணம் வந்துவிடக்கூடாது என்கிறார்.இத்தேகத்தையே சித்திய தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்*


*அதற்குப்பெயர் தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.* *மரணத்தை வெல்லும் அக் கல்வியைக்*

*கற்றுக் கொள்வதே* *சாகாக்கல்வி சாகாக்கலை என்பதாகும்.*


*சுருக்கமாக சொல்லுகிறேன்!*


*இனிமேலும் மனித ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும்*


*சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,*


 *"இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்" என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம்,*

 *உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் -*


* அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, *சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்*


,*கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது* அவசியமாகும்.


*சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.*


இந்நான்கு ஒழுக்கங்களை முழுமையாக பின்பற்றி கடைபிடிப்பவர்கள் எவரோ அவரே மனித்தேகத்தின் அருமையை அறிந்து மரணத்தை வெல்லும் தகுகி பெற்றவராகும்.


வள்ளலார்பாடல் !


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி


நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி


ஈவது மன் றிடைநடிப்போய் *நின்னாலே ஆகும் மற்றை இறைவ ராலே*


*ஆவதொன்றும் இல்லை* என்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு எந்த கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திங்கள், 18 ஏப்ரல், 2022

அருட்பெருஞ்ஜோதிஆண்டவரின் தனிப்பெருங்கருணை !

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை !*


*எங்களது குடும்பம் சுத்த சன்மார்க்க பாதையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முழு நம்பிக்கையுடன் பயணித்து வருகிறோம்.*


*எனது மனைவி அமுதா அவர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் பரோபகாரம் சத்விசாரத்திலும் என்னைவிட தீவிரமான ஈடுபாடு கொண்டவர் என்பது சன்மார்க்க உலகம் அறிந்ததே.வயது 73 ஆகிறது.*


*உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்*

*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே!*


முன்பிறவியின் ஏதோ வினைப்பயனால் என் மனைவி அமுதாவிற்கு *உடம்பிற்கும் உயிருக்கும்* பலமுறை ஆபத்துவந்தது.


*அனைத்து துன்பங்களையும்  அருள் ஆற்றலால் நீக்கி காப்பாற்றிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையை போற்றி புகழ்ந்திட வார்த்தைகளே இல்லை.*


*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்கின்றார் வள்ளலார்.*


*உலகம் எல்லாம் போற்ற ஒளிவடிவனாகி அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதை மக்கள் அறிந்து தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்.*


*வடலூர் வந்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையில் ஜீவகாருண்ய பணியும* *எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கும் இடமான சத்திய ஞானசபையில் உண்மை அன்புடன் வழிபடுங்கள் உங்களது தீராத பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு தெரியாமலே நீங்கிவிடும் (அதிசயம் அற்புதம்) என்பது சத்தியம்*


*எங்களது உயிர்பிணியும் உடற்புணியும் நீக்கி மகிழ்ச்சியுடன் நல்வழியில் வாழவைத்து கொண்டு இருக்கும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு மனைவி மகன் மருமகளுடன் காணவந்த காட்சிகள்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஆன்ம அறிவு விளக்கம் வேண்டும்!

 *ஆன்ம அறிவு விளக்கம் வேண்டும்!*


1.*இந்திரிய அறிவு.*

2.*கரண அறிவு*

3.*ஜீவ அறிவு*

4.*ஆன்ம அறிவு*

அதற்குமேல்

5.*அருள் அறிவு*

அதற்குமேல்

6.*கடவுள் அறிவு* 


*ஆன்ம அறிவு விளங்கினால் மட்டுமே அருள் அறிவும் கடவுள் அறிவும் வெளிப்படும்* *அதன் பின் கடவுளின் உண்மை தன்மை தானே வெளிப்படும்.*

*இது படிப்பால் அறிவது அல்ல.நான்கு வகையான ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் அறியப்படுவதாகும்*


*சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும்.*


*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்*.


