வியாழன், 29 செப்டம்பர், 2016

அறிவை அறிந்து கொள்ளும் வழி !

 ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் . . வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே !

அடுத்த ஒரு பாடலைப் பதிவு செய்கின்றார் !

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நண்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத இன்பம் உறலாமே !

என்னும் பாடல்கள் வாயிலாக உலக மக்களுக்கு உண்மையான விளக்கத்தை தருகிறார் .


அறிவை அறிந்து கொள்ளும் வழி !

மனித பிறப்பு உயர்ந்தது ,மனித அறிவு உயர்ந்தது !

மனித தேகம் கொடுக்கும் போதே இறைவன் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ,ஒரே அளவான அறிவுதான் கொடுத்து படைத்து உள்ளார் .

உடம்பு !

எண்சான்   உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது எல்லோருக்கும் தெரியும் .எண் சான் என்பது ,ஒவ்வொருவர் உடம்பும் அவரவர் கையில் அளந்தால எட்டு சான்தான் இருக்கும் .அதேபோல் இறைவன் எல்லோருக்கும் பொதுவான அறிவைத்தான் வழங்கி உள்ளார்

 இறைவன் கொடுத்து உள்ள அறிவு தான் உண்மையானது .உயர்வானது .என்பது தெரியாமல் ,மற்றவர்களின் அறிவை தேடிக் கொண்டு உள்ளோம் .

உயர்ந்தவர்களின் அறிவு !

நம்மிடம்  உள்ள அறிவை அறிந்து கொள்ளாமல் ..திருவள்ளுவர் சொன்னார் ,திருமூலர் சொன்னார் .மாணிக்கவாசகர் சொன்னார் ,நபிகள் சொன்னார் .ஏசு சொன்னார் .புத்தர் சொன்னார்,சித்தர் சொன்னார்  என்றும் .குருநாதர் சொன்னார் என்றும் ,மற்றவர்களின் கொள்கைகளிலும் ,வழிகாட்டுதல் களிலும் பின் பற்றி பின் தொடர்ந்து கொண்டே உள்ளோம் ,.எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே !

மேலே கண்ட அருளாளர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான கொள்கை உடையவர்கள் .

அவர்கள் எல்லோரும் அவர்களின் அறிவை பயன்படுத்தி அருளாளர்கள் என்று பெயர் பெற்று உள்ளார்கள் .

நம்மிடம் உள்ள உண்மையான பேர் அறிவை தெரிந்து கொள்ளாமல் ,மற்றவர்களின் அறிவை பின்பற்றி வாழ்வதால் நம்முடைய அறிவுக்கு வேலை இல்லாமல் போயிற்று .

ஆதலால் தன்னை அறியாமல் தன்னுடைய உண்மையான தந்தை, தாய் யார் என்பது தெரியாமல் ,வாழ்ந்து கொண்டு உள்ளோம் .அதனால் தன்னை அறிந்து கொள்ள முடியாமல்,அறிவை இழந்து  அழிந்து கொண்டே உள்ளோம் .

ஆண்டவர் வருகை !

தன்னுடைய குழந்தைகளின் அறியாமையைக் கண்டு ,அறியாமையைப் போக்க வேண்டும் என்பதற்காக ,உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் . என்னும் அருள் பேர் ஒளியானது வள்ளலார் உருவம் தாங்கி இவ் உலகிற்கு வந்துள்ளது .அதனால் வள்ளலார் என்னும் உருவம் அருட்பெருஞ்ஜோதியே எனபதை நாம் அறிவால் அறிந்து புரிந்து தெரிந்து கொண்டால் ,நம்முடைய குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்து விடும் .

நம்மிடம் உள்ள ஆன்மாவையும் ,உயிரையும்   அறிவையும் ,அருளையும் தெரிந்து கொள்வது   எப்படி என்பதையும் ,அதற்கு உண்டான வழி என்ன என்பதையும்  வள்ளலார்  தெளிவாக விளக்கி உள்ளார் . வாழ்ந்தும் காட்டி உள்ளார் .

ஆண்டவரே வந்து சொல்லியும் .நாம் அவற்றை பின் பற்றாமல் இருப்பது தான் ,அறியாமை என்றும்  அஞ்ஞானம் என்றும் சொல்லப்படுகிறது .அறிவை மறைத்துக் கொண்டு உள்ளதை . . அந்த மறைப்பைத்தான்  மாயாத் திரைகள் என்று வள்ளலார் சொல்லுகின்றார் .

அந்த மாயா திரைகள் தான் நம்முடைய ஆன்மாவையும ,உயிரையும்  அறிவையும் ,அருளையும் மறைத்துக் கொண்டு உள்ளது .

அந்த திரைகளை நீக்குவதற்கு நாம் முன்னாடி உள்ள பெரியவர்கள் .மற்றும் அருளாளர்கள் ,குருமார்கள் போன்ற யாருடைய கொள்கைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை .என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லி உள்ளார் .

நம்முடைய அறிவைத் தெரிந்து கொள்ள நாம் தான் முயற்சி செய்ய வேண்டும் .

தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே ,ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே !என்று  வள்ளலார் இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடமே கேட்கின்றார் ,தந்திரத்தை சொல்லுகின்றார .அதாவது தந்திரம் என்றால் உளவு என்பதாகும் ,

அந்த உளவுதான் ஜீகாருண்யம் .சத்விசாரம் என்பதாகும் .இந்த இரண்டு வழிகளையும் .முறைகளையும் ,துறைகளையும் ,அவற்றை அறிந்து கொள்ளும் துணிவு இருந்தால் அறிவு தானே விளங்கும் .

அந்த உண்மை அறிவானது பூரணத்துவம் பெறுகின்ற போது தான் .ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள திரைகள் விலகி அருள் சுரக்கும் .அருள் பூரணம் பெறுகின்ற போதுதான் மரணத்தை வெல்ல முடியும் ,

வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் .

வேறு எந்த வழியில் சென்றாலும் மரணத்தை வெல்ல முடியாது .

தொடரும் :---

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்













வியாழன், 22 செப்டம்பர், 2016


ஆன்மாவும் ஏழு திரைகளும்.!

ஆன்மாவும் ஏழு திரைகளும்.!
வள்ளலார் சொல்லும் சாகாக் கல்வி !

இந்தப் பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யார் எனில் ? நான் ஆன்மா ,சிறிய அணு வடிவனன் .மேபடி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது.'இருப்பிடம் லலாட ஸ்தானம்''  அதன் வண்ணம் கால் பங்கு பொன்மை ,முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம் ,(அதாவது கோழி முட்டைப் போன்றது) இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா திரைகள் ஆகிய ஏழு திரைகள் உண்டு ...

அவைகள் யாவன ;--

கறுப்புத் திரை ;---- ---மாயா சத்தி,அசுத்த மாயா சத்தி !.
நீலத்திரை ;---------- --சுத்தா சுத்த மாயா சத்தி !
பச்சைத்திரை ;--------கிரியா சத்தி !.
சிவப்புத்திரை ;--------பராசத்தி !
பொன்மைத்திரை;--  இச்சாசத்தி1
வெண்மைத் திரை;---ஞான சத்தி !
கலப்புத் திரை ;--------- ஆதி சத்தி 1

மேலே கண்ட திரைகள் ஒவ்வொன்றுக்கும் சத்தி என்று பெயர் ,இந்த சத்திகள் அனைத்தும்  அணுக்களின்  சேர்க்கையாகும், அந்த அணுக்கள் அனந்த வண்ண பேதமாக .ஏழு வண்ணங்களுக்கும் ஏழு விதமான அணுக்களின் கூருகளாகும்,,..அந்த அணுக்கள் எவைகள் என்பதை வள்ளலார் சொல்லி உள்ளார் .

இந்த பூத ஆகாயத்தில் இருக்கும் அணுக்கள்;--- சாதாரண அணு ,அசாதாரண அணுக்கள் என ஏழு வகையாய்ப் பிரியும் ,அவை ;---
வால் அணு ,,,திரவ அணு ...குரு அணு ,...லகு அணு ....அணு ...பரமாணு ...விபு அணு ,என ஏழு வகையாக உள்ளன .இதில் .காரிய அணு ,,காரிய காரண அணு..காரண அணு .என மூன்று பிரிவுகள் உள்ளன .

ஆன்மாக்களின் தன்மைக்கும் ,உயிரின் தன்மைக்கும் தகுந்தாற் போல் மனித தேகம் என்னும் வீடு கட்டிக் கொடுக்கப் படுகின்றது.

இந்த ஏழு விதமான அணுக்களும் சேர்ந்ததுதான் நம்முடைய உடம்பு ,..இந்த ஏழு அணுக்களில்.பஞ்ச பூத அணுக்கள் ஐந்தும் ,  ஆன்மாவும் ,உயிரும் சேர்ந்து  இரண்டு, மொத்தம் ஏழு விதமான அணுக்கள் அடங்கும்.

இதில் ஐந்து மலம் என்னும் செயல்கள் உள்ளன !

பசு என்பது ;----ஐந்து பங்கு  மலங்கள் உள்ளது !
ஜீவன் என்பது;---- மூன்று பங்கு  மலங்கள் உள்ளது !
ஆன்மா என்பது ;--ஒரு பங்கு மலம் உள்ளது ..!
சிவம் என்பது ;----முற்றும் மலம் நீங்கியது !
சுத்த சிவம் என்பது ;--- அருள் நிறைந்தது.!

மேலே கண்ட மலங்கள் நீங்கினால் மரணத்தை வெல்ல முடியும்...இந்த மலத்தை மறைத்துக் கொண்டு உள்ளது  அறியாமை ,அஞ்ஞானம் என்னும் திரைகளாகும் .

அந்த திரைகள் என்ன என்பதை அகவலில் விளக்கி உள்ளார் .

கரைவின் மா மாயைக் கரும் பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந் திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

என்று தெளிவாக வள்ளலார்  விளக்கி உள்ளார்....ஒவ்வொருத் திரைக்கும் இடை வெளி உள்ளது .அந்த  இடை வெளியை நீக்க வேண்டும்...இவற்றை எல்லாம் மறைத்துக் கொண்டு உள்ளது எது எனில் ..அருட்பெருஞ்ஜோதிதான் மறைத்துக் கொண்டு உள்ளது ....அதனால்தான்  அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதாகும்.....

இந்த திரைகளை நீக்க வேண்டுமானால் ,எது தேவை !  ''அருள்' என்னும்  அமுத திரவம் வேண்டும் ...அமுத திரவம் எங்கு உள்ளது ...ஆன்மாவில் உள்ளது ... ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்ற வேண்டுமானால் ,அருள் அமுதம் வேண்டும் .....அந்த அமுதம் ஐந்து வகையாக, ஐந்து சுவையாக உள்ளது ,,

பஞ்ச அமுத ஸ்தானங்கள் ;--

1, வது அமுதம் நாக்கின் அடியில் இனிப்புள்ள ஊற்று ஜலம் போல் இருக்கும் !
2, வது அமுதம் உள் நாக்கின் மேல் இளகின இனிப்பு உள்ள சர்க்கரைப் பாகு போல் இருக்கும் !.
3,வது அமுதம் மூக்கு முனையில் காய்ச்சின சர்க்கரைப் பாகு போல் இருக்கும்! 4,வது அமுதம் நெற்றி நடுவில் முதிர்ந்த சர்க்கரைப் பாகு போல் இருக்கும் !
5, வது அமுதம் மகா இனிப்பு உள்ள மணிக் கட்டியாக இருக்கும் !  அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும் !

இந்த ஐந்தாவது அமுதத்தை உண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெறுவார்கள் .....

மேலும் இந்த அமுதம் எந்த வகையால் கிடைக்கும் .எப்படி வாழ்ந்தால் கிடைக்கும் என்பதையும்.

பஞ்ச அமுத ஸ்தானங்கள் ;---
யோகா அனுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் !

1,வது அமுதம் நாக்கு நுனியில் பக்குவ ஞானத்தால் சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால் !
2,வது புவன அமுதம் நாக்கு மத்தியில் ,பக்குவ கிரியையால் ஸ்திதி  பிரஞ்ஞை உணர்ச்சியால் !
3,வது மண்டலா அமுதம் ,நாக்கின் அடியில் அக்குவ இச்சையால் சம்மார உணர்ச்சியால் !
4,வது ரகசியா அமிர்தம் உள் நாக்கின் அடியில் பக்குவ திரோபவம் உணர்ச்சியால் !
5,வது மவுனா அமிர்தம் உண்ணாக்குக்கு மேல் ,பக்குவ அனுக்கிரகம் ,அனுக்கிரக உணர்ச்சியால் ,,சுபாவத்தினது அனுபவம் துரிய நிலை !

