சனி, 30 நவம்பர், 2019

அருளாளர்கள் பொதுக்கூட்டம் !

அருளாளர்களின் பொதுக் கூட்டம்.

*இது கதை அல்ல உண்மை*

30-1-1874, அன்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளாளர்களின் பொதுக் கூட்டத்திற்கு அவசரமாக ஏற்பாடு செய்கின்றார்.

கூட்டம் நடக்கும் இடம் திருச்சிற்றம்பலம் என்னும் அருட்பெருவெளியாகும்.

உலகில் உள்ள அருளாளர்கள் அண்டங்களில் உள்ள அருளாளர்கள்.மற்றும் சித்தர்கள் யோகிகள் ஞானிகள் மற்றும்  .உலகத்தை ஆட்சி செய்யும் அருளாளர்கள் அனைவருக்கும்  (ஆட்சியாளர்கள் )  அவசர அழைப்பு கொடுக்கப்படுகிறது.

 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமையில் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த பரவெளியில் கூட்டப்பட்டது.

அதில் கலந்து கொண்டவர்கள் ;--

உருத்திரர்கள் ஒரு கோடிபேர்கள்.
நாரணர்கள் பல கோடி பேர்கள்  ,
பிரம்மாக்கள் பல கோடி பேர்கள் ,
இந்திரர்கள் பல கோடிபேர்கள்

மற்றும் தேவர்கள் ,முனிவர்கள் அளவில்லாத அருளாளர்கள் பலர் கோடிக்கணக்கில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும் உலக அதிபர்கள்...அண்ட அதிபர்கள்...பகிரண்ட அதிபர்கள்...வியோமா  அதிபர்கள்,...பலகோடி பேர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் கரும சித்தர்கள் ,யோக சித்தர்கள்,ஞான சித்தர்கள்,கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

அவர்களை அடுக்கு அடுக்காக,ஐந்து அடுக்கு வரிசையில்  அமரவைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் யார் யார் என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !


மேலும் ..


மேலே கண்ட அருளாளர்களின் பட்டியலை வெளியிடுகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

மேலே கண்ட அருளாளர்களின் கூட்டத்தில் நிறை வேற்றப் பட்ட தீர்மானங்கள்.!

இதுவரையில்;;எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள் களையும்,மற்றை எல்லா வற்றையும் ஆட்சி  செய்யும் அதிகாரங்களான

தோற்றுவித்தல்.
விளக்கம் செய்வித்தல்.
துரிசு நீக்குவித்தல்.
பக்குவம் வருவித்தல்.
பலன் தருவித்தல்

போன்ற கரத்தாக்காக்கள் அனைவரும் அமர்ந்து இருக்கிறார்கள்.

தலைமைப்பொறுப்பில் இருந்த ஐந்தொழில் கர்த்தாக்கள் அனைவருக்கும் மற்றும் அருளாளர்கள் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில் ;--

இன்று முதல் உங்கள் பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றுக் கொள்ளப் படுகின்றது .நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வேண்டிய ஒய்வு ஊதியம் வழங்கப்படும் .. எனவே உங்கள் பதவிகளை இன்றே ராஜினாமா செய்து விடுங்கள் என்ற பொதுவான நிரந்தரமான தீர்மானம் நிறை வேற்றப் பட்டது,

உங்கள் பதவிகளை ஏன் எதற்க்காக திரும்பப் பெறப்படுகின்றன என்றால்?  .நீங்கள் இதுவரைக்கும் உங்களுக்குக் கொடுத்த பதவிகளை முழுமையாக செயல் படுத்தவில்லை பயன் படுத்தவில்லை..உயிர்களுக்கு வேண்டிய நன்மைகளை முழுமையாக செய்யவில்லை,ஒரு உயிர்கள் கூட அருளைப் பெற்று மரணத்தை வெல்லவில்லை.ஆன்மாக்கள் எதுவும் ஆன்மதேகம் எடுத்து திரும்பி என்னிடம் வரவில்லை.

கதைகளாகவும் கற்பனைகளாகவும் .பொய்யான செய்திகளை போதித்து ஜாதி,சமயம்,மதம்,என்ற பிரிவினைகளை உருவாக்கி உயிர்களை அழித்துக் கொண்டு வந்துள்ளீர்கள் .

சாகாக் கல்வியைப் பற்றியும் அருளைப் பெரும் வழியைப் பற்றியும் ,நீங்கள் ஒருவரும் உயிர்களுக்கு போதிக்க வில்லை.எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,அழிந்து கொண்டே உள்ளன .ஆதலால் உங்கள் பதவிகள் இன்று பறிக்கப் படுகின்றது என்பதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைவருக்கும் தெரிவிக்கின்றார்.

அந்த ஐந்தொழில் வல்லபத்தை இன்று உங்களின் முன்பாக உண்மையான அருளாளர் ஒருவருக்கு வழங்கப் போகிறேன்.அவர் யார் ? என்பதை நீங்கள் இப்பொழுது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .என்பதை தெரிவித்து *அருள் ஆட்சி* மாற்றம் என்னும்  சட்டத் திருத்தம் செய்து, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளியிட்டார் .

சட்டத் திருத்தம் செய்த நகல் அனைத்து அருளாளர்களுக்கும்.ஆட்சி யாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

சட்டத் திருத்தம் செய்து ஐந்தொழில் செய்யும் வல்லப்பத்தின் நகலின் விபரம்.;--

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்து இருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன் .
களித்திடுக இனி உனை நான் கைவிடோம் என்றும்
மை பிடித்த விழி உலகர் எல்லோரும் காண
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !

என்று பதிவு செய்துள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .

மேலும்

மேலே கண்ட அருளாளர்கள் வள்ளல்பெருமானுக்கு சமமான பொருத்தம் இல்லாதவர்களாய் உள்ளீர்கள் எனவே உங்கள் பதவிகள் பறிக்கப்படுகின்றது என்கின்றார்

இதுவரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் ஒருவர் கூட உண்மையை உயிர்களுக்கு பொறுப்புடன் சொல்லவில்லை.பொய்யே உண்மை என்று சொல்லி உயிர்களை அழித்துக் கொண்டு வந்தனர் .

வள்ளல்பெருமான் ஆகிய நீ ஒருவர்தான் உயிர்களுக்கு உண்மையைப் போதித்து.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்என்றும்...கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும் என்றும் ,அதற்கு உண்டான  வழிமுறைகளையும்.ஒழுக்க நெறிகளையும் போதித்தது மட்டும் அன்றி மனிதப்பிறப்பு எடுத்து வாழ்ந்தும் காட்டி உள்ளாய் ,

அதன் கொள்கைகளை ( உயிர்களுக்கு) மக்களுக்கு புரியும்படி போதித்து உள்ளாய்.

எனவே இன்றில் இருந்து ஐந்தொழில் வல்லபத்த்தின் முழுப்பொருப்பையும்  உனக்கே வழங்குகின்றேன்.ஐந்து தொழிலையும் நீயேதான் நிர்வாகம் செய்ய வேண்டும். என்றும்,

உன்னைவிட்டுப் பிரியாமல் உன்னுடன் இருந்தே உமக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் செய்வேன் என்றும் சொல்லி  ஆட்சி பீடத்தில் வள்ளல்பெருமானை அழைத்து *அருட்பெருஞ்ஜோதியான உண்மைக் கடவுள்* அமர்த்தி உள்ளார்.

அதற்கு வள்ளல்பெருமான் அளித்துள்ள முதல் அறிவிப்பு செய்தி.;--

சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உருவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனி வரும் தினங்கள் எல்லாம் இன்பமுறும் தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லு கின்ற தாமே .

என்பதை உலக உயிர்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .

வள்ளல்பெருமானின் ஐந்தொழில் ஆட்சி 30-1-1874,தேதியில் இருந்து நடந்து கொண்டு வருகின்றது.மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில் வள்ளலார் திருகாப்பிட்டுக்கொள்வதற்கு முன் நடந்த சம்பவம்.

வள்ளலார் பாடல் !

வள்ளல்பெருமானின் கொள்கைகளை உலக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*என்னும் தலைப்பில் ,தலைமைச் சங்கத்தை வடலூரில் தோற்றுவித்து உள்ளார்.

*அந்த சங்கத்தின் தலைமைப் பொருப்பை வள்ளல் பெருமானே ஏற்று நடத்த வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை*.

வள்ளலார் பாடல் !


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு வருத்தம் துன்பமும்  இருந்தது .

எல்லா உயிர்களிடத்தும் அன்புபாராட்டி காப்பாற்றும் உண்மையான அருளாளர் கிடைத்து விட்டதால் என்துன்பம் நீங்கிவிட்டது என்று பதிவு செய்கிறார்.

பாடல் ! 


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவாக்கை சிரமேற் கொண்டு

மனிதர்களாகிய நாம் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து,அதன்படி வாழ்ந்து,உலக மக்களுக்கு கொண்டு செல்வது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையாகும்.

ஒவ்வொரு கிராமங்கள் ,நகரங்கள் தோறும் பெயர் மாற்றம் செய்யாமல்  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற அமைப்பை உருவாக்கி  மக்களுக்கு சுத்த சன்மார்க்கக் கொளகைகளை பறை சாற்ற வேண்டும்.

பட்டம் பதவிகளுக்கு பற்று வைக்காமல் ஒழுக்கம் நிறைந்த சன்மார்க்கிகளாய் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று மற்ற உயிர்களுக்கும் போதிக்க முடியும் தொண்டு செய்யமுடியும் என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக அறிவித்து உள்ளார்கள்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்கச் சுகநிலை  பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

இன்னும் நிறைய உள்ளன சுருக்கமாக சொல்லி உள்ளேன்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


வியாழன், 28 நவம்பர், 2019

ஆன்மீகம் எவ்வாறு உள்ளன ?

ஆன்மீகம் எவ்வாறு உள்ளன ?

இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கம் அல்லை !

ஆன்மீகம் என்பது நம்மை இயக்கும் ஆன்மாவை அறிந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப்பொருவாழ்வு வாழ்வதே ஆன்மீகம் என்பதாகும்.

ஆனால் இன்று உலகம் முழுவதும் பொருள் (பணம்) சம்பாதிக்கும் வழியிலேயே ஆன்மீகம் சென்று. கொண்டுள்ளது.

*பொருள் இருக்கும் இடத்தில் இருள் சூழ்ந்து கொள்ளும்*  என்பதை உணர்ந்து சிந்திக்க தெரிந்து கொள்ளாமல்  பண்ணாத தீமைகள் எல்லாம் பண்ணிக் கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் பாடல் !


நம்மைப்படைத்து இரவும் பகலும் இடைவிடாது இயக்கிக் கொண்டு இருக்கும் உண்மையானக் கடவுள் ஆன்மாவிலே அமர்ந்து இருக்க.புறத்திலே பண்ணாத தீமைகளான வழிபாடு.சரியை.கிரியை.யோகம்.போன்ற பூசைகள் பண்ணி.உடம்பை வருத்தி.உயிரை அழித்து.ஆன்மலாபம் பெற்றுக்கொள்ளாத செயல்கள் எல்லாம் செய்து. காடு மேடு எல்லாம் அலைந்து வீண்போது போக்கிக் கொண்டுள்ளீர்கள்..

உண்மையான இறைவன் யார் என்று தெரியாமல்.தெரிந்து கொள்ளாமல் மனம்போனபடி சென்று இறுதியில் துன்பம்.துயரம்.அச்சம்.பயம் வந்து.நரை திரை.பிணி.மூப்பு.மரணம் வரும்போது என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார் வள்ளலார்.

*பித்துலகீரே என்கிறார் அதன் அர்த்தம் பைத்தியக்கார்ர்கள் என்கிறார்*

வள்ளலாருக்கு முன்னாடி பல்லாயிரம் ஆன்மீக சிந்தனையாளர்கள் அறிவுசார்ந்த அருளார்கள். மற்றும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அளவுகடந்த சமயங்களும் மதங்களும்.மற்றும் ஆலயங்கள் (கோவில்கள்).சர்ச்சுகள்.மசூதிகள்.
பிரமீடுகள் போன்றவை உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

அதனால் மக்களுக்கு என்ன பயன் அடைந்துள்ளோம் என்பது தெரியாமலே அகம் கருத்து புறம் வெளுத்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

உலகத்தை திருத்தவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

மேலும் வள்ளலார் சொல்லுகிறார் ! 



இதுவரையில் ஆன்மீக பற்று உள்ளவர்கள் ஒருவரும் தேர்ந்தபாடில்லை. ஆன்மாவை கண்டவர்கள் இல்லை.ஆன்மாக்களைப் படைத்த ஆண்டவரை தொடர்பு கொள்ளவும் இல்லை.பூரண அருளைப்பெறவும் இல்லை எல்லாருமே இறுதியில் மாண்டு போகின்றார்கள்.

ஒருசில அருளாளர்கள் பக்தியில் யோகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு முக்தி பெற்று சொர்க்கம்.வைகுண்டம்.கைலாயம் பரலோகம் போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டதாக சொல்லுகிறார்கள்.மக்கள் அவற்றை நம்பிக்கொண்டும் உள்ளார்கள். எல்லாமே நம் உடம்பிலே உள்ளன.

