ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

உலகம் இரண்டு வகை !

 *உலகம் இரண்டு வகை !*


*பல உலகங்கள் இருந்தாலும் ஆன்மாக்கள் வாழ்வதற்கு இரண்டு உலகம் மிகவும் முக்கியமானதாகும் ஒன்று பொருள்உலகம் ஒன்று அருள்உலகம்* *பொருள் உலகத்தில் வாழ்ந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்றால் மட்டுமே அருள் உலகம் சென்று பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கு உண்டான வாய்ப்புகள் வழங்கப்படும்* 


*ஆன்மாக்கள் அருள் பெறாதவரை. உயிர் உடம்பு  எடுத்து எடுத்து இறந்து இறந்து பிறந்து பிறந்து பலப்பல பிறவிகள் எடுத்துக்கொண்டு வாழவேண்டியதுதான்*.

*அதனால்தான் இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாத இன்பம் துன்பம் நிறைந்த வாழ்க்கை என்றுச் சொல்லப்படுகிறது* 


*அருளாளர்கள் வருகை!*


*உயர்ந்த பிறப்பான மனிதப்பிறப்பு கொடுக்கப்பட்டதின் நோக்கம் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே பல சிறந்த பக்குமுள்ள ஆன்மாக்களை வாழையடி வாழையாக அனுப்பிக் கொண்டே இருக்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* *அவர்களுக்கு ஷடாந்த சுத்த  சன்மார்க்க உயர்ந்த ஞானிகள் என்றும் அருளாளர்கள் என்றும் பெயர் சூட்டப்பட்டது.* 


*வள்ளலாருக்கு முன்புவரை அருள் பெறுவதற்கு உண்டான நேர்வழியை எந்த ஞானிகளும் பின்பற்றவில்லை.நேர்வழியை காணவில்லை மக்களுக்கும் சொல்லித்தர இயலாமல் தவறான சிக்கலான வழியையே காட்டிவிட்டார்கள்* *ஆகையால் மனித இனம் திசை தெரியாமல் அலைமோதிக் கொண்டுள்ளது*.


*வள்ளலார் பாடல்!*


*பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்*

*பவநெறி இதுவரை பரவிய திதனால்*


*செந்நெறி அறிந்திலர்* *இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனிநீ


*புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்*

*புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்*


*தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே*

*தனிநட ராஜஎன் சற்குரு மணியே.*!


*மேலும் அண்ணிய உலகத்தாரும் அறிந்து கொள்ளவில்லை என்ற பாடல்*


நண்ணிய மதவெறி பலபல அவையே

நன்றற நின்றன சென்றன சிலவே


*அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்*

*அலைதரு கின்றனர் அலைவற மகனே*


*புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே

*பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ*


தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!


*உலகத்திற்கே ஒரு பொது நெறியைத்தோற்றுவித்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே என்பதை உணர்ந்து அவர் காட்டிய ஜீவகாருண்யத்தையும் நான்கு ஒழுக்கங்களையும்*  *சத்விசாரம் என்னும் இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை விளக்கத்தையும் அறிந்து தொடர்பு கொண்டு  அருளைப் பெற்றால் மட்டுமே இயற்கை இன்பத்தை பெற்று கடவுள்நிலை அறிந்து அம்மயமாகி அருள் உலகத்தில் என்றும் அழியாத பேரின்பசித்திப் பெருவாழ்வு வாழலாம்* 


மனித தேகம் எடுத்த உயர்ந்த அறிவுள்ளவர்கள் பொருள் உலகத்தில் வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் பெற்று மரணத்தை வென்றால் மட்டுமே அருள் உலகத்திற்கு செல்லமுடியும்.


*அருள் பெறுவதற்கு சிறந்த நேர்வழி*


*இவ்வுலகப் பொருள்கள் நம்மிடம் எதுவும் இருக்கப்படாது*.

*சம்பாதித்து சேர்த்து வைத்த பொருளை மற்றவர்களுக்கு கொடுப்பதுதான் ஜீவகாருண்யம் என்பதாகும்*.


*பொருள் இல்லாத ஏழைகளுக்கு பொருளைக் கொடுத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் அதுவே சத்விசாரம் என்பதாகும்* 


*இவற்றை விடுத்து தேவை இல்லாத வேலைகளை செய்வதால் எந்த பயனும் இல்லை*


*வள்ளலார் பாடல்!*


*பொருட்டல நும் போகம்எலாம் பொய்யாம்* 

*இங் கிதுநான்*

*புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே*


*மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே*

*மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே*


*பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்*

*பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே*


*அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை*

*அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே*!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

வியாழன், 23 செப்டம்பர், 2021

பண்ணிய தவம் பலித்தது !

 *பண்ணிய தவம் பலித்தது*!


*அமுதாகதிர்வேல் அவர்கள் அபாய கட்டத்தில் இருந்து மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளார்.*!


*ICU வில் இருந்து தனி அறைக்கு  அமுதாகதிர்வேல்  இன்று மாலை 6-30 மணிக்கு    வந்துள்ளார்* சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது


*தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் வாழும் தயவுடைய சன்மார்க்க அன்பர்கள் மேலும் மலேசியா சிங்கப்பூர் பிரான்ஸ் கனடா சவுதிஅரேபியா அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வாழும் தயவுடைய சன்மார்க்க சான்றோர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் உறவினர்கள் சான்றோர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளும் பலித்துள்ளது*.


*சிறப்பு வழிபாடு*


*நாங்கள் எதுவும் சொல்லாமலே*

*வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் சார்ப்பாக நிர்வாகமே சத்திய தருமச்சாலையிலும் கல்பட்டுஐயா  அவர்கள் முன்னிலையிலும் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றதாக தருமச்சாலை கணக்கப்பிள்ளை எனது நீண்டகால நண்பர்  திரு ஞானப்பிரகாசம் அவர்கள் இன்று காலை 6-30 மணிக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொன்னார்*.


*மேலும் அமுதா அம்மா அவர்கள் மீண்டும்  பூரண குணமடைவார்கள் மனம் சஞ்சலப்படவேண்டாம் என்று அன்புடன் ஆறுதல் சொன்னார்*. 


*வடலூர் வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் அன்பான நன்றியும் வந்தனத்தையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*


*ஈரமும் அன்பும் பாசமும் பற்றும் கொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய  அனைவருக்கும் என்ன கைமாறு எங்களால்   செய்யமுடியும்*.


*உங்களின் திருவடி பாதங்களை  வணங்கி வாழ்த்துவது தவிர வேறு எதுவும் எங்களுக்கு தெரியவில்லை*.

*உங்கள் அனைவரையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவே பார்க்கிறோம்*.


*உங்கள் அனைவருடைய பிரார்த்தனையாலும் திருஅருட்பிரகாச வள்ளலார்  தயவாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை அருளாலும்  அமுதா அவர்களின் உயிரையும் உடம்பையும் காப்பாற்றி உள்ளார் என்பது சத்தியமான உண்மையாகும்*.


