திங்கள், 30 செப்டம்பர், 2019

எல்லா நாட்களும் நல்ல நாட்களே !

இறைவன் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்களே !

வள்ளலார்பாடல் !

அடங்குநாள் இல்லாது அமரந்தானைக் காண்பதற்கு தொடங்கு நாள் நல்லதன்றோ..நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன்றொ !

வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே நல்லநாள் எண்ணுயநாள்..நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள் !

காலங் கடந்த கடவுளைக் காணற்குக் காலங் கருதுவதேன்..நெஞ்சே
காலங் கருதுவதேன் !

மக்களை ஏமாற்ற சமய மதவாதிகள். நேரம் காலங்களை வைத்து தவறான வழியைக் காட்டியுள்ளார்கள்

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A Good One For Superstitious People" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது.

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"

அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

இனிமேலாவது மக்கள் அறியாமையில் இருந்து மீளவேண்டும்.

PLEASE SPREAD THIS MESSAGE TO ALL

திங்கள், 23 செப்டம்பர், 2019

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

அன்புள்ள நம்மவர்களுக்கு ஆன்மநேய உரிமையுடன் வந்தனம்!

இப்பவும் வள்ளலார் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* நூல் வெளியீடு.

*வள்ளலார் கண்ட மெய்பொருள்* என்னும் தலைப்பில் 250 பக்கங்கள் கொண்ட வள்ளலார் வாழ்க்கை வரலாற்று வண்ணப்படங்களுடன்.  புதிய உண்மை சம்பவங்கள் கொண்ட  இந்நூல் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நூல் பிரான்ஸ் ஐரோப்பா நாட்டு சன்மார்க்க அன்பர்களின் வேண்டுகோளின்படி 1000 பிரதிகள் அந்த நாட்டிற்கு அனுப்பபடுகின்றன.அதற்குண்ட செலவுத்தொகை அவர்கள் கொடுத்துவிட்டார்கள்.

மேலும் மலேசிய நாட்டில் நடைபெறும் 196 ஆம் ஆண்டு *வள்ளலார் வருவிக்க உற்ற பெருவிழா.இந்துபாபா அவர்களின் தலைமையில் .13-10-2019 ஆம் நாள் நடைபெறுகிறது.*
அவ்விழாவில் நான கலந்து கொண்டு அருள் சொற்பொழிவு செய்கிறேன்

மலேசிய நாட்டு மக்களுக்காக விழாவில் இந்நூல் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டு சன்மார்க்க சங்கங்களுக்காகவும். சன்மார்க்க அன்பரகளுக்காகவும் மேலும் 1000 பிரதிகள் வெளியிட உள்ளோம் .தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்.அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
தொடர்புக்கு
9865939898.

வியாழன், 19 செப்டம்பர், 2019

சொல்லாமல் வருவது மரணம் !


தெரிந்து வருவது பிறப்பு !
தெரியாமல் வருவது மரணம் !

ஒவ்வொரு ஆன்மாவும் தான் வாழ்வதற்கு தனக்கு என்று .உடம்பு என்னும் ஒரு வீடுகட்டிக்கொண்டு வீட்டோடு வெளியே வருகின்றது. பின் இவ்வுலகில் வாழ்கிறது.

வீட்டோடு வந்த ஆன்மா.வீட்டை பாதுகாக்க தெரியாமல் வீட்டைவிட்டு சென்று விடுகின்றது.வீட்டை விட்டு பிரிந்துவிட்ட பிறகு உயிர் இல்லாத உடம்பைப் பார்த்து உறவினர்கள்.சுற்றத்தார்கள்.நண்பர்கள்.யாவரும்
குய்யோ .முறையோ.அய்யோ என்று அடித்துக்கொள்கிறார்கள்.மாண்டு மாண்டு அழுதாலும் மாண்டார் வருவதில்லை என்று தெரிந்தும் கதறுகிறார்கள்..

இதற்கு வள்ளலார் சொல்லும் பாடல் !


உடம்பை விட்டு உயிர் பிரியாத வாழ்க்கை உள்ளது என்பது தெரியாமல் .இந்த மக்கள் இப்படி அழுகிறார்களே என்று .நமக்காக மிகவும் வேதனைப்படுகின்றார் வள்ளலார்.

பிணி.மூப்பு.மரணம் வராமல் வாழும் வாழ்க்கையைக் கற்றுத்தரவே சிறப்பான சுத்த சன்மார்க்க கொள்கையை தோற்றுவித்துள்ளேன்.வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார் 

மரணத்தை வெல்லும்.  *சாகாக்கல்வி கற்றுத்தர அழைக்கின்றார்*

அடுத்தப் பிறப்பில் பார்த்துக் கொள்ளலாம் என நினைந்து ஏமாந்து போய்விடாதீர்கள்.இந்த பிறப்பிலே மரணத்தை வெல்ல முடியும் என்கிறார்.

தான் வாழ்ந்த உடம்பு என்னும் வீட்டை காப்பாற்றத் தெரியாமல். பாதுகாக்கத் தெரியாமல் பழுது பார்க்கத் தெரியாமல்.மாற்றம் அடையசெய்யாமல் வாழ்வதால் மீண்டும் இந்த வீட்டில் வாழ்வதற்கு வாய்ப்பில்லை.தகுதியில்லை என்று தெரிந்தவுடன்.*ஆன்மா*வேறு ஒரு புதிய வீட்டைத் தேர்வு செய்து. பின் அந்த வீட்டிற்கு போய் குடித்தனம  செய்ய ஆரம்பித்துவிடுகிறது.

ஆன்மா இவ்வுலகிற்கு வந்ததிலிருந்து. தான் வாழ்வதற்கு வீட்டை மாற்றிக் கொண்டே உள்ளது.ஒவ்வொரு வீட்டிற்கும் மாறுகின்றபோது முன்பு இருந்த வீட்டின் ஞாபகம் வருவதில்லை.

நிலையான வீட்டை மாற்றிக் கொண்டால் மட்டுமே நினைப்பு மறைப்பு.பிறப்பு இறப்பு அற்றுப்போகும்.

*ஆன்மாவிற்கு ஞாபக மறைதி அதிகம்*

ஆன்மாவிற்கு நினைப்பு.மறைப்பு வந்துகொண்டே இருப்பதிற்கு காரணம்.தன்னை அனுப்பியவர் இயக்குபவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது தெரியாமல் வாழ்வதும்.அவரிடம் இருந்து அழியாத அருள் பெறும் தகுதி இல்லாமல் வாழ்வதால் நினைப்பு மறைப்பு மரணம் வந்து கொண்டே உள்ளது.

தன் கரணங்களும்.இந்திரியங்களுமே முக்கியமானது என நினைந்து உலக போகங்களில் வாழ்வதால் ஆன்ம அறிவு விளக்கத்தை இழந்து விடுகின்றது. அதனால் நினைப்பு மறைப்பு உண்டாகிறது.

மேலும் ஆன்மாவானது. பொய்யான புறத்தில் வைக்கப்பட்டுள்ள  ஜட தத்துவங்களை கடவுளாக நினைந்து வணங்கி வழிப்பட்டுக் கொண்டு இருப்பதால்.நினைப்பு.மறைப்பு உண்டாகி.உடம்பை விட்டு உயிரும்.ஆன்மாவும் பிரிந்து விடுகின்றது..

அதுவே பிறப்பு இறப்புகளுக்கு காரண காரியமாகி விடுகின்றது.

*நினைப்பு மறைப்பு அற்றால் மரணம் நீங்கும் என்பார்* வள்ளலார்

மனித பிறப்பு கிடைக்க 84 லட்சம் யோனிபேதங்களை கடந்து.எல்லாப்பிறப்பும் எடுத்து.அனைத்து பிறப்பையும் தாண்டி ஆன்மா இந்த மனித தேகத்திற்கு வந்துள்ளது.அதனால்தான் மனிதப்பிறப்பிற்கு உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்று சொல்லப்படுகின்து.

பிறப்பதும் வாழ்வதும் தெரிகிறது.

ஆனாலும் எதிர்பாராது திடீர் என எதாவது ஒரு காரணத்தால் மரணம் வந்து விடுகின்றது. எந்த வயதில்.எந்த நேரத்தில் எந்த கோணத்தில்.எந்த இடத்தில் வரும் என்றே தெரிவதில்லை.

நாம் சம்பாதித்த பொருட்களைக் கொண்டு எவ்வளவு செலவு செய்தாலும் மரணத்தை வெல்ல முடிவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.தெரிந்தும் தவறே செய்து  கொண்டுள்ளோம்.

உடம்பையும் உயிரையும் காப்பாற்ற நேர் வழி ஏதும் தெரியவில்லை. நம் முன்னாடி வாழ்ந்த ஆன்மிக அருளாளர்களும் வழிகாட்டிகளும் உண்மைத் தெரியாமல் உளறிக் கொண்டுள்ளார்கள்.நாமும் நம்பிக் கொண்டே உள்ளோம்.

வள்ளலார் தெளிவான சுத்த சன்மார்க்க ஒழுகக நெறி கொள்கைகளைச் சொல்லியும் .அதன்படி வாழ்ந்தும் மக்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

வள்ளலார் பாடல் !


புன்செய் நிலத்திற்கு கூட உதவாத .மேடு பள்ளமாக உள்ள.பாழடைந்த  கரடுமுரடான மலைக் காட்டை மரம் செடி போன்றவைகளை வெட்டி அகற்றி.மேடு பள்ளங்களை சமம்படுத்தி.என்றும் வற்றாத தண்ணீர் வசதி செய்து.அதை வெளியேற்ற.மோட்டார் போன்ற மின்அமைப்புக்களை அமைத்து அழகான நன்செய் நிலமாக மாற்றியபின் அங்கே என்ன பயரிடனும்.நெல்.வாழை.தென்னை.கரும்பு போன்ற நன்செய் பயிர்களை வைத்து உற்பத்தி செய்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்படி அறிவுள்ளவன் செய்வான்.

ஆனால் அந்த இடத்தில் கடுகுபோன்ற விஷப்பயிர்களை வளர்த்து யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் செய்வது விடுகிறான்.அவன் அவ்வளவு பாடுபட்டு பயன் அறியாமல்.பயன்இல்லாமல் தன் உழைப்பை வீண்விரயம் செய்து விடுகிறான்.

அந்த அறிவில்லாதவன் செயல்போல்.!

நமக்கு அளவு கடந்த துற்குண பிறவிகள் கொடுத்து இறுதியில் உயர்ந்த அறிவுள்ள பிறவி கொடுத்துள்ளார் நமது அருட் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

நமக்கு உயர்ந்த அறிவுள்ள பிறவி கிடைத்தும் நம் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற முடியாமல்.பொருள் என்னும் விஷத்தை உண்டு மாண்டு கொண்டுள்ளோம்.

