புதன், 26 செப்டம்பர், 2018

வள்ளலார் சொல்லியதை கவனமாக படியுங்கள் !

வள்ளலார் சொல்லி உள்ளதை கவனமாக படியுங்கள் !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது.

ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.

நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை.

என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ*

என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.

"கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில்

தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

மேலும் வள்ளலார் சொல்லியது !

சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

 ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.

ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,

இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும்.

அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும்.

அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.

ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் **அற்ப அறிவாக** இருந்தது.

இதை விட வேறு விளக்கம் தேவையா ?

சன்மார்க்கிகளும் புரிந்து கொள்ளவில்லை..
வள்ளலாரைப் பின் பற்றும் சமய மத வாதிகளும் புரிந்து கொள்ளவில்லை...

வீண் வாதம் செய்து கொள்வதால் எந்த பயனும் இல்லை...

மேலும் வள்ளலார் சொல்லியது...

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை -

தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும்

என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

"**அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி**

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.

தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம்.

அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.

"சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

என்னும் உண்மைக்கடவுளின் உண்மை மகா மந்திரத்தை (கடவுளின் பெயர் ) உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார் இடம் சொல்லி வெளியிடச் சொல்லுகின்றார்.

உலக மக்கள் அனைவரும் உண்மைக் கடவுளை தெரிந்து கொள்ள வேண்டும்.தெரிவிக்க வேண்டும் என்பதை ஆண்டவரின் அருள் வாக்கை சிரமேற்க் கொண்டு ஆணையின் படி வெளியிடுகின்றார்

பாடல் !

 ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலைஅருள்ஒளி தருகின்றாம்

கோணை மாநிலத் தவரெலாம் நின்னையேகுறிக்கொள்வர் நினக்கேஎம்

ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்வாழ்கநீ மகனே

என்றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்இணைமலர்ப் பதம்போற்றி.!

என்னும் பாடலில் ஆணையிட்டு சொல்கிறார்..்

அந்த அம்பலத்து அரசர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .தன் அருள் ஆட்சியும் வள்ளலார் வசம் கொடுத்து வாழ்த்துகின்றார்..

வள்ளலார் பாடல் !

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கெங்கு இருந்து எப்படி எல்லாம் செயல் படுகின்றார் என்பதையும் விளக்கமாக தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெரியப்படுத்தி பறை சாற்றுகின்றார்

உண்மை உணர்ந்து அறிவால் அறிந்து தெரிந்து கொள்வதே.ஒவ்வொரு ஆன்மாவின்.கடமையாகும். அதுவே வெற்றியாகும்.அதுவேஆன்ம லாபம் பெறும் வழியாகும்.

அதுவே அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் துவாரமாகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மூன்று ஆசைகளை தவிர்க்க வேண்டும் !

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
     
🙏🔥 மூவாசைகளில் நிராசை வராத வரையில் சுத்தசன்மார்க்க லட்சியம் என்பது எட்டாக்கனியே 🍇🍇🍇
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை இவ்வெளியவன் தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🙏

சுத்தசன்மார்க்கத்தில் பயனிக்கின்ற சுத்தசன்மார்க்கத்திற்கு உரிமையுடைய சங்கத்தார்கள் ,

சுத்தசன்மார்க்க கொள்கையும், லட்சியமுமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய "பூரண சித்தி "வல்லபத்தைப் பெற்று முத்தேக சித்தி அனுபவத்துடன் "அருட்பெருஞ்ஜோதி இயற்கை "
என்னும் அருட்தேகத்தைப் பெற்றுக்கொண்டு மரணமிலாப் பெருவாழ்வில் வாழும் பேறு பெறுவது என்பது ............!

வெறுமனே புலைகொலை தவிர்த்து இருந்தும்,

பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யம் செய்து இருந்தும்,

திருவருட்பா முற்றும் பாராயணம் செய்து இருந்தும்,

புருவமத்தி தியானத்தில் தீபநாட்டம் வைத்து இருந்தும்,

இடைவிடாது மகாமந்திர உச்சாரணம் செய்து இருந்தும் ,

சன்மார்க்க சத்விசாரம் செய்து இருந்தும்,

இடைவிடாது வடலூர் மாதப்பூச ஜோதி தரிசனம் கண்டு இருந்தும்,

ஆகிய அனைத்து சன்மார்க்க நியதிகளிலும் இடைவிடாது நெறிப்படி வாழ்ந்து கொண்டு வந்தாலும்,

பெருமான் கூற்றுப்படி,
"பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து அம்பலப் பற்றே பற்றாய் பற்றுமின்"
என்ற அறிவுரையின்படி ,

மாயையினால் படைக்கப்பட்ட நிலையற்ற அற்பசுகத்தை தரக்கூடிய இவ்வுலக இன்பத்தை தரக்கூடிய மண் பெண் பொன் என்ற விடய இன்பங்களின்மீது  "நிராசைக்" கொண்டு,

என்றும் அழியாப் பேரின்பத்தைத் தரக்கூடிய அருட்பெரும்பதிமீது மட்டுமே பற்று வைத்து பசுவின் வரவை எதிர்பார்த்து இளங்கன்று பரிதவிப்பது போன்று ,

ஆகாரத்தில் இச்சையற்று,
அழுத கண்ணீர் மாறாத வண்ணம் ஆண்டவரின் அருளுக்காக ஏங்கி தவித்தாலொழிய சுத்தசன்மார்க்க லட்சியத்தை எக்காலும்
அடைதல் கூடாது 🔥🙏

மூவாசைகள் 🍑🍐🍌
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     இயற்கையிலேயே தயவை குணமாகக்கொண்ட நமது ஆன்மாவிற்கு ,

இயற்கையாகிய அனாதி ஆணவ மலமும் ,
இயற்கையில் செயற்கையாகிய மாயை மலமும்,
செயற்கையாகி கன்ம மலமும் ஆகிய மும்மலங்களும் சேர்க்கப்படுவதுடன்,

செயற்கை குணங்களாக
காமம்,
குரோதம்,
லோபம்,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் உட்பகைகளும் வந்தடைகின்றன .

இந்த செயற்கை குணங்களின் வாயிலாக போத அசைவின்கண் தோன்றும் விடய ஆசைகளாகிய ,
மண்,
பெண்,
பொன் என்ற மூவாசைகள் அசைக்கப்பட்டு ஆன்மாவை இறுகப் பற்றிக்கொள்கின்றன 🔥🙏

அதே போன்று  இவ்வுலகப் பொருள்களின்மீது பற்றற்று  நிராசையுடன் ,
போத அசைவின்றி தற்சுதந்திரம் இல்லாமல் திருவருட்சுதந்திரத்தில் நிற்கும் அனுபவத்தர்கள் ,

தேனுண்ட வண்டு அத்தேன் மயமாய் மயங்கி நிற்பதுபோன்று

போத ஒழிவின்கண்  சிவானந்ததேனில் மயங்கி அலையறியாக் கடல்போல ஆனந்த தெள்ளமுதைப் பருகி பேரின்பத்தை அனுபவிக்கின்றார்கள் 🍓

🙏🔥நனவு ,கனவு,சுழுத்தி🔥🙏
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
இப்பிரபஞ்சப் பொருள்களின் மீது நிராசையை உண்டாக்கும் பொருட்டு நமது பெருமான் சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடைய விரும்பும் சாத்தியர்களுக்கு

நனவிலும் மண்ணாசை,
கனவிலும் பெண்ணாசை,
சுழுத்தியிலும் பொன்னாசை முதலிய மூன்று ஆசைகளும் கூடாது என்று கூறுகின்றார்கள் 🔥🙏

நனவு (ல) சாக்கிரம்🍑
       நனவு என்பது நாம் விழித்திருக்கும்போது ஜாக்கிரதையுடன் இருக்கும் விழிப்பு நிலையாகும்.
இது நமது உள்ளம் பித்த உஷ்ணத்தோடு கூடி லலாடம் மற்றும் ஆக்ஞா என்று சொல்லக்கூடிய புருவமத்தியில் இருந்து செயல்படுவதாகும்.

