சனி, 28 ஏப்ரல், 2018

பசிக்கு சாதி சமயம் மதம் என்ற பேதம் தெரியாது !

பசிக்கு சாதி சமயம் மதம் என்ற பேதம் தெரியாது.!


பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல்,

எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம் -

சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசிநிவர்த்தி செய்து கொள்ளத் தக்க மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசிவந்தபோது பசிநிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம்.

பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும் பூர்வகர்மத்தாலும் அஜாக்கிரதையாலும் அச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு தான் உள்ளே போக வேண்டும்.

எக்காலத்தும் அழியாத பேரின்பத்தை காலம் உள்ள போதே அந்த இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்.

ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல்,

வள்ளலார் பாடல் !

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளேகளிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம்

தருமச்சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியேசமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.!

என்ற பாடல் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார்...வள்ளலார்..

எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ வேண்டும்.

மோட்ச வீட்டின் கதவை திறக்க சாவி வேண்டும்.சாவியைப் பெற்றுக் கொள்வது தான் ஜீவகாருண்யம்.ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப் படுகின்ற.பக்தி தியானம்.தவம்.யோகம் போன்ற எச்செயல்களாக இருந்தாலும் வெற்று மாய ஜாலங்கள் என்கிறார் வள்ளலார்.

பசி என்பது. எல்லா உயிர்களுக்கும் பொதுவாக. இறைவனால் கொடுக்கப்பட்ட உபகாரக்கருவி. எனவே ஜீவர்களுக்குப் பசியைப் போக்குகின்ற போது.நம்முடைய பசியை இறைவன் போக்குவார்.

நம்முடைய பூத உணவான பொருள் உணவு உட்கொள்ளுகின்ற வரை.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகாது.திரைகள் விலகாதவரை. அருள் உணவு ஆன்மாவில் இருந்து சுரக்காது.

ஜீவகாருண்யம் என்பது இயற்கையாக செயல் பட வேண்டும். செயற்கையாக செயல்படக்கூடாது.

அதனால் தான் வள்ளலார் "' எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞாஜோதி'''  என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

இயற்கை என்பது சாதி.சமயம்.மதம்.உற்றவர்.பெற்றவர்.் உறவினர் நண்பர்.போன்ற எந்த பேதமும்் இல்லாமல் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை  என்பதை அறிந்து செயல்படுவதுதான் இயற்கையான.உண்மையான ஜீவகாருண்யம் என்பதாகும்.

இறைவன் இயற்கை உண்மையானவன்.
அதேபோல் நாமும் இயற்கை உண்மையுடன். பின்பற்ற வேண்டும்.

இயற்கையான ஜீவகாருண்யத்தால் இயற்கை விளக்கம் என்கின்ற அருள்  விளக்கமானது.இயற்கையாக சுரக்கும்.இயற்கை விளக்கமான அருள் சுரந்தால் மட்டுமே .பஞ்ச பூதங்களால் ஆன அசுத்த உடம்பு .சுத்த தேகம்.பிரணவதேகம்.ஞான தேகமாக மாற்றம் அடைந்து.இயற்கை இன்பம் பெறுகின்ற சுத்த பிரணவ ஞான தேகம் என்கின்ற அருள் தேகம் உண்டாகும்...அருள் தேகம் தான் இயற்கை இன்பத்தை அனுபவிக்கும் தகுதி உடையதாகும்...

இயற்கை உண்மையுடன் ஜீவகாருண்யம் செய்தால் மட்டுமே இயற்கை விளக்கமான அருள் சுரக்கும்.அருள் கிடைத்தால் மட்டுமே.இயற்கை இன்பம் கிடைக்கும். செயற்கை உடம்பானது இயற்கை உடம்பான ஒளிதேகமாக மாற்றம் அடையும்.

அதன் பின்பு கிடைக்கும் இன்பம்தான் இயற்கை இன்பம் என்பதாகும்.அதற்கு பெயர்தான் .பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

இந்த இன்பத்தை மனித தேகம் பெற்ற எல்லோரும் அடைய வேண்டும் என்பது தான் வள்ளலாரின் பேராசையாகும். இறைவன் விருப்பமும் அதுவேயாகும்.

வள்ளலாரின் அருள் வாய்மையை பின்பற்றி வாழ்ந்து காட்டுவோம்.
மற்றவர்களுக்கும் அந்த புனிதமான சுத்த சன்மார்க்க வழியைப் பற்ற துணையாக இருப்போம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 26 ஏப்ரல், 2018

சாதி சமயம் மதம் !

சாதி.சமயம். மதங்கள் !

சாதி சமய மதங்கள் உலகில் உள்ளவரை மனிதன் மனிதனாக வாழவே முடியாது...

மனித குலத்தை.மனித குணத்தை மாற்றி விலங்கு குணத்திற்கு மாற்றியது தான் சாதி சமய மதங்களின் கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாமே....சமய மதவாதிகளின் சுயநல சூழ்ச்சிதான் எல்லாவற்றுக்கும் காரண காரியமாக அமைந்துள்ளன..

அவைகளின் உண்மைத் தெரியாமல் மனிதனே மனிதன் .சாதியின் பெயரால்.சமயத்தின் பெயரால்.மத்த்தின் பெயரால் பேய்பிடுத்தவர்கள் போல் .
குழந்தைதனமாக.
ஒருவரை ஒருவர்
மனித நேயம் இல்லாமல்.ஆன்ம நேயம் இல்லாமல்.போரிட்டு  சண்டையிட்டு வீணாக அழிந்து கொண்டு உள்ளார்கள்..

மனித இனத்திற்கு உண்மையைத் தெரிவித்து.சாதி.சமய மத வெறியில் இருந்து விடுவித்து.மனித குலத்தை காப்பாற்றி.சரிசம்மாக வாழ வைக்கவே .மனிதனை சமரச ஒழுக்கத்திற்கு  கொண்டு செல்லவே வள்ளலாரை இறைவன்.இவ்வுலகிற்கு வருவிக்க உற்றார்....

அதற்காகவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்...அதன் கிளைகளாக.
சன்மார்க்கிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களை அமைத்து.. சங்கத்தின் வாயிலாக சன்மார்க்கிகள் தங்களால் முடிந்த. ஜீவகாருண்ய பணியும்.சத்விசாரப்பணியும் இடைவிடாமல் செவ்வனே செய்து வருகிறார்கள்..

பொய்யான சாதி சமய மதங்கள் !

பொய்யான சாதி சமய மதங்களை. பொய்யான கடவுள்களைப் பொய் தான் என்று புரியவைத்து .தெரியவைத்து.அறியவைத்து சொல்லித்தான் மக்களைத் திருத்த வேண்டும்...பொய்யான ஒழுக்கங்களை .பொய்யான வழிப்பாட்டு முறைகளைப் பொய் என்று சொல்லித்தான் மக்களை நல்வழிக்கு கொண்டு வரவேண்டும்...

இந்த உண்மைகளை சில எடுத்துச் சொன்னால் .சுயநலம் உள்ள சாதி.சமய.மதவாதிகளுக்கு சொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்..எதிர்ப்பதாகவும் இருக்கும்....அவற்றைப்பற்றி கவலையோ.வருத்தமோ .வெறுப்போ கொள்ளாமல் சுத்த சன்மார்க்கிகள் தங்கள் கடமையை கடமைத் தவறாமல் ஒழுக்க நெறியோடு கடைபிடித்து செயலாற்ற வேண்டும்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகள் மட்டுமே.உலக மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு செல்ல முடியும்.மக்களை சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை பின்பற்ற வைத்து..  காப்பாற்ற வழிவகை செய்யும் என்பதை மக்களுக்கு புரியும்படி போதிக்க வேண்டும்....

நமக்கு எதிர்ப்புக்கள்.தொல்லைகள்.விரோதங்கள்.
துன்புறுத்தல்கள்.எதிர்வாதங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்...அவற்றை ஈடுகட்டி செயல்பட  நாம் தயார்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேத முற்று அங்கும்இங்கும்போருற் று இறந்துவீண் போயினார் இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீஎன்பிள்ளை ஆதலாலேஇவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியேநிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதி நடராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக இறை உண்மையின் வாக்கு மூலமான அருள் செய்தியை வெளிப்படுத்துகின்றார்.

உலகம் சுகநிலைப் பெற வேண்டும் ..என்பிள்ளை நீ...ஆதலால் இந்த வேலையை புரிக.. அதாவது செய்க என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணையாகும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

இன்னும் மக்கள் வீண்போகாதபடி சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்து ..எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று சுகநிலை அடைந்து.மரணத்தை வென்று. வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்...

எனவே சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் கட்டளைப்படி துணிவுடன் செயல்பட வேண்டும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்றும் தோன்றா துணையாக நம்முடன்  இருந்து நம்மை இயக்கிக் கொண்டே இருப்பார்....

வள்ளலார் பாடல் !


துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தேசுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கேசுதந்தரம தானது

உலகில்வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்வாழ்வெலாம் பெற்றுமிகவும்மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனை

உன்றன்மனநினைப் பின்படிக்கேஅன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளையாடுக

அருட்சோதியாம்ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்ஆணைநம் ஆணைஎன்றே

இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்திசைவுடன் இருந்தகுருவேஎல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்இலங்குநட ராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக ஐந்தொழில் வல்லபத்தை வள்ளலாருக்கு இறைவன் ஏன் தந்தார் எதற்காக  தந்துள்ளார் என்பதை விளக்கம் தந்துள்ளது மேலே கண்ட பாடல் வரிகள்..படித்து பயன் பெறுவோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

சாதி சமயம் மதம் !

சாதி.சமயம். மதங்கள் !

சாதி சமய மதங்கள் உலகில் உள்ளவரை மனிதன் மனிதனாக வாழவே முடியாது...

மனித குலத்தை.மனித குணத்தை மாற்றி விலங்கு குணத்திற்கு மாற்றியது தான் சாதி சமய மதங்களின் கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாமே....சமய மதவாதிகளின் சுயநல சூழ்ச்சிதான் எல்லாவற்றுக்கும் காரண காரியமாக அமைந்துள்ளன..

அவைகளின் உண்மைத் தெரியாமல் மனிதனே மனிதன் .சாதியின் பெயரால்.சமயத்தின் பெயரால்.மத்த்தின் பெயரால் பேய்பிடுத்தவர்கள் போல் .
குழந்தைதனமாக.
ஒருவரை ஒருவர்
மனித நேயம் இல்லாமல்.ஆன்ம நேயம் இல்லாமல்.போரிட்டு  சண்டையிட்டு வீணாக அழிந்து கொண்டு உள்ளார்கள்..

மனித இனத்திற்கு உண்மையைத் தெரிவித்து.சாதி.சமய மத வெறியில் இருந்து விடுவித்து.மனித குலத்தை காப்பாற்றி.சரிசம்மாக வாழ வைக்கவே .மனிதனை சமரச ஒழுக்கத்திற்கு  கொண்டு செல்லவே வள்ளலாரை இறைவன்.இவ்வுலகிற்கு வருவிக்க உற்றார்....

அதற்காகவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்...அதன் கிளைகளாக.
சன்மார்க்கிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களை அமைத்து.. சங்கத்தின் வாயிலாக சன்மார்க்கிகள் தங்களால் முடிந்த. ஜீவகாருண்ய பணியும்.சத்விசாரப்பணியும் இடைவிடாமல் செவ்வனே செய்து வருகிறார்கள்..

பொய்யான சாதி சமய மதங்கள் !

பொய்யான சாதி சமய மதங்களை. பொய்யான கடவுள்களைப் பொய் தான் என்று புரியவைத்து .தெரியவைத்து.அறியவைத்து சொல்லித்தான் மக்களைத் திருத்த வேண்டும்...பொய்யான ஒழுக்கங்களை .பொய்யான வழிப்பாட்டு முறைகளைப் பொய் என்று சொல்லித்தான் மக்களை நல்வழிக்கு கொண்டு வரவேண்டும்...

இந்த உண்மைகளை சில எடுத்துச் சொன்னால் .சுயநலம் உள்ள சாதி.சமய.மதவாதிகளுக்கு சொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்..எதிர்ப்பதாகவும் இருக்கும்....அவற்றைப்பற்றி கவலையோ.வருத்தமோ .வெறுப்போ கொள்ளாமல் சுத்த சன்மார்க்கிகள் தங்கள் கடமையை கடமைத் தவறாமல் ஒழுக்க நெறியோடு கடைபிடித்து செயலாற்ற வேண்டும்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகள் மட்டுமே.உலக மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு செல்ல முடியும்.மக்களை சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை பின்பற்ற வைத்து..  காப்பாற்ற வழிவகை செய்யும் என்பதை மக்களுக்கு புரியும்படி போதிக்க வேண்டும்....

நமக்கு எதிர்ப்புக்கள்.தொல்லைகள்.விரோதங்கள்.
துன்புறுத்தல்கள்.எதிர்வாதங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்...அவற்றை ஈடுகட்டி செயல்பட  நாம் தயார்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேத முற்று அங்கும்இங்கும்போருற் று இறந்துவீண் போயினார் இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீஎன்பிள்ளை ஆதலாலேஇவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியேநிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதி நடராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக இறை உண்மையின் வாக்கு மூலமான அருள் செய்தியை வெளிப்படுத்துகின்றார்.

உலகம் சுகநிலைப் பெற வேண்டும் ..என்பிள்ளை நீ...ஆதலால் இந்த வேலையை புரிக.. அதாவது செய்க என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணையாகும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

இன்னும் மக்கள் வீண்போகாதபடி சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்து ..எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று சுகநிலை அடைந்து.மரணத்தை வென்று. வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்...

எனவே சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் கட்டளைப்படி துணிவுடன் செயல்பட வேண்டும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்றும் தோன்றா துணையாக நம்முடன்  இருந்து நம்மை இயக்கிக் கொண்டே இருப்பார்....

வள்ளலார் பாடல் !


துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தேசுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கேசுதந்தரம தானது

உலகில்வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்வாழ்வெலாம் பெற்றுமிகவும்மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனை

உன்றன்மனநினைப் பின்படிக்கேஅன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளையாடுக

அருட்சோதியாம்ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்ஆணைநம் ஆணைஎன்றே

இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்திசைவுடன் இருந்தகுருவேஎல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்இலங்குநட ராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக ஐந்தொழில் வல்லபத்தை வள்ளலாருக்கு இறைவன் ஏன் தந்தார் எதற்காக  தந்துள்ளார் என்பதை விளக்கம் தந்துள்ளது மேலே கண்ட பாடல் வரிகள்..படித்து பயன் பெறுவோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அகவல் நாள் உண்மைதான் ?.

ஆன்ம நேய அன்புள்ள நம்மவர்களுக்கு வந்தனம்.!

சித்திரை மாதம் 8 ஆம் தேதி.21-04-2018.ஆம் நாள் தான் ஒரே இரவில்  அருட்பெருஞ் ஜோதி அகவல் எழுதிய நாள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது.

யார் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை.
யூகத்தின் அடிப்படையில் சொல்லி உள்ளார்கள்....

ஆறாம் திருமறை  முழுவதும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்ல வள்ளலார் எழுதுகின்றார்...
அதனால்தான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்கின்றார்...

ஆறாம் திருமுறை எழுதியது முழுவதும்.வள்ளலார் உடன் இருந்த சன்மார்க்க அன்பர்களுக்கும். வெளியில் உள்ள எவருக்கும் தெரியாது ..

வள்ளலார் சித்திபெற்ற பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்புதான் சன்மார்க்க சான்றோர்களால்.
திருஅருட்பா
ஆறாம் திருமுறை  வெளியிடப்பட்டது..

எனவே வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது தான் சன்மார்க்கிகளின் சத்திய ஒழுக்கம் நிறைந்த செயல்களாக இருக்க வேண்டும்..

சமய மத வாதிகள் போல் உண்மைத் தெரியாமல்.பொய் உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் போல் செயல் படுவது அறியாமையாகும்...

சுத்த சன்மார்க்கத்திற்கு தடையாக உள்ள எந்த காரியங்களையும் செய்தாலும் தவறான வழிகாட்டுதல் களாக மாறிவிடும்.

அகவல் படியுங்கள் நல்லது தான்..ஆதாரம் இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம் என்பது ஆண்டவரின் ஆணையாகும்...

அதனால்தான் ஆடாதீர் அசையாதீர் வேறு ஒன்றை நாடாதீர்.பொய் உலகை நம்பாதீர் என்கின்றார் வள்ளலார்...

சரியான விளக்கம் அடுத்த கட்டுரையில் வெளியிடுகிறேன்.

தொடரும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 18 ஏப்ரல், 2018

ஆன்மாவின் குடும்பம் !

*ஆன்மாவின் குடும்பம் !*

ஆன்மாவிற்கு மனைவிமார்கள்   மூன்று பேர்

***அவர்களின் பெயர் ஆணவம் ,மாயை ,
கன்மம்***. . . . . .

இந்த மூவறைத்தான் மூன்று மலங்கள் என்று சமயங்களில் சொல்லப்படுகின்றது.

வள்ளலார் ஐந்து மலங்கள் என்று சொல்லுகின்றார்.அவை.ஆணவம் மாயை.மாமாயை.பெருமாயை.கன்மம்.
என்பதாகும்.

வள்ளலார் சொல்லும் விபரம் வருமாறு !

ஆன்மாவின் முதல் மனைவி ஆணவம் என்பதாகும்.

ஆணவத்திற்கு பிறந்தது ஒரு குழந்தை அதன் பெயர் அஞ்ஞானம் என்றும் ,   ஜீவன் என்றும் உயிர் .என்றும் பெயராகும். .

இரண்டாவது மனைவி மாயை ! மாயையைக்குப்  பிறந்த குழந்தைகள் நான்கு பேர், அவர்கள் பெயர்  ,
மனம் புத்தி, சித்தம் ,அகங்காரம் என்பவர்களாகும்

மூன்றாவது மனைவி காமியம் என்றும் கன்மம் என்று பெயர்.!

கன்மத்திற்குப் பிறந்த குழந்தைகள் சத்துவம் ,ராஜசம் ,,தாமசம் என்னும் மூன்று குழந்தைகள் அவைதான் மூன்று குணங்கள் .என்பதாகும் ,

குடும்ப உறுப்பினர்கள் ஆன்மாவை சேர்த்து 12, பண்ணிரெண்டு நபர்கள் .

ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்தில் வாழ்வதற்கு மாயையினால் தான் உடம்பு என்னும் வாடகை வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது

உடம்பு வாடகை வீடு !

இந்த உலகத்தில் ஆன்மாவின் குடும்பம் வாழவதற்கு வீடு வேண்டும் .வீடுதான் பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பாகும்.அதற்கு வாடகை வீடு(குடிக்கூலிவீடு) என்று பெயர் ,இந்த வீட்டின் தலைவர்கள் மூன்று பேர் ,
அவர்களின் பெயர் ,வாதம் பித்தம் சிலேஷ்மம் என்பதாகும் ,

ஆன்மா வாடகை உடம்பு என்னும் வீட்டில் குடித்தனம் நடத்த தினமும் மூன்று வேலையும் உணவு என்னும்  பொருள் வாடகையாக கொடுக்க வேண்டும் .

வாடகை வசூல் செய்பவர்கள் மூன்று பேர் ,அவர்கள் தான் வாதம் பித்தம் சிலேஷ்மங்கள் என்னும் தயவே இல்லாமல் தினமும் வசூல் செய்பவர்கள்

வாடகை என்பது தான் உணவு.

பிண்டம் என்னும் பெரும் கூலி வாங்குபவர்கள் .
இவர்கள் செய்யும் கொடுமைகள் அளவில் அடங்காதது ,இவர்களுக்காக உழைத்து உழைத்து வாழ்நாள் எல்லாம் வருந்தி வருந்தி ,அலைந்து அலைந்து ,திரிந்து திரிந்து ,வயது முதிர்ந்து நோய் வாய்பட்டு இறுதியில்.உணவு என்னும் வாடகை கொடுக்க முடியாமல் மரணம் வந்து விடுகின்றது.

வீட்டை விட்டு ஆன்மா வெளியேறி வேறு வாடகை வீட்டிற்கு செல்வதுதான் மறுபிறப்பு என்பதாகும்.

மேலும் வழி தெரியாமல் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வாழந்து வாழ்ந்து.பிறவி எடுத்துக்  கொண்டே இருக்கின்றோம். .

உணவு என்னும் வாடகை கொடுக்காமல்.
அருளைப்பெற்று சொந்த வீடாக மாற்ற வழியைச் சொல்லிக் கொடுப்பதுதான் .வள்ளலார் கற்றுக் கொடுக்கும் சாகாக்கல்வி என்பதாகும்.

சாகாக்கல்வி கற்று தேர்ச்சி பெற்றால் தான் அருள் என்னும் உணவு கிடைக்கும்.அருள் உணவு கிடைக்கும் வரை பொருள் உணவு அவசியம் தேவை.்

உணவு கொடுத்துக் கொண்டே இருந்தாலும் மரணம் வந்துவிடும்.கொடுக்காமல் இருந்தாலும் மரணம் வந்துவிடும்.

இவ்வுலகில் வாழ்வதற்கு பொருள் உணவு வேண்டும். இறைவன் உலகத்திற்கு செல்ல அருள் உணவு வேண்டும்.

அருள் உணவு உட்கொண்டால் மட்டுமே மரணத்தை வென்று.என்றும் அழியாத பேரின்ப சித்திப்  பெருவாழ்வில் வாழ முடியும்..

இந்த வாழ்வு வாழும் வகை தெரியாமல்.சமய  மதவாதிகள் வந்து மக்களைக் குழப்பி விட்டார்கள்.மக்களும் உண்மைத் தெரியாமல் இன்றுவரை பைத்தியம் பிடித்தவர்கள் போல் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் சொல்லுவதை கவனியுங்கள்....

மதவாதிகள் வருகை !

மற்போர்க்கு கருதி வந்தவர் போல
ஒதும் வேதாந்தம் உரைப்பவர் சிலபேர்

வாள் போருக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்

தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதிகாசத்தை இசைப்பவர் சிலபேர்

உலக்கைப் போரை உற்றார் போல
 இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்

கற்போர் விளக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்

வாய்ப் போருக்கு வந்தவர் போல
விவகாரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போருக்கு வந்தவர் போல
மத தூஷணைகள் வழங்குவர் சிலபேர்

கட் குடியர் வந்து கலக்குதல் போலக்்
 காம நூலைக் கழற்றுவர் சிலபேர்

விழற்கு நீரை விடுவார் போல
வீண் கதை பேச விழைவார் சில பேர்

இவர்கள் முன்பு நான் என்ன செய்ய !

இவர்கள் முன்னே இவர்களுக்கு ஏற்ப குரல் கம்மிடவும் ,குறுநா உலரவும் ,அழலை எழவும் அவரவர் தம்பால்

சமயோதிதமாய்ச் சந்ததம் பேசி இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன் .என்று வள்ளலார் "குடும்ப கோரம் "என்ற தலைப்பில் பதிவு செய்து உள்ளார் .

அடுத்து நித்திய கருமம் !

இந்த ஆன்மா என்ற குடும்பத்தில் நித்தியம் செய்ய வேண்டிய கருமங்கள் உள்ளன .

தினமும் மனையின் பின் புறத்தே ஏகிக் கலக்கும் மலத்தைத் கடிதே கழித்துக்

கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று பல்லில் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல ,வெண் சோமனைத் துவைத்து ,நன்னீர் ஆடி நறுமலர் கொய்து .தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்

பாவையை வைத்துப் பாடி ஆடும் சிறாரைப் போல செய்பணி யாற்றி ,

மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல் வெண்ணீர் அதனை விளங்கப் பூசி ,புகழ் ருத்தராட்சி மாலையைப் உருட்டி உருட்டிக் குரண்டகம் போன்று குறித்த யோகம் செய்து

செய்த பின்னர் சிறிது நேரம் தூக்கம் வரும்போது பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி ,ஊன் பிண்டத்திற்கு உறு பிண்டம் ஈந்து ,குடிக்கூலிக் கடனை குறையறத் தீர்த்துப் பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது இதுவே .தொடர்ந்து கொண்டே இருக்கும் மனித
வாழ்க்கை யாகும் .

இதுதான் இன்று உள்ள உலகியல் வாழ்க்கை ,

இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து
விடுபட்டு.உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெரு வாழ்க்கை வாழ வேண்டும் எனபதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்தான வள்ளலார் .

வள்ளலார்  காட்டிய பாதை தான் நேர் பாதையாகும் .அதுதான் " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்னும் திரு நெறியாகும். உண்மையான.தந்தையாகிய **அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை** அறிந்து அருளைப் பெற்று உயிரையும் உடம்பையும் அழியாமல் மாற்றிக் கொள்ளும் வழியாகும்.

இதுவே மரணத்தை வெல்லும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமும் *சத்விசாரம்* என்னும் இறைவன் தொடர்பும் வேண்டும்.

இந்தப் பாதையில் சாதி் சமயம். மதம் இனம் மொழி் நாடு போன்ற பேதங்கள் இல்லாத பொது நெறியாகும்.புதிய பாதையாகும்.

ஒரே கடவுள் என்ற உண்மைக் கொள்கை உடையது .

***அந்த ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்*** .அவர் உருவம் அற்றவர் ,அருள் ஒளியாக அருள் பிரகாசமாக விளங்கிக் கொண்டு உள்ளவர் .

அவரதான் தாயாக தந்தையாக நம்மை ஆண்டு கொண்டு உள்ளவர் .இதுவரையில் நமக்கு தெரியாமல் இருந்தவர் .வள்ளலார் வந்து தான் அருள் தரும் உண்மைத் தந்தையை நமக்கு காட்டி உள்ளார் .

இனிமேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு நாம் அனைவரும் அருளைப்பெற்று.வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றி மகிழ்ச்சியுடன் வாழவோம் .

பூத உடம்பை சொந்த வீடான அருள் உடம்பாக மாற்ற சில பல உளவுகள் சொல்லி உள்ளார்.அந்த உளவுப்பற்றி திருஅருட்பாவில் பல இடங்களில் சொல்லி உள்ளார்..

அந்த உளவு என்ன என்று தெரியாமல் இருக்கும் வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்...

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

*உளவினில்* அறிந்தால்  ஒழிய  மற்று அளக்கின் அளவினில் அளவு அருட்பெருஞ்ஜோதி !

மேலும்

உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண *உளவு* எனக்கே உரைத்தானை
உணரார் பாட்டைக்

கொள்ளானை என்பாட்டைக் குறிக்கும் கொண்டானைக் கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத்

தள்ளானைக் கொலை புலையைத் தள்ளா தாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி

எள்ளானை யிடர் தவிர்த்து இங்கு என்னையாண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !

என்றும் மேலும்..

சேர்ந்திடவே யொருப்படுமின் சமரச சன்மார்க்கம் திருநெறியே பெரு நெறியாஞ் சித்தி எலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் *உளவை* அறிந்திலிரே

வாழ்ந்த கடல் உலகறிய மரணம் முண்டே யந்தோ மரணம் என்றாற் சடம் எனும்ஓர் திரணமுஞ் சம்மதியாது

சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாங் கண்ணர்
தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே !

என்று பல *உளவு* களைச் சொல்லி உள்ளார்.அந்த உளவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

மேலும் அகவலில்...

பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே !
பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே !
சிவரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே நவநிலை காட்டிய ஞான சற்குருவே !

என்று உளவையும் ரகசியத்தையும் தெளிவுப் படுத்தி உள்ளார்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அந்த உளவை அறிந்து கொண்டு அருளைப் பூரணமாகப் பெற்று வள்ளல் பெருமான் மரணத்தை வென்று ஒளி உடம்பாக தன் உடம்பை மாற்றிக் கொண்டார்.

நாமும் அந்த உளவைத் தெரிந்து கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம் .

*நாம் இதுவரையில் உளவு தெரியாமல் .மரணத்தை வெல்லத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றோம்*

இதுவே ஆன்மாவின் குடும்ப வரலாறாகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

தொடரும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழ் மொழியின் சிறப்பு !


வள்ளலாரின் தமிழ் பற்று !

வள்ளல் பெருமானார் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 அருட்பெருஞ்ஜோதி  அகவல் எழுதும்போது ஒவ்வொரு பக்கத்திற்கும் தமிழிலேயே எண்களை குறித்துள்ளார்.இதன் மூலம் நமது வள்ளல் பெருமானாரின் தமிழ்ப் பற்றை உணர்ந்துகொள்ளமுடியும். மேலும் அகவலில் அ முதல் ஔ வரை அகவல் வரி வருமிடத்தில் ' இ' க்கு அடுத்து 'ஈ' என்பதற்கு பதிலாக இ யில் உள்ள மேல் கோட்டை மேல் பக்கமாக சுழித்து விட்டிருப்பார்.கி,கீ போல. இது அந்த காலத்தில் யாரும் எண்ணிப்பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை.

செந்நெறி பா.தண்டபாணி : தமிழ் என்ற சொல் 5 திருமுறைகளில் மாத்திரமே வள்ளல் பெருமானால் கையாளப்பட்டுள்ளது. உரைநடைப்பகுதியில் தமிழ் என்ற பதமும் விளக்கமும் விரிவாக வள்ளல் பெருமான் விளக்கியுள்ளார். 6ம் திருமுறை பாசுரங்களில் தமிழ் என்ற பதத்திற்கு பதிலாக தென்மொழி என்றே வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

செந்நெறி பா.தண்டபாணி: வள்ளல் பெருமான் தமிழை  தென்மொழி என்று  குறிப்பிடுவார். இங்கே தென் என்பதற்கு தெற்கு என்ற பொருள் கிடையாது.  இங்கே தென் என்பதற்கு அழகு, இனிமை என்றே பொருள் கொள்ளவேண்டும்.இப்பொருள் தமிழ் அகராதியிலும் உள்ளது.

செந்நெறி பா.தண்டபாணி: தென்மொழி என்று தமிழை சொன்னதற்கு காரணத்தை வள்ளல் பெருமான் உரைநடைப்பகுதியில்,
ஆரிய பாஷையும் மற்ற பாஷைகளும் டம்பமும் ஆரவாரமும் உடையது என்றும் வெளிப்படக்காட்டாமல் பெருமறைப்பை உடையது என்றும்,கற்பதற்கு மிகவும் பிரயாசை தேவைப்படும் எனவும் பொழுது போக்கிற்கே இம்மொழி பயன்படுகிறது என்றும் சொல்லிவிட்டு தென்மொழியான நமது தமிழ் மொழி பயிலுதற்கு மிகவும் இலேசாக உள்ளது என்றும்,மிகவும் இனிமை உடையது என்றும் ,சாகாக்கல்வியை அறிவிப்பதற்கு திருவருளால் கிடைத்த     தென்  மொழி என்றும் அதாவது தமிழ்தான் தேவ பாஷை என்று  "திருவருளால் " என்ற சொல்லின் மூலம் நமக்கு வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளதை நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். மேலும் நமது தமிழை தந்தை மொழி  என்று குறிப்பிட்டது எல்லா மொழிகளுக்கும் வித்து போன்றது நமது மொழி,அதாவது நம்மொழியிலிருந்து பல மொழிகள் தோன்றியுள்ளதை குறிப்பிடவே நமது மொழியை தந்தை மொழி என மொழிந்துள்ளார் வள்ளல் பெருமான்.

 செந்நெறி பா.தண்டபாணி: வள்ளல் பெருமான் அகவல் எழுதும்போது  தமிழின் இனிமையில் மயங்கி, தமிழ் அமிழ்தை உண்ட காரணத்தினால் அகவலை ஆசிரியப்பா வகையில் எழுதுவதையும் மறந்து, தொல் காப்பியம் ஆசிரியப்பாவிற்கு இலக்கணமாக குறைந்த அளவு 3 அடிகள் அதிகபட்ச அளவு 1000 அடிகள் என குறிப்பிட்டதையும் தமிழின் இனிமை காரணமாக இலக்கணத்தை மீறி 1596 அடிகள் கொண்ட அகவலை நமக்கு தந்ததே வள்ளல் பெருமானுக்கு  தமிழ் மீதிருந்த அளவில்லாத பற்றின் காரணமாகவே என நாம் நன்றாக உணர முடிகிறது.

மேலும் வேறு மொழிகளில் பிறப்பிக்காமல் தென்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றார்.

இறைவன் உள்ளவரை இறைவனால் படைத்த உலகம் உள்ளவரை தமிழ் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஏன் என்றால்.தமிழ் இறை மொழி...மற்றைய மொழிகள்.தேவர் மொழி மனிதர் மொழி.இறை மொழி என்பது இறைவனால் படைக்கப்பட்ட மொழியாகும்.

இறவா மொழி என்றே தமிழுக்கு பெயராகும்.

எனவேதான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பல மொழிகளைக் கற்ற சான்றோர்கள் சொல்லுகின்றார்கள்.

தமிழில் தான் தன்மை.முன்னிலை.படர்க்கை என்ற இலக்கணம் உள்ளன.

தன்னைப் பற்றி அறிந்து கொள்வது தன்மை என்பதாகும்

கண்களுக்கு தெரிந்தவைகள் எல்லாம் அறிந்து கொள்வது முன்னிலை என்பதாகும்.

தன்னையும்.கண்களுக்குத் தெரிந்த அனைத்தும்.கண்களுக்குத் தெரியாத உலகங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டுவதே படர்க்கை என்பதாகும்.

இவை யாவும் தமிழில் தான் உள்ளன.

தொடரும்...

சனி, 14 ஏப்ரல், 2018

மதம் என்னும் பேய் பிடித்தவர்கள் !

மதம் என்னும் பேய் பிடித்தவர்கள் !

வள்ளலார் பாடல் !

மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ

சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ

பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்

சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்றுதோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.

வள்ளலார் பாடல்.....

நம் நாட்டை.உலக நாட்டை ஆண்டு கொண்டு உள்ளவர்கள் மதம் என்னும் பேய் பிடித்தவர்கள்  உண்மையான மாநடம் புரியும் அருட்பெருஞ்ஜோதி  இறைவனைப் பற்றி அறிய மாட்டார்கள்.இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களின் மேல் அன்பு.தயவு.கருணை காட்டும் அறிவு அவர்களுக்கு விளங்காது.

உலகத்திற்கு பின்னாடி வரும் துன்பங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள மாட்டார்கள்.

எனவே அவர்களைப் பேய் பிடித்தவர்கள் என்கிறார் வள்ளலார்

இவர்கள் மூடமான தெய்வங்களைப் பிடித்துக் கொண்டு ஆடுகின்றார்கள்.உண்மையான கடவுள் யார் ? என்பது தெரியாமல் மனம் போனபடி ஆடிக் கொண்டு உள்ளார்கள்.

அவர்களை ஆன்மீகவாதிகள் என்று சொல்வது அறியாமையாகும்.அவர்கள் மனித உயிரைப்பற்றியும்.மனித வாழ்க்கை முறைப்பற்றியும் அறியாதவர்கள்.ஆன்மீகம் என்ற பெயரிலும்.அறிவியல் என்ற பெயரிலும் மனித உயிரைப் பறிக்கும் குணம் உடையவர்கள்.

ஏன் என்றால் அவர்களை அறியாமை என்னும் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டு உள்ளது.அற்பத் தனமான பட்டம் பதவி புகழுக்கு அலைந்து கொண்டு உள்ளவர்கள்.உயிர்களைக் காப்பாற்றும் ஆன்மீக அருள் அறிவு இல்லாதவர்கள்.

மனிதன் சாகாமல் வாழும் கல்விப் பற்றி அறியாதவர்கள்.சாகாக்கல்வி கற்கும் தரம் அவர்களுக்கு கிடையாது.எனவே மதவாதிகள் பின் செல்லாதீர்கள்.என்று ஆணை யிடுகிறார் வள்ளலார்.

மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் ஒரே மார்க்கம் வள்ளலார் தோற்றிவைத்துள்ள **சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் **என்னும் மார்க்கம் மட்டும் தான் உலக உயிர்களைக் காப்பாற்றும் மார்க்கமாகும்.

இந்த தமிழ் புத்தாண்டில் தொடர்ந்து
வள்ளலார் காட்டிய உயிர் இரக்கமான ஜீவகாருண்யத்தைக் கடைபிடித்து.உலகில் உள்ள எல்லா உயிர்களையும் காப்பாற்றுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஆனந்த கூத்து வள்ளலார் !

வள்ளலார் மரணத்தை வென்று ஆனந்த கூத்தாடுகின்றார்.

அந்த ஆனந்த களிப்பு பாடல்கள் தான் இங்கு பதிவு செய்துள்ளன.

இந்த பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரியும் வார்த்தைகளையும் ஊன்றி படித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

பாடல்கள் !

ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து.
கண்ணிகள்

2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

5. சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
ஆடேடி பந்து ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

கலிவிருத்தம்

12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே. !

மேலே கண்ட பாடல்கள் ஒவ்வொன்றிலும் தன் அனுபவத்தின் அழுத்தமான உட்பொருள் உண்மைகளைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார் படித்து பயன் பெற வேண்டுமாய் அன்புடனும் தயவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 11 ஏப்ரல், 2018

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் !

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் !

வள்ளலார் பாடல்.!

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்

கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோகூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே

வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்

சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்றதருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.!

உலகில் பயிர்கள் மழை  இல்லாமல் வாடிக்கொண்டு கொண்டு உள்ளது.நினைத்துப் பார்க்க முடியாத அளவு மழையோ கொட்டோ கொட்டு என்று மழை கொட்டுகின்றது.ஒருவாரத்தில் மழையினால் வந்த தண்ணீர் எல்லாம் கடலில் சென்று கலந்து விடுகின்றது.மறுபடியும் மழை இல்லாமல் பயிர்கள் வாடி விடுகின்றது...

உயர்ந்த அறிவை இறைவன் மனிதர்களுக்கு கொடுத்து இருந்தும். அறிவுள்ள மனிதர்கள்  மழை வருவதற்கு முன் மழை நீரை தேக்கி வைக்க அணைக் கட்டி இருந்தால்.அடுத்த மழை வரும் வரைக்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு பயிர்களைப் பாதுகாத்து வளர்த்து அறுவடை செய்து.பன்படுத்தி எல்லா உயிர்களுக்கும் உணவு கொடுத்து பாதுகாத்து இருக்கலாம்.நாமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்

எனவே மழையின் குற்றமா ? மனிதனின் குற்றமா ? பயிர்களின் குற்றமா  ? சிந்திக்க வேண்டும்.

மழையானது  உயிர்களுக்குத் தேவையான அளவிற்கு.இறைவனின் தனிப்பெரும் கருணையால் காலம் கருதிக் கொடுக்கப் படுகின்றது.

அவற்றை சேமித்து வைக்காத்து
அறிவுள்ள மனிதனின் குற்றம் என்பது நன்றாக தெளிவாகத் தெரிகிறது. இதைத்தான் அற்று வெள்ளம் வருவதுமுன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய் பிடித்து ஆடுதற்கே அறிந்தீர் என்று வள்ளலார் மக்களை அன்புடன் எச்சரிக்கை செய்கிறார்.

அறிவுள்ள மனிதர்கள்.ஆட்சியாளர்கள்.அதிகாரிகள் அறிவைப் பயன்படுத்தி செயல் பட்டு  இருந்தால் இன்று தண்ணீருக்காக.மக்கள் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது..

அதேபோல் உயர்ந்த அறிவுள்ள மனிதர்களுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை செய்கிறார் வள்ளலார்.!

உயர்ந்த தெளிவான அறிவை மனிதனுக்கு மட்டும்  ஏன்?  இறைவன் கொடுத்துப் படைக்க வேண்டும் என்பதை மனிதன் அறிந்து.தெரிந்து. புரிந்து கொள்ள வேண்டும்..

எழுவகைப் பிறப்புகளிலே இறுதி பிறப்பு மனிதப் பிறப்பு..  இந்த பிறப்பானது கீழ்நோக்கிச் செல்லாமல் மேல் நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் இறைச்சட்டம்.

இறைச் சட்டம் என்பது!

மனிதன் மரணம் அடைந்து கீழே மண்ணுக்குச் செல்லாமல் .இறைவன் திருஅருளைப் பெற்று மரணத்தை வென்று.மேல்நோக்கிச் சென்று இறைவனுடன் கலந்து கொள்ள வேண்டும்.என்பதுதான் இயற்கையின் சட்டம்.

இறைவன் அருளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ்வதால் எமன் என்னும் கூற்றுவன் வந்து உங்கள் உயிரைப் பறித்துக் கொண்டு போக வரப்போகிறானே அவனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார் வள்ளலார்.

எமன் என்னும் கூற்றுவன்  வந்து அழைத்துப் போகாமல்  மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் என்று வாயே பறையாய் அறைகின்றேன். நீங்கள் கேட்காமல் மரணத்தை நோக்கியே வாழ்கின்றீர் என்கின்றார்.

நான் சொல்வதை கேட்காமல் உங்கள் விருப்பம் போல் கண்டதை எல்லாம் பேசி வினைகளைப் பெருக்கிக் கொண்டு வீண் காலம் கழித்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.

இந்த வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்மீன். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள் உங்கள் நன்மைக்காக சொல்லுகிறேன்.

இறைவன் அருளைப் பெருவதற்காக.
இறைவனே அருளை வழங்குவதற்காக.இறைவனே இங்கு வந்துள்ளார்.எனக்கு பூரண அருளை வழங்கியதால் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

உங்களுக்கும் அருள் நிச்சயம் வழங்குவார் இது நல்ல சமயம் இது நல்ல சமயம்.இவற்றை தவரவிட்டால் வேறு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதை சத்தியம் வைத்து தெரியப் படுத்துகின்றார்...

ஆற்று வெள்ளம் வருவதற்கு முன் அணை போடுவது போல் .எமன் என்னும் கூற்றுவன் வருவதற்கு முன் நீங்கள் அருளைப் பெற்றுக் கொண்டால் எமன் உங்களை நெருங்க மாட்டான் என்பதை மேலே கண்ட பாடல் வாயிலாக தெளிவாக தெரியப் படுத்துகின்றார் வள்ளலார்.

