வியாழன், 30 நவம்பர், 2017

சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது !

சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது ! சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது ! அன்புள்ள ஆன்ம நேய உடன் பிறப்புக்களுக்கு வந்தனம் நாம் எவ்வளவு தான்  ஜீவகாருண்யம் செய்தாலும்.தியானம்.தவம்.யோகம். குண்டலினிபயிற்ச்சி.மூச்சு பயிற்சி. வழிபாடு போன்ற எந்த பயிற்சி செய்தாலும்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண முடியாது.அருளைப் பெற முடியாது. நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான முதல் திரை பச்சைத்திரை .அது கருப்பும் பச்சையும் கலந்து உள்ளன.மிகவும் அடர்த்தியான கருப்புத்திரை என்பதாகும் .அவைதான் சாதி ...சமய மதங்களால் கொண்டு வந்த கொள்கைகள்.கடவுள் வழிப்பாட்டு முறைகள்.கற்பனைக் கடவுள்கள் என்பதாகும் அவைகளால் தோற்றுவிக்கப்பட்ட. சாதி.சமயம்.மதம் என்னும் அறியாமை.அஞ்ஞானம் என்ற திரைகள் ஆன்மாவை தெரிய வொட்டாமல் மறைத்துக் கொண்டு உள்ளன. முதலில் உள்ளது சாதி.இரண்டாவது சமயம்.மூன்றாவது மதம் இவைகள் மூன்றும் சேர்ந்த்துதான் முதல் திரை என்பதாகும்..அந்த முதல் திரை நீங்கினால் மற்ற திரைகள் விரைவில் நீங்கி விடும் என்கிறார் வள்ளலார். முதல் திரைகளை நீக்க அதி தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்...அது நீங்கினால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கி விடும் என்கிறார் வள்ளலார். திரைகளை நீக்க அதிகமான சுத்த உஷ்ணம் வேண்டும் என்கிறார்...அந்த உஷ்ணம் எப்படி உண்டாகும் என்றால்..உண்மையான கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி.தோத்திரம் செய்தும்.தெய்வத்தை இடைவிடாது நினைத்தும்.நமது குறையை உன்னியும்.இவ் வண்ணமாக இருக்கின்ற போதும்.படுக்கின்ற போதும்.இடைவிடாதும்.இவ் விசாரத்தோடும்.ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற நன் முயற்சியுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.வள்ளலார்... எனவே தான் சாதி.சமய .மதங்களை சாடுகின்றார்...ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரை நீங்க வேண்டுமானால்.சாதி.சமய மதக் கொள்கையில் இருந்து விலக வேண்டும்.விலகாமல் எந்த ஆனம லாபமும் கிடைக்காது.. கீழே உள்ள பாடல்களை ஊன்றி கவனியுங்கள்.... சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்சாத்திரக் குப்பையும் தணந்தேன்நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்நித்திய வாழ்க்கையும் சுகமும்ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாஅருட்பெருஞ் சோதிஎன்  அனைத்தும் நீஅறிந் ததுநான்உரைப்பதென் அடிக்கடி உனக்கே.! சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளேஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியேஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவேசோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.! சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்விடுவித்தென் தன்னை ஞானநீதியிலே சுத்தசிவ சன்மார்க்கநிலைதனிலே நிறுத்தி னானைப்பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்பராபரனைப் பதிஅ னாதிஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோதியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.! சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.! சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்! சாதி சமயச் சழக்கெலாம் அற்றதுசன்மார்க்க ஞான சபைநிலை பெற்றதுமேதியிற் சாகாத வித்தையைக் கற்றதுமெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் ! சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி - அக்கச்சிசோதியைக் கண்டேன டி.! சாதிசம யங்களிலே வீதிபல வகுத்தசாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவேஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியேஅன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.! சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி ! சாதியு மதமுஞ் சமயமுங் காணாஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி! இப்படி பல ஆயிரம் பாடல்களை பதிவு செய்து வள்ளலார்.... நாம் எவ்வளவு தான் சுத்த சன்மார்க்கம் பேசினாலும் சமய மதங்களால் விதிக்கப்பட்ட சாதி என்னும் கொடிய நோய் நம்மை விட்டு அகலவில்லை.அந்த கொடுமையான நோயை அகற்றினால் தான் நாம் உண்மையான அருட்பெரும்ஜோதியை காண முடியும்... ஆன்மாவைக் கண்களால் கண்டால் தான் இறைவன் அருளைப் பெற முடியும். அருளைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்...மரணத்தை வென்றால் தான் பேரின்ப லாபத்தைப் பெறமுடியும். எனவே முதல் திரையாகிய கருமையில் பச்சைவண்ணமாகிய திரைதான் சாதி என்னும் அழுத்தமான திரையாகும் .அதை முதலில் நீக்கி விட்டால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கிவிடும். அருள் வேண்டுமானால் சாதி என்னும் பற்றை முதலில் பற்று அற விட வேண்டும்... விட்டு பாருங்கள் அதன் லாபத்தை உண்மையாக காண்பீர்கள்.. எனக்கு நாற்பது ஆண்டுகளாக சாதி.சமயம்.மதம் என்ற பற்று அறவே கிடையாது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.... நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போன்ற பெரிய லாபத்தை பெறுவீர்கள்.பெற்றுக் கொள்வீர்கள்..இது சத்தியம்... அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல். 9865939896....

