வெள்ளி, 27 நவம்பர், 2020

வாழ்க்கை வாழ்வதற்கே !

 *வாழ்க்கை வாழ்வதற்கே*  !

*ஒவ்வொரு ஆன்மாவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே விரும்புகின்றது*.

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக இறைவனால்  அனுப்பபட்ட ஆன்மாக்கள் உலகியல் வாழ்க்கையில் மூழ்கி சிறிய இன்பம் துன்பம் என்னும் சாகரத்தில் சிக்கி இறுதியில் அனைத்தும் நோய்வாய்பட்டு அழுது புலம்பி கண்ணீர் மல்கி துயரத்துடனும் துக்கத்துடனும் வாழ்ந்து *புண்ணியம் குறைந்து பாவம் அதிகமாகி* பாவத்தின் சம்பளமாக மரணப் பெரும்பிணி வந்து மனித உடம்பை விட்டு வேறு உடம்பு எடுக்க சென்று விடுகிறது. வேறு தேகம் எதுவென்று தெரியாமல் இவ்வுலகில்  வாழ்ந்து செல்வது மிகவும் அதிர்ச்சியான ஆச்சரியமான கொடுமையான தண்டனையாகும்

*வள்ளலார் பாடல்* ! 

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்

மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த

வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்ததனைப் பெறவே

மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே

செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே

சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே.!! 

மேலே கண்ட பாடலிலின் வாயிலாக வள்ளல்பெருமான் தெளிவான விளக்கம் தருகின்றார்.

*மரணம் வருவதற்கும்  மரணம் வராமல் தடுத்து வாழ்வதற்கும் உண்டான ரகசிய வழியைத் தெரியப்படுத்துகின்றார்.*

இவ்வுலகில் உயர்ந்த அறிவு மனித தேகம் படைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.அகம் என்னும் ஆன்மாவில் உள்ள அறிவை பயன் படுத்த தெரியாமல்.புறத்தில் செல்லும் மனதையும் புத்தியும் பயன்படுத்தி மண்ணாசை.

பெண்ணாசை.

பொன்னாசைக்காக வாழ்க்கையைப் பயன்படுத்தி ஸ்தூல தேகத்தின் இல்லற வாழ்க்கையில்  வாழ்ந்து இறுதியில் துக்கமான மரணப்பெரும் பிணியில் சிக்கி மாண்டு போகின்றார்கள்.

*முன்பு வாழ்ந்த அருளாளர்கள்*

மனித ஆன்ம அறிவைப் பயன்படுத்தி.கடுமையான  தவம்.தியானம்.யோகம் போன்ற கலைகளில் தங்களைப் பயன்படுத்தி ஏகதேசம் அருளைப்பெற்று. மரணத்தை  வெல்ல வழி தெரியாமல் *பஞ்ச பூதங்களான நீர்.நிலம்.அக்கினி.காற்று. ஆகாயத்தில் கலந்து வாழ்ந்துகொண்டுஉள்ளார்கள்*. 

மரணத்தை வென்று அருள் ஒளிதேகம் பெற்றால் மட்டுமே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பேரொளியில் கலந்து *பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழமுடியும்*.

மனிதன் மரணத்தை வென்று ஆன்மதேகம் என்னும் சூட்சமதேகமான அருள்தேகம் பெற்று வாழ்வதே வள்ளல்பெருமான் காட்டும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய உண்மையான வாழ்க்கையாகும்.

*ஆன்மா ஸ்தூல தேகத்தில் வாழ்கின்ற வரை மரணம் வந்தே தீரும்.*

பஞ்சபூத ஸ்தூல தேகமான ஜீவ தேகத்தை சூட்சும தேகமாக மாற்ற வேண்டும்.அதற்கு ஆனமதேகம் என்றுபெயர்.

*உயிருடன் வாழ்வது ஜீவதேகம்.உயிர் இல்லாமல் வாழ்வது ஆன்மதேகம்*

அந்த ஆன்மதேகத்தை பூரண அருள் தேகமாக மாற்ற வேண்டும்.அதுவே கடவுள் தேகம் என்றும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகுதல் என்றும் வள்ளல்பெருமான் பெயர் சூட்டுகின்றார்.  

*அருள் தேகம் பெற்ற ஆன்மாவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது* அருள்தேகம் பெற்றுவிட்டால்

*அருள் வழங்கிய

கடவுளாலும் அழிக்க முடியாது* 

*வள்ளலார் பாடல்* ! 

காற்றாலே புவியாலே ககனமத னாலேகனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக் கருவி யாலேகோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறை வனைச்சார் வீரே.! 

*அடுத்த பாடல் !*

ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளேஅம்மே என் அப்பா என்ஐயா என் அரசே

காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்

பாராலும் படையாலும் 

பிறவாலும் தடுக்கப்படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே

சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞானசித்திபுரத் தமுதேஎன் நித்திரை தீர்ந் ததுவே.!  

மேலே கண்ட பாடல்கள் எளிய தமிழில் தெளிவான விளக்கம் தந்து உள்ளார்.அதிலே ஒரு பெரிய  உண்மையை தெரிவிக்கின்றார்.யாராலும் அறிந்து கொள்ள முடியாத அறிய பெரும்பொருள் எது என்றால்?  அதுதான் இயற்கை உண்மையான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். 

ஆன்மாவானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறியாமல் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கின்றவரை அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை.மரணத்தை வெல்லும் வாயப்பே இல்லை. 

மனித ஆன்மா உண்மை அறிந்து பொய்யான சாதி சமய மதங்களில் பற்று வைக்காமல்.

ஜீவகாருண்யமான பரோபகாரத்தையும்.கடவுளை நிலை அறிந்து கொள்ளும் சத்விசாரத்தையும் இடைவிடாமல் கடைபிடித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

உலகில் புறக் கண்களுக்குத் தெரியும் அனைத்தும் மாயையின் பொய் தோற்றங்களாகும். எனவே புறத்தில் உள்ள எவற்றையும் தொடர்பு கொள்ளாமல்.

அகத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

*வள்ளலார் பாடல்*

படமாட்டேன் துயர் சிறிதும் படமாட்டேன் இனிநான்பயப்படவும் மாட்டேன் நும் பதத்துணையே பிடித்தேன்

விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்மெய்ம்மை இது நும்மாணை விளம்பினன் நும் அடியேன்

கெடமாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்கிளர்ஒளி அம்பலத்தாடல் வளர்ஒளி நும் அல்லால்

நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.! 

மேலே கண்ட பாடல் மிகவும் முக்கியமானதாகும்.வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார்.

நான் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டதால் *படமாட்டேன் துயர் சிறிதும் படமாட்டேன் இனி நான் பயப்படவும் மாட்டேன் உன் பத்துணையே பிடித்தேன் என்றும் விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் விட்டிடவும் மாட்டேன் என்னும் உண்மையை அழுத்தமாகச் சொல்லுகிறார்*. 

எனவே பிடிக்க வேண்டிய உண்மையைப் பிடித்துக்கொண்டும் விடவேண்டிய பொய்களை விட்டுவிட்டும்  வாழ்வதே சுத்த சன்மார்க்க சிறந்த வாழ்க்கையாகும்.

*வள்ளலார் பாடல்!*

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே

மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனேமெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே

தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியேசத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.!  

