புதன், 28 பிப்ரவரி, 2018

27-2-2018.மேட்டுகுப்பம் சித்திவளாகம் பேசியத்

https://youtu.be/_2oscv7O_EA

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

இறைவன் படைப்பில் என்ன வினோதம் !

இறைவன் படைப்பில் என்ன வினோதம் !

ஆண் பெண் இரு பாலருக்கும் ஒன்பது துவாரங்கள் வைத்து படைத்துள்ளான் இறைவன்.

இதில் என்ன வித்தியாசம் என்றால் ஆண் பெண் என்ற உறுப்புகள் வித்தியாசப்படுகின்றன.
 ஆணுக்கு உடம்பின் உள்ளே ஒருபை அது இரை பை என்பதாகும்.உண்ணும் உணவை தாங்கும் பை.அதுதான் இரைப்பை என்பதாகும்.

பெண்ணுக்கு உடம்பின் உள்ளே இரண்டு பை உள்ளது.ஒன்று இரை பை.ஒன்று கரு பை.
நாம் உண்ணும் உணவை சுமக்க ஒருபை..கருவை (குழந்தை) சுமக்க ஒரு பை என இரண்டு பை படைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது துவாரங்களில் ஒரு துவாரத்தின் வழியாகத்தான் உணவை உள்ளே அனுப்பமுடியும்.மற்ற எட்டு துவாரங்களும் கழிவுப்பொருளை வெளியேத் தள்ளவும்.மற்ற வேலைகளை பயன படுத்தவும் மட்டுமே பயன் படுகின்றது.

பெண்களுக்கு உள்ளே வாங்குவதற்கு இரண்டு துவாரங்கள் பயன் படுகின்றது. ஒன்று உணவை உள்ளே வாங்க வாயும்.ஒன்று சுக்கிலம் என்னும் விந்துவை உள்ளே வாங்க பெண்ணின் சுரோணிதம் என்னும் துவாரம்..பெண்ணின் கீழ் உறுப்பாகும்.

பெண்ணானவள் ஆணின் விந்துவை உள்ளே வாங்கவில்லை என்றால் கருதரிக்காது.குழந்தை பிறக்காது.மனிதர்கள் தோற்றம் நடைபெறாது..

ஆண் உருவத்தில் உள்ள விந்துவில் ஆன்மா வந்து தங்கி இரண்டு மாதத்தில் உயிரை உறுவாக்கி ஆன்மாவையும் உயிரையும்  பெண்ணிடம் அனுப்பப் பயன் படுகின்றது.

பெண் கருவறையில் ஆன்மாவும் உயிரும் உள்ளே சென்று தங்கள் வாழ்க்கைக்காக  உடம்பையும் அவைகளுக்கு தேவையான. பயன்படும் கருவி கரணங்களையும். உறுப்புக்களையும் படைத்துக் கொள்கிறது

அந்த மனித தேகம் என்னும் வீட்டை பயங்கரமான  இருட்டு அறையில் தான் கட்டிக்கொள்கிறது.

இந்த உலகத்திற்கு ஆன்மா வந்து வாழ்வதற்கு.உயிர் உடம்பு கருவி கரணங்கள் அவசியம் தேவைப்படுகின்றது பயன் படுகின்றது..

இங்கு வந்து ஆன்மா தனக்கு தேவையான உயிரையும்  உடம்பையும்.பஞ்ச பூத ஆணுக்களால்  கட்டிக்கொள்வதால்  .
அதற்கு வாடகை வீடு என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

இந்த வாடகை வீட்டிற்கு.தினமும் மூன்று வேளையும் உணவு கொடுப்பதுதான்  வாடகை என்பதாகும்.

அதே நேரத்தில் ஆண் பெண் உறவு இல்லாமல் எந்த உயிரும் உடம்பும் படைக்க முடியாது.மேலும் ஆன்மா இல்லாமல் ஆணும் இல்லை.பெண்ணும் இல்லை.அலியும் இல்லை..

ஆன்மா வாழும் வாடகை வீட்டை.அழிக்காமல் (மரணம் அடையாமல்) சொந்த வீடாக மாற்ற வேண்டும் . சொந்த வீடாக மாற்றம் செய்யாமல் வாழும் வரை இறந்து இறந்து.பிறந்து பிறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆன்மாவானது மீண்டும் மீண்டும் ஆண் பெண் உடல் உறவில் சிக்கி பிறப்பு எடுக்கக் கூடாது என்பதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

அணுக்களால் பின்னப்பட்ட ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்வதுதான் சொந்த வீடு கட்டிக் கொள்வதாகும்.

அதனால் தான் உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்...

பாடல் !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தைவசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தேஎண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

என்னும் பாடலில் கண்டுள்ளபடி ஆன்மா உயிர் உடம்பு வந்த வழியைத் தெரிந்து கொண்டால் தான் அவற்றை  மாற்றும் வழியைத் தெரிந்து கொள்ள முடியும்..

சொந்த வீடாக மாற்றிக் கொள்ளும் வழியை கண்டுபிடித்து சொந்த வீட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்துகொண்டு.உலகில் உள்ள அனைவருக்கும் வழிகாட்ட வந்தவர்தான் வள்ளலார்.

சொந்த வீடாக மாற்றம் செய்ய  நிதி வேண்டும் .என்ன நிதி ? அருள் என்னும் அழியாத நன்நிதி வேண்டும் .அவற்றை எங்கே பெற வேண்டும் ?

எல்லாவற்றுக்கும் காரணமாகவும் காரியமாகவும்.காரணகாரியமாகவும் இருப்பவர்தான் கடவுள்.

அந்தக் கடவுள் சமய மதங்களில் சொல்லிய கடவுள்கள் அல்ல.

எல்லாம் வல்லவர்.
இயற்கை உண்மையானவர்.
இயற்கை விளக்கமானவர்.
இயற்கை இன்பமானவர். 
அவர்தான்
அருட்பெருஞ்ஜோதியர்
என்னும் உண்மைக் கடவுளாகும்.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருள் என்னும் நன் நிதியை வழங்க முடியும். நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் உண்மையான தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்.

வள்ளலார் பாடல் !

1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்!

என்ற பாடல்கள் வாயிலாக எளிய நடையில் எளிய தமிழில்  பதிவு செய்துள்ளார்..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி எப்படி வேண்ட வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறார் நம் வள்ளலார்..

பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

என்னும் பாடல் வாயிலாக இறைவனின் அற்புதப் படைப்பையும் .அவரால் கிடைக்கும் அருள் அற்புத பேரின்ப லாபத்தையும் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து வாழ்ந்து வழி காட்டுகின்றார்...

நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி .உயிர் இரக்கம் என்னும் ஜீவகாருண்யத்தையும்.சத்விசாரம் என்னும் வாயிலாக கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழ்வோம்...

விரிக்கில் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 24 பிப்ரவரி, 2018

வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கலந்து கொண்டது !

வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கலந்து கொண்டது !

உலகில் உள்ள கர்த்தர்கள்.ஞானிகள்.யோகிகள்.சித்தர்கள்.சத்தர்கள்.சத்திகள்.அனைவரும் பல கோடி ஆண்டுகளாய்.தவம் செய்தும் காணமுடியாது காத்திருந்தும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர்களுக்கு  காட்சி கொடுக்காமல்.
வள்ளல்பெருமானுக்கு தானே வந்தும்  காட்சி கொடுத்தும்.அருள் வழங்கியும் அவர் உடம்பில் கலந்து கொண்டும் பிரியாமல் இருப்பதாக வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள்..

பொருமையாக படித்து உணர்ந்து தெரிந்து கொள்ளவும்.

எல்லோருக்கும் புரியும் வண்ணம்  எளிய தமிழில் எழுதி வைத்துள்ளார் வள்ளலார்.விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்.


1. வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.

2. படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.

3. உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

4. தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

5. இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

6. உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

7. மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

8. சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

9. பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274அரசே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

10. கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. !

என்னும் பத்து பாடல்களில் தெளிவான விளக்கம் தந்து உள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அவர் கண்டார்.இவர் கண்டார் என்னும் வாத்த்தை ஞாலத்தை. விட்டுவிட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே.!

நாமும் வள்ளலார் போல் வாழ்ந்தால் நம்மையும் இறைவன் வந்து அருளை வழங்கி தானே ஆட்கொள்வார்.

வாழ்வோம் வாழ்ந்து மற்றவர்களும் வாழ்வதற்கு வழிகாட்டுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896..

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்பது .உலகில் உள்ள உயிர் இனங்களை அனைத்தையும் ஆனம நேயத்துடன் நேசிப்பது தான் சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதை.புதிய மார்க்கமாகும்.

இந்த உண்மையை முழுதும் உணர்ந்தவர்கள் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும் தகுதி உடையவர்கள்..

சுத்த சன்மார்க்கம் என்பது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப் பட்டது.

சுத்த சன்மார்க்கம் என்று பேசிக்கொண்டு சுயநலத்திற்காகவும்.பொருள் ஈட்டுவதற்காகவும். வாழ்பவர்களை சுத்த சன்மார்க்கத்தில் போலி வேஷம் போடுபவர்கள்.

சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் !

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம்.மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அறக் கைவிட்டவர்களும்.
காம்க் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் .கொலை புலை தவிர்த்தவர்களும்.

ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சாதி.சமய.மதம் போன்ற கொள்கைகளை. முழுவதும் கைவிட்டவர்களும்.கடவுள் ஒருவரே! என்ற உண்மை அறிந்தவர்கள் .சுத்த சன்மார்க்கம் சொல்லும் உண்மை ஒழுக்க நெறிகளை முழுவதும் கடைபிடிப்பவர்கள் மட்டுமே..மரணம்.பிணி.மூப்பு.பயம்.துன்பம் ...
இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.

அதாவை ...்செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்.