திங்கள், 27 நவம்பர், 2017

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! எங்களை காத்து அருள வேண்டும் ! அருட்பெருஞ்ஜோதி; ஆண்டவரின் பிள்ளைகளாகிய. ஆன்ம நேய உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;             அறிவுருவான.அருள் உருவான அருட்பெருஞ்ஜோதி கடவுளின் அறிவையும்.அருளையும் பெறவேண்டுமானால் ; நமது இந்திரிய அறிவு,கரண அறிவு,ஜீவஅறிவ,ஆன்மஅறிவு,அருளறிவு இவைகளைக்கடந்து சென்று தான் மேலான கடவுள் அறிவையும்.அருளையும் பெறமுடியும்; அப்படி என்றால் "அறிவை அறிவால் அறியும் பொது அறிவைப் பெறுவதற்கு. எல்லாவற்றிற்கும் பொதுவாகிய ஒரே கடவுளான அருட்பெருஞ்ஜோதிக் கடவுளைப்" பற்றி முழுமையாக அறிந்து தெளிந்தால்தான் நாம் கடவுள் அறிவை தடையின்றிப் பெறுவதற்கு ஏதுவாகும்;            அதற்கு கடவுளைப்பற்றிய விஷயத்தில் தெளிவு வேண்டும் ; கடவுளின் "நாம,ரூப,சொரூபத்தை "அறிந்து தெரிந்து தெளிந்து ஐயமற்றிருக்கவேண்டும்; புறத்தில் சமய.மதங்களால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்களின் தத்துவ தன்மை உண்மைகளை வெளிப்படுத்தும் மார்க்கத்தைப் பற்றியிருக்க கூடாது.அறவே பற்று அற்று பொது நோக்கத்துடன் சத்விசாரணை செய்ய வேண்டும்.            கடவுள் உண்மையை வெளிப்பட தெரிவிக்காத மார்க்கத்தில் இருந்து நமது காலத்தை விரயம் செய்து ,பிறப்பு இறப்பை நீட்டித்து வீண்போகக்கூடாது;    ஒரு மார்க்கத்தை நடத்துபவரின் தரத்தையும், அந்த மார்க்கத்தின் கொள்கைப்படி அவர்  கடவுள் பூரண ஞானத்தைப் பெற்றுக்கொண்டு கடவுள் நிலையை அடைந்தவரா ? அடைந்து காட்டியவரா ?என்பதையும் அறிந்து அவர்காட்டுகின்ற மார்க்கத்தில் இணைந்து  ,அவர் வகுத்த நெறியை முழுமையாக கடைபிடித்து ,அந்த நெறிப்படி வாழ்ந்து நாமும் அவரைப்போன்றே அருளைப் பெறுவதற்கு முயன்றிடுதல் வேண்டும்;  அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளுடைய திருவுளச் சம்மதத்துடன் வருவிக்கவுற்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான்,       கடவுளின் ஏகதேச உருவம் கொண்ட ஆன்மாக்களாகிய நாம்.நமது வாழ்வு அழிந்துவிடாமல் மரணத்தை தவிர்த்துக்கொண்டு ஆண்டவருடைய பரிபூரண அருளைப் பெற்றுக்கொண்டு இவ்வுலகிலேயே நிலையான "அனக"அருள் வாழ்க்கை வாழ்ந்திடவேண்டும் என்ற பெருங்கருணையினால்,         எல்லாம் வல்ல ஆண்டவரின் பூரண அருளைப் பெற்றுக்கொண்டு ,  அவ்வருளே வடிவாய் இருந்து ,       மரணத்தை தவிர்த்துக்கொண்டு முத்தேகச் சித்தியுடன் ஒளியுடம்பு பெற்றுக்கொண்டு,  இவ்வுலகை ஐந்துதொழில் செய்யும் வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு,வாழும் தகுதி ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உண்டு. வள்ளல்பெருமான் தாம் பெற்ற "அருட்பெருஞ்ஜோதியின் இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம்.என்ற முத்தேகசித்திப் பெற்ற உடம்பைக்"கொண்டு இவ்வுலக உயிர்திரள்கள் எல்லாம் மருவிக்கலந்து நிறைந்து இன்று ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் இருந்துகொண்டு இவ்வுலகில் "சுத்தசன்மார்க்கத்தால்" அருளாட்சி செய்கின்றார் வள்ளல்பெருமான்.  தாம்பெற்றுக்கொண்ட அந்த பெரும்பேற்றை இவ்வுலகில் மனித தேகம் பெற்றுள்ள அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற பெருங்கருணையுடன்,             இவ்வுலகத்திலுள்ள பிரிந்துகிடக்கும்.அழிந்து கிடக்கும். சமய மத மார்க்கங்களை எல்லாவற்றையும் ஒருநிலைப் படுத்தி "சுத்த சன்மார்க்கம் "என்ற ஒருகுடைக்குள் கொண்டுவந்து இவ்வுலகவருக்கு அருளவிளக்கம் செய்து ,அவர்கள் அனைவரும் கடவுள் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற பெரு நோக்கத்தில் இன்று இவ்வுலகில் சுத்தசன்மார்க்கத்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நடத்திக் கொண்டு இருக்கின்றார். நாமும் இதுவரை வழி.முறை.துறை.துணிவு எதுவும் தெரியாமல் வீணில் காலத்தை விரையாமாக்கிக் கொண்டும்.உண்மை அறியாமல். மாண்டு மடிந்து மீண்டும் பிறந்து கொண்டே உள்ளோம். இனிமேல் அப்படி இல்லாமல் இறப்பிற்கு இடம் .வாய்ப்பு.மரணம். கொடுக்காமல். இப்பிறவியிலேயே மரணத்தை வெல்ல வேண்டும்..அப்படி முயற்சி செய்து.முடியா விட்டாலும் இனி வரும் பிறவியிலாவது கடவுளின் பூரண அருளைப் பெற்று நிலையான அழிவற்ற அருள் வாழ்க்கை வாழ்வதற்கு சுத்தசன்மார்க்கத்தில் இணைந்து அருளைப் பெற்று வாழ்வதற்கு அதிதீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். வள்ளலார் பாடல்! பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! என்னும் பாடலிலே நான் பெற்ற நெடும் பேற்றை வார்த்தையால் சொல்ல முடியாது.அந்த ஒப்பற்ற பெரிய வாழ்க்கையை எனக்கு கொடுத்தாய். என்றும் அழியாத தேகம் எனக்கு கொடுத்தாய்.எனக்கு அதில் விருப்பம் இல்லை.என் போல் இவ்வுலகில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும் அந்த பேரின்ப பெருவாழ்வு பெற வேண்டும் என்று நமக்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறார்.அவருடைய பெருங்கருணையை எப்படி போற்றுவது.சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...அவருடைய விண்ணப்பத்தை அறிந்து கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகின்றார்... நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்றநின்வார்த்தை யாவும்நமதுநீள்வார்த்தை யாகும்இது உண்மைமகனே சற்றும்நெஞ்சம்அஞ் சேல் உனக்கேஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்அழியாத நிலையின்நின்றேஅன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீஆடிவாழ்க என்றகுருவே நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்நான்இளங் காலைஅடையநல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையேநண்பனே துணைவனே என்ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனேஒருவனே அருவனே உள்ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலேஓங்குநட ராஜபதியே.! என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அனுமதிப் பெற்று சுத்த சன்மார்க்கத்தை நடத்திக் கொண்டு உள்ளார்...இதைவிட உண்மை நமக்கு வேறு என்ன வேண்டும். நாம் அனைவரும் சுத்தசன்மார்க்க சுகப்பெருநிலையைப் பெறுவோம்; ...........நன்றி; ............வள்ளல் மலரடி வாழ்க வாழ்க; எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ! அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

சனி, 25 நவம்பர், 2017

ஒன்பது ஓட்டையை அடைக்கத் தெரிந்தவனே மனிதன்!

ஒன்பது ஓட்டையை அடைக்கத் தெரிந்தவனே மனிதன்! உலக போகத்திற்காக மனித உடம்பில் ஒன்பது துவாரம மாயையால் படைக்கப் பட்டு உள்ளது, அந்த துவாரங்களை அடைக்கத் தெரிந்தவன் எவனோ அவனே மனிதன், ஒன்பது துவாரங்களைத்தான் சமயவாதிகள் நவகிரகங்கள் என்று பெயர் வைத்து .அதற்கு உருவங்களைக் கொடுத்து அனைத்து ஆலயங்களிலும்.வைத்து இருப்பார்கள்.அந்த நவக்கிரக உருவங்களுக்கு விளக்கு வைத்து சுற்றி சுற்றி வருவார்கள்.அதனால் எந்த பயனும் இல்லை. அதன் தாத்பரியத்தின் உண்மைத் தெரியாமல்.புரியாமல் வணங்கிக் கொண்டும்.சுற்றிக் கொண்டும் வருவது இன்று வரை நடந்து கொண்டுதான் வருகின்றது. நமது உடம்பில் உள்ள ஒன்பது துவாரங்களில் .ஒரே துவாரத்தின் வழியாகத்தின்.உணவு என்னும் பொருளும்.தண்ணீரும் உள்ளே அனுப்பப் படுகின்றது..அது தான் வாய் என்னும் துவாரமாகும்.அதை அடைக்கும் வழி தெரிந்தால் மற்ற துவாரங்கள் தானே அடைத்துக் கொள்ளும். நாம் உண்ணும் உணவினால் உண்டாகும் கழிவுகளை வெளியே ஏற்றுவதற்கும்.மற்ற செயல்களுக்கும் எட்டு துவாரங்கள் செயல் பட்டுக் கொண்டே இருக்கும்...உணவு உள்ளே செல்லவில்லை என்றால் துவாரங்களுக்கு வேலை கிடையாது. இந்த செய்கையால்.அதாவது அசுத்த பூதகாரிய உணவு உண்ணும் செயல்களால்.அறியாமை என்னும் திரைகள்.ஆன்மாவைத் தெரிந்து கொள்ள முடியாமல் .ஒன்பது வண்ணம் உடைய மாயா திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது், அந்த திரைகளை நீக்க வேண்டுமானால் ஒன்பது துவாரங்களை அடைக்க வேண்டும்.எப்படி அடைக்க முடியும்.? அன்பு.இரக்கம் என்ற உணர்வோடு இடைவிடாது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைந்து நினைந்து.உணர்ந்து உணர்ந்து .நெகிந்து நெகிழ்ந்து.அன்பே நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால்.நேசிக்க வேண்டும்.அதாவது இடைவிடாது காதலிக்க வேண்டும். வள்ளலார் சொல்லுவார்! உண்மையாக இறைவனைத் தொடர்பு கொண்டால்...அழுத கண்ணீர் மாறுமோ ..ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்பார்...இதில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.நாம் உணவு உட்கொள்ளுகின்ற வரை.ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் விலகாது. இறைவனும் அருள் வழங்க மாட்டார்..மரணத்தையும் வெல்ல முடியாது. இறைவன் அருள் வழங்கினால் நம் பூத உடம்பு தாங்காது.அப்படியே வழங்கினாலும் ஒன்பது துவாரத்தின் வழியே வெளியே சென்றுவிடும்.அதனால் எந்த ஆன்ம லாபமும் கிடைக்காது.அருள் தங்க வேண்டுமானால் உடம்பை பொன்னுடம்பாக மாற்ற வேண்டும். நாம் பொருள் உணவை நிறுத்தினால் தான்.அருள் உணவு கிடைக்கும்.அருள் உணவினால் பொன்னுடம்பாக மாற்றம் அடையும். அருள் உணவு உடம்பில் தங்க வேண்டுமானால் ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட வேண்டும். அதன்பின்தான் உச்சி திரக்கும் , பூத உணவினால் உண்டாகும் விந்து நாதம் அடைப்பட்டு,அருள் உணவினால் பரவிந்து பரநாதம் தோன்றும், பரவிந்து பரநாதம் ஆன்மாவில் இரங்கி தொடர்பு கொள்ளும் போது,அதாவது அணைகின்ற போது அருள் சுரக்கும் ,அந்த அருள் பேராற்றல் உடம்பு முழுதும் நிரம்பி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும். வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்! அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன் உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்ஒருதலைமைப் பெருந்தலைவர் உடையஅருட் புகழாம் இன்னமுதில் என்னுடையஅன் பென்னும்நறுங் கனியின் இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனுமோர் கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தேகளித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.! அருள் உணவு உண்பதால் பசி சிறிதும் கண்டிலேன் என்கிறார்...மேலும் என் அன்பர்கள் என் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பூத உணவு உண்ண அழைக்கின்றார்கள்... அவர்களுக்காக வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கேஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள் நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.! என்னும் பாடல் வரிகளில் நான் உண்ணும் உணவைத் தெரிந்து கொள்ளாமல் என்னை பூத உணவு உட்கொள்ள அழைக்கின்றார்கள் இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் என்பதை தெரியப் படுத்துகின்றார். அருள் உணவை உட்கொண்டு. ஒன்பது துவாரத்தையும் அடைத்தவர்  வள்ளல்பெருமான் ஒருவரே. எனவேதான் அவருக்கு அருள் அறிவு ஊற்றுபோல் தோன்றிற்று, ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி ஊரமுது உண்டு நீ யொழியாதே அந்தோ ஊழி தோறு ஊழியும் உலவாமை நல்கும் ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருட்பெரும்சோதி கண்டு ஆடேடி பந்து ! என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார். மேலும் சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவோரை கூற்று ஆசைப்படும் என்கிறார்.கூற்றுவன் என்றால்  எமன். ஆசையோடு வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான் . எனவே ஒன்பது துவாரத்தையும் அடைத்து  உச்சி துவாரத்தை திறக்கும் வழியைக் காட்டுவதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும். அதுதான் திருக்கதவு திறத்தல் ! திருக்கதவும் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருவுருக் காட்டாயோ உருக்கி அமுது ஊற்று எடுத்து என் உடம்பு உயிரோடு உளமும் ஒளிமயமே யாக்குற மெய் உணர்ச்சி அருளாயோ கருக்கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுட் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ செருக்கு கருதாதவர்க்கு அருளும் சித்தி புரத்து அரசே சித்த சிகா மணியே திருநட நாயகனே!.....என்கின்றார் ஒன்பது கதவையும் அடைத்தால் தான் திருக்கதவு திறக்கும். திருக்கதவுத் திறந்தால் தான் அருள் சுரக்கும் அருள் சுரந்தால்தான் மரணத்தை வெல்ல முடியும். சுத்த சன்மார்க்கிகள் ஒன்பது துவாரத்தை அடைக்கும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான சீவகாருண்ய ஒழுக்கம், உண்மையான சத்விசாரம் என்ற இரு வழிகளினால்தான் ,ஒன்பது துவாரத்தை அடைக்க முடியும் அடைக்க வேண்டும்... எனவே ஒன்பது துவாரத்தை அடைக்கத் தெரிந்தவனே ! அருளைப் பெற்றுக் கொள்ளும் தகுதி பெற்ற மனிதனாவான்.. மேலும் தொடரும்.... அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.. 9865939896,

