வெள்ளி, 31 ஜனவரி, 2020

வள்ளலார் ஜோதி தரிசனம் காட்ட சொன்னாரா ?

வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் காட்ட சொன்னாரா ?

கடவுள் வழிபாடு என்பது ஜீவகாருண்ய ஒழுக்கமே என்று அழுத்தமாக சொல்லி உள்ளார்.

மேலும் ஜீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறிய வேண்டும் என தெளிவான விளக்கத்தோடு ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும் என்றும்.அதனால் உபகார சக்தி விளங்கும் என்றும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்கிறார்.

ஜீவகாருண்யம் மறையும் போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்.அதனால் உபகாரசத்தி மறையும்.உபகாரசத்தி மறையவே எல்லா தீமைகளும் தோன்றும் என்று தெளிவான விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார்.

புண்ணியம் என்பது  எது ? பாவம் என்பது எது?

புண்ணியம் என்பது ஜீவகாருண்யம் ஒன்றே என்றும்.பாவம் என்பது ஜீவகாருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும் என்று அழுத்தமாக சொல்லுகின்றார்.

புண்ணியம் பாவம் என்பது கடவுள் தந்த விதி. என்னும் சமய மதங்களின் மூடத்தனமான கோட்பாட்டை உடைத்து எறிந்தார் வள்ளலார்.

கடவுள் அருளை எதனால் பெறக்கூடும்?  என்று அறிய வேண்டில்..

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்பதை அறிந்து தெரிந்து கடைபிடிக்க வேண்டும் என்கின்றார்.

அருளைப் பெற வேண்டிய அவசியம்
ஏன் ?

மனிதன் மட்டுமே அருளைப் பெற வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.

அருளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அருளாளர்கள் என்று பெயர்

இந்த உலகத்தில் அருளைப் பெறாமலே அருளாளர்கள் என்ற வேடத்தைப் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுபவர்களாக நிறைந்து உள்ளார்கள்.

மனித சமுதாயம் அவர்களை வேஷதாரிகள்.போலியானவர்கள் என்று அறியாமலே அவர்களின் பின் தொடர்ந்து அவர்களின் மூடநம்பிக்கைகளை கடைபிடித்து அறியாமையாலே அழிந்து கொண்டு கொண்டு உள்ளார்கள்.








கடவுளின் சூட்சமம்!

கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள்..!!

இந்த உலகத்தில் பல்வேறு சொற்கள் பல்வேறு உருவங்களில் பல்வேறு நிலைகளில் உலவிக் கொண்டு வருகிறது.
மனிதன் பல்வேறு சொற்களின் அர்த்தங்களை அறிந்தும் - அறியாமலும் பயன்படுத்தி வருகிறான்.
பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.

கடவுளின் பல்வேறு பெயர்கள்:

1. ஆதி
2. பகவன்
3. ஆண்டவன்
4. கடவுள்
5. இறைவன்
6. தெய்வம்
7. அநாதி
8. பிரம்மம்
9. பரம்
10. பூரணம்

இந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் முடிந்த அளவு பார்ப்போம்.
══════════════
1. ஆதி
ஆதி என்றால்
முதல் நிலை
மூல நிலை
இருப்பு நிலை
என்று பொருள்.
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை - ஆதலால் முதல் நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் - மூல நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் - இருப்பு நிலை என்றும்,
இந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு, அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் - ஆதி என்றும் அழைக்கப் படுகிறது.

2. பகவன் :
இலகு பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன
இலகு - என்றால், சிறிய எளிய என்று பொருள்
பகு - என்றால், பெரிய மதிப்புமிக்க என்று பொருள்
பகு + அவன் = பகவன்
அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது.
குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்.
உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள்
அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
══════════════
3. ஆண்டவன் :
ஆண்டு + அவன் = ஆண்டவன்
ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்
ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.
ஆண்டவன் என்றால் விரிந்தவன் எல்லையில்லாதவன் என்று பொருள்.
அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.
ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.
══════════════
4. கடவுள் :
உயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி,
உயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.
கட + வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல்.
மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = கடவுள் என்பதாகும்.
5. இறைவன்
இறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள்.
அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து - இயக்க நிலை மாறாமல் - இயக்க ஒழுங்கு மாறாமல் - இயக்க விதிப்படி - ஆண்டு கொண்டிருப்பவன் - என்று பொருள்.
══════════════
6.தெய்வம்
உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது
ஒன்று நிகழ்ச்சி நிலை
இரண்டு பொருள் நிலை
1. எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.
2. அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.
உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது.
தேய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.
══════════════
7. அநாதி
அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்
புத்தகம் மேசை மீது இருக்கிறது - மேசை பூமி மீது இருக்கிறது - பூமி வெட்டவெளியில் இருக்கிறது.
புத்தகத்திற்கு மேசை ஆதாரம் - மேசைக்கு பூமி ஆதாரம் - பூமிக்கு வெட்டவெளி ஆதாரம் - வெட்டவெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் - அது அநாதி ஆயிற்று.
அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது.
அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்.
கடவுளை யார் உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய் தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
..
8. பிரம்மம் :
பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற பொருள்.
அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.
கடவுள் அழிவில்லாதவர் என்றால் கடவுளைத் தவிர உலகில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் அழியக் கூடியது என்று அர்த்தம்.
அதனால் இந்த உலகையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மாயை என்று சொல்லால் குறிப்பிடுகின்றனர். மாயை என்றால் அழியக் கூடியது என்று அர்த்தம்.
══════════════
9. பரம் :
பரம் என்றால் நேர் இல்லாதது, உவமை இல்லாதது, அதற்கு இணை என்ற ஒன்று கிடையாது, அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது, என்று பொருள்.
இந்து மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றமடைகிறது.
பரம் + சிவன் = பரமசிவன்
பரம் + சக்தி = பராசக்தி
சிவன் என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலைக்கு மேல் வேறு ஒன்றும் (கடவுள்) இல்லாத காரணத்தினால், பரம் + சிவன் = பரமசிவன், அதாவது பரமசிவனுக்கு மேல் வேறு இருப்பு நிலை (கடவுள்) இல்லை என்று பொருள்.
சக்தி என்றால் இயக்க நிலை என்று பொருள்.
அதாவது இருப்பு நிலை அசைந்து, இயக்க நிலை உருவாகிய அந்த நிலையே முதல் இயக்கநிலை. அதற்கு முன்பு இயக்க நிலை கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + சக்தி =பராசக்தி என்பதாகும்.
கிறிஸ்தவ மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றம் அடைகிறது.
பரம் + பிதா = பரம பிதா
பரம் + மண்டலம் = பர மண்டலம்
பரம் + லோகம் + ராஜ்யம் = பரலோக ராஜ்யம்
பிதா என்றால் தந்தை என்று பொருள்.
குடும்ப அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வருபவர் என்று பொருள்.
உலக அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வரும் பரம பிதாவுக்கு மேல் வேறு யாரும் கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + பிதா = பரம பிதா என்பதாகும்.
══════════════
10. பூரணம் :
இவைகள் - என்று சொற்களில் எடுத்துக் கூற முடியாத,
இவைகள் - என்று வார்த்தைகளில் எழுதிக் காட்ட முடியாத,
அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலம் வரும் பொழுது தானாகவே பரிணமித்து வெளிப்படும்.
அதாவது இன்னதென்று தெரியாமல், அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் காலம் வரும் பொழுது வெளிப்படும், அதுவே பூரணம் எனப்படும்.
══════════════
பல்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படும் கடவுள் என்ற சொல்லுக்குள்ளேயே இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்றால்,
கடவுள் என்றால் என்ன?
கடவுளை அடையக் கூடிய வழிகள் எவை?
என்பன போன்ற அதி சூட்சும கேள்விகளுக்குள் எவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கும்? என்பதைப் பற்றி சிந்திப்போம் தெளிவு பெறுவோம்.

🙏🕉🙏🕉🙏🕉

வியாழன், 30 ஜனவரி, 2020

பசி புரட்சி செய்தவர் வள்ளலார் !

பசியை வைத்து புரட்சி செய்தவர் வள்ளலார்.!

உருவத்தை வணங்கும் பக்தியினால் !
மன உருக்கம்
மனநெகிழ்ச்சி
மனமகிழ்ச்சி
உண்டாகும்.

பசியைப் போக்கும் ஜீவகாருண்யத்தினால்!
ஆன்ம உருக்கம்
ஆன்ம நெகிழ்ச்சி
ஆன்ம மகிழ்ச்சி
உண்டாகும்.

மேலே கண்ட இரண்டு வழிமுறைகளில் எது உயர்ந்தது ? எது தாழ்ந்தது ?

மன மகிழ்ச்சி யா ?
ஆன்ம மகிழ்ச்சி யா ?

மனமகிழ்ச்சி நிரந்தரம் இல்லை.
ஆன்ம மகிழ்ச்சி நிரந்தரமானது.

ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால் தான் ஆண்டவரும் மகிழ்ச்சி அடைவார்.

ஆண்டவர் மகிழ்ச்சி அடைந்தால் மட்டுமே அருள் பெற முடியும்.என்ற உண்மையை கண்டு அறிந்தவர் வள்ளலார்.

எனவே தான் பக்தி என்னும் உருவ வழிபாட்டால் எந்த பயனும் இல்லை.எந்த லாபமும் இல்லை என்றார்.

இறைவனால் படைத்த உயிர்களின் பசியைப் போக்குவதே கடவுள் வழிபாடு என்னும் உண்மையை அறிந்து உருவ வழிபாடு வேண்டாம் என்னும் உண்மை புரட்சியை மக்களுக்கு போதித்தார்.

பொய்யான கற்பனைக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களான கதாநாயகர்களை கடவுளாக படைத்து.ஆலயங்களை எழுப்பி. பக்தி என்னும் பெயரால்  மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சில ஆன்மீகவாதிகளின்  கூட்டம்  வள்ளலார் மீது அருட்பா மறுட்பா என்னும் பொய் வழக்கும் போட்டார்கள்.

கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் நீதி மன்றம் சரியான தீர்ப்பு வழங்கி வள்ளலார் வெற்றி பெற்றார்.வழக்குத் தொடுத்த பக்திவான்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டார்கள்.

அதன் பின்புதான் வள்ளலார்.உருவம் அற்ற.பக்தி அற்ற. ஒளி வழிப்பாட்டு முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி புரட்சி செய்கிறார்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்று கடவுள் அருளைப் பூரணமாக அடைந்து உண்மையானக் கடவுள் யார் ? என்பதை உலக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற *இயற்கை உண்மையான கடவுளைக் கண்டு களித்து ஒளி வழிப்பாட்டுக்காக வடலூரில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* தோற்றுவித்துள்ளார்.

*உருவ வழிப்பாட்டு பக்தியால் ஆன்ம லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை*.

உயிர் இரக்கமான ஜீவகாருண்யத்தால் மட்டுமே அருளைப் பெற்று *ஆன்ம இன்ப லாபத்தை* பெறமுடியும்.

ஆன்ம இன்ப லாபத்தால் மட்டுமே மனிதன் மரணத்தை வென்று.என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும் பேரின்ப லாபத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.

அறிவு சார்ந்த *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை* உடைய அன்பர்களே பக்தியா ? ஜீவகாருண்யமா ? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

வள்ளலார் பாடல் !

காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்

சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.!

*மேலே கண்ட பாடல் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்த்தாகும்.*

உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணத்தால் செயலால்  மட்டுமே நிறைவேறும்.வெற்றி பெற முடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

உயிர்களை நேசிக்கும் உத்தமர் !

உயிர்களை நேசிக்கும் உத்த்தமர் !

உலகில் தோன்றிய ஞானிகள் கடவுளைத் தேடினார்கள்.

கடவுள் உத்தமமான மனிதரைத் தேடினார்.

எல்லா உயிர்களையும் நேசிக்கும் ஒழுக்கம் நிறைந்த மனிதனை இறைவன் நேசிக்கிறார்.

இறைவனே நேரடியாக  வந்து தொடர்பு கொண்டு அருள் பெற்ற ஒரே ஒரு அருளாளர் வள்ளலார். அவர் தான் தமிழ்நாட்டில் அவதரித்தவர்

அவர் பெயர் இராமலிங்கம் பின்பு திருஅருட்பிரகாச வள்ளலார் என்று பெயர் பெற்றவர்.

வள்ளலார் வகுத்து தந்த கொள்கைகள்!

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் !

எல்லா உயிர்களையும் தன்னுயிா்போல் பாவிக்கும்  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் .

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.!

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே  கடவுள் வழிபாடு!

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

கடவுளின் பெயரால் உயிர் பலி செய்யக்கூடாது.

சாதி. சமயம்.மதம்.மொழி.தேசம் போன்ற வேறுபாடுக்கள் கூடாது!

சிறு தெய்வ வழிபாடு கூடாது!

வேதம் .ஆகமம்.புராணம்.இதிகாசம் சாத்திரங்கள் உண்மையை தெரிவிக்காது !  அவற்றை நம்ப வேண்டாம் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்தல் கூடாது !

இறந்தவரை புதைக்க வேண்டும்.எரிக்கக் கூடாது!

எதிலும் பொது நோக்கம் வேண்டும் !

போன்றவை வள்ளலார் வலியுறுததிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்.

சொல்லிய வண்ணமே கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர் வள்ளலார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவா் வள்ளலாா்.

ஜாதி, சமயம் மதம் வேறுபாடுகளை கடந்து வாழ்ந்தவர்.

பசித்த உயிா்களுக்கு உணவளிப்பதற்காக சத்திய தருமச்சாலை தோற்றுவித்தவர்.

 உயிா்க் கொலை செய்யாதவர் புலால் உண்ணாதவர்.!

 எல்லா உயிர்களிடத்தும் அன்பு,தயவு.கருணை கொண்டு வாழ்ந்தவர்

 மனித  சமுதாயத்தின் உயா்ந்த பண்பு எவை  என்பதை அடையாளமாகக் கொண்டு வாழ்ந்தவர்

ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய ஜீவகாருண்ய ஒழுக்கமே உயர்ந்த பண்பாகும் என்றவர்.அவையே பேரின்ப வீட்டின் திறவுகோலாக அமையும். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கிற ஒரு புதிய உயர்ந்த உண்மை தத்துவாா்த்த நெறிமுறையை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்திவர்..

 எல்லா உயிரையும் தன்னுயிா்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும்.தான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவா் வள்ளலாா்.

 ‘ஜாதி, மத வேறுபாடுகள் கூடாது; பசித்த உயிா்களுக்கு உணவளித்து ஆதரிப்பது; உயிா்க் கொலை செய்யாத அன்பு, தயவு.கருணையே மானுட சமுதாயத்தின் உயா்ந்த பண்பின் அடையாளமாக வாழ்ந்து காட்டியவர்.

 ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோலாக அமையும். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கிற ஒரு புதிய சத்திய உண்மை நெறிமுறையை அறிந்து வாழ்ந்து இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினாா்.

எவ்வளவு உயர்ந்த இடத்தில்.உயர்ந்த பதவியில் இருந்தாலும். கணவன் இறந்தால் மனைவி தாலியை வாங்க வேண்டாம், மனைவி இறந்தாலும் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் என்றவர்.எதிலும் பொதுநோக்கம் வேண்டும் என்றவர்.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அதில், உண்மையைச் சொல்லவில்லை.எல்லாம் கலையை உரைக்க வந்த கற்பனை கதைகள் .மனிதர்களால் படைக்கப்பட்ட கட்டுக் கதைகள் என்றவர்

பசித்த உயிா்களுக்கு உணவளிப்பதே எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த (இராமலிங்க அடிகளாா்) வள்ளலார். அன்னதான சாலை ஒன்றை அமைத்து, தருமசாலையை நிறுவினாா்.

வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று அமைக்கப்பட்ட சத்திய தருமசாலைக்கு வந்தவா்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினாா்.மக்களின் மிகுந்த துன்பம் துயரங்களில் ஒன்றான பசிப் பிணியைப் போக்கிட வள்ளலாா் காட்டிய வழி புதுமையான உண்மையான வழியாகும். இன்றளவும் வள்ளலாா் தோற்றுவித்த சத்திய தருமச்சாலையில்   அவரின் கொள்கையைப் பின்பற்றி ஏழைகளின் பசியை ஆற்றி வருகிறாா்கள்.

அந்த தருமசாலையில் மக்கள் வழங்கும் பொருளுதவியைக் கொண்டு ஜாதி,சமயம். மதம் மொழி, இனம், நிறம், நாடு, உயா்ந்தோா், தாழ்ந்தோா் என்ற பாகுபாடு பாராமல் மூன்று வேளையும் பசித்த வயிற்றுக்கு உணவளிக்கும் தொண்டு இன்றளவும் தொடர்நதுகி நடைபெற்று வருகிறது.

ஜீவகாருண்ய ஒழுக்கமானது மனிதர்களுக்கு முக்தியையும்.அருள் பெரும் சித்தியையும் வழங்கும் வல்லமை உடையது என்னும் புதிய உத்தியை (ரகசியம் )கண்டு பிடித்தவர் வள்ளலார்

*இதுவே வள்ளலார் கண்ட ஆன்மீக புரட்சி யாகும்*

 பசி என்பது என்ன? உயிா்களுக்குப் பசி எதனால் ஏற்படுகிறது? பசியின் கொடுமைக்  காரணமாக மனிதா்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவாா்கள்? பசியினால் ஓா் உயிருக்கு உண்டாகும் துன்பங்கள். வேதனைகள் என்னென்ன என்று வள்ளலாா் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் எழுதி வைத்துள்ளார்.

 பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்தவர் வள்ளலார் . பசி என்று ஒன்று இருப்பது ஏன்? எல்லா உயிர்களுக்கும்  பசி என்பதே இறைவனால் வழங்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்பதை கண்டு பிடித்தவர் வள்ளலார்.

பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரையொருவா் எதிா்பாா்க்க மாட்டாா்கள். அப்படி இல்லாதபோது ஒருவருக்கொருவா் உதவ மாட்டாா்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம்.ஆன்மநேயம் இல்லாமல் போய்விடும். மனிதநேயம்.ஆன்மநேயம் இல்லாவிட்டால், இறையருள் கிட்டாது.

"இறைவனை அறிய இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு உபகாரக் கருவிதான் பசி*.

பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு; ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக் காற்று; ஏழைகளைப் பாய்ந்து கொல்லப் பாா்க்கும் புலி; உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம். பசியினால் ஏற்படும் கொடுமைகள் தான், பசிப்பிணி.பசிக்கொலை என்பது மிகவும் பயங்கரமானது.வேதனையானது.தாங்க முடியாதது.

அந்த பிணியை.கொலையைத் தவிர்த்துக் கொள்ள மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டாா்கள்;. பெற்றவா்கள் பிள்ளைகளை விற்பாா்கள். பிள்ளைகளை பெற்றவர்கள் விற்பார்கள்.

*கணவன் மனைவியை விற்பான். மனைவி கணவனை விற்பாள்*

இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவாா்கள். பிச்சையெடுப்பாா்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவாா்கள். பெற்றவா்களைப் பிள்ளைகள் சரியாகப் பேணிக் காக்க மாட்டாா்கள்.

இதன் விளைவாக முதியோா் புறக்கணிக்கப்பட்டு அவா்களின் வயிற்றுப் பசிக்காக, பல்வேறு கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோா் இல்லங்களில் தஞ்சம் புகுந்து கூனிக் குறுகி வாழ நேரிடும்.

மற்றும் முனிவா்களையும், யோகிகளையும், சித்தா்களையும் கூடப் பசிப்பிணி என்பது தாக்கும். அந்தச் சமயங்களில் அவா்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவாா்கள். பிச்சை கிடைக்காவிடில், பசிப் பிணியால் அறிவு மங்கும். கடவுளைக் குறித்த நினைப்பு அடியோடு ஒழிந்து மறந்து போகும். சித்தம் கலங்கும். நம்பிக்கை குலையும். கண் பஞ்சடைந்து போகும். காதில் இரைச்சல் ஏற்படும். நாக்கு உலா்ந்து போகும்; கை, கால் சோா்ந்து துவளும். வாா்த்தை குளறும். வயிறு திகுதிகுவென எரியும். கோபம் பெருகும்.

உயிா் விடுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும், மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய மூன்று வேதனைகளும் ஒன்று திரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ அதைவிட மோசமான துன்பம் தருவதே பசி வேதனை என்பார் வள்ளலார்.

அதுவே உணவு கிடைத்துப் பசியாறிவிட்டால், அத்தனை துன்பங்களும்.துயரங்களும்.
அச்சங்களும் பயங்களும் உடனே அகன்று விடும். உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். உள்ளேயும், வெளியேயும் உயிா்க்களையும்.ஆனமக் கலையும் கடவுள் கலையும் உண்டாக்கும்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பசியால் வேதனைப் படுபவா்கள், உணவைக் காணும்போது புதிய மகிழ்ச்சி அடைவாா்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு அளவிட முடியாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஏற்படும் என்றால்,

அதைச் சாப்பிட்டபோது அடையும் ஆனந்தம்.மகிழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும்? எனவே, உணவை இறைவனுக்குச் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பசிப் பிணி போக்க வேண்டும் என்பதில் தீராத வேட்கையும் பற்றும் கொண்டவா் வள்ளலாா்.ஆகவேதான்,

வடலூரில் வள்ளலாா் ஏற்றி வைத்த  சத்திய தருமச்சாலையின்  நெருப்பு இன்னும் எரிந்துகொண்டே இருக்கிறது. இவை மட்டுமல்லாது,

இவா் பாடிய ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களின் திரட்டுத்தான் திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 ஆறு திருமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வள்ளலாா் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராகப் பல கண்டனங்கள்.எதிர்ப்புக்கள்.நீதிமன்ற வழக்குகள் எல்லாம்  சமய மத வாதிகளால் தொடங்கபட்டன .

‘நல்லோா் மனதை நடுங்கச் செய்யாதே, தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே,
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே,
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே, பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே,
பசித்தோா் முகத்தைப் பாராதிராதே, இரப்போா்க்கு பிச்சை இல்லை என்று சொல்லாதே,
குருவை வணங்கக் கூசி நிற்காதே,
தாய் - தந்தை மொழியைத் தள்ளாதே-

ஆலயக்கதவை அடைத்து வைக்காதே.

இவையெல்லாம் மானுட சமுதாயத்துக்கு வள்ளலாா் காட்டியுள்ள பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வாழ்வியல் இயற்கை ஒழுக்க சட்டங்கள்.

ஜீவகாருண்ய ஒழுக்கம்.சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம்.தமிழ் விளக்க உரை. முதலானவை வள்ளலாா் பதிப்பித்தவையாகும்.

அவா் இயற்றிய உரைநடை நூல்களான மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை மனித நேயத்தையும் ஆன்மநேயத்தையும் வலியுறுத்தும் புதிய சகாப்தமாகும்.

 ஆகவேதான், வள்ளலாரைப் பன்முகப் நன்மைக் கொண்ட அருளாளராக போற்றப் படுகிறாா்கள்.

சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர் .  உரையாசிரியா், உலக சமுதாய சீா்திருத்தவாதி, சித்த மருத்துவா், சிறந்த அருள் நிறைந்த சொற்பொழிவாளா், ஞானாசிரியா், தீா்க்கதரிசி, நூலாசிரியா், பசிப் பிணி போக்கிய அருளாளா், பதிப்பாசிரியா், தமிழ் மொழி ஆய்வாளா், பண்பாளா் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவா்தான் திருவருட் பிரகாச வள்ளலாா்.‘

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற உண்மைக் கடவுளை கண்டவர்.

கற்றதும் நின்னிடத்தே, பின் கேட்டதும் நின்னிடத்தே, ஓதி உணா்ந்தவா்கள் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணா்த்திய என்உறவாம் பொருளே என்பார்.

எனவே தான் ஓதாது அனைத்தும் உணா்கின்றேன்’ என்று அவரால் சொல்ல முடிந்தது. எனவேதான், ஜாதி, சமயம், மதம், இனம், மொழி, நாடு முதலிய எதிலும் பற்றில்லாதவா்களுக்கு மட்டும்தான் திருவருட்பாவின் கருத்துகள் மென்மையாக.உண்மையாக விளங்கும் .

ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தை முழுமையாக கடைபிடித்து திருஅருட்பாவை முழுமையாகப் படித்துத் தெரிந்தவா்கள் சொல்லுகிற கருத்துக்களே சிறந்த பாடமாகும்.

அதே நேரத்தில், ஜீவகாருண்யம் உணா்ந்து, பொது நோக்கம் கொண்டு, உலகப் பற்றில்லாமல் உண்மையைத் தேடும் ஆா்வம் இருந்து திருவருட்பாவைப் படித்தால் உண்மை கடவுள் என்கிற அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொள்ளமுடியும் என்பதே உண்மையாகும்.

