ஞாயிறு, 29 அக்டோபர், 2017

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

வள்ளலார் ஆரம்ப காலத்தில் .சமரச வேத சன்மார்க்கம் என்ற வழியிலும்.அடுத்து ஷடாந்த சமரச சன்மார்க்கம் என்ற வழியிலும் சென்று .கடவுள் உண்மை விளங்குமா? என்று தேடிப் பார்த்தார்.ஒன்றிலுமே கடவுள் உண்மை விளங்கவில்லை.என்பதை அறிவால் அறிந்து கொண்டார்.கடவுளை உண்மையை  எப்படித்தான் அறிந்து கொள்ள முடியும் என்பதை சிந்தித்து தன்னைத்தானே தேட ஆரம்பித்தார்...

வள்ளலார் பாடல் !

தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோசிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோமூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோமுன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்லஅமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.!

தேடிய துண்டு நினதுரு வுண்மைதெளிந்திடச் சிறிதுநின் னுடனேஊடிய துண்டு பிறர்தமை அடுத்தேஉரைத்ததும் உவந்ததும் உண்டோஆடிய பாதம் அறியநான் அறியேன்அம்பலத் தரும்பெருஞ் சோதிகூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்கூறவுங் கூசும்என் நாவே.!

என்ற பாடல்கள்  வாயிலாக தெரிவிக்கின்றார்.

கருணை ஒன்றினால் தான் கடவுளைக் காண முடியும் என்ற உண்மையை அறிந்து கொள்கின்றார்.கருணைக்கு என்ன வேண்டும் ?ஒருமை வேண்டும்.ஒருமைக்கு என்ன வேண்டும்? ஜீவகாருண்யம் என்னும் தயவு வேண்டும் என்பதை அருள் மூலமாக தெரிந்து கொள்கிறார்.அந்த உண்மையை பேருபதேசத்தில் தெரிவிக்கின்றார்.

 மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

என்னும் வாக்கியத்தால் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !

என்பது... உலகுக்கு எல்லாம் பொது நெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிக்கிறார்..

வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கத்தில்...உண்மைக் கடவுளை அறிந்து.அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் மார்க்கமாகும்..இதற்கு எதாவது சமய.மத சாதனங்கள் வேண்டுமா என்றால் .வேண்டாம் என்கின்றார்...

சன்மார்க்க சாதனம்

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.

 சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.

பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்
சோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*

என்பதே அனைவருடைய பிரார்த்தனை யாகும்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு.தயவு.கருணை காட்டுவது தான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்...

,திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்துவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

இதுவே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மையான வழியாகும்....

தொடரும்..

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

அருள் பெற்று ஆட்சி செய்ய வாருங்கள் !

அருள் பெற்று ஆட்சி செய்ய வாருங்கள் !

நல்லவர்கள் வீட்டிலே அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

 தீயவர்கள் நாட்டிலே ஆட்சி செய்து கொண்டு உள்ளார்கள்.

 நல்லவர்கள் வெளியே வரவேண்டும்

தீயவர்கள் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

இதைத்தான் வள்ளலார் ...

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க
தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக.
எல்லோரும் வாழ்க இசைந்து !

என்று சொன்னார்..வள்ளலார்..

அந்த நன்னால் என்று வருமோ!

கலங்க வேண்டாம் காத்திருப்போம்.

வள்ளலார் பாடல் !

கருநாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும்கலக்கமுறேல் இதுதொடங்கிக்

 கருணைநடப் பெருமான்தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய

 நமதுசார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்திருநாள்கள்

 ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்திண்ணம்இதை உலகறியத்

 தெரித்திடுக மனனேவருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து

 மயங்கேல்வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.!

என்ற பாடல் வாயிலாக கருநாள்கள் மறைந்து திருநாள்கள் உதயமாகும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

அருள் நிறைந்த பெரியோர் நன்மார்க்கர் யார் ? அவர்கள் அருள் நிறைந்த சுத்த  சன்மார்க்கிகளாய் இருக்க வேண்டும்.

அந்த தகுதியை பெற சுத்த சன்மார்க்கிகள் ஒழுக்கம் நிறைந்து  பூரண அருளைப் பெறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள வேண்டும்...

நானாகவும் இருக்கலாம் உங்களில் ஒருவராக யாராகவும் இருக்கலாம்..காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896....

வெள்ளி, 27 அக்டோபர், 2017

கள்ளப் பணம் ! கருப்புப் பணம் !

கள்ளப் பணம் ! கருப்புப் பணம் !

நம் நாட்டில் அதிக உழைப்பு இல்லாமல் மறைமுகமாக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் துறைகள் இரண்டு..

 ஒன்று அரசியல் துறை.ஒன்று சினிமாத்துறை.இந்த இரண்டு துறைகளில் தான் கள்ளப் பணம் கருப்பு பணம் விளையாடுகிறது.

இந்த இரண்டு துறைகளில் உள்ள கருப்பு பணத்தை.கள்ளப் பணத்தை வெளியே கொண்டு வந்தால்.இந்தியாவின் வறுமையைப் போக்கி விடலாம்.செய்வதுதான் யார் என்பது தெரியவில்லை....

கருணை இல்லாத ஆட்சி இருக்கும் வரை தவறுகள் நடந்து கொண்டே தான் இருக்கும்...

மக்கள் சகித்து கொண்டுதான் இருக்க வேண்டும்...வேறு வழி தெரியவில்லை.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

யாரும் சொல்லாத அருமருந்து !

யாரும் சொல்லாத அருமருந்து !

எல்லோரும் டெங்கு காச்சல் பற்றி பேசுகிறார்கள்.தேவை இல்லாத  வாதம் செய்து கொண்டு உள்ளார்கள்.

 வள்ளலார் சொல்லிய அற்புத மூலிகை கரிசாலை...கரிசாலையை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸில் போட்டு அரைத்து சாற்றை வடிகட்டி.அதனுடன் மிளகு.சீரகம்.தக்காளி ஒன்று சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை ஐம்பது மில்லி குடித்து வந்தால் எந்த விதமான காச்சலும் நின்று விடும்...

