வெள்ளி, 29 டிசம்பர், 2017

உபாசனை நான்கு. வகையாக உள்ளன !

உபாசனை நான்கு. வகையாக உள்ளன ! அதாவது கடவுளை...தொடர்பு கொள்வதற்கு... விக்கிரகத்தை. கடவுளாக உபாசிப்பவர்கள்.. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள்... அக்கினியை கடவுளாக உபசாரிப்பவர்கள். கர்ம காண்டிகள்... கடவுளை இருதயத்தில் உபாசிப்பவர்கள் யோகிகள்... கடவுளை எங்கும் உபாசிப்பவர்கள் ஞானிகள்.... இந்த நான் வகையான வழிபாட்டில் சிறந்த்து.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் காட்டும் ஞான வழிபாடாகும்.அதாவது ஒளி வழிபாடாகும். ஞானம் என்பது சுத்த அறிவாகும்.. ஞானம் என்பது. சாதி.சமயம்.மதம்.ஆசிரம்ம்.சூத்திரம்.கோத்திரம்.குலம்.சாஸ்திர சம்பந்தம்.தேச மார்க்கம்.உயர்ந்தோர்.தாழ்ந்தோர். என்னும் பேதம் நீங்கி எல்லவரும் நம்மவர்களாக சம்மாக கொள்ளுதலாகும்... இந்த குணம் உள்ளவன் எவனோ அவனே கடவுளைக் காண முடியும்.அருளைப் பூரணமாகப் பெற முடியும்...மரணத்தை வெல்ல முடியும்...கடவுள் நிலை அறிந்து அம்மயமாக ஆக முடியும். அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 9865939896..

சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம்.!

சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய.கற்றுக் கொள்ள வேண்டிய புருஷார்த்தம் ! நாம் அவசியம் பெறும் புருஷார்த்தம் நான்கு. அவையாவன: 1.சாகாக்கல்வி. 2.தத்துவநிக்கிரகம் செய்தல் 3.ஏம சித்தி. 4.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். இவை நான்கையும் பெறுவதற்குத்தான் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கின்றார் வள்ளலார்... ஒழுக்கம் என்றால் என்ன ? இவை பெறுவதற்கு ஒழுக்கம் யாதெனில்: நான்கு வகைப்படும். 1. இந்திரிய ஒழுக்கம். 2. கரண ஒழுக்கம். 3. ஜீவ ஒழுக்கம். 4. ஆன்ம ஒழுக்கம். 1. இந்திரிய ஒழுக்கம்... சாகாக் கல்வியை கற்றுக்கொள்வது. 2.கரண ஒழுக்கம்...தத்துவங்களை தன் வசமாக மாற்றுவதாகும். 3.ஜீவ ஒழுக்கம்.... ஏமசித்தி பெறுவதாகும். 4.ஆன்ம ஒழுக்கம்.... கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்..இவை நான்கும் மரணத்தை வெல்லும் ஒழுக்கங்களாகும்.. இவற்றில் இந்திரிய ஒழுக்கம், கன்மேந்திரிய ஒழுக்கம் ஞானேந்திரிய ஒழுக்கமென இருவகைப்பட்டது. இந்திரிய ஒழுக்கம் என்பது கண்.காது.மூக்கு.வாய்.உடம்பு என்னும் புறக்கருவிகள். ஞானேந்திரியம் ஒழுக்கம் என்பது.புறக்கருவிகளை இயக்கும் உட் கருவிகளாகும். வள்ளலார் சொல்லிய இந்திரிய ஒழுக்கம் ! கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல்; குரூரமாகப் பாராதிருத்தல்; ருசி விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்; இன்சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவ இம்சை நேரிடுங் காலத்தில் எவ்விதத் தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தானங்களிலும் வேறு இடங்களிலும் சஞ்சரித்தல்; நன்முயற்சியில் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிரம அதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மிதஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல், கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பௌதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியானத்தாலும்.இறை சங்கற்பத்தாலும் செய்வித்தல், சுக்கிலத்தை அக்கிரம் அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் - மந்ததரம், தீவிரதரம் - எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற் கவசம் தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம். 2. கரண ஒழுக்கம் ! கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபையின் கண் இடைவிடாது நிற்கச் செய்தல். பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இதன்றி துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்னை மதியாதிருத்தல். இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.கரண ஒழுக்கமாகும். 3. ஜீவ ஒழுக்கம் ! ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது...ஜீவ ஒழுக்கமாகும். 4. ஆன்ம ஒழுக்கம் ! ஆன்ம ஒழுக்கமாவது: எண்பத்து நான்கு கோடி லட்சம் யோனிபேதங்களிலும் உள்ள.அதாவது யானை முதல் எறும்பு வரை தோன்றிய ஜீவன்களின் ஆன்மாவே திருச்சபையாகவும். அதன் உள் ஒளியே பதியாய் அறிந்து நிற்பது. அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் வைத்து.எல்லாம் தாமாகவே கண்டு பேதமற்று பூரணமாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம். இவ்வண்ணமாக ஒழக்கங்களை.கடைபிடித்து நின்றால் மேற்குறித்த அரும்புருஷார்த்தங்கள் கைகூடும். ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதர ஜீவன்களுக்கு. இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்க வேண்டும்.. வள்ளலார் இந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தை தருமச்சாலை ஆரம்பிக்கும் காலத்தில் வெளியிட்டார் .அதன் பின் விரிவாக நான்கு புருஷார்த்தங்களை வெளியிட்டார். மேலே கண்ட ஒழுக்கங்களை முழுவதும் கடைபிடித்தால் மட்டுமே.மரணம் இல்லாப் பெருவாழ்வு யாகிய .சாகாக்கல்வி. தத்துவ நிக்கிரகம் செய்தல்..ஏமசித்தி..கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.போன்ற அரும் புருஷார்த்தங்கள் கைகூடும்... முயற்சி செய்வோம் முடியாத்து ஒன்றும் இல்லை... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளலாம். அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.. 9865939896.

சாதனம் ஒன்றும் வேண்டாம் !

சுத்த சன்மார்க்க சாதனம்!. வள்ளலார் சொல்லும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு வெளியில் உள்ள எந்த சாதனமும் வேண்டாம் என்கிறார்... சாதனம் எவை என்றால்.! சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்"* என்கிறார் சன்மார்க்க சாதனம் சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்.(அதாவது அற்ப சித்துக்கள்.) அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான். சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.என்கிறார்.. வள்ளலார் பாடல் ! பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட் சோதி யளித்து என் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.* என்பதே என் பிரார்த்தனை யாகும் என்கிறார்.... இந்த குணத்தைப் பெறுவதற்கு ஒழுக்கம் வேண்டும் என்கிறார் . அது என்ன ஒழுக்கம் ? அதற்குப் பெயர் தான் *"பெரு நெறி ஒழுக்கம்* என்று பெயர்... அவைதான்.. இந்திரிய ஒழுக்கம். கரண ஒழுக்கம். ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் . என்று நான்கு ஒழுங்க்கங்களை சொல்லி உள்ளார். நாம் கடைபிடிக்க வேண்டியது இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் என்பதாகும்... இந்த இரண்டு ஒழுக்கங்கள் எவை என்பதை திருஅருட்பாவில் தெளிவாக பதிவு செய்துள்ளார்... அவற்றை முழுமையாக பின்பற்றினால்.பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872.

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872. வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் வள்ளலார் . கேட்டு உண்மைக் கடவுளின் இயற்கை விளக்கமாக.வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவுகின்றார். அதன் உண்மையை உணர்ந்து நாம் இதுவரையில் பின் பற்றுகிறோமா ? இல்லையா? என்பதை சிந்திக்க வேண்டும். கவனமாக படித்து தெளிவு பெற்று பயன் அடைய வேண்டும் .. ... உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே ! அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும் அடைந்து அறியாத அற்புத குணங்களையும் கேட்டு. அறியாத அற்புதக் கேள்விகளையும்,செய்து அறியாத அற்புதச் செயல்களையும்.கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்.அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும். இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் .என்று உணர்கின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையவனாகி இருக்கின்றேன். நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் . இயற்கையில் தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும்.இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்.இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும். எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும். எல்லாப் பதங்களையும்.எல்லாச் சத்திகளையும் .எல்லா சத்தர்களையும்.எல்லாக் கலைகளையும்.எல்லாப் பொருள்களையும்.எல்லாத் தத்துவங்களையும். எல்லாத் தத்துவிகளையும் . எல்லா உயிர்களையும்.எல்லாச் செயல்களையும் .எல்லா இச்சைகளையும்.எல்லா ஞானங்களையும். எல்லாப் பயன்களையும்.எல்லா அனுபவங்களையும்.மற்று எல்லா வற்றையும் .. தமது திருவருட் சத்தியால் .. தோற்றுவித்தல்.. வாழ்வித்தல்.. குற்றம் நீக்குவித்தல் .. பக்குவம் வருவித்தல்.. விளக்கம் செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும். எல்லாம் ஆனவர் என்றும். ஒன்றும் அல்லாதவர் என்றும். சர்வ காருண்யர் என்றும் சர்வ வல்லபர் என்றும்.. எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வும் இல்லாத் தனிப்பரும் தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர் ''என்றும். சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நிக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவென்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.. அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ! ஆகிய கடவுளை இவ் வுலகத்தினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து .அழிவில்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் . பல்வேறு சமயங்களிலும். பல்வேறு மதங்களிலும். பல்வேறு மார்க்கங்களிலும். பல்வேறு ல்ட்சயங்களைக் கொண்டு . நெடுங்காலம் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றார்கள்.. இனி இச் சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் .. உண்மை அறிவு. உண்மை அன்பு.. உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் ..எல்லாச் சமயங்களுக்கும் . எல்லா மதங்களுக்கும்.எல்லா மார்க்கங்களுக்கும் . உண்மைப் பொது நெறியாக விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று ''பெரும் சுகத்தையும்.பெரும் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு உள்ளம் கொண்டு . சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை ''இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ...இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்கே யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் ..என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி .அருட்பெருஞ்ஜோதியிராய் வீற்று இருக்கின்றார் .. ஆகலின் .அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி .இறந்தவர் உயிர் பெற்று எழுதல்.. மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்.முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள் . என்னும் உண்மையை வள்ளலார் தெரிவித்து உள்ளார்/ நாம் இதுவரையில் வள்ளலார் சொல்லிய வண்ணம் பின் பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்...இவ்வளவு உண்மையைத் தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் நாம் நம் விருப்படியே செயல்படுகிறோம்.... அருட்பருஞ்ஜோதியர் நமக்கு கருணைக் காட்டுவார. என்பதைக் கருத்தில் கொண்டு உண்மை உணர்வோடு செயல்பட வேண்டும்.சுத்த சன்மார்க்கிகளே இனிமேலாவது திருந்துங்கள் செயல்படுங்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872.

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872. வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் வள்ளலார் . கேட்டு உண்மைக் கடவுளின் இயற்கை விளக்கமாக.வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவுகின்றார். அதன் உண்மையை உணர்ந்து நாம் இதுவரையில் பின் பற்றுகிறோமா ? இல்லையா? என்பதை சிந்திக்க வேண்டும். கவனமாக படித்து தெளிவு பெற்று பயன் அடைய வேண்டும் .. ... உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே ! அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும் அடைந்து அறியாத அற்புத குணங்களையும் கேட்டு. அறியாத அற்புதக் கேள்விகளையும்,செய்து அறியாத அற்புதச் செயல்களையும்.கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்.அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும். இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் .என்று உணர்கின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையவனாகி இருக்கின்றேன். நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் . இயற்கையில் தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும்.இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்.இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும். எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும். எல்லாப் பதங்களையும்.எல்லாச் சத்திகளையும் .எல்லா சத்தர்களையும்.எல்லாக் கலைகளையும்.எல்லாப் பொருள்களையும்.எல்லாத் தத்துவங்களையும். எல்லாத் தத்துவிகளையும் . எல்லா உயிர்களையும்.எல்லாச் செயல்களையும் .எல்லா இச்சைகளையும்.எல்லா ஞானங்களையும். எல்லாப் பயன்களையும்.எல்லா அனுபவங்களையும்.மற்று எல்லா வற்றையும் .. தமது திருவருட் சத்தியால் .. தோற்றுவித்தல்.. வாழ்வித்தல்.. குற்றம் நீக்குவித்தல் .. பக்குவம் வருவித்தல்.. விளக்கம் செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும். எல்லாம் ஆனவர் என்றும். ஒன்றும் அல்லாதவர் என்றும். சர்வ காருண்யர் என்றும் சர்வ வல்லபர் என்றும்.. எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வும் இல்லாத் தனிப்பரும் தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர் ''என்றும். சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நிக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவென்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.. அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ! ஆகிய கடவுளை இவ் வுலகத்தினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து .அழிவில்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் . பல்வேறு சமயங்களிலும். பல்வேறு மதங்களிலும். பல்வேறு மார்க்கங்களிலும். பல்வேறு ல்ட்சயங்களைக் கொண்டு . நெடுங்காலம் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றார்கள்.. இனி இச் சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் .. உண்மை அறிவு. உண்மை அன்பு.. உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் ..எல்லாச் சமயங்களுக்கும் . எல்லா மதங்களுக்கும்.எல்லா மார்க்கங்களுக்கும் . உண்மைப் பொது நெறியாக விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று ''பெரும் சுகத்தையும்.பெரும் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு உள்ளம் கொண்டு . சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை ''இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ...இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்கே யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் ..என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி .அருட்பெருஞ்ஜோதியிராய் வீற்று இருக்கின்றார் .. ஆகலின் .அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி .இறந்தவர் உயிர் பெற்று எழுதல்.. மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்.முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள் . என்னும் உண்மையை வள்ளலார் தெரிவித்து உள்ளார்/ நாம் இதுவரையில் வள்ளலார் சொல்லிய வண்ணம் பின் பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்...இவ்வளவு உண்மையைத் தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் நாம் நம் விருப்படியே செயல்படுகிறோம்.... அருட்பருஞ்ஜோதியர் நமக்கு கருணைக் காட்டுவார. என்பதைக் கருத்தில் கொண்டு உண்மை உணர்வோடு செயல்பட வேண்டும்.சுத்த சன்மார்க்கிகளே இனிமேலாவது திருந்துங்கள் செயல்படுங்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

திங்கள், 25 டிசம்பர், 2017

ஞான சித்தர் வள்ளலார்

[23/12, 11:56] ‪+91 94427 78420‬: குருபாரம்பரியம் தரும் காலக் கணக்கீடு காயகல்ப மூலிகையும் காலக் கணக்கீடும் சித்தர்கள் எதையும் காலக் கணக்கீட்டு முறையில் விளக்கிடும் அறிவியல் போக்குக் கொண்டிருப்பர் என்பதற்கு நிறையச் சான்றுகள் அவர்களுடைய ஏட்டுச் செய்திகளிலும் வாக்குச் செய்திகளிலும் உள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தமது ஏட்டுச் செய்திகளிலும் வாக்குச் செய்திகளிலும் பிறர் எழுதியவை, கூறியவை என்ற செய்திகளைக் காலக் கணக்கீட்டு முறையோடும், குறிப்பிட்டவர்களின் பெயர்களுடனுமே வெளியிட்டுள்ளார். இது, இவருடைய தெளிந்த, நேரிய, நடுநிலை மிக்க அறிவியல் போக்கினையே வெளிப்படுத்துகின்றது. இதனாலேயே இவர் எழுதியுள்ள வரலாறுகள் உலக வரலாற்றுத் துறையில் படிந்துள்ள இருளை அகற்றுமென்று நம்ப முடிகின்றது. “... இவ்வுலகம் ஒருநூறு ஆயிரம் கோடியாண்டுகள் நெருப்புக் கோளமாகவும்; ஒரு நூறு ஆயிரம் கோடியாண்டுகள் பனிக் கோளமாகவும்; ஒரு நூறு ஆயிரம் கோடியாண்டுகள் நீர்க்கோளமாகவும் இருந்த பின்னரே கல்லும், மணலும், மண்ணும் தோன்றின. இவை தோன்றிட ஒரு நூறு ஆயிரம் கோடியாண்டுகளாயின. ஆக நானூறாயிரம் கோடியாண்டுகளுக்குப் பின்னரே இவ்வுலகில் உயிரணு ஊற்றுக்கள் தோன்றி அவற்றிலிருந்து உயிரணுக்கள் வெளிப்படலாயின. இவற்றில் ஒன்றரை நூறாயிரம் உயிரணுக்கள் ஒன்று கூடி ஓர் அருவம் என்ற கணக்கில் அருவங்கள் தோன்றின. நீரிலும் நிலத்திலும் இந்த அருவங்களின் முயற்சியாலும், உயிரணுக்களின் கலப்பாலும் பல்வகைப் பட்ட பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றின ....” [23/12, 11:57] ‪+91 94427 78420‬: “ ... மணிசன் [சித்தர்களின் நூல்களில் ‘மண்ணின் ஈசன் மணிசன்’ என்ற கருத்து விளக்கம் உள்ளது. அத்துடன் ‘மனதை உடையவன் மனிதன்’ என்ற கருத்து விளக்கமும் உள்ளது. இவற்றுக்கு மேலாக ‘மணிசன் தனது ஆறாவது அறிவால் உயர்ந்து மனப்பக்குவம் பெற்றபின் மனிதன் ஆனான்’ என்ற கருத்து விளக்கமும் உள்ளது. சித்தர்களின் நூல்களில் ‘மணிதன்’ என்று எழுதும் மரபும் உள்ளது.] இவ்வுலகில் தோன்றிப் பதினாறரை நூறாயிரம் ஆண்டுகள் கழித்து; நீர் சூழ்ந்த ஒரே பெருநிலப் பரப்பாக இருந்த நாவலந்தீவு முதன்முதலாகப் பெரியதோர் கடல் கோளுக்கு உள்ளாகிப் பிரிந்து நாலாபக்கமும் பல சிறிய எளிய கண்டங்களும் தீவுகளும் உண்டாயின. நாவலந்தீவின் நடுப்பகுதி குமரிக் கண்டமாக மிஞ்சி நின்றது. இக்குமரிக் கண்டமே முதன்முதல் மணிசர்கள் பிறந்த நிலப் பகுதியாகும். இந்நிலப் பகுதியே பதினெண்சித்தர்களின் தாயகமாகும்....” “... மணிசர்களுடன், விண்ணிலிருந்து வந்த பதினெண்சித்தர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் உறவு கொண்டு மனிதர்களை உருவாக்கினார்கள். இம் மனிதர்களுக்காகப் பதினெண்சித்தர்கள் பஃறுளியாற்றங்கரையில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட [மருதை - என்ற பாட வேறுபாடு இதற்குண்டு] முதல் அரசை உருவாக்கினார்கள். ஓர் ‘உகம்’ [யுகம் - பாடவேறுபாடு] பதினெண்சித்தர்களின் தலைவரான சீவனாலும் [சிவன் - என்ற பாடவேறுபாடு இதற்குண்டு. சித்தர்களின் நூல்களில் ‘சீவன்’, சிவன்’ என்ற இரு சொற்களும் ஆட்சியில் உள்ளன] அவர் மகன் முருகனாலும் கழிந்தது. அதன் முடிவில் இரண்டாவது கடல்கோள் நிகழ்ந்தது. அதற்குப் பின் இரண்டாவது உகம் இராமதேவனுடைய ஆட்சியின் முடிவில் ஏற்பட்டது. அப்போது கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழ்மொழி உலகாண்டிட்டது. [23/12, 11:57] ‪+91 94427 78420‬: இராமதேவனின் முடிவில் பிறந்த மூன்றாவது கடல் கோள் கபாடபுரத்தையுள்ளிட்ட பெருநிலப் பரப்பை அழித்தது. அதன்பிறகு பிறந்த மூன்றாவது உகம் கண்ணதேவனுடைய ஆட்சியின் முடிவோடு முடிந்தது. ஆனால், அப்போது கடல்கோள் ஏதும் நிகழவில்லை. ஆனால், மனிதர்களின் மனத்தளவில் பெரிய கடல்கோள் ஏற்பட்டு எல்லாத் தெய்வீகப் பண்புகளையும் அழித்தது. அதற்குப் பின் நான்காவது உகம் பிறந்தது. மூன்றாவது உகத்தில் தோற்றுவிக்கப் பட்ட மூன்றாவது தமிழ்ச் சங்கம் எவ்வித அழிவுமின்றி நான்காவது உகத்திலும் செயல்பட்டிட்டது....” பதினெண்சித்தர் பீடத்தை உருவாக்கிய சித்தர் சிவபெருமானால் பஃறுளி யாற்றங்கரையிலிருந்த தொன்மதுரையில் [தென்மதுரை, தென்மருதை, தொன்மருதை என்ற பாடவேறுபாடு இதற்குண்டு] தோற்றுவிக்கப் பட்ட முதல் தமிழ்ச் சங்கத்து நூல்களும்; பதினெண்சித்தர் பீடாதிபதிகளில் ஒருவரான கபாடபுரத்துச் சித்தர் கருவூறார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட இரண்டாவது தமிழ்ச் சங்கத்து நூல்களும்; பதினெண்சித்தர் பீடாதிபதிகளில் ஒருவரான சித்தர் தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் அவர்களால் வைகையாற்றங் கரையிலுள்ள மதுரையில் தோற்றுவிக்கப் பட்ட மூன்றாவது தமிழ்ச் சங்கத்து நூல்களும் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனால் தொகுத்து வகுத்து வகை செய்யப் படலாயின. இம்மாபெரும் பணியினைப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் முன்னின்று செயல்படுத்தினார். அதாவது, அவர் இப்பணியினை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரைக் கொண்டு செயல்படுத்தினார். ஆனால், வட இமயமலைச் சாரலைச் சார்ந்த பிராகிருத மொழிக் களப்பிறர்களும்; கங்கை கடலோடு கலக்கும் கடற்கரைப் பகுதியைச் சார்ந்த பாலிமொழிக் களப்பிறர்களும் [23/12, 11:57] ‪+91 94427 78420‬: பாண்டியப் பேரரசைத் தாக்கி மூன்றாவது தமிழ்ச் சங்கத்தை எரியூட்டியும், தமிழ்ப் புலவர்களைக் கொன்று குவித்தும் தமிழை வலிமைப்படுத்தும் பணியினைச் சிதைத்தனர். மூன்றாவது தமிழ்ச்சங்கம் அழிந்த பின்னர் நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்திட்ட சித்தர் அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கரந்தமலைக் குகையில் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரை வாழவைத்து எஞ்சிய தமிழ் நூல்கள் அனைத்தும் வகையோடு வாழ வழிசெய்தார். ...” “மூன்றாவது தமிழ்ச் சங்கம் அழிவதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் அதியமான் நெடுமானஞ்சி - ‘கருநெல்லிக்கனி’ எனும் காயகல்ப மூலிகையை ஔவையாருக்குக் கொடுத்துத் தமிழ் என்றும் செழித்து வாழ வகை செய்தான். ஔவையும் மூன்றாவது தமிழ்ச் சங்கம் அழிந்தபின் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் வளர்த்துச் சேரமான் பெருமால் நாயனாரோடும், சுந்தரமூர்த்தி நாயனாரோடும் திருக்கயிலாயம் சென்று முத்தியுற்றிட்டார்.... காயகல்ப மூலிகையால் ஔவையார் பன்னெடுங்காலம் வாழ்ந்தது கண்டும் கூடப் பதினெண் சித்தர்களின் ‘சித்தர் மருத்துவத்தையும்’, ‘சித்த மருத்துவத்தையும்’ முறையோடு கையாண்டு நிறை வாழ்வு வாழ்பவர் அருகிவிட்டனரே ....” இக்குறிப்புக்கள் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் நூல்களில் பல இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, 1. குருபாரம்பரியம், 2. அரச பாரம்பரியம், 3. முச்சங்க வரலாறு, 4. பதினெண்சித்தர் வரலாறு, 5. சித்தர் நெறி, 6. சித்தர் மருத்துவம், 7. சித்த மருத்துவம், 8. தமிழிலக்கிய வரலாறு ... முதலியவற்றில் இவையுள்ளன. -----------------------------------பதினெண் சித்தர் இயக்கம். இறுதியாக 18ஆம் நூற்றாண்டில்.தோன்றிய ஞான சித்தர்.திருஅருட்பிரகாச வள்ளலார்.உலக உண்மைகளையும்.அதன் வரலாறுகளையும் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழையும்.அதன் பெருமையும்.உலகிற்கு பரை சாற்றுகின்றார்.எல்லா உண்மைகளையும்.தாம் எழுதிய திருஅருட்பா என்னும் நூலில் எழுதிவைத்துள்ளார் அதில் உள்ள இறை உண்மையும்.உலகத்தை படைத்த விபரங்களையும் படித்து தெரிந்து கொண்டால் எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்து கொள்ளலாம்.!