உலகில் உள்ள அருளாளா்கள் யாரையும் வள்ளலாா் பின்பற்றவில்லை. வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் ஒருவா் அல்லா் என்பதை அவா் பதிவு செய்துள்ள பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சேக்கிழாா் பாடிய ‘உலகெல்லாம் உணா்ந்து ஓதர்கு அறியவன், நிலவுளாவிய நீா் மலி மேனியன், அலகில் ஜோதியன் அம்பலத்து ஆடுவான், அவன் மலா் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்’ என மனமுருகிப் பாடி தனது எட்டாவது வயதில் விளக்கம் சொன்னவர் வள்ளலார்.

 இறையருள் சித்திக்கப் பெற்று தண்ணீரால் விளக்கேற்றியும், மழை பெய்யாத காலங்களில் மழை பெய்வித்தும், குளம் நீரைப் பெருக்கியும் தன் இறைத்தன்மையால் பல்வேறு அற்புதங்களை மக்களுக்கு நிகழ்த்திக் காட்டியவா்.

எண்கோண வடிவிலான ஞானசபைக் கட்டடம், மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபம், அதன் மீது பன்னிரு கால் மண்டபமும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைத்து நாற்கால் மண்டபத்தின் மையத்தில் ஆண்டவா் ஜோதி வடிவில் இருக்கிறாா் என்பதை உணா்த்துகிற சத்திய ஞான சபையில் ஒவ்வொரு தைப்பூசம்தோறும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

20.10.1873 செவ்வாய்க்கிழமையன்று காலை 8 மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து கூடியிருந்தவா்களுக்கு நீண்ட அருளுரை வழங்கியது பேருபதேசம் (மகாஉபநேசம்) என்று சொல்லப்படுகிறது.

தன் அரையில் வைத்திருந்த நான்கு சதுரக்கண்ணாடி விளக்கை மக்கள் பார்க்கும்படி வெளியே கொண்டு வந்து வைத்து.தெய்வ பாவனை என்பது இந்தத் தீபத்தின் வடிவில் இருக்கிறது.உண்மை அன்பால் வழிபாடு செய்து இடைவிடாது வணங்க வேண்டும் என்றார்.

நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உயிர்களிலும் புகுந்து கொள்வேன்’ என்று சொல்லி விட்டு

30-01-1874 ஸ்ரீமுக ஆண்டு 19 ஆம் நாள் தைமாதம் வெள்ளிக்கிழமை ..இரவு 12 மணிக்கு சித்திவளாகத் திருமாளிகையில் இறைவனுடன் கலந்து கொண்டார்.

 நான் அறையின் உள்ளே புகுந்து கொள்வேன் வெளியே தாளிட்டுக் கொள்ளுங்கள்.
அப்படியும் திறந்து பார்த்தால் வெறும் வீடாகத்தான் இருக்கும் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.

 வள்ளலார்  விருப்பப்படி அறை பூட்டப்பட்டது. அன்று முதல் வள்ளலாா் உருவமாக நம் கண்களுக்குத் தோன்றாமல், அரு உருவமாக திகழ்ந்து அருட்பெரும் ஜோதியாக காட்சி தந்து கொண்டுள்ளார்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

வள்ளலார் பயனித்த வழி !

வள்ளலார் பயணித்த வழி இதுவே.
ஆம். "தயவு" தயவே. தயவால் மட்டுமே. "தயவு" என்றால் என்ன?
வள்ளலார் சொல்கிறார்கள்:-
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், .
"எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை."
இங்கு "எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்" என உள்ளது. இதன் அர்த்தம்;
எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளும் குணம் என்கிறார் வள்ளலார். இந்த உணர்வு நம்மிடம் இருவகையில் காரியப்படுவதாக வள்ளலார் சொல்கிறார்கள்.
நம் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல்
அல்லது
ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.
மேற்படி செய்யக்கூடிய இரண்டில்
முதலாவது புறம் இரண்டாவது அகம்.
வள்ளலார் பயணித்த வழி இதுவே.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் நாம் செய்யக் கூடிய பயிற்சியும் சாதனமும் இதுவே.
புறத்தில் சாதனம்;
தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல்.
அகத்தில் சானம்;
ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.
(இதுவே நாம் செய்யக் கூடிய ஜீவத்தயவு என்கிறார்).
ஆக,
ஒன்று (புறத்தில்),
ஆன்மாக்களுக்கு  உபகரித்தல் அல்லது (நேராத பட்சத்தில்)  பிரார்த்தித்தல்.
அல்லது
இரண்டு (அகத்தில்)
விசாரம் செய்தல்.
எப்படி எனில்;
"..கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது..."
இதுவே வள்ளலார் பயணித்த வழி.
நிற்க!
(மிக முக்கியம் இந்த இடம்)
இது வள்ளலார் கண்ட தனி வழி என்று எப்படி ஆகும்? வள்ளலார் காலத்து முன்பே இந்த (தயவு) சாதனம் ஞானிகளிடத்தில் இருந்ததே. இந்த தயவு சாதனத்தால் நான் சாகாவரம் பெற்றேன். எனக்கு முன் எவரும் இந்த பேரின்ப வாழ்வு பெறவில்லை என்று வள்ளலார் எப்படி சொல்ல முடியும்??
வள்ளலார் மற்ற மார்க்கங்களை பற்றியும் தனக்கு முன் ஞானிகள், யோகிகள், தேவர்கள், தலைவர்கள் பற்றியும் சொன்னதை பார்ப்போம்.
முன் மார்க்கங்கள் முக்தி,சாமாதி பற்றி வியம்புகிறது. அதன் படியே அந்தளவே சித்திகள் (பலன்கள்) பெற்றனர்.
 பூரண சித்தியாம் மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் எவரும் வாழவில்லை. அங்ஙனம்
வாழ முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை, ஆசைப்படவும் இல்லை. ஆசைப்பட்டியிருந்தாலும் அதற்கான வழி அவர்களின் சமயம் மதம் சொல்லவில்லை. அவர்களில் சிலர் முயற்சியால் நீடுழி வாழ்ந்தனர் ஆனால் இறுதியில் சமாதி அடையவே செய்தனர். ஆக, முக்தியே முன் மார்க்கங்களில் பயனாக இருந்தது. இந்த அளவு பயனுக்கே சிந்திக்க வைத்தது சமயமத மார்க்கங்கள். இதுவே கடவுள் அருளாகப் பார்க்கப்பட்டது.
நிற்க!
அது எப்படி? எந்த சாதனத்தால் (அதாவது ' தயவு ' ) வள்ளலார் யாரும் பெறாத சாகாநிலை பெற்றாரோ அந்த தயவு சாதனம் மற்ற ஞானிகளும் பெற்றியிருந்தார்கள், அப்படியிருக்க, "நானே பெற்றேன்" எப்படி இந்த கூற்று..??
எப்படி வள்ளலாரின் வழி,
 புதிய/தனி/பொதூ/சிறப்பு/உண்மை
வழியாகும்?
அன்பர்களே!
வள்ளலார் எடுத்துக் கொண்ட வழி ஒரு புதிய வழியே? அதுவே தனி வழி பொது வழி சுத்த சன்மார்க்க வழியாகும். பார்ப்போம்.
வள்ளலார் எடுத்துக் கொண்ட"தயவு" தயவு மட்டுமே.
இங்கு "மட்டுமே" என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் வள்ளலாருக்கு முன்பு தயவு சாதனத்துடன் ஆசாரங்கள் சேர்ந்திருந்தது. வள்ளலாரின்"தயவில்"  எந்தவொரு ஆசாரமும் சேர்ந்திருக்கவில்லை. அதே நேரத்தில் வள்ளலார் கொண்டிருந்த "ஆசை" போல் எவரும் கொண்டிருக்கவில்லை. அதாவது மரணத்தை தவிர்த்துக் கொள்ளுதல். இதற்கு எவரும் முன் வரவில்லை காரணம் அவர்கள் பற்றுக் கொண்டிருந்த சமயமதமார்க்கங்கள் "மரணம்'' உண்டு, சொர்க்கம் நரகம் இவையில் விசாரம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தன் ஆசையை நிறைவேற்ற வழி வகை இல்லாத சமய மதத்தை கை விட்டார் வள்ளலார். கைவிட்ட வள்ளலார் உண்மை கடவுளை காண லட்சியம் கொண்டார். உண்மை கடவுளை கண்டு தன் அதிதீவிர விருப்பமான மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் வாழ சாகாவரம் கேட்க ஆசைக் கொண்டார்.
ஆனால் அதற்கான வழி....???
இறைவனிடமே வேண்டினார்.
எங்ஙனம்??
உண்மை கடவுள் ஒருவரே உண்டென்றும், அக் கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிப்பட்டார்.
நிற்க!
 கடவுள் இவரே என கருத்தில் கொள்ளாமல் "ஓர் உண்மை கடவுள் உண்டென்றும்.." என்று மட்டும் தான் கருத்தில் கொண்டு  வழிப்பட்டார் வள்ளலார்.
மற்றொன்று,
இந்த வழிப்பாட்டில் எந்தவொரு ஆசாரமும் இல்லை.
அதாவது;
கடவுளே!
தங்கள் உண்மை நிலையை
நீங்களே என் அறிவில் விரித்து, உள்ளத்தில் சொரூபம் காட்டி,  எனக்கு அருள் பாலித்து சாகா வரம் தர வேண்டும் என விண்ணப்பித்தார்.
ஆக,
எவராலும், எவ்வகை சாதனம் கொண்டு எவ்வளவு முயன்றாலும் கடவுளின் முழு உண்மையை இப்பிறவிலேயே, இப்பிறவியில் நாம் பெற்றிருக்கும் அறிவால், அறிந்து அனுபவிக்க முடியாது என்று  தெரியப்படுத்திய சமயமத மார்க்கங்களையும்,
பயனில்லாத ஆசாரங்களையும் கைவிட்டு விட்டு மேலும், தன்னிடம் இருந்த மற்ற உலக ஆசாரங்களையும்  கைவிட்டு விட்டு,  தயவு மட்டுமே சாதனமாக கொண்டு, உண்மை அறிவால் விசாரம் செய்து, உண்மை அன்பால்  இப்பிறவிலேயே ஆண்டவரின் சொரூபம் காணவும், நித்திய வாழ்வை பெறவும்
நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
அழுதார்.. அழுதார்.. அழுதார்
கண்டார் உண்மை கடவுளின் சொரூபத்தை.
உண்மை அனைத்தும் கடவுளால் விளக்கப்பட்டது.
தான் பெற்ற இப்பேறு உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என கடவுளிடத்தில் வேண்டினார்.
நித்திய வஸ்துவாகிய அந்த ஒருவராகிய கடவுளிடத்தில் உள்ள தயவு வள்ளலாரிடம் வந்தது அறிந்த ஆண்டவர், அவர் நித்திய வாழ்வை பெற சாகாவரம் அருளினார்.
இதுவே வள்ளலார் பயணித்த வழி. இவ்வழியே சுத்த சன்மார்க்கம் என்கிறார்.
எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
நன்றி ஏபிஜெ அருள், கருணை சபை சாலை.
விசா

உயிர்களை காப்பாற்றுவதே ஆன்மீகம் !


உயிர்களை காப்பாற்றுவதே ஆன்மீகம்* !

*பொருமையாக ஊன்றி படிக்கவும்*

வள்ளலார் அன்பு.தயவு. கருணையே வடிவமாக வாழ்ந்த காரணத்தினால் இறைவனிடம்   அருளை முழுமையாக பெற்று கொண்டார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரிலே வந்து உமக்கு என்ன வேண்டுமானாலும் கேள் வேண்டியதை எல்லாம் தருகிறேன் என்கின்றார்

வள்ளலார் என்ன கேட்டார் ? கேட்டு எதனைப் பெற்றார் ? என்பதை நினைக்கும் போதும் படிக்கும் போதும் கரையாத கல்லும் கரைந்துவிடும்.

இப்படி ஒரு அருளாளர்  ஞானிகள் உலகத்தில் உண்டா என நினைக்கத் தோன்றும்.

வள்ளலார் இறைவனிடம் கேட்பதைப் பாருங்கள்.

உங்களால் படைக்கப்பட்ட.தாவரம்.ஊர்வன.பறப்பன
நடப்பன. தேவர்.அசுரர். மனித உயிர் இனங்கள் யாவும் துன்பப் பட்டு அழிந்து  கொண்டு உள்ளன அவைகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் தாழ்ந்த கதி அடையக்கூடாது.அதுவே என்னுடைய விருப்பம் என்றும்.மனித குலத்திற்கு பூரண அருள் வழங்க வேண்டும் என்பதே எனது விருப்ப முயற்சியாக உள்ளது என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வேண்டுகோள் வைத்து கேட்கிறார் வள்ளலார்.