*பிரார்த்தனைக்கும் அன்னதானத்திற்கும் இவ்வளவு வலிமை உள்ளதை நேரிலே கண்டுகொண்டோம்*


*எங்கள் மீது அன்பும் பாசமும் பற்றும் வைத்துள்ள எல்லோருக்கும் எங்களுடைய குடும்பத்தின் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*


*எங்கெங் கிருந்து உயிர் ஏதெது வேண்டினும்*

*அங்கங்கு இருந்துஅருள்* 

*அருட்பெருஞ் ஜோதி*! (அகவல்)


வள்ளலார் பாடல்!


*பண்ணிய பூசை நிறைந்தது* சிற்றம் பலநடங்கண்


*டெண்ணிய எண்ணம் பலித்தன* மெய்இன்பம் எய்தியதோர்


தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியை நான்


*நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன் இந்த நானிலத்தே!*


*நமது அருள் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை உடையவர் என்பது மறுக்க முடியாத சத்திய உண்மையாகும்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயர்கள் 

ஈரோடு கதிர்வேல்

அமுதாகதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

கடவுள் வருதருணம்!

 *கடவுள் வருதருணம்!*


இக்கட்டுரையை பொருமையாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்....


*வள்ளலார் பாடல்!*


ஞான சரியை 9 வது பாடல்! 


களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்

களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்


தெளித்திடும் எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே

செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்


ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறை ஆர்க் கின்றேன்

ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்


அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே

ஆசை உண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.! 


மேலே கண்ட பாடலில் கடவுள் வருதருணம் என்கிறார் வள்ளலார். 


*இதுவரையில் இவ்வுலகத்திற்கு கடவுள் வரவில்லையா ? என்ற ஒரு கேள்வி எழுகின்றது*. 


*கடவுள் இல்லாமலா உலகம் இயங்கிக் கொண்டு உள்ளது  என்ற கேள்வியும் எழுகின்றது*.


மேலும் *இதுவரையில் சமய மதங்களால் சொல்லிய கடவுள்கள் நிறைந்து  இருக்கும் போது. வள்ளலார் கடவுள் வருதருணம் என்று சொல்லுகிறார். வள்ளலார் சொல்லும் கடவுள் யார்?  அவர் எங்கு உள்ளார் ? எங்கிருந்து வருகிறார் ? எதற்காக வருகிறார்? புதிய கடவுளா ? பழைய கடவுளா ? அவர் பெயர் என்ன ? என்ற கேள்வி  மக்கள் மத்தியில் கேட்கத் தோன்றுகிறது*.


*அதற்கு வள்ளலார் சொல்லும் பதில்*


*சன்மார்க்க பெரும்பதி வருகை*


*இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற  பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்.மூர்த்திகள்.கடவுளர்.தேவர்.அடியார்.யோகி.ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல* என்பதை மிகத் தெளிவாகச் சொல்லுகின்றார்.


*மேலே சொல்லப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் கடவுளர்கள் மற்றும் மூர்த்திகள் தேவர்கள் தலைவர்கள் யோகிகள் ஞானிகள் எல்லோரும் எதிர்பார்த்து வணங்கும் தகுதிஉடையவர்.எவரும் இதுவரையில் பார்க்க முடியாத கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் எல்லோரும் எதிர் பார்க்கின்றபடி எழுந்தருள்கின்ற தனித்தலைமை பெரும்பதியாகிய கடவுளைத்தான் கடவுள் வருதருணம் என்று  சொல்லுகிறேன் என்கிறார் வள்ளலார்.* 


*திருவருண் மெய்ம்மொழி!*


 உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:?


*இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும்,*


*எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில், அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்*


*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்;வீண்போகின்றோம்*.


*இறந்தவரை எழுப்பவும் இறக்கப்போவோரைக் காப்பாற்றவும் வருகிறார்*!


*ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு* 


மேற்குறித்த *உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,*

 *இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்*" 


*என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி*


*அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு* *அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள விளையாடல் செய்தருளு நிமித்தம்,*  


*மேலே சொல்லியுள்ள காரண காரியங்களை நிறைவேற்றுவதற்காக* *இதுவரை இவ்வுலகிற்கு வருகைத் தராத கடவுள்* *வள்ளல்பெருமான் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு இயற்கை உண்மை எனும்*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் தனித்தலைமை பெரும்பதியாகிய கடவுள் வருதருணம் இதுவே என்கிறார்.* 


*வள்ளலார் பாடல்*


*அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி*

*ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக*


தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்

திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்


இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ

என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்


மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த

மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது*


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


*செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்*

*திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே*.! 


*இனி உலகம் எங்கும் உள்ள சாதி சமய மதங்களை  அகற்றி திருவருட் செங்கோல் நடபெறுகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அறிவுள்ளவர்கள்அறிந்து கொள்ளுங்கள்.*


ஞானசரியை 9 வது பாடலின் விளக்கம் தான்  இதுவேயாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வீண் என்ற வார்த்தை !

 *வீண் என்ற வார்த்தை!*


இந்த உலகில் இறைவன் மனிதனைப் படைத்தற்கு காரணம் அருளைப் பெறுவதற்கே.


*அழியாமல் வாழ்வதற்கு அருளைப்பெறும் தகுதியுடைய மனிதன் அழியும் பொருளைத் தேடிப் பெற்று அழிந்து வீண்போது கழித்துக் கொண்டு உள்ளான் என்பதை வள்ளலார் வீண் என்ற வார்த்தையை திருஅருட்பா பாடலில் நிறைய இடத்தில் பதிவு செய்கிறார்.*


இந்த *"வீண்"* என்ற வார்த்தைக்கு மட்டுமே


வள்ளலார் 40  பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் அதையெல்லாம் படித்தால் நமக்கு தெரிந்துவிடும்.


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து *"வீணே"* நீர் அழிதல்அழ கலவே


கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் *"வீணே"*

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்.


புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கி *"வீண் போது"* போக் குறுவேன்

நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினுங் கடையனேன்


*"வீணே"* பராக்கில் விடாதீர் உமதுளத்தை

நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்

தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான்


கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் *"வீணே"*

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன் *"வீண்"* போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன்


நேற்றை வரையும் *"வீண்போது"* போக்கி இருந்தேன் நெறிஅறியேன்

நேரேஇற்றைப் பகல்அந்தோ

எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப

அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்

பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன்


தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் *"வீண்"* கழிக் கின்றார்


வாய்க்குறும் புரைத்துத் திரிந்து *"வீண் கழித்து"*

மலத்திலே கிடந்துழைத் திட்ட

நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்

நன்றுறச் சூட்டினை அந்தோ


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்து *"வீண்"* போயினார்


என்று நிறைய பாடல்களில் பதிவு செய்துள்ளார் *வீண்* என்பது தரக்குறைவான செயல்  என்பதாகும்.

மறுபடியும் எடுக்க முடியாத. சேர்க்க முடியாத. உதவிட முடியாத பயன் படுத்த முடியாத.பயன் அற்ற செயலுக்கு வீணாய்போச்சு என்பார்கள்.


அதேபோல் மனிதன் தன் வாழ்க்கையை வீணாக அழித்துக் கொண்டுள்ளான் என்கிறார்.


ஒவ்வொரு மனிதனும் திருஅருட்பாவை நன்கு படித்து பயன் பெற வேண்டும் 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

சனி, 11 செப்டம்பர், 2021

உலகின் பொது வழிபாட்டு முறை !

 *உலகின் பொது வழிபாட்டு முறை!*


*வடலூரில் மட்டுமே பொதுவான உண்மையான கடவுள் வழிபாடு காட்டப்படுகிறது*


*உலக வரலாற்றிலே தத்துவங்கள் அற்ற உண்மைக் கடவுள் வழிப்பாட்டை வடலூரில் தோற்றுவித்தவர் தொடங்கி வைத்தவர் திருஅருட்பிரகாச வள்ளலார்பெருமான் ஆவார்கள்*


*கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்ற உண்மையை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்*


வள்ளலார் பாடல்!


*தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்*

தத்துவா தீதமேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம் என்று


அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


மேலும் பதிவுசெய்கின்றார்


தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்


சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா


சித்து வந்தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே


ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே! 


மேலே கண்ட பாடலில் *தத்துவங்களை இயக்கும் தத்துவம்  எல்லாம் கடந்த தனிப்பெருஞ்ஜோதிதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் என்னும் உண்மையை தெளிவாக மக்களுக்குச் சொல்லுகிறார்*.


*தத்துவம் என்பது சிவத்திற்கு துணையாக இருப்பது ஜடத்தன்மை உடையதாகும். உயிரும் ஆன்மாவும் இயங்குவதற்கு ஜடதத்துவமான  உடம்புத் தேவைப்படுகிறது.பஞ்ச பூதங்களான ஜட தத்துவ அணுக்களைக் கொண்டு உடம்பும் அதனுள் இயங்கும் உறுப்புக்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு 72 ஆயிரம் நரம்புகளையும் இயங்க வசதியாக  மாயையால் கட்டிக் கொடுக்கப்படுகிறதுதான் உடம்பு.* *மாயையும் கடவுள் அல்ல மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பின் உள்ளே இயங்கும் தத்துவங்களும் கடவுள்கள் அல்ல* ஆன்மா உயிர் இயங்க தேவையான கருவிகளே தத்துவங்கள் எனப்படும்.


*கடவுள் தன்மைக்குத் தகுதியானது ஆன்ம ஒளி ஒன்று மட்டுமே*


*ஆதியிலே இதை எல்லாம் மறைத்தவன் ஓர் வல்லவன்*

*அவன் யார்?* என்பதை வள்ளலார் பேருபதேசத்தில் பதிவு செய்துள்ளார்.


*அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்.அதன் உண்மை என்னவென்றால் நான் அந்த பூட்டை உடைத்து விட்டேன் என்பது பொருளாகும்.*


*இப்போது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிரச்சனையில் உள்ளது *விநாயகர் முருகன் சிலைகள் இவை  யாவும் தத்துவங்கள்*! 

தத்துவங்களை கடவுள் என நம்பவைத்து ஒரு கூட்டம் மக்களை அரசியல் வேட்டையாடிக்கொண்டு உள்ளார்கள்


*இந்து மதத்தைச் சார்ந்த பெரிய பெரிய ஆலயங்கள் கோயில்கள் சிறிய கோயில்கள் யாவும் மேலும் சாதி சமய மதம் சார்ந்த வழிப்பாட்டு கடவுள் சிலைகள் வழிபாட்டு முறைகள் யாவும் தத்துவங்களேயாகும் மனித உடம்பின் அமைப்பும் அவ்வுடம்பில் உள்ள  உயிர் ஆன்மா இயங்கும் விதமும் உடம்பின் உள் உருப்புக்களுமான தத்துவங்களும் அவைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் தன்மையைக் கண்டு கொண்டு  புறத்தில் ஒவ்வொரு தத்துவங்களுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து சிலைகளாக்கி  அவைகளை கடவுள் வழிபாடாக சுமார் 5000 ஆண்டுகளாக மக்களைப் பின்பற்றச் செய்து வருகிறார்கள்* அவற்றை உண்மை என்றே இன்றுவரை மக்கள் நம்பிக்கை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். 


இவற்றை வைத்து ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வாழ்க்கை நடத்திக்கொண்டு வருகின்றது.


*வள்ளலார் எழுதிவைத்துள்ள திருஅருட்பா உரைநடைப்பகுதியிலும் பாடல்களிலும் உடம்பின் அருமைப்பற்றி தன்னுடைய அருளால் ஸ்கேன் செய்து பார்த்து அணு அணுவாக ஆராய்ந்து எல்லா தத்துவங்களுக்கும் விளக்கம் தந்து உள்ளார்*


*படித்தால்தான் உண்மைஎது ! பொய்எது ! என்று அறிவால் அறிந்து கொள்ளமுடியும்.*


*தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீகவாதிகளும் சரி* *பகுத்தறிவுவாதிகளும் சரி* *தமிழ்படித்த சான்றோர்களும் சரி* *பட்டிமன்ற பேச்சாளர்களும் சரி*  *அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி வல்லுநர்களும் சரி*

*கண்ட கண்ட குப்பைகள் எல்லாம் படிக்கிறார்கள் அவற்றில் உள்ள பொய்யான கற்பனைக் கருத்துக்களை எல்லாம் வாய்கிழிய மேடையில் பேசுகிறார்கள்*.


 *உலகிற்கே உணமையைச் சொல்லியுள்ள திருஅருட்பாவை ஊன்றி படிக்க இயலாதவர்களாய் உள்ளார்கள்.இதுவே சமுதாய சீர்கேட்டிற்கு காரணமாக உள்ளது*.


*திருஅருட்பாவை தொடும் தகுதி அவர்களுக்கு இல்லை என எண்ணவேண்டி உள்ளது*. 


*தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி போன்றவர்களுக்கு வள்ளலார் கொள்கையில் மிகவும் முக்கியமான சாதி சமயம் மதம் அற்ற சமூக நீதிக் கொள்கைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்* 


*பெரியார் சமய மதக்கடவுள்களை வெறுத்தார் அந்த கடவுள்களைக் கற்பித்தவன் முட்டாள் என்றார்*.

*வடலூர் வந்து பார்த்த பெரியார் வள்ளலார் காட்டிய கடவுளை ஏற்றுக்கொண்டார்*.


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பது திராவிட கட்சிகளுக்கு ரொம்ப பிடிக்கும்*.

*அதனால்தான் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கான்கின்றேன் என்றார்*. 


*கலைஞர் அவர்கள் வள்ளலார் காட்டிய மஞ்சள்  வெள்ளைத் துணியை கடைசிவரை அணிந்திருந்தார்*.

