வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

ஆணையருக்கு கடிதம் !

 பெறுநர்.


உயர்திரு ஆணையர் அவர்கள்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை,

நுங்கம்பாக்கம்

சென்னை.


அனுப்புனர்

முனைவர்

ஈரோடு செ,கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்...


உயரதிரு ஆணையர் அவர்கள் சமூகத்திற்கு வணக்கம்


தமிழக முதல்வர் அறிவிப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படி  வள்ளலார் 200 ஆவது ஆண்டு விழா வருடம் முழுவதும் 52 வாரங்கள் தமிழகம் முழுவதும் சிறப்புடன் நடத்தியமைக்கு நன்றி நன்றி நன்றிகள்


அடுத்த கட்டமாக வள்ளலார் சர்வதேச மையம் ரூபாய் 100 கோடிக்குமேல் வழங்கி வள்ளலார் பெயரில் அமைப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றிகள்.


நான் 45 ஆண்டுகளாக  சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து,பட்டித் தொட்டிகள் நகரங்கள், மற்றும் வெளிநாடுகள் சென்று சொற்பொழிவு செய்து வருகிறேன் நான்கு நூல்கள் வள்ளலார் கொள்கைபடி வெளியிட்டுள்ளேன்,மேலும் திருஅருட்பா ஆராய்ச்சி மையம் அமைத்து மக்களுக்கு வள்ளலார் சொல்லிய வண்ணம் *சாகாக்கல்வி* பயிற்சி கொடுத்து வருகிறேன்


இந்நிலையில் சர்வதேச மையத்தில் திருஅருட்பா விரிவுரையாளராகவோ,அல்லது கல்வித்துறையில் சேவை செய்யவும் தயாராக உள்ளேன்.


தயவு கூர்ந்து என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் விண்ணப்பம் செய்து கொள்கிறேன்.


இங்கனம் ஆன்மநேயன்

முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 16 ஆகஸ்ட், 2023

வ உ சி !

 👆👆👆வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்.


வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது. 


தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது. 


ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.


கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.


நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் #கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.


கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் #லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.


இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த #பிபின்_சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட

இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது. 


ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் #சுப்பிரமணிய_சிவாவுடன், வ.உ.சி பேசினார்.


இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் #விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது. இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.


அப்போது, 

1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,


2. மக்களை வந்தேமாதரம் கோசமிட தூண்டியது,


3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து #நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது. 


இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் #பாளையங்கோட்டை #சிறையில் உடனடியாக அடைத்தது.


ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான். 


பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர். 


திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி #அலெக்ஸ்_ஃபிளிட் விடுதலை செய்யப்பட்டார். 


இதற்குள் ஓர் #இரகசியம்_ஒளிந்து இருந்தது.


வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் #ராஜினாமா செய்து ஓடினர். 


அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் #விற்று_விட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா #கப்பலை_வெள்ளையருக்கே_விற்று_விட்டது தான்.


இதனை அறிந்த வ உ சி...


"" மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் "" என குமுறினார்.


பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை #வெள்ளையனிடமே_விற்றதை எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார் 

வ உ சி.


நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தேசத் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.


ஓங்கட்டும் உமது புகழ்.🙏🙏🙏

புதன், 2 ஆகஸ்ட், 2023

அருகி கிடந்த ஆன்மாக்கள்!


 அருகி கிடந்த ஆன்மாக்கள்!                             

ஆன்மநேய உரிமையுடைய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க வந்தனம் ;


அறிவு என்பது ஒருசிறிதும் விளங்காத அஞ்ஞானமென்னும்

பெரிய  பாசாந்தகாரத்தில் (பேரிருள்)

அளவிடப்படாத நெடுங்காலம் அருகிக்கிடந்த ஆன்மாக்களாகிய நமக்கு 


ஆண்டவர் ஓரறிவு தாவரப் பிறவிமுதல் ஆறறிவு மனிதப்பிறவி வரை தேகம் கொடுத்து ஒவ்வொரு ஆன்மாக்குள்ளும் உள்ளொளியாக இருந்து அனாதிதொட்டு உயிர்க்கு  துணையாக வருவதன் நோக்கம் என்னவெனில்..... ,

     

அறிவற்ற ஆன்மாக்களுக்கு அறிவு விளக்கத்தைக்கொடுத்து அவைகளுக்கு பக்குவத்தைக்கொடுத்து,