அப்படி இல்லாது சுத்த சன்மார்க்கத்தில் நாங்களும் இருக்கிறோம் என்று வேஷம் போடுபவர்கள் மரணத்தை தவிர்த்து கொள்ள மாட்டார்கள்.

சுத்த சன்மார்த்தில் அருள் விளங்கும் காலத்தில்.அவரவர்கள் பரிபாகத்திற்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும்.

பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெறமாட்டார்கள்...

இவற்றை முழுதும் உணர்ந்தவர்கள் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் தகுதி உடையவர்கள்.

வள்ளலார் சொல்லுவது !

சாகாதவனே சன்மார்க்கி என்றும்...சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே யன்றி வேறில்லை.சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்ல ..என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்துள்ளார்..

உலக வாழ்க்கையில் பற்று வைத்துக் கொண்டு பொருள் ஈட்டுவதை விட்டுவிட்டு. அருள் ஈட்டும் வழியாகிய.அன்பு.தயவு. இரக்கம்.
கருணை முதலியவைகளைக் கடைபிடித்து.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதையாகும்..

அழிந்து போகும் அற்ப ஆசைகளுக்கு ஆசைப்படாமல்.ஆன்ம லாபத்திற்கும்.ஆன்ம இன்பத்திற்கும் ஆசைப்பட்டால் அருள் இன்பம் நம்மைத் தேடிவரும்.நம் அருட் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மை விட்டு பிரியாமல் அருள் பாலித்து கொண்டே  இருப்பார்.

நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் .அறியாமை என்னும் திரைகளை நீக்கி அதாவது ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் கதவையும் பூட்டையும் திறந்து உடைத்து .உள் இருக்கும் அருளைத் திறந்து விடுவார் .அருள் உடல் முழுதும் நிரம்பி பொங்கி தழும்பி கொதித்து.வேதித்து ஊன உடம்பை பொன் உடம்பாக்க மாற்றம் செய்வார்.அதன்பின்பு தான் உடம்பு மாற்றுக் குறையாத பசும் பொன்னாக மாற்றம் அடையும்..அதன்பின் தான் ஏன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்வார் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்....

வள்ளலார் பாடல் !

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தேகங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசேசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

இதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதையாகும்.

இந்த பிறவி போனால் வேறு எந்த பிறப்பு கிடைக்கும் என்பது தெரியாது .இந்த பிறப்பையே  நிந்திய மெய் பிற்ப்பாக மாற்றிக் கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய மார்க்கமாகும்...

சாகாக்கல்வி !

சாகாத கல்வியே கல்வி
ஒன்றே சிவம்தான்என அறிந்தஅறிவே தகும் அறிவு

மலம்ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த
பூரணவல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்

இந் நான்கையும் ஒருங்கேவியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறைவான
வர மேஇன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்மரபென் றுரைத்தகுருவே

தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்தேற்றி அருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளேதெய்வநட ராஜபதியே.!

என்னும் பாடல் வாயிலாக நடராஜபதி என்னும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மைக் கடவுள் என்கிறார் வள்ளலார்.

சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதையைப் பின்பற்றி மரணத்தை வென்று நித்திய பேரின்ப வாழ்வு வாழ்ந்திடலாம் வாரீர் வாரீர் என வள்ளலார் உலக மக்களை அன்புடன் ஆன்ம நேயத்துடன் அழைக்கிறார்கள்...

உண்மை உணர்ந்து உயிர் நலம் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்திடாம் கண்டீர்.

புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் நீவீர் எல்லாம் புனிதம் உறும் பொருட்டே என்கிறார் வள்ளலார்....

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து புனித குலம் பெறுவோம்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 21 பிப்ரவரி, 2018

உலக தந்தை மொழி தமிழ் !

உலக தந்தை மொழி தமிழ் !

உலக மொழிகள் யாவும் பெண் தன்மை சார்ந்த மொழிகளாகும்.

ஒவ்வொரு மொழிகளும் அவரவர்களுக்கு தாய்மொழி என்று சொல்லப்படுகின்றது

ஏன்என்றால் ? மனிதர்களால் தோற்றுவித்த மொழிகள் யாவும் தாய் மொழி என்று சொல்லப்படுகின்றது.

அதனால் ஆன்மா என்னும் பெண் தன்மை சார்ந்த மொழி.என்பதாகும்.

ஆன்மாக்கள் யாவும் பெண் தன்மை சார்ந்த்து.

தமிழ்மொழி ஆன்மாக்களால் அதாவது மனிதர்களால் எழுதியது. தோற்றுவிக்கப்பட்டது. அல்ல.என்பதை அறிவு சார்ந்தவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்..

தமிழ் ஆராய்ச்சியாளர்கள்.தமிழ் சான்றோர்கள். என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள் என்பது இன்றுவரைத் தெரிந்து கொள்ள முடியவில்லை..

வள்ளலார் !

வள்ளலாரை இவ்வுலகத்திற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும்.உண்மைக்கடவுளால்  அனுப்பி வைக்கப்பட்டவர்..

வள்ளலாருக்கு முன்னாடி மனிதவாழ்க்கைக்கு
உண்மை பொது வழி காட்டியவர் திருவள்ளுவர்.. அவரைப்பற்றிய உண்மைகளை  உலக மக்களுக்கு கொண்டு செல்ல ஒருவரும் முன் வரவில்லை.

வள்ளலார் வந்து தான் முதன்முதலில் வடலூரில் திருக்குறள் வகுப்பு வைத்து நடத்தியவர்.அதற்கு பின்தான் திருக்குறள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதே போன்றுதான் தமிழ் தாய்மொழி என்றும் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் சொல்லிக்கொண்டு இருந்த தமிழர்களுக்கு .தமிழின் உண்மைத் தனமையை வெளிப்படுத்தினார் வள்ளலார்...

தமிழ்..

இடம்பத்தையும்.ஆரவாரத்தையும்.பிரயாசத்தையும்.பெருமறைப்பையும்.போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் (மொழிகளில்) எனக்கு ஆசை செல்ல வொட்டாது செய்வித்து அருளீனீர் என்று அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இடத்தில் விண்ணப்பம் செய்கின்றார்..

மேலும்...படிப்பதற்கும்
பயிலுதற்கும்.
அறிதற்கும்.மிகவும் லேசுடையதாய்.பாடுதற்கும்.துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய் .சாகாக்கல்வி யை இலேசிலே அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து.அத் தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்து அருளினீர் என்று போற்றி புகழ்கின்றார்.. வள்ளலார்..

தமிழை திருவருள் மொழி என்கிறார்.திருவருள் மொழி என்றால் .அருளால் எழுதப்பட்ட மொழி என்பதாகும்.அருள் என்றால் என்ன ? இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை விளக்கமான அருளால் எழுதப்பட்ட மொழி தான் தமிழ்மொழி என்பதாகும்.அதனால் தமிழுக்கு இறைமொழி என்னும் பெயர் வழங்கப்பட்டது.

இறைவன் உள்ளவரை.இறைவனால் படைக்கப்பட்ட உலகம் உள்ளவரை.உயிர்கள் உள்ளவரை இறைவனால் படைக்கப்பட்ட தமிழ்மொழி நிலைத்து நிற்கும்..தமிழை எவரும் வளர்க்க முடியாது.வாழ்த்ததான் முடியும்.பின்பற்றத்தான் முடியும்.

தமிழ் இயற்கை உண்மையதாய்.இயற்கை விளக்கமதாய்.இயற்கை இன்பமுமாய் என்றும் நிலைத்து ஓங்கி தானே வளர்ந்து கொண்டு இருக்கும் மொழியாகும்.

உலகம் எல்லாம் போற்ற ஒளி வடிவமாய் விளங்கும் மொழி தமிழ் மொழியாகும்...

எனவே உலகத்திற்கு எல்லாம் தந்தை மொழியாக விளங்கி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரே மொழி தமிழ்மொழி யாகும்...

வள்ளலார் எழுதிய திருஅருட்பா !

வள்ளலார் எழுதிய திருஅருட்பா என்னும் நூல். வள்ளலார் எழுதியது அல்ல ! அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் எழுதப்பட்டது என்பதை மக்கள் அறிந்து.புரிந்து.தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால் தான் அதற்கு திருஅருட்பா என்று பெயர் சூட்டப்பட்டது..

வள்ளலார் எந்த பள்ளியிலும் படிக்கவில்லை.எந்த ஆசிரியர் இடத்தும் படிப்பு.பாடம் கேட்கவில்லை கல்வி கற்கவில்லை..ஓதாமல் உணர்ந்தவர் வள்ளலார்.உணரத்தியவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ! வள்ளலாருக்கு ஆசிரியராய் இருந்து பயிற்றுவித்து ஆற்றியுள்ளார். 

வள்ளலார் பாடல் !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறிஉற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

என்னும் பாடல்வாயிலாக சிற்றம்பலக் கல்வி கற்றேன் என்கிறார்.அதுதான் செந்தமிழ் மொழி என்பதாகும்.

சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய் என்பார் வள்ளலார்...மேலும்.

ஓதும் இன்மொழியால் பாடவே பணித்தாய் என்று போற்றி புகழ்கின்றார்.. மேலும்..

ஓதி உணர்ந்தவர்கள் எல்லாம் எனைக்கேட்க.எனைத்தான்  ஓதாமல் உணர்த்திய என் மெய் உணர்வாம் பொருளே என்றும் போற்றுகின்றார்.

மேலும்.
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மேசிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மேஎன்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மேஎல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வமே.

எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ !

என்று சொல்லுவதின் நோக்கம் என்ன ?  தமிழ்மொழியின் உண்மையும் அதன் தன்மையும் உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்கிறார் வள்ளலார்.

தமிழையும்.சாகாக்கல்வியும் தெரிந்து கொள்ளாமல் மக்கள் அகம் கருத்து புறம் வெளுத்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அவர்களை திருத்தவே என்னை இறைவனால் வருவிக்க உற்றேன்  என்கிறார் வள்ளலார்...