*மேலும் வள்ளலார் சொல்லிய ஒளி வழிப்பாட்டு முறையை ஏற்றுக்கொண்டார்* 

*எல்லோரும் சகோதர உரிமை உடையவர்கள் என்று வள்ளலார் சொல்லியதை என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்கள் என்று மேடை தோறும் சொல்லி வந்தார்.*


*இதையெல்லாம் நான் சொன்னால் விபரம் அறியாத சமய மதம் சார்ந்த சன்மார்க்கிகள் எனக்கு தி மு க முத்திரையை குத்துகிறார்கள்* 


*எனக்கு எந்த கட்சியிலும் தொடர்பு இல்லை உறுப்பினர் இல்லை என் உயிர் மூச்சு உள்ளவரை வள்ளலார் கொள்கை மட்டுமே என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை*   


*தமிழக அரசு*


*இப்போது மக்கள் நலன் கருதி மக்கள் ஆட்சி செய்யும் தி மு க அரசு வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்க போவதாக அறிவித்து அதற்கு வேண்டிய ஆலோசனைகள்  பணிகள் துரிதமாக நடந்து கொண்டு வருவதாக கேள்விபட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.* 


*தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள்  தேர்தல் வாக்குறுதியில் அளித்த வடலூர் முக்கிய இடம் பிடித்துள்ளது . உலகம் எங்கும் வாழும் சன்மார்க்க குடும்பங்கள் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சியைத் தந்துள்ளது*


*அதில் சில புல்லுறுவிகள் உள்ளே புகுந்து வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமாக  சமய மதக் கருத்துக்களை உள்ளே புகுத்தி அறிவிப்பார்கள் தமிழக அரசு அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்*


*வள்ளலார் கொள்கையை நன்கு அறிந்த உண்மையான நேர்மையான நீண்ட அனுபவமும் கொள்கை பிடிப்பும் உள்ளவர்களையும் சுத்த சன்மார்க்கத்தைச் பின்பற்றி வாழ்ந்து கொண்டுள்ள சன்மார்க்கம் சார்ந்த சான்றோர்களின் அறிவுரையைத் துணைக்கொண்டு செயல்பட வேண்டுமாறு மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களையும்.  அறநிலையத்துறை அமைச்சர். அவர்களையும் தமிழக ஆட்சி துறை அதிகாரிகளையும் பணிவான முறையில் அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்* 


நல்லதே நடைபெற வேண்டும் என்று இயற்கை உண்மையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வியாழன், 9 செப்டம்பர், 2021

நான்கு வருணங்கள்!

 *நான்கு வருணங்கள!*


பொறுமையாக ஊன்றி படிக்கவும்!


*சாதி சமய மதங்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலார் தோற்றுவித்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கக் கொள்கையாகும்*


*வள்ளலார் பாடல்!*


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே


*மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை* நீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே


*கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே*

காண்பன எல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே


மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.!


*நான்கு வருணம் என்ற சாதி பாகுபாட்டை உருவாக்கி அதற்கு தகுந்த ஆசிரமம் ஆசாரம் முதலிய கலைகளைத் தோற்றுவித்து மனிதகுலத்தைப் பிரித்து வைத்துள்ளது சிறு பிள்ளகள் விளையாடுவதற்கு விளையாட்டு மொம்மைகள் வாங்கித் தருவதுபோல் மனிதகுலத்தை விளையாடவைத்து வேடிக்கைப் பார்க்க வைத்துவிட்டார்கள் முட்டாள்கள்* *அவர்கள்தான் அன்றும் இன்றும்  சமுதாய துரோகிகள் என்கிறார் வள்ளலார்.*


நான்கு வருணத்தை

(நான்குசாதியை) படைத்த  முட்டாள்களுக்கு மனிதனின் உடம்பின் மேல் உள்ள தோலை வைத்து மேல்சாதி கீழ்சாதி என பிரிக்க முடியுமா ? நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில். சாதியைக்காண முடியுமா?  மேலும்  ஆகாயம் அக்கினி நீர் நிலத்தில் சாதியைக் காட்டமுடியுமா ?   மேலும் உயிரில் ஆன்மாவில் சாதியைக் காட்ட முடியுமா ? இவைகளில் சாதியை சமயத்தை மதத்தை கண்டு அறியமுடியுமா !  எனக் கேள்வி கேட்கிறார் வள்ளலார்.


கடவுளை மையமாகவைத்து  சாதிகளைப் பிரித்து வைத்தவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் உள்ளது உள்ளபடியே வள்ளலாருக்கு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்கிறார்.  


இறைவனால் படைத்த பஞ்சபூதங்களில் சாதி சமயம் மதம்போன்ற பிரிவினை உண்டா? பஞ்ச பூதங்களின் அணுக்களால் பின்னப்பட்ட உடம்பில் வாழ்ந்துகொண்டு சாதி சமய மதம் என்ற முட்டாள்தனமான  கொள்கைகளை உருவாக்கி மனித நேயத்தையும் ஆன்மநேயத்தையும் கெடுத்து நாட்டை நாசமாக்கி விட்டார்கள் சாதி சமய மதவாதிகள்.


முட்டாள்தனமாகத்  சாதி சமய மதங்களைத் தோற்றுவித்து மனிதகுலத்தை பிரித்து வைத்தவர்களை ஞானிகள் என்றும் அருளாளர்கள் என்றும் போற்றி வணங்குவதும் வழிபடுவதும் கொஞ்சம்கூட அறிவில்லாத முட்டாள்தனமான கண்மூடித்தனமான செயலாகும் என்கிறார் வள்ளலார்.


*உலகில் உள்ள சாதி சமய மதவாதிகளால் எழுதி வைக்கப்பட்டுள்ள கற்பனைக் கதைகள் அதன் தத்துவங்கள் அதில் சொல்லப்பட்டுள்ள கடவுள்கள் மற்றும் ஆச்சார சங்கறப விகற்பங்கள்  யாவும் பொய் பொய்யே ! அதனால் அவற்றில் புகுதாதீர் வீணில் அலையாதீர் என்கிறார்* *ஆதலால் உலகில் உள்ள எந்த நூல்களையும் படிக்காதீர்கள் அவற்றில் நம்பிக்கை வைக்காதீர்கள் என்கிறார்* 


ஏன் என்றால் ? *அவற்றை எழுதியவர்கள் மாயையில் சிக்குண்டவர்கள் உண்மையை எழுதும் தகுதி அற்றவர்கள் அவர்கள்  எல்லோரும் பொய்யே புனைந்துரைக்கும் கொள்ளைக் கூட்டத்தலைவரகள் என்கிறார் வள்ளலார்*.


*வள்ளலார் பாடல்!*

 

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்


*கள்ளமுறும் அக்கலைகள்* *காட்டியபல் கதியும்*

*காட்சிகளும் காட்சிதரு கடவுளரும்* எல்லாம்


*பிள்ளைவிளை யாட்டென* நன் கறிவித்திங் கெனையே

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே*


தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.! 


மேலே கண்ட பாடல் எளியதமிழில்தான் உள்ளது ஊன்றி படித்து அதிலுள்ள உண்மை விபரத்தையும் விளக்கத்தையும்  தெரிந்து கொள்ளங்கள் என்கிறார் வள்ளலார்.


மேலும் *ஒருபாடல்*


*கண்டதெலாம் அநித்தியமே* *கேட்டதெலாம் பழுதே*

*கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே*


*உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே*

*உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே*


விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே


எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!


 *மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதனைப் பக்குவப்படுத்த எழுதி வைத்துள்ள நூல்கள் எல்லாம் பொய் பொய்யே அவற்றை படிக்காதீர்கள் அவற்றில் புகுதாதீர்கள் என்று அழுத்தமாக துணிச்சலுடன் சொல்லுகிறார்.மேலும் கண்டது கேட்டது கற்றது களித்தது உண்டது உட்கொண்டது எல்லாமே குறைபாடுகள் உடையதே ஆகும்.* 


*இவ்வளவு காலம் சாதி சமய மதத்தை நம்பி ஏமாந்து வாழ்ந்து வீணாகப் போனது போதும* *இனிமேல் மனிதகுலத்தின் நன்மைக்காக உண்மையை வெளிப்படையாக  இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய மெய்நெறியாகும்*. *இந்த மெய் நெறியில்தான் மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து கொள்ளமுடியும். மெய்ப்பொருளை நன்கு தெரிந்து உணர்ந்து அறிந்து கொண்டால் மட்டுமே  அருளைப் பெறமுடியும்*


*மெய்ப்பொருளை அறிந்து கொள்வதற்கும் அருளைப்பெறுவதற்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன் ஆன்மா என்ற நான்கு ஒழுக்கங்களே நான்கு தூண்களாகும்* *இதுவே கடவுளின் பொதுவான வழிபாட்டு முறையாகும். என்பதை சுத்த சன்மார்க்கத்தை சார்ந்த அன்பர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும்*.

*மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்*


*சன்மார்க்க சங்கங்களை பஜனை மடங்களாக ஆக்காதீர்கள்* *ஜீவகாருண்ய தொண்டு ஆற்றி சத்விசாரம் செய்தால் போதுமானதாகும்*


*வள்ளலார் சொல்லியுள்ளதை பின்பற்றாமல் வாழ்பவர்களை சன்மார்க்கிகள் என்று சொல்லுவதற்கு தகுதி யற்றவர்களாவார்கள் அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் புறம் தள்ளிவிடுவார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்*.


*மரணம் இல்லாப்பெருவாழ்வு என்பதை  அடைவதற்கு முதலில் வள்ளலார் சொல்லியுள்ள  ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.*


*ஒழுக்கம் இல்லாமல் என்ன கரணம் அடித்தாலும் வேலைக்கு உதவாது*


*சாதி சமயம் மதங்களை விட்டால் மட்டுமே ஒழுக்கம் கைகூடும்*.

*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகளே சாதி சமய மதங்களாகும்*


*வள்ளலாரே சொல்லுகிறார்*


*சாதி சமயச் சழக்கைவிட்டேன்*  *அருட்*

*சோதியைக் கண்டேனடி* - *அக்கச்சி

சோதியைக் கண்டேனடி* சோதியைக் கண்டேனடி - அக்கச்சி

சோதியைக் கண்டேனடி*.!


என்று தெளிவாக வெளிப்படையாகச் சொல்லுகிறார்.


*ஒரு சிறு விளக்கம்*


(தென்னிந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகளில் சுவாரசியமான சில விவாதப் பொருட்களில், தமிழகத்தின் வருணப் பாகுபாடு குறித்த விவாதமும் முக்கியமான ஒன்றாகும். தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று இரு பிரிவுகளே காணக்கிடைக்கின்றன. வட *இந்தியாவில் இன்று வரை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வருணங்கள் சமூகத்தில் உள்ளன*. இன்றைய *தமிழகத்திலோ, பிராமணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் எனக் கருதுவதால் இங்கு பிராமணர், சூத்திரர் என இரண்டு வருணப் பாகுபாடே உள்ளதாகக் கருத வேண்டி யுள்ளது*.)


*வருணம் என்ற சாதி பாகுபாட்டையும் பொய்யான வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்களும் அவற்றினால் படைக்கப்பட்ட  கற்பனைக் கதைகளையும் அவற்றில் நடிக்கவைத்த கதாபாத்திரக் கடவுள்களையும்*

*அவற்றில் உள்ள மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர் வள்ளலார் ஒருவரே!*


*இன்று உலகம் முழுவதும் சாதி சமய மதங்களின் எதிர்ப்பு குரல்கள் வலுவடைந்து உள்ளன. இன்று உலகம் முழுவதும் வள்ளலார் விதைத்த விதைகள் முளைந்து வளர்ந்து சுத்தசன்மார்க்க பயிர்கள் பல ரூபங்களில் வீரியத்துடன் வெளிப்படுகின்றன*


*இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளையாடும் ஞானவிளையும் விளையாட்டாகும்.*   *வள்ளலார் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்ற சூழ்ச்சுமம் இதுதான்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 9865939896.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

நரை திரை பிணி மூப்பு வராமல் வாழும் வாழ்க்கை!

 *நரை திரை பிணி மூப்பு வராமல் வாழும் வாழ்க்கை!*


மனித குலத்தில் பிறந்த உயர்ந்த அறிவுபெற்ற மனிதன் நரை திரை பிணி மூப்பு வராமல் என்றும் இளமையோடு வாழும் வாழ்க்கையைக் கண்டுபிடித்தவர் வள்ளலார்.


நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே ! (அகவல்)


என்றே யென்னினும் இளமையோடு இருக்க

நன்றே தருமொரு ஞானமா மருந்தே! ( அகவல்)


*வள்ளலார் பாடல்!*


நரை மரண மூப்பறியா நல்ல உடம்பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்


வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்தகுலம் என்றும்

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்


புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம் என் றறிந்தே

புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே


உரைபெறும் என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.! 


மேலே கண்ட பாடல்கள் வாயிலாக நமக்கு  வள்ளலார் என்ன  தெரிவிக்கின்றார் என்பதை கவனிக்க வேண்டும்.


ஒவ்வொரு ஆன்மாக்களும் உயிர் எடுத்து உடம்பு எடுத்து வாழ்ந்து உடம்பு என்னும் வீடு முதிர்ச்சி அடைந்து பழுது அடைந்து விடுவதால்  *ஆன்மா உயிர் இரண்டும உடம்பை விட்டு பிரிந்து விடுகிறது*. அதற்கு மரணம் என்றும் உயிர் போய்விட்டது என்றும் இறந்து விட்டார் என்றும் மக்களால் சொல்லப்படுகிறது


*வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம் நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்தபிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!


பிறந்து வளர்ந்து வாழ்ந்து நரை திரை பிணி மூப்பு மரணம் வந்துவிட்டால் மற்றவர்களைப் பார்த்து அழுகின்றோம் கத்துகிறோம் கதறுகிறோம்.


*(செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது போல்)*


உயர்ந்த அறிவுபெற்ற மனிதா !  நரை திரை பிணி மூப்பு மரணம் ஏன் வருகிறது எதனால் வருகிறது என்று ஒரு நிமிடமாவது சிந்தித்தது உண்டா ? அறிவு இருந்து என்ன பயன்? மறந்துதானே இருந்தீர் என கேள்வி கேட்கிறார் வள்ளலார். 


