வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்களின் நிலைமை !

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தின் நிலைமை!

வள்ளலார் முடிந்த முடிவான  ஞான மார்க்கத்தை போதிக்க வந்தவர்.

அதனால்தான் மக்கள் பக்தி மார்க்கத்தை கடந்து ஞான மார்க்கத்தை பின்பற்றுவதற்காகவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார்.சிலை வழிப்பாட்டை தவிர்த்து ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார். 

வடலூர் ஞானசபை எண்கோண வடிவமாக அமைத்து எட்டுக் கதவுகள் ( எட்டு அம்பலம்) வைத்து அமைத்துள்ளார். சபையைச் சுற்றி இரும்பு கம்பிகளால் பின்னப்பட்ட சங்கிலியை இடைவிடாமல் வைத்துள்ளார்.இப்போது அந்த சங்கிலி துண்டிக்கப்பட்டு இரண்டு பக்கமும் தூக்கி போட்டுள்ளார்கள்.

ஞான சபையில் உள்ள எண்கோணத்தில் வைக்கப்பட்டுள்ள எட்டுக். கதவுகளும் திறந்து இருக்க வேண்டும்.எட்டு திக்கு மக்களும் வடலூர் வந்து எங்கிருந்து பார்த்தாலும் சிரமம் இல்லாமல் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்பதே வள்ளலாரின் முக்கிய நோக்கமாகும்.

இப்போது வடலூர் நிலைமை ஏழு கதவுகளை அடைத்து விட்டு ஒரு கதவை மட்டும் திறந்து வைத்து சமய வழிப்பாட்டு முறைபோல் செய்து வருகிறார்கள்.

*இது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு நேர் விரோதமானது !*

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் யாவும் வள்ளலார் சொல்லியவாறு எதுவும் நடைபெற வில்லை.சமய வழிபாடுகள்தான் நடைப்பெற்று வருகிறது. சுத்த சன்மார்க்க வழிபாடு மறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு யார் காரணம் *அரசு மட்டும் காரணம் அல்ல* அரசியல் வாதிகள்,அரசு அதிகாரிகள், சமயம் சார்ந்த சன்மார்க்கிகள், வடலூர் மக்கள் அனைவருமே காரணமாகும். 

மற்றும் எவருக்கும் வள்ளலார் கொள்கைகள் முழுமையாகத் தெரியாது, வடலூர் தெய்வ நிலையங்களை தவறான பாதையில் கொண்டு சென்றவர்கள்***வள்ளலார்  உடன் இருந்த *வேலாயுதமுதலியார், மற்றும் ஆடூர்சபாபதி குருக்கள்* அவர்களுக்கு துணையாக இருந்த வேட்டவலம் ஜமீன்தார், போன்ற சமய மதவாதிகளே காரணமாகும். அவர்களை பின் தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தந்தவர்கள், தந்து கொண்டு இருப்பவர்கள் இருந்தவர்கள்,இருந்து கொண்டுஇருப்பவர்கள், *ஞானசபையை திருப்பணி செய்த கிருபானந்தவாரியர் அவர்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், மற்றும் ஊரன் அடிகள் அவர்கள்* மற்றும்
வடலூர் மக்களும் வடலூர் அரசியல்வாதிகளுமே முக்கிய காரணமாகும்.

*வள்ளலார் அறிவுறுத்திய சுத்த சன்மார்க்க கொள்கையை யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை, பின்பற்றவும் இல்லை, *தெரிந்து கொண்டவர்களை தொடர்பு கொள்வதும் இல்லை.* ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகளின் துணைக்கொண்டு, ஆட்சி அதிகாரத்தின் துணைக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்.

ஈரோடு கதிர்வேல் ஆகிய நான் சுமார் 45 ஆண்டுகளாக வடலூர் தெய்வ நிலையங்கள் வள்ளலார் எண்ணியவாறு தூய்மைபடுத்த பல அமைதி போராட்டங்கள் செய்துள்ளேன், அதனால் நிறைய எதிர்ப்புக்களை சந்தித்துள்ளேன். மேலும் மேலும் பல பல போராட்டங்கள் செய்து வந்துள்ளேன். சத்திய *ஞானசபை பூசகர் சபேசன் அவர்களிடம் இருந்து சாவியைப் பரித்து தெய்வ நிலையத்திடம் ஒப்படைத்து உள்ளேன்* உண்ணாநோம்பு இருந்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளேன்.ஒத்துழைப்பு கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. காரணம் எல்லோரும் சமயம் சார்ந்த சன்மார்க்கிகளே ஆவார்கள்.

சாதி சமயம் மதம் சார்ந்தவர்கள்.மற்றும் அரசியல் வாதிகள் உள்ளே நுழைந்துகொண்டு மக்களுக்கு தவறான சாதி சமய மத வழிபாட்டு முறையை காட்டிக் கொண்டு வருகிறார்கள். சுத்த சன்மார்க்க வழிபாடு மறைக்கப் பட்டுள்ளன. நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

வள்ளலார் எண்ணியபடி உலகம் முழுவதும் உள்ள மக்கள் சுத்த சன்மார்த்தைப் பின்பற்றி  வடலூர் வருவதற்கும் வடலூர்  முழுமையாக தூய்மை பெறுவதற்கும் இன்னும் சுமார் 500 ஐந்து நூறு ஆண்டுகள் கடக்க வேண்டும்.

*சுத்த சன்மார்க்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர் யார்?*

ஈரோடு கதிர்வேல் சுத்த தேகத்தோடு சீக்கிரம்  இறந்து மீண்டும் மறு பிறப்பு எடுத்து பிரணவ தேகம்.ஞானதேகம் பெற்று. வந்துதான் வடலூர் தெய்வ நிலையங்களை தூய்மை படுத்த முடியும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பமாக உள்ளது.

இப்போது பொருப்பில் இருப்பவர்கள்அனைவரும் மறைந்து விடுவார்கள். புதிய சுத்த சன்மார்க்க அன்பர்கள் விரைந்து வருவார்கள் அதுவரை இப்படியே குழப்பமாகத்தான் இருக்கும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.பக்குவம் உள்ள ஆன்மாவை ஆண்டவர் தேர்ந்து எடுத்து அருள் வழங்கி துரிதமாகவும் தூய்மையுடனும் உண்மையுடனும், சத்தியவான் துணைக் கொண்டு புனிதமுறு சுத்த சன்மார்க்க கொள்கைகளை செயல்படுத்தி வைப்பார். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எண்ணியவாறு எல்லாம் நல்லதே நடக்கும்,எவ்விதப்பட்ட தடைகளும் அகற்றப்படும். எல்லாம் இறை அருள் சம்மதம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் 
சுத்த சன்மார்க்க சுடர்.முனைவர் ஈரோடு கதிர்வேல் 
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு