ஞாயிறு, 24 ஜூலை, 2022

கடவுளைக் கண்டேன்!

 *கடவுளைக் கண்டேன்!* 


*எனது ஊர் ஈரோடு எனது பெயர் கதிர்வேல் எமக்கு வயது 76,  மனைவி பெயர் அமுதா, மற்றும் மகன் கார்த்திகேயன்,மகள் சுமதி,மகன் நந்தகுமார் ஆகிய மூன்று பிள்ளைகள். எமது கல்வி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே, தொழில்  தையல் தொழில், இன்டியன், லண்டன், அமெரிக்கன் டிப்ளோமோ பயிற்சி பெற்றவன். எங்களது கடையின் பெயர் "ஸ்பென்சர்ஸ் டையலர்ஸ்" என்ற பெயரில் நிறைந்த வாடிக்கையாளர்களை கொண்ட சிறந்த  ஷோரூமாகும்*


வடலூர் தொடர்பு !


 *உலகியல் உள்ள சாதாரண  மனிதர்களைப் போல் அடியேனும் பல கடவுள்கள் உண்டு என நினைந்து பல கடவுள்களின் ஆலயங்களுக்கும் சர்சுக்களுக்கும்,மசூதிகளுக்கும் குடும்பத்துடன் சென்று வழிபடுவது, வணங்குவது,தோத்திரம் செய்வது, அங்க பிரதஷ்ணம் செய்வது, விரதம் இருப்பது மற்றும் சரியை கிரியை போன்ற வழிபாடுகளிலும் ஈடுபாடுடன் சாதாரண பக்தி மார்க்கத்தை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருந்தோம். அதிலே முக்கியமாக பழனி முருகன் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று தவறாமல் சென்று வழிபடுவது வழக்கமாக கொண்டிருந்தேன். மேலும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு 48 நாட்கள் கட்டுபாடான விரதம் இருந்து இருமுடிக்கட்டி தலையில் சுமந்து கொண்டு, நடைபாதை வழியாக சென்று வழிப்பட்டும் வந்துள்ளேன்.*


*பல தெய்வ வழிபாடு!*


எங்கள் வீட்டில் எல்லாத் தெய்வங்களின் உருவ படங்களையும் (ஏசு,அல்லா,புத்தர் படம் முதல் கொண்டு) வைத்து அபிஷேகம் ஆராதனை போன்ற ஆச்சார_ சங்கற்ப விகற்பங்கள் யாவும் செய்து பக்தி பரவசத்துடன் பல தியானம், யோகம், தவம் போன்ற பயிற்சி முறைகளையும் செய்து வந்தேன்.


*ஒரு பெரியவர் வருகை !*


*எனது 33 ஆம் ஆண்டில் சுமார் 70 வயது தக்க ஒருபெரியவர் கழுத்தில் உத்ராட்சியும் காவி உடையும். மடியில் சிறிய விபூதி பையுடன்  எமது தையற் கடைக்கு வந்தார்.*


*நல்ல பள பளக்கும் அழகான திருமேனி, அவருக்கு காவி துணியில் சுப்பா தைப்பதற்காக எங்கள் தையற் கடைக்கு வந்துள்ளார். அவர் பெயர் கே கே சாமி  என்பதாகும் சாமி சாமி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர்* 


திருஅருட்பா ! 


*அவர் கையில்  பையுடன் வந்தார்,பையில் இருந்து துணி கொடுத்துவிட்டு, பின் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து, உமக்கு நேரம் கிடைக்கும் போது  படித்துப் பார்க்கவும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்த புத்தகத்தை பெற்று பார்த்தபோது *திருஅருட்பா ஆறாம் திருமுறை*" *என்று இருந்தது . அருட்பெருஞ்ஜோதி அச்சகம் சென்னை.  விலை 30 ரூபாய் என்று இருந்தது. பெற்றுக் கொண்டு அவரிடம் 30 ரூபாய்  கொடுத்தேன் வேண்டாம் என மறுத்து விட்டார்.* 


அப்புத்தகத்தை பெற்று எனது மேஜை மீது வைத்து கொண்டேன்.


*ஒருமாதம் கழித்து அப் பெரியவர் தைத்த காவி சுப்பா ஆடையை வாங்குவதற்காக எங்கள் கடைக்கு வந்தார், நான் கொடுத்த புத்தகத்தை படித்தாயா என்று கேட்டார், இன்னும் படிக்கவில்லை சாமி, நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன் என்றேன்.சரி அவசியம் படிக்கவும் என்று சொல்லிவிட்டு ஆடையை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.* 


(தைத்த ஆடைக்கு பணம்கொடுத்தார் நான் வாங்க மறுத்துவிட்டேன்,) 


*மீண்டும் ஒருமாதம் கழித்து வந்தார்.நான் கொடுத்த புத்தகத்தை படித்தாயா என்று கேட்டார். இன்னும் படிக்கவில்லை சாமி, இனி கண்டிப்பாய் படிக்கிறேன் சாமி என்றேன்.சிறிது நேரம் பேசிவிட்டு வருகிறேன் என்று கிளம்பி விட்டார்.*


மீண்டும் ஒருமாதம் கழித்துவந்தார் புத்தகம் படித்தாயா என்று கேட்டார். இன்றிலிருந்து கண்டிப்பாய் அவசியம் படிக்கிறேன் சாமி என்றேன். ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.