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்கிறார்.. எனவே தான் நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் நாயகன் வார்த்தை என்கிறார் வள்ளலார்...

நான் உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தைநம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.!

என்கிறார்...நான் உரைப்பது எல்லாம் இறைவன் உரைப்பதால்  தான் உண்மை வெளிப்படுகின்றன
எனபதனை பாடலில் தெரியப்படுத்துகின்றார்.
உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!

என்னும் திருஅருட்பா பாடலின் வாயிலாக மனிதகுலம் தெரிந்து கொள்ள வேண்டும்...

தமிழ்மொழியின் உண்மையும் அதன் தன்மையும் தெரிந்து கொள்ளாமல் தமிழ்மொழியைப் படிப்பதால் எந்த நன்மையும்.பயனும்.லாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

வள்ளலார் எழுதிய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து தமிழ்மொழியை பயின்றால்.மற்றவர்களுக்கு பயிற்றுவித்தால்  மட்டுமே தமிழை உலகம் எங்கும் கொண்டு செல்ல முடியும்...

தமிழ் தான் சாகாக்கல்வி கற்றுத்தரும் சாகா மொழியாகும்.

உலகுக்கு எல்லாம் தமிழ் தந்தை மொழியாகும் .பிற மொழிகள் தான் தாய்மொழி என்பதாகும்.

தந்தை மொழியாகிய தமிழ்மொழிக் கற்றால் அருளும் கிடைக்கும் பொருளும் கிடைக்கும்...

பிறமொழிகளாகிய தாய் மொழி கற்றால் பொருள் மட்டும் தான் கிடைக்கும்.

எந்த மொழியை தேர்வு செய்து கற்க வேண்டும் என்பதை மனிதர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்னும் விரித்தால் பெருகும்...

தமிழைக் கற்போம்.அருளும் பொருளும் பெறுவோம். தமிழை உலகம் எல்லாம்  கொண்டு செல்வோம்.

சிறுகுறிப்பு !

இராமலிங்க வள்ளல் பெருமான் சென்னையில் இருந்தபோது அவரைச் சந்திக்க சங்கராச்சாரியார் (பெரியவாள்) விரும்பியதை அடுத்து இருவரும் சந்தித்தபோது சமஸ்கிருதம் "மாத்ரு பாஷை" அதாவது தாய் மொழி என்று சங்கராச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த வள்ளலார் அப்படி என்றால் தமிழ் "பித்ரு பாஷை" அதாவது முன்னோர்கள் மொழி என்று கூறியதுடன் தமிழின் பெருமை பற்றி சங்கராச்சாரியாருக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

வள்ளல் பெருமான் சங்கராச்சாரியாருக்குக் கொடுத்த அந்த விளக்கம் "உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை" என்னும் திங்களிதழில் 21-8-1897-ல் "தமிழ்-ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது" என்னும் தலைப்போடு முதன் முத்லாக அச்சாயிற்று. பின்னர் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சித்தாந்தம் - தொகுதி 2 பகுதி 7-1913 ஜுன் இதழில் "தமிழ் - இராமலிங்க சுவாமி யெழுதியது" என அச்சிடப் பெற்றது. பின்னர், திருவருட்பாப் பதிப்பிலும் சேர்க்கப்பட்டது.

அதில், வள்ளலார் தமிழ் பற்றி ஆய்வுக் குறிப்பை வெளியிடுகிறார்.

அதில்....

"தமிழ்" என்னும்
சொல்லுக்கிட்ட உரை

திருச்சிற்றம்பலம்

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை

அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.

இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை:

த் ஏழாவது மெய்;

ம் பத்தாவதாகும்;

ழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.

ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் - சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் - கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-

த் - அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.

ம் - இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.

இ - பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.

ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.

உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:-

மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.

இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம்.

திருச்சிற்றம்பலம்"

-இவ்வாறு வள்ளலார் தமிழ் மொழி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்கிருதத்தை தேவ பாஷை, கடவுள் பாஷை என்றெல்லாம் கதையளந்து கொண்டிருந்தவர்கள், கொண்டிருப்பவர்களுக்கு இதுவே பதில்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.

சனி, 17 பிப்ரவரி, 2018

எது சிறந்த நாள் !

எது சிறந்த  நாள் !

60 வயது.60 ஆம்  ஆண்டு   திருமண நாள் 80.வயது.100 வயது ஆரோக்கியமாக வாழ்ந்து  கொண்டாடுவது மகிழ்ச்சியாகவும் வழக்கமாகவும் இருந்து வந்த்து .

இப்போது ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள்.திருமண நாள் கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது.

என்ன காரணம் ?

ஒரு வருடம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதே பெரிய வாழ்க்கையாகவும்.ஆச்சரியமாகவும் . கடினமானதாகவும் கருத வேண்டி உள்ளது.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளைக் கழிப்பதே பெரிய சவாலாக. சுமையாக்க் கருதி வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது. அதனாலே.தங்களை அறியாமலே வருடம் வருடம் .பிறந்த நாள்.திருமணநாள் கொண்டாடுவது வழக்கமாகி விட்டது.

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் !

நாம் உட்கொள்ளும் உணவு தான் காரண காரிய மாக உள்ளன.

நாம் வாழும் வாழ்க்கையில் எவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும்.நம் உடம்பிற்குள் செலுத்துவது.உணவு மட்டுமே..உணவு இல்லை என்றால் நம் உடம்பில் உயிர் வாழ்க்கை இல்லை.என்பது எல்லோருக்கும் தெரியும்.

உடம்பிற்குள் இயங்கும் உயிர் நீட்டித்து இயங்க வேண்டுமானால்.நோய் இல்லாமல். மரணம் வராமல் வாழ வேண்டுமானால்.உணவின் தன்மையைப் பொருத்துத்தான் உயிர் இயக்கம் நடை பெற்றுக் கொண்டு உள்ளது.

எனவே தான் உணவே மருந்து.மருத்தே உணவு ! என்பதாகும்.

இயற்கை உணவை விடுத்து செயற்கை உணவை உட் கொள்வதால் வந்த வினைகள் தான்.தீராத நோய் .அச்சம்.பயம்.துன்பம் .மரணம் வருவதற்கு காரணமாக உள்ளது. இந்த உண்மையை மக்கள் எப்போது அறிந்து கொள்கிறார்களோ! அப்போது தான் ஆரோக்கிய மாக நீண்ட காலம் வாழ முடியும்.

இன்றைய நவீன விஞ்ஞான விவசாய  உலகம் உணவின் தயாரிப்பில் விஷக்கிருமிகளின் விஷத்தை கலந்து மனித உயிர்களை கொன்று கொண்டு உள்ளது. இன்றைய அரசியலும். ஆட்சியாளர்களும்.அறிவியலும் .
விஞ்ஞானமும்.அறிவாளிகளும் துன்பத்திற்கு துணையாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள்...

இந்த உலகில் உங்களை எவராலும் காப்பாற்ற முடியாது.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் மட்டுமே காப்பாற்ற முடியும்.ஏன் என்றால் எல்லாவற்றையும்   அவர்தான் படைத்தவர்.அவருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.

இந்த துர்பாக்கிய சூழலில் இருந்து மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில்  தள்ளப்பட்டு உள்ளான்..

அதற்கு ஒரே வழி வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை வழி காட்டும் இயற்கை உண்மை வழியாகும்..

செயற்கை உணவு உட்கொண்டு.நோய்வாய் பட்டு  வாழ்ந்து இறுதியில் மரணம் அடைந்து அழிந்து போவதை விட்டு விட்டு.

 இயற்கை  உணவு என்னும் அருளைப் பெற்று என்றும் அழியாத மரணம் இல்லாப் பெருவாழ்வில் இன்பமுடன் வாழ்ந்திடலாம் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார். ..

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞானபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

என்று ஆன்மநேய அன்புடன் அழைக்கின்றார். வள்ளலார். 

மேலும் செயற்கை உணவை உண்டு அழியாதீர் ! என்கிறார்.

 ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்

ஆரமு துண்டென்னோ டாடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி !

என்னும் பாடல் வரிகளில் தெளிவாக விளக்கம்  தந்து அழைக்கிறார்கள்.

நம் வாழ்க்கை  நம் கையில் தான் உள்ளது. முடிவு எடுங்கள் முயற்சி செய்யுங்கள்.நல்லதே நடக்கும்.

பிறந்த நாளும்.என்றும்  இறவாத நாளுமே(மரணம்அடையாதநாள் ) சிறந்த நாளாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !   

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

மனித வாழ்க்கை !

மனித வாழ்க்கை. !

மனித பிறப்பு உயர்ந்த பிறப்பு என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.

ஏன் மனிதன் பிறக்கிறான்.  வளர்கிறான்.படிக்கிறான்.சம்பாதிக்கிறான்.திருமணம் செய்து கொள்கிறான்.
குடும்பம் நடத்துகிறான்.குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்கிறான்.

அவர்களை வளர்க்கிறான்.அவர்களுக்கும் படிப்பு.பொருள்.திருமணம் குடும்பம் நடத்த கற்றுக் கொடுக்கிறான்.

பின் வயது முதிர்ந்து நோய்வாய்ப் பட்டு மாண்டு போகிறான்.

இதுவா ? மனிதனின் உயர்ந்த பிறப்பின் ரகசியம்...

இதற்காகவா மனித பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது .என்பதை ஒரு நாளாவது சிந்திக்கும் அறிவு தெளிவு மனிதனுக்கு தோன்றி உள்ளதா ? என்றால் இன்று வரையில் தோன்றவில்லை..

வள்ளலார் வந்து தான் மனித பிறப்பின் ரகசியத்தை வெளிப்படையாக சொல்லி உள்ளார். மரணம் வந்து மாண்டு போவதற்காக மனித பிறப்பு கொடுக்கப் படவில்லை..