மேலே கண்ட அமுதத்தை ,மேலே கண்டபடி நம்முடைய தலைப் பாகத்தில் இருந்துதான் பெற்று அனுபவிக்க வேண்டும்....இந்த அனுபவத்தைப் பெற்றால்தான், ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றி  மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு கிடைக்கும்..இதற்கு அனுபவ நிலைகள் நிறைய உண்டு ,,

மேலும் வர்ணமாகிய எழுத்தாலும்,வண்ணமாகிய ரூபத்தாலும்,தொழில் ஆகிய பெயராலும் ஆனந்தமாக விரியும்,இவைகள் யாவும் ராகம் என்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும்,மேலும் இவைகள் படிப்பால் அறியக் கூடாது ..

அறிவது எப்படி எனில் ;;  ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் .அத் தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் ,ஆதலால் இடைவிடாது கருணை நன் முயற்சியில் பழக வேண்டும் .....

கருணை எப்படி எப்போது உண்டாகும்.!

நம்முடைய உடம்பு அசுத்த பூத காரிய அணுக்களால் பின்னப்பட்டது ...அசுத்த பூத காரிய அணுக்களை சுத்த பூத காரிய அணுக்களாக முதலில் மாற்ற வேண்டும் ,,..அதற்கு ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் கொள்ள வேண்டும்...பிற உயிர்களைக் காப்பாற்றினால் நம்முடைய உயிர் காப்பாற்றப் படும்..அதற்கு மேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்...

உண்மையான இயற்கையான உணர்வோடு,உயிர்களுக்கு உண்டாகும்  பசி, கொலையைத் தவிர்த்து, இந்திரிய ஒழுக்கத்தையும்,கரண ஒழுக்கத்தையும் கடை பிடித்து வாழ்பவர்களுக்கு,முதலில் மேலே  சொல்லிய ஒன்றாவது அமுதமாகிய  இனிப்பு உள்ள ஊற்று ஜலம் போன்ற அமுதம் சுரக்கும். அவற்றை அனுபவித்தவர்களுக்கு   சுத்த தேகம் உண்டாகும்.அவை தான் இம்மை இன்ப வாழ்வு ,இம்மை இன்ப லாபம் என்பதாகும்.....

அதற்கு மேல் ,சாதி,சமயம், மதம், இனம்,குலம்,  நாடு, மொழி,கோத்திரம்,சூத்திரம்,சாத்திரம் ,மார்க்கம்,உயர்வு,தாழ்வு முதலிய  போன்ற வேறுபாடுகள் இல்லாமல்,ஜீவ ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால், எல்லாம் தானாக நின்றால்  இரண்டாவது அமுதம்,...முன்றாவது அமுதம்,...உட் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்,

அவற்றை உட் கொண்டால் பிரணவ தேகம் என்னும் என்றும் அழியாத ,யாராலும் அழிக்க முடியாத தேகம் கிடைக்கும், தேகம் கண்களுக்குத் , தெரியும் ,பிடிபடாது,அந்த தேகத்திற்கு மறுமை இன்ப வாழ்வு ,...மறுமை இன்ப லாபம் என்று பெயராகும்.

அடுத்து ;--எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்களில் உள்ள ஆன்மாக்களிடமும் இரங்கி ,ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும்,கண்டு கலந்து பூரணமாக நின்றால் ,நான்காவது அமுதமும்,ஐந்தாவது அமுதமும் ,சுரக்கும்.அந்த அமுதத்தை அருந்தியவர்களுக்கு ,சுத்த தேகம்,..பிரணவ தேகம்..ஞான தேகம் ..என்னும் முத்தேக சித்தி கிடைக்கும்.அதற்குத்தான் பேரின்ப வாழ்வு,பேரின்ப லாபம் .என்பதாகும்....

இந்த ஐந்து வகையான அமுதமும் பூரணமாக அனுபவித்தவர்களுக்கு ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து ,ஒளி தேகம் பெற்று ,கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆகலாம் ....

அந்த அருள் ஆன்மாவில் இருந்து சுரக்கும் போது உடம்பு என்னவெல்லாம்  மாற்றம் அடையும் என்பதை ,,அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் பதிவு செய்து உள்ளார் ..அவற்றைப் பார்ப்போம் ;---

தோல் எல்லாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட

என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்து இடை பந்தித்து ஒரு திரள் ஆயிட

மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம் ஊற்று எடுத்து ஒடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலைந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட

மெய் எலாம் குளிந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறும் சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங்கே அதிகரிப்பு அமைந்திடச்
சகங் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவு உரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறி யுறும் ஆனம தற்போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கே ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட

உலகு எலாம் விடயம் உளவு எலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட

என்னுளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே
என்னுளத்து எழுந்த என்தனி அன்பே

தன்னையே எனக்குத்  தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த எனதனி அன்பே

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு  தரம் எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்து எனது உருவை
இன்புரு வாக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளங் கலந்த என்தனி அன்பே !

என்னும் அகவல்  வரிகளில் உடல் மாற்றத்தைப் பற்றி  தெளிவாக அனுபவித்து தெரிவித்து உள்ளார் நமது அருள் வள்ளலார் ....

தொடரும் ;---

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


வேதம் ஆகமம் !

வேதம் ஆகமங்கள் இரண்டு வகை!

 வேதம் ஆகமங்களை இரண்டாக பிரிக்கின்றார் வள்ளலார் .

இந்தியரவில் உள்ள வேதம் ஆகமங்கள் தனியாகவும் .

வெளிநாட்டில் தோன்றிய வேதம் ஆகமங்கள் வேறாகவும் பிரிக்கின்றார் .

வள்ளலார் சூட்சுமமாக சொல்லுகின்றார் இந்து வேதம் ஆகமங்களில் மாத்திரம் தான் ஏமசித்தி ,தேக சித்தி,  ஞான சித்தி முதலிய சித்திகளைசித்திகளைச் சொல்லி இருக்கின்றது .

மற்ற எந்த சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாக் கல்வியையும் சொல்ல வில்லை என்கிறார்

ஒரு வேளை அப்படி இருக்கிறதாகக் காணப்படும் ஆகில் அது இந்து வேதம் ,ஆகமங்களில் சொல்லி இருப்பதின் ஏக தேசங்கள் என்பது உண்மை என்கிறார் .

கிருத்தவ மதம் .இஸ்லாம் மதம் இரண்டிற்கும் அவர்களின் நூலுக்கு வேதம் ,ஆகமங்கள் என்றும் பெயர் வழங்கப் படுகிறது .

அந்த வேதம் ,ஆகமங்களை வள்ளலார் சூதாக சொல்லி உள்ளதாக சாடுகின்றார் , ஏன் எனில் அவர்களின் வேதங்கள் ஆகமங்கள் உயிர்களை கொலை செயவதற்கு தடையாகவும் இல்லை .மாமிசம் அதாவது புலால் உண்பதற்கும் தடையாக இல்லை .

கொலைக்கு  காரண காரியமாக உள்ளது எனபதால் மிகவும் வேதனை யுடன் திட்டு கின்றார் .

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்கள் !

வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவு அறியீர் . . சூதாகத்
சொன்னது அலால் உண்மை வெளி தோன்ற உரைத்தது இல்லை
என்ன பயனோ இவை !

என்று சொல்லுகின்றார் .

அடுத்து :-- அண்ணிய உலகினர் ஆகிய மதங்களும் உண்மை இறைவன் யார் ? என்பது தெரியாது உளறுகிறார்கள் என்கிறார் ____ பாடல் !

நண்ணிய மத நெறி பல பல வகையே
நன்று அற நின்றன செனறன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடு நாள்
அலை தருகின்றனர் அலைவற மகனே
புண்ணியம் உறு திரு அருள் நெறி இதுவே
பொது நெறி என அறிவுற முயலுதி நீ
தண்ணிய அமுது உணத் தந்தனம் என்றாய்
தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும் பதிவு செய்து உள்ளார் .






புதன், 21 செப்டம்பர், 2016

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை வாழ்வதற்கே !
எல்லோரும் படிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !
எல்லோரும் பேசத் தெரிந்து இருக்கின்றார்கள் !
பணம் சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள்.!
பொருள்களை  சம்பாதிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !
பதவியை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !
புகழை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !.
காதல் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
திருமணம் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள் !.
குடும்பம் நடத்த தெரிந்து இருக்கின்றார்கள் !
குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
அழகு அழகுவாய்  வீடு கட்டத் தெரிந்து இருக்கின்றார்கள்,!
விதவிதமாய் கார்கள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.
பணத்தை மறைத்து வைக்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
விதவிதமாய் நகைகள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
வெளி நாடுகளை சுற்றிப் பார்க்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !
அறிவியலைத் தெரிந்து இருக்கின்றார்கள் !
விஞ்ஞானத்தை தெரிந்து இருக்கின்றார்கள் !
மற்றைய எல்லாம் தெரிந்து இருக்கின்றார்கள் !.
துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ தெரிந்து கொள்ளவில்லை !.
ஆன்மீகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவில்லை !
உண்மையான கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
நம்முடைய வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
நாம் எங்கு இருந்து வந்தோம் ,மீண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
அருளைப் பெரும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை!.
அருளைக் கொடுப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவில்லை !.
அருள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
நரை,திரை,மூப்பு ,பயம் ,மரணம் இல்லாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!
மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!
மரணம் இல்லாமல் வாழலாம் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--
வையத்தீர் வான் அகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !
வாழ்க்கை என்பது என்ன ? எப்படி வாழ வேண்டும் என்ற எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கடலூர் மாவட்டம் வடலூர் என்னும், வடலூர் ஞான சித்திபுரம் என்னும் இடத்திற்கு வந்தால் தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

வள்ளலார் சொல்லி உள்ள  சுத்த சன்மார்க்கம் என்பது ,சாதி, சமயம் மதங்களை கடந்தது,

வள்ளலார் சொல்லி உள்ள சிவம் வேறு,! சமய மதங்கள் சொல்லிய சிவன் வேறு ...வள்ளலார் சொல்லிய சிவம் என்பது அருட்பெருஞ் ஜோதியைக் குறிப்பது,...மக்கள் இரண்டும் ஒன்று நினைத்து விடுவார்கள் என்றுதான் 'சுத்த சிவம் 'என்று பெயர் வைத்து உள்ளார் ..சுத்த சிவம் என்பது அருட் பெரு வெளியில் உள்ள அருள் ஒளியைக் குறிப்பதாகும்...

மேலும் சிவம் ,என்பது வேறு ...சிவன் என்பது வேறு ..ம் ,,க்கும் .ன் ,னுக்கும் வித்தியாசம் உள்ளது.

அடுத்து நடராஜர் என்பது சமய மதங்கள் சொல்லிய சிதம்பரம் நடராஜர் அல்ல ...சிற்றம்பலம் என்னும் அருட் பெரு வெளியில் உள்ள .அருட்பெருஞ்ஜோதி நடராஜ பதியே என்று ''நடராஜ பதி மாலை ''என்ற தலைப்பில் 34,பாடல்கள் உள்ளன அதைப் படித்துப் பாருங்கள் ,வள்ளலார் சொன்ன நடராஜர் யார் ? என்பது தெரியும்,

அதிலே வள்ளலார்.... தான் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கத்தைப் பற்றி ஒரு பாடல் பதிவு செய்து உள்ளார் ..

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை
விளையாட்டு என்று என உணர்ந்திடாது உயிர்கள்
பல பேதம் உற்று அங்கும் இங்கும்
போர் உற்று இறந்து வீண் போயினர்
இன்னும் வீண் போகாத படி விரைந்தே
புனிதம் உறு ''சுத்த சன்மார்க்க '' நெறி காட்டி
மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏறுற்ற சுகநிலை அடைந்திடப் பரிதி நீ
என் பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன்
மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க் குணானந்த பர நாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !

என்னும் பாடல் வாயிலாக நடராஜ பதி யார் என்பதை தெளிவுப் படுத்து கின்றார் ......அடுத்து ஞான சரியை என்னும் தலைப்பில் 27,வது பாடலில் சன்மார்க்கத்தை சார்ந்தவர்களுக்கு பதிவு செய்து உள்ள பாடல்,

சன்மார்க்கப் பெருங் குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும் பதியைத் தனித்த சபாபதியை
''நன்மார்க்கம்'' எனை நடத்திச் சன்மார்க்க சங்கம்
நடுவிருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்
''புன் மார்க்கர்  '' அறிவு அரிதாம் புண்ணியனை ஞான
பூரணப் மெய்ப் பொருளாகிப் பொருந்திய மாமருந்தை
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ் செய்
அருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட் கொளச்சார் வீரே !