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியாகிய உங்களைத் தொடர்பு கொள்ளாமல் .பொய்யான சாதி.சமய.மதங்களின் தத்துவ கடவுளைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சூழலில் சிக்கி தவிக்கின்றன.அவற்றை நீக்க வேண்டும்.

எல்லா உயிர்களுக்கும் உண்மையை அறிவித்து ஆன்மலாபம் பெற்று வாழ்வதற்கு. அருளைப் பெற வாய்ப்பு அளிக்க வேண்டும்.

எல்லா உயிர்களும்  இன்புற்று வாழ வேண்டும்
கொல்லா நெறி உலகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.இதுவே என்னுடைய வேண்டுகோள் என்பதை ஆண்டவர் இடத்தில் கேட்கின்றார். 

வள்ளலார் பாடல் !

கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
தருண நின்அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் 

*வன் புலை கொலை இரண்டும்*
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்கவும் உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.!

என்றும் மேலும்

மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்!

என்றும் மேலும்

இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை

இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந் தயாநிதி நின் திருவுளத் தறிந்தது தானே

தவம் இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும் இவ் விச்சை
நவைஇலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.!

இப்படி யாராவது எந்த அருளாளராவது இறைவனிடம் விண்ணப்பம் வைத்தது உண்டா .வைப்பார்களா என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

மேலும் வள்ளலார் பாடல் !


இந்த பாடல் வள்ளலாருக்கு உயர்ந்த மகுடம் சூட்டிய பாடல் என்பது உலகமே அறிந்தது.

எல்லாம் இறைவன் விதிப்படித்தான் நடக்கும் என்றும்.எல்லாம் இறைவன் திருவிளையாடல் செயல் என்றும்.
பாவம் புண்ணியம் என்றும்.சொர்க்கம்.நரகம் கைலாயம்.வைகுண்டம் என்றும்.நல்வினை தீவினை என்றும்.

தீதும்  நன்றும் பிறர்தர வராது என்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஆன்மீக சிந்தனையாளர்கள் மத்தியில் இறைவனிடம் வள்ளலார் கேட்கும் விருப்பம். வரம். வேண்டுதல்  ஒரு புதுமையானதாகும்.அதிசயமானதாகும்.

இவை எல்லாம் ஆண்டவர் ஏற்றுக் கொண்டாரா  ? இல்லையா ?
மறுத்தாரா ? என்ற கேள்வி எழலாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சொல்கிறார்.

வள்ளலார் பாடல் !


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து.நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் ஆதலால் உம்மை நேர்காணல் செய்ய வந்துள்ளேன் என்கிறார்.

வள்ளலாருக்கு ஆனந்தம் மகிழ்ச்சி அளவிட முடியாமல் பொங்கி வழிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார்.

உம் எண்ணம் பலிக்க வேண்டும்.!  நிறை வேற்ற வேண்டும்!என்பதற்காக உமக்கு ஐந்தொழில் வல்லபத்தை தருகிறேன் என்றும் ஐந்தொழில் செய்யும் அருள் வல்லபத்தை வள்ளலாருக்கு அளித்து விடுகின்றார்.

வள்ளலார் பாடல் !


இனிமேல் உலகில் உள்ளவர்கள் யாவரும் உம் சொல் வழியே பின்பற்றி வாழ்வார்கள் .நீ எண்ணிய படியே எல்லாம் நடைபெற செயல்பட .நிறைவேற்ற அருட்பெருஞ்ஜோதியை ஈந்தனம்.அதாவது முழுமையான அருள் ஆற்றலை உம்மிடம் கொடுத்து விட்டேன் என்கிறார்.

மேலும் எம் பணியான ஐந்தொழில் வல்லபத்தை உம்மிடம் கொடுத்து விட்டதால் என்னுடைய  துன்பம் நீங்கியது என்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

வள்ளலார் பாடல்! 


என்னும் பாடல் வாயிலாக தெளிவான விளக்கம் தந்து மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.

உலக உயிர்களை காப்பாற்ற ஐந்தொழில் வல்லபத்தை பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டு உள்ளவர் வள்ளலார்.

மேலும் ஒரு கட்டளையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு  சொல்லுகின்றார்.

வள்ளலார் பாடல் ! 



சாதி.சமயம் மத்த்தால் மனித குலம் போறிட்டு சண்டையிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்..

உலக பொது நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்து மக்களை ஒன்று படுத்தி ஜீவகாருண்ய  நேயத்தை.ஆன்மநேயத்தை கடைபிடிக்க செய்ய வேண்டும்.என்பிள்ளை என்பதால் இந்த பணியை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.

மனதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாதி சமய.மதங்களை அழித்து மக்களை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையை அனுமதியை வள்ளலார் இடம் வழங்குகிறார்.

*இவ்வளவு ஆற்றல் மிகுந்த வள்ளலார்  என்னை வணங்க வேண்டாம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என்று ஆணையிடுகின்றார்*

ஆன்மீகம் என்பது சாதி.சமய.மதம் என்ற வேற்றுமையான வேஷம் போடுவதில்லை.உலக உயிர்களை காப்பாற்றுவதே ஆன்மீகம் என்பதாகும்.

விரிக்கில் பெருகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896


வியாழன், 23 ஜனவரி, 2020

வள்ளலாரின் தனிச் சிறப்பு !

*வள்ளலாரின் தனிச்சிறப்பு*

*வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..*

*பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..*

*காவி ஆடை உடுத்த மாட்டார்.*

*உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.*

*ஆற்காடு ஜோடு அணிந்து கொள்வார்.*

*கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..*

*கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..*

*சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.*

*கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.*

*சிம்மாசனத்தில் அமரமாட்டார்.*

*ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.*

*தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..*

*அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.*

*உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..*

*கை நீட்டி பேசமாட்டார்.*

*எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..*

*எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..*

*தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..*

*சத்தம் போட்டு பேசமாட்டார்..*

*சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..*

*ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.*

*உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..*

*புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.*

*மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.*

*பணத்தை கையிலே தொடவே மாட்டார்.*

*தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.*

*உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.*

*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.*

*வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....*

*ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.*

*உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.*

*ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..*

*வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சாஸ்த்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.*

*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றவர்.*

*மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..*

*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.*

*கடவுளைத்தேடி காடு, மலை, குகை,குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.*

*கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர்.*

*அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.*

*தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.*

*தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.*

*மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..*

*எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.*

*ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.*

*மூச்சி பயிற்சி, வாசியோகம், தியானம், தவம், யோகம், குண்டலினி போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.*

*தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.*

*உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.*

*உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.*

*பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர்.*

*எவரையும் தொடமாட்டார் , தொட்டு பேசவும் மாட்டார்.*

*உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.*

*உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..*

*நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..*

*கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.*

*ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.*

*ஒளி வழிப்பாட்டிற்காக*
*சமரச சுத்த சன்மார்க்க* *சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..*

*தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..*

*சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.*

*மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.*

*உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..*

*ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.*

*உலக மக்களுக்காக உண்மை நூலான திருஅருட்பாவைத் தந்தவர்.*

*மரணம் என்பது இயற்கையானது அல்ல.*
*செயற்கையானது என்பதை முதன் முதலில்*
*அறிவித்தவர்...*

*மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.*

*இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..*

*மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.*

*தன் பெயருக்கு முன் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.*

*இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்*

*அவர் பெருமையை சொல்லி மாளாது.*

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

புதன், 22 ஜனவரி, 2020

உருண்டை உலகத்தின் திசைகள் !

*உருண்டையான  உலகத்திற்கு திசைகள்* !

நாம் வாழும் உலகம் உருண்டையாக கோழிமுட்டை வடிவமாக உள்ளது என்று விஞ்ஞான அறிவியல் கண்டுபிடித்து ஏற்றுக்கொள்கிறது.

மேலும் உலகம் தன்னைத்தானே ஓய்வு இல்லாமல் சுற்றிக் கொண்டு உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்கிறது.

சுற்றிக்கொண்டு உள்ள உலகத்திற்கு திசைகள் எப்படி சொல்ல முடியும்.

கிழக்கு.மேற்கு.வடக்கு.தெற்கு.என்றும் வடகிழக்கு.வடமேற்கு.தென்கிழக்கு தென்மேற்கு என்றும் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.

உலகம் தட்டையாக இருந்தால் பொருந்தும்.உலகம் உருண்டையாக உள்ளது தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் உள்ளது என்பதால் எவ்வாறு பொருந்தும் என்ற கேள்விக்கு வள்ளலார் பதில் சொல்லுகின்றார்.

வள்ளலார் சொல்லும் பதில்!

*உலகத்திற்கு அகம்.அகப்புறம் என்றும் புறம் புறப்புறம் என்றும் திசைகள் உள்ளன என்று பதில் சொல்லுகின்றார்*

உருண்டையான உலகத்திற்கு.அகம் அக்கினி என்றும்.அகப்புறம் சூரியன் என்றும்.புறம் சந்திரன் என்றும்.புறப்புறம் நட்சத்திரங்கள் என்றும் பதில் சொல்லுகின்றார்.

அதேபோல் மனித உடம்பிற்கும்.அகத்தில் இருப்பது ஆன்மா என்றும்.அகப்புறத்தில் இருப்பது ஜீவன் என்றும்.புறத்தில் இருப்பது கரணங்கள் என்றும்.புறப்புறத்தில் இருப்பது இந்திரங்கள் என்றும் பதில் சொல்லுகின்றார்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது எவ்வாறு.

அகம் என்பது உருண்டையின் உள்ளே மத்தியில் இருப்பது அகம் என்றும்.

அதற்கு அடுத்த வட்டத்தில் இருப்பது அகப்புறம் என்றும்.

அதற்கு அடுத்த வட்டத்தில் இருப்பது புறம் என்றும்

அதற்கு அடுத்த வட்டத்தில் இருப்பது புறப்புறம் என்றும் சொல்லுகின்றார்.

உலகம் சுற்றிக்கொண்டு இருக்கும் போது இந்த நான்கு வட்டங்களும் தடை இல்லாமல் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அகத்தில் உள்ள அக்கினி என்னும் அருள் ஆற்றலால் எல்லையற்ற அணு காந்த சக்தியால் இந்த உலகம் தன்னைத்தானே இயங்கிக் கொண்டுள்ளது.

அதேபோல் மனித உடம்பின் அகம் என்னும் இடத்தில் உள்ள ஆன்மாவின் ஆற்றலால் ஆன்மகாந்த அருள் சத்தியால் உடம்பை இடைவிடாது இயக்கிக் கொண்டுள்ளது.

இதற்கு விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவுப் படுத்துகின்றார்.

பஞ்ச பூத உலகில் பஞ்ச பூதங்களின் தன்மையும் அவற்றின் செயல்களையும் அகவலில் தெளிவாக தெரியப்படுத்து கின்றார்.அகவலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் அகவல் வரிகளில் சொல்லப்பட்ட திசைகள்!

256. வெளியிடை அனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

257. புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

258. புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

259. அகப்புற நடுக்கடை அணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

260. அகப்புற நடுமுதல் அணைவாற் புறக்கடை
அகப்பட வமைத்த அருட்பெருஞ் ஜோதி

261. கருதக நடுவொடு கடை அணைந்த அகமுதல்
அருளுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி

262. தணி அக நடுவொடு தலையணைந்த அகக்கடை
அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

263. அகநடு புறக்கடை அணைந்த அகப்புற முதல்
அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

264. அக நடு புறத்தலை அணைந்து அகப் புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

265. அக நடு வதனால் அகப்புற நடுவை
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

266. அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட வமைத்த அருட்பெருஞ் ஜோதி

267. புறநடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

268. புகலரும் அகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி

269. புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

270. புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

271. அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்
அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

272. அகக்கடை முதற்புணர்ப்ப அதனால் அகக்கணம்
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி!

மேலே கண்ட அகவலில் அகம். அகப்புறம்.புறம்.
புறப்புறம் என்ற  திசைகளை சொல்லி உள்ளாரேத் தவிர.கிழக்கு.மேற்கு.
வடக்கு.தெற்கு என்ற வார்த்தையை வள்ளலார் உபயோகப் படுத்தவில்லை.

