ஞாயிறு, 30 மே, 2021

சாதியும் மதமும் சமயமும் பொய் !

 சாதியும் மதமும் சமயமும் பொய் ! 


சாதி சமயம் மதங்கள் யாவும் பொய் என்றும் அவற்றை பின் பற்றுவதால் வேற்றுமை உண்டாகி *ஆன்மநேயம் மனிதநேயம்* பாதிக்கப்படும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் வள்ளலார். 


அதே நேரத்தில் சமயம் மதங்களால் படைக்கப்பட்ட தெய்வங்கள் யாவும் கற்பனை தெய்வங்களேயாகும்


உலகம் முழுவதற்கும் ஒரே தெய்வம் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி என்னும்  தனிப்பெருங்கருணை உள்ள அருள் ஒளியே உண்மை தெய்வமாகும்.


*அந்த ஒளியின் சிறு சிறு துகள்கள்தான் ஆன்மா என்பதாகும்*.


மனிதன் அறிவைக்கொண்டு ஆராய்ச்சி செய்து அகத்தில் உள்ள ஆன்மாவின்  உண்மையை உணர்ந்து விளங்கி கொள்ள வேண்டும்.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

புதன், 26 மே, 2021

கொரோனோ இயற்கையா ? செயற்கையா?

 *கொரோனோ தொற்று இயற்கையா ? செயற்கையா?* 


*பொருமையாக படிக்கவும்*.


உலக அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள்.அணு ஆராய்ச்சி நிபுணர்கள்.

மருத்துவ சுகாதரத்துறை அணு ஆராய்ச்சி நிபுணர்கள்.மற்றும் ஆன்மீகம் சார்ந்த அருளாளர்கள்.

மற்றும்

பொதுநலம் சார்ந்த சமூக பாது காப்பாளர்கள் போன்ற வல்லுனர்கள் அனைவரும் அவரவர்கள் அறிந்ததை தெரிந்ததை கண்டுபிடித்துள்ளதை வைத்து கொண்டு வெவ்வேறு விதமான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் கருத்துக்களையும் ஆராய்ந்து புதிய புதிய மருந்துகளையும் கண்டுபிடித்து அவற்றை

ஊசியின் மூலமாகவும் பவுடர் மூலமாகவும் உடலுக்குள் செலுத்தி கொரோனோ வைரஸ் தொற்றை போக்க வழிகாட்டுகிறார்கள்.மகிழ்ச்சியான சேவைகள்  செய்திகள்தான்


கொரோனோ வைரஸ் என்ற தொற்று எதனால் பரவி வருகிறது.

மனிதர்களை மட்டும் ஏன் தாக்குகிறது.

மனிதர்கள் மட்டுமே. மரணம் அடைய என்ன காரணம்  என்னும் உண்மையை அறிந்து கொண்டால்.  உடம்பிற்கும் உயிருக்கும். ஆபத்துக்களை உண்டாக்கும்  வைரஸ் தொற்று சக்தியில் இருந்து மக்களை எளிதில்  காப்பாற்றிக்கொள்ளலாம்.


*முதலில் கொரோனோ வைரஸ் தொற்று இயற்கையா ? செயற்கையா ?  என்பதை அறிந்து கொள்ள வேண்டும்* 


உலகில் காற்றின் பிரிவுகள் அதன் வகைகள் பிரிவினைகள்.

காற்றின் கலவைகள் யாவும் உயிர்களின் வாழ்க்கைக்கு தகுந்தவாறு *நான்கு வகையான காற்று* இயற்கையால் படைக்கப் பட்டுள்ளன.அவை *1.பூதக்காற்று* *2.அமுதக்காற்று*

*3.உஷ்ணக்காற்று*

*4.விஷக்காற்று*

என்பவைகளாகும்.


இந்த நான்கு விதமான காற்றும் உயிர்களின் வாழ்க்கைகாக.உயிர்களின் வாழ்க்கை முறைகளுக்கு தகுந்தவாறு.

அதனதன் சுற்றுபுற சூழ்நிலைக்கு தகுந்தவாறு உடம்பின் வசதிக்கு ஏற்ப  மூக்கின் வழியாக சுவாசிக்கவும் பயன் படுகிறது.


*உலகில் காற்று இல்லாமல் எதுவும் நகர முடியாது*


அதேபோல் இவ்வுலகில் உரு பொருள்களை படைக்க. உருவாக்க அவைகளை அறிந்து  தெரிந்துகொள்ள *ஏழுவகையான அணுக்களின்* கூட்டுறவு முயற்சியால் பின்னப்படுகின்ற தாவரம் முதல் மனிதர்கள்வரை அதன் தோற்றம் செயல்கள் வேறு வேறு விதமான உருவங்களின் தோற்றங்கள்  இயற்கையால் படைக்கப்பட்டு உள்ளன.


அந்த ஏழுவிதமான அணுக்களின் தமிழ் பெயர்..

1.வாலணு

2.திரவவணு

3.குருவணு

4.லகுவணு

5.அணு

6.பரமாணு

7.விபுவணு

என்பவைகளாகும் மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் நிறைந்து இருக்கும்.

இவற்றில் காரியவணு.

காரணவணு.