மேலே கண்ட ஞானசரியையின் இரண்டாவது பாடலை  ஊன்றி படித்து பயன் பெறவும்.

*வாழ்க்கை வாழ்வதற்கே*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்9865939896.

ஞாயிறு, 15 நவம்பர், 2020

14-11-2020 தீபாவளி திருநாள் !

 14-11-2020 *தீபாவளி திருநாள்.!*


தீபாவளித் திருநாளைப்பற்றி பலபேர் பலவிதமான கதைகளைச் சொல்லி உள்ளார்கள்.

கதைகள் யாவும் கற்பனையா ? உண்மையா ? என்று எவருக்கும் தெரியாது.


எப்படி இருந்தாலும் தீபாவளித் திருநாளை பல ஆண்டுகளாக  மக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் என குடும்பத்துடன்  மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். 


*உயிர்ப்பலி செய்யாதே !*


தீபாவளி அன்று புத்தாடை.

பலகாரங்கள் பல இனிப்புக்கள்.பல உணவு வகைகள் செய்து பட்டாசு வெடித்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.


*ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உட்கொண்டு. ஒரு உயிர்  மகிழ்ச்சி அடைவது நியாயமா ? என்பதை  உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.*


மக்கள் மகிழ்ச்சியுடன் இன்பமுடன். வாழும் அதே நேரத்தில் ஏழை எளிய ஆதரவு அற்ற குழந்தைகள் முதியோர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகள் செய்து அவர்களுடைய மகிழ்ச்சியையும்.

இன்பத்தையும் பாகம் செய்து கொள்ளுவதே மனிதநேயம்.

ஆன்மநேயமாகும்


தாவர உணவான காய்கறிகள்.

பழங்கள்.பூக்கள் இலைகள் யாவும். எல்லா உயிர்களுக்கும் பொதுவான உணவாக இறைவன் உலகம் முழுதும் படைத்துள்ளார்.


*உயர்ந்த அறிவுள்ள மனிதன் தாழ்ந்த அறிவுள்ள உயிர்களைக் கொன்று உணவாக உட்கொள்வது பெரிய பாவச்செயல் என்று எல்லா ஞானிகளும் அருளாளர்களும் சொல்லி உள்ளார்கள்*.


முக்கியமாக தமிழ்நாட்டில் தோன்றிய மெய்ப்பொருள் உணர்ந்த  *திருவள்ளுவர்*. *வள்ளலார்* போன்ற அருளாளர்கள் புலால் உணவைப்பற்றி கடுமையாக சாடி உள்ளார்கள்.

திருக்குறளையும் திருஅருட்பாவையும் படித்து பயன் பெறுவதே மனித குலத்தின் பண்பாகும்.


வாய் பேசாத. தங்கள் உயிர்களை பாதுகாத்துக்

கொள்ளமுடியாத  அப்பாவி உயிர்களைக் கொன்று உணவாக உட்கொள்ளாமல் தாவர உணவுகளை உட்கொண்டு மகிழ்ச்சி யுடன் ஆனந்தமாக தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழுங்கள். *அதுவே சிறந்த ஆன்ம மகிழ்ச்சியாகும்*


திருவள்ளுவர் கொல்லாமை புலால் உண்ணாமை என இரண்டு அதிகாரங்களில் 20 குறள்களில் பதிவு செய்துள்ளார்.


*அதிலே இரண்டு குறள்*


கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்.! 


கொலாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேற் செல்லாது உயிருண்ணுங் கூற்று ! 


*வள்ளலார்பாடல் !*


*உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார்* அவர்க்குப்


பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே


மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.! 


உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே ! 


உயிருள்யாம்  மெம்முள்  உயிர் இவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே! 


என்றும் பல நூறுபாடல்களில் தெரிவித்துள்ளார்.


*உயிர்க்கொலை செய்பவர்களும் அதன்புலாலை உண்பவர்களும் இறைவனைத் தொடர்கொள்ளவும்.தொழுவதற்கும்.வழிபடவும் வணங்கவும். அருளைப் பெறவும்  தகுதி அற்றவர்களாவார்கள் என்று வெளிப்படையாக சொல்லி உள்ளார்கள்*. 


உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் மற்ற உயிர்களை மகிழ்ச்சி அடைய செய்விப்பதே சிறந்த வழிபாடாகும் சிறந்த செயலாகும்.சிறந்த இன்பமாகும்.சிறந்த தீபாவளி பண்டிகையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

கற்றது எல்லாம் பொய்யே !

 *கற்றது எல்லாம் பொய்யே* ! 

இவ்வுலகில் பொய்யும் மெய்யும் இரண்டும் கலவையாக உள்ளது. மெய்யை பொய் மறைத்துக் கொண்டுள்ளன. நம் புறத்தில் உள்ள ஊணக் கண்களால் பார்ப்பதுயாவும் பொய்யே ! அகத்தில் உள்ள அருள் கண்களால் பார்ப்பது மட்டுமே மெய்யாகும்.

நாம் கற்கும் கல்விகள் யாவும் பொய்யான பொருள் ஈட்டும் பொய் கல்வியாகவே உள்ளன.அருள் ஈட்டும் சாகாக்கல்வியை கற்றுத்தரவே இவ்வுலகிற்கு இறைவனால்  வருவிக்க உற்றவரே திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

*வள்ளலார் பாடல்* ! 

கண்டதெலாம்  அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

*கற்றதெலாம் பொய்யே* நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகு சிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.! 

மேலே கண்ட பாடலில் நாம் இதுவரையில் கண்டது. கேட்டது. கற்றது. களித்தது. உண்டது. உட்கொண்டது அனைத்தும் அநித்தியமானது பொய்யானது என்பதால் இவ்வுலகில் மக்களுக்காக போதித்த கொள்கைகள் எவற்றையும் நம்பவேண்டாம் பின்பற்ற வேண்டாம் என்கிறார் வள்ளலார். 

மெய்பொருள் உண்மையை வெளிப்படையாக ஒருவரும் சொல்லவில்லை.

ஆதலால் நாம் பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாமல் இறந்து இறந்து பிறந்து பிறந்து கொண்டே உள்ளோம். 

*ஆன்மாவின் சுகநிலை*

ஆன்மா என்னும் உள்ஒளியானது இறைவன் தகுதி பெறும் வாய்ப்புள்ளதால்

(அதாவது கடவுள் நிலைஅறிந்து அம்மயமாதல் ) இறைவன் குழந்தைகள் என்று சொல்லப் படுகின்றது.

ஆன்மாவானது தான் யார் ? என்பதை தெரிந்து கொள்வதற்கும். தன்தகுதி எவ்வளவு உயர்ந்தது சக்திவாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த பஞ்ச பூத உலகத்தை இறைவன் படைத்துள்ளார். 

*ஆன்மா உயிர்பெற்று உடல்பெற்று

பலகோடிபிறவிகள் எடுத்து உருமாற்றம் அடைந்து இறுதியாக மிகவும் உயர்ந்த பிறவியான மனித பிறப்பு என்னும் உருவம் கொடுக்கப்படுகிறது*. 

மனித பிறப்பில்தான் உயர்ந்த அறிவும் உயர்ந்த அருளும் பெற்று வாழும்வகை வழங்கப்பட்டுள்ளது. 

அறம்.பொருள் இன்பம் பெற்று மற்ற உயிர்களின் நலன்கருதி சிறப்புடன் வாழ்ந்து இறுதியாக வீடுபேறு அடையவேண்டும்.

