செவ்வாய், 24 மே, 2022

தருமச்சாலையின் உண்மை விளக்கம் !

 *தருமச்சாலையின் உண்மை விளக்கம் !*


*வள்ளலார் பாடல்!*


என்பாட்டுக் கெண்ணாதது எண்ணி இசைத்தேன் என் தன் பாட்டைத்ச் சத்தியமாத் தான் புனைந்தான் முன்பாட்டுக்


காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்சாலையிலே வா என்றான் தான்! 


*என்ற பாடலின் உண்மை விளத்தினைத் தெரிந்து கொள்வோம்.*


 *உலக மக்களை திருத்தி உண்மையை போதிப்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்  வள்ளலார்.*


*வள்ளலார் இவ்வுலகிற்கு வந்ததும் மக்களுக்கு உண்மையை போதிக்க வேண்டியது தானே என்று கேட்கலாம்! ஆனால் எடுத்தவுடனே உண்மையை போதிக்கவில்லை போதித்தால் மக்கள் ஏற்றுக். கொள்ள மாட்டார்கள்.*


*ஏன் என்றால்? மக்கள் சாதி சமய மதங்களிலே அளவில்லா பற்று வைத்து பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள்.  அவ்வாறு வாழ்ந்து வருபவர்களிடம் எடுத்தவுடனே உண்மையை எடுத்துச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற சூழலை அறிந்து கொண்ட வள்ளலார் அவர்கள் பின்பற்றிய சாதி சமய மதங்களில் தானும் பின்பற்றுவது போல் எல்லோரையும் நம்ப வைத்து அவர் பின்னாடி மக்கள் சுற்றும் அளவிற்கு வள்ளலார் தன்னுடைய 40 ஆண்டுகளாக சமய மத வாதியாகவே நடித்துக் கொண்டு வந்துள்ளார்.* 


வள்ளலார் பாடல்!


*படித்தேன்பொய் உலகியனூல்* எந்தாய் நீயே

படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை


ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்

உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்


பிடித்தேன் மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்

பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல


*நடித்தேன்* எம் பெருமான் ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ! 


*மேலே கண்ட பாடலில் நடித்தற்கு உண்டான விளக்கம் தருகிறார்*


*மேலும் சமய மதம் சார்ந்த அருளாளர்கள் இயற்றிய பக்தி பாடல்களை விட அதிகமான தத்துவ தெய்வங்களான எல்லா தெய்வங்கள்  பற்றியும். தத்துவ நாயன்மார்கள் பற்றியுமான கருத்துக்களையும் பாடல்களாக எழுதி படைத்து இயற்றி உள்ளார். மக்கள் அப்பாடல்களை இடைவிடாது பாடுவதும் போற்றவும் செய்தனர்*


 *எல்லா ஆலயங்களிலும் வள்ளலார் பாடல்கள் ஒலித்தன.* 


*வள்ளலாரின் மாற்றம்!* 


*வள்ளலார் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  உண்டாக்குகிறார்.*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார்? என்பது சிறுவயதில் இருந்தே வள்ளலாருக்குத் தெரியும்.* வள்ளலாரின் உண்மை உலக மக்களுக்குத் தெரியாது. 


தருமச்சாலை வழியாகத்தான் இறைவனைக் காண வரவேண்டும் என்று வள்ளலாருக்கு ஆணையிடுகிறார்!


ஆணையை ஏற்று 

*1865 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று ஒரு தனி மார்க்கத்தை தோற்றுவிக்கிறார்.*


*ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் புதிய வழியான புதிய மார்க்கத்தை   தோற்றுவிக்க ஆண்டவர் ஆணை பிறப்பிக்கின்றார்.*


*ஜீவர்களுக்கு ஜீவர்களால்  உண்டாகும் துன்பங்களை போக்குவதால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொள்ளமுடியும்  அருளைப் பெற முடியும். எனவே  ஜீவகாருண்யமே சிறந்த வழி என்றும். ஜீவகாருண்ய ஒழுக்கமே சிறந்த ஒழுக்கம் என்றும் மக்களுக்கு தெரிவிக்கவே முதன் முதலில் வடலூரில் 23-05-1867 ஆம் ஆண்டு பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாளில் தருமச்சாலையை நிறுவினார்கள்*


