புதன், 30 அக்டோபர், 2019

இறைவனை அறிவது எங்கனம் !

இறைவனை அறிவது எப்படி !

மனித அறிவால் இறைவனைக் காணமுடியாது.

எல்லாம் வல்ல பரம்பொருளான
அருட்பெருஞ் ஜோதியாய் விளங்கிக் கொண்டும் அருள் வழங்கிக் கொண்டும் இருக்கும் இடம்..

வள்ளலார்பாடல் !

 எல்லாந்தான்  எல்லாம் வல்லதுவாய்
எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்

சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறி வாலும்
துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த

வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்

செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.!

எல்லாம் வல்லதுவாய் என்றால் ?எவைக்கும் ஈடூ இணை இல்லாதது என்று பொருள்.

அதற்குமேல் ஒன்றும் இல்லை. என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும்.நிலையானதும். எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருள் வல்லபத்தால் இயங்கி இயக்கிக்  கொண்டு இருக்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே.

திருசிற்றம்பலம் என்னும் அருட்பெருவெளியில் தன்னைத்தானே இயங்கி அருள் வழங்கும் ஒரே கடவுளாகும்.ஒரே தெய்வமாகும்.

அதுவே
*இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்
இயற்கை இன்பம்*

*எல்லாமே இயற்கையாய் உள்ளதுவே அருட்பெருஞ்ஜோதி யாகும்*

அந்த ஒப்பற்ற உயர்ந்த கடவுளை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவுக்கு தோன்றிய அறிவாலும்.அவர்கள் கண்டுபிடித்த
அளக்கும் கருவிகளாலும்  அளக்கவோ.கணக்கிடவோ. பார்க்கவோ. அங்கு செல்லவோ முடியாது.

*அது அளக்க அளக்க விரிந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது*. நெருங்கவே முடியாது.

அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக உள்நின்று இயங்கிக் கொண்டுள்ளது.

ஆன்மாவில் அருள் வெளிப்படும் போது மட்டுமே காணமுடியும்.அந்த அருள் ஐவகை சுவையோடு இருக்கும்.

*ஐந்தாவதாக உற்பத்தியாகும் அமுதம் மவுனா அமுமாகும்.இவை பக்குவ ஆனுபவ உணர்ச்சியால் கிடைக்கும் அமுதசுவையாகும்*.

அந்த அமுத்த்தை பெற்றவர் எவரோ அவரே எல்லா வல்லபமும் பெற்ற வல்லாளர்.

*வல்லாளர் அனுபவத்தே விளங்கும் என்கிறார் .அந்த வல்லாளர்  யார் ?*

எத்துனையும் பேதம் இல்லாது எல்லா உயிர்களையும் ஒன்றாகவே நினைந்து வாழ்பவர் எவரோ அவரே அனைத்தும் தெரிந்த வல்லபம் பெற்ற வல்லாளர் என்பவராகும்.

அந்த வல்லபம் பெற்றவரால் மட்டுமே அருளைப் பெற முடியும்.மரணத்தை வெல்லமுடியும்.அவருக்கு மட்டுமே அருள் அனுபவம் கிடைக்கும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகித் தன்னை மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த அருள் அனுபவம் பெற்ற ஆன்மாக்கள். அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போல் சொல்லாத இடங்களுக்கும் செல்லும் ஆற்றல் பெறும் தகுதியைப் பெறமுடியும் என்கிறார் வள்ளலார்.

சன்மார்க்கிகளாய் இருக்கும் நாம் வெளி வேடம் போடாமல்.குற்றம் குறைகள் செய்யாமல்.பிறர் பொருளைத் தொடாமல்.உலகப்பற்று எதிலும் பற்று வைக்காமல் .வள்ளலார் நமக்கு போதித்த .உண்மை ஒழுக்க நெறியை கடைபிடித்து .எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டு.

சத்விசாரம் பர உபகாரம் இடைவிடாது செய்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார். நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு களிக்கலாம்.

வள்ளலார் கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன் என்பார்.

நாமும் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று கடவுளைக் கண்டு பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

கடவுளைக் காணலாம் களிக்கலாம் கலந்து கொள்ளலாம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

சனி, 26 அக்டோபர், 2019

உயில்க்கொலையகத் தடுப்பதற்கு ஒரே வழி !

உயிர்க்கொலையைத் தடுப்பதற்கு ஒரே வழி !

கொலை செய்வதையும் மாமிசம் உண்பதை தடுப்பதற்கும் நீண்ட காலம் ஆகும் .நாட்டில் மாமிசம் உண்பவர்கள் அதிகரித்து கொண்டே உள்ளார்கள்.

சுத்த சன்மார்க்கிகள் பிரசாரத்தாலும் விளம்பரத்தாலும்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு உள்ளது சந்தோஷமான செய்தியாக இருந்தாலும் உயிர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.

ஜீவகாருண்யத்தின் முதல் பணி பசியைப் போக்குவது. பசியைப் போக்க நிறைய சன்மார்க்க சங்கங்களும்.தொண்டு நிறுவனங்களும்.
அரசாங்கமும் செய்து கொண்டுள்ளன.

சன்மார்க்கிகள் வாயில்லா உயிர்களைக் காப்பாற்ற என்ன செய்து கொண்டுள்ளார்கள். வாய் பேச்சால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது.மனிதர்களின் பசிப்பிணியைப் போக்க மட்டும் தருமச்சாலை அமைத்து உணவு வழங்குகிறார்கள்.

மனிதர்கள் தங்கள் முயற்சியால் உணவைத்தேடிக்கொள்வார்கள்.மனிதர்களுக்கு தற்சமயம் உணவுப்பஞ்சம் இல்லாமல்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் அனைவருக்கும் உணவு கிடைத்துக் கொண்டுள்ளது.

இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை.கொலைப்படும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

சன்மார்க்கிகளோ மற்ற ஜீவகாருண்ய இயக்கங்களோ.கொலை செய்ய கொண்டுபோகும் உயிர்களை காப்பாற்ற வேண்டும். அந்த உயிர்களின் மாமிசம் என்ன விலையோ அந்த விலையைக் கொடுத்து உயிர்ப்போகாமல் வாங்கி காப்பாற்ற வேண்டும்.

தற்சமயம் அதிகளவில் ஆடு.மாடு.கோழி.பன்றி.மீன்கள் போன்ற உயிர்களைக் கொன்று மாமிசம் விற்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு பொருளைக் கொடுத்து வாங்கி உயிர்போகாமல் அந்த உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

ஆடு மாடு கோழி பன்றி.மீன்கள் போன்ற உயிர்களை வாங்கி வளர்க்க காப்பாற்ற குறைந்த பட்சம் ஒரு ஜந்து ஏக்கர் நிலம் வேண்டும் அங்கு தண்ணீர் வசதி.கொட்டகை வசதி.மற்றும் இதர வசதிகள் செய்து கொள்ள வேண்டும்.. அவற்றை கவனிக்க.சம்பளத்தில் ஆட்களை நியமிக்க வேண்டும்..தாவர உணவு அங்கேயே தயாரிக்க வேண்டும்.பற்றாக்குறை ஏற்பட்டால் புல்பூண்டு வெளியில் வாங்கிக் கொள்ளலாம்.

விலைகொடுத்து வாங்கும் உயிர்களை அங்கே கொண்டு சென்று சிரம்ம் இல்லாமல் கொலைப்படாமல் காப்பாற்றுவதே பர ஜீவகாருண்யமாகும்.

இந்த முறையை பல மாவட்டங்களில் *வள்ளலார் உயிர்கள் பாதுகாப்பு சாலை* என்று பெயர் வைத்து ஆரம்பித்தால் முடிந்த அளவு உயிர்களைக் காப்பாற்றலாம்.

இவற்றை கவனிக்கிற மக்கள் மற்றும்.அரசாங்கம் உதவி உபகாரங்கள் செய்ய முன்வருவார்கள்.மக்களும் உயிர்க்கொலை செய்வதையும் புலால் உண்பதையும் உணர்ந்து ஜீவகாருண்ய ஒழுக்க நெறிக்கு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

அன்பு.தயவு கருணை உள்ளவர்கள் இதற்குண்டான இடம் இலவசமாக கொடுத்தால் புண்ணியத்தைப்பெற்று ஆன்மலாபம் அடைவார்கள்.

இந்த முயற்ச்சி சிறியதாக இருந்தாலும் உலகம் முழுவதும் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆதரவற்ற முதியோர்களுக்கு முதியோர் இல்லம் அமைப்பதுபோல்.கொலைப்படும் உயிர்களை காப்பாற்ற *வள்ளலார் உயிர்கள் பாதுகாப்பு சாலை* என்று தொடங்கி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

வடலூரில் பசிப்பிணியைப்போக்க வள்ளலார் தருமச்சாலை ஆரம்பித்ததுபோல் .*உயிர்ப்பிணியைப்போக்க* மாவட்டங்கள் தோறும் *வள்ளலார் உயிர்கள் பாதுகாப்பு சாலை*தோற்றுவிக்க வேண்டும்.

ஆரம்பித்தால் போதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் உயிர்கள் காப்பாற்றப்படும்.

வள்ளலார் சொல்லித்தந்த இந்த ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் உயிர்கள் காப்பாற்றப்படும்.மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும்.மக்கள் உண்மை உணர்ந்து ஒழுக்க நெறிக்கு வந்து விடுவார்கள்.

இதற்குண்டான முயற்சி யை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் கடைபிடிக்க வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்க வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வெள்ளி, 25 அக்டோபர், 2019

ஆன்மாவின் குடும்பம் !

*ஆன்மாவின் குடும்பம் !*

*ஆன்மாவிற்கு மனைவிமார்கள்   மூன்று பேர்கள்*

*அவர்களின் பெயர் ஆணவம் ,மாயை*,

*கன்மம்***. . . . . .

இந்த மூவரைத்தான் மூன்று மலங்கள் என்று சமயங்களில் சொல்லப்படுகின்றது.

வள்ளலார் ஐந்து மலங்கள் என்று சொல்லுகின்றார்.அவை.ஆணவம் மாயை.மாமாயை.பெருமாயை.கன்மம்.

என்பதாகும்.

ள்ளலார் சொல்லும் விபரம் வருமாறு !

*ஆணவம்* !

ஆன்மாவின் முதல் மனைவி ஆணவம் என்பதாகும்.

ஆணவம் என்பது ஆன்மாவின் துணைக்கருவியாகும்.அது இயற்கையானது.இறைவனால் இணைக்கப்பட்டது.ஆணவத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே பிரிக்கமுடியும்.

ஆன்மாவானது அருள் முழுமைப்பெற்று மரணத்தை வெல்லுகின்றவரை ஆணவம் ஆன்மாவை விட்டு விலகாது.

ஆணவத்திற்கும் ஆன்மாவிற்கும் பிறந்தது ஒரு குழந்தை அதன் பெயர் அஞ்ஞானம் என்றும் ,   ஜீவன் என்றும் உயிர் .என்றும் பெயராகும். .

*மாயை* !

உயிர் தோன்றியவுடன் ஆன்மா.ஆணவம்.உயிரைக்கவ்விக் கொள்வது மாயை என்பதாகும்.மாயைதான் பஞ்சபூத ஆணுக்களைக் கொண்டு உடம்பை கட்டிக் கொடுப்பதாகும்.அதனால் ஆன்மாவிற்கு இரண்டாவது மனைவி என்று பெயர்.

இரண்டாவது மனைவி மாயை ! மாயையைக்குப்  பிறந்த குழந்தைகள் நான்கு பேர், அவர்கள் பெயர்  ,

*மனம் புத்தி, சித்தம் ,அகங்காரம் என்பவர்களாகும்.*

*கன்ம்ம்* (காமியம்) *!

மூன்றாவது மனைவி காமியம் என்றும் கன்மம் என்று பெயர்.!

கன்மத்திற்குப் பிறந்த குழந்தைகள் *சத்துவம் ,ராஜசம் ,,தாமசம்* *என்னும் மூன்று குழந்தைகள் அவைகள்தான் மூன்று குணங்கள் .என்பதாகும் ,
குடும்ப உறுப்பினர்கள் ஆன்மாவை சேர்த்து 12, *பண்ணிரெண்டு நபர்கள்* .

ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்தில் வாழ்வதற்கு மாயையினால் தான் உடம்பு என்னும் வாடகை வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது

*உடம்பு வாடகை வீடு* !

இந்த உலகத்தில் ஆன்மாவின் குடும்பம் வாழவதற்கு வீடு வேண்டும் .வீடுதான் பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பாகும்.அதற்கு வாடகை வீடு(குடிக்கூலிவீடு) என்று பெயர் ,இந்த வீட்டின் தலைவர்கள் மூன்று பேர் ,

அவர்களின் பெயர் , *வாதம். பித்தம் சிலேஷ்மம்* என்பதாகும் ,

ஆன்மா வாடகை உடம்பு என்னும் வீட்டில் குடித்தனம் நடத்த தினமும் மூன்று வேலையும் உணவு என்னும்  பொருள் வாடகையாக கொடுக்க வேண்டும் .

வாடகை வசூல் செய்பவர்கள் மூன்று பேர் ,அவர்கள் தான் *வாதம் பித்தம் சிலேஷ்மங்கள்* என்னும் தயவே இல்லாமல் தினமும் வசூல் செய்பவர்கள்

வாடகை என்பது தான் *உணவு*

பிண்டம் என்னும் பெரும் கூலி வாங்குபவர்கள் .

இவர்கள் செய்யும் கொடுமைகள் அளவில் அடங்காதது ,இவர்களுக்காக உழைத்து உழைத்து வாழ்நாள் எல்லாம் வருந்தி வருந்தி ,அலைந்து அலைந்து ,திரிந்து திரிந்து ,வயது முதிர்ந்து நோய் வாய்பட்டு இறுதியில்.உணவு என்னும் வாடகை கொடுக்க முடியாமல் மரணம் என்னும் பெரும்பிணி வந்து விடுகின்றது.

வீட்டை விட்டு ஆன்மா வெளியேறி வேறு வாடகை வீட்டிற்கு செல்வதுதான் மறுபிறப்பு என்பதாகும்.

மேலும் வழி தெரியாமல் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வாழந்து வாழ்ந்து.பிறவி எடுத்துக்  கொண்டே இருக்கின்றோம். .

உணவு என்னும் வாடகை  உடம்பிற்குள் செலுத்த முடியாமல் கொடுக்காமல். மரணம் வந்து விடுகின்றது.

*சொந்த வீடு கட்டிக்கொண்டால் வாடகை வீடு தேவை இல்லை*.

அருளைப்பெற்று சொந்த வீடாக மாற்றும் வழியைச் சொல்லிக் கொடுப்பதுதான் .வள்ளலார் கற்றுக் கொடுக்கும் *சாகாக்கல்வி* என்பதாகும்.

*சாகாக்கல்வி கற்று தேர்ச்சி பெற்றால் தான் அருள் என்னும் உணவு கிடைக்கும்*.அருள் உணவு கிடைக்கும் வரை பொருள் உணவு அவசியம் தேவை.்

உணவு கொடுத்துக் கொண்டே இருந்தாலும் மரணம் வந்துவிடும்.
கொடுக்காமல் இருந்தாலும் மரணம் வந்துவிடும்.

இவ்வுலகில் வாழ்வதற்கு பொருள் உணவு வேண்டும். இறைவன் இருக்கும் அருள் உலகத்திற்கு செல்ல அருள் உணவு வேண்டும்.

*அருள் உணவு உட்கொண்டால் மட்டுமே மரணத்தை வென்று.என்றும் அழியாத பேரின்ப சித்திப்  பெருவாழ்வில் வாழ முடியும்*..
*இறைவனுடன் கலக்க முடியும்*.

இந்த அருள் வாழ்க்கை வாழும் வகை தெரியாமல்.சமய  மதவாதிகள் வந்து மக்களைக் குழப்பி விட்டார்கள்.மக்களும் உண்மைத் தெரியாமல் இன்றுவரை பைத்தியம் பிடித்தவர்கள் போல் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் சொல்லுவதை கவனியுங்கள்....

*மதவாதிகள் வருகை* !

மற்போர்க்கு கருதி வந்தவர் போல

ஒதும் வேதாந்தம் உரைப்பவர் சிலபேர்

வாள் போருக்கு வந்தவர் போல

வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்

தண்டாயுதப் போர் தாங்குவர் போல

இதிகாசத்தை இசைப்பவர் சிலபேர்

உலக்கைப் போரை உற்றார் போல

இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்

கற்போர் விளக்கக் காட்டுவார் போலச்

சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்

வாய்ப் போருக்கு வந்தவர் போல

விவகாரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போருக்கு வந்தவர் போல

மத தூஷணைகள் வழங்குவர் சிலபேர்

கட் குடியர் வந்து கலக்குதல் போலக்்

காம நூலைக் கழற்றுவர் சிலபேர்

விழற்கு நீரை விடுவார் போல

வீண் கதை பேச விழைவார் சில பேர்

இவர்கள் முன்பு நான் என்ன செய்ய !

இவர்கள் முன்னே இவர்களுக்கு ஏற்ப குரல் கம்மிடவும் ,குறுநா உலரவும் ,அழலை எழவும் அவரவர் தம்பால்

சமயோதிதமாய்ச் சந்ததம் பேசி இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன் .என்று வள்ளலார் "*குடும்ப கோரம்" "என்ற தலைப்பில் பதிவு செய்து உள்ளார் .

அடுத்து நித்திய கருமம் !

இந்த ஆன்மா என்ற குடும்பத்தில் நித்தியம் செய்ய வேண்டிய கருமங்கள் உள்ளன .

தினமும் மனையின் பின்புறத்தே ஏகிக் கலக்கும் மலத்தைத் கடிதே கழித்துக்

கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று பல்லில் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல ,வெண் சோமனைத் துவைத்து ,நன்னீர் ஆடி நறுமலர் கொய்து .தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்

பாவையை வைத்துப் பாடி ஆடும் சிறாரைப் போல செய்பணி யாற்றி ,

*மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல் வெண்ணீர் அதனை விளங்கப் பூசி ,புகழ் ருத்தராட்சி மாலையைப் உருட்டி உருட்டிக் குரண்டகம் போன்று குறித்த யோகம் செய்து*

செய்த பின்னர் சிறிது நேரம் தூக்கம் வரும்போது பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி ,ஊன் பிண்டத்திற்கு உறு பிண்டம் ஈந்து ,குடிக்கூலிக் கடனை குறையறத் தீர்த்துப் பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது. இதுவே மனித வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதுதான் இன்று உள்ள உலகியல் மனித வாழ்க்கை ,

இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து

விடுபட்டு.உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெரு வாழ்க்கை வாழ வேண்டும் எனபதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்தான வள்ளலார் .

*வள்ளலார்  காட்டிய பாதை தான் நேர் பாதையாகும்* .அதுதான் " *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்னும் திரு நெறியாகும். உண்மையான.தந்தையாகிய **அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை** அறிந்து அருளைப் பெற்று உயிரையும் உடம்பையும் அழியாமல் மாற்றிக் கொள்ளும் வழியாகும்.

இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும்.

