சனி, 29 அக்டோபர், 2016

மதங்கள் சமயங்கள் !

மதங்கள்  சமயங்கள்  !

மதங்கள்  சமயங்கள  மீது பற்று  உள்ளவர்கள்  இந்த  உலக  மக்களின்   உணர்ச்சி  களோடு  விளையாடிக்  கொண்டு   இருக்கின்றார்கள்  .

உண்மையில்  அவர்கள்   ஏதும்  அறியாத   ஏழைகள்.  பல   காலமாக   நாங்கள்  கூறுவதுதான்   நியாயமானது  என்று  உளரிக்கொண்டு   உள்ளார்கள்   .மக்களின் அறிவை  வளர  விடாமல் தடுத்து   விட்டார்கள்   .மக்கள் இருளில்  மயங்கி  அறிவை இழந்து   உள்ளார்கள

 அவர்களை  இருளில்  இருந்து   வெளிச்சத்திற்கு   கொண்டு  வருவதற்கு   வள்ளலார்   படாத  பாடுபட்டுள்ளார்   .

உண்மையான   சுத்த சன்மார்க்கத்தை   கடைபிடிப்பவர்கள்   உண்மையை  எடுத்து   மக்களுக்கு சொல்ல  தயக்கம்   இருக்க  கூடாது   .

வள்ளலார்   சொன்ன   உண்மை   ஒளிக்   கதிர்கள்   நாட்டில்  பரவிப்   விட்டால்   பொய்யான  சமயங்கள்  மதங்கள்   இருக்கும்  இடம்  தெரியாமல்   மறைந்து  விடும்   .

அதனால்   நமக்கு  உயிருக்கு  ஆபத்து   கூட   வரலாம்  .அப்படியே   வந்தாலும்  அதுவே   மக்களை  மாற்றம் செய்யும் ஒரு    கருவியாக  நிகழ்ச்சியாக   அமைந்து  விடும் .

 மக்கள்  . . கடவுளோடு   இணைந்து   பேரின்ப   வாழ்க்கை  வாழ்வதற்கு   நாம்  ஒரு   அசைக்க   முடியாத   சுத்த  சன்மார்க்கியாய்   செயல்  பட வேண்டும்

கடவுளோடு நாம் உயிர் ஒட்டம் உள்ள ஒரு உறவை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் .அவற்றை மக்களுக்கு போதிக்க வேண்டும்.

சமயங்கள்   மதங்களின்  இருளில்   சிக்கித்  தவிக்கும் மக்களை  வெளிச்சத்திற்கு   கொண்டு   வருவதே  வள்ளலார்   சொல்லி   உள்ள  சுத்த   சன்மார்க்கம் .

மரணத்தை   வெல்லும்   வழியைப்  பிறகு  பார்ப்போம்   .
 .
இந்த மனிதப் பிறப்பில்   என்னுடைய   விருப்பம்   இதுவாகவே இருக்கின்றது .

அன்புடன்  
ஆன்மநேயன்  
ஈரோடு கதிர்வேல் ்
9865939896   .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு