வெள்ளி, 26 அக்டோபர், 2018

சுத்த சன்மார்க்க தியானம் !

சுத்த சன்மார்க்கத்தில் தியானம் செய்யும் முறை !

ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் செய்யலாம்.
கல்வி அறிவு மேம்படும்.நோய்கள் அணுகாது .என்றும் துன்பம் இல்லாமல்
மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம் ...

இதற்கு குரு என்பவர் எவரும் தேவை இல்லை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே குரு !

தியானம் செய்யும் எளிய வழி !

தியானம் செய்ய வேண்டுமானால் கண்களைத் மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்களைத் திறந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் ...

நம் வீட்டில் தனியாக ஒரு அறையோ அல்லது பூசை அறையோ இருக்க வேண்டும்.
அந்த அறையில் நான்கு சதுரம் கொண்ட தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும்.

அதில் ''நல்ல எண்ணெய் '' அல்லது ''தேங்காய் எண்ணெய்'' அல்லது பசுநெய் ..ஊற்றி சிறிய திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,

அந்த தீபத்தின் முன்னாடி நான்கு அடி தூராம் தள்ளி நாம் கிழே ஒரு விரிப்பை போட்டு அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும் .

அந்த விளக்கின் தீப சுடர் ஒளியை மட்டும் இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் ...

தீபம்,.. அலை பாயாமல் எரிய வேண்டும் .கண்கள் தீப சுடர் ஒளியை மட்டும் தான் பார்க்க வேண்டும் .

நம் ஆன்மாவிற்கும்,
ஜீவனுக்கும் ,
மனதிற்கும்,
கண்களுக்கும் ,அந்த திரு விளக்கிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கின்றது .என்பதை அறிவால் தெரிந்து கொள்ள வேண்டும் .

நம்மால் எவ்வளவு நேரம் தீபத்தைப் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .

ஆனாலும் காலை 4-30 மணியில் இருந்து 6-00 மணி வரையில் தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.ஏன் என்றால் அமுதக்காற்று வீசும் காலம்
அந்த காலத்தை அமுதகாலம் என்றும் சொல்வார்கள்.இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

நம் உடம்பின் ஐம் புலன்கள் என்பது {கண்...காது....மூக்கு ....வாய் ...உடம்பு) என்பதாகும் அதில் முக்கியமானது,முதன்மையானது இந்திரியங்களில் உள்ள கண்களாகும்

கண்களின் வழியாகத்தான் நாம் புறத்தில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம் பார்க்க முடிகின்றது.

ஐம் புலன்களான கண்,காது,வாய்,மூக்கு,உடம்பு என்பதில் முதல் இடம் கொள்வது கண்கள் ,

கண்களில் பார்க்கும் அனைத்தும்...
கரணங்கள் என்னும் ...மனம் ...புத்தி ....சித்தம் ...அகங்காரம் .உள்ளம்..என்னும் காரணங்களில் முதல் இடத்தில் உள்ள மனத்தில் பதிவாகின்றன.

கரணங்களில் முதன்மையானது   மனமாகும் .கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகிறது ...

அதே நேரத்தில் கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது...கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகும்.

மனதில் பதிவாகியது, அனைத்தும் ஜீவன் என்னும் உயிரில் பதிவாகும் ...ஜீவனில் பதிவானது அனைத்தும் ஆன்மா என்னும் உள் ஒளியில் பதிவாகும்,அந்தப்பதிவுகள் தான் மாயா திரைகள் என்பதாகும்.நல்வினை தீவினை என்பதாகும்.

நமக்கு வரும் ,துன்பத்திற்கும் துயரத்திற்கும், அச்சத்திற்கும், பயத்திற்கும், நோய்க்கும்,மரணத்திற்கும்  அந்தப் பதிவின் அறியாமை என்னும் திரைகளே காரண காரியமாகும்.

துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் முதலியவற்றைப் போக்க வேண்டாமானால்,
மரணத்தை வெல்ல வேண்டுமானால்,
வெளியில் செல்லும் மனத்தை உள்ளே கொண்டு செல்ல வேண்டும்.அதை கண்கள் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும்.

ஆலய வழிபாடும் கண்கள் வழியாக உருவத்தைப் பார்த்துதான் வணங்குகிறோம்.அதற்கு பக்தி என்பதாகும்.
அப்படி பார்த்து வழிபடுவதால் பார்க்கும் உருவம்தான் மனதில்  பதிவாகும்.அந்த நேரத்தில்  மனமகிழ்ச்சி உண்டாகும் அதனால் எந்த பயனும் இல்லை.

மன மகிழ்ச்சி என்பது வேறு. ஆன்ம மகிழ்ச்சி என்பது வேறு..

ஏன் என்றால் ? ஆன்மாவில் இருந்துதான்.
ஜீவனுக்கும்.
மனதிற்கும் கண்களுக்கு ஒளி வழங்கப் படுகின்றது.
எனவே ஆன்ம மகிழ்ச்சி ரொம்ப முக்கியம்.

மனம் ;--

மனம் என்பது பேய் பிடித்த குரங்கு போன்றது...மனம் அகத்தில் செல்லாமல் புறத்தில் கண்கள் துணை கொண்டு அலைந்து கொண்டு உள்ளது..

மனதை அடக்குவதற்கு  சமய மதங்களில் சொல்லிய தியானம்,தவம்,யோகம் போன்ற வழி முறைகளால் மனதை அடக்கவே முடியாது.

மனதை எப்போதும் அடக்க முடியாது,ஆனால் மனதை மாற்ற முடியும் என்கின்றார் வள்ளலார் .

மனதை அடக்க வேண்டுமானால்,மாற்ற வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .மாற்ற முடியும் மனிதன் மனதை மாற்றியே ஆக வேண்டும்.மாற்றாமல் இருக்கின்ற வரை  எல்லாத் துன்பங்களும் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதற்குத்தான் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை அவசியம்  தேவைப்படுகிறது .

சுத்த சன்மார்க்க தியான முறைக்கு
சத் விசாரம் என்றும்,ஞான சரியை என்றும் வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.

புறத்தில் திரியும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும்.அதாவது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் .சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடமாகும்.

அகம் என்பது ஆன்மா அது நம் சிரநடுவில் உள் ஒளியாக இருந்து இயங்கும் இடமாகும். ஆன்மாவை கண்கள் நேரடியாக பார்க்க முடியாது,

மனம், கண்களின் துணைக் கொண்டுதான் ஜீவனையும் ஆன்மாவையும் தொடர்பு கொள்ள முடியும் . உள்ளே செல்ல முடியும்.அப்போது தான் மனம் வெளியில் செல்லாமல் உள்ளே அடங்கும்.மனத்தை அமைதிபடுத்த முடியும் .

கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக என்றார் வள்ளலார்

எனவே கண்களைத் திறந்து கொண்டுதான் சுத்த சன்மார்க்க தியானம் செய்ய வேண்டும் .

கண்களை மூடிக் கொண்டால் !

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வதால், அளவில் அடங்காத  இல்லாத கற்பனைகளும். தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,

மனம் என்பது ஒரு பேய்க்  குரங்கு... அதை அடக்க முடியாது தீப ஒளியின் வழியாகத்தான் மனத்தை அடக்க முடியும் அதைக் கண்களால் தான் அடக்க முடியுமே தவிர, வேறு எந்த வழியாலும் அடக்க முடியாது.வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

உருவங்களை வைத்தோ .உருவங்களைப் பார்த்தோ ,மந்திரம் சொல்லிக் கொண்டோ மணியை எண்ணிக் கொண்டோ தியானம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை ,
நன்மையையும் இல்லை,அவைகளால் மனமும் அடங்காது.

அந்த நேரம் எதோ ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைப்பதுபோல் தோன்றும் ,கொஞ்ச நேரத்தில் அழிந்துவிடும்,மேலும் பழைய நிலைக்கே மனம் திரும்பி விடும்.

உருவம் அற்ற ஒளி !

ஆதலால் நம் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .ஏன் என்றால்
கண்களும் ஒளி-- ,
தீபமும் ஒளி --
இரண்டும் ஒளியாக இருப்பதால் ...
ஜீவனும் ஒளி.. ஆன்மாவும் ஒளியாகும்--,

நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்தது,படித்தது,
கேட்டது,செய்தது ,
உண்டது,உணர்ந்தது
அனுபவித்தது , அனைத்தும் மனம் ...ஜீவன் ,,,
வழியாக ஆன்மாவில் பதிவாகி உள்ளது .
அந்த பதிவுகள் தான் நினைவு அலைகளாக திரும்பி நமக்கு துன்பமும் ....துயரமும் ......அச்சமும்,...பயமும்,.... நோயும்....மரணமும் தந்து கொண்டு வருகின்றது .

அந்த பதிவுகளை அறவே நீக்கினால் தான் மனம் அமைதி பெரும்,அலைபாயும் மனம் அமைதியடையும்,
பின் அனைத்து துன்பங்களும் துயரங்களும் நீங்கும் .

ஆன்மாவை நிரப்பிக் கொண்டுள்ள குப்பைகளை அகற்றி. வெற்று இடமாக மாற்ற வேண்டும்.

அந்த பதிவுகளை அகற்ற சுத்த சன்மார்க்க **ஞான  தீப ஒளி தியானம் தான்** முக்கியமானதாகும். மேலே கூறியபடி தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால்,தீப ஒளி கண்களின் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை மோதுகின்ற போது அந்த மோதலில்  உஷ்ணம் உண்டாகும் . அதற்கு சுத்த உஷ்ணம் என்று பெயர்...

அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் பதிவாகி உள்ள அசுத்த மாயை என்னும் (அறியாமைத் திரைகள் ) திரைகளை கரைத்துவிடும்.எரித்துவிடும்.

அதன்பின் தடைகள் இல்லாமல் கண்கள் மனம் இரண்டும் ஜீவனை .ஆன்மாவை நேரடியாகத் தொடர்பு கொள்ளும்.,

மனம் தடை இல்லாமல்  நேரடியாக  சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ளும்.

அதுவரையில் புறத்தில் சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளி வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

புறத்தில் பார்த்து வந்த தீப ஒளியின் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும் .

துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் ..இதுதான் சமரச  சுத்த சன்மார்க்க சத்தியமான தியான முறையின் உண்மையாகும் .

மலம் ஒழிப்பு !

சமய மதங்களில் மலம ஒழிப்பு என்பார்கள் ,சமய மதங்களில் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது ஆணவம் மாயை,கன்மம், என்னும் மூன்று மலங்களை சொல்லுவார்கள். அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள்,
தீட்ஷை கொடுக்கும் தகுதி மனிதர்களுக்கு கிடையாது.

மரணத்தை வென்ற ''வள்ளலார் போன்ற சுத்த பிரணவ ஞான தேகிகளுக்கு மட்டுமே'' சாத்தியமாகும். .

வள்ளல்பெருமான்.. ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது என்கின்றார் .

மலம என்பது யாதெனில் ஆணவம், மாயை, கன்மம், மாமாயை, பெருமாயை என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள பதிவுகளாகும் அதுவே மலங்களாகும்,

அதற்கு மலம்  ஒழிப்பு என்பார்கள்.மலம் ஒழிப்பு என்றால் பதிவு அகற்றம்.நீக்கம்  என்பதாகும். அந்த மலத்தை நீக்குவதற்காக  தீட்சை கொடுப்பேன் என்பார்கள் , மனிதர்கள் எதையும்  நம்பி ஏமாந்து விடாதீர்கள்

பல சகோதரர்கள்.. விபரம் தெரியாமல் நிறைய பணத்தை கட்டி தேவை இல்லாமல் சென்று  தியானம் ...
யோகம.... தவம்  .....காயகல்பம் ...
மனவளக்கலை ...
குண்டலினி யோகம்..ஈசா யோகம்,  போன்ற தவறான பயிற்சி முறைகளை கற்று,அதனால் எந்தப் பயனும் இல்லாமல்  துன்பப் படுகின்றார்கள்.
ஆதலால் அப்படி செய்வது செல்வது அறியாமையாகும்,
விபரம்  அறியாத மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதிக்கும்,மன்றங்களும்,தியானப் பயிற்ச்சி கூடங்களும்,மேலும் நிறைய அமைப்புகளும் நாட்டில் நிறைய உருவாகி விட்டது...

மலத்தை எவராலும் ஒழிக்க முடியாது நீக்க முடியாது !

அறியாமையின் செயல்களால் ஆன்மாவில் பதிவான திரைகள்   என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது,அகற்றவும் முடியாது. அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும்,நீக்க வேண்டும்.வேறு ஒருவரால் ஒழிக்கவும் அழிக்கவும் முடியாது,நீக்கவும் முடியாது  என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்....

தீதும் நன்றும் பிறர் தர வாராது ! என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜீவ காருண்யம் என்னும் ஜீவ தயவாலும் உயிர் இரக்கத்தாலும்.பரோபகாரத்தாலும்.,...

சத்விசாரம் என்னும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் தியானத்தாலும் மட்டுமே மலம் என்னும் திரைகளை நீக்க முடியும் ,ஒழிக்க முடியும் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார்.அதனைக் கருத்தில் கொண்டு,  அனைத்துத் தர மக்களும் தெரிந்து கொண்டு சுத்த சன்மார்க்க ஞான யோகம் என்னும் ஆன்ம தியானம் செய்ய வேண்டும் . .