*வள்ளலார் தருமச்சாலையைத் தோற்றுவித்து அங்கே வருகின்ற  ஆதரவு அற்றவர்கள் மற்றும்  ஏழை எளிய மக்களின் பசிப்பிணயைப் இடைவிடாது போக்கிக் கொண்டு்ம் வருகின்றது.* 


*மேலும் பசியோடு வருபவர்கள் யாராக இருந்தாலும் சாதி சமயம் மதம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் பசியைப் போக்கிக் கொண்டு வருவதே   தனிச் சிறப்பு அம்சமாகும்.*  


*மேலும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற ஒரு நூலை தெளிவான விளக்கத்துடன் எழுதி வெளிப் படுத்துகின்றார்*

*அந்த நூலில் கேள்வியும் நானே.பதிலும் நானே என்ற பாவனையில் அவரே கேள்விகேட்டு அவரே பதில் சொல்வது போல் அமைந்து இருக்கும்* 


*கடவுள் வழிபாடு !*


*அதில் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் எழுதியுள்ளார். அதன் உள்அர்த்தம் என்னவென்றால் ஜீவகாருண்யம் செய்யாமல் கடவுளை வழிபாடு செய்பவர்கள் அறிவு விளக்கம் இல்லாதவர்கள் என்பது பொருளாகும்*


*மேலும் ஒரு தெளிவான விளக்கத்தையும் தருகின்றார் வள்ளலார்!*


*ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம்.யோகம்.தவம்.விரதம்.ஜெபம்.தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளுக்குச் சிறிதும் பாத்திரம் ஆகார்கள்.*


*அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது.ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோஜனம் இல்லாத மாயா ஜாலச் செய்கைகளே யாகுமென்று அறிய வேண்டும் என்று தெளிவுப். படுத்துகின்றார்*


*மேலும் அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு.*


*ஜீவகாருண்யம் என்பது ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் அல்லது ஆன்மாக்களின் தயவு*


*ஆதலால் ஒருமைக் கரணமாகிய  சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும்.சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் போல் என்று அறிய வேண்டும் என்ற எளிமையான விளக்கத்தை தெரிவிக்கின்றார்*


*மேலும் ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்றும்*


*ஜீவகாருண்யம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும் .அதனால் உபகாரசத்தி மறையும்.உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும் என்கிறார்*


*மேலும். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பதையும் புதிய கோணத்தில்  தெளிவு படுத்துகிறார்*.


சமய மதவாதிகளின் எதிர்ப்பு ! 


*இந்த உண்மையை வெளிப்படுத்திய காரணத்தினால்.சமய மதங்களின் எதிர்ப்பான கொள்கைகள் என்பதை அறந்துகொண்டு   சமய மதவாதிகள் வள்ளலார் மீது வெறுப்பை காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்.*


*வள்ளலார் எழுதிய அருள் நூலுக்கு  திருஅருட்பா என்ற  பெயரைச் சூட்டினார்கள் அவருடைய அனுக்கத் தொண்டர்கள்.*


அதனால்  *அருட்பா மறுட்பா போராட்டம் மஞ்சகுப்பம் நீதிமன்றம் வரை கொண்டு சென்றார்கள்  இறுதியில் வள்ளலாரே  வெற்றி பெற்றார். அவர் எழுதிய நூலிற்கு திருஅருட்பா என்பதே சரியானதாகும் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வரலாறு  அனைவரும் அறந்ததே தெரிந்ததே.* 


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ! 


*ஆரம்பத்தில் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்றும்.சமரச வேத தருமச்சாலை என்றும் வைத்த பெயரை மாற்றம் செய்கிறார்* 


 *1872 ஆம் ஆண்டு இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வெளிப்படுத்தும் விதமாகவும் ஆண்டவர் வந்து அருள் வழங்கும் இடமாகவும் தேர்வு செய்து.*

 *வடலூர் மக்களிடம் 80 காணி இடம் பெற்று தருமச்சாலைக்கு அருகிலே  சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கின்றார்.*


*ஞானசபை தோற்றுவித்த பிறகு ஞானசபை விளக்கப் பத்திரிகையின் வாயிலாக பெயர் மாற்றம் செய்கின்றார்.*


