வெள்ளி, 23 டிசம்பர், 2022

கடவுளைக் கண்டேன் ! தொடர்ச்சி...11

 *கடவுளைக் கண்டேன்!* 


*தொடர்ச்சி பாகம்--11*


*எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து!*


*பல பணிகள் காரணமாக தொடர்ச்சி எழுத காலதாமதமாயிற்று...*


*வள்ளலார் பாடல்!*


தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து

வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்

சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்

ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.! 


*நமக்கு தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்து பழகினால் கடவுள் என்றும் நம்மைக் கை விடமாட்டார் என்பது எனது வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நடந்துள்ளது.*


*ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த லைன் வீட்டின்  வெளியே என்னைத் தாக்குவதற்காக நான்கு ரவுடிகளை வரவைத்து காத்துக் கொண்டு இருந்தார், என்மேல் வருமானத்துறையில் பொய் புகார் அளித்தவர், ஈரோடு தாலுக்கா பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் என்பவர்*


கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பு SP அவர்களைத் தொடர்பு கொள்ளுதல்!


*இரவு சுமார் பத்து மணி இருக்கும் கோவை மாட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு, பஞ்சாபிகேசன் அவர்களுக்கு ஈரோட்டில் இருந்து அவசரகால லைட்டினிங்கால் புக்கிங் செய்து தொடர்பு கொண்டோம்,*

*அவர் உதவியாளர் போனை எடுத்து என்ன விபரம் சொல்லுங்கள் என்று கேட்டார்.நான் ஈரோட்டில் இருந்து பேசுகிறேன், SP ஐயாவிடம் நேரிடையாக அவசரமான முக்கியமான ஒரு விபரம் சொல்ல வேண்டும் ஆதலால் தயவு செய்து அவரிடம்  போனில் தொடர்பு கொடுங்கள் என்றேன்* 


*நேர்மையான காவல்துறை அதிகாரிகள் நிறைய பேர் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.!*


*எஸ்,பி ஐயா வீட்டிற்கு சென்று விட்டார்,அவர் வீட்டு தொலை பேசிக்கு தொடர்பு கொடுக்கிறேன் பேசுங்கள் என்றார்,சரிங்க கொடுங்கள் என்றேன் அவ்வாறே எஸ்,பி அவர்கள் தொடர்பு கொண்டார், எனக்கு நடந்த  விபரங்கள் யாவும் தெளிவாக சொன்னேன்,விபரம் அறிந்த எஸ்,பி அவர்கள், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம், உங்கள் கடையிலேயே இருங்கள், இன்னும் 10 பத்து நிமிடத்தில் ஈரோடு தாலுக்கா காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் காவலர்களை அழைத்துக் கொண்டு காவல்துறை வேனுடன் உங்கள் கடைக்கு வருவார்கள் அவர்களுடன் வீட்டிற்கு செல்லுங்கள் மற்றவை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்*


*அவ்வாறே பத்து நிமிடத்தில் காவல்துறை ஆய்வாளர் துணை ஆய்வாளர்,நான்கு போலீஸ்காரர்கள் வேனுடன் எங்கள் கடைக்கு வந்து விட்டார்கள் அவர்கள் வேனில் என்னையும் ஏற்றிக்கொண்டு நாங்கள். குடியிருக்கும் வீட்டிற்கு முன் சென்று வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கினார்கள்* 


*ரவுடிகள் ஓட்டம்!*


*போஸீஸ் வேனைப் பார்த்ததும் என்னைத் தாக்க காத்திருந்த ரவுடிகள் அங்கிருந்து  ஓட்டம் பிடித்தார்கள்.அவர்களைத் துரத்தி பிடித்து இழுத்துவந்து தட்டியால் அடித்து விசாரித்தார்கள்,பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சொல்லித்தான் வந்தோம் என்று ஒத்துக் கொண்டார்கள்* எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு ஈரோடு மரப்பாளம் ஏரியா என்றார்கள்.


