திங்கள், 23 அக்டோபர், 2023

மகா உபதேசம் என்னும் பேருபதேசம்!

*மகாஉபதேசம் என்னும் பேருபதேசம்!* 


*1873 ஆம் ஆண்டு ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.!*

*இதுதான் கடைசி வார்த்தை என குறிப்பிடுகிறார் வள்ளலார்*

*இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் - கொஞ்ச காலம் - சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.* 

*விசாரணை என்ன என்பதை மிகத் தெளிவாக பேருபதேத்தில் சொல்லி உள்ளார்,அனைவரும் பல முறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்*

*சிலவற்றை மட்டும் சுருக்கமாக பதிவு செய்கிறேன்!*

*இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*
 *அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.* 

*"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.*

 *ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.*

 *அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும்.*
 *ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும்.*

*ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது அவசியம்.*

*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை*

*என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது யாதெனில் ?தயவு தயவு என்னும் கருணைதான் என்னை தூக்கிவிட்டது*

*இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது*

*மேலும் சொல்கின்றார்!*

*தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.*

 *தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்*

*எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்!*

*இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*மேலும் சொல்லுகின்றார்!*

*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம்.* 

*மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.*

*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.*

*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.*

*எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.*

*சுத்த சன்மார்க்க கொடி ஏற்றிய அன்றுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளைபடி மகா மந்திரத்தின் உண்மையை கீழே கண்டவாறு வெளிப் படுத்துகின்றார் அதுவே*

*அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!* 

என்பதாகும்....

*இதுவே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மகா மந்திரச் சொல்லாகும்*

*மேலும் சொல்கின்றார்!*

*நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.*

*அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.*

*நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்*. 

*இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.* 

*எவ்வாறெனில்: ?*

*ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.*

*சுத்த சன்மார்க்க அன்பர்கள் பேருபதேசத்தில் சொல்லியவாறு   கடைபிடித்து மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம் என்ற சபதத்தை இன்று முதல் ஏற்று வெற்றி பெறுவோம்.*

அன்புடன் ஆன்மநேயன் முனைவர் சுத்த சன்மார்க்க சுடர்
*ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கவனித்துக் கொண்டுள்ளார்!

*கவனித்துக் கொண்டு உள்ளார்!*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் உள்ளார் யாரும் தப்பிக்க முடியாது !*

*என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் !*

*வள்ளலார் பாடல்!*

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.! 

*வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடிக்காமல் காற்றிலே பறக்கவிட்டு ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சமய மத வாதிகளைப்போல் பன்னாத தீமைகளை பண்ணியும், செய்தும் பகராத வன்மொழிகளைப் பேசியும் வருகின்றார்கள்,மேலும் ஒன்று கிடக்க ஒன்றை செய்து கொண்டு உள்ளார்கள், எண்ணாததை எண்ணி வருத்தப்படும் காலம் வரும்,அப்போது அழுது புலம்பினாலும் வேலைக்கு ஆகாது,*

*மரணத்தை வென்ற மகான்!*

*வள்ளலார் மரணத்தை வென்று அருள் ஒளிதேகம் என்னும் ஞானதேகம் பெற்றவர் எங்கும் பிரகாசமாய் திகழ்ந்து இயங்கி கொண்டு இருப்பவர்.*

*வள்ளலார் பாடல்!*

*அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு*

*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*

*மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு*

*மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!*

மேலும்....

பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்

இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே

அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்

நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.! 

மேலும்....

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! 

*என்பன போன்ற பல நூறு பாடல்கள் வாயிலாக தன் னுடைய உடம்பை ஒளிதேகமாக மாற்றிக் கொண்ட விபரத்தையும் விளக்கத்தையும் உண்மையும் தெரியப் படுத்தி உள்ளார்.*

*இவ்வளவு உண்மை நிலை விபரம் யாவும் அறிந்து, தெரிந்து இருந்தும் பொய்யான வள்ளலார் படத்தையும், சிலையும் வைத்து, மாலை சூடி,படையல் வைத்து அபிஷேகம், ஆராதனை, மற்றும் ஆசார சங்கற்ப விகற்பங்கள் யாவும் செய்து வழிபடுவது எந்த விதத்தில் ஞாயம் என்பதை சிந்திக்க வேண்டும்.* 