பதத்தைக்காட்டி,

பதவியைக்கொடுத்து, 

நிலையைக் காட்டி, 

அந்தநிலைக்குரிய பக்குவம் வந்தவுடன்


அதன்மேல்  ஏற்றுவித்து,  அழியாநிலையைத்தந்து தன்மாயமாக்கி கொள்ளவேண்டும்(கடவுள் மயமாக்கி) என்பதற்காகவே ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மூன்று பெருங்கருணைத் தொழிகளாகிய படைத்தல் காத்தல்,அழித்தல் என்பதுடன்,மறைத்தல் அருளல் என்னும் இருபெருந் தொழில்களால்  ,


ஆன்மாக்களுக்கு 

மறைப்பைக் கொடுத்து அம்மைறைப்பினால் அவர்களுக்குள் கேள்விகளை எழுப்பி ,விசாரம் தந்து அவ்விசாரத்தினால் தெளிவைத் தந்து , பிறகு அருளல் என்னும் தொழிலால் அவர்களுக்கு பக்குவத்தையும்,

பதத்தையும்,

பதவியையும்,

நிலையையும் தந்து அருள்பாளிக்கின்றார்கள்;

  

ஆன்மாக்கள் அடையவேண்டிய ஆன்ம லாபம் என்ற முடிவான நிலைக்குத்தான்" சிவானுபவம் "என்றும் "பேரின்பப் பெருவாழ்வு" என்றும் பெயர்;


சிவானுபவம் என்பது என்ன ?

                                

சிவானுபவம் என்பது தேகத்திரயம் எனப்படும்.

 அதாவது,

தேகம் +திரயம் 

தேகம் =உடம்பு அல்லது உடல்;

திரயம்= மூன்று என்பதாகும்;

ஆக மூன்று உடல் என்றும் ,

முத்தேகம் என்றும் சொல்லலாம்.

அதாவது" முத்தேக சித்தியைப்" பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்;


முத்தேக சித்தி என்பது என்ன ?

                                

நமது மனித உடம்பு மூன்று பகுதிகளை உடையதாய் உள்ளது .

1:தூல உடம்பு (நாம் கண்ணால் பார்க்கக்கூடிய புற உடம்பு ) ;

2:சூக்கும உடம்பு (நமது உணர்வும் அறிவும் சேர்ந்த அந்தகரணத்தால்(மனம் புத்தி சித்தம் அகங்காரம்) இயங்கக்கூடிய உடம்பு ;

3:காரண உடம்பு (மேற்கூறிய தூல சூக்கும இரண்டு உடம்புக்கும் காரணமாக இருந்து இயக்கக்கூடிய காரண உடம்பு )

 

மேற்கூறிய தூல சூக்குமமாகிய இரண்டு உடம்புகளும் ,அசுத்தமாகிய தசைகளால் எலும்பு தோல் இரத்தம் என்னும் சப்த தாதுக்களால் இணைக்கப்பட்ட இந்திரியங்களாகவும் , அசுத்த கரணங்களாகவும் இருக்கின்றன , அவற்றால் பெறப்படும் அறிவும் அசுத்த அறிவாகவே இருக்கின்றன;


இவற்றை எல்லாம் அறிவின் பக்குவத்தில்  அருளொளி கிடைக்கப் பெற்று சுத்த கருவி கரணங்களாக்கிக் கொண்டு , 

தூலத்தேகம் சுத்தமான மாற்றறியாத 

பொன்னொளி வீசும் ஒளித்தேகமாகவும்;

சூக்குமதேகம் பிரணவதேகமாகவும்;

காரண தேகம் ஞானதேகமாகவும்;

திருவருள் துணையால் கிடைக்கப் பெறும் ;

இந்த சுத்தமாதிய முத்தேக சித்தியைப் பெற்றுக்கொள்வதே சிவானுபவ நிலையாகப் நமது பெருமான் கூறுகின்றார்கள்;


அந்த முத்தேகசித்தி அனுபவத்தை சுத்தசன்மார்க்கத்தில் சுகப்பெருநிலையாகக்காட்டி ,

இந்த முத்தேக அனுபவசித்தியை சுத்தசன்மார்க்கத்தினால் மட்டுமே அடையமுடியும் என்று பெருமான் அனைவரையும் சுத்தசன்மார்க்கத்திற்கு அழைக்கின்றார்.                


சிவானுபவத்தைப் பெறுவதற்குரிய 

மார்க்கம் எது ?


தற்போதைய சுத்தசன்மார்க்க 

உலகத்தில் மேற்கண்ட சிவானுபவத்தைப் பெறுவதற்கு இரண்டே மார்க்கம்தான் உண்டு அவை,

1:பரோபகாரம்,

2:சத்விசாரம் என்பதாகும் ;

இந்த இரண்டைத்தவிர வேறு மார்க்கம் கிடையாது என்று சத்தியமாக அறிதல் வேண்டும்;


பரோபகாரம் என்பது என்ன ?