*ஜீவகாருண்ய ஒழுக்கமும் *சத்விசாரம்* என்னும் இரண்டு வழியாகத்தான் இறைவனைத் தொடர்பும் கொள்ள முடியும்

இந்தப் பாதை சாதி் சமயம். மதம் இனம் மொழி் நாடு போன்ற பேதங்கள் இல்லாத பொது புது திரு நெறியாகும்.புதிய பாதையாகும்.

*ஒரே கடவுள் என்ற உண்மைக் கொள்கை உடையதாகும்*

*அந்த ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்*** .அவர் உருவம் அற்றவர் ,அருள் ஒளியாக அருள் பிரகாசமாக விளங்கிக் கொண்டு உள்ளவர் .

*அவர்தான் தாயாகவும் தந்தையாகவும் நம்மை ஆண்டு கொண்டு உள்ளவர்* .இதுவரையில் நமக்கு தெரியாமல் இருந்தவர் .வள்ளலார் வந்து தான் அருள் தரும் உண்மைத் தந்தையை நமக்கு காட்டி உள்ளார் .

இனிமேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு நாம் அனைவரும் அருளைப்பெற்று.வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றி மகிழ்ச்சியுடன் வாழவதற்காகவே மனித்தேகம் கொடுக்கப்பட்டுள்ளது.

*பஞ்ச பூத உடம்பை சொந்த வீடான அருள் உடம்பாக மாற்ற சில பல உளவுகள் சொல்லி உள்ளார்*.அந்த உளவுப்பற்றி திருஅருட்பாவில் பல இடங்களில் சொல்லி உள்ளார்..

அந்த உளவு என்ன என்று தெரியாமல் இருக்கும் வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்...

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

*உளவினில்* அறிந்தால்  ஒழிய  மற்று அளக்கின் அளவினில் அளவு அருட்பெருஞ்ஜோதி !

மேலும்

உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண *உளவு* எனக்கே உரைத்தானை

உணரார் பாட்டைக்
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கும் கொண்டானைக்

கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத்

தள்ளானைக் கொலை புலையைத் தள்ள தாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி

எள்ளானை யிடர் தவிர்த்து இங்கு என்னையாண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !

என்றும் மேலும்..

சேர்ந்திடவே யொருப்படுமின் சமரச சன்மார்க்கம் திருநெறியே பெரு நெறியாஞ் சித்தி எலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் *உளவை* அறிந்திலிரே

வாழ்ந்த கடல் உலகறிய மரணம் முண்டே யந்தோ மரணம் என்றாற் சடம் எனும்ஓர் திரணமுஞ் சம்மதியாது

சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாங் கண்டீர்

தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே !

என்று பல *உளவு* களைச் வள்ளலார் சொல்லி உள்ளார்.அந்த உளவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

மேலும் அகவலில்...

பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே !

பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே !

சிவரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே நவநிலை காட்டிய ஞான சற்குருவே !

என்று உளவையும் ரகசியத்தையும் தெளிவுப் படுத்தி உள்ளார்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அந்த உளவை அறிந்து கொண்டு அருளைப் பூரணமாகப் பெற்று வள்ளல் பெருமான் மரணத்தை வென்று ஒளி உடம்பாக தன் உடம்பை மாற்றிக் கொண்டார்.

நாமும் அந்த உளவைத் தெரிந்து கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம் .

*நாம் இதுவரையில் உளவு தெரியாமல் .மரணத்தை வெல்லத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றோம்* இனிமேல் தெரிந்து கொள்வோம்.

இதுவே ஆன்மாவின் குடும்ப வரலாறாகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

தொடரும்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

9865939896

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகள் !

*சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டும் !*

ஒழுக்க நெறிகளை கடைபிடிக்காமல் மேலே ஏறுவது கடினம்...

சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் *இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம்* என நான்கு வகைப்படும்.

அவற்றுள் இந்திரிய ஒழுக்கம் என்பது - நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும்; இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.

கரண ஒழுக்கம் என்பது - சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.

ஜீவ ஒழுக்கம் என்பது - எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.

ஆன்ம ஒழுக்கம் என்பது - எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.

இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா. ஆதலால்,7 அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும். அன்றியும்-

இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும். அன்றியும்-

சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும்,

வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம். ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும். அன்றியும்-

உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று,

உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று, சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்; உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய்,

எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன்

விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்; ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:

நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் - வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.

இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.

இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி யென்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம்.

மேலே கண்டபடி தள்ள வேண்டியவற்றை தள்ளியும்.கொள்ள வேண்டியவற்றை கொள்ளவும் நின்றால் பெற வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896

ஆன்மாக்களின் வாழ்க்கை !

*ஆன்மாக்களின் வாழ்க்கை !*

நீண்ட கட்டுரை பொறுமையாற படியுங்கள்...

ஆன்மா என்பது அருள் பெறாத சிற்றணு வடிவமானது.ஆனாலும் அவை கோடி சூரிய பிரகாச ஒளித் தன்மை உடையது.

அந்த ஆன்மா இருந்த இடம்... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடமான அருட்பெருவெளி என்ற இடத்தின் ஒரு பகுதியில் ஆன்மாக்கள் நிறைந்து சூழ்ந்து இருக்கும்.ஆன்மாக்கள் இருக்கும் இடத்திற்கு *ஆன்ம ஆகாயம்* என்று பெயர்..

அந்த இடத்தில் தான் ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.

அருள் நிறைந்த பெருவெளி என்னும் இடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
*இயற்கை உண்மை* .
*இயற்கை விளக்கம்*.
*இயற்கை இன்பம்*

போன்ற இயற்கையான மூன்று விதமான ஆற்றல்களை தன் வசமாக வைத்துக்கொண்டு இருப்பதால் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்னும் பெயர் பெற்றுள்ளார்.   அளவில் அடங்காத அருள்பெரும் ஆற்றல் நிறைந்த தன்மைகளைக் கொண்டவர்

பலகோடி ஆண்டங்களையும்.உலகங்களையும் படைத்தவரும் அவரே ..

பலகோடி ஆண்டங்களையும் உலகங்களையும் படைத்ததின் நோக்கம் அதன் காரணம் காரியம் தெரிந்து கொண்டால் மட்டுமே உண்மை விளங்கும்.

ஆன்மாக்கள் வாழ்வதற்கும் அருளைப் பெறுவதற்கும் தேவையான வசதி வாய்ப்புக்கள் வேண்டும் என்பதற்காகவே பஞ்ச பூத உலகம் படைக்கப்பட்டதாகும். ! அதற்கு காரிய காரண பஞ்சபூத உலகம் என்று பெயர்.

ஆன்மாக்கள் அருளைப் பெற வேண்டிய அவசியம் ஏன் ? என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் நாம் யார் என்ற உண்மை விளங்கும்....

*ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் !*

ஆன்மாக்கள் எங்கு இருந்தன என்பதை மேலே தெரிவித்து உள்ளோம்.

அந்த ஆன்மாக்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் விளங்குகின்ற *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* அருட்பெரு வெளியில் அருகில் இருந்தும்.ஆன்மாக்கள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண்பதற்கும் தொடர்பு கொள்வதற்கும் வாய்ப்புகளே இல்லை.

அந்த ஆன்மாக்கள் தன் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்றால் தான்  தொடர்பு கொள்ள முடியும். அருளைப் பெறுவதற்கும் பேரின்பசித்திப் பெருவாழ்வு வாழ்வதற்கும் உயர்ந்த அறிவுள்ள மனிததேகம் அவசியம் தேவைப்படுகின்றது.

ஆன்மாக்களின் பூலோக வாழ்க்கை !

ஆன்மாக்கள் முதிர்ச்சியும்.அறிவும் அனுபவமும் பெற்றுக்கொள்ள.
தாவரம்.ஊர்வன.
பறப்பன.நடப்பன.அசுரர்.தேவர்.மனிதர் என ஏழு பிறப்பு எடுக்க பஞ்சபூத உலகில் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன

ஆன்மாக்கள் பஞ்ச பூத உலகில் வந்து உயிர் பெற்று உடம்பு எடுத்து.ஏழு பிறப்பிலும் தேர்ச்சி பெற்று. இறுதியான மனிதப்பிறப்பில்.  இன்பம் துன்பம் அனுபவித்து ..

அதாவது
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் நான்கு காலங்களில்  அனுபவித்து பின்பு பற்று அற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்றால்தான் ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி யைக் கண்டு அதன் மயமாக மாற முடியும்...

ஆன்மாக்கள் உயிர் உடம்பை அருளின் வல்லபத்தால் அருள்ஒளி உடம்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே அருள் வழங்கும் தகுதி உடையவர்*.

இந்த உண்மைத் தெரியாமல் சமய மதவாதிகள் தவறான தத்துவக் கடவுள்களான உருவங்களை படைத்து சரியை.கிரியை.யோகம் போன்ற பக்தி என்னும்  குறுக்கு வழியைக் காட்டி ஆன்மாக்களை  அலைய விட்டு விட்டார்கள்.ஆன்மாக்களுக்கு ஞானம் என்னும் அறிவு அருள் வழியைக் காட்டவில்லை. காண்பதற்கு உண்டான அருளை அவர்களால் பெறமுடியவில்லை.

ஆன்மாக்களுக்கு சொர்க்கம்.நரகம்.கைலாயம்.
வைகுண்டம்.முத்தி பரலோகம்.போன்ற பதப்பிராப்திகள் எதுவும் வேண்டியதில்லை. இவைகள் எல்லாம் மனித உடம்பிலே உள்ளன.

ஆன்மாக்கள் முக்கியமாக அவசியம் பெற வேண்டியது .எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முழுமையான அருளைப் பெறுதலே அதன் முக்கிய கடமையாகும் கட்டளையாகும் .அதுவே இயற்கையின் சட்டமாகும்.

*ஆன்மாக்களுக்கு உண்மையான நேர் வழிக் காட்டவே ஒரு பக்குவமுள்ள ஆன்மா இங்கு வருகின்றது.*

அந்த  பக்குவம் உள்ள ஆன்மாவைத் தேர்வு செய்து உலகிற்கு அனுப்பி வைத்தவர்தான்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். ..

இந்த பஞ்சபூத உலகிற்கு வந்த அந்த பக்குவ ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் பஞ்ச பூத உடம்பை எடுத்து .வாழ்ந்து.அருளைப் பெற்று.பஞ்ச பூத உடம்பை.அருள் நிறைம்பிய  ஒளி உடம்பாக மாற்றி. மரணத்தை வென்று இறைவனிடம் தொடர்பு கொண்டு இறை நிலையை அடைந்த அந்த ஆன்மாவின் பெயர்தான் உலகியலில் வைத்த பெயர் இராமலிங்கம் என்பதாகும்.

அருள்பெற்று மரணத்தை வென்ற பின் திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் சூட்டப்பட்டதாகும்.

அவரைப்போல் ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து அருளைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதற்காகவே ஆன்மாக்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பஞ்ச பூத உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

*ஆன்மாக்கள் இந்த உலகத்தை விட்டு வெளியே செல்வது எங்கனம் ?*

*இந்த உலகம் ஒரு கோழிமுட்டை வடிவமானது*..
பலகோடி மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது..

*அதேபோல் தான் ஆன்மா இந்த பூத உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளன*.

இந்த அண்டத்திற்குள்  வால்அணு. திரவ அணு.குருஅணு.லகுஅணு.அணு.பரமாணு.விபு அணு..என ஏழு விதமான அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் நிறைந்துள்ளது.

சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் போன்ற கிரகங்கள் அனைத்தும் தன்னைத்தானே தன் கடமைகளை ஆற்றிக்கொண்டுள்ளன.
எல்லாமே ஐந்து வண்ண ஒளித்தன்மை உடையதாகும்.

இந்த அணுக்களின் பல வகையான ஒளி வண்ணத்தின் தொடர்பால் எல்லா ஆன்மாக்களுக்கும் உயிர்.உடல் தோற்றம் பல வண்ணங்களாக.பல வடிவங்களாக பின்னப்பட்டுள்ளன.

ஆன்மா உயிர் இரண்டும் ஒளித்தன்மை உடையது..ஆன்மா குடியிருக்கும் வீடு என்னும் உடம்பு மட்டும் அணுக்களின் சேர்க்கைக்கு தக்கவாறு உரு மாற்றங்கள் வெவ்வேறு விதமான வண்ணங்களும் வடிவங்களுடன் படைக்கப் படுகின்றன.

உயர்ந்த அறிவு !

இந்த உலகத்தில் உயர்ந்த இறுதிப் பிறப்பான மனித தேகத்திற்கு மட்டுமே உயர்ந்த அறிவு வழங்கப் பட்டுள்ளன.

எதற்காக உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டது ஏன் ? என்றால்.உண்மையை அறிவால் அறிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  தன்னை உணர்ந்து.தன் தலைவனை அறிந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று இறை நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப்பட்டது.

*கோடி சூரியப் பிரகாசம் உஷ்ணம் உள்ள ஆன்மா..அருள் பிரகாசமாக மாற்றம் அடைய வேண்டும்*. அதற்கு அருள் சுதந்திரம் என்று பெயர்.

*கருணையின் மொத்த உருவமே அருள் பிரகாசமாகும்*.

அதனால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *தனிப்பெருங் கருணை* வாய்ந்தவர் என்று சொல்லப்படுகின்றது.

ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள அதன் தன்மையாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எவ்வாறு மாற்றிக் கொள்வது !

இந்த உண்மையைத் தான் வள்ளலார். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சத்திய* விண்ணப்பத்தில்* நமக்குத் தெரிவிக்கின்றார்.

கவனமாக படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.!

*சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.*!

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த *சிவானுபவ ஞானசபையில்*,

இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை *எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே* செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!

இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற *மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம்* முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு

*எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும்* தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி *இத்தேகத்தை நித்திய தேகமாக்கி* எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய *கடவுளது திருவருட் சுதந்திரம்* ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் *தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம்* என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்.

கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, *மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம்* முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, *இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி* எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!

மேலே கண்ட விண்ணப்பத்தில் கண்டபடி.இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு கொடுத்த சுதந்தரத்தினால் பிணி.மூப்பு .பயம்.துன்பம்.மரணம். போன்ற அவத்தைகள் வந்து இறந்து இறந்து .பிறந்து பிறந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்து கொண்டேன்..

எனவே நமக்கு இறைவனால் கிடைத்த  தேகசுதந்திரம்..போக சுதந்திரம்.ஜீவசுதந்திரம் என்னும் மூவவை சுதந்திரத்தையும்.
திருப்பிக் கொடுத்துவிட்டு *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் திருவருட் சுதந்திரம்* பெற்றால் மட்டுமே மரணத்தை வென்று என்றும் அழியாத  பேரின்ப சித்திப்  பெருவாழ்வு ஆன்மாக்கள் வாழமுடியும்.

இதுவே ஆன்மாக்களின் இயற்கை உண்மை வாழ்க்கையாகும்...

பொய்யை ஒழித்து மெய்யை உணர்ந்து வாழ்வோம்.

*பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மற்றாடும் ஐயரைக் கண்டேனடி* என்று வள்ளலார்  அழுத்தமாக சொல்லி உள்ளார்.

ஆன்மாக்கள் பூத தேகத்தை விட்டு அருள் தேகத்தைப் பெற்றால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு வெளியே செல்லமுடியும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அருள் கண்களால் காணமுடியும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி அளித்தால் மட்டுமே.
அண்டகோடிகள் எல்லாம் ஊடுருவி செல்லும் ஆற்றல் ஆன்மாவிற்கு கிடைக்கும்.  வேறு எந்த வழியாலும் செல்ல வாய்ப்பே இல்லை.

வள்ளலார் பாடல் !

*அண்ட கோடி அனைத்தும் காணுங் கண்கள் எய்தியே*
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே
பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே
பேசிப் பேசி வியக்கின்றேன் இப்பிறவி தன்னையே !

என்னும் பாடலிலே தான் கண்ட காட்சியைத் தெளிவாக விளக்குகறார் வள்ளலார்..

மேலும் நம்மை அன்புடன் அழைக்கின்றார்

வள்ளலார் பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்பின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனக வடிவமாகிப்

பொன்புடை நன்கொளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற் கரிதாம் மணியே சிற்சபையின் மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்த்தே !

என்னும் ஞானசரியை பாடலிலே எளிய தமிழில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

* *சாதி சமய மதம் போன்ற தடைகளை தவிர்ப்போம்*. *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்* மெய்வழியை பின்பற்றுவோம்*

எல்லா ஆன்மாக்களும் இன்புற்று வாழ்க !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

சனி, 19 அக்டோபர், 2019

வாழ்த்து மடல் !

*வாழ்த்து மடல் !*

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!

மலேசியா நாட்டின் பெக்கான் கர்ணி(சிம்பாங் தீகா ) சத்தியவான் பேராக் என்னும் இடத்தில்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவித்த ஆணைப்படி *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை*  அழகிய அருள் தோற்றத்துடன் தோற்றுவிக்கப்படுகின்றது.

அதன் நன்னீராட்டு விழா 14-12-2019 ..15-12-2019 ஆகிய இரண்டு நாட்கள் அருள் சார்ந்த சான்றோர்கள் முன்னிலையில் விழா நடைபெற உள்ளது.

அத்திரு அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை தோற்றுவிக்க  பெருமளவு உடலாலும் உள்ளத்தாலும் அயராது பாடுபட்டுக் கொண்டு இருக்கும் *அருள் திரு இந்துபாபா* அவர்களுக்கு நீண்ட ஆயுளும்.நிறைந்த செல்வமும்.அழியாப் புகழும் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபையை தோற்றுவிக்க ஆண்டவரின் அருள் ஆசியோடு தலைமை ஏற்று அளவில்லா பொருள் உதவி வாரி வழங்கி. அத்திரு அலங்காரப்பணியை மகிழ்ச்சியுடன் செய்துவரும் *திரு. திருமதி. வனிதா திருமலை* அவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்.அயலார் அனைவருக்கும் எல்லாம் வல்ல *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்குறு தீமையும் தொடராமல்* இரவும் பகலும் பாதுகாத்து அருள் வழங்க வேணுமாய் தாழ்வணங்கி சாற்றுகின்றோம்.

மேலும்.

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை என்று குறிக்கப்படுகின்ற ஞானசபையை அடையாளமாக திருவருள் குறிப்பால்  இங்கே தோற்றுவிக்கப்படுகின்றோம்.அதிலே அமர்ந்து அளவு கடந்த நெடுங்காலம் *சித்தி எல்லாம் விளங்கத் திருவருள் திருநடம்* செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

அத்திருவருள் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையைக் கருதும் தோறும் பெங்களிப்பு அடைகின்றோம்.

இனி அத்திரு *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபையை* அலங்கரிக்கத் தொடங்குகின்றோம்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே* !

தேவரீர் அருள் உருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்வித்த்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தல் வேண்டும்.

சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே !

அத்திரு அலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி *அற்புதத் திருவருள் விளக்கத்தால்* எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி. உண்மை அறிவை விளக்கி. உண்மை இன்பத்தை அளித்து. *சமரச சுத்த சன்மார்க்க நிலையில்* வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*

இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின்* முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய *ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
சென்னை.வடலூர்
தமிழ்நாடு
9865939896.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமை !

(விழா மலருக்கு கட்டுரை)

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமை!*

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!

*ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம்*.

உயர்ந்த அறிவுடைய மனித தேகத்தைப் பெற்ற அனைவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டு இராதீர்கள்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமை* உலகம் எங்கும் பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.காலம் உள்ளபோதே அறிந்து தெரிந்து உணர்ந்து அனுபவித்து அருளைப்பெற்று. ஆன்ம இன்ப லாபமான பேரின்ப சித்திப்
பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு இதுவே நல்ல தருணமாக இருக்கின்றது.

*மலேசியா நாட்டின் மக்கள் நலன் கருதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றார்.*

இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மலேசியா நாட்டின் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அங்கத்தினர்களின் நலன் கருதி* வருகை புரிகின்றார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *இயற்கை விளக்கம்* என்னும் அருள் வழங்கவும். *இயற்கை இன்பம்*  என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்க்கை வழங்குவதற்காக...

*அருட்பேரொளி அருட்பெரும் ஜோதி சபை* தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அந்த சபையின் *ஞானசிங்காதன மேடையின் பீடத்தில்* அமர்ந்து மலேசியா நாட்டு மக்களுக்கு அருள் வழங்கும் தருணமாக அமைந்திருக்கின்றது.

*இது நல்ல தருணம்*.... அருள் செய்ய இது நல்ல தருணம் !

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்லவரமே! என்று.
*அருட்பெருஞ்ஜோதி* ஆண்டவரை அழைத்து சத்திய ஞானசபையில்  அமரவைத்தார் வள்ளல்பெருமான். அவர் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்ந்து  மக்களுக்கு அருள் வழங்கிக் கொண்டே உள்ளார்.

அதேப்போல *வருவார் அழைத்துவாடி* மலேசியா நாட்டிற்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்ற ஏக்கத்தோடு *சன்மார்க்க சங்கங்களின் அன்பர்கள்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வள்ளலாரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் வள்ளலார் கலந்து கொண்டார்.வள்ளலார் வேறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறு அல்ல. *இருவரும் ஒன்றாகி விட்டார்கள்* *வள்ளலார் நிச்சயம் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் மலேசியா நாட்டிற்கு வருவார்*.
அனைவருக்கும் அருள் வழங்குவார். சந்தேகம் வேண்டாம் *இது சத்தியம்* *இது சத்தியம்*.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அங்கும் இருப்பார்.இங்கும் இருப்பார்.எங்கும் நீக்கமற  நிறைந்தும் இருப்பார்.

வள்ளலார் பாடல் !

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
மாளாத ஆக்கைப் பெற்றேன்

கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவு கின்றேன்

பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
அன்பினொடும் பாடிப் பாடி

நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன்
எண்ணம் எலாம் நிரம்பி னேனே !

என்னும் பாடல் வரிகளிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மகிமையைப் பற்றி வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளார்.

சன்மார்க்கப் பெரும்பதி வருகை .
பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம் 12 ம் தேதி – 12 4.1871 .
*வள்ளல்பெருமான் வெளியிட்டவை* !

சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் . இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை . தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும் .

பலவகைப்பட்ட
சமய பேதங்களும் , சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும் , ஆசார பேதங் களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் . அது கடவுள் சம்மதம் .
இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற

பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கா்த்தா்கள் , மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல !  .

இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத்தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதி .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை . பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள் அஞ்சவேண்டாம் .  இதுவே *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமையாகும்*

மேலும்

சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872 ஆம் ஆண்டு வெளியிட்டது.

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற  நண்பர்களே!
அறிவு வந்த காலம் முதல்

அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,

அடைந்து   அறியாத அற்புத குணங்களையும்,

கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,

செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,       

கண்டு  அறியாத அற்புதக்காட்சிகளையும்.
அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்.,

இத்தருணந் தொடங்கிக் கிடைக்கப்  பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்பு உடையேனாகி  இருக்கின்றேன்.

நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது *சுத்த சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.*

இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும்,

இயற்கையிற்றானே யுள்ளவராய்  விளங்குகின்றவர் என்றும்,

இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும்,

எல்லா 
அண்டங்களையும்,
எல்லா உலகங்களையும்,
எல்லாப் பதங்களையும்,
எல்லாச்சத்திகளையும்,
எல்லாச்  சத்தர்களையும்,
எல்லாக் கலைகளையும்,
எல்லாப் பொருள்களையும்,
எல்லாத் தத்துவங்களையும்,
எல்லாத் தத்துவி களையும்,
எல்லா உயிர்களையும்,
எல்லாச் செயல்களையும்.
எல்லா இச்சைகளையும்,
எல்லா ஞானங்களையும்,
எல்லாப் பயன்களையும்,

எல்லா
அனுபவங்களையும்
மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால்

*தோற்றுவித்தல்*,
*வாழ்வித்தல்*,
*குற்றம் நீக்குவித்தல்*,
*பக்குவம் வருவித்தல்,*
*விளக்கஞ்*
*செய்வித்தல்*,

முதலிய
பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும்,

எல்லாம் ஆனவரென்றும்,

ஒன்றும் அல்லாதவரென்றும்,

சர்வகாருணிய ரென்றும்,

சர்வவல்லபரென்றும்,
எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும்
ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந்தலைமை *அருட்பெருஞ்ஜோதியர்* என்றும்
சத்திய அறிவால்அறியப்படுகின்ற *உண்மைக் கடவுள் ஒருவரே* அகம் அகப்புறம். புறம் புறப்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில்* அறிவார் அறியும் வண்ணங்க  எல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு    விளங்குகின்ற *ஒருவரேயாகிய கடவுளை* இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய  சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற்
பலவேறு  சமயங்களிலும்.   
பல்வேறு மதங்களிலும்.
பலவேறு மார்க்கங்களிலும்.
பல வேறு லட்சியங்களைக் கொண்டு,நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி  விரைந்து விரைந்து பல் வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்திறந்து வீண்  போகின்றார்கள்.

*இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்*,

*உண்மையறிவு,*
*உண்மையன்பு,*
*உண்மையிரக்கம்* முதலிய
சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் . உண்மைப்பொது நெறியாகி விளங்குஞ் *சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று*, பெருஞ் சுகத்தைதயும். பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த *உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற *ஓர் ஞானசபையை* இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து

இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்த வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர் பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும்  அடைவீர்கள்..

மேலே கண்டபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மலேசியா நாட்டு மக்களுக்காக *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபைக்குள்* வந்து அமர்ந்து அருள் வழங்குவார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்.

*இது சத்தியம். சத்தியம்.சத்தியம்*

இது ஆண்டவர் கட்டளை. *இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அற்புத மகிமையாகும்*.

எல்லோருக்கும் தாய்.தந்தை.அண்ணன்.தம்பி.முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ.அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்
*இது ஆண்டவர் கட்டளை*.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் அத் தினங்கள் எலாம் இன்பம் உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலாஉலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்
திருவருட் செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறுயே உலகம் எல்லாம் ஓங்குக !

*அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவர் அருள் மகிமை உலகம் எல்லாம் ஓங்குக !*

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
D.Block.Flat No 109.
S&P living Spaces.
காமராஜர் ரோடு. அயனம்பாக்கம்.
சென்னை- 600095 தமிழ்நாடு
கைபேசி..986593996

புதன், 16 அக்டோபர், 2019

அருட்பெருஞ்ஜோதியும் வள்ளலாரும் !

அருட் பெரும் ஜோதி பாகம் ;-1

         உலகத்தினிடத்தே பெருதற்க்கு மிகவும் அருமையாகிய மனித

தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் 

ஒழுகவேண்டுவதும் யாதெனில்;--

         இயற்கைத்தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும், இயற்கையில்த் 

தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் ,இரண்டும் படாத பூரண இன்பமானவர்

என்றும் எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்

எல்லா சத்திகளையும் ,எல்லா சத்தர்களையும்,எல்லா கலைகளையும் ,எல்லா

பொருள்களையும் ,எல்லா தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும் ,எல்லா

செயல்களையும் ,எல்லா இச்சைகளையும் ,எல்லா ஞானம்களையும்,எல்லா

பயன்களையும் ,எல்லா அனுபவங்களையும் ,மற்றை எல்லாவற்றையும்
      தமது திருவருட் சக்தியால்

     1 ;---தோற்றுவித்தல்
     2 ,;--வாழ்வித்தல்
     3 ;---குற்றம் நீக்குவித்தல்
     4,;---பக்குவம் வருவித்தல்
     5 ;---விளக்கம் செய்வித்தல்

என்னும் ஐந்தொழில்கள் முதலிய் பெருங்கருணைத் தொழ்ல்களை
இயற்றுவிக்கின்றவர் என்றும், எல்லாம் ஆனவர் என்றும், ஒன்றும் அல்லாதவர்
என்றும் ,சர்வகாருன்யர் என்றும் ,எல்லாம் உடையராய் தமக்கு ஒருவார்றானும்

ஒப்பு ,உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை
அருட்பெரும் ஜோதியர் ,என்றும் ;---சத்திய அறிவால்
அறியப்படுகின்ற ,உண்மைக்கடவுள் ஒருவரே ,அகம் புறம் முதலிய எவ்விடத்தும் 

நீக்கமின்றி நிறைந்து சுத்தமெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில்
அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகினறார்

 என்று வள்ளலார் விளக்கமாக அருட்பாவில் பதிவு செய்துள்ளார்
ஆதலால் நாம் உண்மை கடவுலான் அருட்பெரும்ஜோதி கடவுளை

வழிபட்டு வாழ்ந்து வழிகாட்டுவோம்

அருட்பெரும்ஜோதி யாகிய ஒருவரே உண்மைக்கடவுள் என்பதை
உணர்ந்து ,நாம் அனைவரும் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து
அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வை ப்பெற்று வாழாமல்
 ,
பல்வேறு கற்பனைகளால்

பல்வேறு சமயங்களிலும் ,பல்வேறு மதங்களிலும் ,பல்வேறு மார்க்கங் 
களிலும் ,பல்வேறு ல்ஷ்சயங்களிலும்,நெடுங்காலம் பிறந்து பிறந்து
அவத்தை வசத்தர்களாகி,சிறிய அறிவும்  இன்றி,விரைந்து விரைந்து
பல்வேறு ஆபத்து களினால்,துன்பத்தில் அழிந்து இறந்து, இறந்து,
 வீண் போய்விட்டோம் ,வீண் போகின்றோம்,


ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் வீண்போகாமல்,உண்மை
அன்பு, உண்மைஇரக்கம்,முதலிய் சுபகுணங்களைப்பெற்று
நற்செய்கை
உடையவர்களாய்,எல்லா மதங்களுக்கும் ,எல்லா மார்க்கங்களுக்கும்
உண்மைப் பொது நெறியாகி விளங்கும்

சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெரு வாழ்வில்
 பெரும்
சுகத்தையும் பெருங்களிப்பையும்,அடைந்து வாழும
பொறுட்டு,மேற்குறித்த

உண்மைக்கடவுள் தாமே திருஉளங்கொண்டு ,சுத்தசன்மார்க்கதின் முக்கிய
லட்சியயமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞானசபையை
சித்தி விளாகம் என்னும் சன்னிதானத்திற்கு அடுத்த ,உத்தரஞான 

சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற,வடலூர் என்னும் பார்வதிபுரத்தில்

தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ,இக்காலம் தொடங்கி

அளவு குறிக்கப்டாதநெடுங்காலம் ,அற்புத சித்திகள எல்லாம் விளங்க

யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருளுகின்றோம்

என்னும் திருக்குறிப்பைஇவ்விடத்தே தாயினும் சிறந்த பெரும்

 தயவுஉடைய
நமது கருணையாம் கடலாராகிய அருமைத் தந்தையார்

திரு அருட்பிரகாசவள்ளலார் முன்னிலையில் ,அருட்பெரும்ஜோதி

ஆண்டவர் தெரியப் படுத்தியுள்ளார் ஆதலால் நாம் அனைவரும்

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் சென்று உண்மைக்கடவுள்

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்பதை உணர்ந்து ,சமய ,மதக்கொள்கைகளைத் தவிர்த்து உண்மைக் கடவுளை அறிந்து கொண்டு 
நலமுடன் வாழ்ந்து வழிகாட்டுவோம்


அருட் பெரும்ஜோதி என்னும் மாபெரும் அருள்ஒளி அணுவானது ,இயற்கை
உண்மை நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ அருள் வெளியில் ,இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய  அருட்பெரும்ஜோதிசொருபராய்  ,இயற்கை 
இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச செய்கையை ,
எல்லாஉயிர்கலும் இன்பம் அடைதல் பொருட்டுத் திறுவுளக்கருனையால்
செய்தருளுகின்ற ,
சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுள் தான் அருட்பெரும்ஜோதி என்பதாகும்,
அருட்பெரும் ஜோதிக்கு பலபெயர் வழங்கப்பட்டு உள்ளது ,
அவைகள் ;-----இயற்கை உண்மையர் என்றும் ---,இயற்கை அறிவினர் என்றும் -----,இயற்க்கை அன்பினர் என்றும்---- ,நிற்குனர் என்றும் ,
சிற்குனர் என்றும் ,----சித்தியர் என்றும் ,-----சத்தியர் என்றும் ,----
ஏகர் என்றும் ,-----அநேகர் என்றும் ,-----ஆதியர் என்றும் ,---
அனாதியர் என்றும் ,----அற்புதர் என்றும் ,--நிர்அதிசியர் என்றும் ,---
எல்லாம் ஆனவர் என்றும் ,----எல்லாமுடையவர் என்றும் ,------
எல்லாம் வல்லவர் என்றும் ,-----அருட்பெரும்ஜோதியர் என்றும் ,
குறிக்கப்படுதல் முதலிய் அளவுகடந்த திருகுறிப்புப்  திருவார்தைகளால்,சுத்த சன்மார்க்க அருள் ஞானியாகிய வள்ளலாரால்,
துதித்தும்,நினைந்தும் ,உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவித்தும் ,வெளியிடப்பட்டதாகும் ,
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை, இவ்வுலகில்
உள்ள ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்பு செய்து ,அருளை அடைந்து ,
அழிவில்லாத் சத்திய பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,
பல்வேறு சமய,மத மார்கக்ங்களிலும்,பல்வேறு லட்சயங்க்களைக்
கொண்டு ,நெடுங்காலம் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து ,அவத்தை 
வசத்தர்களாகிச சிறியஅறிவுமின்றி ,விரைந்து விரைந்து ,பல்வேறு 
ஆபத்துகளினால் துன்பத்தில் அழிந்து வீண் போகின்றோம் ,
இனியும் அப்படி வீண் போகாமல் ,வள்ளலார் காட்டிய ,
சமரச சுத்தசன்மார்க்க நெறியை கடைப் பிடித்து வாழ்வதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையாகும்.
அருட்பெரும்ஜோதி ,என்பது மாபெரும் அருள் நிறைந்த அணுவாகும் ,
இதற்க்கு இயற்கை உண்மை என்று பெயர் ,இதை யாராலும் ,
உருவாக்க முடியாது ,அழிக்கவும் முடியாது. .
என்றும் உள்ளதாய் 
விளங்கபட்டது ,
பலகோடி அண்டங்களும் ,அண்டங்களில் உள்ள பஞ்ச பூதங்க்களும்,
பூதங்களை இயக்கம் மாயை ,மாமாயை ,பெருமாயை என்னும் மாயா சக்தி
அணுக்களும், ஆன்மாக்களுக்கு உயிர்.உடம்பு தோன்ற காரண காரியமாய் இருக்கின்றது.
ஆன்மாக்களுக்கும் [ஆண்மாஅணு ] மற்றும் உள்ள எல்லாவற்றுககும் ,
முழு முதற்க்காரணமாய் விளங்குவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அணுவாகும் ,அந்த அணு அனகமாக எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது.
அதற்கு,பெயர்,  சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்பதாகும்.
இதற்கு அருள்வெளி என்றும் பெயர் ,
இந்த அருள்வெளியில் அருள் சக்தி அனாதியாய் நீக்கமற நிறைந்தது ,
இருக்கிறது .அதேபோல் ஆகாயம் அனாதியாய் நீக்கமற நிறைந்தது இருக்கிறது .
அதுபோல் ,அதற்க்குக காரணமான பரமாகாச சொருபராகிய
அருட்பெரும் அணு அனாதியாய் நீக்கமற் நிறைந்தது இருக்கிறது .
இந்த அருட் பெரு வெளியில் தான் ,ஆன்மா என்னும் அணுக்களும் 
நீக்கமற நிறைந்து நிரம்பி இருக்கின்றன் 
அருட்பெரு வெளியில் ;--
1 ,அருள்வெளி ,
2 ,அருள் காற்று 
3 ,அருள் அமுதம் 
4 ,அருள் ஆன்மா 
5 ,அருட்பெரும்ஜோதி என்னும் [மாபெரும் அணு ]
இவை ஐந்தும் அருட்பெரு வெளியில் நீக்கமற நிறைந்தது ,
இருக்கின்றன் .
அருட்பெரும் அருளின்  மூலமாக,பலகோடி அண்டங்களை ,உருவாக்கி,படைத்து அந்த
 அண்டங்களில் வாழ்வதற்காக பலகோடி ஆன்மாக்களையும்   . 
அனுப்பி வைக்கப்படுகிறது ,
அருட்பெரும் ஜோதியின் தனிப்பெரும் பதியாகிய ,அருட்சமூகம்,
உண்மையில் இப்படி இருக்க,
நாம் இது  வரையில் ,பார்த்தும் ,கேட்டும் பற்று வைத்துக் கெண்டு 
இருந்த வேதம்,ஆகமம் ,புராணம் ,இதிகாசம் ,முதலிய கலைகளை,
  கற்பனைக்கதைகளாக புனைந்து உரைத்து ,
இருக்கிறார்கள்,என்பதை 
வள்ளலார் திரு அருட்ப்பாவில் கீழே கண்ட பாடல் மூலம் தெளிவு 
படுத்தி உள்ளார் ,
பாடல் !
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் 
வேதா கமத்தின் விளைவு அறியீர்,----சூதாகச்
சென்னதளால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை 
என்ன பயனோ இவை !

கடவுளின் உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் வேதம் ,ஆகமம்,புராணம் ,இதிகாசம்.சாத்திரம் போன்ற கதைகளை கட்டி வெளியே காட்டி உள்ளார்கள்.இவைகள்
,இருந்து என்ன பயன் ,இவைகளைஅழித்து விடுவதே ,
நல்லது என்கிறார் வள்ளலார் ,
இனிமேலாவது உண்மையை தெரிந்து கொண்டு வள்ளலார் 
காட்டிய வழியில் வாழ்வோம் 


அருட்பெரும் ஜோதி ;--பாகம் 


         எல்லா அண்டங்களையும்,எல்லா புவனங்களையும் ,எல்லாப்

பொருள்களையும்,எல்லா ஜீவர்களையும் ,எல்லா ஒழுக்கங்களையும் 

எல்லாபயன்களையும்,தமது பூரண இயற்க்கை விளக்கமாகிய,

அருள் சக்தியால்,தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற ,

இயற்கைஉண்மை வடிவினராகிய்,ஒரே கடவுள் அருட்பெரும் ஜோதி
என்னும் மாபெரும் ,அணுவாகும் ,

        அருட்பெரும்ஜோதி என்னும்,அணுவானது எப்படி செயல் படுகிறது ,
என்பதை வள்ளலார் திருஅருட்பாவில்உள்ள நடராஜபதி மாலையில் ,
பதிவு செய்துள்ளார்.