அவர்கள் ஆன்மாவை தொடர்பு கொள்ளாமல் ஜீவனைத் தொடர்பு கொண்டு உயிரை அடக்கி உடம்பை அழிக்காமல் சித்தி வல்லபத்தால் கொஞ்சகாலம். நீண்டகாலம் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் சித்தாடல் புரிகின்றார்கள்.அதனால் தான் அவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர்.

சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள்.ஜீவனை  அறிந்து அடக்கத் தெரிந்தவர்கள் முத்தர்கள்.

ஆன்மாவை அறிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்புகொண்டு முழு அருளைப்பெற்று மரணத்தை வென்றவர்கள் ஞான சித்தர்கள்.

*அதனால் தான் ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்று அழுத்தமாக வெளிப்படுத்துகிறார் வள்ளலார்*.

மேலும் மாணிக்கவாசர்.திருமூலர் போகர்.அகத்தியர்.அருணகிரியார்.
கொங்கணர்.தாயுமானவர் பதஞ்சலியார் போன்ற எண்ணற்ற சித்தர்கள் மற்றும் பதினென் சித்தர்கள். ஞானிகள் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து உள்ளார்கள்.

 தங்கள் உடம்பை ஆகாயமாக.காற்றாக.அக்கினியாக.
நீராக.மண்ணாக மாற்றி ஐந்து பூதங்களிலே கலந்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்து மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து அருளை பூரணமாகப் முழுமையாகப் பெற்றுதான் ஆண்டவருடன் கலக்க முடியும்.

பஞ்ச பூதங்களில் கலந்தவர்களைப்  பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !


மேலே கண்ட பாடலில் தெளிவாக புரியும்படி விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார். ஐந்து பூதங்களில் கலந்து கொண்டு வாழ்பவர்களின் வாழ்க்கையும் நிரந்தர பூரண பேரின்ப சித்தி பெருவாழ்வு அல்ல.அழியாத வாழ்க்கை அல்ல.

அவர்களும் மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து மரணத்தை வென்று பேரின்ப சித்திப்பெருவாழ்வே வாழ வருவார்கள் என்பதை வள்ளலார்.வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

எனவே நாம் உண்மைக்கடவுளைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளலார் ! 


  • எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
  • இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
  • கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
  • கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
  • நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
  • ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
  • செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே


  • சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.!

  • எனவே நாம் மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்ப
  •  கொள்ள வேண்டும். 

    நாம் அடைவது பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் .அதாவது இறைவன் குடிக்கொண்டு இருக்கும் இந்த உடம்பை அழிக்காமல் ஆன்மதேகமாக மாற்றி சுத்ததேகம்.பிரணவதேகம் ஞானதேகமாக மாற்றி அழியாமல் வாழ்வதற்கே  உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது.

    இதற்கு ஓரேவழி ஆன்மாவைத் தொடர்பு கொள்வதேயாகும்.

    *தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்.*

    தன்னை அறியும் தந்திரம் என்றால் என்ன ! 

    வள்ளலார் பாடல் ! 

    இரண்டாம் திருமுறையிலே தெளிவாக சொல்லி உள்ளார் ஊன்றி படிக்கவும்.!


    • தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
      தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
    • 2. நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
      நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 3. சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
      தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 4. இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
      இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
    • 5. தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
      சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
    • 6. போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
      போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 7. ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
      ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
    • 8. அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
      ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
    • 9. வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
      வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.
    • 10. குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
      குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 11. ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
      ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
    • 12. வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
      விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.
    • 13. முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
      மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
    • 14. நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
      ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
    • 15. ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
      நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
    • 16. வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
      வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
    • 17. ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
      அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.
    • 18. ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
      ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.
    • 19. அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
      ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
    • 20. அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
      ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
    • 21. அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
      ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
    • 22. அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
      ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
    • 23. அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
      ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே

    அம்பரத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இம்பரமான ஆன்மாவிலே அமர்ந்து எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டுள்ளார். இதுவே தன்னை அறிதல் என்பதாகும்.

    மனித தேகம் பெற்றவர்கள் ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே சிறந்த தந்திரமாகும்.

    அந்த தந்திரம் எதனால் பெறக்கூடும் எனில் ஜீவகாருண்யத்தால் மட்டுமே பெறமுடியும் என்கிறார்.ஜீவகாருயத்தால் சத்விசாரம் என்னும் 
    ஆன்ம தொடர்பு உண்டாகும்.அதற்கு தடையாக உள்ள அனைத்தையும் அறிவைக் கொண்டு அகற்றவேண்டும்.

    வள்ளலார் பாடல் ! 



    மேலே கண்ட பாடலில் அகற்ற வேண்டியதை அகற்றி சிற்சபையில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொண்டால் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

    *அகத்தில் உள்ள சிற்சபையில் விளங்கும் ஆன்ம புறக்காட்சியே வடலூரில் தோற்றுவித்துள்ள சத்திய ஞானசபையாகும்*.

    *எனவே ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே ஆன்மீகம் என்பதாகும்*.

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
    கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

    அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 
    9865939896.

    நம்மை நஷ்டஞ் செய்பவை நான்கு !

    *நம்மை நஷ்டஞ் செய்பவை நான்கு*

    நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன:

    *ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் - ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இந்த நான்கிலும் முக்கியமானவை *ஆகாரம், மைதுனம்*. ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலுமதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

    அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அடைவது அரிதாயும் இருப்பதாதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.

    *ஜாக்கிரதை*

    வள்ளலார் பாடல் !

    சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
    படுவாரைத் துணிந்து கொல்லக்

    கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
    துண்மையினில் கொண்டு நீவீர்

    நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
    போலும்அன்றி நினைத்த வாங்கே

    பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
    பதிப்புகழைப் பேசு வீரே.!

    என்னும் பாடலிலே தெரியப்படுத்துகின்றார்

    ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் - இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், இவற்றில் முக்கியமானவை

    ஆகாரம், மைதுனம். இவற்றிலும் முக்கியமானது மைதுனம். இதனளவில் ஒரு மனிதன் தன்னை ஸர்வ ஜாக்கிரதையுடன் காக்கவேண்டும். இல்லையாயின்

    *அதி சீக்கிரத்தில்
    மரணமடைவான் சந்தேகமில்லை*.

    இல்வாழ்வானுக்கு மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தையுடையது.

    *தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்*

    இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவையாவன: ஆகாரம், மைதுனம். ஆகாரத்தா லொன்பது பங்கு நஷ்டமும், மைதுனத்தாலொரு பங்கு நஷ்டமும் உண்டாகிறது. எப்படியெனில்:

    பிண்ட உற்பத்தியின் காலம் தொடங்கி இறந்து போகிற பரியந்தம் ஆகாரம் உண்டு. இது இயற்கை. சிசு, வாலிபம், விருத்தாப்பியம் - இந்தப் பருவங்களில் மைதுனம் கிடையாது. கவுமாரம், யௌவனம் - இந்த இரண்டு பருவங்களில் மாத்திரம் மைதுனம் உண்டு. இந்தப் பருவங்களிலும், நோயாலும் துக்கத்தாலும் தரித்திரத்தாலும் பசியாலும் பயத்தாலும் வேறு அநந்தவகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைப்படும். இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு.

     பொருந்தல் ஏகதேசம். நஷ்டமும் அப்படியேயிருக்கிறது. ஆகாரவிஷயத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை, அசாதாரணம் இப்படிப்பட்ட உணவுகளை நீக்கி, *சுத்த சத்துவ* ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.

    *துர் மரணம்*

    ஜீவர்களுக்கு வாந்திபேதி மாரடைப்பு முதலியவற்றால் நேரிடும் துர்மரணங்கள் ஆகாரக் குறைவாலும் மிகுதியாலும் அக்கிரம அதிக்கிரமத்தாலும் பொருந்தலாலும் - இவை போன்ற பலவகைக் கெடுதியாலும் உண்டாகின்றன.

    *இல்வாழ்வானுக்கு நியாயம்*

    மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தை ஒத்திருக்கின்றது. அதாவது, ஊற்றுக்கேணியை இடைவிடாமல் 10 தினம் இறைத்தால், அதன் வருவாய் குறைந்து, அதில் சலமில்லாமல் போய்ப் பிரயோசனப்படாது. அதுபோல் இறைக்காத ஊற்றுக்கேணியிலுள்ள நீரிலழுக்கேறி, அதன் வருவாய் அடைபட்டு, அதன் சுரப்பு நின்றுவிடும். பின்பு அந்தக் கேணியிலுள்ள சலம் சூரிய உஷ்ணத்தினால் கிரகிக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும்.

    *இதுபோல் இடைவிடாது மைதுனஞ் செய்தால் இந்திரியத்தின் வருவாய் குறைந்து, அருமையாகக் கிடைத்திருக்கின்ற தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். *மைதுனம் எந்தக் காலத்தும் இல்லாதிருத்தலினாலும் மேற் குறித்த ஊற்றுக்கேணி நியாயத்தால் கேடுண்டு*.

    அதாவது மைதுனம் எந்தக்காலத்திலுமில்லா திருத்தலினால் இந்திரியத்தின் தன்மை கெட்டு, அதனால் அவ்விந்திரியத்தின் வருவாயடைபட்டு, மிகுந்திருந்த அவ்விந்திரியமும் உஷ்ணத்தினால் வற்றிவிடும். பின்பு தேகம் உடனே போய்விடும்.

    *சந்நியாசமும் காவி உடையும்*

    மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்;

    தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு *யுத்தக்குறி* அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் *வெற்றிக்கொடி வெள்ளை*. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், *வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்*.

    சன்னியாசம்

    மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயையில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை. *குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம்*. தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...

    *தயவு*

    தயவு - சுத்தம், வெள்ளை வருணம், ஞானம், தயவு - அருள் காருண்ணியம்.

    *காவிவேஷ்டி*

    காவிவேஷ்டி தரிப்பது தயவுக்கு விரோதமானவைகளை ஜெயிப்பதற்கடையாளம்.

    *மகளிர் சமத்துவ நிலை*

    பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் பேதமற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது. தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரம காலத்தில் ஒத்திருப்பார்கள்.

     *தெய்வந் தொழாஅள்* என்னும் தேவர் குறளால் இதை அறிக.

    *பொதுப் பார்வை*

    எல்லா உயிரையும் பொதுவாய்ப் பார்ப்பதென்பது தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர்களின் பசி அறிந்து, தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்களாகில் எவ்வகையிலாவது முயற்சித்தும் பசியைத் தணிக்கவும். அதற்கும் இடம் இல்லையாகில், பச்சாத்தாபத்துடன் கடவுளைப் பிரார்த்தித்து *இன் சொல்லினால் இனிக்கச் செய்து, தான்கெட்டிருப்பதே மேலான புண்ணியம்*.

    மேலே கண்ட விபரங்களை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் அவசியம் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பது வள்ளலாரின் அழுத்தமான  கொள்கையாகும்.

    உடம்பை பொன்போல் பாதுகாக்க வேண்டும்.

    வள்ளலார் பாடல் !

    சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி

    ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்

    போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்

    சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.!

    வயிறு நிறைய உணவு உண்பவர்கள் என்னதான் *தவம்.யோகம்.தியானம் பக்தி செய்தாலும் பயன் அளிக்காது* என்கிறார் வள்ளலார்.*அறுசுவை உணவு ஆபத்தை உருவாக்கும்* .
    இறுதியில் வயது முதிர்ந்து நோய்வாய்பட்டு
    மரணத்திற்கு கொண்டு சென்றுவிடும்.

    *உணவே மரணத்திற்கு காரண காரியமாக இருக்கிறது*.

    *பொருள் பசியை நிறுத்தி அருள்பசிக்கு எதிர்பார்த்து இருக்க வேண்டும்*.அதற்கு உலக போகத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக விலகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பொருள் உணவு உட்கொள்ளுகின்ற வரை அருள் உணவு கிடைக்காது.இதுவே அடிப்படை உண்மை.

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

    கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

    அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

    வெள்ளி, 22 நவம்பர், 2019

    சாதியும் மதமும் சமயமும் பொய் !


    சாதியும் மதமும் சமயமும் பொய் !


    மேலே கண்ட பாடலை நன்கு உணர்ந்து படிக்கனும்.இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள் திருஅருட்பாவில் நிறைய உள்ளன.

    இன்றைய உலகில் சாதிகள் சமயங்கள் மதங்கள் ஒழிந்தால் தான் உலக மக்கள் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக  வாழமுடியும் என்பது நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையாகும்.

    இந்த சமூக மூடத்தனமான கட்டமைப்பை வேறோடு பிடுங்கி எறிந்து விட்டு. புதிய சுத்த சன்மார்க்க கொள்கையை உலகம் முழுதும் விதைக்க்வேண்டும் என்பதால் இறைவனால் வருவிக்க உற்றவர்தான் வள்ளலார்.

    இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல் சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வரும் அன்பர்கள் சிலர் மூடமாகவே இருந்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டு வருகிறார்கள்.

    வள்ளலார் ஆரம்ப காலக் கட்டத்தில் பக்தி மார்க்கத்தில் ஏன் பின்பற்றினார் பின்பு அவைகள் யாவும் பொய்யானது என்று ஏன் சொன்னார் என்ற சூட்ச்சுமத்தை புரிந்து கொள்ளாமல் மூடத்தனமாக சில அன்பர்கள் பேசிக்கொண்டு வருவது வேதனையாக உள்ளது.