புதன், 20 டிசம்பர், 2017

ஆன்மாவும் ஏழு திரைகளும்.!

ஆன்மாவும் ஏழு திரைகளும்.! ஆன்மாவும் ஏழு திரைகளும்.!  வள்ளலார் சொல்லும் ஏழு திரைகளை நீக்குவதே சாகாக் கல்வி யாகும் ! இந்தப் பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யார் எனில் ? நான் ஆன்மா ,சிறிய அணு வடிவனன் .மேபடி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது.'இருப்பிடம் லலாட ஸ்தானம்''  அதன் வண்ணம் கால் பங்கு பொன்மை ,முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம் ,(அதாவது கோழி முட்டைப் போன்றது) இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை வெளியில் காட்டாமல் மாயா திரைகள் (அறியாமை.அஞ்ஞானம்) என்னும் அசுத்த மாயா திரைகளும்.சுத்த மாயா திரைகளும்.ஆகிய ஏழு திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளன ... அவைகள் யாவன ;-- கறுப்புத் திரை ;---- ---மாயா சத்தி,அசுத்த மாயா சத்தி !. நீலத்திரை ;---------- --சுத்தா சுத்த மாயா சத்தி ! பச்சைத்திரை ;--------கிரியா சத்தி !. சிவப்புத்திரை ;--------பராசத்தி ! பொன்மைத்திரை;--  இச்சாசத்தி...1 வெண்மைத் திரை;---ஞான சத்தி ! கலப்புத் திரை ;--------- ஆதி சத்தி 1  மேலே கண்ட திரைகள் ஒவ்வொன்றுக்கும்.பூத சத்தி என்று பெயர் ,இந்த சத்திகள் அனைத்தும்  ஏழு விதமான அணுக்களின்  சேர்க்கையாகும், அந்த அணுக்கள் அனந்த வண்ண பேதமாக .ஏழு வண்ணங்களுக்கும் ஏழு விதமான அணுக்களின் கூறுகளாகும்,,..அந்த அணுக்கள் எவைகள் என்பதை வள்ளலார் சொல்லி உள்ளார் . இந்த பூத ஆகாயத்தில் இருக்கும் அணுக்கள்;--- சாதாரண அணு ,அசாதாரண அணுக்கள் என ஏழு வகையாய்ப் பிரியும் , அவை ;--- வால் அணு ,,, திரவ அணு ... குரு அணு ,... லகுஅணு .... அணு ... பரமாணு ... விபு அணு , என ஏழு வகையான.ஏழு வண்ணங்களாக உள்ளன . இதில் . காரிய அணு ,, காரிய காரணஅணு.. காரண அணு . என மூன்றும் பல அணுக்களின் கூட்டு பிரிவுகளாக உள்ளன . ஆன்மாக்களின் தன்மைக்கும் ,உயிரின் தன்மைக்கும் தகுந்தாற் போல் மனித தேகம்.அணுக்களின் சேர்க்கையால் பல வண்ணங்களான.உடம்பு என்னும் வீடு கட்டிக் கொடுக்கப் படுகின்றது. இந்த ஏழு விதமான அணுக்களும் சேர்ந்ததுதான் நம்முடைய உடம்பு ,..இந்த ஏழு அணுக்களில்.பஞ்ச பூத அணுக்கள் ஐந்தும் ,  ஆன்மாவும் ,உயிரும் சேர்ந்து  இரண்டு, மொத்தம் ஏழு விதமான அணுக்கள் அடங்கும். இந்த உடம்பிற்கு ஐந்து மலங்கள் கலந்த செயல்கள் உள்ளன ! பசு என்பது ;----ஐந்து பங்கு  மலங்கள் மறைத்துக் கொண்டுள்ள ஆன்மாவிற்கு பசு என்று பெயர் ! ஜீவன் என்பது;---- மூன்று பங்கு  மலங்கள் உள்ளது ! அதற்கு ஆணவம்.மாயை.கன்ம்ம் என்று பெயர். ஆன்மா என்பது ;--ஒரு பங்கு மலம் உள்ளது ..! ஆணவம் மட்டும் உள்ளது.. சிவம் என்பது ஆன்மா;----முற்றும் மலம் நீங்கியது ! சுத்த சிவம் என்பது ;--- பூரண அருள் நிறைந்தது.! மேலே கண்ட மலங்கள் நீங்கினால் மரணத்தை வெல்ல முடியும்...இந்த மலத்தை மறைத்துக் கொண்டு உள்ளது  அறியாமை ,அஞ்ஞானம் என்னும் திரைகளாகும் . அந்த திரைகள் என்ன என்பதை அகவலில் விளக்கி உள்ளார் . கரைவின் மா மாயைக் கரும் பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! பேருறு நீலப் பெருந் திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! பச்சைத் திரையால பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! பொன்மைத் திரையால பொருளுறு வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! கலப்புத் திரையால கருது அனுபவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! என்று தெளிவாக வள்ளலார்  விளக்கி உள்ளார்....ஒவ்வொருத் திரைக்கும் இடை வெளி உள்ளது .அந்த  இடை வெளியை நீக்க வேண்டும்...இந்த திரைகளை எல்லாம் நீக்கும் வழியைத் தெரிந்து கொண்டால். ஆன்மாவை அறிந்து கொள்ளலாம். ஆன்மாவைத் தெரிந்து கொண்டால்..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து கொள்ளலாம்.   திரையை நீக்கிக் கொள்ள இடைவிடாது.அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதாகும்.....இதுவே சத்விசாரம்... இந்த மாயா திரைகளை நீக்க வேண்டுமானால் ,எது தேவை !  அன்பு.தயவு.கருணை பெற வேண்டும்' இந்த மூன்றும் பெற்றால் தான் அருள்' என்னும்  அமுத திரவம் சுரக்கும் ...அமுத திரவம் எங்கு உள்ளது ...ஆன்மாவில் உள்ளது ... அருள் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்ற வேண்டும், அந்த அருள் அமுதம் ஐந்து வகையாக, ஐந்து சுவையாக உள்ளது ,, பஞ்ச அமுத ஸ்தானங்கள் ;-- 1, வது அமுதம் நாக்கின் அடியில் இனிப்புள்ள ஊற்று ஜலம் போல் இருக்கும் ! 2, வது அமுதம் உள் நாக்கின் மேல் இளகின இனிப்பு உள்ள சர்க்கரைப் பாகு போல் இருக்கும் !. 3,வது அமுதம் மூக்கு முனையில் காய்ச்சின சர்க்கரைப் பாகு போல் இருக்கும்! 4,வது அமுதம் நெற்றி நடுவில் முதிர்ந்த சர்க்கரைப் பாகு போல் இருக்கும் ! 5, வது அமுதம் மகா இனிப்பு உள்ள மணிக் கட்டியாக இருக்கும் !  அதிக குளிர்ச்சியாகவும்.இனிப்பாகவும் இருக்கும் ! இந்த ஐந்தாவது அமுதத்தை உண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெறுவார்கள் ..... மேலும் இந்த அமுதம் எந்த வகையால் கிடைக்கும் .எப்படி வாழ்ந்தால் கிடைக்கும் என்பதையும்.தெரிவித்து உள்ளார்...ஜீவ காருண்யத்தாலும்..சத்விசாரத்தால் மட்டுமே கிடைக்கும் என்கிறார் வள்ளலார்... பஞ்ச அமுத ஸ்தானங்கள் ;--- யோகா அனுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் ! 1,வது அமுதம் நாக்கு நுனியில் பக்குவ ஞானத்தால் சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால் ! 2,வது புவன அமுதம் நாக்கு மத்தியில் ,பக்குவ கிரியையால் ஸ்திதி  பிரஞ்ஞை உணர்ச்சியால் ! 3,வது மண்டலா அமுதம் ,நாக்கின் அடியில் அக்குவ இச்சையால் சம்மார உணர்ச்சியால் ! 4,வது ரகசியா அமிர்தம் உள் நாக்கின் அடியில் பக்குவ திரோபவம் உணர்ச்சியால் ! 5,வது மவுனா அமிர்தம் உண்ணாக்குக்கு மேல் ,பக்குவ அனுக்கிரகம் ,அனுக்கிரக உணர்ச்சியால் ,, அதன் சுபாவத்தினது அனுபவம் துரிய நிலை ! மேலே கண்ட அமுதத்தை ,மேலே கண்டபடி நம்முடைய தலைப் பாகத்தில் உள்ள ஆன்மாவில் இருந்துதான் பெற்று அனுபவிக்க வேண்டும்....இந்த அனுபவத்தைப் பெற்றால்தான், ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றி  மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு கிடைக்கும்..இதற்கு அனுபவ நிலைகள் நிறைய உண்டு ,, மேலும் வர்ணமாகிய எழுத்தாலும், வண்ணமாகிய ரூபத்தாலும், தொழில் ஆகிய பெயராலும் ஆனந்தமாக விரியும்,இவைகள் யாவும் ராகம் என்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும்,மேலும் இவைகள் படிப்பால் அறியக் கூடாது .. அறிவது எப்படி எனில் ;;  ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் .அத் தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் ,ஆதலால் இடைவிடாது கருணை நன் முயற்சியில் பழக வேண்டும் ..... கருணை எப்படி எப்போது உண்டாகும்.! நம்முடைய உடம்பு அசுத்த பூத காரிய அணுக்களால் பின்னப்பட்டது ...அசுத்த பூத காரிய அணுக்களை சுத்த பூத காரிய அணுக்களாக முதலில் மாற்ற வேண்டும் ,,..அதற்கு ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் கொள்ள வேண்டும்...பிற உயிர்களைக் காப்பாற்றினால் நம்முடைய உயிர் காப்பாற்றப் படும்.. அதற்கு மேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்... இயற்கை உண்மையான இயற்கையான உணர்வோடு,உயிர்களுக்கு உண்டாகும்  பசி, கொலையைத் தவிர்த்து, இந்திரிய ஒழுக்கத்தையும்,கரண ஒழுக்கத்தையும் கடை பிடித்து வாழ்பவர்களுக்கு,முதலில் மேலே  சொல்லிய ஒன்றாவது அமுதமாகிய  இனிப்பு உள்ள ஊற்று ஜலம் போன்ற அமுதம் சுரக்கும். அவற்றை அனுபவித்தவர்களுக்கு   சுத்த தேகம் உண்டாகும்.அவை தான் இம்மை இன்ப வாழ்வு ,இம்மை இன்ப லாபம் என்பதாகும்..... அதற்கு மேல் ,சாதி,சமயம், மதம், இனம்,குலம்,  நாடு, மொழி,கோத்திரம்,சூத்திரம்,சாத்திரம் ,மார்க்கம்,உயர்வு,தாழ்வு முதலிய  போன்ற வேறுபாடுகள் இல்லாமல்,ஜீவ ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால், எல்லாம் தானாக நின்றால்  இரண்டாவது அமுதம்,...முன்றாவது அமுதம்,... உட் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும், அவற்றை உட் கொண்டால் பிரணவ தேகம் என்னும். என்றும் அழியாத ,யாராலும் அழிக்க முடியாத தேகம் கிடைக்கும், தேகம் கண்களுக்குத் , தெரியும் ,பிடிபடாது,அந்த தேகத்திற்கு மறுமை இன்ப வாழ்வு ,...மறுமை இன்ப லாபம் என்று பெயராகும். அடுத்து ;--எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்களில் உள்ள ஆன்மாக்களிடமும் இரங்கி ,ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும்,கண்டு கலந்து பூரணமாக நின்றால் ,நான்காவது அமுதமும்,ஐந்தாவது அமுதமும் ,சுரக்கும்.அந்த அமுதத்தை அருந்தியவர்களுக்கு , சுத்த தேகம்,..பிரணவ தேகம்..ஞான தேகம் ..என்னும் முத்தேக சித்தி கிடைக்கும்.அதற்குத்தான் பேரின்ப வாழ்வு,பேரின்ப லாபம் .என்பதாகும்.... இந்த ஐந்து வகையான அமுதமும் பூரணமாக அனுபவித்தவர்களுக்கு ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து ,ஒளி தேகம் பெற்று ,கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆகலாம் .... அந்த அருள் ஆன்மாவில் இருந்து சுரக்கும் போது உடம்பு என்னவெல்லாம்  மாற்றம் அடையும் என்பதை ,,அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் பதிவு செய்து உள்ளார் ..அவற்றைப் பார்ப்போம் ;--- தோல் எல்லாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும் மேல் எலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட மென்புடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம் உரத்து இடை பந்தித்து ஒரு திரள் ஆயிட மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் உடல் எலாம் ஊற்று எடுத்து ஒடி நிரம்பிட ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலைந்திடத் தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில் கூயிசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட மெய் எலாம் குளிந்திட மென் மார்பு அசைந்திடக் கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட இனம் பெறும் சித்தம் இயைந்து களித்திட அகங்காரம் ஆங்காங்கே அதிகரிப்பு அமைந்திடச் சகங் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட அறிவு உரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப் பொறி யுறும் ஆனம தற்போதமும் போயிடத் தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கே ஒழிந்திடச் சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட உலகு எலாம் விடயம் உளவு எலாம் மறைந்திட அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட என்னுளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே என்னுளத்து எழுந்த என்தனி அன்பே தன்னையே எனக்குத்  தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த எனதனி அன்பே என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடை அன்பே என்னுளே விளங்கி என்னுளே பழுத்து என்னுளே கனிந்த என்னுடை அன்பே தன்னுளே நிறைவுறு  தரம் எலாம் அளித்தே என்னுளே நிறைந்த என்தனி அன்பே துன்புள அனைத்தும் தொலைத்து எனது உருவை இன்புரு வாக்கிய என்னுடை அன்பே பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய் என்னுளங் கலந்த என்தனி அன்பே ! என்னும் அகவல்  வரிகளில் உடல் மாற்றத்தைப் பற்றி  தெளிவாக அனுபவித்து தெரிவித்து உள்ளார் நமது அருள் வள்ளலார் .... தொடரும் ;--- அன்புள்ள ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

திங்கள், 18 டிசம்பர், 2017

அன்பு என்றால் என்ன ?