வியாழன், 23 நவம்பர், 2017

சுத்த கங்கை எங்கே இருக்கின்றது ?

சுத்த கங்கை எங்கே இருக்கின்றது ? சொர்க்கம் ,வைகுண்டம்,கைலாயம்,எங்கே இருக்கின்றது.? "என் தந்தை தைத் திங்கள் பதினோராம் தேதி நன்னாளில் வைகுண்டப் பதவியடைந்தார்" என்று அச்சிட்டத் தாளை தன் உற்றார் உறவினருக்கு அனுப்பி வைப்பர். அவரை "வைகுண்டம் என்பது எங்குள்ளது?" என்று கேட்டுப்பாருங்கள் "மேலே யிருக்கிறது" என்று ஆகாயத்தைக் காட்டுவார். "வைகுண்டம் மேலேயுள்ளது என்பது தங்களுக்கு  எப்படித் தெரியும்" என்று கேட்டால் "பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்,என்றும். சாஸ்திரங்களும் சொல்லுகின்றன" என்று சொல்வார். எந்தப் பெரியோராவது வைகுண்டத்தைப் பார்த்து விட்டுத் திரும்பி பூலோகத்திற்கு வந்து வைகுண்டத்தின் நிலையைச் சொல்லி நாம் கேட்டது உண்டா?. என்றால் எவரும் சொல்லியது கிடையாது. *செத்தவனுக்கு இருப்பவனைப் பற்றித் தெரியாது.இருப்பவனுக்குத் செத்தவனைப் பற்றித் தெரியாது.* மேலே போனவன் திரும்பமாட்டான் " என்று எல்லா சாஸ்திரங்களும் அறை கூவுகின்றன. "புண்ணியம் செய்தவன் கைலாயமடைகிறான் , பாபம் செய்தவன் நரகத்தை அடைகிறான்.புண்ணியம் செய்தவன் சொர்க்கலோகம் அடைந்து தனக்கு வேண்டிய சுக போகங்களை அனுபவிக்கிறான். தேவலோக மாதர்களின் இன்பத்தை. வேண்டிய அளவு நுகருவான்" என்றெல்லாம் புராணங்கள் கூறுகின்றன. மக்களும் அவற்றை உண்மை என்றே நம்பிக்கை வைத்து பேசுகின்றனர். இப்படிப்பட்ட மக்களின் கதியை நினைந்து நினைந்து வள்ளலார் வேதனையடைந்தவராய் எழுதுகின்றார், "உண்டதே யுணவு தான் கண்டதே காட்சி இதை உற்றறிய மாட்டார்களா உயிருண்டு, பாவ புண்ணிய முண்டு வினைகளுண்டு உறு பிறவியும் உண்டு துன்பந் தொண்டதே செயுநரக வராதையுண்டு இன்பமுறு சொர்க்க முண்டு, இவநையுமன்றி தொழு கடவுளுண்டு கதியுண்டென்று சிலர் சொலுந் துர்ப்புத்தி யாலுலகிலே ..... ..... வண்டர் வாயற வொரு மருந்தருள்க. ஆறாம் திருமுறை மேலும் ;-- இறந்தவரை எடுத்திடும் போது அரற்று கின்றீர் உலகீர் இறவாத பெரும் வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே பிறந்த  பிறப்பில் இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்து ! என்று சொல்லுகின்றார், மக்கள் வைகுண்டம்,கைலாயம், பிரம்ம பதம், அமுதம், வேதவாக்கியம், கருணை நோக்கம், பரமசுகம் என்பன வெல்லாம் எவ்விதம்  அ னுபவிக்கின்றார்கள் என்பதை வள்ளலார் சொல்கிறார், "ஓகை மட வாரல் குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேலோங்கு முலையே கைலாயம் யவர் குமுத வாயினில்  ஊறமுறலே அமுதம் அவர் தம் பாகனைய மொழியே நல் வேத வாக்கியம், அவர்கள் பார்வையே கருணை நோக்கம் வாங்கின வரோடு விளையாட வரும் சுகமதே பரம சுகமாகும்  இந்த ..... .....வீணர் ..... வாய் மதம் அற மருந்தருள்க." என்று வேண்டுகிறார். "ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் ; கார்ப்பரேசன் விளக்கொளியில் படித்தார்; பெரிய வக்கீலானார்;  உயர்நீதி மன்றத்து நீதிபதியானார்; பிறகு பிரதம நீதிபதியானார்; அது மாத்திரம் தானா! பெரும் சட்ட நிபுணரும் கூட பதவி வகித்தார் ! ஆனால் திடீரென மாரடைப்பால் இந்த நிபுணர் உயிர் துறந்தார்" என்ற செய்தி திடீரென செய்தித் தாள்களில் வருகிறது. இத்துணை மேதாவி ஏன் இறந்து விட்டார்? என்ற கேள்வி நாம் போடுவதில்லை. கூட்டங்கள் போட்டு மேடைகளில் ஏறி அவரவர் கற்றதெல்லாம் பேசிவிட்டு அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று கதறிவிட்டு வீடு திரும்புகிறோம்.  அவர் ஆத்மா எங்குள்ளது! நம்முடைய விருப்பமும் துக்கச் செய்தியும் எங்கு போய்ச் சேருகின்றது என்பதை நாம் ஆலோசிக்கிறோமா? இல்லை மாமூல் பழக்கத்தைக் கொண்டாடிவிட்டு ஏதோ செய்து விட்டதாக நினைத்துக் கொள்ளுகிறோம். இத்தனை பதவிகள் பெற்றாரே அந்த மேதாவி! ஆனால் உண்மையில் அடைய வேண்டிய  பதவியை அடைந்தாரா? உண்மைப் பதவியடைந்திருந்தால் அவர் பிணமாகியிருப்பாரா?. பசித்திரு, தனித்திரு விழித்திரு  என்கின்றார் (வள்ளலார்) அப்படி வள்ளலார் சொல்லியுள்ளபடி வாழ்ந்தால் ''ப, த, வி'' ...பதவி ! கிடைத்து இருக்கும் .அவை தான் என்றும் அழியாத பதவியாகும். இந்தப் பதவியல்லவா பதவி! இந்தப் பதவி அடைந்திருந்தால் அவர் ஏன் பிணமாக வேண்டும்? இந்தப் பதவியல்லவோ வைகுண்டப்பதவி, சிவலோக பதவி,சொர்க்கப் பதவி. சிவபதம் பதவி.,பரலோகப் பதவி, பதவி  என்பது என்ன? "படியளவு சாம்பலை உடம்பு முழுவதும் பூசியே மூத்த சைவ பழம்" என்றும் ,நெற்றியின் நடுவே பட்டையா நாமம்,போட்டுவிட்டு மூத்த வைணவப் பழம் என்றும் உரக்கக் குரலில் கத்துகின்றீர்கள். என்று வள்ளலார் சொல்லுகின்றார்.  சாம்பலைப் பூசி உரத்த குரலில் தேவாரம் பாடிவிட்டால் சைவமாகுமா? ஆழ்வார் பாடல்களைப் பாடிவிட்டால் வைணவமாகுமா ? சிவன்,பெருமாள்  இந்த பூதக் கண்களுக்கு காட்சியளிப்பாரா? விரதமென்ற பெயரால் பட்டினி கிடந்து அங்குமிங்கும் ஓடி வெறும் வெளியில் சுகம் பெற முடியுமா?. சிவம் என்ற பதத்தில் 'சி' என்னும் எழுத்தின் தலை மேலுள்ள சுழியை எடுத்துவிட்டால் சிவம் சவமாகி விடும். இந்த ரகசியத்தை அறிந்தவனே சுத்த சிவத்தை அறிய முடியும். அதன்றி, "பெண் கொண்ட சுகமதே கண்கண்ட பலனிது பிடிக்க வறியாது சிலர் தாம் பேரூரிலாத வொறு வெறு வெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணிற் புண் கொண்ட வுடல் வெழுத்துள்ளே நரம்பெலாம் பசையற்று மேலெம்பப் பட்டினிகிடந்து சாகின்றார்களீ தென்ன பாவம் இவருண்மை யறியார் ....." என்று வருந்தி வருந்தி வள்ளலார் எழுதியுள்ளார். பரமபதம், வைகுண்டம், சிவபதம் என்று பொய்யான அனுபவத்தை அடைந்தவனுடைய நிலையை எண்ணி வேதனைப் படுகின்றார்.தான் அனுபவித்த உண்மை அனுபவங்களை நமக்கு வள்ளலார் சொல்கின்றார், பாடல் ! கடல் கடந்தேன் கரை அடைந்தேன்  கண்டு கொண்டேன்  "கோயில் கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி யெல்லாங் கண்டேன் அடற்கடந்த திருவமுதம்  உண்டு அருள் ஒளியில் அனைத்தும் அறிந்து, தெளிந்து அறிவுருவாய் அழியாமை யடைந்தேன், உடல் குளிர்ந்தேன், உயிர் கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்  உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன் இடர்தவிர்க்கும் சித்தியெலாம் என்வசம் ஓங்கினவே! இத்தனையும் பொது  நடஞ் செய் இறைவன் அருட்செயலே ! என்ற சித்தி நிலை யல்லவோ சுத்த சிவகதி! அதுவல்லவா வைகுண்டம்! அதுவல்லவோ சொர்க்கம்.அதுவல்லவோ கைலாயம். வள்ளலார் சொல்லும் கோயிற்கதவு மனிதனால் ஆக்கப்பட்ட மறக்கதவா? இல்லை இரும்புக் கதவா? இல்லை! இல்லைவே இல்லை.அது அருள் மணிக்கதவு.