மனிதனும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றிக் கொள்ள வேண்டிய தகுதி மனிதனுக்கு மட்டுமே உண்டு.
அவற்றைப் பெறுவதற்கே மனித பிறப்பு கொடுக்கப் பட்டதாகும்.

பொருளைத் தேடும் மனிதன். அருளைத் தேடவே மனிதப் பிறப்பு இறைவனால்  கொடுக்கப் பட்டுள்ளது..

இந்த மெய்ப்பொருள் உண்மையைச் சொல்ல வந்தவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள்.

வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவை முழுமையாக படித்து பார்த்து .அதில் உள்ள உண்மைகளை அறிந்து.தெரிந்து.புரிந்து.கொண்டு.வாழ்ந்து.மனித பிறப்பின் உண்மை ரகசியத்தை.தெரிந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
.
வள்ளலார் பாடல் !

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எலாம் பழுதே !

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே!

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே !

உலகயலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே !

விண்டதனால் என் இனி நீர் சமரச சுத்த சன்மார்க்க
மெய் நெறியைக் கடைப்பிடித்து !

மெய்ப் பொருளை நன்கு உணர்ந்தே !

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் !

இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

 அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

வள்ளலார் ஓர் உத்தம மனிதர் !

வள்ளலார் ஓர் உத்தம மனிதர்!!!

இந்த உலகில் மனிதனைத் தேடுகிறேன் கிடைக்க வில்லை என்கின்றார் சென்னையில் வாழ்ந்த ''தோப்பா சாமியார்'' என்னும் பெயர் உடைய அவதூத  துறவியார் ! .அவர் சென்னையில் நெல்லிக்காய் பண்டாரத் தெருவிற்கு அடுத்த தேரடித் தெருவில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து கொண்டு இருந்தார் .

இந்த உலகில் மனித குணம் உள்ளவன் எவரும் இல்லை என்பதால் ஆடை அணியாமல் நிர்வாணமாக வாழ்ந்து வருகின்றார் .

மனிதன் முன்னால் வாழ்ந்தால்  ஆடை வேண்டும் ,எல்லா மனிதர்களும் மனித உருவிலே வாழ்கின்ற மிருகங்கள் என்பதால் ,மனித  மிருகங்கள் வாழும் இடத்தில், தான் இருப்பதால் ஆடை அணிய தேவை இல்லை என்பதால் ஆடை அணியாமல் இருக்கின்றார் .

அந்தத் தெரு வழியாக போகிற ஒவ்வொருவரையும்  பார்த்து ,கழுதை போகிறது ,...மாடு போகிறது,...நாய் போகிறது,..நரி போகின்றது ..  பன்றி போகின்றது ,என்று மிருகங்களின் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே இருப்பார் .

மக்கள் அவரைப்  பைத்தியக் காரன் என நினைந்து கண்டும் காணாமல் சென்று  கொண்டே இருப்பார்கள் .

ஆனால்  அவன் பைத்தியக் காரன் இல்லை,மனிதனை தேடிக் கொண்டே இருக்கின்றான் .

வள்ளல்பெருமான் வருகை !

வள்ளலார் ஏழு கிணறு வீராசாமி தெருவில் உள்ள தன் வீட்டில் இருந்து  எப்பொழுதும் திருஒற்றியூருக்குக் கீழ் அண்டை மாடவீதி   வழியாகச் செல்லாது ,ஆங்குள்ள நெல்லிக் காய்ப் பண்டாரர் சந்து வழியாக செல்வது வழக்கமாக கொண்டு இருந்தார் .

ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாகத் தேரடித் தெரு வழியாகச் சென்று கொண்டு இருந்தார் ..அத்தெருவில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து இருந்த ''தோப்பா   சாமியார்'' .வள்ளல்பெருமான் வருவதைக் கண்டு ''இதோ ஓர் உத்தம மனிதன் வருகிறார் ''என்று உள்ளம் களிசிறக்க உரைத்தான் .உரைத்ததோடு அல்லாமல், அடுத்து தம் உடம்பினையும்,உறுப்புகளையும்  தனது கரங்களைக் கொண்டு மறைத்துக் கொண்டார் .

அதைக் கண்ட மக்கள் அங்கு கூட்டமாக கூடி விட்டார்கள்...அதைக் கேட்ட ,அதைக் கண்ட நம் வள்ளல்பெருமான் அவர் பக்கத்தில் சென்று தன்னுடைய மேலாடையைக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லி சில புத்திமதிகளை சொல்லி அன்றே அவ்விடத்தை விட்டு வெளியேறச் சொன்னார் ..

அந்த நிர்வாண சந்நியாசி வள்ளல்பெருமானை வணங்கி அவ்விடம் விட்டு அகன்று விட்டார் ..

அங்கு கூடி இருந்த அத்துணை மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர் .இது வரையில் அந்த சன்னியாசியை பைத்தியக் காரன் என நினைத்து இருந்தோம் ..அவன் மனிதனை தேடிக் கொண்டு இருந்து இருக்கின்றான் .வள்ளல்பெருமானைப் பார்த்ததும் இதோ ''ஒரு உத்தம மனிதன்'' வருகிறான் என்பதை கண்டு தனது கைகளால் தன் அவயங்களை மறைத்துக் கொண்டார்.

தோபாசுவாமிகள் வேலூர் வருகை:

சென்னையில் இருந்த சுவாமி அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னையை விட்டு வெளியேற முற்பட்டார் அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர், குதிரைவண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார் அதன் பிறகு சாமி வேறு எங்கும் செல்லவில்லை வேலூரிலேயே சுமார் 12 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்துகொண்டு வந்தார்.

சுவாமிகளின் ஒடுக்க நிலை:

இவ்வாறாக நமது தோபா சுவாமிகள் தன்னுடைய குருநாதரான திருஞானசம்பந்த பெருமான் அருளால் அநேக திருவிளையாடல்களைப் புரிந்தும். தம்மைச் சரணடைந்த சீடர்களுக்கு ஞானம் வழங்கும் ஒர் அற்புத துறவுச் சக்கரவர்த்தியாய் விளங்கினார்.
அருட்தந்தையாக வாழ்ந்த நமது தோபா சுவாமி அவர்கள் கி.பி.1850 ஆம் ஆண்டு சாதாரண வருடம் பங்குனி திங்கள் இருபத்தி ஏழாம் நாள் புதன்கிழமை பூர்பவட்சம் பிரதமை திதி இரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஒடுக்க நிலை நின்றார்.
வேலூர் மக்கள் இன்றும் அவரைத் தெய்வமாகக் கருதி அவர் சமாதியில் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அவர் சமாதி அடைந்த நாளில் குரு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் இந்த மடாலயத்தில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது.

தோபா சுவாமி சமாதி உள்ள இடம் :
*************************************
வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் சைதாப்பேட்டை மெயின்பஜாரில் உள்ள சாலையில் அவருடைய சமாதி உள்ளது. சித்தரின் சமாதி இப்போது ஒரு மடாலயமாக வளர்ந்துள்ளது.

வள்ளல்பெருமான் முற்றும் தெரிந்த  அருளாளர் என்பதை மக்கள் அன்று புரிந்து கொண்டார்கள். அன்றில் இருந்து வள்ளல்பெருமான்  புகழ் சென்னை மாநகரம் முழுவதும் பரவியது ....மக்கள் அவரைப்  பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள் .

சென்னையில் இருக்க பிடிக்காமல் வள்ளலார் சென்னையை விட்டு வெளியேறுகிறார் ..

வள்ளலார் பாடல் !

தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிலுகுறும் என்று உளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப் புறங்களிலே
நண்ணினேன் ஊர்ப் புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே திரிந்து உற்ற  இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்
எந்தை நீ அறிந்தது தானே !

என்ற பாடல் வாயிலாக சென்னையை விட்டு வெளியேறிய விபரத்தைத் தெரியப்படுத்து கின்றார் .

வள்ளல்பெருமான் உத்தம மனிதனாக வாழ்ந்து..பல ஆலயங்களுக்கு சென்று இறுதியில் கருங்குழிக்கு வந்தார்,அங்கு திருஅருட்பா  ஐந்து திருமுறைகளை எழுதி வெளியிட்டார்.

பின்பு வடலூர் வந்தார் .சத்திய தருமச்சாலையை  தோற்றுவித்தார் ,பின்பு மேட்டுக்குப்பம் சென்றார் இறைவன் அருளைப் பெற்றார் .பின்பு வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்,

பின்பு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''...''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' ,..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை''..என்று பெயர் மாற்றம் செய்தார்.பின்பு  மேட்டுக்குப்பம் சென்றார் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  ஆணைப்படி ''ஆறாம் திருமுறையை'' எழுதினார் ..   பின் இறைவன் பூரண அருள் பெற்று அருளாளராக வாழ்ந்து,..திரு அருட்பிரகாசர் என பெயர் பெற்று ,..சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று,சித்திவளாக திருமாளிகையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தார் .

நாமும் அவர் காட்டிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்  தனி'' நெறியைப்  பின்பற்றி உத்தம மனிதனாக வாழ்ந்து இறைவன் பூரண  அருள் பெற்று  வள்ளல்பெருமான் போல்  வாழ்வாங்கு வாழ்வோம்.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஆன்ம தேகம் பெறுவது எப்படி ?

ஆன்ம தேகம் பெறுவது எப்படி ?


ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா ஆவி வடிவமாகவும் ஒளி வடிவமாகவும் உள்ளது அதனால்.பூத உடம்பில் உள்ள புறக் கண்களுக்குத் தோன்றாது .

 நம் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங் கருணையால் ஆன்மாவை இந்த பூத உலகத்திற்கு அனுப்பு வைக்கிறார்.  இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வரும் போது ஆன்ம தேகம் என்னும் ஒளித் தேகத்தோடு தான் வந்தது .இந்த உலகத்தில் வந்த ஆன்மா ! ஆன்ம தேகத்தோடு வாழ முடியாது .