உங்களை நினைக்கின்ற போது எமக்கு மனம்  நடுங்குகின்றது.

நீங்கள் எதைப்பற்றியும் வருத்தப்படாமல் கவலைப்படாமல்

சிந்திக்காமல் *அறிவுக்கு வேலை கொடுக்காமல்.*

*மனம்போனபடி  எதுநடந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு வாழ்கின்றீர்* என்னே உமது வாழ்க்கை பைத்தியக்காரத் தனமாக இருக்கின்றதே என நினைத்து மனம் வருந்துகின்றார்.


*போனது எல்லாம் போகட்டும் இனிமேலாவது தயவுசெய்து நான் சொல்வதை  கேளுங்கள் என்கிறார்*.


*சிறப்பான சன்மார்க்கம்*!


நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் காப்பாற்றும் சிறந்த மார்க்கம் சன்மார்க்கம் ஒன்றே என்பதை தெரிந்து அறிந்து இங்கே வாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார்.


இந்த பிறப்பிலே அழியாத நித்திய பெருவாழ்வை பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே வாருங்கள் என்கிறார்.


*வள்ளலார் பாடல்!*


விரைந்து விரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே

மெய்மைஉரைக் கின்றேன் நீர் வேறுநினையாதீர்


திரைந்து திரைந் து உளுத்தவரும் இளமைஅடைந் திடவும்

செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய


வரைந்து வரைந்து எல்லாஞ் செய் வல்லசித்தன் தானே

வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்


கரைந்து கரைந்து உளம்உருகிக் கண்களின் நீர் பெருகிக்

கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.!


மேலே கண்ட பாடல் மிகவும் முக்கியமானதாகும்.


திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடலாம் என்கிறார்.

அதற்கு *ஒரே வழி* 


கரைந்து கரைந்து உள்ளம் உருகி கண்களில் நீர்பெருகி *கருணை நடக்கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  உட் கருதுமினோ களித்து என்கிறார்*.


ஆன்மாவை இயக்கிக் கொண்டு இருக்கும் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை உள்ள ஆண்டவரால் மட்டுமே அருளை வழங்கி காப்பாற்ற முடியும் வேறு இறைவர்களால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. ஆதலால் ஆண்டவரை நினைந்து ஊற்று எழும் கண்ணீர் கொண்டு இடைவிடாது அழுது கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்.


*உண்மையாக ஆண்டவரை நினைப்பவர்களுக்கு அழுத கண்ணீர் மாறாது ஆகாரத்தில் இச்சை செல்லாது என்பதே அடையாளமாகும்.* இந்த அடையாளம் உள்ளவர்களைத் தேடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து அருளை வழங்கி ஆட்கொள்வார்.


*மேலும் வள்ளலார் பாடல்!*

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை


நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி


ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை


ஓர் உறவென் றடைந்துலகீர் போற்றி மகிழ்ந் திடுமின்

உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.! 


*சார் உலக வாதனையைத் தவிர்த்து ஒரே உறவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான்* *என்ற உண்மை* *அறிந்து போற்றி* 

*மகிழ்ந்து நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து* *அன்பே நிறைந்து நிறைந்து* *ஊற்றெழும் கண்ணீர் அதனால்* 

*உடம்பு நனைந்து நனைந்து* *அழுகின்றபொழுது* தான்

*என்றும் அழியாத நன்நிதியாகிய அருளை வாரி வழங்குவார்*


*அருள்பெற்றால் மட்டுமே நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் உடம்பு உயிர் ஆன்மாவை பிரியாமல் பாதுகாக்கமுடியும்*.


*இந்த உண்மை அறிந்து வாழ்பவர் எவரோ அவரே சன்மார்க்கியாவார்* 


அருள் வடிவு அதுவே யழியாத் தனிவடிவு

அருள்பெற முயலுக என்று அருளிய சிவமே!(அகவல்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருவருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

துன்பத்தில் இருந்து விடுபட ஒரேவழி !

 *துன்பத்தில் இருந்து விடுபட ஒரே வழி!*


*ஒவ்வொரு மனித தேகம் எடுத்த சம்சாரிகளும் அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது வள்ளலார் எழுதியுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலாகும்*.


உலகத்தில் எந்த ஞானிகளும் ஆன்மாக்கள் ஆன்மலாபம் அடையும் வழியை இவ்வளவு எளிமையாக தெளிவாக உண்மையாக சொல்லியதில்லை


*அதில் முக்கியமான பகுதியை வெளிப்படுத்துகிறோம் ஊன்றி படித்து பயன் பெறுவோம்!*


*பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும்*


 பூர்வகர்மத்தாலும் அஜாக்கிரதையாலும் அச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய


 *சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்*. 


ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே *சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்*.


*புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும்*,


 *உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும்,*


*நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும்*. 


*இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்*


*இதைவிட விளக்கம் பெரியதாக 

ஒன்றும் தேவைஇல்லை* இதுவே ஆன்ம லாபம் அடைவதற்கு சிறந்த வழியாகும்*.


*முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது!*


*நாம் செய்யும் ஜீவகாருண்யம் நம் உழைப்பால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு செய்தால் நூறு சதவீதம்  லாபத்தை கொடுக்கும்*. 


*மற்றவர்களிடம் இருந்து பொருளைப் பெற்று ஜீவகாருண்யம் செய்தால் 10 பத்து சதவீதம் லாபம் மட்டுமே கிடைக்கும்.* இந்த உண்மை அறிந்து ஒவ்வொருவரும் ஜீவகாருண்யம் செய்ய வேண்டும்.


*ஆதலால் வள்ளலார் வடலூரில் தருமச்சாலை துவங்கும்போது வெளியிட்டது*


*பலர் சகாயத்தாலே தருமச்சாலை நிலைபெற வேண்டும் ஆதலால் ஜீவதயை உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களாற் கூடியவிரைவில் பொருள் முதலிய உதவிசெய்து அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என வெளிப்படுத்துகின்றார்*. 


ஆன்மலாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்ற சூழ்ச்சுமமான உண்மையை வெளிப்படுத்துகிறார்*.  வடலூர் வரும் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை இடைவிடாது தொடர்ந்து போக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் வடலூர் தருமச்சாலைக்கு பொருள் உதவி செய்யுங்கள் என்கிறார்*  *இது எல்லோருக்கும் பொதுவான  ஜீவகாருண்யம். *அதனாலே வடலூரில் உள்ள அடுப்பிற்கு அணையா அடுப்பு என்று பெயர்* 


*பொருள் உதவி செய்பவர்களும் அவற்றைப் பெற்று ஜீவகாருண்யம் செய்பவர்களும் நன்கு யோசித்து  செய்தல் வேண்டும்* *எவ்வாறு செய்தால் மோட்ச வீட்டின் திறவுகோல் கிடைக்கும் என்பதை அறிவைக் கொண்டு அறிந்து செயல்பட வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896

வியாழன், 2 செப்டம்பர், 2021

முதியோர் இல்லங்கள் அவசியம் தேவை !

 *60 வயதிற்கு மேற்பட்டவர்களின் விருப்பம்*!