ஒரு பிரமன்அண்டங்கள் அடி முடி பெருமையே 
உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி  மால்அண்டம். அரன் அண்டம்
உற்ற கோடாகோடியே
திருகளறு பல கோடி ஈசன் அண்டம் சதா 
சிவன்அண்டம் எண்ணிறைந்த
திகழ்கின்ற மற்றைப் பெரும் சத்தி சத்தர் தஞ் 
சீரன்டம் என்புகழுவேன் 
உருவுறு இவண்டங்கள்அத்தனையும் அருள்வெளியில் 
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனம்மிடும் 
ஒரு பெரும் கருணை அரசே 
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா 
வரம் தந்த மெய்த்தந்தையே
மணி மன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எல்லாம் 
வல்ல நடராஜபதியே,

என்றும்,அடுத்து வரும் பதிவிளக்கம்என்னும் பகுதியில் ,
ஒரு பாடல் பதிவு ,

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இல்லார் குணங்கள் 
ஏதும் இல்லார் தத்துவங்கள் ஏதும் இல்லார் மற்றோர் 
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும் 
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார் 
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார் 
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தகுமோர் சுத்த சிவானந்த சபை தனிலே 
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் ,

அடுத்து ஒரு பாடல் ,

ஒன்றும் மிலார் இரண்டும் இலார் ஒன்றும் இரண்டும் மானார் 
உருவு மளார் அருவுமளார் உ ரு அருவுமானார்
அன்றும் உளார் இன்றும் உளார் என்றும்முளார் தமக்குஒர்
ஆதிஇல்லார் அந்தமில்லார் அருட்பெரும்ஜோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் 
யாவும் இல்லார் யாவும்முள்ளார் யாவுமளார் யாவும் 
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே 
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் ,

என்று வள்ளலார் அருட்பெரும்ஜோதியைப் பற்றித்தெளிவுப் 
படுத்தியுள்ளார் ,

சமய ,மதங்களில் சொல்லியககடவுள் அல்ல ,
வள்ளலார் காட்டிய ,கண்ட ,,உண்மையான தனிக்கடவுள் ,
அருட்பெரும்ஜோதியாகும்,என்பதை தெளிவாக ,
விளக்கயுள்ளார் ,

இனி வள்ளலார் கட்டிய சுத்த சன்மார்க்க மெய் நெறியை, கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து மரணத்தை வென்று வாழ்ந்து காட்டுவதே உயர்ந்த மனித தேகம் பெற்றதின் கடைமையாகும்.

உண்மையான கடவுளின் தன்மையை ,புரிந்து கொல்லாத,

சமய ,மத ,வாதிகள் ஒன்று கிடக்க ஒன்று உளறி இருக்கிறார்கள்,
ஒரு உடம்பிற்கு ,இரண்டு ,மூன்று உயிர் இருக்கிறது என்றால் ,
நம்பமுடிமா /,அதுபோல் கடவுள் பலஉண்டு என்றால் எப்படி
நம்பமுடியும், என்று வள்ளலார் கீழே கண்ட பாடலில் தெளிவு
படுத்துகிறார் ,

உருவராகியும் அருவராகியும் உரு அருவினராகியும்
ஒருவரே உள்ளார் கடவுள் கண்டு அறிமினோ  உலகில் 
உணர்வின்றி
இருவராம் என்றும் மூவறேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழலுவது ஏன் உடலுக்கு உயிர் இரண்டு மூன்று எனலாமோ,

என வள்ளலார் சாதி ,மத ,சமய வாதிகளை பார்த்து கேள்விக் கேட்கின்றார்.உலகில் .
பலசம்யங்களும் ,மதங்களும் தோன்றியதால் உண்மையான கடவுளை
தெரிந்துகொள்ள மக்கள் தவறி விட்டார்கள் ,
மக்களை வழிநடத்த வந்த சமய ,மதங்கள் மக்களை முட்டாள்களாக்கி
அறிவிழ்க்க செய்துவிட்டார்கள் .

வள்ளலார் சமய மதவாதிகளை சாடிய  பாடல்கள.;----

பன் நெறிச சமயங்கள் மதங்கள் என்றிடும் மோர்
பவ நெறி இதுவரை பரைவியது இதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர
செறிஇருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி என்னும் வான்
புத்தமது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற எனஅரசே
தனி நடராஜ என சற்குரு மணியே ,

நம் இந்திய மதங்கள் மட்டும் அல்ல ,அந்நிய நாட்டு மதங்களும்
உண்மை தெரியாமல் அறிவிழ்ந்து அலைந்து திரிகின்றனர் .
அதலால் உலகில் உள்ள அனைவருக்கும் ,பொது நெறியாகிய
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தனிப்பொது  நெறியை, அனைவரும்
தெரிந்து அறிந்து புரிந்து கொள்ள
  
வேண்டும் என்பதே வள்ளலார் விருப்பமாகும்,
உலகம் முழுவதும் வள்ளலார் விருப்பம் நிறைவேறிக்கொண்டு
இருக்கிறது ,
அருட்பெரும்ஜோதி, மனித உருவுமோ ;கற்பனை உருவுமோ,
தத்துவங்களோ ,
கிடையாது .மாபெரும் சக்தி வாய்ந்த அருளணுவாகும்.
ஆதலால் கற்பனை கடவுள்களை நம்பி ஏமாந்து வீண் போகாமல்
உண்மைக்கட்வுளான அருட்பெரும்ஜோதியை வணங்கி வழிபட்டு
நளமுடன் வாழ்வோம் .

 உண்மைக்கடவுள் யார் என்பது ,தெரியாமல் இவவுலகமக்கள்,

கண்டதெல்லாம் கடவுள் என்று நம்பி ஏமாநது வீணாக அழிந்துக 
கொண்டு இருக்கிறார்கள்.,என்பதை உணர்ந்த வள்ளலார் ,உண்மைக் 
கடவுளை, இவ்வுலகமக்களுக்குஉணர்த்த வேண்டும் என்பதே ,
வள்ளலாரின் சுத்த  சன்மார்க்க கொள்கையாகும் .
அருட்பெரும்ஜோதி என்னும்உண்மைக்கடவுளைப்  பல கோணங்களில் ,
தெரியபடுத்துகிறார்.
கீழே கண்டபாடலில் எப்படி தெரியப்படுத்தி உள்ளார் என்பதைப்
பார்ப்போம் .

அண்டமெலாம் பிண்டமெலாம் உயிர்கள் எலாம் பொருகள்கள்
ஆனவெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாம் கொண்டவெலாம் கொண்டு கொண்டு மேலும் 
கொள்வதற்ககே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக 
கண்டமெலாங்கடந்து நின்றே அகண்டமதாய் அதுவுங் 
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் 
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம்வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டேகண்டீர்,!

 இயற்கை உண்மையான தனிக்கடவுள் அருட்பெரும்ஜோதி 
என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் பின்வரும் பாடலைப்பார்ப்போம் .

அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 
அமைந்த சராசர அளவு எவ்வளவே அவ்வளவும் 
கண்டதுவாய் அங்கு யவைகள் தனித்தனியே யகத்துங்
காண்புறத்தும் மகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க 
விண்டகு பெரருட்ஜோதிப் பெருவெளிக்கு நடுவே 
விளங்கி ஒருபெருங் கருணைக் கொடிநாட்டி அருளாம் 
தண்டகுமோர் தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் 
தனியரசே என்மாலை தாளில் அணிந்துதருளே ..

என்று யாவரும் புரியும்படி தமிழில் தெளிவாக எழுதியுள்ளார்,
படித்து தெரிந்து கொள்வோம் ,
அடுத்து வரும் பாடலில் ,வேதங்கள் ,ஆகமங்கள், புராணங்கள் 
இதிகாசங்கள். விஞ்சானிகள் .மற்றும் உள்ளஅனைவரும் 
பல  சாதனங்களை கொண்டு அளந்து  அளந்து பார்த்தும் ,கடவுளைக 
கண்டவர் யாரும் இல்லை ,என்பதை வள்ளலார் கீழே காணும் 
பாடலில் தெரியப்படுத்துகிறார் .

கிளைக்கின்ற மறை அளவே யாகமப் பேரளவுகளைக்
கிளந்திடு மெய்சசாதனமா மளவை யரிவு அளவை 
விளக்குமிந்த அளவைகளைக்கொண்டு நெடுங்காலம் 
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே 
அளக்கின்ற கருவிஎல்லாம் தேய்ந்திட கண்டார்றேல் 
அன்றி ஒருவாறேனும் அளவுகண்டாரிலையே 
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு புரிந்து உரைத்தேன் 
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்க்ப்படுமோ.

