ஞாயிறு, 27 மே, 2018

மகா மந்திரம் !

நாம் துன்பம் தீர்வதற்கு கடவுளைத்தேடி ஆலயங்களுக்கு  செல்கிறோம் !

ஆலயங்களுக்குச் சென்று கடவுளின் பெயரால் பல பல மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறோம்.வீட்டிலும் வந்து அதே மந்திரங்களைச் சொல்கிறோம்

 அந்த மந்திரங்களால் சிறு சிறு நன்மைகள் உண்டு.பெரிய நன்மைகள் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே உலக மக்களின் நன்மைக்காக  உயர்ந்த  உண்மையான மந்திரத்தை வள்ளலார் அறிமுகப் படுத்துகின்றார்.

அதற்கு மகா மந்திரம் என்று பெயர் வைக்கிறார்.. மகாமந்திரம் என்றால் எல்லா மந்திரங்களுக்கும் உயர்ந்த்து என்றும்.எல்லா மந்திரங்களும் தன்னுள் அடங்கி கிடக்கிறது.என்றும் பொருள்.

வள்ளலார் சொல்லியுள்ள மந்திரம் இறைவனால் எடுத்துக் கொடுக்கப்பட்ட மகாமந்திரம். என்கிறார்.

அந்த மகாமந்திரம் தான்...

*அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி*

என்னும் மந்திரமாகும்.

உங்களுக்கு உண்டாகும் துன்பங்களைப் போக்க.வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து தினமும் காலை மாலை 108.தடவைக்கு.மேல் மகாமந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்யுங்கள்...தீராத வல்வினைகளாக இருந்தாலும் தீர்ந்து விடும்..

மேலும் ஒரு நோட்டில்  தினமும் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகாமந்திரத்தை எழுதி வாருங்கள் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்..

எல்லோருக்கும்  ஆன்ம நேய உரிமையுடன். எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுக்கு இந்த உண்மையைச் சொல்லுகிறேன்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 26 மே, 2018

நெஞ்சு பொறுக்கவில்லை !

நெஞ்சு பொறுக்கவில்லை.
இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கும் போது.

ஒரு உயிர் மனிதனுக்கு சாதாரணமா கிடைப்பதில்லை.

பலகோடி பிறவிகள் எடுத்து இறுதியாக மனிதப் பிறவி கிடைத்துள்ளது.

உலகத்திலே உயர்ந்த பிறவி மனிதப்பிறவியாகும்.அதுவும் உயர்ந்த அறிவுள்ள பிறவியாகும்.

மனிதப்பிறவியில் சோதனை.வேதனை.வறுமை துன்பம் வரலாம்.நோய்வாய்ப்பட்டு இயற்கை மரணம் வரலாம்.

ஆனால் மக்களைப் பாதுகாக்கும்.அரசு மக்களுக்காக பாதுகாக்கப்படும் காவல்துறை. மக்களை நேருக்கு நேர் சுட்டுத் தள்ளும் மனம் மனிதனுக்கு .மனிதநேயம் இல்லாமல் எப்படித் தோன்றியது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கின்றது..

ஒவ்வொருவருடைய உயிரும் விலை மதிப்பு அற்றது.எவ்வளவு விலை கொடுத்தாலும் போன உயிரைத் திரும்ப்ப் பெற முடியுமா ?

எல்லோருக்கும் உயிர் ஓரேத் தன்மை உடையது.அவரவர்களுக்கும் குடும்பம்.மனைவி மக்கள் என வாழ்பவர்கள் தான்.அவர்கள் குடும்பத்தில் இப்படி ஒரு உயிர் துடிதுடிக்க துப்பாக்கியால் சுட்டு மாண்டு போனால் அந்த குடும்பம் எப்படி தவிக்கும் என்பதை சிந்திக்க வேண்டாமா ?

வாடிய பயிரைக் கண்டபோதே வாடிய வள்ளலார் தோன்றிய தமிழ் மண்ணில் .இப்படி ஒரு அசம்பாவிதம் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல்.மனம் நடுங்குகிறது..

உண்ண உணவில்லாமல் உயிர்கள் துன்ப்ப்படுவதையே கண்டே வாடியவர் வள்ளலார்.காரணம்! எல்லாம் உயிர்களும் நம் சகோதர உரிமை உள்ளது என்பதை உணர்ந்தவர் வள்ளலார்.

உயர்ந்த அறிவுள்ள மனிதர்களுக்கு இந்த உயிர் நேயம் இல்லாமல் போனது ஏன் ?

எல்லாம் சுயநலம் .எல்லாம் சுயநலம் இல்லாமல் பொது நலம் வரவேண்டும்.பொது நலம் இல்லாமல் மனிதன் வாழ்கின்ற வரையில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் முடியாது.நிறுத்தவும் முடியாது...

அரசும்.. அதிகாரிகளும் பொது நோக்கத்தோடு சுயநலம் இல்லாமல் செயல்பட வேண்டுமாய் சன்மார்க்க சங்கங்களின் சார்பாக பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்...

மக்களை காப்பாற்ற வேண்டியது அரசும் அதிகாரிகளின் கடமையாகும்.இனிமேலாவது புரிந்து கொண்டு செயல்படுங்கள்..

கடமையில் இருந்து தவறுபவர்கள் நம்மைப் படைத்த இறைவனிடம் மறைமுகமாய் தண்டிக்கப் படுவார்கள்.அடுத்தப்பிறவி மனிதப் பிறவி கிடைக்காமல் சண்டாளப்பிறவிகள் கிடைத்து நினைத்துப் பார்க்க முடியாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்...

வள்ளலார் பாடல் !

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஜீவசமாதி !

ஜீவசமாதி! ஜீவசமாதி! ஜீவசமாதி! ஜீவசமாதி!!

நண்பர் ஒருவர்  என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார்.
ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ?
அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார்.

அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும்.

உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது
யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது.

ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு சமாதி ஆவதில்லை
.
ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ
அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது
அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும்.
இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.

ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல்,
அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது.

மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது.
நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும்.
அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது.

இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து
வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ சமாதி ஆனது :

யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில்.

நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது
பரபோதமாக மாறி அமைகிறது.

உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது
எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது.
பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில்
புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது.
தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள்
தாமே ஒடுங்கிவிடுகின்றன.

அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் இருதயத்தில் அடங்கிவிடுகிறது.

 உடலெங்கும் சீதம் பரவுகிறது.
அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல
யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது.
அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே
ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி
அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய
பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம்
என்ற நிலையை யோகி அடைவார்.

மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர்.
இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை.
இது மரணமல்ல.இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல்
சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை.

அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல.
இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே
சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள்.

எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல.
அது ஜீவ ஐக்கியம்.
இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும்
என்று சொல்லப்படுவதுணடு.
அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,

 சித்தர்கள் உறையும் ஜீவசமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள்,
ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமையாக
விளக்கி அருளுவார்கள்.

உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு
இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து
பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால்
திருமூலர் சாத்தியமே என்கிறார்.

ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை
மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து
உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர்.

திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள்.
அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு.
அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும்
வாதிடுவோர் உண்டு.

ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால்
அது சாத்தியமே என்று தோன்றுகிறது.

இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும்
உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று.
இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால்
உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.

இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு
மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?
அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும்

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும்.

அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும்.
இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள்.

வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற
இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான்
இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது.

இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து
உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள்.
இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து
எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும்.

ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன்
வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன்
மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.

மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி
அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே

வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார்.
எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.

வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள்
நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு,
புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது,
உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத்
தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.

யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது.
கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை
விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும்.

அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும்
இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள்.

அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள்
இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.
அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும்
பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி
வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும்.

அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு,
மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து,
மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து
இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும்.
ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

அறிந்துணர்வோம்! ஆழ்ந்து சிந்தித்து உணர்வோம்!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

சனி, 19 மே, 2018

வள்ளல்பெருமான் வாய் மொழி !

வள்ளல்பெருமான் வாய் மொழி !

ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி இருந்தாலும்.

அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்.

மிரட்டிச் சொல்லுவேன்.

தெண்டன் விழுந்து சொல்லுவேன்.

அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்.

அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.

இப்படி எந்த வித்த்திலாவது நல்வழிக்கு வரச்செய்து விடுவேன்...

நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும் என்று ஆணை யிடுகின்றார்...

ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்கின்றார்..

அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் அல்ல.உலகத்தில் இருக்கின்ற எல்லா ஜெனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன் என்கிறார்.

ஏன் அப்படி ஆண்டவர் இடத்தில் விண்ணபித்துக் கொண்டேன் .
எல்லவரும் சகோதர்ர்கள் ஆதலாலும்.இயற்கை உண்மை ஏகதேசங்கள் ஆதலாலும் .நான் அங்கனம் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை வைத்துக் கொண்டு இருக்கின்றேன் என்று தெளிவுபட பேருபதேசத்தில் தெரிவித்துள்ளார்...