    மக்கள் சரியை கிரியை யோகத்திலே மூழ்கி கிடக்கிறார்கள்.அவர்களை தன்வசமாக மாற்ற வேண்டுமானால் அவர்களுடன் இணைந்து அவர்கள் போல் தானும் வாழ்ந்து.மக்களை தன்வசமாக மாற்றவே வள்ளலார் செய்த சூழ்ச்சியாகும் அவர் நடித்த நாடகத்தின் ஒரு பகுதி தான் பக்தி சார்ந்த நாடகம்.

    வள்ளலாருக்கு கருவிலே கலந்து துணையாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றையும் தெரியப்படுத்துகின்றார்.

    வள்ளலார் வேறு எந்த ஞான நூல்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓதாமல் உணர்ந்தவர் வள்ளலார் என்பது இந்த உலக மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

    சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்களும் இந்த உண்மையை அறிந்து கொள்ளாமல் கண்டதை எல்லாம் வாயில் வந்தபடி உளரிக்கொண்டு உள்ளார்கள்.

    வள்ளலாரே தெளிவாக சொல்கின்றார்.

    குமாரப்பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என்தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர் என்று சத்திய பெருவிண்ணப்பத்தில் பதிவு செய்துள்ளார்.

    மேலும் பலபாடல்கள் வாயிலாக தெரிவிக்கின்றார்.

    கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே !

    பள்ளியில் பயிற்றாது என்தன்னைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்து !

    ஒதாதுணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீதான் !

    ஒதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்த்தி !

    ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து .ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் !

    ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !

    என அகச்சான்றுகள் பல பாடல்கள் வாயிலாக வள்ளலார் தெரிவித்து உள்ளார்.

    ஆதலால் சமய மதங்களை பின்பற்றுவது போல் மக்களுக்காக.மக்களைத் திருத்துவதற்காக தன்னைத் தாழ்த்திக் கொண்டு நடிக்கின்றார்.

    வள்ளலார் பாடலே சாட்சியாகும் !


    மேலே கண்ட பாடல் மகாதேவமாலையில் தெரிவிக்கின்றார் வள்ளலார்..

    மேலும் பேருபதேசத்தில் தெளிவான ஒரு விளக்கம் தருகின்றார்..



    சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், 

    அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். 

    நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். 

    அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், 

    அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
    இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. 

    ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. 
    *நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ*, *அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை*. 

    என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். 

    மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.


    * மாயையாற் கலங்கி வருந்திய போதும்வள்ளல்உன் தன்னையே மதித்துன்சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்தலைவவே றெண்ணிய துண்டோதூயபொற் பாதம் அறியநான் அறியேன்துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தேநன்றருள் புரிவதுன் கடனே.- திருஅருட்பா 3635
    ** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்காட்சியும் பெறுகமற் றெல்லாம்மருள்நெறி எனநீ எனக்கறி வித்தவண்ணமே பெற்றிருக் கின்றேன்இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்எய்திய தென்செய்வேன் எந்தாய்தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்சிறுநெறி பிடித்ததொன் றிலையே.- திருஅருட்பா 3503


    அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். 

    இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் 
    ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். 
    நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. 

    உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.
    மேலே கண்ட விபரங்களை ஒளிவு மறைவு இல்லாத வள்ளலார் தெளிவாக விளக்கமாக சொல்லியும்.சாதி சமய மதக் கொள்கையோடு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை அனைத்து பேசுவதும். மற்ற ஞானிகளின் வரிசையில் வந்தவர் என்றும்...திருவாசகம்.திருமந்திரம்.திருக்குறள் படித்துதான் வள்ளலார் உயர்ந்த நிலைக்கு வந்தார் என்றும் சொல்லுவது அபத்தமான செய்திகளாகும்.
    பக்தியில் சிறந்த்து திருவாசகம் என்றும்.சாத்திரங்களில் சிறந்த்து திருமந்திரம் என்றும்.சாதி சமய மதம அற்ற பொது நூல் திருக்குறள் என்றும் வள்ளலார் போற்றுகின்றார்.
    வள்ளலாருக்கு உலகியல் நூல்கள் என்ன என்ன சொல்லி உள்ளது என்பது ஞான அறிவிலே தெரிந்து கொள்வார்.படித்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
    வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் ஞானத்தைப் போதிப்பது .ஞானம் என்பது அருளைப்பெறுவது..அருள் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.மரணத்தை வென்றால் தான் இறைவனைக் காணமுடியும் இறைவனும் கலந்து பேரின்பசித்தி பெருவாழ்வு பெற்று பிறப்பு இறப்பு அற்ற உயர்நிலை பெற்று என்றும் அழியாத வாழ்வு பெற முடியும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

    *சாகாதவனே சன்மார்க்கி என்பதுதான் வள்ளலாரின் வேத வாக்காகும்*.
    சாகாதகல்வி கற்றுக் கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் ஞான கல்வியாகும்.
    சன்மார்க்கத்தை பின்பற்றும் சகோதர சகோதரிகள் இனிமேலாவது உண்மை உணர்ந்து வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும்.சத்விசாரத்தையும் மட்டுமே  பின்பற்றி வாழ்ந்து மரணத்தை வென்று மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்.

    வள்ளலார் பாடல் !

    ஒவ்வொரு ஆன்மாவிலும் உள்ஒளியாக உள் இருந்து நடம் புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உண்மைக் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டாலே கிடைக்க வேண்டிய எல்லா ஆன்மலாபமும் தடை இல்லாமல் கிடைத்து கொண்டே இருக்கும்.

    ஏன் என்றால் தனிப்பெருங்கருணை உள்ள ஒரே கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மைக் கடவுளாகும். 

    உலகியல் சம்பந்தமான தியானம்.தவம்.யோகம்.போன்ற மாயா ஜால வேலைகள் எல்லாம் வேண்டியதில்லை.ஜீவர்களிடத்தில் உண்மையான தயவும்.ஆண்டவரிடத்தில் உண்மையான இடைவிடாத அன்பும் இருந்தாலே போதுமானது.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

    அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
    9865939896.

    வியாழன், 21 நவம்பர், 2019

    மாலைகள் போடுவது ஏன் ?

    *மாலைகள் போடுவது ஏன் !*

    சுத்த சன்மார்க்கம் என்பது பேச்சு அளவில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும்.

    தத்துவ உருவ தெய்வங்களுக்கு மாலை போடுவார்கள்.

    இறந்தவர்களுக்கு மாலை போடுவார்கள்.

    இறந்தபோன தலைவர்கள்.மற்றும் சிறப்புடன் மக்களுக்கு நன்மைசெயது மாண்டு போனவர்களுக்கு சிலைகள் வைத்து மாலைபோடுவார்கள்

    குறிப்பாக மாண்டு போனவர்களுக்குத் தான் மாலை போடுவது வழக்கமாக தொன்று தொட்டு வழக்கமாக நடைமுறையில் உள்ளன.

    *வள்ளலார் அந்த வகையை சார்ந்தவர் அல்ல*.

    *மரணத்தை வென்ற மகான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து கொண்டவர்*.

    ஐந்தொழில் வல்லபம் பெற்றவர்

    அருட்பெருஞ்ஜோதி யாக தன்னை மாற்றிக் கொண்டவர்.என்றும் நிரந்தரமாக உள்ளவர்.

    தன் உடம்பை வெளிக்காட்டாமல் போட்டோவில் கூட விழச்செய்யாதவர்.

    அப்படிப்பட்ட ஞான தேகம் பெற்றவரை ஒளியாக வழிபடவேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

    *படம் வேண்டாம் என்பவற்கே படம் வைத்தும்*சிலை வைத்தும்* *மாலைப்போட்டும்* வணங்குவதும்.
    வழிபாடு செய்வதும் சரியா தவறா என்று சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்.

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஒளியாக வைத்துதான் வழிபடவேண்டும் என்று *வடலூரில் சத்திய ஞானசபையை தோற்றுவித்தவர்*

    *ஜோதிக்கும் மாலை போடுகிறார்கள்*

    வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை.
    ஒழுக்கங்களை உண்மையாக கடைப்பிடிப்பவர்கள் இதுபோன்ற தவறான செயல்களை செய்ய மாட்டார்கள்.உண்மை அறியாமலே பழக்கத்தின் வாயிலாக செய்து கொண்டு வருகிறார்கள்

    சமய மதங்களைப் பின்பற்றும் சன்மார்க்கிகள்தான் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு செயல்படுகிறார்கள்.

    அவர்கள் அறியாமையில் செய்யும் செயல்கள் வருங்கால இளைய சமுதாயத்தையும் அறியாமையில் தள்ளிவிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    சுத்த சன்மார்க்கம் என்பது சாதி.சமய.மதங்களின் சடங்குகளை கடந்தது

    தினமும் ஒவ்வொரு சன்மார்க்க சங்கங்களிலும் வழிபாடு முடிந்து இறுதியில் விண்ணப்பம் சொல்கிறார்கள் அதில் உள்ள உண்மையான வார்த்தைகள் என்னவென்று அறிந்து தெரிந்து.புரிந்து கொள்ளாமல் *அதையும் சடங்குகளாகவே படித்துக்கொண்டு வருகிறார்கள்.*

    *வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க விண்ணப்பம்.*

    பொருமையாக படியுங்கள் உண்மை விளங்கும்.

    வள்ளலார் சொல்லியது !

    அருட்பெருஞ்ஜோதி அற்புதக்கடவுளே !  அற்புத திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியா்களாக்கி உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்துச்

    சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

    எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக்கடவுளே !

    இது தொடங்கி சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய *சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள்.*
    என்பவற்றின் *ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.*
    *வருணம்.ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்*

    எங்கள் மனதில் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

    சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய
     *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

    எல்லாமாகிய
    தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் ! வந்தனம் !

    மேலே கண்ட விண்ணப்பத்தை நாம் படித்து என்ன தெரிந்து கொண்டோம் என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோளாகும்.

    மாலைகள் போட்டு விரையம் செய்யும் அந்த பணத்தில்  ஏழைகளுக்கு அன்னதானம்.மற்றும் ஜீவகாருண்யம் செய்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

    கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

    அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
    9865939896.

    புதன், 20 நவம்பர், 2019

    உண்மையான அருளாளர் யார் ?

    உண்மையான அருளாளர் யார் ?

    ஆன்ம நேய உடன் பிறப்புக்களே அனைவருக்கும் வந்தனம்.

    *உண்மையான அருளாளர் யார் ? என்பதை தெரிந்து கொள்ளாமல்.எக்காலத்திலும் நாம் அருளைப் பெறவே முடியாது*

    இந்த உலகத்தை இறைவன்  ஏன் படைத்தார் என்றால் ,ஆன்மாக்கள் வாழ்வதற்காகவே படைத்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

    இறைவன் அனுப்பிய குழந்தைகள் ஆன்மா என்பதால்  தன் குழந்தைகளாகிய ஆன்மா  உலகம் முழுவதிலும் சென்று தன் விருப்பம் போல் பல பிறப்புக்கள் எடுத்து வாழ்ந்து இறுதியில் மனிதப்பிறப்பு எடுத்து இறைவன் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று,பின்பு தன்னுடைய சொந்த வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பது இறைவன் ஆணை இறைவன்  கட்டளை.

    *நம் உடம்பு என்னும் வீடு நம் சொந்த வீடு அல்ல வாடகை வீடாகும்*.

    பிறந்து பிறந்து.இறந்து இறந்து வாடகை வீட்டிலே குடிஇருக்காமல் ஆன்மா சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அதற்கு அருள் தேகம் என்று பெயர்.அருள்தேகம் பெற்றால் தான் அருட்பெருவெளிக்குச் செல்ல முடியும்.

    அதுதான் பேரின்பசித்திப் பெருவாழ்வு என்பதாகும்.

    *சொந்த வீடுதான் அருள் நிறைந்த பெருவெளியாகும்* அதாவது அருட்பெருவெளியாகும்.

    வள்ளலார் பாடல் !


    உண்மைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே ஆன்மாவின் விருப்பம் அதுவே ஆன்மசுகம் அருட்சுகம் என்பதாகும்.

    *ஆன்மாவை ஆணவம்.மாயை.மாமாயை.பெருமாயை.
    கன்மம்  என்னும் மலங்கள் அதாவது திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளதால் உண்மை அறியாமல் இந்த உலகத்தை விட்டு வெளியே செல்ல போக்கு வரத்து தெரியாமல் தவிக்கின்றது*.
    இந்த உலகிற்கு வந்த ஆன்மாக்கள் பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து  முன்னேறும் தகுதிப்பெற்று  இறுதியில் உயர்ந்த அறிவுள்ள மனிதப் பிறப்பு கொடுக்கப்படுகின்றது...

    இங்குதான் பிரச்சனைகளே ஆரம்பமாகின்றது.!

    ஆன்மாக்கள் பல பிறவிகள் எடுத்து உள்ள போதிலும் இறுதியில் உயர்ந்த மனிதபிறப்பு கொடுக்கப்படுகிறது.

    ,உயர்ந்த மனித பிறப்புக் கொடுத்தும் உயர்ந்த அறிவு கொடுத்து இருந்தும் , பக்குவம் இல்லாமல் உண்மைத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றது.

    அதற்கு காரணம் !

    ஆன்மாக்களில் மூன்று வகை உண்டு.