*திருஅருட்பா என்னும் அப்  புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கத் தொடங்கினேன் அதில் உள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடைப் பகுதியில் உள்ள கேள்வியும் நானே ! பதிலும் நானே ! என்பது போன்ற விளக்கம் எளிய தமிழ் மொழியில் அற்புதமாக அழகாக எழுதி உள்ளதை படித்து வியந்தேன். என் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப் போட்டது முழுவதுமாக மாற்றியது.*


*என்னிடம் புகைப்பழக்கம்.குடிப்பழக்கம்.மாமிசம் உண்ணும் பழக்கம்,ஓய்வு நேரங்களில் சூதாட்டம் போன்ற பழக்கம் எல்லாமே கண்டும் காணாமல் இருந்தது. இருந்தாலும் குடும்பத்தையும் மற்றும் யாரையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன். உழைப்பில் உறுதியாக இருப்பேன். நல்ல நேர்மையான உறுதியான போதுமான வருமானம்*


என்னிடம் உள்ள தீய பழக்க வழக்கங்கள் யாவும் ஒரே இரவில் தூக்கி எரியத் தூண்டியது. *திருஅருட்பாவை அதிதீவிரமாக  படிக்கத் தொடங்கினேன்*


*(ஈரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவராக பணி யாற்றி உள்ளேன், நாங்கள் ஆரம்பித்த ஜீவகாருண்ய பணியான அன்னதானம் இன்றுவரை தடை இல்லாமல் நடைபெற்று கொண்டு வருகிறது.* 


தமிழ்நாடு முழுவதும்  பட்டி தொட்டி எல்லாம் சென்று *சுத்த சன்மார்க்க* சொற்பொழிவு செய்து வருகிறேன்


சிறுகுறிப்பு... 


*அதன்பின் அந்த சாமி அவர்கள் என்மீது அளவில்லா அன்பும் பாசமும் உரிமையும் கொண்டவராக திகழ்ந்தார். நெருக்கமான பழக்கம் நீடித்தது.நான் பேசுவதை உற்று நோக்கி ஆர்வமுடன் ரசிப்பார்.*


அவர் அணிந்திருந்த உத்ராட்சை, காவி உடை, விபூதிபையை அகற்றி வெள்ளாடைத் துறவியாக மாற்றினேன்.. எங்கள் வீட்டிற்கும் அடிக்கடி வருவார், என் மனைவியிடமும் குழந்தைகள் இடமும் அன்பாக பழகும்  பழக்கம் உண்டாயிற்று. எப்போது வந்தாலும் உணவு உட்கொண்டு ஓய்வு எடுக்கும் அளவிற்கு பழக்கம் நீடித்தது. அவர் மகள் வீடு ஈரோட்டில் இருந்தது, எங்கள் வீட்டிற்கு மட்டுமே அடிக்கடி வருவார்,


*வடலூர்!*


வடலூரில்  ஆத்தாமடம் என்று ஒன்று இருந்தது அங்குதான் அவர் தங்கி இருப்பார் வள்ளலார் மீது அளவில்லா பற்று கொண்டவர். என்னை முதன் முதலில் வடலூருக்கு அழைத்து சென்றவரும் அவரே !


*ஐந்து ரூபாய் வளர்ந்தது !*


*ஒருநாள் என் மனைவியிடம் ஐந்து ரூபாய் கொடுத்து இந்த ரூபாயை செலவு செய்யாமல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் நான் தேவைப்படும் போது பெற்றுக் கொள்கிறேன் என்றார்.அதேபோல் பாதுகாத்து வைத்திருந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை என் மனைவிக்கு பணப் பிரச்சனை எப்போதும் வந்ததே இல்லை. கேட்பவர்களுக்கு கொடுக்கும் நிலை உருவாகியதே தவிர, யாரிடம் கேட்கும் நிலை வந்ததே இல்லை.* 


திருஅருட்பா ! 


*திருஅருட்பா பாடல்கள் மற்றும் உரைநடைப் பகுதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பல முறை உள் உணர்வுடன் படித்தேன் மனம் மாற்றம் அடைந்தது. அறிவு தெளிவு அடைந்தது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் வடலூர் மாதப் பூசம் ஜோதி தரிசனம் காண சென்றுவருவது வழக்கமாக கொண்டேன்.* 


*கடவுளின் உண்மை நிலை அறிந்தேன். தத்துவ சிலை வடிவங்களான ஆலய சிறு தெய்வ  கடவுள்களை வழிபடுவதை நிறுத்தி கொண்டேன்.* 


*கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மையை, வள்ளலார் எழுதிவைத்துள்ள திருஅருட்பா பாடல்களைப் படித்து தெரிந்து கொண்டேன்.* 


வடலூர் சத்திய ஞானசபை ! 


*கடவுள் ஒருவரே   அவரே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உண்மையை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தான் கண்ட ஞானக் காட்சியை  வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையாக வடலூரில் தோற்றுவித்துள்ளார் அங்கே ஒளிவழிபாடு மட்டுமே காட்டவேண்டும் என்பதே ஆண்டவர் கட்டளை என்பார் .* 


வள்ளலார் பாடல்! 


சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை யான் பெற்றுக் கொண்டனன்!


*அங்கு தத்துவங்களான சிலை உருவ வழிபாடு கிடையாது, ஒளி உருவ வழிபாடு காட்சியை மட்டும் காட்டப் படுகிறது* 


*எதற்காக இவ்வாறு தோற்றுவித்துள்ளார் என்பதை திருஅருட்பாவைப் படித்து பார்த்து அதில் உள்ள உண்மைகளை அறிந்து கொண்டேன்.* 


*வள்ளலார் சொல்லியுள்ள திருஅருட்பா பாடல்களையும் உரைநடை விளக்கங்களையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்கடவுளின் உண்மை நிலையை தெளிவாக  அறிந்தேன் தெரிந்தேன் தெளிந்தேன்* 


வள்ளலார் எழுதியுள்ள திருஅருட்பாவைத் தவிர வேறு எந்த நூல்களையும் படிப்பதில்லை என உறுதி கொண்டேன்.


*வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க  ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்து பின்பற்றினோம். வள்ளலார் சொல்லியவாறு எங்கள் வீட்டில் தகரக் கண்ணாடி விளக்கு மட்டுமே வைத்து வழிபட தொடங்கினோம். மற்றைய தெய்வ படங்கள் யாவையும் அகற்றி விட்டோம்.* *புறத்தில் அகற்றியதோடு அல்லாமல், அகத்தில் பற்றி இருந்த அனைத்து சிறுதெய்வங்களின் பற்றுதல்களையும் அகற்றி விட்டோம் என்பதே சத்தியமான உண்மையாகும்* 


*கடவுளின் உண்மை !*


*எமது சிறிய ஆன்ம அறிவினால் கடவுளை அறிந்து கொள்ள முயற்சி மேற் கொண்டேன். அதுசமயம் நான் தெரிந்து கொண்ட உண்மை அனுபவம் யாதெனில்?*


*கடவுளைத் தெரிந்து கொள்ளவும், கடவுளின் உண்மையான இருப்பிடத்தை அறிந்து கொள்ளவும், கடவுளைத் தொடர்பு கொள்ளவும், கடவுளின் அருளைப் பெறவும், வாழ்க்கையை முறையாக பொது நோக்கத்தோடு இனிமையாக இன்பத்தோடு அமைத்துக் கொள்ளவும்,*


*ஆன்மாக்கள் அருள் பெறுவதற்கும்   எக்காலத்தும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கும், மேலும்  பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கும்  முக்கிய தடையாக இருப்பவை யாதென அறிந்து கொண்டேன்*


அவை யாதெனில்? 


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.* 


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுஉரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.* 


*வள்ளலார் சொல்லியவாறு மேலே கண்ட விண்ணப்பத்தின்படி எல்லாவற்றையும் விட்டு விட்டேன் என்பதுதான் சத்தியமான உண்மையாகும்* 


*எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எமக்கு, எமது சிற்சபையின் கண்ணே காட்சி கொடுக்க ஆரம்பித்தார்.*

*ஆதலால் எல்லா உண்மைகளையும் எவ்வித அச்சமும், மயக்கமும், திரிபும்,பயமும், தடையும் இன்றி தெளிவாக உண்மையை அறியப் பெற்றேன்.*


*மேலும்  வள்ளலார் சொல்லிவாறு சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் இதுவே சத்திய  உண்மையாகும்* 


*வள்ளலார் அறிந்து கொண்ட கோடிக்கணக்கான அண்டங்களையும், உலகங்களையும், அவற்றில் உள்ள கிரகங்களையும், பிரபஞ்ச ரகசியங்களையும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை உண்மையும், இயற்கை விளக்கத்தையும், இயற்கை இன்பத்தையும்,அவர் அமர்ந்து ஆட்சி செய்யும் அருட்பெரு வெளியில் "அருட்பெரும்ஜோதி ஆண்டவர்  ஞான சிங்காதன பீடத்தையும்" மற்றும் எல்லாவற்றையும் கண்டேன் கனிந்தேன்  களித்துக் கொண்டும் உள்ளேன்.* 


நான் கண்ட காட்சிகளையும்,மேலும்  உண்மைகளை யும் ஒளிவு மறைவு இன்றி மக்கள் தெரிந்து கொள்ளும்  பொருட்டு மேடைகள் தோறும் போதித்தும். கட்டுரைகள் வாயிலாக எழுத்துவடிவம் மூலமாகவும் தெரிவித்தும் வருகிறேன்.* 


*வள்ளலார் பாடல்!* 


அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்


எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்


செப்பாத மேனிலை மேல் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்


*தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்*

*தலைவா நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!* 


மேலும் 


அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்


இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில்ங விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!* 


எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


தொடரும் 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே  உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

புதன், 20 ஜூலை, 2022

தமிழ் வார்த்தை விளக்கம் !

 ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்

✓ இன்பத் தமிழ்...!

தொடர்ந்து படியுங்கள்...


1. அந்தி, சந்தி: 

அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது. 

சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.


 2. அக்குவேர், ஆணிவேர் :

அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். 

ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.


3. அரை குறை:

அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.


 4. அக்கம், பக்கம்:

அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.


5. அலுப்பு சலிப்பு :

அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.

சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.


 6. ஆட்டம் பாட்டம் :

ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.

பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.


7. இசகு பிசகு:

இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.

பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.


8. இடக்கு முடக்கு: 

இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.


9. ஏட்டிக்குப் போட்டி :

ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.


10. ஒட்டு உறவு : 

ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

உறவு : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.


11. கடை கண்ணி :

கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.


12. கார சாரம் : 

காரம் : உறைப்பு சுவையுள்ளது.

சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.


13. காடு கரை :

காடு : மேட்டு நிலம் (முல்லை). 

கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).


14.காவும் கழனியும்:

கா : சோலை.

கழனி: வயல். (மருதம் ).


15. கிண்டலும் கேலியும்: 

கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

கேலி : எள்ளி நகைப்பது.