அகத்தில் இருந்து வெளிப்படும் அருள் ஆற்றலால் அகப்புறம்.புறம் புறப்புறம் என்ற நான்கு பக்கங்களும் செயல் பட்டுக் கொண்டுள்ளன.

நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவற்றை பதிவு செய்கிறேன்.

இந்த உலகம் போல் போல் பலகோடி உலகங்கள் அண்டங்கள் அனைத்தும்  தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளன.

இவற்றை எல்லாம் இயக்கி இயங்க வைக்கும் அருள் ஆற்றல் எங்கிருந்து வருகிறது. இயக்குபவர் யார் ? என்ற உண்மையை அருள் ஆற்றலினால் கண்டு வெளிப்படுத்துகிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்னமுடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி மால்அண்டம் அரன்அண்டம்
உற்ற கோடா கோடியே

திருகலறு பலகோடி ஈசன்அண்டம்
சதாசிவ அண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர்தம்
சீரண்டம் என்புகலுவேன்

உறுவுறும் இவ் அண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உறுசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்

ஒருபெருங் கருணைஅரசே
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வமே எலாம்
வல்ல நடராஜபதியே.!

எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய  தனிப்பெருங்கருணை வாய்ந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்திரு நடனத்தை கண்டு களித்து கலந்து தெரியப்படுத்துகின்றார்.
இன்னும் விரிக்கில் பெருகும்.

ஆன்ம அறிவைக் கொண்டு சிந்திப்போம் தெரிந்து கொள்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

பொய் பொய்யே !

பொய் பொய்யே !

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்

பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!

மேலே கண்ட பாடலில் சவுக்கடி கொடுக்கிறார் வள்ளலார்.

*வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் யாவும் பொய்யான கற்பனைக் கதைகள் என்றவர் வள்ளலார்*.

வள்ளலார் பாடல் !

வேதம் ஆமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதம் ஆமத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை.

ஆன்மீக ஆதிக்கவாதிகள் ஆன்மீகம் என்ற போர்வையில் மனித குலத்தின் அறியாமையைப் பயன்படுத்தி நம்ப வைத்து மக்களை படுகுழியில் தள்ளியது தான் வேதம் ஆகம்ம் புராணம் இதிகாசம் போன்ற கற்பனைக் கதைகளாகும்.

எனவேதான் சூதாக சொல்லி உள்ளது உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை.அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று சாடுகின்றார்.

*மேலும் கலையை உரைக்க வந்த கற்பனைக் கதைகள். கற்பனை என்பது உண்மை ஆகாது என்கிறார் வள்ளலார்*.

வள்ளலார் பாடல் !

வேதநெறி ஆகமத்தின் நெறி
புராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன் வீண்போது
கழிப்பதற்கோர்
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடு நீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

* உலகில் உள்ள எல்லாக் கதைகளுமே பொய்யானது .அவற்றில் உள்ள சூது அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல்  காட்டிய இயற்கை உண்மைகடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ் பின்னர்*

மேலும் ஆயிரக்கணக்கான பாடல்களிலும்.உரைநடைப்பகுதிகளிலும் தெளிவாக விளக்கி பதிவு செய்துள்ளார் .

அதில் ஒரு பாடலில் கடுமையாக சாடுகின்றார். !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந்தணைந்து அருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

கலை உரைத்த கற்பனைக் கதைகளை எல்லாம் ஆழமாக்க் குழிதோண்டி உள்ளே போட்டு மீண்டும் வெளியே வராமல் மூடி விடுங்கள் என்கிறார் வள்ளலார்.

*வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை கடவுள் மறுப்புக் கொள்கை அல்ல*

கடவுள் உண்மையில் உண்டு. ஆனால் சமய மதங்கள் சொல்லும் பல கடவுள்கள் அல்ல. 

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்னும் உண்மையை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்.

அந்த உண்மைக் கடவுள் எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதை தொடர்பு கொள்வதே மனித அறிவு சார்ந்த செயலாகும் என்கிறார். வள்ளலார்.

நமது சக ஆன்மாக்களும் ஜீவன்களும்.பசி.பிணி.தாகம்.இச்சை.
எளிமை.பயம் துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடு என்றவர் வள்ளலார்.

எனவேதான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று ஆணத்தரமாக அழுத்தமாக உண்மையை வெளிப்படுத்துகிறார்.

மனிதகுலம் அறியாமையில் இருந்தும் மூடநம்பிக்கையில் இருந்தும் வெளியேறி.உண்மை அறிந்து மகிழ்ச்சி யுடன் வாழவைக்க வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

திங்கள், 20 ஜனவரி, 2020

பஞ்ச பூத உலகம் !

*இந்த பஞ்ச பூத உலகம்* !

*பஞ்ச பூத உடம்பை பாதுகாக்க தெரிந்தவர் எவரோ அவரை இறைவன் தொடர்பு கொள்வார்*.

பஞ்ச பூதங்கள் அளவில்லா ஆற்றல் உடையது வேண்டியதை கொடுக்கவும் செய்யவும்.
செயல்படவும் வல்லமை உடையது. தங்களைப் படைத்த உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையை மீறாமல் செயல்படும் உண்மைத் தன்மை உடையவைகளாகும்.

*ஐந்து பூதங்களும் ஒற்றுமை உடையதாகும்.ஐந்து பூதங்களும் ஒன்று சேர்ந்தால் தான் உடம்பும் உயிரும் ஆனமாவும் இயங்க முடியும்*.

நாம் வாழ்வதற்கும் வாழ்க்கைக்கும் தேவையான பொருள்களை மட்டுமே கேட்கிறோம்.எண்ணம் சொல் செயல்களுக்கு தகுந்தாற்போல் பஞ்ச பூதங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அதனால் என்னலாபம் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை உடல் உயிர் உணர்ச்சிக்கு மட்டுமே பயன் தருகின்றது.அதே பொருள் இறுதியில் உடல் உயிர் உணர்ச்சியை பலி வாங்கிக் கொள்கிறது.

எல்லாவற்றுக்கும் காரண காரியமாக இருப்பது எண்ணம் சொல் செயல்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். *இந்த மூன்றுக்கும் தலைமையேற்று நடத்துவதுதான் மனம் என்னும் கருவியாகும்*.

பஞ்ச பூத எல்லையைக் கடந்து செல்லும் ஆற்றல் ஆன்மாவிற்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்வதில்லை.

பஞ்ச பூத உடம்பில் வாழும் நாம் ஆன்மா என்னும் உள் ஒளியைத் தொடர்பு கொள்வதில்லை. *ஆன்மாவைத் தொடர்பு கொண்டு வாழ முடியாமைக்குக் காரணம் நம் முன்னோர்கள்.நம் முன்னோர்கள் தவறான வழியைப் பின்பற்றுவதற்கு காரணம். நமக்கு வழிகாட்டிய சாதி.சமய மதக்கொள்கைகள் வழிப்பாட்டு முறைகளாகும்*.

பஞ்ச பூத உருவங்களை கடவுளாக படைத்தவர்களால் நம் எண்ணம் சொல் செயல்களைத்  தவறான வழியைப் பின்பற்ற வைத்துள்ளன.

வள்ளலார் வந்துதான் மனித குலத்தின் நன்மைக்காக எல்லாவற்றையும் மாற்றி அமைக்கிறார்.

பஞ்ச பூதங்களைப் படைத்தவர் யார் ? என்பதை அறிய முயற்சிக்கிறார்.
அதற்காக தன்னுடைய எண்ணம் சொல் செயல்களை மாற்றுகிறார் *நீ எதை நினைந்து உணர்கின்றாயோ அதுதான் உம்மை அழைத்துச் செல்லும்*

வள்ளலார் பாடல் !

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் -

உண்ணுகின்றேன்
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.!

இந்த உலகம் நமக்கு உபகாரம் செய்யுமே தவிர கெடுதல் செய்யாது.
எல்லாவற்றுக்கும் காரணம் நம் எண்ணமே காரணமாக இருக்கிறது.

*எனவே நமது எண்ணம் சொல் செயல் உணர்ச்சியை நம்மை இயக்கும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்*.

அதற்கு என்ன செய்ய வேண்டும் ?

பஞ்ச பூத உலகில் உள்ள பொருள்கள் மீது பற்று வைத்துள்ள மனத்தை ஆன்மாவில் தொடர்பு கொள்ளச் சொல்லுகின்றார் அவரும் சொல்லிய வண்ணம் அதையேத்தான் அவரும் செய்கின்றார். 

புற வழிப்பாட்டில் செல்லும் மனத்தை அகவழிபாட்டில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்றார்.

*அக வழிபாடு என்பது ஆன்மா என்னும் உள் ஒளியைத் தொடர்பு கொள்வதாகும்*.

அகத்தில் தொடர்பு கொள்ளும் போது பஞ்ச பூத உடம்பானது தன்னையைத் தானே பாதுகாத்துக் கொள்ளும்.

*ஆன்மாவிற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் மட்டுமே தொடர்பு உண்டு*.

ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் போது ஆன்மாவில் இருந்து உண்மை அறிவு வெளிப்படும்.உண்மை அறிவுக்கு ஆன்ம அறிவு என்றும்.பகுத்தறிவு என்றும் மெய் அறிவு என்றும் பெயர்

*ஆன்ம அறிவுதான் அருளைத் தேடும்.அருள் பெற்ற பிறகு அருள் அறிவு உண்மை அறிவாக மாற்றம் அடையும்*.

உண்மை அறிவுதான் உண்மையான அன்பு தயவு கருணைக்கு வழிகாட்டும்

அருள் அறிவு இயற்கை உண்மை அறிவைத் தொடர்பு கொள்ளும். *இயற்கை உண்மைதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*.

இயற்கை உண்மை வடிவினரை கண்டு பிடித்தவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

1. அணையவாரீர் என்னை
அணையவா ரீர்
அணிவளர் சிற் றம்பலத்தீர்
அணையவா ரீர்.

கண்ணிகள்!

2. இயற்கைஉண்மை வடிவினரே அணையவாரீர்
எல்லாம்செய் வல்லவரே அணையவாரீர்
இயற்கை விளக்கத்தவரே
அணையவா ரீர்

எல்லார்க்கும் நல்லவரே அணையவாரீர்
இயற்கை இன்பமானவரே
அணையவாரீர்
இறைமை யெலாம் உடையவரே அணையவாரீர்
இயற்கை நிறைவானவரே
அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவாரீர். அணையவாரீர்

3. உலகமெல்லாம் உடையவரே அணையவாரீர்
உண்மை உரைக்கின்றவரே
அணையவாரீர்

கலகம் அறுத்து  ஆண்டவரே அணையவாரீர்
கண்ணனைய காதலரே அணையவாரீர்
அலகறியாப் பெருமையரே
அணையவாரீர்

அற்புதப்பொற் சோதியரே
அணையவாரீர்

இலகு சபாபதியவரே அணையவாரீர்
என்னுடைய நாயகரே அணையவாரீர். அணையவாரீர்!

மேலே கண்ட பாடலில் தெளிவான உண்மையை பதிவு செய்துள்ளார்.

*இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயக்கை இன்பம் தருபவர் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறுகின்ற போது பஞ்ச பூதங்களால் பின்னப்பட்ட உடம்பிற்கும் உயிருக்கும் எந்த விதமான அழிவும் ஆபத்தும் உண்டாவது இல்லை.

*பஞ்ச பூத உடம்பு அழியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பஞ்ச பூதங்கள் விரும்பும்*.பஞ்ச பூதங்கள் ஆன்மாவிற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் என்றும் துணையாக இருக்கும்.

இந்த உண்மை அறியாமல் இருந்த்து இந்த உலகம். *வள்ளலார் வந்து திரை மறைப்பை எல்லாம் நீக்கி.ரகசியம் என்னும் போலியான பூட்டை உடைத்து எரிந்து விட்டார்*.ஆன்மாவின் உண்மையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்.

உலகில் உள்ளது அனைத்தும் பொய்யானது.அநித்தியமானது.எதையும் நம்ப வேண்டாம் பின்பற்ற வேண்டாம் என்னும் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம்
இன்பமுறலாமே.!

இந்த ஒருபாடலே போதுமானது ..

ஆன்மநேய அன்புடைய ஆன்மீகவாதிகளும். சன்மார்க்க சொந்தங்களும் வள்ளலார் கொளகையைப் பின்பற்றி
 உடம்பு உயிர் ஆன்மாவை அழிக்காகல்.இயற்கை உண்மை கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறிய உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

ஒளி பிறந்தது !

ஒளி பிறந்தது !