என்று வள்ளலார் தாம் கண்ட அருள் அனுபவங்களை
தெளிவுப்படுத்தியுள்ளார் .உண்மைகளை உலகிற்கு
சொன்ன ஒரே அருளாளர் வள்ளலார் தான் என்பதில் 
எந்த சந்தேகத்திற்கும் இடம் இல்லை .வள்ளலார் காட்டிய 
சுத்த சன்மார்க்க நெறியை  உலக மக்கள் அனைவரும்
கடைப்பிடித்து, உண்மை உணர்ந்து உயர்ந்த நிலைக்கு 
செல்வோம் .
நன்றி ;---மீண்டும் பூக்கும், 


அருட் பெரும் ஜோதி;--பாகம் .8


          அன்பு ,அறிவு .ஒழுக்கம் ,இல்லாததால் கடவுள் உண்மை சிறிதும்  
விளங்காமல் ,புலன் உணர்வு ,புலன்அறிவு மட்டும் மேலோங்கி, மன அறிவு
மூலம் தேக போகத்தில் வாழ்ந்து, வீழ்ந்து மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் ,
அகம் கருத்து புறம் வெளுத்து இருந்த உலக மக்கள் 
அனைவரையும் திருத்தி,சமரசசுத்த சன்மார்க்க சங்கத்தில் சேர்த்து உண்மையை 
உணர்த்தி,வாழ வைக்க வேண்டும் என்று ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,
என்னை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார் என்று வள்ளலார் 
தெளிவுப்படுத்துகிறார் .
 வள்ளலார் பதிவு செய்துள்ளபாடல் கீழே ;--
அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்திடை அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன்வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் .
அடுத்துஒருபாடல் ;--
பேருற்ற உலகில் உறும் சமய மத நெறிகள் எல்லாம் 
பேய்பிடிப்புர்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென்றுஉணர்ந்திடாது உயிர்கள்பல 
பேதமுர்றுஅங்கும் இங்கும் 
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாதபடி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப் 
பொருலினை உணர்த்தி எல்லாம் 
ஏற்ருர்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ 
என்பிள்ளை யாதலாலே 
இவ்வேளை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு 
என்னற்க வென்ற குருவே 
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிர்க்குனாநந்த பரநாதாந்த வரை யோங்கும் 
நீதி நடராஜபதியே ,
என்று வள்ளலார் தான் இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கம் 
பற்றி தெளிவுப் படுத்துகிறார்.
கடவுள் என்றும்,பரமான்மா என்றும்,இன்று  நாம்காணுகின்ற 
கடவுள் அல்லஅருட்பெரும்ஜோதி ,
சமய ,மத வாதிகள் பலவாகக் கற்பனை செய்து ,கற்பனைக் 
கடவுள்களை உருவாக்கி படைத்து விட்டு சென்றுவிட்டார்கள் ,
அவர்களைப் பின்பற்றிவந்தவர்களும் ,நாம, ரூப,பேதத் தோற்றங்களில் 
மயங்கி அவற்றை அப்படி அப்படியே தங்கள்உள்ளங்களில் 
பதியச்செய்து கொண்டார்கள்.இதனால் ஒரே கடவுளான ,
அருட்பெரும்ஜோதியை ,தெரிந்துகொள்ளமுடியாமல் 
போயிற்று .
ஆதலால் பலவிதமான் கடவுள்களும் ,மகான்களும் தீர்க்கதரிசிகளும்,
போதகர்களும் நுழைந்து விட்டார்கள். அவர்களால்தோற்றுவிக்கப் 
பட்ட சாதி ,சமயம் ,மதம் ,புராணம் ,இதிகாசம், சாத்திரங்கள்
போன்ற குப்பைகள் உலகம் முழுவதும் படர்ந்து விட்டது .
குப்பைகளைஅகற்றி உலகை தூய்மைப்படுத்தவே வள்ளலார் 
இவ்வுலகிற்கு வந்துள்ளார்.
மேலும் ஒருபாடலில்தெளிவுப்படுத்தியுள்ளார் .
பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே;--சென்மார்க்கத் 
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் 
கொல்லா நெறியருளைக் கொண்டு .

இனிஎல்லா உலகமும் உண்மையை அறிந்துகொண்டு 
நளமுடன் வாழ்வார்கள் வாழ வைப்பேன் என்று 
உறுதியுடன் கூறியுள்ளார் .
இனி நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க
நெறியில் வாழ்ந்து வளம் பெறுவோம் .
நன்றி ;----மீண்டும் பூக்கும். 


அருட் பெரும் ஜோதி ;--பாகம் ,9





       நம்முடைய தலைவராகிய அருட்பெரும் ஜோதிக கடவுளை 

நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் 
சாவியாகிய அருள் வேண்டும்.

இவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது ,

இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால்வராது ,

ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு .

இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது,அல்லது துவாரம் 

யாதெனில் ;--

அருட்பெரும்ஜோதியின் பெருமையையும் தரத்தையும்---நம்முடைய 

சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே யாகும் .

அனனிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே 

ஜீவகாருண்யமாகும்.இதுதான் அருளை அடைந்து 

முத்தியடைவதற்கு முதல்படியாயிருக்கிறது,ஆதலால் 

இதைபாதுகாத்தல் வேண்டும் .

ஜீவகாருண்யத்தால் சுத்ததேகம்,பிரணவதேகம்,முதலியவைகளை 

பெற்றுக்கொள்ளலாம்,பின்பு ஞான தேகத்தை கடவுள் அருளால்

கொடுக்கப்படும்.

எப்படி என்னில் ;--

அருட்பெரும்ஜோதிக் கடவுள் ,சர்வஜீவ தயாபரன் சர்வவல்லமை 

உடையவன்.ஆகையால் நம்மையும் சர்வஜீவதயவு உடையவர்களாய் 

சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனிததேகத்தில் 

வருவித்தார் .

ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால் கேளாத கேள்வி 

முதலிய மகா அற்புதங்களான்;--இறந்தார் எழுதல் முதலிய அற்ப்புத 

வல்லமைப் பெற்றிருப்பார்கள்.எந்த சீவர்களிடத்தில் 

தயாவிருததியாகிய அருள் விசேடம் விளங்குகிறதோ அந்த 

சீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாயிருக்கும்.

மற்றவர்களிடத்தில் காரியப்படாது .ஆதலால் மலஜலசங்கல்ப 

காலங்கள் தவிர மற்ற காலங்களில், கடவுள் இடத்தில் 

பக்தியும்,சீவர்களிடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் 

கடவுள் தயவும் ஜீவதயவும்;---

தயவென்பது இரண்டு வகைப்படும்;--

யாவையெனில் ;---கடவுள் தயை ---ஜீவ தயை ஆகிய இரண்டு ,

கடவுள் தயை என்பது ;--

  1. இறந்த உயிரை எழுப்புதல் 
  2. தாவரங்களுக்கு மழை பெய்வித்தல் 
  3. மிருக ,பட்சி ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால்,ஊட்டி வைத்தல் 
  4. சோம சூரிய அக்கினி பிரகாசங்களை,கால தேச வண்ணம் பிரகாசம் செய்வித்தல் ,
  5. பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல் ,
  6. அபக்குவிகளைச செய்யவேண்டிய அருள் நியதியின்படி தண்டனைசெய்வித்துப் பக்குவம் வருவித்தல்.
 ஜீவ தயை என்பது ;--
  1. தன் சத்தியின் அளவு உயிர்களுக்கு உபகரித்தல் .
  2. எவ்வுயிரையும் தன் உயிர் போல் பாவித்தல் 
  3. ஆன்மநேயத்துடன் தொடர்பு கொள்ளுதல் 
  4. எந்நேரமும் தயவு வடிவமாய் இருத்தல் 
மேலும் இவைகளபடிப்பால் அறியக்கூடாது,அறிவது எப்படி 

என்னில்;--ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாய் நிற்கும் 

விசார சங்கல்ப்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் ,

அததருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் 

ஆதலால் இடைவிடாது நன் முயற்ச்சியில் பழகல

வேண்டும் .

உலகத்தில் உள்ள அன்பர்கள் அனைவரும் உண்மைக்டவுள் 

அருட்பெரும்ஜோதி என்னும் ஆற்றல் மிக்க அணுதான்தான் 
  
என்பதை உணர்ந்து ,தொடர்புகொள்வோம் .

நன்றி ;--மீண்டும் பூக்கும். 



அருட் பெரும் ஜோதி;--பாகம் ,10



      அருட்பெரும்ஜோதி என்னும் அருள் அணு இல்லாத 

இடமே இல்லை ,ஆனால் நாம் நமது கண்ணாலும் 

மனோகருவி கரணங்களாலும்,எங்கும் காண்பது என்ன /

பரமான்மாவா ,கடவுளா/ அப்படிக் காண்கின்ற எதுவும் 

கடவுள் அல்ல என்பது சிறுகுழந்தைகளுக்கும் தெரியும் .

இபபிரபஞ்சத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களும்,

எல்லாஉயிர்களும் நித்தியமானவை அல்ல என்பதும் ,

தோன்றி சிறிதுகாலம் இருந்து மறைகின்றவையே 

என்றும் எவரும் அறிவர் .

ஆனால் நம் அருட்பெரும்ஜோதியார் நித்தியமானவர்,

அந்த நித்தியமானவர் யாவற்றிலும் அகம் மறைந்து நின்று 

அநித்தியமான வடிவங்களை ஆக்கிக்கொள்வதும் நீக்கிக் 

கொள்வதுமாய் இருக்கிறார் .மண் முதலான் ஐம்பூத

அணுக்களில் இருந்து கொண்டு அது அதுவாகித் தனித்திருந்தும் ,

ஒன்றுபட்டும் எல்லா பிரபஞ்ச வடிவங்களிலும் தன்னுள் 

வைத்துக்கொள்ளுகின்றன,ஆகவே காணும் பொருட்களிலும் 

அவற்றிற்கு ஆதாரமாய் இருக்கின்றது நமது கண்காணாப் 

அருட்பெரும்ஜோதியாகிய கடவுளாகும் .

எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி சமூகத்தில் நிறைந்து

விளங்கிக்கொண்டு இருப்பது ஆன்மாஎன்னும் சிறிய அணுக 

கூட்டங்களாகும் .அதற்க்கு ஆன்மா என்று பெயர் 

பொதுவாகக கடவுளைப் பற்றி பலர் பலவாகக் கற்பனை 

செய்து கொண்டு உண்மையை உள்ளவாறு காணாது ,

உளறி இருக்கிறார்கள்,