செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சாதி சமய மதங்களை மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள் !

🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

🙏🌺" *ஆன்மாவிற்கு உதவாத சாதி சமய மத ஆசாரக் குப்பைகள் எல்லாவற்றையும் குழியில்கொட்டி மண்மூடிப்போடு* "🌺🙏
🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் 👏

நமது வள்ளல் பெருமான் சாதியையும் சமயத்தையும் மதங்களையும் அதனால் வகுக்கப்பட்ட சாத்திரங்களையும் தோத்திரங்களையும் ஆசாரங்களையும்  குப்பைகள் என்றும் அவற்றையெல்லாம் புன்செய் நிலத்தில் எருவாக்கி ஆழக்குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடுங்கள் என்று கூறுவதை கேட்க்கின்ற போது ,

எனது சாதி,
எனது சமயம்,
எனது மதம் என்று அவற்றையே வழிவழியாகப் பற்றி வாழ்கின்ற நம்மைப் போன்றவர்களுக்கு கடுமையான கோபம் வருவது என்பது இயல்புதான் 🙏

ஆனால் , அருளாளர்களின் வார்த்தைகள் சத்தியவார்த்தைகள் என்பதை உணர்ந்து
அனைவரும் இங்கு நன்றாக கவணித்து ஆராயவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன .

அவ்வாறு ஆராயாமல் கோபம் கொண்டு சுத்தசன்மார்க்கத்தை பற்றாது சமய மதத்தையே பற்றிநின்று காலத்தை விரையமாக்கினால், நட்டம் நம் அனைவருக்குமே அன்றி நமது வள்ளல் பெருமானுக்கு ஓர் அணுவளவும் அல்ல என்பதை சத்தியமாக உணர்தல்வேண்டும் 🌻

வள்ளல் பெருமான் இவ்வுலகில் வருவிக்கப்பட்டதன் காரணம் ,
இவ்வுலக உயிர்களின் ஐவகை உயிர்த்துயரங்களாகிய
மரணம்,
பிணி,
மூப்பு,
பயம்,
துன்பம் என்ற கொடிய துயரங்களால் இவ்வுலக உயிர்கள் படுகின்ற துன்பத்தை தவிர்த்து ,
அவ்வுயிர்களுக்கு  உண்டாகின்ற துன்பங்களை எல்லாம் போக்குவது மட்டுமல்ல அவ்வுயிர்களை மரணத்தில் இருந்து காத்து மரணமே இல்லாத பெருவாழ்வாகிய அருட்பெருஞ்ஜோதி வாழ்வில் நம் அனைவரையும் வாழவைப்பதற்காக இவ்வுலகிற்கு எல்லாம் வல்ல உண்மைக்கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்கப்பட்டார்கள் என்பதை முதலில் நாம்நன்றாக அறிதல் வேண்டும்🌻

 *அடுத்து , கீழ்வருவனவற்றை தயவுடன் சற்று சிந்தித்து பார்த்தல் அவசியம்.*

வள்ளல் பெருமான் நம்மைப் போன்று ஓர் சாதாரண பிறவியா ?

நம்மைப் போன்று தாய்தந்தையர்களின் காமத்தில் தாய்வயிற்றில் கருவானவர்களா ?

நம்மைப்போன்று ஆரம்பக் கல்வியை ஆசிரியரைக்கொண்டு பள்ளியில் கற்றவர்களா ?

 *ஏழுவயதில் சுத்த  மெய்யறிவு என்னும் அறிவு தத்துவத்தை விளக்கக்கூடிய முருக்கடவுளை* நிலைக்கண்ணாடியின் வழியாக தரிசிக்கப் பெற்று ,

குழந்தைப் பருவத்திலேயே சுத்த மெய்ஞான போதத்தை அனுபவித்த ஞானச் சுடர் அல்லவா !

குழந்தைப் பருவத்திலேயே வேதாகமங்களை எல்லாம் ஓதாமல் அருளொளியால் உணரப்பெற்று மெய்ஞானப் போதத்தை பால்ய பருவத்திலேயே  அனுபவித்த இளம் அருள்ஞானி அல்லவா !

வெம்மாலைச் சிறுவருடன் விளையாடித் திரிந்த பருவத்திலேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே " *நமது பெம்மான் என்ற அடி குறித்து*" பாடுவதற்கு  பணித்தருளிய  அருட்சிவஞானப் பிள்ளை அல்லவா !

அந்த இளம்பருவத்திலேயே கந்தகோட்ட முருகன் ,
திருத்தணிகை முருகன் ,
திருவொற்றியூர் அம்மை அப்பன்,
வைத்தீஸ்வரன் வைத்தியநாத சுவாமிகள்,
தில்லை அம்பலவானர் என சமயத்தில் அளவற்ற பற்று வைத்திருந்து ,

ஊனையும் உயிரையும் உருக்கச் செய்கின்ற தேவாரம் திருவாசகத்தினும் மேலான தோத்திரப்பாக்களை இயற்றியருளிய மெய்ஞான வித்தகர் அல்லவா !

ஓங்கார பஞ்சாரத்தை சதாசர்வகாலமும் ஓதியே இறைவனடி சேர்ந்திட வேண்டும் என்று தமது சைவசமய அடியார்களுக்கு அப்போது அறிவுறுத்திய  சைவசமயாதீதர் அல்லவா !

இத்தனை என்றளவிட முடியாத அளவிற்கு சமயத்தில் பற்றுவைத்து வாழ்ந்துவந்த நமது வள்ளல் பெருமான் போன்று ,
நாம் யாரும் சமயத்தில் பற்று வைத்திருந்தோமா  ?

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வள்ளல் பெருமானிற்கு நிகரான திருவருளால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் யாரும்  சயத்தில் பற்று வைத்து வாழ்ந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா ?

அப்படி ,
சமயத்தில் அதீத பற்றுவைத்த வாழ்ந்து வந்த வள்ளல் பெருமான் எதற்காக சமய மத மார்க்கங்களை பொய்நெறி என்றும் பொய்யொழுக்கங்கள் என்றும்  இவைகளால் நமது ஆன்ம லட்சியத்தை அடையமுடியாது என்றும் வெறுத்து கூறுகின்றார்கள் என்று நாம் பொறுமையுடன் நன்றாக விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு ஆராய்ந்தோமானால் அதற்குரிய உண்மை நமக்கு திருவருளால் உணர்த்தப்படும் .🙏

வள்ளல் பெருமானைக் காட்டிலும் நாம் எந்தவித்தில் உயர்ந்தவர்கள் ?

பிறப்பால் உயர்ந்தவர்களா ?

கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்களா ?

அருட் பாக்களை இயற்றுவதில் உயர்ந்தவர்களா ?

இவ்வுலகப்பற்றை விட்டநிலையில் உயர்ந்தவர்களா ?

அறிவுவகைகளில் இந்திரிய அறிவு ,
கரண அறிவு,
ஜீவ அறிவு,
ஆன்ம அறிவு,
அருளறிவு,
முடிபான கடவுளறிவு என்ற அறிவுநிலையில் எந்தநிலையில் நமது அறிவு  வள்ளல் பெருமானைக்காட்டிலும் உயர்ந்தது ?

நமது செயற்கை குணங்களாகாய ராகாதிகளை நவம் அடக்கிவிட்டோமா ?
காமத்தை வென்று விட்டோமா ?
தத்துவங்களை நம் வசப்படுத்திவிட்டோமா ?
கோபம் சினம் வெகுளியை முற்றிலும் தவிர்த்துவிட்டோமா ?

தரையில் புழுவது துடித்தால் நமது தசைகள் துடிக்கின்றனவா ?

ஓரறிவு பயிர்கள் வாடினால் ஆறறிவு மனிதர் நாம் வாட்டம் கொள்கின்றோமா ?

இளம் வயதில் நமது வினைக்கு தக்கவாறு
விடய இச்சைகளில் பற்றுவைத்து வாழ்ந்தும்,
நமது அற்ப அறிவினால் ஆராய்ந்து,
அற்ப இன்பங்களை அனுபவித்து,
யான் எனது என்ற அகங்காரத்தில் வாழ்கின்ற நிகரற்ற அற்பர்களாகிய நமக்கு கடவுள் உண்மையை எப்படி உணர இயலும் ?

காலம்கலமாக  நமது முன்னோர்கள் கடைபிடித்து வருகின்ற மதத்தாலும் சமயத்தாலும் அடையமுடியாத நிலை என்பது சுத்தசன்மார்க்கத்தில் அப்படி எந்த நிலை இருக்கின்றது ?

அந்த நிலையை அடைவதற்கு இந்த சமயங்களும் மதங்களும் எப்படி நமக்கு தடையாக) இருக்கின்றன ?

இந்த சமயத்திலும் மதத்திலும் வாழ்ந்துவந்த நமது சமய மத ஞானிகள் அடைந்த நிலைகள்தான் என்பது என்ன ?

சுத்தசன்மார்க்கத்தில் சொல்லப்படுகின்ற சமயமதம் கடந்த பெரியநிலை என்பது எது ?

அந்தப் பெருநிலையில் அனுபவிக்கக்கூடிய பேரின்ப அனுபவங்கள் எவை எவை ?

என்று நாம் ,
நமது அறிவை விகற்பமின்றி உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலோடு விசாரித்து அறிந்தால் ,

நமது வள்ளல் பெருமான் ஏன் சமயத்தை மதத்தை பற்றிக்கொண்டு காலத்தை விரையமாக்க வேண்டாம் என்று இவ்வுலகவர்களுக்கு அறிவுறுத்தி ,
தம்மை மேல்நிலைக்கு ஏற்றிய சுத்தசன்மார்க்கத்திற்கு அனைவரையும் அழைக்கின்றார்கள் என்ற பேருண்மை விளங்கும் 🌻

அதைவிடுத்து ,
நமது அற்ப அறிவிற்கு எட்டியவாறு பெருமானாரது திருவருட்பா பாடல்களுக்கு சமயம்சார்ந்த பலப்பொருள்களை உட்புகுத்தி அதில் விளக்கம் தெரிவிப்பது ,

திருவருட்பா பாடலிற்கு
வெளிப்படையான பொருள் முன்னிற்க , மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து பொருள்கொண்டு அர்த்தத்தை அனர்த்தமாக்கி சமயம் சார்ந்த விளக்கத்தை தெரிவிப்பதுவும் சுத்த சன்மார்க்க வளர்ச்சிக்கு தடைகளாகும் .

சுத்தசன்மார்க்கம் என்பது சமய மத அனுபவங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டவை என்பதும்,

சமய மதங்களில் உள்ள அனுபவங்கள் எல்லாம் சுத்தசன்மார்க்க அனுபவத்திற்கு கீழ்நிலையில் உள்ள அனுபவங்களே என்பதுவும் ,

ஆனால் ,
நாம் அடையவேண்டிய லட்சியம் சுத்தசன்மார்க்க பெருநிலை அனுபவம் என்பதாலும் ,

அந்த பெருநிலை அனுபவத்தைப் பெறுவதற்கு சமயமத ஆச்சாரங்கள் என்பவை நமக்கு தடைகளாக இருக்கின்ற என்பதால் ,

அவற்றில் பற்று வைக்காமல் ,
சுத்தசன்மார்க்கத்திற்கு என்று வகுக்கப்பட்டுள்ள ஒழுக்கங்களை கடைபிடித்து , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மீது மாறாத அன்பும் , இவ்வுலக உயிர்களின் மீது ஆன்மநேய உயிர் இரக்கமும் கொண்டு வாழ்வதனால்  மட்டுமே நாம் அடையவேண்டிய சுத்தசன்மார்க்க பெருநிலையை அடைந்து ,

 *சுத்தசன்மார்க்கத்திற்கு உரிய தனிப்பெருஞ் சிறப்பாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் மரணமிலாப் பெருவாழ்வை அடையக்கூடும்* 🌻🙏

இவ்வுண்மை அறியாமல் நமது அறியாமையினால் வள்ளல் பெருமானையோ, திருவருட்பாவையோ அல்லது சுத்தசன்மார்க்கத்தையோ குறைகூறி தவறாகப் பேசுவது என்பது நமது அறியாமையையே காட்டுகின்றது 🌻

நல்லது ,
கீழ்வரும் பாடல் மூலம் பெருமான் என்ன விளக்கம் கொடுக்கின்றார்கள் என்பதை தயவுடன் கவணிப்போம் 👏

பாடல் ;🌹
இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களா சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதீ
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ்ஜோதி  என்ஆண்டவர் நீரே ;

இப்பாடல் ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் என்ற தலைப்பில் பக்கம் 124 ல் பத்தாவது பாடலாக உள்ளது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் , ஷடாந்தம் என்று சொல்லக்கூடிய ,
சுத்த வேதாந்தம்,
சுத்த சித்தாந்நம்,
சுத்த நாதாந்தம்,
சுத்த போதாந்தம்,
சுத்த யோகாந்தம்,
சுத்த கலாந்தம் என்ற ஆறு அந்தகங்களின் அனுபவமுடிவில் கிடைக்கப் பெறுகின்ற பதம் பதவி நிலைகளை பெருமான் வகைப்படுத்தி ,

அந்த அனுபவங்களை எல்லாம் கடந்த சுத்தசன்மார்க்க  பெருநிலையில் ஆண்டவர் பெருமானை ஏற்றுவித்து ,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் சிற்சபையைக் காட்டி அருளக்கூடிய அருட்ஜோதிவீதி அனுபவத்தை விளக்குவதாக பாடல்கள் அனைத்தும் உள்ளன.