காரிய காரணவணு என மூன்று வகையாய் உருவங்கள் தோன்றுவதற்கு காரணமாகவும் காரியமாகவும் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன. *இது ஒரு அறிவியல் வேதியல் சார்ந்த அதிசய செயல்களாகும்*


*உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது*  


உடம்பில் உள்ள *கண்.காது.மூக்கு வாய்.சிறுநீர்துவாரம்..மலத்துவாரம் ஆகிய  *ஒன்பது துவாரங்களில்* வாய்  மூக்கு  என  மூன்று துவாரங்கள் மிகவும் முக்கியமானதாகும். .


இவ்வுலகில் ஆன்மா வாழ்வதற்கு  உயிர் உடம்பு மிகவும் அவசியம். *பஞ்ச பூத அணுக்களால்  பின்னப்பட்டதே அணுதேகமாகும் அதற்கு ஊன் உடம்பு என்றும் மலதேகம் என்றும் பெயர். *உடம்பும் உயிரும் இயங்குவதற்கு  காற்றும் உணவும்.தண்ணீரும் மிகவும் அவசியம் தேவைப்படுகிறது.* காற்று மூக்கு வழியாகவும் உணவு.தண்ணீர் வாய் வழியாகவும் மட்டுமே அனுப்ப முடியும்.  


உடம்பை பாதிக்காத அளவு சுத்தமான சாத்வீக உணவை அதாவது துர்நாற்றம் இல்லாத பாதுகாப்பான தாவர உணவை காலை மதியம் இரவு என மூன்று வேலையும் வாயின் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். *தாவர உணவு உண்டு வாழ்வதற்கு தகுந்தாற்போல் மனித உடம்பு படைக்கப் பட்டுள்ளது*


சுத்தமான காற்றை அதாவது *பிராணவாயுவை* மூக்கின் வழியாக இடைவிடாது சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். 


*நாம் தினமும் உண்ணும் உணவும் தண்ணீரும்*

*சுவாசிக்கும் காற்றும்* *உடம்பையும் உயிரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்*.


உலகம் முழுவதும் உள்ள மக்கள் உட்கொள்ளும் உணவு முறைகள் யாவும் உடம்பையும் உயிரையும் அழிக்கும் துர்நாற்றமுள்ள *அசுத்த* உணவாகவே இருக்கிறது. *அதாவது இயற்கைக்கு விரோதமான மாசுபடிந்த கலவை  உணவாகவே இருக்கிறது* ஆதனால்தான் எதிர்பாராத புதிய புதிய வியாதிகள் மற்றும் கொரோனோ போன்ற வைரஸ் தொற்றுக்கள் யாவும் சாதாரணமாக உடம்பை பற்றிக்கொள்கிறது.அதனால் இயற்கையான எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.


உலகம் முழுவதும் இயற்கைக்கு விரோதமான செயற்கையால் உண்டாகும் அசுத்த (காற்று) வாயுக்கள் புகை மண்டலங்களாக சூழ்ந்து வெட்டவெளியில் காற்றுடன் கலந்து நிறைந்து உள்ளது. அந்த செயற்கையான  அசுத்தக் காற்றை சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.


உலக உயிர் இனங்களுக்காக இயற்கையால் படைக்கப்பட்ட *பிராணவாயுவுடன்* அதாவது சுத்தகாற்றுடன் அசுத்த காற்று கலந்து பிரிக்க முடியாதவாறு  நிறைந்து மாசு படிந்துவிட்டது. 


தற்போது நாம் சுவாசிக்கும் காற்று *அசுத்த காற்று.* 

*உஷ்ண காற்று*.

*பூதக்காற்று* என மூவையான காற்றுடன் *இயற்கையில் *செயற்கை காற்றான அசுத்த காற்றும் கலந்து கலந்து சுவாசிப்பதால் கொரோனோ போன்ற அசுத்த செயற்கை வைரஸ் மூக்கின் வழியாக உள்ளே சென்று நுரைஈரலையும் மற்ற உறுப்புகளையும் பாதிப்பு அடைய செய்விக்கின்றது* பிராணவாயு *குறைவதால் மூச்சு திணறல் உண்டாகி உடம்பைவிட்டு உயிர் பிரியும் சூழல்நிலை உண்டாகிறது*. 


*அமுதக்காற்று!*


(*பரிசுத்தமான *அமுதக்காற்றை சுவாசிக்க வழி தெரியாமல் அழிந்து கொண்டே உள்ளோம்*  பிறகு தெரிந்து கொள்வோம்.)


 *மக்கள் கூடும் இடங்களில் சுத்த காற்றான பிராணவாயு குறைந்து அசுத்த காற்றை அதிகம் சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.* *எனவேதான் வாயையும் மூக்கையும் மறைக்க முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது.*


அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ உலக மருத்துவ ஆராய்ச்சி கழகம் மருத்துவ சுகாதரத்துறை அறிவுறுத்தலின் வாயிலாகவும் மருத்துவர்களின் ஆலோசனைபடியும் ஊரடங்கு கட்டாயம் தேவை என ஆணையிட்டு உள்ளது. 


*மக்கள் வெளியே செல்லக்கூடாது* *தனிமனித இடைவெளி வேண்டும்*. *வீட்டிலே தனமையில் இருக்க வேண்டும்.*

*வாகனங்களினால் உண்டாகும் செயற்கை காற்றான அசுத்த காற்றை குறைக்க வாகனங்கள் வெளியே செல்லக்கூடாது*.