*மணிவண்ணனிடம் விசாரத்தார்கள் அவரும் நான்தான் பணம் கொடுத்து ரவுடிகளை வரச் சொன்னேன் என்று ஒப்புக்கொண்டார்.*நாங்கள் குடியிருந்த லைன் வீட்டில் சப்இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது அவர்களையும் விசாரித்தார். அவரும் அவருக்கு துணையாக இருந்ததை ஒத்துக் கொண்டார்.*


*அப்போது இன்ஸ்பெக்டர் மிகவும் கடுமையான கோபத்துடன், நீங்கள் அரசு அதிகாரிகளாக இருக்கிறீர்கள்  நீங்கள் இப்படி செய்யலாமா ? உங்கள் அதிகாரத்தை இப்படித்தான் தவறான முறையில் பயன் படுத்துவதா ? உங்கள்  மீது கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் கேஸ் பைல்   செய்தால் உங்கள் வேலையே பரிபோயிடும் என்று உங்களுக்குத் தெரியாதா ?* *கோவையில் இருந்து SP அவர்கள் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து விசாரித்து, உடனே  அதன் உண்மை நிலவரத்தை  அனுப்பச் சொல்லி உள்ளார் என்ற விபரத்தை தெளிவாக சொன்னார்.* 


*இருவரும் ஆடிபோய் விட்டார்கள்.*


*மேலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் இருவரும் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து.லைன் வீட்டில் எங்கும்  குடியிருக்காமல் தனிமையான வீட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.*


*அவர்கள் இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்,எங்கள் வேலை போய்விட்டால் மானம் மரியாதை எல்லாம் போய்விடும். வாழ்க்கையே கேள்விக்குறியாகி ஒழிந்துவிடும்,எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கை கூப்பி வணங்கி கெஞ்சி மன்றாடி வேண்டிக் கொண்டார்கள்*


*அதற்கு இன்ஸ்பெக்டர் என்னால் ஒன்றும் செய்யமுடியாது ஸ்பென்ஸர் டெய்லர்  கதிர்வேல் அவர்கள் கேஸ் வாபஸ் பெற்றால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும்,ஆகவே அவரிடம் நீங்கள் செய்த தவற்றை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டு அவர் கேஸ் வாபஸ் பெற்றால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்*


*அவ்வாறே இருவரும் எங்களை மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி வணங்கி, நீங்கள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் சரண் அடைந்தார்கள்.அவர்களின் குடும்பம் குழந்தைகள் தொழில்,வாழ்க்கை போன்றவற்றைக் கருதி புகாரை   ரத்துசெய்து கை எழுத்து போட்டு வாபஸ் பெற்றுக் கொண்டேன்* 


*ஈரோட்டில் என் கடைப்பற்றியும் தொழில் பற்றியும், குணத்தைப் பற்றியும்,துணிவைப் பற்றியும் அறிந்த இன்ஸ்பெக்டர் அவர்கள் மிகவும் பாராட்டி மகிழ்ந்தார்.மேலும் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் நேரிடையாக தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.என் மனம் மகிழ்ந்தது குளிர்ந்தது.* 


*மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் இயற்கையாக  எப்போதும் என்னிடம் உண்டு !*


*இன்ஸ்பெக்டர் சொல்லியவாறு ஒரே வாரத்தில் அவர்கள் இருவரும் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டார்கள்*. 


*இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாத கட்டமாகும்*


*நன்மை செய்பவர்களுக்கு ஆண்டவர் எப்போதும் துணையாக இருப்பார் என்பது இதுவே சான்றாகும்.*


*வள்ளலார் பாடல்!*


*புண்படா உடம்பும்* *புரைபடா மனமும்*

*பொய்படா ஒழுக்கமும்* பொருந்திக்


கண்படா திரவும் பகலும்நின் தனையே

கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்


உண்பனே எனினும் உடுப்பனே எனினும்

உலகரை நம்பிலேன் எனது


நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.! 


*என்ற வள்ளலார்  பாடல் என் நினைவிற்கு வருகிறது.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இன்றுவரை எங்களை கைவிட்டதாக வரலாறு இல்லை.*


*கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது முற்றிலும் உண்மையாகும் தவறு செய்ய நினைத்தாலும் தவறு செய்ய விடமாட்டார்*


மேலும் தொடரும்.....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 17 டிசம்பர், 2022

கண்டது எல்லாம் அநித்தியமே !