வள்ளலார் சொல்லியது !

ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் ,உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,தீபத்தை புறத்தில் வைத்து தடைபடாது, இடைவிடாது ஆராதியுங்கள் என்று தெளிவாக விளக்கி உள்ளார் .ஆதலால் தீபத்தை இடைவிடாது ,கண்களை திறந்து கொண்டு பார்த்து தியானம் செய்ய வேண்டும் .

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .

கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .

என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே என் கண்ணுன் மணியே !

கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே
விளங்குகின்ற கற்பூர விளக்கே !

கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விணணிறைவே சிவ சிவ தனி மெய்ப் பொருள!

வள்ளலார் வாக்கு !

மேலே சொல்லியபடி செய்து பாருங்கள்,செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும்.ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்.அதனால் பல் இளித்து இறுமாந்து கெட நேரிடும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .

ஆதலால் மேலே கூறிய வண்ணம் சந்தேகம் இல்லாமல் தியானம் செய்து வாருங்கள் .எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவார் ..
இது சத்தியம்... .இது சத்தியம்,..இது சத்தியம்.

ஞானசரியை யில் பதிவு செய்துள்ளபாடல் !

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
உள்ள
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!

சிற்சபை நடத்தை தெரிந்து தொடர்பு கொள்வதற்கும் சித்தி எல்லாம் பெறுவதற்கும் ஆரம்ப தியானமுறையே சுத்த சன்மார்க்க தியானமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சுத்த சன்மார்க்க ஞான யோக தியானம் செய்யும் முறையாகும்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
 --9865939896 .

வியாழன், 25 அக்டோபர், 2018

கடவுளைக் கண்டவர் யார் ?

கடவுளைக் கண்டவர் யார் ?.

இறைவன் படைத்தை உலகில் வாழ்ந்தாலும் இறைவனைக் காண முடியாமல் வாழ்கிறோம்.

இறவனைக் காண்பதற்காகவும் இறைவனிடம் தொடர்பு கொள்வதற்காகவும்.
இறைவனிடம் அருளைப் பெற்று இறைவனோடு கலந்து பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்து கொண்டே இருப்பதற்காகவே  ...இறைவனால் கொடுக்கப்பட்டதுதான்

மனிதப் பிறப்பு !

ஆகவே தான் உயர்ந்த அறிவை  மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பிறவியாகும்...

மனிதன் இவ்வுலகில் பிறந்தது முதல் இன்று வரை நம்மைப் படைத்த கடவுளைக் காண வழி தெரியாமல் தவித்துக் கொண்டே உள்ளான்.

காண முடியாத காரணம் என்னவென்று தெரிந்து கொண்டால் மட்டுமே மனிதன் உயர்ந்த அறிவை பயன் படுத்த தெரிந்து கொண்டவன் ஆவான்...

நாம் எவரும் சுயமாக கடவுளைத் தேடவில்லை.
தேடுவதற்கு விரும்புவதும் இல்லை . 

நாம் கண்டது .கேட்டது.
கற்றது.களித்தது.
உண்டது எல்லாமே கடவுளை மறைக்கும் செய்திகளாகும்.

நாம் உலகில் வணங்கும் வழிபாடு செய்யும் கடவுள்கள் யாவும் உண்மையான கடவுள்கள் அல்ல. என்பதை நாம் உண்மை அறிவோடு தெளிவு பெற்று தெரிந்து கொள்ள வேண்டும்..

ஏன் என்றால்? ..கடவுளை கற்பித்தவர்கள் எல்லாம் அருள் பெற்ற ஞானிகள் என்பதை நம் மனதில் விதைத்து விட்டார்கள்.ஆதலால் நம் மனதில் ஆழமாக  பதிந்து விட்டது.

அவர்கள் எல்லாம் உண்மையான ஞானிகளா என்பதை நம் அறிவைக் கொண்டு விளக்கம் பெறவில்லை.. எனவே ஆட்டு மந்தைகள் பின்பற்றி வருகிறோம்.

வள்ளலார் வந்துதான் உண்மையை வெளிப்படுத்துகிறார்..

வள்ளலார் சொல்லும் அருள் பாடல் வரிகளை மனதைக் கொண்டு படிக்காமல்.அறிவைக் கொண்டு படித்தால் தான் உண்மை விளங்கும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்னும் பாடலிலே தெளிவாக விளங்க வைக்கிறார்..

நீங்கள்  இதுவரையில் உண்மை அறியாமல்.பொய்யான நெறிகளைப் பின்பற்றி  வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள்.இனிமேல் நீங்கள் பொய் நெறியைப் பின்பற்றி வாழாமல்...மெய் நெறியை கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து..

உண்மை இறைவனை அறிந்து அவரிடம் அருளைப் பெற்று.இறவாத அதாவது மரணம் அடையாமல் வாழ்ந்தால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொள்ள முடியும்.இறைவனைக் காண முடியும் என்ற உண்மையை உலகிற்கு தெரியப்படுத்தியவர் வள்ளலார் ஒருவரே ....

மற்ற ஞானிகளால் உண்மையை உலகிற்கு ஏன் ?  சொல்ல முடியவில்லை என்ற உண்மையும் வெளிப்படுத்துகின்றார்.

வள்ளலார் பாடல் !

 அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை

அறிவறியார் வார்த்தை எதனால்எனில் இம் மொழிகேள்

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்

மறங்குலவும் அணுக்கள்பலர் செய்த விரதத்தால்

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங் கவர்பால்

இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.!

என்ற பாடலில் மேலே கண்ட ஞானிகள் உண்மையான மெய்ப்பொருளைக் காணமுடியாத சிற்றறிவு பெற்றவர்கள்.

உண்ணுதற்கும் உறங்குதற்கும்.விழிப்பதற்கும்.பின் இறப்பதற்கும் பிறப்பதற்குமாய் உழலும் மறங்குலவு அணுக்களைப் பெற்றவர்கள்.அவர்கள் செய்த சிறிய விரதத்தால் மதத்தலைமை பதத்தலைமை பெற்றார்கள்..

அவர்கள் படைத்தது  தோற்றுவித்துள்ளது யாவும் உண்மைக் கடவுள்கள் அல்ல. உண்மைக்கு புறம்பான கடவுள்கள் ..
அனைத்தும் தத்துவங்கள். இறைவனால் படைத்த உயர்ந்த தத்துவங்களை.
அவரவர்களுக்கு கிடைத்த காட்சிகளை வைத்து கடவுள்களாக படைத்து விட்டார்கள்..