என்று அனைவருக்கும் புரியும் படை எழுதி வைத்து உள்ளார் ..பாடல்களை ஊன்றி படித்தால் உண்மை விளங்கும்.

மேலும் உரை நடைப்பகுதியில் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்பதை விளக்கம் தந்து உள்ளார் .அதில் ஒருப்பகுதி !

சாத்திய நிலை !

சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கை கூடும் ! என்றும்  சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும் ..

மற்றச் சமய ,மத மார்க்கங்கள் எல்லாம் ''சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ் படி ,ஆதலால் ,அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை.''தாயுமானவர்'' முதலானவர்கள் சுத்த சன்மார்க்கி அல்லர் ...மத சன்மார்க்கி என்று ஒருவாறு சொல்லலாம் ,இதில் நித்திய தேகம் கிடையாது .இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியம் அல்ல ....நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் ,உயிர் பெற்று மீளவும் வருவார்கள் .

முன் இருந்த அளவைக் காட்டிலும் விஷேச ஞானத்தோடு ''சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆகி வருவார்கள்.பின் சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் ...என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்கள் ..இன்னும் திரு அருட்பாவில் பாடல்களிலும் உரை நடப்பகுதிகளிலும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ...

மேலும் சன்மார்க்க கொள்கை !என்னும் தலைப்பில் ;--

சர்வ சித்தியை உடைய தனித் தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசு செய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ''பிரமன்'' ;,சிருட்டி திதி,ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன்,''விஷ்ணு'' ,...சிருட்டி,திதி,சங்காரம்,ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ,''ருத்திரன்''..

இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக் கின்றவர்கள் .இவர்களை அந்த அந்த சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்.இம் ''மூர்த்திகளுடைய சித்திகள்'' சர்வ சித்தி உடைய கடவுள் சித்தியின் இலேசங்கள் ! ''அதில் ஏக தேசம் கூட அல்ல'' ...ஆகையால் ,இவர்கள் அந்தச் சர்வ சித்தியை உடைய {அருட்பெருஞ்ஜோதி } கடவுளுக்கு ஒப்பாகார்கள்...கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள் .

ஆகையால் ,சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து ,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி, மகிழ்ந்து, அகங்கரித்து ,மேலே ஏற வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் ''பூரண'' சித்தியை அடையாமல் ,தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல் ...''சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் ''உண்டு என்றும் .அவரே அருட்பெருஞ்ஜோதியர்  என்றும்'',.அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்றும்.பின்பற்றிக்  கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்கத்தவர்கள் உடைய கொள்கை ....இதை ஆண்டவர் தெரிவித்தார் ..என்று வள்ளலார் சொல்லி எழுதி வைத்து உள்ளார் .....

நாம் தான் உண்மையை அறிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நான் சன்மார்க்கத்தை குழப்ப வரவில்லை ..வளர்க்க வந்துள்ளேன்...குழம்பி உள்ளவர்கள் தெளிவு அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் ..வள்ளலாரின் விருப்பமும் அதுதான்....

வள்ளலார் சொன்ன சிவம் ,,வேறு ...சமய மதங்கள் சொல்லிய சிவன் வேறு...அதேபோல் வள்ளலார் சொன்ன நடராஜர் வேறு ,,சமய மதங்கள் சொல்லிய நடராஜர் வேறு .../வள்ளலார் சொல்லிய அருட்பெருஞ்ஜோதி  நடராஜர் ,,சமய மதங்களைக் கடந்தவர் ..எல்லோருக்கும் பொதுவானவர் .அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ....

யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை .நீங்கள் அனைவரும் என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புக்கள் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
சுத்த சன்மார்க்கம் சுக நிலைப் பெருக !

இன்னும் விரிக்கில் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .    

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !  

வள்ளலார் ஆரம்ப காலத்தில் நான்  பின் பற்றி வந்த, சமய மத மார்க்கங்கள்,மற்றும் சமய மத  தெய்வங்கள் , யாவும் பொய்யானது என்பதை உணர்ந்து ,அவைகள் யாவும் துன்மார்க்கம் என்பதை அறிந்து .அனைத்தையும் தொலைத்து விட்டேன்,நீங்களும் என்னைப்போல் தொலைத்து விட்டு வாருங்கள்...

இப்போது இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட உண்மையான மார்க்கம் தான் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ' ''என்ற உண்மையான மார்க்கமாகும்..இந்த மார்க்கத்தை கண்டு வானத்தில் உள்ள வானாட்டார்களும் போற்றி மகிழ்ந்து கொண்டு உள்ளார்கள் ...நீங்களும் உண்மையை உணர்ந்து நன்மார்க்கம் என்னும் சன்மார்க்கத்தைப் பின்பற்றி  போற்றி மகிழ்ந்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ அனைவரையும் அழைக்கின்றார் நம்முடைய வள்ளலார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ....
                 
சுத்த சிவ நிலை என்னும் தலைப்பில் '--பாடல் 20,,  

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் ...
சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப் பட்டேன் ,,,,
என்மார்க்கம் நன் மார்க்கம்  என்றே வான் நாட்டார்
புகழ்கின்றார் ..மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து      

அடுத்த பாடல் ;----
பன் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே ...
சன்மார்க்கம் ஒன்றே தழைத்த்துவே ...சொன் மார்க்கத்தில்
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான் ..
கொல்லா நெறி அருளைக் கொண்டு .....என்கின்றார் ..

அடுத்த பாடல் ;----
சாதி குலம் என்றும் சமய மதம் என்றும்
உப நீதி இலா ஆச்சிரம நீட்டு என்றும்
ஓதுகின்ற பேய் ஆட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்த்துவே
பிறர் தமது வாயாட்டம் தீர்ந்தனவே மற்று ...

இன்று தொடங்கி இங்கே எம்பெருமான் எந்நாளும்
நன்று துலங்க நடம் புரிவான் ---என்றும் என் சொல்
சத்தியம் என்று எண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
நித்தியம் பெற்று உய்யலாம் நீர் .!

என்று பல பாடல்கள் வாயிலாக நம்மை எல்லாம் அழைக்கின்றார் , .

இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் ,தெளிவுப் படுத்தி உள்ளார் .....படித்து பயன் பெறுவோம்  ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

சுத்த சன்மார்க்கம் !

சுத்த சன்மார்க்கம் !
வள்ளலார் சொன்னது உண்மை மார்க்கம் .அதற்கு வள்ளலார் வைத்து உள்ள பெயர் "சமரச சுத்த� சன்மார்க்க சத்திய சங்கம் "என்று பெயர் வைத்து உள்ளார்
இந்த மார்க்கத்தின் வழியாகத்தான் இறைவன் உண்மையான கருத்துக்களை உலகிற்கு .வள்ளலார் மூலமாக வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார் .
எனவே உலகில் உள்ள மார்கங்கள் அனைத்தும் துன்மார்கத்தையே போதிக்கின்றது .போதித்து உள்ளது .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் !
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம் !
என்று வள்ளலார் சொல்லி உள்ளார் .
அதற்கு மேலும் சொல்லுகின்றார்
நடராஜர் பாட்டே நறும் பாட்டு
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும் பாட்டே !
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெருப்பாட்டு "!
அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டு எல்லாம் மருட்பாட்டு !
என்று நிறைய பாடல்கள் பதிவு செய்துள்ளார் .
சாதி சமயம் மதம் போன்ற கலவை இல்லாத ஒரே மார்க்கம் ,வள்ளலார் தோற்றுவித்த" சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்னும் மார்க்கமாகும் .
இங்கு வந்தால் மட்டுமே அசுத்தம் நீங்கி சுத்தம் உள்ளவர்களாக வாழ முடியும் .
ஆன்ம நேயன்� ஈரோடு கதிர்வேல்

5-10-2016,,வள்ளலார் அவதார தினம் !

5-10-2016,,வள்ளலார் அவதார தினம் ! 

திருஅருட்பிரகாச வள்ளலார் !

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்கச் சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !...வள்ளலார் 

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ,அகம் கருத்து, புறம் வெளுத்து,வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி அழிந்து கொண்டும் உள்ளார்கள். மெய்ப்பொருளான இறைவன் யார் ? என்னும் உண்மைத் தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

உலக மக்கள் அனைவரையும் திருத்தி. இகத்தே இந்த பிறவியிலே அருளைப் பெற்று அழியாமல் வாழ்ந்து மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்கிறார்.வள்ளலார் .

இகம்,பரம்,என்ற இரண்டு வழிகள் உண்டு பரம் யாருக்கும் தெரியாது.யாரும் பார்த்ததும்  இல்லை .அந்த பரத்தை இந்த பிறவியிலே இங்கேயே கண்டு அனுபவித்து ,அருளைப் பெற்று, பரத்தில் உள்ள இறைவனிடம் தொடர்பு கொண்டு  ''பேரின்ப பெருவாழ்வு ,என்னும் சாகாக் கல்வியை கற்று '' உயர்ந்த வாழ்க்கை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் என்னை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்  என்று வள்ளல்பெருமான அவர்கள் தன்னுடைய வருகையைப் பற்றி திருஅருட்பா என்னும் அருள் நூலில் தெளிவாகத் தெரியப் படுத்தியுள்ளார்கள்.

வள்ளலார் பிறப்பு  

தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் .சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில், கிராமக் கணக்கராக இருந்தவர் இராமய்யா என்பவர் .அவருக்கு ஐந்து மனைவியரும் மகப்பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே ,இராமய்யா அவர்கள் ஆறாவது மனைவியாக,சென்னையை அடுத்த சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்த சின்னம்மையை மணம் புரிந்தார் .அவர்களுக்கு சபாபதி,பரசுராமன் ,என்னும் இரு ஆண் மக்களும் உண்ணாமுலை,சுந்தராம்பாள் என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர்.

ஒரு நாள் இராமய்யா இல்லாத நேரம் ,அவர் வீட்டிற்கு சிவனடியார் உருவத்தில் இறைவன் சென்றார்.அம்மா ! பசிக்கிறது உணவு தாருங்கள் !என்று சிவனடியார் கேட்க !,அக்குரல் கேட்டு வெளியே வந்த சின்னம்மை நமஸ்காரம் செய்து ,உள்ளே வாருங்கள் என்று அன்புடன் அழைத்து அமரவைத்து இலைப்போட்டு உணவு பரிமாறினார் .''பசி நீங்கிய சிவனடியார்'' என்னுடைய பசியை போக்கிய உனக்கு,உலகம் எல்லாம் உள்ள அனைத்து ஜீவன் களுடைய பசியைப் போக்கும் ஒரு ஞானக் குழந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு வெளியே சென்றார் .சின்னம்மை பின் தொடர்ந்து வெளியே வந்து பார்த்தார் சிவனடியாரை காணாவில்லை மாயமாக மறைந்து போய் விட்டார் .

இராமய்யா வந்தவுடன் நடந்த விபரங்களை சின்னம்மைச் சொல்ல இருவரும் இறைவனிடம் சென்று, இது என்ன சோதனை ! என்று முறையிட்டார்கள் .சிவனடியார் சொல்லிய வண்ணமே பத்தாவது மாதத்தில், 5--10--1823-,ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள்,சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை, 5--30, மணியளிவில் ஐந்தாவது மகவாக அவதரித்தார், அக் குழந்தைக்கு இராமலிங்கம் என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

சிதம்பர வழிபாடு !

பிறந்த குழந்தையை முதன் முதலில், ஐந்தாவது மாதத்தில் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபடச் சென்றார்கள்.சிற்சபையில் நடராஜப் பெருமானை வழிபட்டபின்,சிதம்பர ரகசியத்திற்காக அனைவரும் அதன்முன் வந்து நின்றனர்.திரையை நீக்கி அப்பைய தீஷிதர், தீப ஆராதனை காட்டினார் .சின்னம்மைக் கையிலிருந்த ''ஐந்து மாதக் குழந்தை இராமலிங்கம்,கலகல வென்று சிரித்தது'' .அந்த சிரிப்பொலி நடராஜர்  சன்னதியே அதிர வைத்தது. அதைக் கண்ட அப்பைய தீஷிதர் அக் குழந்தையை  வாங்கி நடராஜர் முன் படுக்க வைத்து காலில் விழுந்து வணங்கி ,இக்குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல ! இது ஒரு ஞானக் குழந்தை என்று போற்றி, புகழ்ந்து,வாழ்த்தி பிரசாதம் கொடுந்து வழியனுப்பி வைத்தார். ஐந்து மாதக் குழநதையாக இருக்கும்போதே ,உலக ரகசியத்தை சிதம்பர ரகசியத்தின் வாயிலாக இறைவன் காட்டிவிட்டார் என்பதை அவர் எழுதிய திருஅருட்பாவில் பின்னாளில்,பதிவு செய்துள்ளார் .