*எதற்காக இறைவனால் வருவிக்க உற்றார் என்ற உண்மையை ஆன்ம அறிவால் அறிந்து கொண்டால் மட்டுமே வள்ளலார் காட்டிய  சொல்லிய மேலும் அவர் வாழ்ந்துகாட்டிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" கொள்கைகளை ஆன்மஅறிவு விளக்கத்தை கொண்டு முழுமையாக  தெரிந்து கொள்ள முடியும்.* 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

*பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்*

*பிள்ளைவிளை* *யாட்டென உணர்ந்திடாது* உயிர்கள்பல

பேதமுற்று அங்கும்இங்கும்


*போருற்று இறந்துவீண் போயினார்* இன்னும் வீண்

போகாதபடி விரைந்தே

*புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி* *காட்டிமெய்ப்*

*பொருளினை உணர்த்தி* எல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி *நீ*

*என்பிள்ளை* *ஆதலாலே*

*இவ்வேலை புரிகஎன் றிட்டனம்* மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!!


என்னும் பாடலின் வாயிலாக வெளிப்படையான  உண்மையைத் தெரிவித்துள்ளார்.


*உலகம் முழுவதும் பலபல ஆன்மீக பெரியவர்களால் பலவகையான பெயர்களில் பலவகையான தோற்றங்களில் பலகாலங்களில் சமயங்கள் மதங்களை தோன்றி வைத்து உள்ளார்கள். அவற்றின் வழியாக சாதிகள் போன்ற பொய்யான பிரிவினையான வாழ்க்கை முறைகளை அமைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன்.ஏழை பணக்காரன் போன்ற வாழ்க்கை முறை கொள்கைகள் யாவும் அவரவர்களின் சிற்றறிவுக்கு தெரிந்த அறிந்த புரிந்த வகையில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.*


*முழுமையான ஆன்ம அறிவு விளங்காமல்  உண்மையான அருள் அறிவை பெறமுடியாமல்*.

*மெய்ப்பொருளான இயற்கை உண்மைக் கடவுள் யார்? என்று தெரிந்து கொள்ளாமல். தத்துவ ஜடப்பொருளான சிலைபோன்ற உருவங்களையும் பஞ்சபூத தத்துவங்களையும் கடவுள்களாக படைத்து மற்றும் சிலைகளாக செதுக்கி வைத்து ஆலயங்கள். மசூதிகள்.சர்சுக்கள்.பிரமிடுகள் போன்ற கூடாரங்களை எழுப்பி அதன் உள்ளே வைத்துள்ளார்கள். அதிலும் உன்கடவுள் சிரியது சக்தி இல்லாதது.என் கடவுள் பெரியது சக்தி உள்ளது என்று கடவுளின் பெயரால் போட்டிப்போட்டுக்கொண்டு வணங்கி வழிபாடு செய்து வருகின்றார்கள்*


*அவர்களைப்பற்றி வள்ளலார் சொல்லுவதைப் கேளுங்கள்.* 


*பேய்ப் பிடித்த பைத்தியக்காரப்பிள்ளைகள் போல்*

*விளையாட்டுத்தனமாக* *அங்கும் இங்கும் அலைந்து அலைந்து.திரிந்து திரிந்து கண்மூடித் தனமாக மூர்க்கத்தனமாக போரிட்டு சண்டையிட்டு பலகாலமாக அழிந்து அழிந்து.இறந்து இறந்து பிறந்து பிறந்து மக்கள் வீண்போய் கொண்டே உள்ளார்கள்*


*இவைகள் யாவையும் பின்பற்றும்  மக்கள் மீது குற்றம் அல்ல.மக்களுக்கு தவறான வழிகாட்டியவர்களே குற்றவாளிகளாகும்.*


*இனிமேலும் மக்கள் வீண்போகாமல்  மக்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்களின் அறியாமையைப் போக்க வேண்டும். அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்று தனிப் பெருங்கருணையோடு பக்குவம் உள்ள ஆன்மாவான வள்ளல்பெருமான் அவர்களை தேர்வு செய்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*


 *நீ என்பிள்ளை ஆனதினாலே இவ்வேலை புரிக வேண்டும் என ஆணையிட்டு எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமான் அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்து உள்ளார்* என்பதை ஒவ்வொரு மனிதகுலமும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். 