அதனால் அவர்கள் படைத்துள்ள கடவுள்களை வணங்குவதாலும் வழிபடுவதாலும்.
போற்றுவதாலும் எந்த பயனும் இல்லை...அந்த கடவுள்களால் அருள் வழங்கும் தகுதியும் இல்லை.பொருளை வழங்கும் தகுதியும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

வள்ளலார் கண்ட உண்மைக் கடவுள் !

காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்

கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்

கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்

குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்

நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி

நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே

மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்

வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.!

வள்ளலார் கண்ட காட்சியை படம் பிடித்து காட்டுவது போல் காட்டுகின்றார் .

அந்த உண்மைக் கடவுள்தான் சுத்த சிவம் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அவர் எங்கு எங்கு இருந்து செயல்படுகின்றார் என்பதை விளங்க வைக்கின்றார்...

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்

விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும்

இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்

இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ

பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்

பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.!

மேலே கண்ட பாடலில் நான் உண்மையாக  கண்ட காட்சியின் வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான்  மெய்பொருள் என்று சொல்லியும்.

மீண்டும் இப்பொருள் அப்பொருள் என்று சொல்லிக் கொண்டும் தேடிக்கொண்டும்.அலைந்து கொண்டும்  இருப்பதால் எந்த பயனும் கிடைத்துவிடாது..

சாதி.சமயம்.மதத் தலைவர்கள் காட்டிய கடவுள்கள் குருடன் யானையைத் தடவி பார்த்து சொல்லியது போல் சொல்லி உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள் தாம்

கவ்வைபெறு குருடர் கரி கண்டகதை போலே

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்

நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்

செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழி ஆயினவே.!

உண்மைக்கடவுள் ஒருவரே உள்ளார் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளாத வரை.அவரிடம் தொடர்பு கொள்ளாத வரை.எவரும் சாகாத கல்வி கற்கவும் முடியாது. அருளைப் பெறவும் முடியாது.

இந்த உண்மை மெய்பொருளை மக்கள் தெரிந்து கொள்ளும் காலம் இப்போது விரைந்து விரைந்து. வளர்ந்து வளர்ந்து.தெளிவு அடைந்து கொண்டே வருகின்றது.

இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை

அருள்ஒளி தருகின்றாம்

கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே

குறிக்கொள்வர் நினக்கேஎம்

ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்

வாழ்கநீ மகனேஎன்

றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்

இணைமலர்ப் பதம்போற்றி.!

என்னும் பாடலில் உண்மையை உரக்க சொல்லி உள்ளார்.

வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூரண அருளைப் கொடுத்து.தன் அருள் உடம்பையும் கொடுத்து   ஐந்தொழில் வல்லபத்தையும் கொடுத்து தன் அருள் ஆட்சியையும் கொடுத்து தன்னுடன் கலந்து அருட்பெருஞ்ஜோதி யாகவே செயல்பட்டுக் கொண்டு உள்ளார்.

எனவே உலக மக்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்து பின்பற்றும் காலம் இனி உலகம் எல்லாம் அறிந்து தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்...

மேலும் வள்ளலார் பாடல் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!

உலகில் உள்ள சாதி.சமயம்.மதம் என்னும்  துன்மார்க்கங்கள் யாவையும் தொலைத்து விட்டேன். மெய்ப்பொருளைக் காணும் சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து விட்டேன்.

இதுவே நன்மார்க்கம் என்று இந்நாட்டு மக்களும் வான் நாட்டில் உள்ள ஞானிகளும் தெரிந்து கொள்வார்கள் .இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை கட்டளை...

இனிமேல் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கயவர்கள் கூட்டம் ஒழிந்து அழிந்துவிடும்.

ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்ற உண்மையை அறிந்து வழிபடும் காலமும் தொடர்பு கொள்ளும் காலமும்.அனைத்துதர  மக்கள் மனதிலும் அறிவிலும் நிலைபெற்றுவிடும். 

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய.என் அன்புடைய  சகோதர சகோதரிகள் அனைவரும் உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 நமக்கு தாயாகவும் தந்தையாகவும் தாங்கிக் கொண்டு நமது ஆன்மாவில் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அவர் எங்கு இருந்து எல்லா அண்டங்களையும் .உலகங்களையும் இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

இன்னும் விரிக்கில் பெருகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

செவ்வாய், 23 அக்டோபர், 2018

காமம் எல்லோருக்கும் பொதுவானது !

காமம்  எல்லோருக்கும்  பொதுவானது !

உணவு உண்பவர்கள் ஆண் பெண் யாராக இருந்தாலும் காம இச்சை உள்ளவர்கள்தான்.

காமத்தை அடக்கவும் வெளிப்படுத்தவும் ஒவ்வொருவராலும் முடியும்.

நேரம் காலம் சூழ்நிலைகள் வரும்போது விரும்பியவர்கள் காம இச்சசையை தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் விரும்பி ஒருவர் விரும்பாத போது பிரச்சினை கள் உருவாகின்றது.பிரச்சனைகள் வெளியே வருகின்றது.

இதுதான் இன்று எல்லாத் துறையை சார்ந்தவர்கள் மீதும் பிரச்சனை உருவாகின்றது..

ஒருபெண் ஒரு ஆணை பலாத்காரம் செய்தாலோ.அல்லது விரும்பினாலோ.அந்த ஆண் அந்த பெண்ணை விரும்பவில்லை என்றால்.அவன் புத்திமதி சொல்வான்.ஆனாலும் வெளியே சொல்லமாட்டான்.

ஒரு பெண்ணை ஒரு ஆண் விரும்பினால் ஏற்றுக் கொண்டால் கலந்து கொள்வாள்.விரும்பவில்லை என்றால்.புத்திமதி சொல்லித் தப்பித்துக் கொள்ளுவது புத்திசாலித்தனம்.

அதைவிடுத்து பெண்கள் மட்டும் கற்புக்கரசிகள் என்றும் ஆண்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று வெளிப்படுத்துவது மனித குலத்தை கேவலப் படுத்தும் செயல்களாகும்.

அன்பு. காதல்.கற்பு. காமம்.மோகம்  ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது.

அதை காப்பாற்றுவதும்.வெளிப்படுத்துவதும் அவரவர் உரிமை மனதைப் பொறுத்தது.

ஆண்கள் எல்லோரும் கெட்டவர்களும் இல்லை.நல்லவர்களும் உள்ளார்கள்.பெண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை.கெட்டவர்களும் உள்ளார்கள்..

இதை உணர்ந்து மனிதகுலம்.இந்திரியங்களை.கரணங்களை கட்டுப்படுத்தி நல் ஒழுக்கத்தோடு வாழ்வதே எல்லோருக்கும் நல்லது..சமுதாயத்திற்கும் நல்லது..