எனவே ஆன்மாவிற்க்கு வேறு ஒரு தேகமான பூத தேகம் கொடுக்க வேண்டும் என்பது இறைவன் ஆணை யாகும்.  தேகம் கொடுக்கும் பொறுப்பு மாயையிடம் இறைவனால்  வழங்கப் பட்டு உள்ளது .ஆன்ம தேகத்தின் மேல் பஞ்ச பூதங்களின் அணுக்களைக் கொண்டு .மனித தேகமான ஊன் உடம்பை மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது .உடம்பு இயங்க உயிர் அவசியம் ...உயிரை மையமாக வைத்துத் தான் உடம்பு இயங்க வேண்டும் ..உடம்பும் உயிரும் இயங்க அருள் ஒளி வேண்டும்.அந்த அருள் ஒளியை வழங்குகின்ற வேலை ஆன்மாவின் வேலை யாகும்..

ஆன்மா ..உயிர்...உடம்பு  முன்றும் சேர்ந்த வாழ்க்கைதான் மனித வாழ்க்கை !

இங்கே வாழ்வதற்கு இறைவனால் மூன்று சுதந்திரம் ஆன்மாவிற்கு  வழங்கப் பட்டு உள்ளன.

அவைதான்;---
தேக சுதந்தரம்.....போக சுதந்தரம் ....ஜீவ சுதந்தரம் என்பதாகும் !

இந்த மூன்று சுதந்தரத்தை வைத்துக் கொண்டு இந்த உலகத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அதற்கு இறைவன் தடை இல்லை .அதற்கு உண்டான நன்மை தீமைகள் அவரவர்களையே சார்ந்ததாகும். ..அந்த மூன்று சுதந்திரத்தையும் விரும்புவதுதான் ''மனம்'' என்னும் கருவியாகும் மனம் என்னும் கருவி மிகவும் வலிமை  உடையது ..அதனால் தான் மனம் போனபடி போக வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி உள்ளார்கள் .

மனதை அடக்கும் வழி தெரியாமல் .மாற்றும் வழி தெரியாமல் பல வழிகளில்  தியானம்.தவம்.யோகம்.வழிபாடு போன்ற தவறான வழிகளில் சென்று   அலைந்து கொண்டு உள்ளோம்.

இவற்றை எல்லாம் ஆன்மா மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டும்   ஆன்மாவில் பதிவு செய்து கொண்டும்  இருக்கும்.அந்தப் பதிவுகள்தான் மாயை என்னும் அஞ்ஞான  திரைகள் என்பதாகும்.இந்த பூலோக வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவித்து பின்பு வெறுத்து இந்த உலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்று ஆன்மா நினைக்கும் போது வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றது ..

ஆன்மா உடம்பையும் உயிரையும் விட்டு வெளியே  செல்ல வேண்டுமானால்
பழைய தேகமான  ஆன்ம தேகம் பெற வேண்டும் .ஆன்ம தேகம் பெறுவதற்கு மாயா திரைகள் என்னும் அறியாமையான அஞ்ஞான  திரைகள் விலக வேண்டும் .திரைகள் விலக வேண்டுமானால் ''அருள்'' வேண்டும்.அருள் வேண்டுமானால் இறைவன் தொடர்பு வேண்டும் . உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்க வழி கிடைக்கும்.அருள் சுதந்திரம் கிடைக்கும் .அருள் பெற்றால் தான் ஆன்ம சுதந்திரம் என்னும் திருவருள் சுதந்திரம்  கிடைக்கும் .

மேலும்  அருளைப் பெறுவதற்கு பல ஞானிகள்,பல அருளாளர்கள்  பலப்பல  வழிகளைக் காட்டி உள்ளார்கள் .எல்லாம் தவறான வழிகளாகவே இருக்கின்றன .

வள்ளலார் வந்து தான் நேர் வழியைக் காட்டி உள்ளார் ! அதற்கு சுத்த சன்மார்க்கம் என்றும் ..சாகாக் கல்வி என்றும்,,,.மரணம் இல்லாப் பெரு வாழ்வு என்றும் பெயர் வைத்து உள்ளார் .

வள்ளலார்  காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மட்டுமே.ஊன தேகத்தை மாற்றம் செய்து. ஆன்ம தேகமான ஒளி தேகத்தைப் பெற முடியும் ..ஆன்ம தேகம் கிடைக்காத வரை இந்த உலகத்தில் .இறந்து இறந்து..பிறந்து பிறந்து பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ..

வள்ளலார் சொல்லும் எளிய வழி ! எளிய விண்ணப்பம் !

சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் அவற்றை ஊன்றி கவனமாக பல முறை படிக்க வேண்டும் .

  4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்! என்று வள்ளலார் பதிவு செய்து உள்ளார் !
மேலே கண்டபடி நமக்கு கொடுத்த தேக சுதந்திரம் .போக சுதந்திரம் .ஜீவ சுதந்தரத்தை.திரும்ப மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்..அதற்கு சிறந்த வழிதான் ஜீவர்கள் இடத்தில் தயவும்,கருணையும் .கடவுள் இடத்தில் இடைவிடாது அன்பும் செலுத்த வேண்டும் ...அதற்குத்தான் சத் விசாரம் ...பரோபகாரம் என்று இரண்டு வழிகளைக் காட்டி உள்ளார்.
நாம் ஜீவ காருண்யம் செய்கிறோம் .உண்மையான விசாரம் செய்வதில்லை ,சமயம் மதங்கள் காட்டிய விசாரம் தான் செய்து கொண்டு உள்ளோம்.வள்ளலார் காட்டிய உண்மை  விசாரம் செய்வதில்லை .
வள்ளலார் சொல்லியுள்ள விசாரணையில் இருந்தால் .! 

இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டதுயாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

எல்லா வற்றையும் விட்டு விட்டேன் என்கின்றார் வள்ளலார் ..அவைதான் தேக சுதந்திரம்...போக சுதந்திரம்.....ஜீவ சுதந்திரம் ...என்பதாகும் .இந்த மூன்றிற்க்குள் தான் எல்லாம் அடங்கி உள்ளது .. இவற்றை விடாமல் இருக்கும் ..வரையில் அறிவு விளங்காது ..அருள் கிடைக்காது ..மரணத்தை வெல்ல முடியாது ..ஆன்ம தேகம் கிடைக்காது  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் இடம் தொடர்பு  கொள்ள முடியாது .பேரின்ப லாபம் கிடைக்காது .ஆன்மா எங்கும் செல்ல முடியாது 

வள்ளலார் தன் சுதந்தரத்தை திருப்பிக் கொடுத்துள்ள பாடல்! 

வள்ளலார்  தனக்கு கொடுத்த சுதந்தரத்தை திரும்ப கொடுத்து விட்டப் பிறகுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருள் சுதந்தரம் பெருகின்றார் .

சுதந்திரம் உனக்கே கொடுத்தனன் உனது 
தூய நல் உடம்பில் புகுந்தேம் 
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே 
இன்புறக் கலந்தனன் அழியாப் 
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ்ஜோதிப் 
பரிசு பெற்றிடுக பொற்சபையும் 
சிதந்தரும் சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பெற வேண்டுமானால்  
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் நீங்க வேண்டும்.அத் திரைகளை நீங்க வேண்டுமானால் வள்ளலார் காட்டிய சத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் ஆன்ம தேகம் பெறமுடியும்  வேறு தவறான வழியில் செல்லக் கூடாது .

இவைதான் வள்ளலார் சொல்லியுள்ள  ஆன்ம தேகம் பெரும் வழி .முயற்ச்சி செய்வோம் முடியாதது எதுவும் இல்லை !   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு 
கதிர்வேல் 
9865939896 ...

ஆன்ம தேகம் பெறுவது எங்கனம் ?

ஆன்ம தேகம் பெறுவது எப்படி ?


ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா ஆவி வடிவமாகவும் ஒளி வடிவமாகவும் உள்ளது அதனால்.பூத உடம்பில் உள்ள புறக் கண்களுக்குத் தோன்றாது .

 நம் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங் கருணையால் ஆன்மாவை இந்த பூத உலகத்திற்கு அனுப்பு வைக்கிறார்.  இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வரும் போது ஆன்ம தேகம் என்னும் ஒளித் தேகத்தோடு தான் வந்தது .இந்த உலகத்தில் வந்த ஆன்மா ! ஆன்ம தேகத்தோடு வாழ முடியாது .

எனவே ஆன்மாவிற்க்கு வேறு ஒரு தேகமான பூத தேகம் கொடுக்க வேண்டும் என்பது இறைவன் ஆணை யாகும்.  தேகம் கொடுக்கும் பொறுப்பு மாயையிடம் இறைவனால்  வழங்கப் பட்டு உள்ளது .ஆன்ம தேகத்தின் மேல் பஞ்ச பூதங்களின் அணுக்களைக் கொண்டு .மனித தேகமான ஊன் உடம்பை மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது .உடம்பு இயங்க உயிர் அவசியம் ...உயிரை மையமாக வைத்துத் தான் உடம்பு இயங்க வேண்டும் ..உடம்பும் உயிரும் இயங்க அருள் ஒளி வேண்டும்.அந்த அருள் ஒளியை வழங்குகின்ற வேலை ஆன்மாவின் வேலை யாகும்..

ஆன்மா ..உயிர்...உடம்பு  முன்றும் சேர்ந்த வாழ்க்கைதான் மனித வாழ்க்கை !

இங்கே வாழ்வதற்கு இறைவனால் மூன்று சுதந்திரம் ஆன்மாவிற்கு  வழங்கப் பட்டு உள்ளன.

அவைதான்;---
தேக சுதந்தரம்.....போக சுதந்தரம் ....ஜீவ சுதந்தரம் என்பதாகும் !