அன்பு என்றால் என்ன ? எல்லா சமயங்களும் மதங்களும்.சித்தர்களும்.யோகிகளும்.ஆன்மீக அருளாளர்கவளும் அன்பைத்தான் அதிகமாக போதிக்கின்றார்கள்.. அன்பே சிவம் என்றும்.! அன்பே கடவுள் என்றும்.! அன்பே இன்ப ஊற்று என்றும்..! அன்புடையார் எல்லாம் உடையார் என்றும் ! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றும்! அன்பு இல்லை என்றால் எதுவும் இல்லை என்றும்! என்றும் பலவாறாக சொல்லி கொண்டு உள்ளார்கள்... அன்பு என்றால் என்ன ?அன்பைப் பெறுவது எப்படி? என்றும்.அன்பைப் பெறும் வழி என்ன? என்பதையும்.தெரிந்து கொண்டால் மட்டுமே இறைவனை நம்மீது அன்பு செலுத்துவார் . இந்த உண்மையை.எந்த மதங்களும்.சமயங்களும் முறையாக சொல்லவில்லை... வள்ளலார் மட்டுமே அன்பை பெறும் வழியையும்.அறிவு பெறும் வழியும்.அருள் பெறும் வழியையும் தெளிவாக விளக்கி உள்ளார்... அன்பு என்பது தானாக வருவதில்லை.வள்ளலார் சொல்லுவதை நன்கு கவனிக்கவும். கடவுள் அருளைப் பெறுவதற்கு ஜீவர்களிடத்தில் ஜீவர்கள் உண்டாகும் பசி.கொலை.பிணி.ஆபத்து.தாகம்.இச்சை.எளிமை.பயம்.இவைகளினால் உண்டாகும்.துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும்.கேட்டபோதும்.அறிந்தபோதும்.ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறிய வேண்டும். அந்த ஆன்ம உருக்கத்தால் அந்த துன்பத்தை போக்க வேண்டும். அதற்கு ஜீவ காருண்யம் காருண்யம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளலார்.அருளைப் பெருவதற்கும்.அன்பை பெருவதற்கும்.அறிவு விளக்கம் தேவைப்படுகின்றது.. ஜீவ காருண்யம் விளங்கும் போது .அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்.அதனால் உபகாரசத்தி விளங்கும்.அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.. ஜீவகாருண்யம் மறையும் போது.அறிவும் அன்பும் உடனாக மறையும்.அதனால் உபகாரசத்தி மறையும்.உபகாரசத்திகள் மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்...என்கிறார். எனவே அறிவு விளங்கும் போது உண்மைத் தானாக தோன்றும்..அதுசமயம் அன்பை ஆண்டவர் இடத்தும்.ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தை ஜீவர்களிட்தும் செலுத்த வேண்டும் என்கிறார் வள்ளலார்.. எனவே அன்பை கருணையால் தான் பெறமுடியும்.அன்பு தானாக கிடைக்காது.கருணையால் பெற்ற அன்பை கடவுளிடம் காட்ட வேண்டும்.அதனால் தான் கருணையும் சிவமும் பொருள் எனக்காணும் காட்சியும் பெருக என்றார்...அன்பே சிவம் என்றார்கள்.அன்பை இறைவனிடம் இடைவிடாது செலுத்த வேண்டும். ஞான சரியையில் முதல் பாடலில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.! நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து *அன்பே*நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருள்அமுதே நன்நிதியே ஞான நடத்தரசே என் உரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகயலீர் மரணம் இல்லாப்பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே ! என்னும் பாடலில்.அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு நிறைந்தால் தான் அழியாத நன் நிதியாகிய அருள் அமுதம் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அருள் அமுதால் உடம்பு முழுவதும் நிறைந்து.ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.அதுவே மரணம் இல்லாமல் வாழ்ந்திடலாம் கண்டீர் என்கிறார் வள்ளலார்... அகவலில் அன்பைப் பற்றி சொல்லுகின்றார்! என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட என்னுளத் தோங்கிய என்றனி யன்பே 739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே 740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால் என்னைவே தித்த என்றனி யன்பே 741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடை யன்பே 742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து என்னுளே கனிந்த வென்னுடை யன்பே 743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே என்னுளே நிறைந்த என்றனி யன்பே 744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை யின்புறு வாக்கிய என்னுடை யன்பே 745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா என்னுளங் கலந்த என்றனி யன்பே 746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி என்வசங் கடந்த என்னுடை யன்பே 747. தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே என்னுளே பொங்கிய என்றனி யன்பே ! அன்பின் தன்மையை புரிந்து கொண்டு அன்பை இறைவன் மேல் செலுத்தி அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக. அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

ஆன்மாவும் தேகங்களும் !

ஆன்மாவும் தேகங்களும் ! ஆன்மாவானது .அகண்ட பெருவெளியான அருட்பெருவெளியில் (அதாவது ""அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்"' இயங்கிக் இயக்கிக் கொண்டு இருக்கும் இடத்தில்) உள்ளனவாக உள்ளது.அதற்கு ஆன்ம ஆகாசம் என்று பெயர். ஆன்மாக்களை அருள் அசைவினால்(விசிரிம்பத்தல்) வெளியேற்றப் படுகின்றது.ஆன்மா அருளால் அனுப்பப் படுவதால் அன்பு.தயவு.அருள்.கருணை.ஆனந்தம் இயற்கையாக உள்ளதாக விளங்கப்படுகின்றது. ஆன்மா இவ் பூத உலகத்திற்கு வந்து பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து இறுதியில் மனித தேகம் கொடுக்கப் படுகின்றது.மனித தேகத்தில் வாழ்வதற்கு ஜீவ சுதந்திரம்.தேக சுதந்திரம்.போக சுதந்திரம் கொடுக்கப் படுகின்றது.அந்த சுதந்திரத்தை பயன் படுத்தும் வகையில் தான் வாழ்க்கை அமைகின்றது... போக சுதந்திரத்தை அதிகம் விரும்புவதால்.ஜீவன் என்னும் உயிரையும்..ஆன்மாவையும். ஆன்மாவை அனுப்பிய அருட்பெருஞ்ஜோதி யையும் மறந்து. தேக சுதந்திரம் என்னும் போகத்திலே வாழ்கின்றது.இறுதியில் சலிப்பு என்னும் துன்பம் வருகின்றபோது .எங்கு செல்ல வேண்டும் என்ற வழித்தெரியாமல்.தேகம் பழுது அடையும் தருணத்தில். உடம்பை விட்டு உயிரும்.ஆன்மாவும் பிரிந்து விடுகின்றது.இதற்குப் பெயர்தான் மரணம் என்பதாகும்....இப்படியே பிறந்து பிறந்து.இறந்து இறந்து வெவ்வேறு உடம்பு எடுத்துக் கொண்டே வாழ்ந்து வருகின்றது... மூன்று சுதந்திரத்தையும் விட்டுவிட்டு. அருள் என்னும் சுதந்திரத்தை பெற்றால் மட்டுமே .ஆன்மா வந்த இடம் தெரிந்து செல்ல முடியும்.அதற்குப் பெயர்தான் பேரின்ப வாழ்வு என்பதாகும். ஆன்மா தன்னை அறியாமல் வாழ்வதால் .போக சுதந்திரத்தினால் ஆன்மாவை சுற்றி அறியாமை என்னும் மாயா திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளன.திரைகள் நீங்கினால் தான் ஆன்மா தன்னை அறிய முடியும்.ஆன்மா தன்னை அறிந்தால் மட்டும் போதாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் தொடர்பு கொண்டு அருள் பெறல் வேண்டும். அருளால் போக சுதந்திரத்தையும். தேக சுதந்திரத்தையும்.ஜீவ சுதந்திரத்தையும். நீக்கி ஆன்ம சுதந்திரம் பெற்று .அருள் சுதந்திரம் பெற்று .கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைய முடியும்.இதுதான் வள்ளலார் காட்டிய. காட்டுகின்ற சுத்த சன்மார்க்க புது தனி நெறியாகும்.புதிய பாதையாகும். அருளைப் பெறுவதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ.அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வெளியே வரவேண்டும் என்கிறார் வள்ளலார்.... வள்ளலாருக்கு முன்னால் வந்த அருளாளர்கள் தவறான வழியைக் காட்டி மக்களை குழப்பி விட்டார்கள் என்று சொன்னால் .சமய மத வாதிகளுக்கு கோபமும்.வருத்தமும் வருகின்றது.அதற்கு நாம் என்ன செய்ய முடியும்... வள்ளலாரே பதிவு செய்கின்றார்.! குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனதுமெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.! என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார். நாம் என்ன செய்ய வேண்டும்....நம் உடம்பில் ஆன்மா இயங்கிக் கொண்டு இருக்கும் இடமான சிற்சபையைத் தெரிந்து.இடைவிடாது தொடர்பு கொண்டு துதிக்க வேண்டும் என்கிறார்....உண்மை அறியாமல் புறத்திலே தேடாதீர்கள்.அன்பும் விளங்காது.தயவும் விளங்காது.அறிவும் விளங்காது.கருணையும் தோன்றாது.அருளும் கிடைக்காது என்கிறார்.. நான் சொல்லுவது.நீங்கள் இதுவரையில் படியாத படிப்பு என்கிறார் முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.! என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார் இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்களை திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார். இன்னும் என்ன சந்தேகம் நமக்கு... ஜீவகாருண்ய உணர்வோடு ..நன்கு சிந்தித்து படித்தால்தான் அறிவு விளங்கும். மேலும் சிற்சபையில் உள்ள ஆன்மாவின் தன்மையை புறத்திலே ஒளிவடிவமாக காட்டி உள்ளேன் ஒளியே கடவுளாக பாவித்து வழிபாடு செய்யுங்கள்..வழிபாடு செய்யும் போது இறைவனிடம் விண்ணப்பம் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளார்... அவை யாதெனில்:---- எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! இது தொடங்கி எக்காலத்தும் .சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள் எனபவற்றின் .ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் .வருணம்.ஆசிரம்ம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்.எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள்.எக்காலத்தும்.எவ்விடத்தும்.எவ்வித்த்தும்.எவ்வளவும்.விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.. எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங்கருணக்கு வந்தனம்! வந்தனம் ! என்னும் விண்ணப்பத்தை சன்மார்க்கிகள் வழிபாட்டு நேரத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் வேண்டுகோள் வைத்து. சமய.மதங்களின் கொள்கையில் இருந்து விலக வேண்டும் என்றார்... மேலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையில் இருந்து விலகி விட வேண்டாம் என்றார்..ஏன் என்றால் நாம் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றார்.... வள்ளலார் பாடல் ! எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான் சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ.! என்னும் பாடல் வரிகளில் தெளிவுப் படுத்துகின்றார்... நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளன.. அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 14 டிசம்பர், 2017

உலகத்தின் பொது நெறி !