    பக்குவ ஆன்மா ! பக்குவாஅபக்குவ ஆன்மா ! அபக்குவ ஆன்மா ! என மூன்று வகையாக உள்ளது.

    உண்மையை அறிந்து கொண்டு வாழ்வது பக்குவ ஆன்மாக்கள்.

    உண்மை தெரிந்தும் தெரியாமலும் திண்டாடுவது பக்குவாஅபக்குவ ஆன்மாக்கள் !

    உண்மைத் தெரிந்து கொள்ள முடியாமல் அறியாமையிலே வாழ்வது அபக்குவ ஆன்மாக்கள் !

    *பக்குவம் இல்லாத ஆன்மாக்கள் சகலர் என்பதாகும்*.

    *பக்குவாஅபக்குவம் உள்ள ஆன்மாக்கள் பிரளயாகலர் என்றும்*.

    *பக்குவ ஆன்மாக்கள் விஞ்ஞானகலர். என்றும் வள்ளலார் பிரிக்கின்றார்*.

    பக்குவம் இல்லாத ஆன்மாக்கள் ஆணவம் மாயை கன்மத்தில் சிக்குண்ட ஆன்மாக்கள் சராசரி மனிதர்கள் அதாவது சகலர்.

    பக்குவாபக்கும் உள்ள ஆன்மாக்கள் ஆணவம் மாயை மட்டும் உள்ள ஆன்மாக்கள் உண்மை விபரம் அறிந்தும் அறியாமலும் உள்ள மனிதர்கள்.பிரளயாகலர்  என்பவர்களாகும்.

    பக்குவம் உள்ள ஆன்மாக்கள் ஆணவம் மட்டுமே உள்ளவர்கள்.இந்த உலக உண்மை மட்டுமே அறிந்தவர்கள்.விஞ்ஞானகலர் என்பவர்களாகும்.

    எல்லாம் வள்ள உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்றால் மட்டுமே ஆன்மாவில் உள்ள ஆணவத்தை இறுதியில் நீக்குவார்.

     சுருக்கமாக சொல்லுகின்றேன்

    உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்களை பக்குவப்படுத்தி,  உண்மையை தெரிவித்து இறைவனிடம் செல்லும் வழியைக் காட்டுவதற்காக ''பக்குவம் ''உள்ள  ஆன்மாக்களை இந்த உலகத்திற்கு அனுப்பிக் கொண்டே உள்ளார்  இறைவன்...

    அவர்கள்தான் *வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மரபினர்* அவர்கள்தான்  .சித்தர்கள்.முத்தர்கள் ,யோகிகள், ஞானிகள்,போதகர்கள்,நாயன்மார்கள்  போன்ற உலக அறிவுள்ள  அருளாளர்கள்  என்பவர்களாகும்.

    *வள்ளலார் வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்ட மரபில் வந்த ஒருவர் அல்ல என்பதை சுத்த சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்*.

    வள்ளலார் இறைவனால் நேரடியாக இந்த உலகத்திற்கு வருவிக்க உற்றவர்..அதற்கு சம்பு பட்ஷம் என்று பெயர்.அதனால்தான் ஓதி உணர்ந்தவர்கள் எல்லாம் கேட்க எல்லாவற்றையும் ஓதாமல் உணர்ந்தவர் வள்ளலார்.

    மற்ற அருளாளர்கள்  இந்த உலகத்திற்கு வந்து,மாயையால் சிக்கி,மாயையின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து ,முழு  உண்மையைத் தெரிந்து கொள்ளாமல்,  உண்மையை அறிந்து கொள்ளாமல் சொல்லமுடியாமல் அவர்களுக்குத் தெரிந்த்தை அறிந்த்தை மக்களுக்கு காட்டி போதித்து விட்டார்கள்.

    *உணமைக் கடவுளைக் காணமுடியாமல் அறியாமை என்னும் திரைகள் ஆணவத்தால் அவர்கள் ஆன்மாக்களை  மறைத்துவிட்டன*.

    அவர்களுக்குத் தெரிந்த அறிவு சார்ந்த  கதைகளையும் ,கற்பனைகளையும், தத்துவங்களையும்.அவரவர்கள் தகுதிக்குத் தகுந்தாற்போல் ஆலயங்களை எழுப்பி சிலைகளை வைத்து கடவுள்களாக புறத்தில் தோற்றிவைத்து காட்டியும்.சொல்லியும்  எழுதிவைத்துவிட்டும் உள்ளார்கள்.

    அவர்களில் சிலர்  மாண்டு போனார்கள்..சிலர் பஞ்ச பூதங்களில் மறைந்து போனார்கள்,சிலர் ஜீவ சமாதி ஆனார்கள், ..

    அவர்களால் தோற்று விக்கப் பட்டது தான் சாதி,சமயம்,மதங்கள் ..அவற்றைப் பின்பற்றி மக்கள் உண்மை அறியாமல் அழிந்து கொண்டு உள்ளார்கள் ..

    இதைத்தான் வள்ளலார் ...

    கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
    கண் மூடிப் வழக்கம் எல்லாம் மண் மூடிப்போக

    மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற மெய் உலகம்
    வாழ்ந்து ஒங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே

    உலைவறும்  இபோழுதே நல் தருணம் என நீயே
    உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை உரைத்தவனே

    சிலை நிகர் வன் மனம் கரைத்துத் திருஅமுதம் அளித்தோய்
    சித்த சிகா மணியே என் திரு நட நாயகனே !

    என்று மக்களுக்குத் தெரிவிக்கின்றார் ..

    மனித தேகம் எடுத்தவர்கள் பூரண  அருளைப் பெறாமல் இறைவனிடம் செல்ல முடியாது என்பதையும்,..பூரண அருளைப் பெறாதவர்கள் சொல்லுவது யாவும் குற்றம் உடையதே என்று சொல்லுகின்றார் .

    பூரண அருள் பெற்றவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்,மரணத்தை வென்றவர்கள் மட்டுமே இறைவனின் சொந்த வீட்டிற்கு செல்லமுடியும்...மாயையால் கட்டிக் கொடுத்த தேகத்தோடும்  செல்ல முடியாது. சிலர் சித்தி முத்திகளைப் பெற்று ,பஞ்ச பூதங்களில் கலந்து கொண்டவர்களும் இறைவனிடம் செல்ல முடியாது...