16. குண்டக்க மண்டக்க :

குண்டக்க : இடுப்புப்பகுதி, 

மண்டக்க: தலைப் பகுதி,

சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,

வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.


17. கூச்சல் குழப்பம்:

கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.


18. சத்திரம் சாவடி :

சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).

சாவடி: இலவசமாகத் தங்கும் இடம்.

 

19.தோட்டம் துரவு , தோப்பு துரவு :

தோட்டம் : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.

தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்.

துரவு: கிணறு.


20. நகை நட்டு :

நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

நட்டு : சிறிய அணிகலன்கள்.


21. நத்தம் புறம்போக்கு :

நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை...

புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.


22. நேரம் காலம் :

நேரம் : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

காலம் : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.


23. நொண்டி நொடம் :

நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

நொடம் : கை, கால் செயலற்று இருப்பவர்.


24. பற்று பாசம் :

பற்று : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.

பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...


25. பழக்கம் வழக்கம் :

பழக்கம் : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.

வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.


26. பட்டி தொட்டி :

பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).

தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.


27. பேரும் புகழும் : 

பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை. 

புகழ்: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.


28. பழி பாவம் :

பழி: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.

பாவம் : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.


29. பங்கு பாகம்:

பங்கு: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).

பாகம் : வீடு, நிலம். அசையாச் சொத்து.


30. பிள்ளை குட்டி:

பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

குட்டி: பெண் குழந்தையைக் குறிக்கும்.


31. வாட்டம் சாட்டம் : 

வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

சாட்டம் : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.✒️


*படித்ததில் பிடித்தது...*

செவ்வாய், 19 ஜூலை, 2022

ஆன்மாவின் காதல்!

 *ஆன்மாவின் காதல்!*


*உலகில் உள்ள எல்லா உயிர்களும், ஒரு உயிரை ஒரு உயிர் நேசிக்கிறது. ஒரு உயிரை பல உயிர்கள் நேசிக்கிறது, அதற்கு அன்பு காதல் என்று பெயர் சூட்டுகிறார்கள்.*


*உயிரை உயிர் நேசிப்பதற்கு உடம்பு தேவைப்படுகிறது, ஒவ்வொரு உடம்பின் தொடு உணர்ச்சியால் வெளிப்படும் திரவத்தால்,சேர்க்கையால் உயிரும் உடம்பும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. இதற்கு பால் உணர்வு என்றும் காதல், காமம், வெகுளி, மயக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.* 


*அழியும் உடம்பை உயிரை காதலிப்பது உண்மையான காதல் அல்ல.அழியாத உடம்பை உயிரை ஆன்மாவை  காதலிப்பதே உண்மையான காதலாகும்*


*ஆன்மா!*


*ஆண்டவர் அனுப்பிய ஆன்மாக்களின்  விருப்பத்திற்கு இணங்க ஆணவம் மாயையின் உதவியால் உயிரும் உடம்பும் தோன்றி தோற்றம் மளிக்கின்றது*அதற்கு மாயா தோற்றம் என்று சொல்லப்படுகிறது. மாயா தோற்றமான உயிரும் உடம்பும் இவ்வுலகில் வாழ்வதற்கு மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை என்ற மூவகையான ஆசை பற்றிக் கொள்கிறது. இதற்கு கன்மவினை என்று சொல்லப்படுகிறது.*


*ஆன்மாவை பற்றிக் கொண்டுள்ள ஆணவம், மாயை, கன்மம் என்ற மூன்று மலங்களை அகற்றினால் மட்டுமே சிவபெருமான் அருளைப்பெற்று பேரின்ப வாழ்க்கை வாழலாம் என்று சைவசமயம் சொல்கிறது.*


*அதற்கு துறவறம் சன்னியாசம் பிரம்மச்சரியம் போன்றவற்றை கடைபிடித்து அவர்கள் காட்டிய உலகியல் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை பின்பற்ற வேண்டும் என்பதற்காக பலவகையான வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள், இதிகாசங்கள்,சாத்திரங்கள் போன்ற கற்பனை காவியங்களை,மனித குலத்திற்காக படைத்துள்ளார்கள்.*


*ஆன்மாவின் காதல் !*


*ஆன்மாக்கள் யாவும் பெண்பாலைச் சார்ந்தது*. *கடவுள் ஒருவரே ஆண்பாலைச் சார்ந்தவராகும்*எனவேதான் உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள்* *இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலிப்பதே உண்மையான காதலாகும்.* அவரே உண்மையான கணவராகும்.


*உருவத்தால் ஆண் பெண் என்ற பேதம் பார்த்து காதலிக்கிறோம் அது முற்றிலும். தவறான சேர்க்கையாகும்*


*உருவத்தால் ஆண் பெண் என்ற பேதம் இருந்தாலும் உள்ளே இருந்து இயங்கும், ஏகதேச மெய்ப்பொருளான ஆன்மா உயிர் ஒரேத் தன்மை உடையது. பேதம் இல்லாதது*


*எனவேதான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார்.* *அதேபோல் தான் எத்துணையும் பேதம் இல்லாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்க வேண்டும் என்கிறார்.*


*வள்ளலார் பாடல்!* 


கண்ணாறு படும் எனநான் அஞ்சுகின்றேன் பலகால்

*கணவர் திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்*


எண்ணா என் *ஆசைவெள்ளம்* என்சொல்வழி கேளா

தெனை ஈர்த்துக் கொண்டு சபைக்கு ஏகுகின்ற தந்தோ 


*பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்*

*பெண்ணாசை பெரிதல காண் ஆண் ஆசை பெரிதே*


உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்

உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே !.