உலகத்தின் பொது நெறி ! சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறி உலகின் பொது நெறி ! வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க புது நெறி.தனிநெறி.பெருநெறி.சிவ நெறி இதுவரையும் உலகம் அறியாத நெறியாகும். வள்ளலார் பாடல் ! திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு வருநெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திரு உளங் கொண்டு அருளிப் பெருங்கருணை வடிவனொடு வரு தருணம் இதுவே கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே ! உலகத்தின் பொது நெறி தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க புனித நெறியாகும். உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான்.அருளாளர். இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார் அவதரித்த நாள் தான் அக்டோபர் 5,10- 1823. ஆம் ஆண்டாகும் வள்ளல் அடிகளாரின் வான்புகழை அனைவரும் வருடம் முழுவதும் கொண்டாடுவோம்! மகிழ்வோம். இந்து மதமும். சைவம் வைணவ சமயமும். மதமும். இஸ்லாம் மதமும்.கிருத்துவ மதமும்.பவுத்த மதமும் தழைத்தோங்கி இருந்த காலக் கட்டத்தில், வள்ளலார் தான் வள்ளலார் வருவிக்க உற்றார். மதங்கள் சமயங்களில் உள்ள வேதங்கள், புராணங்கள்,இதிகாசங்கள் போன்ற  கட்டுக் கட்டான கதைகள் அனைத்தும் ,கற்பனைகள் என்றார்.அந்த கற்பனைக் கதைகள் முதலானவற்றில் .எவற்றிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆரியப் புராணங்களான இராமாயணம் மகாபாரதம் போன்ற கதைகளில். நேரத்தையும்.காலத்தையும் வீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். கடவுள் என்பவர் ஒருவரே, அவர் அருட்பெருங் கருணையும்.அன்பும்.தயவும்.அருளும் நிறைந்த அருள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார்.அவர் பல உருவங்களில் அல்ல, அவர் அருட்பெருஞ் ஜோதியாக ..ஒளியின் ஊடாக அண்ட சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார். வள்ளலார் பாடல் ! இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர். என்றும்...மேலும் ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.! என்னும் பாடல்கள் வாயிலாகத் தெளிவுப் படுத்துகின்றார். அருட்பெருஞ்ஜோதி ஒளியை கடவுளாக பாவித்து, ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாக கொண்டு , அன்பு, தயவு,கருணை  சார்ந்த வாழ்கையை வாழப் பழகுதலே உலகில் நிரந்தர அமைதியை நிலை நாட்டும் நிலை நாட்ட முடியும் என்றார்.அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார் போதித்தார். சாதிகள், மதங்கள், சமயங்கள், அனைத்தும் பொய் பொய்யே என்று அறுதியிட்டு கூறினார். சிறுதெய்வ வழிபாடு கூடாது. சிலைகள் வழிபாடு வேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். உலகில் உள்ள கிருத்தவ மதம்.இஸ்லாமிய மதம். பவுத்த மதம்.இந்து மதம்.அனைத்து மதங்களும் பொய்யான செய்திகளை மக்களிடம் புகுத்தி வந்த நடைமுறைகளை முற்றிலும் மறுக்கச் சொன்னார்.மறுத்தார். வள்ளலார். மேலும் இறந்தவர்களை எரிக்க வேண்டாம் என்றும், இறந்தவர்களுக்கு திதி.முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம் என்றார். இறந்தவர்கள் நினைவாக ஏழைகளுக்கு அன்னவிரயம் செய்யுங்கள் என்றார். மற்ற ஈமக் கிரியைகள் எதுவும் செய்தல் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்,என்றும் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் என்றார்.மேலும் பெண்களுக்கும் ஞானம் முதலியகலைகளை சொல்லித் தர வேண்டும்.இறுதி காலத்தில் துணையாக இருப்பார்கள் என்ற புரட்சி செய்தியை மக்களுக்கு போதித்து வந்தார் . சிறு தெய்வ வழிபாடு செய்தல் வேண்டாம் என்று சொன்னதோடு அந்த தெய்வங்களின் பேரில் உயிர் பலியிட வேண்டாம் என்றும் கூறினார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு பூசகர் தேவை இல்லை எனவும் , கடவுளை உண்மை அன்பால் நேரடியாக வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் , இயற்கை உண்மை. இயற்கை விளக்கமான ஒளி வழிபாடு செய்து இயற்கை இன்பத்தை அனுபவிக்கவே மனித தேகத்தை இறைவன் கொடுத்துள்ளார் என்பதை தெளிவு படுத்தியுள்ளார். பொய்யான வழிபாட்டை விட்டு உண்மையான ஜீவ காருண்யமே இறை வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே இறைவன் வழிபாடு என்றும். போதித்தார். உலகில் உள்ளவர்கள் பேச்சைக் கேட்டு. ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற.தவம்.தியானம்.யோகம் முதலியவைகளை செய்தால் மூடம் உண்டாகும்.பின் விளைவுகள்.உடம்பிற்கு உண்டாகும் என்றார். இயற்கையின் சகல சக்திகளையும்.ஆற்றல்களையும்.முழுமையான அருளையும் தன் உடம்பிற்கு உள்ளே வரவைத்துக் கொண்டார்.மரணத்தை வென்றார்.ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு ஐந்தொழில் வல்லபத்தையும் பெற்றார்..இறைவனிடம் நேரே வள்ளலார் அனைத்தும் பெற்றுக் கொண்டார்.எல்லோரும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். கடவுள் இல்லை எனும் நாத்திகம் பேசுபவர்களை கடுமையாக கண்டித்தார்.நாத்திகம் சொல்பவர்கள் நாக்கு முன் நாக்கு என்றும்..நாக்கு ருசி கொள்வது நாரிய பிண்ணாக்கு என்றும் சாடுகின்றார் வள்ளலார். உண்மைக் கடவுளை, உண்மை அன்பால் வழிபாடு செய்தால் அக்கடவுளின் பூரண அருளை மனிதர்கள் பெறலாம் என்றும் , இயற்கை விளக்க அருளின் துணைக் கொண்டு என்றும் அழியாத பேரின்ப பெருவாழ்வில் மனிதர்கள் என்றும் வாழலாம் என்று உலகிற்கு வாழ்ந்து வழிகாட்டினர் வள்ளலார். மதம் என்னும் பேய் பிடித்து மக்களிடம் பல்வேறு மூட நம்பிக்கையை, மூடமான பண்பாட்டை , மொழியை திணிக்க முயலும் மத வாதிகளை கடுமையாக சாடுகிறார் வள்ளலார். சாதியும் மதமும் சமயமும் பொய் என்றும் ,அவை மனித குலத்திற்கு உண்மையை உணர்த்தி வைக்க முடியாது. துன்பத்தையே தரும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றார்.எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றார். இப்படி ஒரு தெளிவான அன்பும் அற நெறியும் இயற்கை சார்ந்த ஒரு மார்க்கத்தை வள்ளலார் தவிர உலகில் வேறு யாருமே இது வரை வழங்கியதில்லை என்பதும்.தோற்றி வைக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும்.மற்றும் உலகம் அனைத்தையும் ஒரு மதத்தின் கீழ் கொண்டு வந்து மதவாதத்தை மக்களிடம் கட்டவிழ்த்து நாட்டை கலவர பூமியாக்கத் துடிக்கும் அத்தனை சக்திகளுக்கும் வள்ளலாரின் அறிவுரை தற்போது மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு அரும்பெரும் கருத்துக்களை உலகிற்கு வழங்கிய வள்ளலாரை போற்றுவது ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமையாகும். போற்றுவது மட்டுமல்லாது அவர் கூறிய சுத்த சன்மார்க்க நெறி காட்டும் வழியில் நாம் அனைவரும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழகத்திற்கு தமிழ் மொழியில் அவர் வழங்கிய அருட்பாக்களை நாம் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து கொண்டு செல்லவேண்டும். குறிப்பாக இன வெறியை மொழி வெறியை.உமிழ்ந்து இந்தி, சமஸ்கிருத மொழியை அனைவரின் மீதும் திணிக்கும் ஆதிக்க வட இந்திய மக்களுக்கு வள்ளலார் காட்டிய நன்னெறியை நாம் கொண்டு செல்ல வேண்டும். இந்திய ஒன்றியத்தில் நல்லாட்சி மலர இந்திய அரசு வள்ளலார் காட்டிய அன்பு வழியில் பயணிக்க. செல்ல செயல்படுத்த வேண்டும். அப்போது தான் கருணையில்லா இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நல்லாட்சி மலரும். அனைத்து மாநில மக்களும் நிம்மதியாக வாழ்வாங்கு வாழ்வார்கள். சாதி.சமய.மத பேதங்கள் நீங்கி மனிதம் தழைத்து ஓங்கும் ஓங்கட்டும் ! வாழ்க வள்ளலாரின் வான்புகழ் ! உலகம் முழுவதிற்கும்  இனிமேல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே நல்ல வழியைக் காட்டும் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.உண்மையை உணர்த்தினால் மக்கள் புரிந்து கொள்வார்கள். பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே ! அருட்பெருஞ்சோதி அகவல்.... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்....

திங்கள், 11 டிசம்பர், 2017

மரணம் என்றால் என்ன ?