முன் காலத்தில் சிறுவயதில் அம்மா அப்பா அரவணைப்பில் வளர்ந்து அண்ணன் அக்கா தங்கை தம்பி உற்றார் உறவினர்களிடம் சேர்ந்து விளையாடி வளர்ந்தோம்.

பின் பள்ளி கல்லூரியில் சேர்ந்து படித்து படிப்பிற்கு தகுந்த வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து அம்மா அப்பாவிடம். கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் காலத்தில்.

வயது 25 ஆயிற்று காலம் உள்ளபோதே பயிர்செய் என்பதுபோல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். 

குழந்தைகள் பிறந்தவுடன் வேலைக்காரணமாகவும் சூழ்நிலைக் காரணமாகவும் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் போக ஆரம்பித்துவிடுகிறோம் குழந்தைகள் பிறந்து பொறுப்புக்கள் குடும்ப சுமைகள் வந்துவிடுகிறது.

அம்மா அப்பாவுடன் இருக்கும்போது வருமானம் குறைவாக இருந்தாலும் அப்பா அம்மாவின் அன்பினால் நாவிற்கு ருசியான தேவையான காய்கறிகள்.கீரைவகைகள் வித்தியாசமான உடம்பிற்கு தகுந்த உணவுவகைகள். பலவிதமான பலகாரங்கள் செய்துகொடுத்து நோய்வராமல் மருத்துவ செலவுகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் தன் குழந்தைகளை வளர்த்து வந்தார்கள்.

அம்மா அப்பாவிற்கு வயதாகிவிட்டது.

அவர்களால் முன்புபோல் வேலை செய்ய முடிவதில்லை.தங்கள் விருப்பம் போல் உணவு செய்து சாப்பிடவும் முடிவதில்லை

ஓய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.

*60 வயதாகிவிட்டால் உடம்பின் இயக்கம் குறைந்து விடுகிறது*.

மகனுடனோ மகளுடனோ இருக்க வேண்டிய சூழ்நிலை  ஏற்பட்டுவிடுகிறது.

அவர்கள் தன் மகனிடமோ மகளிடமோவிரும்புவது சொத்தோ பணமோ வசதி வாய்ப்புகளோ கிடையாது.

இப்போது நிறைய குடும்பங்களில் அன்பிற்கோ பாசத்திற்கோ பணத்திற்கோ பஞ்சமில்லை.

எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் வயதானவர்களுக்கு பணிவிடை செய்யவோ! தகுந்த உணவு செய்து கொடுப்பதிலோ  பின்வாங்குகிறார்கள்.அவர்கள் விருப்பத்தை கேட்டு உணவு செய்து கொடுப்பதற்கு இக்காலத்தில் யாரும் தயாராக இல்லை.

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வீட்டில் செய்வதைத்தான் முதியோர்கள் சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

அதுவே வயதானவர்களுக்கு பெரிய மன உளைச்சல் மன வேதனை மற்றும் மனவியாதியைத் தருகிறது.  

தங்கள் மனவேதனையை குடும்பத்தில் சொன்னால் பிரச்சனை வரும்.நம்மால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது  என்பதால் வெளியில் யாரிடமும் சொல்வதில்லை. இதுதான் இன்றைய முதியோர்களின் கவுரமான மனநிலையாக உள்ளது. 

*முதியோர் இல்லங்கள்!*

வெளியில் சொல்லமுடியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கும் *வசதியுள்ள முதியோர்கள் அனைவருக்கும் அரிய வாய்ப்பை ஆண்டவர் உண்டாக்கியுள்ளார் அதுதான் முதியோர் இல்லங்கள்.*

அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் சமூகசேவை மனப் பான்மையுடன் எல்லா நகரங்களிலும் நிறைய உள்ளன. 

தனியாக தங்குவதற்கும் ரூம்(அறை) வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தனிபெட்மட்டும் போதும் என்றாலும் தங்கிகொள்ளலாம் 

பணம் கொடுத்து தங்கவும் சாப்பிடவும் வசதியுள்ள முதியோர்கள் வசதியான இல்லங்களுக்கு சென்றுவிடுகிறார்கள் என்பது உண்மை. 

அங்கு முதியோர்களுக்கு நேரம் தவறாமல் தகுந்த உணவு வகைகள்  மருத்துவம் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி பாதுகாப்பான சர்வீஸ் வேலையாட்கள்  நிறைந்த இடமாக உள்ளது.

தங்களுக்கு பிடித்த தேவைஉள்ள இல்லத்தை தேர்வுசெய்து தங்கி தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்கள்.

TV வசதி பேப்பர் வசதி போன்வசதி எல்லாம் உள்ளன

ஓய்வு நேரங்களில்  உலக நடப்புக்களை முதியோர்களுடன்  கலந்து பேசி பரிமாறிக்கொள்கிறார்கள் 

மகன் மகள் பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் வாடகைக்கார் எடுத்து சென்று பார்த்துவிட்டு வந்து விடுகிறார்கள்.

முதியோர்களை கவனிக்க முடியாத அன்பும் பாசமும் உள்ள மக்கள் இதுபோன்ற முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர்களை தங்கவைப்பதே சிறந்த பாதுகாப்பான செயல்களாகும்.  இந்த முதியோர் இல்லங்களால் முதியோர்களுக்கு மனத் திருப்தியும் மனமகிழ்ச்சியும் கொடுக்கின்றது என்பதுதான் உண்மை. 

விருப்பம் இல்லாமல் கவனிப்பு இல்லாமல் வீட்டில் அடைந்து கிடப்பதைவிட தங்கள் வயதுடைய முதியோர்களிடம் கலந்து உரையாடி மகிழ்வதே சிறப்புடையதாகும்.

*இந்த செய்தி எனது இனிய நண்பர் திருப்பூர் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர் சொல்லியது.*

பெயர் சொல்ல விரும்பவில்லை.

 அவர் மகன் மகள் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள்.கோபித்துக் கொண்டோ குறை சொல்லியோ வரவில்லை என்கிறார். என்வசதிக்காக்

தேவைக்காக விருப்பத்தோடு இங்கு வந்து தங்கி உள்ளேன் என்கின்றார். 

மகன் மகள் பேரன் பேத்திகளை அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவேன் என்கிறார்.

அவர் ஈரோட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.

நல்ல பாதுகாப்பான வசதியுடன் கூடிய தனிரூமில் தங்கியுள்ளார்.

மகிழ்ச்சியுடன் உள்ளேன் என்கிறார்.

*நீங்களும் வந்துவிடுங்கள் என்று என்னை அன்புடன் அழைக்கிறார்*. இங்குள்ளவர்களுக்கும் சன்மார்க்கத்தை போதிக்கலாம்  என்கிறார்.

வெளியில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம் ஆனால் சொல்லிவிட்டுத்தான் போகவேண்டும் 

*வசதியுள்ள முதியோர்கள் கவலைப்பட தேவையில்லை.*

*பணம் இருந்தால் மனம் இருந்தால் இறுதிவரை மகிழ்ச்சியுடன் வாழலாம்*.