                                

ஆன்மாக்களாகிய நாம் நமது தேகத்தாலும் ,கரணத்தாலும்,இந்திரியத்தாலும் ,திரவியத்தாலும் (பொருள்) ஆன்மாக்களுக்கு உபகரித்தல் (உதவி செய்தல்) திரவியம் கிடைக்காத பட்சத்தில் திரிகரண சுத்தியாய் (மனம் வாக்கு காயம் ) ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு எல்லா சீவர்களினது வாட்டத்தைக் குறித்து கடவுளிடம் பிரார்த்தித்தல் என்பதாகும்;


சத்விசாரம் என்பது என்ன ?

                                

சத்விசாரம் என்பது கடவுளது புகழையும் பெருமையையும் போற்றிடவும்.....,

ஆன்மாக்களாகிய நமது இயல்பான தரம் எப்படி இருக்கவேண்டும் என்று ஆன்மதரத்தை விசாரித்து அறிந்து....,

இதில் நமது ஆன்மா தற்போது எந்தஅளவிற்கு சிறுமையைக் கொண்டுள்ளது (குற்றம்) என்பதை  விசாரித்து.... ,

எல்லாம் வல்ல கடவுளின் தரத்தையும்  இடைவிடாது  விசாரித்து.... ,

நமது குறைகளை எல்லாம் இறைவனது திருவடியில் விண்ணப்பிப்பதுதான் "சத்விசாரம்" என்பதாகும்;


....மேற்கண்ட பரோபகாரம், மற்றும் சத்விசாரம் இந்த இரண்டுமார்க்கத்தைத் தவிர வேறு மார்க்கத்தால் சிவானுபவத்தை அடையவேமுடியாது என்பதுதான் நிதர்சனம்;

அதனால்தான் பெருமான் "ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்" என்றார்கள் என்பதை அறிவோம்;


தயவு என்பது என்ன ?

                                

தயவு என்பது கருணை, இரக்கம், அன்பு , அருள் என்ற ஒரேப் பொருளையே வழங்கும்;

அந்த தயவு இரண்டு வகைப்படும்;

1:கடவுள் தயவு,

2:ஜீவ தயவு என்பதாகும்;


கடவுள் தயவு என்பது என்ன ?

                                

கடவுள் தயவைப் பெற்றதன் பயன் என்னவென்றால்,

1:இறந்தவர்களை எழுப்பும் வல்லமை ;

2:தாவரங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் மழை பெய்வித்தல்;

3:மிருகம்,பட்சி,ஊர்வனவாதிகளுக்கு ஆகாரத்தை அருள்நியதியின்படி அருட்சக்தியால் ஊட்டிவித்தல்,

4:சோம(சந்திரன்)சூரியன்,அக்கினிப் பிரகாசங்களை காலதேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல்,

பக்குவ ஜீவர்களுக்கு அவர்களின் பக்குவத்திற்கு தக்கவாறு அனுக்கிரகித்தல்,

5: பக்குவமற்ற அபக்குவிகளுக்கு செய்யவேண்டிய அருள்நியதியின்படி தண்டனைச் செய்வித்து பக்குவம் வருவித்தல் என்பதுவாகும்;

      

ஜீவ தயவு என்பது என்ன ?

                                

ஜீவர்கள் தமக்கு இருக்கின்ற சக்தியின் அளவைப் பொறுத்து மற்ற உயிர்களுக்கு.... ,

பசி,கொலை,தாகம்,பிணி,இச்சை,எளிமை,

பயம் என்னும் ஏழுவகைத் துன்பங்களால் படும் அவத்தைகளைக் கண்டபோதும்....,

பிறர்சொல்லக் கேட்ட போதும்....,

அல்லது நமது அறிவால் அறிந்தபோதும்.... அவைகளுக்கு நம்மால் முடிந்த அளவு உபகாரம் செய்து அவ்வவத்தைகளிலிருந்து நீக்கி அவைகளுக்கு இன்பத்தை தருதல்;

அல்லது ஆன்மநேய உறவின் அடிப்படையில் தயாவடிவமாக அவைகளுக்காக கடவுளிடம் பிரார்த்தித்தல் என்பனவாகும்;


ஆன்மாக்களின் லாபம் என்று சொல்லக்கூடிய முடிவான சிவானுபவம் பெறுவதற்காகவே ஆன்மாக்களாகிய நாம் பிறவிஎடுத்து வந்துள்ளோம் என்பதை அறிந்து..... ,


நாமும் ஏதோ ஒரு காலத்தில் வள்ளல் பெருமான் அடைந்த நிலையை அடையப் பிறந்தவர்களே என்பதை உணர்ந்து , நமது பெருமான் காட்டிய பெருநெறியாம் சுத்தசன்மார்க்க நன்னெறியில் நடைபயில்வோம்;

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம்எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896