ஒருவரை ஒருவர் குறை கூறுவதால்  எந்த பயனும் அடைய போவதில்லை. அச்சம்.பயம்.துன்பம். சோகம்.விரக்தி.வந்து வாழ்க்கை சூன்யமாகிவிடும்.

ஆண்.பெண் எல்லாரும் நல் ஒழுக்கத்தோடு வாழுங்கள்.எச்சரிக்கையோடு வாழுங்கள்..கவனமாக வாழுங்கள்.இரக்கத்தோடு வாழுங்கள்..

நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  என்றும் துணையாக இருப்பார்.காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வாழுங்கள்..

வாழ்க்கை என்பது துன்பம் இல்லாமல்  இன்பமுடன் வாழ்வதற்கே.

சிந்தித்து செயல்படுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

கடவுள் கருணை உள்ளவரா ? இல்லையா ?

கடவுள் கருணை உள்ளவரா ?இல்லையா ?

இன்று இந்தியாவில் தீ போல் பரவி வரும் செய்தி.

பெண்கள் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்து.நீதி மன்றத்திற்கு சென்றது.

நீதி மன்றம்... பெண்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பு சரியா ? தவறா ? என்ற விவாவதம் வளர்ந்து சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்து கொண்டு வருகின்றது.

இது ஒருபுறம் இருக்கட்டும்..

கடவுள் என்று போற்றப்படும் எந்த சமய மதக் கடவுளாக இருந்தாலும் .ஆண் பெண் என்று பேதம் பார்ப்பது கடவுளுக்கு சம்மதமா ? என்று அறிவு சார்ந்த பெரியவர்கள் சிந்திக்க வேண்டும்..

அப்படி பேதம் பார்க்கும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா ?

கடவுள் பொதுவானவரா ? இல்லை ஆண்களுக்கு மட்டும் சாதகமானவரா ? பெண்களுக்கு விரோதியா ? அப்படி ஒரு கடவுள் இந்த உலகத்தில் இருந்தால் அந்த கடவுளை. கடவுள் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா ?

சில மேதாவிகள்... கலாச்சாரம்.பண்பாடு.
பழக்கவழக்கங்கள் உள்ளன அவற்றை மாற்ற முடியாது என்று போர்க்கொடி உயர்த்துகிறார்கள்...

கலாச்சாரம்.பண்பாடு.
பழக்கவழக்கங்கள்.
யாவும் மனிதனால் படைக்கப்பட்டதா ? கடவுளால் படைக்கப்பட்டதா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்..

உலகில் உள்ள எல்லா ஆலயங்களும்.
மசூதிகளும்.
சர்ச்சுக்களும்.
பிரமீடுகளும்
அதில் வைக்கப்பட்ட .
படைக்கப்பட்ட தெய்வங்கள்.எல்லாமே சுயநலம் உள்ள சமய மதவாதிகளால். கற்பனைகளால் படைக்கப்பட்ட தெய்வங்கள் தான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

இந்து சமயங்கள் மதங்கள்  மட்டும் அல்ல.எல்லா சமயங்களும் மதங்களும் .
அவரவர்கள் தோற்றுவித்த ஆலயங்களுக்கும்.மசூதிகளுக்கும்.சரச்சுகளுக்கும்.பிரமீடுகளுக்களுக்கும்.அவரவர்களுக்கு தகுந்த சுய நலமான சட்ட திட்டங்கள் வகுத்து வைத்துள்ளார்கள்..

உலகத்தை எல்லாம் படைத்த கடவுளுக்கு இந்த சட்ட திட்டம் எல்லாம் பொருந்துமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்...

சாதிக்கு பல கடவுளா ? சமயத்திற்கு பல கடவுளா ? மதத்திற்கு பல கடவுள்களாக இருக்க முடியுமா ? என்று கேட்பவர்களுக்கு.
சாமார்த்தியமாக பதில் சொல்லுவார்கள்..
எல்லாமே கடவுளின் அவதார தோற்றங்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வார்கள்...

கடவுள் அவதாரம் எடுக்க மாட்டார்.மனிதர்களை பல அவதாரங்களாக படைப்பவர்.

அதற்கு சகலர்.பிரலயாகலர்.
விஞ்ஞானகலர் என்று பெயர்..

கடவுள் என்பவர் பேதம் அற்றவர் ! ஒரே உருவம் கொண்டவர் !

கடவுள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக ஓங்கி  உயிர்களை இயக்கிக் கொண்டு உள்ளவர் என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவு விளக்கம் இல்லாமல்..

கண்ட கண்ட ஆலயங்களைத் தோற்றுவித்து உண்மைக்கு புறம்பான.கற்பனைத் தத்துவங்களை உருவங்களாக வைத்து.வழிபாடு செய்வதும்...அதற்கு தகுந்த ஆச்சார சங்கற்பங்கள. விகற்பங்களை உண்டாக்கி. ஏற்பாடு செய்து.மந்திர தந்திரங்களைச் சொல்லி வணங்குவது.சுய நலவாதிகளின் அறியாமையாகும்..

அதைவிடக் கொடுமை.கடவுள் முன் ஆண்கள் பெண்கள் என்ற பேத்த்தை உறுவாக்குவதும் ஆண் கடவுள்.பெண் கடவுள் என்ற தெய்வத்தைப் படைப்பதும் கேவலமான செயல்களாகும்.

படைத்தவன் இறைவன். பாகுபாடு பார்ப்பானா? பேதம் பார்ப்பானா ? என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்...

கடவுள் அன்பு.தயவு.கருணை.
அருளை வாரி வழங்கும் உயர்ந்த ஆற்றல் படைத்தவர்.எந்த உயிர்களையும் பேதம் பார்க்காமல் படைத்தவர் .அவர் யார் என்ற உண்மை தெரியாமல்.உலகம் முழுவதும் பல தத்துவ கடவுள்களைப் படைத்து வணங்கி வழிபாடு செய்து வந்தனர் வழிபடுகின்றனர். இவைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர் தான் .

இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார் என்பவர்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! ஒருவர் தான் என்ற உண்மைக் கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்.

ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல். எல்லோருக்கும் பொதுவான வழிபாட்டு முறையை தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் என்னும் பார்வதிபுரத்தில் தோற்றுவித்துள்ளார்...

அதற்கு ஆலயம்.கோயில்.சர்ச்சு.மசூதி.மிரமீடு போன்று சமய மதங்களின் பெயர் வைக்காமல்.

எல்லா உலக மக்களும் வந்து தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு....

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*. என்கின்ற பொதுவான வழிபாட்டு முறையைத் தோற்றுவித்துள்ளார்...

அந்த சபையில் தத்துவ உருவங்களை வைக்காமல் அருட்பெருஞ்ஜோதி யே உண்மைக் கடவுள் என்பதை. இயற்கை விளக்கமாக.ஒளி தான் கடவுள் என்னும் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.

அங்கே சாதி.சமய.மதங்கள் போன்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல். எந்த பேதமும் இல்லாமல்.ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லாமல்.உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லாமல்.கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்ற பொது நோக்கத்தோடு.பொது உணர்வோடு வந்து வழிபடலாம் வணங்கலாம் என்பதை கருத்தில் கொண்டு...

எட்டு திக்கு மக்களும் வந்து வணங்கி வழிபாடு செய்ய...

எண்கோண வடிவமாக சத்திய ஞானசபையை புதிய கோணத்தில் அமைத்துள்ளார் வள்ளலார்....

எல்லா உலகத்திற்கும் ஒரே கடவுள் என்னும் உண்மை அறியாமல் பல தெய்வங்களைப் படைத்து. சாதி.சமயம்.மதங்களின் பெயரால். கடவுளின் பெயரால்....
ஒற்றுமையாக வாழ வேண்டிய  மக்களைத் தனித்தனியாக பிரித்து வைத்து விட்டார்கள் என்பதை பல்லாயிரம் அருட்பாடல்களிலே பதிவு செய்துள்ளார் வள்ளலார்.

அதிலே ஒரு பாடல் !

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

மேலே கண்ட பாடலிலே தெளிவாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய சகோதர சகோதரிகளே!

கடவுளுக்கு ஆண் பெண் என்ற பேதம் கிடையாது.எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள் என்பதை உண்மை அறிவோடு உணர்ந்து ஒன்றுபட்டு வாழ்வோம்..

கடவுளின் பெயரால் உண்டாகும் சாதி.சமயம்.மதச் சண்டைகள் தான்.மக்களை பிரித்துள்ளன. உலகத்தை அழித்துக் கொண்டு உள்ளன.

அவற்றை வருகின்ற.அறிவு சார்ந்த இளைய சமுதாயம்  வேறோடு பிடிங்கி எறிவோம்.எறிய வேண்டும்...

இதுவே பொது அறிவு சிந்தனையாகும் பொது நோக்கமாகும்...

கடவுள் எங்கு உள்ளலார் என்பதை விளக்கும் பாடல் !

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.!

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல்.பேதம் இல்லாமல்  பாவிக்கிறவன்.நேசிக்கின்றவன்  எவனோ அவன் உள்ளத்தில் இறைவன் கருணை நடம் புரிகின்றார்.அவனை நான் கடவுளாக நேசிக்கிறேன் என்கிறார்.வள்ளலார்...

எல்லா உயிர்களிடத்தும் அன்பு.தயவு.கருணை.
இரக்கம் கொண்டு வாழ்ந்தால்.இறைவன் நமக்கு அருளை வாரி வழங்குவார்..

வள்ளலார் பாடல் !

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே

அன்புரு வாம்பர சிவமே.!

மேலே கண்ட பாடல் கடவுளின் தன்மையை விளங்க வைக்கின்றது..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

சனி, 20 அக்டோபர், 2018

வள்ளலார் கொடி கட்டிக் கொண்ட நாள் !

வள்ளலார் கொடி கட்டிக் கொண்ட நாள் !

22-10-1873 ஆம் நாள் ஸ்ரீ முக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 8 மணிக்கு முதன் முதலாக கொடி கட்டிக் காட்டி .உலக மக்களுக்காக நீண்ட உபதேசம் ஒன்றை செய்து அருளினார்கள்..

அந்த உபதேசத்திற்கு *""மகாஉபதேசம்""*...பேருபதேசம் என பெயர் வழங்கப்படுகின்றது....்

இந்த உபதேசம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் வெளிப்படுத்துகின்றார்.

இந்த பேருபதேசத்தை அனைத்துலக மக்களும்.
பொருமையாக படித்து பயன் பெற வேண்டும்.என்பதற்காக இங்கே பதிவு செய்கின்றோம்...

*பேருபதேசம்*


ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்.

இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்.

அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுதம் அவர்களைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம்.

இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.

அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம்,....
அபரம் இகலோக விசாரம். ...
இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல.

சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.

அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும்.

யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.

எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது - துக்கமே விசாரமென்கின்றது - அது தப்பு; அவ்வர்த்தமுமன்று.

 சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது.

மேலும் வி - சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.
மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம்.

ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது.

யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் - ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார்.

 ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும்.

கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.

 இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.
ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.

யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.

இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும்.

ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* படித்தும் முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

* இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

- திருஅருட்பா 4176

இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள்.

எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் - நூறு தொண்ணூறென்றும்,

தொல் - ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க.

இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை.

ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.

ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும்.

அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் *அற்ப அறிவாக* இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார்.

இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது

யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.

*"கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

** மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல்உன் தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே றெண்ணிய துண்டோ
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.**

- திருஅருட்பா 3635

** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுகமற் றெல்லாம்

மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

- திருஅருட்பா 3503

அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.
நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்;
மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்;
அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.
இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன்.

நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்.

ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம்ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது நீங்கள் -

இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - *சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது** - அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.

நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம்

எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை.

"தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.

ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.

தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.

அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலானஅண்ட விசாரமும்,

பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.

இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.

இப்படியே "காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் - ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் - காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா" என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம்,

ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.
இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள்.

இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள்.

இது கடைசி வார்த்தை. இது முதல் - கொஞ்ச காலம் - சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது.

அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்:

நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

**அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி*

*தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி**

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.

தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே.

ஆதலால் இத் தருணம்இக்காலமே சன்மார்க்கக் காலம்.
இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது.

அக்கொடி உண்மையில் யாதெனில்:

நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும்.

இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.

கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்.

இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இதுசத்தியம், சத்தியம், சத்தியம். இஃதுஆண்டவர் கட்டளை.

எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்....

 மேலே கண்ட பேருபதேசத்தை படித்து வள்ளலார் சொல்லிய அன்பு.தயவு.கருணையைப் பின்பற்றி.ஜீவ காருண்ய ஒழுக்கத்தைப் கடைபிடித்து.சத்துள்ள சத்விசாரத்தை விசாரம் செய்து...

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை ஒவ்வொருவரும் அறிந்து அறிந்து உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே வடிவமாகி.நன் நிதியாகிய என்றும் அழியாத அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 19 அக்டோபர், 2018

நெற்றிக் கண்ணைத் திறப்பது எங்கனம் ?

நெற்றிக் கண்ணைத் திறப்பது எங்கனம் ?

நம்முடைய நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுகிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம் என்கிறார் வள்ளலார்..