குடும்பம் சென்னை செல்லுதல் !

இராமலிங்கத்தின் எட்டாவது திங்களில் தந்தை இராமய்யா காலமானார். சின்னம்மை தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான பொன்னேரிக்குச் சென்றார் .சிலமாதங்கள் கழித்து தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.மூத்த பிள்ளையாகிய சபாபதி அவர்கள்,  காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி ஆசிரியரிடம் கல்வி பயின்று புராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார் .

இராமலிங்கத்தையும் தாம் பயின்ற ஆசிரியர் இடமே, கல்வி கற்க அனுப்பி வைத்தார் .இராமலிங்கத்தின் அறிவுத் தரத்தையும் ,பக்குவ நிலையையும் கண்ணுற்ற மகாவித்துவான் இவருக்கு கல்வி போதிக்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்தார் .இராமாலிங்கம் சென்னையில் உள்ள கந்தக் கோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்று தோத்திரம் செய்வதும் ,கவிபாடுவதும் பழக்கமாகக் கொண்டார் .அதைக் கண்ட மக்கள் அவர் பின்னாடி, கூட்டம் கூட்டமாக தொடர ஆரம்பித்தார்கள்.

கல்லாமல் உணரவும்,...சொல்லாது உணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்த அம்மா ,அண்ணார்,அண்ணியார், அக்காள் அனைவரும் அவர்மேல் மிகுந்த பாசங் கொண்டு இருந்தனர்..இராமலிங்கம் எப் பள்ளியிலும் பயின்றதில்லை,...எந்த ஆசிரியர் இடமும் கற்றதில்லை....எந்த குருவிடம் உபதேசம் பெறவில்லை,...எந்த நூல்களும் படித்ததில்லை .கற்க வேண்டியதை இறைவனிடமே கற்றார் .கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். கல்வியும் கேள்வியும் இறைவனிடமே பெற்றதே அன்றி வேறு எவரிடத்தும் பெறவில்லை என்பது அவர் எழுதிய திருஅருட்பா வாயிலாக அறியமுடிகின்றது .

வீதியிலே விளையாடித் திரியும் சிறு பிள்ளைப் பருவத்தே,
அருட்பாடல்களைப் பாடும் வல்லமைப் பெற்று இருந்தார்.''உருவத்திலே சிறியேனாகி ஊகத்தில் ஒன்றுமின்றித் தெருவத்திலே சிறுகால் வீசி ஆடிடச் சென்ற அப்பருவத்திலே நல் அறிவளித்தே உனைப் பாடச் செய்தாய் '' என்றும் ''பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடு வகைப் புரிந்தாய்'' என்றும் ''ஐயறிவிற் சிறிதும் அறிந்து அனுபவிக்கத் தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அப்பருவத்து எளியேன் மெய்யறிவிற் சிறந்த எவரும் களிக்க உனைப்பாடி விரும்பி அருள்நெறி நடக்க விடுத்தனை ''என்று திரு அருட்பாடல்களில் பதிவு செய்துள்ளார் .இதுபோல் அகச்சான்றுகள் ஏராளமாக உள்ளன.

கன்னிச் சொற்பொழிவு !

சென்னையில் உள்ள சோமு செட்டியார் என்பவர்,பெரிய தனவந்தர் அவர் வீட்டில்  ஒவ்வொரு வருடமும் புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து வைத்து இராமலிங்கத்தின் அண்ணார் சபாபதி அவர்களை சொற்பொழிவு செய்ய அழைப்பார்,..அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை ,தம்பி இராமலிங்கத்தை அழைத்து நீ போய் ஒன்று, இரண்டு பக்தி பாடல்களை பாடிவிட்டு வா ,நாளை நான் வருவதாக சோமு செட்டியார் இடம் சொல்லிவிட்டு வா என்று அனுப்பி வைத்தார் .

இராமலிங்கம் அன்று நிகழ்த்திய கன்னிச் சொற்பொழிவு.... ''புயல் மழைப்போல் அருள் மழை அருவிப்போல் கொட்டியது ''  அவையோர் அனைவரையும் மெய்மறக்க செய்தது .அனைவரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு, ''உலகு எல்லாம் அறிந்து ஓதற்கு அறிபவன் '' என்னும் ஒரு வார்த்தைக்கு மட்டும்,இரவு நெடுநேரமாகியும் அவரே நிறுத்தும் அளவிற்கு சொற்பொழிவு ஆற்றினார் .அன்று முதல் அவரையே தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றுமாறு அனைவரும் வேண்ட, அதற்கு இசைந்து சொற்பொழிவு ஆற்றினார் .அந்த சொற்பொழுவு சென்னை நகரம் முழுவதும் பரவியது .அன்றுமுதல் சென்னையில் உள்ள படித்த பண்டிதர்கள், சான்றோர்கள்,படித்தவர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் அணிதிரண்டு அவர் பின்னாடி செல்ல ஆரம்பித்தார்கள்.அவருக்கு அப்போது ஒன்பது வயதாகும்.

மாணாக்கர்கள் !

சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பன்மொழிப் புலவர் வேலாயுதம் என்பவர் ,இராமலிங்கம் புலமையில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் கடிய நடையில் தாமே நூறு செய்யுள்களை இயற்றிக் கொண்டுவந்து ,இவை சங்ககாலச் செய்யுள்களில் உள்ள பழைய ஏடுகளில் காணப்பட்டன என்று இராமலிங்கத்திடம் காட்டினார்.அவற்றைக் கண்ணுற்று இவை சங்கக் காலப் பாடல்கள் அல்ல ,சங்கப் பாடல்களில் இவ்வளவு குற்றம் இருக்காது .இவைப் பொருள் இலக்கணம் தெரியாத கற்றுக் குட்டி பாடியவை எனக் கூறினார் .அதனைக் கேட்டதும் வேலாயுதனார் தம் செய்கைக்கு நாணி தலைகுனிந்து உண்மையைக் கூறி சரணடைந்தார் .அன்றிலிருந்து தன்னுடைய் பணியை விட்டுவிட்டு ,இறுதி வரை இராமலிங்கத்தின் தலைமைத் தொண்டராக, சீடராக இருந்தார் அவருடன் ஆயிரககணக்கான தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல் !

சமஸ்கிருத மொழியில் உள்ள வேத தோத்திரப் பாடல்களில் சிலவற்றிற்கு சங்கராச்சாரியார் அவர்களுக்கு பொருள் விளக்கம் தெரியவில்லை.அவற்றை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று பலமுறை சிந்தித்துக் கொண்டே இருந்தார்.அவருடைய சீடரில் ஒருவர்...சுவாமி ! சென்னையில் உள்ள கந்த கோட்டத்தில் இராமலிங்கசுவாமி என்பவர் ஒருவர் வந்து இறைவனைப் பற்றி பாடிக் கொண்டே இருப்பார் .அவர்களைக் கேட்டால் சந்தேகம் தெளிவடையும் என்று கூறினார் .அதற்கு அவர் ! எனக்கே தெரியாத விளக்கத்தை, ..பள்ளிகூடம் செல்லாது படிக்கத்தெரியாத அவருக்கு என்னத் தெரியப்போகுது என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு ,...இருந்தாலும் உன்னுடைய விருப்பம் போல் ஏற்பாடு செய் ! பார்க்கலாம் என்று சொல்ல ! இருவரையும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள் .

இருவரும் பலமணிநேரம் உரையாடிவிட்டு, இராமலிங்கம் அவர்கள் சமஸ்கிருத மொழியில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாக விளக்கினார் அதைக் கேட்ட சங்கராச்சாரியார் மெய் சிலிர்த்து ஆச்சரியப்பட்டுப்  போனார்.சம்ஸ்கிருத மொழியில் இவ்வளவு பெரிய உண்மைகள் இருக்கிறதா என்பதை அறிந்த அவர் ''உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும்  ''சமஸ்கிருத மொழி தாய் மொழிதானே ?'' என்று இராமலிங்க பெருமானிடம் கேட்டார்.அதற்கு அவர் ஆம் ! ..சமஸ்கிருதம் தாய் மொழிதான் ! அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் .ஆனால்..தாய் என்று ஒன்று இருந்தால் ,தந்தை என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா '' ?

சமஸ்கிருதம் தாய் மொழி என்றால் ! ''தமிழ் தந்தை மொழி "' என்று தமிழுக்கு முதலிடம் கொடுத்தார்.அதைக்கேட்ட சங்கராச்சாரியார் வாய் அடைத்து மவுனமானார்.இந்த சந்திப்பின் நடந்த  உண்மைகள் சென்னை நகரம் முழுவதும் பரவியது..இராமலிங்கத்தின் மீது அளவில்லா பக்தியும் பாசமும் கொண்டு மக்கள் அதிகமாக அவர் பின் தொடர்ந்தனர் .

சென்னையை விட்டு செல்லுதல் !        

இராமலிங்கத்தின் எண்ணம் சிந்தனை,சொல், செயல் அனைத்தும் இறைவன் பால் அதிகமாக சென்றதாலும் மக்கள் அதிகமாக அவருடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமலும்,சென்னையில் இருந்தால் தன்னுடைய இறை அருளுக்கு பாதிப்பு உண்டாகும் என்பதாலும், தன்னுடைய முப்பத்தைந்தாம் வயதில் சென்னையை விட்டு தல யாத்திரையாக ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று கவிபாடும் செயலில் ஈடுபட்டு சிதம்பரம் தில்லையம்பதியில் சில நாட்கள் தங்கினார் .

{அப்பொழுதே சென்னைப் பட்டினம் என்பதை  தருமமிகு சென்னை என்று பல பாடல்களில் பாடி உள்ளார் }

அங்கு இருப்பதற்கும் மனம் செல்லாமல் வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் கிராமத்தில், மணியக்காரர் வேங்கட ரெட்டியாரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் இல்லத்திலே தங்கி அருட்பாடல்களை எழுதிக் கொண்டு இருந்தார்.

தண்ணீரால் விளக்கு எரித்தது !

கருங்குழி வீட்டின் அறையில் ஒருநாள் இரவு ,இராமலிங்கப் பெருமான் அவர்கள் ''திருஅருட்பா ''எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே எண்ணெய்ச் சொம்பு என எண்ணித் தண்ணீர்ச் சொம்புவை எடுத்து விளக்கில் வார்த்தார் விளக்கும் நன்றாக இரவு முழுவதும் எரிந்தது.தண்ணிரில் விளக்கு எரிந்த அவ் அற்புதத்தை சென்னை நகரில் உள்ள தன்னுடைய அன்பர்களுக்கு பாடல் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார் .இவைப் போல் மேலும் பலப் பல அறிய அற்புதங்களை இறைவனுடைய அருளால் கிடைத்தது என்பது அவருக்கு தெரியவருகிறது .எதையும் அவர் வெளியே சொல்லாமல்.காட்டாமல் அருட்பா பாடல்கள் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.

அவர் எழுதிய அருட் பாடல்களை முழுவதும் முதல் ஐந்து திருமுறைகளாக தொகுத்து ''திருஅருட்பா''என்னும் தலைப்பில் பேராசிரியர் வேலாயுதம்,மற்றும் அவர்களுடைய அணுக்கத் தொண்டர்கள் சேர்ந்து 1867.ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள் .அவை மக்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றது.இராமலிங்கம் என்னும் பெயரை திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயராக வேலாயுதம் அவர்கள் முன்மொழிய அன்பர்கள் எல்லாம் அவ்வாறே ஏற்றுக் கொண்டார்கள் .ஆனால் வள்ளலார் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை, அவை ஆராவாரத்திற்கு அடுத்த பெயர் என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர் சித்திபெறும் வரை ,சிதம்பரம் இராமலிங்கம் என்றே தமது பெயரை எழுதி கொண்டு வந்தார் .மக்கள் உள்ளங்களில் ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' எனற பெயர் நிலைத்து விட்டது.