இந்த உண்மையை சித்தர்களே மறைத்து வைத்து விட்டார்கள் என்கிறார் வள்ளலார். கரிசாலைக்கு ராஜ மூலிகை என்று பெயர்.

எந்தவித பக்க விலைவுகளும் ஆபத்துக்களும் வராமல் உயிரையும் உடம்பையும் காப்பாற்றும்..அற்புத மூலிகையாகும்.உடம்பை பொன் போல் பாதுகாக்கும் என்கிறார் வள்ளலார்.

அனுபவித்துப் பாருங்கள் அதன் அருமை பெருமை தெரியும்...

ஒரே ஒரு கண்டிஷன் மாமிசம் சாப்பிடக் கூடாது...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

வியாழன், 19 அக்டோபர், 2017

வள்ளலார் அடைந்த நிலை என்ன?

*வள்ளலார் அடைந்த நிலை என்ன?அவருடைய தூல தேகம் என்ன ஆயிற்று?*
🍎🍎🍎🍎🍎🍎🍎
ஜீவகாருண்யம்,பக்தி ,ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறியதால் அவர் தேகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.
பொன் வண்ணம்,பன்னிரண்டு வயது பருவம், நரை,திரை ,பிணி,மூப்பு, மலம்,ஜலம்,வியர்வை,ஆகாரம்,சாயை முதலியன இல்லாமை.ரோமம் வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமை. இந்த நிலையை வள்ளலார் அடைந்ததனால் சென்னையிலிருந்து திரு மாசிலாமணி முதலியார் என்பவர் வள்ளலாருக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒன்பது முறை அவரைப் போட்டோ பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் வள்ளலாரின் தேகம் போட்டோவில் விழவில்லை.அதனால்தான் வள்ளலாரின் போட்டோ இல்லை. அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்கவில்லை.இப்போது உள்ள படங்கள் எல்லாம் கற்பனையாக எழுதப்பட்ட உருவமேயன்றி வள்ளலாரின் உண்மை உருவம் அல்ல. வள்ளலார் சுத்த தேகம் அடைந்தார் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

அவருடைய தொடர்ந்த முயற்சியால் அடுத்து அவர் பிரணவ தேக நிலை அடைந்தார்.சுத்த தேகத்தில் அவர் அடைந்த நிலையோடு அவருடைய தேகம் ஐந்து முதல் எட்டு வயது பருவமாக மாறியது. அவரைக் கண்களால் பார்க்க முடிந்ததே தவிரக் கைகளால் பிடிக்கமுடியததாக ஆயிற்று. சுடர் போலத் தோன்றுமடா தூல தேகம் என்ற சித்தர் வாக்கும் இதை நிரூபிக்கின்றது.

இறுதியாக அவர் தேகம் ஞான தேகமாக மாறியது. ஞான தேகம் என்றால் அது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்கிறார் வள்ளலார். சில நாட்கள் வள்ளலார் தோன்றாமலும் இருந்திருக்கின்றார். 1874 ம் ஆண்டில் வள்ளலார் திருக் காப்பிட்டுக்கொண்டு மறைந்தது அனைவருக்கும் தெரியும்.ஆனால் 1870ம் ஆண்டே வள்ளலார் காணாமல் போயிருக்கிறார். வள்ளலாருடைய தலை மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார். தருமச்சாலையை நிர்வகித்து வந்திருந்த ஆனந்த நாத சண்முகநாத சரணாலய சுவாமிகளுக்கு 8-6-1870 அன்று எழுதிய கடிதத்தில் நம் பெருமான் இப்போது எவ்விடத்து எழுந்தருளி இருக்கின்றது? சாலை என்ன ஸ்திதியில் இருக்கின்றது?அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றார்கள் இது விபரங்களை உடனே கட்டளையிடும்படிக் கோருகிறேன். அந்தப் பக்கங்களிலிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுந்தோறும் மனம் துடிக்கின்றது.ஆதலால் உண்மை விடயங்களை உணர அருள் செய்தல் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை ஊன்றிப் படித்தால் வள்ளலார் தோன்றாமலேயே இருக்கும் நிலை பெற்றார் என்றும் உண்மை அறியாத ,மக்கள் வேலாயுத முதலியாரிடம் சில பல சொல்லியிருக்கின்றார்கள்.என்றும், உண்மையை உணரவேண்டி வேலாயுத முதலியாரும் தருமச்சாலையில் இருந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகளுக்குக் கடிதம் எழுதி இருக்கின்றார் என்றும் அறிய முடிகிறது. பிறர் கண்களுக்குத் தோன்றாமல் வள்ளலார் மறைந்திருந்தார் என்பது நிரூபணமாகின்றது
. இதற்குப் பதில் எழுதுவது போல் வள்ளலாரிடமிருந்து ஓர் அறிக்கை வெளியாகின்றது. வள்ளலார் அறிக்கை வெளியிட்ட நாள் 26-10-1870

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது.ஒருவனைப்பற்றி அநேகம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள் .என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன்.அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன்.அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாய் நடத்துங்கள்.

சென்னையில் இருக்கும் பிரம்ம ஞான சங்கத்தாருக்கு வேலாயுத முதலியார் கொடுத்த வாக்கு மூலத்தில் கூட வள்ளலார் அடிக்கடி மறைந்து இருந்ததைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறியுள்ளது: 1855ம் ஆண்டில் சென்னையைவிட்டு சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர்,கருங்குழி என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலம் இருந்தார். அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பது உண்டு. இவர் எங்கு சென்றார் என்பதை அறிவோர் எவரும் இலர். இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.

ஞான தேகத்தின் தன்மை தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். தான் ஞான தேகம் பெற்றதை இவ்வாறு அடிக்கடி மறைந்து மறைந்து சோதித்துப் பார்த்திருக்கின்றார்.என்பதே உண்மை.
ஞான தேகம் பெற்ற வள்ளலாரால் யார் கண்ணுக்கும் புலப்படாமலும் இருக்க முடியும். அவர் நினைத்தால் மீண்டும் தோன்றவும் முடியும்.

வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்கிறார்களே ?

உண்மைதான். வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது உண்மையே. அவர் கலந்ததை அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் அந்த இறைவனோ வள்ளலார் இருந்த குடிசையைத் தேடி வலிய வந்து அவருடன் கலந்தான் என்பதே உண்மை. ஆதாரம் அருட்பா.

வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து
மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையிநூடே திருவடி சேர்த்து அருள்க
எனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருளமுதம்
நல்கியதன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு
குடிசையுள்ளும் நுழைந்தனையே ( திரு அருட்பா)

வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டதற்குச் சில ஆண்டுகட்கு முன்பே இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான்.ஆண்டவன் வள்ளலாருடன் கலந்ததை அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபின் நடந்ததாகச் சொல்வது தவறு.

வள்ளலாரின் தேகம் அணு அணுவாக மாறி உலகமெங்கும் பரவிவிட்டது என்று கூறுகிறார்களே?

வள்ளலார் தான் எழுதிய திரு அருட்பாவில் பலப் பலப் பாடல்களில் தான் என்றும் அழியாத தேகம் பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றார். உதாரணமாக:

காற்றாலே ,புவியாலே, ககனமதனாலே,கனலாலே,புனலாலே, கதிராதியாலே
கூற்றாலே,பிணியாலே, கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும்
செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்கவேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி
இறைவனைச் சார்வீரே

தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே போகம் எல்லாம் எந்தன் போகமதாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்க மேலேற்றி ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பளித்து என்னை ஆகம வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே
வள்ளலார் அழியாத தேகம் பெற்றுவிட்டதைப்\ பல பாடல்களில் கூறியுள்ளார்.
அவர் தேகம் அணு அணுவாகச் சிதையவில்லை என்பதையும் இவ்வாறு சொல்வோர் வள்ளலாரைப் பற்றிய உண்மையை அறியாதவர் என்றும் உணரவேண்டும்.
தேகம் அணு அணுவாகச் சிதைந்து போனால் அவருடைய அந்த உடம்பில் இருந்த அவரது உயிர் என்ன ஆயிற்று என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள். ?

வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார் என்கிறார்களே?

இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்புகளிலும், புகுந்து கொள்வோம் என்று வள்ளலார் கூறியது உண்மைதான். கார்த்திகை மாதம் உள்ளே போனவர் மார்கழி மாதமே வெளியே வந்துவிட்டார்.தை மாதம்தான் மீண்டும் வள்ளலார் தனது அறைக்குள்ளே நுழைந்து திருக்காப்பிட்டுக் கொள்கிறார்..அவர் எல்லோருடைய உடம்பிலும் புகுந்து கொண்டார் என்றால் அப்போதிருந்த மக்கள் உடம்பில் மட்டும்தானா இப்போதுள்டோள நம் உடம்புகளிலும்கூட என்று சொல்லலாமா?
உண்மையிலேயே வள்ளலார் நமது உடம்பிலே புகுந்தால் நாம் இப்படியா இருப்போம் ?இதுவரை வந்த மக்கள் உடம்பில் எல்லாம் வள்ளலார் புகுந்து கொண்டார் என்றால் அவர்கள் எல்லோரும் இறந்துதானே போனார்கள் அந்த உடம்புகளில் எல்லாம் புகுந்து கொண்ட வள்ளலார் என்ன ஆனார்?வள்ளலார் யாருடைய உடம்பில் புகுந்து கொண்டாலும் வள்ளலார் புகுந்து கொண்ட உடம்பிற்கு மரணம் வராது. ஆனால் வள்ளலார் தவிர மற்ற எல்லோரும் மரணம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்துகொள்ளவில்லை. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்களைக் கண்டு அவர்கள் மீது மனம் இரங்கி அவர்கள் உடம்பில் புகுந்தாவது அவர்களைத் திருத்தலாம் என்று வள்ளலார் எண்ணினார். மக்கள் அந்த அளவிற்குப் புண்ணியம் பண்ணவில்லை. அதனால் வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்து கொள்ளவில்லை. சரி அப்பட்டியானால் அவர் என்னதான் ஆனார்?

வள்ளலார் ஒளி உடம்பு பெற்றார் என்கிறார்களே அது உண்மைதானே?

ஒளி உடம்பு பெற்றார் என்பது உண்மைதான்.நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் ஒரு சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியதை நினைவில் கொண்டுவாருங்கள்.அப்போது என்ன செய்தோம்.ஒருவன் கண்ணை மூடிக்கொள்வான். மற்றவர்கள் ஒளிந்துகொள்வார்கள்.கண்ணைமூடிக்கொண்டு இருந்தவன் ஒளிந்து கொண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். ஒளி என்ற சொல்லுக்கு ஒளிந்துகொள்ளுதல் என்று ஒரு பொருள் உள்ளது புரிகின்றதா? வள்ளலார் நமது கண்களுக்குத் தோன்றாமல் இருக்கும் ஒளி தேகம் பெற்றார் என்பதே உண்மை. ஒளி என்ற சொல்லுக்குப் பிரகாசம் என்று பொருள் கொண்டால் அவர் தேகம் தோன்றவேண்டும். ஒளியை மறைக்கமுடியாது.ஞான தேகம் என்பது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்றால் தோன்றாமல் இருக்கும் நிலையே ஒளி தேகம் என்பது. தோன்றவில்லை என்பதால் வள்ளலார் இல்லை என்று சொல்லி விடலாமா. இறைவன்கூடத் தோன்றவில்லை அவன் இல்லை என்றா சொல்கிறோம். ஆகாயம் கூடத் தோன்றவில்லை.அதனால் ஆகாயமே இல்லை என்றா சொல்கிறோம். இதுவும் வள்ளலார் கருத்துதான்.

கனமுடையேம் கட்டுடையேம் என்று களித்து இறுமாந்து இருக்கின்றீர் என்ற பாடலில் வள்ளலார் ஒளிப்பிடமும் அறியீர் என்கிறார்.அடுத்த வரியில் சினமுடைய கூற்று வரும் செய்தி அறியீரோ என்று கேட்கிறார். கூற்று வரும்போது ஒளிப்பிடம் அறிந்தால் கூற்றைத் தடுக்கலாம் என்று அறிகிறோம். ஞான சரியை முதல் பாடலிலேயே கடைசி வரியில் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே என்றார் . அடுத்த பாடல் முதல் வரியிலேயே புகும் தருணம் இது கண்டீர் என்று ஆரம்பிக்கின்றார். இதுதான் ஒளிப்பிடம். ஆக ஒளி என்ற சொல்லுக்கு இங்கே பிரகாசம் என்று பொருள் கொள்வது தவறு.ஒளிந்து கொள்ளுதல் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.

வள்ளலார் என்னதான் ஆனார்?

தன் தேகத்தை மறைத்துக்கொண்டார். !!வள்ளலார் ஞான தேகம் பெற்றுவிட்டதையும் அவரால் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைந்திருக்க முடியும் என்றும் முன்பே விளக்கப்பட்டுள்ளது. 30-1-1874 வெள்ளிக்கிழமையன்று மேட்டுக் குப்பத்தில் ஓர் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. சில நாட்கள் கழித்து அரசாங்கத்தார் வந்து கதவைத் திறந்து பார்த்ததில் அங்கு ஒன்றும் இல்லாதிருந்தது என்றும் நாம் அரசாங்கத்தாரின் அறிக்கையிலிருந்து அறிகிறோம்

. தான் என்ன செய்துகொண்டேன் என்று அவரே விளக்குகின்றார்.
பஞ்ச பூதங்களாகிய மண் ,நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகியவற்றில் மண் ,நீர்,நெருப்பு ஆகிய மூன்றும் நம்முடைய கண்களால் காணமுடிகிறது. காற்றைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் உணரமுடிகிறது.வானத்திலே அண்ணார்ந்து பார்த்தால் தெரிகிற நீல வண்ணம் ஆகாயம் அல்ல.சூரிய ஒளியின் நீல வண்ணம்தான் நமக்கு ஆகாயம்போல் தோன்றுகிறது. ஆகாயம் என்பது ஒன்றுமல்லாத ஒரு வெளிதான்.மண்,நீர்,நெருப்பு,காற்று ஆகிய நான்கும் தன்னைக் காட்டுகின்றன. ஆனால் ஆகாயம் மட்டும் தன்னைக் காட்டவில்லை.ஆகாயம் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை. வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்

மன் செய்துகொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்துகொண்டதை
நான் செய்து கொண்டேன்
முன்செய்துகொன்டதும் இங்ஙனம் கண்டீர் மூவகையாம் உடலாதியை நுமது
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன்னடி காணப்
பொருந்திக் கொடுத்தேன்
என் செய்துகொண்டாலும் செய்து கொள்கிர்ப்பீர் எனைப் பள்ளி எழுப்பி
மெய் இன்பம் தந்தீரே

வான் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை என்று வள்ளலார் தான் பெற்ற நிலையைதெளிவாகஅறிவிக்கின்றார்.

வள்ளலாருடைய தேகம் மண்ணில் புதைக்கப்படவில்லை,நெருப்பினால் தகனம் செய்யப் படவில்லை.எனவே வள்ளலார் இன்றும் தன் தேகத்துடன் இருக்கின்றார். அவருடைய ஞானதேகம் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. இதுவே உண்மை

வள்ளலார் இருக்கிறார் என்று நாம் அறிவதனால் நமக்கு என்ன நன்மை?
நாம் செய்த,செய்கின்ற வினையின் காரணமாக நமக்குத் துன்பம் நேரிடுகிறது.நாம் செய்த வினைக்குரிய பலனை இறைவன்தான் நமக்கு ஊ ட்டுகிறான்.தீவினை நல்வினை எனும் வன் கயிற்றால் இந்த ஜீவர்களை ஆட்டுகின்ற தேவே என்கிறது மகாதேவ மாலை.
மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவதற்கே வள்ளலாரை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறான்.இந்தச் செய்தியை வள்ளலார் தான் எழுதியுள்ள அகவலில் தெரிவிக்கின்றார்
. \
உலகினில் உயிர்களுக்குரும் இடையூ றெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக என்றனை

இந்த அகவல் வரிகளை ஊன்றி நோக்கினால் நமக்கு வரக்கூடிய இடையூறுகள் எல்லா வற்றையும் வள்ளலார் விலக்கவேண்டும் இது ஆண்டவன் வள்ளலாருக்கு இட்ட கட்டளை. இந்த உத்தரவு வேறு எந்த அருளாளருக்கும் தரப்படவில்லை .வள்ளலார் ஒருவர்தான் இந்த உத்தரவைப் பெற்றவர். இதை உணர்ந்து அவரிடம் போனால், அவரை வணங்கினால், நம்முடைய இடையூறுகள் விலகிப் போகும். இதை விட வேறு என்ன வேண்டும்?

ஆண்டவன் இத்துடன் நிற்கவில்லை. வள்ளலாரை அழைத்து நீ இந்த மக்களுக்கெல்லாம் துணையாய் இருப்பாயாக என்றும் ஆணை இட்டுள்ளான்

எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக் கருள் புரிந்து
எல்லோருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லோருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம்
எல்லோர்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே/

வள்ளலார் என்ன ஆனார் என்று தெளிவாகப் புரிந்ததா?
அதனால் நமக்கு என்ன நன்மை?
வள்ளலாரை யார் உண்மையாக வணங்குகிறார்களோ, யார் அவர் காட்டிய வழியாகிய ஜீவகாருண்யத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவது மட்டுமின்றி எல்லோருக்கும் அவர் துணையாகவும் இருக்கின்றார். இதைவிட வேறு என்ன பலன் நமக்கு வேண்டும்?
வள்ளலாரைச் சரணாகதி அடைந்ததால் நான் எவ்வளவோ நன்மைகளை அடைந்துள்ளேன்.அடைந்துகொண்டிருக்கின்றேன்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 18 அக்டோபர், 2017

தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘

தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘

(குறிப்பு: வள்ளலார் வழியாகிய சுத்த சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குரிய கட்டுரை)

பொதுவாக ஏதேனும் காரணங்கள் சொல்லி மக்கள் சந்தோசமாக இருப்பதில் சந்தோசம் தான். அதன் வரிசையில் இந்த தீபாவளியை நாம் கருதலாமா? என்ற கேள்வி வரும் போது நம் வள்ளலார் இவை குறித்து என்ன சொல்லியுள்ளார்கள் என்பதே சரியாகும். என் மார்க்கம் அறிவு மார்க்கம் மற்றும் உண்மை அறியும் மார்க்கம் என்கிறார்.ஆக, ஒன்றை சொல்லும் போது கேட்கும் போது, அதன் உண்மை என்ன என தெரிந்துக் கொள்பவர்களே நாம்.
இந்த விழா[தீபாவளி] எதன் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது என்ற உண்மை அறியும் ஆசை உள்ள நம்மவர்கள் மட்டும் கட்டுரையை தொடரலாம்.
இந்த நாட்டில் இந்த பண்டிகை முழுக்க முழுக்க புராணம்,இதிகாச அடிப்படையிலேயே கொண்டாடப் படுகிறது.புராணம் எதுவெனில்; விஷ்ணு புராணம் மற்றும் ஸ்கந்த புராணம் இதிகாசம்: இராமாயணம். இதில் விரதம், நோன்பு உண்டு.சரி நம் சுத்தசன்மார்க்கம் என்ன சொல்கிறது?
வள்ளலாரின் கட்டளை யாதெனில்; வேதம்,ஆகமம், புராணம்,இதிகாசம் போன்ற கலைகளில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்கள். இங்ஙனம் வள்ளலாரின் கட்டளை இருக்கும் போது புராணத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் தீபாவளி சுத்த சன்மார்க்கத்தாருக்கு கிடையாது. கூடாது. சமய நம்பிக்கை உள்ளவர்களின் ஒரு விழா.

ஏன் புராணம், இதிகாசத்தில் லட்சியம் வைக்க கூடாது? இதோ நம் அய்யா கீழ்வருமாறு சொல்கிறார்கள்;
ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழு உக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள், என்கிறார் வள்ளலார். மேலும், அவ்வாறு இதில் பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் இதில் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் நம் அய்யா. அய்யாவின் கட்டளையை ஏற்பவர்கள் தான் சுத்த சன்மார்க்த்தில் இருக்கும் தகுதி பெறுவர் என்பது மிகவும் எல்லோருக்கும் தெரிந்த விதி.

“வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையேஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தேதீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநாயகனே!”

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

“கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.”

“தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்…”

” தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.”

இன்னும் பல பாடல்கள் உள.
நம்மவர்களே, வள்ளலார் வழியில் உள்ளவர்களே, இதிகாசம்,புராணம் இவையில் லட்சியம் வையாதீர்கள். இதில் லட்சியமில்லை என்றால் புராண இதிகாச அடிப்படையில் அமையப் பெற்ற ” தீபாவளி” ஏது?  கூடாத ஒன்றுக்கு ” வாழ்த்து” ஏது.?
வள்ளலார் இந்த உண்மையை தான் சொன்னார்கள். ஆனால்; அன்றைய தினம் அதாவது 22/10/1873 ல் இருந்த நிலைப்பற்றி வள்ளலாரே சொல்கிறார்கள்;
  ” உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”
30/01/1874 ல் சொன்னது;
“இது காறும் என்னோடு நீங்கள் பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்ன தென்று தெரிந்து கொள்ளவில்லை.”
இன்றாவது வள்ளலாரிடம் சொல்வோம்
” அய்யா, நீங்கள் சொல்லவந்ததை இன்று நாங்கள் தெரிந்துக் கொண்டோம்” என்று.
இதோ வள்ளலார் நமக்காக எங்ஙனம் வேண்ட வேண்டும் என்று சொன்னதை இன்று சொல்லி ஆண்டவரிடம் வேண்டுவோம்;
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 17 அக்டோபர், 2017

தீபாவளித் திருநாள் !

தீபாவளித் திருநாள் !

ஏதோ ஒரு காரணத்திற்காக தீபாவளி பண்டிகையை தோற்று வைத்து விட்டார்கள்.அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டு ஆனந்தமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஏழை எளியவர் முதல் பணக்கார்ர்கள் வரை அவரவர் சக்திக்கும் வசதிக்கும் தகுந்தாற்போல்.புத்தாடைகள் .பலகாரங்கள்.பட்டாசுகள்.வாங்கி கொண்டாடி மகிழ்கிறார்கள்.எல்லாமே மகிழ்ச்சிதான்.

ஆனால் மக்கள் உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும்.ஒரே ஒரு வேண்டுகோள்...

உயர்ந்த அறிவு உள்ள மனிதர்கள்.பண்டிகை என்ற பெயரால் தாழ்ந்த அறிவுள்ள வாய்பேசாத அப்பாவி மிருக உயிர்களை கொன்று அதன் மாமிசத்தை உணவாக உட்கொள்வது எந்த விதத்தில் நியாயம் .சிந்திக்க வேண்டும்.

ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பதால்.பாவங்கள் தான் வந்து சேறுமே ஒழிய புண்ணியங்கள் வந்து சேராது.

மற்ற உயிர்களைக் காப்பாற்ற வேண்டிதான்  மனிதனுக்கு உயர்ந்த அறிவை இறைவன் கொடுத்துள்ளார்.இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியாவிட்டாலும் தயவு செய்து அழிக்காதீர்கள்.

இந்த தீபாவளித் திருநாளில்.உயிர்களை கொல்ல மாட்டோம்.அதன் புலாலை உண்ண மாட்டோம் என்ற சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.அதுவே இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும்.அதுவே உங்களுக்கு வரும் துன்பம்.துயரம் .அச்சம்.பயம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழிகாட்டும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஆதரவு அற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்து அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.அவர்களால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும். அதுவே உங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும்..