*வீடுபேறு என்பது மரணம் இல்லாப்பெருவாழ்வு வாழ்வதாகும்*. அதுவே ஆன்மாவிற்கு இறைவன் கொடுத்த கொடையாகும்.அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதே அருள் நியதியாகும் அன்பு கட்டளையாகும்.

ஆனால் மனித்தேகம் பெற்ற ஆன்மாக்கள் தன் அறிவை பயன்படுத்தாமல் மற்ற மனிதர்கள் சொல்லிய பொய்யான அறிவால் தோன்றிய கருத்துக்களையும் கற்பனைக் கதைகளின் வாயிலாக தோன்றிய கொள்கைகளையும் பின்பற்றி வாழ்ந்து வந்ததால்.

அறியாமை அஞ்ஞானம் என்னும்  வினைகள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ளன.

அதுவே ஆன்மாவின் இயற்கை உண்மையை மறைத்துக் கொண்டுள்ள மாயா திரைகளாகும்.

ஆதலால் மனிதர்களால் உண்மையை உணர்ந்து கொள்ள முடியாமல் அருள் பெற முடியாமல் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளது. 

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்* !

 கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

என்னும் பாடல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

*இறைவன் வருகை*

இவ்வுலகில் மனிதன் இறைவனை முழுமையாக தொடர்புகொள்ள முடியாமல்.சிறிய முயற்சியால் சுத்ததேகம்.பிரணவதேகம் பெற்று வெளிப்படுத்திய சாதி சமய மதக் கொள்கைகள் வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் உலகம் முழுவதும் பதிந்து. உயர்ந்த அறிவுபெற்ற மக்கள் உண்மை அறியமுடியாமல் அழிந்து கொண்டுள்ளார்கள்.

*வள்ளலார் பாடல்* !

அறங்குலவு தோழிஇங்கே நீ உரைத்த வார்த்தை

*அறிவறியார் வார்த்தை*

எதனால் எனில் இம் மொழிகேள்

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்

*மறங்குலவும் அணுக்கள் பலர் செய்தவிர தத்தால்*

*மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்* அங் கவர்பால்

இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர் அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.! 

*இறப்பதும் பிறப்பதுமாய் உள்ள மனிதர்களின் எண்ணம் சொல் செயல்களினால் உண்மை வெளிப்படாமல் போயிற்று. ஆதலால் அவர்களின் கொள்கைகள் கருத்துக்கள் யாவும் பொய்யானது எனவே கற்றது எல்லாம் பொய் என்கிறார் வள்ளலார்*.

*இறைவனே வருகை*!

*உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களை காப்பாற்றவே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற மனித உருவம் தாங்கி உலகில் தோன்றியுள்ளார்*

இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம்தான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற பொது நெறியாகும்.

திருநெறியாகும். பொது மார்க்கமாகும்.

இம்மார்க்கத்தின் மூலமாகத்தான் உண்மையை தெளிவாக வெளிப்படையாக அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளமுடியும்.

*இச்சங்கத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தலைவராகும்.* எவரும் தனிஉரிமை கொள்ளமுடியாது.

இம்மார்க்கம் எந்த சாதி சமயம் மதங்களையும் சார்ந்த்து அல்ல என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

*வள்ளலார் பாடல்* ! 

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 

திலகன்எனநானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.!  

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நடத்திக் கொண்டுள்ளார்*.

*வேறு எவரும் நடத்துவதற்கு உரிமை வழங்கவில்லை*. 

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்து வள்ளலார் காட்டிய கொள்கைகளைப் பின்பற்றி வாழ்வதே மக்களின் தலையாய கடமையாகும்.அதைவிடுத்து பலபல தலைப்புகளில் சங்கங்களை அமைத்து தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் என்று சேர்த்து.சாதி சமயம்.மதம்.மற்றும் அரசியல் சார்ந்தது  போல் சன்மார்க்க சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. 

*தயவு உடையவர்கள் எல்லாரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்களே*.

*தயவுக்கு தடையாக உள்ளதே சாதி சமய மதங்கள் என்பதை அறிந்து கொண்டால் தயவு என்றால் என்ன என்பது தெரியவரும்*.

தயவு இல்லாமல் அருள் விளங்காது.அருள் விளங்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாது.அருள் பெறுவதே சன்மார்க்கிகளின் பணியாகும். அருள் பெறுவதற்கு தடையாக இருப்பதே சாதி சமய மதங்களின் கொள்கைகளாகும். 

நாம் கற்கும் உலகியல் கல்விகள்யாவும்  சாகும் கல்வியாகும்.

*வள்ளலார் கற்றுத்தரும் கல்வி அருள்கல்வி அதுவே சாகாக் கல்வியாகும்*

சாகாக்கல்வி கற்பதற்கு சாகும்கல்விகள் தடையாக உள்ளது.

எனவேதான் வள்ளலார் சொல்லுகின்றார்.

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றைநாடாதீர் 

*பொய்உலகை நம்பாதீர்* - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்கமும் ஒன்றாமே.! 

*வள்ளலார் பாடல்* !

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.! 

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நேரிடையான உண்மை வார்த்தைகளாகும்.

*இனிமேல் பொய்யை ஒழித்து புறப்பட்டு மெய்யை தொடர்பு கொள்ளவேண்டும்.*

மனித்தேகம்  கொடுத்ததே சித்தி பெறவேண்டும் என்பதே. பஞ்ச பூத  பொய் உடம்பை திருஅருளால் மெய் உடம்பாக மாற்றி மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இணைந்து கொள்ள  வேண்டும். உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் மேன்மை அடையவேண்டும் என்ற எண்ணத்தோடும் இரக்கத்தோடும் ஆன்மநேய உரிமையோடு உணர்வோடு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.

பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்றாடும் அய்யரைக் கண்டேன் என்கிறார் வள்ளலார்.நாமும் பொய்யை அகற்றி மெய்யைத் தொடர்பு கொள்வோம். *அருள் பெறுவதே நம் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்*

*அருட்பெருஞ்ஜோதி அகவல் !*

அருளறியார் தமை யறியார் எம்மையும்

பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே!

அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை

பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே!

அருள் வடிவதுவே யழியாத் தனிவடிவு

அருள்பெற முயலுகென் றருளிய சிவமே !

அருளே நம்மியல் அருளே நம்முரு

அருளே நம்வடி வாமென்ற சிவமே !

அருளே நம்மடி யருளே நம்முடி

அருளே நம்நடு வாம் என்ற சிவமே !

அருளே நம்மறிவு வருளே நம்மனம்

அருளே நங்குண மாமென்ற சிவமே!

அருளே நம்பதி யருளே நம்பதம்

அருளே நம்மிட மாமென்ற சிவமே!

அருளே நந்துணை யருளே நந்தொழில்

அருளே நம்விருப் பாமென்ற சிவமே!

*அருளே நம்பொருள் அருளே நம்மொளி*

*அருளே நாமறி வாயென்ற சிவமே!*

அருளே நங்குல மருளே நம்மினம்

அருளே நாமறி வாயென்ற சிவமே!

அருளே நஞ்சுகம் அருளே நம்பெயர்

அருளே நாமறி வாயென்ற சிவமே!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

ஞாயிறு, 8 நவம்பர், 2020

அடுத்த பிறவி என்ன ?