*மேலே கண்டவாறு வழிபாடு செய்வது தத்துவ சிலை விக்கிரங்களுக்கும்,சமாதி நிலை அடைந்தவர்களுக்கும், இறந்த போன  மனிதர்களுக்கம் செய்யும் வழிபாடுகளாகும்* 

*வள்ளல்பெருமான் என்ற பெயரில் பொய்யான சிலைகளைவைத்து,போட்டோ படத்தை வைத்து  வழிபாடு செய்வது வள்ளலார் கொள்கைகளுக்கு நேர் விரோதமான செயல் என்பதை சன்மார்க்க அன்பர்கள் புரிந்து கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை,புரியவில்லலை.*

*தெரிந்து செய்கிறார்களா ? தெரியாமல் செய்கிறார்களா ? சமய மதவாதிகளின் தூண்டுதலால் செய்கிறார்களா ? என்பது தெரியவில்லை.*

*படம் வேண்டாம் என்பவருக்கே படமா ? சிந்திக்க வேண்டும்!*

*இந்த மாதிரி செயல்களை மக்கள் அறியாமல் செய்வார்கள் என்று தெரிந்தே சன்மார்க்கிகளுக்கு என்றே தனிப் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார்* 

*வள்ளலார் பாடல்!*

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் *உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன்* தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனை நுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்ல நம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்தி மயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.! 

*என்ற பாடல் வாயிலாகத் தெரியப் படுத்துகின்றார்*

*அதாவது கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !* *அவர் ஒளியாக உள்ளார்,அதன் அடையாளமாக புறத்தில் தகரக் கண்ணாடி கூண்டுக்குள் விளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் என்று மிகத் தெளிவாக  சொல்லி உள்ளார்*

*வள்ளலார் சித்தி பெறுவதற்கு முன் அறிவித்த அருள் வாக்கியம்!*

உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து

*இதைத் தடைபடாது ஆராதியுங்கள்,இந்தக் கதவைச் சாத்திவிடப் போகின்றேன்,இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல்,நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய 28,பாசுரம் அடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள்,*

*நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன்,இனி எல்லா உடம்பிலும் புதுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்து அருளியுள்ளார் வள்ளலார்* 

*இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இருந்து இயங்கி கொண்டுள்ளார் அதேபோல் நானும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து இயங்கி கொண்டு இருக்கிறேன் என்பதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் தெரிவிக்கின்றார்.* 

*அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்* 

*வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார்,எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கினாலே போதுமானதாகும்,தனியாக வள்ளலார் படத்தையோ சிலையையோ வணங்குவதாலோ வழிபாடு செய்வதாலோ எந்த பயனும் இல்லை என்பதை தெரிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்தாலே பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்*

*வள்ளலார் பாடல்!*

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

*ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
*எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்*

தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

*மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்*
முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 

*வள்ளல்பெருமான் சொல்லிய ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை கடைபிடித்து, சுத்த சன்மார்க்க  கொள்கையை முழுமையாக கடைபிடித்து அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மய்யம்
*9865939896*

வெள்ளி, 20 அக்டோபர், 2023

கீழ்நிலை சுக்கிலம்! மேல்நிலை சுக்கிலம்!

*மேல்நிலை சுக்கிலம்! கீழ்நிலை சுக்கிலம்!*  

நம் உடம்பில் முக்கியமான இரண்டு ஆற்றல் மிகுந்த திரவம் சுரக்கின்றது.

*ஒன்று குண்டலினியில் இருந்து சுரக்கும் விந்து என்னும் கீழ்நிலை சுக்கிலமாகும்*

*ஒன்று சிரநடு சிற்சபையில் இயங்கும் ஆன்மாவில் இருந்து சுரக்கும் அருள் என்னும் மேல்நிலை சுக்கில அமுதமாகும்*

*கீழ்நிலை சுக்கிலம் என்பது,!*

*நாம் தினமும் உட்கொள்ளும் பஞ்ச பூதகாரிய ஆறுசுவை உணவானது இரைப்பையில் சென்று அங்கு அரைக்கப்பட்டு,சக்கையை மலக்குடலில்தள்ளிவிட்டு, அதில் உண்டாகும் திரவம் அதாவது சத்துப் பொருளை உடம்பிற்கு தேவையான  முக்கிய திரவமாக்கி, அதாவது இரத்தமாக்கி வேதியல் போல் மாற்றமாகி, உடம்பின் கருவிகள் இயக்கத்திற்கு தேவையான இரத்தத்தை எடுத்துக் கொண்டு மீதியை குண்டலினி பைக்கு அனுப்பி விடுகிறது, அங்குதான் இரத்தம்  வீரியமுள்ள சுக்கிலமாக மாற்றப் படுகிறது.*