நீதி மன்றம் செல்லுதல்.!

சாதி சமயம் மதம் எல்லாம் பொய்யான கற்பனைக் கதைகள் .''கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்'' என்பதை திரு அருட்பாவில் ,பல  பாடல்கள் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்தி எழுதி உள்ளார் ..அவற்றைக் கண்ணுற்ற சமய வாதிகள் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர் ....

வள்ளலார் எழுதியது திருஅருட்பா அல்ல ,அவை மருட்பா என்று ,சமயவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ,யாழ்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலரை அழைத்து வந்து மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.வள்ளலாருக்கு சம்மன் வந்தது ,சம்மனை வாங்க மறுத்து விட்டார்.தன்னுடைய சீடர் வேலாயுதம் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு கோர்ட்டு சம்மனை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டார்.நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது இராமலிங்கம் இராமலிங்கம் என்று குரல வந்தது ..திடீர் என்று இராமலிங்கம் கூண்டுக்குள் 
( வந்து நின்றார் )பிரசன்னமானார் .நீதிபதி முதற்கொண்டு அனைவரும் எழுந்து கை கூப்பி வணக்கம் செய்தனர்...நீதிபதியும் தன்னை யறியாமல் எழுந்ததை உணர்ந்து சமாளித்துக் கொண்டு,ஆறுமுக நாவலரைப் பார்த்து .நீங்கள் தானே வழக்குத் தொடர்ந்தவர் என்று கேட்க ஆமாம் என்று அவர் பதில் சொல்ல ,இராமலிங்கம் வந்தவுடன் அவரைப் பார்த்து எழுந்து வணக்கம் சொன்னீரே, ஏன் ? என்று கேட்க ,அதற்கு அவர் பெரியவர்,உயர்ந்தவர்,அனைவராலும் மதிக்கத்தக்கவர்,பாராட்டத் தக்கவர் . ஆதலால் வணக்கம் சொன்னேன் என்று சொல்ல ..நீங்களே பெரியவர், உயர்ந்தவர் என்று ஒப்புக் கொண்டதால் ,அவர் எழுதியது ''திருஅருட்பா'' தான்,மருட்பா அல்ல என்று தீர்ப்பு வழங்கினார்.இந்த செய்தி தமிழகமெங்கும் தீப்போல் பரவியது .அவர் புகழ் மேலும் அதிகமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று .

ஆனால் வள்ளலார் நீதி மன்றம் செல்லவில்லை, வடலூரில் உள்ள தருமச்சாலையில் தன்னுடைய அன்பர்களிடம் உரையாடிக்கொண்டு இருந்தார் என்ற செய்தி நீதிமனறத்தில் இருந்த வந்த அன்பர்கள் அறிய, வள்ளலார் இதை வெளியில் சொல்லவேண்டாம் என்று அடக்கிவிட்டார்.நீதி மன்றத்திற்கு சென்றது வள்ளலார் உருவில் இறைவனே சென்றார் என்பது உண்மையாகும் .

தருமச்சாலை அமைத்தல் !

பல தெய்வங்களை வணங்கி அத்தெய்வங்களைப் பற்றி ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள் இயற்றி வந்த வள்ளல்பெருமான் இறுதியிலே, அவைகள் எல்லாம் தத்துவங்களே ஒழிய உண்மையான கடவுளகள் அல்ல என்பதை உணர்ந்த வள்ளலார் ....உண்மையானக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பதை மக்களுக்கு போதித்து வந்தார்,அந்த அருட்பெருஞ் ஜோதிதான எல்லா ஆன்மாக்கள் உள்ளும், உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது .அதுவே அருட்பெருஞ் ஜோதியாகும் .அதனால் எந்த உயிர்களையும் அழிக்கக் கூடாது !.உயிர்க்கொலை செய்யக் கூடாது ! புலால் உண்ணக்கூடாது.என்று தன்னுடைய அன்பர்களுக்கும்.பொது மக்களுக்கும்  கட்டளை இட்டார். ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்''என்ற அவர் வார்த்தை மக்கள் மத்தியிலே நிலைப் பெற்றுவிட்டது.

இறைவனுடைய அருளைப்பெற வேண்டுமானால் ,உயிர்கள் மேல் அன்பு,தயவு,கருணைக் காட்டவேண்டும் என்றார்.,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் பசி பட்டினி ,வறுமை போன்ற கொடுமைகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த உலகத்தில் பசி ,பட்டினி,வறுமை என்னும் கொடுமையால் மக்கள் அழிந்து விடக் கூடாது என்பதை உணர்ந்து ,வடலூர் மக்களிடம் எண்பது காணி இடம் இலவசமாகப் பெற்று 23--5--1867 ,ஆம் ஆண்டு தருமச்சாலையைத் தொடங்கிவைத்தார் அன்றிலிருந்து இன்றுவரை பசி என்று வந்தவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கொடுக்கப்பட்டு வருகின்றன.

''அறிவு விளங்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு'' என்றார்.''...''உயிர் இரக்கமே இறை வழிபாடு'' என்றார்....''கருணை ஒன்றே இறை அருளைப் பெறும் துவாரமாகும்'' என்றார் .எங்கே கருணை இயற்கையில் உள்ளன  அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி ! என்னும் உண்மையை மக்களுக்குப் போதித்து வந்தார் .

வள்ளலாரின் கொள்கைகளில் முதன்மையானது முக்கியமானது;-- ஜீவகாருண்யம் என்பதாகும்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்.இறைவனுடைய கோட்டையின் உள்ளே இருக்கும் அருளைப் பெற வேண்டுமானால் ஜீவ காருண்யத்தால் மட்டுமே பெறமுடியும் .வேறு பக்தி வழிபாடு, தியானம் ,தவம்,யோகம்,போன்ற எந்த செயல்களாலும் இறைவனுடைய அருளைப் பெறமுடியாது என்பதை மக்களுக்குப் போதிக்க தருமச்சாலையைத் தோற்றுவித்தார் .ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய தருமச்சாலையில் அவரவர்களால் முடிந்த பொருள் என்னும் கருணையை செய்து அதனால் வரும் ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்பதை எழுதிவைத்துள்ளார்.அவற்றை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்குதடை இல்லாமல் உணவுப்பொருள்கள் வாரி  வழங்கிக் கொண்டு வருகிறார்கள் .அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணையாமல் இன்றுவரை எரிந்து கொண்டு ஏழைகளின் பசிக் கொடுமையைப் போக்கிக் கொண்டு வருகிறது.

சன்மார்க்க கொள்கைகள் ;---

1,கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !
2,ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
3,கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது !
4,புலால் உண்ணலாகாது (மாமிசம் ) !
5,சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது !
6,சாதி ,சமயம்,மதம்,போன்ற வேறுபாடுகள் கூடாது !
7,இறந்தவரைப் புதைக்க வேண்டும் எரிக்க கூடாது !
8,கணவன் இறந்தால் மனைவி  தாலி வாங்கக் கூடாது !
9,மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது !
10,பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் !
11,பெண்களுக்கும் யோகம் தியானம் முதலியவைகளை சொல்லித் தரவேண்டும் !
12,ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் .
13,எதிலும் பொது நோக்கம் வேண்டும் !
14,கருமாதி திதி போன்ற சடங்குகள் செய்யக் கூடாது 
15,ஏற்றத் தாழ்வு மக்களிடம் இருக்கக் கூடாது !
16,எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாது காக்க வேண்டும் !
17,புராணங்களும் இதிகாசங்களும் முடிவான  உண்மையை தெரிவிக்க மாட்டாது  !


போன்ற கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டும் ,போதித்துக் கொண்டும் இருந்தார் ////

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !

வள்ளல்பெருமான் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக,சாதி ,சமயம்,மதம்,இனம்,மொழி,நாடு என்ற பேதம் அற்ற. ஒரு புதிய பொது மார்க்கத்தை தோற்றுவித்தார் அதற்கு பெயர் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்று பெயர் வைத்துள்ளார் .அச் சங்கத்தின் கொள்கைகள் ;--.

நம்வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அன்று ஏழைகளை அழைத்து ''அன்னவிரயம்'' செய்யவேண்டும் .இதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கக் கொள்கைகளாகும் அக் கொள்கைகளைப் பின்பற்றவும் பரப்பவும் 1865 ,ஆம் ஆண்டில் வடலூரில் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள்.

மனிதன் ஒழுக்கமுடன் வாழ வேண்டுமானால்;--- .இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்,என்னும் நான்கு ஒழுக்கங்களை கடைபிடித்தால் மனிதன் மனிதனாக வாழ்ந்து இறை நிலையை அடையமுடியும் என்பதால் ஜீவ காருண்யம் என்னும் உரைநடை நூலை முதன்முதலில் எழுதி வைத்துள்ளார் .அவை மக்கள் மத்தியிலே இன்றுவரை பாராட்டப்பட்டு வருகிறது

''மனிதனின் மரணம் இயற்கை அல்ல செயற்கையால்தான் மரணம் வருகின்றது .மரணத்தை வெல்லும் வழி உண்டு என்பதை கண்டுபிடித்து தானும் ''மரணத்தை வென்று''  வாழ்ந்து காட்டி, மற்றவர்களும் மரணத்தை வென்று வாழமுடியும் என்பதை உலகுக்கு பறைசாற்றி உள்ளார் ''.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

உண்மையானக் கடவுளை ஒளிவடிவமாக கண்ட வள்ளலார் ,அதற்கு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! என்னும் பெயர் வைக்கிறார் ,அப்பெயரை இறைவனே எடுத்துக் கொடுத்தார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே ,சாதி சமயம்,மதம்,போன்ற வேறுபாடுகள் இல்லாத உலகப்  பொது வழிபாட்டு முறையை மக்களுக்கு காட்டவே ;--வடலூரில்...உலகில் உள்ள  எட்டு திக்கு மக்களும் வந்து வழிபட வேண்டி ,எண்கோண வடிவில் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' 25 --1--1872 ,ஆம் ஆண்டு அமைத்து இன்று வரை ஜோதி தரிசனம் காண்பித்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிப்பட்டு தம் குறைகளை நீக்கி அருள் பெற்று ,மனம் நிறைவு பெற்று சென்று கொண்டுள்ளார்கள் .

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கை --உயர்ந்த அறிவுள்ள மனிதன் இறை அருளைப்பெற்று ஊன உடம்பு, ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு சாகாமல் இருக்கமுடியும்,சாகாமல் வாழமுடியும்  என்னும் பேருண்மையை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து காட்டினார் ....''சுத்த சன்மார்க்க மரபு, என்பது எதுவெனில்  அவை மனிதன் சாகாதிருப்பதே'', ,''சாகாதவனே சன்மார்க்கி'' என்பது வள்ளல் பெருமானின் உபதேசமாகும்.---''என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்''என்பது அவரது முடிந்த முடிவான கொள்கையாகும்./''முழுமையான பரிபூரண இறை அருளைப் பெற்றால் மரணம் இல்லாமல் மனிதன் வாழமுடியும்'' எனற உயர்ந்த கொள்கையை விஞ்ஞானம் ,அறிவியல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு விளக்கி வைத்துள்ளார் .

அழியும் பொருளான மல உடம்பை,அழியாத அருள் உடம்பாக மாற்ற முடியும் என்ற உண்மையைக் கண்டு பிடித்து வாழ்ந்து காட்டியவர் . மனித உடம்பின் உள்ள பூதத் அணுத் துகள்களை அருள் துகள்களாக [ ஒளியாக } மாற்றும் வேதியல் மாற்றத்தைக் கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான் .

அழியும் பொருளை விட்டு அழியாத அருளை பெற வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய வழிபாட்டு முறைகளாகும். 

மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ள பிறப்பாகும்.மனிதன் தன்னுடைய உடம்பை இறை அருளால் ,சுத்த தேகம்,பிரணவதேகம் ,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று கொண்டால் இறைவனுடைய தேகமான ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு இறப்பு ,பிறப்பு இல்லாமல் கடவுளுடன் சேர்ந்து ஐந்தொழில் வல்லபம் பெற்று ''நித்திய சுத்த சத்திய வாழ்வு ''என்னும் ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு'' வாழ்வதே மனித பிறப்பின் முக்கிய கொள்கைகளாகும் என்பதை வலியுறித்திக் கொண்டே இருந்தார் .

சித்திப் பெற்ற இடம் !