ஆன்மநேயம் என்றால் என்ன என்பது தெரியாமல்.மனித நேயம் என்றால் என்ன என்பது புரிந்து கொள்ளாமல் ..
சன்மார்க்கிகள் அவரவர்கள் சுய நலத்திற்காக.நடந்து கொள்வதை. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்..

சுத்த சன்மார்க்கம் உலகம் எங்கும் துலங்கிக் கொண்டு வரும் இக்காலத்தில் .
சன்மார்க்கிகள் மிகவும் கவனத்தோடும்.ஜாக்கிரதையாகவும்.
நல் ஒழுக்கம் தடைபடாத வண்ணம்.ஜீவகாருண்யம் தழைத்து ஓங்க செயல்பட வேண்டுமாய் அனைவரையும். பணிவன்போடு தாழ்வணங்கி கேட்டுக் கொள்கிறேன்....

இதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வாய்மொழி வாக்காகும்....

மன்னிக்கும் குணம் மாந்தர்க்கு அவசியம்...அதுவும் சன்மார்க்கிகளுக்கு மிக மிக அவசியம்...

யாரும் யாரையும் திருத்திவிட முடியாது.
திருந்துவதற்கு வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கலாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நினைத்தால் அரைக் கணத்தில் திருத்திவிடுவார்..

வள்ளலார் பாடல் !

எத்துனையும் பேதமுறாது எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்

சுத்த சித்துறுவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த்துவே !

என்னும் பாடல் வரிகளைப் படித்தால் மட்டும் போதாது..அந்த வரிகளில் உள்ள கருத்தை உள் வாங்கி அதன்படி பின்பற்றி வாழ்வதே சுத்த சன்மார்க்கிகளின் முக்கிய லட்சியமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 15 மே, 2018

அருள் ஆட்சி வரவேண்டும் !

அருள் ஆட்சி வரவேண்டும் !

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.
அகங்காரம் ஆணவம் வரக்கூடாது.

இந்த உலகத்தை எத்தனையோ கோடி நபர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.அத்தனை நபர்களும் இருக்கும் இடம் இன்று வரை தெரியவில்லை.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் மனிதர்கள் தேர்வு செய்து மனிதன்  ஆட்சிக்கு வந்து உலக உயிர்களை காப்பாற்ற முடியாது.என்பது உலகம் அறிந்த உண்மை .

உலகத்தையும் உயிர்களையும் காப்பாற்ற படைத்த இறைவனால் மட்டுமே முடியும்...

எனவே தான் வள்ளலார் ...

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க -

தெருள்நயந்தநல்லோர் நினைத்த நலம்பெறுக

நன்றுநினைத்தெல்லோரும் வாழ்க இசைந்து.

என்று வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார்..

சாதாரண மனிதர்களால்.ஆட்சிக்கு வந்தாலும் உலக உயிர்களை. மக்களை காப்பாற்ற முடியாது.

அருள் பெற்ற அருளாளர்கள் ஆட்சியில் அமர்ந்து ஆட்சி செய்தால் மட்டுமே.நல்லோர்கள் நினைத்த நலம் பெற்று.ஏற்ற தாழ்வு இல்லாமல் .சாதி.சமய.மதங்கள் இல்லாத.பொதுவான நல்லாட்சி செய்ய முடியும்.

அந்த சூழல் வந்தால் மட்டுமே எந்த எதிர்ப்பும் இல்லாமல்.எல்லோரும் ஒன்றுபட்டு இசைந்து வாழ முடியும்.

அந்த நாள் வரும் வரை எதிர்பார்த்து காத்திருப்போம்.

நிச்சியம் நிறைவேறும் .எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை வேண்டுவோம்..

வள்ளலார்பாடல் !

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.

என்னும் பாடலில் உள்ளபடி வேண்டுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

தனி மனித புகழ் வேண்டாம் !

ஆன்மநேய அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் வழங்கும் கட்டுரைகள் அனைத்தும் என் சொந்த கருத்து கட்டுரைகள் அல்ல.

வள்ளலார் அவர்கள் சொல்லியதை ஒளிவு மறைவு இல்லாமல்  வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டுகிறேன்..

தனிமனித புகழ் எப்போதும் எனது கட்டுரையில் இருக்காது...

இறந்து போனவர்கள் எவ்வளவு புகழ் பெற்று இருந்தாலும் .அவர்களும் சாதாரண மனிதர்களே..

என்பதால் மரணம் அடைந்தவர்கள்.மரணம் அடைபவர்களை எல்லாம் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும் சொல்கிறேன்.