இன்றுமுதல் *சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்*


*சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்*


*சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும்*  


*பெயர் மாற்றம் செய்து இவ்வுலகிற்கு ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்து புதிய ஆன்மீக பாடதிட்டத்தை கொண்டு வருகிறார்* 


*சாகாதகல்வி!*


*வள்ளலாரின் கொள்கையிலே முதன்மையானது முக்கியமானது சாகாக்கல்வி என்பதாகும். சாகாக்கல்வி கற்று அருளைப்பெற்று மரணத்தை வென்று  வாழ்வதே  சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*

*சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படையானதும் முதன்மையானதும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் ஜீவகாருண்ய ஒழுக்கமாகும் என்பதை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்.*


*25-05-2022 ஆண்டு வைகாசி 11 ஆம் நாள்  தருமச்சாலை தோற்றுவித்து 156 ஆண்டுகள் ஆகிறது. வள்ளலார் ஏற்றிவைத்த தருமச்சாலையின் அடுப்பு அணையா அடுப்பாக  தொடர்ந்து மக்களின் பசிப்பிணியை போக்கிக்கொண்டு வருகிறது.*


*இந்நாளை சன்மார்க்க அன்பர்கள் தருச்சாலை விழாவாக போற்றி மகிழ்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.* 


*சுத்த சன்மார்க்க சங்க கொள்கைகள் !*


1. கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! 


2. அவரை உண்மை அன்பால் வழிபட வேண்டும்!


3. சிறு தெய்வ வழிபாடு கூடாது !


4.தெய்வங்கள் பெயரால் உயிர்பலி கூடாது !


5.புலால் ( மாமிசம் ) உண்ணலாகாது ! 


6. சாதி சமயம் மதம் போன்ற எவ்வித வேறுபாடுகளும் கூடாது ! 


7.எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும்! 


8.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டில் திறவுகோல் ! 


9.புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாது ! 


10.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது ! 


11.கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.


12. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது ! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது ! 


13.எதிலும் பொது நோக்கம் வேண்டும் ! 


*மேலே கண்ட கொள்கைகளை கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கிகள் ஆவார்கள்* 


சுத்த சன்மார்க்கத்திற்கு

அடிப்படையானதும் முதன்மையானதும்  வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த *சமரச சுத்த சன்மார்க்க சத்திய  தருமச்சாலை* என்னும் 

ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்*

 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


 அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

சனி, 14 மே, 2022

சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் !

 *சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் !*


*வள்ளலார் பாடல்!*


புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்

புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட


*சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்*

*சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்*


தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே

தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே


என்மார்க்கத் தெப்படி 

யேனுஞ்செய் கிற்பீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.! 


மேலே கண்ட பாடலில் *சன்மார்க்க சங்கச் சாதுக்கள் காண சத்தியம் சொல்கிறேன்* என்கின்றார் வள்ளலார்.


*இதன் உண்மையை சன்மார்க்கத்தை பின்பற்றும்  நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.* 


*சாதுக்களின் குணம்!*


*அன்பு.தயவு.ஒழுக்கம்.அடக்கம்.இரக்கம்.பொறுமை.வாய்மை.தூயமை.மற்றும் தாய்மை குணம் கொண்டு எல்லவரையும் தம்மவர்களாக பாவிக்கும் உணர்வு கொண்டவர்களாய் இருப்பவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்களாகும்*


*மற்ற உலகியலில் உள்ள  சமயம் மதம் சார்ந்த புன்மார்க்கத்தில் உள்ளவர்கள் போல் உள்ளும் புறத்தும் வேறாகி ( உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள்) சொல்லுபவர்கள் அல்ல சன்மார்க்க சங்க சாதுக்கள். உள்ளதை உள்ளபடி உண்மையை எடுத்து உரைப்பவர்களே சாதுக்கள் என்பவர்களாகும்.*