மரணம் என்றால் என்ன ? மரணம் இல்லா பெருவாழ்வு என்றால் என்ன? மரணம் என்பது:-- நம் பஞ்ச பூத உடம்பானது உயிரையும் .ஆன்மாவையும் உள்ளே வைத்து இயங்கிக் கொண்டு இருக்கின்றன.உடம்பான உறுப்புக்கள் தன் சக்தியை இழக்கின்ற போது உயிரும். ஆன்மாவும் உடம்பை விட்டு வெளியே சென்று விடுகின்றது.அல்லது இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது.அப்போது உடம்பின் இயக்கம் நின்று விடுகின்றது. அதற்கு மரணம் என்று பெயர். மரணம் அடைந்தால் மீண்டும் ஆன்மாவும் உயிரும் வேறு உடம்பு எடுத்து வாழத்தொடங்குகின்றது.இதற்கு பிறப்பு இறப்பு என்று சொல்லப் படுகின்றது. சில சித்தர்கள் யோகிகள்.தங்கள் தவ வலிமையால் நீண்ட நாட்கள்.பல நீண்ட வருடங்கள் உடம்பை விடாமல் .சமாதி நிலை அடைகின்றார்கள்.கூடுவிட்டு கூடுபாயும் வித்தையும் அறிந்து உடம்பையும் உயிரையும்.ஆன்மாவையும் தக்கவைத்து தங்களுக்குத் தேவையான வகையில் பயன்படுத்தி வாழ்ந்தார்கள்.அந்த வித்தையின் காலம் முடிந்தவுடன்.மறுபடியும் உயிரையும்.ஆன்மாவையும். தக்க வைக்க முடியாமல் உடம்பை விட்டு உயிரும் ஆன்மாவும் பிரிந்து.இறுதியில் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுக்கின்றார்கள்.. வள்ளலார் சொன்ன மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது வேறு ! உட்பையும் உயிரையும் ஆன்மாவையும் பிரிக்காமல்.மண்ணிற்கோ.தண்ணீருக்கோ .தீயுக்கோ.காற்றுக்கோ.ஆகாயத்திற்கோ.கிரகங்களுக்கோ.வேறு அபாயங்களுக்கோ.எதற்கும். இறையாக்காமல் ஒளி தேகமாக மாற்றும்.அருள் அறிவியலை கண்டு பிடித்தவர்தான் வள்ளலார்.அதற்கு வேதியல் மாற்றம் என்று பெயர்.இறைவனிடம் பூரண அருளைப் பெற்றால் மட்டுமே உடம்பை.ஓளி உடம்பாக மாற்ற முடியும்.கடவுள் நிலையை அறிய முடியும்.அதன் மயமாக மாற முடியும். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கின்றது.எந்தக் கடவுளிடம் அருளைப் பெறமுடியும்.அருளை வழங்கும் கடவுள் யார் ? என்பதை தேடிக் கண்டு பிடித்தவர் வள்ளலார்.பொய்யானக் கடவுள்களை விட்டு மெய்யான கடவுளைக் கண்டுபிடித்தார்.. அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுளாகும்...கண்டேன் களித்தேன்.களிப்புற்றேன்.கலந்து கொண்டேன் என்கிறார்.... அந்தக் கடவுள் எங்கு இருந்து செய்படுகின்றார் என்பதை ஆயிரக்கணக்கான பாடல்களிலும்.உரை நடைப்பகுதியிலும் தெளிவாக விளக்கி உள்ளார்... அறிவு உள்ளவர்களுக்கு ஒருபாடலே போதும் ! அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்தருட்பெருந் தலத்துமேல் நிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்அருட்பெருந் திருவிலே அமர்ந்தஅருட்பெரும் பதியே அருட்பெரு நிதியேஅருட்பெருஞ் சித்திஎன் அமுதே அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமேஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.! என்ற பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தத்துவங்களைக் கடந்தவர் என்றும் தெரியப் படுத்துகின்றார். தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்தத்துவா தீதமேல் நிலையில் சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்சிவநிலை தெரிந்திடச் சென்றேம் ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்அருட்பெருஞ் சோதிஎன் அரசே.! என்றும் தெரியப்படுத்துகின்றார். அந்த உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்... உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே! என்றும்... மரணப் பெரும் பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே ! என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக தெரியப் படுத்துகின்றார் வள்ளலார். உடம்பையும் உயிரையும் அழிக்காமல் மாற்றும் வல்லபம் அருள் என்னும் திரவியத்திற்கு மட்டுமே உண்டு.அந்த அருளைப் பெற வேண்டுமானால்...சாதி.சமய.மதம் என்னும் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு.வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை. நான்கு விதமான ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும். அந்த ஒழுக்கம் தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும். அதிலே இந்திரிய ஒழுக்கம்..கரண ஒழுக்கம்...ஜீவ ஒழுக்கம்...ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்... அருளைப் பெற்றுத்தான் உடம்பையும்.உயிரையும் ஓளியாக மாற்றி மரணத்தை வெல்ல முடியும். அருளைப் பெற்றால் உடம்பு.உயிர் எவ்வாறு மாற்றம் அடையும் என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றார்..... . தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்  மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட  726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட  மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட  727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்  உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட  728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்  உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட  729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட  தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட  730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்  கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட  731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்  கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட  732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்  கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட  733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட  இனம்பெறு சித்த மியைந்து களித்திட  734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்  சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட  735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்  பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்  736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்  சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட  737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட  அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட  738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட  என்னுளத் தோங்கிய என்றனி யன்பே  739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே  என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே  740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்  என்னைவே தித்த என்றனி யன்பே  741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து  என்னுளே விரிந்த என்னுடை யன்பே  742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து  என்னுளே கனிந்த வென்னுடை யன்பே  743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே  என்னுளே நிறைந்த என்றனி யன்பே  744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை  யின்புறு வாக்கிய என்னுடை யன்பே  745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா  என்னுளங் கலந்த என்றனி யன்பே ! என்னும் வரிகளில் மிகத்தெளிவாக விளக்கம் தந்துள்ளார். உடல். உயிர் .ஆன்மா மூன்றும் அருள் ஒளியாக மாற்றம் அடைவதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி! மரணத்தை வென்ற பாடல் ! காற்றாலே புவியாலே ககனமத னாலேகனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள வலியுறுத்துகிறார் வள்ளலார்.வேறு தெய்வங்கள் எதற்கும் பயன் அற்றது என்கிறார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளை வழங்க முடியும்.அருள் அறிவை அளிக்க முடியும்.அருள் நிலைக்கு ஏற்ற முடியும்.. எல்லாவற்றையும் படைத்தவனால் மட்டுமே எல்லாவற்றையும் வழங்க முடியும் என்பதை அறந்து.புரிந்து.தெரிந்து கொள்ள வேண்டும்.. இந்த உண்மைகளை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடித்தால் மட்டுமே மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும்.பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப பெருவாழ்வில் வாழமுடியும்.... அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அருளாளர் என்பவர் யார் ?

அருளாளர் என்பவர் யார் ? சாகாமல் இருப்பவரே அருளாளர் . சித்தர்களில் மூன்று வகை உண்டு , சித்து பெற்றவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர். சித்து மூன்று வகையாக உள்ளன. அவரவர் முயற்சி தகுதிக்குத் தக்கவாறு இறைவன் சித்துக்களை வழங்குகின்றார். ஆன்மீக போதகர்களில் நிறையப்பேர் உண்டு .சித்தர்கள் எழுதிவைத்த.காட்டிய கொள்கைகளைத் தான் போதகர்கள் மக்களுக்கு போதிக்கிறார்கள்.எனவே போதகர்களை விட சித்தர்கள் உயர்ந்தவர்கள். கர்ம சித்தர் , ,,யோக சித்தர்,,,,ஞான சித்தர் என்பவர்களாகும் இவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டி அருளைப் பெற்றவர்கள் . கர்ம சித்தர்கள்;---ஆலயங்களை கட்டி.தத்துவ உருவங்களை வைத்து மக்களுக்கு உருவ வழிப்பாட்டு முறைகளை தோற்றுவித்தவர்கள். எனவே அவர்களுக்கு கடின சித்தர்கள்,அதாவது கர்ம சித்தர்கள் என்று பெயர் சொல்லப்படுகின்றனர். யோக சித்தர்கள் ;-- மனத்தைக் கட்டுப் படுத்தி அகத்திலே கடவுளைக் காண யோக முறைகளை கையாண்டு யோக சித்திப் பெற்றவர்கள்.இவர்கள் உருவ வழிப்பாட்டை தாண்டி அருவ வழிப்பாட்டை பின் பற்றுபவர்கள்.யோக நிலைகளில் தான் கடவுளைக் காண முடியும் என்று யோக மார்க்கத்தை தோற்றுவித்தவர்கள் . எனவே அவர்களுக்கு யோக ஞான சித்தர்கள் என்று பெயராகும் . ஞான சித்தர்கள் ;--சரியை.கிரியை.யோகம்ஞானம் நான்கில் நான்காவது பிரிவாகிய ஞானத்தில் ஞானம் என்னும் வழியை கடைபிடித்து கடவுளைக் கண்டவர்கள்.இவ்வுலகில் ஞானத்தில் ஞானம் என்னும் படியைக் கடந்து முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்றவர்களுக்கு.ஞான சித்தர் என்று பெயர். உண்மையான கடவுளைக் கண்டு அதன் மயமாக தன்னை இணைத்துக் கொள்பவர்கள் ஞான சித்தர்கள் என்பவர்கள் . இவ்வுலகில் ஞான சித்திப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அதன் மயமான ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே.... கரம சித்தி,..யோகசித்தி,..ஞான சித்தி..என்ற மூன்று வகை சித்தி அனுபவங்களையும் பெற்று முழுமையான இறை அருளைப் பெற்று மரணம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரே அருளாளர் ''வள்ளல்பெருமான் ஒருவரே'' ! கர்ம சித்தர்கள்  ,யோக சித்தர்கள் அனைவரும் அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட அருளைக் கொண்டு நீண்ட காலம் வாழ்ந்து இறுதியில் மரணம் அடைந்து.மீண்டும் பிறப்பு எடுப்பார்கள். கருணை இல்லாமல் பொது நோக்கம் இல்லாமல். சுய நலத்திற்காக வாழ்ந்து.அற்ப அருளைப் பெற்று .அற்ப சித்துக்களைப் பெற்றவர்கள். எனவே அவர்களுக்கு கடின கர்ம சித்தர்கள் ,யோக சித்தர்கள் என்ற பெயராகும்.,அவர்கள் அறக்கருணை இல்லாமல் மறக்கருணை உள்ளவர்கள். மீண்டும் பிறப்பு.இறப்பு உள்ளவர்களின் செயல் பாடுகள் .கொள்கைகள் அனைத்தும் செல்லுபடி ஆகாது .அவர்களின் கொள்கைகளும் செல்லுபடி ஆகாது.அவர்களின் கொள்கையை பின்பற்றி வாழ்பவர்களுக்கும் எந்த வித பயனும் நன்மைகளும் கிடைக்காது. மேலும் சித்தர்கள் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் மட்டுமே கடைபிடித்தவர்கள்.ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கம் என்பதை கடைபிடிக்க தவறியவர்கள். கருணை இல்லா விட்டால் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்பது புரியாது ,விளங்காது,தெரியாது உண்மைக் கடவுள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியாமல் மறைக்கப் பட்டு விடும். கர்ம சித்தர்கள் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கத்தை மட்டுமே கடை பிடித்தவர்கள். யோக சித்தர்கள்...இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம் என்ற மூன்று ஒழுக்கத்தை மட்டும் கடைபிடித்தவர்கள். வள்ளல்பெருமான் ஒருவரே ..இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தவர் வள்ளலார். வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும் பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார். அந்த நான்கு ஒழுக்கங்களும் முழுமை பெற வேண்டுமானால் ''ஜீவ காருண்யம் ''என்ற உயிர் இரக்கம் ,ஆன்ம நேயம் என்கின்ற ஆன்ம ஒழுக்கம்.இருந்தால் தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பது விளங்கும்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பேறு பெற்று இருந்தால் மட்டுமே இறைவன் முழுமையான பூரண அருளை வழங்குவார் அருள் கிடைக்கும். எனவே தான் ''ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு'' என்றார்.''உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்றார். ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப்டுகின்ற பக்தி. தியானம்.தவம்.யோகம்.ஞானம் எல்லாம் வெற்று மாயா ஜாலங்கள் என்கிறார் வள்ளலார். ஜீவ காருண்யம் இல்லாமல் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பதால் வள்ளலார் ஜீவ காருண்யத்தைப் பற்றி மக்களுக்குத் தெளிவாக போதித்து உள்ளார். ஜீவ காருண்யத்தைப் போதிப்பதற்கும் ,கடவுளின் அருளைப் பெறுவதற்கும் '''சமரச சுத்த சன்மார்க்க சத்திய  சங்கத்தை '' அமைத்துள்ளார் .அதில் சேர்ந்து தயவுடன் இருந்தால் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்றும்.அருளைப் பெற்றால் சுத்த சன்மார்க்கத்தை அடைந்தவர்கள் என்றும் வள்ளலார் தெளிவுப் படுத்துகின்றார். அருளைப் பெறும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் என்று பெயர் வைத்துள்ளார் . ''சாகாதவனே சன்மார்க்கி'' என்றும் சாகிறவன் சன்மார்க்க நிலை அடைந்தவன்  அல்ல என்றும் தெளிவுப் படுத்தி உள்ளார் . எனவே பிறந்து பிறந்து .இறந்து இறந்து போகின்ற சித்தர்களின் கொள்கைகளை.அவர்கள் காட்டுகின்ற வழியைப் பின்பற்றாமல்,,என்றும் பிறப்பு.இறப்பு அற்று சாகாமல் வாழும் ஞானசித்திப் பெற்று வாழு்ந்து கொண்டு அருளை வாரி வழங்கும் அதிகாரம் பெற்ற . அருளாளர் வள்ளல்பெருமான் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் ''கொள்கைகளைப் பின்பற்றி கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே . மனிதன் மனிதனாக வாழ்ந்து கடவுளின் முழுமையான பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று இறைநிலையை அடைய முடியும் .வேறு எந்த மார்க்கத்தாலும்.வேறு எந்த கொள்கைகளாலும் மனிதன் கடைத்தேற முடியாது.மரணம் அடைந்து அழிந்து தான் போவான் . மண்,,நீர்..அக்கினி ,,காற்று,,ஆகாயம்,,என்னும் ஐம் பூதங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே மார்க்கம் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற புதிய புனித அருள் நெறி தான் சுத்த சன்மார்க்க தனி நெறியாகும்.தனி மார்க்கமாகும் .. வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-- துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்--என்மார்க்கம் நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார் மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து ! சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி நாடு என்ற எந்த பேதமும் இல்லாத ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைக் கொண்ட ஒரே மார்க்கம்.வள்ளல்பெருமான் தோற்றுவித்துள்ள சுத்த சன்மார்க்கம். வள்ளல்பெருமான் தோற்றுவித்த மார்க்கத்தை உலகில் உள்ள கர்ம சித்தர்கள்.யோக சித்தர்கள் அனைவரும் சிறிய பெரிய அருளாளர்கள் அனைவரும் வள்ளலார் கொள்கையைப் போற்றிப் புகழ்ந்து கொண்டு உள்ளார்கள் . மனிதர்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள். அருளாளர்களின் கூட்டத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ளவர் வள்ளல்பெருமான் ஒருவர் மட்டுமே என்பதை மனித குலம் அறிந்து,தெரிந்து புரிந்து கொண்டு,உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் இல்லாமல் பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கு வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை விட்டால் வேறு வழியே கிடையாது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ! அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் . போன்.. 