    பூரண அருளைப் பெற்று... ஊன உடம்பை ,ஒளி உடம்பாக மாற்றி  அருள் உடம்பாகிய ஞான தேகம் பெற்றவர்கள் மட்டுமே இறைவன் அருள்  கோட்டைக்குள்..இருக்கும் ''அருள் பெரு வெளிக்குள்''  செல்ல முடியும்.
    அங்கு இருந்துதான் ஆன்மாக்கள் வந்தது என்பதையும்,அங்குதான் செல்ல வேண்டும் என்பதும், அதுதான் ஆன்ம உரிமை என்பதும் ,ஆன்ம சுதந்திரம் ,என்பதும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    உலகில் தோன்றிய அருளாளர்கள் எவரும் இந்த உண்மையை ,அறிவு சார்ந்த மக்களுக்கு சொல்லவில்லை... அறிவை அறியாமையால் அஞ்ஞானத்தால்,ஊழ் வினையால்  மறைத்து விட்டார்கள்.அவர்கள் கற்றுக்கொடுத்த வாழ்க்கை முறையை கடைபிடித்ததால் மேலும்
     மாயா திரைகள் அழுத்தமாக ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன என்கின்றார் வள்ளலார்.

    நம்முடைய தமிழ் நாட்டில் தோன்றிய ''திருவள்ளுவர்'' இலைமறை காய்மறையாக சொல்லி உள்ளார்,மரணத்தை வெல்லும் வழியையும் சொல்லி உள்ளார் .கதைகளாக சொல்லாமல் கருத்துக்களாக சொல்லி உள்ளார் ..மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் வழியைத் தெளிவாக காட்டியவர் *திருவள்ளுவர்*  ஆனாலும் அவர்  வாழ்ந்து காட்டவில்லை.வாழ்க்கை முறை மக்களுக்குத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

    உலகில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று மக்கள் மத்தியில் வாழ்ந்து காட்டியவர் *திரு அருட்பிரகாச வள்ளலார்* என்பவராகும்..

    இரண்டு பேரும் உயர்ந்த அறிவுள்ள அருளாளர்கள்..அவர்கள்  நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்துள்ளது .நாம் செய்த புண்ணிய பயனே !

    இந்த இரண்டு அருளாளர்கள் தான் உலகின் உயர்ந்த அருளாளர்கள் என்பதை உலகில் உள்ள அனைவரும்  ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

    இந்த இரண்டு அருளாளர்களில்  உயர்ந்தவர் யார் ? என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே பதில் சொல்லுகின்றார் ...

    வள்ளலார் பாடல் !

    அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன்
    அறிவறியா இச்சிறியேனை அறிவு அறியச் செய்வித்தே

    இந்தோங்கு சடைமணி நின் அடியும் முடியும் காட்டி
    இது காட்டி அது காட்டி என் நிலையம் காட்டிச்

    சந்தோட சித்தர்கள் தன் தனிச்சூதும் காட்டி
    சாகாத நிலை காட்டிச் சகச நிலை காட்டி

    வந்தோடு நிகர் மனம் போய்க் கரைந்த இடங் காட்டி
    மகிழ் வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளது !

    மேலே கண்ட பாடலை பலமுறைப் படித்து பாருங்கள் அதில் உள்ள உண்மையை உணருங்கள்.

    மேலும்

    நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே
    நம் மகன் நீ அஞ்சலை என நவின்று என் சென்னி

    தொட்டானை எட்டும் இரண்டும் சொல்லினானைத்
    துன்பம் எல்லாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க

    ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள்
    உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள

    எட்டானை என்னளவில் எட்டி னானை
    எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !.

    இறுதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகின்றார் , என்னுடைய உண்மையான உருவத்தையும் ,என்னுடைய உண்மையான செயல்கள் யாவும்,ரகசியத்தையும் மற்றும் அனைத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் . இந்த உலக மக்களுக்கு சொல்லி விட்டதால் .என்னுடைய துன்பம் எல்லாம் தீர்ந்தது என்று வள்ளலார் இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே  சொல்லுகின்றார்...

    வள்ளலார் பாடல் !

    துன்பம் எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
    சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
    சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
    சுதந்திரம் ஆனது உலகில்

    வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
    வாழ்வு எல்லாம் பெற்று மிகவும்
    மண் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
    மன நினைப்பின் படிக்கே

    அன்பை நீ பெருக உலவாது நீடுழி
    விளையாடுக ''அருட்ஜோதியாம் ''
    ஆட்சி தந்தோம் உனைக் கை விடோம்  கை விடோம்
    ஆணை நம் ஆணை என்றே

    இன்புறத் திரு வாக்களித்து என் உள்ளே கலந்து
    இசைவுடன் இருந்த குருவே
    எல்லாம் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
    இலங்கு நடத்து அரசே !

    இவைப்போல் ஆயிரக் கணக்கான பாடல்களிலே பதிவு செய்து உள்ளார்
    அகவலில் தெளிவாக சுருக்கமாகவும் பதிவு செய்து உள்ளார் ..

    மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
    யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை ....என்றும்..மற்றும்

    நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
    சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
    பேர் அருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
    யார் உளர் நீ சற்றே அறை !....

    என்னைப்போல் இறைவனிடம் தொடர்பு கொண்டவர்களும்.சாகாக் கல்வி கற்றவரும்,சாவா வரம் பெற்றவரும் ,பூரண அருளைப் பெற்றவரும்.மரணத்தை வென்றவரும்.  இந்த உலகில் எவரும் இல்லை , .என்பதை மிகவும் துணிச்சலாக ஆணித்தரமாக உலக மக்களுக்குத் தெரியப் படுத்தி உள்ளார் ..

    இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ? ;-- இந்த உலகில் *உண்மையான அருளாளர் திரு அருட்பிரகாச வள்ளலார் மட்டுமே* என்பதை அறிந்து போற்றி புகழ்ந்து அவர் காட்டிய பெரு நெறியான ,திரு நெறியான சுத்த சன்மார்க்கத் தனி நெறியைப் பின்பற்றி வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம்.

    உலவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி ! என்றும்

    சிவ ரகசியம் எல்லாம் தெரிவித்து எனக்கே நவநிலை காட்டிய ஞான சற்குருவே! என்றும்

    ஆன்ற சன்மார்க்கம் அணிபெற எனைத்தான் ஈன்று அமுதளித்த இனிய நற்றாயே !

    என்பார் வள்ளலார் இந்த உலவை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்
    அறிவை அறிவால் அறியவேண்டும்

    அறிவைக்கொண்டு அருளைப் பெறவேண்டும்.பின்பு அருளைக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறு எல்லாம்
    விளக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

    சுத்த சன்மார்க்க சுக நிலை பெருக
    உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை !

    போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
    ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.!

    வள்ளலாரின் செயல் !

    எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
    இவ்வுலகில் என்தந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும்
    சன்மார்க்க சங்கம் தனை அடையச் செய்வித்தே
    என்மார்க்கம் காண்பேன் இனி !

    மேலே கண்ட பாடல்தான் வள்ளலாரின் குறிக்கோளாகும்.

    *எனவே வள்ளலார்தான் உண்மையான அருளாளர*.

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
    கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

    அன்புடன்  ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
    9865939896