*சன்மார்க்க சங்க சாதுக்கள் என்றாலே இறைவனை தொடர்பு கொள்ளும் தனித் தகுதியும். உயர்ந்த குணமும்.உயர்ந்த அறிவும் கொண்டவர்கள் என்பதை சத்தியம் வைத்து சொல்லுகிறேன் என்று சன்மார்க்க சங்க சாதுக்களை உயர்ந்த இடத்தில் வைத்து நம்பிக்கையோடு புகழ்ந்து போற்றுகிறார்*


*மேலும் உடல் பொருள் ஆவியை இறைவனிடம் கொடுத்து.பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அறவிட்டு அருள் அம்பலப்பற்றை பற்றி அருள் பெறும் தகுதி உடையவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்களாகும்*


*சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் வள்ளலார் சொல்லியவாறு உயர்ந்த குணம் கொண்ட  சாதுக்களாக உள்ளார்களா? என்பதை ஒவ்வொரு சன்மார்க்கியும் சிந்தித்து  சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்*  


*வடலூர் சத்திய தருமச்சாலை !*


*வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமச்சாலயில் பணி செய்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கின்றார்..*


*வள்ளலார் ஆணைப்படி  ஜீவகாருண்ய பணி செய்து கொண்டு இருப்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கல்பட்டு ஐயா மூலம் தெரிவிக்கச் சொல்லுகிறார்.*


*போத நாச வந்தனம் !*


*பார்வதிபுரம் என்னும் உத்திர ஞான சிதம்பர  சித்திபுரத்தின் கண்ணே பெருந்தலைமைப் பதியாக வீற்றிருந்தருளும் அருட்பெருஞ்ஜோதி யாகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யானெனும் போத நாசம் வந்தனம் செய்த விண்ணப்பம்* 


*எம் இறையவரே ! இது பரியந்தம் யானாகத் தேடியதோர் பொருள் என்பது ஏதும் இல்லை.* 


*ஆகவே தேவரீர் பெருங்கருணையால் என்னை உபகரித்தருளிய உடல்.பொருள்.ஆவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான் எனது என்று கொண்டதோர் சுதந்தரமானது துன்ப இன்ப விளைவுக்கு ஆதாரமாய் இன்றைய வரையில் என்னைப் பற்றி இருந்த ஒன்றையும் யான் பெரும் பொருளாக எண்ணி நின்றனன்*


*ஆதலால் அச் "சமரச சுத்த சன்மார்க்க சங்கத்து சாதுக்கள்" சமூகத்து நிற்கப் பெற்ற விசேடத்தால் அத் தற்சுதந்தரப் பொருளைத் தேவரீர் பெருங்கருணைச் சந்நதி முன்னே அர்ப்பித்தனன்.*


*இனி தேவரீர் அதனை அருள் வசமாக்கி ஏழையாகிய என்னையும் என்னை யடுத்த சுற்றம் என்னோடு பழகிய நட்பினர்களையும் உய்யக் கொண்டு அருளுக.*


இங்கனம் 

அடிமை 

கல்பட்டு இராமலிங்கம்.


*என்று கையொப்பம் இட்டு  வள்ளலார் இடம் கொடுக்கின்றார்.அதேபோல் மற்ற சாதுக்கள் கையொப்பம் இட்டு கொடுத்தார்களா என்பது தெரியவில்லை*


*வள்ளலார்போல் ஆடை அணிந்தால் மட்டும் போதாது அவர்போல் வாழ்ந்து காட்ட வேண்டும்*


*சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்கள் உலகப் பற்றை விட்டு அருள் பற்றை பற்றும் தகுதி உடையவர்களாக இருப்பவர்களே சாதுக்கள் என்பவர்கள்.*


*வள்ளலார் காலத்தில் இருந்து இன்றுவரை வள்ளலார் சொல்லியவாறு சுத்த சன்மார்க்கை கொள்கையை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஒருவரும் கடைபிடிக்கவில்லை என்பதே உண்மையாகும்*


*வள்ளலார் போல் கடைபிடித்து வாழ்ந்து இருந்தால் வள்ளலார் போல் மரணத்தை வென்று இருப்பார்கள்* 


*முதலில் வள்ளலார் சொல்லிய  ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் எனப் பெயர் பெற்றவர்களாவார்கள்.எனவே  தான் சன்மார்க்க சங்க சாதுக்கள் காண சத்தியம் சொல்கிறேன் என்கிறார் வள்ளலார்*.