நல்லது தற்போது இந்தப்பாடலின் பொருளைக் காண்போம்🌻

பொருள் ;🌻
இருள் என்பதும் தோஷம் என்பதும் அறியாமை என்பதும் அஞ்ஞானம் என்பதும் ஆகிய எல்லாம் ஒரு பொருளையே குறிக்கின்றனவாகும்.

மருள் என்பது மேற்கண்ட இருள், ஆன்மாவின் அறிவை விளக்கம் பெறச் செய்யவிடாமல் மறைப்பாக மூடி நிற்கும்போது ஆன்ம அறிவு விளக்கம் இல்லாமல்   உண்மையை தெரிந்துகொள்ள இயலாமல் மயங்கி தடுமாறுகின்ற நிலையாகும்.

ஆன்மாவின் அறிவு விளக்கம் பெறாது அல்லது விளக்கம் பெற முடியாமல் இருக்கின்ற நிலையே இருள் நிலையாகும் .

இந்த ஆன்ம அறியாமை என்னும் இருளை விலக்கி ஆன்மாவிற்கு விளக்கத்தை தருவதற்கு அருள்ஒளி தேவைப்படுகின்றது .

 *ஒளி வந்தால் இருள் விலகும்,                  அறிவு வந்தால் அறியாமை விலகும்,  ஞானம் வந்தால் அஞ்ஞானம் விலகும், அறிவு தெளிவு பெற்றால் மயக்கமாகிய தடுமாற்றம் நீங்கும் என்பதாகும்.*

அதுபோன்று ,
இறைவனது உண்மையை தத்துவமாக விளக்கி காட்டுவதற்காக தொழில் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சாதிகளும்,

தத்துவ ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சமய மத ஆசார வழக்கங்களும்,
சாத்திரங்களும், தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றையும் பெருமான் உதவாக் குப்பைகள் என்று கூறுகின்றார்கள் .

ஏன் என்றால் ,
வீட்டில் வாழுகின்ற நாம், நமக்கு உபயோகப்படாத பயனற்ற பொருள்களை குப்பையாகக்கொண்டு எறிந்து விடுவோம் .

அதே போன்று ,
அறியாமை என்னும் பேரிருள் சூழப்பட்டு நின்ற ஆன்மாக்களுக்கு ஆண்டவர் தேகம் கொடுத்து பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் ,

தன்னால் படைக்கப்பட்ட ஆன்மாக்கள் எல்லாம் தனது சச்சிதானந்த உண்மையை அறிந்து அது போன்றே எல்லா ஆன்மாக்களும் சச்சிதானந்த சொரூபத்துடன் சர்வசித்தி வல்லபத்தைப் பெற்றுக்கொண்டு அழியக்கூடிய இந்த அசுத்த நேகத்தை அழியாத நித்திய தேகமாக்கிக்கொண்டு,

தன்னைப்போன்றே இவ்வுலக உயிர்களும் என்றும் உள்ளதுவாய் எல்லாம் செய்ய வல்லதுவாய் அழியாபெருநிலையில்  தன்மயமாய் நின்று இவ்வுலகில் அருள்வாழ்வு வாழவேண்டும் என்பதுதானே தவிர,

இறந்து போவதற்கோ , அல்லது வீடுபேறு என்னும் முத்தியை மட்டும் பெற்றுக்கொண்டு இறைவனடி சேரந்து உடம்பை மறைத்துக் கொள்வதற்கோ அல்ல என்பதை அவசியம் உணர்தல் வேண்டும்🌻

அப்படி ,
ஆண்டவரது சர்வசித்தி வல்லபத்தை பெற்று என்றும் அழியாத நித்தியதேக அனுபவத்தைப் பெறுவதற்கு வழிதுறை காட்டாத சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் எல்லாம் ஆன்மாவிற்கு பயனற்ற மார்க்கங்களாவே பெருமான் கூறுகின்றார்கள் .

அவற்றால் வகுக்கப்பட்ட சாத்திர தோத்திரங்கள் எல்லாம் ஆன்மாவின் லட்சியத்தை அடைவதற்கு பயன்படாத  வீண் குப்பைகளாக பெருமான் பொருள் படுத்துகின்றார்கள்.

சுத்தசன்மார்க்கம் என்ற நன்னீதியை அதாவது நன்னெறியை ,
ஞான நெறியை ,
திருவருள் நெறியை ,
புலைகொலை தவிர்த்தலை வலியுறுத்துகின்ற புணித நெறியைக் கொண்டுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பெருந்தயவாகிய பூரணஅருளை பெறுவதற்கு இயலும் .

அந்த பூரண அருளைப் பெற்றால்தான் எல்லாம் செய்யவல்ல சர்வசித்தியாகிய ஞானசத்தியை (சிற்சத்தி) பெற்றுக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி என்ற தனிப்பெருந்தலைமைப் பதியை நேருறக் காண இயலும் .

அந்த தனிப்பெருங்கருணையின் தயவால்தான் என்றும் அழியாத பெருவாழ்வை அளிக்கக்கூடிய அருள் அமுதத்தைப் பருகி மரணலாமிலாமல் இவ்வுலகில் சச்சிதானந்த சொரூபத்துடன் நித்தியானந்த வாழ்வையும் பெற்று எக்காலத்திலும் எதனாலும் எவ்வளவும் தடைபடாத அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருள் வாழ்வை வாழ இயலும் .

இந்த அருட்பெரு வாழ்வைப் பெற்றுவாழ்வதுதான் ஒவ்வொரு ஆன்மாக்களின் முடிபான ஆன்ம லட்சியமாகும்  .

அந்த அருட்பெருவாழ்வை நான் பெற்றுக்கொண்டேன் .
இந்தப் பெருவாழ்வு பெறுவதற்கு இவ்வளவுநாள் எனக்கு தடையாக இருந்தது நான் பற்றியிருந்த சமயப்பற்றேயாகும்.
அப்பற்றை விட்டு வெளியில் வந்தவுடன்தான் ஆண்டவர் எனக்கு  அகண்டமாக(முழுமையாக) அனைத்தையும் தெரிவித்தார்கள்.

இதுவரை இவ்வுலகில் யாரும் ஏறுவதற்கு அரிய பெரிய  நிலையில் என்னை ஏற்றிவைத்தார்கள் . அதன்பலன் இன்று இவ்வுலகமும் எவ்வுலகமும் என் வசப்பட்டுவிட்டது ,
எனது  தத்துவங்கள் எல்லாம் எனது ஏவல் செய்கின்றன,
எல்லா ஞானங்களும் எனது ஞானமாயின,
இன்று இவ்வுலகில் தேகாதி உலகனைத்தையும் படைக்கும் வல்லபம் பெற்றேன் .
என்போன்று நீங்களும் பெற்றிடவேண்டும் ,
பெற்றிட இயலும் .

அதற்கு ,
சுத்தசன்மார்க்கம் என்ற இந்த நன்னெறி இவ்வுலகில்  ஓங்கி சிறந்து விளங்கிடவும் ஆன்மாக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கி சுத்தஅறிவு என்னும் அருளொளியைப் பெற்றிட,

ஒளிநெறியாம் சுத்தசன்மார்க்க நெறியினாலேதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளியிருக்கும் சிற்சபையை அடைந்திடவும் ,

இதுவரை நீங்கள்  படித்து தெரிந்திருந்த சாதி தத்துவச் சாத்திரங்கள் எல்லாம் உங்களது ஆன்மாவின் லட்சியத்தை அடைவதற்கு பயன்படாத குப்பைகளே ஆகும் .

ஆகையில் அவை அனைத்தையும்  விளைச்சலில் அதிக பயன்தருவதற்கு ஏற்றதாகிய எருவாக இந்த சாத்திரக் குப்பைகளையும் கலந்து  போடுங்கள் என்றும்,

அறியாமை என்னும் மயக்கத்தால் ஆன்மாவை அலைக்கழிக்கும்  இதுவரை இவ்வுலகம் வழக்கமாகக் கொண்டிருந்த சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சாரங்கள் என்று தொன்றுதொட்டு கொண்டிருந்த பழக்கவழக்கங்கள்  எல்லாவற்றையும்  குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள் .

ஏன் குழியில் கொட்டி மண்ணைப்போட்டு மூடுங்கள் என்றுபெருமான் கூறுகின்றார்கள் என்றால்,

நாம் நமது முயற்சியினாலும், பக்குவத்தினாலும், அறிவு விளக்கத்தினாலும் உண்மையை அறிந்து இவைகளை விட்டு விலகி வெளியில்வந்து சன்மார்க்கத்தைப் பிடித்துக்கொண்டாலும்,

இந்த சாதி சமய மத ஆசார வகைகள் சார்ந்த நூல்கள் வெளியில் இருந்தால், நமக்கு பிறகு வருகின்ற நமது ஆன்மநேய சகோதரசகோதரிகள் அறியாமையால் அவற்றைப் பற்றிநின்று ,
கிடைப்பதற்கரிய இந்த அருமையான மானிடப் பிறவியில் அறியவேண்டியதை அறிந்து கொள்ளாமலும் அடைய வேண்டிய ஞானத்தை அடைய முடியாமலும் வீணில் காலத்தைக் கழித்து அற்ப சித்திகளுக்கு ஆசைப்பட்டு நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையக்கூடிய லட்சியத்தை அடையமுடியாமல் போய்விடும் என்று கருதியே யாருடைய பார்வையிலும் படாத வண்ணம் குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடச் சொல்கின்றார்கள் 🌻

ஆகவே,
சாதி சமயம் மதம் என்று காலம்காலமாக வழக்கத்தில் இருந்த  இருள்நெறிப் பற்றைவிட்டு,
சுத்தசன்மார்க்கம் என்ற ஒளிநெறியைப் பற்றிட அழைக்கின்றார்கள்  நமது வள்ளல் பெருமான்.

இவ்வுலகில் நடப்பது எல்லாம் திருவருள் செயலாலே என்று ஏற்றுக்கொள்கின்ற அறிவே பக்குவ அறிவாகும் .

வள்ளல் பெருமான் வார்த்தைகளிலும் முழுநம்பிக்கைக் கொண்டு உண்மையை தயவுடன் உணர்ந்து ஏற்றுக்கொள்வதே கடைத்தேறும் ஆன்மாவிற்குரிய பக்குவம் ஆகும்.
அறிவோம் !
உணர்வோம் !
அடைவோம் !🌻
....தயவான நன்றிகள் 🌻🙏
...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🌻🙏
...பெருமான் துணையில் 🌻🙏
....தயவுடன் வள்ளல் அடிமை 🌻🙏
...வடலூர் இரமேஷ்;

சாதி சமய மதங்களின் ஆசாரக்குப்பைகளை மண்ணில் போட்டு மூடவும் !

🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

🙏🌺" *ஆன்மாவிற்கு உதவாத சாதி சமய மத ஆசாரக் குப்பைகள் எல்லாவற்றையும் குழியில்கொட்டி மண்மூடிப்போடு* "🌺🙏
🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் 👏

நமது வள்ளல் பெருமான் சாதியையும் சமயத்தையும் மதங்களையும் அதனால் வகுக்கப்பட்ட சாத்திரங்களையும் தோத்திரங்களையும் ஆசாரங்களையும்  குப்பைகள் என்றும் அவற்றையெல்லாம் புன்செய் நிலத்தில் எருவாக்கி ஆழக்குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடுங்கள் என்று கூறுவதை கேட்க்கின்ற போது ,

எனது சாதி,
எனது சமயம்,
எனது மதம் என்று அவற்றையே வழிவழியாகப் பற்றி வாழ்கின்ற நம்மைப் போன்றவர்களுக்கு கடுமையான கோபம் வருவது என்பது இயல்புதான் 🙏

ஆனால் , அருளாளர்களின் வார்த்தைகள் சத்தியவார்த்தைகள் என்பதை உணர்ந்து
அனைவரும் இங்கு நன்றாக கவணித்து ஆராயவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன .

அவ்வாறு ஆராயாமல் கோபம் கொண்டு சுத்தசன்மார்க்கத்தை பற்றாது சமய மதத்தையே பற்றிநின்று காலத்தை விரையமாக்கினால், நட்டம் நம் அனைவருக்குமே அன்றி நமது வள்ளல் பெருமானுக்கு ஓர் அணுவளவும் அல்ல என்பதை சத்தியமாக உணர்தல்வேண்டும் 🌻

வள்ளல் பெருமான் இவ்வுலகில் வருவிக்கப்பட்டதன் காரணம் ,
இவ்வுலக உயிர்களின் ஐவகை உயிர்த்துயரங்களாகிய
மரணம்,
பிணி,
மூப்பு,
பயம்,
துன்பம் என்ற கொடிய துயரங்களால் இவ்வுலக உயிர்கள் படுகின்ற துன்பத்தை தவிர்த்து ,
அவ்வுயிர்களுக்கு  உண்டாகின்ற துன்பங்களை எல்லாம் போக்குவது மட்டுமல்ல அவ்வுயிர்களை மரணத்தில் இருந்து காத்து மரணமே இல்லாத பெருவாழ்வாகிய அருட்பெருஞ்ஜோதி வாழ்வில் நம் அனைவரையும் வாழவைப்பதற்காக இவ்வுலகிற்கு எல்லாம் வல்ல உண்மைக்கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்கப்பட்டார்கள் என்பதை முதலில் நாம்நன்றாக அறிதல் வேண்டும்🌻

 *அடுத்து , கீழ்வருவனவற்றை தயவுடன் சற்று சிந்தித்து பார்த்தல் அவசியம்.*

வள்ளல் பெருமான் நம்மைப் போன்று ஓர் சாதாரண பிறவியா ?

நம்மைப் போன்று தாய்தந்தையர்களின் காமத்தில் தாய்வயிற்றில் கருவானவர்களா ?

நம்மைப்போன்று ஆரம்பக் கல்வியை ஆசிரியரைக்கொண்டு பள்ளியில் கற்றவர்களா ?

 *ஏழுவயதில் சுத்த  மெய்யறிவு என்னும் அறிவு தத்துவத்தை விளக்கக்கூடிய முருக்கடவுளை* நிலைக்கண்ணாடியின் வழியாக தரிசிக்கப் பெற்று ,

குழந்தைப் பருவத்திலேயே சுத்த மெய்ஞான போதத்தை அனுபவித்த ஞானச் சுடர் அல்லவா !

குழந்தைப் பருவத்திலேயே வேதாகமங்களை எல்லாம் ஓதாமல் அருளொளியால் உணரப்பெற்று மெய்ஞானப் போதத்தை பால்ய பருவத்திலேயே  அனுபவித்த இளம் அருள்ஞானி அல்லவா !

வெம்மாலைச் சிறுவருடன் விளையாடித் திரிந்த பருவத்திலேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே " *நமது பெம்மான் என்ற அடி குறித்து*" பாடுவதற்கு  பணித்தருளிய  அருட்சிவஞானப் பிள்ளை அல்லவா !

அந்த இளம்பருவத்திலேயே கந்தகோட்ட முருகன் ,
திருத்தணிகை முருகன் ,
திருவொற்றியூர் அம்மை அப்பன்,
வைத்தீஸ்வரன் வைத்தியநாத சுவாமிகள்,
தில்லை அம்பலவானர் என சமயத்தில் அளவற்ற பற்று வைத்திருந்து ,

ஊனையும் உயிரையும் உருக்கச் செய்கின்ற தேவாரம் திருவாசகத்தினும் மேலான தோத்திரப்பாக்களை இயற்றியருளிய மெய்ஞான வித்தகர் அல்லவா !

ஓங்கார பஞ்சாரத்தை சதாசர்வகாலமும் ஓதியே இறைவனடி சேர்ந்திட வேண்டும் என்று தமது சைவசமய அடியார்களுக்கு அப்போது அறிவுறுத்திய  சைவசமயாதீதர் அல்லவா !

இத்தனை என்றளவிட முடியாத அளவிற்கு சமயத்தில் பற்றுவைத்து வாழ்ந்துவந்த நமது வள்ளல் பெருமான் போன்று ,
நாம் யாரும் சமயத்தில் பற்று வைத்திருந்தோமா  ?

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வள்ளல் பெருமானிற்கு நிகரான திருவருளால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் யாரும்  சயத்தில் பற்று வைத்து வாழ்ந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா ?

அப்படி ,
சமயத்தில் அதீத பற்றுவைத்த வாழ்ந்து வந்த வள்ளல் பெருமான் எதற்காக சமய மத மார்க்கங்களை பொய்நெறி என்றும் பொய்யொழுக்கங்கள் என்றும்  இவைகளால் நமது ஆன்ம லட்சியத்தை அடையமுடியாது என்றும் வெறுத்து கூறுகின்றார்கள் என்று நாம் பொறுமையுடன் நன்றாக விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு ஆராய்ந்தோமானால் அதற்குரிய உண்மை நமக்கு திருவருளால் உணர்த்தப்படும் .🙏

வள்ளல் பெருமானைக் காட்டிலும் நாம் எந்தவித்தில் உயர்ந்தவர்கள் ?

பிறப்பால் உயர்ந்தவர்களா ?

கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்களா ?

அருட் பாக்களை இயற்றுவதில் உயர்ந்தவர்களா ?

இவ்வுலகப்பற்றை விட்டநிலையில் உயர்ந்தவர்களா ?

அறிவுவகைகளில் இந்திரிய அறிவு ,
கரண அறிவு,
ஜீவ அறிவு,
ஆன்ம அறிவு,
அருளறிவு,
முடிபான கடவுளறிவு என்ற அறிவுநிலையில் எந்தநிலையில் நமது அறிவு  வள்ளல் பெருமானைக்காட்டிலும் உயர்ந்தது ?

நமது செயற்கை குணங்களாகாய ராகாதிகளை நவம் அடக்கிவிட்டோமா ?
காமத்தை வென்று விட்டோமா ?
தத்துவங்களை நம் வசப்படுத்திவிட்டோமா ?
கோபம் சினம் வெகுளியை முற்றிலும் தவிர்த்துவிட்டோமா ?

தரையில் புழுவது துடித்தால் நமது தசைகள் துடிக்கின்றனவா ?

ஓரறிவு பயிர்கள் வாடினால் ஆறறிவு மனிதர் நாம் வாட்டம் கொள்கின்றோமா ?

இளம் வயதில் நமது வினைக்கு தக்கவாறு
விடய இச்சைகளில் பற்றுவைத்து வாழ்ந்தும்,
நமது அற்ப அறிவினால் ஆராய்ந்து,
அற்ப இன்பங்களை அனுபவித்து,
யான் எனது என்ற அகங்காரத்தில் வாழ்கின்ற நிகரற்ற அற்பர்களாகிய நமக்கு கடவுள் உண்மையை எப்படி உணர இயலும் ?

காலம்கலமாக  நமது முன்னோர்கள் கடைபிடித்து வருகின்ற மதத்தாலும் சமயத்தாலும் அடையமுடியாத நிலை என்பது சுத்தசன்மார்க்கத்தில் அப்படி எந்த நிலை இருக்கின்றது ?

அந்த நிலையை அடைவதற்கு இந்த சமயங்களும் மதங்களும் எப்படி நமக்கு தடையாக) இருக்கின்றன ?

இந்த சமயத்திலும் மதத்திலும் வாழ்ந்துவந்த நமது சமய மத ஞானிகள் அடைந்த நிலைகள்தான் என்பது என்ன ?

சுத்தசன்மார்க்கத்தில் சொல்லப்படுகின்ற சமயமதம் கடந்த பெரியநிலை என்பது எது ?

அந்தப் பெருநிலையில் அனுபவிக்கக்கூடிய பேரின்ப அனுபவங்கள் எவை எவை ?

என்று நாம் ,
நமது அறிவை விகற்பமின்றி உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலோடு விசாரித்து அறிந்தால் ,

நமது வள்ளல் பெருமான் ஏன் சமயத்தை மதத்தை பற்றிக்கொண்டு காலத்தை விரையமாக்க வேண்டாம் என்று இவ்வுலகவர்களுக்கு அறிவுறுத்தி ,
தம்மை மேல்நிலைக்கு ஏற்றிய சுத்தசன்மார்க்கத்திற்கு அனைவரையும் அழைக்கின்றார்கள் என்ற பேருண்மை விளங்கும் 🌻

அதைவிடுத்து ,
நமது அற்ப அறிவிற்கு எட்டியவாறு பெருமானாரது திருவருட்பா பாடல்களுக்கு சமயம்சார்ந்த பலப்பொருள்களை உட்புகுத்தி அதில் விளக்கம் தெரிவிப்பது ,

திருவருட்பா பாடலிற்கு
வெளிப்படையான பொருள் முன்னிற்க , மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து பொருள்கொண்டு அர்த்தத்தை அனர்த்தமாக்கி சமயம் சார்ந்த விளக்கத்தை தெரிவிப்பதுவும் சுத்த சன்மார்க்க வளர்ச்சிக்கு தடைகளாகும் .

சுத்தசன்மார்க்கம் என்பது சமய மத அனுபவங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டவை என்பதும்,

சமய மதங்களில் உள்ள அனுபவங்கள் எல்லாம் சுத்தசன்மார்க்க அனுபவத்திற்கு கீழ்நிலையில் உள்ள அனுபவங்களே என்பதுவும் ,

ஆனால் ,
நாம் அடையவேண்டிய லட்சியம் சுத்தசன்மார்க்க பெருநிலை அனுபவம் என்பதாலும் ,

அந்த பெருநிலை அனுபவத்தைப் பெறுவதற்கு சமயமத ஆச்சாரங்கள் என்பவை நமக்கு தடைகளாக இருக்கின்ற என்பதால் ,

அவற்றில் பற்று வைக்காமல் ,
சுத்தசன்மார்க்கத்திற்கு என்று வகுக்கப்பட்டுள்ள ஒழுக்கங்களை கடைபிடித்து , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மீது மாறாத அன்பும் , இவ்வுலக உயிர்களின் மீது ஆன்மநேய உயிர் இரக்கமும் கொண்டு வாழ்வதனால்  மட்டுமே நாம் அடையவேண்டிய சுத்தசன்மார்க்க பெருநிலையை அடைந்து ,

 *சுத்தசன்மார்க்கத்திற்கு உரிய தனிப்பெருஞ் சிறப்பாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் மரணமிலாப் பெருவாழ்வை அடையக்கூடும்* 🌻🙏

இவ்வுண்மை அறியாமல் நமது அறியாமையினால் வள்ளல் பெருமானையோ, திருவருட்பாவையோ அல்லது சுத்தசன்மார்க்கத்தையோ குறைகூறி தவறாகப் பேசுவது என்பது நமது அறியாமையையே காட்டுகின்றது 🌻

நல்லது ,
கீழ்வரும் பாடல் மூலம் பெருமான் என்ன விளக்கம் கொடுக்கின்றார்கள் என்பதை தயவுடன் கவணிப்போம் 👏

பாடல் ;🌹
இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களா சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதீ
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ்ஜோதி  என்ஆண்டவர் நீரே ;

இப்பாடல் ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் என்ற தலைப்பில் பக்கம் 124 ல் பத்தாவது பாடலாக உள்ளது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் , ஷடாந்தம் என்று சொல்லக்கூடிய ,
சுத்த வேதாந்தம்,
சுத்த சித்தாந்நம்,
சுத்த நாதாந்தம்,
சுத்த போதாந்தம்,
சுத்த யோகாந்தம்,
சுத்த கலாந்தம் என்ற ஆறு அந்தகங்களின் அனுபவமுடிவில் கிடைக்கப் பெறுகின்ற பதம் பதவி நிலைகளை பெருமான் வகைப்படுத்தி ,

அந்த அனுபவங்களை எல்லாம் கடந்த சுத்தசன்மார்க்க  பெருநிலையில் ஆண்டவர் பெருமானை ஏற்றுவித்து ,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் சிற்சபையைக் காட்டி அருளக்கூடிய அருட்ஜோதிவீதி அனுபவத்தை விளக்குவதாக பாடல்கள் அனைத்தும் உள்ளன.