மரணத்தை வெல்ல ஈடுகட்ட தெரியவில்லை.

எதைவைத்து ஈடுகட்டுவது ? 

பொருள் உணவை குறைத்து. அருள் உணவை பெறுவதே ஈடுகட்டுவதாகும்.கொடுக்க வேண்டியதை கொடுத்து.தடுக்க வேண்டியதை தடுக்கக் கற்றுக் கொள்வதே சாகாக்கலை என்பதாகும்.

நாம் பொருள் உணவு உட்கொள்ளுகின்ற வரை மரணம் வந்தே தீரும்.

வள்ளலார் பாடல் !



மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.சோற்றாசை உள்ளவரை எமன் என்னும் கூற்றுவன் துணிந்து வந்து கொண்டுபோய்விடுவான்.எச்சரிக்கை மணி ஒலிக்காமல் கொண்டுபோய் விடுவான்..

சன்மார்க்கத்தை பின் பற்றும் அன்பர்கள் மாமிச உணவை நிறுத்திவிட்டால் போதும் மரணத்தை வென்றுவிடலாம் என நினைப்பது அறியாமையாகும்.எந்த உணவு உட்கொண்டாலும் மரணம் வந்தே தீரும்.

மாமிச உணவு என்பது விகார உணவு.அதாவது துர்நாற்றமுள்ள அசுத்த உணவு அவைகளை உட்கொள்வது  தவறுதான்.ஆனால் அதுவே முடிவல்ல.எந்த உணவை உட்கொண்டாலும் மரணம் வந்துவிடும்.

*உணவு மாற்றம் தேவை !*

உணவை மாற்றுவதற்கும் கொஞ்சம் கொஞ்சமாக பழகுவதற்கும்தான்.புழுக்காத உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். உணவு மாற்றம் இல்லாமல் அருள் பெருவதற்கு வாய்ப்பே இல்லை.

அவைகள்தான்.நாட்டுச்சர்க்கரை.கற்கண்டு.தேன்.அயச்செந்தூரம்.தாமரைபஸ்பம்.போன்றஉணவு வகைகளாகும்.இவைகள் புழுக்காத உணவாகும்..புழுக்காத உணவு என்றால் மலம் வராத உணவாகும்.மற்ற உணவுகள் யாவும் புழுக்கின்ற மலம் வரும் உணவாகும்.

மலம்.சிறுநீர்.வியர்வை. பீளை.குறும்உடலில் .எச்சில்.போன்ற துர்நாற்றம் உள்ள கழிவுகள் உடலில் உள்ளவரை அருள் கிடைக்காது.அருள் சுரக்காது.

ஒவ்வொருவருக்கும் கருணை நன்முயற்சி வேண்டும் என்கிறார் வள்ளலார்.

உணவு உட்கொள்பவர்களுக்கு முழுமையான அன்பு.தயவு.கருணை நன்முயறசி வரவே வராது...(ஏகதேசம் வரும்.கிடைக்கும்).அருள் பெறுவதற்கு முடியவே முடியாது.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையும் அறிவு பூர்வமாக விளங்காது.

கருணை ததும்பி அகமும் புறமும் அருள்  நிறைய வேண்டுமானால்.. வள்ளலார்போல் உணவு உட்கொள்ளாமல்.தன் ஜீவகாருண்ய பணியை இடைவிடாம் செய்து கொண்டு.அருட்பெருஞ்ஜோதியே கதி என்று இருக்க வேண்டும். .அதற்கு உணவு இல்லாமல் உயிர் உடம்பை பாதுகாக்கும் பழக்கதிறகு கொண்டுவர வேண்டும்..

சாப்பிட்டாலும் மரணம்.சாப்பிடாத விட்டாலும் மரணம்..எவற்றை எல்லாம் ஈடுகட்ட வேணுமோ அவற்றை எல்லாம் ஈடு கட்ட பழக வேண்டும்.

சன்மார்க்கிகள் சாப்பாடு போட்டால் போதும் மரணத்தை வென்றுவிடலாம் என்று நினைப்பதும் அறியாமையாகும்.

பசித்தவர்களுக்கு உணவு அளித்து நாம் சாப்பிடாமல் இருப்பதே ஜீவகாருண்யம். நம் ஜீவனைக் காப்பாற்ற. மற்ற ஜீவனைக் காப்பாற்றுவதே ஜீவகாருண்யம்.

நாம் மற்றவர்களுக்கு பசியைப் போக்கினால் நம்பசியை இறைவன் போக்குவார் என்ற உணர்வை வரவைத்துக் கொள்வதே ஜீவகாருண்யம்.

*வள்ளலார் வடலூரில் தருமச்சாலை துவக்கினார்.ஒருநாளும் தருமச்சாலையில் அவர் உணவு உட்கொள்ளவில்லை*.

*உலகத்தில் உணவு உட்கொள்ளாமல். பூரண அருளைப்பெற்றவர் வள்ளலார் ஒருவரே*

மற்ற ஞானிகள் எல்லாம் ஏகதேச அருளைப்பெற்றவர்களே ! *நான் சொல்லவில்லை வள்ளலாரே சொல்லுகின்றார்*.

பாடல்.!



உண்ணுவதும். உறங்குவதும்.விழிப்பதும் இறத்தல்.பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் மறங்குலவு ஆன்ம அணுக்கள் பலர் .அவர்கள் செய்த சிறிய சிறிய விரதத்தால்.மதத்தலமை.பதத்தலைமை வாய்த்தனர்.அதனால் அவர்களை வணங்குவதாலோ.வழிபடுவதாலோ ஒரு பயனும் இல்லை என்கிறார்.

நான் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் புகழ்பாடி இருக்கின்றேன் என்கிறார்.

எனவேதான் பசித்திரு.தனித்திரு.விழித்திரு என்கிறார் வள்ளலார்.

உண்மையாக இறைவனை நினைத்தால் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லும் என்கிறார் வள்ளலார்.

எனவே பிறப்பு தெரிந்தே வருகின்றது. மரணம் என்னும் இறப்பு தெரியாமல்.சொல்லாமல் வந்துவிடுகின்றது.சன்மார்க்கிகள் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உலகியல் வாழ்க்கையில் நாம் அனுபவித்த பொருட்கள்தான் கடன். வாங்கிய கடனை ஈடுகட்ட தெரிந்து கொள்ளவேண்டும். திருப்பித் தந்துவிட வேண்டும்.

திருப்பித்தருவதே புற ஜீவகாருண்யம்.என்பதாகும்.
எல்லாவற்றையும் ஈடுகட்டினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்

மரணத்தை வெல்லுவதே மனித வாழ்க்கை என்பதை அறிந்து.புரிந்து.தெரிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

வள்ளலார் பாடல் ! 



நமக்கு வரும் மரணத்தைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை.நமக்காக வள்ளலார் கவலைப்பட்டு அழைக்கின்றார்.

சன்மார்க்கிகளே மெய்ப்பொருளை உணர்ந்து செயல்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.கடமையாகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

உள் ஒளியே உண்மைக்கடவுள் !

உள் ஒளியே உண்மைக் கடவுள் !

உலகை படைத்த இறைவன் உயிர்களைப் படைத்த இறைவனை ! உண்மையான இறைவனை.
இந்த உலகத்திற்கு  வரவைத்தவர் வள்ளல்பெருமான்

*அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்*.

அவர்தான் எல்லா உலகத்தையும்.எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள்களையும் படைத்தவர்.அவரே உண்மையான தெய்வமாகும்.

அவர்தான் தாயாகவும் தந்தையாகவும் தாங்கிக் கொண்டு எல்லா உயிர்களையும்  காப்பாற்றிக் கொண்டும் உள்ள தெய்வம்.

வள்ளலார் பாடல் !

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!

தாயாகவும்.
தந்தையாகவும் என்றால் .உபகாரத் தாய் தந்தை என்பவர்களின் ஆன்ம சிற்றணுவாக  இயங்கிக் கொண்டும் தாங்கிக் கொண்டும்.இயக்கிக் கொண்டும்  இருப்பவரே அருட்பெருஞ்ஜோதி என்னும் உள் ஒளியாகும்.

அவர்தான் ஆன்மாவின் உள்ளே அருள் ஒளியாக இருக்கின்றார்.

அந்த அருள் ஒளி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டுள்ளது.

மனித உடம்பில் சிறப்பிடம் பெற்று சிரநடுவில் ஆன்மாவின் அறிவு விளங்கும் விதமாக இருக்கின்றது. எனவேதான். உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாக போற்றப்படுகின்றது.

சிரநடுவில் ஆன்மா அங்கு இயங்குவதால் அதற்கு சிற்சபை என்றுபெயர்.

சிற்சபையில் உள்ள ஆன்மாவை நாம் இடைவிடாது தொடர்பு கொள்வதே வழிபாடாகும்.

ஆரம்பத்தில் சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியாது என்பதால். புறத்திலே ஒளிவழிபாடு செய்யச் சொல்லி உள்ளார் வள்ளலார்.

புறத்தில் உள்ள விளக்கு ஜோதி கடவுள் அல்ல..
ஆனாலும் புறத்தில் உள்ள  இருளைப்போக்கும் தன்மை உடையது.

புற உருவ வழிபாடு இருளைப்  போக்காது.அந்த உருவத்தைப் பார்ப்பதற்கும் ஒளிதான் காட்டப்படுகின்றது.

எனவேதான் உருவ வழிப்பாட்டை விட ஒளிவழிபாடு சிறந்த்து.

நம் உடம்பில்.வீட்டில் உள்ள தீவினை என்னும் இருளைப்போக்க ஒளிவழிபாடு மிகவும் சிறந்ததாகும்.

நாம் ஒவ்வொருவரும் உண்மையான இறைவனை வணங்கி  வழிபாடு செய்யவேண்டும்.

நம்முடைய சிர நடுவில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

நாம் ஒவ்வொருவரும் வீட்டில் ''ஒளி என்ற தீபத்தை'' வைத்து வணங்குகங்கள் வழிபடுங்கள் இறைவன் உங்கள் வீட்டிற்கும் உங்களுக்கும்  *பாது காப்பு வளையமாக* இருந்து காப்பாற்றுவார் .

உங்களின் துன்பங்கள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்துவிடும்.

உங்கள் துன்பம் தொலைந்து இன்பம் பெருகும் .இருள் விலகி, ஒளி வீசும்.எல்லா நன்மைகளும் தேடிவரும்.