*பூதகாரிய உணவால் உண்டாகும் கீழ்நிலை சுக்கிலம் என்னும் விந்துவால் உயிர்கள் தோன்றுகிறது, மேலும் உலக  வாழ்க்கையில் ஜீவர்களுக்கு மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை போன்ற ஆசைகளும் அந்த கீழ்நிலை சுக்கிலமான விந்துவால் தோன்றுகிறது,இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மாகவே இருக்கின்றன இந்த ஆசைகளையும் வாழ்க்கை முறையும் சாதாரணமாக தடுக்க முடியுமா ? நிறுத்த முடியுமா ? அடக்க முடியுமா? என்பதும் தான் இதுவரையில் இருந்து வந்த வினாக்கள், இதற்கு சரியான விடைகளோ  விளக்கமோ,பொதுவான வழிகளோ,கொள்கைகளோ எந்த ஒரு ஆன்மீக அருளாளர்களும் ஞானிகளும்,விஞ்ஞான அறிவியல் வல்லுனர்களும் முறையாக சரியாக பதில் அளிக்கவில்லை,மேலும் தெரிந்து கொள்ளவில்லை.*

*உலக உயிர்களின் இன்ப துன்பங்களுக்கு காரணம் ? உடம்பில்  உற்பத்தியாகும் கீழ்நிலை சுக்கிலமான விந்துவே காரண காரியமாக இருக்கின்றது* 

*ஆண்களின் கீழ்நிலை சுக்கிலமான விந்துவில்தான் விந்துவின் தன்மைக்குத் தகுந்தவாறு ஆன்மா வந்து புகுந்து கொள்ளும், ஆன்மா வாழ்வதற்கு அங்குதான் ஜீவன் என்னும் உயிர் தோன்றுகிறது.*

*ஆன்மாவின் வாழ்க்கைக்கு ஜீவன் என்னும் உயிர் தன்மைக்குத் தகுந்தவாறு உடம்பு எடுத்துக் கொள்வதற்காக ஒருபெண்ணின் உடம்பில் உள்ள சோனிதத் திரளின் துவார வழியாக உள்ளே சென்று விடுகிறது. அங்கு கருவறையில் ஏழுவிதமான அணுக்களின் கூட்டுறவால், உபகாரக் கருவி என்னும் உடம்பு கட்டிக் கொடுக்கப் படுகிறது* 

*இதுதான் கீழ்நிலை சுக்கிலத்தின் உயிர் உடம்பு உற்பத்தியாகும் தொடர் கதையாகும்* 

*அழியும் உலகப்  வாழ்க்கை நிறுத்தி அழியாத அருள் வாழ்க்கை வாழவேண்டும் என்பதே எல்லா ஆன்மீக அருளாளர்களின் ஒத்தக் கருத்தாகும்,ஆனாலும் அவற்றை எவ்வாறு பெற வேண்டும் என்பதில்தான்  வெவ்வேறு கருத்துக்களும் போட்டிகளும் குழப்பமும் அதிகமானது.*

*அக் குழப்பங்களை நீக்கி நேர்வழியைக் காட்ட வந்தவர்தான் நமது அருள் தந்தை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் என்பவராகும்*

*வள்ளலார் பாடல் !*

ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்
*என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி*

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்

ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண்டு ஆடேடி பந்து. ஆடேடி!

என்கின்ற பாடல் வாயிலாக தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்

*இந்த பாடலிலே ஊரமுது என்றும் ஆரமுது  என்றும் இரண்டு வகையாக பிரிக்கின்றார்.*

*நாம் தினமும்  உட்கொள்ளும் பஞ்ச பூதகாரிய  உணவினால் உண்டாகும் கீழ்நிலை சுக்கிலமான விந்துதான் ஊரமுது என்பதாகும்,ஊரமுது உற்பத்தியாகும்  வரை மரணம் வந்தே தீரும்,அதனால்  ஒழிந்து அழிந்து  விடுவோம், மீண்டும் பிறப்பு இறப்பு என்னும் அற்ப இன்பம் துன்பம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றார்* 