நல்லது தற்போது இந்தப்பாடலின் பொருளைக் காண்போம்🌻

பொருள் ;🌻
இருள் என்பதும் தோஷம் என்பதும் அறியாமை என்பதும் அஞ்ஞானம் என்பதும் ஆகிய எல்லாம் ஒரு பொருளையே குறிக்கின்றனவாகும்.

மருள் என்பது மேற்கண்ட இருள், ஆன்மாவின் அறிவை விளக்கம் பெறச் செய்யவிடாமல் மறைப்பாக மூடி நிற்கும்போது ஆன்ம அறிவு விளக்கம் இல்லாமல்   உண்மையை தெரிந்துகொள்ள இயலாமல் மயங்கி தடுமாறுகின்ற நிலையாகும்.

ஆன்மாவின் அறிவு விளக்கம் பெறாது அல்லது விளக்கம் பெற முடியாமல் இருக்கின்ற நிலையே இருள் நிலையாகும் .

இந்த ஆன்ம அறியாமை என்னும் இருளை விலக்கி ஆன்மாவிற்கு விளக்கத்தை தருவதற்கு அருள்ஒளி தேவைப்படுகின்றது .

 *ஒளி வந்தால் இருள் விலகும்,                  அறிவு வந்தால் அறியாமை விலகும்,  ஞானம் வந்தால் அஞ்ஞானம் விலகும், அறிவு தெளிவு பெற்றால் மயக்கமாகிய தடுமாற்றம் நீங்கும் என்பதாகும்.*

அதுபோன்று ,
இறைவனது உண்மையை தத்துவமாக விளக்கி காட்டுவதற்காக தொழில் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சாதிகளும்,

தத்துவ ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சமய மத ஆசார வழக்கங்களும்,
சாத்திரங்களும், தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றையும் பெருமான் உதவாக் குப்பைகள் என்று கூறுகின்றார்கள் .

ஏன் என்றால் ,
வீட்டில் வாழுகின்ற நாம், நமக்கு உபயோகப்படாத பயனற்ற பொருள்களை குப்பையாகக்கொண்டு எறிந்து விடுவோம் .

அதே போன்று ,
அறியாமை என்னும் பேரிருள் சூழப்பட்டு நின்ற ஆன்மாக்களுக்கு ஆண்டவர் தேகம் கொடுத்து பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் ,

தன்னால் படைக்கப்பட்ட ஆன்மாக்கள் எல்லாம் தனது சச்சிதானந்த உண்மையை அறிந்து அது போன்றே எல்லா ஆன்மாக்களும் சச்சிதானந்த சொரூபத்துடன் சர்வசித்தி வல்லபத்தைப் பெற்றுக்கொண்டு அழியக்கூடிய இந்த அசுத்த நேகத்தை அழியாத நித்திய தேகமாக்கிக்கொண்டு,

தன்னைப்போன்றே இவ்வுலக உயிர்களும் என்றும் உள்ளதுவாய் எல்லாம் செய்ய வல்லதுவாய் அழியாபெருநிலையில்  தன்மயமாய் நின்று இவ்வுலகில் அருள்வாழ்வு வாழவேண்டும் என்பதுதானே தவிர,

இறந்து போவதற்கோ , அல்லது வீடுபேறு என்னும் முத்தியை மட்டும் பெற்றுக்கொண்டு இறைவனடி சேரந்து உடம்பை மறைத்துக் கொள்வதற்கோ அல்ல என்பதை அவசியம் உணர்தல் வேண்டும்🌻

அப்படி ,
ஆண்டவரது சர்வசித்தி வல்லபத்தை பெற்று என்றும் அழியாத நித்தியதேக அனுபவத்தைப் பெறுவதற்கு வழிதுறை காட்டாத சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் எல்லாம் ஆன்மாவிற்கு பயனற்ற மார்க்கங்களாவே பெருமான் கூறுகின்றார்கள் .

அவற்றால் வகுக்கப்பட்ட சாத்திர தோத்திரங்கள் எல்லாம் ஆன்மாவின் லட்சியத்தை அடைவதற்கு பயன்படாத  வீண் குப்பைகளாக பெருமான் பொருள் படுத்துகின்றார்கள்.

சுத்தசன்மார்க்கம் என்ற நன்னீதியை அதாவது நன்னெறியை ,
ஞான நெறியை ,
திருவருள் நெறியை ,
புலைகொலை தவிர்த்தலை வலியுறுத்துகின்ற புணித நெறியைக் கொண்டுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பெருந்தயவாகிய பூரணஅருளை பெறுவதற்கு இயலும் .

அந்த பூரண அருளைப் பெற்றால்தான் எல்லாம் செய்யவல்ல சர்வசித்தியாகிய ஞானசத்தியை (சிற்சத்தி) பெற்றுக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி என்ற தனிப்பெருந்தலைமைப் பதியை நேருறக் காண இயலும் .

அந்த தனிப்பெருங்கருணையின் தயவால்தான் என்றும் அழியாத பெருவாழ்வை அளிக்கக்கூடிய அருள் அமுதத்தைப் பருகி மரணலாமிலாமல் இவ்வுலகில் சச்சிதானந்த சொரூபத்துடன் நித்தியானந்த வாழ்வையும் பெற்று எக்காலத்திலும் எதனாலும் எவ்வளவும் தடைபடாத அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருள் வாழ்வை வாழ இயலும் .

இந்த அருட்பெரு வாழ்வைப் பெற்றுவாழ்வதுதான் ஒவ்வொரு ஆன்மாக்களின் முடிபான ஆன்ம லட்சியமாகும்  .

அந்த அருட்பெருவாழ்வை நான் பெற்றுக்கொண்டேன் .
இந்தப் பெருவாழ்வு பெறுவதற்கு இவ்வளவுநாள் எனக்கு தடையாக இருந்தது நான் பற்றியிருந்த சமயப்பற்றேயாகும்.
அப்பற்றை விட்டு வெளியில் வந்தவுடன்தான் ஆண்டவர் எனக்கு  அகண்டமாக(முழுமையாக) அனைத்தையும் தெரிவித்தார்கள்.

இதுவரை இவ்வுலகில் யாரும் ஏறுவதற்கு அரிய பெரிய  நிலையில் என்னை ஏற்றிவைத்தார்கள் . அதன்பலன் இன்று இவ்வுலகமும் எவ்வுலகமும் என் வசப்பட்டுவிட்டது ,
எனது  தத்துவங்கள் எல்லாம் எனது ஏவல் செய்கின்றன,
எல்லா ஞானங்களும் எனது ஞானமாயின,
இன்று இவ்வுலகில் தேகாதி உலகனைத்தையும் படைக்கும் வல்லபம் பெற்றேன் .
என்போன்று நீங்களும் பெற்றிடவேண்டும் ,
பெற்றிட இயலும் .

அதற்கு ,
சுத்தசன்மார்க்கம் என்ற இந்த நன்னெறி இவ்வுலகில்  ஓங்கி சிறந்து விளங்கிடவும் ஆன்மாக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கி சுத்தஅறிவு என்னும் அருளொளியைப் பெற்றிட,

ஒளிநெறியாம் சுத்தசன்மார்க்க நெறியினாலேதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளியிருக்கும் சிற்சபையை அடைந்திடவும் ,

இதுவரை நீங்கள்  படித்து தெரிந்திருந்த சாதி தத்துவச் சாத்திரங்கள் எல்லாம் உங்களது ஆன்மாவின் லட்சியத்தை அடைவதற்கு பயன்படாத குப்பைகளே ஆகும் .

ஆகையில் அவை அனைத்தையும்  விளைச்சலில் அதிக பயன்தருவதற்கு ஏற்றதாகிய எருவாக இந்த சாத்திரக் குப்பைகளையும் கலந்து  போடுங்கள் என்றும்,

அறியாமை என்னும் மயக்கத்தால் ஆன்மாவை அலைக்கழிக்கும்  இதுவரை இவ்வுலகம் வழக்கமாகக் கொண்டிருந்த சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சாரங்கள் என்று தொன்றுதொட்டு கொண்டிருந்த பழக்கவழக்கங்கள்  எல்லாவற்றையும்  குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள் .

ஏன் குழியில் கொட்டி மண்ணைப்போட்டு மூடுங்கள் என்றுபெருமான் கூறுகின்றார்கள் என்றால்,

நாம் நமது முயற்சியினாலும், பக்குவத்தினாலும், அறிவு விளக்கத்தினாலும் உண்மையை அறிந்து இவைகளை விட்டு விலகி வெளியில்வந்து சன்மார்க்கத்தைப் பிடித்துக்கொண்டாலும்,

இந்த சாதி சமய மத ஆசார வகைகள் சார்ந்த நூல்கள் வெளியில் இருந்தால், நமக்கு பிறகு வருகின்ற நமது ஆன்மநேய சகோதரசகோதரிகள் அறியாமையால் அவற்றைப் பற்றிநின்று ,
கிடைப்பதற்கரிய இந்த அருமையான மானிடப் பிறவியில் அறியவேண்டியதை அறிந்து கொள்ளாமலும் அடைய வேண்டிய ஞானத்தை அடைய முடியாமலும் வீணில் காலத்தைக் கழித்து அற்ப சித்திகளுக்கு ஆசைப்பட்டு நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையக்கூடிய லட்சியத்தை அடையமுடியாமல் போய்விடும் என்று கருதியே யாருடைய பார்வையிலும் படாத வண்ணம் குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடச் சொல்கின்றார்கள் 🌻

ஆகவே,
சாதி சமயம் மதம் என்று காலம்காலமாக வழக்கத்தில் இருந்த  இருள்நெறிப் பற்றைவிட்டு,
சுத்தசன்மார்க்கம் என்ற ஒளிநெறியைப் பற்றிட அழைக்கின்றார்கள்  நமது வள்ளல் பெருமான்.

இவ்வுலகில் நடப்பது எல்லாம் திருவருள் செயலாலே என்று ஏற்றுக்கொள்கின்ற அறிவே பக்குவ அறிவாகும் .

வள்ளல் பெருமான் வார்த்தைகளிலும் முழுநம்பிக்கைக் கொண்டு உண்மையை தயவுடன் உணர்ந்து ஏற்றுக்கொள்வதே கடைத்தேறும் ஆன்மாவிற்குரிய பக்குவம் ஆகும்.
அறிவோம் !
உணர்வோம் !
அடைவோம் !🌻
....தயவான நன்றிகள் 🌻🙏
...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🌻🙏
...பெருமான் துணையில் 🌻🙏
....தயவுடன் வள்ளல் அடிமை 🌻🙏
...வடலூர் இரமேஷ்;

சனி, 16 பிப்ரவரி, 2019

சண்டை இல்லாத போர் இல்லாத சமுதாயத்தை படைப்போம் !

சண்டை இல்லாமல் போர் இல்லாத சமுதாயத்தை படைப்போம் !

மரணம் அடையாமல் வாழும்  வழி !

இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் போரில்  வீர மரணம்...

ஒரு நாட்டின் பாதகாப்பிற்காக பணிபுரியும் ராணுவ வீரர்கள் எதிரிகளால் துப்பாக்கி சூட்டிலும் அணு ஆயுதங்களாலும் பலியாவது
இன்று நேற்று அல்ல  பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது...

நம்நாட்டின்  பாதுகாவலர்கள் பலியானால் நாம் வருந்துகிறோம்..
அயல்நாட்டு பாதுகாவலர்கள் பலியானால் அவர்கள் வருந்துகிறார்கள்...

அனுதாபம் தெரிவித்து விட்டு ஒதுங்கிக் கொள்கிறோம்.

கொஞ்சநாள் கழித்து மறந்து விடுகிறோம்...மீண்டும் போர் துவங்கி விடுகிறது.. சண்டை வருகின்றது .மரணம் நடந்து கொண்டே உள்ளது..

இவற்றை தடுக்க தீர்வுதான் என்ன ?

போர் போராட்டம் இல்லாத நாடுகளையோ. மக்களையோ. பார்க்க முடிகிறதா என்றால் மிகக் கடினம்...

ஒரு மனிதனுடைய உயிர் விலை மதிப்பு அற்றது என்பதை யாராவது உணர்ந்தார்களா ? என்றால் இன்றுவரை யாரும் உணர்ந்து கொள்ளவில்லை..

இந்த விலை மதிப்பற்ற உயிர்க் கொலைக்கு யார் காரணம்.?

நாட்டை நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள்..

ஆட்சியாளர்கள் யார் ?  ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர்கள்...

மதம் எப்படி வந்த்து ? கடவுள் கொள்கையினால் வந்தது...

கடவுள் கொள்கை எப்படி வந்தது ..

பல அருளாளர்களால் வந்தது...