நீங்கள் புறத்தில் வணங்கி வழிபாடு செய்து கொண்டு இருக்கும் தெய்வங்கள் அனைத்தும் கற்பனைத் தெய்வம் என்றும்.தத்துவ விளக்கம் என்றும்  புரிந்து.தெரிந்து.
அறிந்து கொண்டாலே உண்மை தானே விளங்கும்.

உண்மை எது ? பொய் எது ? என்பதை தெரிந்து கொள்ளவே மனிதனுக்கு உயர்ந்த அறிவு விளக்கம் தரப்பட்டுள்ளன.

எல்லா தெய்வங்களையும் படைத்தவர்களே ! உண்மையான.. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தேடிக் கொண்டும். அலைந்து கொண்டும் தான் உள்ளார்கள்.

அந்த இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இவ்வுலகிற்கு வரவைத்தவரே !  நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன் கலந்து எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்துகொண்டும் உள்ளார்.

அவரை யார் யார் விசுவாசமாக நினைக்கின்றார்களோ அங்கே காரியப்படுவார் என்பது சத்தியம்.

எனவே நீங்கள் நேரடியாக இறைவனைக் காண முடியாது .

எனவே உங்கள் வீட்டில்.
அலுவலகங்களில் ஒளியை வைத்து வழிபாடு செய்யுங்கள்,

எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி !
என்பார் வள்ளல்பெருமான்.

அதே நேரத்தில் ஜீவகாருண்யம் ரொம்ப முக்கியம்.நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானதாகும்..

மேலும் உயிர்க்கொலை செய்யாமலும்.புலால் உண்ணாமல் இருந்தால்.உங்களை இறைவன் உடனே ஆட்கொள்வார்.

உண்மை உணர்ந்து நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 16 செப்டம்பர், 2019

மனதை மாற்ற வேண்டும் !

*மனதை மாற்றினால் இன்பம்பெறலாம்!

நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்.

மனிதனுக்கு மனம் உள்ளதால் மனிதன் என்ற பெயர் வழங்கப்பட்டது..

மனிதப் பிறப்பு எடுத்த நாம் மனத்தின் உணர்வுகளுக்குத் தகுந்தாற் போல்தான் இந்த உலகியல் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

*இறைவன் படைப்பு ரொம்ப விசித்திரமானது..*

நம் உடம்பில் நான்கு பிரிவுகளாக பிரித்து நான்கும் ஒன்றோடு ஒன்று இணைந்து செய்பட்டுக் கொண்டுள்ளன.

அவைகள் யாதெனில்..

அகம்.அகப்புறம்.புறம்.
புறப்புறம் என்னும் நான்கு வட்டங்களாகும். நான்கு பிரிவுகளாகும்.

நான்கும் தனித்தனியாக இயங்கிக் கொண்டுள்ளது.
ஆனாலும் இணைக்கப்பட்டுள்ளது.

1.அகம் என்பது நம் தலைப்பாகத்தில்  புருவ மத்தியில் உள்ள வெற்று  இடத்திற்கு அகம் என்று பெயர்  அங்குதான் ஆன்மா என்னும் உள் ஒளி எந்த தொடர்பும் இல்லாமல் இயங்கும் இடமாகும்.(அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு மட்டும் உள்ளது). அது ஒரு புள்ளி வடிவமாக இருக்கும்.அதன் சக்தி. ஆற்றல் கோடி சூரிய பிரகாசம் உடையது.

2. அகப்புறம் என்பது உள் ஒளிக்கு வெளியே உள்ளதால் அதற்கு அகப்புறம் என்று பெயர். அந்த வட்டத்தில் தான்  உயிர் ஒளி என்னும் ஜீவன் இயங்கும் இடமாகும்..

3. புறம் என்பது...ஆன்ம ஒளிக்கும்.ஜீவ ஒளிக்கும் வெளியில் உள்ளதால் புறம் என்று பெயர்..அங்குதான்
கரணங்கள் என்னும் மனம்.புத்தி.சித்தம்.அகங்காரம்.உள்ளம் என்னும் ஐந்து சூட்சும கருவிகள் இருக்கும் இடமாகும். இதுவும் ஒளித்தன்மை உடையதுதான்.

4.புறப்புறம் என்பது புறத்தில் இருக்கும் கரணங்களுக்கு அடுத்து இருக்கும் இடமாகும்..அங்குதான் கண்.காது.மூக்கு.வாய்.மெய் போன்ற கருவிகளான இந்திரியங்களை இயக்கும் சூட்சும கருவிகள் இருக்கும் இடமாகும்...

மேலே கண்ட நான்கு பாகங்களின் மூலமாகத்தான் மனித உடம்பு இயங்கிக் கொண்டுள்ளன.

அண்டத்தில் உள்ளது அக்கினி.சூரியன்.
சந்திரன். நட்சத்திரங்கள்.
அதேபோல் பிண்டத்தில் ஆன்மா.ஜீவன்.கரணங்கள்.இந்திரியங்கள் உள்ளது.எல்லாமே ஒளித்தன்மை உடையது.

அதாவது
*ஆன்மா என்பது அக்கினி போன்றது.*

*ஜீவன் என்பது சூரியனைப் போன்றது*.

*கரணங்கள் என்பது சந்திரனைப் போன்றது*.

*இந்திரியங்கள் என்பது நட்சத்திரங்கள் போன்றது*.

என்னும் நான்கு விதமான. உண்மை ஒளித் தனைமையை தெரியப்படுத்துகின்றார்

இறைவன் படைப்பில் உலக வாழ்க்கை வாழ்வதற்காக புறம் புறப்புறக் கருவிகளான கரணங்கள்.இந்திரியங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. புறத்தில் வாழ்வதற்கு அழியும் பொருளான மண். பொன்.பெண் தேவைப்படுகிறது.. இவற்றைத்தான் மனித மனம் விரும்புகிறது.

அவற்றைப் பெறுவதற்கு மனித  *மனம் * தான் முதல் கருவியாக இருக்கிறது... அதற்குத் துணையாக புத்தி.சித்தம்.
அகங்காரம்.உள்ளம் என்னும் கருவிகளும் மேலும் புறப்புற கருவிகளான கண்.காது.மூக்கு.வாய்.உடம்பு போன்ற இந்திரியங்களும்..உடம்பில் உள்ள தத்துவ உருப்புக்களும் துணை புரிகின்றன..

*மனத்தால் தான் மரணம்
வருகின்றது !*

மனித மனமானது உலகியல் வாழ்க்கை யில் மிகவும் அதிக ஈடுபாடு கொண்டது.

இந்த உலக வாழ்க்கை அழியும் வாழ்க்கை என்றும்.

இது நிரந்தரம் இல்லாதது என்பதை அறியாது மனம் போன போக்கில் சென்று கொண்டு உள்ளது...

*எனவே தான் மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்றார்கள் சான்றோர்கள்*

*புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் மாற்றினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்*

மனத்தை மாற்றத் தெரியாமல் மனத்தை அடக்க முயற்சி செய்தார்கள் சான்றோர்கள்.
எல்லோரும் தோல்வியே கண்டார்கள்.

புறவழிப்பாட்டு முறைகள் தவறானது !

நம்மைப் படைத்த இறைவனை அறிந்து.தெரிந்து கொண்டு அருளைப் பெற்று இறைவனோடு சேர்ந்து விடலாம் என்பதற்காக ஆலய வழிப்பாட்டு முறைகளையும்.தவம்.
தியானம்.யோகம் போன்ற வழிமுறைகளை எல்லாம் பல ஆன்மீக அருளாளர்கள்  வெளிமுகத்தில் காட்டி அமைத்து வைத்துள்ளார்கள்.
சன்மார்க்கிகளும் அதே பாணியில் சென்று கொண்டுள்ளார்கள்

அதனால் உண்மையான இறைவனையும் காணமுடியவில்லை.
மனதை அடக்க முடியவில்லை. முழுமையான அருளைப் பெறவும் முடியாமல் இறந்து இறந்து.பிறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்.

இக்கால கட்டத்தில் தான் மக்களுக்கு உண்மையை உணர்த்த உணரவைக்க.வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கிறார்...

வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை பின்பார்ப்போம்.

இந்திரிய.கரண.ஜீவ.
ஆன்மாவைப்பற்றி வள்ளலார் என்ன சொல்லுகிறார் என்பதை மேலே உள்ளபடி அகம்.அகப்புறம். புறம்.புறப்புறம் என்னும் அடுக்கு முறையில் தெரியப் படுத்தி உள்ளார்...

உலக வாழ்க்கை வாழ்ந்து அழிந்து போகும் மனிதர்களை அழியாமல்  காக்கும் அருள் வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான  வழி முறைகளைச் சொல்லித் தருகிறார் வள்ளலார்..

வள்ளலார் பாடல் !

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன் அன்றி பகைவன் என நினையாதீர்  உலகில்

கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர்
கரணம் எல்லாம் கலங்கவரும் மரணமும் சம்மதமோ

சற்றும் இதை சம்மதியாது என் *மனம்தான்* உமது
*தன்மனம்* தான் *கன்மனமோ* *வன்மனமோ* அறியேன்

இற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடு சேர்ந்திடுமின்
என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் தானே !

என்னும் பாடலிலே தெளிவாக விளக்குகின்றார்...

மரணம் வருவதற்கு அடிப்படை காரணமே *மனம்* தான் என்பதை வள்ளலார்  தெளிவான விளத்தைத் தருகிறார்.

*பொருளைத்தேடும் மனைத்தை அருளைத்தேடும் வழிக்கு மாற்றுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்*.

மனம் இரண்டு வகையாக உள்ளது..ஒன்று உள் உள்ள ஆழ்மனம்.ஒன்று புறத்தில் உள்ள வெளிமனம் என்பதாகும்..

புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும் என்பது தான்  வள்ளலார் சொல்லும் வழியாகும்

மனத்தை எக்காரணத்தைக் கொண்டும்  அடக்க முடியாது.வேறு பாதைக்கு மாற்றமுடியும்.

எனவேதான் மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் என்ற புதிய பாதையைக் காட்டுகின்றார்... இதற்கு கரண ஒழுக்கம்  என்று பெயர் வைக்கின்றார்.

ஒழுக்கத்தை நான்கு வகையாக பிரிக்கின்றார் ..

இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்  என நான்கு வகை ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

இதில் முக்கியமானது இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்கின்ற இரண்டு ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் ஜீவ ஒழுக்கம். ஆன்ம ஒழுக்கம் தானே கைகூடும்.