*மேல்நிலை சுக்கிலம்!* 

*மேல்நிலை சுக்கிலம் என்பது அருள் என்பதாகும் அவை ஆன்மாவில் பாதுகாப்பாக  நிறைந்து வைக்கப் பட்டுள்ளது. அவை ஏழு திரைகளால் மறைக்கப் பட்டுள்ளன, ஏழுதிரைகளை விளக்கும்( நீக்கும்) ரகசியத்தை வள்ளலார் மிகத் தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்.*

*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !*

*இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! என்ற உண்மையை முதலில் அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு அக் கடவுளை தொடர்பு கொள்ள வேண்டும், அந்த உண்மைக் கடவுளால் மட்டுமே,அருளை ( ஆன்மாவை ) மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கி அருளை வழங்க முடியும்.*

*வள்ளலார் பாடல்!*

திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி! 
(அகவல் வரிகள்)

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 

*என்பன போன்ற பல பாடல்களின் வாயிலாகவும் உரைநடைப் பகுதிகளிலும் தெளிவாகத் தெரியப் படுத்தியதோடு அல்லாமல் அதேபோல் வள்ளலார் வாழ்ந்தும் காட்டி உள்ளார்.*

*கீழ்நிலை சுக்கிலமான விந்துவை உற்பத்தியாகாமல் தடுத்தால் மட்டுமே மேல்நிலை சுக்கிலமான அமுதக் கலசத்தை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை விளக்கி, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார் என்பதே சத்தியமான உண்மை*

*புழுக்காத உணவுகள்!*

*கீழ்நிலைச் சுக்கிலமான விந்துவை உற்பத்தியாமல் தடுக்க ஒரே வழி, பஞ்ச பூத புழுக்கின்ற உணவுகளை நிறுத்தி புழுக்காத உணவுகளான தேன், சர்க்கரை ,கற்கண்டு,வெல்லம், அயச் செந்தூரம்,தாமரைபஸ்பம், வெந்நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும், இந்த உணவால் மலஜலம் சுக்கிலம் உற்பத்தி ஆகாது.*

*மேலும் எல்லாம் வல்ல தனித் தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது இடைவிடாது அன்பும், தொடர்பும் கொள்ள வேண்டும் அதாவது தீராத காதல் கொள்ள வேண்டும்,* 

*மேலும் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும், சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையும்,ஜீவகாருண்யம் என்கின்ற உயிர் இரக்கமும் கடைபிடிக்க வேண்டும்.*

*மேலும் எக்காலத்தும்  சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் பற்றாத வண்ணம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்,* 

*உயர்ந்த அறிவுள்ள மனிததேகம் பெற்ற ஆன்மாக்கள் மேலே சொல்லியவாறு கடைபிடித்தால் மட்டுமே  கீழ்நிலை சுக்கிலம் தோன்றாது, அவை தோன்றாதபோது, என்றும் அழியாத மேல்நிலை சுக்கிலமான அருள் பெற்று மரணத்தை வென்று, முத்தேக சித்தி என்னும் பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்*

*அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் கீழே!*

1,அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே!

2,அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே !

3,அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே!

4,அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே!

5,அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே!

6,அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே!

7,அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே!

8,அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே !

9,அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே!

10,அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே!

11,அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே!

*வள்ளலார் பாடல்!*

சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாஞ் சுருங்கி

ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம் என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்

போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த 

சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.!

மேலும்

சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொல்லக்

கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
துண்மையினில் கொண்டு நீவீர்

நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
போலும்அன்றி நினைத்த வாங்கே

பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பேசு வீரே.!

*மேலே உள்ள பாடலை படித்து அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு வாழ்வோம்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !

*பசித்திரு! தனித்திரு! விழித்திரு!*

*மேலே கண்ட மூன்று வார்த்தைகளும் சுத்த சன்மார்க்கத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், இந்த மூன்று வார்த்தைகளிலும் சொல்லியவாறு வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவரோ அவரே சுத்த சன்மார்க்கத்தின் கொள்கையை கடைப்பிடித்து, அருள்பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள.*

*பசித்திரு என்றால்?*

*சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதல்ல!*

*நம்மை நஷ்டம் செய்வது நான்கு! அவை யாவன ?*

*ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் ஆகிய இந்த நான்கிலும் முக்கியமானது ஆகாரம் மைத்துனம் ஆதலால் இவ் இரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும் இந்த இரண்டிலும் முக்கியமானது மைத்துனம் ஆதலால் இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிறோம் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும் (மரணம் அடையும்) பின்பு முக்தி சித்தி அடைவது கூடாது, முத்தி சித்தி அடைவதற்கு இம் மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பது ஆதலால் எவ்விதத் தாயினும் தேகம் நீடித்து இருக்கும் படி பாதுகாத்தல் வேண்டும் என்கின்றார் வள்ளல்பெருமான்.*