அப்படி சொல்வதால் சில அன்பர்களுக்கு என்மேல் கோபமும் வருத்தமும் உண்டு.வள்ளலார் கொள்கை உண்மையானது நேர்மையானது.ஒழுக்கம் நிறைந்த்து .என்றும் அழியாத அருள் தன்மை உடையது என்பதை உரக்க சொல்கிறேன்.. ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.ஏற்றுக் கொள்ளாதவர்கள் விட்டுவிடலாம்.

என்மீது வருத்தப்பட்டு எந்த பிரயோசனமும் இல்லை.

எனவேதான் வள்ளலார் சாகாதவனே சன்மார்க்கி என்கிறார்...

மரணம் அடையாமல் வாழ்பவர் எவரோ அவரே முழுமையான அருளாளர்.அவர் சொல்வதுதான் வேதவாக்கு.அதாவது அருள்வாக்கு என்பதாகும்.

அதைத்தான் அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் தெருப்பாட்டு என்கிறார. வள்ளலார்..

அருள் பெற்றவர்கள் மட்டுமே இறைவனை காண முடியும்.இறைவனோடு சேர முடியும்..

அந்த வகையிலே நமது தமிழ்நாட்டில் 18.ஆம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று.இறைவனிடமே ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று உலக உயிர்களுக்கு நன்மை செய்து கொண்டு உள்ளார்..

நாம் உண்மை உணராமல்.உண்மை அறிந்து கொள்ளாமல்.உண்மை தெரிந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைப் பின்பற்றி
வாழ்ந்து மாண்டு கொண்டே உள்ளோம்.

சொன்னவர்களும் மாண்டு போனார்கள் பின்பற்றுபவர்களும் மாண்டு கொண்டே உள்ளார்கள்..

நீங்கள் கேட்கலாம் வள்ளலார் கொள்கையைப் பின்பற்றுபவர்களும் மாண்டு கொண்டேதானே உள்ளார்கள் என்று ! உண்மைதான்.

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை எவரும் முழுமையாக கடைபிடிப்பதில்லை அதனால் மாண்டு கொண்டே உள்ளார்கள்.காரணம் அவர்களும் ஆற்றிலே ஒருகால் சேற்றிலே ஒருகால் வைப்பது போல்..சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டும் சன்மார்க்கத்திலும் பற்று வைத்துக் கொண்டு வாழ்வதால் மரணத்தை வெல்லமுடியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்...

இருப்பினும் வள்ளலார் கொள்கை மீது அளவற்ற பற்று வைத்திருப்பவர்களுக்கு.அஜாக்கிரதையால்.அறியாமையால் மரணம் வந்தாலும் ..அடுத்தப் பிறப்பு மனிதப் பிறப்பு என்பது உறுதி செய்யப்பட்டதாகும்..

எனவே இப்பிறப்பிலே அதி தீவிர முயற்ச்சி எடுத்துக் கொண்டு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பின்பற்று வாழ்ந்தால் நிச்சயம் இறைவன் அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்.

எனவே மாண்டு போனவர்கள் கொள்கையை பின்பற்றி வாழ்ந்தால் அவர்களுக்கு கிடைத்த அதே மரணம் நமக்கும் கிடைக்கும் என்பதால் உண்மையை உரக்கச் சொல்கின்றேன்.

எனவே வள்ளலார் பாடல்!

கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்

மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோமயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே

திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்

சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனதுதனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.!

என்னும் பாடல்களிலே ....உலகத்திலே ஐந்து பூதங்களான மண்.நீர்.அக்கினி.காற்று.ஆகாயம் பொன்ற வற்றை ஆண்டு கொண்டு புகழ் பெற்று வாழ்ந்தாலும் கரணங்களான மனம்.புத்தி.சித்தம்.அகங்காரம் போன்ற கருவிகள் தான் மகிழ்ச்சி அடைகின்றன.ஆன்மா மகிழ்ச்சி அடைவதில்லை..ஜீவன் என்னும் உயிர் மகிழ்ச்சி அடைவதில்லை. எனவே அருள் பெற்றால்தான் ஆன்மா மகிழ்ச்சி அடையும்.ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால்தான் மரணத்தை வெல்ல
 முடியும்.என்கிறார் வள்ளலார்.

மேலும் வள்ளலார் பாடல் !

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்

மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்குமறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்

சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே

பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வுபெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!

இறந்தவரைப் பார்த்து அழுது புலம்புகின்றீர் .அவரையே குருவாகவும்.போற்றி புகழ்ந்து கொண்டு உள்ளீர்கள்.அதனால் என்ன பயன் ?

பிணி.மூப்பு.மரணத்தை தவிர்க்கும் வழி உள்ளதே..பொய் வாழ்வு வாழாமல் நித்தியமான  மெய் வாழ்வு வாழ்க்கை பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் என்று வள்ளலார் கூவி கூவி அழைக்கிறார்...