*மனம். தானே சிற்சபை பக்கம் செல்லாது* அதற்கு அன்பு.தயவு.கருணை என்னும் உணர்வு.நெகிழ்ச்சி.மகிழ்ச்சி வந்தால் தான் சிற்சபை பக்கம் மனம் செல்லும்...மனம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கரணங்களும்.
இந்திரியங்களும் சென்றுவிடும்.என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்பு.தயவு.கருணை பெற வேண்டுமானால்.உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் .அந்த  உபகாரத்திற்குப் பெயர் தான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

ஜீவர்களுக்கு உண்டாகும்  பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை.போன்ற துன்பங்கள் உண்டாகின்றன. இவற்றை நீக்குவதே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே  அன்பும். அறிவும் தானே விளங்கும்.அதனால் உபகாரசக்தி தோன்றும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்கிறார் வள்ளலார்..

உபகார சக்தியால்  மனம் மகிழ்ச்சி பெற்று மாற்றம் அடையும்.

இப்போது மனம் என்னவாகும் என்பதைக் கவனிப்போம்.

வெளியில் செல்லும் மனமானது..ஜீவகாருண்ய வல்லபத்தால் வெளி உலக இன்பத்தை வெறுத்து.ஆன்ம இன்ப லாபத்தை பெறுவதற்கு மனம் தயாராகிவிடும்.

ஆன்ம இன்ப லாபத்தினால் இந்திரிய இன்பம்.கரண இன்பம்.ஜீவன் என்ற உயிர் இன்பம்.ஆன்ம இன்பம்.தனித்த அறிவு இன்பம்.சத்திய பேரின்பம்.முத்தி இன்பம் அதற்கு மேலான மெய்பொருள் இன்பம்.

அதற்கும் மேலான நிரந்தர அதிசய இன்பம்.ஞான சித்தி பெரும்போக நாட்டரசின் இன்பம் .மேலும் என்றும் அழியாத இயற்கை இன்பம் யாவும். அருள் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கிடைக்கும் இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் ! பதி விளக்கம் என்ற பகுதியில் பதிவு செய்துள்ளார் !

இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பமும் உயிர் இன்பமுமாகித்

தடம்பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்தியப் பேரின்பம் முத்தி இன்பமுமாய் அதன்மேல்

நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் இன்பமுமாய்த்

திடம் பெற வோங்கிய இயற்கைத் தனியின்ப மயமாம் திருச்சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

மேலே கண்ட பாடலில் நாம் பெரும் இன்பங்கள் யாவும் வழங்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

இந்த இன்பங்களை மனம் பற்றிக் கொண்டால் மட்டுமே. மனம் வெளி உலக அழியும் இன்பத்தை விட்டு அழியா இன்பத்தைப் பற்றிக் கொள்ளும்.

நம் ஒவ்வொருவரும்  மனத்தை சிற்சபையில் உள்ள ஆன்மாவிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

மனத்தை மாற்றுவதற்கு தெரிந்தவர் எவரோ அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெற முடியும்.

வள்ளலார் மனதை மாற்றிய வழியைச் சொல்லுகிறார்...!

மனம் எனுமோர் பேய்க் குரங்கு மடப்பயலே நீதான்
மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்

இனமுற என்சொல் வழியே யிருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி யேற்றிலை யானாலோ

தினையளவும் உன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகஞ்
சிரிக்க உனை யடக்கிடுவேன் திருவருளாற் கணத்தே

நனவில் எனை நினையாயோ யாரென இங்கு இருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே !

என்னும் பாடலில் ஞானசபை தலைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டதால் நல்லபிள்ளை என்ற பெயர் பட்டமும் பெற்றுக் கொண்டேன் என்கிறார்..நாமும் மனத்தை மாற்றி நல்லபிள்ளை என்ற பெயரைப் பெற்றுக் கொள்ளலாம்..

அடுத்த பாடல் !

விரிந்த மனம் எனுஞ் சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்து விரிந்து அலையாதே மெலியாதே விடயம்

புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறி வாய்ப்
புரையாதே விரையாதே புகுந்து வயங்காதே

தெரிந்து தெளிந்து தொருநிலையில் சித்திரம் போல் இரு நீ
சிறிது அசைந்தாலும் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்

பரிந்தெனை நீ யாரென்று பார்த்தாய் சிற்சபை வாழ்
பதிதனக்கே அருட்பட்டம் பலித்த பிள்ளை நானே !

மேலே கண்ட பாடலில் மனத்தை அடக்கி ஆளும் வல்லபத்தை தெரிவிக்கிறார் வள்ளலார்.

வெளியே செல்லும் மனத்தை சிற்சபையில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வைப்பதே *சத்விசாரம்* என்பதாகும்.

மனம் புற பொருள் மகிழ்ச்சியை விட்டு.அகத்தில் உள்ள அருள் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

எனவே அன்பர்களே  மனத்தை அகத்தில்  மாற்றினால் மட்டுமே இறைவன் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

ஜீவகாருண்யத்தால் இந்திரியங்களை கட்டுபடுத்துவது எளிய வழியாகும்.

சத்விசாரத்தால் மனம் முதலான கரணங்களை திசைமாற்றம் செய்வதே சத்விசாரம் என்னும் எளிய வழியாகும்.

ஜீவகாருண்யம் ! சத்விசாரம்!  செய்ய தடையாக இருப்பது சாதி.சமய.மதம் போன்ற பொய்யான பிரிவினைக் கொள்கைகளாகும்.

அவற்றை மனம் பற்றாமல் .ஆன்மா இருக்கும் இடமான சிற்சபையை பற்றுவதே சிற்றம்பலப் பற்றாகும்.

பற்றிய பற்று அனைத்தையும் பற்று அற விட்டு அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே என்பார் வள்ளலார்.

மனதை மாற்றி மனிதனாக வாழ்ந்து இறை அருளைப் பெற்று வாழ்வதே சாகாக்கல்வி என்பதாகும்.

சாகும் கல்வியான சாதி.சமய.மதக் கல்வியை கற்காமல் .வள்ளலார் காட்டிய சாகாக்கல்வியை கற்று தேர்வில் வெற்றிப் பெற்று மரணத்தை வெல்வோம்.

மனதை மாற்றுவோம் மரணத்தை வெல்வோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 12 செப்டம்பர், 2019

நேரடி ஒலி ஒளி பரப்பியது !


நேரடி ஒலி ஒளி பரப்பியது !

வள்ளல்பெருமான் தருமச்சாலையில் தங்கி இருக்கும் காலங்களில் சிதம்பரத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சன திருவிழாவிற்கு .அன்பர்களை தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம்.

வள்ளலார் சிதம்பரம் செல்வதை நிறுத்திக் கொள்கிறார்.

அந்த வருட விழாவிற்கு சில அன்பர்கள் சிதம்பரம் சென்றுவிட்டார்கள்.வள்ளலார் உடன் போகலாம் என இருந்தவர்கள.வள்ளலார் நெடுநேரமாகியும் போகாமல் இருப்பதால்.போகமுடியவில்லையே என்று ஏக்கத்தில் இருந்தார்கள்.

அவர்களின் உள்ளத்தை அறிந்துகொண்ட வள்ளலார்.தருமச்சாலை சுவற்றில் வெள்ளைத் துணியைக்கட்டி தொங்கவிடச்சொன்னார்.
எல்லோரையும் முன்பு அமரச்சொன்னார் அமரந்தார்கள்.

அந்த திரையில் சிதம்பரத்தில் நடந்தகொண்டு இருந்த விழாநிகழ்ச்சிகளை. நேரடி ஒலி  ஒளிப்பரப்பு செய்வதுபோல் அன்று காட்டினார்.

அந்த நிகழ்ச்சியை கண்ட மக்கள் ஆச்சரியத்தில் மனமகிழ்ந்து அதிசயித்துபோனார்கள்.

தன் உடம்பையே அணுக்கதிர்களாக மாற்றி. சார்ட்லைட்டாக மாற்றி சிதம்பரவிழாவின் நிகழ்ச்சிகளை மக்களுக்கு காட்டும் அளவிற்கு வள்ளலார் உடம்பு அருள் உடம்பாக மாற்றம் அடைந்துள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுத்தபிரணவ ஞானதேகத்திற்கு இருக்கும் இடத்திலிருந்தே எல்லாவற்றையும் காணும் அருள் ஆற்றல் உண்டு. இயக்கும் ஆற்றல் உண்டு.மற்றவர்களுக்கு காட்டும் உண்டு.நினைத்த மாத்தில் எல்லாம் செயல்படுத்த முடியும்.

அருள்பெறின் ஒரு சிறு துரும்பும் ஐந்தொழில் புரியும் என்பார் வள்ளலார்



எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ 
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ. 

647 கோடி சித்துக்களை கைவரப்பெற்றவர் வள்ளலார்

வள்ளலாரின் அருள் அற்புதங்கள் அளவிடமுடியாது.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

அட்சய பாத்திரமாக மாறியது !

அட்சய பாத்திரமாக மாறிய அற்புதம் !

ஒருநாள் இரவு தருமச்சாலையில் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.மீதம்உள்ள சாதம் மூன்றுநபர் மட்டும் சாப்பிடலாம்.எல்லோரும் ஓய்வு எடுக்க சென்று விட்டார்கள்.

தீடீர்என்று 100 நபர்கள் உணவு சாப்பிட வந்துவிட்டார்கள்.தருமச்சாலை நிர்வாகி வள்ளல்பெருமான் இடம் சொல்ல.

எல்லோரையும் அமரவைத்து இலைபோடுங்கள் நான்வருகிறேன் என்று சொல்ல .அவர்சொல்லியபடி அமரவைத்து இலைபோட்டார்கள்.

வள்ளலார் மீதமுள்ள உணவின் பாத்திரத்தை எடுத்து அவர்கையாலே பரிமாறினார்.அனைவரும் வயிறாற உணவு உட்கொண்டார்கள்.

அந்த தட்டில் உள்ள உணவு குறையாமல் அப்படியே இருந்த்தைப் பார்த்து தருமச்சாலையில் உள்ள அன்பர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்..

வள்ளலார் இங்கு நடந்த்தை வெளியில் சொல்ல வேண்டாம் என கட்டளையிட்டார்.அன்பர்கள் மூலமாக வெளியே கசிந்துவிட்டது...வள்ளலின் தயவான அன்புகரங்கள் அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாக மாற்றியது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்செயலே என்று போற்றி புகழ்கின்றார்..

எனக்குள்நீயும் உனக்குள்நானும் இருக்கும் தனமையே
இன்று காட்டிக்கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மையே
தனக்குள்ளது தன்தலைவர்க் குளதென் ற்றிஞர் சொல்வதே
சரியென் றெண்ணி எனதுமனது வெல்வதே.

எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்தமோ !

அருட்பெருஞ்ஜோதி...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 11 செப்டம்பர், 2019

வள்ளலார் சரித்திரக் குறிப்பு !

வள்ளலார் சரித்திரக் குறிப்பு !

இயற்பெயர்... இராமலிங்கம்.

சிறப்புப் பெயர்... திருஅருட்பிரகாசவள்ளலார்.

பிறப்பு..5-10-1823.சுபானு வருடம் புரட்டாசிமாதம் 21 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை.
அவர் பிறந்த நாளை உலக ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

மனித உடம்புடன் தோன்றியகாலம்
1823..1874 வரை.

பிறந்தஊர்...மருதூர்.சிதம்பரவட்டம்.கடலூர்மாவட்டம்.வடலூரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர்.

பெற்றோர்...இராமய்யா உபகாரதந்தை.
சின்னம்மை உபகாரத்தாய்.

உடன் பிறந்தவர்கள்...சபாபதி.பரசுராமன்.உண்ணாமுலை.சுத்தரம்பாள்.

மனைவி...தனக்கோடி அம்மையார்.

வாழ்ந்த இடங்கள்..சென்னை 1823--1855
கருங்குழி...1856--1868
வடலூர்...1869-1870
மேட்டுக்குப்பம்.. 1870-1874 சித்தி பெற்ற இடம்.

வெளியிட்ட நூல்கள்...ஒழிவிலொடுக்கம்.
தொண்டமண்டலசதகம்.
தின்மய தீபிகை.

இயற்றியநூல்கள்...மனுமுறைகண்ட வாசகம்
ஜீவகாருண்ய ஒழுக்கம்.

அருளிய நூல்கள்...திருவருட்பா ஐந்து திருமுறைகள் பக்தி சம்பந்தமுடையது.

திருவருட்பா ஆறாம் திருமுறை... சமயம் கடந்த அருள் ததும்பும் ஞானப்பாடல்கள்.

நிறுவிய நிறுவனங்கள்...
 சமரச வேத சன்மார்க்கசங்கம்...1865
சத்திய தருமச்சாலை..1867.
சத்திய ஞானசபை...1872
சமரச சுத்த சன்மார்க்க சத்தியசங்கம்..1872
சித்திவளாகம்..1874

வள்ளலார் இறைவனால் பெற்ற பேறுகள்..

இறைவனால் வருவிக்க உற்றவர்.

இறைவனால் நல்லபிள்ளை என பட்டம் பெற்றவர்.

அடி.நடு.முடி காட்டப்பெற்றது.சூட்டப்பட்டது.

முடிவான ஞானத்தில் ஞானம் பெற்றது.

கர்மசித்தி.யோகசித்தி.ஞானசித்தி பெற்றது.

பொன் செய்யும் ஆற்றல் பெற்றது.

ஐந்தொழில் ஆற்றல் பெற்றது.

இறைவனால் மணிமுடி சூட்டப்பட்டது.

இறை செங்கோல் அளிக்கப்பெற்றது.

இறைவனால் கங்கனம் அணிவிக்கப்பட்டது.

இறைவனால் ஆழி அளிக்கப்பட்டது.

அம்பலத்தரசை அளிக்கப்பெற்றது.

நரை.திரை.பிணி.மூப்பு.மரணம் அனுகாது மரணம்இல்லாப் பெருவாழ்வு பெற்றது.

தம் உடம்பை மண்ணுக்கோ.நீருக்கோ.நெருப்புக்கோ.காற்றுக்கோ.ஆகாயத்திற்கோ இறையாகாமல் உடம்பை ஒளிமயமாய் மாற்றிகொண்டு இறைவனோடு கலந்த்து.

அற்புதங்கள் ...647 கோடி சித்திகளையும் முழுமையாக கைவரப்பெற்றது.

அருள்வாழ்க்கை...
கருவிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டது.

வழிபடுகடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

வழிபடுகுரு...கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!.

வழிபடுநூல்..திருவருட்பா.

கொள்கைகள். ...

பள்ளிக்கு செல்லாமல் பாடம் கற்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் அனைத்தும் கற்றது .

சமய மத தெய்வங்களைப் பற்றி ஐந்து திருமுறைகள் பாடியதும் இறைவன் சொல்லியே பாடியது...நடித்ததும் இறைவன் சொல்லியே நடித்தேன்.

பாடல்...

படித்தேன் பொய் உலகிய நூல் எந்தாய்
படிப்பித்தாய் அன்றியும் அப்படிப்பில் இச்சை
ஒடித்தேன் நான்ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின்
உன்னடியே துணைஎன நான் உறுதியாகப்
பிடித்தேன் மற்றதுவும் நீ பிடிப்பித்தாய் இப்
பேதையேன் நின்னருளைப் பெற்றோர்
போல்
நடித்தேன் எம்பெருமான் ஈதொன்றும் நானே
நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ்!


இறுதியாக இறைவன் அருளைப்பெற்று இறைவன் சொல்ல எழுதியநூல் ஆறாம்திருமுறையாகும்.

பாடல்...

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான் உரைத்த மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான்
வரவெதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம்பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்து என்உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏன்உரைத்தேன் இறக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்ணர்
யான் அடையும் சுகத்தை நீர்தான் அடைதல் குறித்தே !

  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்கவுற்ற வள்ளலார் இறைவன் ஆணைப்படி வாழ்ந்து.அருள்பெற்று மரணத்தை வென்று். மனித குலத்திற்கு வாழும் வழிக்காட்டிஉள்ளார்.

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு ! 

வள்ளலார் கொள்கைகளை *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* என்னும்  இந்நூலை படித்து தெரிந்து கொள்ளவும்.

அருட்பெருஞ்ஜோதி

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

வாழ்க்கை வாழ்வதற்கு !

*வாழ்க்கை வாழ்வதற்கே !*

எல்லோரும் படிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

எல்லோரும் பேசத் தெரிந்து இருக்கின்றார்கள் !

பணம் சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள்.!

பொருள்களை  சம்பாதிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

பட்டம் பதவியை சம்பாதிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

புகழை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !.

காதல் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

திருமணம் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள் !.

குடும்பம் நடத்த தெரிந்து இருக்கின்றார்கள் !

குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

அழகு அழகுவாய்  வீடு கட்டத் தெரிந்து இருக்கின்றார்கள்,!

விதவிதமாய் கார்கள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.

பணத்தை மறைத்து வைக்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

விதவிதமாய் நகைகள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

வித விதமாய் துணிமணிகள் வாங்க தெரிந்துள்ளோம்.

மெய்யான உடம்பிற்கு பொய்யான அலங்காரம் செய்ய பழகி இருக்கோம்  !

வெளி நாடுகளைச் சுற்றிப் பார்க்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

அறிவியலைத் தெரிந்து இருக்கின்றார்கள் !

விஞ்ஞானத்தை தெரிந்து இருக்கின்றார்கள் !

சண்டை போட தெரிந்திருக்கிறார்கள் !

உயிர்களை கொலை செய்ய தெரிந்திருக்கிறார்கள் !

புலால் உண்ணத் தெரிந்திருக்கிறார்கள் !

பொய்யான கோயிலுக்குப் போக தெரிந்துள்ளோம் !

அபிஷேகம் ஆராதனைகள் போன்ற பொய்யான வழிபாடு செய்யத் தெரிந்துள்ளோம் !

மற்றைய எல்லாம் தெரிந்து
இருக்கின்றார்கள் !.

தன் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற மட்டும் தெரிந்து கொள்ளவில்லை.

எப்போதும் அழிவில்லாத துன்பம்.துயரம்.அச்சம் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ தெரிந்து கொள்ளவில்லை !.

உண்மையான ஆன்மீகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவில்லை !

தன் ஆன்மாவைப் பற்றியும்.தன்உயிரைப்பற்றியும்  தெரிந்துகொள்ளவில்லை !

உண்மையான கடவுள் யார் ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

மரணம் ஏன் ? வருகிறது .அவற்றை தடுக்கும் வழி என்ன? என்பதை தெரிந்து கொள்ளவில்லை !

நம்முடைய வாழ்க்கையின் ரகசியம் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

நாம் எங்கு இருந்து வந்தோம் ?  ,மீண்டும் எங்கு செல்ல வேண்டும் ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

இறைவனிடம் அருளைப் பெரும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை!.

அருளைக் கொடுப்பவர் யார் ?  என்பதை தெரிந்து கொள்ளவில்லை !.

அருள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

நரை,திரை,மூப்பு ,பயம் ,மரணம் இல்லாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!

மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!

மரணம் இல்லாமல் வாழலாம் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வையத்தீர் வான் அகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !

வாழ்க்கை என்பது என்ன ? எப்படி வாழ வேண்டும் என்ற எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால்.

தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் வடலூர்  ஞான சித்திபுரம் என்னும்  இடத்தில் தோற்றுவிக்கப் பட்டுள்ள.*சத்திய ஞானசபைக்கு* வந்தால் தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்.அங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உலக உயிர்களுக்கு அருள் வழங்கிக்கொண்டுள்ளார்.என்பது உண்மையாகும்.

வள்ளலார் காட்டும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கைகளைப் படித்து தெரிந்து பின்பற்றி வாழ்ந்தால். மரணம் அடையாமல் மகிழ்ச்சி யுடன் வாழும் வழியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் புரியவைப்பார்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு !

எனவேதான் வருவார்கள் அழைத்து வாருங்கள் வடலூர் வடதிசைக்கே.வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்று உலக மாந்தர்களை அன்புடன்.தயவுடன்.கருணையுடன்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 7 செப்டம்பர், 2019

வள்ளலார் இறுதியாக சொல்லியது !

வள்ளல்பெருமான் இறுதியாக சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட கட்டளை!

வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில்.ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் 1873 ஆண்டு இறுதியாக சொல்லியது.

வள்ளலார் தங்கியிருந்த மேட்டுக்குப்பம் சித்திவளாக திருவறையில். தான் வழிபாடு செய்து கொண்டிருந்த திருவிளக்கை. திருமாளிகைப் புறத்தில் வைத்து.இதை தடைபடாது ஆராதியுங்கள்.இந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன் இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால்.உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல்.

நினைந்து நினைந்து  என்னும்  தொடக்கமுடைய ஞானசரியை 28 பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி தெய்வபாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன்.இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள்.

இவற்றிற்கு ஆதாரமான பாடல் !


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

அடுத்து 30-1-1874 ஸ்ரீமுக வருடம் தைமாதம் 19 ஆம் நாள் வெளிப்படுத்தியது. நான் பத்துப் பதினைந்து நாள்  உங்களுடன் இருக்கப்போகிறேன்.இனிமேல் என்னைப் பார்க்க முடியாது .உள்ளே செல்லப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் .யாருக்கும் தோன்றாது வேறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார் என்று சொல்லிவிட்டு.