 *அடுத்த பிறவி என்ன ?*


பிறவிகளிலே உயர்ந்த பிறவி மனித பிறப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே தெரியும்.உயர்ந்த பிறவிப் பெற்ற மனிதன் மேன்மேலும் உயர்ந்து உயர்ந்த  இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே மனித பிறவிக்கு கொடுத்த சுதந்தரம் ஆகும். 


*இறந்து விட்டால் அடுத்த பிறவி என்னவென்று தெரியாமல் இருந்த உலகத்தார்க்கும். சன்மார்க்கிகளுக்கும்  மீண்டும் மனித பிறப்பு கிடைக்கும் வாய்ப்பை வெளிப்படுத்துகின்றார்*.


மனிதன் இவ்வுலகில்  வாழ்வதற்கு இறைவன் கொடுத்த சுதந்தரத்தை எவ்வாறு பயன்படுத்தி வாழவேண்டும் என்பதை அறிந்து தெரிந்து கொள்வதே மனிதனின் உயர்ந்த அறிவாகும்.தனக்கு கொடுத்த அறிவால்  இவ்வுலகில் மாயையின் ஆதிக்கத்தில் உள்ள  பொருள்களைப் பெற்று அனுபவித்தும் வாழலாம்.


*இவ்வுலகைப் படைத்த இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்றும் வாழலாம்.*


பொருளைப்பெற்று பொருளை அனுபவித்து வாழும் வாழ்க்கைக்கு சிற்றின்பம் என்று பெயர். சிற்றின்பத்தினால் மரணம்வரும் மீண்டும் பிறப்பு கொடுக்கப்படும்.


அருளைப்பெற்று வாழும் வாழுக்கைக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும். பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும். பெயராகும்.


இறைவன் கொடுத்த உயர்ந்த பிறப்பை.உயர்ந்த அறிவைப் பெற்ற மனிதன்.உயர்ந்த அருளைப்பெற்று உயர்ந்த இடத்திற்கு செல்ல வழிதெரியாமல்.சில பல ஆன்மீக அருளாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட சாதி சமய மதங்களின் கொள்கைகளை பின்பற்றி வாழ்வதால் இறந்து இறந்து பிறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்.  


*இறந்த பின்பு மீண்டும் என்ன பிறவி கிடைக்கும்.*


இறந்தால் மீண்டும் மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது உறுதி அல்ல. மனித பிறப்பு கிடைத்தால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் வாய்ப்பு உண்டு.

தவறிவிட்டால் பலகோடி பிறவிகள் எடுத்து பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் மனிதப் பிறவி கிடைக்கும்.


இந்த மனித பிறவியில் அறியாமையால் அஜாக்கிரதையால் மரணம் வந்தாலும் அடுத்து மனிதப் பிறவிகிடைக்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஒரு சிறந்த வழியைச் சொல்லுகின்றார் வள்ளலார்.


*மீண்டும் மனித பிறப்பு*! 


ஒவ்வொரு மனிதர்களும் அகத்தில் உள்ள ஆன்மாவின் உள் ஒளியைத் தொடர்பு கொள்ளாமல்.புறம்  புறத்தில் உள்ள இந்திரிய கரணங்களின் மனம். வாக்கு. காயம் என்னும் செயல்பாடுகளால் தான் நன்மை தீமைகளும்.

புண்ணிய பாவங்களும் வந்து ஆன்மாவை பற்றிக் கொள்கின்றன.


மனம் வாக்கு காயம் என்பன. எண்ணம் சொல் செயல்கள் மூலமாக புறத்தில் உள்ள ஜீவன்களின்  ஆன்மாவில் பதிந்து.அவைகளால் உண்டாகும் நன்மை தீமைகள் யாவும் அவர்களின் எண்ணம்  சொல் செயல் மூலமாக  திரும்பவும் செய்பவர்களின் ஆன்மாவில் வந்து பதிவாகின்றன.அந்த பதிவுகளே திரைகளாக ஆன்மாவை மறைத்து கொண்டுள்ளன.


இவற்றில் நாம் அறிந்து செய்து பாவங்கள்

அறியாமல் செய்த பாவங்கள் இரண்டுமே  நம்மை வந்து அடைந்து  அடுத்த பிறவி என்ன என்பதற்காண காரண காரியமாக அமைந்து விடுகின்றன.


*இதற்கு பரிகாரம் பிராய்ச்சித்தம்* 

*என்ன செய்தால் தீர்ந்து மீண்டும் மனிதபிறப்பு கிடைக்கும்* 


தங்கள் தங்கள் தரத்திற்கு தக்கவாறு ஜீவர்களுக்கு உண்டாகும் பசி .பிணி .தாகம்.

இச்சை.

எளிமை.பயம்.

கொலை.துன்பம் போன்றவற்றால் வருந்துகின்றவர்களுக்கு நம்மால் முடிந்த உபகாரம் இயன்றவரை செய்ய வேண்டும்.முடியாத பட்சத்தில் *நம்மைப் படைத்த இறைவனிடம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என பிரார்த்தனை செய்ய வேண்டும்.*


மேலும் உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருக்க வேண்டும்.


ஜீவகாருண்யம் என்னும் பரோபகாரம்.மற்றும் இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு சத்விசாரம் செய்தும்  முயற்சி பற்றாமலும் அஜாக்கிரதையாலும் அறியாமையாலும்  அருள் பெறமுடியாமல்.

மரணத்தை வெல்ல முடியாமல் போனாலும். *சுத்த சன்மார்க்கிகளுக்கு மீண்டும்   மனித பிறப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதை உறுதி செய்கிறார் வள்ளலார்*.


மீண்டும் மனிதபிறப்பு கிடைப்பதே பெரிய புண்ணியம் பெரிய பாக்கியமாகும்.


*சாலை சம்பந்திகளுக்கு இட்டகட்டளையில் வள்ளலார் வெளிபடுத்துவது.*


அன்புள்ள நீங்கள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலைக்கு மிகவும் உரிமை உடையவர்கள் ஆதலால் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.


நீங்களும் உங்களை அடுத்தவர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் சுகமாக வாழ்வீர்களாக என்று வள்ளல்பெருமான் அவர்கள் வாயால் வாழ்த்தி சொல்கிறார். 


மேலும் *வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனித்து படித்து உணர்ந்து கொள்ள வேண்டும்*


கர்ம காலம் முதலிய பேதங்களால் யாருக்காயினும் தேக ஆனி நேரிட்டால் தகனம் செய்யாமல் சமாதியில் வைக்க வேண்டும்.


இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கைக் கொண்டு எவ்வளவும் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சிந்தையுடன் இருக்க வேண்டும்.


கணவன் இறந்தால் மனைவி  தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்ய வேண்டாம். 


தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும் இவ்வாறு உண்மையாக நம்பி செய்யுங்கள்.செய்து இருந்தால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும்.மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணைகூர்ந்து எனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம்  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கச் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந்தருணம் மிகவும் அடுத்த சமீபமாக இருக்கின்றது.


*அந்த தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகி இருந்து இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து அருள்வார்* இது வெளிப்பட்டு அறிந்த பின் தகனம்( எரிக்ககூடாது) செய்தல் கூடாது.

அது சன்மார்க்கத்திற்கு தக்கது அல்ல.ஆகலில் மேற் கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக...