இந்த மூன்று சுதந்தரத்தை வைத்துக் கொண்டு இந்த உலகத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அதற்கு இறைவன் தடை இல்லை .அதற்கு உண்டான நன்மை தீமைகள் அவரவர்களையே சார்ந்ததாகும். ..அந்த மூன்று சுதந்திரத்தையும் விரும்புவதுதான் ''மனம்'' என்னும் கருவியாகும் மனம் என்னும் கருவி மிகவும் வலிமை  உடையது ..அதனால் தான் மனம் போனபடி போக வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி உள்ளார்கள் .

மனதை அடக்கும் வழி தெரியாமல் .மாற்றும் வழி தெரியாமல் பல வழிகளில்  தியானம்.தவம்.யோகம்.வழிபாடு போன்ற தவறான வழிகளில் சென்று   அலைந்து கொண்டு உள்ளோம்.

இவற்றை எல்லாம் ஆன்மா மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டும்   ஆன்மாவில் பதிவு செய்து கொண்டும்  இருக்கும்.அந்தப் பதிவுகள்தான் மாயை என்னும் அஞ்ஞான  திரைகள் என்பதாகும்.இந்த பூலோக வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவித்து பின்பு வெறுத்து இந்த உலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்று ஆன்மா நினைக்கும் போது வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றது ..

ஆன்மா உடம்பையும் உயிரையும் விட்டு வெளியே  செல்ல வேண்டுமானால்
பழைய தேகமான  ஆன்ம தேகம் பெற வேண்டும் .ஆன்ம தேகம் பெறுவதற்கு மாயா திரைகள் என்னும் அறியாமையான அஞ்ஞான  திரைகள் விலக வேண்டும் .திரைகள் விலக வேண்டுமானால் ''அருள்'' வேண்டும்.அருள் வேண்டுமானால் இறைவன் தொடர்பு வேண்டும் . உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்க வழி கிடைக்கும்.அருள் சுதந்திரம் கிடைக்கும் .அருள் பெற்றால் தான் ஆன்ம சுதந்திரம் என்னும் திருவருள் சுதந்திரம்  கிடைக்கும் .

மேலும்  அருளைப் பெறுவதற்கு பல ஞானிகள்,பல அருளாளர்கள்  பலப்பல  வழிகளைக் காட்டி உள்ளார்கள் .எல்லாம் தவறான வழிகளாகவே இருக்கின்றன .

வள்ளலார் வந்து தான் நேர் வழியைக் காட்டி உள்ளார் ! அதற்கு சுத்த சன்மார்க்கம் என்றும் ..சாகாக் கல்வி என்றும்,,,.மரணம் இல்லாப் பெரு வாழ்வு என்றும் பெயர் வைத்து உள்ளார் .

வள்ளலார்  காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மட்டுமே.ஊன தேகத்தை மாற்றம் செய்து. ஆன்ம தேகமான ஒளி தேகத்தைப் பெற முடியும் ..ஆன்ம தேகம் கிடைக்காத வரை இந்த உலகத்தில் .இறந்து இறந்து..பிறந்து பிறந்து பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ..

வள்ளலார் சொல்லும் எளிய வழி ! எளிய விண்ணப்பம் !

சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் அவற்றை ஊன்றி கவனமாக பல முறை படிக்க வேண்டும் .

  4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்! என்று வள்ளலார் பதிவு செய்து உள்ளார் !
மேலே கண்டபடி நமக்கு கொடுத்த தேக சுதந்திரம் .போக சுதந்திரம் .ஜீவ சுதந்தரத்தை.திரும்ப மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்..அதற்கு சிறந்த வழிதான் ஜீவர்கள் இடத்தில் தயவும்,கருணையும் .கடவுள் இடத்தில் இடைவிடாது அன்பும் செலுத்த வேண்டும் ...அதற்குத்தான் சத் விசாரம் ...பரோபகாரம் என்று இரண்டு வழிகளைக் காட்டி உள்ளார்.
நாம் ஜீவ காருண்யம் செய்கிறோம் .உண்மையான விசாரம் செய்வதில்லை ,சமயம் மதங்கள் காட்டிய விசாரம் தான் செய்து கொண்டு உள்ளோம்.வள்ளலார் காட்டிய உண்மை  விசாரம் செய்வதில்லை .
வள்ளலார் சொல்லியுள்ள விசாரணையில் இருந்தால் .! 

இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டதுயாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

எல்லா வற்றையும் விட்டு விட்டேன் என்கின்றார் வள்ளலார் ..அவைதான் தேக சுதந்திரம்...போக சுதந்திரம்.....ஜீவ சுதந்திரம் ...என்பதாகும் .இந்த மூன்றிற்க்குள் தான் எல்லாம் அடங்கி உள்ளது .. இவற்றை விடாமல் இருக்கும் ..வரையில் அறிவு விளங்காது ..அருள் கிடைக்காது ..மரணத்தை வெல்ல முடியாது ..ஆன்ம தேகம் கிடைக்காது  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் இடம் தொடர்பு  கொள்ள முடியாது .பேரின்ப லாபம் கிடைக்காது .ஆன்மா எங்கும் செல்ல முடியாது 

வள்ளலார் தன் சுதந்தரத்தை திருப்பிக் கொடுத்துள்ள பாடல்! 

வள்ளலார்  தனக்கு கொடுத்த சுதந்தரத்தை திரும்ப கொடுத்து விட்டப் பிறகுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருள் சுதந்தரம் பெருகின்றார் .

சுதந்திரம் உனக்கே கொடுத்தனன் உனது 
தூய நல் உடம்பில் புகுந்தேம் 
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே 
இன்புறக் கலந்தனன் அழியாப் 
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ்ஜோதிப் 
பரிசு பெற்றிடுக பொற்சபையும் 
சிதந்தரும் சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பெற வேண்டுமானால்  
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் நீங்க வேண்டும்.அத் திரைகளை நீங்க வேண்டுமானால் வள்ளலார் காட்டிய சத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் ஆன்ம தேகம் பெறமுடியும்  வேறு தவறான வழியில் செல்லக் கூடாது .

இவைதான் வள்ளலார் சொல்லியுள்ள  ஆன்ம தேகம் பெரும் வழி .முயற்ச்சி செய்வோம் முடியாதது எதுவும் இல்லை !   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு 
கதிர்வேல் 
9865939896 ...

புதன், 7 பிப்ரவரி, 2018

உயர்ந்த சாதி ! தாழ்ந்த சாதி !

உயர்ந்த சாதி ! தாழ்ந்த சாதி !

உயர்ந்த சாதிகார்ர்களுக்கு பசி எடுக்காது.தூக்கம் வராது.உணவு தேவை இல்லை .உழைப்பு தேவை இல்லை.மனைவி மக்கள் தேவை இல்லை். மலம் வராது.வீடு தேவை இல்லை .அவர்கள் உடம்பில் இரத்தம் வெள்ளையா இருக்குமா?.கடினமான வேலை எதுவும் செய்ய வேண்டியதில்லை.
மணி ஆட்டிக் கொண்டே இருந்தால் போதும் கடவுள் அவர்கள் முன்னே தோன்றி நிர்ப்பார்.
அவர்களுக்கு வேண்டியது எதுவாக இருந்தாலும்.கடவுளே கொடுப்பார். கடவுள் அவர்களுக்கு மட்டுமே சொந்தம்..கடவுளை விலை கொடுத்து வாங்கி விட்டார்களா ? என்ற வினா நெடுங்காலமாக மக்களிடம் புகைந்து கொண்டே உள்ளது.
தாழ்ந்த சாதி !
தாழ்ந்த சாதியில் பிறந்தவனுக்கு மட்டுமே.பசி எடுக்கும்.உணவு வேண்டும்.தூக்கம் வரும்.இடைவிடாது உழைக்கனும்.மனைவி மக்கள் வேண்டும்.ஊருக்கெல்லாம் உழைக்கனும்.மலம் வரும். மலம் வந்தால் வாரிபோடனும்.ஊருக்கு வெளியே வாழனும்.மிருகம் போல் உழைக்கனும்.ஓய்வு எடுக்கக் கூடாது.மேல் ஆடை அணியக் கூடாது.
உயர்ந்த சாதிக்காரன் வீட்டின் உள்ளே போக்க் கூடாது.தெருவிலே செருப்பு போட்டு நடக்க் கூடாது.
சாமி கும்படக்கூடாது.கோயிலுக்குள் போக்க் கூடாது.சாமியை நினைக்க் கூடாது.உயர்ந்த சாதிக்காரனை தொடக் கூடாது.
சாகும் வரையில் ஏழ்மையாகவே வாழ்ந்து சாகனும். பசி.பட்டினி்.வறுமை.அவனை விட்டுப் போக்க்கூடாது.தாழ்ந்த சாதி காரணுக்கு மட்டுமே இரத்தம் சிகப்பாகவே இருக்குமா?..
இன்னும் நிறைய அளவற்ற வேறுபாடுகளை வைத்து ஒதுக்கி வைத்து விட்டார்கள்..
உயர்ந்த குலம் என்றாலும் தாழ்ந்த குலம் என்றாலும் இறைவனின் இறுதி தீர்ப்பு ஒரே தீர்ப்பு மரணம் தான் என்பது அனைவருக்கும் தெரியும். மரணம் வந்து உடலை புதைத்தால் இரு குலத்து உடம்பிலும் புழுக்கள் புழுத்து புழுக் குலமாக மாறிவிடுகின்றன.
இவற்றை எல்லாம் பார்த்த வள்ளலார்.வேதனைப் படுகின்றார் ..
மனித குலத்தை ஒரே இறைவன் மாறுபாடு இல்லாமல் படைத்து இருந்தும் .உயர்ந்த சாதி என்றும்.தாழ்ந்த சாதி என்றும்.மக்களைப் பிரித்து வைத்து விட்டார்கள் என்று வேதனைப் படுகின்றார்.
வேதனையோடு கோபமாக பாடிய பாடல் !
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர் இது
வரையில்
உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் 
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே 
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.!
என்னும் பாடலில் வேதனையுடன் தெரிவிக்கின்றார். மேலும்
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே. !
சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற வேறுபாடு இல்லாத ஒரு பொது நெறியை.மனித இனத்தின் நல்வாழ்விற்காக   .வள்ளலார் தோற்றுவித்து உள்ளார்.அதற்குப் பெயர் தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்.
அதுதான் பொதுநெறி.தனிநெறி.திருநெறி .அறிவுநெறி.அருள்நெறி.உண்மை நெறி என்பதாகும்.உண்மைக் கடவுளை காணும்நெறியாகும்.நல்வழிகாட்டும் நெறியாகும்.
வள்ளலார் காட்டியுள்ள பொதுநெறியில் சேர்ந்து புனித குலம் பெற்று பயன் பெறுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வள்ளலாரைப் பற்றி ஒரு சிறிய செய்தி !