ஆயிரக்கணக்கான அன்பர்கள் முன்னிலையில்.சித்திவளாக திருமாளிகையின் உள்ளே சென்று .வெளியே தாளிட்டுக்கொள்ள சொல்லிவிடுகிறார்.திருவறையின்   உள்ளே சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதியாக மாற்றம் அடைந்து விடுகிறார்..இதுவே கடவுள் நிலைஅறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

இவற்றிற்கு ஆதாரமான பாடல்களை இறுதியாக பதிவு செய்து வைத்துள்ளார்.

சத்திய அறிவிப்பு பாடல்கள் !


  • 1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
    ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை 
    மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் 
    விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் 
    துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் 
    சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க 
    வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே 
    மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. 
  • 2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற 
    தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் 
    இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க 
    இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற 
    மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி 
    மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே 
    கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே 
    களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே. 
  • 3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் 
    சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் 
    இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் 
    இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் 
    சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் 
    தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் 
    செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் 
    திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே. 
  • 4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் 
    இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் 
    பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது 
    பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் 
    தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
    சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே 
    மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே 
    வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே !

  • மேலே கண்ட பால்களின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை ஆட்கொண்டு கலந்து கொள்வதற்காக.இன்று அவர் தங்கி இருந்த அறையில் வந்து அமர்ந்து காத்திருக்கின்றார் என்று நிகழ்காலத்தைக் குறிப்பிட்டு சொல்கின்றார்..
  • வள்ளலார் திருஅறைக்குள் சென்றதும் ஆண்டவருடன் கலந்து கொள்கிறார் என்பதற்கு ஆதாரமான பாடல்களே மேலே பதிவு செய்துள்ள பாடல்களாகும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்லி வள்ளலார் பதிவு செய்த பாடல்களாகும்.
  • வள்ளலார் ஆண்டவருடன் கலந்து கொண்டு மரணத்தை வென்று சித்தி பெற்றதால் சித்திவளாக திருமாளிகை என்று பெயர் வழங்கப்பட்டது.அதுவே மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகை என்பதாகும்.
  • அருட்பெருஞ்ஜோதி !

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மனித உடம்பின் அவசியம் !

மனித உடம்பின் அவசியம் !

மனித உடம்பை இயக்குவது ஜீவன் என்னும் உயிர் ! உயிரை இயக்குவது ஆன்மா என்னும் உள்ஒளி !ஆன்மாவை இயக்குவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் பேரோளி !

உலகில் வாழ்வதற்கு ஆன்மாவை அனுப்பி வைத்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். ஆன்மாக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு உயிரும் உடம்பும் தேவைப்படுகின்றது.

உடம்பு என்னும் வீடு கட்டுவதற்கு ஏழு வித அணுக்களான வாலணு.திரவவணு.குருஅணு.
லகுஅணு.அணு.பரமாணு.விபுவணு.
தேவைப்படுகிறது.அணுக்களை இணைப்பதற்கு.நீர்.நிலம்.அக்கினி.
காற்று.ஆகாயம் என்னும்  பஞ்சபூத அணுக்கதிர்கள் தேவைப்படுகின்றது.

இவைகளை இயக்க.நிர்வாகம் செய்ய மாயை.மாமாயை.பெருமாயை என்னும்  இயற்கை விளக்கம் கொண்ட அருள் அணு ஆற்றல் தேவைப்படுகின்றது.

இவைகள் எல்லாம் உள்ளடக்கியதுதான் இந்த பஞ்சபூத உலகம் என்பதாகும்.

இந்த உலகத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்ததின்  நோக்கம்.ஆன்மாக்கள் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டதாகும்.

இந்த உலகம் முழுவதும் பலவகையான அணுக்கூட்டங்கள் நிறைந்துள்ளன.ஒவ்வொரு அணுக்களுக்கும் ஒவ்வொரு தனித்தனமை உண்டு.

இந்த அணுக்கூட்டங்களில் பொது ஸ்தானங்கள் பத்து.அவை மண்.ஜலம்.அக்கினி.காற்று.வெளி.
பிரகிருதி.மாயை.சூரியன்.சந்திரன்.நட்த்திரங்கள் ஆக பத்து இடங்களாகும்.

இந்த பத்து பொது ஸ்தானங்களில் காரண காரிய அணுக்களால்.ஆன்மாவிற்கு.உயிர்.
உடம்பு கட்டிக் கொடுக்கப்படுகிறது.

பூத ஆகாயத்தில்.இருக்கும் சாதாரண.அசாதரண அணுக்கள் ஏழுவகையும் ஒன்றுசேர்ந்தால் உயிர் உடம்பு கட்டிக்கொள்ளும்.

 ஆன்மாக்கள் இவ்வுலகில் வந்து வாழ்வதற்கு.தாவரம்.ஊர்வன.பறப்பன.நடப்பன.தேவர்.அசுர்ர்.மனிதர் போன்ற எழுவகையான பிறப்பும். 84 லட்சம்  யோனிபேதங்களும் எடுக்க.பிறப்பும் இறப்பும் உடம்பும் உயிரும் சேர்ந்து வாழ்வதற்கு.மாற்றி மாற்றி ஒவ்வொரு தேகமும் கட்டிக்கொடுக்கப்படுகிறது.

இறுதியாக கிடைப்பதுதான் மனித்தேகம் (உடம்பு).மனிதவாழ்க்கையாகும்.

இந்த மனித தேகத்திற்கு மட்டுமே உயர்ந்த அறிவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதவாழ்க்கையில் நாம் பெற வேண்டியது .மீண்டும் பிறப்பு அல்ல.
இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவு கொடுக்கப் பட்டுள்ளது.

நித்திய தேகமாக மாற்றிக் கொள்வதற்கு நம்மை அணுப்பிய உண்மைக்கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே மனித ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்பு செய்து.அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்.

பலவேறு கற்பனைகளாற்.பலவேறு சமயங்களிலும்.மதங்களிலும்.பலவேறு மார்க்கங்களிலும்.பலவேறு லடசியங்களைக் கொண்டு.நெடுங்காலம்.பிறந்து பிறந்து.அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவுமின்றி.விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்.துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண்போயினோம் வீண் போகின்றோம்.

ஆதலால்  இனிமேலும் வீண்போகாமல்  ஜீவர்களாகிய நாம் மற்ற ஜீவர்களிடத்தில் உண்மை அறிவு.உண்மை அன்பு.உண்மை இரக்கம் முதலிய நற்செய்கை உடையவர்களாய் வாழ்ந்தால்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மீது தனிப்பெருங்கருணை கொண்டு.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்.அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளை விலக்கி அருளை வாரி வாரி வழங்குவார்.

நாம் மனித்தேகம் கிடைத்த பலனை அனுபவித்து.சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் பெற்று.இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றி.என்றும் அழியாத.அழிக்க்க முடியாத மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து நம் தந்தையின் வீடான அருட்பெருவெளி என்னும் மேல்வீட்டு கோட்டையின் சாவியைப் பெற்று கதவைத் திறந்து உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இதுவே மனிதவாழ்க்கையின் ரகசியமாகும்.அவசியமாகும்.

வள்ளலார் பாடல் !


மேலே கண்ட பாடலில் உடம்பு வந்தவகையும்.உயிர்வந்த வகையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

நம் ஆன்ம ஒளியை அனுப்பிய. எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து.அறிந்து தொடர்பு கொண்டு வள்ளலார்  அருள்பூரணத்தைப் பெற்று மரணத்தை வென்றார்.

நாமும் வள்ளலார்போல் தெரிந்து அறிந்து. அவர்காட்டிய பாதையிலே தடம்மாறாமல் சென்று வாழ்ந்து மரணத்தை வெல்வோம் மகிழ்ச்சி யுடன் வாழ்வோம்..

குறுக்கு வழியில் செல்வோம் எனநினைத்தால் மரணம் நிச்சயம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 5 செப்டம்பர், 2019

மரணத்தை வெல்லமுடியுமா ? முடியும் !

மரணத்தை வெல்ல முடியுமா ? முடியும் !

சன்மார்க்கத்தை சார்ந்த அன்பர்கள்.சங்கம் வைத்து நடத்துபவர்கள்.
சன்மார்க்கத் துறவிகள் என்று வாழ்பவர்கள். மரணத்தை வெல்ல முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது.
வள்ளலார்போல் வாழ்வதற்கு முயற்சி செய்தால் முடியும்

காரணம் !

அருள் என்பது சாதாரண பொருள் அல்ல.அவை அளவில் அடங்காத ஒளித்தன்மை உடையது.

ஆன்மாவே  கோடி சூரிய பிரகாசம் உடையது.அதைவிட பலகோடி பிரகாசம் உடையது அருள்..

அவற்றைத் தாங்கிக்கொள்ளவும். ஏற்றுக்கொள்ளவும்  நம் உடம்பு மாற்றம் அடைந்திருக்க வேண்டும்.

அதற்குத்தான்.அபர ஜீவகாருண்யம்.பர ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பயிற்சி முறைகளை கடைபிடிக்க. வள்ளலார் வகுத்து தந்து உள்ளார்.

நாம் எந்த பயிற்சி முறையும் கடைபிடிக்காமல் மரணத்தை வென்று விடலாம் என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்..

நாம் இடைவிடாது உணவு வழங்குவதாலும்.
திருஅருட்பா பாராயணம் செய்வதாலும் மரணத்தை வெல்ல முடியாது.ஆன்ம நெகிழ்ச்சி.ஆன்ம உருக்கம்.ஆன்ம மகிழ்ச்சி அடையவேண்டும்.

வள்ளலார் எவற்றை எல்லாம் விடச்சொன்னாரோ அவற்றை எல்லாம் விட்டு விட்டோமா என்றால். எதையும் விடாமல் பிடித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளோம்.எந்தவழியில் அருள் கிடைக்கும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மை ஏற்றுக் கொள்வாரா என்றால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். நாம் கருணையே வடிவமாக மாற வேண்டும்.கருணையே வடிவமானால்தான் ஆன்ம மகிழ்ச்சி உண்டாகும்.ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்ச்சி அடைந்து ஆன்ம கதவைத் திறப்பார்.

இல்லையேல் வள்ளலாரின் முதல் மாணாக்கர் வேலாயுதம் போல் மனித தரத்தில் வாழலாம்.அருள் பெற முடியாது .அருள் பெறும் தகுதிக்கு உடம்பை பாதுகாக்க வேண்டும்.
அருள்பெறும் தகுதியைப்பற்றி வள்ளலாரே சொல்லுகின்றார்.

நரை.திரை.பிணி.மூப்பு.பயம் இல்லாமல் வாழுகின்ற உடம்பிற்கு அருள் பெறும் வாய்ப்பு
உள்ளது என்கிறார் வள்ளலார்.