ஒரே கடவுள் என்ற உண்மை அறியாமல் ..ஒவ்வொரு ஞானிகளும்.ஒவ்வொரு அருளாளர்களும்..பல நாடுகளில் பலப்பல கடவுள்களை தோற்றுவித்து உள்ளார்கள்..

பல கடவுள்களுக்கு பல மதங்கள்..பல மதங்களுக்கு பல கொள்கைகள்.
பல நாடுகள் எனப் பிரிக்கப்பட்டது...

பலநாடுகளின் மதங்கள் பல நாடுகளை ஆட்சி செய்ய ஆசைப்படுகின்றன..
தங்களின் மதத்தின் கொள்களை மற்ற நாட்டு மக்கள் மீது திணிக்கப்பார்க்கின்றன.

எனவே தங்களின் ஆதிக்க  அதிகாரங்களை பயன் படுத்துகின்றன.அதனால் நாடுகடந்து செல்ல போர் செய்கின்றன.
போருக்கு வேண்டிய அணு ஆயுதங்களை நூதனமுறையில் தயார் செய்கின்றன..

போரினால் எல்லையில் பாதுகாக்கும் அப்பாவி மக்களின் உயிர்கள் பரிக்கப்படுகின்றது..

பல நாடுகளில் பல மதங்கள்
.பல கொள்கைகள் .பல  மனிதர்கள் என்ற வேற்றுமை மாற வேண்டும்..

எனவேதான் கடவுளின் பெயரால் .மதத்தின் பெயரால்.சமயத்தின் பெயரால் சாதியின் பெயரால்  நாடுகள் பிரிந்துள்ளன.சண்டையிட்டு போரிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்.

ஒற்றுமையாக வாழ வேண்டிய மனிதர்கள். நாட்டிற்குநாடு  ஒற்றுமை இல்லாமல்.மனிதநேயம் இல்லாமல்.
ஆன்மநேயம் இல்லாமல் போரிட்டு அழிந்து கொண்டே உள்ளார்கள்.

இதைத்தான் வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!

என்ற பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்

உலகம் முழுவதும் சமய மதம் போன்ற பொய்யான கொள்கை  நெறிகளால் கடவுளை வேறுபடுத்தி ..ஒரே கடவுள் என்ற உண்மை அறியாமல் பல கடவுள்களை படைத்து .பேய்பிடித்த குரங்குகள் போல் பைத்தியக்காரத் தனமான கொள்கைகளை உருவாக்கி போரிட்டு மனிதனை மனிதனை அழித்துக் கொண்டுள்ளார்கள்.. என்கிறார்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.

பொது நெறி !

உலகம் முழுவதும் வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே....

சாதி.சமயம் மதம் அற்ற எல்லோருக்கும் பொதுவான ஒரே  கொள்கையை பின்பற்றி  வாழமுடியும்.

உலக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ முடியும்...

நாம் எல்லோரும் ஒரே கடவுளால் படைக்கப்பட்ட குழந்தைகள் என்பதை உணர்ந்து அறிந்து கொண்டால் சண்டைவருமா ? போர் வருமா ? உயிர் போகுமா ?

உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்...

இறைவன் படைத்த உலகத்தில் எல்லை எதற்கு .எல்லைத் தகராறு எதற்கு....எல்லையை பிடித்து. எல்லையை பிரித்து எத்தனை ஆண்டுகாலம் வாழப்போகிறீர்கள்...

கடவுளால் படைத்த உலகமும் உலகத்தில் உள்ள பொருள்களும் அப்படியே தான் இருக்கும்..

உயிர் இனங்கள் மட்டும் பிறந்து பிறந்து. இறந்து இறந்து.உருமாறிக் கொண்டே இருக்கும்...

*இந்த அசுத்த குணமான உலகத்தை மாற்றி புதிய புனித உலகமாக மாற்றுவதற்காகவே இறைவன் வள்ளலாரை  இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்...*

வள்ளலார் பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்கிறார் வள்ளலார்.

*வள்ளலார் அனுப்பி வைத்த  ஒரே கடவுள் ! உண்மையான கடவுள் ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே*

இனி உலகம் முழுவதும் சாதி.சமய.மதங்கள் அழிந்து ஒழிந்து சுத்த சன்மார்க்கம் தழைத்து ஓங்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது..

உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள உலகத்தை காப்பாற்ற. உயிர்களை காப்பாற்ற ஒவ்வொருவரும்  வள்ளலார் காட்டிய உலகப் பொது நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை* பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ்வோம்....

*சண்டை இல்லாத. போர் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ஆடாதீர் சற்றும் அசையாதீர் !

வள்ளலார் பாடல் !

பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்

இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே

அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்

நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.!

மேலே கண்ட பாடலின் விளக்கம் புரிகிறதா ? அன்பர்களே...

பித்துலகர் மெச்ச பிதற்றி நின்ற பேதையனேன்.
என்கிறார் ..

இந்த மக்கள் உண்மை அறியாமல் .பொய்யை மெய்யாக நினைத்துக்கொண்டு.
அறியாமையால் பைத்தியக்காரத் தனமாக வாழ்த்து கொண்டு உள்ளார்கள்..அவர்கள் மெச்சும்படி பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ளேன்.அவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு என்பின் தொடர்வார்கள் என்ற பேராசையில் எவ்வளவோ உண்மைகளை வரிசைப்படுத்தி சொன்னேன் ..

ஒருவரும் கேட்கவில்லை. உண்மை உணரவில்லை..
மூடமாகவே இருக்கிறார்கள்...

சாதி.சமய.மதம் போன்ற கொள்கையைவிட்டு வெளியே வரமுடியவில்லை...

என்னுடைய இச்சையெல்லாம் அறிந்துகொண்ட எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..என்விருப்பபடி அருளை வாரிவழங்கி என்னைத் தன்னுடைய செல்லபிள்ளையாக ஏற்றுக்கொண்டார்..

அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன்..

எனக்கு இப்போது இந்த உலகத்தில்  அச்சம் எனபது எதுவுமே இல்லை..அருள் அமுதம் உண்டு மரணத்தை வென்றுவிட்டேன்..

இனிமேலாவது தங்களை காப்பாற்றிக் கொள்வார்களா ? உயர்ந்த மனித தேகத்தை அழித்துக் கொண்டே  உள்ளார்களே ! இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த தேகம் போனால் மீண்டும் இந்த தேகம் கிடைக்கும் என்பது உறுதி அல்ல... இவர்களின் நிலைமையை நினைத்தால் பாவமாகவும்.வேதனையாகவும்.வருத்தமாகவும் இருக்கின்றது...

நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேன்..

இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுடன் இணைந்து கொண்டார்.என்
உடம்பில் கலந்து கொண்டார்..

என்னுடைய பேரானாந்த்திற்கு அளவே இல்லை ..அன்பு.அருள் ஆனந்தம் என்ற மகிழ்ச்சி யில் பொங்கி வழிகின்றேன்  என்கிறார் வள்ளலார்...

மக்கள் வள்ளலார் காலத்திலும்.வள்ளலார் உடன் இருந்தவர்களும் . அருள் பெற்று மரணத்தை வெல்லும் உண்மையை அறிந்து கொள்ளவில்லை..
இப்போது உள்ளவர்களும் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்..

சன்மார்க்க என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு உள்ளவர்களும்...
புதியதாக சன்மார்க்கத்திற்கு வரும் மக்களையும் .சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பதே தெரியாமல் தானும் குழம்பி வருபவர்களையும் குழப்பி விடுகின்றார்கள்..

எனவே இப்போது இந்த தருணம் புதியதாக வருபவர்கள் அறிவு தேடல் அதிகமாக உள்ளவர்களே வருகிறார்கள் ..
அவர்களுக்குச் சொல்ல விரும்பவது..நீங்கள் யார் பேச்சையும் கேட்காதீர்கள்.

வள்ளலார் எழுதிய திருஅருட்பா முழுவதும் படியுங்கள் ..உரைநடைப்பகுதி முழுவதும் படியுங்கள்.. வள்ளலார் எந்த எந்த காலகட்டத்தில். என்ன என்னவாறு சொல்லி உள்ளார்..அவர் எவற்றை எல்லாம் பின்பற்றச் சொன்னார்.எவற்றை எல்லாம்  விடச்சொன்னார்.
என்பதை நீங்களே தேர்வு செய்து பின்பற்றுங்கள்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீதுமட்டும் இடைவிடாது நம்பிக்கை கொண்டு ..
மூடநம்பிக்கை யை அகற்றிவிட்டு தேடுங்கள்.
உண்மையான விடை கிடைக்கும்.தேர்வில் வெற்றி பெறுவீர்கள்..

அதன்பின் ஆண்டவர் உங்களுக்கு நேர்வழியைக் காட்டி அழைத்து செல்வார்...

நிச்சயம் அருள் உங்களைத் தேடிவரும்.
உங்களுக்கும். வள்ளலார் போல் பேரானந்த நித்திரை நிச்சயம் கிடைக்கும்.

 சுமார் 40 ஆண்டுகளாக .எந்த சன்மார்க்கிகளின் பேச்சை கேட்டு நான் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றவில்லை.... வள்ளலார் சொல்லியதை மட்டும் கேட்டேன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொண்டேன்..
தெளிவாக பின்பற்றி வாழ்க்கையை அமைத்து கொண்டேன்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளேன்...

எண்ணம் சொல் செயல்.ஒழுக்கம் நான்கும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்

வள்ளலார் பாடல் !

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றா மே.!

மேலே கண்ட பாடல் நமக்காகவே வள்ளலார் பதிவு செய்துள்ளார்...

ஆடாதீர் சற்றும் அசையாதீர் பொய் உலக வார்த்தைகளை நம்பாதீர் என்று மிக அழுத்தமாக சொல்லியுள்ளார்.

வள்ளலார் வார்த்தை.
மனித வார்த்தை அல்ல..எல்லாம் அருள் வார்த்தை .
உண்மைத்தவிர பொய்க்கு இடமே இல்லை.சிந்தியுங்கள் செயல்படுங்கள்...
எல்லாம் நன்மைக்கே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

மக்களின் மனநிலை மாற வேண்டும் !

மக்களின் மனநிலை வேதனை அளிக்கிறது !

கணவன்  இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது..

மனைவி இறந்தால் கணவன்  வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது...

என்பது வள்ளலார் மனித சமுதாயத்திற்கு சொல்லிய அர்த்தமுள்ள அறிவுரை யாகும்..

அதன் விளக்கத்தை அடுத்த கட்டுரையில் வெளிப்படுத்துகிறேன்.

காமமும் காதலுமே புற உலக வாழ்க்கை அல்ல...

அதற்குமேல் அகவாழ்க்கை உள்ளது.அதுதான் அருள் பெறும் வாழ்க்கை..

இன்று மனித சமுதாயம் தவறான வழிகளிலே சென்று கொண்டுள்ளது..

காம இச்சையிலே காதல் செய்கிறார்கள் .திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்..
கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால்.
விவாகரத்து வாங்கிக் கொண்டு வேறு திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்...

முதல் கணவன் கட்டிய தாலியை கழட்டிவிட்டு.வேறு கணவன் கட்டிய தாலியை அணிந்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள்..குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆண்களும் ஒரு பெண்ணுடன் திருமணம் செயது கொண்டு .குழந்தைகள் பெற்றுவிட்டு.முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள்...

முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளின் நிலை என்ன ? அந்த குழந்தைகள் அவர்கள்  அப்பா அம்மாவைப் பற்றி என்ன நினைப்பார்கள்..
யாருடன் இருந்து வாழ்வார்கள்..

அந்த குழந்தைகள் ஒழுக்கம் உள்ளதாக வாழ்வதற்கு வழி கிடைக்குமா ? என்பது கேள்விக் குறியாகி விடுகின்றது...

இந்த தவறான வாழ்க்கை முறையும் எண்ணங்களும்  சாதாரண மக்களுக்கு அதிகம் வருவதில்லை..

பணம்.பதவி.புகழ்.
உள்ள ஆடம்பரமான வாழ்க்கை வாழும்  குடும்பத்தில் உள்ளவர்களும்.அவர்களின் மகன் மகள்கள் தான் அதிகமான தவறான வாழ்க்கையில் ஈடுபடுகின்றார்கள்...
தவறு செய்ய துணிந்து விடுகிறார்கள்.

அவர்களைப் பார்த்து சாதாரண மக்களும் அதே தவறை செய்து கொண்டு வருகிறார்கள்.

இதற்கு தற்போதுள்ள தாய் தந்தையர்களும் துணை போகிறார்கள்..