வள்ளல்பெருமான் சொல்லியதோடு இல்லாமல்,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டினார் .வடலூருக்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்கு  சென்று அங்கேயே  உறையத் தொடங்கினார் அவர் தங்கி இருந்த இடத்திற்கு ''சித்திவளாகத் திருமாளிகை'' என்று பெயர் .அவர் அங்கே ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் நான் இப்போது இந்த அறையில் சென்று இறைவனோடு இரண்டற கலக்கப்போகிறேன் ,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ''இந்தக்கதவை சாத்திக் கொள்ளுங்கள் ,அப்படி யாராவது  பார்க்க வேண்டும் என்று பார்க்க நேர்ந்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் ,வெறு வீடாகத்தான் இருக்கும் ''என்றும் ,

நீங்கள் அனைவரும் நான் சொல்லிய வண்ணம் உங்கள் வாழ்க்கையில் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் நீங்களும் என்னைப் போன்ற பெரிய பேரின்ப ஆன்ம லாபத்தை அடைவீர்கள் இது சத்தியம் ,இது சத்தியம் .என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்,

சித்தி பெற்ற ஆண்டு 30--1--1874,--ஸ்ரீமுக வருடம் தைமாதம் பத்தொன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை ,அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஒன்றாகும் .

வள்ளலாரின் செய்தியை அறிந்த கடலூர் மாவட்ட ஆங்கிலேய ஆட்சியாளர் மற்றும் தாசில்தார் போன்ற அதிகாரிகள் வந்து மக்கள் முன்னிலையில் கதவை திறந்து பார்த்தார்கள் வெறு வீடாகத்தான் இருந்தது .வள்ளலார் இறைவனோடு கலந்து பேரின்ப சித்தி என்னும் பெருவாழ்வு பெற்றுவிட்டார் ,என்பதை அரசு பதிவேட்டில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.இவை யாவும் உண்மை செய்திகளாகும்..

வள்ளலார் அவர்கள்.சித்திப் பெற்றபின் அவர் எழுதிய ஆறாம் திருமுறை என்னும் திருஅருட்பா வெளியிடப்பட்டது..அதில் அனைத்து உண்மைகளும் தெள்ளத்தெளிவாக உள்ளன.''உலக ரகசியங்களையும்,.உயிர்களின் பிறப்பு இறப்பு ரகசியங்களையும்,கடவுள் யார் என்ற உண்மைகளையும்.,உலகம் முழுவதும் சாதி,சமயம்,மதம்,அற்ற சகோதர உரிமையுடன் வாழ வேண்டும்.உலகம் முழுவதும் அமைதி நிலவவேண்டும்''..''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை ''அனைவரும் கடைபிடிக்க வேண்டும் .''ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு....உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்பதை மிகவும் வலியுறுத்தி எழுதி வைத்துள்ளார்.

மேலும் ;--உரைநடை நூல்கள் அதிகம் இல்லாத காலத்தில் மனுமுறை கண்ட வாசகம்,...ஜீவகாருண்ய ஒழுக்கம் ,...ஒழிவியல் ஒடுக்கம்,...தொண்டமண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரைநடை,...சின்மயதீபிகை...போன்ற உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வள்ளல்பெருமான் ஒருவரே .மேலும்,தமிழ் நாட்டில் முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவரும் அவரே ! நூல் ஆசிரியராக ,உரை ஆசிரியராக ,பதிப்பாசிரியராக ,போதக ஆசிரியராக,,ஞான ஆசிரியராக ,வியாக்கியான கர்த்தராக ,சித்த மருத்தவராக ,அதற்கும் மேலே கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .எனப் பன்முகங் கொண்ட அருளாளர் வள்ளல்பெருமான் அவர்கள்.சுமார் ஆறாயிரம் அருட்பாடல்களை எழுதி வைத்துள்ளார்.

நமது இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வள்ளலாரின் வாழ்க்கை வரலாறுகளையும்.கொள்கைகளையும் ,பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் பாடப்புத்தமாக கொண்டு வந்தால் எதிர்கால மாணவர்கள்.ஒழுக்க நெறியோடு வாழ்வதற்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பது சன்மார்க்க சான்றோர்களின் விருப்பமும் வேண்டுதலுமாகும்.

நமது தமிழக அரசு வள்ளலார் வருவிக்க உற்ற நாளை ஆன்மநேய ஒருமைப்பாட்டுத் தினமாக கொண்டாடி மகிழ்கின்றது ,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஐந்தாம் நாளன்று மதுக்கடைகளும், மாமிசக்கடைகளும் சட்டப்படி அடைக்கப்பெற்று வள்ளலார் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியதாகும் ;.நம்முடைய தமிழக அரசும் ,மத்திய அரசும் வள்ளலார் அவதரித்த நாளை உலக ஒருமைப்பாட்டுத் தினமாக அதிகாரப் பூர்வமாக அறிவித்து மக்கள் பயன் அடைய செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

இதுவே வள்ளலாரின் வாழ்க்கையின் சிறிய சுருக்கமாகும்.மேலும் அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை ! ;---வள்ளலார்

அருட்பெருஞ் ஜோதி !

என்றும் உங்கள் ஆன்மநேயன்;--
ஈரோடு --செ, கதிர்வேல்
போன் ;--9865939896.


திங்கள், 19 செப்டம்பர், 2016

இன்று ஒரு சிந்தனை !

இன்று ஒரு சிந்தனை !
நாம் நமக்கு அஜாக்கிரதையால் மரணம் வந்து விட்டால் மீண்டும் இந்த மனிதப் பிறப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற கேள்வி மக்களிடம் அதிகமாக உள்ளது,
இதற்கு என்ன பதில் !
இதற்கு வள்ளலார் சொல்லி உள்ள பதில் !
இந்த மானிட தேகம் ஆண்டவர் கொடுத்த தேகம் அன்று ஆண்டவர் சிருஷ்டி அன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் ஆன்மா வந்து வாழ்வதற்கு மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம்.அதற்கு மாயா சிருஷ்டி என்று பெயர் .
மரணம் அடைந்தால் முன் இருந்த ஞான, அஞ்ஞானத் தோடு தான் பிறப்பார்கள் பிறப்புக் கொடுக்கப்படும் ..இவைகள் யாவும் மாயையின் வேலைகள் ..
நாம் உண்மையான ஆண்டவராகிய அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொண்டு .கிஞ்சித்து ஞான விசேஷங்களை அறிந்து உண்மை ஒழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்ந்தால்,அடுத்த பிறப்பில் மாற்றம் உண்டாகும்...
மாயையினால் தேகம் கொடுக்கப்படும் போது ,உண்மையான ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டும் எப்படி தேகம் மாற்றிக் கொடுக்கப் படும் என்ற கேள்வி வரலாம் .இல்லையா ?
மனித தேகம் என்பது இறுதியான கடைசி தேகம் .இந்த தேகத்தில் ,இறைவனை தொடர்பு கொண்டு அருளைப் பெற்று என்றும் அழியாத சுத்த பிரணவ ஞான தேகம் பெற வேண்டும் என்பது ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சட்டம் கட்டளை ,,,அந்த சட்டத்தை மீறாமல் மாயை ,மாமாயை,பெருமையை என்ற மூன்று நிர்வாகிகள் இந்த உலகத்தில் ,,,எல்லா ஆன்மாக்களுக்கும் வாழ்வதற்கு அதன் அதன் தகுதிக்கு தகுந்தாற் போல் தேகம் கொடுக்கப் படுகின்றது...மனித தேகத்திற்கு மட்டும் விதி விளக்கு அளிக்கப் பட்டு உள்ளது.
அசுத்தங்களை நீக்க வேண்டும் !
மனித தேகத்திற்கு மட்டும் உயர்ந்த அறிவு கொடுக்கப் பட்டு உள்ளது.,மனித தேகம் எடுத்தவர்கள் .அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு சுகங்களை அனுபவித்து பின்பு அவற்றை பற்று அற விட்டு,நம்மை அனுப்பிய ,இறைவனை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இயற்கை சட்டம் .
நாம் இயற்கையின் உண்மை தெரியாமல் ,சாதி,சமயம்,மதங்கள் காட்டிய பொய்யான கொள்கைகளைக் பின்பற்றி வாழ்வதால்.மரணம் வந்து கொண்டே உள்ளது...மரணம் வந்தாலும் பரவாயில்லை.அடுத்த பிறப்பு என்னவென்றே தெரியாமல் மூடமாக வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
வள்ளலார் வந்துதான் உண்மை நெறியான சுத்த சன்மார்க்க புது நெறியை, தனி நெறியை,திரு நெறியை மனித தேகம் எடுத்த மக்களுக்கு,தெளிவாக பாடல்களாகவும்,உரை நடைப்பகுதிகளிலும் எழுதி வைத்து உள்ளார் ...நாம் படித்து ,அவற்றில் உள்ளதுபோல் வாழ்ந்து வந்தால் ,மாயை நமக்கு உண்மையான வழியைக் காட்டி , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெரும் வழியையும் காட்டும்.
எனவே நாம் மனுஷ்ய வல்லபத்தால் தனக்கு இருக்கின்ற அசுத்தங்களை நீக்கிக் கொள்ள வேண்டும்,.அடுத்து இது நல்லது,இது கெட்டது என்று பகுத்து அறியும் ஞான விசேடத்தால் விஷய வாசனையில் கரணங்களை செல்ல வொட்டாமல் தடுத்துக் கொண்டால் ,மட்டுமே இறைவன் அருளைப் பெற மாயை வழியைக் காட்டும்..
அதன்பின் நாம் இடைவிடாது உண்மையான இறைவனை அறிவால் அறிந்து அன்பு செய்து ,தோத்திரம் செய்தும் நம்முடைய குறையை ஊன்றியும் ,இவ்வண்ணமாக ,இருக்கின்றபோதும்,படுக்கின்ற போதும்,இடைவிடாது இவ்விசாரத்தோடு ,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால் ,ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் .அதன்பின் நாம் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம் .
அடுத்த பிறப்பு என்ன என்பதும்,மரணம் எப்போது வரும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழலாம் .பிறப்பு இறப்பு என்பதுதான் எல்லோருக்கும் தெரியும்,ஆனால் என்ன பிறப்பு ,எங்கே பிறப்போம் என்பது யாருக்கும் தெரியாது .
சுத்த சன்மார்க்கிகள் சுத்த சன்மார்க்க நெறியை முழுமையாக கடைபிடித்தால் இப்பிறப்பிலே மரணத்தை வெல்லும் வழி கிடைக்கும்,கொஞ்சம் அஜாக்கிரதையால் மரணம் அடைந்தாலும் அடுத்து மனிதப் பிறப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து ,வள்ளலார் காட்டிய ஜீவ காருண்ய உயிர் இரக்கத்தைக் கடைபிடித்து ,இடைவிடாது இறைவனைக் தொடர்பு கொண்டு வாழ்வோம் எல்லா நன்மைகளும் நம்மைத் தேடி வரும் என்பது சத்தியம்.
தொடரும்....
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 15 செப்டம்பர், 2016

ஆசைப்படு !

ஆசைப்படு !

ஆசைக்கு மறு பெயர் பற்று!
எதை பற்ற வேண்டும்.

பற்று அற்றவனைப் பற்ற வேண்டும்.அதற்கு அன்பு காதல் என்பதாகும்.

ஆசை இருந்தால்தான் அன்பு.காதல் வரும்.ஆசை இல்லாமல் எதையும் அடையமுடியாது.

ஆசைப்படு எவை நமக்கு தேவை என்பதை அறிந்து.தெரிந்து.புரிந்து ஆசைப்பட வேண்டும்.

ஆசைதான் அழிவுக்கு காரணம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் .அவை முற்றிலும் தவரானது .

 பொருள் சம்பாதிப்பதில்  ஆசை இருக்க வேண்டும் பேராசை இருக்கக் கூடாது .

அருள் சம்பாதிப்பதில் அதிகமான பேராசை இருக்க வேண்டும் ,

வள்ளலார் "அருள்""
 பெருவதற்கு ஆசை படுங்கள் என்கிறார் .பேராசைப் படுங்கள் என்கிறார்

ஆசை இல்லை என்றால் அவன் மனிதன் இல்லை .அவன் உணர்வு இல்லாத ஜடமாக மாறிவிடுவான்

 வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

 ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப்பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்

ஏசற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில் அருட் திரு நடனம் புரியத் திருவுளம் கொண்டு எழுந்து அருளும் திருநாள் இங்கு இதுவே

மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே !

என்ற பாடல் வாயிலாக உலக மக்களை அழக்கின்றார் வள்ளலார் .