நாம் என்ன செய்து கொண்டுள்ளோம். தேவை இல்லாத வீண் வாதங்களைப் பேசி காலத்தை வீணே கழிக்கின்றோம்..
இனியும் வீண் காலம் கழிக்காமல் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து இறைவன் அருளை பூரணமாகப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திங்கள், 9 ஏப்ரல், 2018

ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !

ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கு அனந்த கோடி வந்தனம்.

சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும்.கிராமங்களிலும்.வெளிநாடுகளிலும் .சன்மார்க்க சங்கம் சாலை.சபை என்ற பெயரில்..பலப்பல தலைப்புகளில் பெயர் வைத்து சன்மார்க்க சங்கப் பணிகள் செய்து கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆனாலும் வள்ளலார் சொல்லுயுள்ள தலைப்பில் பெயர் வைப்பதுதான் சன்மார்க்கத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.அதுவே வள்ளலாரின் விருப்பமாகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்..

வள்ளலார் ஆரம்ப காலத்தில்.வேத சன்மார்க்கம் என்றும்.அடுத்து ஷடாந்த சன்மார்க்க சங்கம் என்றும் பெயர் வைத்து இருந்தார்.அதற்கு அடுத்தபடியாக. வடலூரில் சபையைக் கட்டி முடித்த பின்பு.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கட்டளைப்படி சங்கம்.சாலை.சபைக்கு பெயர் மாற்றங்கள் செய்கின்றார்

18-7-1872 ஆம்  நாள் ஞானசபை விளக்கப் பத்திரிகையில் வெளியிடுகிறார்.

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்.

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்.

சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் ஆணை இடுகின்றார்.

நாம் வள்ளலார் சொல்லிய வண்ணம் பெயர் வைக்காமல் நம் விருப்பம் போல் வைப்பது வள்ளலார் திருவார்த்தையை மீறிய செயலாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா !

எனவே இனிமேல் வள்ளலார் சொல்லிய வண்ணம் எல்லா சன்மார்க்க சங்கங்களிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாய் பனிவாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல ..
வள்ளல்பெருமான் வேண்டுதலாகும்..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம். சாலை சபை என்று பெயர் மாற்றம் செய்தாலே போதும்

எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் எல்லாச் சங்கம்.சாலை.சபையிலும் மறைமுகமாக இருந்து நல்ல முறையில் முன்னேற்றம் அடையச் செய்விப்பார்.

வள்ளலார் பாடல் !

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன்

கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன்

பாடுகின்றேன் என் தந்தை பிரான் பதப்புகழை அன்பினொடும் பாடிப்பாடி

நீடுகின்றேன் இன்பக் கூத்து ஆடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே !

என்கின்றார் வள்ளலார்.நம் எண்ணம் எல்லாம் அருள் நிரம்ப வேண்டும் என்றால் .வள்ளலார் சொல்லிய வண்ணம் நாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆகையால் சன்மார்க்க ஆன்மநேய சகோதர்கள் அனைவரும். அவரவர்கள் வைத்திருக்கும் சங்கங்களுக்கு .**சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்**என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

இறைவனை நம்புங்கள் எல்லாம் கிடைக்கும் !

இறைவனை நம்புங்கள் எல்லாம் கிடைக்கும் !
இந்திய இறையாண்மை முற்றிலும் தவிர்க்கப் பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது .சட்டத்தை மதிக்காத ஆட்சியாளர்கள் தான் நாட்டை ஆண்டு கொண்டு உள்ளது மிகவும் கேவலமாக உள்ளது.
இறைவன் சட்டத்தையும் மதிக்கவில்லை.மனிதனால் தோற்றுவித்த சட்டத்தையும் மதிக்கவில்லை.
ஆட்சியாளர்களே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் மக்கள் எப்படி சட்டத்தை ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.
இன்றைய உலகில் மத்திய அரசும் சரி.மாநில அரசுகளும் சரி... பொது நோக்கம் இல்லாமல் .அன்பு.தயவு.கருணை இல்லாமல் ..சுய நலத்திற்க்காகவும்.கொள்ளை அடிப்பதற்காகவும்.ஆட்சி.அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவும்.ஆட்சி செய்து கொண்டு உள்ளார்கள்.
இவர்களால் நாட்டு மக்களை துன்பம்.துயரம்.அச்சம்.பயம்.வறுமை.இல்லாமல் காப்பாற்ற முடியுமா என்றால்.எக்காலத்திலும் முடியவே முடியாது .என்பதை நாட்டு மக்களே அறிந்து புரிந்து.தெரிந்து வைத்து உள்ளார்கள்.
ஆட்சியாளர்களாலும்.சட்டத்தாலும்.திட்டத்தாலும்.
மக்களைக் காப்பாற்ற முடியவே முடியாது.
மக்களைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
எனவே மனிதர்களை நம்பி ஏமாற்றம் அடைவதை விட இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டால் நிச்சயம் மக்கள் காப்பாற்றப் படுவார்கள்.
இறைவன் எப்போதும் நடுநிலையோடு மக்களைப் காப்பாற்றுவார் ..
இறைவன் யார் ? என்பதுதான் இப்போது நாம் சிந்திக்க வேண்டும்.
நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் அல்ல !
கடவுள் அருள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளார்.அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.எனவே நாம் ஒவ்வொரு வீட்டிலும்.ஒளியே கடவுளாக நினைந்து .தீபத்தை வைத்து வழிபாடு செய்து வணங்குங்கள் .
ஒளியை வணங்கினால் இருள் தானே விலகிவிடும் !
இறைவன் பஞ்ச பூதங்களுக்கு அனுமதி வழங்கி குறைவில்லாத இயற்கையான நீர் நிலைகள்.மண் . .மழை.காற்று.ஆக்கினை ஆகாயம்.போன்றவைகளால் எந்த ஆபத்தும் இல்லாமல் உலகிற்கு எல்லா நன்மைகளும் வாரி வாரி வழங்குவார் /
நாமும் நலமுடன் வாழ்வோம்.நாட்டு மக்களும் நலமுடன் வாழ்வார்கள்.
நம்மைப் படைத்த இறைவனை தொடர்பு கொள்வதே நாம் செய்யும் நற் காரியங்களாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

சனி, 7 ஏப்ரல், 2018

மெளனம் ஒரு மகாசகதி ஆற்றல் !

*மௌனம் ஒரு மகாசக்தி*

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.

நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக.

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.

எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.

பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.

மௌனத்தை விட சிறப்பானதாக இருந்தால்
வார்த்தைகளை
பயன்படுத்துங்கள்.

🙏🙏🙏🙏

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக !

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக !
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் !
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்கின்றார் வள்ளலார் .
விசும்புல் துளிகள் விழின் அல்லால் பசும்பில் தலை இப்பாரினில் காணுமோ !
என்றார் திருவள்ளுவர் .
இந்த இரண்டு பெரும் அருளாளர்கள் வாழ்ந்த நாட்டில் தண்ணீருக்காக அலைகின்றோம்.// இயற்கையின் கருணையால் மழை பெய்தும் தண்ணீர் இருந்தும் மக்களுக்கும் ..உயிரைக் காக்கும் வேளாண்மைக்கும் தண்ணீரை பங்கிட்டு கொடுக்காமல் மக்களைப் போராட வைத்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள்.
யார் ? அந்த துரோகிகள் !
நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் மத்திய அரசும் .மாநில அரசுகளும் மனித நேயம் இல்லாமல் .ஆன்ம நேயம் இல்லாமல் அரசியல் நடத்திக் கொண்டு உள்ளார்கள்.
இவர்களுக்கு அறிவு விளக்கத்தையும்.கருணையும் உயிர்களின் மேல் இரக்கத்தையும் இறைவன் தான் வழங்க வேண்டும்.
உயிர்களின் துன்பத்தைப் போக்காமல் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமாறு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை வேண்டிக் கொள்கிறோம் .
வள்ளலார் பாடல் !
வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம்
வாடினேன்
பசியினால் இளைத்தே வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர்
என் நேருறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் !
என்று வள்ளலார் வேதனையோடு உயிர் இரக்கத்தோடு அருட் பாடல்களால் மக்களுக்கு பதிவு செய்கின்றார் ..
மேலும் நடுநிலை இல்லாத ஆட்சியாளர்களை கண்டித்து பதிவு செய்கின்றார் ..
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடார் தமையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்களால் கிளத்தாப்
படுநிலை அவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலக நடை எல்லாம் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய் !
நடுநிலை இல்லாமல் ஆட்சி அதிகாரங்கள் செய்யும் ஆட்சியாளர்களைக் கண்டு பயந்தனன் என்கின்றார் .இவர்களால் இன்னும் எத்தனை கோடி உயிர்கள் பாதிக்கப் போகின்றதோ என்று நினைந்து நடுங்கினேன் என்கின்றார் ..
இறுதியாக துன்மார்க்க ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு சாபமே தருகின்றார்
வள்ளலார் !
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைந்து
எல்லோரும் வாழ்க இசைந்து !
கருணை இல்லாமல் ஆட்சி செய்யும் ஆட்சி அழிந்து ஒழிய வேண்டும் ..மக்களுக்கு துன்பம் தொலைந்து நன்மை செய்யும் அருளாளர்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்று சாபம் இடுகின்றார் ..
வள்ளலாரின் அருளாட்சி வரும் காலம் நெருங்கிக் கொண்டு உள்ளது. மக்களின் நலனுக்காகவும் .மற்ற எல்லா உயிர்களுக்காகவும் இறைவனை வேண்டி எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வடலூர் சத்திய ஞானசபை விளக்கம் !

வள்ளல் பெருமனாரும் சத்திய ஞான சபையும் :
---------------------------------------------------------

வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலார் 25/01/1872 -இல் முதல் தைப்பூச  ஜோதி தரிசத்தை நடத்தினார்கள். அன்று முதல் இன்றைய காலம்  வரை வடலூர் ஜோதி தரிசனம்  சிறப்பாக நடந்து வருகின்றது.

"சத்திய ஞான சபை எனுள் கண்டனன்" (அருட்பா :  4909) என்று வள்ளலார் பாடியுள்ளார்கள்.

வள்ளலார் தன்னுள் உணர்ந்து அனுபவித்த அருட்பேராற்றலை உலகத்தார்க்குக் காட்சிபடுத்தும் வகையிலே வடலூர் சத்திய ஞானசபை ஜோதி தரினத்தை வடிவமைத்தார்கள்.

"அகமாகிய ஆன்மப் பிரகாசமே ஞானசபை ; அந்தப் பிரகாசத்துக்குள் உள்ளிருக்கும் பிரகாசம் கடவுள்."என்று உபதேசப்பகுதியில் (பக்கம் :345) வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும்;

   "இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில் : நான் ஆன்மா  , சிற்றணு வடிவனன். மேற்படி அணு கோடிசூரியப் பிரகாசமுடையது. லலாட ஸ்தானம் இருப்பிடம் . கால் பங்கு பொன்மை , முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."

என்று உபதேசப் பகுதியில் (பக்கம்: 435) வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள். இக்குறிப்புகளிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன... ?

★இறை ஆற்றலானது மனிதத் தேகத்தில் விளங்குகின்றது.

★அது கோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்குகின்றது.

★லலாட ஸ்தானம் எனப்படும் புருவ மத்தியில் இறை ஆற்றல் விளங்குகின்றது.

★அது பொன்மையும் வெண்மையும் கலந்த  பேரொளியாத் திகழ்கின்றது.

★அவ் இறையொளியை ஏழு திரைகள் மறைத்துள்ளன.

எனும் ஆன்மிக உண்மைகளை மேற்கண்ட வள்ளலாரின் குறிப்புகளால் அறிந்துகொள்ளலாம். இவ் உண்மைகளின் வடிவமைப்பே வடலூர் சத்திய ஞான சபை.

"இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞான சபைக் கண்ணே , இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய் , இயற்கை இன்பம் என்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங் கருணைத் தனிப் பெரும் பதியாய் தனித் தலைமைக் கடவுளே....!"

என்று உபதேசப் பகுதியில் (பக்கம் : 572) வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள். இக்குறிப்பால் சத்திய ஞான சபையானது ஒவ்வொரு மனிதன்னுள்ளும் இயற்கையாகவே அமைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வடலூர் சத்திய ஞான சபையின் தொடக்க விழாவின் போது ஒரு பொது  விளம்பர - அறிவிப்பை வள்ளலார் வெளியிட்டார்கள். அதனுள்..

"ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகப்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்....."

என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள் (உரைநடைப்பகுதி : பக்கம் 549) .
இக்குறிப்பின் மூலம் , உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ள இறையாற்றலானது  , நம் அறிவுவெளியில் நாம் அறிந்துகொள்ளத்தக்க வகையில் விளங்குகின்றது எனும் ஆன்மிக உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

மேலும் அவ் விளம்பர அறிவிப்பில் ;

"உண்மையறிவு , உண்மையன்பு , உண்மையிரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் , எல்லாச் சமயங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் , எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்கத்தைப் பெற்று , பெருஞ் சுகத்தையும் , பெருங் களிப்பையும் அடைந்துவாழும் பொருட்டு , மேற்குறிப்பித்த உண்மைக கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து....."

என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள்.(பக்கம் 550). இக்குறிப்பினால் ஞான சபையின் நோக்கம் தெளிவாக விளங்குகின்றது.

நம்முள் விளங்கும் இறைப் பேரொளியைத் தரிசிக்க ; நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது மேற்கண்ட வள்ளலாரின் உபதேசத்தால் அறியலாம்.

★மயக்கம் இல்லா உண்மையான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

★எவ்வித வேறுபாடும் பார்க்காது ; எல்லா மனிதர்கள் மீதும் உண்மையான அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

★பிற உயிர்களிடத்தும் அன்பு காட்டி , அவற்றிற்கு ஏற்படும் இடையூற்றை நீக்கி , எப்பொழுதும் இரக்கக் குணத்துடன் விளங்க வேண்டும்.

★நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

★சமய - மத வேறுபாடு பார்க்காது , சடங்கு - சம்பிர்தாய கண்மூடி வழக்கங்களுக்கு இடமளிக்காது இருக்க வேண்டும்.