*ஆதலால் நாம் உண்ணும் உணவுகள் யாவும் புழுக்கின்ற உணவு  அதாவது மலமாகும் உணவு,ஆதலால் அவ் உணவுகளை உட்கொள்ளாமல், புழுக்காத உணவுகளான தேன், சக்கரை, வெல்லம்,கற்கண்டு, அயச் செந்தூரம்,தாமரைப் பஷ்பம் போன்ற மலம் வராத உணவுகளை உட் கொள்ளவேண்டும் இந்த உணவுகளை உட்கொண்டால் தூக்கம் வராது*

*இந்த பழக்கத்தில் பயின்று உடம்பை சுத்தமாக்கிக் கொண்டு, அருள் உணவு உட்கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வோடு பசியோடு இருக்க வேண்டும் இதுவே,இதுவே பசித்திரு என்பதாகும்*

*தனித்திரு !*

*உலகியலில் வாழ்ந்தாலும் எதிலும் பற்று வைக்காமல் இறை சிந்தனை உடன் தூங்காமல் விழிப்போடு தனித்திருக்க வேண்டும்*

*வள்ளலார் பாடல்!*

தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது
துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ

ஈங்கினி நான் *தனித்திருக்க வேண்டும்* _ ஆதலினால்
என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி

ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குக நீ தோழி
என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே

ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே! 

*என்னும் பாடலிலே தெளிவுப் படுத்துகின்றார்*


*விழித்திரு!*

*விழித்திரு என்பது, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எந்த நேரமும் வரலாம் ஆதலால் விழிப்பு என்ற உணர்வோடு தூங்காமல் விழித்திருக்க வேண்டும்*

தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே

ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - 

ஆக்கமிகத்
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க

வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.!

மேலும்

தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை

நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே

வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்

தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.! 

*எனவே தூங்காதே விழுப்புடன் தனித்து இருந்து அருள் பெற வேண்டும் இதுவே தனித்திரு என்பதாகும்*

*நம் உடம்பில் சிரநடு சிற்சபையில் ஆன்ம பிரகாசமும்,கடவுள் பிரகாசமும் உள்ளது,ஆன்ம கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டும் உள்ளது,மேற்படி பூட்டை அருள் என்கின்ற திறவுகோலைக் கொண்டு திறக்கு வேண்டும்,ஆதலால் மேற்படி அருள் என்பது ஆன்ம இயற்கையால் அடையும். பெருந்தயவு,*

*நாம் பசித்திருந்து,தனித்திருந்து,விழித்திருந்து ஜீவதயவோடு வாழ்ந்து சத்விசாரம் செய்தால்,ஆன்ம இயற்கை பெருந்தயவால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையால் தானே உவந்து (விரும்பி) வந்து ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கி ஆன்மாவின் உள்ஒளியின் வழியாக அருளை வாரி வாரி வழங்குவார்* 

*வள்ளல்பெருமான் பாடல்!*

*ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் சோதி அது.!

மேலும்...

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு - 
சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன்

எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்

*அருள் பசிக்காக காத்திருந்து பசித்திருந்து. தயவுக்காக தனித்திருந்து, சத்விசாரம் செய்ய விழித்திருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெற வேண்டும்.

தொடரும்...

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
9865939896

சாதி சமயம் மதங்களை கைவிட வேண்டும்!

*சாதி சமய மதங்களை கைவிட வேண்டும்!* 

*இயற்கை உண்மைக் கடவுளைத் தொடர்புகொள்ளவும் அருளைப் பெறவும் தகுதியானவர்கள் யார்?*

*கீழே உள்ள 13 நிலைகளைத் தாண்டி மேலே செல்லும் தகுதி உடையவர்கள் மட்டுமே அருளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்*