இந்த நிலையில் நமது தத்துவங்கள் 96 ல் ,
ஞானேந்திரியங்கள் 5ம்,
அதனால் அடையக்கூடிய விஷயங்கள் 5 ம் அதாவது,
கண்,
காது,
மூக்கு
நாக்கு,
மெய் என்ற ஞானேந்திரியங்கள் 5ம்,

 அதனால் பெறக்கூடிய உணர்வுகளுமாகிய பார்த்தல்,
கேட்டல்,
நுகர்தல்,
ருசித்தல்,
பரிசித்தல் என்னும் ஞானேந்திரிய உணர்வுகள் 5ம்
மற்றும்,

கன்மேந்திரியங்கள் 5ம்
அதனால் செய்யப்படும் தொழில்கள் 5ம் அதாவது
வாக்கு,
கைகள்,
கால்கள்,
குதம் (மலவாய் (அ)கருவாய்),
குய்யம்(ஜலவாய்(அ)
எருவாய்) என்ற கன்மேந்திரியங்கள் 5ம்

அதன் செயல்களாகிய பேசுதல்,
பாடுதல்,
உண்ணுதல், கொடுத்தல் ,
எடுத்தல்,
நடத்தல்,
ஓடுதல்,
மலம் கழித்தல்,
ஜலம் கழித்தல் குழந்தை உற்பத்தி ஆகிய தொழில்களை செய்கின்ற கன்மேந்திரிய
செய்கல் 5ம் ,
மற்றும்,

பிராணன் முதலாகிய முக்கிய வாயுக்கள் 10ம்,

அந்தக்கரணங்களாகிய மனம்,
புத்தி,
சித்தம்,
அகங்காரம்
மற்றும் உள்ளத்தை சேர்த்து 5ம்

ஆக 35 தத்துவங்களும் நனவு நிலையில் வேலை செய்கின்றனவாகும்🔥🙏

கனவு(அ)சொப்பனம்🍅
     இது நாம் கனவு காணும்போது இருக்கும் நிலையைக் குறிக்கின்றது.
   
    கனவு என்பது நமது உள்ளம் வாதநாடியோடு கூடிக் கண்ட ஸ்தானத்தில் நிற்கும்போது செயல்படுவதாகும்.
   
    இந்த நிலையில் மேற்கூறிய ஞானேந்திரியம் 5 ம்,
கன்மேந்திரியம் 5 ம், தவிர மற்ற 25 தத்துவங்களும் வேலை செய்கின்றன🔥🙏

சுழுத்தி(அ)உறக்கம் 🍅
      இது நனவு கனவு அற்று உறங்கும்போது உள்ள நிலையைக் குறிக்கின்றது .
   
சுழுத்தி என்பது நமது உள்ளம் சிலேத்தும நாடியோடு கூடி மார்பு ஸ்தானத்தில் இருந்து செயல்படுவதாகும் .
     
இந்த நிலையில் ஆன்மா எந்தவித தொழில்களும் இல்லமால் தன்னை மறந்து சுகமாய் இருந்து நித்திரை செய்தாலும் அஞ்ஞான நிலையில் இருக்கின்றது .
இதற்கு "கேவல நிலை" என்று பெயர்;
இந்த நிலையில் மனம் சித்தம் மற்றும் பிராணன் தத்துவங்கள் மட்டும் வேலை செய்கின்றன🔥🙏

🙏🏘நனவினும் மண்ணாசை 🏘🙏
🏠🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕
       அனைவரும் ஆசைப்படுதல் வேண்டும் ,
ஆசைப்படுவதற்குதான் பிறவி ,
முற்பிறவியில் ஆசைப்பட்டதனால்தான் பிறவியே கிடைத்தது ,

பிறவியற்று இருக்க வேண்டும் என்றால் ஆசையற்று இருத்தல் வேண்டும்.

மானுடப் பிறவியைப் பெற்ற ஒரு ஆன்மா ஒரு பொருளின்மீது பற்று வைத்தால் அது அவா (அ) ஆசை,

அப்பொருளையே நினைத்துக்கொண்டு இருந்தால் அது காமம் .

அப்பொருளை எப்படியாவது அடைந்தே ஆகவேண்டும் என நினைத்தல் அது மோகம்;

சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் சாத்தியக்ள் எந்த ஒரு பொருளினிடத்திலும் மோகம் முதலிய குணங்கள் இன்றி அவா மயமாய் மட்டும் நிற்றல் வேண்டும்.

பரலோக வாழ்வாகிய சுத்தசன்மார்க்க சத்திய சாத்திய வாழ்வு பெற விரும்புபவர்கள் நிலையற்ற அற்ப சிற்சுகத்தைக் கொடுக்கக்கூடிய இப்பிரபஞ்ச பொருள்களின் மீது எத்துணையும் பற்றற்று நிராசை மயமாய் இருந்து ,

என்றும் நிலையான பேரின்பத்தை அளித்து நம்மை எக்காலத்தும் அழியாநிலையில் வைத்து ,அருள்வாழ்வை அளிக்கக்கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து மாறாத அன்பு வைத்து ,

எவ்விதத்தாவது  ஆண்டவரது தயவாகிய அருளைப் பெற்றிடவும் ,
ஆண்டவரை அடைந்திடவும் பேராவல்கொண்டு இருத்தல் வேண்டும்🔥

அந்த வகையில் சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் பக்குவிகள் விடய ஆசைகளில்  முதலாவதான மண்ணாசை நனவில்கூட இருத்தல்கூடாது என்று பெருமான் கூறுகின்றார்கள் .
எப்படி என்றால் ,

ஆறறிவு தேகம் கொடுத்து இப்புவியில் வாழப்பிறந்த ஒரு ஜீவருக்கு ,

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நூற்பொருளின்படி
ஒருவர் இல்லறத்தை நடத்துவதற்கு ஒரு அகமாகிய இல்லம் அவசியம் வேண்டும் என்றும் ,

அறவழியில் உழைத்து அதனால் பொருளை ஈட்டி  ,அதில் வரும் இன்பத்தைக் கொண்டு வாழ்வு நடத்த நன்செய் புன்செய் நிலம் தேவை என்றும் தனது வாழ்வியல் ஆதாரத் தேவைக்காக மட்டுமே ஆசைக்கொண்டு

" போதும்" என்ற மனத்தோடு தங்களது குடும்பத்தை அறவழியில் நடத்தி வரவும்,
நேர்மையான உழைப்பில் தமது தேவைக்கு மேல் வருகின்ற வருமானத்தில்

முன்வினையாலும் அஜாக்கிரதையினாலும் தற்சுதந்திரமில்லாமல் அருள்நியதியின் தணடனைப்படி எந்த வகையிலும் ஆதாரமற்று வறுமையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதரத்தை கொடுத்து உதவியும் வாழ்தல் வேண்டும் .