 வள்ளலார் பற்றிய இன்று ஒரு துளிச்செய்தி!

பரதேசி என்றால் பரம்பொருள் நாட்டம் கொண்டார் என்று பொருள். வள்ளற் பெருமான் ஆரம்ப காலத்தில், இராமலிங்க பரதேசி என்றுதான் அழைக்கப்பட்டார். இன்றும் பழைய ஆவணங்களிலும், வரலாற்றுக் கோப்புகளிலும் இந்த உண்மையை நாம் காணலாம்.

பரதேசி நிலையில், சமாதிவரை முயன்று, இறுதியாகத் தங்கள் முயற்சிகளை நிறுத்திக்கொண்டு,  முடிவில் சிவத்தோடு அந்தச் சமாதி நிலையில் ஐக்கியமானவர்களே நாயன்மார்கள். இதற்கு முக்தி நிலை என்று பெயர்.

இதுபோலவே, அனைத்துச் சமயமத மார்க்கத்தார்களும், அவரவர்களின் கர்த்தாக்களின் பேரில் பக்தி வயப்பட்டு முடிவிலே முக்தியில் ஐக்கியம் ஆகின்றார்கள்.

இந்த முக்தியாகிய சமாதியில் மூர்ச்சை ஆகாமல், அந்த முக்தி நிலையைத் துவக்கமாகக் கொண்டு, அதற்கும் மேலாகப் பல அருள் நிலைகளைக் கடந்து, அந்தப் பரமாகவே ஆகும் பாக்கியத்தை ஒரு மனிதனுக்கு இயற்கையுண்மை வடிவினர் இயல்பாகவே கருணை செய்துள்ளார்.

இதை, இந்து மதத்திலுள்ள ஆதிசங்கரரும் ஒத்துக்கொண்டு, அந்த அருள்நிலையை அத்வைத நிலை என்று அருளியுள்ளார்.

அந்த ஆதிசங்கரருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, திருமூலர் என்ற ஒரு தமிழ் அருளாளர்தான் இந்த இயற்கை உண்மையை மிகத்தெளிவாக அனுபவித்து விளக்கியவர்.

இவருடைய ஆன்மீக அறிவியல் உண்மைகளை இன்று உலகம் முழுவதும் ஆய்வு செய்துகொண்டும், ஒத்துக்கொண்டும் வருகிறது.

இவற்றுக்கெல்லாம் உண்மை உதாரணமாக விளங்குபவர்தான், நம்முடைய தமிழகத்தில் வருவிக்கவுற்ற வள்ளற்பெருமான். எல்லோரும், தன்னை மட்டுமே இறை அவதாரமாக, இறை மகவாக வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்த உலகர்கள் மத்தியில், 'எல்லாச் சீவர்களும் சிவமே', 'உயிருள் யாம் எம்முள் உயிர்' - என்று போதித்தும், சாதித்தும் வாழ்ந்து காட்டியவர்கள் வள்ளற்பெருமான்.

நாம் எல்லோருமே வள்ளலார் அடைந்த உன்னதமான அந்த மரணமில்லாப் பெருநிலையை அடையமுடியும் என்கின்ற இயற்கையுண்மையை அறிந்து கொண்டால், ஒருவரை ஒருவர் மதம்கொண்டும், கோபம்கொண்டும் சாடமாட்டோம்.

சமயம் என்பது வழிபாடு. மதம் என்பது ஒரு வழிபாட்டின் தத்துவம். இவை இரண்டும் ஆன்மீக பள்ளியின் அடிநிலைகளே. அவ்வளவுதான்! பள்ளிக்குப் போகாமல், நேரடியாக எம்.ஏ, டாக்டர் பட்டங்கள் வாங்குகின்றவர்களும் உண்டு.

ஒரு குழந்தை வளர்ச்சிக்கு அதன் தாயின் கருப்பை அவசியம்தான். ஆனால், அங்கு வருடக்கணக்கில் அக்குழந்தை வசிக்கக்கூடாது.  ஏன? இறந்து போகும்! அதுபோலத்தான், சமயங்களும், மதங்களும்! ஒரு குறிப்பிட்ட காலத்தில், அவற்றிலிருந்து வெளியில் வந்துவிட வேண்டும். வரமாட்டோம், அங்கேதான் இருப்போம் என்றால், இருங்கள்... இறப்பதும், வாழ்வதும் அவர்களின் முயற்சி பேதங்களே!

ஆகவேதான், வள்ளற்பெருமான் சமயங்களையும், மதங்களையும் சுத்த சன்மார்க்கத்திற்கு அன்னியம் என்று சொல்ல வில்லை. அனன்னியம் என்றார்கள். அதாவது படிநிலை அனுபவங்கள் என்றார்கள்.

அதே சமயத்தில், சமயமதங்களின் பொய்யான போதனைகளைத்தான் கண்டித்தார்கள்.  ஆன்மீக உண்மை விளக்கமும், அவற்றின் அனுபவமும் அடையாதவர்களுக்கு, சமயமதங்களிலுள்ள அனுபவங்களை, முதல் இரண்டு ஒழுக்கங்களாகவும், அதற்குமேல் மானுடத்தை வளர்க்கச் சீவ ஒழுக்கத்தையும், அதற்கும் மேல் முடிவாக, 'எல்லா உயிர்களையும் தம்முயிர்போலப் பாவிக்க' - ஆன்ம ஒழுக்கத்தையும் போதித்தார்கள். வாழ்ந்து காட்டியும், இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டும் சாதிக்கின்றார்கள்!

வார்த்தைகளைத் தடிமனாகப் பேசுகின்றவர்கள், சமயமத வாதிகளாக இருக்கலாம். ஆனால், ஆன்மீகப் பாலர் பள்ளியில் அவர்கள் நுழையக்கூடத் தகுதி அற்றவர்கள் ஆகின்றார்கள்.

உண்மைகளை ஆய்ந்துணர முயல்வோமாக!

நன்றி, வணக்கம்...

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

திருக்கதவும் திறத்தல்!


திருக்கதவும் திறத்தல்!

அருட்பெருஞ்ஜோதி !
                அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                 அருட்பெருஞ்ஜோதி !
வேதாகம சூதனைத்தும் உணர்ந்தேன்.
       *****************************
      ஆன்மநேய உறவுடைய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் .
     
          வள்ளல் பெருமான்ஆறாம் திருமுறை" திருக்கதவு திறத்தல் " என்ற தலைப்பில் பத்து பாடல்கள் இயற்றி , அருட்பெருஞ்ஜோதி திருவுருவைக் காட்டிடவேண்டியும்,
அருட்பேரொளி தனது பேரான்மாவில் கலந்து நிறைந்திடவேண்டியும், இரண்டற்ற ஜீவாத்மா பரமாத்மா அத்துவைத நிறைவை வேண்டியும் வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்பெருவெளி திருக்கதவை திறந்து அருள்பாலித்திடவேண்டுகின்றார்கள்.

    அதில் 8 வது பாடலின் பொருளைக் காண்போம்.

8. வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் 
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே 
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் 
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

     எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி என்தந்தையே, இவ்வுலகில்,
ஆன்மாக்கள் கடவுள் நிலை அறிந்து முத்தி சித்தியோடு சிவானுபவத்தைப் பெற்று சுத்தசன்மார்க்க சுகப்பெரும் நிலையாகிய அருட்ஜோதி இயற்கை என்னும் முத்தேக சித்திநிலையைப் பெறவேண்டும் என்பது அருள்நியதி,

   ஆனால் இதுவரை இவ்வுலகில் வகுக்கப்பட்ட வேதங்களாகிய
ரிக்,யசுர்,சாமம், அதர்வணம் என்ற நான்கு வேந்தங்களும் ,
ஆயுர்வேதம்,அருத்த வேதம், தனுர்வேதம்,காந்தர்வ வேதம் முதலிய நான்கு உபவேதங்களாலும் கூறப்பட்ட நெறிகளும்,

   ஆகம சாத்திரங்கள் வகுத்துக் காட்டிய அறநெறிகளும்,

    சிவபுராணம்: 10,விஷ்ணுபுராணம் :4,
சூரிய பூராணம்:2,கந்தபுராணம் :1,
அக்கினிப்புராணம் :1 ஆக பதினெண் புராணங்களும் சொல்லிக்காட்டிய நெறிகளும்,

  இராமயணம், மகாபாரதம் முதலிய இரண்டு இதிகாசங்களும் அவற்றில் விதித்த கற்பனை நெறிகளும் ஆகிய எல்லா நெறிகளும் ஓதுகின்ற (கூறுகின்ற) உபாயங்களையும் இரகசியங்களையும் உள்ளதை உள்ளபடியே  உணர்ந்திட  எனக்கு உணர்த்தி பேரருள்செய்தாய்,

மேலும் இஸ்லாம்.கிருத்தவம்.பவுத்தம்.ஜயனம் போன்ற மத நெறிகளும்.அவற்றில் உள்ள கற்பனைக் கடவுள்களையும்.. ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை நெறிமுறைகளையும்.

    நானும் அனைத்தையும் குற்றம் குறை இல்லாமல் அறிந்து உணர்ந்தேன்.