என்னும் பாடல் வரிகளில் தெளிவாக விளக்குகின்றார். 


*உலகில் உள்ள உயர்ந்த மனிததேகம் எடுத்த ஆன்மாக்கள் யாவும் ஆன்மாவும் ஆன்மாவும், அதாவது பெண்ணும் பெண்ணும்  திருமணம் செய்து கொண்டு வாழ்வதுபோல் உடல் உறவு கொண்டு வாழ்கிறார்கள்.*


*நான் ஒருபெண் (ஆன்மா ) மட்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் ஆண்மகனை திருமணம் செய்துகொண்டு கணவர் வீடு என்னும் அருள் பெருவெளியில் என்றும் நிரந்தரமான ஆனந்தமான அருள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்கின்றார் வள்ளலார்.*


*மேலும் வள்ளலார் பாடல்!*


கண்கலந்த கணவர் எனைக் கைகலந்த தருணம்

கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்


எண்கலந்த போகம் எலாம் சிவபோகம் தனில் ஓர்

இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்


விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்

வினைத்துயர் தீர்ந்து அடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்


உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ

துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி! 


மேலும் பதிவு செய்கின்றார்.


*கற்பூரம் மணக்கின்றது* தென்னுடம்பு முழுதும்

கணவர் திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்


இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்

*இயற்கைமணம்* துரியநிறை இறைவடிவத் துளதே


பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்

புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே


நற்பூதி அணிந்த திரு வடிவுமுற்றும் தோழி

*நான்கண்டேன்* *நான்புணர்ந்தேன்* நான்அது 

ஆனேனே.!*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதலிக்கும் தருணம் என் கண்ணில் கலந்து,கருத்தில் கலந்து, எண்ணில் கலந்து என் உருவில் கலந்து,உயிரில்கலந்து ஆன்மாவில் கலந்து உளமார ஏற்று திருமணம் செய்து அருள் பெறும் தகுதியுடைய காதலியாக  ஏற்றுகொண்டார்.* 


*நானும் அவரும் கலந்த தருணம் என்னுடைய உடல் பொருள் ஆவி முழுவதும அவரிடமே கொடுத்து விட்டேன்.* 


*கொடுத்த தருணத்தே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என் அன்புடைய கணவரின் திருமேனி எனை அணைந்து கலந்த தருணம் கற்பூரமணம்  மணக்கின்றது என் உடம்பு முழுவதும்.*


*இம்மணம் மறைந்து போகும் செயற்கை மணம் அன்று. என்றும் அழியாத இயற்கை மணமாகும் என்கின்றார்.*

*அந்த நறு மணம் என் உடம்பு முழுவதும் கலந்ததால் அவர் முழு உருவத்தையும் நான் கண்டேன், நான் தழுவினேன், நான் புணர்ந்தேன் நான் அது ஆனேன் என்கிறார் வள்ளலார்.*


*உண்மையான காதல்!*


*ஆன்மாக்கள் ஆன்மாக்களை காதலிப்பது செயற்கையான காதலாகும். ஓர் இணச் சேர்க்கை போன்றதாகும்* *துர்நாற்றம் உடையதாகும். அழியும் காதலாகும். பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்ட இருக்கும் காதலாகும்*


*ஆன்மாக்கள் ஆண்டவரைக் காதலிப்பதே உண்மையான காதலாகும். என்றும் அழியாத இயற்கை இன்பம் தரும் காதலாகும். பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப வாழ்க்கை வாழும் காதலாகும்*


*உலக வரலாற்றிலே ஆன்மாக்கள் வாழு்வதற்கு நல்வழியை நேர்வழியைக் காட்டியவர் வள்ளலார் ஒருவரே*


வாழ்க்கை வாழ்வதற்கே 


*அன்பு இரக்கம்!*


ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்கள், உயிர்களிடத்தில் ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கமும் பரோபகாரமும் கொள்ள வேண்டும். அதே காலத்தில்

இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் உண்மையான அன்பும் அதாவது தீராத காதலும் கொள்ள வேண்டும்.


இந்த உயிர் இரக்கம் என்னும் பரோபகாரத்தாலும்.கடவுளைத் தொடர்பு கொள்ளும் சத்விசாரத்தாலும் மட்டுமே ஆண்டவர் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ முடியும் என்பதை அறிவு சார்ந்த மனித ஆன்மாக்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.


*வள்ளலார் பாடல்!*


எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்

இருந்து நடம் புரிகின்ற அரும்பெருஞ்சோதியினார்


நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய

நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்


*இல்லாமை எனக்கில்லை* எல்லார்க்கும் தருவேன்

என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் ணஅம்மா


செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்

சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.!


*எல்லாம் செய்யவல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், நல்லோர்கள் எல்லோரும் அறிய என்னை மணம் புரிந்தார், அதனால் இல்லாமை எனக்கு இல்லை எல்லோருக்கும் அருளைத் தருவேன் என் னுடைய பெருஞ் செல்வம் என்புகல்வேன் என்கின்றார் வள்ளலார்.*


*தான் மட்டும் அனுபவிப்பது அருள் அல்ல. அருள் எல்லோருக்கும் சென்று அடைவதே பொது நோக்கமாகும் எல்லா ஆன்மாக்களும் அருள் பெறல் வேண்டும்.* 


வள்ளலார் பாடல் !


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா *தென்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே!*


ஆண்டவரை காதலிப்போம் அருளைப் பெறுவோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வியாழன், 14 ஜூலை, 2022

உயிர்ப்பிணி !