அப்படி இல்லாமல் காமம்,
குரோதம்,
லோபம் ,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் செயற்கை குணங்களின் வயப்பட்டு,

மண்ணாசைப்
பெருகி பலவீடுகள் மனைகள் நிலங்கள் என்று பேராசையுடன் வாங்கி சேர்த்துவைத்து ,
தன்னைச் சார்ந்து உள்ளவர்களுக்கும்,
தன்னிடம் யாசிப்பவர்களுக்கும்,

ஆதாரமற்ற வறியவர்களுக்கும் கொடுக்கும் குணம் ஏதும் இல்லாமல் லோபியாய் வாழும்போது ,
தான் சேர்த்து வைத்த பொருளினால் தனக்கே முடிவில் கேடு உண்டாகும் என்பதையும்
அறியும் அறிவு விளக்கமில்லாமல்,

நமது பிள்ளைகளையும்
எதிர்காலத்தில் உழைத்து வாழ்ந்து அதில் பொருள் ஈட்டவேண்டும் என்ற நிலையில் வைக்காமல்,

தான் சேர்த்து வைத்த பொருளைக்கொண்டு ஊதாரிதனமாக சுற்றித்திரியச் செய்து ,
சுகபோகத்தை அனுபவிக்கச்செய்து வாழ்வியல் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை பட்டு தெரியவிடாமலும்,

அதனால் பெறக்கூடிய அனுபவங்களையும் பெறவிடாமல் நாமே அவர்களுக்கு காலம் சொல்லிக்கொடுக்கும் அனுபவப் பாடத்தை கற்க விடாமல் கெடுத்து விடுகின்றோம் .

ஒவ்வொருவரு ஆன்மாவும் உழைத்து வாழவேண்டும் என்று கருதி தனது பிள்ளைகளுக்கு உழைப்பின் அருமையை தெரியவைத்து அவர்கள் ஈட்டும் பொருளில் அவர்களை வாழவைக்கவேண்டும் ,

குடும்பத்தார் அனைவருக்கும் சேர்த்து  தலைமுறைக்கும் நாம்பொருளை தேடிவைத்துவிட்டு பிள்ளைகள்  வீணாகுவதற்கு நாமே காரணமாய் இருத்தல் கூடாது.
இது சாதாதன இல்லறத்தார்கள் அறிவது.

அதுவே சுத்தசன்மார்க்க லட்ஷியம் உள்ள பக்குவ ஜீவர்கள்,

பொருளிலே இவ்வுலகம் இருப்பதை உணர்ந்தும் ,
அருளுலகம் அடைவதற்கு இப்பொருளுலகப் பற்று கூடாது என்பதையும் உணர்ந்து ,

இவ்வுலகப் பொருள்களில் நிராசைக்கொண்டு, மண்ணாசையை  எந்தச் சூழலிலும் மனத்தினால் கூட நினைத்திடாமல்

இப்பிரபஞ்ச பொருள்கள் எல்லாம் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இறைவன் கொடுத்த வாழ்வாதரப் பொருள்கள் என்று உணர்ந்தும் ,

எல்லாப் பொருள்களும் ஆண்டவருடைய உடைமைகள் என்றும் அவர் ஒருவருக்கே உரிமையுடையது என்றும்  கருதி,

இவ்வுலகில் நம்முடைய பொருள்கள் என்று  ஒரு துரும்புகூட  இல்லை என்பதை நன்றாக உணர்ந்தும் ,

இன்று எது நம்முடையதுவோ ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,

மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது  என்ற உலகியல் உண்மையை அறிந்தும்,

எந்த வகையிலும் "பொருளால் இருளுரும்" என்ற உண்மையை உணர்ந்து

மூவாசைகளில் முதல் ஆசையாகிய
மண்ணாசை என்கின்ற "மானிடப் பேயின் " நினைப்பே இல்லாமல் வாழ்ந்திடல் வேண்டும் 🔥🙏.

பதிவு விளக்கம் பெறவேண்டி நீண்டதாய் இருப்பதனால் இதனுடைய தொடக்கமாகிய  பெண்ணாசை மற்றும் பொன்னாசையைப் பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் காண்போம்.
தயவான நன்றிகள் 🔥🙏
....வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க 🔥🙏
....பெருமான் துணையில் 🔥🙏
....வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ் ;

சனி, 22 செப்டம்பர், 2018

அருட்பெருஞ்ஜோதி செய்தி !

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

       🙏🔥ஆன்மநேய சுத்த சன்மார்க்க சகோதர சகோதரிகளே உங்களின்  கவணத்திற்கு தயவுடன் ஒரு சிறு விண்ணப்பம் 🔥🙏
🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺
      எந்த ஒரு பதார்த்தத்தையும் உண்டு அனுபவிக்காமல், பார்த்தவுடன் அதன் சுவையை சொல்ல இயலுமா ?

அப்படி உண்டு அனுபவிக்காமல் அதன் சுவையை சொன்னால் அது வெறும் கற்பனை கணிப்பாகத்தான் இருக்குமே தவிர உண்மையை அடுத்தவர்களுக்கு விளக்கி சொல்ல முடியாததாகத்தானே இருக்கும்  🌺

அனுபவித்து அறிந்துகொள்ள வேண்டிய ஒருபொருளை அனுபிவிக்காமலேயே பேசி பேசி விவாதம் செய்து வீண்போவதைக் காட்டிலும் ;

அந்தப் பொருளை அனுபவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால் என்ன ?

நமது பெருமான் இப்புவியில் வருவிக்கவுற்றதன் நோக்கம் 🌺
     சாதி மதம் சமயம் என்ற பெயரால் ,
அனைவருக்கும் பொதுவான ஒரே கடவுளை,
கூறுபோட்டு அவரவருக்கு ஏற்றவாறு பெயரை வைத்து ஒற்றுமை இன்றி  சிதைந்து கிடக்கும் மானிடப்பிறவிகளை எல்லாம் ,

சுத்தசன்மார்க்கம் என்ற பெயரால் ஒன்றுபடுத்தி ,
அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே கடவுளை அனைவரும் ஒருமையுடன் வணங்கி வழிபட்டு அவரவர்களின் வாழ்வும் நிலைக்க  சிற்றம்பலக் கல்வியாம் சாகாக் கல்வி கற்று ,
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்ற பெருங்கருணை நோக்கத்தில், இவ்வுலகிற்கு திருவருளால் வருவிக்கவுற்றார்கள் அருளைப் பெற்றார்கள் 💐

அப்படி வந்த நமது பெருமான் தாம் வருவிக்கவுற்ற நோக்கத்தையும்,
அதன்படி தாம் அடைந்த அருள் அனுபவத்தையும் இறையனுபவத்தையும்  இவ்வுலகவர்களுக்கு விளக்கி வெளிப்படக் கூறியது மட்டும் இல்லாமல் ,

அதை அடைவதற்கான வழிதுறையையும் நமக்கு தெளிவாக சொல்லி வைத்து விட்டார்கள் 🌺

அந்த வகையில் நாம் பெருமான் கூறிய சுத்தசன்மார்க்க சுகப் பெரும்நிலையாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை அனுபவ நிலையை பெறவேண்டியதற்கான  முயற்சியை அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றாகத்தான் நாம் கடந்து வரவேண்டும்  .