 மனித குலத்தை நல்வழிப்படுத்த அருட்பேரொளி மனித உருவம் தாங்கி இவ்வுலகிற்கு வந்த்து.

 அந்த மனித உருவத்திற்கு திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் சூட்டப்பெற்றது.

வள்ளலார் பிறந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள சிறிய கிராமம் மருதூர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரத்திற்கும் வடலூருக்கும் இடையே உள்ளது.

பெற்றோர்.

தந்தை பெயர் இராமைய்யா.தாயார் பெயர் சின்னம்மை.இராமைய்யா கிராக கணக்கராக பணியாற்றியவர்.கிராம பிள்ளைகளைக் கூட்டி பாடம் சொல்லிக்கொடுக்கும் பணியையும் செய்து வந்தார்.

மனைவி சின்னம்மையார் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்னகாவணத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இராமைய்யாவிற்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர்.ஐந்து மனைவியரும் குழந்தைகள் இன்றி ஒரவர்பின் ஒருவராக்க் காலமானபின் இவரை ஆறாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

வியாழன், 16 ஜனவரி, 2020

மானிடப் பிறப்பு !

*மானிடப்பிறப்பு*!

*மனிதப்பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்ட அருள் கொடையாகும்*.

இந்த பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தை காலம் உள்ள போதே அடைய வேண்டும் என்பதே மனிதபிறப்பின் லட்சண லட்சியமாகும்

மனித பிறப்பில் ஒழுக்கம் நிறைந்து இல்லற இன்பத்தை அனுபவித்து அதன்பின் இறை தொடர்பு வைத்து அருள் பெறுவதே மனித குலத்திற்கு முக்கிய லட்சியமாக விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும்.

*அறம்.பொருள்.இன்பம் வீடு இந்நான்கையும் நான்கு காலங்களிலும் அனுபவித்து பின் பற்று அற்று வாழ்வதே இறை அருளைப் பெற ஏதுவாக இருக்கும்* என்பதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

சுத்த சன்மார்க்கத்தில் துறவு சந்நியாசம் போன்றவைகளுக்கு இடம் இல்லை.

இந்த வாழ்க்கை முறையை உலகத்திற்கு வெளிப்படையாக சொல்ல வந்தவர்தான் வள்ளலார்.

உலகத்தில் உள்ள மனித தேகம் கிடைத்த மக்கள் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.  துன்பம் முதலியவற்றால் வருந்துகின்றவர்களின் வருத்தத்தை போக்குகின்றவர்கள் கடவுளின் அருளைப் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்னும் உண்மையை வெளிப்படையாக சொன்னவர்தான். வள்ளலார்.

இல்லறத்தில் உள்ளவர்கள் தான் மக்களுக்கு தொண்டு செய்ய முடியும்.

தொண்டு செய்யாதவர் கையில் சோறு சாப்பிட வேண்டாம் என்கிறார் வள்ளலார்.

*தொண்டுறார் கை சோற்றினை விரும்பேன்  என்கிறார் வள்ளலார்*.

தியானம்.தவம்.யோகம்.புற வழிபாட்டால் ஆன்ம லாபம் பூரணமாக கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்தவர் வள்ளலார்.

இறைவனால் படைத்த உயிர்கள் துன்ப்படுவதை கண்டபோதும்.அறிந்தபோதும்.கேட்டபோதும்.துன்பப்படுவார்கள் எனபதை முன் கூட்டியே அறிந்த போதும் அந்த துன்பத்தை போக்கும் ஜீவ உரிமையும் ஆன்மநேய உரிமையும் அறிந்து உபகாரம் செய்பவர்களே  ஆன்ம லாபமான அருளைப் பெறும் தகுதி உடையவர்களாவார்.
என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்தவர் வள்ளலார்.

*ஜீவகாருண்யம் ஒழுக்கத்தினால் மட்டுமே அருளைப் பெற முடியும்* என்பதை தெளிவு படுத்தி. ஒரு சிறப்பு வாய்ந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற தலைப்பில் தலைசிறந்த  நூலை எழுதி உலக மக்களுக்கு  தந்தவர் வள்ளலார்.

*இதனால் சமய மதவாதிகளின். வெறுப்பிற்கு ஆளானார் வள்ளலார்*.

*தான் சொன்ன சுத்த சன்மார்க்க கொள்கையை தானே கடைபிடித்து அதில் வெற்றி பெற்று. இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று.முத்தேக சித்தி பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான்  மாபெரும் அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்*.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடிக்காமல்.சமய மதக் கொள்கைகளையும் சன்மார்க்கத்தையும் இணைத்து பேசியும் குழப்பியும்.

அற்பத்தனமான பட்டம் பதவி புகழுக்காக.தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர்கள் எக்காலத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ளவோ அருளைப் பெறவோ முடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையாகும்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன்

பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்

சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்

பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.!

*பிறப்பு இறப்பு எனும் சட்டத்தை கிழித்தவர் வள்ளலார்*.இறந்தால் பிறப்பு உண்டு.இறக்காமலும் மீண்டும் பிறப்பு இல்லாமலும் வாழும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார்.வாழ்ந்து கொண்டும் இருப்பவர் வள்ளலார்.

மேலும் வள்ளலார் பாடல் !

இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இலை இன்றினி நான்

பிறக்கவும் ஆசை இலை உலகம் எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே

சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை
ஒன்றில்லை

துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை
ஒன்றிலையே.!

*மேலே கண்ட பாடல்கள் நம்மை சிந்திக்க வைப்பவை*.

வள்ளலாருக்கு பின் வள்ளலார் போல்  இதுவரையில் மரணத்தை வெல்ல முடியாததற்கு காரணம்.வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை எவரும் முழுமையாக பின்பற்ற தவறி விட்டார்கள் என்பதே உண்மை நிலவரம் இதுவேயாம்.

இனிமேலாவது சுத்த சன்மார்க்க கொள்கையை முழுமையாக கடைபிடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.

வள்ளலார் பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும் ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

என்றும்.

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே

வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்

செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்

ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடி நான்
உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் கொள்கை உண்மையை மட்டுமே போதிப்பதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

வள்ளலார் காலத்திலும் கூச்சல் குழப்பம் உண்டாகி இருக்கிறது !

*வள்ளலார் காலத்தில் கூச்சல் குழப்பம் உண்டாகி இருக்கிறது.*

வழிப்பாட்டு விஷயத்தில் மக்களிடையே
கூச்சல் குழப்பம் ஏன் உண்டாயிற்று என்பதை சிந்திப்போம்.

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகள் கருத்துக்களை ஏற்க மறுத்தும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் வழிப்பாட்டு விஷயத்தில்  கூச்சல் குழப்பம் உண்டாகி இருக்கிறது.

அதற்கு வள்ளலார் சொல்லும் பதில் பேருபதேசத்தில் ஒருபகுதி.கீழே.

இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் குழப்பம் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.

ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும்.

 *கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை*.

*பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை*.

 கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க.

 மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
என்று பதிவு செய்கிறார்.

மனித பிறப்பில் பெறவேண்டியது ஆன்மலாபம் மட்டுமே.

அதை விடுத்து வீண் விவாதங்களிலும்.உலக இச்சைகளிலும்.சமய மத வழிப்பாட்டு முறைகளிலும். காலத்தை வீணாக்குவதால் இறுதியில் மரணம் என்பது நிச்சயம்.என்று எச்சரிக்கை விடுகின்றார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

சுகமறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மை யறிந்திலிரே

இகம்அறியீர் பரம்அறியீர் என்னே உங்கருத்தீர்
தென்புரிவீர் மரணம் வரில் எங்குறுவீர் அந்தோ

அகமறிந்தீர் அனகமறிந் தழியாத ஞான
அமுதவடிவம் பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே

முகமறியார் போலிருந்தீர் என்னை அறியீரோ
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.!

என்று.இகம் பரம் தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டுள்ளீர்கள்.
என்னை அறியீரே.. என்னைப்பாருங்கள்.
என்னைப்பார்த்து  உங்கள் வாழ்க்கையில் மாற்றிக் கொள்ளுங்கள் என்று அன்பாக ஆன்மநேயத்தோடு அழைக்கிறார்.

மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து வாருங்கள்.காலத்தை விரயம் செய்தால் காலன் வந்து கவ்விக் கொள்வான்.

காலன் என்னும் எமனை எதிர்த்து போராடி வெற்றி பெறுவதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

வள்ளலார் பாடல் !

விரைந்து விரைந்து அடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மை உரைக் கின்றேன் நீர் வேறு நினையாதீர்

திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய

வரைந்து வரைந்து எல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம் இது வரம்பெறலாம் நீவீர்

கரைந்து கரைந்து உளம்உருகிக் கண்களின் நீர் பெருகிக்
கருணை நடக் கடவுளை உட் கருதுமினோ களித்தே.!

இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டு கண்களில் நீர்பெருக அழுதால் எமன் நெருங்க மாட்டான்.

குழந்தை அழுதால் தாய் தானே வந்து குழந்தைக்கு பால் கொடுப்பாள்.

அதேபோல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைந்து நினைந்து.உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து. இடைவிடாது அழுது தொடர்பு கொண்டால்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நெருங்கி வந்து அருள் வழங்கி ஆட்கொள்வார்.

ஆதலால் இதுவரை இருந்த்து போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளுங்கள் என்கிறார்.

நாமும் வள்ளலார் வழியில் நின்று அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து மற்ற உலக ஆன்மநேய சகோதர சகோதரிகளுக்கு காட்டுவோம்.

வழிப்பாட்டு விஷயத்தில் சன்மார்க்க அன்பர்கள் ஆச்சாரா சங்கற்ப விகற்பங்கள் அற்ற காரியங்களில் விழிப்புடன் வழிபட வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

உலகின் கரையாத பொருள் !

*உலகின் கரையாத பொருள்* !

*உலகின் கரையாத பொருள் அருள் **!

உலகத்தில் என்றும் உருமாறாத.
எக்காலத்தும் கரைந்துவிடாது நிலைப்பெற்று இருப்பது மவுனா அமுதம் என்னும் அருள் அமுதம் மட்டுமே..

அந்த அருளை வழங்குவதற்கு... தகுதி வாய்ந்த இயற்கை உண்மையான ஓரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே !

அவ்வகையான மவுனா அருள் அமுதைப் பெற்று மரணத்தை வென்று  வாழ்வாங்கு வாழும் வழியைக் காட்டியவர்.வாழ்ந்து காட்டியவர்.வாழ்ந்துகொண்டும் இருப்பவர் தான் *திருஅருட்பிரகாச வள்ளலார்*.

 நம் தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டம்.சிதம்பரம் வட்டம். மருதூரில்  பிறந்து.சென்னையில்  வாழ்ந்து.மீண்டும் சிதம்பரம் வந்து .கருங்குழியில் தங்கி தண்ணீரில் விளக்கு எரித்து.திருஅருட்பா என்னும் ஐந்து திருமுறையான பக்தி பாடல்கள் எழுதினார்.

வடலூர் வந்து வடலூர் மக்களிடம் 80 காணி இடம் பெற்று.முதன் முதலில் ஏழைகளின் பசிப்பிணியை போக்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்து.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு.என்றும் அழியாத மவுனா அமுத்த்தை பெற்று.ஊன் உடம்பை ஒளி ஒலி உடம்பாக மாற்றிக்கொண்டு.

வடலூரில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்கள்  அறிந்துகொள்ளும் பொருட்டு *சத்திய ஞானசபையை* தோற்றுவித்து  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி மேட்டுகுப்பம் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  சொல்ல ஆறாம் திருமுறை என்ற  *உலகப் பொதுமறையாகிய*
*திருஅருட்பா*  என்னும் அருள்நூலை எழுதி உலக மக்களுக்கு  தந்துவிட்டு.முத்தேக சித்திப்பெற்று.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்..

வள்ளலார் பாடல் !

கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்

விரைந்து வந்தென் துன்பமெலாம் தவிர்த்த அருளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே

திரைந்த உடல் விரைந்துடனே பொன் உடம்பே ஆகித்
திகழ்ந்து அழியாது  ஓங்க அருள் சித்தே மெய்ச்சத்தே

வரைந்து என்னை மணம்புரிந்து பொது நடஞ்செய் அரசே
மகிழ்வொடு நான் புனைந்திடுஞ் சொன் மாலைஅணிந் தருளே.;!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்...

வள்ளலார் சொல்லும் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது இன்னும் நிறைய சன்மார்க்க அன்பர்களுக்கும்.மற்ற ஆன்மீக சகோதரர் சகோதரிகளுக்கும் புரியாமல் இருக்கின்றது...