 *கண்டது எல்லாம் அநித்தியம்!* 


*உலக வாழ்க்கையில் உயர்ந்த பிறப்பு மனித பிறப்பாகும், உயர்ந்த அறிவு மனித குலத்திற்கு மட்டும் இறைவனால் வழங்கப்பட்டு உள்ளது*


*உண்மை அறியும் உயர்ந்த அறிவும் ஆன்மாவில் இருந்து வெளிப்பட வேண்டும், உண்மை அறிவான மெய் அறிவு வெளிப்படாமல் பொய் அறிவை பயன்படுத்தி மனிதகுலம் வாழ்ந்து அழிந்து கொண்டுள்ளது.* 


*பொய் அறிவு எவ்வாறு கடைபிடிக்க நேர்ந்தது என்றால்?*


*மனிதகுலத்திற்கு தேவையான  வாழ்க்கை முறையும், அறிவுரையும் ஒழுக்கமும் சொல்ல வந்த அருளாளர்கள் நேரிடையாக சொல்லிப் புரிய வைக்காமல்.அவரவர்களுக்குத் தோன்றிய பொய்யான  கற்பனைக் கதைகளைச் சொல்லி எழுத்து வடிவிலும் நூல் வடிவிலும் உருவ வடிவிலும் கற்பனைக் கலைகளைப் படைத்துள்ளார்கள்,அவைகள் யாவும் உண்மையாக இருப்பது போலவே அமைத்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள்*


*அவற்றிற்குப் பெயர்தான் வேதம், ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற கலைகளாகும்* *கற்பனைக் கதைகளையும் கதைகளில் உள்ள கதாப்பாத்திரங்களையும்,நிலையானது உண்மையானது என நினைந்து மக்கள்  பின்பற்றி வாழ்வதால் ஆன்மாவில் உள்ள அருள் அறிவும், உண்மை அறிவும் விளக்கம் இல்லாமல்,அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளால்  மறைக்கப்பட்டுள்ளன.* 


*வள்ளலார் பாடல்!*


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக


மலைவறு *சன் மார்க்கம் ஒன்றே* நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என்தனக்கே


உலைவறும் இப் பொழுதே நல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!  


*இயற்கை உண்மை,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பத்தை தெரிந்து அறிந்து புரிந்து மனிதகுலம் வாழ்வாங்கு வாழ்வதற்கு, உண்மைப் பொது நெறியாம் சமரச  சுத்த சத்திய சங்கத்தை தோற்றுவித்து உள்ளார் வள்ளலார்.* 


*பொய் நூல்களை படிக்க வேண்டாம்!*


*சுத்த சன்மார்க்கத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் உள்ள பொய் நூல்கள் எதனையும் படிக்கவோ பின்பற்றவோ கூடாது என்கிறார் வள்ளலார்.* 


பின் என்ன செய்ய வேண்டும் ? 


*ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மாவில் உள்ள அறிவும் அன்பும் விளங்க வேண்டும், அறிவும் அன்பும் விளங்கினால் மட்டுமே,இயற்கை உண்மையான கடவுளையும்,இயற்கை விளக்கமான அருளையும், இயற்கை இன்பமான மரணம் இல்லாப் பெருவாழ்வும் வாழ்ந்து, இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று வாழமுடியும்* 


*வள்ளலார் பாடல்!* 


காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


*மேலையிலே இம்மையிலே ஒருமையிலே* தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் *தருமச் சாலையிலே* ஒருபகலில் தந்ததனிப் பதியே

*சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே*


மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசேஎன் மாலையும் ஏற் றருளே.! 


*மேலே கண்ட பாடலிலே ஜீவகாருண்யத்தின் வல்லபத்தையும்,விளக்கத்தையும் தெளிவாக விளக்கி உள்ளார்* *எனவேதான் ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்,அதனால் உபகார சக்தி விளங்கும் என்றும் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.*


*ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வேண்டுவது எதற்காக என்றால்? ஆன்மாவின் உள்ளே மறைந்து கொண்டு இருக்கும் அன்பும் அறிவும் விளங்குவதற்காக என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*அன்பும் அறிவும் விளங்கினால்தான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பது விளங்கும்,

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் ஒத்து வாழ்பவர்களே அருளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.*