★இயற்கையோடு இயந்து தயவு உள்ளத்துடன் வாழ வேண்டும்.

மேலும்...

★வடலூர் சத்திய ஞான சபை தைப் பூச ஜோதி தரிசனமானது சமயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாகின்றது.

மனிதனைப் போலவே கை- கால்களை உடைய ஒரு பருப்பொருளாகவே பற்பல சமயங்களில் இறைவன் கற்பிக்கப்படுகின்றான். அவ் இறைவனைப் புறச் சடங்குகளால் பூஜை செய்து வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம் என மக்கள் நம்பினர்.

ஆனால் , வள்ளலாரின் இறைகொள்கையானது இதற்கு மாறுபட்டது. இறை - கடவுள் பேராற்றலானது ஒவ்வொரு மனிதனின்னுள்ளும் இயற்கையாகவே உள்ளது என்பதே வள்ளலாரின் கொள்கை. அதன் அடையாளமே வடலூர் சத்திய ஞான சபை.

அவ் ஞான சபையில் தை மாத பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் காண்பிக்க வள்ளலார் ஏற்பாடு செய்தது ஏன்....? (சற்றே சிந்திப்போம்)

★தைப் பூசம் முழு நிலவு கூடிய பௌர்ணமி நாளிலேயே வரும்.

◆தைப்பூச நாளின் விடியற்காலையிலும் , மறுநாள் விடியற்காலையிலும் வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

◆தெற்கு நோக்கியுள்ள ஞான சபையின் முன்புறம் , நாம் வடக்கு நோக்கி நின்று ஜோதியை தரிசிக்க வேண்டும். அப்பொழுது நம் வலப்புறத்தில் - கிழக்கு திசையில் சூரியக் கதிரொளியைத் தரிசிக்கலாம். நம் இடப் புறத்தில் - மேற்குத் திசையில்  சந்திரனின் ஒளியைத் தரிசிக்கலாம்

சூரிய சந்திர இயற்கை ஒளிகளோடு , ஞான சபை பேரொளியையும் நாம் தரிசிக்கலாம். ஆதலால் தான் ....

"இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாய் அயர்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி."  (அகவல் வரி 70) என்றும்...

"முச்சுடர் ஆதியால் எச்சக உயிரையும் அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி"  (அகவல் வரி 740) என்றும் வள்ளலார் பாடியுள்ளார்கள்.

மேற்கண்ட பகுதிகளிலிருந்து ; வடலூர் சத்திய ஞான சபையின் தைப் பூச ஜோதி தரிசனம் என்பது 'இயற்கையாக மனிதத் தேகத்தில் உள்ள இறையாற்றலைப் பற்றியதாகும் ' என்று தெளிவடையலாம்.

வடலூர் சத்திய ஞான சபையின் தைப் பூச பேரொளியைத் தரிசிக்கும் நாம்.... நம்முள் அகம்நோக்கி ...நம்முள் அகவழிபாடு செய்து.... அருட்பேரொளியைக் கண்டு - உணர்ந்து - அனுபவித்து பேரின்பத்தைத் துய்க்க வேண்டும்.

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடை அன்பே

என்று வள்ளலார் பாடியுள்ளார்கள். (அகவல் வரி1480) இவ்வரிகளை ஆழமாகச் சிந்திக்க  வேண்டியது அவசியமாகின்றது.

★இறையாற்றலான அருட்பேரொளியானது வள்ளலாரின் அகத்துள் தோன்றி , வளர்ந்து, உயர்ந்து ,நிறைந்து விளங்கியது.

(அதே போல்....)

வள்ளலார் காட்டிய ஞான வழியில் பயணிக்க விரும்புவோரும் ....புறத்தில் தேடாது அகத்துள் அருட்பேரோளியை உணர்ந்து அனுபவிக்க முற்சிக்க வேண்டும்

"பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள் பண்டமும் காட்டிய பராபர மணியே..." என்ற வள்ளலாரின் (அகவல்  வரி..1292 )களில் தைப்பூசம் பற்றிய ஆன்மிக  உண்மைகள் பொதிந்துள்ளன.

இயற்கையில் அண்டத்தில் உள்ள சூரிய - சந்திர - அக்னி பேரொளிகளைப் போல ... நம்முள் ... நம் பிண்டத்தில் முச்சுடர்களைக் கண்டு பேரொளியைத் தரிசித்து , உணர்ந்து , அனுபவித்து அப்பேரொளியோடு கலக்க தகுதியாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே மேற்கண்ட அகவல் வரியின் அர்த்தமும் , ஞான சபை ஜோதி தரிசத்தின் அர்த்தமும் ஆகும்.

அதுமட்டுமின்றி .... 1872-யில் முதல் தைப்பூச ஜோதி தரிசனத்தை வள்ளலார் நிகழ்த்திய பின் ;  1874 தைப் பூச நன்னாளில் வள்ளல் பெருமனார் இறைவனோடு இரண்டறக் கலந்து சித்திபெற்றார்கள்.

ஆதலால் ...வடலூர் சத்திய ஞான சபையின் தைப் பூச ஜோதி தரிசனம் என்பது ...வள்ளலாரின் ஆன்மிக உண்மையோடு வள்ளலாரின் ஆன்மாவும் கலந்து காட்சி தருகின்றது என்பது பற்பலரின் நம்பிக்கையாய் உள்ளது.

வள்ளல் பெருமனார் இயற்றி அளித்துள்ள அருட்பாக்களையும் உபதேசங்களையும் கசடறக் கற்போம். மேலும் ,  வள்ளல் பெருமனார் தமிழ்க் கூறும் நல்லுகில் தோற்றிவைத்த  சத்திய ஞானசபை மற்றும் சத்திய தர்மச்சாலையின் நோக்கங்களைப் புரிந்துகொள்வோம்.

 தமிழகத்தில் மதம்- சமயம் கடந்த ஒருமைப்பாடு மிகுந்த சமரச உலகத்தை அமைப்போம்.....!
(கருத்துப் பதிவும் பகிர்வும் : அருள்பாவலர் சக்திவேல்.வே)

வியாழன், 5 ஏப்ரல், 2018

விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் !

விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் !

விந்து நாதம் ! பரவிந்து பரநாதம் ! என்றால் என்ன ?

விந்து என்றால் சுக்கிலம் ! இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மேல்நிலை சுக்கிலம் ஒன்று கீழ்நிலை சுக்கிலம்  .இவை இரண்டும் மனித உடம்பில் உற்பத்தியாகிறது

 பஞ்ச பூத உணவினால் உண்டாவது கீழ் நிலை சுக்கிலம் ..அருளினால் உண்டாவது மேல் நிலை சுக்கிலம் .
விந்து என்ற சுக்கிலம் இல்லை என்றால் எவராலும் பேசவே  இயலாது .

இரண்டிற்கும் நாதம் உண்டு .நாதம் என்றால் சத்தம் என்று பெயராகும் .மனிதனுக்கு மட்டும் சத்தம் பேச்சாக .வார்த்தைகளாக வருகின்றது ...படிப்பதால். கேட்பதால்.பழக்கத்தால் வருவது தான் நாதம் என்னும்  வார்த்தைகள் .

குழந்தை பேசுகின்றது !

தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்தததும் சத்தமும் வராது .பேச்சும் வராது .தாயிக்கும் குழந்தைக்கும் தொடர்பு உடைய தொப்புள் கொடியை துண்டிக்கும் போது வெளிக் காற்று  உள்ளே போகும் போதுதான் வீர் என்று சத்தம் வரும்.சத்தம் என்னும் நாதம் வந்தால் குழந்தை நன்றாக உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

அதன் பின்பு தாயின் பாலைக் குடித்து குழந்தை வளருகின்றது.ஆனாலும் குழந்தைக்கு பசிக்காக அழும் சத்தம் மட்டுமே வரும் ஆனாலும் பேசுவதில்லை ...நாம் உண்ணும் உணவை கொஞ்சம் கொஞ்சமாக  குழந்தைக்கு கொடுத்து உணவு உண்ணும் பழக்கத்திற்கு கொண்டு வந்து விடுகின்றோம்.

உணவின் செயல் பாடுகள் ! வள்ளலார் சொல்லுகின்றார் ! சுக்கிலம் உண்டாவதற்குக் காரணம் !

தினம் ஆகாரங் கொண்டால் .அவ் ஆகாரம் மார்பின் இடத்தில் ஓர் தட்டில் தங்கும்.அந்த தட்டின் மேல் கடவுள் கடவுளை என்று இரண்டாக இருக்கின்றது .உண்ட அன்னத்தை ஒரு மணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய தத்துவங்களுக்கு { உறுப்புகளுக்கு } ஊட்டுகின்றது .

மறுபடியும் இரண்டு மணிக்குள் மேற்படி அன்னத்தினது  மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி இரண்டரை வராகன் எடையில் கோச நுனியில் ஒன்றும்.நாபியில் ஒன்றும் .பிரமந்திரத்தில் அறையுஞ் ...சேர்த்து மற்றவைகளைக் கொண்டு ஆங்காங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ஈளை .குறும்பை.நகத்தூசி .தொப்புள் அழுக்கு ,கண் பீளை .முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது

மேற்படி அன்னத்தை மூன்று மணி நேரத்தில் அதில் உள்ள திரவத்தைப் பிரித்து உதிரமாக்கி யூட்டுகின்றது  .மூன்று மணிக்கு மேல் சக்கையை மல பாகத்தில் தள்ளி விடுகின்றது .இதுபோல் எந்த வஸ்துக்களையும் பிரிக்கின்றது .ஆதலால் ஆகாரங் கொண்ட மூன்று மணிக்கு மேல் தான் ஆகாரங் கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார் ..

ஒரு குழந்தையின் உடம்பில் இவ்வளவு வேலைகளையும் மாற்றங்களையும் யார் ? செய்வது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஐந்தொழில் வல்லபம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் பேசாது,உண்ணும் உணவை அரைத்து திரவமாக்கி .அதில் மத்திய தரமாகிய திரவத்தை இரத்தமாக்கி.உடம்பிற்கு தேவைப் போக வீரியம் உள்ள இரத்தத்தை சுக்கிலமாக மாற்றுகின்றது. ..சுக்கிலம் என்னும் விந்து மூல ஆதாரம் என்னும் குண்டலனிப் பையில் சேர்க்கின்றது.அந்த சுக்கிலம் என்னும் விந்து கொஞ்சம் கொஞ்சமாய்  சேர்ந்து சேர்ந்து .அதன் ஆவி ஆறு ஆதாரங்களின் வழியே சென்று குரல் வலையில் உள் நாக்கின் வழியாக வரும் போதுதான் குழந்தை பேச ஆரம்பிக்கின்றது ..அக் குழந்தை உலகியல் பழக்கத்திற்குத் தகுந்தாற் போல் தன்னை வளர்த்துக் கொள்கின்றது .விந்துவின் தன்மைக்குத் தகுந்தாற் போல் விந்துவின் உணர்ச்சிக்குத் தகுந்தாற் போல் பேச்சு என்ற ஒலியும் அறிவு விளக்கமும் பெறுகின்றது ..

பஞ்ச பூத விந்து !

பஞ்ச பூத உணவால் உண்டாவது தான் விந்து ..அதனால் வரும் ஒலிதான் விந்து நாதம் என்பதாகும்.
விந்துவால் தோன்றியது தான் உலக மனிதர்களின் மொழி . பேச்சு. எழுத்து.தன்மை.உணர்ச்சி. அதன் உண்மை .என்பனவாகும்...

அதற்கு வரி வடிவம் ...ஒலி வடிவம் ...தன்மை வடிவம்..உணர்ச்சி வடிவம்..உண்மை வடிவம் என்று பெயர் வைத்துள்ளார்கள் ..இந்த விந்து சக்தியால்.இறைவன் தொடர்பு கொண்டு அருளின் ஏக தேசத்தைக் கொண்டு  சில பல அருளாளர்களால் .உலகில் உள்ள இலக்கணம்.இலக்கியம்,.வேதம் .ஆகமம்.புராணம்.இதிகாசங்கள் .சாத்திரங்கள் யாவும் தோன்றின ..

இதிலே அசுத்த விந்து .சுத்த விந்து என இரண்டு வகை உண்டு ..தாவர  உணவால் உண்டாவது சுத்த விந்து ..மாமிச உணவால் உண்டாவது அசுத்த விந்து ..இரண்டு விதமான உணவு உண்பவர்களும் இறைவனை வேண்டுகிறார்கள்.அதற்கு அசுத்த பூத காரிய உணவு உண்பவர்கள். .என்றும் .சுத்த பூத காரிய உணவு உண்பவர்கள் என்றும் பெயர் வைத்து உள்ளார் வள்ளலார் .

அசுத்த பூத விந்தும்.சுத்த பூத விந்தும் மனித உடம்பில் உண்டாவதாகும்.அசுத்த பூத காரிய உணவு உண்பவர்களுக்கு அருளின் தொடர்பு கிடைக்கவே கிடைக்காது.சுத்த பூத காரிய உணவு உண்பவர்களுக்கு ஏக தேச அருள் கிடைக்கும் .சுத்த புதகாரிய உணவினால் உண்டாகும் விந்து சக்தியுடன்  அருளும் சேர்ந்தால் முழுமையான உண்மை வெளிப்படாது .குற்றம் குறைகள் நிறைந்து கொண்டே தான்  இருக்கும்.

வள்ளலார் பாடல் !

அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதானால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறம் குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத் தலைமை பதத் தலைமை வாய்ந்தனர் அங்கு அவர்பால்
இறங்கலில் என் பேசுதலால் என் பயனோ நடஞ் செய்
இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

என்னும் பாடலில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார் ..
விந்து என்னும் சுக்கிலம் உடையவர்கள் முழுமையான பூரணமான  இறை அருளைப் பெற முடியாது. இறைவனை காண முடியாது இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது .மரணத்தை வெல்ல முடியாது...

பரவிந்து பரநாதம் !

பரவிந்து .பரநாதம் என்பது உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து பெறுவதாகும் .

பரவிந்து என்பது அருள் ! அதனால் வரும் நாதம் என்னும் ஒலி சத்தம் பரநாதம் என்று பெயர் ..