சத்திய தருமச் சாலையிலும் சித்திவளாகத்திலும் வசிப்பவர்கள் .

வள்ளலார் சொல்லியவாறு கடைபிடிக்காமல் சண்டையிட்டு கொள்கிறார் போலும் 


*சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி !* 25-11-1872.


*ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும்.அவர் பொதுப்பட உலகத்தில் உள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெருபயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக்  காரியப்படுகின்றார் என்றும்*


*அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்வோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்* 


*அன்றியும் கால பேத்ததால் அல்லது மற்றவகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள்  உண்டாயினாலும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்*


*அப்படி யிருத்தல் மேல்விளைவை உண்டு பண்ணாதிருக்கும்.*

*அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும்.அப்படிவைதவர்களையும்அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடுமறுபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.*


*அப்படி மருவதார்களையும் உடனே ஒதிக்கிவிட வேண்டுவது.அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டாத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும்* 


*அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம்.அப்படிப்பட்டவர்களை ஒருபேச்சும் இல்லாமல் இந்த இடம்விட்டு போய்விடத்தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.*

என்று எழுதி கீழே 

*சிதம்பரம் இராமலிங்கம்* என்று கைஎழுத்து போட்டுள்ளார்.


மேலும் வள்ளலார் பதிவு செய்கிறார் !


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*!


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.* 

*இவர்களே சன்மார்க்க சங்க சாதுக்களாவார்கள்*


*அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.*


*உலக வாழ்வை விட்டு அருள் வாழ்க்கை வாழ்பவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்களாகும் அவர்களே மரணத்தை வெல்லும் தகுதி உடையவர்கள்.* *அவர்களையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொண்டு அருள் வழங்குவார்.*


*அவர்களே சன்மா்க்க சங்கங்களை வழிநடத்தும் தகுதி உடையவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்* 


*தமிழகம் மற்றும் எங்கிருந்தாலும் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும்  சாதுக்கள் அனைவரும் ஒன்று கூடி வடலூரில  வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை சபையை  வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல்படுத்த வேண்டும்.*


*வடலூரில் சங்கம் சாலை சபை செயல்படுவதைப் பார்த்துதான் உலகில் உள்ள எல்லா சங்கங்களும் பின்பற்ற வேண்டும்.*


*வடலூரில்  சாதுக்கள்  தங்குவதற்கும்.சன்மார்க்க உணவுமுறை பழக்கத்திற்கும்.*

*சாகாக்கல்வி பயிற்சிக்கும்.சத்விசாரம் செய்வதற்கும் தகுந்த இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்* 


*சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுவதும்  அறிந்து வாழ்க்கையில் கடைபிடிக்கும்  சன்மார்க்க சங்க சாதுக்களையே  சொற்பொழிவு செய்ய அனுப்பி வைக்கப்பட வேண்டும்.* 


*ஒத்த கருத்துடைய சாதுக்களே சாதி சமயம் மதம் சாராத சுத்த சன்மார்க்க கொள்கைகளையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் சத்விசாரத்தையும் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.* 


*நாங்கள் சொல்லும் சாதுக்கள் சாதி சமயம் மதம் சார்ந்த கலப்படம் உள்ள வேஷதாரிகள் அல்ல. சுத்த சன்மார்க்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர்கள்.தயவுடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சன்மார்க்க சங்க சாதுக்களே ஆவார்கள்.*


*இதன் தொடர்ச்சி மீண்டும் தெரிவிக்கிறோம்*

  *சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக!* 


*வள்ளலார் பாடல்!*


எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண

இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - 


*எவ்வுயிரும்

சன்மார்க்க சங்கம்* தனைஅடையச் செய்வித்தே

என்மார்க்கம் காண்பேன் இனி.! 