*அறிவும் அன்பும் விளங்கியவர்கள்,உண்மைப் பொது நூலான திருஅருட்பாவை மட்டுமே படிப்பார்கள் அவற்றில் சொல்லியவாறு ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் முழுமையாக  கடைபிடிப்பார்கள். மற்றைய உலகில் உள்ள பொய்நூல்கள் எதையும் படிக்க மாட்டார்கள்,பின்பற்ற மாட்டார்கள்*

*இந்த உண்மைத் தெரிந்தவர்களே சுத்த சன்மார்க்கி என்பவர்களாகும்.* 


*வள்ளலார் பாடல்!* 


மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்

வழக்கம் அது கண்டனம்நீ மணவாள ருடனே


காலையிலே கலப்பதற்கிங் கெனைப் புறம்போ என்றாய்

கண்டிலன் ஈ ததிசயம்என் றுரையேல் என் தோழி


*ஓலையிலே பொறித்ததைநீ* *உன்னுளத்தே கருதி*

*உழல்கின்றாய்* *ஆதலில்இவ் வுளவறியாய் *தருமச்*

*சாலையிலே* *சமரசசன் மார்க்கசங்கந் தனிலே*

சற்றிருந்தாய் எனில் இதனை உற்றுணர்வாய் காணே.!


*உலகில் உள்ள சாதி,சமயம் மதங்களின் பொய்யான தத்துவ  தெய்வங்கள்,மற்றும் பொய்யான கொள்கைகள் யாவையும் ஓலையிலே எழுதி வைத்துள்ளதை படித்து உளரிக்கொண்டு உள்ளீர்கள் நான் சொல்லும் உளவை அறிந்து தெரிந்துகொள்ள, தருமச்சாலை வழியாக வந்து, சுத்த சன்மார்க்கத்தை கடைப்பிடித்தீர்களானால் உண்மையான அறிவும் அன்பும் விளங்கி,இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அவரால் கிடைக்கும் அருளையும்  பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகிடைக்கும்* 


*ஆதலால் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள்,மெய் நூலான திருஅருட்பாவைத் தவிர, வேறு எந்த பொய் நூல்களையும் அவற்றின் கொள்கைகளையும் படிக்கவோ பின்பற்றவோ கூடாது என்கிறார் வள்ளலார்.*


*ஆன்மாவில் பதிவாகியுள்ள சாதி சமய மதம் போன்ற குப்பைகளை அகற்ற வேண்டும்,குப்பைகளை அகற்றாமல் ஆன்மா தூய்மை அடையாது,தூய்மை அடையாத ஆன்மாவில் அருள் பெறவே முடியாது.*


*வள்ளலார் பாடல்!*


சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

*சாத்திரக்குப் பைகள்எல்லாம்* பாத்திரம்அன் றெனவே


ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

*அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்*


*ஓதிஉணர்ந் தோர்புகழும்* *சமரசசன் மார்க்கம்*

*உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்* *மெய்ப் பொருளாம்*


*சோதிநடத் தரசை* என்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.! 


மேலே கண்ட பாடலை உற்று நோக்க வேண்டும் வள்ளலார் அருளைப் பெற்றதற்குண்டான காரண காரியத்தை தெளிவாக விளக்கியுள்ளார்.


மேலும் சொல்லுகிறார்.


துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - 


என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.! 


*உலகிலில் உள்ள சாதி சமயம் மதங்களால் தோற்றுவிக்கப்பட்ட துன்மார்க்கத்தை எல்லாம் தொலைத்து விட்டேன்,உண்மை பொது நெறியான சுத்த சன்மார்க்க மெய்நெறியை கடைபிடித்தேன் மெய்ப்பொருளை நன்கு உணர்ந்தேன் என்கின்றார்*


நாமும் வள்ளலாரைப் போல் சாதி சமய மதத்தை தவிர்த்து சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளைப் பின் பிற்றி வாழ்ந்தால் மட்டுமே அருளைப் பெற முடியும் மரணத்தை வெல்லமுடியும்.


மேலும் ஒரு பாடல்!


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே


எண்டகுசிற் றம்பலத்தே *எந்தைஅருள்* *அடைமின்*

*இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!*


*இறவாமல் பிறவாமல் வாழ்வதற்கும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கும்  ஆசை உள்ளவர்களானால்  உலகில் உள்ள பொய் நூல்களை படிக்க வேண்டாம் அவற்றை பின்பற்ற வேண்டாம் என்கின்றார் வள்ளலார்* 


மேலும் வள்ளலார் பாடல்! 