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தவிடுபொடியாகி விட்டது...

காரணம்.. காதலும் காமமும் மக்களின் மனதை மாற்றிவிட்டது.

இன்னும் அதிகம் சொல்ல வேண்டுமானால் இன்று வளர்ந்துவரும் வெளிநாட்டு நாகரீகம் மோகம்.உணர்ச்சிகளை தூண்டும் இறைச்சி (மாமிசம்)  உணவு முறைகள்.ஆபாச ஆடைகள் போன்ற தவறான கலாச்சாரம் போன்ற வழிகாட்டுதலால் இந்திய மக்களின் மனநிலையைக் கவ்விக் கொண்டது..

அச்சம் நாணம்.மடம்.பயிற்பு போன்ற கவுரவம் காற்றில் பறந்து கொண்டு உள்ளன.

மேலும் இன்று வளர்ந்துவரும் சினிமா.சீரியல் கதைகள் .கதைகளை உருவாக்கும் கதை ஆசிரியர்கள்...
வசனகர்த்தாக்கள்.
அவற்றை இயக்கும் இயக்குனர்கள்.அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள்.எல்லாமே சேர்ந்து மக்களின் மனநிலையை குழப்பிக் கொண்டுள்ளதை நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.

அதேபோல் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும்..நீதி வழங்கும் நீதி அரசர்களும் மக்களின் நல்வாழ்விற்காக அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களுக்கும் சமுதாயத்தின் மேல் அதிக அக்கரையும் அவசியமும் உள்ளன என்பதை புரிந்து கொண்டு மனித சமுதாயத்தை நல்வழிக்கு கொண்டு செல்லும் கடமையும் அக்கரையும் உள்ளன என்பதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

அதற்குமேல் ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அதிக அக்கரை உள்ளன.மூட நம்பிக்கை இல்லாமல் வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்க நெறிகளை மக்களிடம்  பகுத்தறிவோடு கொண்டு செல்ல வேண்டும்..

நாடும் நாட்டு மக்களும் ஒழுக்கத்துடன் மகிழ்ச்சியுடன்.அன்பு தயவு கருணையுடன்  வாழ வேண்டும் என்பதற்காக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் வள்ளலார்...

வள்ளலார் வகுத்து தந்த ஒழுக்க நெறிகளை பின் பற்றினால் மட்டுமே இந்த நாடும் நாட்டில் உள்ள மக்களும் தடம் மாறாமல் மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு நல்வாழ்வு கொடுக்க காத்திருக்கும் போது நாம் தடம் மாறினால்..பின் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்..

 மேலும் ஒழுக்கம் தவறி வாழ்பவர்கள் மரணம் அடைந்தால்..அடுத்த பிறவி மனிதப்பிறவி கிடைக்க வாய்ப்பே இல்லாமல்  போய்விடும்..

எனவே மனிதபிறப்பை தக்க வைத்து கொள்ள அனைவரும் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும்.

இந்த நான்கு ஒழுக்கங்களில் இந்திரிய ஒழுக்கம்.
கரண ஒழுக்கம் இரண்டையும்.
பூரணமாக கடைபிடித்தால் ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் இரண்டையும் இறைவன் தடையில்லாமல் கொடுத்துவிடுவார்...

இந்திரிய ஒழுக்கத்தில் முக்கியமானது...காமம்.வெகுளி. மயக்கத்தில் அதிகம் ஈடுபடக்கூடாது..
அன்பு.காதல்.தயவு.கருணை மட்டுமே இருக்க வேண்டும்...

கரண ஒழுக்கத்தில் மனத்தை அடக்க.கட்டுபடுத்த தெரிந்து கொள்ள வேண்டும்...

வெளி உலகத்தின் மாயா வலையில் மனமானது தனது அறியாமையில் விழாமல் அறிவின் விளக்கத்தை கொண்டு மனித இனம் மனிதனாக வாழ்ந்து.இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதற்கே மனிதப்பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது...

எனவே காமம்.வெகுளி .
மயக்கத்தில் விழுந்து..மன்ம் போனபடி  வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல்..

அறிவை அறிவால் அறிந்து கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வள்ளலார் உலகத்தாற்கு உறுதியாக கூறுகிறார் !

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்

கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்

எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

அடுத்து சொல்லுகின்றார்.

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

அடுத்து பதிவு செய்கிறார்..

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

அடுத்து பாடல் !

சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்

காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா

தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

மேலே கண்ட பாடல்கள் எளிய தமிழில்  மக்களின்  நலனுக்காக வள்ளலார் பதிவு செய்துள்ளார்.படித்து பயன் பெறுங்கள்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 9 பிப்ரவரி, 2019

மனிதனும் மனமும் !

மனிதனும் மனமும் !

மனிதனுக்கு மட்டும் மனத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் மனத்தின் வழியே வாழ்க்கை அமைத்துக் கொள்வதால் மனிதன் என்ற பெயர் வழங்கப்பட்டது..

மனிதனின் மனமானது  அன்பு தயவு கருணை இல்லாமல் புற வாழ்க்கையே பற்றிக் கொண்டுள்ளது...

மனித உடம்பில் ஆன்மா.உயிர் .உடம்பு மூன்றும் இணைந்து செயல்படுகின்றது. உடம்பின் புறம் புறப்பும் என்னும் கரணங்கள். இந்திரியங்கள். மனத்தின் வசப்பட்டு செயல்பட்டுக் கொண்டுள்ளன...

அகத்தில் உள்ள ஆன்மாவை மனம் தொடர்கொண்டால் மட்டுமே மனமானது ஆன்மவயப்பட்டு.ஆன்ம லாபம் பெறமுடியும் என்பதை வள்ளலார் தெளிவாக கடைபிடித்து வாழ்ந்து காட்டி உள்ளார்...

மனத்தை அடக்க பல ஞானிகள்.சித்தர்கள்  பல வழிகளை கடைபிடித்து தியானம்.தவம்.யோகம்.புற வழிபாடுகள் செய்ய தனிமையைத்தேடி.காடு.மலை.குகை போன்ற இடங்களுக்குச்  சென்று மனத்தை அடக்க கடுமையான தவம் செய்தார்கள்..அதனால் ஏகதேச அற்ப சித்திகளைப் பெற்று கொண்டு உயிரை அடக்கி உடம்போடு சமாதி நிலை அடைந்தார்கள். அவர்களுக்கு
மரணத்தை வெல்லும் வழி தெரியவில்லை... ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வகை தெரியவில்லை...

*ஆன்மாவை மறைத்துள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளை முழுமையாக விலக்க வழி தெரியவில்லை.*

அவர்களும் மீண்டும் பிறப்பு எடுத்துதான் கடவுளைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்லமுடியும்....

*புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும்...மனம் அகத்திற்குத் தானே செல்லாது... முதலில் அசுத்த மனத்தை சுத்த மனமாக மாற்ற வேண்டும்..*

சுத்த மனமாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்தார் வள்ளலார்...அதற்கு ஒரே வழி மனத்தை அன்பு.தயவு.கருணை உள்ளதாக மாற்ற வேண்டும்...மனத்தை தயவு கருணை உள்ளதாக மாற்ற வேண்டும்...

அதற்கு பெயர்தான் ஜீவகாருண்யம்.ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பு அறிவும் தானாக விளங்கும் என்றார்...

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்..

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்.

மனமானது  புத்தி.சித்தம்.
அகங்காரம் போன்ற சூட்சுமக் கருவிளைக் கொண்டு...இந்திரியங்களான கண்.காது.மூக்கு.வாய்.மெய் என்ற கருவிகளை தன்வசமாக வைத்துக் கொண்டு புறவாழ்க்கை வாழ்ந்து தானும் அழிந்து உயிரையும் அழித்து விடுகின்றது.

எனவே தான் வள்ளலார் மனத்தை அகத்தில் உள்ள..ஆன்மா இயங்கும் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடும் என்கிறார்....

உடம்பை.உயிரை.ஆன்மாவை அழியாமல் பாதுகாக்க மனத்தை உட்புறமாக செலுத்த வேண்டும்...

மனத்தை உட்புறமாக செலுத்த தயவு கருணை மிகவும் அவசியம்..கருணை உள்ள உள்ளத்திலே கடவுள் வாழ்கிறார்..

*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி*

மனத்தை அடக்கும் வள்ளலார் பாடல் !

மனமானது  அகம்.அகப்புறம்.புறம் புறப்புறம் என்னும் நான்கு இடங்களுக்கும் முக்கியமான பங்கு வகிக்கின்றது...

கீழே கண்ட பாடலை படித்து தெரிந்து கொள்ளவும்...

1.மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்

இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ

தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே

நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே. !

2. பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்

கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது

என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
இம்மெனும்முன் அடக்கிடுவேன்

என்னைஅறி யாயோ
பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.!

3. விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்

புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே

தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்

பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே. !

4. பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்

சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே

ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை

பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே. !

மேலே கண்ட பாடல்களின் வாயிலாக மனத்தை அடக்கிய வழிமுறைகளை தெளிவுப் படுத்துகின்றார்...

*எனவே மனத்தை இரண்டு வழிகளில் செலுத்த வேண்டும்.*

எனவே மனித மனமானது.ஜீவன்கள் மேல் இரக்கமும் கடவுள் மீது அன்பும்.சமமாக செலுத்து வேண்டும்...

*அதுவேதான் ஜீவகாருண்யம்.. சத்விசாரம் என்பதாகும்.*

கடவுளை வெளியில் சென்று தேட வேண்டாம் எல்லா ஜீவன்களிலும் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு இருப்பதே கடவுளின் ஏகதேசம்...அதுவே ஆன்மாவாக இயங்கிக் கொண்டுள்ள இடம் சிற்சபை நடம் என்பதாகும்...

வள்ளலார் பாடல் !

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே!*

மேலே கண்டபாடலில் மனத்தை சிற்சபை நடத்தை தெரிந்து துதித்துடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்.

உலகில் உள்ள சமயம் மதங்கள் யாவும் பொய்யே சொல்லி உள்ளன.எனவே அவைகள் சொல்லும் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று வள்ளலார் மிகவும் அழுத்தமாக சொல்லி உள்ளார்.பாடலை ஊன்றி படித்தால் புரிந்து கொள்வீர்கள்..

ஈரோடு கதிர்வேல் சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

எனவே மரணம் வருவதற்கு அடிப்படைக் காரணம் மனம்தான்.

*புறத்தில் செல்லும் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்துவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மையான வழிபாடாகும்....*

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றாமல் சமயம்.மதம்  சார்ந்த கொள்கைகளை கடைபிடித்து வரும் சன்மார்க்கிகள் முதலில் அகவழிபாட்டிற்கு வருவதே வள்ளலாருக்கு காட்டும் நன்றிக் கடனாகும்..

சன்மார்க்கிகள் திருந்துங்கள் .மற்றவர்களையும் திருத்துங்கள்... 

வள்ளலார் பாடல் !

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்

தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படியுங்கள் உண்மை விளங்கும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

கடவுள் சுதந்தரம் பெற வேண்டும் !

கடவுள் சுதந்தரம் பெற வேண்டும் !

 மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்காக கடவுள் மூன்று சுதந்தரம் வழங்கி உள்ளார்.

அவை ஜீவ சுதந்தரம்..தேக சுதந்தரம்..போக சுதந்தரம் என்னும் மூவை சுதந்தரமாகும்.

இந்த சுதந்தரம் நம்மிடம் உள்ளவரை நமக்கு இறப்பும் பிறப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

இந்த உண்மையை கண்டுபிடித்தவர் வள்ளலார்..

நமக்கு இந்த மூவகை சுதந்தரம் வழங்கிய கடவுள் யார் ? என்ற உண்மையை அறிந்து கொள்கிறார் வள்ளலார்..அவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் இயற்கை உண்மைக் கடவுள் என்பதை கண்டு கொள்கிறார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் ஆன்மாவை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தவர். ஆன்மா வாழ்வதற்கு.உயிர்.உடம்பு.கொடுத்து போகவாழ்க்கை வாழ்வதற்குசுதந்தரம் கொடுத்தவர்...

ஆன்மாக்கள் வாழ்ந்து திரும்ப இறைவனிடம் செல்ல வழிதெரியாமல் இங்கேயே பிறந்து பிறந்து.இறந்து இறந்து பலப்பல பிறவிகள் எடுத்துக் கொண்டே உள்ளன..

மீண்டும் இறைவனிடம் செல்ல வேண்டுமானால்.இறைவனிடம் தொடர்பு கொண்டு அருள் பெற வேண்டும்..