*இனி சன்மார்க்க உலகமாக மாறுவது மாற்றுவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையாகும்* *அதற்கு தகுந்தவறு சன்மார்க்க சாதுக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 8 மே, 2022

தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

 *தமிழக அரசுக்கு வேண்டுகோள்!*


*மாண்புமிகு உயர்திரு தமிழக முதல்வர் அவர்கள் சமூகத்திற்கு வந்தனம்*


*தி மு க தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு  வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப் போவதாக அறிவித்தமைக்கு சன்மார்க்க சங்கங்களின் வாயிலாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.* 


*வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்க போவதாக சொல்லிய காரணத்தினால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள். அளவில்லாத மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.*


*சாதி சமயம் மதங்கள் அற்ற புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் அடிப்படை கொள்கையாகும்*

*உலக வரலாற்றில் கற்பனைக் கதைகளைச் சொல்லாமல் உண்மையை மட்டும் மக்களுக்கு போதித்து.மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்.* 


*1.இந்திரிய ஒழுக்கம்.*

*2.கரண ஒழுக்கம்.*

*3.ஜீவ ஒழுக்கம்.*

*4.ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு வகையான  தனிமனித ஒழுக்கம் என்ன என்ன என்பதை போதித்த ஜீவகாருண்ய திலகம் வள்ளலார்.*


*உலகத்திற்கே நல்வழிக்காட்டவும் நேர் வழிகாட்டவும் இயற்கை உண்மையால் (இறை அருளால்) தமிழ் நாட்டில் வருவிக்க உற்ற  அருட்கொடையே திருஅருட்பிரகாசவள்ளலார்* 


*கற்பனைக் கடவுளை அகற்றி உண்மைக் கடவுளை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்*


*வள்ளலார் சென்னையில் சுமார் 35 ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.*

*தருமம் மிகு சென்னை என்று பெயர் சூட்டியவர் வள்ளலார்* 


*உலகத்திற்கே நல்வழி காட்டும் உயர்ந்த அருளாளர்கள் தோன்றிய நாடு தமிழ்நாடு*


*வள்ளலார் கோட்டம் !*


*திருவள்ளுவர் பெயரில் சென்னையில் வள்ளுவர் கோட்டம்  அமைத்ததுபோல்* 


*வள்ளலார் பெயரில் சென்னையில்  வள்ளலார் கோட்டம் அமைத்தால் உலக அறிஞர்கள் அனைவரும் வந்து தங்கவும். வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கையை தெரிந்து கொள்ளவும் பின்பற்றவும் உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் சென்னையாகும்*.


*தமிழகத்தின் தலைமை இடமாக சென்னை உள்ளதால் உலக விஞ்ஞானம் அறிவியல் சார்ந்த அறிவாளிகளும்.ஆன்மீக அருளாளர்களும் வருகை புரிந்து தங்கி வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை தெரிந்து கொள்ளவும். அக் கொள்கைகளை அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த ஆராய்ச்சி செய்து உலக மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்பாகவும் வசதியாகவும் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.*


*ஆதலால் வள்ளலார பெயரில் வள்ளலார் கோட்டம் அமைக்கவும் அதிலே வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கவும் சென்னையை சிறந்த இடமாக தேர்வு செய்யுமாறு திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக "ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையோடு" தங்களின் மேலான பார்வைக்கு அன்புடன் வேண்டுகோள் விண்ணப்பம்  செய்து கொள்கிறோம்*


*நாட்டு மக்களுக்கு நன்மையே செய்து வரும் நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுத்து நலம் பெற செய்வீர்கள் என நம்புகிறோம்* 


அன்புடன் *ஆன்மநேயன்* *முனைவர் ஈரோடு*

*கதிர்வேல்*

*திருஅருட்பா ஆராய்ச்சி மையம்*

*9865939896.*

வெள்ளி, 6 மே, 2022

பசி என்பதும் ஓர் உபகாரக் கருவி !

 *பசி என்பதும் ஓர் உபகாரக் கருவி!*


*பசி வேதனை !*


*வேதனைகளில் முக்கியமான வேதனை மூன்று அவை யாதெனில்*?


 *நரக வேதனை சனனவேதனை (பிரசவ வேதனை ) மரணவேதனை* என்பதாகும் .


*மேலே கண்ட மூன்று வேதனைகளும் சேர்ந்ததே பசி வேதனையாகும்*


*பசி வேதனைப்பற்றி முற்றும் அறிந்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே !*


*பசி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்பதாகும்*


*பசியினால் உடம்பில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனித்து படியுங்கள் உங்களுக்கே பசியைப்போக்கும் எண்ணம் தானாக வந்துவிடும்*


*சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் !*


1.சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது. 