   ஆனால் அவற்றால் ஆன்மாக்கள் அடையவேண்டி ஆன்ம லட்சியத்தை.ஆன்ம இன்ப லாபத்தை.ஆன்ம இன்ப வாழ்வை அடையமுடியாது என்பதை தெள்ளத்தெளிவாகவும் எனக்கு உணர வைத்தாய் தந்தையே.

    ஆகலில் இதுவரை எனது காலம் வீணாகியதுபோதும் இனி ஒருகணமும் இவற்றில் கிடந்து வீண்பொழுதைக் கழிப்பதற்கு எள்ளளவுக்கூட எனக்கு எண்ணம் இல்லை தந்தையே.

      எனவே தாங்கள் தனிப்பெருங்கருணையுடன் எனது ஆன்மாவில் புணர்ந்து எனது ஆன்ம மலக் குற்றங்கள் அனைத்தும் தீர்ந்திடவே  எல்லாம் செயவல்ல ஞானசித்தியையும் கொடுத்து அருள்செய்வாய் எனது சித்தத்தில் இருந்து ஆளும் அருட்பெருஞ்ஜோதி திருநடத் தந்தையே.

     என்று வள்ளல்பெருமான் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் முதலியவைகள் அனைத்தும் கடவுள் உண்மையை வெளிப்பட தெரிவிக்கமுடியாமல் ,
ஆன்மலட்சியத்தை அடைவதற்கு போராடும் ஆன்மாக்களுக்கு வழிதுறைகாட்டி மரணத்தை வென்று அருள்வாழ்வில் வாழ்வதற்கு வழிக்காட்ட இயலாமல் , மேலும் மேலும் பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலிலேயே தள்ளி அலைக்கழிக்கின்றது .
என்பதைக்கூறி உலகவர் அனைவரையும் தனக்கு மரணத்தை தவர்த்துருளி அருள்வாழ்வைக்கொடுத்த சுத்தசன்மார்க்க பெருநெறிக்கு உலகவர் அனைவரையும் அழைத்து ஆன்மலட்சியத்தை அடைய நம்மையும் தாயமை உணர்வோடு அழைக்கின்றார்கள்.

இதுவரை இருந்த நமது வீணான காலமும் பிறவிகளும் வீணாகியது போதும் இனியும் பலப்பிறவிகள் வீணாகவேண்டாமே ;

இப்பிறவியிலேயே பெற வேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டியது மனித பிறப்பின் லட்சியமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வு!
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 3 பிப்ரவரி, 2018

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் !

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் !

மனம் எப்போதும் எதையாவது விரும்பிக் கொண்டே இருக்கும்.

மனம் அதிகமாக விரும்புவது மண்ணாசை.பொன்னாசை(பணம்).பெண்ணாசை என்ற மூன்றைத்தான் மனம் எப்போதும் அதிகமாக விரும்பும்..இந்த மூன்று ஆசைகளிலும் முக்கியமானது பெண் ஆசை.

மனம் எதை அதிகமாக நேசிக்கிறதோ அதற்கு அன்பு என்று பெயர்.

அன்பு அதிகமானால் காதல் அரும்புகின்றது.காதல் அதிகமானால் காம்ம் மலர்கின்றது.காம்ம் அதிகமானால் மோகம் விரிகிறது.மோகம் அதிகமானால் விந்து வெளியேறுகிறது.விந்து வெளியேறினால் மனம் இன்பத்தை அனுபவிக்கின்றது.இன்பம் முடிந்தபின் மயக்கம் வந்து விடுகிறது...அதாவது சோர்வு வந்துவிடுகின்றது..

இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக அமைந்து விடுகிறது.இதற்கு சிற்றின்பம் என்று பெயர்.இவை தொடர்ந்து இடைவிடாது நடைபெறுமா என்றால் நடைபெறாது.

வயது முதிர்ந்து.எலும்பும்.நரம்பும்.தசையும்.வீரியம் குறைந்து செயல்பட முடியாமல் போனால்.விந்துவின் சுரப்பும் குறைந்து இறுதியில் நோய்வாய்ப்பட்டு உடல் நடுநடுங்கி இறுதியில் மரணம் வந்து விடுகிறது. இது உலகியல் காதல்.
இதற்கு புறங்காதல் என்று பெயலர்.
மனம் புற ஜீவனை காதலிப்பதாகும்.

இது அசுத்த பூதகாரிய உணவினால் உண்டாகும் சுக்கிலம் (விந்து) என்று பெயர் .விந்து அதிகரித்தால் ஆண் பெண்ணைத் தேடுவான்.பெண் ஆணைத் தேடுவாள் .இதற்கு அன்பு காதல் என்று பெயர். இந்த காதலால் இறுதியில் மரணம் வருகின்றது...

மரணம் வராமல் காதலிக்க வள்ளலார் கற்றுத் தருகிறார்!.

மனம் வெளியே சென்று தனக்கு தெரிந்த பெண்ணை விரும்பி அன்பு செலுத்தி காதல் கொள்கிறது.இதற்கு புறக்காதல் என்று பெயர்.

வள்ளலார் புறத்தே செல்லும் மனத்தை அடக்கி அகத்தே உள்ள ஆன்மாவை காதலிக்க வைக்கிறார்.

மனத்தை அடக்கும் பாடல்!


வள்ளலாரின் காதல் !

மனம் என்பது பேய்பிடித்த குரங்கு போன்றது.அந்த மனம் புறத்தில் சென்று காதலிக்கும் பேய் குரங்கு போன்றது மனத்தை
அடக்கி அகத்தே உள்ள ஆன்மாவை காதலிக்க வைக்கிறார்.அதுதான் வள்ளலாரின் தனித்தனமையாகும்.

வள்ளலார் காதல் கொள்ளும் பாடல்!

காதல் கைம் மிகுந்த்து என்செய்வேன் என்னை நீ கண்டு கொள் கணவனே என்றாள்

ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை யீது என்றாள்

பேதை நான் பிறிதோர் புகலிலேன் செய்த பிழையெலாம் பொறுத்து அருள் என்றாள்

மா தயவுடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே !

என்னும் பாடலிலே...உலகியலில் உள்ளவர்கள் போல் எந்த ஆடவனையும் பெண்ணையும் என் மகள் விரும்பவில்லை.உன்னையே இடைவிடாமல் காதலிக்கின்றாள்.அவள் காதல் உண்மையான காதல் .உன்னைக் காதலிக்கவே வரம் பெற்று என் மகளை நான் பெற்று இருக்கின்றேன் ..நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி எதாவது அறியாமல் பிழை செய்து இருந்தால் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார்.

ஆன்மாவிடம்.தொடர்பு கொண்டு இடைவிடாது அன்பு.காதல்.காம்ம்.மோகம்.மயக்கம் கொள்கிறார் வள்ளலார். அப்படி இடைவிடாது தொடர் கொள்ளும் போது அங்கே ஆன்மாவில் இருந்து விந்து சுரக்கின்றது அதற்கு பரவிந்து என்று பெயர்.அதற்குத்தான் அருள் என்று பெயர்..அருளைப் பெறும் காதலே உயர்வான காதல். உண்மையான காதல்.

வள்ளலார் பாடல் !

அரங்காதல் செய்தேனை ஆண்டு கொண்டு இங்கே
அருட்பெருஞ்ஜோதியார் ஆடும் அழகர்

உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி
உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது

புறங்காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே
பொற் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால்

இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா !

என்ற பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதல் கொள்கிறார்.

உலக காதல்போல் விட்டுவிட்டு இறங்கி தொடர் கொள்ளும் புறம் காதல் அல்ல.விடாமல் செய்யும் காதல்..எனவே என்னை விட்டு இறங்காது தொடர்பு கொள்ள வேண்டும் என்று.என் கையை விடாமல் பிடித்துக் கொண்டு என்னை இன்பம் அடையச் செய்கின்றார். என்று தெளிவுப் படுத்துகின்றார்...

உறங்காமல் காதல் கொண்டவர் வள்ளலார் !  பாடல் !

கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு வொன்றோ நனவின்

எண்ணடங்காப் பெருஞ்ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு பகல் காணா இன்புறச் செய்கின்றார்

மண் உறங்கும் மலை உறங்கும் மலைகடலும் உறங்கும் மாநிலத்தே நமது

பெண் உறங்காள் எனத்தாயார் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந் தவம் செய்திலரே !

என்று அனுபவமாலை யில் அனுபவித்து பதிவு செய்கின்றார்... இன்னும் விரிக்கில் பெருகும்...சுருக்கமாக சொல்கின்றேன்.

எனவே நாம் யாரை காதலிக்க வேண்டும் .அழியும் உடம்பைக் காதலிக்காமல் என்றும் அழியாத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காதலித்தால் என்றும் அழியாத அருளை நம் உடம்பிலே நிரப்புவார்.

அருள் இன்பம் என்பது அளவிடமுடியாத பேரின்பம்.அந்த பேரின்ப வாழ்க்கை தான் பேரின்ப லாபத்தைக் கொடுக்கும்.பேரின்ப பெரும் லாபம் கிடைத்தால் மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்.. அதற்குப் பெயர்தான் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.

இந்த காதலைத்தான் வள்ளலார் அனுபவித்து பேரின்ப சித்தி பெரு லாபத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளார்.

நாமும் வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காதலித்து அருள் பெற்று வாழ்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை.....

இதுதான் வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க சாகாக்கல்வி என்பதாகும்.

சாகும் காதலை விட்டு சாகாத காதலை கற்று அனுபவிப்பதே மரணம் இல்லாப் பெரு வாழ்வாகும்....

வெளியே செல்லும் மனத்தை அடக்கி சிற்சபையின் கண் செலுத்தி இடைவிடாது தொடர்பு கொண்டு காதலிப்போம்..காதலிப்போமா ?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே! மனித தேகம் பெற்ற அனைவரையும் உங்களை காதலிக்க கற்றுக் கொடுக்க வேண்டுமாறு தாழ் வணங்கி வேண்டுகிறேன் விண்ணப்பிக்கின்றேன்...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.