நாம் இனிமேலாவது மரணத்தை வென்ற மகான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையைக் கடைபிடித்து சாகாகல்வியைக் கற்று மரணத்தை வென்று பேரின்ப லாபத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 14 மே, 2018

வாழ்த்துரை !

ஆன்ம நேயம் கொண்ட சகோதர்ர் திரு நாராயணன் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்...

அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி!!
தனிப்பெருங்கருணை!!!
அருட்பெருஞ் ஜோதி!!!!

திரு நாராயணன் அய்யா அவர்கள். அவர்களின் துணைவியார் இராஜேஸ்வரி அம்மா அவர்களின் பெயரிலும் அறக்கட்டளை 29-5-2018 தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அறக்கட்டளையானது வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய வழியில்..ஏழை எளியவர்கள்.முதியோர் .வார்த்திபர் முதலிய ஜீவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து நீடூழி காலம் அறப்பணி ஆற்றிட வேண்டும்.

நமது அருட்தந்தையார் எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தோன்துறா துணையாக இருந்து அருள் பாலிக்க வேண்டுமாறு வேண்டி விண்ணப்பம் செய்து கொள்கிறேன்.

மேலும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க  பெருநெறியைப் பின்பற்றி .சங்கராபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் செயலாளராக சிறப்புடன் பணியாற்றி மக்கள் மனதிலே நீங்காத இடம் பெற்றும்.. என் இதயத்தில் என்றும் நிலைப்பெற்று வாழ்ந்து கொண்டும் இருக்கும் ஆன்மநேயர் திரு.நாராயணன் அவர்களின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தும் வாய்ப்பை நல்கிய திரு.நாராயணன் அவர்களுக்கும்.சங்கராபுரம் .சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர்.செயலாளர். பொருளாளர். மற்றும் அனைத்து உறுப்பினர் களுக்கும்.உளமாரந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

திரு நாராயணன் அய்யா அவர்களும் அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள் சினேகிதர்கள்.அயலார் அனைவரும்.நீண்ட ஆயுள்.நிறைந்த செல்வம்.அழியாப் புகழும்.அருளும்  பெற்று...வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

சனி, 12 மே, 2018

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். !

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் !

உலகில் மற்றவர்களுக்கு அறிவுரையும்.ஒழுக்கத்தையும்.நேர்மையும்.சத்தியத்தையும் சொல்பவர்கள் அவரவர்கள் கடைபிடித்து அதனால் கிடைக்கும் நன்மை பெற்றுதான் சொல்ல வேண்டும்..

வள்ளலார் சொல்லுவார் ! அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லியது..!

அருட்பெருஞ் ஜோதி அகவல் வரிகள் !

795. உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க

796. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை !

என்னும் வரிகளில் விளக்கமாக சொல்லுகின்றார்.

உலக உயிர்களுக்கு   வரும் இடையூறுகளை தவிர்க்க வேண்டுமானால் .நாம் ஒழுக்கம் உள்ளவர்களாகவும்.உத்தமனாகவும் வாழ்ந்து சொன்னால் தான் பலிக்கும்.

வள்ளலார் வாழ்ந்து காட்டிதான் எல்லாவற்றையும் சொன்னார்.அதனால் தான் உலகின் ஒப்பற்ற அருளாளராக விளங்கிக் கொண்டுள்ளார்.

நாம் படித்து விட்டு அப்படியே காப்பியடித்து பேசுவதால் பயன் இல்லை.

கற்க கசடற கற்பவை கற்றபின் நிறக அதற்கு தக !

என்பது போல் கற்க வேண்டியதை மட்டுமே கற்க வேண்டும்
கற்றபின் அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும்.

அப்போது தான் நாம் சொல்வதை மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

எனவே நாம் ஒரு கருத்தை சொல்லும் போது அக்கருத்தைப் பின்பற்றி வாழ்ந்து தான் சொல்ல வேண்டும்..

அதுவே அனைவருக்கும் நன்மை பயக்கும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 9 மே, 2018

இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார்!

வள்ளலாரை இந்த உலகத்திற்கு இறைவன் வருவிக்கின்றார் !

எதற்காக இறைவன் வள்ளலாரை வருவிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால்... சுத்த சன்மார்க்கம் எங்கும் எல்லாம் விளங்கும்...

இந்த உலகத்திற்கு இறைவன் தன்னை ஏன் ? எதற்காக வருவிக்க உற்றேன்  என்பதை வள்ளலாரே மிகத்தெளிவாக கீழே கண்ட பாடலின் வாயிலாக தெரிவிக்கின்றார்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்னும் பாடல் வாயிலாக தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார்...