அருள் சுரக்கும் வாயிற்க் கதவு! அந்த வாயிற்கதவைத்தான் வள்ளலார் பல பாடல்களில் தெரிவிக்கின்றார். தன்னுள் இருக்கும் ஆன்மாவின் வாயிற் கதவையே அவர் குறிப்பிடுகிறார். அந்தக் கதவு திறந்தது. காட்சி யெல்லாம் புலப்பட்டன. திருவமுதம்  வாயில் சொட்ட ஆரம்பித்தது. அதை உண்டேன் உடல் குளிர்ந்தது. சித்தியெல்லாம் என் வசம் ஓங்கின என்பதை தெளிவாக விளக்குகின்றார். வைஷ்ணவக் கோயில்களில் ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு கால்களை மிதித்துக் கொண்டு உள்ளே ஓடோடிக் கண்ட பயன் என்ன? உடல் குளிர்ந்ததா? அமிர்தம் பொழிந்ததா? உள்ளமெலாம் தழைத்ததா? ஐயோ பாவம்!. கைலயங் கிரியில் வீற்றிருக்கும் சிவன் முடியிலிருந்து கங்கை இறங்கினாள். பகீரதன் மூதாதைகளின் பிணங்கள் மேல் கங்கை நீர் பாய்ந்தது. எல்லோரும் உயிர் கொண்டு எழுந்தனர்.என்பதாக சாத்திரம் அல்லது புராணம்.சொல்லுகின்றது என்கின்றனர். . வசதி உள்ளவர்கள் அக் கைலயங்கிரிக்கே போய்த் திரும்புகிறார்கள். "கைலாயத்திற்கே போய் வந்தோம்" என்று பறை யடித்துக் கொள்கிறார்கள். கங்கை உற்பத்தியாகும் சிவனது முடியைக் கண்டோம் என்பார்கள். கங்கையில் நீராடி நேராக வருகிறோம் என்பார்கள். அப்படிப்பட்டவர்களைப் பெருமைபடுத்த அவரை அண்டிப் பிழைக்கும் கூத்தாடிகள் நாற்பது பேர்கள் சேர்ந்துகொண்டு, "ஆஹா சிவகதி பெற்ற பெருமானே! தங்களுடைய தரிசனத்தால் நாங்கள் புண்ணியர்கள் ஆனோம்! நாங்கள் நேரிடையாக  கைலாய நாதரைப் பார்க்க முடியா விடினும் அவரை தரிசித்து வந்த தங்களின் பாத சேவை கிடைக்கப் பெற்றோம்" என்றெல்லாம் புகழ்வது உலக இயல்பாகி விட்டது. கங்கை நீர் பருகுங்கள்; உங்கள் பாபங்களெல்லாம் கூண்டோடு தொலைந்து விடுமென்று கங்கை நீர் கொண்டு வந்த புண்ணியர் ஒருவர் ஒரு தேக்கரண்டியில் செப்புக் கலசத்தில்  உ ள்ள நீரைச் சிரத்தையுடன் கொடுப்பார். கூத்தாடிகளும் இரு கைகள் ஏந்தி மெல்ல தலையை தூக்கிப் பருகிவிட்டு தலை முடியில் சிவநீரை துடைத்துக் கொள்ளுவார்கள். "கொலை,மாமிசம், களவு, காமம்,பொய்  முதலிய தீமைகள் அன்றி நன்மை யென்பதனைக் கனவிலும் கண்டறியா மக்கள் கங்கை யெனும் ஆற்றில் குளிக்கின்றதும் ,தீயில் மூழ்கி யெழினும் அவ் அழுக்கு சுத்தம் நீங்காது கண்டாய்" என்று வள்ளலார் சொல்வதை யோசிக்க வேண்டாமா?. ஆகவே அசுத்தங்களை அகற்றி உடல், உயிர், ஆவியெல்லாம் குளிரச் செய்யும் அருள் கங்கை எப்படி இருக்க வேண்டும். அசுத்த மண்ணும் அசுத்த கல்லும் அசுத்த சாக்கடை நீரும்,துர்நாற்றமுள்ள மலமும் சிறு நீரும்,மேலும் ஒன்று பாதியுமாய்ச் சுட்டுத் தள்ளிய பிணங்களும் கலந்த கங்கை நீரில் மூழ்கினால் எந்த பாபம் தொலையும்? எந்த புண்ணியம் கிடைக்கும்.எந்த சிவபதம் அடைய முடியும்? சாக்கடை நீரில் அழுக்குத் துணியை துவைத்துப் பரிசுத்த மாக்க முடியுமா? எது சுத்த கங்கையோ அதுவல்லவோ மற்ற அசுத்தங்களை நீக்க வல்லது. அந்த சுத்த கங்கை எங்கு உள்ளது? கோவிலில் வைத்திருக்கும் பஞ்ச பாத்திரத்திலா? அங்கு இருக்கும் தீர்த்தக் குளங்களிலா? அந்த தீர்த்த மிருக்குமிடத்தைத் திருமூலர் சொல்கிறார்; "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோபுர வாசல் தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காணா மணி விளக்கே" இந்த ஊன் உடம்பில் தலைப் பாகத்தில் உச்சிக்கும் கீழே .உள் நாக்கிற்கும் மேலே வச்ச விளக்கில் திரி எண்ணை இல்லாமல் இடைவிடாது எரிந்து கொண்டு உள்ளது.ஜீவ காருண்ய ஒழுக்கத்தாலும்.சத்விசாரத்தாலும். ஆன்ம நெகிழ்ச்சி உண்டாகி.அந்த சுத்த உஷ்ணத்தின் சூட்டில் உருகி வெளியே வருவது தான் சுத்த கங்கை என்னும் அருள் அமுதம். .அதைப் பருகுபவனே அருளாளன்.அவனே மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவன்.அவனே எல்லாம் அறிந்தவன். வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள். சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் சூதரிந்தீர் வாதரிந்தீர் தூய்மை அறிந்திலிரே இகம் அறியீர் பரம் அறியீர் என்ன உம் கருத்தீர் என்புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ அகம் அறியீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடுமின் நீண்டே முகம் அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருட் சித்தர் மகன் நானே ! இந்த சிவ நீரையே வள்ளலார் அருள் அமுதம் என்கிறார். இதைப் பருக பருக நரை, திரை,பிணி.மூப்பு ,மரணம், இல்லாமல் .உடம்பு மாற்றம் அடையும்.. உடல் பொன்கலந்த வன்மை பெறும், மூப்பு சாக்காடு ஒழிந்து உடல் இளமை  அடையும். பழம் காயாகும்.,காய் பிஞ்சு வாக மாறும்,.பிஞ்சு பூ வாக மாறும்,பூ அரும்பாகும்,அரும்பு உயிராக மாறும்,உயிர் ஒளியாக மாறும்,ஒளி ஆன்மாவுடன் சேரும்.ஆன்மாவில் இருந்து அமுதம் சுரக்கும்.அந்த அமுதமே மரணத்தை நீக்கும் வல்லபம் உடையதாகும்.  உடம்பை காப்பாற்றுவதாக எண்ணி காய கல்பம் தேடி ஊரூராய் அலைந்து திரிவதினால் என்ன பயன்? காயத்தை ஒளியாக்கும் மருந்து வெளியில் இல்லை. உள்ளே தான் உள்ளது . இந்த சிவநீர் என்னும் அமுதம் இருக்குமிடம் தான் ஆன்மாவாகும். அதை இறைத்துப் பருகும் மார்க்கம் தான் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கமாகும். இவற்றை சொல்ல வல்லார் யாராவது உலகில் இருக்கிறார்களா? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்னும் கேள்வி இது வரை யாருக்கும் உதிக்க வில்லை . தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்றவர்தான் வள்ளல்பெருமான் .அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமல் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள். எத்தனையோ யோகிகள் .சித்த பிரான்கள் உலாவிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அருளைப் பெற்று மரணத்தை வென்று உள்ளார்களா என்றால் இன்று வரை இல்லை. வள்ளலார் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்க நாம் தயாராயிருக்கிறோமா !.என்றால் இல்லை இன்னும் பொய்யான சமய மதங்களையே பிடித்து அலைந்து கொண்டு உள்ளோம். எதுவரினும் சரி, எது போயினும் சரி, இன்றே அந்த சுத்த சிவநீர் என்னும் அருளைப் பெற்று பருக வேண்டும்; என் உடல் , உயிர், ஆவி அத்தனையும் இந்த நேரமே சமர்பித்து விடத் தயார் என்று உறுதி கொண்ட நேரமே நல்ல நேரமாகும். அந்த நல்ல நேரத்தைக் குறித்துதான் வள்ளலார். வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று வள்ளல்பெருமான் அனைவரையும் அழைத்து வரும்படி சொல்லுகின்றார்.வடலூர் வந்தால் வழி பிறக்கும். சிவநீர் என்னும் அமுதம் கிடைக்கும் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும். சுத்த அமுதம் அருந்தி நரை,திரை ,பிணி,மூப்பு பயம்,மரணம் இல்லாமல் மரணத்தை வெல்லுவோம்.அதி தீவிர முயற்சி செய்யுங்கள் நன்மையே நடக்கும் நன்மையே கிடைக்கும். அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