2.அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது.


3.அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது.


4.அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது.


5.அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன. 


6.மனம் தடுமாறிச் சிதறுகின்றது.


7.புத்தி கெடுகின்றது.


8.சித்தம் கலங்குகின்றது.


9.அகங்காரம் அழிகின்றது.


1.பிராணன் சுழல்கின்றது.


11.பூதங்களெல்லாம் புழுங்குகின்றன.


12.வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன.


13.கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது.


14.காது கும்மென்று செவிடுபடுகின்றது.


15.நா உலர்ந்து வறளுகின்றது.


16.நாசி குழைந்து அழல்கின்றது.


17.தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது.


18.கை கால் சோர்ந்து துவளுகின்றன.


19.வாக்குத் தொனிமாறிக் 

குளறுகின்றது.


20.பற்கள் தளருகின்றன.


21.மலசலவழி வெதும்புகின்றது. 


22.மேனி கருகுகின்றது.


23.ரோமம் வெறிக்கின்றது.


24.நரம்புகள் குழைந்து நைகின்றன.


25.நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன.


26. எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன.


27.இருதயம் வேகின்றது.


28.மூளை சுருங்குகின்றது.


29.சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது.


30.ஈரல் கரைகின்றது.


31.இரத்தமும் சலமும் சுவறுகின்றன.


32.மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது.


33.வயிறு பகீரென்றெரிகின்றது.


33.தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.


34.உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. 


பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.


*இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன.* *அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது.*


 *இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்?* *இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்?*


*எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.* 


*இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும்* 


*அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.*


*பசியில்லாவிடில் சீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரையொருவர் எதிர்பார்க்க மாட்டார்கள்; எதிர்பாராத பக்ஷத்தில் உபகாரச் செய்கை தோன்றாது. அது தோன்றாதபோது சீவகாருணியம் விளங்காது; அது விளங்காதபோது கடவுளருள் கிடைக்க மாட்டாது.*


 *ஆதலால், பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவியென்றே அறியவேண்டும்.*

*அருள் பொருள் !*


*ஆன்மாவின் மகிழ்ச்சிக்கு பொருள் உணவு ஒன்று. அருள் உணவு ஒன்று இவ்விரண்டும் உணவும் இல்லை என்றால் ஆன்மாவின் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.*


*எனவேதான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றார்கள்* 


*இங்கே பொருள் என்பது உணவை குறிப்பதாகும்* 


*பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும்.பொருளே இல்லாதவர்களாக இருந்தாலும்.அவர்கள் வாயின்வழியாக உடம்பிற்குள்  செலுத்துவது உணவு மட்டுமே*


உணவு உண்பவர்கள் யாராக இருந்தாலும் மரணம் என்பது நிச்சயம்.


*மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் உணவைப் பெற வேண்டும்.அருள் உணவைப் பெற்றால் மட்டுமே தேகம் மாற்றம் உண்டாகும்* 


*ஆன்மாக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட உபகாரக் கருவியாகிய பசியை உழைத்து சம்பாதித்த ஆகாமிய ( சாத்வீக உணவு) உணவைக் கொண்டு அகற்ற வேண்டும்.* 


*இறைவனால் படைத்த  ஜீவர்களின் பசியைப் போக்குகின்ற போது இறைவன் நம் பசியைப் போக்கி அருள் உணவு வழங்குவார் என்பதுதான் சத்திய உண்மையாகும்*


*வேறு தவறான சாதி சமயம் மதம் சார்ந்த வழிமுறைகளால் அருளைப் பெறவே வாய்ப்பே இல்லை.*


*இந்த உண்மையைக் கண்டுபிடித்து உலகிற்கு வழிகாட்டியவர் தான் நமது அருள் தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*அதனால்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்* *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடும் என்றும் மிகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு போதித்துள்ளார்*


*இந்த உண்மை அறியாமல் மக்கள் காலத்தையும் நேரத்தையும் பொருளையும் வீண்விரயம் செய்து அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.*


*வள்ளலார் பாடல்!*


*கலையுரைத்த கற்பனையே* *நிலைஎனக் கொண்டாடும்*

*கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக*


மலைவறு சன் மார்க்கம் ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே


உலைவறும் இப் பொழுதே நல் தருணம் என நீயே

உணர்த்தினை வந் தணைந்து அருள்வாய் உண்மை உரைத் தவனே


சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்த சிகாமணியே என் திரு நடநாயகனே.! 