உலகில் உள்ள மனிதகுலம் வாழ்க்கை முறை தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு கொண்டே உள்ளார்கள்....

ஏன் எதனால் என்றால்.

மனிதன் உடம்பில் உள்ள அகம் என்னும் ஆன்மா விழிப்பு நிலை இல்லாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் மறைப்பு சூழ்ந்து திரைகளால் மறைக்கப்பட்டு..கருமை வண்ணம் போல் கருத்து இருக்கின்றது...

உயர்ந்த அறிவை மனிதனுக்காக இறைவன் கொடுத்து இருந்தும்.அகம் என்னும் ஆன்மா கருத்து இருப்பதால் புறம் என்னும் உலக  வாழ்க்கையின் சிற்றின்பத்தில் பற்று கொண்டு. மனம் போனபடி வாழ்ந்து இறுதியில்  மண்ணோடு மண்ணாக மாண்டு போகின்றார்கள்.

ஆன்மாவிற்கு உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பை இறைவன் எதற்காக கொடுத்தார் என்பதை மனித இனம் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றது.

அகம் என்னும் ஆன்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் இறைவன். வள்ளலாரை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்..

ஆன்மா அகம் கருத்து புறம் வெளுத்துப் போனதற்கு யார் யார் ? எல்லாம் காரணம் என்பதை வள்ளலார் முதலில் பதிவு செய்கின்றார்.

வள்ளலார் பாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசேதனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்ற பாடலை ஊன்றி படித்து. பொருள் உணர்ந்து கவனிக்கவும்.

இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன.அதிலே இந்த பாடல் ரொம்பவும் முக்கியமான பாடலாகும்...

ஆதியில் இருந்தே பல பல அருளாளர்களால் பல பல சமயங்கள்.மதங்களைத் தோற்று வித்துள்ளார்கள்.அந்த சமயங்கள் மதங்கள் எல்லாம் ****பவநெறி*** என்கிறார் வள்ளலார்.
பவநெறி என்றால் பயன் இல்லாத நெறிகள் என்பதாகும்...பாவத்தை சம்பாதிக்கும் நெறி என்பதாகும்..கருமை உள்ள நெறியாகும்.குருட்டு நெறியாகும்.என்கிறார்.

சமய மதக் கொள்கைகள் தான் மனித இனத்தை அகம் கருத்து புறம் வெளுக்க வைத்துள்ளது என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்..

எனவே தான் ***சாதியும் மதமும் சமயமும் பொய்*** என்று அருட்பெருஞ் ஜோதி அகவலில்  வெளிப்படையாய் சொல்லுகின்றார்...

எனவே..சாதி சமய மதங்களில் சிக்கி தவிக்கும்  மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்பதற்காகவே இறைவன் வள்ளலாரை வருவிக்க உற்றார் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

சரி..சாதி மதம் சமயங்களை விடுவதால் மனித குலத்திற்கு என்ன லாபம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா !

எதையுமே நாமாக தெரிந்து கொள்வதில்லை.மற்றவர்கள் சொல்லியதை. எழுதி வைத்துள்ளதை படித்து தான் பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்..

உலகில் உள்ள அனைத்தும் சமய மதங்கள் சொல்லிய காட்டிய வேதங்கள் .ஆகமங்கள்.புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள் எழுதிவைத்துள்ளதைத் தான் பின்பற்றி வருகிறோம்....

அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.

என்ற பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
சமயங்கள் மதங்களைப் பின் பற்றுவதால் மனிதகுலம் ஒற்றுமை இல்லாமல் வேற்றுமை ஓங்கி மனித நேயம் இல்லாமல்.ஆன்ம நேயத்தை அறிந்து கொள்ளாமல் போருற்று இறந்து வீண் போகின்றோம் என்கிறார் வள்ளலார்..

எனவே இறைவனிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இறைவனிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற முடியும்.அருளைப் பெற்றால் மட்டுமே மரணத்தை வென்று இறைவனிடம் செல்லமுடியும்...

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடாது

உயிர்கள்பலபேதமுற் றங்கும்இங்கும்போருற் றிறந்துவீண் போயினார்

இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டி

மெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி

நீ என்பிள்ளை ஆதலாலேஇவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதிநட ராஜபதியே.

என்னும் பாடலில் உண்மையை உரக்க சொல்லுகின்றார்...

நீ என்பிள்ளை என்பதால் உனக்கு எல்லா உரிமையும் கொடுத்துள்ளேன்..

இந்த உலகமக்கள் இன்னும் வீண்போகாதபடி விரைந்து காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொருப்பு கடமை என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு ஆணை  யிட்டு  சொல்லுகின்றார் ...

எனவே வள்ளலார் உலக மக்களைத் திருத்த ***சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*** என்ற தனிநெறியை. பொது நெறியை.புதிய நெறியை.அருள் பெறும் நெறியை வள்ளலார் தோற்றுவித்துள்ளார்..

மனித இனத்தை காப்பாற்ற இறைவனால் வருவிக்க உற்ற... வள்ளலார் காட்டிய சுத்த சன்மாரக்க பொது நெறியைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

எவற்றை விடவேண்டுமோ அவற்றை விட்டுவிட்டு எவற்றை பிடிக்க வேண்டுமோ அவற்றை பிடித்துக் கொண்டால் மட்டுமே இறைவனிடம் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற முடியும்..பூரண அருளைப் பெற்றால் மட்டுமே அகம் அனகமாக விரிந்து உடல் முழுவதும் நிறைந்து ஊன உடம்பு ஒளி உடம்பாக வேதியல் மாற்றம் அடைந்து ஆன்மா லாபம் பெற முடியும்.ஆன்மலாபம் பெற்றால் மட்டுமே இறைவன் ஏற்றுக் கொள்வார்..

வேறு தவறான குறுக்கு வழிகளில் சென்றால்.ஆன்ம லாபம் பெறுவது கடினம் . மரணம் நிச்சயம்...

வள்ளலார் பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படித்து உட் பொருள் நன்கு உணர்ந்து வாழ்ந்தால் அகம் வெளுத்து புறம் கருத்து அருளைப் பெற்று மரணத்தை வென்று .கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி.பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 7 மே, 2018

வள்ளலார் கொள்கை மிகவும் எளிமையானது !

வள்ளலார் கொள்கை மிகவும் எளிமை !

ஆன்மாவை இந்த பஞ்ச பூத உலகத்திற்கு இறைவன் அனுப்பி வைக்கிறார்.

அனுப்பி வைத்துள்ள இயற்கை உண்மையான  இறைவன் யார் ? என்பது தெரியாமல்  இதுவரையில் உலகம் இருந்து கொண்டுள்ளது. வள்ளலார் வந்துதான் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உலகிற்கு அறிமுகப் படுத்துகின்றார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எதற்காக ஆன்மாக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பதைத்தான் நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆன்மாக்கள் மூன்று வகையாக உள்ளன.பக்குவ ஆன்மா..அபக்குவ ஆன்மா...பக்குவா பக்குவ ஆன்மா என்பவையாகும்...அதன் விளக்கம் பின்பு தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆன்மாக்கள் ஆண்டவர் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெரு வெளியில்.ஆன்ம ஆகாயம் என்னும் இடத்தில் அளவில் அடங்காத அளவுகடந்த எண்ணிக்கையில் நிறைந்து இருக்கிறது.

அந்த ஆன்மாக்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்பது தெரியாது...ஆன்மாக்கள் ஆண்டவரை தொடர்பு கொள்ள வேண்டுமானால் அருள் வேண்டும் .அருள் பெற்று ஆன்மதேகம் என்னும் அருள் தேகம் பெற வேண்டும்.அருள்தேகம் என்னும் ஒளிதேகம் பெற்றால் தான் இறைவனை காணமுடியும். இறைவன் தேகம் அருள் என்னும் ஒளி  தேகம்..இறைவன் தன்மையாகிய ஒளிதேகம் பெற்றால் தான் இறைவன் தன்னுடன் ஆன்மாவை இணைத்துக் கொள்வார்...

பூலோக வாழ்க்கை !

ஆன்மாக்கள் அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தைப் படைத்துள்ளார்.

இந்த உலகத்தில் ஆன்மாக்கள் ஏழு பிறப்பு எடுக்க வேண்டும் இறுதியான ஏழாவது பிறப்பு தான் மனித பிறப்பு.

இந்த மனித பிறப்பில் தான் ஆன்மாவானது இறைவனிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று இறைவன் நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.***அதற்குப் பெயர்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டும்*** என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்....

உலக வாழ்க்கை !!!!

உலகில் வாழ்வதற்கு வந்த ஆன்மாக்கள்..மனித பிறவியோடு தன் வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்...
ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ....உயிர் உடம்பு ...இரண்டையும் வாடகைக்கு கொடுத்துள்ளது.வாடகை என்னும் உணவு தினமும் கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறினால் மரணம் வந்துவிடும்.மீண்டும் பிறந்து பிறந்து.இறந்து இறந்து இங்கேயே பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...

ஆன்மாக்களை இதற்காகவா இறைவன் அனுப்பி வைத்தார் என்பதை தெரிந்து கொள்ளவே.உயர்ந்த அறிவை மனிதர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றுவதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க பெருநெறியாகும்...