*மேலும் வள்ளலார் சொல்லுகின்றார்*


எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம் அடையும் வரையில்.என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து *இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங் கருணைவள்ளல்* சாலைக்கு உரியவர்களாகி யிருந்தும்.


அவநம்பிக்கை யுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தே அருள்வார். *ஆனால் அவர்கள் சன்மார்க்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள்*.

ஆகையால் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை அடைவீர்கள்.இது சத்தியம். இது சத்தியம்.என்று சத்தியம் வைத்து வள்ளல்பெருமான் சொல்கிறார்.


எனவே இப்பிறவியில் மரணம் இல்லாப்பெருவாழ்வு பெற்று  வாழ்வதற்கு  வாய்ப்பு கிடைக்காமல் மரணம் அடைந்தாலும்.

கீழ்பிறப்பு எடுக்காமல் மனித பிறவி கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஜீவகாருண்ய தயவு உடையவர்களுக்கு நிச்சயம் அடுத்த பிறவி மனிதபிறப்பு கிடைக்க நிறைய வாய்ப்பு உண்டு.


எனவேதான் தயவு உடையோர் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்றும்.


எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி! என்றும் தெளிவாக சொல்லியுள்ளார்.


வள்ளலார் பாடல் ! 


சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீ உரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


*செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்*

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே*.!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வெள்ளி, 6 நவம்பர், 2020

சன்மார்க்கியா ? சமய மத வாதியா ?

 *சன்மார்க்கியா ? சமய மத வாதியா?*


சன்மார்க்கத்திற்கும் சமய மத மார்க்கத்திற்கும்  உள்ள முக்கியமான வேறுபாடுகள் என்னவென்றால்.? 


சன்மார்க்கம் என்பது ஒரே கடவுள் என்ற உண்மை அறிந்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதிஆண்டவரை ஒளியாக கண்டு வழிபடுவதாகும்


சமய மத மார்க்கம் என்பது தத்துவங்களை உருவக் கடவுள்களாக பாவித்து படைத்து பல தெய்வங்களைப் பின்பற்றி வழிபடுவதாகும்.


சன்மார்க்கத்தில் சித்திப்பெற்று மரணத்தை வென்று கடவுள்நிலை அறிந்து அம்மயமாகி பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று வாழ்வதாகும். அதாவது ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி ஆன்மதேகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வதாகும்.

அதாவது பிறப்பு இறப்பு இல்லாத நித்திய தேக வாழ்க்கையாகும் .


சமய மத மார்க்கத்தில்.சமாதி .ஜீவசமாதி.பதமுக்தி ஜீவமுக்தியை  மட்டுமே பெற்று வாழ முடியும். மரணத்தை வெல்ல முடியாது.

ஆனமதேகம் பெறமுடியாது.

நித்திய தேகம் பெறமுடியாது மீண்டும் மீண்டும் பிறப்பு உண்டாகும்.


*சன்மார்க்கத்தில்  சமாதி பழக்கம் பழக்கம் அல்ல சகஜ பழக்கமே பழக்கமாகும்*


சன்மார்க்கத்தில் இம்மை இன்பலாபம்.

மறுமை இன்பலாபம். பேரின்பலாபம் என்கின்ற மூன்று லாபத்தையும்.

கர்மசித்தி.

யோகசித்தி.

ஞானசித்தி என்கின்ற மூன்று சித்திகளையும். சுத்ததேகம்.

பிரணவதேகம்.

ஞானதேகம் என்கின்ற மூன்று தேகங்களையும் பெற்று முத்தேக சித்தி என்னும் பேரின்பசித்தி 

பெருவாழ்வு பெற்று. கடவுள்நிலை அறிந்து அம்மயமாகும் வல்லமையைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வதாகும்.. 


சமய மத மார்க்கங்களில் 

இம்மை இன்பலாபம்.

மறுமை இன்பலாபம்.

என்கின்ற இரண்டு லாபத்தையும்.

கர்மசித்தி.

யோகசித்தி என்கின்ற இரண்டு சித்திகளையும்.

சுத்ததேகம் பிரணவதேகம் என்கின்ற இரண்டு தேகமாற்றமும் மட்டுமே பெறமுடியும்.

மூன்றாவதாகிய ஞானதேகத்தை பெறமுடியாது.


*வள்ளலார் வாழ்ந்து காட்டிய மார்க்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மார்க்கமாகும்*.


வள்ளலார் வாழ்ந்து  காட்டிய சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்தியைப்பெற்று. மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் என்றும்.மேலும் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் என்கின்ற உண்மையை அழுத்தமாக பதிவு செய்கிறார்.


*வள்ளலார் சொல்லுவதை பார்ப்போம்.!*


முத்தி யென்பது நிலை முன்னுறு சாதனம்

அத்தக வென்ற என் அருட்பெருஞ் ஜோதி!


சித்தி யென்பது நிலை சேர்ந்த அனுபவம்

அத்திறல் என்ற என் அருட்பெருஞ் ஜோதி! 


என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலிலே தெளிவாக விளக்கி உள்ளார்.

 *சாதனம் உபாயம் சமயமத மார்க்கம். உண்மை அனுபவம் சுத்த சன்மார்க்கம்*.


சமயமத மார்க்கத்தில் சரியை4 கிரியை4 யோகம்4 என்னும் 12 படிகளோடு நின்று விடுகிறது.சன்மார்க்கம் சரியை4 கிரியை4 யோகம்4 ஞானம்4 என்னும் 16 படிகளையும் கடந்தது.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!*


சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்


புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்


பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் *முத்திபெற் றிடவும் உரியதோர்*

 *இச்சை எனக்கிலை* எனது உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்* 


சமய மதங்களில் சொல்லிய சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கினும் எனக்கு இச்சை இல்லை என்கிறார்.


 *அனுபவ மாலை பாடல் !*


சரியை நிலை நான்கும் ஒரு கிரியைநிலை நான்கும்

தனியோக நிலைநான்கும் தனித்தனி 

கண்டறிந்தேன்


உரியசிவ ஞானநிலை நான்கும் அருள் ஒளியால்

ஒன்றொன்றாய் அறிந்தேன் மேல் உண்மைநிலை பெற்றேன்


அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்


*பெரியசிவ அனுபவத்தால்* *சமரசசன் மார்க்கம்*

*பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி*! 


சமய மத சன்மார்க்கத்தின் 16 படிகளையும் கடந்து உயர்ந்த பெரிய அனுபவமான சமரச சுத்த சன்மார்க்கம் பெற்றேன் என்கிறார் வள்ளல்பெருமான். இதுவே  தத்துவங்களைக் கடந்த ஆன்மீகத்தின் சுத்த சன்மார்க்க அனுபவ நிலையாகும்.

தத்துவங்களைக் கடக்காமல் இயற்கை உண்மைநிலையை காணமுடியாது. தொடர்பு கொள்ள முடியாது. பேர்இன்பம் அடையமுடியாது.


வள்ளலார் பாடல்! அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.


தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீதமேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்த அந் நிலைக்கண் யாமும் எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று

அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்களையும் கடந்த நிலையே தத்துவம் கடந்தநிலையாகும். ஆன்ம நிலையாகும்.அதற்குமேல் ஆன்மநிலை கடந்து கடவுள் நிலை அறிவதாகும். கடவுளைத் தொடர்பு கொண்டு பூரண அருள்பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழ்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும்   உயர்ந்த பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.