நம்மிடத்தில் உண்மை அறிவு.உண்மை அன்பு.உண்மை இரக்கம் இருக்கிறதா என்பதை நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்து கொள்ள வேண்டும்.

அற்பத்தனமான சாதி.சமய.மதக் கொள்கைகளைத்தான் அதிகமாக பின்பற்றி வருகிறோம். சுத்த சன்மார்க்கம் என்று திருஅருட்பாவைப் படித்துவிட்டு பேசுகிறோம்.
விதண்டாவாதம் செய்கிறோம்.
கடைபிடிப்போர் ஒருவரும் இல்லை என்றே தோன்றுகிறது.

வள்ளலார் சொல்லுகிறார் !

ஓடாது மாயையை நாடாது நன்னெறி
ஊடாது இரு என்றீர் வாரீர்
வாடாது இரு என்றீர   வாரீர். என்றும்

கடவுளைக் காண உண்மையாக விரும்பினால்.அழுத கண்ணீர் மாறுமா ? ஆகாரத்தில் இச்சை செல்லுமா ? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

தன்னை வெளியே காட்டாது ஒழிக்க வேண்டும் என்கிறார்.

இகபர காமங்களை விரும்பாமல் இருத்தல் வேண்டும் என்கிறார்.

தங்களைப் பார்க்க வேண்டுமானால் என்னைப் பாருங்கள்.

என்னைப் பார்க்க வேண்டுமானால் தங்களைப் பாருங்கள்.

தங்களைப் பார்த்தால் .என்னைப் பார்ப்பீர்கள்.

என்னைப் பார்த்தால் தங்களைப் பார்ப்பீர்கள் என்கிறார்.

நாம் எவற்றைப் பார்த்துக் கொண்டுள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

உள்ளும் புறமும் ஓர் துணையாக அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை  வள்ளல் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு என்ன என்னவோ செய்து கொண்டுள்ளோம்.

நம் உடம்பை காபாற்ற நிறைய வழிமுறைகள் சொல்லியும்.நாம் காற்றில் பறக்கவிட்டு நம் விருப்பம்போல் செய்வதால் எந்தபயனும் இல்லை.

நம் பூத உடம்பை. ஆன்ம உடம்பாகிய ஒளி உடம்பாக மாற வேண்டும் .மாற்ற வேண்டும்.மாற்றினால்தான் இறைவன் அருளை வழங்குவார்.அருளைப் பாதுகாக்க முடியும்..

நம் உடம்பில் உள்ள பெரிய ஒன்பது துவாரங்களும்.உடம்பில் உள்ள அணு துகள் முடி துவாரங்களும் அடைக்கப்பட வேண்டும்.
அதற்குத்தான் தேகமாற்றம் என்கிறார் வள்ளலார்.

அசுத்த பூதகாரிய தேகமானது.முதலில் சுத்த பூதகாரிய தேகமாக மாற்றம் அடையவேண்டும்.அதற்குத்தான் இந்திரிய.கரண ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.

நாம் இந்திரிய.கரண ஒழுக்கத்தையே கடைபிடிப்பதில்லை.
எவ்வாறு சுத்ததேகமாக மாற்றம் அடையும்.

சுத்த தேகமாக மாற்றினால்தான்.
திரைகள் விலகி. ஆன்மாவில்   இருந்து முதல் அமுதம் சுரக்கும் அவை நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போல் இருக்கும் என்கிறார்.அவற்றை தக்கவைத்துக் கொண்டால்தான்.
இரண்டாவது அமுதம் சுரக்கும்.அவற்றையும் தக்க வைத்துக் கொண்டால் தான்.

அடுத்து சுத்த தேகமானது பிரணவ தேகமாக மாற்றம் அடையும்..

பிரணவ தேகத்தில் மேலும் இரண்டு அமுத்தாரைகள் வெளிப்பட்டு தக்க வைத்துக் கொண்டால்தான்.
மூன்றாவது ஞான தேகத்திற்குண்டான ஐந்தாவது அமுதம் சுரக்கும்.அதற்கு மவுனாஅமுதம் என்று பெயர். இறைவன் கருணையால் மட்டுமே ஐந்தாவது அமுதம் வழங்கப்படும்....

இந்த ஐந்து அமுதத்தையும்.பூரணமாக உண்டவர்கள்தான் மரணத்தை வெல்லமுடியும்.

இந்த ஐந்து அமுதத்தையும் பெற்றவர்கள் சுத்த பிரணவ ஞானதேகிகள் என்று பெயர்.பேரின்ப வாழ்க்கை வாழ தகுதிப் பெற்றவர்களாவார்கள்

அமுதம் உட்கொள்ளும் போது தேகமாற்றம் எவ்வாறு உண்டாகும் என்பதை திருஅகவலில் தெளிவாக தெரிவித்துள்ளார்.

725.தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட

726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட

731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே

741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை யன்பே

742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே

744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே

746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை யன்பே !

மேலே கண்ட அகவலில் சொல்லிய வண்ணம் .அருள் பெற்றால் உடம்பு எவ்வாறு மாற்றம் அடையும் என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார்.

நாம் அந்த தகுதியைப் பெறுவதற்கு எவ்வாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே திருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்து காட்டியுள்ளார். வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழமுடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

வடலூர் ரமேஷ்!

🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 *🙏🌺வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கமா ?அல்லது உண்மை கடவுள் இயற்கை விளக்கமா ?🌺🙏*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🔥👏

வடலூர் சத்திய ஞான சபை திருக்கோயிலில் உண்மையிலேயே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருமை திருநடனம் புரிகின்றார்களா ? அல்லது வள்ளல் பெருமான் தமது அகத்தில் கண்ட சத்திய ஞான சபை அகஅனுபவத்தை தத்துவமாக விளக்குவதற்காக வடலூரில் சபையை கட்டினார்களா என்பது பலருக்கும்,

குறிப்பாக நமது சன்மார்க்க சங்கத்துக்குரிய சில அன்பர்களே ஞான சபை என்பது வள்ளல் பெருமான் அகத்தில் கண்ட அனுபவ விளக்கமே அன்றி வேறில்லை ஆகலில்,
 வடலூர் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை என்று தாங்களும் சன்மார்க்கத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதுமட்டுமன்றி மற்றவர்களுக்கும் இதே கருத்தை வழங்கிய வண்ணம் இருக்கின்றார்கள் அவர்களுக்காகவும்,

 மற்றும் புதியதாக சன்மார்க்கத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கும் இளைய  தலைமுறைகளுக்கும் சன்மார்க்கத்தில் தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நமது பெருமானே அருட்பாவிலும் உரைநடையிலும் கொடுத்துள்ள சில விளக்கங்களை கொண்டே இங்கு நாம் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக இந்த பதிவை இங்கே திருவருள் சம்மதத்துடன் பதிவு செய்கின்றேன். 🌺👏

தயவுகூர்ந்து அன்பர்கள் சுத்த சன்மார்க்க தெளிவுபெறவேண்டும் என்பதற்காகவும் நாம் பெற்றுக் கொண்டால்தான் எதிர்கால சந்ததிகளுக்கு நம்மால் சன்மார்க்கம் பற்றிய தெளிவை அவர்களுக்கு கொடுக்க இயலும் என்பதற்காகவும்  இங்கு தங்கள் அனைவருடன் இந்த பதிவை நான் பகிர்ந்து கொள்கின்றேன்🌻🌺👏

முதலில் திருவருட்பா உரைநடை பகுதியிலிருந்து இதற்குரிய ஆதாரத்தை காண்போம்.
 *பக்கம் 548 தலைப்பு சத்திய ஞானசபை விளம்பரம்*
இந்த தலைப்பில் *பக்கம் 549 கடைசி பாராவில்*

பல்வேறு சமயங்களிலும், பல்வேறு மதங்களிலும், பல்வேறு மார்க்கங்களிலும், பலவேறு லட்சியங்களை கொண்டு ஜீவர்கள் நெடும் காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து  வீண் போகின்றார்கள்.

இனி இச்ஜீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,
உண்மைஅறிவு ,
உண்மை அன்பு, உண்மை இரக்கம், முதலிய சுப குணங்களைப்  பெற்று நற்செய்கை உடையவராய் எல்லா சமயங்களுக்கும் ,
எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று,
பெருஞ் சுகத்தையும், பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு,

 *மேற்குறித்த உண்மை கடவுள் தானே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்கள்.*🌻🌸🌹

*அடுத்து பக்கம் 463 பேருபதேசம் என்ற தலைப்பில் , பக்கம் 465 இரண்டாவது பாராவில்*

*தற்போது ஆண்டவர் வரப்போகின்றது சத்தியம்தான், நம்மவர்களின் திரை நீங்க போகின்றதும்  சத்தியம்தான் , நீங்கள் எல்லவரும் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளுகின்றதும் சத்தியம்தான்* என்று பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இப்பூவுலகத்திற்கு வர இருப்பதை சத்தியம் செய்து சொல்வதுடன் நீங்களெல்லாம் அதற்குரிய பக்குவத்தோடும் முயற்சியோடும் ஒழுக்கத்தோடும் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றார்கள்.

ஆண்டவர் வந்தவுடன் நமது பக்குவத்திற்கும் தரத்திற்கும் தக்கவாறு நமது திரைகளை விலக்கி அருள்வார்கள்  என்று பெருமான் கூறுகின்றார்கள்🌺🌹🌸

 *அடுத்து உரைநடை பகுதி பக்கம் 547 சன்மார்க்க பெரும்பதி வருகை என்ற தலைப்பில்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முதன்முதலாக இவ்வுலகத்திற்கு வரஇருப்பதை எப்படி விளக்குகிறார்கள் பாருங்கள்.

முதல் பாரா எட்டாவது வரியில்  ,
 *அடுத்த 29 மாதத்திற்கு மேல் இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன்பு சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்  மூர்த்திகள் கடவுளர் தேவர்                      அடியார்                     யோகி                       ஞானி முதலானவர்களின் ஒருவரும் அல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லா தேவர்களும் எல்லா கடவுளரும் எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வுலகிற்கு முதன்முதலாக வர இருப்பதை பெருமான் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.🌺🌻🌸👏*

 *அடுத்து பக்கம் 577 சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சத்திய விண்ணப்பம் என்ற தலைப்பில்* சன்மார்க்க சங்கத்தின் சார்பில் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றார்கள் .
அந்த விண்ணப்பத்தில் சத்திய ஞான சபையை பற்றி பெருமான் எவ்வாறு விளங்குகின்றார்கள் என்பதை பாருங்கள் .