ஒரு ஜாமநேரம்🔥🙏
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
பெருமான் நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு ஜாமநேரம் போதும் என்கின்றார்கள் அதாவது
 மூன்று மணிநேரம் .

இதில் நாம் கவணிக்க வேண்டியது
அங்கு சொல்லபட்ட வார்த்தைகளைத்தான் .
அதன்படி தற்போது, நாம் இருக்கும் தரத்திற்கும் நமது அறிவின் பக்குவ நிலைக்கும் இது சாத்தியமாகுமா ?
என்று சற்று சிந்தித்து அதைப்பற்றிய தயவான விவாதம் செய்திடல் வேண்டும் .

அப்படி என்னதான் பெருமான் கூறியிருக்கின்றார்கள் என்றால் ;
     
    அருமை ஆன்மநேய  சகோதரர்களே ,
நமது ஆன்மாவை தெரியவிடாமல் மறைத்திருக்கும் திரைகளை அகற்ற வேண்டும் என்றால் அது விசாரம் என்ற "அதிஉஷ்ணத்தால் "மட்டுமே நீக்கமுடியும் என்பதும்.

அந்த உஷ்ணம் எப்படிப்பட்டது என்று
தெரிய வேண்டும் என்றால் ,
அது ஒரு யோகியினுடைய அனுபவத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்பதுவாம்.

அப்படிபட்ட உஷ்ணத்தை மனுஷ தரத்தில் இருந்து உண்டுசெய்வதற்கு தெரியாது என்பதுவாம் .

ஒரு யோகி காடு மலை குகை முதலியவற்றிற்கு சென்று நூறு வருடம் ஆயிரம் வருடம் தவம் செய்து
உண்டாக்கிக் கொள்ளும் ,
இந்த உஷ்ணத்தைக்காட்டிலும் ,
கோடி பத்துக்கோடி பங்கு அதிகமாக உஷ்ணத்தை நாம் உண்டுபண்ணிக்கலாம் ;
எப்படி என்னில் ,

ஒரு ஜாம நேரம் மனத்தில் "இக விசாரம் இன்றி பர விசாரிப்புடன்" ஆன்ம நெகிழ்ச்சியோடு" தெய்வத்தை சிந்தித்துக்கொண்டாவது  அல்லது ஸ்தோத்திரம் செய்துகொண்டாவது இருந்தால்,
நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம் .
என்று பெருமான் கூறுகின்றார்கள் 🌺

இதில் கூறப்பட்ட நேரம் என்னவோ வெறும் மூன்று மணிநேரம்தான் .
ஆனால் அதில் சொல்லப்பட்ட
நியதிகள்தான் இமயத்தை ஒத்ததாக
எட்டாத உயரத்தில் உள்ளது.

ஆம் சகோதரர்களே!
   மனத்தில் இகவிசாரிப்பு இன்றி பரவிசாரிப்புடன் ஒரு ஐந்து நிமிடம் நம்மால் ஒரு இடத்தில் உட்கார இயலுமா ?

இக விசாரிப்பு என்பது என்ன ?
இகலோக வாழ்வில் நம்மை சார்ந்துள்ள விஷயங்களைப் பற்றிய விசாரிப்புகளே ஆகும்.

மனம் வேறு எந்த விஷயங்களையும் நினைக்காமல் ஆண்டவர் ஒருவரையே நினைத்து அவரது அருளையே வேண்டி ,
ஆன்ம நெகிழ்வோடு அழுத கண்ணீர் ஆறாய் பெருகி உடம்பெல்லாம் நனைந்து ஓடவும் ,

ஆகாரம் என்ற நினைப்பே இல்லாத வண்ணம் இருந்து ஆண்டவரை சிந்தித்தோ அல்லது ஸ்தோத்திரம் செய்துகொண்டோ இருந்தால் பெருமான் கூறுகின்றபடி பெற்றுக்கொள்வது சாத்தியம்தான் 🌺

ஆனால் நம்முடைய பக்குவம் தற்போது எந்தவண்ணம் உள்ளது ?

இவ்வுலக விடய ஆசைகளில் நிராசையுற்று ,
சதா சர்வகாலமும் ஆண்டவரை நினைத்து அழுது புலம்புகின்றோமா ?

நமது மனம் வேறு எந்த விஷத்தையும் பற்றாமல் ஆண்டவரையே பற்றிக்கொண்டு சுற்றி வருகின்றதா ?

இல்லையே !
நாம் இன்னும் குடும்ப பந்தத்திலும் , இவ்வுலக பந்தத்திலும் மூழ்கி கிடக்கின்றோமே,
அந்தப் பற்றையே இன்னும் விடமுடியவில்லையே !

நமக்கு அடுத்தடுத்து  நடப்பதெல்லாம் இறைவன் செயலாலேயே நடக்கும், அவரே நமது பசியறிந்து உணவளிப்பார்,
உணவு கிடைத்தால் உண்போம் ,
இல்லை என்றால் ஆண்டவரை நினைத்துக்கொண்டே பசியோடு உறங்குவோம் என்ற தற்சுதந்திரம் இன்றி,
நம்மிடம் உள்ள பணத்தை அடுத்த வேலைக்கு தேவை என்று வைத்துக்கொள்ளாமல் கேணியிலும் குளத்திலும் கிணற்றிலும் பணத்தாசை இல்லாமல் வீசிவிட்டோமா ?

இல்லையே !
இன்னும் அடுத்தவேலை உணவுக்காகத்தானே ஊர்ஊராக வேலையைத் தேடி பணத்தக்காக பதறி ஓடுகின்றோம் ,
இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம் .

ஓய்ந்து ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடினாலே மனம் ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எண்ணங்களை அசைபோடுகின்றதே 🌺

அவ்வளவு ஏன் ! சன்மார்க்க அருமை சகோதர சகோதரிகள் சுத்தசன்மார்க்க வழிபாட்டிலும்,
சன்மார்க்க நிகழ்ச்சிகளிலும் அருட்பெருஞ்ஜோதி அகவலை படிப்பதை பழக்கமாகவும், வழக்கமாகவும் படித்து வருகின்றோம் என்பது அனைவரும் அறிந்தது;

சிலர் நாள் தவறாமல் அகவலை படிக்கின்றார்கள்.

பலர் அகவலை பார்க்காமலேயே 1596 அடிகளையும் படிக்கின்றார்கள் .

ஆனால் அகவல் படிக்கின்ற அந்த ஒன்றரை மணிநேரம் நமது மனம் வேறு எதையும் நாடாமல் ,
வேறு எதையும் நினைக்காமல்  ,
வேறு எதையும் தொடாமல்
அகவலின் உட்கருத்தை மட்டுமே உன்னிநின்று ஆண்டவரையே நினைத்துக்கொண்டு படித்து முடிக்க
மனம் ஒத்துழைக்கின்றதா?

அப்படி படித்துவிட்டாலே மனம் நமது பக்குவத்திற்கு வரக்கூடிய தன்மையில் இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாமே 🌺

நல்லது ;
இங்கு இவ்வெளியேன் சொல்ல வருவது என்னவென்றால்,
சுத்தசன்மார்க்கத்தில் பெருமான் , நாம் அடையவேண்டிய லஷியமாக கூறிய கருத்தை எல்லாம்  அறிந்துகொண்டு,

அதற்கு என்னென்ன உபாயமாக கூறினார்களோ அவற்றை எல்லாம்
தெரிந்து கொண்டு ,
ஒவ்வொன்றையும் வரிசைப்படி கடந்து வந்து , ஒவ்வொரு படியிலும் கிடைக்கும் அனுபவங்களே நமக்கு அடுத்தடுத்த நிலைக்கு செல்வதற்குரிய அறிவைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து , 

தற்போது நமது பக்குவத்திற்கு தக்கவாறு விசாரம் செய்வோம் ,
அதைப்பற்றி மட்டுமே விசாரிப்போம் என்பதுதான்🙏

அந்த விசாரம்கூட ,
நமது பக்குவத்திற்கும் தரத்திற்கும் ஒத்தவர்களாக உள்ளவர்களுடன் விசாரனை செய்வோம் .

நம்மைவிட மிகவும் மேலான தரத்தவர்களுடனும் விசாரம் செய்தல் கூடாது,
அல்லது நம்மைவிட தாழந்த தரத்தில் இருப்பர்களுடனும் விசாரம் செய்தல் கூடாது ;

அப்படி நமது தரத்திற்கு மாறுபட்டு உள்ளவர்களுடன் விசாரம் செய்தால் ,
நமது மனத்தில் எழும் கேள்விகளுக்கு தயவுடன் பதில்சொல்லும் பொறுமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்,

அது அவரவர்களின் தயவைப் பொறுத்து மாறுபட்டதாய் உள்ளது;

இதனால் நமக்கு தேவையான விளக்கம் கிடைக்காது  என்பதை உணர்ந்து ,
நம்தரத்திற்கு ஒத்தவர்களை அறிந்து விசாரனை செய்வோம் அல்லது தனித்து இருந்து கேள்விகளை நமக்குநாமே கேட்டுக்கொண்டு ,
பெருமான் துணைக்கொண்டு விசாரம் செய்வோம் ;

அந்த விசாரனை எப்படி இருக்கவேண்டும் என்றால் ,
நமது பக்குவத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும் .

ஆம் ,
விடய ஆசைகளையே அடக்கமுடியாத நாம் மரணமிலாப் பெருவாழ்வை  அடைவது எப்படி என்றும், இன்னும் ஏன் யாரும் அடையவில்லை என்றும் விசாரம் செய்வது அறியாமை .

அவற்றைதான் பெருமான் விளக்கமாக கூறியுள்ளார்களே !
அவற்றை படித்து தெரிந்துகொள்ளவேண்டும் அவ்வளவுதான் .

அதை விடுத்து அதைப்பற்றிய காரசாரமான விவாதம் கூடாது ,
ஏனென்றால் அதை அடைந்த ஒருவரிடம் விசாரம் செய்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும் .

ஆனால் நாமோ,
ஆசையை ஒழிக்க இன்னும் எத்தனைப்பிறவிகள் எடுக்க வேண்டுமோ?

மனத்தை வசப்படுத்த இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்கவேண்டுமோ?

தன்னை அறிந்துகொள்ள இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ ?

ஆண்டவரின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்கவேண்டுமோ ?

மரமிணலாப் பெருவாழ்வு என்ற இலக்கை அடைய இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்க இருக்கின்றோமோ தெரியவில்லையே ? .

ஆனால் இவற்றை எல்லாம் அருளொளி கிடைக்கப் பெற்றால் கணத்தில் பெற்றுக்கொள்ளலாம் .

அருளொளி கிடைப்பதற்கான பக்குவத்தைப் பெறுவதற்கான தகுதிகளையும் தயவைப் பெறுவதுதானே நமது நோக்கம்.

ஆகலில் விசாரம் என்ற பெயரில், அனுபவித்து அறியாத ஒரு நிலையைப்பற்றி அனுபவித்தறியாத மற்றொருவரிடம் விவாதம் செய்கின்றபோது 
அது பலனற்று விகாரப்பட்டு நிற்கும் .

எனவே பெருமான் கூறிய அத்தனை அனுபவங்களையும் படித்து தெரிந்துகொள்வது நமது கடமை.

ஆனால் விசாரம் செய்வது என்பது நமது பக்குவத்திற்கு தக்கவாறு , நம்மால் அறிந்து கொள்ளக்கூடிய செயல்களான
ஜீவகாருண்யம் என்பது எப்படிப்பட்டது என்றும் ,
இகலோக வாழ்வு என்றால் என்ன ?
பரலோக வாழ்வு என்றால் என்ன ?

இம்மை இன்பம்,
மறுமை இன்பம்,
பேரின்பம் என்றால் என்ன ?

அண்டம் ,பிண்டம் ,
அகம் அகப்புறம் புறம் புறப்புறம்
இவற்றில் கடவுட் பிரகாசம் எப்படி விளங்குகின்றது என்பது பற்றி தனக்குள் கேள்விகளை எழுப்பி,
அதனால் உண்டாகும் பல்வேறு கேள்வியாலும் பதில்களாலும் பல மறைப்புகளை நமக்குள் விலக்கிக்கொள்ளலாம்.

இந்திரிய ஒழுக்கம்,
கரண ஒழுக்கம்,
ஜீவ ஒழுக்கம்,
ஆன்ம ஒழுக்கம் என்பது என்ன ?

இவற்றில் கூறப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன என்று ஆராய்ந்து ,

முதலில் ஒழுக்கத்தை வகைபடுத்தி
அதன்படி வாழும்போது ,
அவ்வொழுக்கம் ஒத்த இடத்தில் ,
நமது அறிவு தானே வந்து கூடி அடுத்தடுத்த நிலைக்கு தேவையானவற்றை நமக்கு அறிவுறுத்தும்.

அதன்படி நாம் ஒவ்வொன்றாய் கடந்து செல்வதுதான் நிலையான ஏற்றத்தைக்கொடுக்கும் .
எனவே ,
பெருமான் கூறிய மேல்நிலை அனுபவங்களை அனுபவித்த சுத்தசன்மார்க ஞானிகள் நம்மை சார்ந்து தற்போது இல்லாத காரணத்தினால் ,
துரியம் துரியாதீதம் குருதுரியம் சுத்த சிவதுரியம் இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி யாரிடம் விசாரம் செய்வது ?

மரணமிலாப் பெருவாழ்வு என்பது பற்றிய விஷயங்களில் ஆரோக்கியமான விசாரம் யாரிடம் செய்வது ?

அவற்றை அடைந்தவர்கள்
யாரும் நமது கண்ணுற இருந்து அவர்களது தலைமையில் சுத்தசன்மார்க்கம் வழிநடத்தப்பட்டால் இங்கு மாறுபட்ட விவாதம் எழும்பாது ,

ஆனால் அப்படி யாரும் இன்னும் தோன்றவில்லை என்பதாலும் ,
பெருமான் ஒருவரே நம் அனைவருக்கும் தோன்றாத் துணையாக நின்று நம்மை வழிநடத்துகின்றார்கள் என்பதாலும்.

முதலில் நாம் அனைவரும் ,
நமக்குள் தயவை வளர்ப்பதற்கு தேவையான சுத்தசன்மார்க்க ஒழுக்கத்தை ,

இந்திரிய ஒழுக்கத்தில் இருந்து ஒவ்வொன்றாய் கடைபிடித்து ஒழுகினால் ,
அவ்வொழுக்கத்தின் வாயிலாக எல்லா நிலைகளும் கைகூடும் என்பதை உணர்ந்து ,

நம்முள் தயவைப் பெருக்குவோம் .
பெருமான் கொடுத்துள்ள திருவருட்பா பாடல்களையும் கருத்துகளையும் உள்ளதை உள்ளபடி பதிவுசெய்வோம் .