 *உயிர்ப்பிணி!*


*வள்ளலார் வரிகள்!*


உடற்பிணி யனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையு

மடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே! (அகவல்)


உடலுறு பிணியால் உயிர் உடல் கெடாவகை

அடலுறக் காத்தருள் அட்பெருஞ் ஜோதி!(அகவல்)


மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே! (அகவல்) 


*உடற்பிணியை போக்க மருந்து கண்டுபிடித்து உள்ளார்கள் .உயிர்பிணியைப் போக்கும் மருந்தை வள்ளலாரைத் தவிர வேறு எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை*


ஞானசரியை!


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

*மரணமெனும் பெரும்பாவி* வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை*


எற்றிநின்று தடுக்கவல்லார் *எவ்வுலகில் எவரும்*

*இல்லைகண்டீர்* சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


பற்றியபற் றனைத்தினையும் பற்றற

விட்டு *அருள அம்பலப்பற்றே* பற்றுமினோ எற்றும்இற வீரே.! 


மேலும் 


இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடுசன் மார்க்கம் ஒன்றே *பிணிமூப்பு மரணம்*

*சேராமல் தவிர்த்திடுங்காண்* தெரிந்துவம்மின் இங்கே


பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 

  

*மேலே கண்ட பாடல்கள்போல் ஆயிரக் கணக்கான பாடல்களைத் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்* *அப்பாடல்களில்,, எவற்றை விட வேண்டும்,எவற்றை பின்பற்ற வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார்*


*சட்டத்தை கிழித்தவர்!*


*பிறந்தவர் இறந்துதான் ஆகவேண்டும் இறந்தவர் மீண்டும் பிறந்துதான் ஆகவேண்டும் என்ற ஒரு சட்டம் இவ்வுலகில் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளன. அது இயற்கையான சட்டம் அல்ல, செயற்கையான சட்டம் என்பதை தெரிந்து கொண்ட வள்ளலார், அந்த சட்டத்தையே மாற்றி திருத்தி அமைக்கின்றார்*


*வள்ளலார் பாடல்!* 


கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்

கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்


*சட்டமும் கிழித்தேன்* *தூக்கமும் துறந்தேன்*

*சாவையும் நோவையும் தவிர்ந்தேன்*


சிட்டமும் அடைந்தேன் *சிற்சபை உடையான்*

*செல்வமெய்ப் பிள்ளை* என்று ஒரு பேர்ப்


*பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்*

*பண்ணிய தவம்பலித் ததுவே.!*


*என்ற பாடல் வரிகளிலே பிறவிச் சட்டத்தை கிழித்து,புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளேன் என்பதை தெளிவாக எளிய தமிழில் தெரியப் படுத்தியுள்ளார்*


*மரணம் வருவதற்கு அடிப்படை காரணம், மனித வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய  ஒழுக்கத்தை ஒருவரும் கடைபிடிக்காமல் வாழ்ந்து வருவதால் உடம்பிற்கும் பிணி தொற்றி,பின்பு உயிருக்கும் பிணிதொற்றி, அப்பிணியை தீர்க்க முடியாமல் இறுதியில் உயிரும் உடம்பும் தனித்தனியே பிரிந்து விடுவதே மரணப் பெரும் பிணியாகும்*


*இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இயற்கை விளக்கம் என்னும் அருள் சத்தியால் அதாவது அருள் ஆற்றலால், ஆன்மாவிற்கு தேவையான உயிரைக் உண்டாக்கி, உயிர் இயங்குவதற்குண்டான அணுக்களால் பிண்ணப்பட்ட உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக்கொடுத்து, உடம்பு உயிர் ஆன்மா மூன்றும் பிரியாமல் வாழ்வதே இயற்கை இன்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்* 


*பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்ட பூதகாரிய உடம்பில் நீண்ட காலம் வாழ்வது மரணம் இல்லாப் பெருவாழ்வு அல்ல.*  


*அழியும் உடம்பை, சுத்த, பிரணவ, ஞான தேகம் என்று சொல்லப்படும் ,  என்றும் அழியாமல் இயங்கும் அருள்தேகமாக (ஒளிதேகம்) மாற்றி வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்*


*இந்த உண்மை தெரியாமல் ஆன்மீக அருளாளர்கள்,மனித குலத்திற்கு தவறான வழிகளைக் காட்டியதால், அவற்றை பின்பற்றி மனிதகுலம் வாழ்ந்து கொண்டு உள்ளதால், மரணம் என்னும் பெரும் பிணி,பெரும்பாவி பற்றிக்கொண்டு மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள், மீண்டும் மீண்டும் எதாவது ஒரு பிறவி எடுத்துக் கொண்டே உள்ளார்கள்.*


*மருந்து கண்டு பிடித்தவர் வள்ளலார்*!


*வள்ளலார் பாடல்!*


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி


நோவது இன்று புதிதன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.! 