மனித தேகம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட உயர்ந்த தேகம் ..இந்த தேகத்தனால மட்டுமே உயர்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்...இங்கே உயர்ந்த அறிவு என்பது உலகியல் அறிவு அல்ல ..அருள் அறிவைப் பெறுவதே உயர்ந்த அறிவு .

பிறப்புகளின் தோற்றத்தை வைத்து மனிதனுக்கு ஆறாவது அறிவு என்று சொல்லுகின்றோம்.அதுவும் தவறு...தாவரம்..ஊர்வன..பறப்பன ..நடப்பன ..அசுரர்..தேவர்..அதற்கு அடுத்த மனிதப்  பிறப்பு ஏழாவது பிறப்பாகும்.

மனித தேகத்தில்;-- இந்திரிய அறிவு...கரண அறிவு...ஜீவ அறிவு ...ஆன்ம அறிவு என நான்கு அறிவு உள்ளன...அதற்குமேல் அருள் அறிவு .கடவுள் அறிவு என உயர்ந்த அறிவு உள்ளன .அந்த உயர்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ளத்தான் மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளன.

இந்திரிய ஒழுக்கத்தால் .இந்திரிய அறிவும்.கரண ஒழுக்கத்தால் கரண அறிவும்.ஜீவ ஒழுக்கத்தால் ஜீவ அறிவும் .ஆன்ம ஒழுக்கத்தால் ஆன்ம அறிவும் .பெற்று அதற்கு மேல் அருளைப் பெற்றால் அருள் அறிவு தோன்றும் .அதற்கு மேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டால் கடவுள் அறிவு என்ன என்பது விளங்கும்...

அருள் அறிவும் ,கடவுள் அறிவும் ஒன்று பட்டால் தான் மரணத்தை வெல்ல முடியும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைய முடியும்.அதுதான் பேரின்ப சித்திப் பெரு வாழ்வு என்பதாகும்.

அருள் பெறுவது எப்படி !

நாம் உணவு உண்ணுகின்ற வரை.பரவிந்து என்னும் அருள் சுரக்காது .பர நாதம் என்னும் இறை ஒலி தோன்றாது .இறை ஒலி தோன்றினால் தான் .இறை ஒளி என்னும் அருட் பிரகாசம் தோன்றும்.

நாம் உண்ணும் உணவுகளின் அசுத்தங்களை வெளியேற்ற ஒன்பது துவாரங்கள் உள்ளன.உணவை நிறுத்தி ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட வேண்டும்.இடைவிடாது இறைவனிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே  .ஒன்பது துவாரங்களும் இறை உணர்வால் அடைக்கப்படும்...அப்படி அடைக்கப் பட்டால் தான்  துரியக்  கதவுத் திறக்கப்படும். அதுதான் மோட்ச வீட்டின் கதவு என்பதாகும்.

அந்த மோட்ச வீட்டின் கதவைத் திறக்க திறவுகோல் என்னும் சாவி வேண்டும்.
சாவியைப் பெறுவதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் வேண்டும்.அதுதான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார். பொருளைக் கொடுத்து அருளைப் பெற வேண்டும்.பொருள் என்பது நம் உடம்பும் பொருள் தான்.பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்ற வேண்டும்.அருளால் மட்டுமே மாற்றம் அடைவிக்க வேண்டும்.

நாம்  பெற வேண்டுவது . அன்பு.தயவு.கருணை பெற வேண்டும். அந்தக் கருணையே அருளாக மாற்றம் அடையும்.கருணை என்னும் சுத்த உஷ்ணத்தினால் மேல் வீட்டுக் கதவு திறக்கும்.கதவு திறந்தால் அருள் மலரும்.அருள் சுரக்கும்.அதுதான் பரவிந்து .பர நாதம் என்பதாகும்.  ..

வள்ளலார் பாடல் !

இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார்
எல்லாஞ் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார்
அன்பர் உளத்தே இனிக்கும் அமுதர் வருகின்றார்
அம்பலத்தே நடம் புரியும் ஐயர் வருகின்றார்
என்பு உருவம் பொன் உருவாக்க எண்ணி வருகின்றார்
என்று திரு நாத வொலி இசைக்கின்றது அம்மா
துன்பம் அறத் திருச் சின்ன வொலி அதனை நீயுஞ்
சுகம் பெறவே கேளடி என் தோழி எனைச் சூழ்ந்தே !

என்னும் பாடலில் தான் அனுபவித்த பர நாத ஒலியையும் அதனால் கிடைக்கும் பரவிந்து என்னும் அருளையும் .அதனால் அடைந்த பேரின்பத்தையும். கொடுக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றார் .நீங்களும் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை வாருங்கள் வாருங்கள் என்று உலக மக்களை அழைக்கின்றார் .நமது அருள் தந்தை வள்ளலார் அவர்கள் .

விந்து நாதத்தை நிறுத்தி ..பரவிந்து பர நாதத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ..ஞானசரியை என்னும் 28.பாடல்களில் விளக்கி உள்ளார்.அதிலே முதல் பாடலே முக்கியமான பாடலாகும்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என் உரமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியிலீர்
மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

மேலே கண்ட பாடலில் கண்டபடி இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே என்றும் அழியாத உயர்ந்த நிதியாகிய அருள் அமுதம் கிடைக்கும் .அந்த அழியாத நிதியாகிய அருள் அமுதம் கிடைத்தால் மட்டுமே மரணத்தை வென்று என்றும் அழியாத  பேரின்ப வாழ்வில் வாழ்ந்திடலாம் என்று ஆணித்தரமாக வள்ளலார் சொல்லுகின்றார் ..

மேலும் மற்றவர்கள் போல் புனைந்து உரையேன் .பொய் புகலேன்  சத்தியம் வைத்து உண்மையைச் சொல்லுகின்றேன் என்கின்றார் ..

வள்ளலார் பொருள் உணவு உண்ணாமல் அருள் உணவே உண்டு வாழ்ந்துள்ளார்.என்பதுதான் உண்மை !

பாடல் !

நான் பசித்த போது எல்லாம் தான் பசித்ததாகி
நல் உணவு கொடுத்து என்னைச் செலவமுற வளர்த்தே
ஊன்பசித்த விளைப் பொன்றும் தோற்றாத வகையே
ஒள்ளிய தெள்ளமுது எனக்கு இங்கு உவந்து அளித்த வொளியே
வான் பாதிக்கும் நெடுமாற்கும் நான் முகற்கும் அரிதாம்
வாழ்வு எனக்கே யாகியுற வரம் அளித்த பதியே
தேன் பரித்த மலர் மனமே திருப்பொதுவில் ஞானத்
திருநடம் செய் அரசே என் சிறு மொழி ஏற்று அருளே ! 

வள்ளலாருக்கு பசி வந்த போதெல்லாம் இறைவனே அருளைக் கொடுத்து பசியை நீக்கி உள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இன்னும் காலம் தாழ்த்தினால் நமக்கு நல்லது அல்ல ! விரைந்து விரைந்து அடைந்திடுமின் மேதினியீர் என்று அன்புடனும் ஆன்மநேயத்துடனும் அழைக்கின்றார் ..நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது.சிந்திப்போம்  செயல்படுவோம்..நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல்
9865939896. 

 




   

புதன், 4 ஏப்ரல், 2018

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம்  என்ன என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகின்றார் !

சுத்த சன்மார்க்கம் என்பது தனி மார்க்கம் அல்ல ! எல்லா மார்க்கங்களையும் கடந்து உயர்ந்த நிலையில் உள்ளது சுத்த சன்மார்க்கம்.

உயர்ந்த்து என்றால் ? எவ்வகையில் உயர்ந்த்து என்பதை சிறு விளக்கத்தின் மூலம் தெரிவித்தால் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்..

நம்மிடம் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள்.அதை மாற்றினால் அதிலிருந்து .1000..500..200..100..50..20..10 ..5..2..1 என்ற ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம்.

மேலே கண்ட ரூபாய்  நோட்டுகளில் ஒன்றிலாவது  2000 ஆயிரம் மதிப்பு இருக்குமா என்றால் இருக்காது..

அதேபோல் தான் சுத்த சன்மார்க்கத்தின் உள்ளே எல்லா மார்க்கங்களும் அடங்கி இருக்கின்றன.

மற்ற மார்க்கங்களில் சுத்த சன்மார்க்கம் உள்ளதா என்றால் இல்லை..

சுத்த சன்மார்க்கம் என்பது சாதி.சமயம்.மதங்களைக் கடந்த்து என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.!

 திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே. !

என்னும் பாடல் வாயிலாக திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்க  சிவநெறி என்று உணர்ந்து சேர்ந்திடுமின் ஈண்டு என்கிறார்.

திருநெறி என்றால் எல்லாவற்றையும் விட.சுத்த சன்மார்க்கம்  உயர்ந்த நெறி..எனவே இதில் அனைத்து உலக மக்களும் சேர்ந்து பயன் அடையுங்கள் என்கிறார் வள்ளலார்....

சாகாக்கல்வி யைத் கற்றுத் தரும் மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம் .

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்பது தெரியாமல்.சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கருத்தை சொல்லி மக்களை குழப்ப வேண்டாம் என்று தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்...

வள்ளலாரே பல பாடல்களிலும் உரைநடைப் பகுதியிலும் தெளிவாக விளக்கி உள்ளார்..
மேலோட்டமாக படிக்காமல் ஊன்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

வள்ளலார் சொல்லி உள்ள சில குறிப்புக்கள் அனுப்புகிறேன் படியுங்கள்....

சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்:

சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமயம் மதம் அனுபவங்களைக் கடந்தது.

சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம்.

இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலைபெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்:

சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களில் ஒவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது.

 சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்:

துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகியது சுத்த சன்மார்க்கம்.

மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு.

ஒருவாறு.
சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.

மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள்.

சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும். இன்னும் நிறைய விளக்கம் தந்துள்ளார் வள்ளலார்.

சுத்த சன்மார்க்கம் என்பது தனி மார்க்கம் அல்ல..எல்லா மார்க்கங்களையும் தன் உள் அடக்கி வைத்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறது... அதனால் தான் சாதி.சமயம்.மதங்களைக் கடந்த்து சுத்த சன்மார்க்கம்  என்பார் வள்ளலார்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை  முழுமையாக கடைபிடித்தால் எல்லாம் வெளிப்படையாக விளங்கும்...

வள்ளலார் நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்கின்றார்.நாம் ஏன் கவலைப்பட வேண்டும். நாம் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுவோம்..

வள்ளலார் சுத்த சன்மார்க்கத்திற்கு என்று  சட்டதிட்டங்களையும் தீர்ப்புகளையும் திருஅருட்பாவில் தெளிவாக தந்துள்ளார். வழங்கி  கொண்டே உள்ளார்.

 நாம் தண்டனைக்கு உள்ளாகாமல் சுத்த சன்மார்க்கியாய் வாழ்ந்து  மரணத்தை வென்று மற்றவர்களுக்கு வழி காட்டுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

மனம் ஒரு பேய்க் குரங்கு !

மனம் ஒரு பேய்க் குரங்கு !

ஒருவனுடைய மனம் புத்தி.சித்தம் அகங்காரம் தடுமாறுகிறது என்றால்
 அவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்பதாகும்..அறிவு குறைந்து இருக்கிறது என்பதாகும்.

 அறிவு நிறைந்து  இருந்தால் மனம்.புத்தி.சித்தம்.அகங்காரங்கள்.என்ற தடுமாற்றம் தானே அடங்கிவிடும்.

எனவே தான் மனதை சிற்சபையின் கண் செலுத்துங்கள் என்கிறார் வள்ளலார்.

சிற்சபை என்பது நம் உடம்பின் தலைப்பாகத்தில் அகம் என்னும் ஆன்மா இருந்து இயங்கும் இடமாகும்..

வெளியில் செல்லும் மனத்தை ஆன்மாவில் தொடர்பு கொண்டால் மட்டுமே மனமும் புத்தியும் தன் வெளி வேலைகளை நிறுத்திக் கொள்ளும்.

மனமும்.புத்தியும் அடங்கும் இடத்தில் இருந்து தான்.அறிவு வெளிப்படும்.அறிவு வெளிப்பட்டவன் எவனோ அவனால் மட்டுமே மெய்ப்பொருள் என்னும்  உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

வள்ளலார் பாடல் !

மனவாக் கறியா வரைப்பினி லெனக்கேஇனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்எனக்குற வாகிய என்னுயி ருறவே

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திடஇனம்பெறு சித்த மியைந்து களித்திட !

என்னும் அகவல் வரிகளில் தெளிவாக விளக்கி உள்ளார்.மனம் ஆன்மாவில் தொடர்பு கொள்ளும் போது மனம் கனிந்து உருகிட .மதி என்னும் அறிவு நிறைந்து வெளிப்பட்டு தன் வேலையைச் செய்யும்.

அறிவு விளங்கினால் மட்டுமே புறத்தில் உள்ள கரணங்களில் உள்ள மனம்.புத்த.சித்தம்.அகங்காரம் என்னும் கருவிகள்.தன் வேலைகளை.அறிவின் விளக்கத்தின்  வழியாக  செயல்படும்.

புறப்புறம் என்னும் கண்.காது.மூக்கு.வாய்.உடம்பு என்னும்  இந்திரியங்களும் நல் ஒழுக்கத்தின்  வழியில் தன் வேலைகளைச் செய்யும்.

அதனால் தான் வள்ளலார்  சிற்சபையின் கண் மனத்தைச் செலுத்துங்கள் என்கிறார்.

மனம் அடங்குவதற்கு உலகில்.பக்தி. தவம்.தியானம்.யோகம். பல வழிகளை நம் முன்னோர்கள் தவறான வழிகளையே காட்டி உள்ளார்கள்..வள்ளலார் நேர் வழியைக் காட்டி உள்ளார்.

இதற்கு ஆன்ம தியானம் என்றும்.சுத்த சன்மார்க்க தியானம் என்றும் பெயர்.

நாம் வள்ளலார் காட்டிய நேர்வழியில் சென்று மனத்தை அடக்கி அறிவைப் பெருக்கிக் கொண்டு .அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்...