எனவே ஆசைப்படுங்கள் !

இறைவனை காதலிக்க ஆசை படுங்கள் ! உண்மை இறைவனைக் கண்டு உண்மையான காதல் கொள்ள  ஆசைப்படுங்கள் என்கின்றார்

ஆசை  வேண்டும் .ஆசை வேண்டும் அசைக்க முடியாத ஆசை வேண்டும் .

இறைவனுடன் இணைவதற்கும் அணைவதற்கும்  ஆசைப்படுங்கள் !

அப்போது தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்

பற்று அற்றவனை பற்ற ஆசைப்படுங்கள் .

இறைவனைக் காதலிப்பவர்களே அறிவு உள்ளவர்கள் .

அதுதான் அழியாத பேரின்ப காதல் .

அந்தக் காதலை எவராலும் பிரிக்க முடியாது .அழிக்க முடியாது .

நீ என்னை விடமாட்டாய்.நான் உன்னை விட மாட்டேன் இருவரும் ஒன்றானோம் என்பார் வள்ளலார்


காதல் கரைகடந்து போகின்றது இனி தாங்கமுடியாது.நீ கண்டுகொளாய் எனிலோ என் உயிரையும் விட்டுவிடுவேன்.உன்மேல் ஆணை என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்.

இறைவனிடம் இனைந்தால்.சேர்ந்தால் தான் அருள் என்னும் திரவம்.ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அந்த அருள் சுரந்து அனுபவிக்கும் இன்பம் அழியாத பேர் இன்பம்...


அழியும் இன்பத்தை விட்டு அழியாத பேர் இன்பத்திற்கு ஆசைப்படுங்கள் .

அந்த அருள் இன்பம் கிடைத்தால் மட்டுமே .இந்திரிய இன்பம்.கரண இன்பம்.ஜீவ இன்பம்.ஆன்ம இன்பம்.கிடைக்கும்.

அதற்கு ஆன்ம இன்ப வாழ்வு என்று பெயர்.அந்த இன்பம் பூர்த்தி அடைந்தால் மட்டுமே.மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வள்ளலார் கேட்கும் வரம் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வள்ளலார் இடம் உமக்கு என்ன வரம்  வேண்டும் என்று கேட்கிறார்?

வள்ளலார் கேட்கும் வரம் !

 எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,நான் கேட்கும் வரத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் கேட்கிறேன் ,

எல்லா அருளாளர்களும் விதியை நம்பினார்கள் .விதியை மாற்ற முடியாது என்றார்கள் .

விதியை மதியால் வெல்ல முடியும் என்பதை நான் உணர்ந்தேன் .விதியை மாற்றும் அருள் ஆற்றல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உங்களால் மட்டுமே முடியும் என்பதும் தெரியும் .

நான் கேட்கும் வரம் இதுதான் !

மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்

கண்ணுறப் பார்த்தும் செவி யுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்

நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்க நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் !

என்று இறைவனிடம் கேட்கின்றார் ,

வள்ளலார் போல் இறைவன் இடம் இப்படி வரம் கேட்டது உலகில்  எவரும் இல்லை .

இந்தப் பாடலில் உள்ள விபரங்களை நன்கு கவனிக்க வேண்டும் .

அவருக்காக கேட்காமல் மண் உயிர்கள் முதல் உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் வரை ,அனுபவிக்கும் துன்பங்களைப் போக்க வேண்டும் என்பது தான் அவர் கேட்ட வரம் .

துன்பம் என்பது சாதாரண துன்பம் அல்ல .மரணம் என்னும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதாகும் .

துன்பங்களைப் போக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?

அருள் வேண்டும் ,

வள்ளலாரின் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையை, பொதுமையை  உணர்ந்து இறைவன் அருளை வாரி வாரி வழங்கினார் .

மரணத்தை வென்றார் ,

அருள் ஆட்சியையும் பெற்றார்

அதனால்தான் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்கிறார் .

நாமும் பெறலாம் நல்ல தருனம் இதுவே . . . .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

வள்ளலார் கேட்கும் வரம் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வள்ளலார் இடம் உமக்கு என்ன வரம்  வேண்டும் என்று கேட்கிறார்?

வள்ளலார் கேட்கும் வரம் !

 எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,நான் கேட்கும் வரத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் கேட்கிறேன் ,

எல்லா அருளாளர்களும் விதியை நம்பினார்கள் .விதியை மாற்ற முடியாது என்றார்கள் .

விதியை மதியால் வெல்ல முடியும் என்பதை நான் உணர்ந்தேன் .விதியை மாற்றும் அருள் ஆற்றல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உங்களால் மட்டுமே முடியும் என்பதும் தெரியும் .

நான் கேட்கும் வரம் இதுதான் !

மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்

கண்ணுறப் பார்த்தும் செவி யுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்

நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்க நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் !

என்று இறைவனிடம் கேட்கின்றார் ,

வள்ளலார் போல் இறைவன் இடம் இப்படி வரம் கேட்டது உலகில்  எவரும் இல்லை .

இந்தப் பாடலில் உள்ள விபரங்களை நன்கு கவனிக்க வேண்டும் .

அவருக்காக கேட்காமல் மண் உயிர்கள் முதல் உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் வரை ,அனுபவிக்கும் துன்பங்களைப் போக்க வேண்டும் என்பது தான் அவர் கேட்ட வரம் .

துன்பம் என்பது சாதாரண துன்பம் அல்ல .மரணம் என்னும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதாகும் .

துன்பங்களைப் போக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?

அருள் வேண்டும் ,

வள்ளலாரின் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையை, பொதுமையை  உணர்ந்து இறைவன் அருளை வாரி வாரி வழங்கினார் .

மரணத்தை வென்றார் ,

அருள் ஆட்சியையும் பெற்றார்

அதனால்தான் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்கிறார் .

நாமும் பெறலாம் நல்ல தருனம் இதுவே . . . .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?

இந்த வாதம் முன்னமே நடந்து முடிந்தது .

அறியாமை என்னும் இருளைப் போக்குபவர் எவரோ அவர்தான்  குரு என்பவராகும் .

இந்த உலகத்தில் அறியாமையை போக்குபவர் எவரும் இல்லை .

அறியாமையை போக்குபவர் தகுதி என்ன என்பதை தெரிந்து கொண்டால் புரிந்து விடும் .

உலகில் உள்ள அறிவு சார்ந்த அருளாளர்கள் இறைவனைத் தான் குருவாக ஏற்று உள்ளார்கள் .

மனிதனை குருவாக ஏற்று உள்ளவர்கள் அனைவருமே மாண்டு போனார்கள் .குருவாக இருந்தவர்களும் ் மாண்டு போனார்கள் .

வள்ளலார் கொள்கைப்படிப் பார்த்தால,் மரணம் அடையாமல் வாழும் அருளாளர்களை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் .

அதற்கும் மேலாக நம்மைப் படைத்தவன் தான் குருவாக இருக்கும் தகுதி உடையவர் .அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர .

வள்ளலாரே என்னை வணங்காதீர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்குங்கள் என்கிறார் .

எல்லோருக்கும் குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சிற்சபையின் கண் மனதை செலுத்துங்கள் என்றார் .

குருவைத் தேடிச் செல்லுங்கள் என்று எந்த இடத்திலும் வள்ளலார் சொல்ல வில்லை .

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்கள் !

மருட்பகை தவிர்த்து வாழ்வித்து எனக்கே அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !

அடுத்து :-
 ஆதியும் அந்தமும் இல்லதோர் அம்பலத்து ஆடும்

ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்

நீதி கொண்டு உரைத்தேன் இது நீவிர் மேலே ஏறும் வீதி

மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி !

நாம் மேலே ஏற வேண்டும் என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே குருவாக ஏற்றுக் கொள்வதுதான் சாலச் சிறந்தது . .

மற்றபடி அவரவர்கள் விருப்பம் எப்படியோ அப்படி செய்யுங்கள் .

அது உங்கள் விருப்பம் .

விரிக்கில் பெருகும் . . . . .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

நம முடைய உடம்பு !

குரு என்பவர் யார் ?


மனமே குரு என்று மிக அழகாக பதிவு செய்து இருந்தார் . . . .

 நம்முடைய உடம்பில் மனம் என்பது ஒரு கருவி என்கிறார் வள்ளலார் .

அப்படி இருக்கும் போது கருவி குருவாக இருக்க முடியுமா ? நாம் வாழும் உடம்பு என்னும்  வீட்டின் தலைவன் யார் ? அவர்தான் ஆன்மா என்னும் உள் ஒளி என்பதாகும் .

மனம் என்னும் கருவியானது ,தன்னுடைய  தலைவன் யார் என்பது தெரியாமல் தன் விருப்பம் போல் வாழ்வதால் துன்பம், துயரம் ,அச்சம் ,பயம் ,மரணம் போன்றவை வந்து கொண்டே இருக்கின்றது .

இதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக குருவைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம் .

வெளியில் அலைமோதும் மனம்தான் குருவைத் தேடுகின்றது .

அப்படி இருக்கும் போது மனமே எப்படி குருவாகும் .

ஆன்மா என்னும் குருவின் இயக்கம்  இல்லை என்றால் கருவி என்னும் மனத்திற்கு வேலை இல்லை .

நம்முடைய உடம்பு நான்கு பிரிவுகளாக உள்ளது .

அகம் ,அகப்புறம் ,புறம் ,புறப்புறம் என்பதாகும் .

அகம் என்னும் ஆன்மா இல்லை என்றால் , அகப்புறம் என்னும் உயிர் இல்லை .புறம் என்னும் மனம் .புத்தி ,சித்தம் ,அகங்காரம் என்னும் சூட்சும  கருவிகள் இல்லை .புறப்புறம் என்னும் கண்,காது.மூக்கு,வாய் ,உடம்பு என்னும் கருவிகள் இல்லை .

ஆன்மா என்னும் உள் ஒளி இயங்கினால் மட்டுமே கருவிகளுக்கு வேலை உண்டு .

எனவே குருக்கள் இரண்டு வகையாக உள்ளது .

பொருள் கிடைக்க வழிகாட்டும் குரு ஒன்று .

அருள் கிடைக்க வழி காட்டும் குரு ஒன்று .

மனித தேகம் கொண்டவர்களுக்கு அருள் கிடைக்க வழி காட்டும் குருவே சிறந்த குரு .

உடம்பில் ஆன்மா என்பது  குரு .அந்த ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வழிகாட்டிய உண்மையான குரு, நம்முடைய வள்ளலார் .

புறக்குரு வள்ளலார் .அகக் குரு  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர .

அழியாமல் இருப்பது எதுவோ ,அதுவே குருவாகும் .

அழியாமல் வாழ்வதற்கு அழியாமல் இருக்கும் ஒளியைத் தொடர்பு கொண்டு வாழ்வாங்கு வாழவோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

அறிய வேண்டியதை அறிய வேண்டும் !

அறிய வேண்டியதை அறியாமல்,அறிய வேண்டாததை அறிந்து கொள்வதால் , அவதிப்படுவது மனம் ,

மனம் மகிழ்ச்சியைத் தேடுகிறது .தேடுவது மனம் .அப்படி இருக்க மனம் எப்படி குருவாகும் .

தேடுபவர் குரு அல்ல .கொடுப்பவரே குரு .

மனம் என்பது பேய் பிடித்த குரங்கு என்கிறார் வள்ளலார் .குரங்கு குரு ஆக முடியுமா ?குரங்கை அடக்குபவனே குரு ...

குரங்கை அடக்க குரு தேவை ,அந்த குருதான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் .அவரே அதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர .

அவர் எங்கு உள்ளார் நம் சிரநடுவில் ஆன்ம ஒளியாக உள்ளார் .

ஒவ்வொருவருக்கும் அவரே அந்த ஒளியே குருவாகும் ,

இடைவிடாது தொடர்பு கொள்வோம் இன்பமுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?

அறிவு உடம்பில் நான்கு வகை !

அறிவு என்பது உடம்பில் நான்கு பிரிவுகளாக நான்கு வகையாக செயல் படுகிறது .

இந்திரிய அறிவு ,
கரண அறிவு ,
ஜீவ அறிவ,,
ஆன்ம அறிவு ,

என்பதாகும் ,அதற்கு மேல் அருள் அறிவு ,கடவுள் அறிவு என்பதும் உண்டு .

இதில் எந்த அறிவு உயர்ந்தது என்பதை சிந்திக்க வேண்டும் .