 *உத்தர ஞான சித்திபுரம் என்றும், உத்தர ஞானசிதம்பரம் என்றும் , திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்க சிறப்பு பெயர்களும் பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புகளும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியினிடத்தே*

 *இயற்கை விளக்கம்  நிறைவாகியுள்ள ஓர்சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவருவை தரித்து, இயற்கை இன்பம் நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்லத் தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம் .*

என்று வடலூர் சத்திய ஞான சபையில் *இயற்கை விளக்கமாகிய* ஆண்டவரது பூரண அருள் நிறைந்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *இயற்கை உண்மை* திருவுருவை தரித்தும் உலகத்து உயிர்கள் எல்லாம் துன்பம் துயரம் நீங்கி இன்பம் அடையும் பொருட்டு *இயற்கை இன்பம்* நிறைவாகி  *சத்து சித்து ஆனந்த சொரூபமாய் ,        மெய் அறிவு ஆனந்த விளக்கத்துடன்* வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து திருநடம் செய்வதை இங்கே பெருமான் தெளிவாக விளக்குகின்றார்கள்🙏🌹

இன்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் சத்திய ஞான சபையில் வந்தமர்ந்து திருநடம் செய்வதற்கான நிறைய விளக்கங்கள் திருவருட்பா உரை நடையில் இருந்த போதும், இத்துடன் உரைநடை பகுதியிலிருந்து கண்ட விளக்கத்தை நிறுத்திக்கொண்டு திருவருட்பா ஆறாம் திருமுறையில் பெருமான் பாடலாக கொடுத்துள்ளவற்றைக் தற்போது காண்போம்.

 *திருவருட்பா ஆறாம் திருமுறை 105 புனித குலம் பெறுமாறு புகலல் என்ற தலைப்பில் ஒன்பதாவது பாடலில்*

 *எனது மெய்ப்பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே செய்அகத்தே வளர்ஞான சித்தி புரம் தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இதுதானே.*

என்று,
 *மெய்ப்பொருளாகிய தனி தந்தை இத்தருணத்தில் செய்அகத்தே என்றால் செய் என்பது செய்யப்பட்ட அல்லது உண்டாக்கப்பட்ட என்றும் அகம் என்பது பூமி என்ற பொருளிலும்  பூமியில் உண்டாக்கப் பட்டுள்ள வளர் ஞானசித்திபுரமாம் வடலூர் சத்தியஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இத்தருணம் இங்கே சித்தாடல் புரிகின்றார்கள் இது சத்தியம் என்றும் மெய்மை என்றும் பெருமான் தெளிவாக கூறுகின்றார்கள்🌻🌺🌹*

 அடுத்து *ஆறாம் திருமுறை பக்கம் 185 திருநட புகழ்ச்சி என்ற தலைப்பில் இரண்டாவது பாடலில்*
 பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே *தோரணமே விளங்கு சித்தி புரத்தினும் என்உளத்தும் சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியே* . என்று கூறுகின்றார்கள்.

  தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் என்றால் அலங்கரிக்கப்பட்ட சித்திபுரத்திலும், எனது உளமாகிய சுத்த அறிவு என்னும் பூரண பொது வெளியாகிய அம்பலத்திலும் சுத்த நடம்புரிகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று பெருமான் பொற்சபை சிற்சபை நடத்தை இங்கே விளக்கி கூறுகின்றார்கள் .🌺🌻🌹
 *அடுத்து ஆறாம் திருமுறை பக்கம் 208 திருப்பள்ளி எழுச்சி என்ற தலைப்பில் பத்தாவது பாடலில்,*

 *அலங்கரிக்கின்றோம் ஓர்திருச்சபை அதிலே அமர்ந்து அருள்ஜோதி கொண்டு அடிச்சிறியோமை வலம்பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் என்று குறிப்பிடுகின்றார்கள்* .

மேலே,
 உரைநடைப் பகுதியில் இந்த உலகவர்களெல்லாம் இதற்கு முன்பு பல்வேறு சமயங்களிலும் மதங்களிலும் மார்க்கங்களிலும் உழன்று இறந்து இறந்து விரைந்து விரைந்து வீண் போயினர் ஆகலில் ,
இனியும் வீண் போகாத வண்ணம் திருவுளச் சம்மதம்கொண்டு சுத்த சன்மார்க்க  பெருநெறி ஒழுக்கம் விளங்கவும் ஜீவர்களெல்லாம்  இறவா நிலையை அடையக்கூடிய  சாகாக் கல்வியை பயின்று  அருள் வாழ்வு வாழ்ந்திட ஒரு சத்திய ஞான சபையை இவ்வுலகில் அமைப்பதற்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆணை இட்டதாக பெருமான் கூறினார்கள்.

அதன்படியே இந்த பாடலில் அலங்கரிக்கின்றோம் ஒரு திருச்சபை அதிலே  அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வந்து அமர்ந்து தன்னையும் இவ்வுலகவர்களையும் இறவாத நிலையில் வாழ்வித்திட வேண்டும் என்று வேண்டுகின்றார்கள் என்பதை கண்டு அறிவோம்🌺🌹🌻

 *அடுத்து திருமுறை  பக்கம் 223 சன்மார்க்க நிலை என்ற தலைப்பில் முதல் பாடலில்*

 *சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொள் அருள்  சத்திவிழா நீடித்து தழைத்து ஓங்க எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகைஉறுக மதத் துள்ளல் ஒழிக தொலைந்து என்று குறிப்பிடுகின்றார்கள்*
 அதாவது உத்தர ஞான சித்திபுரமாம் வடலூர் சத்திய ஞான சபையில் அருள்சக்தி நிறைந்து நாளும் தழைத்து ஓங்கிட ,
எல்லா திசைகளிலிருந்தும் ஜீவர்கள் வந்து தரிசித்து மகிழ்ந்து கொண்டாடவும் இதுவரை இருந்த மதத்துள்ளல்கள் எல்லாம் ஒழிந்து தொலைந்து போகவும் சமரச சன்மார்க்கம் தோன்றியுள்ளது என்று சன்மார்க்க நெறிதனை பெருமான் விளக்குகின்றார்கள்.🌻🌹🌺

 *அடுத்து ஆறாம் திருமுறை பக்கம் 259 உத்தர ஞான சிதம்பர மாலை என்ற தலைப்பில் உள்ள* அனைத்து பாடல்களுமே வடலூர் சத்திய ஞான சபை பெருமைதனை புகழ்கின்ற பாடல்களாகவே அமைந்துள்ளன அதில் குறிப்பாக *ஆறாவது பாடலில் ,*

 *எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது      எல்லா உலகும் செழிக்கவைத்தது இத்தாரணிக்கு அணியாயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே.*
என்று பெருமான் குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது எல்லாவற்றிலும் சிறந்தது தனக்கு அருளை ஈந்தது, எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது, எல்லா உலகமும் செழிக்க வைத்தது ,
 *இந்த பூவுலகத்திற்கு அணிகலன்* போன்று அலங்காரத்துடன் வானவரெல்லாம் வணங்கி தொழுவதற்கு உகந்தது ,
எவ்வுலகில் இறந்தவர்களையும் எழுப்புவது வடலூர் சத்திய ஞானசபையாம்  என்று,

 இந்த பூவுலகிற்கு அணிகலன் போன்று அலங்காரமாய் விளங்கி சித்தாடல் புரிந்து கொண்டிருப்பது வடலூர் சத்தியஞானசபை என்று பெருமான் வடலூர் சத்திய ஞான சபையின் பெருமைதனை விளக்குகின்றார்கள்.🌺🌹🌻

 *உரைநடைப் பகுதியில் பக்கம் 550 ல் சத்திய ஞானசபை பற்றிய விளம்பரம்* ஒன்றை பெருமான்    25 :11 :1872ம் ஆண்டு வெளியிடுகின்றார்கள்.

அதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய ஆணையினால் வடலூரில் சத்திய ஞான சபை நிறுவப்பட்டு அதில் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து சித்திகள் எல்லாம் விளங்க திருவிளையாடல் செய்யயிருப்பதையும் தெரிவித்து ஜுவர்கள் அனைவரையும் இத்தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்க பெறுவீர்களாயில் தாங்கள் அனைவரும் கருதிய கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி ,*
 *இறந்தவர் உயிர்பெற்று எழுதல்,மூப்பினர்  இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களை கண்டு பெருமை அடைவீர்கள்*

என்று
பெருமான் *சத்திய ஞான சபை திருத்தலத்திற்கு அனைவரும் வந்து வந்து தரிசனம் செய்வீர்*
தங்கள் வினைகளைப் போக்கி அருள் பெற்று வாழ்வீர்களாக என்று நம் அனைவரையும் அழைக்கின்றார்கள்.🌻🌹🌺👏

மேற்கண்ட இவ்வளவு விளக்கங்களும் வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி வண்ணமாய் இருந்துகொண்டு பூரண அருள் இயற்கை விளக்கத்துடன் நிறைந்து விளங்கி இவ்வுலகமெல்லாம் இன்பம் அடையும் பொருட்டு ஒருமை திருநடனத்தை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை  வள்ளற்பெருமான் தெளிவாக  திருவருட்பா உரைநடை வாயிலாகவும் ,
 ஆறாம் திருமுறை  வாயிலாகவும் தெளிவுபெற விளக்கியுள்ளார்கள்.

இதற்கும் மேலாக வடலூர் சத்தியஞான சபை என்பது ,
வள்ளல் பெருமான் தனது அகத்தில் கண்ட சத்திய ஞான சபை அனுபவத்தை விளக்குவற்காக  புறத்திலே பாவனையாக அமைத்துள்ளார்கள் என்று கூறுவது அறியாமை என்பதேயாகும்.

அதுமட்டுமல்ல அது சன்மார்க்க விருத்திக்கு தடையாகவும் அமையும் என்பதை தயவுடன் அறிதல் வேண்டும்.

ஆகவே,
 *வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கம் அல்ல இயற்கை  உண்மை  மெய்ப்பொருளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்       இவ்வுலக மெல்லாம் இன்பம் அடையும் பொருட்டே இப்பூவுலகில்       பார்த்திலகமென ( பூமித்தாய்க்கு நெற்றித் திலகமாக) வடலூர் சத்திய ஞான சபையில் இருந்துகொண்டு ஆனந்த ஒருமை திருநடனம் செய்கின்ற  ,          சத்திய ஞான ஆன்மத் திருக்கோயில் என்பதை சத்தியமாக அறிவோம்🌺🌻🌹🙏*
...தயவான நன்றிகள் 🙏
....வள்ளல் மலரடி போற்றி போற்றி 🙏
....பெருமான் துணையில்🙏
.... வள்ளல் அடிமை🙏
...... வடலூர் இரமேஷ்.