வள்ளலார் பாடல் !

அறிவில் அறிவை அறியும் பொதுவில்ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்

செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழிசெல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி !

அடுத்து

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திருநட இன்பம் என்று அறியாயோ மகளே !.

என்னும் பாடல் வரிகளில் தெரியப் படுத்துகின்றார். வள்ளலார்.

மனம் அடங்கினால் அறிவு தோன்றும்.அறிவு தோன்றினால் அருள் தோன்றும்.அருள் தோன்றினால் கடவுள் யார் என்ற உண்மை விளங்கும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையால் மரணத்தை வெல்லலாம்.

இந்த உண்மை வழியைக் காட்டுவது தான் சுத்த சன்மார்க்கம் .

சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து என்தகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

திங்கள், 2 ஏப்ரல், 2018

வள்ளலாரும் தமிழும்.!

[01/04, 22:56] Jeevanantham Thirupur. Porulalar: வள்ளலாரும் தமிழும்


   அக்டோபர் 5 வள்ளல் பெருமான் அவதரித்த நன்னாளாகும். சமயப் புரட்சியாளராக ஒளிதந்த வள்ளலாரின் பிறந்த நாளை உலகமுழுவதும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி மகிழ்கின்றனா். ஆனம்நேய ஒருமைப்பாட்டையும், சீவகாருண்ய ஒழுக்கத்தையும், சோதி வழிபாட்டையும், மரணமிலாப் பெருவாழ்வையும் அருளிய வடலூராரின் பிறந்த நாளாகிய அக்டோபர் 5 ஆம் நாளை உலக ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்படுவது பொருத்தமே யாகும்.

   வள்ளலாரின் அருட்பாவை யாப்புச் சுவைக்காகத்தான் படிக்கத் தொடங்கினேன், படிக்கப் படிக்க வடலூராரின் வண்டமிழ் என் நெஞ்சை வளப்படுத்தியது. என்னுள் இருந்த ஐயங்களைப் போக்கியது.

   பாவேந்தர் பாரதிதாசனார் வடலூராரின் பொது நிலையைக் கண்டு பாடிய வரிகளைக் காணுங்கள்

''துருக்கர் கிருத்தவர் சூழ் இந்துக்களென்று
இருப்பவர் தமிழரே என்பது உணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு
மெச்சவும் காட்டுவோன் வேண்டும் என்றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றே!''

    சமற்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்று சங்கராசாரியார் கூறிய பொழுது, தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தைமொழி என்று வள்ளலார் பதில் உரைத்தார்.

    தமிழ் மக்களுக்கு முதன் முதலாகத் திருக்குறள் வகுப்பையும், முதியோர் கல்வியையும் நடத்தியவர் வள்ளலார். கல்வெட்டு ஆராச்சியாளராகவும் திகழ்ந்தார். 

    வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் 1596 அடிகளைக் கொண்டது. தமிழ் இலக்கிய உலகில் மிகப் பெரிய அகவலாக அருட்பெருஞ்சோதி அகவல் இடம் பெற்றுள்ளது.

   நெஞ்சறிவுறுத்தல் என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா 1406 அடிகளைக் கொண்டுள்ளது. தமிழிலக்கியத்தில் வள்ளலார் எழுதிய கலிவெண்பாவே பெரியதாகும்.

    192 சீர் கொண்ட விருத்தத்தையும், 104 கண்ணிகளை உடைய கீர்த்தனையும் பாடித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார் வள்ளலார்.

   சங்க காலத்தில் வழக்காக இருந்து, இன்று வழக்கருகிப் போன தரவு கொச்சகக் கலிப்பா போன்ற வகைகளையும், இடைக்காலத்தில் பெரும் வழக்குப் பெற்ற விருத்த வகைகளையும், பிற்காலத்தில் உருவான சிந்து, கீர்த்தனை வகைகளையும் வள்ளலார் பாடித் தமிழின் தொன்மையையும் புதுமையையும் காத்தார்.

   பரிபாடல், தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பனுவல், திருப்புகழ் முதலிய இசைத்தமிழ்ப் பாடல்களும், முத்துத்தாண்டவர், திரிகூடராசப்பக் கவிராயர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை முதலியோர் பாடிய கீர்த்தனைகள் இருந்தும் 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே இசையரங்குகளில் தமிழர்களே பாடும் இழிநிலை தமிழ் நாட்டில் இருந்தது. இந்நிலையை உணர்ந்த வள்ளல் பெருமான் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாடி இசைத்தமிழை வளர்த்தார்.

   உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், சித்த மருத்துவராகவும், சீர்திருத்தச் செம்மலாகவும், அருட்கவியாகவும், அருள் ஞானியாகவும் வாழ்ந்த வள்ளலாரின் வழியை ஏற்போம், அவரின் நெறியைப் பரப்புவோம்                         -ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[01/04, 22:56] Jeevanantham Thirupur. Porulalar: வள்ளலார் விதைத்தத் தமிழ்த் தேசியம்

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நாடெங்கும் பரவியிருந்த காலத்தில் வள்ளலார் வாழ்ந்தார். வணிகம் நடத்திப் பிழைக்க வந்த ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றி ஆளும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் துணிந்த சிற்றரசர்கள் மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் மருது சகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற பலர் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள். இதைக்கண்டு அஞ்சிய ஏனைய சிற்றரசர்கள் ஆங்கிலேயருக்கு அடிபணிந்தார்கள்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இந்தியாவின் தலைநகரமாக கல்கத்தா ஆக்கப்பட்டது. இந்திய மொழிகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவை குறித்து ஆராய்வதற்காக சர். வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி 1785ஆம் ஆண்டில் ஆசியவியல் கழகம் ஒன்றினைத் தொடங்கினார். ஒருபோதும் பேச்சு மொழியாக இல்லாமல், புரோகித மொழியாக மட்டுமே இருந்து வந்த சமஸ்கிருதத்தை உலக அளவில் முக்கியத்துவம் பெறச் செய்ததில் சர். வில்லியம் ஜோன்ஸ் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதில் அங்கம் வகித்த ஆங்கிலேய அறிஞர்கள் மொழியியல் உண்மைகளையோ, வரலாற்றையோ கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் கீழ்க்கண்ட முடிவுகளைச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த பார்ப்பன அறிஞர்களே இதற்கு முக்கிய காரணமாகும்.

1. இந்திய மொழிகள் யாவும் சமஸ்கிருதத்திலிருந்தே பிறந்தன. சமஸ்கிருத பண்பாடே பாரதப் பண்பாடாகும்.
2. வேதங்களையும் சமஸ்கிருத சாஸ்திரங்களையும் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.
3. இதன் விளைவாக ஜெர்மானிய அறிஞரான மாக்ஸ் முல்லர் ்பாரதப் பண்பாடும் நாகரிகமும் சமஸ்கிருத வேத மரபுகளிலிருந்து தோன்றியவை எனக் கருதினார்.
4. சமஸ்கிருதம் உலகிலுள்ள பல மொழிகளில் ஒரு மொழி மட்டு மல்ல. மாறாக உன்னதமான ஆரிதயரைப் பிறரிடமிருந்து பிரித்துக காட்டவும் ஆரியரின் சாத்திர, சடங்குகளைப் பாதுகாக்கவும் உதவிய மொழியே சமற்கிருதம் என்பதுதான் பார்ப்பனர்களின் கருத்து. மேலும், ஆரிய தர்மம், அதன் தூய்மை, அதன் நிலைத்த தன்மை, பண்பு தவறா நிலை ஆகிய அனைத்துமே சமற்கிருத மொழியின் தூய்மையையே சார்ந் திருக்கின்றன என்பது அவர்களது வாதமாகும். ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் இத்தகைய கருத்தோட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

தமிழின் தனித்தன்மை

தமிழ் வடமொழியின் துணையின்றி தனித்து இயங்க வல்லது என்பதையும், தமிழும் வடமொழியும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை யும், ஆங்கிலேய நாட்டு கிறிஸ்துவத் துறவியான கால்டுவெல் தனது ஆராய்ச்சியின் மூலம் நிலைநாட்டினார். 1875ஆம் ஆண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என அவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழின் தனித்தன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்தது. சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த மொழிகள் வேறு தமிழிலிருந்து பிறந்த மொழிகள் வேறு என்பது நிலைநாட்டப்பட்டது.

தமிழில் அ,இ,உ என்ற மூன்றும் சுட்டெழுத்துக்கள் எனப்படும். தொல் பழங்கால மாந்தனின் இயற்கையான ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சுட்டெழுத்துக்களும், அவற்றின் அடிப்படையில் தமிழ் சொற்கோவைகளும் தோன்றியுள்ளன. எனவே சுட்டெழுத்துக்கள் தமிழின் தொன்மையை புலப்படுத்துவதற்கான சிறந்த சான்றுகளாகும். தமிழ் சுட்டெழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்தோ ஐரோப்பிய மொழிகளில் சுட்டுச் சொற்கள் தோன்றியுள்ளன என்பது அறிஞர் கால்டுவெல்லின் கருத்தாகும்.

ரிக் வேதத்திலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன என்று மொழியியல் அறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி கூறுவது சிந்துவெளி தமிழர்கள் வேதகாலத்திற்கு முன்பிருந்தே அங்கு தமிழ் பேசி வாழ்ந்தனர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். 1

பாவாணர் கருத்து

வேத ஆரியர் நாவலந்தேயத்திற்குள் (இந்தியாவிற்குள்) கால் வைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய பாபிலோனிய மொழியிலும், ஆரியம் என்னும் பேரே தோன்றுவதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய எகிப்து மொழியிலும், மறுக்க முடியாத தமிழ்ச் சொற்கள் அடிப்படையாயுள்ளன. ஆகவே, மேலையுலகில் (தோரா. கி.மு.5,000) முதன் முதலாக நாகரிகமடைந்த எகிப்து நாட்டு மொழியில், ஒரு சொல், இரு சொல் அல்ல பல சொற்கள் - அவையும் அடிப்படைச் சொற்கள், தமிழாயிருந்ததே தமிழின் தொன்மைக்குத் தலைசிறந்த இலக்கியச் சான்றாகும்.

வேத ஆரியம் வழக்கற்றுப் போனபின், அதனொடு நாற்பிரா கிருதங்களையுஞ் சேர்த்தமைத்த அரைச்செயற்கை யான இலக்கிய நடை மொழியே (Literary dialect) சமற்கிருதம்.

சுந்தரனார் கருத்து

கன்னித் தமிழ் என்ற புராண கால மரபு வாழ்க்கையை ஓர் அறிவு மரபாக்கிய செல்வர் பேராசிரியர் சுந்தரனாரே.


பல்லுயிரும் பலவுலகும்
படைத் தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன்
இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களி தெலுங்கும்
கவின் மலையாளமும் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே
ஒன்றுபலவா யினும்
ஆரியம் போல் உலகு வழக்கு
அழிந்து ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத்திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்து துமே!

என்று அவர் மனோன்மணிய நாடகத்தின் பாயிரத்தில் பாடுகின்றனர்.

இந்தியாவிலேயே தேசியக்குரல் எழுவதற்கு முன் அவர் எழுப்பிய தமிழ்த் தேசியக் குரல் இது. அதில் தமிழ்த் தேசியத்தின் பழங்கால வரலாறும், அவர் வருங்கால முன்னறிவும், நம் வருங்கால ஆக்கமும் செறிந்து பொதிந்துள்ளன.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் ஒரே திராவிட மொழிக்குழு சார்ந்தவை என்றும், அதன் மிகப் பழமையான மூலம் தமிழே என்றும் டாக்டர் கால்டுவெல் ஆய்ந்து ஒப்பியல் மொழி நூல் வெளியிட்ட காலம் அதுவே. அம்முடிவைக் கவிதை உருவில் தெரிவித்தார் பேராசிரியர்.

சங்க இலக்கிய ஏடுகள் அப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருந்தன. அதற்குள் அதை மதிப்பிட்டு விட்டார் பேராசிரியர். பத்துப்பாட்டையும் திருக்குறளையும கற்றவர் வேதபுராணங்களையும் சாதி அநீதி வகுத்த மனு சுமிருதியையும் தீண்டுவரோ என்று வினாவினார்.

சமஸ்கிருதம் அன்றுமட்டுமன்றி இன்றுகூடப் பலரால் வட இந்தியத் தாய்மொழிகளின் தாய் என்று கருதப்படுகிறது. வடநாட்டுத் தாய்மொழிகளை ஈன்ற சமஸ்கிருதம் அழிந்துவிட, தென்னாட்டுத் தாய்மொழிகளை ஈன்ற தமிழ் அழியவில்லை என்ற வரலாற்றுண்மையைக் கண்டே அவர் கன்னித்தாய்க் கருத்தைக் கட்டுரைத்தார்.2

மேற்கண்ட அறிஞர்களின் கருத்துக்கள் யாவும் வள்ளலார் அவர்கள் மறைவுக்குப் பின்னர் கண்டறிந்து கூறியவையாகும். அதாவது, வள்ளலார் 1874ஆம் ஆண்டில் மறைந்தார் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர் மறைந்து ஓராண்டு கழித்துதான் கால்டுவெல்லின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்னும் நூல் வெளியாகிறது. அதற்குப் பின்னர்தான் மற்ற அறிஞர்களின் ஆய்வு முடிவுகள் வெளிப்பட்டன.
ஆனால் வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே தமிழே தொன்மையானது, சிறந்தது, அதிலிருந்துதான் உலக மொழிகள் யாவும் கிளைத்தன என்னும் கருத்தை வெளியிட்டார். அவரை சங்கராச்சாரியார் சந்தித்தபோது "சமஸ்கிருதம் மாத்ரு பாஷா'' எனக் குறிப்பிட்ட போது உடனடியாக வள்ளலார் "அவ்வாறாயின் தமிழ் பித்ரு பாஷா'' அதாவது தந்தைமொழி என்று ஆணித்தரமாகப் பதிலளித்தார். சமஸ்கிருதம் என்னும் தாய்மொழியிலிருந்துதான் மற்ற மொழிகள் பிறந்தன என்ற கூற்றை மறுக்கும் வகையில், அப்படியாயின், தமிழ் தந்தைமொழி என வள்ளலார் கூறியதற்குப் பொருளே தந்தையில்லாமல் தாய் பிள்ளைபெற முடியாது என்பதுதான். அதுமட்டுமல்ல,

பற்றற்ற பரம ஞானியாகிய அடிகள் தமிழின் மாட்டுத் தணியாத பற்றுக்கொண்டிருந்தார். அகப்பற்று, புறப்பற்று இரண்டையும் அறவே அறுத்த அடிகள் தமிழ்ப்பற்றை அறுத்தாரில்லை. மற்றைப் பற்றுகளை விடற்கும், பற்றற்றா பற்றினைப் பற்றுதற்கும் தமிழ்ப்பற்று ஓர் துணையாதலாற் போலும். அடிகள் மற்றெல்லாப் பற்றுகளைத் துறந்தும் தமிழ்ப் பற்றைத் துறந்தாரிலர். தமிழ்ப் பற்றைத் தமக்கு இறைவனே தந்தான் என்பர். தமிழ்நாட்டிற் பிறப்பித்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறும் அடிகள், தமிழ்ப் பற்றைத் தந்ததற்காகவும் நன்றி கூறுவர். சத்தியப் பெரு விண்ணப்பத்தில், நமக்குத் தமிழ்ப்பற்றை உண்டாக்கியதற்காக அடிகள் இறைவனுக்கு நன்றி கூறும் பகுதி வருமாறு-

எல்லா மானவராயும் ஒன்று மல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே!