சுத்த சன்மார்க்கம் என்ன சொல்கிறது...நம்மைப் போன்ற ஆன்மாக்கள் உண்மைத் தெரியாமல் துன்ப்ப் படுகின்றது. அந்த  ஆன்மாக்களுக்கு வரும் துன்பங்களான.பசி.
கொலை.பிணி.தாகம்.
இச்சை.எளிமை.பயம் போன்ற துன்பங்களை தங்களால் முடிந்த அளவு  போக்க வேண்டும் என்றுதான் வள்ளலார் சொல்லுகின்றார்...

அதற்குப் பெயர்தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்...ஜீவகாருண்யம் விளங்கும் போதுதான் அன்பும் அறிவும் தானே விளங்கும் என்கிறார் வள்ளலார்....

அன்பும் அறிவும் விளங்காமல் இருப்பதற்கு எவை எவைத் தடையாக இருக்கின்றதோ அவைகளை எல்லாம் தூக்கி எறிய வேண்டும்...

எனவே தான் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.
மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.வருணம் ஆசிரம்ம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என்கிறார்....

மேலும் ஆன்மநேய ஒருமைப்பாடு என்றால் என்ன என்பது  அப்போதுதான் விளங்கும்.

உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களாகிய நாம் தாழ்ந்த நிலையில் உள்ள கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறோம்..

வள்ளலார் சொல்லிய கொள்கையைப் பின்பற்ற மேலே உள்ள.சாதி.சமய.மத்த் தடைகளை முதலில் நீக்கினால் மட்டுமே.....இறைவன் அருள் கிடைக்கும்...

அருள் கிடைத்தால் மட்டுமே அன்பு.தயவு.கருணை நிறைந்து. வாடைகை வீடான ஊன் உடம்பை ஒளி உடம்பாக ஆன்மாவால்மாற்றிக் கொள்ள முடியும்.  சொந்த வீடாக மாற்றுவதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

இந்த எளிய சுத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்றத் தெரியாமல் மனம் போனபடி வாழ்ந்து கொண்டு உள்ளோம்...

ஆன்மாவானது இந்தத் உலக வாழ்க்கையை முறையாக சரியாக புரிந்து .உண்மை ஒழுக்கத்தோடு வாழ்ந்து .எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்கும்.

நம் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சொந்த வீட்டிற்கு ஆன்மா செல்ல முடியும்....அப்போது தான் பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்றதாக ஏற்றுக் கொள்வார் ஆண்டவர்.

அதற்காகவே ஆன்மாக்களை இவ்வுலகத்திற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனுப்பி வைத்துள்ளார் என்பதை மனிதகுல ஆன்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்....

இன்னும் விரிக்கில் பெறுகும்...சுருக்கமாக விளக்கி உள்ளேன்..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 5 மே, 2018

அண்டம் பிண்டம் !

அண்டம் பிண்டம் !

அண்டம் என்பது பஞ்ச பூதங்கள் அடங்கிய உலகம்..

அண்டம் அருள் என்னும் கதிர் வீச்சால் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு உள்ளது.

சூரியன் பூமியைச் சுற்றுவதும் இல்லை.பூமி சூரியனை சுற்றுவதும் இல்லை..

இந்த உலகத்தில் மண்.நீர்.அக்கினி.காற்று.ஆகாயம். அதில் அடங்கிய சூரியன்.சந்திரன்.நட்சதிரங்கள்.மேலும் கிரகங்கள் அனைத்தும் அதனதன் வேலைகளை முறையாக.சரியாக காலம் நேரத்திற்குத் தகுந்தாற் போல் செயல் பட்டுக் கொண்டு உள்ளன...

மனிதன் உடம்பும் அதேபோல் செயல் பட்டுக்கொண்டு உள்ளது...

இயற்கைக்கு மாற்றாக செயல் படும்போது தான் மரணம் வருகின்றது.

அண்டம் அழியாத்து போல் நமது பிண்டம் என்னும் உடம்பும்.உயிரும்.ஆன்மாவும் பிரியாமல்.மறையாமல் நிரந்தரமாக வாழும் வழியைக் கண்டுபிடித்தவர்தான் வள்ளலார்.

அருள் ஆற்றலினால் அண்டம் அழியாத்து போல் பிண்டம் என்னும் உடம்பும் அருளைப் பெற்று அதன் ஆற்றலினால் அழியாமல்..மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் என்பதை வள்ளலார் அறிந்து அம்மயமாகி வாழ்ந்து கொண்டு உள்ளார்..

உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்கள் மட்டுமே அந்நிலையை அடைய முடியும் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்...மனிதன் இப்படித்தான் வாழ்க்கை முறையை கடைபிடித்து வாழ வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

நாமும் வள்ளலார் போல் வாழ்வோம் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..