*வள்ளலார் சொல்லும் நிலைகள்!*

*திரயோதச நிலைகள் யாவெனில்:?*

1. பூதநிலை

2. கரணநிலை

3. பிரகிருதி நிலை

4. மோகினி நிலை

5.அசுத்த மாயாநிலை

6. அசுத்த மகாமாயாநிலை

7. சுத்த மாயாநிலை

8. சுத்த மகாமாயா நிலை

9. சர்வ மகாமாயா நிலை

10. குண்டலி நிலை

11. பிரணவ நிலை

12.பரிக்கிரக நிலை

13.திருவருள் நிலை

*ஆக 13. இதற்கதீதத்தில் சுத்த சிவநிலை. இதற்குச் சத்தி, ஆகாயம், நிலை, வெளி, பிரகாசம், அனுபவம், பதம், இடம் முதலிய பெயருள்ளன.*

மேலும், *வர்னமாகிய எழுத்தாலும், வண்ணமாகிய ரூபத்தாலும், தொழிலாகிய பெயராலும் அனந்தமாக விரியும். இவை யாவும் ராகமென்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும். மேலும் இவைகள் படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படியெனில்: ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.*

*15 ஆம் படியான ஞானயோக அனுபவ நிலைகள்*

1. படிகமேடை

2.ஆயிரத்தெட்டுக் கமல இதழ்

3. ஓங்காரபீடம்

4.குண்டலி வட்டம்

5.ஜோதி ஸ்தம்பம்

6. சுத்தநடனம்

*இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லக்ஷணம்.*

 *சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள்*

*சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.*

*சகஜ நிலை*!

*சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.!* 

*மேலே கண்ட அனுபவ நிலைக்கு பெயர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நிலைகள் என்பதாகும், அந்நிலைகளைப் பெறுவதற்கும் அடைவதற்கும் தடையாக இருப்பவை யாவை எனில்?*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் !*

*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*

*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.* 

*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.!* 

சாதி சமய மதங்களில் எதனிலும்  பற்று வைக்க வேண்டாம் என்று சொல்வதற்கு முக்கிய காரண காரியம் யாதெனில்?

*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை.* 

*சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்திருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.!*  

*மேலும் சொல்லுகின்றார் வள்ளலார்!*

*இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.* 

*அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்:?* 

*கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்*. 

*"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.!* 

*கண்ணைமூடிக் கொண்டு என்றால் குருடர்கள் என்பது பொருள்* 

*இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும்படி வள்ளலார் சொல்லியுள்ளார்.* 

*ஜீவ நேயத்தையும் மனித நேயத்தையும் ஆன்ம நேயத்தையும் பிரித்து உயிர்களை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் சாதி சமய மதங்களை பற்றுஅற விட்டுவிட்டு சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்*

*அவ்வாறு பின்பற்றுபவர்களே அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழும் தகுதி பெற்றவர்களாவார்கள்.*

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
9865939896

திருவருள் நெறி !

*திருவருள் நெறி !*

*உயர்ந்த அறிவு பெற்ற மனித பிறப்பில்  இவ்வுலக வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து, இறுதியில் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று ஆன்ம இன்ப லாபமான இம்மை இன்ப வாழ்வு,மறுமை இன்ப வாழ்க ,பேரின்ப வாழ்வு என்னும் முத்தேக சித்திப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம் மயமாக மாறுதலே மனித பிறப்பின் லட்சியமாகும்*

*இவ் வாழ்வு வாழும் வழியைக் காட்டுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் ஞான மார்க்கமாகும்.அவற்றிற்கு அருள் நெறி என்றும்,சுத்த சன்மார்க்க நன்னெறி என்றும்,சுத்த சன்மார்க்க தனிநெறி என்றும்,திருநெறி ஒன்றே என்றும்,அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சிவநெறி என்றும் வள்ளலார் சொல்லி உள்ளார்*

*வள்ளலார் பாடல்!* 

திருநெறி ஒன் றேஅதுதான் சமரச சன் மார்க்கச்
சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு. 

வருநெறியில் எனையாட்கொண்டு *அருளமுதம் அளித்து*
*வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்*

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 

*மேற் கண்ட பாடலில் கண்ட கண்ட பொய் நெறியில் (கரு நெறியில்) சென்று அழிந்து போகாமல்,மெய் நெறியான சுத்த சன்மார்க்கத்தில் சேர்ந்து அருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம் வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கின்றார் வள்ளலார்*,

*சாதி சமயம்,மதம் கடந்த உலகப் பொது நெறியே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தன்நெறி என்கின்ற உண்மையை மனித குலத்திற்காக சொல்லுகின்றேன்  என்று அழுத்தமாக சொல்கின்றார் வள்ளல்பெருமான்*

*அருளைப் பெறும் வழியை எளிய முறையில் சொல்லுகின்றார்*

*கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்?* 

*அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.*

*அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.*

*அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது?*

*காண்பார் காணுமிடம் காணப்படுமிடம்,*

 *அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம்*, 

*தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம்*, 

*சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம்,*

*அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம்,*

 *கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம்,* 

*முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம்,* 

*கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம்*
 
*முதலியவாய் விளங்கும்.*

*இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன?* 

*புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.*

*நன்மை தீமை என்பவை யாவை?*

*நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம்.* 

*புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும்,* *பின் சுகமாயும் விளங்கும்* 

*பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.*

*துன்பத்தையும் துக்கத்தையும் தொலைப்பதற்கு ஜீவகாருண்யமும்,அருளைப்பெறுவதற்கு இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் சத்விசாரமும் செய்து அருளைப் பெற்று இன்புறலாம்* 

*வள்ளலார் பாடல்!*

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

தொடரும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர்*
*ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896

திருவருள் நெறி !

*சாதி சமய மதங்களை கைவிட வேண்டும்!* 

*இயற்கை உண்மைக் கடவுளைத் தொடர்புகொள்ளவும் அருளைப் பெறவும் தகுதியானவர்கள் யார்?*

*கீழே உள்ள 13 நிலைகளைத் தாண்டி மேலே செல்லும் தகுதி உடையவர்கள் மட்டுமே அருளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்*

*வள்ளலார் சொல்லும் நிலைகள்!*

*திரயோதச நிலைகள் யாவெனில்:?*

1. பூதநிலை

2. கரணநிலை

3. பிரகிருதி நிலை

4. மோகினி நிலை

5.அசுத்த மாயாநிலை

6. அசுத்த மகாமாயாநிலை

7. சுத்த மாயாநிலை

8. சுத்த மகாமாயா நிலை

9. சர்வ மகாமாயா நிலை

10. குண்டலி நிலை

11. பிரணவ நிலை

12.பரிக்கிரக நிலை

13.திருவருள் நிலை

*ஆக 13. இதற்கதீதத்தில் சுத்த சிவநிலை. இதற்குச் சத்தி, ஆகாயம், நிலை, வெளி, பிரகாசம், அனுபவம், பதம், இடம் முதலிய பெயருள்ளன.*

மேலும், *வர்னமாகிய எழுத்தாலும், வண்ணமாகிய ரூபத்தாலும், தொழிலாகிய பெயராலும் அனந்தமாக விரியும். இவை யாவும் ராகமென்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும். மேலும் இவைகள் படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படியெனில்: ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.*

*15 ஆம் படியான ஞானயோக அனுபவ நிலைகள்*

1. படிகமேடை

2.ஆயிரத்தெட்டுக் கமல இதழ்

3. ஓங்காரபீடம்

4.குண்டலி வட்டம்

5.ஜோதி ஸ்தம்பம்

6. சுத்தநடனம்

*இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லக்ஷணம்.*

 *சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள்*

*சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.*

*சகஜ நிலை*!

*சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.!* 

*மேலே கண்ட அனுபவ நிலைக்கு பெயர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நிலைகள் என்பதாகும், அந்நிலைகளைப் பெறுவதற்கும் அடைவதற்கும் தடையாக இருப்பவை யாவை எனில்?*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் !*

*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*

*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.* 

*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.!* 

சாதி சமய மதங்களில் எதனிலும்  பற்று வைக்க வேண்டாம் என்று சொல்வதற்கு முக்கிய காரண காரியம் யாதெனில்?

*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை.* 

*சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்திருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.!*  

*மேலும் சொல்லுகின்றார் வள்ளலார்!*

*இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.* 

*அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்:?* 

*கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்*. 

*"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.!* 

*கண்ணைமூடிக் கொண்டு என்றால் குருடர்கள் என்பது பொருள்* 

*இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும்படி வள்ளலார் சொல்லியுள்ளார்.* 

*ஜீவ நேயத்தையும் மனித நேயத்தையும் ஆன்ம நேயத்தையும் பிரித்து உயிர்களை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் சாதி சமய மதங்களை பற்றுஅற விட்டுவிட்டு சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்*

*அவ்வாறு பின்பற்றுபவர்களே அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழும் தகுதி பெற்றவர்களாவார்கள்.*

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
9865939896