வள்ளலார் பாடல் !

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.!

நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.!

எல்லா உயிர்களிலும் இறைவன் திருநடம் புரிகின்றார் என்ற பாடல்.!

,உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்துமலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!


உயிரெலாம் பொதுவி
னுளம்பட நோக்குகசெயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே!

 உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தேஉயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே!

 உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே !

என்னும் பாடல் வரிகளைக் கண்டு தெரிந்து தெளிந்து உயிர்கள் மேல் அன்பு.தயவு.கருணை காட்டி மகிழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பொய்யான மதங்கள்.சமயங்கள் !

பொய்யான மதங்கள்.சமயங்கள் !

உலகில் தோன்றிய தோற்றுவித்த அனைத்து சாதிகளும். மதங்களும் சமயங்களும்.அவற்றை சார்ந்த மார்க்கங்கள்.அனைத்துமே பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்கள்.நம்பாதீர்கள்.பின் தொடராதீர்கள்.என்கிறார் வள்ளலார்.

அவைகள் யாவும் மனித இனத்தை அழிவு பாதையில் இட்டுச் சென்று கொண்டு உள்ளது.அவற்றில் உள்ள கடவுள் கொள்கைகள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானது பொய்யானது.தத்துவங்களையும்.செயற்கைப் பொருள்களையும் கடவுள்களாக கற்பித்து காட்டி உள்ளார்கள்.

கற்பித்த சமய.மத வாதிகள் அனைவரும் உண்மைக் கடவுளைக் காணவில்லை.காணும் அறிவும்.அருளும் பெறவில்லை.அதனால்தான் வள்ளலார்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!....என்றும்.

சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி!....என்றும்.

சாதி சமய மதங்களைக் கடந்த்து தான் உண்மையான கடவுளாகும்.அந்த உண்மைக் கடவுளைக் கண்டவர் தான் திரு அருட்பிரகாசவள்ளலார். ஏன் அவரால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி யைக் காண முடிந்த்து என ஒரு கேள்வி எழலாம்.

மனிதன் உடம்பை பஞ்ச பூதங்களுக்கு இரையாக்காமல் அதாவது மரணம் அடையாமல்.ஊன உடம்பை ஒளிதேகமாக மாற்றினால் மட்டுமே உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யைக் காண முடியும் என்ற உண்மையை அறிந்து.வாழ்ந்தார் வாழ்ந்து உலக மக்களுக்கு நேர்மையான ஒழுக்கமான வழியைக் காட்டினார்.

 மரணத்தை வென்று வாழ்ந்து காட்டுவதற்கு எவை தேவை ?
அருள் தேவை ! அருள் பெருவதற்கு எவை வேண்டும்.அன்பு வேண்டும் ! அன்பு பெருவதற்கு எவை வேண்டும். உயிர் இரக்கம் என்னும் தயவு வேண்டும்.தயவு பெருவதற்கு எவை வேண்டும்.ஜீவகாருண்யம் வேண்டும்...

ஜீவ காருண்யம் என்றால் என்ன ?. ஜீவ காருண்யம் என்பது ஒழுக்கம் என்பதாகும்.அவற்றில் புற ஒழுக்கம்.அக ஒழுக்கம் என இரண்டு பிரிவுகள் உள்ளன.இரண்டு ஒழுக்கமும் அவசியம்..ஜீவ காருண்யத்தில் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்.என்னும் நான்கு ஒழுக்கங்கள் உள்ளன.நான்கு ஒழுக்கத்தில் இரண்டு ஒழுக்கம் மிகவும்  முக்கியமானது.இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.என்ற இரண்டு ஒழுக்கத்தைக் முழுமையாக கடைபிடித்தால்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போனஸாக வழங்கி விடுவார்.அதன் பின்புதான் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.பூரண அருள் பெற்றால் மட்டமே மரணத்தை வொல்ல முடியும்.மரணத்தை வென்றால் மட்டுமே இயற்கை உண்மைக் கடவுளைக் கண்டு.இயற்கை விளக்கம் என்னும் அருளைப்பெற்று.இயற்கை இன்பத்தை பெற முடியும்.இவற்றைப் பெற்றவர்தான் வள்ளலார்....அதனால் அவர் கடவுள் நிலை அறிந்து அம்மயமானார்.ஆகவே உண்மையை உலக மக்களுக்கு மறைக்காமல் சொல்லுகிறார்.

உலகில் உள்ள சாதி சமய மத அருளாளர்கள். மேலே கண்ட இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பத்தை பெறாமல்.ஏகதேச செயற்கை உண்மை .செயற்கை விளக்கம்.செயற்கை இன்பத்தைப் பெற்றவர்கள்.அதனால் தான் செயற்கையான சாதி.சமய.மதங்களை தோற்றுவித்து மனித குலத்தை பிரித்து வைத்து விட்டார்கள்.அதனால் மனித குலம் ஒற்றுமை இல்லாமல்.வேற்றுமையால்.உண்மை அறியாமல் போட்டி போட்டு சண்டையிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்.

இதற்கு எல்லாம் யார் காரணம்.?

சாதி சமய மத அருளாளர்கள் தான் காரண காரியமாக இருந்துள்ளார்கள்.அவர்களின் தகுதி என்னவென்று வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.....


மேலே கண்ட பாடலில் சாதி.சமய.மத வாதிகளின் ஏகதேச ஒழுக்கத்தால்.விரத்த்தால்.தவத்தால் .மத்த்தலைமை.பத்த்தலைமை வாய்த்தனர்.அவர்களின் செயல்  பதவியைப்பற்றியும். தெளிவாக விளக்கி உள்ளார். அவர்களுக்கும் மரணம் என்பது நிச்சயம்..மீண்டும் பிறப்பு எடுத்து மேலே செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.ஆதலால் அவர்கள் காட்டிய தெய்வங்களும்.கொள்கைகளும் உண்மைக்கு புறம்பானவைகளாகும்.