*சத்திய ஞானசபை*


 எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாக விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் *சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்; வீண்போகின்றோம்*..


ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு* - 


மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய *உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை*.

உத்தரஞான சிதம்பரம் அல்லது ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில்.

தமது திருவருட் சம்மதத்தால் தோற்றுவித்துள்ளார்.

ஆதலால் சமயமத மார்க்கங்களை பின்பற்றாமல் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பின்பற்றி வள்ளலார் சொல்லிய இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களைப் கடைபிடித்து வடலூர் சத்திய ஞானசபைக்கு வந்து வந்து தரிசிப்பீர்களானால் பெற வேண்டியதை பெற்று பெருங்களிப்பு அடையலாம். இது சத்தியம் சத்தியம் என்கின்றார்.


நாம் சமய மத்த்தை பின்பற்றுவதா?  சன்மார்க்கத்தை பின்பற்றுவதா? என்பதை உயர்ந்த அறிவைக்கொண்டுல நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

செவ்வாய், 3 நவம்பர், 2020

நீ அடைந்து விலக்குக மகிழ்க !

 *நீ அடைந்து விலக்குக மகிழ்க !*


*உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்!*

*விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க!*


*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை*! 


மேலே கண்ட திரு அருட்பெருஞ்ஜோதிஅகவல் வரிகளை ஊன்றி படித்து உணர்ந்து தெளிந்து அனுபவித்து வாழந்திடல் வேண்டும்.


*உலகினில் வாழும்  உயிர்களுக்கு அச்சம் பயம் துன்பம் துயரம் ஏழ்மை பசி பிணி  தாகம் இச்சை எளிமை பயம் கொலை மரணம் என்பதெல்லாம் தானே வருவதில்லை.உயிர்களாலேயே உயிர்களுக்கு துன்பம் யாவும் வந்து இறுதியில் மரணமும் வந்துவிடுகிறது.* 


*தீதும்  நன்றும் பிறர்தர வாராது*.


*மனித குலம்* 


உயிர்களால் மட்டுமே உயிர்களைக் காப்பாற்ற முடியும்.ஏன் என்றால் ? உயிர்களின் துணை கொண்டுதான் உயிர்கள் யாவும் வாழ்கின்றன.

உயிர்களாலே மட்டுமே உயிர்களை அழிக்கவும் முடியும்.

காப்பாற்றவும் முடியும்.


ஒவ்வொரு உயிரும் இதுவரையில் பலகோடி பிறவிகள் எடுத்து பலகோடி உயிர்களின் உழைப்பால் அவைகளின் உதவிகளால் உயர்ந்த பிறப்பாகிய மனித தேகம் கிடைத்துள்ளது என்பதை உயர்ந்த அறிவைக்கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.


*உயிருக்கும் உயிருக்கும் மட்டுமே உலகில் போராட்டம் நடந்து கொண்டுள்ளன.*


உயிரையும் ஆன்மாவையும் உடம்பைவிட்டு வெளி யேற்றுகிறோம்  என்று தெரியாமல் உடம்பை அழிப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.


*ஆன்மா வாழ்வதற்கு

உயிரையும் உடம்பையும் கொடுத்தது மாயை மாமாயை பெருமாயை என்னும்  இவ்வுலக அதிகார நிர்வாகத் தலைவர்களாகும்*.  *உயிர் உடம்பை அழிக்காமல்  காப்பாற்றி திரும்பத் தரும் வரை மாயையால் பிறவிகள் கொடுத்துக் கொண்டே இருக்கும்*. 


*உயர்ந்த அறிவு*


*மனித குலத்திற்கு மட்டுமே இவ்வுலகில் நடைபெறும் ரகசியங்கள் மற்றும் உயிர்களின் வாழ்க்கை முறைகள் எல்லாவற்றையும் அறியும் உயர்ந்த அறிவான ஆன்ம அறிவு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது* ஆன்ம அறிவால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று உயிரையும் உடம்பையும் அழிக்காமல் *ஆன்மதேகம்.*

*ஆன்ம லாபம்* 

*ஆன்ம இன்பம்* பெற்று மரணத்தை வென்று வாழ்வதற்கு வழிபெற முடியும்


மனித பிறப்பு எடுத்தவர்களால் மட்டுமே இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும் முடியும்.

அருளைப்பெறவும் முடியும்.


*ஆண்டவரைத் தொடர்புகொள்ள வேண்டுமானால் எல்லா உயிர்களையும் தம் உயிர்கள்போல் பாவித்து நேசிக்க வேண்டும்* மனிதன் மனித குலத்தை மட்டுமே காப்பாற்றினால் போதும் என்று நினைந்து மனித குலத்திற்கு மட்டும் உபகாரங்கள் உதவிகள் மற்றும் பசிக்கு உணவு வழங்கி வருகிறார்கள். மற்ற உயிர்களும் தம் உயிர்போல்தான் என்று நினைக்க அறிவு விளக்கம் பெறாமல் இருக்கிறார்கள்.


எல்லா உயிர்களிலும் இறைவன் நடம் புரிகின்றார் என்பதை வள்ளல்பெருமான் அறிந்து தெரிந்து சொல்லுகின்றார்.


*வள்ளலார் பாடல்!*


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின்றேன் பொதுப் பாட்டே.! 


என்னும் பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார். எல்லா உயிர்களிலும் இறைவன் நடம்புரியும் இடம் என தெரிந்து.

அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்ற தெரிந்தவர்களே! அகற்றுபவர்களே *சுத்த சன்மார்க்க சுகநிலைப்பெற்று உத்தமனாகும் தகுதி உடையவர்களாகும்*.

*ஜீவகாருண்ய ஒழுக்கம்*


வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றுதான் சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார்.

*ஜீவன் என்பது உயிரைக் குறிப்பதாகும். எல்லா உயிர்களையும் பற்றிச் சொல்வதாகும்.* மனித குலத்திற்கு மட்டுமே சொல்லவில்லை.

*இந்த உண்மை தெரியாமல் வாய்பேசமுடியாத தடுத்து தற்காத்து கொள்ள முடியாமல் தவிக்கும் அப்பாவி உயிர்களைக் கொன்று உணவாக உட்கொள்கிறார்கள்*. 


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்*!


எத்துணையும் பேதமுறாது 

 *எவ்வுயிரும்

தம் உயிர்போல்* எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


மேலே கண்ட பாடலிலே எத்துனையும் பேதமில்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் உள்ளவர். எவரோ அவர் உள்ளத்தில் தான் ஆண்டவர் 

மகிழ்ச்சியுடன் நடம்புரிவார் அருளை வழங்குவார் என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.


சுயநலத்திற்காக மற்ற உயிர்களின் உழைப்பையோ.

உயிர்களையோ பயன் படுத்திக் கொள்ளாமல்.

அவைகளுக்கு வரும் துன்பங்களை நீக்கி காப்பாற்ற வேண்டும். மேலும் மற்ற உயிர்களுக்கு  துன்பம் உண்டாகும்  என்று முன்னமே அறிந்தபோதும் கேட்டபோதும் அவற்றை காலம் தாழ்த்தாமல் காப்பாற்ற வேண்டும். இவற்றை உண்மை அறிவால் அறிந்து முடிந்த அளவு ஜீவநேயத்தோடு ஜீவன்களை காப்பாற்றுவதே ஜீவகாருண்யம் என்பதாகும்.அதுவே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.