திங்கள், 20 நவம்பர், 2017

சொல்லிவிட்டு செல்வது மரணம் !.

சொல்லிவிட்டு செல்வது மரணம் !. சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.! சொல்லிவிட்டு செல்வது மரணம் !.சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.! சொல்வேன் .சொல்லுகிறேன் சொல்லிக் கொண்டே இருப்பேன்.உங்களை எப்படியும் திருத்திவிடுவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உள்ளது. நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் ,திருப்பு மயக்கம் இன்றி மரணம் இல்லாமல் .மரணத்தை வென்று வாழ முடியும், வாழ வேண்டும்.என்பதுதான் என் பேராசையாகும். உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் ஆன்மா என்னும் ஒளியானது இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை.அறிவலே. அருளாளே அறிந்தேன்.அதனால் என்னுளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதர சகோதரிகள் என்னும் உண்மையை அறிந்து கொண்ட காரணத்தினால்... . குறிப்பித்தேன்,குறிப்பிக்கின்றேன் .குறிப்பிப்பேன் . இந்த உலகத்தில் உண்மை சொல்ல வந்தாலும் உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.மூடமாகவே இருக்கின்றார்கள்.உங்களின் மூடநம்பிக்கையை நிச்சயம் விலக்கி விடுவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நான் மரணம் அடையாமல் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் .ஆதலால் இனி எல்லாவரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த உலக உண்மையை அறிந்து கொள்வதற்கும் .உங்கள் ஆன்மாவையும், உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் பாது காப்பதற்கும் இனி எந்த சாதி,சமயம்,மதங்களும் தடை கிடையாது.தடைகளை எல்லாம் நீக்கி விட்டேன்.இப்போது நடந்து கொண்டு உள்ளது *சுத்த சன்மார்க்க காலம்...* ''உங்களை அழித்துக் கொண்டு இருப்பது உலகில் உள்ள சாதிகள் ,சமயங்கள் மதங்களால் உருவாக்கப் பட்ட ஆச்சார .சங்கற்ப விகற்பங்களும்,,வருணம் ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்பங்களும்.ஒவ்வொரு ஆன்மாவின் உண்மைத் தன்மையை தெரியவொட்டாமல் திரைகள் போல் மறைத்துக் கொண்டு உள்ளன .'' இப்போது நான் சொல்லிய பிரகாரம் உண்மை அறிவாய்.உண்மை அன்பால்.உண்மை இரக்கத்தால் இடைவிடாது விசாரம் செய்து கொண்டு வாருங்கள் தெரிவிக்க வேண்டியதை.ஆண்டவர் நிச்சயம் தெரிவிப்பார். அதற்கு அவசியம் காரிய காரணமான தயவும். ஒருமையும் அவசியம் இருக்க வேண்டும். எல்லா உயிர்களும் ஒன்று என்று அறியும் உண்மை அறிவு விளக்கம் பெற வேண்டும்.அறிவு விளக்கம் பெற தயவும் ஒழுக்கமும் கலப்படம் இல்லாமல் நேர் கோட்டில்.நேர் வழியில் செயல்பட வேண்டும். அறிவை உள் அடக்கி.அருளை உள் அடக்கி வெளியே தோன்றாமல் இயக்கி இயங்கிக் கொண்டு இருப்பது தான்ஆன்மா என்னும் உள் ஒளியாகும். தான் யார் என்னும் உண்மையை அறிந்து கொண்டால். ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பது தெரியவரும். அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள கருணை என்னும் நன் முயற்சி அதிகமாக இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டுக் கொண்டு இருந்தால் உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்கள் ஆன்மா குடியிருக்கும் (உடம்பு) இல்லம் தேடி வருவார் . வந்தவுடனே எல்லா நன்மைகளையும் சுலபமாகப் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம் ,இது சத்தியம் ..இது சத்தியம்.இஃது ஆண்டவர் கட்டளை என்று....வள்ளல்பெருமான் சொல்லுகின்றார்.. நாம் கேட்கிறோமா ? கேட்க மாட்டோம் என்ற உறுதியுடன் இருக்கின்றோம்.. எனவே கண்ட கண்ட நூல்களைப் படித்து.அதில் உள்ள குற்றங்கள் தெரியாமல். அறிவை மழுங்க வைக்கும் வார்த்தைகளை நம்பி அலைந்து கொண்டு செல்லாதீர்கள்.வீண் காலம் கழிக்காதீர்கள்.இறுதியிலே மரணம் என்னும் பெறும் பாவி வந்து விடும்.அவற்றை தடுக்க எவறாலும் முடியாது என்கிறார் வள்ளலார். வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.! கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணேஉண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரேவிண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தேஎண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.! மேலே கண்ட பாடலில் உள்ளபடி.கண்டது எல்லாம் அநித்தியமானது.கேட்டது எல்லாம் குற்றம் உடையது.கற்றது எல்லாம் பொய்யானது.களித்தது எல்லாம் வீணானது.நாம் உண்டது எல்லாம் மலமானது.தெரிந்து கொண்டது எல்லாம் குறைபாடு உடையது.இதுவரையில் உண்மை என்னவென்று தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.இனிமேலாவது நான் சொல்லியதை தயவு செய்து கேளுங்கள் என்கிறார் வள்ளலார். உலக மக்களைத் திருத்த திருந்தி வாழ்வதற்காக .மெய் நெறியான சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து மெய்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு .என்றும் அழியாத அழிக்க முடியாத அருளைப் பெற்று மரணத்தை வென்று இறவாமல் வாழும் வாழ்க்கையில் வாழ்வோம். வாழ்வோம்! வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! அன்புடன்.ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

வெள்ளி, 17 நவம்பர், 2017

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872.

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872. வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது ! வள்ளலார் சொல்லியதை கேட்டு நாம் இதுவரையில் பின் பற்றுகிறோமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். கவனமாக படித்து தெளிவு பெற வேண்டும் .. உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே ! அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும் அடைந்து அறியாத அற்புத குணங்களையும் ,கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,செய்து அறியாத அற்புதச் செயல்களையும்.கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்.அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும். இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் .என்று உணர்கின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையவனாகி இருக்கின்றேன். நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் . இயற்கையில் தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும்.இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்.இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும். எல்லா அண்டங்களையும்.எல்லா உலகங்களையும்.எல்லாப் பதங்களையும்.எல்லாச் சத்திகளையும் .எல்லா சத்தர்களையும்.எல்லாக் கலைகளையும்.எல்லாப் பொருள்களையும்.எல்லாத் தத்துவங்களையும்.எல்லாத் தத்துவிகளையும் .எல்லா உயிர்களையும்.எல்லாச் செயல்களையும் .எல்லா இச்சைகளையும்.எல்லா ஞானங்களையும்.எல்லாப் பயன்களையும்.எல்லா அனுபவங்களையும்.மற்று எல்லா வற்றையும் .. தமது திருவருட் சத்தியால் ..தோற்றுவித்தல்..வாழ்வித்தல்..குற்றம் நீக்குவித்தல் ..பக்குவம் வருவித்தல்..விளக்கம் செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்.எல்லாம் ஆனவர் என்றும்.ஒன்றும் அல்லாதவர் என்றும்.சர்வ காருண்யர் என்றும் சர்வ வல்லபர் என்றும்.. எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வும் இல்லாத் தனிப்பரும் தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர் ''என்றும்.சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நிக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவென்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.. அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ் வுலகத்தினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து .அழிவில்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் .பல்வேறு சமயங்களிலும்.பல்வேறு மதங்களிலும்.பல்வேறு மார்க்கங்களிலும்.பல்வேறு ல்ட்சயங்களைக் கொண்டு .நெடுங்காலம் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றார்கள்.. இனி இச் சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ..உண்மை அறிவு.உண்மை அன்பு..உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் ..எல்லாச் சமயங்களுக்கும் .எல்லா மதங்களுக்கும்.எல்லா மார்க்கங்களுக்கும் .உண்மைப் பொது நெறியாக விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று ''பெரும் சுகத்தையும்.பெரும் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு உள்ளம் கொண்டு .சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை ''இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ...இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்கே யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் ..என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி .அருட்பெருஞ்ஜோதியிராய் வீற்று இருக்கின்றார் .. ஆகலின் .அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி .இறந்தவர் உயிர் பெற்று எழுதல்..மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்.முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள் . என்னும் உண்மையை வள்ளலார் தெரிவித்து உள்ளார்/ நாம் இதுவரையில் வள்ளலார் சொல்லிய வண்ணம் பின் பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்...இவ்வளவு உண்மையைத் தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் நாம் நம் விருப்படியே செயல்படுகிறோம்....அருட்பருஞ்ஜோதியர் நமக்கு கருணைக் காட்டுவாரா என்பதைக் கருத்தில் கொண்டு உண்மை உணர்வோடு செயல்பட வேண்டும்.சன்மார்க்கிகளே இனிமேலாவது திருந்துங்கள் செயல்படுங்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ௧ அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

ஞாயிறு, 12 நவம்பர், 2017

பண்ணாத தீமைகள் பண்ணுகிறீர்கள்!

பண்ணாத தீமைகள் பண்ணுகிறீர்கள்!

வள்ளலார் பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரேபகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரேநடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தேகண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

முன் உள்ள மார்க்கங்களில் எவ்வளவு தவறு செய்து இருந்தாலும்.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றால்.இந்திரிய ஒழுக்கம் .கரண ஒழுக்கம் மிகவும் அவசியமானது.அர்த்தம் உள்ளதாகும்....

தமிழ் நாட்டில் மற்றும் வெளிநாட்டில் உள்ள சன்மார்க்க சங்கங்களும்.சங்கத்தில் அங்கம் வகிக்கும் அன்பர்களும்.வள்ளலார் காட்டிய வழிபாட்டு முறைகளையும்...ஒழுக்க நெறிகளையும் முழுமையாக கடைபிடிப்பதில்லை.
சங்கத்திற்கு வருபவர்களுக்கு உணவு மட்டுமே போடுகிறார்கள்..வள்ளலார் சொல்லிய ஒழுக்க நெறிகளையும்.வழிபாட்டு முறைகளையும் முறையாக கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு சங்கமும் அவரவர்களின் சுய நலத்திற்காகவே பயன் படுத்திக் கொண்டு வருகிறார்கள்..பொருள் ஈட்டுவதற்காகவும்.புகழுக்காகவும் பயன் படுத்திக் கொண்டு உள்ளார்கள்....

இந்திரிய ஒழுக்கத்தில்..வள்ளலார் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் ...

இந்திரிய ஒழுக்கம் என்பது..இறைவனால் எழுதப்பட்ட திருஅருட்பா பாடலகளில் உள்ள ( ஸ்தோத்திரங்களை) நாதங்களை உற்றுக்கேட்டல் .மற்ற பாடல்களை கேளாதிருத்தல்.என்பதை தெளிவாக சொல்லுகின்றார்.கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல்.

அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல் ..கொடூரமாகப் பாராதிருத்தல்.ருசியின் மீது விருப்பம் இன்றி இருத்தல்.சுகத்தம் விரும்பாதிருத்தல்.
இவைகள் யாவும்.ஞானேந்திரிய ஒழுக்கம் என்கிறார் .இவைகளை நாம் பின்பற்றுகிறோமா ? நாம் சிந்திக்க வேண்டும்..

அடுத்து இனிய வார்த்தையாடுதல்.பொய் சொல்லாதிருத்தல்.ஜீவ இம்சை நேரிடும்கால் எவ்வித்த் தந்திரத்திலாவது தடைசெய்தல்...கொலை நடப்பதை நாம் தடுக்க முயற்சி செய்து இருக்கிறோமா?..

பெரியோர் இடத்தில் செல்லுதல் என்றால் சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல்.சாதுக்கள் என்றால் யார் ? பணத்தையும்.பொருளையும் கையில் தொடாதவன் .பொய் பேசாதவன்.எதிலும் இச்சை இல்லாதவன்.எதிலும் பொது நோக்கம் உள்ளவன் தான் சாதுக்கள்.அவர்களிடம் தான் தொடர்பு கொள்ள வேண்டும்.சாதுக்கள் போல் வேஷம் போடுகிறவனிடம் செல்வது அல்ல.அவர்கள் சாதுக்கள் அல்ல...என்கிறார் வள்ளலார்.

உயிர்க்கு உபகரிக்கும் நிமித்தம் சஞ்சரித்தல்.உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்.மலஜல உபாதைகள் அளவு மீறாமலும் கிரம்ம் குறையாமலும் அளவைப் போல் .தந்திர மூலிகையாலும் ஆகாரப் பக்குவத்தாலும்.பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல்.என்னும் இவையாவும் கருமேந்திரிய ஒழுக்கம் என்கிறார் வள்ளலார்...

இந்த கருமேந்திர ஒழுக்கமும்.ஞானேந்திர ஒழுக்கமும் வள்ளலார் சொல்லியபடி கடைபிடிக்கிறோமா ? என்பதை சிந்திக்க வேண்டும்...

நாமும் கடைபிடிப்பதில்லை புதியதாக வருபவர்களுக்கு குழப்பத்தை உருவாக்கி தவறான வழியை காட்டிக் கொண்டு உள்ளீர்கள்...எப்படி மக்கள் திருந்துவார்கள்..

அடுத்து முக்கியமானது கரண ஒழுக்கம்....

கரண ஒழுக்கம் என்பது..சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்கிறார் வள்ளலார்..நாம் சிற்சபையிடம் மனதைச் செலுத்தாமல் .மற்ற எல்லா இடங்களிலும் மனதைக் கொண்டு செலகிறோம்..பணம் பறிப்பதிலே மனதை அதிகமாக பயன் படுத்துகிறோம்..கண்ட கண்ட வழிபாட்டு முறைகளிலும்.பொய்யான தவம்.யோகம்.தியான முறைகளையும் செய்யச் சொல்லி மனதை தவறான வழியில் அலைகழிக்கச் செய்து கொண்டு வருகிறோம்..

அடுத்து பிறர் குற்றம் விசாரியாயிருத்தல்..
தன்னை மதியாதிருத்தல்.செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி .இயற்கையாகிய சத்துவ மயமாதிருத்தில்.பிறர்மேற் கோபியாதிருத்தல்..தனது சத்ருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்...அக்கிரம அதிக்கிரம்ப் புணரச்சி செய்யாதிருத்தல்.இவைகள் யாவும் கரண ஒழுக்கம்.

மேலே கண்ட இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.இரண்டையும் முழுமையாக கடைபிடித்தால் தான் .ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் கை கூடும்.நான்கு ஒழுக்கமும்.சம நேர் கோட்டில் இருந்தால் தான் அருள் பெற்று  மரணத்தை வெல்ல முடியும்.

இந்திரிய ஒழுக்கமும் கரண ஒழுக்கமுமே வள்ளலார் சொல்லிய வண்ணம் எவருமே கடைபிடிப்பதில்லை.அவரவர் விருப்பம் போல் செயல் படுகிறார்கள்..ஆதலால் எவறாலும் மரணத்தை வெல்ல முடியாது.

வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை.சன்மார்க்க சங்கங்களும்.சங்கத்தில்   அங்கத்தினராக உள்ளவர்களும்.வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாகவே செயல் பட்டுக் கொண்டு வருகிறார்கள்...வழிப்பாட்டு முறைகளிலும்..ஒழுக்க நெறிகளிலும். ஒருவரும் முழுமையாக கடைபிடிப்பதில்லை...

எப்படி அருள் கிடைக்கும்.? எப்படி மரணத்தை வெல்ல முடியும்..?..

சன்மார்க்கிகளின் இந்த தவறான வழியைக் கண்டுதான் வள்ளலார்.

பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன்மொழி பகருகின்றீரே என்று வேதனையுடன் சொல்லுகின்றார்...

இவைகளை எல்லாம் எண்ணி கண்ணீர் விட்டு கதருகின்ற காலம் வரும்.என்று எச்சரிக்கின்றார் ..மேலும் பித்துலகிரே என்கிறார்.பித்துலகிரே என்றால் பைத்தியம் பிடித்தவர்கள் என்பதாகும்...ஒன்றுகிடக்க ஒன்று செய்வது பைத்தியக்காரன் செயல் என்பதை சுட்டிக் காட்டுகின்றார்....

வள்ளலார் கொளகையில் உள்ளவர்கள் சன்மார்க்க சங்கம் நடத்துபவர்கள்.மிகவும் எச்சரிக்கையாக.தானும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.அதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்.

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார்..

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றைநாடாதீர்

பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்

விரைந்தினிஇங்கென்மார்க்க மும்ஒன்றா மே.!

என்கின்றார்.வள்ளலார்.

நாம் உண்மையை விட்டு வேறு ஒன்றை நாடிச் சென்றால் அதனால்.வரும் துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிவரும் என்பதை எச்சரிக்கின்றார்...

அடுத்து ஒரு எச்சரிக்கை தருகின்றார்...வள்ளலார்

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர்

ஆடுதற்கே அறிவீர்கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ

கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரேவேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்

சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்றதருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.!

மேலே கண்ட பாடல் அனைவரும் தெரிந்து.புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய தமிழில் சத்தியம் வைத்துச் சொல்லுகின்றார்...

ஆகையால் சுத்த சன்மார்க்கத்தில் உள்ளவர்கள்.எக்காலத்திலும் சுய நலத்திற்காக  சன்மார்க்கத்தை பயன் படுத்த வேண்டாம்.மற்றவர்கள் நலன் கருதியே பாடுபட வேண்டும்..தவறு செய்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

சிந்திப்போம் திருந்துவோம் செயல்படுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 11 நவம்பர், 2017

பக்தி வேண்டுமா ? ஞானம் வேண்டுமா ?

பக்தி வேண்டுமா ? ஞானம் வேண்டுமா ?

பக்தி என்பது ஆன்மீகத்தின் தொடக்க நிலை.அதற்கு சரியையில் சரியை என்று பெயர்.

அதே போல் சரியையில் சரியை.கிரியை. யோகம். ஞானம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.

அடுத்து கிரியையில் .கிரியையில் சரியை.கிரியையில் கிரியை.கிரியையில் யோகம்.கிரியையில் ஞானம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.

அடுத்து யோகம் என்பதில்.யோகத்தில் சரியை.யோகத்தில் கிரியை.யோகத்தில் யோகம்.யோகத்தில் ஞானம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.

அடுத்து இறுதியாக ஞானம் என்பதில் ஞானத்தில் சரியை.ஞானத்தில் கிரியை.ஞானத்தில் யோகம்.ஞானத்தில் ஞானம் என்னும் நிலைகள் உள்ளன.

ஆன்மீகத்தில் மொத்தம் 16.நிலைகள் உள்ளன...

ஞானத்தில் ஞானம் பெறுவதே மனித குலத்தின் முக்கிய இறுதி நிலையாகும்.பக்தி என்னும் ஆரம்ப சரியை நிலையில் இருந்து மேலே ஏறுவதற்கு காலம் போதாது என்பதால்.வள்ளலார் நேரடியாக ஞான நிலைக்கு வரும்படி உலக மக்களை அழைக்கிறார்..

வள்ளலார் சொல்லும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்..ஞானம் பெறுவதற்கு உண்டான ஒழுக்க நெறிகளை போதிக்கின்றன.இதிலே. சாதி.சமயம் மதங்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது.

ஞானம் என்பது ஆன்மீகத்தின் இறுதி நிலை.அதில் நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்தால் இறைவனிடம் அருளை மிகச் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்.என்கிறார் வள்ளலார்..

ஞான சரியை என்பது இந்திரிய ஒழுக்கம்.

ஞான கிரியை என்பது .கரண ஒழுக்கம்.

ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கம்.

ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கம்.

இந்த நான்கு ஒழுக்கங்களை வள்ளலார் சொல்லியபடி முழுமையாக கடைபிடித்தால் இறைவன் அருளை வாரி வாரி வழங்குவார்..அருள் பூரணம் அடைந்தால் மனிதனின் ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து மரணத்தை வென்றால் மட்டுமே இறைவனுடன் கலக்க முடியும்...

அப்படி கலந்து வாழும் வாழ்க்கை தான் பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்....

கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .உலக வரலாற்றில் வள்ளலார் ஒருவரே !

எனவே ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையான பக்தி நிலையை விட்டு விட்டு ஞான நிலைக்கு வாருங்கள் என அழைக்கின்றார் வள்ளலார்...

வள்ளலார் பாடல் !

சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள் அறிந்ததே எந்தாய்.!

சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.!