செவ்வாய், 5 டிசம்பர், 2017

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் ! நான் எழுதும் கட்டுரைகள் சமய மதங்களில் அதிகமாக ஈடுபாடு உள்ளவர்களுக்கு மன வருத்தத்தையும் .சங்கடத்தையும் உண்டு பன்னுவதாக நினைக்கிறார்கள்.உலகில் உள்ள எல்லா மத்ங்களும்..மார்க்கங்களும் அதன் கடவுள் கொள்கைகளுமே பொய்யானது என்கிறார் வள்ளலார்.அவர் சொல்லியுள்ள கருத்துக்களை அப்படியே கட்டுரையில் எழுதுகிறேன். எக்காரணத்தைக் கொண்டும் என் சொந்தக் கருத்துக்களை எழுதவே மாட்டேன்.வள்ளலார் சொல்லியுள்ள உண்மையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை மட்டும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்துகிறேன். வள்ளலாரே சொல்லுகின்றார். உலகில் உள்ள அனைவரும் இதுவரையில் இருந்த்து போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள்.. இவ்வளவு காலம் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் பற்று வைத்து கொண்டு இருந்த .வேதம்.ஆகம்ம்.புராணம்.இதிகாசம்.முதலிய கலைகள் எதனிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கிறார்..ஏன் என்றால் ? இதுவரையில் ஒரு மத்த்தில் கூட வெளிப்படையாக தெய்வத்தை இன்னபடி என்றும்.தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் .மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள் என்கிறார்.உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல் யாரிடம் சென்று அருளைப் பெறுவீர்கள் என்கிறார்.. அணு அளவு கூட உண்மைத் தெரியாமல்.தெரிவிக்காமல் பிண்ட (உடம்பை) லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.எவ்வாறு எனில்...கைலாசபதி என்றும்.வைகுண்டபதி என்றும்.சத்தியலோகாதிபதி என்றும்.பரலோகம் என்றும்.பரம்பிதா என்றும்.பெயரிட்டு.இடம்.வாகனம்.ஆயுதம்.வடிவம்.ரூபம்.முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து .உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். தெய்வத்திற்கு கை.கால்.வாய்.நாக்கு.மூக்கு.தலைப்போன்ற உறுப்புக்கள் முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.என்கிறார் வள்ளலார். இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள ஆன்மீகப் பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும்.உண்மை அறியாது .அப்படியே கண்ணை மூடிக்கொண்டு (குருடர்கள்போல்) உளறி இருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் என்கிறார்..அவனுக்கு ஓர் அளவு உண்மை தெரிந்துள்ளது.அனைத்தையும் மறைத்து விட்டான்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் மறைத்து பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை.இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை ஒருவரும் உடைக்க வரவில்லை என்கிறார்...அதன் உண்மை என்னவென்றால் நான் உடைத்து விட்டேன்.கடவுளின் உண்மையைச் சொல்ல வந்து விட்டேன் என்பதாகும்.... மேலும் சொல்கிறார்..சைவம்.வைணவம் முதலிய சமயங்களிலும்.வேதாந்தம்.சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம் என்கிறார்...கதிர்வேல் சொல்லவில்லை வள்ளலார் சொல்லுகின்றார்.மேலும் அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழு உக்குறியாக்க் குறித்து இருக்கின்றதே அன்றிப் புறங்கவியைச் (வெளிப்படையாக) சொல்லவில்லை. அவ்வாறு பயிலுமோயானால்.நமக்கு காலம் இல்லை.காலம் இல்லை என்றால் தெரிந்து கொள்வதற்குள் மரணம் வந்துவிடும்...ஆதலால் அவற்றில் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார்..வள்ளலார். மேலும் இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது என்கிறார்.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீரகளானால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தை பெற்றுக் கொண்டார்களா ? என்று கேள்வி கேட்கின்றார்.அப்படி எவறும் பெற்றுக் கொள்ளவில்லை என்கிறார்... மேலும் நான் அப்படி சமய மதங்களில் வைத்து இருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதா என்றால் .அந்த லட்சியம் தூக்கி விடவில்லை....என்கிறார். என்னை ஏறாநிலைமிசை ஏற்றி விட்டது யாதெனில் .தயவு.தயவு என்னுங் கருணை தான் தூக்கி விட்டது என்கிறார் ..அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை வந்தால் தான் தயவு வரும்..ஒருமை என்பது எல்லா உயிர்களிலும் இறைவன் இருந்து இயக்குகிறார் என்பதை அறிந்து கொள்வதே ஒருமை என்பதாகும்...அவைதான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.ஆன்ம நேய ஒருமைப்பாடு உரிமை அறந்தவர்கள்.உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்ள முடியும்..அவரிடம் இருந்து அருளைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற முடியும்... மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை இட்டது யாதெனில்.நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! என்னும் மகா மந்திரத்தை வெளிப்படையாக எடுத்து காட்டி உள்ளார். தயவு.கருணை.அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்.ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாகும் என்கிறார். அடுத்து சொல்கிறார் ..உண்மை சொல்ல வந்தன்னே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வார் இல்லை என்கிறார்...கொடி கட்டிக் கொண்டபடியால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார் தெரிவிக்கின்றார். தெரிவிப்பார்.நீங்களும் உண்மையைத் தெரிந்து கொள்வீர்கள்.தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிறதையுடன் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்.. இப்படி இருந்து கொண்டு இருந்தால் ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள் இது சத்தியம்.சத்தியம்.சத்தியம் ஆண்டவர் கட்டளை என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்... வள்ளலார் பாடல் ! சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.! என்ற பாடல் வரிகளிலே ! இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சத்தியவான் வார்த்தை என்கிறார்... எனவே இதில் கதிர்வேல் வார்த்தை ஏதும் இல்லை என்பதை அறிந்து கொண்டு சாதி.சமயம்.மதங்களின் கொள்கைகளை விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆனைப்படி வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.....தொடரும் அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...

வெள்ளி, 1 டிசம்பர், 2017

ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் ?

ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் ? எல்லாச் சீவர்களும் கடவுள் இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும் அவரவர் இடங்களிற் கடவுள் அருள்விளக்கம் விளங்குதலாலும், சமுசாரிகளுள் தமது தாய் தந்தை புணர்ந்தோர் மக்கள் துணைவர் முதலிய குடும்ப மட்டில் பசியாற்றிக் கொள்ளத் தக்க அற்பசக்தியுள்ள சமுசாரிகள் தாய் பிதா மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு அயலார்க்குப் பசியாற்றத் தொடங்குதலும்,கூடாது. தம்மிடத்துப் பசித்து வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியை யாற்றத் தொடங்குதலும், கடவுளருளுக்குச் சம்மதமல்ல. என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆதலால், தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும்; அற்பசத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்பம் மட்டிலும் பசியாற்றுவிப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துப் பாதுகாக்க வேண்டும் . தம்மிடத்துப் பசித்துவந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சி யெடுத்துக் கொள்ளவேண்டு மென்றும்; இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்கவரையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர், அதிதிகள், பெரியர், அடிமைகள், அயலார், பகைவர் முதலியவர்களுக்கும், தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை, ஆடு, குதிரை, தாவர முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும்; விவாகம் புத்திரப்பேறு தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறு சடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கைகளிலும் பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை யுண்டுபண்ணுகின்ற சிறப்பினையே செய்யவேண்டுமென்றும், தெரிந்து பசியாற்றுவிக்க வேண்டும். அப்படிச் செய்யில் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறியவேண்டும். நாம் அடையவேண்டிய இன்பத்தை.ஜீவ காருண்யத்தால் மட்டுமே அடையவேண்டும்.அடையமுடியும்.இதுவே கடவுள் சம்மதம் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.. ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்களா..... அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்