சாவதும் பிறப்பதும் தொடர்ந்து கொண்டே இருப்பது பெரும் பாவச்செயல் என்கிறார் வள்ளலார். அந்த பாவச்செயலை அகற்றுவதற்காகவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துஉள்ளார்.*  


*சங்கத்தின் தலைவரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் என்னும் ஞானமருந்தை பெற்று உட்கொண்டால் மட்டுமே மரணப் பெரும்பிணியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார். மற்றைய இறைவர்களை (கடவுள்களை) நம்பினால் அருள் பெறும் வாய்ப்பை இழந்து இறப்பும் பிறப்பும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார் வள்ளலார்*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்* *மேன்மை நிறைந்த*

*ஜீவகாருண்ய ஒழுக்கமான* இந்திரிய,கரண,ஜீவ,ஆன்ம ஒழுக்கங்களையும், *அவற்றின் கொள்கைகளையும், சட்ட திட்டங்களையும் முழுமையாக பின்பற்றாமல் வாழ்வதால் மரணம் வந்து கொண்டே உள்ளன.*


தவத்திரு ஊரன் அடிகளுக்கும் மரணம்!


*மேலும் மக்களுக்கு நீண்ட காலமாக சன்மார்க்க ஆன்மீகத்தை  வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும், மேடைகள் தோறும் மக்களுக்கு போதித்து வந்து கொண்டிருந்த   வடலூர் தவத்திரு* 

*ஊரன்அடிகள்  போன்ற மூத்த சன்மார்க்கிகளும். மற்றைய சன்மார்க்க அன்பர்களும் உயிர் அடக்கம் கொண்டு மாண்டு கொண்டேதான் உள்ளார்கள்.* 


*முத்தியும் பெறவில்லை,*சித்தியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.* 


*முத்தி என்பது முன்னுறு சாதனம்,சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்பார் வள்ளலார்*


சன்மார்க்கத்தை பின்பற்றும் இவர்கள் *ஏன் ? எதனால் இவர்கள் உயிர் அடக்கம் கொண்டு மாண்டுபோனார்கள் என்பதை சிந்தித்து உற்று நோக்கி, உலகயலில் உள்ள பற்றுகளை அகற்றி, விட வேண்டியதை விட்டு விலக வேண்டும், ஆண்டவரிடத்தில் இடைவிடாது தொடர்பு கொண்டு பெற வேண்டியதைப் பெற்று கொள்ள வேண்டும்.* 


அவற்றை எல்லாம் பின்பற்ற தவற விட்டதினால்,

ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும்  அருள் பெற முடியாமலும் மரணம் வந்து விடுகிறது. 


*வள்ளலாரே சொல்கின்றீர்!*


உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்


*கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்*

*கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ*


சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


*இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்*

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!


*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்பதை மிகவும் அழுத்தமாக சொல்கின்றார்*


மேலும் சொல்லுகிறார்! 


*முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்*

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே


*இயன்றஒரு சன்மார்க்கம்* *எங்குநிலை பெறவும்*

*எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்*


துயின்றுணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்ற எழு கின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்


*பயின்றறிய விரைந்து வம்மின் *படியாத படிப்பைப்*

*படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!*


*இதுவரையில் படியாத படிப்பை படித்து உணர்ந்து தெளிந்து வாழ்ந்து பூரண அருள் பெற்று தேர்ச்சி பெற்று மரணத்தை வெல்லலாம் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்* 


*பற்றிய பற்று அனைத்தினையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்ற உண்மையைப் போட்டு உடைக்கின்றார்* 


மேலும் சொல்கின்றார்! 


*கண்டதெலாம் அநித்தியமே* *கேட்டதெலாம் பழுதே*

*கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே*


உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் *இதுவரையும் உண்மையறிந் திலிரே*


விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

*மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து* *மெய்ப்பொருள்நன் குணர்ந்தே*


*எண்டகுசிற் றம்பலத்தே* *எந்தைஅருள் அடைமின்*

*இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!* 


*இன்பமுற்று வாழ்வதற்கு எல்லாம் வல்ல இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். அவரைத் தொடர்பு கொண்டு பூரண அருள் பெறல் வேண்டும். அருள் பெறுவதற்கு ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.*

 *அருளைப்பெற்றால் மட்டுமே உடற்பிணி அனைத்தையும் உயிர்பிணி அனைத்தையும் நீக்கி, நரை திரை பிணி மூப்பு பயம் இல்லாமல் மரணத்தை வெல்லலாம் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்*


அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை

அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

செவ்வாய், 5 ஜூலை, 2022

திருஅருட் பெருவெளி !

 *திருஅருட் பெருவெளி !* 


*திருஅருட் பெருவெளி என்பது இயற்கை உண்மை கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  திருவருட் செங்கோல் வளத்தோடு செலுத்தும் அருள் நிறைந்த பெருவெளியே திருஅருட் பெருவெளியாகும்*


*அந்த மாபெரும் திருஅருட் பெருவெளியை கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே.இதுவரையில் அப்பெரு வெளிக்குள் சென்றவர்கள் ஒருவரும் இல்லை.*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித அத்மாக்கள் மட்டுமே அங்கு செல்வதற்கு உண்டான வாய்ப்பையும் தகுதியையும் பெற்றவைகளாகும்.அங்கு செல்ல வேண்டுமானால் பஞ்சபூத மனித தேகத்தோடு செல்ல முடியாது.அருட்பெருவெளியில் அருள் ஆட்சி செய்யும் இயற்கை உண்மைக்கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று அருட்தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அருட்பெருவெளிக்குச் செல்லமுடியும் என்பதை ஒவ்வொரு சுத்த சன்மார்க்க அன்பர்களும்,மற்றும் மனித தேகம் எடுத்த அனைவரும் அவசியம் தெரிந்த கொள்ள வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகளெலாம் வயங்கு வெளியாகி


எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்த பர வெளியாகி இயல்உபய வெளியாய்


அண்ணுறு சிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்த பெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்


திண்ணமுறும் *தனிஇயற்கை உண்மைவெளி யான*

திருச்சிற்றம் பலந்தனிலே *தெய்வமொன்றே கண்டீர்.!*  


மேலே கண்ட பாடலில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.