என்னும் பாடல்கள் வாயிலாக தன் அனுபவத்தை வெளிப்படையாக தெரிவிக்கின்றார்...

மேலும்.ஞானத்தைப் பெறுவதற்கு ஞான சரியை என்னும் தலைப்பில் 28.பாடல்களை தந்து உள்ளார்..அந்த பாடல்களில் உள்ளபடி வாழ்க்கையில் கடைபிடித்து.அனுபவித்து அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என தெளிவாக பதிவு செய்துள்ளார்.

ஞான சரியையில் உள்ள முதல் பாடல் ஒன்றே நாம் அனைவரையும் உருக வைத்து விடுகின்றது..

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

என்னும் பாடலை தொடங்கி இறுதி பாடல்..

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தேசத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை

நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி

ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னைஎல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை

ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!

என்ற பாடலுடன் நிறைவு செய்கின்றார்...

எனவே ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய அன்பர்கள் அனைவருக்கும் தெரியப் படுத்துவது..

பக்தி நிலையை புறம் தள்ளிவிட்டு ஞான நிலைக்கு வாருங்கள் வாருங்கள் என அழைக்கிறார் வள்ளலார்.....

மேலும் அவரவர் விருப்பம்.எதுவோ ! நீங்களே முடிவு எடுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

வந்தனம் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

மக்கள் எப்படி வாழ வேண்டும் ?

மக்கள் எப்படி வாழ வேண்டும் ?

அச்சம். பயம்.துன்பம்.வறுமை இல்லாமல் மக்கள் வாழ வேண்டும்..

அவ்வாறு வாழ்வதற்கு ஆட்சி அதிகாரிகள் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும்.அவர்களின்  தகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றார்...

மக்களின் நலன் மட்டும் முக்கியம் அல்ல .எல்லா உயிர்களுக்கும்.பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை.துன்பம். இல்லாமல் வாழ வைக்கும் அன்பு.தயவு.கருணை.அருள் .பெற்றவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரங்களில் அமர வேண்டும்...என்கிறார் வள்ளலார்...

இன்று உலகம் முழுவதும்.சாதி.சமய.மதவாதிகளின்....சுயநல வாதிகளின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டும் உள்ளன.அதனால் உலகம் அழிந்து கொண்டு உள்ளன.

அவர்களை மக்கள் விரட்டி வெளியேற்ற வேண்டும் என்பதை வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்..

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையரை நாளும்

கெடு நிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்

படுநிலை அவரைப் பார்த்த போதெல்லாம் பயந்தன்ன்..சுத்த சன்மார்க்கம்

விடுநிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்நாய்...!

என்று வள்ளலார் சொல்லுகின்றார்...பொது நலம் இல்லாமல் கெடுநிலையுடன் ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும்.கண்டு நானே பயந்தன்ன்.மக்கள் எப்படி அச்சத்தோடு பயந்து பயந்து வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது உள் நடுங்கினேன்..அவர்களை விரட்டி சுத்த சன்மார்க்கம் நிலைபெற வெருவினேன் வெருவினேன் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்கின்றார்.....

அடுத்து ஒரு பாடல் !

அச்சம் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற

விச்சை அரசே விளங்கிடுக...நச்சரவம்

ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக

நீதிக் கொடி விளங்க நீண்டு..!

உலகில் மக்கள் அச்சத்தோடு வாழ்கின்ற  ஆட்சிதான் உள்ளன.மக்களின் உயிரைப் பறிக்கும் கொடிய விஷம் போல் ஆட்சி செய்கிறார்கள்...அவர்களை விரட்டிவிட்டு.கோட்டைகள் எல்லாம் சன்மார்க்க நீதிக் கொடி விளங்க வேண்டும் என்கிறார் வள்ளலார்....

அடுத்த பாடல் !

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க ...தெருள் நயந்த

நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து

எல்லோரும் வாழ்க இசைந்து.!

என்கிறார்...

உலகில் உயிர்களை காப்பாற்றும் கருணை இல்லாத ஆட்சி எதுவாக இருந்தாலும்.இருக்கும் இடம் தெரியாமல் ஒழித்து விட வேண்டும் என்கின்றார்..

எல்லா உயிர்களும் அச்சம்.பயம் துன்பம்.வறுமை இல்லாமல் என்றும் அன்பும் .தயவும் மகிழ்ச்சியும். ஆனந்தமும் பெற்று என்றும் வாழ்வாங்கு வாழும் வழியைக் காட்டவும்...நல்லோர்கள் நினைத்த நலம் பெறவும் ..

முழுமையான அருள் பெற்ற நன்மார்க்கர் என்னும் சுத்த சன்மார்க்கிகள் ஆட்சியில் அமர வேண்டும்...என்கிறார்.

அந்த நாளே சிறந்த நாள்...அதுவே திருநாள்...அதுவே பெறுநாள்...அந்த நாளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆசீர் வதிக்கும் நாள்.....

வள்ளலார் பல கோடி அண்டங்கள் முழுவதும். அருள் ஆட்சி செய்யும் .நடத்தும் அதிகாரத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பெற்றுக்கொண்டார்.நாமும் பெற்றுக் கொள்வதற்கு அருள் உடம்பு என்னும் தகுதியைப் பெறுவோம்

முரசு அறைகிறார் !

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு..
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு..
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு..
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !

நாம் நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சுய நலத்தில் இருந்து விலகி பொது நோக்கத்திற்காக வாழ்வோம்...

எல்லா உயிர்கள் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக்...

வந்தனம்...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 4 நவம்பர், 2017

ஆன்ம நேயம் கொண்ட அறிவு ஜீவிகளே வந்தனம்.

ஆன்ம நேயம் கொண்ட அறிவு ஜீவிகளே வந்தனம்.

ஈரோடு கதிர்வேல் வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை மறைக்காமல் வெளிப்படையாக சொன்னால்.சில சமய மத சன்மார்க்கிகளுக்கு வருத்தமாக உள்ளது..

வள்ளலார் ஆயிரக்கணக்கான பாடல்களில் சமய மதங்களின் சூதுகளையும்.அவர்கள் தோற்றுவித்துள்ள .உண்மைக்கு புறம்பான தெய்வங்களையும். சகட்டு மேணிக்கு சாடுகின்றார்.வள்ளலார் சொல்லி. உள்ளதை நான் வெளிப்படையாக சொல்கிறேன்...வள்ளலார் சொல்லாத எந்த செய்திகளையும் நான் வெளியிட மாட்டேன்..

உண்மையை இனி யாராலும் மறைக்க முடியாது..மேல் புல்லை மேய்வதால் பயன் ஒன்றும் இல்லை.ஆழமாக சிந்தித்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்....

வள்ளலார் சாதி சமய மதங்களை சாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கில் திருஅருட்பாவில் உள்ளன.

அதிலே சில பாடல்களை கீழே பதிவு செய்துள்ளேன் பொருமையாக.அறிவு தெளிவுடன் ஊன்றி படியுங்கள் உண்மை விளங்கும்.....

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்சேர்கதி பலபல செப்புகின் றாரும்பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையேபிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியேதள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரேஇறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலேகதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலேசேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.!

எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்றுகைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்றுகைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போவிதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகாவித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்அதுஇது என்னாமல் ஆடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!

சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போவிதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகாவித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்அதுஇது என்னாமல் ஆடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!


வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்வேதாக
மத்தின் விளைவறியீர் - சூதாகச்சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலைஎன்ன பயனோ இவை.!

சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.!

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!!

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுபநீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்றபேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.!

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!

சாதியு மதமுஞ் சமயமுங் காணாஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!

மேலே கண்ட பாடல்களை படித்து விட்டு.நான் எழுதிய கருத்துக்களில் தவறு இருந்தால் என் மீது குறை சொல்லுங்கள் .

இன்னும் வள்ளலார் சொல்லியள்ள காட்டியுள்ள சுத்த சன்மார்க்கத்தை .கொள்கைகளை ...சாதி.
சமய மதங்களைக் கொண்டு மறைத்துவிட முடியாது.

ஏமாந்து விடுவீர்கள் ...உங்களை காப்பாற்ற சமய மதக் கடவுள்களால் எக்காலத்திலும் முடியாது.அருட்பெருஞ்ஜோதி யால் மட்டுமே காப்பாற்ற முடியும்

ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.!

சிந்தியுங்கள் செயல்படுங்கள்....

என்னை யார் திட்டினாலும் வஞ்சித்தாலும் நான் எப்போதும் அஞ்சமாட்டேன்..எனக்கு வேஷம் போட தெரியாது... உண்மை மட்டுமே தெரியும்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.