அருள்பெறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்புகொண்டு திருவருட் சுதந்தரம் பெற வேண்டும்.

திருவருட் சுதந்தரம் பெறுவதற்கு தடையாக இருப்பது நம்மிடம் உள்ள ஜீவசுதந்தரம்.தேகசுதந்தரம். போகசுதந்தரம் என்னும் சுதந்தரமாகும்.

**இறைவன் கொடுத்த இந்த சுதந்தரத்தை இறைவனிடமே திருப்பி கொடுத்துவிட்டால் ..மறுகணமே திருவருட் சுதந்தரம் நமக்கு கிடைத்துவிடும்**

இந்த உண்மையை வள்ளல்பெருமான் சத்திய விண்ணப்பம் என்னும் உரைநடைப்பகுதியிலும்..பல பாடல்களிலும் தெரியப்படுத்தி உள்ளார்...


சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்.!
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற 

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,

 எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. 

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!

இந்த மாபெரும் உண்மையை உலக மக்களுக்கு தெரிவித்து உள்ளார்.வள்ளலார்...

வள்ளலார் பாடல் ! 


**மேலே கண்ட பாடலில்  என் உடம்பு உயிர் போகம் எல்லாம் எனக்கு வேண்டாம்.நீயே எடுத்துக் கொண்டு. உன் உடல் உயிர் போகம் என்னும் சுதந்தரத்தை எனக்குத் தரவேண்டும் என்று முறையிடுகிறார் வள்ளலார்..**.

வள்ளலாரின் மெய் உணர்வை தெரிந்து கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னிடம் உள்ள சுதந்தரத்தை மகிழ்ச்சியுடன் வழங்குகிறார்...

வள்ளலார் பாடல் ! 



மேலே கண்ட பாடல் தெளிவாகத் தெரிவிக்கின்றது...

இறைவன் சுதந்தரத்தை முழுமையாக பெற்று மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் ஒருவரே !

வள்ளலார் போல் நாமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்சுதந்தரம் பெற்றால் தான் மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழமுடியும்..

தவறானவர்கள் காட்டிய சாதி.சமய.மதம்  போன்ற வழியில் சென்று தவறிவிழாமல் வள்ளலார் காட்டிய உண்மையான சுத்த சன்மார்க்க நன்நெறியைப் பின்பற்றி . நலமுடன் வாழ்வோம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939895.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

தினகரன் பத்திரிகைக்கு கண்டனம் !

தினகரன் பத்திரிகைக்கு கண்டனம் !

அன்புடன் தினகரன் பத்திரிகை ஆசிரியர் அவர்கள் பார்வைக்கு....

ஒருவாரத்திற்கு முன் தங்கள் தினசரி நாளிதழில் .வள்ளலார் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியைப் பார்த்து

வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் மனத்திலும் உள்ளத்திலும் நெருப்பை கொட்டியது போல் கொதிப்படைந்துள்ளார்கள்..

நான் நாற்பது ஆண்டுகளாக வள்ளலார் கொள்கையை பின்பற்றி உள் நாடுகளிலும் வெளிநாடுகளிலும் சன்மார்க்க கொள்கைகளை பரப்புரை செய்து வருகிறேன்...

வள்ளலார் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து இறைவன் அருளைப்பெற்று ஊன்  உடம்பை ஒளி உடம்பாக மாற்றி இறைவனுடன் கலந்த .மரணத்தை வென்ற மகான் என்பது உலகமே அறியும்.

தமிழிநாட்டில் பத்திரிகை.டிவி நடத்திவரும் உங்களுக்கு தெரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை..

தவறுதளாக பத்திரிகையில் போட்டு விட்டீர்கள் போலும்..

வள்ளலார் கொள்கையே மரணத்தை வெல்லும் சாகாக்கல்வி கற்று கொடுப்பதுதான்...

வள்ளலார் மரணத்தை வென்று இறைவனுடன் கலந்த இடம்தான் வடலூரில் உள்ள மேட்டுகுப்பம் என்ற இடமாகும்..இன்றும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாடு வெளிநாடுகளிலும் இருந்தும் வந்து தரிசித்து செல்கிறார்கள்...

வள்ளலார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களுக்கு மரணத்தை வெல்லும் வழிமுறைகளை நேரிடையாக தெரிவிக்கிறேன்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் நிறைய உள்ளன.அதில் இரண்டு பாடலே போதும் என நினைக்கிறேன்

ஆரம்பம....


இறுதிநிலை !

மேலே கண்டபாடல் எதனாலும்அழிக்க முடியாத அருள் தேகம் பெற்றது.

வள்ளலார் எழுதிய திருமுறைகள் அனைத்தும் மரணத்தை வெல்லும் வழியைப் பற்றியே பதிவு செய்துள்ளார்.

எனவே சன்மார்க்க அன்பர்கள் உங்கள் பத்திரிகை அலுவலகம்் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளார்கள்...

நாங்கள் தான் வேண்டாம் என்று நிறுத்தி வைத்துள்ளோம்.

எனவே உங்கள் பத்திரிகையிலே .தெரியாமல் பதிவு செய்துவிட்டோம் என்று மறுப்பு பதில் செய்தி போட்டுவிடுங்கள்..

அதுதான் உங்களுக்கும் நல்லது.எங்களுக்கும் நல்லது..

உங்கள் பதிப்பை எதிர்பார்க்கிறோம்.

அன்புடன் ஆன்மநேயன. ஈரோடு கதிர்வேல்
மற்றும் சன்மார்க்க அன்பர்கள்...

மரணத்தை வென்ற மகான் வள்ளலார் !

மனிதன் மரணத்தை வெல்ல
முடியுமா? முடியாதா? என்ற வினா மக்களிடையே பல்லாண்டு காலமாக உள்ள சந்தேகங்களாகும். 

இதற்கு பதில் ஆன்மீகவாதிகளாலும், அறிவியல் வல்லுனர்களாலும் அணுக்களை ஆராய்ச்சி செய்யும், ஆணு ஆராய்ச்சியாளர்களாலும்,
விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களாலும், மற்றுமுள்ள பகுத்தறிவுவாதிகளாலும், பொதுச் சிந்தனையாளர்களாலும்
இன்றுவரை {வள்ளலாரைத் தவிர}
யாராலும் பதில் சொல்ல, பதில் காண
முடியாமல் விழிக்கிறார்கள்.

★ஒரு சிலர் உலகில் தோன்றியது எல்லாம் அழிந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள். ஒருசிலர் எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டேதான்
இருக்கும், அதுவே இறைவனுடைய
திருவிளையாடல் என்கிறார்கள். 

உலகில் படைக்கப்பட்ட  உயிர்கள் அனைத்தும் மனிதர்களுக்காகத்தான் ஆதலால் அனைத்தையும் அழித்து தின்று ஏப்பம் போட்டுவிட்டு மனிதனும்
அழிந்துவிட வேண்டியது தான்
என்கிறார்கள். 

ஒருசிலர் மனிதன் ஒழுக்கமுள்ளவனாக வாழ்ந்து  சொர்க்கம், சிவலோகம், வைகுண்டம் என்னும் இடத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்கிறார்கள். அதற்கு முக்தி என்று பெயர் வைத்துள்ளார்கள்

★ஒருசிலர் உடம்போடு சமாதி நிலை அடைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள், ஒருசிலர் காசி ராமேஸ்வரம், இமயமலை, கைலாயமலை, போன்ற புண்ணிய
தீர்த்தங்களை தரிசித்து ஆலய
வழிபாடு போன்ற கர்மங்கள் செய்வதால் கர்மம் தொலைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்்்

. ஒருசிலர் உயிர்களின் பரிணாமவளர்ச்சி தோற்றமும மாற்றமும் இயற்கையாகும். அதலால் கடவுள் என்பது ஒன்றும் இல்லை எல்லாம் அணுக்களின் சேர்க்கையாகும் என்கிறார்கள். ஒருசிலர் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரம போன்றவைகளை படித்து அதன்படி வாழ்ந்து வருபவைகள் மட்டும்தான் இறைவனையே அடைய முடியும் என்கிறார்கள், ஒருசிலர்
உயிர்களுக்கு தொண்டு செய்தால்போதும், பிறஉயிர்களை வதைக்காமல் இருந்தால்போதும், இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.

★இப்படி எண்ணற்ற வழிமுறைகள், என்பன போன்ற கருத்துக்கள் மனித
வாழ்க்கைக்கு பலபேர் பல வழிகளில்
வகுத்து வைத்துள்ளார்கள். ஒரு சிலர் எல்லா வற்றிற்கும் ஆசைதான் காரணம் ஆசையை அழித்தால் இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் ஒரு சிலர் துறந்தார்க்கும், துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை என்கிறார்கள் அவர்களே இறைவனை அடையமுடியும் என்கிறார்கள்.

இப்படி மக்கள் மனநிலையை குழப்பி வைத்துள்ள நிலையில் மக்களும் குழம்பிக்கொண்டு உள்ளார்கள். எவை உண்மை, எவை பொய் என்பது தெரியாமல், மலத்தில் புழுத்த புழுக்களைப் போல் மக்கள் தவித்துக் கொண்டு உள்ளார்கள் இதற்கெல்லாம்
ஒரு முடிவு கட்ட, இறைவனால் இந்த
உலகிற்கு வருவிக்கப் பட்டவர்தான்
திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

★உடம்புடன் செல்ல முடியுமா ? உடம்பை அழித்து விட்டு செல்லமுடியுமா ? மரணம்
வந்து விட்டால் செல்ல முடியுமா?

★சாமாதி நிலையில் செல்ல
முடியுமா ? என்றால் இந்த வழிமுறைகளில் செல்லமுடியாது. இதற்கு இறைவன் அனுமதியும்
கிடையாது. இதற்கு வள்ளலார் என்ன
சொல்கிறார் என்பதை பார்ப்போம்,
கல்வி இரண்டு வகைப்படும்!

★ஒன்று சாகும் கல்வி! ஒன்று சாகாக்
கல்வி! சாகும் கல்வி என்பது மாயையால் உண்டாக்கிய ஐம்பூதப் பொருள்களை பலவழிகளில் சம்பாதித்து அனுபவித்து அதனால் வரும் துன்பங்களினால் அச்சம் பயம், பருவமாற்றம், பின் முதிர்ச்சி, பிணி, துன்பம் அடைந்து பின் மரணம் அடைவது சாகும் கல்வியாகும்.

உலகில் உள்ள அனைத்துக் கல்விகளும் பொருள் ஈட்டுவதற்கு பயன்படும் கல்வியாகும். இதனால் என்ன பயன் என்றால், நம் உடம்பில் உள்ள கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் உடம்பு, போன்ற இந்திரியங்களும்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம், என்னும் கரணங்களும் மட்டும் தான் மகிழ்ச்சி அடைகின்றன, ஜீவனும் ஆன்மா என்னும் உள்ஒளி மகிழ்ச்சி அடைவதில்லை.

★கடலையும், உலகையும் நாட்டையும்
ஆளும் அதிபதிகளாக இருந்தாலும், உங்களுக்கு வரும் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ளமுடியுமா? மரணத்தை தவிர்த்துக்கொள்ளாத
வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்று கேட்கிறார் வள்ளலார். அப்படி வாழ்வதால் என்ன பயனடைந்து உள்ளீர்கள்.? உங்கள் வாழ்க்கையில் இந்திரியங்களும், கரணங்களும் மட்டும் மகிழ்ச்சி அடைகிறது, ஜீவனோ, ஆன்மாவோ மகிழ்ச்சி அடைவதில்லை, ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடையாத வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் மிருகங்களும் உண்ணுகின்றன உறங்குகின்றன பின் இறந்து விடுகின்றன. அது போலத்தான் மனிதன் வாழ்க்கையா? மனிதன் அறிவு படைத்தவன் இல்லையா ? சிந்திக்க வேண்டாமா? உணர வேண்டாமா? மனிதப்பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பது எல்லாம், பொய்யா? அறிவை பயன்படுத்த வேண்டும், அதுவே மனித பண்பு என்பதாகும் .

★சாகும் கல்வி:
உண்ணுவதும் உறங்குவதும் பின்
இறப்பதும் சாகும் கல்வியாகும். நாம்
உண்ணுகின்ற உணவு இரைப்பையில்
சென்று ஐந்து நாழிகையில் பால்
போன்று அரைத்து பிரித்து ஊட்ட வேண்டிய அனைத்து உறுப்புகளுக்கும்.
நரம்புகளின் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது, அதனால் 72,000 நாடிகளும் அக்கிரமமின்றி நிலை பெறுகிறபடியால் உடல் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதை விரிக்கில் பெருகும். நாம் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்தை பிரித்து ரசாயன மாற்றம்போல் ரத்தமாகவும் அதில் இருந்து சத்தை பிரித்து ஜீவவித்து குழம்பாக மாற்றம் செய்து குண்டலினிப் பைக்குள் அனுப்பிவைக்கிறது.