என்ற பாடல் மூலம் அறிய வேண்டும்.


அன்புடன் ஆன்மநேயன் சன்மார்க்க முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வியாழன், 5 மே, 2022

உலக நாடுகளில் தமிழ் !

 ● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*


● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.*


● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.*


● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.*


● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் காட்டியது தான்* 


● *இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தான் இருக்கிறது.*


● *மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள்தான்  கோலோச்சுகின்றனர்.*

● *சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.*


● *கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.*


● *ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.*


● *பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும்  திருப்பலி நடத்தப்படும் மொழியும் தமிழ்தான்.*


● *சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ், இலங்கை நாடுகளின் காசுகளிலும்  எழுதப்பட்டிருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் தான்.*


● *ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே இந்திய மொழியான தகுதியுடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.*


● *12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன.*


● *200 நாடுகளிலும் வாழும் ஒரே இனம் உலகிலே தமிழ் இனம் மட்டும்தான்..*


● *இதில் பல நாடுகளில் இந்திய தூதர்களாக இருப்பது தமிழர்கள்தான்.*


🤝 *உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் இந்திய நாடு முழுவதும் தமிழை பாட மொழியாக  வையுங்கள். இந்தியாவை உலகிற்கு தமிழ் அடையாளப்படுத்தும்.*✌

செவ்வாய், 3 மே, 2022

57 ஆம் ஆண்டு திருமணநாள்!

 *57ஆம் ஆண்டு திருமணநாள்* ! 


*வாழ்த்துங்கள் வணங்குகிறோம்*


*02-05-2022 ஆம் நாள் ஈரோடு கதிர்வேல் ஆகிய எனக்கும்.*

*அமுதாகதிர்வேல் ஆகிய என்மனைவிக்கும்* *திருவருளால் திருமணம் நடைபெற்று 56 ஆண்டு நிறைவுபெற்று 57 ஆவது ஆண்டை தொடங்குகிறோம்.*


*இல்லறத்தை நல்லறமாக ஏற்று வள்ளலார் காட்டிய  சுத்த சன்மார்க்க  கொள்கையில் அதிதீவிரமாக பின்பற்றி  கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம்.*


*வாழ்க்கையில் எண்ணற்ற சோதனைகளை கடந்து சாதனைகளை கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்.*


*எங்களுக்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை. நான்கு பேரன்கள் இரண்டு பேத்திகள்.அனைவரும் வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள்.*


*அனைவரும் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற உண்மை உணர்வோடு கடைபிடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்*..


*இந்த பிறவியில் எங்கள் வாழ்க்கையில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கையில் அதி தீவிரமான ஈடுபாடு கொண்டு வாழ்ந்துவருவது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகும்.*


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய அருள் புண்ணிய பயனாகக் கருதி வாழ்ந்து வருகிறோம்.*


*இன்று வரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எந்த குறைபாடும் இல்லாமல்.ஆன்ம லாபத்தோடும் ஆன்ம நிறைவோடும் எங்களை இயக்கிக் கொண்டும் வழிக்காட்டிக் கொண்டும் வருகிறார்.*


*எங்களைப் போன்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்*


*எங்கள் மீது அன்பும்.அக்கறையும் பாசமும் பற்றும் கொண்ட அன்பு உள்ளங்கள் அன்பர்கள்*

*நண்பர்கள். சன்மார்க்கிகள். ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள்.*

*உற்றார் உறவினர்.அயலார்  மற்றும் ஆன்மநேய உறவுகள் அனைவருக்கும்  அன்பான மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


*அன்புடன் உங்கள் ஆன்மநேய உறவினர்கள்*

*ஈரோடு கதிர்வேல்*

*அமுதா கதிர்வேல்.*

*9865939896*.