*என்பதால் கட்டாய ஊரடங்கு அறிவித்துள்ளது.* 


*செயற்கையால் உண்டாகும் அசுத்த காற்றாலும்*.

*செயற்கையால் உட்கொள்ளும் அசுத்த உணவினாலும் கொரோனோ வைரஸ் போன்ற தொற்று உடனே மக்களைப் பற்றிக் கொள்கிறது*.  


*கொரோனோ தொற்று என்பது இயற்கையானது அல்ல..இயற்கையில் செயற்கையானது என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்* 


இதில் இருந்து மக்களை காப்பாற்றுவது எவ்வாறு என்பதை *வள்ளலார்* தெளிவாக சொல்லுகிறார். 


*தனிமனித ஒழுக்கம் மிக மிக அவசியமாகும்.* *ஒழுக்கம் மட்டுமே உயிரைக் காப்பாற்றும் கருவியாகும்.*


கண். காது. மூக்கு.வாய்.கை.

கால். உடம்பு என்னும் புறப்புற உறுப்புக்களை  தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தேவை இல்லாததை செய்யாமல் இருப்பதே *இந்திரிய ஒழுக்கம்*.என்பதாகும்.


மனம்.புத்தி.சித்தம்.

அகங்காரம்.உள்ளம் எனும் உருவம் இல்லாத புறக்கருவிகளை உயிர் உடம்பை காப்பாற்ற மட்டுமே பயன் படுத்திக்கொள்வதே *கரண ஒழுக்கம்* என்பதாகும். இவற்றை ஒவ்வொருவரும் அவசியம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 


*இயற்கையுடன் செயற்கை  சேரும்போது துன்பம் துயரம்.அச்சம்.பயம்.மரணம் போன்ற ஆபத்துக்கள் எல்லாம் உடம்பையும் உயிரையும் பாதிக்கிறது.*


*இயற்கையில் செயற்கையான உலகில்.செயற்கை யான வாயு மண்டலங்களில் விஷத் தன்மையுள்ள  வாயுக்கள் அணுக்கள் மூலமாக காற்றிலும் வெளியிலும் கலந்துள்ளதால் நாம் சுவாசிக்கும் காற்றில்  கொரோனோ வைரஸ் போன்ற பலவிதமான தொற்று உடம்பின் உள்ளே சென்று நுரையீரலைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றது*  

இந்த ஆபத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழிதான் உள்ளது.


*இந்த உலகத்தில் செயற்கையால் உண்டாகும் துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் போன்ற எல்லா வகையான  ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே மருந்து ஞான மருந்து என்னும் அருள் மருந்தாகும்* 


*அருள் மருந்து பெறும் வழி !*


*இவ்வுலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் அருள் மட்டுமே !* 


அருளைப் பெற வேண்டுமானால் *கலப்படம் இல்லாத அமுதக்காற்றை சுவாசிக்க வேண்டும்*.. 


பலகோடி மைல்களுக்கு மேல் பிரமாண்டத்தில் அமுதக்காற்று பூரணமாக நிறைந்து இருக்கிறது. 


*உயிர்களின் நன்மைக்காக தினமும் காலை வேலை 4-30 மணிக்கு  தொடங்கி 6-00 மணி வரை அதாவது சூரியஉதயம் வரை பூமியை நோக்கி அமுதக்காற்று வீசும்* *அவற்றை அமுதகாலம் என்றும் அமிர்தயோகம் என்றும் சொல்லுவார்கள்.* 

மேலும் *ஆலயங்களில் கடவுளை எழுப்புவதாக திருப்பள்ளி எழுச்சி என்ற பாடலைப்பாடி கடவுளை எழுப்பும் பழக்கமாக  வைத்துள்ளார்கள்*


*கடவுளை எழுப்புவது  அல்ல.கடவுள் தூங்கவும் மாட்டார்* அந்த நேரத்தில் மக்கள் எழுந்து விழிப்புடன் இருந்தால்  அமுதக்காற்று சுவாசிக்கலாம் என்பதற்காக அந்த வழக்கம் ஆலயங்களில் உள்ளது. அதன் உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.


*எனவே நாம் ஒவ்வொருவரும் காலையில்  எழுந்து விழிப்புடன் அமுதக்காற்றை அவசியம் சுவாசிக்க வேண்டும்.*

*அமுதக்காற்றை தினமும் இடைவிடாது சுவாசிக்கும் போது நம் சிரநடுவில் உள்ள ஆன்மாவின் உள் இருந்து அமுதம் சுரக்கும்* *அந்த அமுதமே சிறந்த ஞானமருந்தாகும்.* 


*வள்ளலார் பாடல்*! 


திருஅருட்பாவில் நிறைய பாடல்கள் உள்ளன அதில் ஒரு சிலபாடல்கள் 


*உடற்பிணி யனைத்தையும்*  *உயிர்ப்பிணி யனைத்தையும்*

*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே*! 


*எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை*

*கங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே* !


*காற்றிடை உயிர்பல கதிபல கலைபல*

*ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி*! 


மேலும் 


*காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன்* சன்மார்க்கச்

சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்


*சாகா வரம்பெற்றேன்* தத்துவத்தின் மேல்நடிக்கும்

ஏகா நினக்கடிமை ஏற்று.!  ....மேலும்


*காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே*

களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


*மேலையிலே இம்மையிலே ஒருமையிலே* *தவத்தால்*

*மேவுகின்ற* *பெரும்பயனாம் விளைவைஎலாம்* தருமச்


சாலையிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே

சமரசசன் மார்க்க சங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும்ஏற் றருளே.!  


 *அமுதக்காற்றை சுவாசித்தால் சிற்சபையில் உள்ள ஆன்மாவின் உள் இருந்து அருள் சுரக்கும். அருளையே ஞான மருந்து என்கிறார் வள்ளலார்*


*ஞான மருந்திம் மருந்து* - 

 *சுகம்*

*நல்கிய சிற்சபா நாத மருந்து*.*! என்னும் அகவல் வரிகளிலும் தெரியப்படுத்துகின்றார்.


மேலே கண்ட பாடல்களின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளல்பெருமான். 


எனவே உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய நாம்  உண்மை அறிந்து உடம்பையும்  உயிரையும் காப்பாற்ற வள்ளலார் காட்டிய அருள்நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஒழுக்க நெறியை கடைபிடித்து காலையில் எழுந்து அமுதக்காற்றை சுவாசித்து மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வோம். 


*அதிகாலையில் எழுவோம். அமைதியாக அமர்ந்து அமுதக்காற்றை சுவாசிப்போம்.உயிரையும் உடம்பையும் காப்பாற்றுவோம். கொரோனோ வைரஸ் தொற்றான விஷக்காற்றை விரட்டி அகற்றுவோம்* என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

செவ்வாய், 18 மே, 2021

உண்மையை நம்புங்கள் !

 *உண்மையை நம்புங்கள்* ! 


*மலர்மிசை யேகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்...திருவள்ளுவர்*.


உடல்நிலை சரியில்லை என்றால் என்ன வியாதி என்று  கண்டுபிடித்து அதற்கு தகுந்த மருந்து சாப்பிட்டால் தான் குணமடையும்.


அதேபோல் நமக்கு உண்டாகும் துன்பம் துயரம் அச்சம் பயம் போன்றவற்றை போக்க வேண்டுமானால்  பல கடவுள்களிடம் சென்று முறையிடுகிறோம் பிரார்த்தனை செய்கிறோம்.


நாம் வணங்கும் கடவுள்கள் நம் வேண்டுதல்களை ஏற்று நன்மை செய்யும் ஆற்றல் உள்ளதா என்பதை தெரிந்து முறையீடு பிரார்த்தனை செய்ய வேண்டும். 


*வள்ளலார் சொல்லும் உண்மைக்கடவுள்* !


*இயற்கை உண்மைக் கடவுள்*


ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்

*சோதி தன்னையே* நினைமின்கள் சுகம்பெற விழைவீர்


*நீதி கொண்டுரைத்தேன்* இது நீவீர் மேல் ஏறும்

வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி. !


என்னும் பாடல் வாயிலாக  ஆதியும் அந்தமும் இல்லாத ஓர் *இயற்கை உண்மைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி* தன்னையே பிரார்த்தனை செய்யுங்கள் சுகம் கிடைக்கும் எனவும். நீதி கொண்டு உரைத்தேன் (சத்தியமாக சொல்கிறேன்) நம்புங்கள் என்று   அன்புடன் ஆன்மநேயத்துடன் தெளிவாக சொல்கிறார்.


*மேலும் ஒரு பாடலில் சொல்லுகிறார்!*


அருட்சோதித்தெய்வம்  எனைஆண்டுகொண்ட தெய்வம் 

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்


*இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்*

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்*.! 


என்னும் பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்னை ஆட்கொண்டார் என்றும். இருட்பாடான துன்பம் எனும் இருளை நீக்கி இன்பம் எனும் ஒளியை தந்து காப்பாற்றினார் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி யுள்ளார். 


*எங்குறு தீமையும் எனைத்  தொடராமல் இரவு பகல் பாராமல் மெய்காவல் புரிந்த தெய்வம்தான் அருட்பெருஞ்ஜோதி தெய்வம் என்பதாகும்.*


அந்த உண்மையான கடவுள் ஒவ்வொருவரின் *சிரநடு சிற்சபை சிற்றம்பலத்தில்* அதாவது தலைப்பாகத்தின் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கு மேலே மத்தியில் *ஆன்மா* எனும் உள் ஒளியாக  இயங்கிக் கொண்டு  உள்ளவரே அருட்பெருஞ்ஜோதி என்னும் ஒளியாகும்.


ஆதலால் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடும் என்கிறார்.


எனவே நாம் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் தகுதிக்கு தக்கவாறு தகரக்கண்ணாடி கூண்டில் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிறிய திரி போட்டு தீபம்  ஏற்றி வைத்து அதன்முன் அமர்ந்து 

*அருட்பெருஞ்ஜோதி*

*அருட்பெருஞ்ஜோதி*

*தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோதி!*


எனும் மகாமந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெல்லென சொல்லி துதித்து தோத்திரம் செய்து வழிபாடு செய்யுங்கள்.


அப்படியே செய்து வாருங்கள் துன்பம் துயரம் அச்சம் பயம் யாவும். இருக்கும் இடம் தெரியாமல் விலகிவிடும்.


குறிப்பாக தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் *கொரோனோ என்னும் கொடூரமான வைரஸ்* தொற்றில் இருந்து குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் *அருள் மருந்தே* இதுவாகும். 


நம்பிக்கையுடன் உண்மை உணர்ந்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுங்கள் .


*ஒரு முக்கிய செய்தி எக்காரணம் கொண்டும் புலால் ( மாமிசம்) உண்ணவே கூடாது* 


*செயற்கையை இயற்கை எனும் அருளால் மட்டுமே வெல்ல முடியும்*


*எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து*!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

சனி, 15 மே, 2021

வள்ளலார் சித்த மருத்துவம் சபைகள் !

 அன்புக்குரிய சகோதரா !


தீவிரமாக பரவிவரும் விசேஷ காய்ச்சல் கண்டு யாரும் பயம் கொள்ள வேண்டாம். 


தமிழகமெங்கும் வள்ளலார் சன்மார்க்க சபைகளில் .........


இதை மூன்றே நாளில் முற்றிலும் குணப்படுத்தும் "வள்ளலார் ஐங்கூட்டு சூரணம்" இலவசமாக வழங்கப்படும். 


வள்ளலார் சன்மார்க்க சபைகளில் தமிழகமெங்கும் கீழ்க்கண்ட இடங்களில் இலவசமாக அளித்து வருகிறோம். 


Latest Updated on 15th May 

புதுப்புது நகரங்கள் added 


சென்னை 


திருஒற்றியூர்

ஸ்ரீ இராமலிங்க மடாலயம், 

தயவு செல்வ பூபதி ஐயா +919952988380


SPECIAL ICU RISK Patients only 

In Chennai Ragupathy- 9283136921


SPECIAL ICU RISK Patients only

In Coimbatore Balaji- 9952653333


புழல் 

கருணை நெறி வளர் பவுன்டேஷன் 

தயவு ராஜேஷ் ஐயா- 9940270183


Avadi 

Hare Krishna Temple 

Shyam Murari Das 7200729313


அம்பத்தூர் 

வள்ளலார் பசியாற்றும் மையம்- 9710837599


அம்பத்தூர் 

புதூர்

ராஜேஸ்வரி- 9940365745

கருணை நெறி வளர் பவுன்டேஷன் 


கொளத்தூர் 

வைத்தீஸ்வரன்- 9043774880


வில்லிவாக்கம் 

தாசரதி-  8778365477


புரசைவாக்கம்

கார்த்திகேயன் - 8883383555


மைலாப்பூர் 

கிருஷ்ணசுவாமி- 8939070055


T Nagar 

Prof சிவா பாகவதர்- 9789825597


மடிப்பாக்கம் 

Prof விஜயலட்சுமி - 8056138243


போரூர் 

Ponmozhi- 9382225177


பூந்தமல்லி, மாங்காடு

தேவி பார்த்தசாரதி- 8248145631


முகப்பேரூ 

கணபதி- 9444159766

ஈஷா யோகா 


அண்ணா நகர் 

தினகரன்- 9841819050

ஈஷா யோகா 


வட பழனி

ஞான முருகன்- +918610523097


சென்ட்ரல் ரயில்வே நிலையம்

ஜெயப்பிரகாஷ்- 9677908708


தண்டையார்பேட்டை 

Er உமாசங்கர்- +919600162099


பள்ளிக்கரனை, வேளச்சேரி 

ரகுபதி - 7588728040


சித்தாலப்பாக்கம் 

மேடவாக்கம் 

செந்தில்- 7871160814


மேடவாக்கம் 

அருள் பிரகாசம் - 9884127766


சேலையூர் 

மாடம்பாக்கம்

பாஸ்கர்- 8903958670


குரோம்பேட்டை 

செல்வகுமார்- 7904713722


தாம்பரம் 

சுதாகர்- 7019182140

கருணை நெறி வளர் பவுன்டேஷன்


பெருங்களத்தூர்

அருள் பிரகாசம்- 9790028001


வண்டலூர் 

மண்ணிவாக்கம் 

கூடுவாஞ்சேரி 

ராஜநிதி 

கருணை நெறி வளர் பவுன்டேஷன் 

9884448649

 