*புனிதம் உறும் பொதுவான சுத்த சன்மார்க்கம்!*


*உலகிலே இதுவரையில் இல்லாத உண்மை பொது நெறியாக விளங்கும் புனிதமுறு "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" மெய் நெறியை தனி நெறியை 1872 ஆம் ஆண்டு தன் தொண்டர்களின் முன்னிலையில்  வடலூரில் தோற்றி வைத்துள்ளார் வள்ளலார்.*  


*சத்திய தருமச்சாலை !*


*மேலும் ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் என்றும். உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்னும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் சங்கம் சார்ந்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை 23-05-1867 ஆண்டு வடலூரில் தோற்றுவித்து தொடர்ந்து ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கி வருகின்றது.*"


*தருமச்சாலையில் தனிமனித ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் போன்ற ஒழுக்கங்களை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை தெளிவாக உரைநடைப் பகுதியிலும் பாடலிலும் எழுதி பதிவு செய்து வைத்துள்ளார்.* 


*சத்திய ஞானசபை !*


*ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாகும் போது ஆன்ம அறிவு விளக்கம் தோன்றும். அப்போதுதான் உண்மைக்கடவுள் யார் ? என்பது அக அனுபவத்தில் விளங்கும்.*


*வள்ளலார் அக அனுபவத்தில் அறிந்த இயற்கை உண்மை கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் காட்சியை வெளிப்படுத்தும் வகையில். இயற்கை விளக்கமாக வடலூரில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை" 1872 ஆம் ஆண்டு உலக மக்களின் பார்வைக்காக புறத்தி்ல் தோற்றி வைக்கின்றார்*  


*சத்திய ஞானசபை கட்டிமுடித்து குடமுழக்கோ புனித நன்னீராட்டு விழாவோ கும்பாபிஷேகமோ போன்ற  எந்தவிதமான சமய மதம் சார்ந்த சடங்குகளையும் வள்ளலார் செய்யவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*சத்திய ஞானசபையில் சமயம் மதங்கள் சார்ந்த சிலைகள் போன்ற  உருவ வழிபாடுகள் கிடையாது. ஜோதி வழிபாடு (ஒளிவழிபாடு) மட்டும்தான் காட்டப்படுகிறது.*

சன்மார்க்க சங்கங்கள் கடைபிடிக்க வேண்டியது! 


*வடலூரில் உள்ளதுபோல் உலகம் எங்கும்* *"சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்று பெயர் வைக்க வேண்டும். ஏழைகளின்  பசிப்பிணியைப் போக்க வேண்டும்.*

*ஜீகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்*


*சங்கத்தின் வசதிக்கேற்ப தகரக் கண்ணாடி கூண்டு வைத்து அதன்உள்ளே அகல் விளக்கு வைத்து தீபத்தை ஏற்றி ஜோதியை வழிபடவேண்டும்.* *ஜோதியின் முன் அபிஷேகம் ஆராதனை படையல் போன்ற எந்த விதமான ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் செய்ய வேண்டாம் என்பது வள்ளலாரின் அழுத்தமான கட்டளையாகும்.*


*ஒவ்வொரு நாளும்  சன்மார்க்க சங்கத்தின் உறுப்பினர்கள் தனித்தோ  கூடியோ காலை மாலை  திருஅருட்பா ஆறாம் திருமுறையில் உள்ள அகவல் மற்றும் வேண்டுதல். விண்ணப்பம். முறையீடு போன்ற தலைப்புகளில் உள்ள பாடல்களை நேரத்திற்கு தகுந்தாற்போல் மெல்லென உணர்வு பூர்வமாக மனத் தூய்மையுடன்  துதி செய்தல் வேண்டும்.*


 *அவ்வாறு அவரவர் பின்பற்றும் தருணம் ஒழுக்கத்திற்கும் தகுதிக்கும் தகுந்தவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  ஆன்ம அறிவை வெளிப்படுத்தி அருளை வழங்கி மேல்நிலைக்கு ஏற்றுவார் என்பது சத்தியம்.*


*சன்மார்க்க சங்கங்கள் !*


*சன்மார்க்க சங்கங்களும் சங்கம் சார்ந்த உறுப்பினர்களும் வள்ளலார் சொல்லியவாறு முழுமையாக  கடைபிடிப்பதாக தெரியவில்லை.*

*அவரவர்கள் விருப்பம்போல் சாதி சமயம் மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றியே வழிபாடு செய்து வருகிறார்கள்.*


*அதனால் அவரவர்கள் ஒழுக்கத்திற்கு தகுந்தவாறு அற்ப பிரயோசனம் அடைவார்களே தவிர பெரிய ஆன்ம லாபத்தை  பெறுவதற்கும் அருளைப்பெறுவதற்கும் மரணத்தை வெல்லுவதற்கும் வாய்ப்பே இல்லை என்பதை சத்திய வாக்காக உணர்ந்து ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.*


*சன்மார்க்க சங்கங்களில் தருமச்சாலை அமைத்து பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கினால் போதும் அதுவே  வழிபாடாகும்.*

*அதைத்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் வள்ளலார் தெளிவாக சொல்லியுள்ளார்.*


*ஞானசபை குடமுழக்கு!*


*ஞானசபை என்பது ஒன்றே ஒன்று தான் அவை வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்.* 

*அதனால்தான் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று அனைவரையும் வடலூர் வரச் சொல்லுகிறார் வள்ளலார்*


*சிலபல சன்மார்க்க சங்கங்கள் உள் ஊர்களிலும் வெளிநாடுகளிலும் ஞானசபை என்ற பெயரில் அவரவர்கள் விருப்பம்போல் கண்டபடி கட்டிடங்களை கட்டி ஞானசபை என்று பெயர் சூட்டி குடமுழக்கு என்றும்.மகா கும்பாபிஷேகம் என்றும்  .புனித நன்னீராட்டு விழா என்றும். கோபுர கலசங்களை வைத்து ஆடம்பரமான பொருள் செலவுகள் செய்து சமய மதவாதிகள் போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் கொண்டு  விழா எடுக்கின்றார்கள்.* 

*அவ்வாறு நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் அடியேன் கலந்து கொள்ளாமல் சொற்பொழிவு மட்டும் செய்துவிட்டு வந்துவிடுவேன்.*


*உண்மை நேர்மை ஒழுக்கம் அன்பு தயவு கருணை மட்டுமே போதுமானதாகும் மற்றபடி ஆடம்பரமான செயல்கள் எதுவும் வேண்டாம் என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.*


*ஆடம்பரத்தை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வாரா என்றால் சத்தியமாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது எனது அனுபவத்தில் தோன்றிய   கருத்தாகும்.*


*எனது கருத்தால் யாரும் வருத்தபட வேண்டாம். திருந்தி திருத்திக் கொள்வது சுத்த சன்மார்க்க கொள்கைக்கு நல்லது  என நினைக்கிறேன்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெறுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். சுத்த சன்மார்க்க கொள்கைக்கு விரோதமாக எக்காலத்திலும் எவரும் செயல்பட கூடாது என்பதே வள்ளலார் கொள்கையாகும்*


 *புதியதாக வருபவர்கள் நாம் செய்யும் அதே தவறை தொடர்ந்து பின்பற்றி செய்வார்கள்.அப்படி செய்வதால் யாருக்கும் எந்த விதமான ஆன்ம லாபமும். அருள் லாபமும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்*


*வள்ளலார் பாடல்!* 


காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

*கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்*


*கூடுவிட்டுப் போயினபின்* *எதுபுரிவீர் எங்கே*

*குடியிருப்பீர்* ஐயோநீர் குறித்தறியீர் இங்கே


*பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்*

பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்


*ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்*

*எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.!*


*காடு மலை கல் மரம் செடி கொடி மேடு பள்ளம் குன்றுகள் நிறைந்த நிலத்தை வாங்கி  எவ்வளவோ சிரமப்பட்டு கஷ்டபட்டு பாடுபட்டு உழைத்து சமபடுத்தி அதில் காட்டு எருவும்போட்டு. போர்போட்டு தண்ணீர் வரவைத்து நன்செய் பயிர் வைக்கும் நன்செய் நிலமாக மாற்றி நெல் கரும்பு வாழை போன்ற பயிர் வைக்காமல் உயிரை அழிக்கும் கடுகுபோன்ற விஷத்தை பயிரிடுவது போன்று* *நாம் கடுமையாக உழைத்த உழைப்பு பயன் இல்லாமல்  போய்விடக் கூடாது என்கிறார் வள்ளலார்.* 


*நம் உழைப்பு அருள் பெறுவதற்கு ஈடுகட்ட வேண்டும். அப்போதுதான் ஆன்ம இன்ப லாபத்தை பெறமுடியும்* *அருள்பெற முடியும் மரணத்தை வெல்ல முடியும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறமுடியும் அதுவே பேரின்ப சித்தி பெருவாழ்வாகும்.*


*வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் சான்றோர்கள் தாம் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக  இருக்க வேண்டும்.*

*உலகம் முழுவதும் வள்ளலார் சொல்லியவாறு சன்மார்க்க உலகமாக மாற்றம் அடைய வேண்டும். சன்மார்க்கிகள் ஒழுக்கம் நிறைந்து  கருணையே வடிவமாகி  பாடுபட்டு உழைத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.* 


உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்

விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க ! 


சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை!


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் 

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.