அருட்பாவில் எதுபற்றி கூறினாலும் பெருமான் கூறியுள்ளார்கள் என்பதை நமது அகங்காரம் வெளிப்படா வண்ணம் தயவுடன் பெருமான் பெயரை முன்வைத்துப் எழுதி பேசி பழகுவோம் 👏

இவ்வெளியவனின் கருத்தில் யாரும் வருத்தம் கொள்ளாமல் ,
எல்லாரும் எல்லா நிலைகளும் அடையவேண்டும் என்ற பொதுநலன் கருதியும், காலம் விரையமாகின்றது ,
நரையும் திரையும் மூப்பும் தழுவி எதிர்நிற்கின்றன .

பிறவியை முடித்துவைக்கும் ஆண்டவரின் சோதனையாம் மரணமும் வருவதற்கு காத்து நிற்கின்றதே என்று பயந்து,

அதற்குள் நாம் ஏதோ ஒரு நிலையில் ஏதோ ஒரு பக்குவத்தை அடைந்து விட்டால் அடுத்த அடுத்த பிறவிக்கு பயனுள்ளதாய் இருக்குமே என்ற ஆன்மநேயத்தில்  இவற்றையெல்லாம் கூறநேர்ந்தது ,

ஆகவே அருமை சகோதர சகோதரிகளே முதலில் நாம் சன்மார்க்க ஒழுக்கத்தின்படி வாழ முற்படுவோம் ,
ஒழுக்கத்தின் வாயிலாகவே எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஒழுக்கம் சார்ந்து நெறியில் பயணித்தால் மட்டுமே அந்நெறிக்குரிய நிலையை அடைய முடியும் என்று கூறி அணைவரையும் தயவுடன் பணிகின்றேன் 🔥🙏
...நன்றி🔥🙏
.....வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி ! 🔥🙏
....பெருமான் தயவில் 🔥🙏
...தயவுடன் வள்ளல் அடிமை 🔥🙏
...வடலூர் இரமேஷ்;
....

புதன், 19 செப்டம்பர், 2018

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி யர் !

கடவுள் ஒருவரே !
அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லி உள்ளலார் .வள்ளலார்.

அவர் எங்கு இருந்து இயங்கி கொண்டு உள்ளார் என்பதையும் தெளிவுபட விளங்கும்படி விளக்கி உள்ளார்..

அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தின் முதல் பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்தருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியேஅருட்பெருஞ் சித்திஎன் அமுதே

அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமேஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

என்னும் பாடலில் ....அருட்பெரும் வெளியான அருள் வெளியில் .அருட்பெருஞ்ஜோதி யாக இயற்கை உண்மையாக.இயற்கை விளக்கமாக.இயற்கை இன்பமாக ...

எல்லா அண்டங்களையும்.எல்லா உலகங்களையும்.அதில் உள்ள எல்லா உயிர்களையும்.எல்லாப் பொருள்களையும்.எல்லா தத்துவங்களையும்.தத்துவி களையும்.

தோற்றுவித்தல்.இயக்குவித்தல்.அடக்குவித்தல்.மயக்குவித்தல்.தெளிவித்தலும் ஆகிய தொழில்களை செய்விக்கும்.அருள் ஆற்றல் உள்ள ஜோதிதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்..

அந்த அருட்பெருஞ்ஜோதி யை கண்டவர்தான் வள்ளலார்.எனவே தான் அந்த உண்மைக் கடவுளை உலக மக்களுக்கு தெரியப்படுத்த வடலூரில்.சாதி.சமயம்.மதம்.அற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யைத் தோற்றுவித்துள்ளார்..

வடலூர் சத்திய ஞானசபையானது ..உருவ வழிபாடு அற்ற ஒளிவழிபாட்டை குறிக்கும். செய்யும் இடமாகும்..

இந்த உண்மைத் தெரியாமல் மக்கள் உருவ வழிபாட்டையும்.ஒளி வழிபாட்டையும் ஒன்றாக நினைத்து வழிபடுவது வழிபாடு செய்வது அறியாமையாகும்...

வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்களே இன்னும் அறிவு விளக்கம் இல்லாமல் அறியாமையில் இருப்பது வேதனையாக .வருத்தமாக இருக்கின்றது...இவர்களே திருந்தாமல் மக்களை எப்படி நல்வழிக்கு கொண்டு வருவார்கள்...

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மை தெரியாமல்.அவரிடம் தொடர்பு கொள்ளாமல்..எந்த ஒழுக்கமும் கை கூடாது..

 சுத்த சன்மார்க்க கொள்கைக்கு முக்கிய தடையாக இருப்பது..எது என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார்...

வள்ளலார் சொல்வதை கவனமாக படித்து பாருங்கள் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்திலும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார .சங்கற்ப .விகற்பங்களும்.வருணம்.ஆசிரிம்ம் முதலிய

உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் .எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்...

என்று அழுத்தமாக விண்ணப்பம் செய்கின்றார்..செய்யச் சொல்லுகிறார்...

நாம் வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்கிறோமா ? பின் பற்றுகிறோமா ?

எந்த ஆச்சார சங்கற்பங்களையும்.விடாமல்.சமய.மத வாதிகளைப் போல் .சன்மார்க்கிகள் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வாரா ? என்றால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதுதான் உண்மை...

இந்த உண்மையை ஈரோடு கதிர்வேல்.எடுத்து சொன்னால்.அவனை நீங்கள் எதிரியாக பார்க்கிறீர்கள் .

நான் சமய மதங்களை சாடுவதாக நினைக்கிறார்கள்..வள்ளலார்தான் சமய மதங்கள் யாவும் பொய் என்று ஆதாரத்தோடு சொல்லுகின்றார்.அவர் சொல்லியதை நான் மக்களிடம் கொண்டு செல்கிறேன் ...என் தனிப்பட்ட கருத்தோ.சொந்த கருத்தோ எதுவும் கிடையாது என்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்...

சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ! ...என்கின்றார்...

மேலும்...

வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதம் ஆகமத்தின. விளைவு அறியீர்.

சூதாக சொன்னது அலால் உண்மை வெளித் தோன்ற உரைக்கவில்லை..

என்ன பயனோ இவை !

என்று வேதம் ஆகம்ம்.புராணம்.இதிகாசம்.சாத்திரம் எல்லாம் பொய் என்றுசாடுகின்றார் .

மேலும்......

எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

என்று ஆயிரக்கணக்கான பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளிலும் தெரியப்படுத்தி உள்ளார்....

நம்மைப் படைத்த உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரியாமல்.பொய்யான தாய் தந்தையை வணங்க செய்தவர்கள் தான் சமய மதவாத ஆன்மீக பொய்யான அருளாளர்கள் என்பதை வள்ளலார் சாடுகின்றார்.

நான் அதைத்தான் மக்களிடம் சொல்லுகிறேன்.....

கடவுள் உண்மையை உலக மக்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

கடவுள் எங்கும் உள்ளலார் .நம்மை கவனித்துக் கொண்டும் உள்ளலார்..

வள்ளலார் பாடல் !

எங்கே கருணை யியற்கையி னுள்ளனஅங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே !

என்றும்..

எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தேஇதுஅது எனஉரைப் பரிதாய்த்

தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்

பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்புத்தமு தருத்திஎன் உளத்தே

அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்தஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

எங்குமாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.நம் சிரநடு சிற்றம்பலத்திலே.உள் ஒளியாக அமர்ந்து இயங்கி இயக்கிக் கொண்டு இருப்பவர் தான் அருட்பெருஞ்ஜோதி!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

திங்கள், 17 செப்டம்பர், 2018

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

பேரின்ப சித்திப் பெருவாழ்வு  !

மரணத்தை வென்றவர் உடம்பு எவ் வண்ணமாக இருக்கும் என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ளார்..

பேரின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை எது என்றறிய வேண்டில்:-

தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம், சுக்கிலம் முதலிய அசுத்தபூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி,

மாற்று இவ்வளவு என்றறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்,

பொன்வடிவாகத் தோன்றுதல் மாத்திரமேயன்றி ஆகாயம்போல் பரிசிக்கப்படாத சுத்தபூதகாரண பிரணவ தேகத்தையும்.

தோன்றப்படுதலுமின்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞானதேகத்தையும்பெற்றவர்களா யிருப்பார்கள்.

அவர்களின் பெருமை.அருள் ஆற்றல் !

1.உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்;

2.புறத்தே மண் கல் முதலியவற்றால் எறியினும் அவை அவர் வடிவில் தாக்குவனவல்ல.

3.உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள்;

4.புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது.

5.உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள்;

6.புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல.

7.உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்;
புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித் தசைக்கமாட்டாது.

8.உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்;

9.புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்கமாட்டாது.

10.ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.

11.அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும் வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும் பார்த்தல் முதலிய விஷயங்களையும் பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவனவல்ல;

12.தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில், சுவர் மலை முதலிய தடைகளும் அவர் கண்களை மறைப்பன வல்ல.

13.அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்துமுள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த விடத்திருந்தே கண்டறியும்.

14.அண்ட பிண்டங்களி லெவ்விடத்திருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த விடத்திருந்தே கேட்டறியும்.

15.எவ்விடத் திருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த விடத்திருந்தே சுவைத்தறியும்.

16.எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்த விடத்திருந்தே பரிசித்தறியும்.

17.எவ்விடத் திருக்கின்ற சுகந்தகங்களையும் அவர் நாசி இருந்த இடத் திருந்தே முகர்ந்தறியும்.

18.எவ்விடத்திலிருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த விடத்திருந்தே கொடுத்தல் கூடும்.

19.எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த விடத்திருந்தே நடத்தல் கூடும்.

20.அவரது வாக்கு எவ்விடத்திலிருக்கின்ற எவ்வௌர்களோடும் இருந்த விடத்திருந்தே பேசுதல் கூடும்.

21. மற்ற இந்திரியங்கள் இருந்த விடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்தித்தல் கூடும்.

22.மன முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவனவல்ல;

23.தயவினால் பற்றத் தொடங்கில் எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும்.

24.அவரறிவு ஒன்றையும் சுட்டியறியாது;

25.தயவினால் சுட்டியறியத் தொடங்கில் எல்லா அண்டங்களையும் எல்லா உயிர்களையும் எல்லாப் பண்புகளையும் எல்லா அனுபவங்களையும் எல்லா பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி யறியும்.

26.அவர்கள் நிர்க்குணத்தராவார்களல்லது,

27.தாமச இராசத சாத்துவிக முதலிய முக்குணங்களாலும் உள்ளே விகாரப்படார்கள்;

28.புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவனவல்ல.

29.உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்;

30.புறத்தே அவரது பிரகிருதி குணங்களைப் பற்றுவனவல்ல.

31.உள்ளே காலதத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்;

32.புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது.

33.உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்;

34.புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது.

35.அன்றிக் காலம் வித்தை ராகம் புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும் அவர்களுக்கு இல்லை.

36.மாயையால் பேதப்படார்கள்; சுத்தமகாமாயையைக் கடந்து அதன்மேல் அறிவுருவாக விளங்குவார்கள்.

37.ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் என்பவைகளால் தடைபடார்கள்.

38.அவர்கள் தேகத்திற்குச் சாயை, வியர்வை, அழுக்கு, நரை, திரை, மூப்பு, இறப்பு முதலிய குற்றங்கள் உண்டானவல்ல.

39.பனி, மழை, இடி, வெயில் முதலியவற்றாலும், இராக்கதர், அசுரர், பூதம், பிசாசு முதலியவற்றாலும், தேவர், முனிவர், மனிதர், நரகர், மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் என்பவைகளாலும் எவ்விடத்தும் எக்காலத்தும் அவர் தேகம் வாதிக்கப்படாது;

 40.வாள் கத்தி முதலிய கருவிகளாலும் கண்டிக்கப்படாது.

41.எல்லா அண்டங்களும் அணுக்கள் போலச் சிறிதாகத் தோற்றலும், எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரிதாகத் தோற்றலும் அவர் தேகத்திற்கு உரித்து.

42.இறந்தோரை எழுப்புதல் வார்த்திபரை வாலிபராக்கல் முதலியகருமசித்திகளும் யோகசித்திகளும்ஞானசித்திகளும் அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.

43.சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்கின்ற கிருத்தியங்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.

44.பஞ்சகர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள்.

45.அவர்கள் அறிவு கடவுளறிவாக இருக்கும். அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும். அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.

46.சர்வசக்தியு முடையவர்களாய், எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய், ஆணவம், மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் அம்மலவாதனைகளும் இல்லாதவர்களாய், பேரருள்வண்ண முடையவர்களாய் விளங்குவார்கள்.

47.ஜடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்சகிருத்தியங்களும் செய்யும்.

48.அவரது பெருமை வேதாந்த, சித்தாந்த, கலாந்த, போதாந்த, நாதாந்த, யோகாந்தம் என்கின்ற ஆறந்தங்களிலும் விளங்கும்; அவற்றைக் கடந்தும் விளங்குமென்று அறியவேண்டும்.

49.இவை பேரின்பலாபத்தை யடைந்தவர் பெருமை யென்று அறிய வேண்டும்.

இம்மை இன்பம்..!
மறுமை இன்பம்.!
பேரின்பம் !

இம்மூவகை இன்ப லாப வாழ்வையும் எதனால் பெறக்கூடுமென்றறிய வேண்டில்:-

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏகதேசத்தைக் கொண்டும்

அருட்பூரணத்தைக் கொண்டும் அடையக் கூடுமென்றும் அறியவேண்டும்.

இம்மூவகை இன்பங்களில் '

அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையத்தக்கவை எவை? அருட்பூரணத்தைக் கொண்டு அடையத்தக்கது யாது?' என்றறியவேண்டில்:-

இம்மையின்பலாபம் மறுமையின்பலாபம் என்கின்ற இரண்டையும் அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையக்கூடு மென்றும்

பேரின்பலாப மென்கின்ற ஒன்றையும் அருட்பூரணத்தைக் கொண்டு அடையக்கூடு மென்றும் அறிய வேண்டும்.

அருளின் வண்ணம் !

கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருள் எந்த வண்ணத்தை உடையது என்றறியவேண்டில்:-

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும்,

நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும்,

அறிவார் அறியும் வண்ணங்களும்,

அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும்

ஆகிய சர்வசத்தி வண்ணங்களும் தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தை யுடையது என்று அறிய வேண்டும்.