எல்லோருக்கும் கடவுள் எதாவது ஒரு நல் வழியைக் காட்டிக்கொண்டே இருப்பார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 1 செப்டம்பர், 2021

சன்மார்க்க அன்பர்களுக்கு வேண்டுகோள்!

 *சன்மார்க்க அன்பர்களுக்கு வேண்டுகோள்!*


*வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை சபை மற்றும் சித்திவளாகம் யாவும் சாதி சமயம் மதங்கள் சாராத அமைப்புகளாகும்*.


மேலும் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் ஆன்மலாபம் அடைவதற்கும் தடையாக இருப்பது சாதி சமய மதங்களின் கொள்கைகளும்  அவற்றின் வழிபாட்டு முறைகளும் அவற்றை பின்பற்றி வாழும் வாழ்க்கை முறைகள் யாவும் தடையாக இருக்கிறது.*


வள்ளலாரைப் போல் *சாதி சமய மதங்களைச் சாடியவர் உலகில் எவரும் இல்லை*. 


*ஏன்? *அவ்வாறு சாடுகிறார் என்பதை சன்மார்க்க அன்பர்கள் அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்*.

*அவ்வாறு அறிந்து கொள்பவர்களையே சன்மார்க்கிகள் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்*.


*சாதி சமய மதங்களை ஆண்டவர் தோற்றுவிக்கவில்லை.சமய மதவாதிகளின் சூழ்ச்சியால் தோற்றுவிக்கப்பட்டதாகும்*.

ஆதலால்தான் 


*சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென*

*ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)


*சாதியு மதமுஞ் சமயமுங் காணா*

*ஆதி யநாதியாம் அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)


என்று மிகத் தெளிவாக அகவல் வரிகளிலும்.நூற்றுக்கணக்கான அருட்பாடல்களிலும் சொல்லியுள்ளார்.நாம் தினமும் அகவல் பாராயணமும் அருட்பா பாடல்களும் படித்து வழிபாடு செய்கிறோம் சாதி சமயம் மதம் பொய் என்பதை உணர்ந்து *நாம் அவற்றைவிட்டு விலகி இருக்கிறோமா? சிந்திக்க வேண்டும்.*


*சாதி சமய மதங்களை பின்பற்றுபவர்கள் சன்மார்க்கத்தைப் பின்பற்ற தகுதியற்றவர்கள் என்கிறார்*


*ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள்!*


*மாயையால் சிக்குண்ட மாயாத் சித்தர்கள் என்னும் சமய மதவாதிகளால் தோற்றுவிக்கப்பட்டதுதான் சாதி சமய மதங்களாகும்*.

*அவற்றை பின்பற்றுவதால்தான் அறியாமை என்னும் மாயா திரைகள் ஆனமாவை தெரியவொட்டால் மறைத்துக் கொண்டுள்ளன என்பதை வள்ளலார் வெளிப்படையாக சொல்லுகிறார்.*


*வள்ளலார் பாடல்!*


*சாதி சமயச் சழக்கைவிட்டேன்* அருட்

சோதியைக் கண்டேனடி* - அக்கச்சி

சோதியைக் கண்டேனடி! 


என்றும் மேலும்


சாதி 

சமயங்களிலே 

வீதி பலவகுத்த

சாத்திரக் 

*குப்பைகள்* எல்லாம் பாத்திரம் அன்றெனவே


ஆதியில் என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால் இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்


*ஓதிஉணர்ந் தோர்புகழும்* *சமரச சன்மார்க்கம்*

*உற்றேன்* *சிற் சபைகாணப் பெற்றேன்* மெய்ப் பொருளாம்


சோதி நடத்தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச்

 நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!  


*ஆதியிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவித்தபடியே உண்மை நிலை அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்* என்றும்.சாதி சமய மதங்கள் யாவும்  அசுத்தமான சாத்திரக் குப்பைகள் என்றும் அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்பதற்காகவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* ஆண்டவர் அருளால் தோற்றுவித்தேன் என்கிறார்.


மேலும்ஒரு பாடலில் கடுமையாக சாடுகிறார்.!


*இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை*

*இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு*


மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் *குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்*


தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்


அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.!


*மேலே கண்ட பாடலை சன்மார்க்கிகள் ஊன்றி படியுங்கள்* 


மக்களை இருளில் தள்ளிய சாதித்  தத்துவ சாத்திர சமயமதக் குப்பைகளை.

*மழை இல்லாது வரண்டு கிடக்கும் புன்செய் நிலமான  பூமியில்  வெடித்து பிளந்து கிடக்கும் பள்ளத்தில் எருவாக்கி போட்டு வெளியே வராமல் புதைத்து விடுங்கள் என்கிறார்*.

மேலும் *மக்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்கிய சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரமம் ஆச்சாரங்கள் போன்ற பழக்க வழக்கங்கள்  எல்லாம் குழியை வெட்டி மீண்டும் வெளியே வராமல் உள்ளே போட்டு புதைத்து மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள் என்று கடுமையாகச் சாடுகிறார்*.


இவ்வாறு சாதி சமய மதங்களையும்.

வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரங்கள் யாவையும் தரக்குறைவாக சாடியவர்கள் வள்ளலாரைப்போல் உலகில் எவரும் இல்லை.


இவ்வாறு எல்லாம் விளக்கமாக வள்ளலார் சொல்லியும் சன்மார்க்கிகள் காதில் வாங்காமலும் கடைபிடிக்காமலும் காற்றில் பறக்கவிட்டு விட்டு.சாதி சமய மதக் குப்பைகளிலே உருண்டு புரண்டு கொண்டே இருப்பது மிகவும் பாவமாகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது.


வள்ளலார் சன்மார்க்க சங்கத்தார்களுக்கு என்றே ஒருபாடலைப் பதிவு செய்கிறார்! 


*சன்மார்க்க சங்கத்தீர்* *சிற்றடியேன் உமது*

*தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்*


என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்


புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்


தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!


சன்மார்க்கிகளின் (தாளை) காலைத்தொட்டு வணங்கிச் சொல்கிறேன் தயவுசெய்து கேளுங்கள் என்கிறார்.

சன்மார்க்கத்தில் ஏற்றத்தாழ்வு.

உயர்ந்தவன் தாழ்ந்தவன்.சாதி சமய மதம் போன்ற வேற்றுமை என்பது எதுவும் கிடையாது.

*எல்லோரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்கள்* என்பதை சன்மார்க்கிகள் உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் புன்மார்க்கத்தவர்போல் வேறு வேறு  தெய்வங்களும் கிடையாது உண்மைக்கு புறம்பான கடவுள் வழிபாடும் கிடையாது.


*கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்பதுதான் உண்மையான கடவுளாகும் என்று சத்தியம் வைத்து சொல்லுகிறார். 


சன்மார்க்கிகள் இதுவரை இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க வேண்டுமாறு தயவு செய்து வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.


*இறுதியாக வள்ளலார் சொல்லுகிறார்*


எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மை யின்பத்தை அளித்து சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே*!


இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் *முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!


தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! 


உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்

விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!


சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை!


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896