ஆசாரியர் என்றவுடன் சிலபேர் மனிதரை நினைத்துக் கொள்கின்றனர்.
அல்லது மனித குரு  என்று நினைத்துக் கொள்கின்றனர்.அவை முற்றிலும் தவறானது.

உலகில் எல்லா ஜீவராசிகள் அனைத்திற்கும்  தனித்தலைமைப் பெரும்பதியாக விளங்கிக் கொண்டு  இருக்கும்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே குருவாக இருந்து செயல் படுகின்றார்.

வள்ளலார் பதிவு செய்துள்ளது !

 அருட்பெருஞ்ஜோதி அகவலிலே தெளிவாக பதிவு செய்துள்ளார்.

மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !

அருளை வழங்குபவர் எவரோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான செயலாகும்...

மனித குருவால் அருளை வழங்க முடியுமா ? என்றால் வழங்க முடியாது...அருளைப் பெருவதற்கு உண்டான வழியைக் காட்டலாம்.அதுவும் அருளைப் பெற்று இருந்தால் மட்டுமே அருளைப் பெறும் வழியைக் காட்ட முடியும்..

அருளைப் பெறாமல் சாகிறவன் அதாவது இறந்து மாண்டு போகிறவன் எல்லாம் குருவாக முடியுமா ? என்றால் குருவாக முடியாது...குரு என்று சொல்கிறவன் எல்லோருமே ஏமாற்று பேர் வழிகள்.

மலம் ஒழிப்பது.தீட்சை கொடுப்பது.தவம்.
யோகம்.தியானம் போன்றவை சொல்லிக் கொடுப்பது அனைத்தும் தவறான வழிகாட்டுதலாகும்...

அவை அனைத்தும் சமய மதங்களின் வழிகாட்டுதலாகும்.
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கு நேர் விரோத செயல்களாகும்.

அப்படியும் மீறி சொல்லிக் கொடுப்பவன் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் சுட்டிக் காட்டுகின்றார்...

நரை.திரை.பிணி.மூப்பு.பயம்.மரணம் வராமல் இருக்க வேண்டும்..அப்படியே வராமல் வாழ்ந்தாலும் அவன் குருவாக ஏற்றுக் கொள்ள முடியாது ...அவனுக்கு அந்த அருள் சக்தியும் ஆற்றலை யும் வழங்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் குரு என்று அவன் சொல்ல வேண்டும்...

வள்ளலார் எந்த இடத்திலும் தன்னை குரு என்றோ !.தன்னை வணங்க வேண்டும் என்றோ! தன்னை வழிபடவேண்டும் என்றோ ! சொல்லவே இல்லை.

தியானம்.தவம்.யோகம்.மலம் ஒழிப்பு.தீட்சை.
வழங்குதல்.ஆசாரசங்கற்ப விகற்ப  வழிபாட்டு முறைகளை வள்ளலார் சொல்லிக் கொடுக்கவில்லை...

பசித்திரு .தனித்திரு.
விழித்திரு என்று மட்டுமே சொன்னார்...

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்..

பரோபகாரமே கடவுள் வழிபாடு என்றார்..

இறைவன் மீது இடைவிடாது அன்பு செலுத்துங்கள் என்றார்..அதுவே சத்விசாரம் என்றார்..நம்முடைய குறைகளையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்.
இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்.
இயற்கை இன்பம் 

போன்ற பெருமைகளையும்.
அருள் ஆற்றல்களையும் இடைவிடாது விசாரம் செய்து கொண்டு இருத்தல் வேண்டும்..அப்படி இருந்தால் தெரிவிக்க வேண்டியதை இறைவனே தெரிவிப்பார் என்று எல்லோருக்கும் புரியும்படி சொல்லி உள்ளார்...

மலம் உள்ளவன் மலம் அற்றவன் !

ஐந்து மலம் உள்ளவன் மனிதன்.மலம் இல்லாதவன் இறைவன்.
மலம் இல்லாத இறைவனால் மட்டுமே மலத்தை அகற்ற முடியும் என்பதை மனிதர்களாகிய நாம் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் சொல்லியது...!

நம் நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுகிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்.

ஏன் எனில்.மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல் போல் தெரியும்.அவன்தான் சுத்த ஞானி...

மேறபடி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தகப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர் பெற்று எழும்.மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால் உடனே அந்த ஜீவன் பஸ்பமாகிவிடுவான்.

மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்கள் உள்ளன.என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...

நெற்றிக்கண் !

நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு .ஒரு கதவும் பூட்டும் உள்ளது.மேற்படி பூட்டை அருள் என்கிற திறவுகோலைக் கொண்டு தான் திறக்க வேண்டும்.

ஆதலால் மேற்படி அருள் என்பது ஆன்ம இயற்கையால் அடையும் பெருந் தயவு .நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் தோன்றும்..என்கின்றார்

எனவே ஆனமாவின் சிறிய தயவைக் கொண்டு கடவுளின் பெருந் தயவு என்னும் அருளைப் பெற வேண்டும்...மற்ற எந்த குறுக்கு வழியாலும் அருளைப் பெற முடியாது என்பது திண்ணம்..

அருளின் தன்மைப் பற்றி வள்ளலார் அகவலில் தெளிவாக விளக்கி உள்ளார் !

எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

482. யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே

483. பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

484. கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

485. உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

486. பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே

487. உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

488. இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே

489. அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே

490. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே

491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே

492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே

493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே

494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே

495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே

496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே !

497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே

498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே !

மேலே கண்ட அகவல் வரிகளை பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்...எளிய தமிழில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்...

அறிவுக் கண் கொண்டு படித்து உண்மைத் தெரிந்து கொள்ளுங்கள்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரால் மட்டுமே நெற்றிக் கண்ணைத் திறக்க முடியும்.

வேறு எவராலும் நெற்றிக் கண்ணைத் திறக்க முடியாது...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 18 அக்டோபர், 2018

ஆண்டவர் எதையும் கேட்கவில்லை !

ஆண்டவர் எதையும் கேட்கவில்லை !

அன்பும் அறிவும் தயவும் கருணையும். இறைவன் நமக்கு கொடுத்த அருட் கொடையாகும்..

இறைவன் மீது அன்பும் ஜீவர்கள் மீது இரக்கமும். பரோபகாரமும் செலுத்த வேண்டும் என்பதுதான்  உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இதுவே அறிவுள்ள மனிதர்களின் செய்யும் செயல்பாடாகும்....