மேலே கண்டவாறு.... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பூரணத்தைப் பெற்றவர்களின் உடம்பில் இவ்வளவு மாற்றங்கள் உண்டாகும்.

இவ்வாறான மாற்றங்களைப் பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார் ஒருவரே !

வள்ளலார் வாழ்ந்து காட்டிய.சுத்த சன்மார்க்க பெருநெறியை.
தனிநெறியை.
திருநெறியை.
அருள்நெறியை.

நாமும் பின்பற்றி வாழ்ந்தால். ஊன  உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

உடலின் மொழி !

👬உடலின் மொழி👫

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்


       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்.....

திங்கள், 3 செப்டம்பர், 2018

முக்கிய செய்தி !

முக்கிய செய்தி !

30-3-1871 ஆம் ஆண்டு வள்ளலார். சமரச சுத்த சன்மார்க்கிகளுக்கு இட்ட சமாதி கட்டளை.!

அன்புள்ள நீங்கள் சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு மிகவும் உரிமை உடையீர்கள் ஆகளில் உங்களுக்கு உணமையுடன் அறிவிப்பது.

நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளால் சுகமாக வாழ்வீர்களாக..

கர்ம கால முதலிய பேதங்களால் யாருக்காயினும் தேக ஆனி (மரணம் )நேரிட்டால் தகனம் செய்யாமல்.சமாதியில் (புதைக்க) வைக்க வேண்டும்.
இறந்தவர்கள் திரும்ப எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம். என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவும் துன்ப்ப் படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடன் இருக்க வேண்டும்.

புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.மனைவி இறந்தால் புருடன் வேறு திருமணம் பிரயத்தனஞ் செய்ய வேண்டாம்.பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்.கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.

தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில்.நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள்.செய்து இருந்தால்.சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும்.நிலைபெற விளக்கம் செய்யும் பொருட்டாகவும்.சிதம்பரஞ்கோவில் ( வடலூர் உத்தர ஞான சிதம்பரம் என்னும் சத்திய ஞானசபை ) திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்து

எனது தந்தையாராகிய ( அருட்பெருஞ்ஜோதி) எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் .சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு .எழுந்த்தருளிக் காட்சி கொடுக்கும் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக இருக்கின்றது.

அந்த்த்  தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகி இருந்து இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து அருள்வார் இது சத்தியம்.இது சத்தியம்....

இந்தக் கடிதம் வெளிப்பட்டு அறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பி அருள்வார்.இது வெளிப்பட்டு அறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது. அது சன்மார்க்கத்திற்கு தக்கதும் அல்ல....ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக....

எனக்கு உலக அறிவு தெரிந்த்து தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம் அடையும் வரையில்.என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும்.என்னைக்கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து.இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து .சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய .
பெருங்கருணை வள்ளல்.
 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சாலைக்கு உரியவர்களாகி இருந்தும்.அவ நம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும்.இந்த உபகாரம் செய்தே அருள்வார்...

ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள்.
ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள்..பெரிய களிப்பை அடைவீர்கள்.இது சத்தியம்.இது சத்தியம்.

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்..

என்று கையொப்பம் இட்டு வள்ளலார் வெளியிடுகின்றார்..

இந்த விண்ணப்பத்தை ஒவ்வொருவரும் ஊன்றி படித்து தெரிந்து கொண்டு .இனிமேல் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

இது திருவருள் ஆணை என்பதை அறிந்து தெரிந்து புரிந்து  கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

எல்லோருக்கும் எல்லாம் தெரியும் ? ஒன்று மட்டும் தெரியாது !



உலகில் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும்.
உலகில் உள்ள எல்லா விபரங்களும்.உணர்ச்சிகளும் தெளிவாக  தெரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

கடவுள் கொள்கையில்.படித்தவர்கள்.படிக்காதவர்வகள் அனைவருமே தவறான வழிகளையே பின் பற்றுகிறார்கள்.

இன்று கிருஷ்ணர் ஜெயந்தி என்று கிருஷ்ணர் சிலையை வைத்து அலங்காரம் செய்து ஆடல் பாடல்கள் போன்ற  கொண்டாட்டத்துடன்.மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்..

இதனால் மனம் மகிழ்ச்சி அடையும்.ஆன்மா மகிழ்ச்சி அடைவதில்லை என்பது மக்களுக்கு புரிய வாய்ப்பே இல்லாமல் போயிற்று..

தன்னை உணரந்து கொள்ளவும்.தன்னை இயக்கும் உள் ஒளியாகிய ஆனமாவைத் தெரிந்து கொள்ளவும் அறியாத மூடர்களாய் அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அந்த அளவிற்கு மக்களை மாற்றி உள்ளது தான் சமய மத மூட நம்பிக்கை கொள்கைகளாகும்.

இதைத்தான் வள்ளலார் கடுமையாக சாடுகின்றார்...

வள்ளலார் பாடல் !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயேஉணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.

தன்னை அறியாமல்.தன் தலைவனை அறியாமல் வாழ்வதால் தான் மரணம் என்னும் பெரும் பிணியால் மாண்டு போகின்றார்கள்.

இதைத்தான் வள்ளலார்..தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் என்கிறார்.

தன்னை அறிந்து தலைவனை அறிந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.

தலைவன் என்பது நம்மைப் படைத்த இறைவன் .அவர்தான் நம்மை காப்பாற்றும் சக்தி படைத்தவர்.அவரைத் தொடர்பு கொள்ளாமல் வாழ்வதால் எந்த பயனும் இல்லை. என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டு இறைவனிடம் தொடர்பு கொள்ள வேண்டும்..

வள்ளலார் பாடல் !

அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்

பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்

பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்பின்படு தீமையின் முன்படு கின்றீர்

இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

அம்மை அப்பன் யார் என்று தெரியாமல் .அற்பத்தனமான இச்சைகளிலே பற்று வைத்து.எச்சுகம் கண்டீர்... பைத்தியக்கார்ர்கள் போல் திரிகின்றீர்கள் ..

இறைவனால் படைக்கப்பட்ட ஏழை எளிய மக்களைத் திரும்பிபார்த்து அவர்களுக்கு பிச்சைப் போட மனம் இல்லாமல்.
கல்லுக்கும் மண்ணுக்கும்.படத்திற்கும் படையல் வைத்து உண்ணுகின்றீர்கள்...

இது அறிவு பெற்ற மனிதர்களின் செயலா என கேட்கின்றார்..

உண்மையான இறைவனைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்கும்.அருள் கிடைத்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்....

இறைவன் யார் ?

இப்பொழுது இறைவன் யார் ? என்பதுதான் கேள்வி...

உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் ..

அவர்தான் நம் சிரநடுவில் உள் ஒளியாக ஆன்மாவாக இயங்கிக் கொண்டு உள்ளவர் .அவரைத்தான் நாம் ஒவ்வொரு வரும் தொடர்பு கொள்ள வேண்டும்...

வள்ளலார் பாடல் !

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்மீட்டும்

இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ

பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.!

என்ற பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்..இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்களில் விளக்கம் தந்துள்ளார்.

படித்து பயன் பெறுவோம்.. அருளைப் பெறுவோம் மரணத்தை வெல்வோம்...

விரிக்கில் பெருகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.