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்


ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே


மோசஉரை எனநினைத்து மயங்காதீர்  உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 


*ஆசை உண்டேல் இங்கே வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றார்.*


எனவே இதுவரை கண்டது கேட்டது கற்றது களித்தது உண்டது எல்லாம் அநித்தியமானது,நித்தியமானதை தொடர்பு கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896

செவ்வாய், 13 டிசம்பர், 2022

 வள்ளலார் ஒரு சகாப்தம் ! 

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் !

இவ்வுலகின் ஏழு வகையான பிறப்புகளிலே மனிதகுலம் என்பது  உயர்ந்த அறிவுடைய ஆற்றல் வாய்ந்த பிறப்பாகும். 

ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும்   தாவரம், ஊர்வன,பறப்பன,நடப்பன,தேவர்,அசுரர்,மனிதர் போன்ற ஏழு பிறப்புக்கள் கொடுக்கப்படுகின்றது. அவற்றில்  இறுதிப்பிறப்பு மனிதப்பிறப்பாகும்  

இறுதியான  ஏழாவது  பிறப்புத்தான் உயர்ந்த அறிவுள்ள மனித  பிறப்பாகும். இந்த பிறப்பில்தான் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று, ஊண்  உடம்பை ஒளி உடம்பாக மாற்றி, அருள்தேகம் என்னும் ஒளிதேகம் பெற்று  மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறுவதே மனிதனும் தெய்வமாகலாம் என்பதாகும்.

இந்த உண்மை அறியாமல் மனித குலம்,அகம்கருத்து புறம்வெளுத்து, பிறந்து பிறந்து இறந்து இறந்து வீண் காலம் கழித்துக் கொண்டுள்ளார்கள் 

உயர்ந்த அறிவுபெற்ற மனித குலத்தை திருத்தி நல்வழிப் படுத்துவதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். 

வள்ளலார் பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து 
இருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச் சன்மார்க்க 
சங்ககத்து அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற் கென்றே எனை இந்த 
உகத்தே இறைவன் வருவிக்க 
உற்றேன் அருளைப் பெற்றேனே !

மேலே கண்ட பாடல் வாயிலாக தான் வருவிக்க உற்ற விபரத்தை தெளிவாக பதிவு செய்து உள்ளார் .

மனிதகுலத்தின் அறியாமையின்  காரணத்தை மேலும் பலபாடல்கள் வாயிலாக பதிவு செய்கிறார் !

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகில் உறு சமயமத நெறிஎலாம் 
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டு என உணர்த்திடாது உயிர்கள் பல 
பேதமுற்று அங்கும் இங்கும் 
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாதபடி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப் 
பொருளினை உணர்த்தி எல்லாம் 
ஏறுற்ற சுகநிலை அடைந்திடப் புரித நீ 
என்பிள்ளை ஆதலாலே 
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் 
வேறு எண்ணற்க என்ற குருவே 
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிற்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கும் 
நீதி நடராஜ பதியே ! 

மேலும் ஒருபாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் 
பவநெறி இதுவரை பரவியது அதனால் 
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர் 
செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ 
புன்னெறி தவிர்த்து ஒரு போது நெறி எனும் வான் 
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத் 
தன்னெறி செலுத்துக என்ற என் அரசே 
தனி நடராஜ என் சற்குரு மணியே !

உயர்ந்த அறிவுபெற்ற ஆன்மாவில் சமயமத கொள்கைகள் பதிவாகி அறிவு விளக்கம் இல்லாமல் உலக வாழ்க்கையில் ஈடுபட்டு பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வெவ்வேறு உயிரும் உடம்பும் எடுத்து எடுத்து  அழிந்துகொண்டே உள்ளன.அதனால் ஆன்மாக்கள் உண்மை பொது நெறியான சுத்த சன்மார்க்க  அருள் நெறியை அறியமுடியாமல் தவிப்பதால், அறிவு விளக்கம் உண்டாவதற்கு வழிவகை காட்டும் வகையில்,  மேலே கண்ட பாடல்கள் போல் நூற்றுக்கணக்கான பாடல்கள் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார்.