கடவுள் நம்மை எதுவும் கேட்கவில்லை.கடவுள் கை ஏந்தும் பிச்சைகாரன் அல்ல.
எல்லாம் வல்லவன்.
எல்லாம் உள்ளவன்.
எங்கும் நிறைந்தவன் கடவுள் என்பதை தெரிந்து .அறிந்து.
புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் பெயரைச் சொல்லி பல வேடங்கள் போட்டுக் கொண்டு கடவுள் இடமே ஏமாற்றும் வேலையைச் செய்து கொண்டு உள்ளவர்கள்.அதுவே அறிவு இல்லாத  அறியாமையின் செயல்களாகும்.

கடவுள் காரியப்படுவது !

கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில்...

கடவுள் இயற்கை உண்மையான
ஆன்ம ஒளி வடிவமாகியும்..
இயற்கை விளக்கமான அருள் வடிவமாகியும் .
இயற்கை இன்பத்தை தரும் வல்லபம் உடையவராகவும். மனித தேகத்தில் காரிய காரணமாக விளங்கிக் கொண்டு உள்ளவர் தான் கடவுள்.

மேற்கண்ட உண்மைத் தெரியாமல் .தெரிந்து கொள்ளாமல்..

உண்மைக்கு புறம்பாக .மண்.கல்.
தங்கம்.வெள்ளி.
பஞ்சலோகம் முதலிய பொருள்களைக் கொண்டு தத்துவ உருவங்களை பொம்மைகளாக்கி. வான் உயர ஆலயங்களைக் கட்டி...அதன் உள்ளே அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்து.அந்த பொம்மைக்குள்ளே
கடவுள் காரியப்படுவதாக சொல்லுவது மந்த ஞாயம் என்கிறார் வள்ளலார்.
அதிலே கடவுள்  இருப்பதாக சொல்லுவது அறியாமையின் உச்சகட்டம் என்கிறார் வள்ளலார்...

அதைவிட கேவலமான அறியாமையின் செயல்.

அந்த உருவ பொம்மைகளுக்கு மாலை மரியாதை சேலை.வேட்டி. துண்டு துப்பட்டாக்கள் அணிந்தும்...
தங்கம். வெள்ளி. வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்கள். வைர கிரீடம் .போன்றவற்றை அணிந்து அலங்காரம் செய்து...

மேலும் அபிஷேக ஆராதனைகள்.பால்.
பழம்.தேங்காய்.வெத்தலைப்பாக்கு.சூடம்.
விபூதி.குங்குமம்.மற்றும் உணவுப் பொருள்களை கொண்டு
படையல் வைத்து வணங்கி வழிபாடு செய்கிறார்கள்..

மேலும் மனிதர்களுக்கு செய்வது போல் . ஆண் பெண் பொம்மை உருவங்களுக்கு திருமணம் செய்து வைத்து முதல் இரவிற்கும் அனுப்பி வைக்கும் காரியங்களையும் செய்து வருகிறார்கள்...

மேற்படி பொருள்களை கடவுள் விரும்புகிறாரா ?  நீங்கள் படைக்கும் படையலை கடவுள் உண்கிறாரா ? கடவுள் திருமணம் செய்து வைக்க சொன்னாரா ? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள்...

சிலைகளில் கடவுள் தோன்றி அனுக்கிரகிப்பதாகச் சொல்வது மந்த நியாயம் மாயா ஜாலம் என்கிறார் வள்ளலார்.

மனிதர்களும் அந்த அந்த உருவ வழிபாட்டிற்குத் தகுந்தாற்போல்..பச்சை.கருப்பு.மஞ்சள். சிகப்பு.காவி.வெள்ளைபோன்ற ஆடைகள்.
அணிகலன்கள்.மாலைகள்.தாடிவிட்டுக் கொள்வது.மொட்டை அடித்துக் கொள்ளுதல்.அலகு குத்துதல்.அக்கினி மிதித்தல்.
தேர் இழுத்தல்.காவடி எடுத்தல்.விபூதி அணிதல்.நாமம் போடுதல்.குங்குமம் அணிதல் போன்ற பல்வேறு வேடங்கள் போட்டுக் கொள்கிறார்கள்..

இதெல்லாம் படித்தவர்கள்.படிக்காதவர்கள்.அறிவியல்.விஞ்ஞானம்.அணு ஆராய்ச்சியாளர்கள்.
நாட்டை ஆட்சி செய்பவர்கள்.
அதிகாரிகள்.
நீதிமான்கள் போன்ற அனைவரும் கண்மூடித் தனமாக கடைபிடித்து வருகிறார்கள்.

அதிகம் படித்து பட்டம் பெற்ற உயர்ந்த அறிவாளிகளும் கடவுள் கொள்கையில் அறியாமையில் உள்ளார்கள். 

பெரிய அறியாமையில் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை வள்ளலார் படம் பிடித்து காட்டுகின்றார்.

கடவுள் ஒருவரே !

உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்

ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி

இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்

எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.!

என்ற பாடலில் தெளிவாக விளக்குகின்றார் வள்ளலார்..

கடவுள் உருவமானாலும் சரி.
உருவம் இல்லாமல் இருந்தாலும் சரி..
உருவம் அருவமானாலும் சரி ஒரே கடவுள் தான் இருக்க முடியும்.
ஒரே கடவுள் தான் இருக்கின்றார்.
என்பதை உதாரணத்துடன் விளங்க வைக்கின்றார்..

ஒரு உடலுக்கு இரண்டு.மூன்று.ஐந்து உயிர் இருக்கின்றது என்றால் நம்ப முடியுமா ?
நம்பவே முடியாது .
அது உண்மையும் அல்ல..

அதேபோல்  இந்த உலகத்தை தோற்றுவித்தலும்.
இயக்குவித்தலும்.
அடக்குவித்தலும்.
மயக்குவித்தலும்.
தெளிவித்தலும்

ஆகிய தொழில்களை எளிதில் கொடுத்தற்கு உரிய அருள் பூரண சுதந்தரம் உடையவர் ஒருவரே.அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் தான் வள்ளலார்.

கலை உரைத்த கற்பனை கதைகளின் கதாபாத்திரங்களை விட்டு வெளியே வாருங்கள் ...என்கிறார் வள்ளலார்...

பாடல் !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

என்னும் பாடல் வாயிலாக உண்மையை உரக்க உரைத்து மக்களின் நல்வாழ்விற்காக அழைக்கின்றார்.வள்ளலார்....இதுவள்ளலார் வார்த்தை அன்று சத்தியவான் வார்த்தை ...்

  பாடல் !

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!

இனி வருங்காலம் இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நேரடி தொடர்புடைய காலம் .

சாதி.சமயம்.மதங்கள் அற்ற"" சமரச சுத்த சன்மார்க்க சத்திய காலம்"" மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் காலம் உதயமாகி விட்டது..

சிந்தியுங்கள் செயல் படுங்கள்.உண்மை உணருங்கள்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.