ஜீவகாருண்ய ஒழுக்கத்தை

சுயநலம் இல்லாமல்  பொதுநல நோக்கத்தோடு செயல்பட்டு கடைபிடித்து வாழ்பவர்களின் உயிர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிச்சயம் காப்பாற்றுவார்.

*இதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் காட்டும் சுத்த சன்மார்க்க சுகநிலை என்பதாகும்.அந்நிலையைப் பெற்று வாழ்பவரே உத்தமன் என்பவராகும்.


*மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!* 


மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்


கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்


எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்


நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை காண் எந்தாய் .! 


என்றும் மேலும்.


வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே


வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.!


இவ் உலகில் மண்ணில் தோன்றும் தாவரங்கள்  முதற்கொண்டு பஞ்ச பூதங்களிலும் உயிர்பெற்று வாழ்கின்ற எல்லா உயிர்களையும் இயக்குகின்றவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே  என்ற உண்மை அறிந்து கொண்டவர் வள்ளல்பெருமான்.

அதனாலே அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை கண்டு வாடியவர் வள்ளலார்.அதனால்  அவ்வுயிர்களைக் காப்பாற்றும் வரத்தை எனக்கு வழங்குதல் வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டுகின்றார். ஆண்டவரும்  தந்துவிடுகின்றார்.


*ஆன்மா  என்னும் உள் ஒளி*!


ஆன்மா என்னும் உள் ஒளியை இவ்வுலகில் வாழ்வதற்கு அனுப்பியவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையையும் அறிந்து கொண்டவர் வள்ளலார்.


உடம்பின் தோற்றங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஆன்ம ஒளி. உயிர்ஒளி  ஒரே ஒளித் தன்மை உடையது.

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் உண்மை உணர்ந்து ஒவ்வொரு மனித தேகம் பெற்றவர்களும் ஒற்றுமை உணர்வை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்


எனவேதான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.அதே நேரத்தில் எல்லாம் வல்ல  இயற்கை உண்மை தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து அருளைப் பெறுவதற்கு முக்கிய தடையாக உள்ளதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.


*வள்ளலார் நமக்காக சொல்லிக் கொடுக்கும் விண்ணப்பம்.*


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!


இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். 

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்*.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!


தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! 


மேலே கண்ட விண்ணப்பத்தை தினமும் சன்மார்க்க  சங்க வழிப்பாட்டில் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.சாதி சமய மதங்களின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களைத் தவிர்த்து.சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க தவறிவிடுகிறோம்.


முதலில் நாம் நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருள்பெற்றுக் கொண்டால் தான் உலக உயிர்களின் துன்பத்தை போக்க முடியும் என்பதால் நீ அடைந்து விலக்குக மகிழ்க என்கிறார்.


அருளைப் பெறுவோம் சுத்த சன்மார்க்க சுகநிலைப்பெற்று உத்தமன் ஆகி ஓங்குவோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஆசைகள் உண்டாக காரணம் !

 *ஆசைகள் உண்டாக காரணம் !* 


*காரணம் இல்லாமல் காரியம் இல்லை.காரியத்திற்காக காரணம் தேவைப்ப டுகின்றது*.

காரணம். காரியம்.காரணகாரியம் எதற்காக என்ற உண்மைத் தெரிந்து கொண்டால் மனிதன் புனிதனாக மாறலாம்.


நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நல்வினை தீவினை என்று பெயர் வைத்துள்ளார்கள்.

மனம் மகிழ்ச்சி அடைந்தால் நல்வினை என்றும்.மனம் துக்கத்தில் இருந்தால் தீவினை என்றும் சொல்லி வைத்துள்ளார்கள்.


மனம் மகிழ்ச்சி அடைவதோ.துன்பம் அடைவதோ பெரிய விஷயமே அல்ல.

*ஆன்மா மகிழ்ச்சி அடைவதே முக்கிய காரண காரியமாக இருக்க வேண்டும்*.


ஆன்மா வந்த காரணத்தையும் காரியத்தையும் ஆன்மா வாழ்வதற்காக உயிர் உடம்பு கொடுத்த  காரண காரியத்தையும்.

ஆன்மா அடைய வேண்டிய லாபத்தையும் அறிந்து கொள்ளவே ஆன்மாவிற்கு உயர்ந்த அறிவை இறைவன் வழங்கி உள்ளார். 


*மனித தேகம் எடுத்த ஆன்மாவிற்கு* *மண்ணாசை*

*பொன்னாசை பெண்ணாசை உண்டாகக் காரணம் என்ன* ? 


*ஒரு ஆன்மாவிற்கு ஆசை என்பது தானே வருவதில்லை.*

*ஆன்மாவின் இயற்கை குணம் தயவு.ஆன்மாவின் செயற்கை குணத்தால் இயற்கை குணம் மறைந்து கொண்டுள்ளது*


ஆன்மாவானது உயிர் உடம்புடன் தோற்றம் கொண்டு  உலகியலில் வாழத் தொடங்குகிறது. உலகியல் வாழ்க்கையின் *பழைய பழக்க வழக்கத்தினால்* கட்டுண்டு பின்பற்றி  இன்பமும் துன்பமும் மாறி மாறி அடைந்து  வாழ்ந்து முதுமைப்பெற்று பிணி உண்டாகி உயிர் உடம்பு செயல்படமுடியாமல் இறுதியில் மரணம் அடைந்து ஆன்மா வெளியேறி விடுகின்றது. 


*ஆன்ம லாபம்பெறுவதே ஆன்மாவின் இயற்கை குணமாகும்*


ஆன்மாவானது இவ்வுலகத்தில் மனிதபிறப்பைப் பெற்றுக் கொண்டதின் நோக்கம்.இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தை காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.அதுவே ஆன்மாவிற்கு இயற்கை உண்மைத் தந்தையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த கட்டளையாகும்.

ஆணையாகும்.


*இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை விளக்கமாகிய அருளைப்பெற்று இயற்கை இன்பமாகிய பேரின்ப லாபத்தைப் பெற்று வாழ்வதே ஆன்மாவின் இயற்கை குணமாகும்*.


உயிர் உடம்பு எடுத்த ஆன்மா இயற்கை குணத்தில் வாழாமல் செயற்கை குணங்களைப் பின்பற்றி வாழ்வதால் இறந்து இறந்து.பிறந்து பிறந்து வெவ்வேறு பிறவிகள் எடுத்துக் கொண்டே உள்ளது.


*மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை*


மேலே கண்ட மூவகையான ஆசைகளையும் ஆன்மா இயற்கையாக பற்றிக் கொள்ளவில்லை.

செயற்கையால் விதிக்கப்பட்ட காரண காரியங்களால் பின்பற்றிக் கொண்டன. 


*சாதி சமய மதங்கள்*


மனித தேக வாழ்க்கைகாக தோற்றுவிக்கப்பட்ட சாதி சமய மதங்களின் கொள்கைகளால்  ஆன்மா சிக்குண்டு.இயற்கை குணங்களை இழந்து செயற்கை குணங்களைப் பற்றிக் கொண்டு வாழ்வதால் மண்ணாசை.

பொன்னாச.

பெண்ணாசை யில் ஆன்மா மாட்டிக் கொண்டது. 