★இவை பதினாறு வயதுக்கு மேல் அதன் வேலையை தொடங்குகிறது. இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான செயல்களாகும், இந்த ஜீவவித்து நாம் உண்ணும் உணவுக்கு தகுந்தாற் போல் சுரக்கும். ஜீவவித்தின் ஆதிக்கத்தால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், துணிவையும் உணர்வையும், ஊக்கத்தையும் கொடுப்பது. ஜீவ வித்து என்னும் திரவம்தான், உலகில் உண்டாகும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரண காரியமாக உள்ளது மனிதனின் ஜீவவித்து விளக்கமே யாகும். இது தான் எல்லா வற்றிற்கும் காரண காரியமாகும். இதுதான் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற ஆசைகளை உருவாக்குவதாகும்.

★இந்த மூன்று ஆசைகளினால் மனிதன் அழிந்து விடுகிறான், சுக்கிலத்தை கட்டுபடுத்தி வெளியே விடாமல் இருந்தால் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உணவைக் குறைத்து வாழத் தொடங்கினார்கள். இதுவே மரணத்திற்கு காரணமாகும். இதை அறிந்தவர்கள் ஆசையைத் துறக்கவேண்டும் என்கிறார்கள். ஆசையைத் துறந்தாலும் பசியைத் துறக்கமுடியவில்லை.

★அவற்றை துறந்தவர்கள் துறவிகள், சந்நியாசிகள், சித்தர்கள் யோகிகள், ஞானிகள் எனப்படுபவர்களாகும்,
மேலே கண்டவர்கள் சரியை, கிரியை, யோக ஞானம் என்னும் படி நிலைகளில் இருந்து இறைவனை அடையலாம் என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியைக் கடைபிடித்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

★அவர்கள் முயற்ச்சிக்கு தகுந்தாற் போல் சில, பல சித்துக்கள் கிடைத்து இருக்கிறது. அதனால் அவர்கள் அந்த சித்தை வைத்துக் கொண்டு எல்லாம்
கிடைத்து விட்டது போல் இறுமாப்பு அடைந்து, நீண்ட நாள் வாழ்ந்து, மரணத்தை வெல்ல முடியாமல் அழிந்து போய் விட்டார்கள். மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்ற ரகசியத்தை யாரும் கண்டு பிடிக்கவில்லை.

★ஏன் என்றால் மரணம் என்பது இயற்கை என்று நினைத்துக்கொண்டு உள்ளார்கள், அதனால் உடம்போடு இறைவனை அடையலாம், என்பது அனைவருடைய கொள்கைகளாகும், ஆதலால் ஆசைதான் எல்லா வற்றுக்கும் காரணம் ஆசையை ஒழித்து விட்டால், இறைவன் அருளைக் கொடுத்து விடுவார், இறைநிலையை அடைந்து விடலாம், என்பது சமய மதக் கொள்கைகளின் கோட்பாடுகளாகும். இவை முற்றிலும் தவறானது என்பதை வள்ளலார் விளக்குகிறார், உடம்பின்
ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல்,
"கண்டதே காட்சி, கொண்டதே கோலம்"
என்று வாழ்ந்து, கதைகளாகவும், கற்பனைகளாகவும், தத்துவங்களை உண்மைபோல் அமைத்து வைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழம்ப
வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அதனால் இன்றுவரை மக்கள்
உண்மை என்ன வென்று தெரியாமல், பொய்யையே உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

மரணம் இயற்கை அல்ல அவை செயற்கை என்பதை வள்ளலார்
""தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்''
என்பார் இவை இன்று நேற்று அல்ல
என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்க
வேண்டும் என்கிறார்.

★மரணம் என்னும் நோவை நீக்குவது எந்த கடவுளாலும் முடியாது. உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாமல் அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் மரணத்தை வெல்ல முடியாது.

★மனம் என்பது உலக போகத்திலே இட்டுச்செலவது, அது பேய் குரங்கு போன்றது அதை வசப்படுத்த தெரியாமல், வழி துறை தெரியாமல்
பொய்யான வாழ்க்கை வாழ்ந்து இன்பம், துன்பம் என்ற அற்ப செயல்களால் அனுபவித்து பின் எண்ணி எண்ணி இளைத்துக்கொண்டு உள்ளீர்கள், உலகில் உள்ள அனைவரும் ஏழைகள்தான், ஒருவரும் பணக்காரன் அல்ல, மரணத்தை வேல்லுகிறவன் யாரோ அவனே பணக்காரன் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்.

★சாகாக் கல்வி !
மரணத்தை வெல்ல முடியும் !
முடியும் ! அதற்கு சாகாக்கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்ளார்.

★சாகாதகல்வி என்பது ஒன்று உண்டு என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர்
வள்ளலார், கல்வி என்பது மரணத்தை
வெல்லும் கல்வியைக் கற்றுக் கொள்வதே சாகாக் கல்வி என்பதாகும்
கடவுள் ஒருவர் என்பதை அறிவதே உண்மை அறிவாகும். ஐந்து மலமான ஐந்து பூதங்களின் தொடர்பு இல்லாமல்
அதை வென்று வாழ்வதே பூரண
வல்லபம் என்பதாகும். என்றும் அழியாமல் வாழ்ந்து அனைத்துப்
பொருள்களையும் உருவாக்கும் தொழிலே உண்மையான தொழிலாகும். கல்வி, அறிவு, வல்லபம், தொழில் போன்ற என்றும் அழிவில்லாத செயல்களை செய்யும் செயல் பெற்றதே என்றும் அழியாத இன்பமாகும். மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் மேலே கண்ட செயல்களை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

★எப்படி கண்டு பிடித்தார் ? என்பதைப்
பார்ப்போம்.!

இவ்வுலகில் உள்ள அனைத்தும், உயிர்கள் வாழ்வதற்காக இறைவனால் படைக்கப் பட்டதாகும். படைக்கப் பட்ட எந்த பொருளையும் அனுபவிக்கலாம், அழிக்கக்கூடாது, சேர்த்து வைக்ககூடாது, அளவுக்கு அதிகமாக அனுபவிக்கக் கூடாது. எங்கும் எடுத்து செல்லக்கூடாது, என்பதை அறிந்த வள்ளலார்.

★அதற்கு மேல் இந்த உடம்பு ஏன்
வந்தது?

உயிர் எப்படி வந்தது என்பதை அறிய
தொடங்குகிறார். அப்படி அறியும்
போது, உயிர்களுக்கு இந்த உலகத்தில்
வாழ்வதற்கு மூன்று சுதந்திரம்,
இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்கிறார்,
அந்த சுதந்திரத்தை மனிதன்
எப்படி வேண்டுமானாலும் பயன்
படுத்திக் கொள்ளலாம், அந்த
சுதந்திரத்தை பயன்படுத்தி வாழும்
வாழ்க்கையில் இன்பம் துன்பம்
தொடர்ந்து கொண்டே வரும்
என்பதை உணருகிறார். நல்லது செய்தால் நல்வினையாகவும், தீயவை செய்தால் தீவினை யாகவும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது, இதுவே பிறப்பு இறப்புக்கு காரணகாரியமாக இருந்து கொண்டு உள்ளது என்பதை அறிந்த வள்ளலார் இந்த உலகத்தில் உள்ள எதையும் அனுபவிக்காமல் வாழ்வது எப்படி என்பதை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, அவருடைய அறிவுக்கு அதிகமான வேலைக் கொடுக்கிறார், அறிவை அறிவாலே அறிகின்ற போது உண்மையான அறிவு பதில்சொல்கிறது.

★அருளைப் பெற்றால் மரணத்தை வெல்லமுடியும் என்பதை அறிந்த
வள்ளலார், அருளைப்பெறுவதற்கு எவை தடையாக இருக்கிறது என்றால், இறைவன் நமக்குக்கொடுத்த சுதந்தரத்தை, நாம் உபயோகப்படுத்தக் கூடாது, வேண்டாம் என்று திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்.

★இந்திரியம் கரணம் என்னும் கருவிகள் செயல்படாமல் ஜீவனும் ஆன்மாவில் அடங்கும் போதுதான் அருள் என்னும் அமுதம் சுரக்கும். அதாவது ஆபரேஷன் செய்யும்போது வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் இருப்பது போன்று} அமுதம் சுரக்கும் போது உடம்பின் மாற்றங்கள் என்னவாக மாற்றம் அடையும் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார், ஊண் உடம்பு #ஒளி #உடம்பாக மாற்றுவதுதான் மரணத்தை வெல்லும் வழியாகும். அதாவது வேதியல்மாற்றம் போல். உடம்பு மற்றம் அடைவதைப்பற்றி வள்ளலார் சொல்லுகிறார்.

★இந்த உலகத்தில் யாராவது என்னைப் போல், மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று இருக்கிறார்களா என்பதை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் கேட்கிறார்.

""நோவாது நோன்பு எனைப்போல்
நோற்றவரும் மெஞ்ஞான்றும் சாகா வரம் எனைப் போற் சார்ந்தவரும் தேவா நின்பேர் அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யார் உளர் நீ சற்றே யறை!

★மரணத்தை வென்ற மாபெரும் மகான்
நமது வள்ளல்பெருமான் அவர்கள், அருட்பெரும்ஜோதி ஆண்டவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு ஆண்டவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

★உலகம் இதுவரையில் உண்மை அறியாமல் இருந்தது, ஆதலால்
எனக்கு துன்பம் இருந்தது, அந்த
துன்பங்கள் யாவும் உன்னால் தீர்ந்து விட்டது, நீ ஒருவன் தான்என்னுடைய செல்வப் பிள்ளை, நல்லப்பிள்ளை, தாவரங்களும் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உனக்கு, உன் மன நினைப்பின் படியே அன்பையும் அருளையும் பெற்று, நீடுழி காலம் விளையாடி மகிழ வேண்டும். ஆதலால் என்னுடைய ஆட்சியை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று, அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
வள்ளலார் வசம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறார்.

★உனை என்றும் கைவிடாமல்
உன்னுடனே இருப்பேன் இது நம்
இருவருடைய ஆணையாகும் என்று மகிழ்ச்சியுடன் வாக்களித்து உள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

இதைவிட பெரிய பேறு உலகத்தில்
யாருக்காவது கிடைத்தது உண்டா ?
மரணத்தை வென்றால் மட்டும்போதாது அதற்கு உண்டான தகுதியும் வேண்டும். "அருளாட்சி பெரும்'' அந்த தகுதியை வள்ளல் பெறுமான் பெற்று உள்ளார் .

நமது உடம்பு தாயின் கருப்பையில்
அணுக்களின் கூட்டு சேர்க்கையால்
பூத காரிய அமுதத்தினால் {அணுவை ஒட்டும் பசையால்} பின்னப் பட்டதாகும், அந்த உடம்பை பிரிக்க வேண்டும், வேறு எதைக் கொண்டும் பிரிக்க முடியாது. அருட்பெரும்ஜோதி ஆண்டவர், நம் ஆன்மாவில் உள்ள அமுதத்தை எப்போது வெளிப்படுத்துகிறாரோ அப்போதுதான், அந்த அருள் அமுதத்தால்-பூத காரிய அமுதத்தால் பின்னப்பட்ட அணுக்களை பிரிக்கமுடியும், அப்போது ஊண் உடம்பு ஒளி உடம்பாக மாறும். இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும்.

★மரணத்தை வெல்ல முடியும் இதில்
எந்தவித சந்தேகமும் தேவை இல்லை. மனிதர்களாக பிறந்தவர்கள் மரணத்தை வென்று இறைவனை அடைவது தான் மனிதர்களின் இறுதி நிலையாகும். அதைத்தான் வள்ளலார்:

"கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பார்! மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பார்! பேரின்ப பெருவாழ்வு என்பார் ! பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பார் ! மனிதனாக வாழ்ந்து பின் மரணத்தை வெல்வோம்"

வள்ளலார் பாடல் ! 




இந்த ஒருபாட்டே போதும் வள்ளலார் மரணத்தை வென்றதின் அடையாளம்...

மரணம் அடையாமல் வாழும் ஓளி உடம்பை எவற்றாலும் அழிக்க முடியாது என்பதற்கான பாடல் !



மரணத்தை வென்ற மகான் ஒருவரே ! அவரே வள்ளலார்..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.