மனித வாழ்க்கையில் மனித உடம்பிற்கு மூன்று மாற்றங்கள் உண்டு.

அவை
இம்மை இன்பவாழ்வு !
மறுமை இன்ப வாழ்வு !
பேரின்ப வாழ்வு !
என்பவைகளாகும்.

அதாவது ..சுத்த தேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்பனவாகும்.

சுத்த தேகிகள்! இம்மை இன்ப வாழ்வு பெற்றவர்கள்

இவ்வுலகில் மக்களுக்காக நல்ல பல சாதனைகள். நன்மைகள் செய்து மரணம் அடைத்துவிட்டாலும்.
அவர்கள் புகழ் நிலைப்பெற்று மக்களால் பேசப்பட்டு.
போற்றப்பட்டு வழிப்பட்டு வருபவர்களாகும்.

அவர்கள் பெருமை யானது !

மனிதப் பிறப்பில் தேகத்தாலும்.கரணங்களாலும்.புவனத்திலும்.போகங்களிலும்.குறைவின்றி நல்ல அறிவுடையவர்களாய்.
பசி.பிணி.முதலிய தடைகள் இல்லாமல்.உறவினர்.
நண்பர்கள்.அயலோர்.
முதலிய அனைவரும் தழுவ.சந்ததி விளங்கத் தக்க சற்குணமுள்ள மனைவியோடு.விடயங்களைச் சிலநாள் அனுபவித்து  நோய் நொடி இல்லாமல் மரணம் அடைந்தவர்கள் இம்மை இன்ப லாபம் பெற்ற சுத்த தேகிகள் என்பதாகும்..

அவர்கள் பெருமை !

அன்பு.தயவு.ஒழுக்கம்.
அடக்கம்.பொறுமை.
வாய்மை.தூய்மை முதலிய சுப குணங்களைப் பெற்று விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்பட வாழ்தலென்று அறிய வேண்டும்..

இவர்கள் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுத்து உயர்ந்த மரணம் இல்லாப் பெருவாழ்வு அடைவதறகுண்டான மறு பிறப்பிற்கு மீண்டும்  வருவார்கள்.

அவர்களையும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள் என நினைத்து போற்றுகிறார்கள் அது அறியாமையாகும்.

அவர்கள் இறைவன் ஏகதேச அருளைப்பெற்று.எல்லோராலும் மதிக்கத்தக்க புகழ் உடம்பு பெற்ற சுத்த தேகம் பெற்றவர்கள் இம்மை இன்ப லாபம் பெற்றவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

*மறுமை இன்ப லாபம் ! பிரணவ தேகம் பெற்றவர்கள் !*
மேலும்  அப்பர்.சுந்தரர்.
மாணிக்கவாசகர்.திருமூலர். மற்றும் சித்தர்கள் போன்ற நிறைய  அருளாளர்கள் உள்ளார்கள்.

ஐம்பூதங்களான மண்.நீர்.அக்கினி.
காற்று.ஆகாயம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களையும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றவர்களாக்க் கருதுகிறார்கள்..

அவர்களும் பல ஆயிரம் ஆண்டுகாலம் ஐம் பூதங்களில் மறைந்து கலந்து வாழ்ந்து மீண்டும் உயர்ந்த மனிதப் பிறப்பு எடுத்து பூரண அருளைப்பெற்று மரணத்தை வென்று இறை அருளுடன் கலக்கும் வாய்ப்பு உண்டு..

அவர்கள் பெருமை என்னவென்றால் !

*மறுமை இன்ப வாழ்வு ! பிரணவ தேகிகள் !*

உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் இறைவனைத் தொடர்பு கொண்டு.பெரிய விஷயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற அருளைப் பெற்று பல ஆண்டுகள் அனுபவிக்கின்ற இம்மை இன்ப லாபத்தையும்.அதற்கு மேலான பல்லாயிரம்  ஆண்டுகள் வாழ்கின்ற *சூட்சும* தேகம் என்னும் பிரணவ தேகத்தை பெற்றவர்கள்.

பிரணவ தேகத்தைப் பெற்று வாழ்பவர்களை மறுமை இன்ப லாபத்தை  பெற்று வாழ்பவர்கள் எனப்படுவார்கள்.

அவர்களை மறுமை இன்ப வாழ்வு பெற்றவர்கள் என்றும்.பிரணவ தேகிகள் என்றும்  போற்றப்படுவார்கள்.

அவர்கள் பெருமை யாதெனில் !

அன்பு.தயவு.முதலிய சுப குணங்களைப் பெற்று சுத்த விடய இன்பங்களை.*எண்ணியபடி* தடைபடாமல் முயன்று பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்..அவர்களும் மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து ஞானதேகம் பெற்று வாழும் வாய்ப்புள்ளது.

*பேரின்ப வாழ்வு ! ஞான தேகம் !*

பேரின்ப வாழ்வு என்பது !. என்றும் அழியாது.பிறப்பு.இறப்பு அற்ற ஞான தேகம் அதாவது அருள் ஒளி ஒலி தேகம் பெறுதல் என்பதாகும்.

*பேரின்ப லாபத்தை பெற்றவர்களின் தன்மையைப் பற்றி  வள்ளலார் விளக்கம் தருவதை தயவு செய்து பொறுமை யாக படியுங்கள்*

எல்லாத் தேகங்களையும்.
எல்லாக் கரணங்களையும். எல்லாப் புவனங்களையும்.எல்லாப் போகங்களையும்.

தனது *பூரண* இயற்கை விளக்கமாகிய *அருட்சத்தியின்* சந்நிதி விசேடத்தால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்கின்ற.

இயற்கை உண்மை வடிவினராகிய.கடவுளின் *பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று*.

எக்காலத்தும் எவ்விதத்தும்.எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப்படுகின்ற.ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்ப வாழ்வு ! பேரின்ப லாபம் !  என்று அறிய வேண்டும்...

*இந்த வாழ்வுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*

*இந்த வாழ்வுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழ்தல் என்பதாகும்.*

இந்த வாழ்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பிறப்பு இறப்பு என்பதே இல்லை என்பதாகும்..

*அவற்றிற்கு சுத்த பிரணவ ஞானதேகம் என்றும். முத்தேக சித்தி என்றும்.பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும் பேரின்ப லாபம் என்றும் பெயராகும்*..

பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டில் ....

நம் உடம்பில் உள்ள தோல்.நரம்பு.என்பு.
தசை.இரத்தம்.
சுக்கிலம் முதலிய அசுத்த பூத காரியங்களும்.அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய..

இத்தேகத்தை மாற்றி மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய....சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்.பொன் வடிவாகத் தோற்றுதல் மாத்திரமே நன்றி *ஆகாயம்*போல் பரிசிக்கப்படாத சுத்த பூத காரண பிரணவ தேகத்தையும்..

தோன்றப் படுதலுமின்றி ஆகாயம் போல் விளங்கப் படுகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்...

அவர்களை எந்த சத்தியாலும் அழிக்க முடியாது.

.*பஞ்ச பூதங்களாலும் .
கூற்றுவன் எனும் எமனாலும். கொலைக் கருவியாலும்.பிணியாலோ.அணு ஆயுத கதிர் வீச்சாலோ.வேறு எந்த காரிய காரணங்களாலும் தீய சத்திகளாலும்.எக்காலத்திலும் அழிக்க முடியாத தேகத்திற்குப் பெயர்தான் அருள் ஒளி ஒலி தேகம் என்பதாகும்..அதுவே அருட்பெருஞ்ஜோதி தேகம் என்பதாகும்...

வள்ளலார் பாடல் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் என்ன ! என்பது விளங்கி இருக்கும் எனக் கருதுகிறேன்..

 ஐந்து வகையான அமுதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை யால்  ஆன்மாவின் வழியாக  கிடைப்பவையாகும்..!

(ஐந்துவித அமுதம்)

1.வது அமுதம் நாக்கு நுனியில் பக்குவ ஞானத்தால் சிருஷ்டி வல்லப்ப் பிரஞ்ஞையால் கிடைப்பதாகும்.

2 வது புவனா அமுதம்.நாக்கு மத்தியில் பக்குவ கிரியையால் ஸ்திதி பிரஞ்ஞை உணர்ச்சி யால் உண்டாவதாகும்.

3 வது மண்டலா அமுதம் நாக்கின் அடியில் பக்குவ இச்சை சம்மார உணர்ச்சியால் உண்டாவதாகும்.

4 வது ரகசியா அமுதம் .உள் நாக்கின் அடியில் பக்குவ திரோபவம் உணர்ச்சியால் உண்டாவாதாகும்.

5 வது மெளனா அமுதம் உண்ணாக்கு மேல். பக்குவ அனுக்கிரகம்.அனுக்கிரகம் உணர்ச்சியால் சுபாவத்தினது அனுபவ துரியநிலையால் உண்டாவாதாகும்.

ஐந்தாவது அமுதமாகிய  மவுனா அமுதத்தை உண்டவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுக்கிரகத்தால் அனுபவ துரியம் துரியாதீதம்  நிலைக்கும் மேல் இறுதியாக கொடுக்கும்  அருள் அமுதமாகும்...

இந்த அமுதம் எக்காலத்தும் கரையாத கரைந்து விடாத. எந்த சக்தியாலும் கரைக்க முடியாது எக்காலத்தும்  நிலைத்து நிலை கொள்ளும் அமுதமாகும்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் கிடைக்கப் பெற்ற மவுனா அமுதத்தை உண்டு மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் ஒருவர் மட்டுமே...

என்பதை உணர்ந்து புரிந்து அறிந்து தெரிந்து நாமும் வள்ளலார் போல் வாழ்ந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஓதாமல் உணர்வதே ஞானம் !

ஓதாமல் உணர்வதே ஞானம் !

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி!

வள்ளலார் அகவலிலே அழுத்தமாக ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

அடுத்து

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பின் உள் ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி!

என்றும் பதிவு செய்துள்ளார்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வாறு?

உலகில்  தோன்றிய அருளாளர்கள்.ஞானிகள்.
சித்தர்கள்.யோகிகள்.போதகர்கள் போன்ற பெரியோர்கள்.கண்டது.கேட்டது.கற்றது .களித்தது.உண்டது .உட்கொண்டது அனைத்தும் அவர்கள் எழுதிவைத்த நூல்கள் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

அவற்றில் உள்ள கருத்துக்கள் செய்திகள் கொள்கைகள் யாவும் மனித உயிர்களை பிரித்து வைத்த சாதி.சமய.மதக் கொள்கைகளாகவே உள்ளன. இது இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளாகவே மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அவர்கள் காட்டிய வழிப்பாட்டு முறைகள்.கடவுள் கொள்கைகள்.வாழ்க்கை முறைகள்.ஒழுக்க நெறிகள்.உலகில் தோற்றுவித்த தத்துவக் கடவுள்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவைகளே.

அவர்கள் உலகிற்கு  சொல்லிய கொள்கைகள்.வழிமுறைகள் யாவும் படிக்காமல்.கேட்காமல்.கற்காமல் மக்கள் தெரிந்து கொண்டது அல்ல.

இறை அருளால் தானே கற்றதோ இறைவனே சொல்லியதோ எந்த நூல்களும் உலகில் இல்லை.

ஏகதேச அருளால் எழுதி வைத்தவர்கள் ஒருசில அருளாளர்கள்.

பூரணமாக முழு அருளைப் பெற்று தன்னைத்தானே  அறிந்தவர்கள் வள்ளலாரைத் தவிர இவ்வுலகில் ஒருவரும் இல்லை.எந்த அருளாளரும் இல்லை.

காரணம் உண்மையான இறைவன் யார்? என்பதே இவ்வுலகில் எந்த அருளாளரும் கண்டதில்லை.
( வள்ளலாரைத்தவிர) தொடர்பு கொண்டது இல்லை.

மனிதர்கள் பின்பற்றி வருகின்ற அனைத்தும் உண்மைக்கு புறம்பானவைகளே. பொய்யை உண்மை என்று நம்பி பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.

எனவேதான் மனிதர்களுக்கு அச்சம்.துன்பம்.ஐயம். பயம்.மரணம் வந்து கொண்டே உள்ளது.

பிறப்பு இறப்பை தவிர்த்து கொள்ள முடியாமல் ஆன்மாக்கள் தவித்துக் கொண்டுள்ளன.