சோழிங்கநல்லூர்

தர்மன் நாராயணசாமி- 9840934527

கருணை நெறி வளர் பவுண்டேஷன்


ஸ்ரீபெரும்புதூர் 

ஹரி பிரபா - 8760233170

கருணை நெறி வளர் பவுன்டேஷன் 


காஞ்சிபுரம் 

ரகுராமன்- 9597459257

சத்திய ஞானசபை 


திருவள்ளூர்

தண்டலம் 

பெரிய வண்ணான்குப்பம் 

சத்ய தர்மசாலை குடில்- 9962215964


கோயம்புத்தூர் 

தயவு சிவகுமார்- 8300165531

வள்ளலார் சன்மார்க்க சங்கங்கள் 


கோயம்புத்தூர் 

கிரிதரன்- 9894212748


கோயம்புத்தூர் 

Rajesh kumar - 8489161433

ISHA Yoga 


திருச்சி 

தயவு சிங்கப்பூர் மகேந்திரன்- 8012811011

திருவருள் பயணம் மருத்துவ இதழ்- Publisher 


மதுரை 

திருஅருட்பிரகாச வள்ளலார் பணிமன்றம 

சாய் கணேஷ்- 9894765247


காரைக்குடி 

செக்காலைக்கோட்டை

உஷா கருப்பையா- 7904544936


திண்டுக்கல் 

அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சபை

ராஜேந்திரன் - 9942421742


பொள்ளாச்சி 

ஈஸ்வரன் - 9585509456

நா.மகாலிங்கம் ஐயா கம்பெனி 


பொள்ளாச்சி 

பாலகிருஷ்ணன்- 9842265992


திருநெல்வேலி 

மாரியம்மாள்- 7904503436


தூத்துக்குடி 

அருள்ஜோதி சுஜாதா- +918248480847


ராஜபாளையம் 

பாலு - 9262004983


விருதுநகர் 

மணிகன்டன்- 7401329432


சேலம் 

புனிதா குமரன் 

கருணை நெறி வளர் பவுன்டேஷன் 

7904563344


சேலம் 

பகவதிதேவி - 8248080601


சேலம் 

கெங்கவல்லி தாலுகா 

சன்மார்க்க தர்மசாலை

பிரேமலதா- 9488235825


சேலம் 

சேந்தமங்கலம் தாலுகா 

கந்தசாமி - 9791613148

வள்ளலார் வைத்தியசாலை யோகசாலை 


நாமக்கல் 

ராம்குமார்- 9786077333


தர்மபுரி 

சக்தி- 9751880250


திருவண்ணாமலை 

போளூர் 

வள்ளலார் கல்வி அறக்கட்டளை 

தமிழன் பாபு - 9443485800


திருவாரூர் 

பேராளம் 

பக்கிரிசாமி- 81246 79642


திருவாரூர் 

ரவிச்சந்திரன்- 9486287546


தஞ்சாவூர்

சௌந்தர்ராஜன்- 8870804452


தஞ்சாவூர்

கௌரி கார்த்திக் - 8682945331


மயிலாடுதுறை 

ஆசிரியர் மனோகரன்- 8489569006

திருவருள் பயணம் மாத இதழ் 


சிதம்பரம்  

Narthanaraja Mahalingam  9600004834

   

கும்பகோணம் 

ராஜ்குமார்- 9994855594

ஈஷா யோகா 


திருத்துறைப்பூண்டி 

எடையூர் 

வள்ளலார் ஞான குடில் 

தயவு கோபி- 9994887918


புதுக்கோட்டை 

வடகாடு 

நெப்போலியன்- 7904080033


புதுக்கோட்டை 

முனியமுத்து- 9344820514


உளுந்தூர்பேட்டை 

ஜீவகாருண்ய அருளமுது குடில் 

தயவு ராமநாதன்- +91 98433 25953


விழுப்புரம் 

வள்ளலார் உபகாரச்சாலை 

கா.தமிழ் வேங்கை- 9486176734

9442170011


விருத்தாசலம் 

ஸ்ரீ அகத்தியர் ஞான குடில் 

ஆப்பிள் தெரு, பெரியார் நகர் 


விருத்தாசலம் 

Dr இளங்கோ - 9750739736

வள்ளலார் வைத்தியசாலை யோகசாலை 


பாண்டிச்சேரி 

எத்திராஜ்- 9976990787


பாண்டிச்சேரி 

செல்வி- 8754826628


திண்டிவனம் 

ராஜேந்திர பிரசாத்- 9566738366


கடலூர் 

Reporter ராஜன்- 9488471235


கடலூர் 

நெல்லிக்குப்பம் 

ஆரோக்கிய மேரி அம்மா- 6385026959


ஈரோடு 

பவானி 

ராமமூர்த்தி- 9500930508

வள்ளலார் வைத்தியசாலை யோகசாலை 


கோபிசெட்டிபாளையம் 

Dr வெற்றிவேல்- 7010053119

திருவருள் பயணம் மாத இதழ் 


கரூர் 

பேராசிரியர் T சரவணகுமார்- 8825833097


வேலூர் 

நந்தினி அம்மா - 9487521030


குடியாத்தம் 

நிர்மலா அம்மா-  6379898829


கிருஷ்ணகிரி 

தர்மபுரி

கோவிந்தன் - 9489950291


நாகர்கோவில் 

ராஜன்- 9344507272


மார்த்தாண்டம் 

JVR OFFSET Press- 9655491937


Karnataka 


Bangalore 

Navin  - 8310204981

Rani Valliappan - 8411055666


Mysore 

Gayathri- 9972030123


தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள 


   1. தாளிசாதி சூரணம் 

   2. அமுக்கரா (அஸ்வகந்தா) சூரணம் 

   3. மகா சுதர்சன சூரணம் மாத்திரை 

   4. பால சஞசீவி 

   5. பிரம்மானந்த பைரவம் 

   

இவைகளை கொண்டே 

இந்த வள்ளலார் ஐங்கூட்டு சூரணம் பக்குவமான முறையில் உருவாக்கி அளித்து வருகிறோம். 


இது விசேஷ காய்ச்சல் வந்தவர்களுக்கு மட்டுமே. 

முன்னெச்சரிக்கையாக கண்டிப்பாக சாப்பிட கூடாது. 


தேவைப்படுபவர்கள் தாங்களே தங்கள் உறவினர்கள் ,நண்பர்கள் மூலமாக நேரில் மட்டுமே சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.

சேவையாளர்களை தங்கள் இடத்திற்கு அழைக்க கூடாது அன்பர்களே- அன்பு வேண்டுகோள். 


For updated cities ..


இந்த சேவையில் தாங்களும் பங்கேற்க விரும்பினால் ....