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கு மறிதற்கும் மிகவு மிலேசுடையதாய்ப்பாடுதற்கும் துதித்தற்கு மிகவு மினிமையுடையதாய் சாகாக் கல்வியை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர்.

தமிழ் மொழியினிடத்தே மனம் பற்றச் செய்ததற்கு இறைவனைப் பாராட்டும் அடிகள் ஆரிய முதலிய மொழிகளில் ஆசை செல்லவொட்டாது தடுத்ததற்காகவும் பாராட்டுகின்றார். தமிழின் இனிமையைக் கூறுகின்றவர் ஆரிய முதலியவற்றின் இன்னாமையையும் இயம்புகின்றார். இதனின்றும் பின்வரும் செய்திகள் தெளிவாகப் பெறப்படும்.

ஆரியம் முதலிய மொழிகள் இடம்பத்தை உண்டுபண்ணுவன.

தமிழில் இடம்பம் இல்லை.
ஆரியம் முதலிய மொழிகள் ஆரவாரத்தை உண்டுபண்ணுவன.
தமிழில் ஆரவாரம் இல்லை.
ஆரியம் முதலிய மொழிகள் பிரயாசத்தை உண்டுபண்ணுவன.
தமிழில் பிரயாசை இல்லை.
ஆரியம் முதலிய மொழிகள் பெருமறைப்பை உண்டுபண்ணுவன. தமிழ் மறைப்பில்லாதது. உள்ளதனை உள்ளபடி உணர்த்துவது.
ஆரியம் முதலிய மொழிகள் போது போக்கை உண்டுபண்ணுவன.
தமிழில் போது போக்குக்கு இடமில்லை.
தமிழ் பயிலுவதற்கு மிகவும் இலேசுடையது.
ஆரியம் முதலியவை பயிலுவதற்கு இலேசுடையனவன்று.
தமிழ் அறிதற்கு மிகவும் இலேசுடையது.
ஆரியம் முதலியவை அறிதற்கு இலேசுடையனவன்று.
தமிழ் பாடுதற்கு மிகவும் இனிமையுடையது.
ஆரியம் முதலியவை பாடுதற்கு இனிமையுடையனவன்று.
தமிழ் துதித்தற்கு மிகவும் இனிமையுடையது.
ஆரியம் முதலியவை துதித்தற்கு இனிமையுடையனவன்று.
தமிழ் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பது,
ஆரியம் முதலியவை சாகாக் கல்வியை அறிவிக்கா.
தமிழ் திருவருள் வலத்தாற் கிடைத்தது.
ஆரியம் முதலியவை திருவருள் வலத்தாற் கிடைத்தனவன்று.

தமிழில் மனம் பற்றச் செய்ததற்கு அடிகள் மகிழ்கின்றார். ஆரிய முதலியவற்றில் ஆசை செல்ல ஒட்டாது தடுத்ததற்கும் மகிழ்கின்றார். தென்மொழியினிடத்தே மனம் பற்றச் செய்து என்று கூறாது தென்மொழி ஒன்றனிடத்தே எனக் கூறுவதால், அடிகள் தமிழ்மொழி ஒன்றிலேயே பற்றுக்கொண்டிருந்தாரென்பது பெறப்படும்.3

உரைநடை

சங்கக் காலத்திலிருந்து பிறந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவத்திலேயே இருந்தன. இலக்கணங்கள், நிகண்டுகள் போன்றவைகூட செய்யுள் வடிவத்தில்தான் அமைந்தன. உரைநடை என்பது ஆங்கிலத்தின் தொடர்புக்குப் பின் ஏற்பட்டதாகும். தமிழ் வளர்ச்சியின் எதிர்காலம் உரைநடை இலக்கியத்தின் வளர்ச்சியில் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட்டவர் வள்ளலார் ஆவார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை வளர்ச்சியில் ஆறுமுக நாவலரும், வேதநாயகம் பிள்ளையும் இராமலிங்க அடிகளும் குறிப்பிடத்தக்கோராவர். ஆறுமுக நாவலர், பாலபாடம், சைவ வினாவிடை, பெரியபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம், இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம் ஆகிய உரைநடை நூல்களைச் செய்தார். வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம் என்னும் இரு நவீனக் கதைகளை (நாவல்) உரைநடையில் எழுதினார்.

அடிகள் மனுமுறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற இரண்டு உரைநடை நூல்களை எழுதினார். மனுமுறைகண்ட வாசகம் அடிகள் காலத்திலேயே பதிப்பிக்கப்பட்டது. ஜீவகாருண்ய ஒழுக்கம் அடிகளது சித்திக்குப் பின்னர் அச்சாயிற்று. அடிகள் தமது ஒழிவிலொடுக்கப்பதிப்பில் எழுதிய பாயிர விருத்தியும், தொண்டமண்டல சதகப் பதிப்பில் எழுதிய நூற்பெயரிலக்கணமும் உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கமும் இன்ன பிறவும் அடிகளின் உரைநடைத் திறத்தைக் காட்டுவனவாம்.

குறள் தொண்டு

இராமலிங்க அடிகள் தமது பாடல்களுள் பலவிடங்களிற் குறட்பாக்களையும் தொடர்களையும் கருத்துக்களையும் எடுத்தாண்டுள்ளனர். அடிகள் அருளிய நெஞ்சறிவுறுத்தலில் தமது நெஞ்சுக்கு அறிவுறுத்தலாகப் பல குறட்பாக்களை எடுத்துக் கூறுகின்றார்.

"வள்ளுவன்தனை உலகிற்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என பாரதி பாடினார்.
சங்கக் காலத்திலிருந்து பாரதியின் காலம்வரை குறளின் தாக்கம் படியாத இலக்கியம் தமிழில் எழுதப்பட்டதில்லை. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குறள் பொன்னேடுகள் தூசிபடிந்து மூலையில் கிடந்தன. அவற்றை தூசித்தட்டித் துடைத்து மிளிர வைத்த பெருமை வள்ளலாரையே சாரும்.
"தீக்குறளை சென்று ஓதன் மின்'' என இழிவுபடுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட திருக்குறளை பாமர மக்களுக்கு கற்றுக்கொடுக்க வகுப்புகளை முதன்முதலாகத் தொடக்கியவர் வள்ளலாரே ஆவார்.

தமது மாணவர் உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியாரைக்கொண்டு வள்ளலார் திருக்குறள் வகுப்பை நடத்தினார்.
வள்ளலார் காலத்திலும் அதற்கு முன்பும் திருக்குறள் முதலிய நூல்களைத் தக்க பெரும்புலவர்கள், முறையாகப் பாடஞ்சொல்லுவதும் கேட்கும் தரத்திலுள்ளோர் பாடங்கேட்பதும் வழக்கமேயொழிய, கற்றார், கல்லார் முதலிய எல்லாத் தரத்தினரையும் பொதுவாகக் கூட்டி வகுப்பு நடத்தும் வழக்கமில்லை. இதிகாச புராணச் சொற்பொழிவுகளே பொதுமக்களுக்காகச் செய்யப்பட்டு வந்தன. அந்நிலையில் அக்காலத்தில் முதன் முதலாகப் பொதுமக்களுக்காகத் திருக்குறள் வகுப்பு நடத்தத் தொடங்கியவர் இராமலிங்க அடிகளே.

பெரும் புலவர் முதுமுனைவர் இளங்குமரனார் அவர்கள் "வள்ளுவர் வகுத்த அறம் இலக்கணம் என்றால் அவ்விலக்கணத்திற்கு அமைந்த இலக்கியம் வள்ளலாரின் வாழ்க்கை'' என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில்,
"வள்ளலாரின் திருக்குறள் தோய்வை விளக்கும் சான்றுகள் மிகப் பல. அவற்றைத் தொகுத்த தொகுப்பே ஈதாம்.
திருக்குறளை அப்படி அப்படியே தம் பாடல்களில் பொன்னிற் பதித்த வயிர மணியென வைத்துச் செல்கிறார் வள்ளலார்.
"திருக்குறள் வழியது இது' எனக் கற்பார் உணருமாறு, அதன் தொடர்புகளையும், சொற்களையும் சில இடங்களில் வைக்கிறார்.
சில இடங்களில், கருத்தைப் பிழிந்து காட்டி "இது வள்ளுவ வழியது' என உணர்த்துகிறார்.
வள்ளுவர் வாக்கை உரையாசிரியன்மார் கண்டு தெளிந்த தெளிவினும் மேல் தெளிவாகவும் விரியினும் மேல் விரியாகவும் தெளித்தும் விரித்தும் செல்கிறார்.

வள்ளுவர் சுட்டும் அடைமொழி ஒன்றை விளக்கும் அருமையைக் கற்பார் களிப்புறுமாறு பலபக்க அளவுகளில் தனிப் பரப்பெனக் காட்டுகிறார். (எ-டு) அழிபசி, உடற்றும் பசி .

அசைதானும் வள்ளுவர் வாக்கில் பொருளின்றி வருவது இல்லை எனப் பளிச்சிட்டுக் காட்டுகிறார். (எ-டு) முதற்றே.

ஓதாக் கல்வி, சாவாக் கல்வி, பேரா இயற்கை, இன்ன திருக்குறளில் உண்மையைக் கண்டு கொள்ளுமாறு தம் ஆய்வால் துலக்குகிறார். வாழ்வால் நாட்டுகிறார்.

வள்ளுவர் வாக்கின் ஒரு பகுதி கொண்டு, அதன் மறுபகுதி ஈதெனக் காண வள்ளலார் உதவுகிறார்.

வள்ளலார் சொல்லை மேற்கொண்டு, அதனை வேறோர் பொருளுக்கு வேறொரு வகையில் பயன்படுத்தியும் வியப்புறுத்துகிறார்.
வள்ளுவர் உள்ளம் காணலில் சிக்கல் ஏற்படுவது அரிதே! அவ்வாறு ஏற்படும் அரிய இடங்களில் சிக்கலை அவிழ்க்க வள்ளலார் முயல்கிறார். நமக்கும் உதவுகிறார்.
இவ்வெல்லாவற்றினும் மேலாகப் "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்'' என்னும் வள்ளுவர் வழிக்குத் தம்மை முற்றாக ஒப்படைத்து, உவமையிலா ஒருவராக ஒளி காட்டுகிறார் வள்ளலார்! இவை வள்ளுவரை வள்ளலார் அணுகிய நெறிகள். 4
வள்ளலார் தமது பாடல்களிலும் கடிதங்களிலும் நாலடியார் செய்யுள்களைக் குறிப்பிடுகின்றார்.
மூவர் அருளிச் செயலாகிய தேவாரத்தை "நல் இசை நல்கிய மூவர்தம்பாடல்', 'மூவர்தம் பதிகச் செய்ய தீந்தமிழ்த் தேறல்' எனப் பாராட்டிப் போற்றினார்.
"சன்மார்க்கத்தைப் பற்றி உபதேசிக்கும் போது வள்ளலார் "இந்த மார்க்கத்தின் உண்மை தெரியவேண்டில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்' எனக் கூறியதாக ஓர் அன்பர் குறித்து வைத்திருக்கின்றார். சைவசாத்திர நூல்களுள் இதுவே முன்னிற்பது. "சாத்திரத்துக்குத் திருமந்திரம்' என்று இது சிறப்பிக்கப் பெறும்.
அறியாமை இருள் மண்டிக்கிடந்தத் தமிழக மக்களைத் தட்டியெழுப்ப முயன்ற வள்ளலார், அதற்குரிய கருவியாகத் தமிழ்மொழியைப் பயன்படுத்தினார். இனிய எளிய நடையில் தமிழ்ப் பாக்களைப் பாடினார். இதில் பாரதிக்கு முன்னோடி வள்ளலாரே. சமுதாயப் புரட்சியை மூட்டிய வள்ளலாருக்கு மொழிவழி தேசிய உணர்வு இருந்ததில் வியப்பேதும் இருக்க முடியாது. அவரின் மொழிக் கோட்பாடு என்பது தமிழ்த் தேசியத்தை சார்ந்ததே தவிர, சைவ சமய உணர்வை சார்ந்தது அல்ல. தமிழ்த் தேசியம் சைவ தேசியமாக உருவெடுக்காமல் தடுத்து நிறுத்தியவர் வள்ளலாரே.
தமது மொழியின் பெருமையை உணராத பாமர மக்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு மொழிப்பற்றையும், அதன் அடிப்படையில் எழுந்த பெருமித உணர்வையும் ஊட்டித் தலைநிமிரச் செய்தவர் வள்ளலாரே. தமிழ்மொழி குறித்து அவரிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்த தன்மான உணர்வு அவரை துணிந்து பேச வைத்தது. தமிழைத் தாழ்த்திப் பேசியவர்கள் நிறைந்த அந்தச் சூழலில் தமிழின் பெருமையை உரக்கக் கூறியவர் வள்ளலாரே.