நாம் எந்த அறிவைக் கொண்டு இயங்கிக் கொண்டு உள்ளோம் .

இந்திரிய அறிவைக் கொண்டும,் கரண அறிவைக் கொண்டும் செயல் பட்டுக் கொண்டு உள்ளோம் . அந்த அறிவு எப்படி வந்தது .? நம் முன்னோர்கள் அருளாளர்கள் சொல்லியதை கேட்டு பார்த்து செயல் பட்டுக் கொண்டும் வாழந்து கொண்டும்  உள்ளோம் .

இவைகள் எல்லாம் உண்மையானதா என்றால் இல்லை .ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைக் காட்டி விட்டு சென்று விட்டார்கள் .

நாம் அவற்றை விடாமல் பின் பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளோம் .

அதனால் நமக்கு உண்மையான அறிவு விளக்கம் இல்லாமல் ,இந்திரிய அறிவிலும் கரண அறிவிலும் பின் பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளோம் .

வள்ளலார் . . . .  எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த  லாபம், ஆண்டவர்  என்னை ஏறா நிலைமிசை ஏற்றி வைத்து உள்ளார் என்கிறார் .

இதுவரையில் நாம் ஜீவ அறிவுக்கும் ,ஆன்ம அறிவுக்கும் செல்லவில்லை .மன அறிவைத் தெரிந்து கொண்டு மனிதனாக வாழ்ந்து கொண்டு உள்ளோம் .

மன அறிவானது.,  ஜீவன் அறிவு  வழியாக ஆன்ம அறிவைத் தொடர்பு கொள்ள வேண்டும் .

அதனால் தான் ஜீவ காருண்யம் வேண்டும் என்கிறார் .ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் .

அதனால் ஜீவ காருண்யமே குரு என்று ஆகிவிட முடியுமா ? முடியாது .அது குருவை காட்டும் வழியாகும் .

ஜீவ காருண்யத்தால் ஜீவ அறிவு விளக்கம் அடையும் .

ஜீவ அறிவு விளக்கம் அடைந்தால் தான் ,ஜீவன் என்னும் உயிர் .தன்னை பாதுகாக்க ஆன்ம அறிவுடன் தொடர்பு கொள்ளும் ,

ஆன்ம அறிவு விளக்கம் அடைந்தால் அருள் அறிவு விளக்கம் அடையும் .

அருள் அறிவு  பூரண விளக்கம் அடைந்தால் ,கடவுள் அறிவு தோன்றும் வெளிப்படும் .

இதில் எது உயர்ந்தது . இயற்கை உண்மையான கடவுள் உயர்ந்தவர் என்பதை நாம் புரிந்து கொண்டால் .

எல்லாம் வல்ல இறைவன் தான் குரு என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

அந்த இயற்கை உண்மையான கடவுள் இருக்கும் இடம் தான் சிற்சபை என்னும் சிரநடுவில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் .

எனவேதான் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே .

என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் நமது அருள் தந்தை அருட்பிரகாச வள்ளலார் .

நமக்கு உண்மையான குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர ஒருவரே !

வள்ளலார் காட்டிய பாதையில் வாழ்ந்து வளம் பெறுவோம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,

மொழி இரண்டு வகை !

மொழி இரண்டு வகை !

 குறள் மொழி ஒன்று ,அருள் மொழி ஒன்று ,

குறள் மொழி என்பது ,விந்து நாதத்தால் எழுவது ,உணர்வது ,சொல்வது ,எழுதுவது .

அருள் மொழி என்பது ,பர நாதத்தால் ,பர ஞானத்தால் எழுவது .உணர்வது சொல்வது ,எழதுவது .

விந்து நாதத்தால் தோன்றியது அனைத்து மொழிகளும் ,அழி்து விடும் .

 பர நாதத்தால் தோன்றிய ஒரே மொழி தமிழ் மொழி யாகும் ,என்றும் அழியாதது .

விந்து நாதத்தில் தோன்றிய மொழிகளில் எதைச் சொன்னாலும் அவைகள் அழிந்து போய் விடும் .

பர நாதத்தில தோன்றிய மொழியில் எதைச் சொன்னாலும் போதித்தாலும் அவைகள் நிலைத்து நிற்கும் .

எனவேதான் வள்ளலார் சொல்லுவார் .

இறைவா என்னை வேறு மொழிகளில் பிறபிக்காமல் தமிழ் மொழியில் பிறப்பித்த உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் என்று போற்றி புகழ்கின்றார் .

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

நம்முடைய வள்ளலார் எழுதிய "திரு அருட்பா " பர நாதம் என்னும் அருள் ஞானத்தால் எழுதியது .

அதனால்தான் "சாகாக்கல்வியை" போதிக்கின்றது .மற்ற நூல்கள் அனைத்தும் சாகும் கல்வியைப் போதிக்கின்றது .

எனவேதான் சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !என்கிறார் .

நான் மக்களை எப்போதும் சாடியதில்லை .மக்களை மாக்களாக்கிய சாதி சமயம் மதங்களை சாடுகிறேன் .

அதுவும் வள்ளலார் சொல்லி உள்ளதைத் தான் சொல்லுகிறேன் .அதனால் என்மீது பலபேருக்கு வருத்தம் .நான் அதைப்பற்றி எப்போதும் வருத்தம் அடைந்தது இல்லை .

இப்போது நமக்குக் கிடத்துள்ளது மாபெரும் பொக்கிஷம் "திரு அருட்பா "என்னும் "ஞான நூல் ".வள்ளலார் உலக மக்களுக்கு கொடுத்து உள்ள அருள் கொடையாகும் .

நாம் அனைவரும் ஆன்ம நேயம் கொண்டு அருளை பகிர்ந்து கொள்வோம் .

அருளைப் பெறுவோம் .


இன்னும் விரிக்கில் பெறுகும்

தொடரும் . . . .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

வியாழன், 8 செப்டம்பர், 2016


உலகில் உள்ள பொருள் யார் உடையது ?

 எனது இனிய நண்பர் திரு அண்ணாதுரை அவர்கள் ஒரு கேள்வி கேட்டு பதில் தருமாறு கேட்டு இருந்தார் .

ஜீவகாருண்யம் செய்வதற்கு சாதி மதம் சார்ந்தவர்கள் இடத்தில் இருந்து தானே சன்மார்க்கிகள் பொருள் வாங்கி செய்கிறார்கள் அது சரியா ? என்று கேட்டு உள்ளார் .

இந்த உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் இறைவன் படைத்தது .அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது . அதற்கு சாதி மதம் என்ற பேதம் கிடையாது .ஒவ்வொரு பொருளும் உருவம் மாறிக் கொண்டே இருக்கும் .

அதனால் தான் மரணம் வந்தால்  எந்தப் பொருளையும் யாரும் எடுத்துக்  கொண்டு செல்ல முடியாது .பொருள் உள்ளவர்கள் ஜீவகாருண்யம செய்தால் அவர்களுக்கு புண்ணியம் சேரும் பாவம் தொலையும் .

உலகில் மனிதர்கள் எடுத்துச் செல்லும் ஒரே பொருள் அதுதான் "அருள்" என்பதாகும் . அதற்கு சாதி சமயம் மதம் என்ற கிடையாது.

 எனவே தான் வள்ளலார் சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்பெருஞ்ஜோதி யைக் கண்டேனடி அக்கச்சி ஜோதியைக் கண்டேனடி என்பார் .

சாதி சமய மதங்களை இறைவன் படைக்க வில்லை .மனிதர்கள் படைத்தது அதனால் தான் அவைகளை விட்டு விடுங்கள் என்கிறார் வள்ளலார் .

 வள்ளலார் வடலூரில் தருமச்சாலையைச் தோற்றுவித்ததின் நோக்கம் .எல்லோரும் ஜீவகாருண்யம் செய்யலாம் .எல்லோரும் ஆன்ம லாபத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் .

பொருளுக்கு சாதி சமயம் மதம் என்ற விலாசம் கிடையாது .

ஆனால் மனிதர்களுக்கு விலாசம் உண்டு .விலாசம் உள்ள மனிதர்கள் விலாசம் இல்லாத பொருளைக் கொடுப்பது தான் ஜீவகாருண்யம் .

ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும் .என்பார் வள்ளலார் ,

அன்புக்கும் அறிவுக்கும் சாதி சமயம் மதம் என்ற பேதம் கிடையாது .

எனவே தான் தயவு உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள .

அருள் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் சன்மார்க்க சங்கத்தை அடைந்தவர்கள் என்பார் .

 பற்று அற்றவன் இறைவன் அவரை அடைவதற்கு சாதி சமயம் மதம் போன்ற எந்தப் பற்றுதல்களும் தவிர்க்க வேண்டும் என்கிறார் .

அவரவர்கள எதை செய்தாலும் அதன் நன்மை தீமைகள் அவரையே சாரும் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

புதன், 7 செப்டம்பர், 2016

சமய மதங்களின் கொள்கைகள் !


சமயம் மதங்களின் கொள்கைகள் !

 உலகம் தோன்றியது முதல் எல்லா பிறப்புகளிலும் உயர்ந்த மனிதன் பிறப்பு இறைவன் கொடுத்து உள்ளார் .

மனித பிறப்பு உயர்ந்தது ,இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேர் இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பது இறைவன் சட்டம் ,

சமயம் மதங்களைத் தோற்றுவித்தவர்கள உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கதைகளைச் சொல்லி மக்களை நம்ப வைத்து விட்டார்கள் .

அதனால்  இன்று வரையில்  உண்மை தெரியாமல் ,உயர்ந்த அறிவு இருந்தும் மக்கள் தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்து தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானை இந்த உலகிற்கு வருவிக்க உற்றார் என்பதை நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக ,என்று சாடுகிறார் .

இதற்கு என்ன அர்த்தம் என்று சன்மார்க்கிகள் புரிந்து கொண்டீர்களா ?

மேலும் வள்ளலார் பேர் உபதேசத்தில் இறுதியாக சொல்லி உள்ளார் .

இதற்கு மேற்பட .நாம் நாமும் பார்த்தும் ,கேட்டும் ,லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம் ,ஆகமம் ,புராணம் ,,இதிகாசம் முதலிய கலைகளில் எதனிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கிறார் .இதற்கு என்ன? அர்த்தம் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .

மேலும் சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும் ,வேதாந்தம் ,சிந்தாந்தம் முதலிய மதங்களிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கிறார் ,இதற்கு என்ன ?  அர்த்தம் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .

இறுதியாக சொல்லுகிறார் .

உண்மை சொல்ல வந்தனன் என்று உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வார் இல்லை என்று வேதனைப் படுகின்றார் .

மேலும் :--சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் யார் ?

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம் ,மதம் முதலிய மார்க்கங்களை முற்றிலும் பற்று அறக் கைவிட்டவர்கள மட்டுமே சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் என்கிறார் .

இதில் இருந்து நாம் என்ன புரிந்து கொண்டோம் எனபது எனக்குத் தெரியவில்லை .

நான் வள்ளலார் சொல்லி உள்ளதைத் தான் சொல்லுகிறேன் .எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை .

வைதாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொள்கிறேன் .பொய் தானோர் சிறிது எனினும் புகலேன் என்பார் வள்ளலார் .

அதேபோல் என்னைப் பற்றி நீங்கள் எதைச் சொன்னாலும் நான் வருத்தம் அடைய மாட்டேன் .

நான் வள்ளலார் எழுதிய சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையில் தெளிவாக இருக்கிறேன் . படமாட்டேன் இனித் துயரம் படமாட்டேன்  பயப்படவும் மாட்டேன் .அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் பதத்துணையை பிடித்து உள்ளேன் என்பதால் .

எனவே சன்மார்க்க அன்பர்கள் என்னை திட்டினாலும் புறம் கூறினானாலும் வருத்தம் அடைய மாட்டேன் .

ஏன் என்றால் நீங்கள் அனைவரும் என்னுடைய உடன் பிறப்புகள் என்பதை என்றும் மறக்க மாட்டேன் .

நான் சுத்த சன்மார்க்க கொள்கையில் தெளிவாக இருக்கிறேன் .

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை முதல் திருமுறையில் இருந்து ஆறாம் திருமுறை வரையில் நன்கு படியுங்கள் .வள்ளார் ஏன் ?ஒன்றாம் திருமுறையில் இருந்து ஐந்து திருமுறை எழுதினார் .

அடுத்து ஆறாம் திருமுறை எழுதினார் என்பது உங்களுக்கே விளங்கும் .


தொடரும்

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்