ஆன்மா இந்த மூன்று ஆசைகளை விலக்கினால் பேரின்ப லாபத்தை பெறலாம் என்று எல்லா சமய மதங்களும் சொல்லுகின்றது.

சன்மார்க்கிகளும் சொல்லுகிறார்கள்.


*சாதி சமய மதங்களை இறைவன் படைக்கவில்லை*

*உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் பெற்ற  அருளாளர்கள் படைத்துள்ளார்கள்* 

*இறைவனால் படைக்காத எந்த கொள்கைகளாக இருந்தாலும் அது பொய்தான் என்று வள்ளல்பெருமான் தெளிவாக அழுத்தமாக பதிவு செய்கிறார்*.


*சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி!*


*சாதியு மதமுஞ் சமயமுங் காணா*

*ஆதிய நாதியாம்* *அருட்பெருஞ் ஜோதி* ! 


சாதியும் சமயமும் மதமும் அவைகளின் கொள்கைகளுமே.

 இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும். அருள்  பெறமுடியாமல்  மரணம் அடைவதற்கும் காரணகாரியமாக உள்ளன என்று வள்ளலார் நூற்றுக்கணக்கான பாடல்களிலும்.உரைநடைப்பகுதிகளிலும் தெளிவாக பதிவு செய்துள்ளார்.


வள்ளலார் பாடல் ! 


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி எனும் வான்

புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்


தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனி நடராஜ என் சற்குரு மணியே.! 


பழைய சாதி சமய மதங்களான பொய்நெறியைக் கடைபிடித்து அருள் பெறமுடியாமல் இருள் அடைந்து வாழ்கின்ற மக்களைக் காப்பாற்றி. அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்வதற்காகவே உலகப் பொது நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற தனிநெறியை 1872 ஆம் ஆண்டு தோற்றுவிக்கிறார் வள்ளல்பெருமான்*


மனித குலத்தை மேம்படுத்தவும்.சாதி சமயம் மதம் அற்ற  இயற்கை உண்மையான கடவுளை அறிந்து கொள்வதற்கும். என்றும் அழியாத அருளைப் பெறுவதற்கும்.மரணத்தை வெல்லுவதற்கும்.

அவற்றைப் பெறுவதற்கு உண்டான வழிகளைக் காட்டவும் தோற்றுவிக்கப்பட்டதுதான் சுத்த சன்மார்க்க தனி நெறியாகும்.


*வள்ளலார் பாடல் !*

திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


என்ற உண்மையை அறிந்து சுத்த சன்மார்க்க தனிநெறியைப் பின்பற்றி ஆன்மலாபம் பெற வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார்.


*ஆசைகளை உண்டாக்கியது*!


மனித குலத்திற்கு வழிகாட்டிய அருளாளர்கள்.இந்தியாவில்தான் அதிகம் தோன்றினார்கள்.  உடம்பின்

தத்துவ கலைகளைக் கொண்டு கற்பனைக் கதைகளைப் படைத்து மக்களை படுகுழியில் தள்ளிவிட்டார்கள். இவற்றை பின்பற்றிதான் மற்ற நாடுகளில் உள்ள அருளாளர்களும்.

வெவ்வேறு விதமான கற்பனைக் கதைகளைச் சொல்லி சமய மதங்களைத் தோற்று வித்துள்ளார்கள்.

எந்த சமய மதங்களும் உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். ஆன்மநேயம் மனிதநேயம்  இல்லாமல் மனிதகுலத்தை பிரித்துவிட்டார்கள்


*வள்ளலார் பாடல்*!


வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - 


சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.! 


மக்களுக்கு பயன் இல்லாத வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் என்று வீண்வாதம் ஆடுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்கிறார் வள்ளலார். 


*பேருபதேசத்தில் வள்ளலார் தெளிவாகச் சொல்லுகின்றார்*.


இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, *அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.* சுத்தமாயா காரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை.


சன்மார்க்கம் இருந்து இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் *இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்*..


மேலும்..இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்*. ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.

 அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, *இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து,* உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

 *தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?* என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே *முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்*. 


, *ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை.* இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் *பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.* (வள்ளலார் வந்து உடைத்துவிட்டார்) அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.! என்பதை வெளிப்படையாக  சொல்லுகின்றார் வள்ளலார்.


*உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன் என்று  சொல்லுகின்றார்*


அவர்யார் ? அவர்தான் மகாபாரதம் எழுதிய *வேதவியாசர்* என்பவராகும்.அவருக்கு போட்டியாக வந்தவர் இராமாயணம் எழுதிய *வால்மீகிமுனிவராகும்* அவர்களுக்கு போட்டியாக தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்கள் மற்றும் சேக்கிழார் போன்ற ஞானிகளும் மற்றும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் போன்றவரும்


அடுத்து வந்த 

உண்மைத் தெரிந்தவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தோன்றினார்கள்.


அவர்களுக்குபோட்டியாக புத்தமதம்.கிருத்துவமதம்.இஸ்லாம் மதம் போன்ற பெரிய மதங்களைத் தோற்றிவித்த அருளாளர்களாகும்.உண்மையை மறைத்து.

கலையுரைத்த கற்பனையான மூடநம்பிக்கைகளை நாட்டிலே விதைத்து விட்டார்கள்.


கடவுளின் பெயரால் வெளிப்படுத்திய. கற்பனை கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் மூடநம்பிக்கை மூலமாகத்தான் மனிதர்களுக்கு மண்ணாசை.

பொன்னாசை.

பெண்ணாசை 

தோன்றியது. ஆசையை விதைத்துவிட்டு ஆசையை விடு என்பது எவ்வளவு கொடுமையான கொள்கையாகும்.


*அரசாங்கம் மதுபான கடைகளைத்திறந்து வைத்துவிட்டு மது அருந்தாதே மது உடம்பிற்கு கேடு விளைவிக்கும் என்பது போலாகும்*


*இறைவனால்  வருவிக்க உற்ற வள்ளலார் வந்துதான் எல்லா உண்மைகளையும் வெட்ட வெளிச்சமாக போட்டு உடைக்கின்றார்*


எனவே ஆசை என்பது தானாக வருவதில்லை.

மக்களுக்கு கற்பித்த *சாதி சமய மதக் கொள்கையாலும்.

உணர்ச்சியைத் தூண்டும் உணவு முறை பழக்க வழக்கத்தாலும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகள் மக்களின் ஆன்மாவில்  பதிவாகிவிட்டது*


*வள்ளலார் பாடல்!*


ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி


காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்


ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ! 


உணவினால் உண்டாகும் *ஊரமுது* உண்டு ஒழிந்து போகாமல்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தொடர்பு கொண்டு *அருள்அமுதம்* பெற்று அழியாமல் வாழலாம் என்பதை மேலேகண்ட பாடல்வாயிலாக பதிவு செய்கின்றார்.


*அழியும் பொருள் ஆசையான* *மண்ணாசை*

*பொன்னாசை*

*பெண்ணாசை*

யை *விட வேண்டுமானால்* *என்றும் அழியாத அருள் ஆசையை பற்றிக் கொள்ள வேண்டும்*.


*வள்ளலார் அழைக்கின்றார்!*


ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்


ஏசற நீத் தெனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள் இங் கிதுவே


மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 


மேலே கண்ட  பாடலின் வாயிலாக தெளிவுப்படுத்தி அன்புடன் அழைக்கின்றார்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.