தொடர்புக்கு: 8220106244 (வாட்ஸாப் only )

வெள்ளி, 14 மே, 2021

பேசும் தெய்வங்கள் ! பேசாத தெய்வங்கள் !

 பேசும் தெய்வங்கள்! பேசாத தெய்வங்கள்! 


பேசும் தெய்வங்கள் மனிதர்கள்.

பேசாத தெய்வங்கள் மற்ற உயிர் இனங்கள்.


எல்லா உயிர்களிலும் இறைவன் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டுள்ளார் என்பதுதான் இயற்கை உண்மையாகும்.


பேசாதே தெய்வங்களான உயிர் இனங்களை அழிக்காமல் பாதுகாப்பதே பேசும் தெய்வங்களான மனிதர்களின் கடமையாகும் கட்டளையாகும்


பேசாத தெய்வங்களை பிடித்து அடித்து கொன்று அழித்து உபயோகப்படுத்துவதால் பேசும் தெய்வங்களான மனித குலத்திற்கு பேர்ஆபத்து நேரிடுகிறது. 


தீதும் நன்றும் பிறர்தர வாராது. 


ஆயுதம் இல்லாமல் கருவிகள் இல்லாமல் மறைமுகமான முறையில் மனிதர்களை அழிக்கும் கொடூரமான கொரோனோவில் இருந்து காப்பாற்றிக்கொள்ள.


உயிர் இரக்கமான ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால். பேசும் தெய்வங்களான மனிதர்களை இயற்கைஉண்மை எனும் தயவால் கருணையால் எளிதில் காப்பாற்றப் படுவார்கள் 


ஜீவகாருண்யமான உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் வழிபடவேண்டும்.


அவ்வாறு செயல்பட்டால் இயற்கை உண்மை எனும் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எல்லா உயிர்களும் காப்பாற்றப்படும்.


சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

காப்பாற்றப்படுவீர்கள்.


வள்ளலார் பாடல் ! 


எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல் இன்புறச் செயவும்


அவ்வுயிர் களுக்கு வரும் இடை யூற்றை அகற்றியே அச்சம் நீக் கிடவும்


செவ்வையுற்று உனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்று கூத் தாடி


ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே  ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.! 


மேலும் ஒருபாடல் ! 


எவ்வுயிரும் பொது எனக்கண் டிரங்கி உப

கரிக்கின்றார் யாவர் அந்தச்


*செவ்வியர் தம் செயல்அனைத்தும் திருவருளின்

செயல்எனவே தெரிந்தேன்* இங்கே


கவ்வை இலாத் திருநெறிஅத் திருவாளர்

தமக்கேவல் களிப்பால் செய்ய


ஒவ்வியதென் கருத்தவர் சீர் ஓதிட என்

வாய்மிகவும் ஊர்வ தாலோ.! 


மேலே கண்ட பாடலை படித்து உட்பொருளை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடித்தால் தீமைகள் நெருங்காது நன்மைகள் பெருகும்.


பிற உயிர்களை காப்பாற்றினால் தன் உயிரை தானே காப்பாற்றப்படும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வியாழன், 6 மே, 2021

வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் !

 *வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம்* ! 


தமிழக முதல்வர் மாண்புமிகு 

உயர்திரு 

மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் *வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேசமையம்* அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  சொல்லியவாறு நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு

சன்மார்க்க சான்றோர்கள் எதிர்பார்க்கிறோம்.


*உலகம் எல்லாம் போற்றும் தருணம்!*

இக்காலம் சன்மார்க்க காலம் இவற்றிற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது என்பது வள்ளலார் வாக்குமூலம்.


வள்ளலார் கொள்கையான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையானது* உலகம் எல்லாம் போற்றும் வகையில்  ஏற்று கொள்ளக் கூடியது.சாதி சமயம் மதம் அற்ற பொது நோக்கம் உடையது.


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்பதாகும். *ஒன்றே குலம் ஒருவனே தேவன்* என்ற உண்மையை கண்டு அறிந்து தெரிந்து தகுந்த *அறிவியல்* ஆதாரத்துடன் வெளிப்படுத்தி காட்டியுள்ளவர்


*பொது சமுதாயம்*!


*ஆன்மீகத்தில் அருள் புரட்சி செய்தவர்* 


*ஆன்மீகம் என்பது  உலகம் முழுவதும் ஒரேத் தன்மை ஒரே கொள்கை உள்ளதாக இருக்க வேண்டும்.* *இன்று ஆன்மீகம் என்பது கேலி கூத்தாக உள்ளது*. 


ஏற்ற தாழ்வு அற்ற பொது சமுதாயத்தையும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பாகுபாடு அற்ற. உயர்ந்த நிலையில் ஒற்றுமையுடன் வாழும் சமுதாயத்தை  உருவாக்க வேண்டும் என்பதே வள்ளாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். 


*ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும் என்பதே வள்ளலாரின் உயர்ந்த நோக்கமாகும்*.


தகுந்த ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு உலகம் முழுவதும் ஒரே கொள்கையை கொண்டு செல்வதே ஆன்மீகம் என்பதாகும். 


பொய்யான கற்பனை கடவுள்களையும்.