*வெளிகள்!*


*பல கோடிக்கணக்கான அண்டங்களையும், உலகங்களையும் படைத்து, அவைகளுக்கு இடை இடையே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள முடியாத, இணையமுடியாத, அளவிடமுடியாத அளவுகள் கொண்ட இடை இடையே உள்ள வெளிகளையும்படைத்து*,


*மேலும்  பஞ்சபூத உலகங்களில் உள்ள,பலகோடி வெளிகளையும் படைத்து, எண்ணில் அடங்காத ஆத்மாக்களையும் அனுப்பி அவைகளுக்கு உயிர் கொடுத்து, உடம்பு கொடுத்து,பஞ்சபூத வெளியில், உலகில் வாழ்வதற்கு எல்லாவிதமான வழிமுறைகளையும் அமைத்து கொடுத்து வாழ்வதற்கு வழிகாட்டி எல்லாவிதமான வசதி வாய்ப்புகளை யும் செய்து கொடுத்து இயங்கி இயக்கிக் கொண்டு உள்ளவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*


*எல்லா வெளிகளையும் படைத்து இயங்க வைத்துக் கொண்டு, தனி இயற்கை உண்மை வெளியான தனிஇன்ப வெளியாகிய அருட் திருச் சிற்றம்பலத்திலே தனிச் செங்கோல் நடத்தும் இறைவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்பவராகும்.*

 *சமயங்கள். மதங்கள்!*


உலகில் உள்ள சமயங்கள் மதங்கள் யாவும்  இயற்கை உண்மை கடவுள் யார்? என்று தெரியாமல் உண்மைக்கு புறம்பான தத்துவ  கடவுள்களைத் தோற்றுவித்து *மக்களை குருடர்கள் போல்  அலையவிட்டு விட்டார்கள்.*


*வள்ளலார் பாடல்!*


எவ்வுலகில் எவ்வௌர்க்கும் *அரும்பெருஞ்சோதியரே*

இறைவர் என்ப தறியாதே இம்மதவா திகள் தாம்


கவ்வைபெறு *குருடர்கரி கண்டகதை போலே*

கதைக்கின்றார் *சாகாத கல்விநிலை அறியார்*


நவ்விவிழி யாய் இவரோ சிலபுகன்றார் என்றாய்

*ஞானநடம் கண்டேன்* *மெய்த் தேன்அமுதம் உண்டேன்*


செவ்வை பெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சேர்ந்தேன் அத் தீமொழியும் தேமொழி 

ஆயினவே.! 


மேலும்


மதம்எனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்

மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ


சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே

*சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ*


பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்

பலநடங் கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்


சுதைமொழி நீ அன்றுசொன்ன வார்த்தை அன்றோ இன்று

தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே.! 


*சமய மதங்களை சார்ந்தவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து கொள்ளமுடியாமல்,தொடர்பு கொள்ள வழி தெரியாமல் எவ்வாறு அலைந்து அழிந்து கொண்டுள்ளார்கள் என்பதை மேலே கண்ட பாடல்களின் வாயிலாக தெளிவாக விளக்குகின்றார் வள்ளலார்.


*சாகாமல் இருக்கவும் சாகாக்கல்வி கற்றுக் கொள்ளவும் மரணத்தை வெல்லவும் கற்றுத்தரும் ஒரே கொள்கை வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.*


*சன்மார்க்கிகள்* 


*வள்ளலார் கொள்கையை பின்பற்றும்  சன்மார்க்க அன்பர்கள், வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை முழுவதும் படித்து,அதில் உள்ள சூழ்நிலைக்கேற்ற கருத்துக்களையும், நன்மை தீமைகளையும், அவற்றில் உள்ள உளவுகளையும், அன்பு தயவு கருணை கொண்டு அறிவு விளக்கத்தோடு தெரிந்து கொள்ளாமல், சமய மதவாதிகள் போலவே ஒன்றுகிடக்க ஒன்றை உளரிக்கொண்டும்,சமய மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்களை கடைபிடித்தும், பின்பற்றியும்  வாழ்ந்து வருகிறார்கள்.*


*வள்ளலார் காலத்தில் அவருடன் இருந்தவர்களும் சமயம் மதம் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இப்போதும் அதே நிலையில் தான் உள்ளார்கள்.*மாற்றம் எதுவும் தெரியவில்லை*


*சன்மார்க்கிகள் என்பவர்கள்  உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் உள்ளார்கள்.*

 *முடிந்த அளவு சொந்த பணத்திலோ  மற்றவர்களிடம் பணமோ பொருளோ பெற்று தங்களால் இயன்ற அளவு பசிப்பிணி யாற்றி வருகிறார்கள். கடவுள் கொள்கையான சத்விசாரத்தில் முழுமையாக எவரும் பின்பற்றுவதில்லை,*


*வள்ளலார் பாடல்!*


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை*


எற்றிநின்று தடுக்கவல்லார் *எவ்வுலகில் எவரும்*

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


பற்றிய பற்று அனைத்தினையும் *பற்றற* விட் டு அருள் அம்

பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!


*பற்றிய பற்று அனைத்தையும் பற்று அற விட்டால் மட்டுமே அருட்பெருவெளியில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியும்.* என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.


*இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று  என்று வருமோ அறியேன் எங்கோவே---*

*துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்!*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*