 ஜீவதேகம் எடுத்த ஒவ்வொரு ஆன்மாக்களும்.தன்னை தானே
உணர்ந்து தலைவனை அறிந்து நேரடி தொடர்புகொண்டு அருளைப்பெற்று  கற்றுக் கொள்வதே சாகாக்கல்வியாகும்.

இதுவே ஓதாது உணர்தல் என்பதாகும்.
இதுவே ஞானம் அடையும் வழியாகும்.

  • இதுவே மரணம் அடையா  பெருவாழ்வு என்பதாகும்.


செவ்வாய், 7 ஜனவரி, 2020

மனிதன் வாழ்க்கை !

மனிதன் வாழ்க்கை !

புவனத்தின் பற்று ( உலகப்பற்று) உள்ளவன் அருள் பெற முடியாது.

இந்த உலகம் மாயையை சார்ந்துள்ளது.பஞ்ச பூத புவனம் மாயையின் பிடியில் உள்ளன.

ஆன்மாவை பஞ்ச பூதங்கள் கவ்விக் கொண்டுள்ளது.ஆன்மாவை உலக போகத்தில் இழுப்பது மனம்.

ஆன்மா உலக போகத்தில் இருந்து விடுபட மனத்தை தன்வசமாக மாற்ற முயற்சிக்கிறது.

மனம் மாயையைச் சார்ந்த்து.
ஆன்மா அருட்பெருஞ்ஜோதியைச் சார்ந்த்து.

இதில் ஆன்மாவிற்கும் மனதிற்கும் போட்டி நடந்து கொண்டே உள்ளது.

ஆன்மாவின் வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனம் புற இன்பத்தில் வாழ்வதற்கு அலைந்து கொண்டு உள்ளது.

ஆன்மாவானது மனத்தை புற இன்பத்தில் சென்று அழிவதை நிறுத்த பல துன்பங்களை சோதனைகளைக் கொடுத்து தன் பக்கம் திரும்ப வழிவகை செய்து கொண்டுள்ளது.

மனம் பொருள் இன்பத்தை தேடுகிறது.
ஆன்மா அருள் இன்பத்தை தேடுகிறது.

ஆன்மா வென்றால் மரணம் நீங்கும்.
மனம் வென்றால் மரணம் நிச்சயம்.

ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன் வாழ்கிறது.

மனம் மாயையின் துணை கொண்டு வாழ்கிறது.

ஆன்மாவிற்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டம் முடிவு பெறாமல் இறுதியில் மனம் அளவில்லா துன்பங்களான பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை. பயம்.துன்பங்களை அனுபவித்து இறுதியில் மரணம் அடைந்து விடுகிறது.

இறுதியில் நட்டம் அடைவது.மீண்டும் பிறப்பு எடுப்பது ஆன்மாதான்.

இதுவே மனித பிறவியின் வாழ்க்கை முறையாக உள்ளது.

இந்த வாழ்க்கை முறையை வென்றவர் வள்ளலார்.
மனத்தை தன் வசமாக மாற்றியவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடப்பயலே நீதான்
மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்

இனமுற என் சொல்வழியே இருத்திஎனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை யானாலோ

தினை அளவும் உன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திருஅருளால் கணத்தே

நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே !

வள்ளலார் மனத்தை அடக்கி வென்றார். நம்மாலும் மனத்தை அடக்க முடியும் என்று வாழ்ந்து வழிகாட்டி உள்ளார்.

இந்த வாழ்க்கை முறையை மாற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்பதுதான் வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க கொள்கை வாழ்க்கை முறையாகும்.

திருஅருட்பா முழுவதும். புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்தி  ஆன்ம லாபம் பெறும் வாழ்க்கை முறையை போதிக்கிறது.

ஆன்மலாபம் என்பது அருள் பெறும் வாழ்க்கை முறையாகும்.

அருள் வழங்கும் தகுதியான ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே.

வள்ளலார் பாடல் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  என்தந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேற் சுத்த சிவசன்மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

என்னும் பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமையும் உண்மையும் எளிய தமிழில் தெளிவுப் படுத்தி உள்ளார்.படித்து உணர்ந்து தெளிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

அருளைப் பெறுவதே மனிதனின்  ஆன்மலாபமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

சாகாத்தலை.வேகாக்கால்.போகாப்புனல் !

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் !
ஒரு சிறு விளக்கம்.
ஆன்மாவுக்குத் முத்தேகசித்தி வாழ்வு வழங்கவே, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், மகா பிரபஞ்ச காரியத்தை ஆதி முதல் நடத்தி வருகின்றார்.
உண்மையில், அக்கடவுளே தன் இயல் உண்மை நிலையை ஒவ்வொரு ஆன்ம அணுவிலும் நிரம்ப வைத்துள்ளார். அதனால், ஒரு குறிப்பிட்ட ஆன்மாவுக்கு அக அருள் ஞான அனுபவம் உண்டாக அதற்கு உள்ளிருந்து உயிர்ச் சக்தியை.ஆன்ம அருள் சக்தியை வெளிப்படுத்தி செயல் படுத்தி உள்ளது 
அதுவே பக்குவம் உள்ள ஆன்மாவாகும்., அந்த பக்குவம் உள்ள ஆன்மாதான் திருஅருட்பிரகாசவள்ளல் பெருமானாகும்.
உலகம் எல்லாம்  விளங்கத் தேகாதி பிரபஞ்ச வடிவை  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்துள்ளார்.
 எல்லா உயிர்களும் விளங்க .உடம்புகளும் விளங்க வளர்த்து வருகின்றார். இதனால் ஒவ்வொரு பிறவியாகிய தேகச் சூழலிலும், புலன் உணர்வு, மன அறிவு, ஆன்ம ஞானம் முறையாக வளர்ந்து வருகிறது. ஆன்மாவில் அகத்தில் நித்திய நிறைவாகியுள்ள அருட்பெருஞ்ஜோதியில் நின்றே ஒவ்வொரு பிறவியிலும், உடல், உயிர், ஞானம் வெளிப்பட்டு வளர்வதும், உட் சுருங்கிக் கிடப்பதும், மேல், அடுத்து வரும் பிறவியிலும் தொடர்கதையாக இருக்கிறது.

வள்ளலார் பாடல் !

திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.!

இறுதியில் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்திற்கு
இவ் உண்மை விளங்க விளக்க வந்ததே, *சாகாத்தலை, வேகாக் கால், போகாப்புனல் என்பதாகும்*
1. சாகாத்தலை:
சாகாத்தலை என்பது ஞானம்.அருள் விளங்கும் இடம்..அதாவது ஆன்மா இருக்கும் இடம். இது பிறவி தோறும் உயிர் உடம்பு எடுத்து  தொடர்ந்து பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கின்றது.  அதன் விளைவு இறுதியில் மரணம் வந்து கொண்டே இருக்கின்றது.
சாகும் தலையாக உள்ள ஆன்மாவை சாகாத்தலையாக மாற்ற வேண்டும். அதாவது உயிர் உடம்பை அழிக்காமல் தன்வசமாக மாற்றி  அருள் ஒளியாக மாற்றுவதே சாகாத்தலை என்றும் அதை பயில்வதற்கு சாகாக்கல்வி என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்..
ஆன்மாவை மாயா பூத தத்துவங்கள் மறைத்துக் கொண்டுள்ளன.தத்துவங்களை கடந்து தத்துவா தீதமாக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும்.அதுவே சாகாத்தலையாகும் மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்வதே ஆன்ம லாபம் என்பதாகும்.இது ஆன்ம அனுபவ காட்சியில் அனுபவிப்பதாகும்.அனுபவத்தால் மட்டுமே அறியமுடியும்.
2. வேகாக் கால்
வேகாக்கால் என்பது அழியும் ஜீவனை அழியாத ஜீவனாக (உயிர்) மாற்றுவதே பிராணவாயுவாகிய உயிர்க்காற்றாகும்.அமுதக்காற்றாகும் 
நாம் சுவாசிக்கும் காற்று நான்கு வகை கலவையாக உள்ளது.விஷக்காற்று .உஷணக்காற்று.பூதகாற்று.அமுதக்காற்று என்பவையாகும்.
நம் உயிர்.உடம்பு பஞ்ச பூதங்களால்.ஆன்மா வாழ்வதற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட.பஞ்ச பூத உடம்பாகும்.இதற்குள் 96 தத்துவங்கள் அடங்கிய உறுப்புக்களால் பின்னப்பட்டதாகும்.
தத்துவங்களை வெல்லுவதற்கும்.தத்துவங்களை கடப்பதற்கும் வேகாத காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
 இவ்வுலகில் உடம்பை உயிரை. வளர்க்க வாழ்வதற்கு விஷக்காற்று.உஷ்ணக்காற்று.பூதக் காற்று.ஏகதேச அமுதகாற்றை சுவாசித்துக் கொண்டு உள்ளன.
  விஷக்காற்றை. உஷ்ணக்காற்றை.பூதக்காற்றை சுவாசிக்காமல் அழியாத காற்றாகிய வேகாத காற்றாகிய அமுதக்காற்றை  மட்டும் சுவாசிப்பதே வேகாக்கால் என்பதாகும்.அதற்கு அமுதகாற்று என்று பெயர்.அமுதக்காற்றே வேகாக்கால் என்பதாகும்
ஆன்மாவானது உடம்பு உயிரை விட்டு பிரியாமல் வாழ்வதற்கு வேகாக்காலான அமுதக்காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.அமுதக்காற்று காலை 4-30 முதல் 6-00 மணிவரை உயிர்களின் நன்மைக்காக  பூமியை நோக்கி  இயற்கையாக இறைவனால் அனுப்பப்படுகிறது. ( விரிக்கில் பெறும்)
3. போகாப்புனல்
நம் உடம்பில் பஞ்ச பூதங்கள் நிறைந்து இருக்கின்றது.அதில் உஷ்ணம். காற்று .தண்ணீரால் உடம்பு இயங்கிக் கொண்டு உள்ளது.
போகும் தண்ணீர் போகாத தண்ணீர் என இருவகை உண்டு.போகும் புனல் என்பது உணவினால் உண்டாகும் இரத்தம்.போகாப்புனல் என்பது அருள் அமுதம்.
அமுதக்காற்றினால் ஆன்ம உணர்வால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையினால் உண்டாகுவதுதான் அருள் என்னும் அமுதமாகும்.அமுதத் தாரகையாகும்.
பூத உணவால் உண்டாவது இரத்தம் இது நிலைக்காது வயோதிக காலத்தில் வற்றிவிடும் இறுதியில் மரணம் நிச்சயம். போகும்புனல் என்பதாகும் காலம் கடந்தாலும் மரணம் வந்து விடும் 
போகாப்புனல் என்பது அருள் அமுதம் 
.உடம்பு உயிர் நிறைந்து ஒளி உடம்பாக மாற்றும் தன்மை உடையது .பஞ்ச பூதங்கள் அற்றது எனவே அதற்கு போகாப்புனல் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.
மனித வாழ்க்கையில் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்கிகள் மிகவும் முக்கியமாக தெரிந்து கொள்வதே.சாகாத்தலை. வேகாக்கால்.போகாப்புனல் என்பதாகும்.
இது படிப்பால் அறிவது அல்ல.அனுபவத்தால் அறிவதாகும்.
*சாகாத்தலை என்பது உடம்பை  உயிரை விட்டு பிரியாமல் இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியாகும்*
*வேகாக்கால் என்பது பூத சூடு பற்றாத கலவை இல்லாத அமுதக்காற்றாகும்*
*போகாப்புனல் என்பது உடம்பை உயிரை ஆன்மாவை பிரியாமல் பாதுகாக்கும் அருள் அமுதமாகும்*.
அமுத நன்னீராக அகத்திலே இருந்து சுரப்பதே போகாப்புனலாகும். உயிர் விளங்க உடல் விளங்க பூத உடம்பை அருள் ஒளியாக மாற்றுவதே போகாப்புனலாகும்.
 இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து , என்றும் அழியாத சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று மரணத்தை வெல்லும் துவாரமாகும்.
மனிதப் பிறவியில் மட்டும் தான் அனுபவ பக்குவத்தே இம்மூன்றும் வெளிப்படுகிறது.. மற்றபடி எப்பொருளிலும், எவ்வுயிரிலும் இவை மறைமுகமாகவே செயல் படுகின்றது.
இதற்கு அனுபவம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக சுருக்கமாக நிரப்பி வைத்துள்ளார்.

மேலும் சுத்த சன்மார்க்க மரபு என்பதை பாடல் மூலம் தெரியப்படுத்துகின்றார்.!


மேலும்


என்னும் பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்.
இன்னும் விரிக்கில் பெருகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.