கற்பனை கதைகளையும் உலகம் முழுவதும் விதைத்து விட்டார்கள். ஆகையால் மக்கள் உண்மை அறியாமல்  ஆன்ம அறிவு வெளிப்படாமல் அறியாமையால் தவித்துக் கொண்டுள்ளார்கள். 


*தமிழக முதல்வர் அறிவிப்பு*


அதற்கு தகுந்தவாறு தற்போது தமிழக முதல்வராகும் திரு ஸ்டாலின் வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் *அருள்* செயலாகும்.


*வள்ளலார் பாடல்* !


அத்தா நான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்


*ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்*

*ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்*


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.! 


மேலே கண்ட பாடலிலே எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக விளக்கியுள்ளார். 


எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் முக்கிய லட்சியமாகும்.


*பசி பட்டினி வறுமை*  எனும் கொடூரமான இல்லாமை எனும் நிலைமையை உலக சமுதாயத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வள்ளலாரின் அடிப்படைக் கொள்கையாகும்.  


மெய்ப்பொருள் என்னும் இயற்கை உண்மை கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலார் வகுத்து தந்த பொது நோக்கமுள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் உண்மையை உலகம் முழுவதும் உள்ள மனிதர்களிடம் கொண்டு செல்ல  வேண்டும்  என்பதே வள்ளலாரின் அருள் நோக்கமாகும்.


*அழியாத சாகாக்கல்வி*


*உயர்ந்த அறிவுள்ள மனிதகுலத்தில் பிறந்தவர்கள் அழியும் கல்வியை தவிர்த்து அழியாச் சாகாக்கல்வியைக் கற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே ஆன்மீகத்தின் முடிந்த முடிவாகும் என்பதை கற்று தந்தவர். சொல்லியவாறு கற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார்* 


*உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்* ! 


ஆட்சி அதிகாரத்துடன் சட்டதிட்டத்தின் வழியாக வள்ளலாரின் கொள்கையை எவ்வித தந்திரமாவது செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 


மக்களுக்கு உயிர் இரக்கமான ஜீவ காருண்யத்தையும். தனிமனித ஒழுக்கத்தையும்.

சத்விசாரத்தின் வழியாக உண்மை கடவுளின் ஆன்மீகத்தையும்  போதித்து  நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


*வள்ளலார் பாடல் !*

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 


திலகன்என

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 


*உலக வரலாற்றில் இறைவனுடைய தலைமையில் நேரடி கண்காணிப்பில்  செயல்படும் ஒரே மார்க்கம் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*  எனும் அருள்நிறைந்த புனித மார்க்கமாகும்*  


*வள்ளலார் பாடல்!*


திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன் மார்க்கச்

சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லப சத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண்டு அருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறி வீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!  


*உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய திருநெறி என்பது ஒன்றே. அதுதான் இயற்கை உண்மையான கடவுளைத் தொடர்பு கொள்ளும் இயற்கை உண்மையான  ஆன்ம ஒளி நெறியாகும்* 


இந்த நெறியை தோற்றுவித்தவர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் *வடலூர் வள்ளலார்*   *வாடியப்பயிரைக் கண்டு வாடியவர்*.


*வடலூரில் தோற்றுவித்த அமைப்புகள்* 


*வள்ளலார் பிறந்த ஊர் மருதூர்*. 


*வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை*.


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*. 


*மற்றும் தண்ணீரில் விளக்கு எரித்த கருங்குழி*.


*வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம்*. 


*வள்ளலார் அருள் ஆற்றலால் உண்டான வற்றாத தீஞ்சுவை நீரோடை*


இவைகள் யாவும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மேற்பார்வையில் இயங்கி கொண்டு வருகிறது. 


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துள்ள அமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை  உரைநடையை எளிய தமிழில் எழுத்துவடிவிலும் திருஅருட்பா பாடல்களின் வாயிலாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். *இருந்தும் வள்ளலார் சொல்லிய வண்ணம் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் செயல்படவில்லை*


*தமிழக முதல்வர்*  


*வள்ளலார் கொள்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்.  *திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையில்*

*நாங்கள் வருகின்ற சட்டசபை தேர்தலில்  வெற்றி பெற்றால் வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்*


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும் பான்மையுடன்  அமோக வெற்றி பெற்று தமிழக  ஆட்சியை கைபற்றி உள்ளது.  


*தமிழக முதல்வராக பதவி ஏற்கும் மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்  சார்பாக வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*  


தேர்தல் அறிக்கையில் வள்ளலார் பெயரில் சரவதேச மையம் அமைக்கப்படும் என்ற செய்தியை கேட்டு தமிழகம் முழுவதும் எங்கள் வாக்குகளை மனப்பூர்வமாக அளித்து வெற்றி பெற வைத்துள்ளோம்.


தாங்கள் வடலூருக்கு நேரில் வந்து பார்த்து    வள்ளலாரின் கொள்கைகளை சன்மார்க்க சான்றோர்களின் கருத்துக்களை அறிந்து தெரிந்து தாங்கள் சொல்லியவாறு  வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஆவணச்செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


தங்களின் நல்லாட்சி தொடர்ந்து நடைபெறவும் நிலைபெறவும் வேணுமாய் எல்லாம் வல்ல  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி விண்ணப்பம் செய்து கொள்கிறோம். 


நல்லோர் நினைத்த நலம் பெறுக எல்லோரும் வாழ்க இசைந்து.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.