எனவே சாதி.சமய.மதங்களால் தோற்றுவித்த தெய்வங்களும்.ஒழுக்கங்களும்.பொய்யானது .அவற்றை பின் பற்ற வேண்டாம் என்கிறார் வள்ளலார்.அவைகள் யாவும் ஒதுக்கித் தள்ளும் குப்பைகள் போன்றதாகும்என்கிறார்.மக்களை பிரித்த அவைகளை அழித்து விடுங்கள் என்கிறார் வள்ளலார்.


எனவே வள்ளலார் காட்டிய உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்னவர் ஒருவரே ! என்ற உண்மையை அறிவால் அறிந்து.அவர் காட்டிய உண்மை நெறியை பின் பற்றினால் மட்டுமே மனிதர்கள் மனிதனாக வாழ்ந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை அறிய முடியும்.

எனவே சாதி சமய மதங்களை விட்டு உண்மை நெறியான சுத்த சன்மார்க்க தனி நெறியைப் பின் பற்றினால் மட்டுமே அருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ முடியும்.நம் வாழ்க்கை ஒளி உடம்பை பெற்று ஒளிமயமாய் வாழ முடியும்.

உன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைய ஒரே வழி அருள் பெறல் வேண்டும்.

சாதி சமய மதங்களை பற்று அற விட்டால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வாரி வாரி வழங்குவார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.  





































வெள்ளி, 13 அக்டோபர், 2017

உண்மைஎது?பொய்எது?


வியாழன், 12 அக்டோபர், 2017

Aanmaneyan.kathirvelu@gmail.com

திங்கள், 9 அக்டோபர், 2017

கடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு ?

கடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு ?

கடவுள் இயற்கை உண்மையான அருள் ஒளியாக உள்ளார்.கடவுளுக்கு உடம்பு கிடையாது .மறைப்பு கிடையாது  இயற்கை விளக்கமாக உள்ளார்.எல்லா உயிர்களுக்கும் அன்பும்.தயவும் கருணையும் வழங்கிக் கொண்டே உள்ளார்.

அடுத்து என்றும் அழியாத மாறாத மறையாத  இயற்கையான இன்பத்தை தந்து கொண்டே உள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

மேலே உள்ள பாடலில் கண்டபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உள்ளார்.

மனித தேகம் எடுத்த நாமும் அதே நிலைக்கு மாற வேண்டும். அப்படி மாற்றம் அடைவதற்கு பெயர் தான் "" கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்""என்று வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.

அதே அருட்பெருஞ்ஜோதி ஜோதிதான் இயற்கை உண்மையாக நம் சிரநடு சிம்மாதனத்தில் ஞான சிங்காதன பீடத்தில் அமர்ந்து உயிரையும்.உடம்பையும் இயக்குவதற்கு ஒளி வழங்கிக் கொண்டு உள்ளார்.ஜீவனை இயக்கிக் கொண்டு இருப்பதால் அதற்கு ஜீவ ஆத்மா என்று பெயர்.

இறைவனை காண்பதற்கும் இறைஅருளைப் பெறுவதற்கும் தடையாக இருப்பது உடம்பும் உயிரும் தான் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்.அதற்குப் பெயர்தான் ஆணவம்.மாயை.கன்ம்ம் என்பதாகும்.ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ள ஆணவம் என்னும் மறைப்பு. உயிர்  என்னும் பிடிப்பு .உடம்பு என்னும் சுவர் இவைகள் மூன்றும்  ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன். இவற்றை அகற்ற வேண்டும். அகற்றினால் தான் கடவுள் நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள முடியும். இந்த கதவுகளை திறக்க மாற்ற எது தேவை என்றால் அருள் தேவை.அருள் பெறுவதற்கு. என்ன செய்ய வேண்டும் ? உயிர்கள் மேல் இரக்கம் தயவு என்னும் ஜீவ காருண்ய மயமாக மாற வேண்டும்.அடுத்து

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மை அறிந்து அவரிடம் இடைவிடாத அன்பு என்னும் காதல் கொள்ள வேண்டும்.அன்பும் காதலும் களங்கம் இல்லாமல் இணையவேண்டும்.அந்த பேரானந்த இனைப்பினால் சேர்க்கையால் அருள் சுரக்கும் அந்த அருள் உயிரையும் உடம்பையும் ஒளிமயமாக மாற்றும்.ஒளிமயமாக மாறினால் மட்டுமே நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்பதை அருட் கண்களால் காண முடியும்.அந்த உண்மையைக் கண்ட வள்ளலார் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் கலந்து கொண்டேன் என்கிறார்.

மேலும் திருக்கதவை திறப்பதற்கு அவர் பதிவு செய்துள்ள பாடல் !

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தேதிருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தேகங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசேசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

மேலே கண்ட பாடலில் இரவு பகல் அறியாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர்ச்சி பொங்க கட்டி பிடித்து . இணைந்து அருளைப் பெற்றுள்ளார். இதுதான் சத்விசாரம் என்பதாகும்.

கணவன் மனைவி உறவு கொண்டால் உணர்ச்சி மோகத்தில் சுக்கிலம் வெளியே வருகிறது  அப்போது கிடைக்கும் இன்பம் அபாரமானது.அவை கொஞ்ச நேரம் சுவைக்கலாம்.பிறகு மறைந்து விடும்.இதற்கு சிற்றின்பம் என்று பெயர்.

அவ்வாறே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் இணைந்து உணர்ச்சி பொங்க அனுபவித்து கிடைக்கும் இன்பம் அருட் சுகம் .அருள் இன்பம்.ஆன்ம சுகம் ஆன்ம இன்பம் என்று பெயர்...இதற்கு பேரின்பம் என்றும் பெயர்.அந்த இன்பம் அந்த சுகம் என்றும் அழியாது.அந்த ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.பேரின்ப லாபம் என்னும் சுத்த பிரணவ ஞான தேகத்தைப் பெற்று.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வதுதான் மனித தேகத்தை பெற்ற ஜீவர்களின் வாழ்க்கையாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை நீக்கி அருள் இன்பம். அருட் சுகம். பெறும் வழியைக் காட்டுவதுதான் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்கம் கற்றுத்தரும் கல்வி தான்  சாகாக்கல்வி என்பதாகும்.

வள்ளலார் கற்றுத் தந்த சாகாக்கல்வியைக் கற்று அருட்சுகம் பெற்று அருள் இன்பம் அடைந்து கடவுள் நிலை அறிந்து அம்மயமாவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

வள்ளலார் சுத்த சன்மார்க்கம் என்ற
 ஒரு புதிய பொது நெறியை உலகிற்கு வழங்கி உள்ளார்.

சுத்த சன்மார்க்கம் என்பது !

சாகாக் கல்வி கற்று தருவது.
கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மை அறிதல்.
மலம் ஐந்தையும் விலக்குவது.
உடம்பை விட்டு உயிர் பிரியாமல்.உடம்பையும்.உயிரையும்.ஆன்மாவின் தன்மைக்கு அருள் ஒளியாக மாற்றம் செய்வது.
இந்த நான்கு வகையான மாற்றங்களை செயல் படுத்துவதுதான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

வள்ளலார் பாடல்!

சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்தான்என அறிந்தஅறிவேதகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமேதனித்தபூ ரணவல்லபம்வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்விளையவிளை வித்ததொழிலேமெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கேவியந்தடைந் துலகம்எல்லாம்மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறைவானவர மேஇன்பமாம்மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்மரபென் றுரைத்தகுருவேதேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்தேற்றிஅருள் செய்தசிவமேசிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளேதெய்வநட ராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் அழிந்து கொண்டு உள்ளவர்களை அதில் இருந்து மீட்டு காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பது தான் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

வள்ளலார் காலத்திலே அவருடன் நெருங்கி பழகி இருந்தவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள் உலக கல்வி அறிவு உள்ளவர்கள். வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை .வள்ளலார் சொல்லிய காட்டிய உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி யை தெரிந்து கொள்வார்கள் இல்லை.எல்லாருமே சமய மத வெரியர்களாகவே இருந்து உள்ளார்கள்.அந்த கூட்டத்தில் வள்ளலாரின் முதல் மாணாக்கராக இருந்தவர் வேலாயுத முதலியார் என்பவர் அவரே சாதியை விட்டு விலகாமல் முதலியார் என்ற சாதிப்பெயரை தன் பெயருடன் சேர்த்தே கையொப்பம் இட்டு எழுதி வந்துள்ளார் .மற்றும் உடன் இருந்தவர்களும் சாதி சமய மத்த்தை விட்டு விலகாமல் அதே நிலையில் தான் இருந்து உள்ளார்கள்.

வள்ளலார் மிகவும் மன வேதனையுடன் சொல்லுகின்றார்.

இவ்வளவு காலம் என்னுடன் தொடர்ந்து இருந்தவர்களும்.நெருங்கிய பழக்கம் உள்ளவர்களும் நான் சொல்லும் சுத்த சன்மார்க்கம் என்னவென்று புரிந்து கொள்ளவில்லை.நான் சொல்லும் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி தான் என்பதையும் தெரிந்து புரிந்து கொள்ளவில்லை.என்று மிகவும் வேதனைப் படுகின்றார்.அந்த அளவிற்கு அறிவு தெளிவு விளக்கம் இல்லாமல் வள்ளலார் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.

வள்ளலார் சொல்லுகின்றார். வேலாயுதமுதலியாரும் கைவிட்டுவிட்டார் என்று பதிவு செய்கின்றார்.

வள்ளலார் எழுதிய பாடல்களை  திருஅருட்பா என்று பெயர் இட்டு புத்தகமாக  வெளியிட்டவர்களே .வள்ளலார் சொல்லுயுள்ள எழுதிவைத்துள்ள பாடல்கள்.உரைநடைகள் ஜீவகாருண்ய  ஒழுக்க நெறிகள் சுத்த சன்மார்க்க உண்மை வழிபாட்டு முறைகள்.வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை.தெளிவாக எடுத்து சொல்லியும் .ஒருவர் கூட பின்பற்ற வில்லை.

அவைத் தொடர்ந்து இன்றுவரையில் எவரும் பின்பற்றவில்லை.கடைபிடிக்கவில்லை.

ஒவ்வொருவரும் தங்களின் சுய நலத்திற்காக வள்ளலாரை பிடித்து கொண்டு சன்மார்க்கம் என்ற பெயரில் .பட்டம்.பதவி.புகழ் .பணம்.பெயர் வரவேண்டும். என்ற போதையில் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

சாதி சமயம் மதம் போன்ற வற்றில் பற்று இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெருங் கருணையோடு. இப்பொழுது  அதி தீவிர முயற்சியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பணி தொடங்கி உள்ளது.

போலி சன்மார்க்கிகளின் வேஷம் களைக்கப்பட போகின்றது. சுத்த சன்மார்க்கம் உலகம் எங்கும் பூத்துக் குலுங்கும் காலம் வந்து விட்டது.இனி சுத்த சன்மார்க்கத்திற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது. இனி வருங்காலம் சுத்த சன்மார்க்க காலம் .

இளைஞர்களே விழித்து எழுங்கள்.வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க  கொள்கைகளை உலகம் எங்கும் கொண்டு செல்வோம் வாரீர் வாரீர் வாரீர் என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைக்கிறார்...

புதிய உலகை படைப்போம்.மக்களை மரணத்தில் இருந்து மீட்டு எடுத்து மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வதற்கு வழிக்காட்டுவோம்.

வள்ளலார் சொல்லியுள்ள மரணத்தை வெல்லும் புதிய சாகாக் கல்வியை உலக மக்கள் கற்று தேர்ச்சி பெற சாகாக்கலவி பாடசாலையை தொடங்கி நாம் தேர்ச்சி அடைந்து இறை அருளைப் பெற்று மரணத்தை வென்று மற்றவர்களுக்கும. வழிகாட்டுவோம். வீண்காலம் கழிக்காமல் உடனே சுத்த சன்மார்க்க நன் நெறியை பின்பற்றி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோசற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதேசமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனைஎற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி ஜீவ காருண்யத்தை முழுமையாக கடைபிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.என்ன